- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
அடிக்கும் வெயிலுக்கு இதமாக குளுகுளுவென்று காற்று வீசிய அந்த ரெசார்ட்டினுள் பைக்கின் வேகத்தைக் குறைத்து நுழைந்தான் குரு.. பல்வேறு பேக்கேஜ்களுக்கு ஏற்ப.. சின்னதாய் பெரியதாய் வடிவமைக்கப்பட்டிருந்த வில்லாக்களுக்கு மத்தியில் இங்க தானே வரேன்னு சொல்லி இருந்தா? என்று விழிகளை சுருக்கி.. பார்கவியை தேடிக் கொண்டிருந்தான் அவன்..
தன் பின் பக்க தோளில் சிறு தீண்டுதலின் மூலம்.. திரும்பிப் பார்த்தவனுக்கு விளையாட்டு காட்டி.. வலப் பக்கம் வந்து நின்றாள் அவன் காதலி பார்கவி.. பின் பக்கம் பார்த்து அவளை காணாமல்.. அவள் வந்து நின்ற இடம் நோக்கி திரும்பியவனோ சிறிய புன்னகையுடன் "ஹாய்".. என்றான்..
"ஹாய் குரு.. சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டா வந்துட்டீங்களே.. சூப்பர்.. காலேஜ்ல கூட நீங்க வர்ற நேரம் வச்சு தான் கடிகாரத்தையே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்".. என்று சிரித்தாள்..
ஹேய்.. கிண்டல் பண்றியா.. அவன் தலையைக் கோதியபடி பொய்யாக முறைத்தான்..
அச்சோ.. பொய் எல்லாம் சொல்லல.. நிஜமாகவே நீங்க ரொம்ப பக்சுவல்.. அதைதான் சொல்ல வந்தேன்.. என்று அவன் சிரிப்பை முறைப்பை ரசிக்க.. அங்கே சில நிமிடங்கள் மவுனம்.. இருவருக்குமே என்ன பேச தெரியவில்லை..
புதிதாக அவனுக்காகவே அணிந்து வந்த இளஞ்சிவப்பில் ஆங்காங்கே மயில் தோகை விரித்தாடும் பார்டருடன் கூடிய புடவையை ஒரு கணம் குனிந்து பார்த்துக் கொண்டவள்.. அவன் பாராட்டினை எதிர்பார்த்து ஒரு சில கணங்கள் அமைதியாக எதிர்பார்ப்புடன் நிற்கவும்.. அவள் ஆசையை பொய்யாக்காமல்..
"யூ லுக் ரியலி பியூட்டிபுல் .. எஸ்பெஷலி இந்த சாரி.. அமேசிங் கலர்".. என்று அவன் இயல்புக்கு மாறாக தலை முதல் கால் வரை ரசனையாக அளக்கவும்.. பார்கவி வானில் பறக்காத குறைதான்..
வெட்கத்துடன் "தேங்க்ஸ்".. என்றாள்.. "ஓஹோ உனக்கு வெட்கமெல்லாம் கூட வருமா".. என்று இயல்பான கேலியுடன் கேட்டவன்.. அவள் பதில் சொல்வதற்கு முன்னே.. "ஆமா எதுக்காக ரெசார்ட் புக் பண்ணி இருக்கே.. அதுவும் இவ்வளவு காஸ்ட்லியா.. லோக்கல் எங்கேயாவது மீட் பண்ணி இருக்கலாமே".. என்று அந்த ரிசார்ட்டின் ரம்யமான அழகில் விழிகளை மேய்விட்டபடி கேட்க..
"என்ன குரு.. அவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க.. நம்ம கல்யாணத்துக்கு அப்பா ஓகே சொல்லிட்டாரு.. அதையே பெரிய விஷயமாக விழிவிரித்துக் கூற அவனோ அதில் பாதி பரவசம் கூட அல்லாது சாதாரணமாக கூலர்சைக் கழட்டி டீ ஷர்ட்டில் சொருகினான்..
"அதை செலிப்ரேட் பண்ண வேண்டாமா.. அதான் இந்த ரெசார்ட் புக் பண்ணினேன்.. ஈவினிங் வரை என்னோட தான் இருக்க போறீங்க.. இருக்கனும்.. நீங்களும் நானும் மட்டுமே.. ஃபுல் என்ஜாய்மென்ட் தான்".. என்றதும்.. தலையை கோதிக் கொண்டு பதிலேதும் கூறாமல் புன்னகைத்தவன்.. நடந்து வந்து புல் மெத்தையின் நடுவே போடப்பட்டிருந்த அந்த வட்ட மேஜையின் ஒரு இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்..
எதிர்பக்கமாக அமர்ந்து கொண்டு.. குருவை விழிகளால் அள்ளிப் பருகி கொண்டிருந்தாள் பார்கவி.. "ஹாண்ட்ஸாமா இருக்கீங்க குரு.. உங்களை டி-ஷர்ட்ல இன்னைக்கு தான் பாக்குறேன்.. நீங்க ப்ரொபசர்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க ஸ்டுடென்ட் மாதிரியே இருக்கீங்க.. ஆனா பர்ஃபெக்ட் மேன்லியா".. என்றவளின் பார்வையோ.. வெறித்தனமான உடற்பயிற்சியின் வாயிலாக உருண்டு திரண்டிருந்த புஜங்களின் மீது படிய.. "பயங்கரமா வொர்க் அவுட் பண்ணுவீங்க போலிருக்கு.. ஹெல்த் கான்ஷியஸ் ஜாஸ்தியோ".. என்று கன்னத்தில் கை வைத்து அவனை ரசித்தபடியே கேட்டாள்..
"ஹ்ம்ம்.. காலையில எழுந்து ஒர்க்கவுட் பண்ணலைனா அன்னைக்கு நாளே ஃபுல்ஃபில் ஆகாது".. எதை நினைத்து சொன்னானோ அவனே அறிவான்..
"அப்புறம்?".. என்று பார்கவி ஏதோ பேச்சை ஆரம்பிக்க..
"ஒரு நிமிஷம்" என்று போனில் ஏதோ ஒரு எண்ணை டயல் செய்து காதில் வைத்தவன்..
"ஹேய்.. லூசு.. என்ன பண்றே".. என்றான் அதட்டலாக..
அவன் உரிமையான அதட்டலும்.. சிறு குழந்தையை கொஞ்சுவது போன்று முகத்தில் தோன்றிய குறுகுறுப்பும்.. அழைப்பின் அந்தப் பக்கம் யார் என்பதை தெளிவாக உணர்த்தி விட.. பார்கவியின் முகம் சுண்டி போனது..
"பாஸ்வேர்டு கொடுத்துட்டேன்னு கண்ட கண்ட படத்தையெல்லாம் பார்த்து வெச்சேன்னா தொலைச்சு கட்டிடுவேன்.. ஒன் ஹவர் தான் டைம்.. அப்புறம் படிக்க ஆரம்பிச்சிடனும்.. சரிதானே.. சாப்பிட்டியா.. என்ன வீரபாண்டியன் வந்திருக்காரா.. என்ன திடீர்னு.. உன் அக்காவை கூட்டிட்டு போக போறாரா.. வீட்டுக்கு வரலையா.. எங்கே போனாரு.. தமிழுக்கு தெரியுமா"..
"சரி.. சரி வாங்கிட்டு வரேன்.. மெசேஜ் அனுப்பி விடு.. அம்மா கேட்டா எதையும் உளறி வைக்காதே.. அப்புறம்.. என்னோட வீட்டுக்கு போனேன்னா செல்ஃப்ல".. என்று பேச்சை தொடரும் வேளையிலே.. பார்கவி கோபித்துக் கொண்டு.. எழுந்து சென்று தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டாள்..
அவள் முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருந்தவனோ விருட்டென எழுந்து சென்றதில்.. "சரி சரி நான் கூப்பிடுறேன்.. வை டி ஃபோனை.. அப்புறம் பேசுறேன் டி".. என்று அவள் முதுகை பார்த்தபடியே அவசரமாக அழைப்பை துண்டித்தவனோ.. எழுந்து பார்கவி நின்ற இடம் நோக்கி சென்றான்..
கடற்காற்றும் மரங்களின் காற்றும் ஒன்று சேர்ந்து ஒரு மாதிரியான சுகந்த உணர்வைத் தர.. சிலீர் மனநிலையுடன் "என்ன பார்கவி.. இங்கே வந்து நின்னுட்ட.. நேச்சர் பாத்து ரசிக்கிறியா".. என்று சூரிய ஒளியில் மினுமினுத்து கொண்டிருந்த கடல் அலைகளை பார்த்துவிட்டு அவள் மீது பார்வையை பதித்தான்..
வேகமாக அவன் பக்கம் திரும்பியவளோ.. "கடலலையை ரசிக்கிறதுக்காகவோ பீச்ல சுண்டல் வாங்கி திங்கிறதுக்காகவோ இங்க வரல.. உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான் அழைச்சிட்டு வந்தேன்.. உங்களுக்கு என் கூட.. இருக்க பிடிக்கலைன்னா நீங்க தாராளமா கிளம்பி போங்க குரு".. என்று கண்களில் நீரை தேக்கி வைத்துக் கொண்டு.. தழுதழுத்த குரலில் கூறவும் குருவிற்கே ஒரு மாதிரியாகி போனது.. பெண்ணின் கண்ணீரில் மனம் கரைந்தவன் கனிந்த பார்வையோடு..
"அப்படி நினைச்சிருந்தேன்னா இங்க வந்து இருக்கவே மாட்டேன் பார்கவி.. நானும் உன் கூட ஃப்ரீயா டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான் இங்க வந்தேன்.. கோபப்பட்டு.. டென்ஷன் ஆகி.. நமக்கே நமக்காக இருக்கிற கொஞ்ச நேரத்தையும் ஸ்பாயில் பண்ணிடாதே பிளீஸ்.. கம்மான்.. லெட்ஸ் செலிப்ரேட்".. என்று தன் கரத்தை நீட்ட.. இதுவரை மையம் கொண்டிருந்த கோபம் அவன் குளிர் பேச்சில் கரையை கடந்து ஓடிவிட.. தாராளமான புன்னகையுடன் அவன் கைகோர்த்துக் கொண்டாள் பார்கவி..
"அப்படியே பீச் வரைக்கும் நடந்து போயிட்டு வரலாமா குரு".. என்று அதேபுன்னகை மாறாமல் குதுகலமாக கேட்டாள்..
சற்றே நிமிர்ந்து சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய பகவானைக் கண்டவனுக்கோ "இந்த வெயில்லையா".. வெம்மையின் தாக்கத்தில் இதழ்கள் தானாக சுழிந்தன.. பீச் வரை நடந்து சென்றால் அடிக்கும் வெயிலில் காய்ந்து கருவாடப் போவது உறுதி.. காதல் மயக்கத்தில் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் பார்கவி வேண்டுமானால் அதை உணராமல் போகலாம்..
ஆனால் ப்ரொபசர்.. அவள் கைகோர்த்திருந்தாலும் கோடை வெயிலும் மார்கழி என்ற காதலர்களின் கூற்றிற்கு எதிராக சுற்றுப்புறங்களில் கண் பதித்து தெளிவாகவே இருந்தான்..
"சரி.. பீச் வரைக்கும் போக வேண்டாம்.. அந்த ரெசார்ட் ஸ்விம்மிங் பூல் வரையிலும் கைகோர்த்து நடக்கலாமா".. பார்கவி ஆசையும் ஏக்கமுமாக கேட்க அவனால் மறுக்க முடியவில்லை..
"ம்ம்".. என்று தோளைக் குலுக்கியவன்.. அவன் பற்றியிருந்த கரத்தினை இருக்க பிடித்துக் கொண்டு அவளோடு நடந்தான்..
அந்நேரம் ஃபோன் ஒலிக்க.. "ஒன்ஸ் செகன்ட்" என்று அவளிடம் இருந்து கரத்தை விடுவித்துக் கொள்ள பார்கவி முகம் சுருங்கிப் போனது..
பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து அழைப்பவர் யார் புருவம் இடுங்க.. திரையில் பார்க்க பார்கவியும் எட்டி பார்த்திருந்தாள்..
"அம்மாதானே.. பேசுங்க குரு".. ஏதோ அவள் அனுமதிக்காக அவன் காத்திருப்பதாக நினைப்பு அம்மணிக்கு..
அம்மா தானே!! ஈசியாக சொல்லிவிட்டாள்.. அழைப்பை ஏற்றவுடன் ஆயிரம் என்கொயரி அங்கிருந்து வருமே.. பார்கவியின் முன் சமாளிக்க வேண்டுமே.. எடுக்கலாமா.. வேண்டாமா!! என்று யோசனையில் இருந்தவன்.. பார்கவி தன்னையே குறுகுறுவென்று பார்த்திருக்கவே வேறு வழியில்லாமல் அழைப்பை ஏற்றான்..
"சொல்லும்மா"..
"டேய் குரு.. அப்பத்தாவுக்கு வயித்தால போகுதுடா.. பேதி மாத்திரையை எங்கடா வச்சு தொலச்ச!!"..
ஃபோனை சட்டென காதிலிருந்து எடுத்துவிட்டு பார்கவியை பார்த்து சிரிக்க அவளும் சிரித்து வைத்தாள்.. கண்களை மூடித் திறந்து மூச்சிழுத்தவன் தயக்கத்துடன் மீண்டும் காதில் வைத்து..
"ம்மாஆஆ".. என பற்களை கடித்தான் அருகே நின்றவளுக்கு தெரியாமல்.. மீனாட்சி ஹை டெசிபல் குரலில் பேசியது போன் இல்லாமலே குருவிற்கு கேட்கும் என்றாலும் கடல் அலையின் சீற்றத்தில் நல்ல வேலையாக பார்கவியின் காதுகள் அடைத்து போய்விட்டன ..
இதற்கு மேல் பேசினால் மீனாட்சி மோப்பம் பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.. ஃபோனை வைத்து விட்டான்..
"வயத்தால போகுதுன்னு.. என்ன பேதி மாத்திரையை கேட்குது மம்மி.. அய்யய்யோ.. அப்பத்தா பாடு இன்னைக்கு அதோகதி தான்".. மனதோடு அப்பத்தாவிற்காக பரிதாப பட்டாலும்.. மீண்டும் போனில் அழைத்து ஏதாவது "மாத்திரை மாத்தி கொடுத்துடாத மீனாட்சிஇஇஇ".. என்று சொல்லப் போய்.. டோட்டல் மானமும் கதம் ஆகிவிடும்..
ஃபோனை சைலன்டில் போட்டு பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.. பொதுவான விஷயங்கள் பேசியபடி பார்கவின் கைகோர்த்து அந்த ரெசார்ட்டை சுற்றி நடந்து வந்தான்.. மதியம் ஃபுட் ஆர்டர் செய்து உண்டனர்.. நான்கு முறை ஆராவிற்கு அழைத்து பேசினான்..
கோபம் கொண்டு முகத்தை சுருக்கிய பார்கவியிடம்.. அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு..
"இல்லைனா ஒழுங்கா படிக்க மாட்டா கவி.. யாராவது ஒருத்தர் அவளை விரட்டிக்கிட்டே இருக்கணும்.. இப்ப கூட பாரு.. அடுப்பு திண்டு மேல ஏறி உக்காந்துகிட்டு முறுக்கு தின்னுட்டு இருக்கு கழுதை".. என்று வீடியோ கால் போட்டு பார்கவிக்கு காட்ட..
"ஹாய் மேடம்.. அங்கிருந்து கையசைத்தாள் ஆரா".. மருந்துக்கும் பார்கவியின் முகத்தில் புன்னகை இல்லை.. கடுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டாள்..
அவளை ஒரு பொருட்டாகவே மதியாமல் அந்த ரிசார்ட்டின் அழகினை வீடியோ கால் மூலமாக ஆராவிற்கு சுற்றிக்காட்டி கொண்டிருந்தான் குரு..
சில நிமிடங்கள் பேசி போனை வைத்தவன்.. அவ்வளவுதான் முடிந்தது என்பதைப் போல் "கிளம்பலாமா" என்று கேட்க.. பார்கவிக்கு தூக்கி வாரிப் போட்டது.. "என்ன குரு.. ஈவினிங் வரைக்கும் புக் பண்ணி இருக்கேன்.. கிளம்பலாம்னு கேக்கறீங்க".. சற்று காட்டமாகவே கேட்டாள்..
வேகமாக முகத்தில் வந்து மோதிய காற்றை ஆழ்ந்த அனுபவித்தவன்.. "இதுக்கு மேல இங்க பாக்குறதுக்கு என்ன இருக்கு.. போர் அடிக்குது பார்கவி.. நான் வேற இனிதான் போய் நாளைக்கு கிளாசுக்கு பிரிப்பேர் பண்ணனும்".. என்றான் சற்றே சலிப்புடன்..
"ஏன்.. என்கூட பேச உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா!!".. அவள் எரிச்சலை அலட்சியமாக புறம் தள்ளியவன் "அதான் ஃபோன்ல பேசறோமே கவி.. இப்போ கிளம்புவோமா".. ஹோம்சிக் போல் அங்கிருக்கவே.. ஏனோ இலகுவாக இல்லை.. நண்பர்களுடன் ஜாலியாக ஊர்சுற்றும் ஆசாமிதான் அவன்.. ஆனாலும் சீ இந்த பழம் புளிக்கும் என்பதை போல் சற்று நேரத்திலேயே அந்த பீச் ரெசார்ட் சலித்துப் போனது..
அதற்கு மேல் அவன் பேச்சில் சுவாரசியம் குறைந்து போகவே.. "சரி கிளம்பலாம்" கடுகடுத்துக் கொண்டே சொன்ன பார்கவியின் முகபாவனைகளை கவனிக்கும் நிலையில்தான் அவன் இல்லை..
"நீ எப்படி கவி.. ஆட்டோவா.. டூவீலர்?.. இல்ல என் கூட வரியா".. அவன் நடந்து கொண்டே கேட்க.. "நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன்".. கோபத்தோடு சொன்னவளை சமாதானப்படுத்துவான் என்று அதிகமாகவே எதிர்பார்த்து விட்டாள்..
ஆனால் பாவம் அவனுக்குதான் அதெல்லாம் பழக்கமில்லையே.. அவள் கோபத்தில் இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை.. ரொம்ப கஷ்டம்.. அழகு ஆளுமையும் இருந்துவிட்டால் மட்டும் போதாதே.. திருமணம் செய்து கொண்டு வாழ கொஞ்சம் காதலும் தேவையல்லவா!!.. நிறைய படித்து படித்து இப்படி ஆகி விட்டானோ என்று கூட சந்தேகம் தோன்றியது.. சடுதியில் ஆராவிடம் மட்டுமே பிரதிபலிக்கும் இன்னொரு முகத்தை நினைவு கூர்ந்தவள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள்..
அவள் நினைவலைகளை கலைப்பது போல் மீண்டும் கூறினான்.. "சாரீ.. சூப்பர்".. புடவையின் மீது ரசனையாக பதிந்த விழிகள் அவள் முகத்திலும் ஒரு கணம் படிந்து மீளவே.. சிறிய புன்முறுவலுடன்.. தலை தாழ்த்திக் கொண்டாள்.. கொதித்துக் கொண்டிருந்த இதயம் சற்று குளிர்ந்து தான் போனது அவன் பாராட்டு மழையில்..
கேப் வரும் வரையில் காத்திருந்து அவளை ஏற்றிவிட்டு.. பின் தன் பைக்கில் ஏறி கிளம்பினான்.. ஏமாற்றமாக போனது பார்கவிக்கு.. ஆனால் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.. நிறைய மாற்ற வேண்டி இருக்கிறது.. நிச்சயம் மாற்றுவேன்.. குரு எனக்குதான்.. எனக்கு மட்டுமே.. காதல் கொண்ட மனம்.. அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய.. இங்கோ குரு.. அவள் கட்டியிருந்த சேலை.. எங்கிருந்து வாங்கியது என தற்செயலாக அவள் சொல்ல கேட்டு.. அந்த கடைக்குள் நுழைந்திருந்தவன்.. தேடிப்பிடித்து அதே கலரில்.. ஒரு புடவை வாங்கிக் கொண்டான்..
"ஆரா.. ஒரு புடவை வாங்கி இருக்கேன்.. உனக்கு தான் எரும மாடு.. அதுல சுடிதார் தைச்சு போட்டுக்கோ.. ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தியே.. மயில் தோகை விரிச்ச மாதிரி ஒரு டிசைன்.. ஹான்.. அதே டிசைன்தான்.. பார்கவி கட்டிருந்ததை பார்த்ததும் உன் ஞாபகம் வந்துச்சு.. கிடைக்கல கிடைக்கலைன்னு போன வாட்டி கடை கடையாய் ஏறி இறங்கி என் காலை உடைசிச்சியே.. வாங்கி கொடுக்கலைன்னா அடுத்த முறையும் கூட்டிகிட்டு போய் என் காலை உடைப்பே.. அதான் நானே.. வாங்கிட்டேன்".. என்று போனை அணைத்தவன் பார்கவியிடம் "சூப்பர் சூப்பர்" என்று புகழாரம் சூட்டிய அதே புடவை வாங்கிக்கொண்டு அதை ஒருமுறை திருப்தியாக பார்த்தவனோ பைக்கில் ஏறி கிளம்பி இருந்தான் தன் வீட்டிற்கு..
வீர பாண்டியன் இரவு மனைவியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தியவன்தான்.. இன்னும் கதவை திறக்கவே இல்லை..
ஆருஷியை தோள் மீது போட்டுக்கொண்டு.. தெரு தெருவாக சுற்றிய இரண்டு நிமிடங்களிலேயே தமிழும் ஆராவும் தெரிந்து கொண்டு விட்டனர் அது மாம்ஸ்தான் என்று..
இரண்டு மணி நேரமாக வெளியே அமர்ந்திருக்கின்றனர்.. ஆரா.. தமிழ்.. இருவர் மடியிலும் ஆளுக்கு ஒரு குழந்தை.. "மாமா.. உள்ள ரெண்டு பேரும் என்னதான் பண்றாங்க கதவை திறக்க சொல்லுங்க".. குழந்தைகள் உறக்க கலக்கத்துடன் சலித்துக் கொள்ள.. கூரையை பிரித்து உள்ளே இறங்கபோனவனை ஆராதான் தடுத்து பிடித்து வைத்திருக்கிறாள்..
"என்னடா நடக்குது பக்கத்து வீட்ல ஒரே சத்தம்.. அருஷி கத்தறா".. என்று பி.டி உஷா ரேஞ்சுக்கு ஓடப்போன மீனாட்சியை தடுத்து நிறுத்தினான் குரு..
"அம்மா.. ஆருஷி அக்கா வீட்டுக்காரர் வந்திருக்காப்ல.. வழக்கம்போல கலாட்டா சண்டை.. அதனாலதான் சத்தம் கேட்குது".. என்று குரு விளக்க..
"அய்யோ.. அப்போ.. ஆருஷி போய்டுவாளா".. மீனாட்சிக்கு கண்கள் குளம் கட்டிவிட.. குருவோ ஏகத்துக்கும் முறைத்தான்..
"எம்மாஆஆ.. போய் வாழ விடுங்கம்மா அந்த புள்ளைய.. நீ அவனுக்கு மேல இருக்க.. வந்து படு".. என்று சிடுசிடுத்தவன் கையோடு மீனாட்சியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான்.. "அய்யோ.. காலை வரை இருடி.. நடு ராத்திரியே கிளம்பி போய்ராத".. புலம்பிக் கொண்டே உள்ளே போனாள் மீனாட்சி..
இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் ஆருஷி..
வெட்கத்துடன்.. "நான் என் மாமனோட கிளம்புறேன்.. இப்பவே எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்கனும்.. அப்பதான் விடிஞ்சுதும் முதல் பஸ்க்கு சரியா இருக்கும்".. என்று தம்பி தங்கையிடம் தகவல் சொல்லிவிட்டு.. வேகமாக தன்னறைக்கு சென்றவளை விசித்திரமாக பார்த்தனர் ஆரா.. தமிழ் இருவரும்..
மீசையை முறுக்கிக் கொண்டே வந்த வீரபாண்டியனோ காரியத்தை சாதித்து விட்ட இறுமாப்புடன்.. இருவரையும் கண்டு வெற்றி சிரிப்பு சிரித்தான்..
"சூப்பர் மாமா".. ஆரா கட்டை விரலை உயர்த்தி வெற்றி குறியை காட்ட.. தமிழோ இருவரையும் முறைத்து தள்ளினான்..
"சின்னப் பையன் டா நீ.. என்கிட்ட போய்.. ஹாஹா.. போடா.. டேய்.. போடா.. போய்.. பொழைப்பை பாரு".. தோளை குலுக்கி ஆணவமாக சிரித்தவனோ.. "தேனு இதோ வந்துட்டேன்".. மனைவியின் பின்னால் சென்றுவிட.. அவளோ ஊருக்கு செல்வதற்கு தேவையான துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தாள்..
"அக்காஆஆ".. என்றொரு பாசத்தோடு உருகும் குரலில் மெல்ல நிமிர்ந்தவள்..
ஏதோ வீட்டுக்கே வெடி குண்டு வைப்பதை போல் ரியாக்ஷன் கொடுத்து "வேண்டாம்ம்ம்ம்.. வேண்டாம்.. அவனை பாக்காதே".. என்று வீரா கத்தியதையும் பொருட்படுத்தாமல்.. தமிழின் கலங்கிய கண்களை பார்த்து வைத்தாள் பாசமலர் அக்கா..
"போறீயா அக்கா.. போ.. தாராளமா போ.. கல்யாணம் ஆகிட்டாலே பொண்ணுங்க புகுந்த வீட்டுக்கு போய் தானே ஆகணும்".. என்று தமிழ் கண்களைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்க.. வீரபாண்டிக்கு யாரோ இதயத்தில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற நிலை..
"அய்யோ.. டிராமா போட ஆரம்பிச்சுட்டானே.. என் தேனு.. அவனை நம்பாத டி.. ஏதோ பிளான் பண்ணிட்டான்".. இரண்டுமே படம் பாசமலர் ஓட்டியதை கண்டு
இரண்டு மணி நேரம் போட்ட எஃபர்ட் முழுவதும் வீணாப் போய்டுமோ.. அவனுக்கு அவன் கவலை..
"சும்மா இருங்க மாமா.. அதான் உங்க கூட வரேன்னு சொல்லிட்டேன்ல.. இனி எத்தனை வருஷம் கழிச்சு என் தம்பியை பார்க்க போறேனோ கொஞ்ச நேரம் பேசிப்புட்டு வாரேன் போய் அப்படி ஓரமா உட்காருங்க".. மூக்கை சிந்திக் கொண்டு.. தம்பியோடு தரையில் அமர்ந்து கொண்டாள் ஆருஷி..
"வா மாம்ஸ் இப்படி உட்காரு.. அவிங்க ரெண்டு பேரும் பேச்சு வார்த்தையை முடிக்க ரொம்ப நேரமாகும்.. இந்தா இந்த கடலையை தின்னு".. என்று வேர்க்கடலை பொட்டலத்தை நீட்ட ஆராவின் அருகே அமர்ந்து வெறுப்புடன் இரண்டு கடலைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு கடுப்புடன் மென்றான் வீரா..
"எனக்கு எட்டு வயசு இருக்கும்போது.. நாம ரெண்டு பேரும் ஒரு கொடியில் இரு மலர்கள் படம் பார்த்தோமே அப்ப நீ என்ன சொன்னே!!.. நியாபகம் இருக்கா அக்கா?".. தமிழ் சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப்
கொடுக்க..
"எப்பவும் இந்த அக்கா உன்னை விட்டு பிரியவேஏஏஏ... மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன் தம்பி".. அவள் சாவித்திரி பர்ஃபார்மென்ஸ் போட்டாள்..
வீரா ஒரு காலை சோபாவில் மடக்கி வைத்து தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்திருந்தவனோ "பேசாம பொண்டாட்டிய தூக்கிக்கிட்டு அப்படியே ஓடிப் போய் இருந்திருக்கணும் .. ரொம்ப நாள் பிரிஞ்ச ஏக்கத்தில ஒரு ரெண்டு மணி நேரம் படம் பாக்க ஆசைப்பட்டது என் தப்பு தான்".. தன்னையே நொந்து கொண்டான்..
"எனக்கென்னவோ பேசாம நீ மேட்ரிமோனியில் ஆட் கொடுக்குறது நல்லதுன்னு தோணுது மாம்ஸ்.. இது சரி பட்டு வராது".. என்றாள் ஆரா வேர்க்கடலையை கொறித்த படி
"இல்ல.. இல்ல.. இந்த வாட்டி கண்டிப்பா என் பொண்டாட்டி என் கூட வந்துருவா.. கிளம்பறதுக்கு முன்னாடி தம்பியோட கொஞ்ச நேரம் பேசிட்டு போகட்டுமே பரவாயில்ல".. நம்பிக்கை கொண்டு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தான் வீரா..
"பன்னென்டு வயசுல எனக்கு கால்ல அடிபட்ட போது நீ எப்படியெல்லாம் துடிச்சே.. அப்போ என்ன சொன்னே நியாபகம் இருக்கா".. தமிழின் அடுத்த டிராமா கேள்விக்கு.. "இந்த அக்கா இருக்கும்போது நீ எதுக்குமேஏஏஏ.. கலங்கக்கூடாதுன்னு சொன்னேன் தம்பி".. ரிப்ளை கொடுத்தாள் ஆருஷி..
கண்கள் இழுத்துச் செல்ல.. எப்போது உறங்கிப் போனானோ வீரா..
நடுவில் விழிப்புத் தட்ட..
"1947ல".. பாகிஸ்தான் பார்டர்ல"..
"இன்னுமா முடியல.. சரி".. மீண்டும் தூங்கி விட்டான்..
விடிந்தே விட்டது.. "என்ன ஒரே வெளிச்சமா இருக்கு விடிஞ்சது போச்சா?".. என்று விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தவனோ பக்கத்தில் ஆராவை காண.. அவளும் கன்னத்தில் கை வைத்து கடுப்போடுதான் அமர்ந்திருந்தாள்..
"என்னாச்சு பாப்பா".. அவன் கேள்விக்கு.. "அங்கே பாருங்க" என்றாள் சலிப்பாக.. வீரா அந்தப்பக்கம் திரும்ப..
"இப்போ சொல்லுக்கா.. இப்படி எல்லாம் பாராட்டி சீராட்டி வளத்துட்டு உன் தம்பியை இப்போ அம்போன்னு விட்டுட்டு போறேன்னு சொல்றியே இது எந்த விதத்தில் நியாயம்".. சிவாஜியின் வாய்ஸ் மாடுலேஷனை இன்னும் இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் தமிழ் ..
"ஐயோ தம்பி உன்னை தவிக்க விட்டு அக்கா.. போவேனா.. இத்தனை நாள் இங்கே இருந்துட்டேன்.. கூட ஒரு நாலு மாசம் இருக்கிறதுல என்ன ஆகிட போகுது .. நான் போகல.. சரியா.. நீ அழாதே".. ஆருஷி தமிழின் கண்ணை துடைக்க..
"எதேய்ய்ய்".. நெஞ்சு வெடித்துப் போனது வீரபாண்டிக்கு.. உழைப்பெல்லாம் வீண் பாவம் மாமனுக்கு..
"அம்புட்டுதான் சோலி முடிஞ்ச்சு.. நீ கிளம்பு மாமு".. என்றாள் ஆரா.. கன்னத்தில் கைவைத்துக் கொண்டு..
"கடவுள் உலகத்தை படைச்ச காலத்துல".. மீண்டும் தமிழ் ஆரம்பிக்க..
"அப்போ அவர்கிட்டே அசிஸ்டென்ட்டா வேலை செஞ்சீங்களா.. போதும் நிறுத்துங்கடாஆஆ.. இவங்க அலப்பறைக்கு ஒரு என்ட்டே இல்லையா!!.. இந்த குடும்பத்தில பொண்ணு எடுத்ததுக்கு பேசாம சன்னியாசியா போயிருக்கலாம்".. வீரா புலம்பல்..
"ஜப்பான்ல குண்டு போட்ட சமயத்தில.. அப்போ நான் ஒரு வயசு குழந்தை".. தமிழின் அடுத்தக்கட்ட மெகா உருட்டு..
"ஆத்தாடி.. அவனை யாராவது கன்ட்ரோல் பண்ணுங்கடா".. வீர பாண்டியன் மயங்கி ஆரா மடியில் விழுந்திருந்தான்..
தொடரும்..
தன் பின் பக்க தோளில் சிறு தீண்டுதலின் மூலம்.. திரும்பிப் பார்த்தவனுக்கு விளையாட்டு காட்டி.. வலப் பக்கம் வந்து நின்றாள் அவன் காதலி பார்கவி.. பின் பக்கம் பார்த்து அவளை காணாமல்.. அவள் வந்து நின்ற இடம் நோக்கி திரும்பியவனோ சிறிய புன்னகையுடன் "ஹாய்".. என்றான்..
"ஹாய் குரு.. சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டா வந்துட்டீங்களே.. சூப்பர்.. காலேஜ்ல கூட நீங்க வர்ற நேரம் வச்சு தான் கடிகாரத்தையே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்".. என்று சிரித்தாள்..
ஹேய்.. கிண்டல் பண்றியா.. அவன் தலையைக் கோதியபடி பொய்யாக முறைத்தான்..
அச்சோ.. பொய் எல்லாம் சொல்லல.. நிஜமாகவே நீங்க ரொம்ப பக்சுவல்.. அதைதான் சொல்ல வந்தேன்.. என்று அவன் சிரிப்பை முறைப்பை ரசிக்க.. அங்கே சில நிமிடங்கள் மவுனம்.. இருவருக்குமே என்ன பேச தெரியவில்லை..
புதிதாக அவனுக்காகவே அணிந்து வந்த இளஞ்சிவப்பில் ஆங்காங்கே மயில் தோகை விரித்தாடும் பார்டருடன் கூடிய புடவையை ஒரு கணம் குனிந்து பார்த்துக் கொண்டவள்.. அவன் பாராட்டினை எதிர்பார்த்து ஒரு சில கணங்கள் அமைதியாக எதிர்பார்ப்புடன் நிற்கவும்.. அவள் ஆசையை பொய்யாக்காமல்..
"யூ லுக் ரியலி பியூட்டிபுல் .. எஸ்பெஷலி இந்த சாரி.. அமேசிங் கலர்".. என்று அவன் இயல்புக்கு மாறாக தலை முதல் கால் வரை ரசனையாக அளக்கவும்.. பார்கவி வானில் பறக்காத குறைதான்..
வெட்கத்துடன் "தேங்க்ஸ்".. என்றாள்.. "ஓஹோ உனக்கு வெட்கமெல்லாம் கூட வருமா".. என்று இயல்பான கேலியுடன் கேட்டவன்.. அவள் பதில் சொல்வதற்கு முன்னே.. "ஆமா எதுக்காக ரெசார்ட் புக் பண்ணி இருக்கே.. அதுவும் இவ்வளவு காஸ்ட்லியா.. லோக்கல் எங்கேயாவது மீட் பண்ணி இருக்கலாமே".. என்று அந்த ரிசார்ட்டின் ரம்யமான அழகில் விழிகளை மேய்விட்டபடி கேட்க..
"என்ன குரு.. அவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க.. நம்ம கல்யாணத்துக்கு அப்பா ஓகே சொல்லிட்டாரு.. அதையே பெரிய விஷயமாக விழிவிரித்துக் கூற அவனோ அதில் பாதி பரவசம் கூட அல்லாது சாதாரணமாக கூலர்சைக் கழட்டி டீ ஷர்ட்டில் சொருகினான்..
"அதை செலிப்ரேட் பண்ண வேண்டாமா.. அதான் இந்த ரெசார்ட் புக் பண்ணினேன்.. ஈவினிங் வரை என்னோட தான் இருக்க போறீங்க.. இருக்கனும்.. நீங்களும் நானும் மட்டுமே.. ஃபுல் என்ஜாய்மென்ட் தான்".. என்றதும்.. தலையை கோதிக் கொண்டு பதிலேதும் கூறாமல் புன்னகைத்தவன்.. நடந்து வந்து புல் மெத்தையின் நடுவே போடப்பட்டிருந்த அந்த வட்ட மேஜையின் ஒரு இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்..
எதிர்பக்கமாக அமர்ந்து கொண்டு.. குருவை விழிகளால் அள்ளிப் பருகி கொண்டிருந்தாள் பார்கவி.. "ஹாண்ட்ஸாமா இருக்கீங்க குரு.. உங்களை டி-ஷர்ட்ல இன்னைக்கு தான் பாக்குறேன்.. நீங்க ப்ரொபசர்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க ஸ்டுடென்ட் மாதிரியே இருக்கீங்க.. ஆனா பர்ஃபெக்ட் மேன்லியா".. என்றவளின் பார்வையோ.. வெறித்தனமான உடற்பயிற்சியின் வாயிலாக உருண்டு திரண்டிருந்த புஜங்களின் மீது படிய.. "பயங்கரமா வொர்க் அவுட் பண்ணுவீங்க போலிருக்கு.. ஹெல்த் கான்ஷியஸ் ஜாஸ்தியோ".. என்று கன்னத்தில் கை வைத்து அவனை ரசித்தபடியே கேட்டாள்..
"ஹ்ம்ம்.. காலையில எழுந்து ஒர்க்கவுட் பண்ணலைனா அன்னைக்கு நாளே ஃபுல்ஃபில் ஆகாது".. எதை நினைத்து சொன்னானோ அவனே அறிவான்..
"அப்புறம்?".. என்று பார்கவி ஏதோ பேச்சை ஆரம்பிக்க..
"ஒரு நிமிஷம்" என்று போனில் ஏதோ ஒரு எண்ணை டயல் செய்து காதில் வைத்தவன்..
"ஹேய்.. லூசு.. என்ன பண்றே".. என்றான் அதட்டலாக..
அவன் உரிமையான அதட்டலும்.. சிறு குழந்தையை கொஞ்சுவது போன்று முகத்தில் தோன்றிய குறுகுறுப்பும்.. அழைப்பின் அந்தப் பக்கம் யார் என்பதை தெளிவாக உணர்த்தி விட.. பார்கவியின் முகம் சுண்டி போனது..
"பாஸ்வேர்டு கொடுத்துட்டேன்னு கண்ட கண்ட படத்தையெல்லாம் பார்த்து வெச்சேன்னா தொலைச்சு கட்டிடுவேன்.. ஒன் ஹவர் தான் டைம்.. அப்புறம் படிக்க ஆரம்பிச்சிடனும்.. சரிதானே.. சாப்பிட்டியா.. என்ன வீரபாண்டியன் வந்திருக்காரா.. என்ன திடீர்னு.. உன் அக்காவை கூட்டிட்டு போக போறாரா.. வீட்டுக்கு வரலையா.. எங்கே போனாரு.. தமிழுக்கு தெரியுமா"..
"சரி.. சரி வாங்கிட்டு வரேன்.. மெசேஜ் அனுப்பி விடு.. அம்மா கேட்டா எதையும் உளறி வைக்காதே.. அப்புறம்.. என்னோட வீட்டுக்கு போனேன்னா செல்ஃப்ல".. என்று பேச்சை தொடரும் வேளையிலே.. பார்கவி கோபித்துக் கொண்டு.. எழுந்து சென்று தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டாள்..
அவள் முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருந்தவனோ விருட்டென எழுந்து சென்றதில்.. "சரி சரி நான் கூப்பிடுறேன்.. வை டி ஃபோனை.. அப்புறம் பேசுறேன் டி".. என்று அவள் முதுகை பார்த்தபடியே அவசரமாக அழைப்பை துண்டித்தவனோ.. எழுந்து பார்கவி நின்ற இடம் நோக்கி சென்றான்..
கடற்காற்றும் மரங்களின் காற்றும் ஒன்று சேர்ந்து ஒரு மாதிரியான சுகந்த உணர்வைத் தர.. சிலீர் மனநிலையுடன் "என்ன பார்கவி.. இங்கே வந்து நின்னுட்ட.. நேச்சர் பாத்து ரசிக்கிறியா".. என்று சூரிய ஒளியில் மினுமினுத்து கொண்டிருந்த கடல் அலைகளை பார்த்துவிட்டு அவள் மீது பார்வையை பதித்தான்..
வேகமாக அவன் பக்கம் திரும்பியவளோ.. "கடலலையை ரசிக்கிறதுக்காகவோ பீச்ல சுண்டல் வாங்கி திங்கிறதுக்காகவோ இங்க வரல.. உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான் அழைச்சிட்டு வந்தேன்.. உங்களுக்கு என் கூட.. இருக்க பிடிக்கலைன்னா நீங்க தாராளமா கிளம்பி போங்க குரு".. என்று கண்களில் நீரை தேக்கி வைத்துக் கொண்டு.. தழுதழுத்த குரலில் கூறவும் குருவிற்கே ஒரு மாதிரியாகி போனது.. பெண்ணின் கண்ணீரில் மனம் கரைந்தவன் கனிந்த பார்வையோடு..
"அப்படி நினைச்சிருந்தேன்னா இங்க வந்து இருக்கவே மாட்டேன் பார்கவி.. நானும் உன் கூட ஃப்ரீயா டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான் இங்க வந்தேன்.. கோபப்பட்டு.. டென்ஷன் ஆகி.. நமக்கே நமக்காக இருக்கிற கொஞ்ச நேரத்தையும் ஸ்பாயில் பண்ணிடாதே பிளீஸ்.. கம்மான்.. லெட்ஸ் செலிப்ரேட்".. என்று தன் கரத்தை நீட்ட.. இதுவரை மையம் கொண்டிருந்த கோபம் அவன் குளிர் பேச்சில் கரையை கடந்து ஓடிவிட.. தாராளமான புன்னகையுடன் அவன் கைகோர்த்துக் கொண்டாள் பார்கவி..
"அப்படியே பீச் வரைக்கும் நடந்து போயிட்டு வரலாமா குரு".. என்று அதேபுன்னகை மாறாமல் குதுகலமாக கேட்டாள்..
சற்றே நிமிர்ந்து சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய பகவானைக் கண்டவனுக்கோ "இந்த வெயில்லையா".. வெம்மையின் தாக்கத்தில் இதழ்கள் தானாக சுழிந்தன.. பீச் வரை நடந்து சென்றால் அடிக்கும் வெயிலில் காய்ந்து கருவாடப் போவது உறுதி.. காதல் மயக்கத்தில் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் பார்கவி வேண்டுமானால் அதை உணராமல் போகலாம்..
ஆனால் ப்ரொபசர்.. அவள் கைகோர்த்திருந்தாலும் கோடை வெயிலும் மார்கழி என்ற காதலர்களின் கூற்றிற்கு எதிராக சுற்றுப்புறங்களில் கண் பதித்து தெளிவாகவே இருந்தான்..
"சரி.. பீச் வரைக்கும் போக வேண்டாம்.. அந்த ரெசார்ட் ஸ்விம்மிங் பூல் வரையிலும் கைகோர்த்து நடக்கலாமா".. பார்கவி ஆசையும் ஏக்கமுமாக கேட்க அவனால் மறுக்க முடியவில்லை..
"ம்ம்".. என்று தோளைக் குலுக்கியவன்.. அவன் பற்றியிருந்த கரத்தினை இருக்க பிடித்துக் கொண்டு அவளோடு நடந்தான்..
அந்நேரம் ஃபோன் ஒலிக்க.. "ஒன்ஸ் செகன்ட்" என்று அவளிடம் இருந்து கரத்தை விடுவித்துக் கொள்ள பார்கவி முகம் சுருங்கிப் போனது..
பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து அழைப்பவர் யார் புருவம் இடுங்க.. திரையில் பார்க்க பார்கவியும் எட்டி பார்த்திருந்தாள்..
"அம்மாதானே.. பேசுங்க குரு".. ஏதோ அவள் அனுமதிக்காக அவன் காத்திருப்பதாக நினைப்பு அம்மணிக்கு..
அம்மா தானே!! ஈசியாக சொல்லிவிட்டாள்.. அழைப்பை ஏற்றவுடன் ஆயிரம் என்கொயரி அங்கிருந்து வருமே.. பார்கவியின் முன் சமாளிக்க வேண்டுமே.. எடுக்கலாமா.. வேண்டாமா!! என்று யோசனையில் இருந்தவன்.. பார்கவி தன்னையே குறுகுறுவென்று பார்த்திருக்கவே வேறு வழியில்லாமல் அழைப்பை ஏற்றான்..
"சொல்லும்மா"..
"டேய் குரு.. அப்பத்தாவுக்கு வயித்தால போகுதுடா.. பேதி மாத்திரையை எங்கடா வச்சு தொலச்ச!!"..
ஃபோனை சட்டென காதிலிருந்து எடுத்துவிட்டு பார்கவியை பார்த்து சிரிக்க அவளும் சிரித்து வைத்தாள்.. கண்களை மூடித் திறந்து மூச்சிழுத்தவன் தயக்கத்துடன் மீண்டும் காதில் வைத்து..
"ம்மாஆஆ".. என பற்களை கடித்தான் அருகே நின்றவளுக்கு தெரியாமல்.. மீனாட்சி ஹை டெசிபல் குரலில் பேசியது போன் இல்லாமலே குருவிற்கு கேட்கும் என்றாலும் கடல் அலையின் சீற்றத்தில் நல்ல வேலையாக பார்கவியின் காதுகள் அடைத்து போய்விட்டன ..
இதற்கு மேல் பேசினால் மீனாட்சி மோப்பம் பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.. ஃபோனை வைத்து விட்டான்..
"வயத்தால போகுதுன்னு.. என்ன பேதி மாத்திரையை கேட்குது மம்மி.. அய்யய்யோ.. அப்பத்தா பாடு இன்னைக்கு அதோகதி தான்".. மனதோடு அப்பத்தாவிற்காக பரிதாப பட்டாலும்.. மீண்டும் போனில் அழைத்து ஏதாவது "மாத்திரை மாத்தி கொடுத்துடாத மீனாட்சிஇஇஇ".. என்று சொல்லப் போய்.. டோட்டல் மானமும் கதம் ஆகிவிடும்..
ஃபோனை சைலன்டில் போட்டு பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.. பொதுவான விஷயங்கள் பேசியபடி பார்கவின் கைகோர்த்து அந்த ரெசார்ட்டை சுற்றி நடந்து வந்தான்.. மதியம் ஃபுட் ஆர்டர் செய்து உண்டனர்.. நான்கு முறை ஆராவிற்கு அழைத்து பேசினான்..
கோபம் கொண்டு முகத்தை சுருக்கிய பார்கவியிடம்.. அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு..
"இல்லைனா ஒழுங்கா படிக்க மாட்டா கவி.. யாராவது ஒருத்தர் அவளை விரட்டிக்கிட்டே இருக்கணும்.. இப்ப கூட பாரு.. அடுப்பு திண்டு மேல ஏறி உக்காந்துகிட்டு முறுக்கு தின்னுட்டு இருக்கு கழுதை".. என்று வீடியோ கால் போட்டு பார்கவிக்கு காட்ட..
"ஹாய் மேடம்.. அங்கிருந்து கையசைத்தாள் ஆரா".. மருந்துக்கும் பார்கவியின் முகத்தில் புன்னகை இல்லை.. கடுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டாள்..
அவளை ஒரு பொருட்டாகவே மதியாமல் அந்த ரிசார்ட்டின் அழகினை வீடியோ கால் மூலமாக ஆராவிற்கு சுற்றிக்காட்டி கொண்டிருந்தான் குரு..
சில நிமிடங்கள் பேசி போனை வைத்தவன்.. அவ்வளவுதான் முடிந்தது என்பதைப் போல் "கிளம்பலாமா" என்று கேட்க.. பார்கவிக்கு தூக்கி வாரிப் போட்டது.. "என்ன குரு.. ஈவினிங் வரைக்கும் புக் பண்ணி இருக்கேன்.. கிளம்பலாம்னு கேக்கறீங்க".. சற்று காட்டமாகவே கேட்டாள்..
வேகமாக முகத்தில் வந்து மோதிய காற்றை ஆழ்ந்த அனுபவித்தவன்.. "இதுக்கு மேல இங்க பாக்குறதுக்கு என்ன இருக்கு.. போர் அடிக்குது பார்கவி.. நான் வேற இனிதான் போய் நாளைக்கு கிளாசுக்கு பிரிப்பேர் பண்ணனும்".. என்றான் சற்றே சலிப்புடன்..
"ஏன்.. என்கூட பேச உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா!!".. அவள் எரிச்சலை அலட்சியமாக புறம் தள்ளியவன் "அதான் ஃபோன்ல பேசறோமே கவி.. இப்போ கிளம்புவோமா".. ஹோம்சிக் போல் அங்கிருக்கவே.. ஏனோ இலகுவாக இல்லை.. நண்பர்களுடன் ஜாலியாக ஊர்சுற்றும் ஆசாமிதான் அவன்.. ஆனாலும் சீ இந்த பழம் புளிக்கும் என்பதை போல் சற்று நேரத்திலேயே அந்த பீச் ரெசார்ட் சலித்துப் போனது..
அதற்கு மேல் அவன் பேச்சில் சுவாரசியம் குறைந்து போகவே.. "சரி கிளம்பலாம்" கடுகடுத்துக் கொண்டே சொன்ன பார்கவியின் முகபாவனைகளை கவனிக்கும் நிலையில்தான் அவன் இல்லை..
"நீ எப்படி கவி.. ஆட்டோவா.. டூவீலர்?.. இல்ல என் கூட வரியா".. அவன் நடந்து கொண்டே கேட்க.. "நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன்".. கோபத்தோடு சொன்னவளை சமாதானப்படுத்துவான் என்று அதிகமாகவே எதிர்பார்த்து விட்டாள்..
ஆனால் பாவம் அவனுக்குதான் அதெல்லாம் பழக்கமில்லையே.. அவள் கோபத்தில் இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை.. ரொம்ப கஷ்டம்.. அழகு ஆளுமையும் இருந்துவிட்டால் மட்டும் போதாதே.. திருமணம் செய்து கொண்டு வாழ கொஞ்சம் காதலும் தேவையல்லவா!!.. நிறைய படித்து படித்து இப்படி ஆகி விட்டானோ என்று கூட சந்தேகம் தோன்றியது.. சடுதியில் ஆராவிடம் மட்டுமே பிரதிபலிக்கும் இன்னொரு முகத்தை நினைவு கூர்ந்தவள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள்..
அவள் நினைவலைகளை கலைப்பது போல் மீண்டும் கூறினான்.. "சாரீ.. சூப்பர்".. புடவையின் மீது ரசனையாக பதிந்த விழிகள் அவள் முகத்திலும் ஒரு கணம் படிந்து மீளவே.. சிறிய புன்முறுவலுடன்.. தலை தாழ்த்திக் கொண்டாள்.. கொதித்துக் கொண்டிருந்த இதயம் சற்று குளிர்ந்து தான் போனது அவன் பாராட்டு மழையில்..
கேப் வரும் வரையில் காத்திருந்து அவளை ஏற்றிவிட்டு.. பின் தன் பைக்கில் ஏறி கிளம்பினான்.. ஏமாற்றமாக போனது பார்கவிக்கு.. ஆனால் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.. நிறைய மாற்ற வேண்டி இருக்கிறது.. நிச்சயம் மாற்றுவேன்.. குரு எனக்குதான்.. எனக்கு மட்டுமே.. காதல் கொண்ட மனம்.. அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய.. இங்கோ குரு.. அவள் கட்டியிருந்த சேலை.. எங்கிருந்து வாங்கியது என தற்செயலாக அவள் சொல்ல கேட்டு.. அந்த கடைக்குள் நுழைந்திருந்தவன்.. தேடிப்பிடித்து அதே கலரில்.. ஒரு புடவை வாங்கிக் கொண்டான்..
"ஆரா.. ஒரு புடவை வாங்கி இருக்கேன்.. உனக்கு தான் எரும மாடு.. அதுல சுடிதார் தைச்சு போட்டுக்கோ.. ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தியே.. மயில் தோகை விரிச்ச மாதிரி ஒரு டிசைன்.. ஹான்.. அதே டிசைன்தான்.. பார்கவி கட்டிருந்ததை பார்த்ததும் உன் ஞாபகம் வந்துச்சு.. கிடைக்கல கிடைக்கலைன்னு போன வாட்டி கடை கடையாய் ஏறி இறங்கி என் காலை உடைசிச்சியே.. வாங்கி கொடுக்கலைன்னா அடுத்த முறையும் கூட்டிகிட்டு போய் என் காலை உடைப்பே.. அதான் நானே.. வாங்கிட்டேன்".. என்று போனை அணைத்தவன் பார்கவியிடம் "சூப்பர் சூப்பர்" என்று புகழாரம் சூட்டிய அதே புடவை வாங்கிக்கொண்டு அதை ஒருமுறை திருப்தியாக பார்த்தவனோ பைக்கில் ஏறி கிளம்பி இருந்தான் தன் வீட்டிற்கு..
வீர பாண்டியன் இரவு மனைவியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று கதவை சாத்தியவன்தான்.. இன்னும் கதவை திறக்கவே இல்லை..
ஆருஷியை தோள் மீது போட்டுக்கொண்டு.. தெரு தெருவாக சுற்றிய இரண்டு நிமிடங்களிலேயே தமிழும் ஆராவும் தெரிந்து கொண்டு விட்டனர் அது மாம்ஸ்தான் என்று..
இரண்டு மணி நேரமாக வெளியே அமர்ந்திருக்கின்றனர்.. ஆரா.. தமிழ்.. இருவர் மடியிலும் ஆளுக்கு ஒரு குழந்தை.. "மாமா.. உள்ள ரெண்டு பேரும் என்னதான் பண்றாங்க கதவை திறக்க சொல்லுங்க".. குழந்தைகள் உறக்க கலக்கத்துடன் சலித்துக் கொள்ள.. கூரையை பிரித்து உள்ளே இறங்கபோனவனை ஆராதான் தடுத்து பிடித்து வைத்திருக்கிறாள்..
"என்னடா நடக்குது பக்கத்து வீட்ல ஒரே சத்தம்.. அருஷி கத்தறா".. என்று பி.டி உஷா ரேஞ்சுக்கு ஓடப்போன மீனாட்சியை தடுத்து நிறுத்தினான் குரு..
"அம்மா.. ஆருஷி அக்கா வீட்டுக்காரர் வந்திருக்காப்ல.. வழக்கம்போல கலாட்டா சண்டை.. அதனாலதான் சத்தம் கேட்குது".. என்று குரு விளக்க..
"அய்யோ.. அப்போ.. ஆருஷி போய்டுவாளா".. மீனாட்சிக்கு கண்கள் குளம் கட்டிவிட.. குருவோ ஏகத்துக்கும் முறைத்தான்..
"எம்மாஆஆ.. போய் வாழ விடுங்கம்மா அந்த புள்ளைய.. நீ அவனுக்கு மேல இருக்க.. வந்து படு".. என்று சிடுசிடுத்தவன் கையோடு மீனாட்சியை உள்ளே அழைத்துச் சென்று விட்டான்.. "அய்யோ.. காலை வரை இருடி.. நடு ராத்திரியே கிளம்பி போய்ராத".. புலம்பிக் கொண்டே உள்ளே போனாள் மீனாட்சி..
இரண்டு மணி நேரங்கள் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் ஆருஷி..
வெட்கத்துடன்.. "நான் என் மாமனோட கிளம்புறேன்.. இப்பவே எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்கனும்.. அப்பதான் விடிஞ்சுதும் முதல் பஸ்க்கு சரியா இருக்கும்".. என்று தம்பி தங்கையிடம் தகவல் சொல்லிவிட்டு.. வேகமாக தன்னறைக்கு சென்றவளை விசித்திரமாக பார்த்தனர் ஆரா.. தமிழ் இருவரும்..
மீசையை முறுக்கிக் கொண்டே வந்த வீரபாண்டியனோ காரியத்தை சாதித்து விட்ட இறுமாப்புடன்.. இருவரையும் கண்டு வெற்றி சிரிப்பு சிரித்தான்..
"சூப்பர் மாமா".. ஆரா கட்டை விரலை உயர்த்தி வெற்றி குறியை காட்ட.. தமிழோ இருவரையும் முறைத்து தள்ளினான்..
"சின்னப் பையன் டா நீ.. என்கிட்ட போய்.. ஹாஹா.. போடா.. டேய்.. போடா.. போய்.. பொழைப்பை பாரு".. தோளை குலுக்கி ஆணவமாக சிரித்தவனோ.. "தேனு இதோ வந்துட்டேன்".. மனைவியின் பின்னால் சென்றுவிட.. அவளோ ஊருக்கு செல்வதற்கு தேவையான துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தாள்..
"அக்காஆஆ".. என்றொரு பாசத்தோடு உருகும் குரலில் மெல்ல நிமிர்ந்தவள்..
ஏதோ வீட்டுக்கே வெடி குண்டு வைப்பதை போல் ரியாக்ஷன் கொடுத்து "வேண்டாம்ம்ம்ம்.. வேண்டாம்.. அவனை பாக்காதே".. என்று வீரா கத்தியதையும் பொருட்படுத்தாமல்.. தமிழின் கலங்கிய கண்களை பார்த்து வைத்தாள் பாசமலர் அக்கா..
"போறீயா அக்கா.. போ.. தாராளமா போ.. கல்யாணம் ஆகிட்டாலே பொண்ணுங்க புகுந்த வீட்டுக்கு போய் தானே ஆகணும்".. என்று தமிழ் கண்களைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்க.. வீரபாண்டிக்கு யாரோ இதயத்தில் டிரம்ஸ் வாசிப்பது போன்ற நிலை..
"அய்யோ.. டிராமா போட ஆரம்பிச்சுட்டானே.. என் தேனு.. அவனை நம்பாத டி.. ஏதோ பிளான் பண்ணிட்டான்".. இரண்டுமே படம் பாசமலர் ஓட்டியதை கண்டு
இரண்டு மணி நேரம் போட்ட எஃபர்ட் முழுவதும் வீணாப் போய்டுமோ.. அவனுக்கு அவன் கவலை..
"சும்மா இருங்க மாமா.. அதான் உங்க கூட வரேன்னு சொல்லிட்டேன்ல.. இனி எத்தனை வருஷம் கழிச்சு என் தம்பியை பார்க்க போறேனோ கொஞ்ச நேரம் பேசிப்புட்டு வாரேன் போய் அப்படி ஓரமா உட்காருங்க".. மூக்கை சிந்திக் கொண்டு.. தம்பியோடு தரையில் அமர்ந்து கொண்டாள் ஆருஷி..
"வா மாம்ஸ் இப்படி உட்காரு.. அவிங்க ரெண்டு பேரும் பேச்சு வார்த்தையை முடிக்க ரொம்ப நேரமாகும்.. இந்தா இந்த கடலையை தின்னு".. என்று வேர்க்கடலை பொட்டலத்தை நீட்ட ஆராவின் அருகே அமர்ந்து வெறுப்புடன் இரண்டு கடலைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு கடுப்புடன் மென்றான் வீரா..
"எனக்கு எட்டு வயசு இருக்கும்போது.. நாம ரெண்டு பேரும் ஒரு கொடியில் இரு மலர்கள் படம் பார்த்தோமே அப்ப நீ என்ன சொன்னே!!.. நியாபகம் இருக்கா அக்கா?".. தமிழ் சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப்
கொடுக்க..
"எப்பவும் இந்த அக்கா உன்னை விட்டு பிரியவேஏஏஏ... மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன் தம்பி".. அவள் சாவித்திரி பர்ஃபார்மென்ஸ் போட்டாள்..
வீரா ஒரு காலை சோபாவில் மடக்கி வைத்து தலையில் துண்டை போட்டுக்கொண்டு கன்னத்தில் கை வைத்திருந்தவனோ "பேசாம பொண்டாட்டிய தூக்கிக்கிட்டு அப்படியே ஓடிப் போய் இருந்திருக்கணும் .. ரொம்ப நாள் பிரிஞ்ச ஏக்கத்தில ஒரு ரெண்டு மணி நேரம் படம் பாக்க ஆசைப்பட்டது என் தப்பு தான்".. தன்னையே நொந்து கொண்டான்..
"எனக்கென்னவோ பேசாம நீ மேட்ரிமோனியில் ஆட் கொடுக்குறது நல்லதுன்னு தோணுது மாம்ஸ்.. இது சரி பட்டு வராது".. என்றாள் ஆரா வேர்க்கடலையை கொறித்த படி
"இல்ல.. இல்ல.. இந்த வாட்டி கண்டிப்பா என் பொண்டாட்டி என் கூட வந்துருவா.. கிளம்பறதுக்கு முன்னாடி தம்பியோட கொஞ்ச நேரம் பேசிட்டு போகட்டுமே பரவாயில்ல".. நம்பிக்கை கொண்டு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தான் வீரா..
"பன்னென்டு வயசுல எனக்கு கால்ல அடிபட்ட போது நீ எப்படியெல்லாம் துடிச்சே.. அப்போ என்ன சொன்னே நியாபகம் இருக்கா".. தமிழின் அடுத்த டிராமா கேள்விக்கு.. "இந்த அக்கா இருக்கும்போது நீ எதுக்குமேஏஏஏ.. கலங்கக்கூடாதுன்னு சொன்னேன் தம்பி".. ரிப்ளை கொடுத்தாள் ஆருஷி..
கண்கள் இழுத்துச் செல்ல.. எப்போது உறங்கிப் போனானோ வீரா..
நடுவில் விழிப்புத் தட்ட..
"1947ல".. பாகிஸ்தான் பார்டர்ல"..
"இன்னுமா முடியல.. சரி".. மீண்டும் தூங்கி விட்டான்..
விடிந்தே விட்டது.. "என்ன ஒரே வெளிச்சமா இருக்கு விடிஞ்சது போச்சா?".. என்று விழிப்பு தட்டி எழுந்து அமர்ந்தவனோ பக்கத்தில் ஆராவை காண.. அவளும் கன்னத்தில் கை வைத்து கடுப்போடுதான் அமர்ந்திருந்தாள்..
"என்னாச்சு பாப்பா".. அவன் கேள்விக்கு.. "அங்கே பாருங்க" என்றாள் சலிப்பாக.. வீரா அந்தப்பக்கம் திரும்ப..
"இப்போ சொல்லுக்கா.. இப்படி எல்லாம் பாராட்டி சீராட்டி வளத்துட்டு உன் தம்பியை இப்போ அம்போன்னு விட்டுட்டு போறேன்னு சொல்றியே இது எந்த விதத்தில் நியாயம்".. சிவாஜியின் வாய்ஸ் மாடுலேஷனை இன்னும் இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் தமிழ் ..
"ஐயோ தம்பி உன்னை தவிக்க விட்டு அக்கா.. போவேனா.. இத்தனை நாள் இங்கே இருந்துட்டேன்.. கூட ஒரு நாலு மாசம் இருக்கிறதுல என்ன ஆகிட போகுது .. நான் போகல.. சரியா.. நீ அழாதே".. ஆருஷி தமிழின் கண்ணை துடைக்க..
"எதேய்ய்ய்".. நெஞ்சு வெடித்துப் போனது வீரபாண்டிக்கு.. உழைப்பெல்லாம் வீண் பாவம் மாமனுக்கு..
"அம்புட்டுதான் சோலி முடிஞ்ச்சு.. நீ கிளம்பு மாமு".. என்றாள் ஆரா.. கன்னத்தில் கைவைத்துக் கொண்டு..
"கடவுள் உலகத்தை படைச்ச காலத்துல".. மீண்டும் தமிழ் ஆரம்பிக்க..
"அப்போ அவர்கிட்டே அசிஸ்டென்ட்டா வேலை செஞ்சீங்களா.. போதும் நிறுத்துங்கடாஆஆ.. இவங்க அலப்பறைக்கு ஒரு என்ட்டே இல்லையா!!.. இந்த குடும்பத்தில பொண்ணு எடுத்ததுக்கு பேசாம சன்னியாசியா போயிருக்கலாம்".. வீரா புலம்பல்..
"ஜப்பான்ல குண்டு போட்ட சமயத்தில.. அப்போ நான் ஒரு வயசு குழந்தை".. தமிழின் அடுத்தக்கட்ட மெகா உருட்டு..
"ஆத்தாடி.. அவனை யாராவது கன்ட்ரோல் பண்ணுங்கடா".. வீர பாண்டியன் மயங்கி ஆரா மடியில் விழுந்திருந்தான்..
தொடரும்..