சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!
சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்.
அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும்...
இரண்டு நாட்களாக முகத்தை தூக்கி வைத்திருக்கிறாள் அருந்ததி..
உன் கோபத்தின் காரணம் புரிகிறது.. ஆனால் நான் அப்படி சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லையா உனக்கு என்று உள்ளுக்குள் வேதனையுடன் சலித்துக் கொண்டான் மகரிஷி..
ஒரு நாள் பொறுத்தான் மறுநாள் காத்திருந்தான் மூன்றாம் நாள் தாங்க முடியவில்லை...
"அருந்ததி பொங்கல் இருக்கா.. ஐயோ காலி ஆயிருச்சா..?"
'இன்னைக்கு செய்யவே இல்லையா.."
"பூரி வடகறி இருக்கா..!"
இப்போதெல்லாம் முன்பை விட கூட்டம் சற்று அதிகரித்திருப்பதாக தோன்றியது அருந்ததிக்கு..
இட்லிக்கு வாடிக்கையாளர்கள் பாதி பேர் என்றால் பொங்கல் பூரி வடகறி வடை என்று விதவிதமாய் கேட்டு மீதி பேர்...
மீட்டிங் நான்கு மணிக்கு முடிய வேறு எந்த டெலிவரி ஆர்டர்களையும் ஏற்காமல் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள் அருந்ததி..
விழித்திரை மறைக்க வழிந்த கண்ணீரோடு பாதுகாப்பாக வீடு வரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்ததே அதிசயம் தான்..! இதில் வேலை பார்த்து கூடுதலாக கிடைக்கப் போகும் இன்சென்டிவ் பற்றியெல்லாம்...
எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகிப் போயிருந்தது.. சில கணங்கள் மௌனத்திற்கு பின் என்ன நடந்துச்சு..! என்றான் அழுத்தமான குரலில்..
அந்தக் குரலும் பார்வையும் அவளை அசைய விடவில்லை.. எதையும் மறைக்கவும் முடியவில்லை.. நடந்ததை அச்சு பிறழாமல் கண்ணீரோடு அவனிடம் ஒப்பித்திருந்தாள் அருந்ததி..
சொல்லி முடித்த...
செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..
"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"
"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி...
மகரிஷி சுற்றுலா சென்ற அடுத்த நாளிலேயே இங்கே கலவரம் ஆரம்பித்துவிட்டது..
சமையலறையில் இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த அருந்ததியிடம்.. "அம்மா..!" என்று மூச்சு வாங்கியபடி முகம் வெளிறி ஓடி வந்தாள் சந்திரமதி..
"என்னடி.. என்ன ஆச்சு..?" என்றவளுக்கு கடங்காரன் எவனேனும் வந்து வாசலில் நிற்கிறானோ என்ற...
அன்று கையில் சின்னதாய் வாழை இலையில் சுருட்டிய மல்லிகை பூ பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..
வாசல் திண்ணையில் அமர்ந்து மோத்தி சந்திரமதி இருவரும் விளையாடுவதை சிறு புன்னகையுடன் கண்டும் காணாமலும் கவனித்துக் கொண்டிருந்த அருந்ததி மகரிஷியின் பக்கம் திரும்பி வினோதமாய் பார்த்தாள்..
அவள்...
"இங்க பாருங்க.. உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லை.. கிளாசுக்கு டைம் ஆச்சு..! பத்து நிமிஷத்துல ஃபுட் டெலிவரி ஆயிடும்னு நோட்டிபிகேஷன் வந்துச்சு.. ஆனா நீங்க 40 நிமிஷம் கழிச்சு வர்றீங்க.. எனக்கு லன்ச் டைம் வேற முடிஞ்சு போச்சு..! இதுக்கு மேல எனக்கு சாப்பிட நேரமில்ல.. இந்த பார்சலை வாங்கினாலும் கொண்டு...
"மதி.. மத்தியானம் செஞ்ச பிரியாணி மிச்சமிருக்கு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. சாப்பிடுவாரான்னு போய் உன் வாத்தியார் கிட்ட கேளு..!" சந்திரமதியிடம் சொல்லி அனுப்பினாள் அருந்ததி..
சொல்லப்போனால் அது மிச்சமானது அல்ல.. அவனுக்காக பிரத்யேகமாக எடுத்து வைக்கப்பட்ட உணவு.. உங்களுக்காக தனியாக எடுத்து...
பள்ளி பையோடு தான் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றிருந்தாள் சந்திரமதி.. திரும்பி வரும்போது கூட அத்தனை அவசரத்திலும்.. கலவரத்திலும் கூட தனது புத்தகப் பையை தயாராக எடுத்துக் கொண்டுதான் ரிஷியோடு சேர்ந்து நின்றிருந்தாள்.. அந்த புத்தகப் பையில்தான் மகரிஷி தனக்கு தந்த அலைபேசியை ரகசியமாக ஒளித்து...
மகளைக் கட்டியணைத்து கண்ணீருடன் மகரிஷியை பார்த்தவள் கைகூப்பி தனது நன்றியை கண்ளால் தெரிவிக்க அவன் உள்ளமும் அருந்ததியின் ஆனந்தக் கண்ணீரில் குளிர்ந்து போனது..
அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு மகளின் முகத்தை கையிலேந்தினாள் அருந்ததி..
"ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன் இப்படி உட்காரு.." என்று சந்திரமதியை...
மகரிஷி தன் பழைய அலைபேசி ஒன்றில் சிம்கார்டை போட்டு சந்திரமதியிடம் தந்து வைத்திருந்தான்..
ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணிக்கு சந்திரமதிக்கு அழைத்து பேசும்போது அவள் குரலிலும் பேச்சிலும் தெரியும் மாற்றங்களில் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை ஊடகமாக கண்டு கொண்டாலும் மிக கவனமாக சந்திரமதியை அருந்ததியிடம்...
அருந்ததி வேலைக்கு புறப்படுவதற்காக தனது டூவீலரை எடுக்கும்போது மோத்தி வாலாட்டிக் கொண்டே வந்து அவள் காலை உரசவும்.. பதறிக்கொண்டு பின்னால் நகர்ந்தவள் டூவீலரோடு விழப்பார்த்து அடுத்த கணம் சுதாரித்து வண்டியை நேராக நிறுத்தினாள்..
அந்த கோபத்தில் "ஏய் ச்சீ..! போ அப்படி" அவள் எரிச்சலோடு கத்த..
அது என்ன...
அறைக்குள் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை பேருக்கு புரட்டிக் கொண்டிருந்தவன் மனம் அதில் லயிக்காமல் போகவே நீண்ட பெருமூச்சுவிட்டு புத்தகத்தை கீழே வைத்து கையை தலைக்கு அண்ட கொடுத்தபடி சாய்ந்து படுத்தான்..!
விரட்டி விட்டாலும் மீண்டும் தாயிடம் ஓடும் குழந்தையாய் நெஞ்சம் அருந்ததியை சுற்றி சுற்றி வந்தது...