- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
அங்குமிங்குமாக பம்பரமாக சுழன்று கொண்டிருந்த கண்ணகியை நிறுத்தி அவள் கீழ் உதட்டில் வழவழப்பான திரவத்தை பூசி விட்டாள் வஞ்சிக்கொடி..
"என்னடி இது இனிக்குது..?" கண்ணகி விழித்தாள்..
"ஆமா உங்களுக்கு தெரியாது பாருங்க.. மலைத்தேன்.. காயம் பட்ட இடத்தில எரிச்சல் குறையும்.. புண்ணு சீக்கிரம் ஆறிடும்.."
"உனக்கு யாரு சொன்னாவ..?" குறுகுறு பார்வையோடு கண்ணகி கேட்க..
"நான் பல தடவை உதட்டுல காயத்துக்கு இதை தடவி இருக்கேனே..!" சத்தமாக ஆரம்பித்த குரல் பேசிய வார்த்தைகளை உணர்ந்து தேய்ந்து கீழிறங்கியது..
கண்ணகி சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்க்க.. சற்று தடுமாறிய குரலில்..
"இப்ப என்ன..? உதட்டுல அடிபட்டு வெட்டு காயத்தோட சுத்தறீகளேன்னு மருந்து போட வந்தா என்னையே கேலி செய்வீகளா..? எப்படியோ போங்க.." உதட்டை சுழித்துக்கொண்டு வஞ்சிக்கொடி அங்கிருந்து சென்றுவிட.. மகனை எழுப்பி குளிக்க வைப்பதற்காக அறைக்குள் சென்றாள் கண்ணகி..
வாய்க்கு நேரே விரலை வைத்துக்கொண்டு.. உடலைக் குறுக்கியபடி செல்ல மகன் உறங்கும் அழகை கண்டு அவனை எழுப்ப மனமில்லாதவளாக.. திரும்பிச் செல்ல நினைத்தவள் கண்ணபிரான் நெஞ்சின் மீது மோதி விக்கித்து நின்றாள்..
கண்ணகியின் உச்சந்தலை வகுட்டு குங்குமம் நெற்றி கண்கள் மூக்கு என வழுக்கிச் சென்ற கண்ணபிரானின் விழிகள் அவள் இதழில் வந்து நிலைத்தது..
"என்ன இது வழுவழுப்பா..?" கண்கள் இடுங்கியதோடு அவன் உதடுகளும் அலட்சியமாக சுழிந்தன..
உதட்டில் தேன் என்று சொன்னால்.. வேலைக்காரிக்கு மலைத் தேன் ஒரு கேடா என்று திட்டுவானே.. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் பதிலுக்காக காத்திராமல் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான் கண்ணபிரான்..
உதட்டின் மீது மினுமினுத்து கொண்டிருந்த அத்தனை இனிப்பையும் தன் உதட்டுக்குள்ளும் உமிழ் நீருக்குள்ளும் நிதானமாய் இடம் மாற்றிக் கொண்டிருந்தான்..
பட்ட இடத்திலேயே படும் என்பதை போல்.. முந்தைய இரவில் அவன் கன்னத்தில் அறைந்ததால் பல் குத்தி வீங்கிப் போயிருந்த உதடு.. மென்மேலும் அவன் பற்கள் பட்டு புண்ணாகிப் போனது..
சேதாரத்தை பற்றி எந்த கவலையுமில்லாமல் தேனோடு சேர்த்து உபரியாய் உதட்டு அமுதத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..
வலியின் தாக்கத்தில் அவள் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் பிணைந்திருந்த இரு உதடுகளுக்கிடையே உரசி நின்றது..
அப்போதும் அவள் உதடுகளை விடாமல் சுவைத்தவன் கண்கள் குறுக்கி.. பின் ஒரு கட்டத்தில் விலகி..
"என்னடி.. இனிப்பை ருசிக்கும்போது நடுவுல உப்பை கொண்டு வந்து கொட்டுற.. முகம் சுழித்து அவள் கண்ணீரை வெறுப்பாக பார்த்த கண்ணபிரான் கண்ணகியின் கன்னத்தில் கை வைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்..
இரவு பொழுதில்..
வழக்கம்போல் மகனுக்காக காத்திருந்தபடி கூடத்தில் அமர்ந்திருந்தனர் பெரியசாமி கனகவல்லியும்..
வாசலில் செருப்பை அவிழ்த்துவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
தள்ளாடி கொண்டு தன்னை நிலைப்படுத்த முயன்று தோற்றுப் போன அவன் நடையே சொன்னது குடித்திருக்கிறான் என.. கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கனகவள்ளியும் பெரியசாமியின் ஒருவரை ஒருவர் வேதனையோடு பார்த்துக் கொண்டனர்..
மகன் உள்ளே வந்து தன்னை கண்டுகொள்ளாமல் கடந்து போய் கொண்டிருந்ததில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த கனகவல்லி அவசரமாக எழுந்தார்..
"ராயா..!" அம்மாவின் குரலில் திரும்பி பார்க்காமல் அப்படியே நின்றான் கிருஷ்ணதேவராயன்..
'என்னப்பா இன்னைக்கும் நடுஜாமத்துல வீடு வந்து சேர்ந்திருக்க.. அம்புட்டு வேலையா..?" என்றவருக்கு கண்களில் கண்ணீர் தழும்பியது..
வேலை முடிந்த பிறகும் ஆளில்லாத கம்பெனிக்குள் சுற்றி சுற்றி வந்து நேரத்தை கடத்திவிட்டு.. இரவை நெட்டி தள்ளுவதற்காக மகன் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று தாய்க்கு புரியாமல் இல்லை..
"ஆமாமா வேலைதான்..!" அவன் பேச்சிலேயே அளவாகத்தான் குடித்திருக்கிறான் என்று தெரியவர அதுவரை கனகவல்லிக்கு சந்தோஷம்.. பெரியசாமி மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரை பார்ப்பதை கவனமாக தவிர்த்தான் கிருஷ்ணதேவராயன்..
அதற்கு மேல் பெற்றவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் படியேறி தன் அறைக்குள் செல்லப் போனவனை
"தேவரா.. சாமி கொஞ்சம் நில்லு.." என்ற குரலின் மூலம் தடுத்து நிறுத்தினார் பெரியசாமி..
மீண்டும் அங்கேயே நின்றவன் மாடியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தான்..
"சாப்டியாப்பா..?"
ஏதோ விடை தெரியாத கேள்வியை கேட்டு விட்டதை போல.. யோசனையோடு விழித்துக் கொண்டிருந்தான் தேவராயன்..
"என்னையா இப்படி யோசிக்கற.. நடு ஜாமம் ஆகிப்போச்சுது.. இன்னும் சாப்பிடலையா.. போய் ஒரு வாய் சாப்பிட்டுரு சாமி..!" அவனைப் பெற்றவர் அக்கறையும் கவலையுமாக சொல்ல..
"இ.. இல்ல.. சாப்பிட்டேன்ப்பா.." என்று யோசனையோடு சொன்னவன்.. ஒவ்வொரு படியாக காலை அழுத்தமாக ஊன்றி மேலே ஏறினான்..
"ஐயோ என் புள்ள சாப்பிடாமலே போறானே..! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நரக வாழ்க்கையின்னு தெரியலையே..!" சேலை தலைப்பால் அழுத விழிகளை துடைத்துக் கொண்டாள் கனகவல்லி..
"அழுது கலங்காத வள்ளி..! இது தினமும் நடக்கிறதுதான.. நாம கவலைப்படுறதுனால ஏதாவது மாறப்போகுதா என்ன..!" மனம் நொந்து பெருமூச்சு விட்டார் பெரியசாமி
"அதுக்காக இப்படி நிதம் குடிச்சிட்டு வெறும் வயத்தோடு சாப்பிடாம படுத்தா.. உடம்பு என்னத்துக்கு ஆகும்..! எதுக்காக இப்படி தன்னை தானே வருத்திக்கணும்..!" அழுகையோடு தழுதழுத்தாள்..
"இந்தா.. சும்மா என்னத்துக்கு அழுது ஊரைக் கூட்டுற.. நீ சாப்பாட்ட தட்டுல போட்டுத் தா.. நான் கொண்டு போய் அவன சாப்பிட வைக்கறேன்.. நிதம் இதே ரோதன.." அழகி புலம்பியபடி கனகவள்ளியின் முன்பு வந்து நின்றார்..
கனகவல்லிக்கு அழகியை பார்த்த கணம் மனதில் நிம்மதி பரவினாலும் மறுபக்கம்.. என்ன ஆகப்போகிறதோ என்று கவலையும் தொற்றிக் கொண்டது..
என்னதான் அழகி சாப்பாடு எடுத்துக்கொண்டு நம்பிக்கையோடு மேலே போனாலும்.. ஒரு சில நேரங்களில் மட்டும் தான் தேவராயனை உண்ண வைத்து காலி தட்டோடு திரும்பி வருவார்.. பெரும்பாலான நேரங்களில்.. தட்டிலிருக்கும் சாதம் இம்மியளவும் குறையாமல்.. அழுதபடியே முதுமை காரணமாக சிரமப்பட்டு படி இறங்கி வரும் அழகியை தான் கனகவல்லி பார்த்திருக்கிறாளே..!
இப்போதும் தன் மகன் அழகி கட்டாயப்படுத்தி ஊட்டப் போகும் உணவை உண்ணப் போகிறானா அல்லது வழக்கம்போல் இன்றும் பட்டினி கிடக்க போகிறானா என்று தெரியாமல் தாயுள்ளம் தவித்து கதறியது..
கண்ணீரை துடைத்துக்கொண்டு தட்டு நிறைய சாதம் போட்டு குழம்பு ஊற்றி.. காய்கறி பொரியலை அதிகமாக வைத்து கொண்டு வந்து அழகியிடம் தந்தாள் கனகவல்லி.. அவளை பொறுத்தவரை தட்டு நிறைய போட்டு தந்திருக்கும் சோற்றில் தன் மகன் பாதியை உண்டால் கூட போதும்.. தினமும் வெறும் வயிற்றோடு இவன் குடிக்கும் சாராயத்தில் கல்லீரலும் கணையமும் என்றைக்கு கரைந்து காணாமல் போகுமோ..! பெற்ற வயிறு மகனை நினைத்து வேதனைப்பட்டது..
அறைக்குள் வந்த கிருஷ்ணதேவராயன் ஒருமுறை நின்று நிதானமாக தன் அறையை சுற்றிப் பார்த்தான்..
மெல்ல நடந்து சென்று கட்டிலின் தலைமாட்டில் தொங்கிக் கொண்டிருந்த புடவையை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தவன்.. வெட்ட வெளியில் வெற்று தரையில் அந்த புடவையை விரித்து தன் சட்டையை கழட்டி விட்டு.. தொப்பென கீழே விழுந்தான்..
பிறகு இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரை உருண்டு செல்ல.. முழு புடவையும் வஞ்சனையில்லாமல் ஆசைக் காதலி போல் அவன் தேகத்தை சுற்றிக்கொண்டது..
"அ...ம்..மு.." என்று கண்கள் மூடி உதட்டை குவித்து முத்தமிடுவதைப் போல் வைத்துக் கொண்டிருக்க.. ஒரு கவளம் சோற்றை அவன் வாய்க்குள் திணித்திருந்தாள் அழகி..
சோற்றுப் பருக்கையின் ருசியில்.. முகம் சுழித்து கண்களை திறந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவள் உதடு போல் இந்த சோற்றுப் பருக்கை ருசிக்கவில்லையாம்..
"ஏய்.. கிழவி இங்கன என்ன பண்ணிட்டு இருக்க.. எழுந்து போ..!" அந்த சேலையை தன் உடலோடு போர்த்தியபடியே எழுந்து அமர்ந்தான்..
"நீ என்னைய கிழவி குமரின்னு என்ன வேணா திட்டிக்க.. ஆனா ஒரு வாய் சாப்பிடு ராசா..! வெறும் வயித்தோட உறங்குனா கெட்ட கெட்ட கனவா வருமாம்.." குழந்தைக்கு போக்கு காட்டுவதை போல் கதை சொல்லி அடுத்த உருண்டையை அவன் வாய்க்குள் திணித்திருந்தாள்..
"நல்ல கனவோ..! கெட்ட கனவோ.. ஆ..னா கன..வுல அவ தான் வரணும்.." உளறலாக சொன்னான் தேவராயன்..
"வருவா வருவா.. வயிறு நிரம்ப நல்லா சாப்பிட்டு தூங்கு.. அப்பதான் கனவுல தெம்பா அவ கூட கபடி விளையாட முடியும்.."
"கபடியா..? என்ன கபடி." விக்கலோடு கண்களை சுருக்கி அவன் வாயை திறக்க அடுத்த கவளத்தை ஊட்டி இருந்தாள் அழகி..
"ஆத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதுல..! சுத்தி ஆளுங்க இருக்கறது கூட தெரியாம உன் பொண்டாட்டியோட வீடு முழுக்க ஓடி புடிச்சு கபடி விளையாடினதெல்லாம் தொரைக்கு மறந்து போச்சோ..?"
"ஏ..ய்.. அப்பத்தா.. நானே அவளை மறக்கணும் தானே தினமும் குடிச்சிட்டு வரேன்.. நீ என்னத்துக்கு அவளை ஞாபகப்படுத்துற.." திடீரென கோபமாய் பற்களை கடித்தான்..
"சரிதான்.. நான்தான் அவள ஞாபகப்படுத்திட்டேன்.. நீ மறந்துட்ட.. ! ரைட்டு விடு.."
"இந்தா அழகி நீ மொதல்ல இங்க இருந்து போ.. நான் தூங்கணும்..!"
"நீ நிம்மதியா உறங்கிட்டாதான் நான் சந்தோஷப்படுவேனே.. ராவு முழுக்க இந்த மூலையிலிருந்து அந்த மூல வரைக்கும் உருண்டு புரண்டு பூமியை விட வேகமா இந்த வீட்டை சுத்தி வர்றியே.. அதுதான் எனக்கு கவலையா இருக்கு.." அழகி கவலையாக பெருமூசெறிந்தாள்..
"தூங்கறதுக்காகதானே அப்பத்தா சரக்கடிச்சு இருக்கேன்.. அதெல்லாம் நல்லா தூங்கிடுவேன் நீ போ."
"முதல்ல இந்த கன்றாவியை விட்டு தொலடா தேவரா.. எப்படியும் உன் பொண்டாட்டி உன் கூட வந்து வாழத்தானே போறா.. அவளுக்காகவாது உன் உடம்ப நீ பாதுகாக்க வேண்டாமா..!"
தலை தொங்கி போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்தான்..
"அவ என் கூட வந்து வாழுவாளா அப்பத்தா.." தேவராயனின் கண்கள் மின்னியது..
இந்த வார்த்தையை இத்தோடு நூறாவது முறையாக அப்பத்தா சொல்லியிருக்க.. புதிதாக கேட்பதை போல் படு ஆர்வமாக அவனும் ரீப்பீட் மோடில் கேட்டான்..
"செத்துப்போன என் புருஷன் ஆவுடையப்பன் மேல சத்தியமா சொல்லுதேன்.. அடுத்த வருஷம் இதே நாளுக்குள்ள என் கொள்ளுப்பேரன உன் பொண்டாட்டி அவ வயித்துல சுமக்கல என் பேரு அழகி இல்ல..!"
"சரி.. அப்ப நான் போறேன்.." என்று எழுந்தவனை..
"டேய் டேய் உக்காருடா.. இப்போ எங்கன எழுந்து அவசரமா போறவ.." மீண்டும் அழகி அவனை இழுத்து அமர வைத்தாள்..
"கொ..ள்ளு பேரன பாக்கணும்னு சொன்னியே..! அதான் போய்.. அவள.." உலக உருண்டை போல் கையால் எதையோ சுற்றி சுற்றி காண்பித்தான்..
"அதுக்கெல்லாம் நேரம் வரட்டும்டா.. நீ பாட்டுக்கு அவ வீட்டு பக்கம் போய் ஏதாவது பஞ்சாயத்த இழுத்துட்டு வராத.. காத்திருக்கனும்.."
"முடியலையே.."
"அட இவன் ஒருத்தன் ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டான்.. பேஷன்ட்டா இரு.."
"ஏற்கனவே பேஷன்ட்டாதான் இருக்கேன் அப்பத்து.."
"பொறுமையை சொன்னேன்டா.."
"ஓஓஓஓ.. பேஷியன்ஸ்.."
"அந்த கருமத்தைதான் இங்லீஸ்ல சொன்னேன்.."
"இங்லீஸ்ல சொன்னேன் சொல்லாத.. இங்லீசை கொன்னேன்னு வேணா சொல்லு.."
"அட போடா குடிகாரப் பயலே..எல்லாம் நல்லது நடக்கும்.. கவலைப்படாம இரு.."
"அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல இங்கிருந்து போ.."
"அட ஏன்டா இப்படி விரட்டுற..! இராவு முழுக்க போர்வைக்குள்ள தலையை நுழைச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுவியோ..!"
"அப்பத்தா இது ஒன்றும் போர்வை இல்ல..!" அவன் பற்களை கடித்தான்..
"தெரியும் தெரியும் ரேஷன் சீலைதான..!" என்னவென்று தெரிந்தும் அவனை சீண்டினார் அப்பத்தா..
"அப்பத்தா..! இது என் பொண்டாட்டியோட சீல.."
"அது சரி.." என்று தாடையில் கை வைத்தவர்.. "ஆமா என்னடா புடவையெல்லாம் எலி கடிச்சு வச்சுருக்கு..?" என்றார் போலி திகைப்புடன்..
"ஆஆஆ.. அது ஒன்னும் எலி கடிக்கல.." என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்களை மூடி நெற்றியை நீவிக்கொண்டான்..
"ஆத்தி..! சீலைக்கே இந்த நிலைமையா.." என்று எழுந்தார் அப்பத்தா..
"அடியே வஞ்சி.. கொஞ்சம் சீக்கிரமா வந்து தொலைடி.. இல்லன்னா இவன் உனக்கு பதிலா இந்த சீலையை முழுசா கடிச்சு முழுங்கிடுவான் போலிருக்கு.. கழுத பய.." அழகி புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட.. மீண்டும் படுத்து அந்த சேலையோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
போதையின் விளிம்பில் அவன் நினைவுகள்.. இருவருக்கும் திருமணம் நடந்த அன்றைய காலகட்டத்தை தொட்டு வருடிக் கொண்டிருந்தது..
ஊர் கவுன்சிலரோடு ஏதோ பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் கஜேந்திரன்..
எந்தவித தயக்கமா குழைவோ வளைவு நெளிவுகளுமின்றி நிமிர்வாக அவர் முன்பு நின்றிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
இருவருக்கும் இடையே முன்பகை உண்டு என்றாலும்.. தன்னோடு அமர்ந்திருக்கும் கவுன்சிலர் முன்னிலையில் எதையும் காட்ட விரும்பாமல்..
"என்ன தம்பி.. திடீர்னு வந்துருக்கீங்க.. குடும்பத்துல ஏதாவது கஷ்டமா.. பண உதவி வேண்டுமா..!" மறைமுகமாக அவனை தாக்கி விட்டு நக்கலாக சிரித்தார் கஜேந்திரன்..
"உதவிக்காக நான் வரலைங்க ஐயா.. இப்ப பல குடும்பங்களுக்கு தாராளமா உதவி செயயற அளவுக்கு என்கிட்ட பணம் இருக்கு.. நான் பேச வந்த விஷயமே வேற.. கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா..!" என்று சரியாக பதிலடி கொடுக்க முகம் விழுந்து போனது அவருக்கு..
வேறு வழியில்லாமல் பக்கத்திலிருந்த இருக்கையை காண்பித்தார்..
இருக்கையில் கம்பீரமாக அவன் அமர்ந்த தோரணையில் முகம் சிவந்து போனார் கஜேந்திரன்.. உள்ளிருந்து பின்கை கட்டியபடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கு வந்து நின்றான் கண்ணபிரான்..
"சுத்தி வளைச்சு பேச விரும்பல நேரடியா விஷயத்துக்கு வரேன்..! நானும் உங்க பொண்ணு வஞ்சிக்கொடியும் பொறுத்தவரை ஒருத்தர் விரும்பறோம்.."
அவன் சொல்லி முடிப்பதற்குள் அதிர்ச்சி நிறைந்த விழிகளோடு கவுன்சிலரும் கஜேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"ஏ..ய்.." என்று கர்ஜித்த படி கிருஷ்ணதேவராயனின் மீது பாயவிருந்த தன் மகனை கைகாட்டி தடுத்து நிறுத்தினார் கஜேந்திரன்..
"சரி இப்ப என்ன சொல்ல வரீங்க..?" அவர் குரலில் கடுமையும் இறுக்கமும் கூடியிருந்தது..
கதவின் மறுபக்கமிருந்து நடக்கும் சம்பவங்களை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி கொடி..
"நான்தான் சொல்லிட்டேனே.. நானும் உங்க மவ வஞ்சியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறோம்.. இதுல உங்களுக்கு சம்மதம்னா அம்மா அப்பாவை கூட்டிட்டு வரேன்.. கல்யாண தேதியை பெரியவங்களா பார்த்து முடிவு பண்ணுங்க.. இல்லைனா.."
"இல்லைனா என்னடா பண்ணுவ.." கண்ணபிரான் சீறினான்..
அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு கஜேந்திரனின் பக்கம் திரும்பினான் கிருஷ்ணதேவராயன்..
"நீங்க சம்மதிக்கலைனாலும் இந்த கல்யாணம் நடக்கும்" என்றான் கிருஷ்ணதேவராயன் அழுத்தமாக..
"அதுக்கு உன் உடம்புல உயிர் இருக்கணுமே..!" கண்ணபிரான் இடைபுகுந்து முன்னேறி வரவும் கஜேந்திரன் அவனைத் தடுத்தார்..
எழுந்து நின்று சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு கண்ணபிரானை தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணதேவராயன்..
"இப்பவே இந்த நிமிஷமே உன் தங்கச்சியை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோடா..!" என்றவன்..
"வஞ்சிக்கொடி.." என்று உரத்த குரலில் கத்திஅழைக்க.. பேர் சொல்லி முடிப்பதற்குள் அங்கு வந்து நின்றிருந்தாள் பெண்ணவள்..
கஜேந்திரன் இன்னொருவன் குரலுக்கு செவி சாய்த்து மகள் வந்து நிற்பதை தாங்க இயலாதவராய் அதிர்ச்சியோடு கண்கள் விரித்தபடி எழுந்து நின்றார்..
மூன்றாம் மனிதனாக அங்கே ஒட்டாமல் அமர்ந்திருந்த கவுன்சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இது அவர்கள் குடும்ப விஷயம்.. தான் தலையிட்டால் சரி வராது என்ற எண்ணத்தோடு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தார்..
"என்ன வஞ்சி.. இந்த பையன் சொல்றதெல்லாம் உண்மையா..? நீ இவனை மனசுல நினைச்சிருக்கியாமே..!" கஜேந்திரன் ஆத்திரத்தோடு கடுமையான குரலில் கேட்க..
விழிகள் நிலம் பார்க்க கீழுதட்டை கடித்தப்படி ஆமாம் என்று தலையசைத்தாள் வஞ்சி..
"திருட்டு கழுத.. உன்னை கொன்னு போட்டாலும் போடுவோமே தவிர.. இந்த நாய்க்கு கட்டி வைக்க மாட்டோம்டி.." கண்ணபிரான் ஆத்திரத்தோடு தன் தங்கையை அடிப்பதற்காக கை ஓங்கிட.. அவன் கையை தடுத்து பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..
"எப்ப அவ என்னை விரும்புறதா இத்தனை பேர் முன்னாடி சொல்லிட்டாளோ.. அப்பவே அவ என் பொண்டாட்டி ஆகிட்டா.. எனக்கு சொந்தமானவளை அடிக்கவோ கண்டிக்கவோ உங்க யாருக்கும் உரிமை இல்லை.. வஞ்சிக்கொடி மேஜர்.. விருப்பப்படி தன்னோட வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க எல்லா உரிமையும் அவளுக்கு உண்டு.. முறையா உங்க சம்மதத்தோட அவளை என் மனைவியாக்கிக்கலாம்னு பார்த்தேன்.. ஆனா நீங்க யாரும் இன்னும் மாறவே இல்லை.." என்று உதடு பிதுக்கி அதிருப்தியோடு தலையசைத்தவன்..
"நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறேன்? உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க.." என்று தன் கரத்தை நீட்ட.. அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து விரல்களோடு விரல்கள் கோர்த்துக் கொண்டாள் வஞ்சி..
புன்னகையும் கர்வமுமாய் கஜேந்திரனையும் கண்ணபிரானையும் பார்த்துக் கொண்டே வஞ்சியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வாசலை நோக்கி நடந்தான் தேவரா..
"அப்பா என்னப்பா பாத்துட்டே இருக்கீங்க.. ஆளுங்களை விட்டு அவனை துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு நம்ம தங்கச்சியை இழுத்துட்டு வர சொல்லுங்க.." கண்ணபிரான் கத்திக் கொண்டிருக்க கஜேந்திரன் அசைந்த பாடில்லை..!
தன்னையும் எதையும் செய்யவிடாமல் தடுத்து விட்டு.. ஜடம் போல் நிற்கும் கஜேந்திரனை வெறுப்போடு பார்த்தான் கண்ணபிரான்..
கட்டுக்கடங்காத கோபத்தோடு வெறிபிடித்து நின்றிருந்தான் அவன்..
பல சொதப்பல்களுக்கு பின் நடந்த கண்ணகியுடனான திருமணத்திற்கு பிறகு.. என் பேச்சை மீறி நீ ஒரு குண்டூசியை கூட தூக்கிப் போடக்கூடாது என்று கஜேந்திரன் கடுமையாக எச்சரித்திருந்த காரணத்தால்.. மலையளவு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தந்தையின் சொல் கேட்டு கீழ்ப்படிந்து நிற்க வேண்டிய நிலை..
ஆனால் தன் மகளை படையாளி ஒருவன் அழைத்துச் செல்ல கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கும் கண்ணபிரானின் கைகளை கட்டி போட்டதற்கும் காரணம் என்னவோ..!
தொடரும்..
"என்னடி இது இனிக்குது..?" கண்ணகி விழித்தாள்..
"ஆமா உங்களுக்கு தெரியாது பாருங்க.. மலைத்தேன்.. காயம் பட்ட இடத்தில எரிச்சல் குறையும்.. புண்ணு சீக்கிரம் ஆறிடும்.."
"உனக்கு யாரு சொன்னாவ..?" குறுகுறு பார்வையோடு கண்ணகி கேட்க..
"நான் பல தடவை உதட்டுல காயத்துக்கு இதை தடவி இருக்கேனே..!" சத்தமாக ஆரம்பித்த குரல் பேசிய வார்த்தைகளை உணர்ந்து தேய்ந்து கீழிறங்கியது..
கண்ணகி சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்க்க.. சற்று தடுமாறிய குரலில்..
"இப்ப என்ன..? உதட்டுல அடிபட்டு வெட்டு காயத்தோட சுத்தறீகளேன்னு மருந்து போட வந்தா என்னையே கேலி செய்வீகளா..? எப்படியோ போங்க.." உதட்டை சுழித்துக்கொண்டு வஞ்சிக்கொடி அங்கிருந்து சென்றுவிட.. மகனை எழுப்பி குளிக்க வைப்பதற்காக அறைக்குள் சென்றாள் கண்ணகி..
வாய்க்கு நேரே விரலை வைத்துக்கொண்டு.. உடலைக் குறுக்கியபடி செல்ல மகன் உறங்கும் அழகை கண்டு அவனை எழுப்ப மனமில்லாதவளாக.. திரும்பிச் செல்ல நினைத்தவள் கண்ணபிரான் நெஞ்சின் மீது மோதி விக்கித்து நின்றாள்..
கண்ணகியின் உச்சந்தலை வகுட்டு குங்குமம் நெற்றி கண்கள் மூக்கு என வழுக்கிச் சென்ற கண்ணபிரானின் விழிகள் அவள் இதழில் வந்து நிலைத்தது..
"என்ன இது வழுவழுப்பா..?" கண்கள் இடுங்கியதோடு அவன் உதடுகளும் அலட்சியமாக சுழிந்தன..
உதட்டில் தேன் என்று சொன்னால்.. வேலைக்காரிக்கு மலைத் தேன் ஒரு கேடா என்று திட்டுவானே.. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் பதிலுக்காக காத்திராமல் இதழோடு இதழ் பொருத்தியிருந்தான் கண்ணபிரான்..
உதட்டின் மீது மினுமினுத்து கொண்டிருந்த அத்தனை இனிப்பையும் தன் உதட்டுக்குள்ளும் உமிழ் நீருக்குள்ளும் நிதானமாய் இடம் மாற்றிக் கொண்டிருந்தான்..
பட்ட இடத்திலேயே படும் என்பதை போல்.. முந்தைய இரவில் அவன் கன்னத்தில் அறைந்ததால் பல் குத்தி வீங்கிப் போயிருந்த உதடு.. மென்மேலும் அவன் பற்கள் பட்டு புண்ணாகிப் போனது..
சேதாரத்தை பற்றி எந்த கவலையுமில்லாமல் தேனோடு சேர்த்து உபரியாய் உதட்டு அமுதத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..
வலியின் தாக்கத்தில் அவள் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் பிணைந்திருந்த இரு உதடுகளுக்கிடையே உரசி நின்றது..
அப்போதும் அவள் உதடுகளை விடாமல் சுவைத்தவன் கண்கள் குறுக்கி.. பின் ஒரு கட்டத்தில் விலகி..
"என்னடி.. இனிப்பை ருசிக்கும்போது நடுவுல உப்பை கொண்டு வந்து கொட்டுற.. முகம் சுழித்து அவள் கண்ணீரை வெறுப்பாக பார்த்த கண்ணபிரான் கண்ணகியின் கன்னத்தில் கை வைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்..
இரவு பொழுதில்..
வழக்கம்போல் மகனுக்காக காத்திருந்தபடி கூடத்தில் அமர்ந்திருந்தனர் பெரியசாமி கனகவல்லியும்..
வாசலில் செருப்பை அவிழ்த்துவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
தள்ளாடி கொண்டு தன்னை நிலைப்படுத்த முயன்று தோற்றுப் போன அவன் நடையே சொன்னது குடித்திருக்கிறான் என.. கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கனகவள்ளியும் பெரியசாமியின் ஒருவரை ஒருவர் வேதனையோடு பார்த்துக் கொண்டனர்..
மகன் உள்ளே வந்து தன்னை கண்டுகொள்ளாமல் கடந்து போய் கொண்டிருந்ததில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த கனகவல்லி அவசரமாக எழுந்தார்..
"ராயா..!" அம்மாவின் குரலில் திரும்பி பார்க்காமல் அப்படியே நின்றான் கிருஷ்ணதேவராயன்..
'என்னப்பா இன்னைக்கும் நடுஜாமத்துல வீடு வந்து சேர்ந்திருக்க.. அம்புட்டு வேலையா..?" என்றவருக்கு கண்களில் கண்ணீர் தழும்பியது..
வேலை முடிந்த பிறகும் ஆளில்லாத கம்பெனிக்குள் சுற்றி சுற்றி வந்து நேரத்தை கடத்திவிட்டு.. இரவை நெட்டி தள்ளுவதற்காக மகன் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று தாய்க்கு புரியாமல் இல்லை..
"ஆமாமா வேலைதான்..!" அவன் பேச்சிலேயே அளவாகத்தான் குடித்திருக்கிறான் என்று தெரியவர அதுவரை கனகவல்லிக்கு சந்தோஷம்.. பெரியசாமி மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரை பார்ப்பதை கவனமாக தவிர்த்தான் கிருஷ்ணதேவராயன்..
அதற்கு மேல் பெற்றவர்களிடம் பேச்சுக் கொடுக்காமல் படியேறி தன் அறைக்குள் செல்லப் போனவனை
"தேவரா.. சாமி கொஞ்சம் நில்லு.." என்ற குரலின் மூலம் தடுத்து நிறுத்தினார் பெரியசாமி..
மீண்டும் அங்கேயே நின்றவன் மாடியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தான்..
"சாப்டியாப்பா..?"
ஏதோ விடை தெரியாத கேள்வியை கேட்டு விட்டதை போல.. யோசனையோடு விழித்துக் கொண்டிருந்தான் தேவராயன்..
"என்னையா இப்படி யோசிக்கற.. நடு ஜாமம் ஆகிப்போச்சுது.. இன்னும் சாப்பிடலையா.. போய் ஒரு வாய் சாப்பிட்டுரு சாமி..!" அவனைப் பெற்றவர் அக்கறையும் கவலையுமாக சொல்ல..
"இ.. இல்ல.. சாப்பிட்டேன்ப்பா.." என்று யோசனையோடு சொன்னவன்.. ஒவ்வொரு படியாக காலை அழுத்தமாக ஊன்றி மேலே ஏறினான்..
"ஐயோ என் புள்ள சாப்பிடாமலே போறானே..! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நரக வாழ்க்கையின்னு தெரியலையே..!" சேலை தலைப்பால் அழுத விழிகளை துடைத்துக் கொண்டாள் கனகவல்லி..
"அழுது கலங்காத வள்ளி..! இது தினமும் நடக்கிறதுதான.. நாம கவலைப்படுறதுனால ஏதாவது மாறப்போகுதா என்ன..!" மனம் நொந்து பெருமூச்சு விட்டார் பெரியசாமி
"அதுக்காக இப்படி நிதம் குடிச்சிட்டு வெறும் வயத்தோடு சாப்பிடாம படுத்தா.. உடம்பு என்னத்துக்கு ஆகும்..! எதுக்காக இப்படி தன்னை தானே வருத்திக்கணும்..!" அழுகையோடு தழுதழுத்தாள்..
"இந்தா.. சும்மா என்னத்துக்கு அழுது ஊரைக் கூட்டுற.. நீ சாப்பாட்ட தட்டுல போட்டுத் தா.. நான் கொண்டு போய் அவன சாப்பிட வைக்கறேன்.. நிதம் இதே ரோதன.." அழகி புலம்பியபடி கனகவள்ளியின் முன்பு வந்து நின்றார்..
கனகவல்லிக்கு அழகியை பார்த்த கணம் மனதில் நிம்மதி பரவினாலும் மறுபக்கம்.. என்ன ஆகப்போகிறதோ என்று கவலையும் தொற்றிக் கொண்டது..
என்னதான் அழகி சாப்பாடு எடுத்துக்கொண்டு நம்பிக்கையோடு மேலே போனாலும்.. ஒரு சில நேரங்களில் மட்டும் தான் தேவராயனை உண்ண வைத்து காலி தட்டோடு திரும்பி வருவார்.. பெரும்பாலான நேரங்களில்.. தட்டிலிருக்கும் சாதம் இம்மியளவும் குறையாமல்.. அழுதபடியே முதுமை காரணமாக சிரமப்பட்டு படி இறங்கி வரும் அழகியை தான் கனகவல்லி பார்த்திருக்கிறாளே..!
இப்போதும் தன் மகன் அழகி கட்டாயப்படுத்தி ஊட்டப் போகும் உணவை உண்ணப் போகிறானா அல்லது வழக்கம்போல் இன்றும் பட்டினி கிடக்க போகிறானா என்று தெரியாமல் தாயுள்ளம் தவித்து கதறியது..
கண்ணீரை துடைத்துக்கொண்டு தட்டு நிறைய சாதம் போட்டு குழம்பு ஊற்றி.. காய்கறி பொரியலை அதிகமாக வைத்து கொண்டு வந்து அழகியிடம் தந்தாள் கனகவல்லி.. அவளை பொறுத்தவரை தட்டு நிறைய போட்டு தந்திருக்கும் சோற்றில் தன் மகன் பாதியை உண்டால் கூட போதும்.. தினமும் வெறும் வயிற்றோடு இவன் குடிக்கும் சாராயத்தில் கல்லீரலும் கணையமும் என்றைக்கு கரைந்து காணாமல் போகுமோ..! பெற்ற வயிறு மகனை நினைத்து வேதனைப்பட்டது..
அறைக்குள் வந்த கிருஷ்ணதேவராயன் ஒருமுறை நின்று நிதானமாக தன் அறையை சுற்றிப் பார்த்தான்..
மெல்ல நடந்து சென்று கட்டிலின் தலைமாட்டில் தொங்கிக் கொண்டிருந்த புடவையை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தவன்.. வெட்ட வெளியில் வெற்று தரையில் அந்த புடவையை விரித்து தன் சட்டையை கழட்டி விட்டு.. தொப்பென கீழே விழுந்தான்..
பிறகு இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரை உருண்டு செல்ல.. முழு புடவையும் வஞ்சனையில்லாமல் ஆசைக் காதலி போல் அவன் தேகத்தை சுற்றிக்கொண்டது..
"அ...ம்..மு.." என்று கண்கள் மூடி உதட்டை குவித்து முத்தமிடுவதைப் போல் வைத்துக் கொண்டிருக்க.. ஒரு கவளம் சோற்றை அவன் வாய்க்குள் திணித்திருந்தாள் அழகி..
சோற்றுப் பருக்கையின் ருசியில்.. முகம் சுழித்து கண்களை திறந்தான் கிருஷ்ணதேவராயன்.. அவள் உதடு போல் இந்த சோற்றுப் பருக்கை ருசிக்கவில்லையாம்..
"ஏய்.. கிழவி இங்கன என்ன பண்ணிட்டு இருக்க.. எழுந்து போ..!" அந்த சேலையை தன் உடலோடு போர்த்தியபடியே எழுந்து அமர்ந்தான்..
"நீ என்னைய கிழவி குமரின்னு என்ன வேணா திட்டிக்க.. ஆனா ஒரு வாய் சாப்பிடு ராசா..! வெறும் வயித்தோட உறங்குனா கெட்ட கெட்ட கனவா வருமாம்.." குழந்தைக்கு போக்கு காட்டுவதை போல் கதை சொல்லி அடுத்த உருண்டையை அவன் வாய்க்குள் திணித்திருந்தாள்..
"நல்ல கனவோ..! கெட்ட கனவோ.. ஆ..னா கன..வுல அவ தான் வரணும்.." உளறலாக சொன்னான் தேவராயன்..
"வருவா வருவா.. வயிறு நிரம்ப நல்லா சாப்பிட்டு தூங்கு.. அப்பதான் கனவுல தெம்பா அவ கூட கபடி விளையாட முடியும்.."
"கபடியா..? என்ன கபடி." விக்கலோடு கண்களை சுருக்கி அவன் வாயை திறக்க அடுத்த கவளத்தை ஊட்டி இருந்தாள் அழகி..
"ஆத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதுல..! சுத்தி ஆளுங்க இருக்கறது கூட தெரியாம உன் பொண்டாட்டியோட வீடு முழுக்க ஓடி புடிச்சு கபடி விளையாடினதெல்லாம் தொரைக்கு மறந்து போச்சோ..?"
"ஏ..ய்.. அப்பத்தா.. நானே அவளை மறக்கணும் தானே தினமும் குடிச்சிட்டு வரேன்.. நீ என்னத்துக்கு அவளை ஞாபகப்படுத்துற.." திடீரென கோபமாய் பற்களை கடித்தான்..
"சரிதான்.. நான்தான் அவள ஞாபகப்படுத்திட்டேன்.. நீ மறந்துட்ட.. ! ரைட்டு விடு.."
"இந்தா அழகி நீ மொதல்ல இங்க இருந்து போ.. நான் தூங்கணும்..!"
"நீ நிம்மதியா உறங்கிட்டாதான் நான் சந்தோஷப்படுவேனே.. ராவு முழுக்க இந்த மூலையிலிருந்து அந்த மூல வரைக்கும் உருண்டு புரண்டு பூமியை விட வேகமா இந்த வீட்டை சுத்தி வர்றியே.. அதுதான் எனக்கு கவலையா இருக்கு.." அழகி கவலையாக பெருமூசெறிந்தாள்..
"தூங்கறதுக்காகதானே அப்பத்தா சரக்கடிச்சு இருக்கேன்.. அதெல்லாம் நல்லா தூங்கிடுவேன் நீ போ."
"முதல்ல இந்த கன்றாவியை விட்டு தொலடா தேவரா.. எப்படியும் உன் பொண்டாட்டி உன் கூட வந்து வாழத்தானே போறா.. அவளுக்காகவாது உன் உடம்ப நீ பாதுகாக்க வேண்டாமா..!"
தலை தொங்கி போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்தான்..
"அவ என் கூட வந்து வாழுவாளா அப்பத்தா.." தேவராயனின் கண்கள் மின்னியது..
இந்த வார்த்தையை இத்தோடு நூறாவது முறையாக அப்பத்தா சொல்லியிருக்க.. புதிதாக கேட்பதை போல் படு ஆர்வமாக அவனும் ரீப்பீட் மோடில் கேட்டான்..
"செத்துப்போன என் புருஷன் ஆவுடையப்பன் மேல சத்தியமா சொல்லுதேன்.. அடுத்த வருஷம் இதே நாளுக்குள்ள என் கொள்ளுப்பேரன உன் பொண்டாட்டி அவ வயித்துல சுமக்கல என் பேரு அழகி இல்ல..!"
"சரி.. அப்ப நான் போறேன்.." என்று எழுந்தவனை..
"டேய் டேய் உக்காருடா.. இப்போ எங்கன எழுந்து அவசரமா போறவ.." மீண்டும் அழகி அவனை இழுத்து அமர வைத்தாள்..
"கொ..ள்ளு பேரன பாக்கணும்னு சொன்னியே..! அதான் போய்.. அவள.." உலக உருண்டை போல் கையால் எதையோ சுற்றி சுற்றி காண்பித்தான்..
"அதுக்கெல்லாம் நேரம் வரட்டும்டா.. நீ பாட்டுக்கு அவ வீட்டு பக்கம் போய் ஏதாவது பஞ்சாயத்த இழுத்துட்டு வராத.. காத்திருக்கனும்.."
"முடியலையே.."
"அட இவன் ஒருத்தன் ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டான்.. பேஷன்ட்டா இரு.."
"ஏற்கனவே பேஷன்ட்டாதான் இருக்கேன் அப்பத்து.."
"பொறுமையை சொன்னேன்டா.."
"ஓஓஓஓ.. பேஷியன்ஸ்.."
"அந்த கருமத்தைதான் இங்லீஸ்ல சொன்னேன்.."
"இங்லீஸ்ல சொன்னேன் சொல்லாத.. இங்லீசை கொன்னேன்னு வேணா சொல்லு.."
"அட போடா குடிகாரப் பயலே..எல்லாம் நல்லது நடக்கும்.. கவலைப்படாம இரு.."
"அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல இங்கிருந்து போ.."
"அட ஏன்டா இப்படி விரட்டுற..! இராவு முழுக்க போர்வைக்குள்ள தலையை நுழைச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுவியோ..!"
"அப்பத்தா இது ஒன்றும் போர்வை இல்ல..!" அவன் பற்களை கடித்தான்..
"தெரியும் தெரியும் ரேஷன் சீலைதான..!" என்னவென்று தெரிந்தும் அவனை சீண்டினார் அப்பத்தா..
"அப்பத்தா..! இது என் பொண்டாட்டியோட சீல.."
"அது சரி.." என்று தாடையில் கை வைத்தவர்.. "ஆமா என்னடா புடவையெல்லாம் எலி கடிச்சு வச்சுருக்கு..?" என்றார் போலி திகைப்புடன்..
"ஆஆஆ.. அது ஒன்னும் எலி கடிக்கல.." என்றவன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்களை மூடி நெற்றியை நீவிக்கொண்டான்..
"ஆத்தி..! சீலைக்கே இந்த நிலைமையா.." என்று எழுந்தார் அப்பத்தா..
"அடியே வஞ்சி.. கொஞ்சம் சீக்கிரமா வந்து தொலைடி.. இல்லன்னா இவன் உனக்கு பதிலா இந்த சீலையை முழுசா கடிச்சு முழுங்கிடுவான் போலிருக்கு.. கழுத பய.." அழகி புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட.. மீண்டும் படுத்து அந்த சேலையோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
போதையின் விளிம்பில் அவன் நினைவுகள்.. இருவருக்கும் திருமணம் நடந்த அன்றைய காலகட்டத்தை தொட்டு வருடிக் கொண்டிருந்தது..
ஊர் கவுன்சிலரோடு ஏதோ பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் கஜேந்திரன்..
எந்தவித தயக்கமா குழைவோ வளைவு நெளிவுகளுமின்றி நிமிர்வாக அவர் முன்பு நின்றிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
இருவருக்கும் இடையே முன்பகை உண்டு என்றாலும்.. தன்னோடு அமர்ந்திருக்கும் கவுன்சிலர் முன்னிலையில் எதையும் காட்ட விரும்பாமல்..
"என்ன தம்பி.. திடீர்னு வந்துருக்கீங்க.. குடும்பத்துல ஏதாவது கஷ்டமா.. பண உதவி வேண்டுமா..!" மறைமுகமாக அவனை தாக்கி விட்டு நக்கலாக சிரித்தார் கஜேந்திரன்..
"உதவிக்காக நான் வரலைங்க ஐயா.. இப்ப பல குடும்பங்களுக்கு தாராளமா உதவி செயயற அளவுக்கு என்கிட்ட பணம் இருக்கு.. நான் பேச வந்த விஷயமே வேற.. கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா..!" என்று சரியாக பதிலடி கொடுக்க முகம் விழுந்து போனது அவருக்கு..
வேறு வழியில்லாமல் பக்கத்திலிருந்த இருக்கையை காண்பித்தார்..
இருக்கையில் கம்பீரமாக அவன் அமர்ந்த தோரணையில் முகம் சிவந்து போனார் கஜேந்திரன்.. உள்ளிருந்து பின்கை கட்டியபடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கு வந்து நின்றான் கண்ணபிரான்..
"சுத்தி வளைச்சு பேச விரும்பல நேரடியா விஷயத்துக்கு வரேன்..! நானும் உங்க பொண்ணு வஞ்சிக்கொடியும் பொறுத்தவரை ஒருத்தர் விரும்பறோம்.."
அவன் சொல்லி முடிப்பதற்குள் அதிர்ச்சி நிறைந்த விழிகளோடு கவுன்சிலரும் கஜேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"ஏ..ய்.." என்று கர்ஜித்த படி கிருஷ்ணதேவராயனின் மீது பாயவிருந்த தன் மகனை கைகாட்டி தடுத்து நிறுத்தினார் கஜேந்திரன்..
"சரி இப்ப என்ன சொல்ல வரீங்க..?" அவர் குரலில் கடுமையும் இறுக்கமும் கூடியிருந்தது..
கதவின் மறுபக்கமிருந்து நடக்கும் சம்பவங்களை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வஞ்சி கொடி..
"நான்தான் சொல்லிட்டேனே.. நானும் உங்க மவ வஞ்சியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறோம்.. இதுல உங்களுக்கு சம்மதம்னா அம்மா அப்பாவை கூட்டிட்டு வரேன்.. கல்யாண தேதியை பெரியவங்களா பார்த்து முடிவு பண்ணுங்க.. இல்லைனா.."
"இல்லைனா என்னடா பண்ணுவ.." கண்ணபிரான் சீறினான்..
அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு கஜேந்திரனின் பக்கம் திரும்பினான் கிருஷ்ணதேவராயன்..
"நீங்க சம்மதிக்கலைனாலும் இந்த கல்யாணம் நடக்கும்" என்றான் கிருஷ்ணதேவராயன் அழுத்தமாக..
"அதுக்கு உன் உடம்புல உயிர் இருக்கணுமே..!" கண்ணபிரான் இடைபுகுந்து முன்னேறி வரவும் கஜேந்திரன் அவனைத் தடுத்தார்..
எழுந்து நின்று சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு கண்ணபிரானை தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணதேவராயன்..
"இப்பவே இந்த நிமிஷமே உன் தங்கச்சியை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோடா..!" என்றவன்..
"வஞ்சிக்கொடி.." என்று உரத்த குரலில் கத்திஅழைக்க.. பேர் சொல்லி முடிப்பதற்குள் அங்கு வந்து நின்றிருந்தாள் பெண்ணவள்..
கஜேந்திரன் இன்னொருவன் குரலுக்கு செவி சாய்த்து மகள் வந்து நிற்பதை தாங்க இயலாதவராய் அதிர்ச்சியோடு கண்கள் விரித்தபடி எழுந்து நின்றார்..
மூன்றாம் மனிதனாக அங்கே ஒட்டாமல் அமர்ந்திருந்த கவுன்சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இது அவர்கள் குடும்ப விஷயம்.. தான் தலையிட்டால் சரி வராது என்ற எண்ணத்தோடு நடப்பதை வேடிக்கை பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தார்..
"என்ன வஞ்சி.. இந்த பையன் சொல்றதெல்லாம் உண்மையா..? நீ இவனை மனசுல நினைச்சிருக்கியாமே..!" கஜேந்திரன் ஆத்திரத்தோடு கடுமையான குரலில் கேட்க..
விழிகள் நிலம் பார்க்க கீழுதட்டை கடித்தப்படி ஆமாம் என்று தலையசைத்தாள் வஞ்சி..
"திருட்டு கழுத.. உன்னை கொன்னு போட்டாலும் போடுவோமே தவிர.. இந்த நாய்க்கு கட்டி வைக்க மாட்டோம்டி.." கண்ணபிரான் ஆத்திரத்தோடு தன் தங்கையை அடிப்பதற்காக கை ஓங்கிட.. அவன் கையை தடுத்து பிடித்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..
"எப்ப அவ என்னை விரும்புறதா இத்தனை பேர் முன்னாடி சொல்லிட்டாளோ.. அப்பவே அவ என் பொண்டாட்டி ஆகிட்டா.. எனக்கு சொந்தமானவளை அடிக்கவோ கண்டிக்கவோ உங்க யாருக்கும் உரிமை இல்லை.. வஞ்சிக்கொடி மேஜர்.. விருப்பப்படி தன்னோட வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க எல்லா உரிமையும் அவளுக்கு உண்டு.. முறையா உங்க சம்மதத்தோட அவளை என் மனைவியாக்கிக்கலாம்னு பார்த்தேன்.. ஆனா நீங்க யாரும் இன்னும் மாறவே இல்லை.." என்று உதடு பிதுக்கி அதிருப்தியோடு தலையசைத்தவன்..
"நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போறேன்? உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க.." என்று தன் கரத்தை நீட்ட.. அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து விரல்களோடு விரல்கள் கோர்த்துக் கொண்டாள் வஞ்சி..
புன்னகையும் கர்வமுமாய் கஜேந்திரனையும் கண்ணபிரானையும் பார்த்துக் கொண்டே வஞ்சியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வாசலை நோக்கி நடந்தான் தேவரா..
"அப்பா என்னப்பா பாத்துட்டே இருக்கீங்க.. ஆளுங்களை விட்டு அவனை துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு நம்ம தங்கச்சியை இழுத்துட்டு வர சொல்லுங்க.." கண்ணபிரான் கத்திக் கொண்டிருக்க கஜேந்திரன் அசைந்த பாடில்லை..!
தன்னையும் எதையும் செய்யவிடாமல் தடுத்து விட்டு.. ஜடம் போல் நிற்கும் கஜேந்திரனை வெறுப்போடு பார்த்தான் கண்ணபிரான்..
கட்டுக்கடங்காத கோபத்தோடு வெறிபிடித்து நின்றிருந்தான் அவன்..
பல சொதப்பல்களுக்கு பின் நடந்த கண்ணகியுடனான திருமணத்திற்கு பிறகு.. என் பேச்சை மீறி நீ ஒரு குண்டூசியை கூட தூக்கிப் போடக்கூடாது என்று கஜேந்திரன் கடுமையாக எச்சரித்திருந்த காரணத்தால்.. மலையளவு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தந்தையின் சொல் கேட்டு கீழ்ப்படிந்து நிற்க வேண்டிய நிலை..
ஆனால் தன் மகளை படையாளி ஒருவன் அழைத்துச் செல்ல கஜேந்திரன் அமைதியாக நின்றதற்கும் கண்ணபிரானின் கைகளை கட்டி போட்டதற்கும் காரணம் என்னவோ..!
தொடரும்..
Last edited: