- Joined
- Jan 10, 2023
- Messages
- 82
- Thread Author
- #1
கமலி தன் துணிமணிகளை பெட்டியில் வைத்து அடுக்கிக் கொண்டிருக்க.. சூர்யதேவ் கூடத்தில் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்..
மெல்லிய இளம் மஞ்சள் நிற ஜார்ஜெட் புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு.. மடித்து வைத்திருந்த துணிமணிகளை பையில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கமலி..
படுக்கையறை பக்கம் திரும்பியவனுக்கு கமலியின் எழில் வடிவம் கண்களை நிறைத்து தொண்டையை வரள செய்து தாகத்தை தூண்டியிருந்தது..
இளம் மஞ்சள் நிற புடவை எலுமிச்சை நிற சருமம் கொண்டவளின் தேகத்தோடு ஒட்டி கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது..
"ஏன் இந்த பொண்ண பார்க்கும்போது நான் இவ்வளவு டெம்ட் ஆகறேன்.." சூர்ய தேவ் இளமை வெடிப்புகளாய் தனக்குள் தோன்றும் இந்த உணர்ச்சிகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது விலக்கித் தள்ளவும் முடியாமல்.. திணறிப் போனான்..
கண்கள் லேசர் கதிர்கள் போல் அவள் வெண்ணிற இடையில் ஊடுருவி செல்ல.. கண்ணியவனாய் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணி.. விழிகளை அழுத்தமாக மூடி திறந்து பார்வையை திசை திருப்ப முயன்றவன் பக்கத்திலிருந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்..
என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தைஇல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்..
ஃபீமேல் வர்ஷனில் சொர்ணலதா பாடியதை போல் மேல் வர்ஷனில் எஸ்பிபி பாடியிருந்தால் அவனுக்கு சர்வ பொருத்தமாய் இருந்திருக்கும்.. ஆடவனுக்குள் உணர்வுகள் அப்படித்தான் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது..
எத்தனையோ நாட்கள் கமலியோடு தனிமையில் நேரத்தை செலவிட்டு ஒன்றாக உணவருந்தியதுண்டு.. பேசுவதற்கான உரையாடல்கள் எதுவுமின்றி வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக்கொண்டே மௌனமாக அமர்ந்திருந்த தருணங்களும் உண்டு..
ஆனால் என்றைக்குமில்லாமல் படுக்கை அறைக்கும் கூடத்திற்கும் இடையேயான இந்த பத்தடி தூரமே அவனை அதிகமாக சோதித்தது..
தொலைக்காட்சியில் பாடலை சத்தமாக வைத்தான்..
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
எப்போதும் அவனை எரிச்சலூட்டும் பாடல் வரிகளும் காதல் காட்சிகளும் இன்று சொல்ல முடியாத சுவாரசியத்தையும் குறுகுறுப்பையும் அவனுக்குள் தூண்டி விட்டதாய் உணர்ந்தான்.. கண்கள் தொலைக்காட்சியினுள் புதைந்து போயின..
கதைப்படி நாயகன் அந்த பெண்ணை ஏமாற்றுவதை போல் திரைப்படம் அமைந்திருந்தாலும் அந்த பாடல்.. உள்ளுக்குள் மோகத்தை தட்டி எழுப்பும் நெருக்கமான காதல் காட்சிகளுடன் கூடிய அருமையான பாடல் தானே..!!
அரும்புவிட்ட மெல்லிய உணர்வு காதல் பாடல்களை ரசிக்க சொல்லுகிறதோ..!!
"டாக்டர்.. டாக்டர்.." அவள் இரண்டு முறை அழைத்த பிறகுதான் தொலைக்காட்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்தான் சூர்யதேவ்..
"ம்ம்.." அவன் நிமிர்ந்து பார்த்தான்..
டாக்டர் காதல் காட்சிகளை கொண்ட மெலடி பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறாரே.. அடடா.. ஆச்சர்யகுறி..!! கமலியும் வியப்பில் திணறினாள்..
"என்ன?"
"பேக் பண்ணியாச்சு.." தன் அருகில் வைத்திருந்த துணிமணிகள் அடங்கிய பையை காண்பித்தாள்..
"ரைட்.." என்றபடி எழுந்தவனிடம் ஒரு நிமிஷம்.. "கிச்சன்ல எல்லாத்தையும் கிளீன் பண்ணி எடுத்து வெச்சிட்டு வந்துரட்டுமா..?" என்று கேட்க.. அவன் உதடுகள் மீசைக்குள் தெரியாதபடி கொஞ்சமாக விரிந்தன..
"உன் புகுந்த வீடு என்ன ஊர் தாண்டியா இருக்குது..? கீழ் வீடுதானே.. வீட்டை காலி பண்ணி ஏறக்கட்டி வச்சுட்டு போற மாதிரி ஏன் இவ்வளவு பரபரப்பு.. ரிலாக்ஸா இரு.. தேவைப்படும்போது இங்கே வந்து கிளீன் பண்ணிக்கலாம்.." என்றவன் அவள் பையை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க..
"ஐயோ டாக்டர்.. நீங்க எதுக்கு என் பையை தூக்கணும்.. குடுங்க நானே எடுத்துட்டு வரேன்" என்று அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..
"ஏன் நான் எடுத்துக்கிட்டா என்ன..?" விழிகள் இடுங்கினான் சூர்ய தேவ்..
"இல்ல.. நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்.. நீங்க போய் என்னோட பேக்கை.. தூக்க..லாமா.." அவன் பார்வை சற்று கடுமையாக மாறியதில் கடைசி வார்த்தைகளை தயக்கத்தோடு இழுத்தாள்..
"நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்.. அது உனக்கு மறந்து போச்சுதா..?" குரல் சற்று காட்டமாகவே வந்தது..
"நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்தானே..? கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம்னு நீங்க சொன்னிங்களே..?"
நண்பர்கள் என்ற எல்லையோடு நிறுத்திக் கொள்வோம் என்பதை ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் கமலி..
நீண்ட மூச்செறிந்து அவளை தீர்க்கமாக பார்த்தான் சூர்யா..
"நாம ரெண்டு பேரும் நண்பர்கள்தான்.. ஆனா கணவன் மனைவிங்கற உறவுக்குள்ள இருக்கற நண்பர்கள்.. லைக் அப்பாவும் மகனும்.. தாயும் மகளும் நண்பர்களா இருக்கிறதில்லையா.. அந்த மாதிரி.. நமக்குள்ள எப்பவுமே நட்பு இருக்கும்.. அதுக்காக நாம கணவன் மனைவி இல்லைன்னு ஆகிடாது.." என்றவன் அவள் பையை தூக்கிக் கொண்டு முன்னே நகர.. என்ன புதுசு புதுசா ஏதேதோ சொல்றாரு.. என்ற ரீதியில் விழித்துக் கொண்டு நின்றாள் கமலி..
வாசல் வரை சென்றவன் அவளிடம் திரும்பினான்..
"அப்புறம்.. நண்பர்கள்னு சொல்லி என்னை எந்த வரைமுறைக்குள்ள நிறுத்துறேன்னு எனக்கு புரியல.. கடைசி வரைக்கும் பிரியாம இருக்கலாம்னு சொன்னேன்.. கடைசி வரைக்கும் நண்பர்களா மட்டும் இருக்கலாம்னு நான் சொல்லவே இல்ல..!! வீட்டை பூட்டிட்டு வா.." என்று விட்டு அவன் கீழே இறங்கி நடக்க.. கமலியின் இதயம் உப்பி வெடிப்பதை போல் வேகமாக துடிக்க தொடங்கியது..
நண்பர்கள் என்ற வட்டத்துக்குள் பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தந்து கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
இரண்டு மூன்று முறை அவன் வாயிலிருந்து வந்து விட்ட கணவன் மனைவி என்ற வார்த்தை கமலியை திகிலுறச் செய்தது..
கணவன் மனைவியாக வாழ்வதாக முடிவெடுத்திருந்தால் மட்டுமே சூர்ய தேவ்வை திருமணம் செய்து கொள்.. இல்லையேல் மணக்க சம்மதம் இல்லை என்று கூறி நாசுக்காக மறுத்து விலகி விடு.. என் நண்பனின் எதிர்கால கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தடை போட்டு.. அவன் வாழ்க்கையை வீணாக்கி விட வேண்டாம்.. வருண் வார்த்தைகள் காதினுள் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டன..
கமலி டாக்டரை திருமணம் செய்து கொள்ள காரணங்கள்..
அவருக்கு செக்ஸ் விஷயத்தில் விருப்பமில்லை.. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தனக்கும் பாதகம் வராது இறுதிவரை நண்பர்களாகவே வாழ்ந்து கொள்ளலாம்..
இன்னொன்று.. தன்னை இழித்துப் பேசும் அஷோக் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம்.. இதுதான் மூலக் காரணம்..
ஆனால் அதையும் தாண்டி சூர்யாவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தால்..?
இந்த கேள்விக்கு கமலியிடம் பதில் இல்லை..
டாக்டரை எனக்கு பிடிக்குமா..?
பிடிக்குமே..!!
அவரை காதலிக்கிறாயா..? மாயா கேட்ட அதே கேள்வி தனக்குள் கேட்டுக் கொண்டாள்..
இல்லவே இல்லை..
அவரை கணவனாக ஏற்றுக்கொள்கிறாயா..?
அவர் என் நல்ல நண்பன்.. இந்த திருமணம் எங்கள் நட்புக்கான லைசென்ஸ்..
இதுவரைதான் சூர்ய தேவ்வுடனான தன் வாழ்க்கை பற்றி அவள் யோசித்து வைத்திருக்கிறாள்..
இதற்குமேல் வாட் நெக்ஸ்ட்.. என்ற கேள்விக்கு பதில் தெரியாதே!!
மனதை திடப்படுத்திக் கொண்டு படியேறி வந்தவளை வா என கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான் அவன்..
"கமலி.. உனக்கு நம்ம பெட்ரூம் காட்டறேன்.." அவன் இயல்பாகச் சொல்ல கமலிக்கு உடல் தூக்கி வாரி போட்டது..
"இல்லை.. இல்லை.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..!!" அவசரமாக குறுக்கிட்டாள்..
சூர்ய தேவ் அவளைக் கூர்ந்து பார்த்தான்..
"நான்.. உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டது.. எனக்கு ஒரு நல்ல நண்பன் வேணும்.. ஒரு டைவர்ஷன் வேணும்.. அப்புறம் ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட் வேணும்.. நான் இவ்வளவு தான் யோசிச்சேன்.."
"சரி..?" ஊடுருவும் பார்வையோடு கால்களை அழுத்தமாக ஊன்றி மார்பின் முன்பு கைகளை மடக்கி கட்டிக் கொண்டு நின்றான் அவன்..
"இன்னும்.. இந்த திருமண வாழ்க்கைக்கு நான் தயாராகல.."
"சொல்ல வந்ததை கிளியரா சொல்லு.."
"அதாவது.. அதாவது நான் எப்படி சொல்றது.. உங்களுக்கு எல்லா விதத்திலும் மனைவியா நடந்துக்க முடியும்னு எனக்கு தோணல.. உங்கள ஒரு நல்ல ஃபிரண்டா பாக்கறேன்.. ஆனா ஒரு கணவனா ஏத்துக்க முடியுமா தெரியல.." அதற்கு மேல் என்ன சொல்லுவதென்று தெரியாமல்.. தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவனை பார்த்தாள் கமலி..
அவன் பார்வையில் என்ன நினைக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை..
"சரி வா.." என்று அவள் கையைப் பற்றிக் கொண்டு படுக்கை அறைக்குள் அழைத்து சென்றான் அவன்..
கமலி விதிர்த்து போனாள்..
"நீங்க இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லைன்னு சொன்னதுனாலதான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.." அவள் தேகம் நடுங்கியது.. சூர்யதேவ் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்..
"இப்போதைக்கு உங்க நட்பு மட்டும் எனக்கு போதும்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கலாம்.. ஆனா நமக்குள்ள எதுவும் வேண்டாம்.." சொல்லி முடிப்பதற்குள் ஒரு வழியாகிப் போனாள் கமலி..
"எது வேண்டாம்..?" அருகே வந்தவன் கமலியை ஆழ்ந்த கண்களால் ஊடுருவி பார்த்தான்..
அவன் பார்வையை சந்திக்க திராணியின்றி தலை குனிந்தவள்.. "ஒரே படுக்கையில.. ஒண்ணா.." சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் விழிதட்டி நின்றது..
"ஒரே பெட்ல ஒண்ணா தூங்க போறோம் இதுல என்ன தப்பு இருக்கு..!! நீ ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகற.." அவன் புரியாத பார்வை பார்த்தான்..
இந்த உறவு எந்த கோணத்தில் செல்ல போகிறதென அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. மறுபடி ஒரு திருமண வாழ்க்கை.. கணவன் மனைவியாய் அன்னியோன்யம்.. மீண்டும் பந்தம் பாசம்.. ஏமாற்றம்.. துரோகம்.. எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை அவள்..
ஒற்றை விரலால் அவள் தாடையை தொட்டு நிமிர்த்தினான் சூரியதேவ்..
கமலியின் தோள்கள் குலுங்கின..
"ரிலாக்ஸ்.. நம்ம வாழ்க்கை எப்படி போகப்போகுதுன்னு எனக்கும் தெரியல.. உன்னைய பக்கத்துல வச்சுக்கணும்.. ஒன்னா சாப்பாடு ஒன்னா தூக்கம்.. இதுவரைக்கும் தான் நானும் யோசிச்சிருக்கேன்.. ஒருவேளை நாளைக்கு எனக்குள்ள வேற மாதிரியான உணர்வுகள் வந்தா..?" என்று நிறுத்திவிட்டு அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்..
கமலியின் முகம் வெளிறியது..
"ஒருவேளை உன்கூட வாழனும்னு எனக்கு தோணுச்சுன்னா.. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்திக்க மாட்டேன்.. இந்த ஜென்மத்துல நீதான் என்னோட வைஃப்.. ஒன்ஸ் கமிட் ஆகியாச்சு.. எந்த நிலையிலும் நான் உன்னை விட்டு பிரியறதா இல்லை.." அவன் சொல்லிக் கொண்டே போக.. சூர்ய தேவ்வின் புதிய பரிமாணத்தை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..
கன்னங்கள் சிவந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை கண்டு.. "எதைப் பற்றியும் யோசிச்சு டென்ஷன் ஆகாதே கமலி..!! நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கும் தெரியாது.. உனக்கு தெரியாது.. நிகழ்காலம் மட்டும் தான் நிஜம்.. அதனால ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. எந்தவித மனஸ்தாபங்களும் இல்லாம வாழ்க்கையை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கிட்டு வாழ்வோம் சரிதானே..!!" அவள் கன்னம் தட்டி விட்டு அங்கிருந்து சென்றான் சூர்யதேவ்..
சூர்ய தேவ் இவ்வளவு பேசுவானா என்பதே அவளுக்கு ஆச்சரியம்தான்..
எதற்கெடுத்தாலும் அவளிடம் தான் வந்து நிற்பான் என்றாலும் இருவருக்குமிடையே பேச்சும் உரையாடலும் குறைவு தானே..
மனதுக்குள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பதட்டம் இருந்த போதிலும் அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறதே.. இன்றைய நாள் மட்டுமே நிஜம்.. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ வேண்டும்.. சரிதானே?
இன்று இப்போது இந்த நொடி இதைப் பற்றி மட்டும் யோசி.. மாற்ற முடியாத எதிர்காலத்தை பற்றி யோசித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே கமலி.. தன்னைத்தான் தேற்றிக்கொண்டு எதையும் எதிர்கொள்ளும் திடத்தோடு ஒரு முடிவுக்கு வந்தாள்..
இருட்ட ஆரம்பித்திருந்தது.. வழக்கம் போல் சூர்ய தேவ் வெளிச்சம் இல்லாமல் கூடத்தில் மௌனமாக அமர்ந்திருக்க.. விளக்கை உயிர்ப்பித்தாள் கமலி..
இரு கைகளை கோர்த்தபடி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தவன் மின்விளக்கு எரிந்ததில் நிமிர்ந்து அவளை பார்த்தான்..
"ஏன் எப்பவும் இருட்டுலயே உக்காந்திருக்கீங்க..!!"
"பழகிடுச்சு.." என்றான் ஒரே வார்த்தையாக..
"என்னால இருட்டுல இருக்க முடியாதே.. பயமா இருக்குமே.." அவள் கண்கள் அச்சத்தில் துருத்தி நின்றன..
"லைட் இருக்கட்டும்..!! இனி மாத்திக்கலாம்.. ஏதாவது சமைக்கறியா..? பசிக்குது.."
"ம்ம்.. சமைக்கறேன்.." ஏற்கனவே பல முறை வந்திருந்ததில் வீடு ஓரளவுக்கு பழகியிருக்க நேராக கிச்சன் பக்கமாக போனாள்.
"ஏதாவது ஹெல்ப் வேணுமா..?"
"பரவாயில்லை.. நானே பாத்துக்கறேன்.. ஏதாவது வேணும்னா சொல்றேன்.." என்றபடி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்..
வெகு நாட்களாக அவன் சமைப்பதில்லையே.. சாப்பாடு கமலி வீட்டில்தானே.. மளிகை பொருட்கள் காய்கறி எதுவுமில்லாமல் சமையலறை வெற்றிடமாக காட்சி அளித்தது..
சமைக்க வேண்டிய காய்கறி மளிகை பொருட்கள் அனைத்தும் தான் தங்கியிருந்த மேல்வீட்டு சமையலறையில் சேகரித்து வைத்திருப்பதை நினைவு படுத்திக் கொண்டவள் விரலை நெற்றியை தேய்த்தவாறு வெளியே வர.. எதிரே வந்தவன் மீது மோதிக்கொண்டாள்..
"பாத்து.." மென்மைகள் நெஞ்சில் மோதிய குறுகுறுப்பில் நெளிந்தான்..
"அது.. காய்கறி மளிகை பொருட்கள் எல்லாம்.."
"மாடியில இருக்கா..!! நான் போய் எடுத்துட்டு வரேன் சாவி கொடு.." என்றான் அவன்..
"நானும் வரேன்.. எது எங்கே இருக்குதுன்னு உங்களுக்கு தெரியாது இல்லையா..?"
"ஓஹோ என் வீட்ல என்ன இருக்குன்னு எனக்கே தெரியாதா.." அவன் இதழ்கள் நக்கலாக வளைந்தன..
அதை பொருட்படுத்தாமல் கமலி முன்னால் நகர அவளை பின்தொடர்ந்தான் சூர்ய தேவ்..
மீண்டும் இருவருமாக மாடிக்கு ஏறினர்..
இவங்க என்ன ஓடிப் பிடிச்சு விளையாடுறாங்களா.. மேலேயும் கீழேயுமா நடந்துட்டே இருக்காங்களே.. செக்யூரிட்டி தலை சொறிந்தபடி மேலே ஏறிக் கொண்டிருந்தவர்களை பார்த்தார்..
கமலி கதவை திறந்து விளக்கை போடுவதற்குள் அவள் முதுகின் மீது வந்து மோதியிருந்தான் சூர்யா..
"பார்த்து.. ஏன் இவ்வளவு அவசரம்.." மோதிய வேகத்தில் அவன் நெஞ்சில் பதித்திருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள் கமலி..
அவனும் பின் தொடர்ந்தான்..
"இவர் ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடியே வராரு.." கமலி வினோதமாக அவனைப் பார்த்தாள்..
அவனே பாவம்.. தனக்குள் ஏதேதோ எண்ணங்கள் உணர்வுகள்.. அதை சமாளிக்க தெரியாமல்.. அன்னையை தேடும் குழந்தை போல மனைவியின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான்..
"பேசாம இங்கேயே சமைச்சுரட்டுமா..?"
"வேண்டாம் அந்த கிச்சன் உனக்கு பழகனுமே..!! எல்லாத்தையும் எடுத்துட்டு வா அங்க போய் சமைச்சுக்கலாம்.."
"சரி நீங்க வெளியே இருங்க.. நான் எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்து வைக்கறேன்.."
"ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா வேலை சீக்கிரமா முடியுமே..?"
சின்ன சமையலறைக்குள் இருவரும் நெருக்கமாக நிற்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
பட்டும் படாமலும் விபத்தாய் மோதிய உரசல்கள்.. அவனுக்குள் தீயை வளர்த்தன..
சூர்யதேவ் ஒரு பாலிதீன் கவரில் மளிகை பொருட்களை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க.. இன்னொரு பாலிதீன் கவரில் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கமலி..
"கமலி அந்த செல்ப்ல ஏதாவது வச்சிருக்கியா..?" என்று கேட்ட நேரத்தில் மின்சாரம் போனது..
"ஆஆ.."
"ஏய் கமலி.."
"அம்மாஆஆ எலி.."
"ப்ச் அது என்னோட கை.."
"இடுப்புல என்னமோ ஊருது.."
"கொஞ்சம் அமைதியா இருடி.."
"இருங்க நான் வெளியே போயிடறேன்.."
"ஏய்.. கமலி விழுந்திடாதே.." என்றவன் கமலியின் அலப்பறைகளை தாங்க முடியாமல் நெஞ்சோடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்..
மீண்டும் மின்சாரம் வந்து விளக்கு பளிச்சென எரிய..
நெஞ்சுக் கூடு ஏறி இறங்க உயர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் கமலி..
"ஏன் இப்படி கத்துற.. யார் காதுலயாவது விழுந்தா என்னை என்ன நினைப்பாங்க..!!"
"இ.. இல்ல.. திடீர்னு கரண்ட் போனதில பயந்துட்டேன்.. ஏதோ எலி என் மேல விழுந்த மாதிரி இருந்தது.." இப்போதும் தன் தேகத்தில் ஏதோ விழுந்து ஓடுவதைப் போல் சிலிர்த்தாள்..
"இத்தனை சின்ன ரூமுக்குள்ள ஒண்ணா நிக்கிறோம்.. என் கையோ காலோதான் உன் மேல பட்டுருக்கும்.. அதுவும் வேணும்னு இல்ல.. தற்செயலா.."
"தெரியும்..!!" என்றவள் இந்த நொடி வரை தன் தேகம் அவன் அணைப்புக்குள் கட்டுண்டு அடங்கியிருப்பதை கண்டு சட்டென விலகி நின்றாள்..
அவனும் அங்கிருந்து அவசரமாக நகர்ந்து படுக்கையறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..
கமலிக்கு ஒன்றுமே புரியவில்லை..
கட்டிலில் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.. இடுப்பின் கீழ் புதிதாய் கூடாரமிட்டிருந்த உணர்ச்சிகள் அவனுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்க..
"ஓ மை காட்.. வாட்ஸ் ஹாப்பெனிங் டு மீ.." தலையை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடினான்..
மருத்துவனுக்கு தன் மாற்றங்கள் புரியாமல் இல்லை.. ஆனால் முதல்முறையாய் தன்னை உணர்ந்து தடுமாறினான்..
"டாக்டர்.." மெல்லிய குரலோடு கதவை தட்டினாள் கமலி..
"நீ போ நான் வரேன்.." என்றான் முயன்று வரவழைத்த அழுத்தமான குரலில்..
"என்னாச்சு..?" அங்கேயே நின்றாள் அவள்..
90 டிகிரியில் விரைத்து நிற்கும் தன் கெட்ட எண்ணங்களோடு அவள் முன் நிற்க தைரியமில்லை.. மனைவிதான்.. ஆனால் அவனுள் தோன்றும் முதல் மாற்றம்.. முதலில் அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. பிறகுதான் மற்ற கதை..
"டாக்டர்..?"
"இல்ல.. ஒன்னும் இல்ல.. நீ போ.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கீழே இறங்கி வரேன்.."
கமலியின் குரல் செவிகளை தீண்ட தீண்ட உணர்ச்சிவசப்பட்டு போனான் சூர்யா.. ஒரு பெண் தன்னுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாளா..? மிரண்டு போனான்.. என் ஆண்மை இவளை சார்ந்ததா..? இது சாத்தியமா..?
தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள முடியாமல் கட்டிலில் விழுந்தான்..
"க..ம..லி.." கண்களும் குரலும் கிறங்கியது..
"டாக்டர் கூப்பிட்டீங்களா..?"
"போடி..!!" அடிக்குரலில் கத்தினான்..
கமலி கதவின் அந்த பக்கம் மிரண்டு போயிருக்க வேண்டும்.. வாசலை தாண்டி நடக்கும் அவள் காலடி சத்தம்..
இயல்பாக ஒரு ஆணுக்கு இது பழக்கப்பட்டதாக இருக்கலாம்.. ஆனால் மோகமும் தாபமும் அறிமுகமில்லாத சூர்ய தேவ் வெளியே வர துடித்த மிருகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்து போனான்..
உலகத்துல எத்தனையோ பெண்கள் இருக்க.. அவன் ஏன் கமலியை தேட வேண்டும்.
இது காதலா.. காமமா..?
தொடரும்..
மெல்லிய இளம் மஞ்சள் நிற ஜார்ஜெட் புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு.. மடித்து வைத்திருந்த துணிமணிகளை பையில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கமலி..
படுக்கையறை பக்கம் திரும்பியவனுக்கு கமலியின் எழில் வடிவம் கண்களை நிறைத்து தொண்டையை வரள செய்து தாகத்தை தூண்டியிருந்தது..
இளம் மஞ்சள் நிற புடவை எலுமிச்சை நிற சருமம் கொண்டவளின் தேகத்தோடு ஒட்டி கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது..
"ஏன் இந்த பொண்ண பார்க்கும்போது நான் இவ்வளவு டெம்ட் ஆகறேன்.." சூர்ய தேவ் இளமை வெடிப்புகளாய் தனக்குள் தோன்றும் இந்த உணர்ச்சிகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது விலக்கித் தள்ளவும் முடியாமல்.. திணறிப் போனான்..
கண்கள் லேசர் கதிர்கள் போல் அவள் வெண்ணிற இடையில் ஊடுருவி செல்ல.. கண்ணியவனாய் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணி.. விழிகளை அழுத்தமாக மூடி திறந்து பார்வையை திசை திருப்ப முயன்றவன் பக்கத்திலிருந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்..
என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும்நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தைஇல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்..
ஃபீமேல் வர்ஷனில் சொர்ணலதா பாடியதை போல் மேல் வர்ஷனில் எஸ்பிபி பாடியிருந்தால் அவனுக்கு சர்வ பொருத்தமாய் இருந்திருக்கும்.. ஆடவனுக்குள் உணர்வுகள் அப்படித்தான் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது..
எத்தனையோ நாட்கள் கமலியோடு தனிமையில் நேரத்தை செலவிட்டு ஒன்றாக உணவருந்தியதுண்டு.. பேசுவதற்கான உரையாடல்கள் எதுவுமின்றி வெறிக்க வெறிக்க அவளை பார்த்துக்கொண்டே மௌனமாக அமர்ந்திருந்த தருணங்களும் உண்டு..
ஆனால் என்றைக்குமில்லாமல் படுக்கை அறைக்கும் கூடத்திற்கும் இடையேயான இந்த பத்தடி தூரமே அவனை அதிகமாக சோதித்தது..
தொலைக்காட்சியில் பாடலை சத்தமாக வைத்தான்..
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
எப்போதும் அவனை எரிச்சலூட்டும் பாடல் வரிகளும் காதல் காட்சிகளும் இன்று சொல்ல முடியாத சுவாரசியத்தையும் குறுகுறுப்பையும் அவனுக்குள் தூண்டி விட்டதாய் உணர்ந்தான்.. கண்கள் தொலைக்காட்சியினுள் புதைந்து போயின..
கதைப்படி நாயகன் அந்த பெண்ணை ஏமாற்றுவதை போல் திரைப்படம் அமைந்திருந்தாலும் அந்த பாடல்.. உள்ளுக்குள் மோகத்தை தட்டி எழுப்பும் நெருக்கமான காதல் காட்சிகளுடன் கூடிய அருமையான பாடல் தானே..!!
அரும்புவிட்ட மெல்லிய உணர்வு காதல் பாடல்களை ரசிக்க சொல்லுகிறதோ..!!
"டாக்டர்.. டாக்டர்.." அவள் இரண்டு முறை அழைத்த பிறகுதான் தொலைக்காட்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்தான் சூர்யதேவ்..
"ம்ம்.." அவன் நிமிர்ந்து பார்த்தான்..
டாக்டர் காதல் காட்சிகளை கொண்ட மெலடி பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறாரே.. அடடா.. ஆச்சர்யகுறி..!! கமலியும் வியப்பில் திணறினாள்..
"என்ன?"
"பேக் பண்ணியாச்சு.." தன் அருகில் வைத்திருந்த துணிமணிகள் அடங்கிய பையை காண்பித்தாள்..
"ரைட்.." என்றபடி எழுந்தவனிடம் ஒரு நிமிஷம்.. "கிச்சன்ல எல்லாத்தையும் கிளீன் பண்ணி எடுத்து வெச்சிட்டு வந்துரட்டுமா..?" என்று கேட்க.. அவன் உதடுகள் மீசைக்குள் தெரியாதபடி கொஞ்சமாக விரிந்தன..
"உன் புகுந்த வீடு என்ன ஊர் தாண்டியா இருக்குது..? கீழ் வீடுதானே.. வீட்டை காலி பண்ணி ஏறக்கட்டி வச்சுட்டு போற மாதிரி ஏன் இவ்வளவு பரபரப்பு.. ரிலாக்ஸா இரு.. தேவைப்படும்போது இங்கே வந்து கிளீன் பண்ணிக்கலாம்.." என்றவன் அவள் பையை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க..
"ஐயோ டாக்டர்.. நீங்க எதுக்கு என் பையை தூக்கணும்.. குடுங்க நானே எடுத்துட்டு வரேன்" என்று அவன் முன்னால் வந்து நின்றாள் கமலி..
"ஏன் நான் எடுத்துக்கிட்டா என்ன..?" விழிகள் இடுங்கினான் சூர்ய தேவ்..
"இல்ல.. நீங்க எவ்வளவு பெரிய டாக்டர்.. நீங்க போய் என்னோட பேக்கை.. தூக்க..லாமா.." அவன் பார்வை சற்று கடுமையாக மாறியதில் கடைசி வார்த்தைகளை தயக்கத்தோடு இழுத்தாள்..
"நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்.. அது உனக்கு மறந்து போச்சுதா..?" குரல் சற்று காட்டமாகவே வந்தது..
"நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்தானே..? கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம்னு நீங்க சொன்னிங்களே..?"
நண்பர்கள் என்ற எல்லையோடு நிறுத்திக் கொள்வோம் என்பதை ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் கமலி..
நீண்ட மூச்செறிந்து அவளை தீர்க்கமாக பார்த்தான் சூர்யா..
"நாம ரெண்டு பேரும் நண்பர்கள்தான்.. ஆனா கணவன் மனைவிங்கற உறவுக்குள்ள இருக்கற நண்பர்கள்.. லைக் அப்பாவும் மகனும்.. தாயும் மகளும் நண்பர்களா இருக்கிறதில்லையா.. அந்த மாதிரி.. நமக்குள்ள எப்பவுமே நட்பு இருக்கும்.. அதுக்காக நாம கணவன் மனைவி இல்லைன்னு ஆகிடாது.." என்றவன் அவள் பையை தூக்கிக் கொண்டு முன்னே நகர.. என்ன புதுசு புதுசா ஏதேதோ சொல்றாரு.. என்ற ரீதியில் விழித்துக் கொண்டு நின்றாள் கமலி..
வாசல் வரை சென்றவன் அவளிடம் திரும்பினான்..
"அப்புறம்.. நண்பர்கள்னு சொல்லி என்னை எந்த வரைமுறைக்குள்ள நிறுத்துறேன்னு எனக்கு புரியல.. கடைசி வரைக்கும் பிரியாம இருக்கலாம்னு சொன்னேன்.. கடைசி வரைக்கும் நண்பர்களா மட்டும் இருக்கலாம்னு நான் சொல்லவே இல்ல..!! வீட்டை பூட்டிட்டு வா.." என்று விட்டு அவன் கீழே இறங்கி நடக்க.. கமலியின் இதயம் உப்பி வெடிப்பதை போல் வேகமாக துடிக்க தொடங்கியது..
நண்பர்கள் என்ற வட்டத்துக்குள் பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தந்து கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
இரண்டு மூன்று முறை அவன் வாயிலிருந்து வந்து விட்ட கணவன் மனைவி என்ற வார்த்தை கமலியை திகிலுறச் செய்தது..
கணவன் மனைவியாக வாழ்வதாக முடிவெடுத்திருந்தால் மட்டுமே சூர்ய தேவ்வை திருமணம் செய்து கொள்.. இல்லையேல் மணக்க சம்மதம் இல்லை என்று கூறி நாசுக்காக மறுத்து விலகி விடு.. என் நண்பனின் எதிர்கால கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தடை போட்டு.. அவன் வாழ்க்கையை வீணாக்கி விட வேண்டாம்.. வருண் வார்த்தைகள் காதினுள் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டன..
கமலி டாக்டரை திருமணம் செய்து கொள்ள காரணங்கள்..
அவருக்கு செக்ஸ் விஷயத்தில் விருப்பமில்லை.. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தனக்கும் பாதகம் வராது இறுதிவரை நண்பர்களாகவே வாழ்ந்து கொள்ளலாம்..
இன்னொன்று.. தன்னை இழித்துப் பேசும் அஷோக் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம்.. இதுதான் மூலக் காரணம்..
ஆனால் அதையும் தாண்டி சூர்யாவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தால்..?
இந்த கேள்விக்கு கமலியிடம் பதில் இல்லை..
டாக்டரை எனக்கு பிடிக்குமா..?
பிடிக்குமே..!!
அவரை காதலிக்கிறாயா..? மாயா கேட்ட அதே கேள்வி தனக்குள் கேட்டுக் கொண்டாள்..
இல்லவே இல்லை..
அவரை கணவனாக ஏற்றுக்கொள்கிறாயா..?
அவர் என் நல்ல நண்பன்.. இந்த திருமணம் எங்கள் நட்புக்கான லைசென்ஸ்..
இதுவரைதான் சூர்ய தேவ்வுடனான தன் வாழ்க்கை பற்றி அவள் யோசித்து வைத்திருக்கிறாள்..
இதற்குமேல் வாட் நெக்ஸ்ட்.. என்ற கேள்விக்கு பதில் தெரியாதே!!
மனதை திடப்படுத்திக் கொண்டு படியேறி வந்தவளை வா என கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான் அவன்..
"கமலி.. உனக்கு நம்ம பெட்ரூம் காட்டறேன்.." அவன் இயல்பாகச் சொல்ல கமலிக்கு உடல் தூக்கி வாரி போட்டது..
"இல்லை.. இல்லை.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..!!" அவசரமாக குறுக்கிட்டாள்..
சூர்ய தேவ் அவளைக் கூர்ந்து பார்த்தான்..
"நான்.. உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டது.. எனக்கு ஒரு நல்ல நண்பன் வேணும்.. ஒரு டைவர்ஷன் வேணும்.. அப்புறம் ஒரு ஸ்ட்ராங் சப்போர்ட் வேணும்.. நான் இவ்வளவு தான் யோசிச்சேன்.."
"சரி..?" ஊடுருவும் பார்வையோடு கால்களை அழுத்தமாக ஊன்றி மார்பின் முன்பு கைகளை மடக்கி கட்டிக் கொண்டு நின்றான் அவன்..
"இன்னும்.. இந்த திருமண வாழ்க்கைக்கு நான் தயாராகல.."
"சொல்ல வந்ததை கிளியரா சொல்லு.."
"அதாவது.. அதாவது நான் எப்படி சொல்றது.. உங்களுக்கு எல்லா விதத்திலும் மனைவியா நடந்துக்க முடியும்னு எனக்கு தோணல.. உங்கள ஒரு நல்ல ஃபிரண்டா பாக்கறேன்.. ஆனா ஒரு கணவனா ஏத்துக்க முடியுமா தெரியல.." அதற்கு மேல் என்ன சொல்லுவதென்று தெரியாமல்.. தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவனை பார்த்தாள் கமலி..
அவன் பார்வையில் என்ன நினைக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை..
"சரி வா.." என்று அவள் கையைப் பற்றிக் கொண்டு படுக்கை அறைக்குள் அழைத்து சென்றான் அவன்..
கமலி விதிர்த்து போனாள்..
"நீங்க இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லைன்னு சொன்னதுனாலதான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.." அவள் தேகம் நடுங்கியது.. சூர்யதேவ் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்..
"இப்போதைக்கு உங்க நட்பு மட்டும் எனக்கு போதும்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கலாம்.. ஆனா நமக்குள்ள எதுவும் வேண்டாம்.." சொல்லி முடிப்பதற்குள் ஒரு வழியாகிப் போனாள் கமலி..
"எது வேண்டாம்..?" அருகே வந்தவன் கமலியை ஆழ்ந்த கண்களால் ஊடுருவி பார்த்தான்..
அவன் பார்வையை சந்திக்க திராணியின்றி தலை குனிந்தவள்.. "ஒரே படுக்கையில.. ஒண்ணா.." சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் விழிதட்டி நின்றது..
"ஒரே பெட்ல ஒண்ணா தூங்க போறோம் இதுல என்ன தப்பு இருக்கு..!! நீ ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகற.." அவன் புரியாத பார்வை பார்த்தான்..
இந்த உறவு எந்த கோணத்தில் செல்ல போகிறதென அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. மறுபடி ஒரு திருமண வாழ்க்கை.. கணவன் மனைவியாய் அன்னியோன்யம்.. மீண்டும் பந்தம் பாசம்.. ஏமாற்றம்.. துரோகம்.. எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை அவள்..
ஒற்றை விரலால் அவள் தாடையை தொட்டு நிமிர்த்தினான் சூரியதேவ்..
கமலியின் தோள்கள் குலுங்கின..
"ரிலாக்ஸ்.. நம்ம வாழ்க்கை எப்படி போகப்போகுதுன்னு எனக்கும் தெரியல.. உன்னைய பக்கத்துல வச்சுக்கணும்.. ஒன்னா சாப்பாடு ஒன்னா தூக்கம்.. இதுவரைக்கும் தான் நானும் யோசிச்சிருக்கேன்.. ஒருவேளை நாளைக்கு எனக்குள்ள வேற மாதிரியான உணர்வுகள் வந்தா..?" என்று நிறுத்திவிட்டு அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்..
கமலியின் முகம் வெளிறியது..
"ஒருவேளை உன்கூட வாழனும்னு எனக்கு தோணுச்சுன்னா.. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்திக்க மாட்டேன்.. இந்த ஜென்மத்துல நீதான் என்னோட வைஃப்.. ஒன்ஸ் கமிட் ஆகியாச்சு.. எந்த நிலையிலும் நான் உன்னை விட்டு பிரியறதா இல்லை.." அவன் சொல்லிக் கொண்டே போக.. சூர்ய தேவ்வின் புதிய பரிமாணத்தை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..
கன்னங்கள் சிவந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை கண்டு.. "எதைப் பற்றியும் யோசிச்சு டென்ஷன் ஆகாதே கமலி..!! நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கும் தெரியாது.. உனக்கு தெரியாது.. நிகழ்காலம் மட்டும் தான் நிஜம்.. அதனால ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.. எந்தவித மனஸ்தாபங்களும் இல்லாம வாழ்க்கையை அப்படியே அக்செப்ட் பண்ணிக்கிட்டு வாழ்வோம் சரிதானே..!!" அவள் கன்னம் தட்டி விட்டு அங்கிருந்து சென்றான் சூர்யதேவ்..
சூர்ய தேவ் இவ்வளவு பேசுவானா என்பதே அவளுக்கு ஆச்சரியம்தான்..
எதற்கெடுத்தாலும் அவளிடம் தான் வந்து நிற்பான் என்றாலும் இருவருக்குமிடையே பேச்சும் உரையாடலும் குறைவு தானே..
மனதுக்குள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பதட்டம் இருந்த போதிலும் அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறதே.. இன்றைய நாள் மட்டுமே நிஜம்.. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ வேண்டும்.. சரிதானே?
இன்று இப்போது இந்த நொடி இதைப் பற்றி மட்டும் யோசி.. மாற்ற முடியாத எதிர்காலத்தை பற்றி யோசித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே கமலி.. தன்னைத்தான் தேற்றிக்கொண்டு எதையும் எதிர்கொள்ளும் திடத்தோடு ஒரு முடிவுக்கு வந்தாள்..
இருட்ட ஆரம்பித்திருந்தது.. வழக்கம் போல் சூர்ய தேவ் வெளிச்சம் இல்லாமல் கூடத்தில் மௌனமாக அமர்ந்திருக்க.. விளக்கை உயிர்ப்பித்தாள் கமலி..
இரு கைகளை கோர்த்தபடி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தவன் மின்விளக்கு எரிந்ததில் நிமிர்ந்து அவளை பார்த்தான்..
"ஏன் எப்பவும் இருட்டுலயே உக்காந்திருக்கீங்க..!!"
"பழகிடுச்சு.." என்றான் ஒரே வார்த்தையாக..
"என்னால இருட்டுல இருக்க முடியாதே.. பயமா இருக்குமே.." அவள் கண்கள் அச்சத்தில் துருத்தி நின்றன..
"லைட் இருக்கட்டும்..!! இனி மாத்திக்கலாம்.. ஏதாவது சமைக்கறியா..? பசிக்குது.."
"ம்ம்.. சமைக்கறேன்.." ஏற்கனவே பல முறை வந்திருந்ததில் வீடு ஓரளவுக்கு பழகியிருக்க நேராக கிச்சன் பக்கமாக போனாள்.
"ஏதாவது ஹெல்ப் வேணுமா..?"
"பரவாயில்லை.. நானே பாத்துக்கறேன்.. ஏதாவது வேணும்னா சொல்றேன்.." என்றபடி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்..
வெகு நாட்களாக அவன் சமைப்பதில்லையே.. சாப்பாடு கமலி வீட்டில்தானே.. மளிகை பொருட்கள் காய்கறி எதுவுமில்லாமல் சமையலறை வெற்றிடமாக காட்சி அளித்தது..
சமைக்க வேண்டிய காய்கறி மளிகை பொருட்கள் அனைத்தும் தான் தங்கியிருந்த மேல்வீட்டு சமையலறையில் சேகரித்து வைத்திருப்பதை நினைவு படுத்திக் கொண்டவள் விரலை நெற்றியை தேய்த்தவாறு வெளியே வர.. எதிரே வந்தவன் மீது மோதிக்கொண்டாள்..
"பாத்து.." மென்மைகள் நெஞ்சில் மோதிய குறுகுறுப்பில் நெளிந்தான்..
"அது.. காய்கறி மளிகை பொருட்கள் எல்லாம்.."
"மாடியில இருக்கா..!! நான் போய் எடுத்துட்டு வரேன் சாவி கொடு.." என்றான் அவன்..
"நானும் வரேன்.. எது எங்கே இருக்குதுன்னு உங்களுக்கு தெரியாது இல்லையா..?"
"ஓஹோ என் வீட்ல என்ன இருக்குன்னு எனக்கே தெரியாதா.." அவன் இதழ்கள் நக்கலாக வளைந்தன..
அதை பொருட்படுத்தாமல் கமலி முன்னால் நகர அவளை பின்தொடர்ந்தான் சூர்ய தேவ்..
மீண்டும் இருவருமாக மாடிக்கு ஏறினர்..
இவங்க என்ன ஓடிப் பிடிச்சு விளையாடுறாங்களா.. மேலேயும் கீழேயுமா நடந்துட்டே இருக்காங்களே.. செக்யூரிட்டி தலை சொறிந்தபடி மேலே ஏறிக் கொண்டிருந்தவர்களை பார்த்தார்..
கமலி கதவை திறந்து விளக்கை போடுவதற்குள் அவள் முதுகின் மீது வந்து மோதியிருந்தான் சூர்யா..
"பார்த்து.. ஏன் இவ்வளவு அவசரம்.." மோதிய வேகத்தில் அவன் நெஞ்சில் பதித்திருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள் கமலி..
அவனும் பின் தொடர்ந்தான்..
"இவர் ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாடியே வராரு.." கமலி வினோதமாக அவனைப் பார்த்தாள்..
அவனே பாவம்.. தனக்குள் ஏதேதோ எண்ணங்கள் உணர்வுகள்.. அதை சமாளிக்க தெரியாமல்.. அன்னையை தேடும் குழந்தை போல மனைவியின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான்..
"பேசாம இங்கேயே சமைச்சுரட்டுமா..?"
"வேண்டாம் அந்த கிச்சன் உனக்கு பழகனுமே..!! எல்லாத்தையும் எடுத்துட்டு வா அங்க போய் சமைச்சுக்கலாம்.."
"சரி நீங்க வெளியே இருங்க.. நான் எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்து வைக்கறேன்.."
"ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா வேலை சீக்கிரமா முடியுமே..?"
சின்ன சமையலறைக்குள் இருவரும் நெருக்கமாக நிற்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
பட்டும் படாமலும் விபத்தாய் மோதிய உரசல்கள்.. அவனுக்குள் தீயை வளர்த்தன..
சூர்யதேவ் ஒரு பாலிதீன் கவரில் மளிகை பொருட்களை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க.. இன்னொரு பாலிதீன் கவரில் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கமலி..
"கமலி அந்த செல்ப்ல ஏதாவது வச்சிருக்கியா..?" என்று கேட்ட நேரத்தில் மின்சாரம் போனது..
"ஆஆ.."
"ஏய் கமலி.."
"அம்மாஆஆ எலி.."
"ப்ச் அது என்னோட கை.."
"இடுப்புல என்னமோ ஊருது.."
"கொஞ்சம் அமைதியா இருடி.."
"இருங்க நான் வெளியே போயிடறேன்.."
"ஏய்.. கமலி விழுந்திடாதே.." என்றவன் கமலியின் அலப்பறைகளை தாங்க முடியாமல் நெஞ்சோடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்..
மீண்டும் மின்சாரம் வந்து விளக்கு பளிச்சென எரிய..
நெஞ்சுக் கூடு ஏறி இறங்க உயர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் கமலி..
"ஏன் இப்படி கத்துற.. யார் காதுலயாவது விழுந்தா என்னை என்ன நினைப்பாங்க..!!"
"இ.. இல்ல.. திடீர்னு கரண்ட் போனதில பயந்துட்டேன்.. ஏதோ எலி என் மேல விழுந்த மாதிரி இருந்தது.." இப்போதும் தன் தேகத்தில் ஏதோ விழுந்து ஓடுவதைப் போல் சிலிர்த்தாள்..
"இத்தனை சின்ன ரூமுக்குள்ள ஒண்ணா நிக்கிறோம்.. என் கையோ காலோதான் உன் மேல பட்டுருக்கும்.. அதுவும் வேணும்னு இல்ல.. தற்செயலா.."
"தெரியும்..!!" என்றவள் இந்த நொடி வரை தன் தேகம் அவன் அணைப்புக்குள் கட்டுண்டு அடங்கியிருப்பதை கண்டு சட்டென விலகி நின்றாள்..
அவனும் அங்கிருந்து அவசரமாக நகர்ந்து படுக்கையறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..
கமலிக்கு ஒன்றுமே புரியவில்லை..
கட்டிலில் அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.. இடுப்பின் கீழ் புதிதாய் கூடாரமிட்டிருந்த உணர்ச்சிகள் அவனுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்க..
"ஓ மை காட்.. வாட்ஸ் ஹாப்பெனிங் டு மீ.." தலையை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை மூடினான்..
மருத்துவனுக்கு தன் மாற்றங்கள் புரியாமல் இல்லை.. ஆனால் முதல்முறையாய் தன்னை உணர்ந்து தடுமாறினான்..
"டாக்டர்.." மெல்லிய குரலோடு கதவை தட்டினாள் கமலி..
"நீ போ நான் வரேன்.." என்றான் முயன்று வரவழைத்த அழுத்தமான குரலில்..
"என்னாச்சு..?" அங்கேயே நின்றாள் அவள்..
90 டிகிரியில் விரைத்து நிற்கும் தன் கெட்ட எண்ணங்களோடு அவள் முன் நிற்க தைரியமில்லை.. மனைவிதான்.. ஆனால் அவனுள் தோன்றும் முதல் மாற்றம்.. முதலில் அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. பிறகுதான் மற்ற கதை..
"டாக்டர்..?"
"இல்ல.. ஒன்னும் இல்ல.. நீ போ.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கீழே இறங்கி வரேன்.."
கமலியின் குரல் செவிகளை தீண்ட தீண்ட உணர்ச்சிவசப்பட்டு போனான் சூர்யா.. ஒரு பெண் தன்னுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவாளா..? மிரண்டு போனான்.. என் ஆண்மை இவளை சார்ந்ததா..? இது சாத்தியமா..?
தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள முடியாமல் கட்டிலில் விழுந்தான்..
"க..ம..லி.." கண்களும் குரலும் கிறங்கியது..
"டாக்டர் கூப்பிட்டீங்களா..?"
"போடி..!!" அடிக்குரலில் கத்தினான்..
கமலி கதவின் அந்த பக்கம் மிரண்டு போயிருக்க வேண்டும்.. வாசலை தாண்டி நடக்கும் அவள் காலடி சத்தம்..
இயல்பாக ஒரு ஆணுக்கு இது பழக்கப்பட்டதாக இருக்கலாம்.. ஆனால் மோகமும் தாபமும் அறிமுகமில்லாத சூர்ய தேவ் வெளியே வர துடித்த மிருகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்து போனான்..
உலகத்துல எத்தனையோ பெண்கள் இருக்க.. அவன் ஏன் கமலியை தேட வேண்டும்.
இது காதலா.. காமமா..?
தொடரும்..
Last edited: