- Joined
- Jan 10, 2023
- Messages
- 82
- Thread Author
- #1
நான் ரெண்டு வருஷம் லீவு என்று வருண் விளையாட்டுக்கு தான் சொன்னான்..!!
கமலியிடம் பேசவும் செய்தான்..!!
வழக்கம்போல் ஒரே அறிவுரை தான்..
"ஹாஸ்பிடல் அவனோட சாம்ராஜ்யம்.. கட்டுபடறதோ அல்லது நான் எல்லா விதத்திலும் சரியாத்தான் இருக்கேன்னு நிரூபிக்கிறதோ.. உங்க சாமர்த்தியம்"
"ஆனா வீடு..? முழுக்க முழுக்க உங்க சந்தோஷம்.. அந்த இடத்துல நீங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கணும்.. அனுசரிச்சு போறதுக்கும் அடங்கி போறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. நீங்க நீங்களா இருங்க.. மனச போட்டு குழப்பிக்காதீங்க..!!" என்று தெளிவாக சொல்லி இருந்தான்..
ஒரு மருத்துவராய் மன அழுத்தத்திலிருந்து இருவரையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது அல்லவா..!! கடமை தவறுபவன் அல்ல வருண்.. ஆனாலும் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி ஒரே மாதிரியாக புலம்பும்போது.. ரகரகமாய் ஆலோசனைகளைச் சொல்ல அவன் கொஞ்சம் அதிகமாக மெனக்கெட வேண்டி இருக்கிறதே..!!
ஏதாவது ஒரு கட்டத்தில் சிறு மாற்றமாவது நிகழ்ந்தால் தானே அவன் கவுன்சிலிங் வெற்றியடைந்ததாக அர்த்தம்..
டான்சிங் காக்டஸ் (dsncing coctus) போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் பாவம் அவனும் என்னதான் செய்ய முடியும்.. அவன் அனுபவத்தில் எத்தனையோ நோயாளிகளை பார்த்திருக்கிறான்.. ஆனால் இந்த சூர்ய தேவ் வித்தியாசமான ரகம்..
கமலியும் அப்படித்தான்.. என் சந்தோஷம் என் உரிமை என்று இன்னொருவனிடம் போராடிக் கொண்டிருக்கிறாள்.. ஒருத்தருக்கு இன்னொருவரிடம் என்னதான் பிரச்சனை என்று இருவரையும் நேர் எதிரே நிற்க வைத்து நீயா நானா போல் பேசி தீர்க்க தோன்றுகிறது வருணுக்கு..
ஒருவேளை இனம் புரியாத ஈர்ப்பை வெளிப்படுத்த தெரியாமல் இப்படி பகையாக நிற்கிறார்களோ..? ச்சே.. ச்சே.. வாய்ப்பில்லை..
கமலி தன்னை விவாகரத்தானவள் என்று சொன்னாளே.. கணவனை வெறுக்கவும் முடியாமல் அவன் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இன்றளவும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கண்ணீர் விட்டு அழுதாளே.. அவள் மனதில் அப்படி ஒரு சலனம் தோன்ற வாய்ப்பே இல்லை..
சூர்ய தேவ்..? இவன் ஒரு புரியாத புதிர்.. அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை யோசித்துக் கொண்டிருக்கும் போதே தலைவலிக்கு ஆரம்பித்து விட.. காரியதரிசியை இன்டர்காமில் அழைத்து தேநீர் கொண்டு வரச் சொன்னான் வரூண்..
சூர்யா மகப்பேறு மருத்துமனையில்
இரண்டு படுக்கைகள் கொண்ட அந்த அறையில் ஒரு பக்கமாக அமர வைக்கப்பட்டிருந்தாள் அந்த பெண்..
ஏகப்பட்ட பரிசோதனைகளோடு.. குழந்தையின்மை பிரச்சனையின் காரணமாக டி.என்.சியும் செய்யப்பட்டிருந்ததால் சோர்ந்து போயிருந்தாள் அவள்..
"கவலைப்படாதடி கண்டிப்பா உனக்கு குழந்தை பிறக்கும்..!! கடவுளை நம்பு.." அந்தப் பெண்ணின் தாயார் ஆறுதல் சொல்லி தேற்றி கொண்டிருந்தார்..
கையில் பரிசோதனை முடிவுகளுடன் உள்ளே நுழைந்தான் சூர்ய தேவ்.. நாற்காலியை இழுத்து போட்டு அந்த பெண்ணை பார்த்தபடி அமர்ந்தான்..
"சாரி டு சே திஸ்.. உங்க கர்ப்பப்பை ஒரு குழந்தையை சுமக்கற அளவுக்கு வளர்ச்சி அடையல.. ஐ மீன் நீங்க குழந்தை பெத்துக்க முடியாது.." எந்த தொய்வுமில்லாமல் நேரடியாகவே விஷயத்தை சொல்லியிருக்க.. அம்மாவும் மகளும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அந்த விஷயத்தை கிரகித்துக் கொள்வதே மிக கடினமாக இருந்தது.. அந்தப் பெண் நீர் நிறைந்த கண்களோடு டாக்டரை பார்த்தாள்..
கமலி கலங்கிய கண்களோடு துக்கம் தொண்டையை அடைக்க அமர்ந்திருந்த அந்த பெண்ணை பரிதாபமாக பார்த்தாள்.. அந்தப் பெண்ணின் இடத்தில் தன்னை வைத்து அனுபவித்த வலியை நினைவு கூர்ந்தாள்.. ஒரு காலத்தில் அவள் நிலையும் இதுதானே?
"வேற வழியே இல்லையா டாக்டர்..!!" அந்தப் பெண்ணின் தாயார் குரல் நடுங்கியது.. இனி வம்சவிருத்திக்கு வாய்ப்பே இல்லை என்பதை அந்த டாக்டர் மிக எளிதாக சொல்லிவிட்டான்.. தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு சக்தி வேண்டுமே..!!
"ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.. இல்லைனா சரோகேசி ட்ரை பண்ணலாம்.. இதைத் தவிர வேறு எந்த ஆப்ஷனும் இல்லை.." பரீட்சை முடிவுகளை மாணவனிடம் தந்த வாத்தியார் போல் அவன் எழுந்து சென்று விட்டான்..
அந்த பெண்.. நின்று கொண்டிருந்த அவள் தாயின் வயிற்றை கட்டிக்கொண்டு ஓவென கதறினாள்..
"கடவுளே எந்த ஜென்மத்தில் செஞ்ச பாவமோ.. என் குடும்பத்திலயா இப்படி ஒரு இடி விழனும்.. இப்ப நான் என்ன செய்வேன்.. மாப்ள வீட்ல இந்த விஷயத்தை எப்படி சொல்றது..?" முகத்தை மூடிக் கொண்டு தாயானவள் அழ..
"என்னம்மா இப்படி சொல்றீங்க.. குழந்தை பெத்துக்க வழி இல்லைனா பாவம் செஞ்சவங்களா ஆகிடுவோமா..?" பக்கத்தில் ஒரு குரல் கேட்க இரு பெண்களும் நிமிர்ந்து பார்த்தனர்.. கமலி அங்குதான் நின்று கொண்டிருந்தாள்..
தாய் மகள் இருவரின் புலம்பலிலும்.. அழுகையிலும் சலிப்பாய் அவ்விடம் விட்டு நகர்ந்திருந்த சூர்ய தேவ் கமலி தன்னோடு வராமல் போனதில்..
நிச்சயமாய் இந்த முறை இவள் புதிதாய் ஒரு பிரச்சனையை உருவாக்க போகிறாள்.. கையும் களவுமாய் பிடித்து வேலையை விட்டு நீக்க வேண்டும்.. என்ற முடிவோடு உள்ளே நுழைந்தவன்..
"வருணுடைய.. கோ வித் த ஃப்ளோ.. பொறுமையா அப்சர்வ் பண்ணு.. தவறா சரியான்னு அப்புறம் முடிவு பண்ணு" என்ற வார்த்தையில் பச்சை நிற திரை போடப்பட்டிருந்த பார்ட்டீஷியனுக்கு அந்த பக்கம் நின்று கொண்டான்..
"நான் என்னத்த சொல்வேன் சிஸ்டரம்மா.. என் பொண்ணோட புகுந்த வீட்ல குழந்தையை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா காத்திருக்கிறாங்களே.. அவங்க கிட்ட போய் என் பொண்ணுக்கு குழந்தை பிறக்காதுங்கற விஷயத்தை எப்படி சொல்ல முடியும்.." நெஞ்சில் கை வைத்து.. துக்கம் தாங்க முடியாமல் அழுகையில் குலுங்கினாள் அந்தப் பெண்ணின் தாயார்..
"சொல்லித்தான் ஆகனும்.. உண்மையை ஏத்துக்க எல்லோருக்கும் தைரியம் வேணும்.. எல்லாருமே சேர்ந்து உங்க மகளை தாங்கி பிடிக்கட்டும்.." கமலி முடிப்பதற்குள்..
"அய்யோ சிஸ்டரம்மா.. நீங்க புரியாம பேசறீங்க.. விஷயத்தை கேள்விப்பட்டு சம்பந்தி வீட்டு ஆளுங்க என் மகளை தள்ளி வைச்சாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல.. அவள் கதறினாள்..
"என்னமா பேசுறீங்க..!! குழந்தைக்காக உங்க பெண்ணை தயவு தாட்சண்யமில்லாமல் ஒதுக்கி வச்சா.. அப்புறம் அந்த உறவுக்கு என்ன அர்த்தம் இருக்கு.. பிரச்சனைகள் வரும்போது தாங்கி பிடிக்கிறவங்க தான் சொந்தம்.. சந்ததி விருத்திக்காக தான் உங்க மருமகன் உங்க மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா..? குழந்தை முக்கியம்தான்.. நான் ஒத்துக்கறேன்.. தாய்மை ஒரு வரம்.. அதையும் நான் ஒத்துக்கறேன்.. ஆனா ஏதோ ஒரு கட்டத்தில் நாம எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை வரும்போது அதை ஏத்துக்கத்தான் வேணும்.." கமலியின் வார்த்தைகளை தொடர்ந்து
"அவர் என்ன சொல்லுவாரோ தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு சிஸ்டர்..!! குழந்தையின்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்.." தேம்பித் தேம்பி அழுதாள் அந்த பெண்..
"குழந்தைகளை பிடிக்காதவங்க இந்த உலகத்துல யார் இருக்காங்க..!! குழந்தை பெத்து கொடுக்க முடியலைங்கிறதுக்காக உன்னை உன் கணவர் வெறுத்துட்டார்னா அப்புறம் இத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு? இந்த மாதிரியான நேரத்துலதான் நீ தைரியமா இருக்கணும்.. பெத்துக்கிட்டா உன் குழந்தை மேல மட்டும் தான் அன்பு காட்ட முடியும்.. பெத்துக்க முடியாதவங்க எத்தனையோ குழந்தைகள் மேல அன்பு காட்டலாம்.."
"எல்லாம் பேச நல்லாத்தான்மா இருக்கும்.. அனுபவிச்சு பாக்கறவங்களுக்கு தான் அந்த வலி தெரியும்.. இனி என்ன செய்யறதுன்னு யோசிக்க கூட முடியல.." அந்தப் பெண்ணின் தாயார் விம்மினாள்..
கமலி வேதனையாய் பெருமூச்சு விட்டாள்.. "நான் அனுபவிச்சிருக்கேன்மா.. எனக்கு அந்த வலி தெரியும்.. அதனாலதான் முடிஞ்ச அளவு இந்த பொண்ணுக்கு தைரியம் சொல்லி தேத்த முயற்சி பண்றேன்.." என்று அந்த பெண்ணை பார்த்தாள்..
"நித்யா.. அழாதே..!! சில உறவுகளோட உண்மை முகத்தை காட்டறதுக்காக கடவுள் இப்படிபட்ட சோதனைகளை நமக்கு தருவார்.. அந்த மாதிரியான நேரங்கள்ல நிதர்சனத்தை ஏத்துக்கறதை தவிர நமக்கு வேற வழியே இல்லை.. வாழ்க்கை நமக்காக எதிர்பாராத நிறைய அதிசயங்களை வச்சிட்டு காத்திருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. உன் வாழ்க்கையில் அப்படி ஒரு அதிசயம் நிகழலாம்.."
"அப்ப எனக்கு குழந்தை பிறக்கும் னு சொல்றீங்களா சிஸ்டர்.." கேவலோடு கேட்டாள் அந்தப் பெண் நித்யா..
"எனக்கு தெரியல.. அந்த நேரத்துல குழந்தை பிறக்கிறதை விட சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய வேறு ஏதாவது பரிசு கூட உங்களுக்கு கிடைக்கலாம்.. வாழ்க்கையை கணிச்சு சொல்ல நான் ஒன்னும் கடவுள் இல்லையே.. ஆனா இப்ப நீ அனுபவிக்கற துயரங்களை மறக்கிற அளவுக்கு கண்டிப்பாக உன் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.. அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.." என்றாள் தீர்க்கதரிசி போல்..
எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது தெரியவில்லை ஆனால் கமலியின் அந்த வார்த்தைகள் இருவரின் மனதிலும் ஒளியேற்றியது..
"சிஸ்டர்..?" அந்தப் பெண்ணின் உதடுகள் அழுகையில் துடித்துக் கொண்டிருந்தன.
"யார் என்ன சொன்னாலும் மனசு காயப்படுத்திக்காதே நித்யா.. எப்பவும் உனக்கு தோள் கொடுக்கறவங்களை பக்கத்தில் வச்சுக்கோ.. உன்னை குத்தி காட்டறவங்களை தூக்கி போட்டுடு.. உனக்கு நீதான் ராணி.. வாழ்க்கை ரொம்ப சின்னது.. சந்தோஷமாக வாழும்மா.. சீக்கிரம் உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.. நம்பு..!!" கண்கள் மூடி திறந்தாள் கமலி..
ஒரு காலத்தில் இதே நிலையில் அவள் இருந்தபோது.. அவளைத் தேற்ற மறந்து விடுபட்டு போன அறிவுரைகள்.. தைரியமூட்டும் வார்த்தைகள்.. இன்னொரு பெண்ணுக்காவது பயன்படட்டும்.. அவளாவது பக்குவபடட்டும்.. என்ற எண்ணத்தோடு நித்யாவை திடப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் கமலி..
கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு ஆழ்ந்து மூச்சு விட்டாள் அந்தப் பெண்..
"நிச்சயமா இந்த அதிர்ச்சியை தாங்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. டாக்டர் விஷயத்தை சொன்ன உடனே கண்ணெல்லாம் இருளடிச்சு போச்சு.. மனசு வலிக்கத்தான் செய்யுது.. ஆனா நீங்க மட்டும் ஆறுதல் சொல்லாமல் போயிருந்தா நான் என்ன ஆகி இருப்பேனோ எனக்கே தெரியல.. இப்ப மனசு தெளிவா இருக்கு.. எதையும் ஹாண்டில் பண்ண முடியுங்கற தைரியம் எனக்கு வந்திருக்கு.. யாருக்கும் எந்த விதத்திலும் நான் குறைஞ்சு போகல.. என்னைக்காவது ஒருநாள் என் வாழ்க்கையில் நடக்க போற அந்த அதிசயத்துக்காக இன்னையிலிருந்து சந்தோஷமா தைரியமா காத்திருப்பேன்.." தீர்க்கமான குரலில் சொன்ன மகளை அதிசயமாக பார்த்தார் நித்யாவின் தாய்..
"அழுகை கண்ணீர் எல்லாத்தையும் ஓரங்கட்டி வச்சிட்டு.. போய் அடுத்த வேலையை பார் நித்யா..!! உனக்கு என்ன தரனும்னு இந்த பிரபஞ்சம் ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருக்கும்.. உன் கைக்கு வந்து சேர வேண்டியது சரியான நேரத்தில் உன்கிட்ட வரும்.. அதுவரைக்கும் மனச காயப்படுத்திக்காதே..!!" அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்தினாள்..
"டாக்டர் சொன்ன ரிப்போர்ட் ஒரு பக்கம் ஜீரணிக்க முடியலைன்னாலும்.. இன்னொரு பக்கம் என் மகளை எப்படி தேத்திக்கொண்டு வரப் போறேன்னு பயந்துட்டு இருந்தேன்.. கடவுளே உங்களை அனுப்பி வச்சிருக்காருன்னு நினைக்கறேன்.. ரொம்ப நன்றிம்மா.."
நித்யாவின் தாயார் நன்றி பெருக்கோடு கையெடுத்து கும்பிட.. கும்பிட்ட கரத்தை தன் இரு கரங்களால் அழுத்தினாள் கமலி..
"இதுக்கெல்லாம் எதுக்குமா நன்றி..!!
என்னால நித்யாவோட வலியை புரிஞ்சுக்க முடியும்.. அதனால மட்டும்தான் அவ மனசுல தெளிவை கொண்டு வர முடிஞ்சது.. தைரியமா இருங்க.." என்றவள் திரைமறைவில் நின்று கொண்டிருந்தவனை தாண்டி வெளியே சென்றிருந்தாள் கமலி..
அவள் சென்ற திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன்.. உள்பக்கம் தலை சாய்த்து எட்டிப் பார்த்தான்.. நித்யாவின் தாய் மகளை ஆரத் தழுவி அவள் நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்தாள்.. இருளடைந்து போயிருந்த அவர்கள் முகம் இப்போது சற்று தெளிவாக..
சூர்யதேவ் மருத்துவ பரிசோதனை முடிவை சொன்ன போது.. வேதனையில் தோய்ந்த அவர்கள் முகம் அவன் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. ஆனால் இந்த கணம் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்ட அந்த பெண்ணின் முகம்.. பாத்துக்கலாம் செல்லம்.. நான் இருக்கேன் உனக்கு.. என தாங்கி பிடிக்கும் அந்த தாயின் தீர்க்கமான விழிகள்..
சுக்கலாய் உடைந்த பிறகும் ஒன்று சேர்ந்து சிரிக்கும் இந்த முகங்கள் அவனுக்குள் மெல்லிய நூலிழையாய் ஊடுருவி பூமி தொடாத பிள்ளை பாதம் நெஞ்சை தொடுவதை போல் இனங்காண முடியாத மென்மையை தந்திருந்தன..
தொடரும்..
கமலியிடம் பேசவும் செய்தான்..!!
வழக்கம்போல் ஒரே அறிவுரை தான்..
"ஹாஸ்பிடல் அவனோட சாம்ராஜ்யம்.. கட்டுபடறதோ அல்லது நான் எல்லா விதத்திலும் சரியாத்தான் இருக்கேன்னு நிரூபிக்கிறதோ.. உங்க சாமர்த்தியம்"
"ஆனா வீடு..? முழுக்க முழுக்க உங்க சந்தோஷம்.. அந்த இடத்துல நீங்க உங்க கட்டுப்பாட்டுக்குள்ள தான் இருக்கணும்.. அனுசரிச்சு போறதுக்கும் அடங்கி போறதுக்கும் வித்தியாசம் இருக்கு.. நீங்க நீங்களா இருங்க.. மனச போட்டு குழப்பிக்காதீங்க..!!" என்று தெளிவாக சொல்லி இருந்தான்..
ஒரு மருத்துவராய் மன அழுத்தத்திலிருந்து இருவரையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது அல்லவா..!! கடமை தவறுபவன் அல்ல வருண்.. ஆனாலும் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி ஒரே மாதிரியாக புலம்பும்போது.. ரகரகமாய் ஆலோசனைகளைச் சொல்ல அவன் கொஞ்சம் அதிகமாக மெனக்கெட வேண்டி இருக்கிறதே..!!
ஏதாவது ஒரு கட்டத்தில் சிறு மாற்றமாவது நிகழ்ந்தால் தானே அவன் கவுன்சிலிங் வெற்றியடைந்ததாக அர்த்தம்..
டான்சிங் காக்டஸ் (dsncing coctus) போல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் பாவம் அவனும் என்னதான் செய்ய முடியும்.. அவன் அனுபவத்தில் எத்தனையோ நோயாளிகளை பார்த்திருக்கிறான்.. ஆனால் இந்த சூர்ய தேவ் வித்தியாசமான ரகம்..
கமலியும் அப்படித்தான்.. என் சந்தோஷம் என் உரிமை என்று இன்னொருவனிடம் போராடிக் கொண்டிருக்கிறாள்.. ஒருத்தருக்கு இன்னொருவரிடம் என்னதான் பிரச்சனை என்று இருவரையும் நேர் எதிரே நிற்க வைத்து நீயா நானா போல் பேசி தீர்க்க தோன்றுகிறது வருணுக்கு..
ஒருவேளை இனம் புரியாத ஈர்ப்பை வெளிப்படுத்த தெரியாமல் இப்படி பகையாக நிற்கிறார்களோ..? ச்சே.. ச்சே.. வாய்ப்பில்லை..
கமலி தன்னை விவாகரத்தானவள் என்று சொன்னாளே.. கணவனை வெறுக்கவும் முடியாமல் அவன் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இன்றளவும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கண்ணீர் விட்டு அழுதாளே.. அவள் மனதில் அப்படி ஒரு சலனம் தோன்ற வாய்ப்பே இல்லை..
சூர்ய தேவ்..? இவன் ஒரு புரியாத புதிர்.. அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை யோசித்துக் கொண்டிருக்கும் போதே தலைவலிக்கு ஆரம்பித்து விட.. காரியதரிசியை இன்டர்காமில் அழைத்து தேநீர் கொண்டு வரச் சொன்னான் வரூண்..
சூர்யா மகப்பேறு மருத்துமனையில்
இரண்டு படுக்கைகள் கொண்ட அந்த அறையில் ஒரு பக்கமாக அமர வைக்கப்பட்டிருந்தாள் அந்த பெண்..
ஏகப்பட்ட பரிசோதனைகளோடு.. குழந்தையின்மை பிரச்சனையின் காரணமாக டி.என்.சியும் செய்யப்பட்டிருந்ததால் சோர்ந்து போயிருந்தாள் அவள்..
"கவலைப்படாதடி கண்டிப்பா உனக்கு குழந்தை பிறக்கும்..!! கடவுளை நம்பு.." அந்தப் பெண்ணின் தாயார் ஆறுதல் சொல்லி தேற்றி கொண்டிருந்தார்..
கையில் பரிசோதனை முடிவுகளுடன் உள்ளே நுழைந்தான் சூர்ய தேவ்.. நாற்காலியை இழுத்து போட்டு அந்த பெண்ணை பார்த்தபடி அமர்ந்தான்..
"சாரி டு சே திஸ்.. உங்க கர்ப்பப்பை ஒரு குழந்தையை சுமக்கற அளவுக்கு வளர்ச்சி அடையல.. ஐ மீன் நீங்க குழந்தை பெத்துக்க முடியாது.." எந்த தொய்வுமில்லாமல் நேரடியாகவே விஷயத்தை சொல்லியிருக்க.. அம்மாவும் மகளும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. அந்த விஷயத்தை கிரகித்துக் கொள்வதே மிக கடினமாக இருந்தது.. அந்தப் பெண் நீர் நிறைந்த கண்களோடு டாக்டரை பார்த்தாள்..
கமலி கலங்கிய கண்களோடு துக்கம் தொண்டையை அடைக்க அமர்ந்திருந்த அந்த பெண்ணை பரிதாபமாக பார்த்தாள்.. அந்தப் பெண்ணின் இடத்தில் தன்னை வைத்து அனுபவித்த வலியை நினைவு கூர்ந்தாள்.. ஒரு காலத்தில் அவள் நிலையும் இதுதானே?
"வேற வழியே இல்லையா டாக்டர்..!!" அந்தப் பெண்ணின் தாயார் குரல் நடுங்கியது.. இனி வம்சவிருத்திக்கு வாய்ப்பே இல்லை என்பதை அந்த டாக்டர் மிக எளிதாக சொல்லிவிட்டான்.. தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு சக்தி வேண்டுமே..!!
"ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.. இல்லைனா சரோகேசி ட்ரை பண்ணலாம்.. இதைத் தவிர வேறு எந்த ஆப்ஷனும் இல்லை.." பரீட்சை முடிவுகளை மாணவனிடம் தந்த வாத்தியார் போல் அவன் எழுந்து சென்று விட்டான்..
அந்த பெண்.. நின்று கொண்டிருந்த அவள் தாயின் வயிற்றை கட்டிக்கொண்டு ஓவென கதறினாள்..
"கடவுளே எந்த ஜென்மத்தில் செஞ்ச பாவமோ.. என் குடும்பத்திலயா இப்படி ஒரு இடி விழனும்.. இப்ப நான் என்ன செய்வேன்.. மாப்ள வீட்ல இந்த விஷயத்தை எப்படி சொல்றது..?" முகத்தை மூடிக் கொண்டு தாயானவள் அழ..
"என்னம்மா இப்படி சொல்றீங்க.. குழந்தை பெத்துக்க வழி இல்லைனா பாவம் செஞ்சவங்களா ஆகிடுவோமா..?" பக்கத்தில் ஒரு குரல் கேட்க இரு பெண்களும் நிமிர்ந்து பார்த்தனர்.. கமலி அங்குதான் நின்று கொண்டிருந்தாள்..
தாய் மகள் இருவரின் புலம்பலிலும்.. அழுகையிலும் சலிப்பாய் அவ்விடம் விட்டு நகர்ந்திருந்த சூர்ய தேவ் கமலி தன்னோடு வராமல் போனதில்..
நிச்சயமாய் இந்த முறை இவள் புதிதாய் ஒரு பிரச்சனையை உருவாக்க போகிறாள்.. கையும் களவுமாய் பிடித்து வேலையை விட்டு நீக்க வேண்டும்.. என்ற முடிவோடு உள்ளே நுழைந்தவன்..
"வருணுடைய.. கோ வித் த ஃப்ளோ.. பொறுமையா அப்சர்வ் பண்ணு.. தவறா சரியான்னு அப்புறம் முடிவு பண்ணு" என்ற வார்த்தையில் பச்சை நிற திரை போடப்பட்டிருந்த பார்ட்டீஷியனுக்கு அந்த பக்கம் நின்று கொண்டான்..
"நான் என்னத்த சொல்வேன் சிஸ்டரம்மா.. என் பொண்ணோட புகுந்த வீட்ல குழந்தையை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா காத்திருக்கிறாங்களே.. அவங்க கிட்ட போய் என் பொண்ணுக்கு குழந்தை பிறக்காதுங்கற விஷயத்தை எப்படி சொல்ல முடியும்.." நெஞ்சில் கை வைத்து.. துக்கம் தாங்க முடியாமல் அழுகையில் குலுங்கினாள் அந்தப் பெண்ணின் தாயார்..
"சொல்லித்தான் ஆகனும்.. உண்மையை ஏத்துக்க எல்லோருக்கும் தைரியம் வேணும்.. எல்லாருமே சேர்ந்து உங்க மகளை தாங்கி பிடிக்கட்டும்.." கமலி முடிப்பதற்குள்..
"அய்யோ சிஸ்டரம்மா.. நீங்க புரியாம பேசறீங்க.. விஷயத்தை கேள்விப்பட்டு சம்பந்தி வீட்டு ஆளுங்க என் மகளை தள்ளி வைச்சாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல.. அவள் கதறினாள்..
"என்னமா பேசுறீங்க..!! குழந்தைக்காக உங்க பெண்ணை தயவு தாட்சண்யமில்லாமல் ஒதுக்கி வச்சா.. அப்புறம் அந்த உறவுக்கு என்ன அர்த்தம் இருக்கு.. பிரச்சனைகள் வரும்போது தாங்கி பிடிக்கிறவங்க தான் சொந்தம்.. சந்ததி விருத்திக்காக தான் உங்க மருமகன் உங்க மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா..? குழந்தை முக்கியம்தான்.. நான் ஒத்துக்கறேன்.. தாய்மை ஒரு வரம்.. அதையும் நான் ஒத்துக்கறேன்.. ஆனா ஏதோ ஒரு கட்டத்தில் நாம எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலை வரும்போது அதை ஏத்துக்கத்தான் வேணும்.." கமலியின் வார்த்தைகளை தொடர்ந்து
"அவர் என்ன சொல்லுவாரோ தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு சிஸ்டர்..!! குழந்தையின்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும்.." தேம்பித் தேம்பி அழுதாள் அந்த பெண்..
"குழந்தைகளை பிடிக்காதவங்க இந்த உலகத்துல யார் இருக்காங்க..!! குழந்தை பெத்து கொடுக்க முடியலைங்கிறதுக்காக உன்னை உன் கணவர் வெறுத்துட்டார்னா அப்புறம் இத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு? இந்த மாதிரியான நேரத்துலதான் நீ தைரியமா இருக்கணும்.. பெத்துக்கிட்டா உன் குழந்தை மேல மட்டும் தான் அன்பு காட்ட முடியும்.. பெத்துக்க முடியாதவங்க எத்தனையோ குழந்தைகள் மேல அன்பு காட்டலாம்.."
"எல்லாம் பேச நல்லாத்தான்மா இருக்கும்.. அனுபவிச்சு பாக்கறவங்களுக்கு தான் அந்த வலி தெரியும்.. இனி என்ன செய்யறதுன்னு யோசிக்க கூட முடியல.." அந்தப் பெண்ணின் தாயார் விம்மினாள்..
கமலி வேதனையாய் பெருமூச்சு விட்டாள்.. "நான் அனுபவிச்சிருக்கேன்மா.. எனக்கு அந்த வலி தெரியும்.. அதனாலதான் முடிஞ்ச அளவு இந்த பொண்ணுக்கு தைரியம் சொல்லி தேத்த முயற்சி பண்றேன்.." என்று அந்த பெண்ணை பார்த்தாள்..
"நித்யா.. அழாதே..!! சில உறவுகளோட உண்மை முகத்தை காட்டறதுக்காக கடவுள் இப்படிபட்ட சோதனைகளை நமக்கு தருவார்.. அந்த மாதிரியான நேரங்கள்ல நிதர்சனத்தை ஏத்துக்கறதை தவிர நமக்கு வேற வழியே இல்லை.. வாழ்க்கை நமக்காக எதிர்பாராத நிறைய அதிசயங்களை வச்சிட்டு காத்திருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. உன் வாழ்க்கையில் அப்படி ஒரு அதிசயம் நிகழலாம்.."
"அப்ப எனக்கு குழந்தை பிறக்கும் னு சொல்றீங்களா சிஸ்டர்.." கேவலோடு கேட்டாள் அந்தப் பெண் நித்யா..
"எனக்கு தெரியல.. அந்த நேரத்துல குழந்தை பிறக்கிறதை விட சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய வேறு ஏதாவது பரிசு கூட உங்களுக்கு கிடைக்கலாம்.. வாழ்க்கையை கணிச்சு சொல்ல நான் ஒன்னும் கடவுள் இல்லையே.. ஆனா இப்ப நீ அனுபவிக்கற துயரங்களை மறக்கிற அளவுக்கு கண்டிப்பாக உன் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.. அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.." என்றாள் தீர்க்கதரிசி போல்..
எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது தெரியவில்லை ஆனால் கமலியின் அந்த வார்த்தைகள் இருவரின் மனதிலும் ஒளியேற்றியது..
"சிஸ்டர்..?" அந்தப் பெண்ணின் உதடுகள் அழுகையில் துடித்துக் கொண்டிருந்தன.
"யார் என்ன சொன்னாலும் மனசு காயப்படுத்திக்காதே நித்யா.. எப்பவும் உனக்கு தோள் கொடுக்கறவங்களை பக்கத்தில் வச்சுக்கோ.. உன்னை குத்தி காட்டறவங்களை தூக்கி போட்டுடு.. உனக்கு நீதான் ராணி.. வாழ்க்கை ரொம்ப சின்னது.. சந்தோஷமாக வாழும்மா.. சீக்கிரம் உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.. நம்பு..!!" கண்கள் மூடி திறந்தாள் கமலி..
ஒரு காலத்தில் இதே நிலையில் அவள் இருந்தபோது.. அவளைத் தேற்ற மறந்து விடுபட்டு போன அறிவுரைகள்.. தைரியமூட்டும் வார்த்தைகள்.. இன்னொரு பெண்ணுக்காவது பயன்படட்டும்.. அவளாவது பக்குவபடட்டும்.. என்ற எண்ணத்தோடு நித்யாவை திடப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் கமலி..
கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு ஆழ்ந்து மூச்சு விட்டாள் அந்தப் பெண்..
"நிச்சயமா இந்த அதிர்ச்சியை தாங்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. டாக்டர் விஷயத்தை சொன்ன உடனே கண்ணெல்லாம் இருளடிச்சு போச்சு.. மனசு வலிக்கத்தான் செய்யுது.. ஆனா நீங்க மட்டும் ஆறுதல் சொல்லாமல் போயிருந்தா நான் என்ன ஆகி இருப்பேனோ எனக்கே தெரியல.. இப்ப மனசு தெளிவா இருக்கு.. எதையும் ஹாண்டில் பண்ண முடியுங்கற தைரியம் எனக்கு வந்திருக்கு.. யாருக்கும் எந்த விதத்திலும் நான் குறைஞ்சு போகல.. என்னைக்காவது ஒருநாள் என் வாழ்க்கையில் நடக்க போற அந்த அதிசயத்துக்காக இன்னையிலிருந்து சந்தோஷமா தைரியமா காத்திருப்பேன்.." தீர்க்கமான குரலில் சொன்ன மகளை அதிசயமாக பார்த்தார் நித்யாவின் தாய்..
"அழுகை கண்ணீர் எல்லாத்தையும் ஓரங்கட்டி வச்சிட்டு.. போய் அடுத்த வேலையை பார் நித்யா..!! உனக்கு என்ன தரனும்னு இந்த பிரபஞ்சம் ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருக்கும்.. உன் கைக்கு வந்து சேர வேண்டியது சரியான நேரத்தில் உன்கிட்ட வரும்.. அதுவரைக்கும் மனச காயப்படுத்திக்காதே..!!" அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்தினாள்..
"டாக்டர் சொன்ன ரிப்போர்ட் ஒரு பக்கம் ஜீரணிக்க முடியலைன்னாலும்.. இன்னொரு பக்கம் என் மகளை எப்படி தேத்திக்கொண்டு வரப் போறேன்னு பயந்துட்டு இருந்தேன்.. கடவுளே உங்களை அனுப்பி வச்சிருக்காருன்னு நினைக்கறேன்.. ரொம்ப நன்றிம்மா.."
நித்யாவின் தாயார் நன்றி பெருக்கோடு கையெடுத்து கும்பிட.. கும்பிட்ட கரத்தை தன் இரு கரங்களால் அழுத்தினாள் கமலி..
"இதுக்கெல்லாம் எதுக்குமா நன்றி..!!
என்னால நித்யாவோட வலியை புரிஞ்சுக்க முடியும்.. அதனால மட்டும்தான் அவ மனசுல தெளிவை கொண்டு வர முடிஞ்சது.. தைரியமா இருங்க.." என்றவள் திரைமறைவில் நின்று கொண்டிருந்தவனை தாண்டி வெளியே சென்றிருந்தாள் கமலி..
அவள் சென்ற திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன்.. உள்பக்கம் தலை சாய்த்து எட்டிப் பார்த்தான்.. நித்யாவின் தாய் மகளை ஆரத் தழுவி அவள் நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்தாள்.. இருளடைந்து போயிருந்த அவர்கள் முகம் இப்போது சற்று தெளிவாக..
சூர்யதேவ் மருத்துவ பரிசோதனை முடிவை சொன்ன போது.. வேதனையில் தோய்ந்த அவர்கள் முகம் அவன் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. ஆனால் இந்த கணம் நிதர்சனத்தை ஏற்றுக் கொண்ட அந்த பெண்ணின் முகம்.. பாத்துக்கலாம் செல்லம்.. நான் இருக்கேன் உனக்கு.. என தாங்கி பிடிக்கும் அந்த தாயின் தீர்க்கமான விழிகள்..
சுக்கலாய் உடைந்த பிறகும் ஒன்று சேர்ந்து சிரிக்கும் இந்த முகங்கள் அவனுக்குள் மெல்லிய நூலிழையாய் ஊடுருவி பூமி தொடாத பிள்ளை பாதம் நெஞ்சை தொடுவதை போல் இனங்காண முடியாத மென்மையை தந்திருந்தன..
தொடரும்..
Last edited: