- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
இட்லி பொங்கல் பூரி என்று காலை உணவு சொல்லப்பட்டால் கண்ணகிக்கு வேலை கொஞ்சம் குறைவு..
இதுவே தோசை வேண்டுமென்று கண்ணபிரான் கேட்டுவிட்டால் அவன் உண்ணும் இருபது தோசைக்கு அடுப்படிக்கும் சாப்பிடும் இடத்திற்குமாக அங்குமிங்கும் அலைந்து கால் எலும்பு இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு நொந்து நோக்காடாகி போய்விடும்..
அதிலும் சுடச்சுட கல் தோசை வேண்டும்.. காய்ந்து போயிருக்கக் கூடாது.. கல்லிலிருந்து எடுத்த தோசை அப்படியே அவன் தட்டில் விழ வேண்டும்.. அந்த தோசையை தின்று முடிப்பதற்குள் அடுத்த தோசை வந்து விட வேண்டும்.. அவர் காத்திருக்க நேர்ந்தால் அதற்கான வலிகளையும் அவள் தானே அனுபவிக்க வேண்டும்..
ஒருமுறை அப்படித்தான் பதட்டத்திலும் அவசரத்திலும் வார்த்த தோசை தீய்ந்து போய்விட..
"இன்னும் எவ்வளவு நேரம் மகாராணிக்காக நான் காத்திருக்கனும்.. வேலைக்கார நாய்க்கு சரியான நேரத்துக்கு சாப்பாடு கூட பரிமாற தெரியலையா..!"
பாத்திரங்களை உடைத்து.. சாம்பார் கிண்ணத்தை விசிறி அடித்தான்..
கொதிக்கும் சாம்பார் அவள் காலில் பட்டு.. துடித்துப் போனாள் கண்ணகி..
"அம்மாஆஆ.." என்று அலறி காலை பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட..
"அடப்பாவி.. கால் கொப்பளிச்சு போச்சே..! அப்பாவி பொண்ண போட்டு இந்த பாடு படுத்துறியே உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா..! இந்த வயித்துலதான் உன்னய பெத்தேனா..!" ஐஸ் கட்டியை எடுத்து வந்து காலில் தடவியபடி மகனைப் பார்த்து அழுது புலம்பினாள் பாக்கியம்..
அன்னையை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தவன்..
"ஏய்..! நீ எனக்கு தானே பொண்டாட்டி..! எனக்கு வேலை செய்யறத விட அப்படி என்னடி உனக்கு வெட்டி முறிக்கிற கடமை.."
"போய் கருகாம முழுசா ஒழுங்கா தோசை சுட்டு கொண்டு வர்றே..! உன்னால அது கூட உருப்படியா செய்ய முடியலன்னா எழுந்து வாசலை பார்த்துட்டு போயிட்டே இரு..!" என்ற முறைத்த கண்களோடு நாற்காலியின் தலைமாட்டில் தாங்கிய கரத்தின் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் லேசாக உரசியபடி அவன் சொல்ல..
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் கண்ணகி..
வீட்டை விட்டு போ என்று அவன் உத்தரவு கொடுத்துவிட்டால் அவளைப் பொறுத்தவரை அது ஆனந்த விடுதலை தான்..!
ஆனால் அதன் பின்னான விளைவுகளை எதிர்கொள்வதை விட இந்த நரக வேதனையே மேல் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்..
திருமணத்திற்கு முன்பு வேசி என்று பட்டங் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆணும் அவள் வீட்டு கதவை தட்டிய நிகழ்வெல்லாம் இப்போதும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும்..
பாதுகாப்பில்லாத இந்த உலகத்தில் இவனை பகைத்துக் கொண்டு எங்கே போய் வாழ்வது..!
தேவராயன்.. என் அண்ணன்..?
"ஒஹோ.. அவன்கிட்டே அடைக்கலம் போகலாம்னு நினைப்போ..! உனக்கும் அவனுக்கும் கள்ளத் தொடர்புன்னு கதை கட்டி விடுவேன்..உன்னைய கொன்னு கிணத்துல போட்டு அந்த பழிய தூக்கி அவன்மேல போடுவேன்.."
இப்படி ஒரு முறை சொன்னபோது தேகம் மொத்தமும் நடுங்கியது..
அதன் பின் அந்த எண்ணத்தை மொத்தமாக கைவிட்டிருந்தாள் கண்ணகி.. அரக்கனிடம் கருணையும் பண்பையும் எதிர்பார்ப்பது தவறு..
எழுந்து ஒற்றை காலுடன் நொண்டி நொண்டி நடந்து சென்று.. அத்தனை தோசைகளையும் சுடச்சுட வார்த்து தட்டில் போட..
கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியோ பரிதாபமோ, பச்சாதாபமோ எதுவுமின்றி மிகச் சாதாரணமாக அந்த தோசைகளை உண்டு கொண்டிருந்தான் கண்ணபிரான்..
அதிலும் அன்றைக்கு மலை முழுங்கி மகாதேவன் போல் கணக்கில்லாமல் சென்று கொண்டிருந்தது எண்ணிக்கை..
"ஏன்டா இப்படி பண்ற..! நீ என்ன மனுஷனா மிருகமா..! இந்த பொண்ணோட நிலைமையை கொஞ்சம் கண்ண திறந்து பாருடா.. வாழவந்த பொண்ண இப்படியெல்லாம் வதைக்கிறது சரியே இல்லடா கண்ணா.. அந்த சாமி கூட நம்மள மன்னிக்காது.." பாக்கியத்தின் பேச்சுகள் காற்றோடு போயின..
"அ..அத்தை.. நீ.. நீங்க போங்க.. நான் பாத்துக்கறேன்..!" வலியில் கண்கள் சிவந்து.. கண்ணீருடன் கண்ணகி சொன்னபோது பாக்கியத்தில் ஈரக் குலையே அறுந்து போனது..
பாக்கியம் பேச பேச கண்ணபிரானின் விழிகள் கண்ணகியை தீச்சுவாலையாக எரிக்கிறது.. அந்த கண்களின் பாஷை கண்ணகிக்கு மட்டும்தான் புரியும்..
தாய்.. தங்கை.. என்ற பாசப்பிணைப்புகளை மீறி.. வேலைக்காரர்களை தாண்டி.. வெளி உலகத்திற்கு தெரியாமல் கண்ணகியை எப்படி வதைக்க வேண்டும் என்ற வித்தையை நன்றாகவே கற்று வைத்துக் கொண்டிருக்கிறான் கண்ண பிரான்..
திருமணத்திற்கு முன்பு வஞ்சி வீட்டிலிருந்த சமயங்களில் அண்ணா நான் தோசை சுட்டு தரவா..! என்று கண்ணகிக்கு அவள் உதவி செய்ய முயலுவாள்..
"அதெல்லாம் வேண்டாம் கண்ணு.. இன்னொரு வீட்டுக்கு போற புள்ள நீ ஏன் கஷ்டப்படணும்.. எனக்கு உன் அண்ணி தோசை சுட்டா தான் புடிக்குமாக்கும்..! வேணும்னா நீயும் உட்காரேன்..! உனக்கும் சேர்த்து தோசை சுட்டு தர சொல்றேன்.." என்று சிரித்துக் கொண்டே செல்லும்போது நீ படுத்துற பாடு பத்தாதுன்னு.. நாங்க வேற அவங்க வேலைப்பளுவ கூடுதலாக்கணுமோ.. என்று தோன்றும் அவளுக்கு..
அதனால் பொதுவாகவே கண்ணபிரான் சாப்பிடும்போது அவன் அழைத்தாலும் வஞ்சி சாப்பிடும் இடத்தில் வந்து அமருவதில்லை..!
ஒருமுறை வஞ்சிக்கு பிடித்த ஏதோ ஒரு உணவை அவள் தட்டில் கண்ணகி வைக்கவில்லை என்று.. எச்சில் கையோடு அவளை பளாரென்று அறைந்து விட்டான்..
"ஐயோ அண்ணி..!" என்று பதறிப் போனவள்
"ச்சே..! ராட்சசன் அண்ணா நீ.." என்று கோபித்துக் கொண்டு "என்னை மன்னிச்சிடுங்க அண்ணி.." என்று கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
"நல்லவ மாதிரி வேஷம் போட்டு என் தங்கச்சியை எனக்கு எதிரி ஆக்கறியளோ..! என் தங்கச்சி சாப்பிடாம பட்டினி கிடக்கும்போது நீ மட்டும் மூணு வேளை மூக்கு பிடிக்க தின்னு பெருத்து போவியா..! நான் சொல்ற வரைக்கும் நீயும் பட்டினிதான் கிடக்கணும்..!" என்று சொல்லிவிட்டு சென்றான்..
அடுத்த நாளே அவள் மயங்கி விழுந்து மருத்துவர் வந்து பரிசோதித்தது கர்ப்பமாய் இருக்கும் விஷயத்தை உறுதி செய்து.. "இந்த பொண்ணு ரொம்ப வீக்கா இருக்குது.. இவ்வளவு பெரிய அரண்மனையில சாப்பாடா இல்ல..! சாப்பிடறதுக்கு சத்துள்ள ஆதாரமா குடுங்க.." என்று சொல்லாமல் போயிருந்தால் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாய் பட்டினி கிடந்திருப்பாள்..
"இப்போதும் கூட.. இந்தா.. நான் தோசை சுட்டு தரேன்.. கொண்டு போய் அவன் தலையில போடு.." பாக்கியம் கோபத்தோடு சொல்லும்போது கொஞ்சம் சிரித்துக் கொள்ளலாம்..
ஆனாலும் மாமியாரின் உதவியை ஏற்க பயமாகத்தான் இருக்கிறது..
கண்ணபிரானுக்கு தெரிந்து போனால் அவன் எழுதும் சித்திரவதை தீர்ப்பை ஏற்கும் அளவிற்கு உடலிலும் மனதிலும் தெம்பில்லை..
ஒரு பிள்ளை பெற்றதிலேயே உடலின் பாதி ரத்தம் வெற்றிப் போனதைப் போல் அத்தனை சோர்வு..
மனோபலமும் நிம்மதியும் தான் உடல் பலத்தை தீர்மானிக்கும்.. நிம்மதி இல்லாத வாழ்க்கையால் வெளிச்சத்தை தேடி தேடி மனதோடு சேர்ந்து உடம்பும் சோர்வடைந்து போகிறது..
"ஆமா நான் சமையல் கட்டுல நிக்கிறத தேடிவந்து அவன் பார்க்க போறானாக்கும்.. சீக்கிரம் இதை எடுத்துட்டு போ..!" மாமியார் அவசரமாக தோசையை தட்டில் போட்டு தர.. அதை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினாள் கண்ணகி..
சமையலறைக்கும் சாப்பிடும் இடத்திற்கு. இடையில் இவ்வளவு தூரத்தை வைத்து கட்டிய அந்த கொத்தனாரையும் மேஸ்திரியையும் சபித்துக் கொட்டினாள்..
பின்னாளில் கண்ணகி என்ற ஒருத்தி வந்து இப்படி கால் கடுக்க கஷ்டப்படுவாள் என்று ஜோசியமா கண்டார் இந்த வீட்டை வடிவமைத்தவர்..
தோசையை அவன் தட்டில் போட்டுவிட்டு.. கொத்தமல்லி சட்னியும் தேங்காய் சட்னியும் பரிமாறும் போது அடுத்த சோதனை..!
சட்னியில் தலைமுடி..! அதுவும் நீளமான முடி.. முடியை எடுத்து முகத்துக்கு நேரே வைத்து பார்த்தவனின் கோப விழிப் பார்வை கண்ணகியின் பக்கம் திரும்பியது..
கண்ணகிக்கு பயத்தில் நாக்கு உலர்ந்து போனது..
"என்னது இது..!"
அவளிடம் பதில் இல்லை..
"இது உன் முடி தானே..!"
அப்படித்தான் இருக்க வேண்டும்.. பெரும்பாலும் சமையல் கட்டில் நிற்பதும் இன்று சட்னி அரைத்ததும் அவள் தானே..
உணவை உதறிவிட்டு எழுந்து நின்றான்..
"முடி நீளமா இருந்தா இப்படித்தான் திங்குற சாப்பாட்டுல தேவையில்லாம வந்து விழும்.. பாதி முடிய வெட்டி விட்டுட்டா இனி அந்த பிரச்சனை இல்ல பாரு..!" என்றவன் சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு.. அவன் பற்றியிருந்த அவள் ஜடையை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்..
இந்த கொடூர கூத்துக்களை வெளியில் யாரும் பார்த்துவிடக்கூடாதே..!
சமையலறையை விட்டு வெளியே வந்த பாக்கியம்.. "என்ன ஆள காணோம்.. சாப்பிட்டு முடிச்சிட்டான் போலிருக்கு.. அதிசயமா இன்னைக்கு நாலு தோசையோட எழுந்துட்டான்.." என்றபடி சமையலறையை சுத்தம் செய்ய மீண்டும் உள்ளே புகுந்து கொண்டார்..
உள்ளே இழுத்துச் சென்றவன்.. அவள் நீண்ட பின்னலை சுழற்றி கையில் வைத்துக்கொண்டு குதிரையின் சாட்டை வார் போல் மூர்க்கத்தனமாக செய்த செயலில் கண்ணகி உடைந்து போனாள்..
இதயங்கள் ஒன்றுபட்டால் தான் கலவியின் படிநிலைகள் இனிக்கும்..
இந்த கோபத்தின் உச்சம் கலவியே அல்ல..
அதிலும் கூடலின் இந்த வகையறா.. நீ எனக்கு அடிமை என்று ஒவ்வொரு அசைவிலும் எடுத்துக்காட்டுவதாய் உணர்ந்தாள் கண்ணகி..
"இந்த ஜடை இருக்கிற திமிர்ல தானடி ஓவரா ஆடுற.. இந்த அழகு இருக்குற திமிர்ல தானே கொழுத்து போய் திரியுற.." ஒவ்வொரு முறையும் அந்த ஜடையை இழுத்து உறவு கொண்ட போது கண்ணீர்த் துளி படுக்கையில் பட்டு சிதறியது..!
எல்லாம் முடிந்த திருப்தியோடு பெருமூச்சு விட்டவன் கவிழ்ந்திருந்தவளை முரட்டுத்தனமாக அவள் வயிற்றில் கை கொடுத்து வேகமாக நிமிர்த்தி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு.. உன் அழகை காட்டி என்னை மயக்கலாம்னு நினைக்கிறதாலதானே வேலையில கவனம் சிதறுது..! நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லடி.. எனக்கு தோணுச்சுன்னா உன்ன விட அழகானவள பாத்துட்டு போயிட்டே இருப்பேன்..! இன்னொரு முறை இப்படி நடந்துச்சு.." வெடுக்கென அவள் பிடரியை பற்றியிழுத்து.. தன் முகத்தை பார்க்கச் செய்தவன்.. கீழ் உதட்டை கடித்த படி அவளை பார்த்த பார்வையில் வார்த்தையில் சொல்லாத மிச்ச செய்திகளை சொல்லியிருந்தான்..
துடித்துக் கொண்டிருந்த அவள் உதட்டை கண்கள் சுருக்கி பார்த்தவன் அடுத்த கணம்.. கீழ் உதட்டை விழுங்கிக் கொள்ள.. உடைப்பெடுத்த கண்ணீர் இங்கிதமில்லாமல் இருவருக்குமிடையில் புகுந்தது..
இதழை சுவைத்துக் கொண்டிருந்தவன்.. முகச்சுழிப்போடு விலகினான்..
"அடச்சீ..! இனிப்ப ருசிக்கும்போது நடுவுல உப்ப கொட்டாதேன்னு எத்தனை முறை சொல்லுறது..!" என்று அவளை உதறி தள்ளியவன்.. வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு கலைந்திருந்த தலையை கோதியபடி அங்கிருந்து வெளியேறி இருந்தான்..
கட்டிலிலிருந்து சரிந்து கீழே இறங்கி சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தாள் கண்ணகி..
தோளுக்கு முன்னால் வந்து விழுந்த நீளக் கூந்தலை பார்க்கவே வெறுப்பாக இருந்தது..!
கூந்தலை கத்தரித்து வீசியிருந்தால் கூட இத்தனை வேதனை பட்டிருக்க மாட்டாள் .. இப்போது அதையும் மிஞ்சிய அவமானம்..
தாம்பத்திய உறவுகளில் ஆண்களுக்கு பிடிக்கும் அனைத்து நிலைகளும் பெண்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!
கண்ணகிக்கு இது பிடிக்காது பிடிக்கவே பிடிக்காது.. அவள் முகம் கோணும் போக்கில் கண்ணபிரான் இதை நன்றாகவே அறிந்து வைத்திருக்க வேண்டும்.. அதனால்தான் இப்படியோ..!
மற்றதெல்லாம் மட்டும் அவள் விருப்பப் படியா நடக்கிறது..!
ஆனால் நுண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெண்ணுக்கு.. பெரிய பெரிய தண்டனைகளை விட அவள் சுயமரியாதையை காயப்படுத்தும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய பாதிப்பை தருகின்றன..!
அன்று கால் கொப்பளித்த போது இல்லாத வலி இப்போது உயிர் போகிறது..!
தொடரும்..
இதுவே தோசை வேண்டுமென்று கண்ணபிரான் கேட்டுவிட்டால் அவன் உண்ணும் இருபது தோசைக்கு அடுப்படிக்கும் சாப்பிடும் இடத்திற்குமாக அங்குமிங்கும் அலைந்து கால் எலும்பு இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவுக்கு நொந்து நோக்காடாகி போய்விடும்..
அதிலும் சுடச்சுட கல் தோசை வேண்டும்.. காய்ந்து போயிருக்கக் கூடாது.. கல்லிலிருந்து எடுத்த தோசை அப்படியே அவன் தட்டில் விழ வேண்டும்.. அந்த தோசையை தின்று முடிப்பதற்குள் அடுத்த தோசை வந்து விட வேண்டும்.. அவர் காத்திருக்க நேர்ந்தால் அதற்கான வலிகளையும் அவள் தானே அனுபவிக்க வேண்டும்..
ஒருமுறை அப்படித்தான் பதட்டத்திலும் அவசரத்திலும் வார்த்த தோசை தீய்ந்து போய்விட..
"இன்னும் எவ்வளவு நேரம் மகாராணிக்காக நான் காத்திருக்கனும்.. வேலைக்கார நாய்க்கு சரியான நேரத்துக்கு சாப்பாடு கூட பரிமாற தெரியலையா..!"
பாத்திரங்களை உடைத்து.. சாம்பார் கிண்ணத்தை விசிறி அடித்தான்..
கொதிக்கும் சாம்பார் அவள் காலில் பட்டு.. துடித்துப் போனாள் கண்ணகி..
"அம்மாஆஆ.." என்று அலறி காலை பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட..
"அடப்பாவி.. கால் கொப்பளிச்சு போச்சே..! அப்பாவி பொண்ண போட்டு இந்த பாடு படுத்துறியே உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா..! இந்த வயித்துலதான் உன்னய பெத்தேனா..!" ஐஸ் கட்டியை எடுத்து வந்து காலில் தடவியபடி மகனைப் பார்த்து அழுது புலம்பினாள் பாக்கியம்..
அன்னையை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தவன்..
"ஏய்..! நீ எனக்கு தானே பொண்டாட்டி..! எனக்கு வேலை செய்யறத விட அப்படி என்னடி உனக்கு வெட்டி முறிக்கிற கடமை.."
"போய் கருகாம முழுசா ஒழுங்கா தோசை சுட்டு கொண்டு வர்றே..! உன்னால அது கூட உருப்படியா செய்ய முடியலன்னா எழுந்து வாசலை பார்த்துட்டு போயிட்டே இரு..!" என்ற முறைத்த கண்களோடு நாற்காலியின் தலைமாட்டில் தாங்கிய கரத்தின் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் லேசாக உரசியபடி அவன் சொல்ல..
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் கண்ணகி..
வீட்டை விட்டு போ என்று அவன் உத்தரவு கொடுத்துவிட்டால் அவளைப் பொறுத்தவரை அது ஆனந்த விடுதலை தான்..!
ஆனால் அதன் பின்னான விளைவுகளை எதிர்கொள்வதை விட இந்த நரக வேதனையே மேல் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்..
திருமணத்திற்கு முன்பு வேசி என்று பட்டங் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆணும் அவள் வீட்டு கதவை தட்டிய நிகழ்வெல்லாம் இப்போதும் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும்..
பாதுகாப்பில்லாத இந்த உலகத்தில் இவனை பகைத்துக் கொண்டு எங்கே போய் வாழ்வது..!
தேவராயன்.. என் அண்ணன்..?
"ஒஹோ.. அவன்கிட்டே அடைக்கலம் போகலாம்னு நினைப்போ..! உனக்கும் அவனுக்கும் கள்ளத் தொடர்புன்னு கதை கட்டி விடுவேன்..உன்னைய கொன்னு கிணத்துல போட்டு அந்த பழிய தூக்கி அவன்மேல போடுவேன்.."
இப்படி ஒரு முறை சொன்னபோது தேகம் மொத்தமும் நடுங்கியது..
அதன் பின் அந்த எண்ணத்தை மொத்தமாக கைவிட்டிருந்தாள் கண்ணகி.. அரக்கனிடம் கருணையும் பண்பையும் எதிர்பார்ப்பது தவறு..
எழுந்து ஒற்றை காலுடன் நொண்டி நொண்டி நடந்து சென்று.. அத்தனை தோசைகளையும் சுடச்சுட வார்த்து தட்டில் போட..
கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியோ பரிதாபமோ, பச்சாதாபமோ எதுவுமின்றி மிகச் சாதாரணமாக அந்த தோசைகளை உண்டு கொண்டிருந்தான் கண்ணபிரான்..
அதிலும் அன்றைக்கு மலை முழுங்கி மகாதேவன் போல் கணக்கில்லாமல் சென்று கொண்டிருந்தது எண்ணிக்கை..
"ஏன்டா இப்படி பண்ற..! நீ என்ன மனுஷனா மிருகமா..! இந்த பொண்ணோட நிலைமையை கொஞ்சம் கண்ண திறந்து பாருடா.. வாழவந்த பொண்ண இப்படியெல்லாம் வதைக்கிறது சரியே இல்லடா கண்ணா.. அந்த சாமி கூட நம்மள மன்னிக்காது.." பாக்கியத்தின் பேச்சுகள் காற்றோடு போயின..
"அ..அத்தை.. நீ.. நீங்க போங்க.. நான் பாத்துக்கறேன்..!" வலியில் கண்கள் சிவந்து.. கண்ணீருடன் கண்ணகி சொன்னபோது பாக்கியத்தில் ஈரக் குலையே அறுந்து போனது..
பாக்கியம் பேச பேச கண்ணபிரானின் விழிகள் கண்ணகியை தீச்சுவாலையாக எரிக்கிறது.. அந்த கண்களின் பாஷை கண்ணகிக்கு மட்டும்தான் புரியும்..
தாய்.. தங்கை.. என்ற பாசப்பிணைப்புகளை மீறி.. வேலைக்காரர்களை தாண்டி.. வெளி உலகத்திற்கு தெரியாமல் கண்ணகியை எப்படி வதைக்க வேண்டும் என்ற வித்தையை நன்றாகவே கற்று வைத்துக் கொண்டிருக்கிறான் கண்ண பிரான்..
திருமணத்திற்கு முன்பு வஞ்சி வீட்டிலிருந்த சமயங்களில் அண்ணா நான் தோசை சுட்டு தரவா..! என்று கண்ணகிக்கு அவள் உதவி செய்ய முயலுவாள்..
"அதெல்லாம் வேண்டாம் கண்ணு.. இன்னொரு வீட்டுக்கு போற புள்ள நீ ஏன் கஷ்டப்படணும்.. எனக்கு உன் அண்ணி தோசை சுட்டா தான் புடிக்குமாக்கும்..! வேணும்னா நீயும் உட்காரேன்..! உனக்கும் சேர்த்து தோசை சுட்டு தர சொல்றேன்.." என்று சிரித்துக் கொண்டே செல்லும்போது நீ படுத்துற பாடு பத்தாதுன்னு.. நாங்க வேற அவங்க வேலைப்பளுவ கூடுதலாக்கணுமோ.. என்று தோன்றும் அவளுக்கு..
அதனால் பொதுவாகவே கண்ணபிரான் சாப்பிடும்போது அவன் அழைத்தாலும் வஞ்சி சாப்பிடும் இடத்தில் வந்து அமருவதில்லை..!
ஒருமுறை வஞ்சிக்கு பிடித்த ஏதோ ஒரு உணவை அவள் தட்டில் கண்ணகி வைக்கவில்லை என்று.. எச்சில் கையோடு அவளை பளாரென்று அறைந்து விட்டான்..
"ஐயோ அண்ணி..!" என்று பதறிப் போனவள்
"ச்சே..! ராட்சசன் அண்ணா நீ.." என்று கோபித்துக் கொண்டு "என்னை மன்னிச்சிடுங்க அண்ணி.." என்று கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
"நல்லவ மாதிரி வேஷம் போட்டு என் தங்கச்சியை எனக்கு எதிரி ஆக்கறியளோ..! என் தங்கச்சி சாப்பிடாம பட்டினி கிடக்கும்போது நீ மட்டும் மூணு வேளை மூக்கு பிடிக்க தின்னு பெருத்து போவியா..! நான் சொல்ற வரைக்கும் நீயும் பட்டினிதான் கிடக்கணும்..!" என்று சொல்லிவிட்டு சென்றான்..
அடுத்த நாளே அவள் மயங்கி விழுந்து மருத்துவர் வந்து பரிசோதித்தது கர்ப்பமாய் இருக்கும் விஷயத்தை உறுதி செய்து.. "இந்த பொண்ணு ரொம்ப வீக்கா இருக்குது.. இவ்வளவு பெரிய அரண்மனையில சாப்பாடா இல்ல..! சாப்பிடறதுக்கு சத்துள்ள ஆதாரமா குடுங்க.." என்று சொல்லாமல் போயிருந்தால் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாய் பட்டினி கிடந்திருப்பாள்..
"இப்போதும் கூட.. இந்தா.. நான் தோசை சுட்டு தரேன்.. கொண்டு போய் அவன் தலையில போடு.." பாக்கியம் கோபத்தோடு சொல்லும்போது கொஞ்சம் சிரித்துக் கொள்ளலாம்..
ஆனாலும் மாமியாரின் உதவியை ஏற்க பயமாகத்தான் இருக்கிறது..
கண்ணபிரானுக்கு தெரிந்து போனால் அவன் எழுதும் சித்திரவதை தீர்ப்பை ஏற்கும் அளவிற்கு உடலிலும் மனதிலும் தெம்பில்லை..
ஒரு பிள்ளை பெற்றதிலேயே உடலின் பாதி ரத்தம் வெற்றிப் போனதைப் போல் அத்தனை சோர்வு..
மனோபலமும் நிம்மதியும் தான் உடல் பலத்தை தீர்மானிக்கும்.. நிம்மதி இல்லாத வாழ்க்கையால் வெளிச்சத்தை தேடி தேடி மனதோடு சேர்ந்து உடம்பும் சோர்வடைந்து போகிறது..
"ஆமா நான் சமையல் கட்டுல நிக்கிறத தேடிவந்து அவன் பார்க்க போறானாக்கும்.. சீக்கிரம் இதை எடுத்துட்டு போ..!" மாமியார் அவசரமாக தோசையை தட்டில் போட்டு தர.. அதை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினாள் கண்ணகி..
சமையலறைக்கும் சாப்பிடும் இடத்திற்கு. இடையில் இவ்வளவு தூரத்தை வைத்து கட்டிய அந்த கொத்தனாரையும் மேஸ்திரியையும் சபித்துக் கொட்டினாள்..
பின்னாளில் கண்ணகி என்ற ஒருத்தி வந்து இப்படி கால் கடுக்க கஷ்டப்படுவாள் என்று ஜோசியமா கண்டார் இந்த வீட்டை வடிவமைத்தவர்..
தோசையை அவன் தட்டில் போட்டுவிட்டு.. கொத்தமல்லி சட்னியும் தேங்காய் சட்னியும் பரிமாறும் போது அடுத்த சோதனை..!
சட்னியில் தலைமுடி..! அதுவும் நீளமான முடி.. முடியை எடுத்து முகத்துக்கு நேரே வைத்து பார்த்தவனின் கோப விழிப் பார்வை கண்ணகியின் பக்கம் திரும்பியது..
கண்ணகிக்கு பயத்தில் நாக்கு உலர்ந்து போனது..
"என்னது இது..!"
அவளிடம் பதில் இல்லை..
"இது உன் முடி தானே..!"
அப்படித்தான் இருக்க வேண்டும்.. பெரும்பாலும் சமையல் கட்டில் நிற்பதும் இன்று சட்னி அரைத்ததும் அவள் தானே..
உணவை உதறிவிட்டு எழுந்து நின்றான்..
"முடி நீளமா இருந்தா இப்படித்தான் திங்குற சாப்பாட்டுல தேவையில்லாம வந்து விழும்.. பாதி முடிய வெட்டி விட்டுட்டா இனி அந்த பிரச்சனை இல்ல பாரு..!" என்றவன் சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு.. அவன் பற்றியிருந்த அவள் ஜடையை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்..
இந்த கொடூர கூத்துக்களை வெளியில் யாரும் பார்த்துவிடக்கூடாதே..!
சமையலறையை விட்டு வெளியே வந்த பாக்கியம்.. "என்ன ஆள காணோம்.. சாப்பிட்டு முடிச்சிட்டான் போலிருக்கு.. அதிசயமா இன்னைக்கு நாலு தோசையோட எழுந்துட்டான்.." என்றபடி சமையலறையை சுத்தம் செய்ய மீண்டும் உள்ளே புகுந்து கொண்டார்..
உள்ளே இழுத்துச் சென்றவன்.. அவள் நீண்ட பின்னலை சுழற்றி கையில் வைத்துக்கொண்டு குதிரையின் சாட்டை வார் போல் மூர்க்கத்தனமாக செய்த செயலில் கண்ணகி உடைந்து போனாள்..
இதயங்கள் ஒன்றுபட்டால் தான் கலவியின் படிநிலைகள் இனிக்கும்..
இந்த கோபத்தின் உச்சம் கலவியே அல்ல..
அதிலும் கூடலின் இந்த வகையறா.. நீ எனக்கு அடிமை என்று ஒவ்வொரு அசைவிலும் எடுத்துக்காட்டுவதாய் உணர்ந்தாள் கண்ணகி..
"இந்த ஜடை இருக்கிற திமிர்ல தானடி ஓவரா ஆடுற.. இந்த அழகு இருக்குற திமிர்ல தானே கொழுத்து போய் திரியுற.." ஒவ்வொரு முறையும் அந்த ஜடையை இழுத்து உறவு கொண்ட போது கண்ணீர்த் துளி படுக்கையில் பட்டு சிதறியது..!
எல்லாம் முடிந்த திருப்தியோடு பெருமூச்சு விட்டவன் கவிழ்ந்திருந்தவளை முரட்டுத்தனமாக அவள் வயிற்றில் கை கொடுத்து வேகமாக நிமிர்த்தி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு.. உன் அழகை காட்டி என்னை மயக்கலாம்னு நினைக்கிறதாலதானே வேலையில கவனம் சிதறுது..! நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லடி.. எனக்கு தோணுச்சுன்னா உன்ன விட அழகானவள பாத்துட்டு போயிட்டே இருப்பேன்..! இன்னொரு முறை இப்படி நடந்துச்சு.." வெடுக்கென அவள் பிடரியை பற்றியிழுத்து.. தன் முகத்தை பார்க்கச் செய்தவன்.. கீழ் உதட்டை கடித்த படி அவளை பார்த்த பார்வையில் வார்த்தையில் சொல்லாத மிச்ச செய்திகளை சொல்லியிருந்தான்..
துடித்துக் கொண்டிருந்த அவள் உதட்டை கண்கள் சுருக்கி பார்த்தவன் அடுத்த கணம்.. கீழ் உதட்டை விழுங்கிக் கொள்ள.. உடைப்பெடுத்த கண்ணீர் இங்கிதமில்லாமல் இருவருக்குமிடையில் புகுந்தது..
இதழை சுவைத்துக் கொண்டிருந்தவன்.. முகச்சுழிப்போடு விலகினான்..
"அடச்சீ..! இனிப்ப ருசிக்கும்போது நடுவுல உப்ப கொட்டாதேன்னு எத்தனை முறை சொல்லுறது..!" என்று அவளை உதறி தள்ளியவன்.. வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு கலைந்திருந்த தலையை கோதியபடி அங்கிருந்து வெளியேறி இருந்தான்..
கட்டிலிலிருந்து சரிந்து கீழே இறங்கி சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தாள் கண்ணகி..
தோளுக்கு முன்னால் வந்து விழுந்த நீளக் கூந்தலை பார்க்கவே வெறுப்பாக இருந்தது..!
கூந்தலை கத்தரித்து வீசியிருந்தால் கூட இத்தனை வேதனை பட்டிருக்க மாட்டாள் .. இப்போது அதையும் மிஞ்சிய அவமானம்..
தாம்பத்திய உறவுகளில் ஆண்களுக்கு பிடிக்கும் அனைத்து நிலைகளும் பெண்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!
கண்ணகிக்கு இது பிடிக்காது பிடிக்கவே பிடிக்காது.. அவள் முகம் கோணும் போக்கில் கண்ணபிரான் இதை நன்றாகவே அறிந்து வைத்திருக்க வேண்டும்.. அதனால்தான் இப்படியோ..!
மற்றதெல்லாம் மட்டும் அவள் விருப்பப் படியா நடக்கிறது..!
ஆனால் நுண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெண்ணுக்கு.. பெரிய பெரிய தண்டனைகளை விட அவள் சுயமரியாதையை காயப்படுத்தும் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய பாதிப்பை தருகின்றன..!
அன்று கால் கொப்பளித்த போது இல்லாத வலி இப்போது உயிர் போகிறது..!
தொடரும்..
Last edited: