- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
மனம் சிதிலமடைந்து போயிருந்தாலும் எது என்ன கதியானாலும் இயல்பு வாழ்க்கையோடு பொருந்தி அடுத்தடுத்த வேலைகளை பார்க்க வேண்டிய கட்டாயம்.. இயற்கையும் கூட அப்படித்தானே.. சூரிய உதயமும் அஸ்தமனமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை..
வழக்கம் போல விடியற்காலையில் எழுந்து அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்த மாவில் இட்லி ஊற்றி.. அது வேகும் நேரத்தில் சாம்பாருக்காக காய்கறிகளை நறுக்கி வைத்து.. பருப்பை குழைய வேக வைத்து.. சட்னி அரைத்து என அத்தனை வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்திருந்தாள் அருந்ததி..
"இட்லிக்கார ஆயாவோட பொண்ணுன்னு எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க..!" வேலைகளின் நடுவே சந்திரமதியின் அழுகையும் கண்ணீரும் மழைத் தூறலை போல் அவள் நினைவுகளோடு பட்டுத் தெறித்தது..
உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலமில்லைன்னு இந்த பொண்ணுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது..! எரிச்சலோடு அவித்தெடுத்த இட்லிகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்..
உறக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தாள் சந்திரமதி.. காற்றோடு மிதந்து வந்த இட்லி சாம்பார் வாசனை ஒரு மனதுக்குள் சலிப்பை தரவும்.. முகத்தை சுழித்துக் கொண்டு பேஸ்ட்டையும் பிரஷையும் கையில் எடுத்தவள் துண்டை தோளில் போட்டுக்கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்..
மோத்தி அவளைப் பின்தொடர்ந்தது..
எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.. சந்திரமதி குளியலறைக்குள் நுழைந்த பிறகு வாசலில் அமர்ந்து காவல் காக்க வேண்டிய தலையாய பொறுப்பு மோத்திக்கு உண்டு..!
அருந்ததியோ.. சந்திரமதியோ.. பெண்கள் குளியலறைக்குள் நுழைந்து விட்டால் கேட்டை தாண்டி மறுபக்கம் கூட அந்நியர்கள் யாரும் நடமாட முடியாது.. பெரிதாக குரைத்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டான்.. ஆனால் கண்கள் குறுகுறுக்க உன்னிப்பாக நாலா பக்கமும் தன் கண்காணிப்பு பார்வையை செலுத்தியிருப்பான்..
அறிமுகமில்லாத ஆண்கள் கேட்டை திறந்து உள்ளே வந்தால் தடுமாறி அங்கேயே நிற்கும்படி அட்டாக் போட்டு விடுவான்.. சிறுவர்கள் இதில் விதிவிலக்கு..
இன்றும் குளியலறைக்கு சற்று தொலைவிலிருந்த சின்ன சதுர வடிவ கல்லின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் மோத்தி..
இட்லி பாத்திரத்தையும் சாம்பார் சட்னி என மற்ற பாத்திரங்களையும் ஒவ்வொன்றாய் தூக்கி வந்து வெளியே வைத்தாள் அருந்ததி..
அந்நேரம் உடற்பயிற்சி உடையோடு வெளியே வந்த மகரிஷியோடு எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் நிலை..
எப்படியோ சுதாரித்து தூணோடு சாய்ந்து கொண்டாள்..
வழக்கத்திற்கு மாறான புன்னகையோடு அருந்ததியை எதிர்கொண்டான் அவன்..!
அந்த மோகன புன்னகையில் வேறொருதியாக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு கணம் தன்னிலை இழந்து கிறங்கி போயிருப்பாள்.. அருந்ததியின் நெஞ்சில் விரவிக் கிடக்கும் சஞ்சலங்களுக்கு மத்தியில் இந்த புன்னகை ஒரு சின்ன ஆறுதல் தந்ததே தவிர வேறெந்த மயக்கத்தையும் தரவில்லை..
பதிலுக்கு சிரிப்பதா வேண்டாமா என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள் அவள்.. அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் வேக நடையோடு தனது பைக்கில் ஏறியிருந்தான் மகரிஷி..
மோத்தி சிறுத்தை போல் தாவி குதித்து ஓடி வந்தது..
"நோ மோத்தி.. லேது.. வெல்லு.. நன்னு ஃபாலோ ராஒத்து.."
என்று விட்டு அவன் கேட்டை தாண்டி சென்றபோதும்.. அந்த வாயில் கதவு வரைக்கும் பின்னால் ஓடியது மோத்தி..
வீட்டு வாசலில் நின்று இதை பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
மகரிஷி சென்றதும் அருந்ததியின் பக்கம் திரும்பிய சின்னவன் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பாசச்சலுகையாக எண்ணிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் துள்ளிக் கொண்டு அவளிடம் ஓடி வர..
"ஏய்.. போ அப்படி..! அய்யே.. துள்ளிக்கிட்டு ஓடி வர்றே..!" அருந்ததி முகத்தை எரிச்சலாக காட்ட.. அவ்வளவுதான் ஓட்டம் நின்று சில நொடிகள் அவளையே தலை சாய்த்து பார்த்தவன் பிறகு மெல்ல நகர்ந்து மீண்டும் அந்த கல்லில் ஏறி அமர்ந்து கொண்டான்..
குளித்து முடித்து வந்த பெண்ணுக்கு தலைவாரி இரட்டை பின்னல் ரிப்பன் வைத்து கட்டி முடித்து.. தட்டில் நாலு இட்லிகளை வைத்து அவள் பக்கம் தள்ளிவிட்டு.. பாத்திரத்தோடு வந்த சிறுசுகளுக்கும் பெண்களுக்கும் இட்லிகளை விற்று காசை வாங்கி நீல நிறக் கல்லால் பெட்டி போன்ற சின்ன டப்பாவில் போட்டுக் கொண்டு இடைவெளியில் மற்ற வீட்டு வேலைகளையும் முடித்து வைத்தாள் அருந்ததி..
தாய்க்கும் மகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை..! ஆனால் சந்திரமதிக்கான எந்த கடமையிலிருந்தும் அருந்ததி தவறவில்லை..!
இடைப்பட்ட நேரத்தில் மகரிஷி வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.. குளித்து முடித்து பார்மல் முறையில் அட்டகாசமாக வெளியே வந்தவன்.. சுடிதாருக்கு மேலே சீருடைய பனியனை போட்டுக்கொண்டு இட்லி பாத்திரங்களை எடுத்து உள்ளே வைக்கப் போன அருந்ததியிடம்..
'இட்லி உண்டந்தா..?" என்று கேட்க..
இருக்கு என தலையைசைத்தாள் அவள்..
"நாலுகா பெட்டண்டி.." என்றவன் தமிழில் சொல்வதற்குள்.. "நாலுதானே" என அவளை புரிந்து கொண்டு தூக்கிய பாத்திரத்தை மறுபடி திண்ணையில் இறக்கி.. உள்ளே சென்று தட்டை எடுத்து வந்து நாலு இட்லிகளையும் சன்னமாய் சாம்பாரையும் ஊற்றி மறுபக்கம் வீட்டுக்காக எடுத்து தனியாக வைத்திருந்த கெட்டி சட்னியையும் தட்டில் பரிமாறி அவனிடம் தந்தாள்..
தட்டோடு மறுபுறமிருந்த திண்ணையில் அமர்ந்தவன் "மோத்தி.." என்று அழைக்கவும் சின்னவன் காதை துருத்திக் கொண்டு வெளியே ஓடி வந்தான்..
"கோ அண்ட் டேக் யுவர் பிளேட்.." என்று சொல்ல தன் தட்டை வாயில் கவ்வி கொண்டு திண்ணையின் மீது குதித்து ஏறி அவன் பக்கத்தில் வந்து தரையில் தட்டை வைத்தான்..
தன்னிடமிருந்து இரண்டு இட்லிகளை மோத்தியின் தட்டில் வைத்தான் மகரிஷி..
அருந்ததி இதையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட பூனை போல் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சந்திரமதி..
"தின்னாவா சந்திராம்மா.." என்று அவளுக்கு ஊட்டுவதற்காக இட்லியை விள்ளல் பிட்டு அவள் வாய்க்கு நேரே எடுத்துச் சென்றான்..
சந்திரா என்றால் அம்மா..! அன்னையிடம் தனக்கிருந்த அத்தனை உரிமைகளும் இந்த சின்ன பெண்ணிடமும் இருப்பதாக நினைக்கிறான்..
ஆனால் அவன் ஊட்டிய உணவை வாங்க மறுத்து முகத்தை சுழித்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் சந்திரமதி..
மகரிஷியின் முகம் மாறிப்போனது..
ஒரு கணம் இவள் தன் அம்மா இல்லை அருந்ததியின் மகள் என்ற விஷயம் மனதோடு மோதிப் போக..
"என்ன ஆச்சு சந்திராம்மா..?" என்றான் வாட்டமாக..
"இட்லி பிடிக்காது ரிஷி.. தினமும் ஒரே இட்லி ஒரே சாம்பார் ஒரே சட்னி.. அலுத்து போச்சு.. எப்படித்தான் நீ இதை சாப்பிடுறியோ..!" என்றவள் அவனருகே வந்து ரகசியமாக "நீதான் நிறைய பணம் வச்சிருக்கியே.. உனக்கு பிடிச்ச மாதிரி பீட்சா பர்கர்.. சாண்ட்விச் சாலட் இந்த மாதிரி ஏதாவது ரிச்சா சாப்பிடலாம் இல்ல..! போயும் போயும் இந்த காஞ்சி போன இட்லிய..!" தட்டைக்காட்டி சொல்லும் போதே முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டாள்..
மகரிஷி சிரித்தான்..
"என்னதான் பீட்சா பர்கர் சாண்ட்விச் சாலட்ன்னு சாப்பிட்டாலும் இந்த இட்லிக்கும் சாம்பாருக்கும் ஈடு இணையே கிடையாது தெரியுமா..!" இரண்டு இட்லிகளை மென்று விழுங்கியவன்
"ஜேஜம்மாவை கூப்பிடு..! இட்லி வேணும்.." என்றான் அவள் மகளிடம்..
"என்ன சொன்னீங்க எனக்கு ஒன்னும் புரியல..!" சின்னது விழித்தது..
"நீ அருந்ததி படம் பாத்திருக்கியா..?"
இல்லை என்ற உதட்டை பிதுக்கினாள் சந்திரமதி..
"நானும் தெலுங்குலதான் பார்த்திருக்கேன்.. அதுல ஒரு குயின் வருவாங்க.. வாரியர் குயின்..! அவங்கள அந்த நாட்டு மக்கள் எல்லாம் ஜேஜம்மான்னு கூப்பிடுவாங்க.."
"அந்தப் பெயரை எதுக்காக எங்கம்மாவுக்கு வச்சிருக்கீங்க..?"
"அன்னைக்கு நீ உன் அம்மாவோட பேரு அருந்ததின்னு சொன்ன உடனே எனக்கு இந்த பேர்தான் ஞாபகம் வந்துச்சு.."
"என்னவோ நான் அந்த படம் பார்த்ததில்ல" என்று தோள்களை ஏற்றி இறக்கினாள் சந்திரமதி.. அதற்குள் அருந்ததியே வெளியே வந்து விட
"டுமோர் இட்லிஸ்" என்றான் அவன்..
மகளும் அவனோடு அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு மௌனமாக உள்ளே சென்று ஒரு சிறிய பாத்திரத்தில் ஆறு இட்லிகளை எடுத்து வந்து அவன் தட்டில் வைக்கப் போக.. "இல்ல போதும் போதும்.." என்றான் அவன்..
இரண்டை மட்டும் அவன் தட்டில் வைத்துவிட்டு மீதியை பாத்திரத்தோடு கீழே வைத்தவள் "வேணும்னா போட்டுக்கோங்க" என்றவள் சாம்பாரையும் சட்னியையும் பரிமாறி முடித்து மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்..
ஆறு இட்லிகளையும் காலி செய்து முடித்திருந்தான் அவன்..
"இட்லியை இப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிடற அபூர்வ ஜீவனை இப்பதான் பார்க்கறேன்.." கன்னத்தில் கை வைத்தபடி அவனையே பார்த்திருந்தாள் சந்திரமதி..
உனக்கு அருமை தெரியலைன்னு "சொல்லு.. சரி நான் ஒரு விஷயம் கேட்கிறேன்.. காலையிலிருந்து உங்க அம்மாகிட்ட இட்லி வாங்க எத்தனை பேர் வந்துட்டு போனாங்க.."
"சரியா தெரியல.. ஒரு பதினைஞ்சு இல்ல இருபது பேர் வந்திருப்பாங்க.."
"இட்லி நல்லா இல்லாமத்தான் இத்தனை பேர் வந்து வாங்கறாங்களா..! அவங்களும் உன்னை மாதிரி தினமும் தானே வாங்கி சாப்பிடுறாங்க.. இட்லியோட டேஸ்ட் அவங்களுக்கு சலிச்சு போகலையே..! உனக்கு இட்லி பிடிக்கலையா.. இல்ல உன்னோட அம்மா இட்லி விக்கறது பிடிக்கலையா.." என்றவன் காலி தட்டை எடுத்துக்கொண்டு கார்ப்பரேஷன் குழாயை நோக்கி சென்றான்..
சந்திரமதி யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்..
தட்டை கழுவி சந்திரமதியிடம் தந்தவன் "இது உங்க வீட்டு தட்டு.. உள்ள வச்சிட்டு வர்றியா புறப்படலாம்..!" என்று சொல்ல வேகமாக தலையசைத்து தட்டை உள்ளே வைத்துவிட்டு புத்தகப் பையோடு வெளியே வந்தாள்..
அவளோடு சேர்ந்து அருந்ததியும் வெளியே வர.. இட்லிக்கான பணத்தை தன் வாலட்டிலிருந்து எடுத்து அவளிடம் தந்துவிட்டு சந்திரமதியோடு புறப்பட்டான் மகரிஷி..
சந்திரமதி தாயிடம் சொல்லிக் கொள்ளவில்லை.. ஆனால் மகரிஷியின் பார்வை அருந்ததியை ஒருமுறை தொட்டு மீண்டது..
"பை பை மோத்தி..!"
கேட்டை தாண்டி வெளியே சென்ற பைக்கை ஏக்கத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தான் மோத்தி..!
கையை பிசைந்தபடி கேட் வரையிலும் வேகமாக வந்த அருந்ததி ஒரு மாதிரியான குழப்பத்தில் இருந்தாள்..
எதிர் திசையில் தெரிந்த நிழலொன்று பார்வையால் குத்தி துளைக்க கண்களை அந்த பக்கம் திருப்பினாள்.. எதிர்வீட்டு கனகா..!
சிநேக பாவனையுடன் இவள் புன்னகைக்க கனகா முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..
"என்ன ஆச்சு இந்த கனகாக்காவுக்கு..! கடனா கைமாத்தா கூட காசெதுவும் வாங்கலையே.." ஒன்றும் புரியாமல் சில கணங்கள் அங்கேயே நின்றிருந்தவள் வேலைக்கு நேரமாவதை உணர்ந்து பையை எடுத்துக்கொண்டு வண்டியில் புறப்பட்டாள்..
கேட்டை தாண்டும் வரை அவள் பின்னால் ஓடினான் மோத்தி..
பைக்கில் செல்லுகையில்
"ஏமைந்தி சந்திராம்மா.. நீங்க ரொம்ப சோகமா இருக்கிற மாதிரி தெரியுது.. அம்மா அடிச்சிட்டாங்களா..?" மெல்ல பேச்சு கொடுத்தான் மகரிஷி..
"அடிக்கல ஆனா அம்மாவுக்கும் எனக்கும் சண்டை..!"
"எந்துக்கு?"
"புது வீட்டுக்கு குடி போகணுமாம்.. ரிஷி எனக்கு அந்த வீடு பிடிக்கவே இல்லை.. நான் இங்கேயே இருக்கலாம்ன்னு சொன்னா அம்மா கேட்க மாட்டேங்கிறாங்க.. எனக்காக நீ அம்மா கிட்ட பேசுறியா ப்ளீஸ்.. "
"அதெல்லாம் பேச முடியாது..!"
சந்திரமதியின் முகம் வாடியது..
"ஏன்னா நான் தான் ஏற்கனவே பேசிட்டேனே.. நீங்க வீட்டை காலி பண்ணவே வேண்டாம்.. இங்கேயே இருக்கலாம்..! இப்ப சந்திராம்மா ஹாப்பியா..?" அவன் முகத்தை மட்டும் பின்னால் திருப்பி கேட்க.. மெல்ல விரிந்த உற்சாகத்துடன்..
"நெஜமாத்தான் சொல்றியா ரிஷி? புது வீட்டுக்கு போக வேண்டாமா?" என்றாள் சந்திரமதி கண்களை விரித்து..
"நான் சொல்றது நிஜம்.. சந்தேகமா இருந்தா ஈவினிங் வீட்டுக்கு போய் உன் அம்மாகிட்ட கேட்டு பாரு.."
"ஓஓஓஓஓ.. தேங்க்யூ ரிஷி.." இரு கைகளை மேலே உயர்த்தி உற்சாக கூச்சலிட்டவள் அவன் தோள்களை அழுத்தி முதுகில் தன் தலையால் முட்டினாள்..
"ஓய் வண்டிய ஆட்டாதே..! உன் தேங்க்ஸெல்லாம் எனக்கு வேண்டாம்.. உன் அம்மாவ டெய்லி மார்னிங் பிரேக் பாஸ்ட்க்கு இட்லி பண்ணி தர சொல்லு அது போதும்.."
"அய்யே இவ்வளவுதானா..! நீ எங்களுக்கு செஞ்ச உதவிக்கு உனக்கு விருந்தே சமைச்சு போடலாம்.. மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல மத்தியானம் டிபன் நைட் லன்ச் எல்லாத்தையும் பண்ணித் தர சொல்றேன்.." அவளுக்கே உரிய குழந்தை தனத்துடன் தலையை செய்து உற்சாகத்தோடு பேசினாள் சந்திரமதி..
"சரி அம்மா கூட வேற ஏதாவது சண்டையா..?"
உற்சாகம் மறைந்து சந்திரமதியின் முகம் மாறியது..
"என்னமா ஆச்சு.."
"எனக்கு அம்மாவ பிடிக்கவே இல்ல ரிஷி.."
"ஏன் சந்திராம்மா..?"
"எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.. எனக்கு எதை பிடிக்காதோ அதைத்தான் செய்றாங்க..!"
"கரெக்ட்..! இப்படி இருக்கிற அம்மாவை யாருக்கு தான் பிடிக்கும் இல்ல..!"
"இவங்களால எனக்கு எங்க போனாலும் அவமானமா இருக்குது.."
"உன் நிலைமை எனக்கு புரியுது சந்திராம்மா.."
"இந்த உலகத்துல என்னை புரிஞ்சுக்க அட்லீஸ்ட் நீயாவது இருக்கியே ரிஷி!"
"எஸ்.. ஐ கேன் பீல் யுவர் பெயின்" என்றான் உதடு பிதுக்கி..
அதற்குள் பள்ளி வந்துவிட சந்திரமதி அவன் பைக்கிலிருந்து இறங்கினாள்..
"என்னோட அம்மா உன் அம்மா மாதிரி இல்ல சந்திராம்மா.. அவங்க ரொம்ப நல்லவங்க.. என் மேல உயிரையே வச்சிருந்தாங்க.. ஆனா சின்ன வயசுல நான் படிக்கலைன்னா அடிப்பாங்க திட்டுவாங்க..! எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்காங்க அதெல்லாம் அப்ப புரியல.. எல்லாம் எனக்கு பிடிக்காததா செஞ்சதைப்போல தோணுச்சு.. வெறுப்பா இருக்கும்.. அந்த வயசுல என்னால எதையும் புரிஞ்சுக்க முடியல.. ஆனா இப்ப யோசிக்கும்போது எல்லாமே நல்லதுக்காகன்னு புரியுது.. ஒருவேளை அவங்க அவ்வளவு கண்டிப்பு காட்டாம போயிருந்தா நான் இப்படி படிச்சு இந்த நிலமைக்கு வந்திருப்பேனா தெரியல..! இப்போ அம்மா தந்த படிப்பும் பண்பும் என் கூட இருக்குது.. ஆனா அம்மா என் கூட இல்லை.. அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. யாரும் இருக்கிற வரைக்கும் அவங்க அருமை தெரியாது..! தாயின் நினைவில் கலங்க துடித்த கண்களை கட்டுபடுத்தியபடி பேசியவன் சந்திரமதி தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் சட்டென சிரித்தான்..
"அய்யோ சந்திராம்மா என்னோட அனுபவத்தை தான் சொன்னேன்.. அப்புறம் உன் கிளாஸ்ல அம்மா இல்லாதவங்க யாராவது இருக்காங்களா..?"
"ம்ம்.. ப்ரீத்தி..?"
"போய் கேட்டுப் பாரு.. அம்மா அடிக்கறதும் கண்டிக்கறதும் எவ்வளவு சந்தோஷம்ன்னு அவ உனக்கு சொல்லுவா.."
சந்திரமதி அமைதியாக நின்றிருக்க பைக்கை கிளப்பி அங்கிருந்து புறப்பட்டிருந்தான் மகரிஷி..
தொடரும்..
வழக்கம் போல விடியற்காலையில் எழுந்து அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்த மாவில் இட்லி ஊற்றி.. அது வேகும் நேரத்தில் சாம்பாருக்காக காய்கறிகளை நறுக்கி வைத்து.. பருப்பை குழைய வேக வைத்து.. சட்னி அரைத்து என அத்தனை வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்திருந்தாள் அருந்ததி..
"இட்லிக்கார ஆயாவோட பொண்ணுன்னு எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க..!" வேலைகளின் நடுவே சந்திரமதியின் அழுகையும் கண்ணீரும் மழைத் தூறலை போல் அவள் நினைவுகளோடு பட்டுத் தெறித்தது..
உழைச்சு சம்பாதிக்கிற எந்த தொழிலும் கேவலமில்லைன்னு இந்த பொண்ணுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது..! எரிச்சலோடு அவித்தெடுத்த இட்லிகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தாள்..
உறக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தாள் சந்திரமதி.. காற்றோடு மிதந்து வந்த இட்லி சாம்பார் வாசனை ஒரு மனதுக்குள் சலிப்பை தரவும்.. முகத்தை சுழித்துக் கொண்டு பேஸ்ட்டையும் பிரஷையும் கையில் எடுத்தவள் துண்டை தோளில் போட்டுக்கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்..
மோத்தி அவளைப் பின்தொடர்ந்தது..
எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.. சந்திரமதி குளியலறைக்குள் நுழைந்த பிறகு வாசலில் அமர்ந்து காவல் காக்க வேண்டிய தலையாய பொறுப்பு மோத்திக்கு உண்டு..!
அருந்ததியோ.. சந்திரமதியோ.. பெண்கள் குளியலறைக்குள் நுழைந்து விட்டால் கேட்டை தாண்டி மறுபக்கம் கூட அந்நியர்கள் யாரும் நடமாட முடியாது.. பெரிதாக குரைத்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டான்.. ஆனால் கண்கள் குறுகுறுக்க உன்னிப்பாக நாலா பக்கமும் தன் கண்காணிப்பு பார்வையை செலுத்தியிருப்பான்..
அறிமுகமில்லாத ஆண்கள் கேட்டை திறந்து உள்ளே வந்தால் தடுமாறி அங்கேயே நிற்கும்படி அட்டாக் போட்டு விடுவான்.. சிறுவர்கள் இதில் விதிவிலக்கு..
இன்றும் குளியலறைக்கு சற்று தொலைவிலிருந்த சின்ன சதுர வடிவ கல்லின் மீது ஏறி அமர்ந்து கொண்டான் மோத்தி..
இட்லி பாத்திரத்தையும் சாம்பார் சட்னி என மற்ற பாத்திரங்களையும் ஒவ்வொன்றாய் தூக்கி வந்து வெளியே வைத்தாள் அருந்ததி..
அந்நேரம் உடற்பயிற்சி உடையோடு வெளியே வந்த மகரிஷியோடு எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் நிலை..
எப்படியோ சுதாரித்து தூணோடு சாய்ந்து கொண்டாள்..
வழக்கத்திற்கு மாறான புன்னகையோடு அருந்ததியை எதிர்கொண்டான் அவன்..!
அந்த மோகன புன்னகையில் வேறொருதியாக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு கணம் தன்னிலை இழந்து கிறங்கி போயிருப்பாள்.. அருந்ததியின் நெஞ்சில் விரவிக் கிடக்கும் சஞ்சலங்களுக்கு மத்தியில் இந்த புன்னகை ஒரு சின்ன ஆறுதல் தந்ததே தவிர வேறெந்த மயக்கத்தையும் தரவில்லை..
பதிலுக்கு சிரிப்பதா வேண்டாமா என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள் அவள்.. அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் வேக நடையோடு தனது பைக்கில் ஏறியிருந்தான் மகரிஷி..
மோத்தி சிறுத்தை போல் தாவி குதித்து ஓடி வந்தது..
"நோ மோத்தி.. லேது.. வெல்லு.. நன்னு ஃபாலோ ராஒத்து.."
என்று விட்டு அவன் கேட்டை தாண்டி சென்றபோதும்.. அந்த வாயில் கதவு வரைக்கும் பின்னால் ஓடியது மோத்தி..
வீட்டு வாசலில் நின்று இதை பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
மகரிஷி சென்றதும் அருந்ததியின் பக்கம் திரும்பிய சின்னவன் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பாசச்சலுகையாக எண்ணிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் துள்ளிக் கொண்டு அவளிடம் ஓடி வர..
"ஏய்.. போ அப்படி..! அய்யே.. துள்ளிக்கிட்டு ஓடி வர்றே..!" அருந்ததி முகத்தை எரிச்சலாக காட்ட.. அவ்வளவுதான் ஓட்டம் நின்று சில நொடிகள் அவளையே தலை சாய்த்து பார்த்தவன் பிறகு மெல்ல நகர்ந்து மீண்டும் அந்த கல்லில் ஏறி அமர்ந்து கொண்டான்..
குளித்து முடித்து வந்த பெண்ணுக்கு தலைவாரி இரட்டை பின்னல் ரிப்பன் வைத்து கட்டி முடித்து.. தட்டில் நாலு இட்லிகளை வைத்து அவள் பக்கம் தள்ளிவிட்டு.. பாத்திரத்தோடு வந்த சிறுசுகளுக்கும் பெண்களுக்கும் இட்லிகளை விற்று காசை வாங்கி நீல நிறக் கல்லால் பெட்டி போன்ற சின்ன டப்பாவில் போட்டுக் கொண்டு இடைவெளியில் மற்ற வீட்டு வேலைகளையும் முடித்து வைத்தாள் அருந்ததி..
தாய்க்கும் மகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை..! ஆனால் சந்திரமதிக்கான எந்த கடமையிலிருந்தும் அருந்ததி தவறவில்லை..!
இடைப்பட்ட நேரத்தில் மகரிஷி வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.. குளித்து முடித்து பார்மல் முறையில் அட்டகாசமாக வெளியே வந்தவன்.. சுடிதாருக்கு மேலே சீருடைய பனியனை போட்டுக்கொண்டு இட்லி பாத்திரங்களை எடுத்து உள்ளே வைக்கப் போன அருந்ததியிடம்..
'இட்லி உண்டந்தா..?" என்று கேட்க..
இருக்கு என தலையைசைத்தாள் அவள்..
"நாலுகா பெட்டண்டி.." என்றவன் தமிழில் சொல்வதற்குள்.. "நாலுதானே" என அவளை புரிந்து கொண்டு தூக்கிய பாத்திரத்தை மறுபடி திண்ணையில் இறக்கி.. உள்ளே சென்று தட்டை எடுத்து வந்து நாலு இட்லிகளையும் சன்னமாய் சாம்பாரையும் ஊற்றி மறுபக்கம் வீட்டுக்காக எடுத்து தனியாக வைத்திருந்த கெட்டி சட்னியையும் தட்டில் பரிமாறி அவனிடம் தந்தாள்..
தட்டோடு மறுபுறமிருந்த திண்ணையில் அமர்ந்தவன் "மோத்தி.." என்று அழைக்கவும் சின்னவன் காதை துருத்திக் கொண்டு வெளியே ஓடி வந்தான்..
"கோ அண்ட் டேக் யுவர் பிளேட்.." என்று சொல்ல தன் தட்டை வாயில் கவ்வி கொண்டு திண்ணையின் மீது குதித்து ஏறி அவன் பக்கத்தில் வந்து தரையில் தட்டை வைத்தான்..
தன்னிடமிருந்து இரண்டு இட்லிகளை மோத்தியின் தட்டில் வைத்தான் மகரிஷி..
அருந்ததி இதையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட பூனை போல் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் சந்திரமதி..
"தின்னாவா சந்திராம்மா.." என்று அவளுக்கு ஊட்டுவதற்காக இட்லியை விள்ளல் பிட்டு அவள் வாய்க்கு நேரே எடுத்துச் சென்றான்..
சந்திரா என்றால் அம்மா..! அன்னையிடம் தனக்கிருந்த அத்தனை உரிமைகளும் இந்த சின்ன பெண்ணிடமும் இருப்பதாக நினைக்கிறான்..
ஆனால் அவன் ஊட்டிய உணவை வாங்க மறுத்து முகத்தை சுழித்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் சந்திரமதி..
மகரிஷியின் முகம் மாறிப்போனது..
ஒரு கணம் இவள் தன் அம்மா இல்லை அருந்ததியின் மகள் என்ற விஷயம் மனதோடு மோதிப் போக..
"என்ன ஆச்சு சந்திராம்மா..?" என்றான் வாட்டமாக..
"இட்லி பிடிக்காது ரிஷி.. தினமும் ஒரே இட்லி ஒரே சாம்பார் ஒரே சட்னி.. அலுத்து போச்சு.. எப்படித்தான் நீ இதை சாப்பிடுறியோ..!" என்றவள் அவனருகே வந்து ரகசியமாக "நீதான் நிறைய பணம் வச்சிருக்கியே.. உனக்கு பிடிச்ச மாதிரி பீட்சா பர்கர்.. சாண்ட்விச் சாலட் இந்த மாதிரி ஏதாவது ரிச்சா சாப்பிடலாம் இல்ல..! போயும் போயும் இந்த காஞ்சி போன இட்லிய..!" தட்டைக்காட்டி சொல்லும் போதே முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டாள்..
மகரிஷி சிரித்தான்..
"என்னதான் பீட்சா பர்கர் சாண்ட்விச் சாலட்ன்னு சாப்பிட்டாலும் இந்த இட்லிக்கும் சாம்பாருக்கும் ஈடு இணையே கிடையாது தெரியுமா..!" இரண்டு இட்லிகளை மென்று விழுங்கியவன்
"ஜேஜம்மாவை கூப்பிடு..! இட்லி வேணும்.." என்றான் அவள் மகளிடம்..
"என்ன சொன்னீங்க எனக்கு ஒன்னும் புரியல..!" சின்னது விழித்தது..
"நீ அருந்ததி படம் பாத்திருக்கியா..?"
இல்லை என்ற உதட்டை பிதுக்கினாள் சந்திரமதி..
"நானும் தெலுங்குலதான் பார்த்திருக்கேன்.. அதுல ஒரு குயின் வருவாங்க.. வாரியர் குயின்..! அவங்கள அந்த நாட்டு மக்கள் எல்லாம் ஜேஜம்மான்னு கூப்பிடுவாங்க.."
"அந்தப் பெயரை எதுக்காக எங்கம்மாவுக்கு வச்சிருக்கீங்க..?"
"அன்னைக்கு நீ உன் அம்மாவோட பேரு அருந்ததின்னு சொன்ன உடனே எனக்கு இந்த பேர்தான் ஞாபகம் வந்துச்சு.."
"என்னவோ நான் அந்த படம் பார்த்ததில்ல" என்று தோள்களை ஏற்றி இறக்கினாள் சந்திரமதி.. அதற்குள் அருந்ததியே வெளியே வந்து விட
"டுமோர் இட்லிஸ்" என்றான் அவன்..
மகளும் அவனோடு அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு மௌனமாக உள்ளே சென்று ஒரு சிறிய பாத்திரத்தில் ஆறு இட்லிகளை எடுத்து வந்து அவன் தட்டில் வைக்கப் போக.. "இல்ல போதும் போதும்.." என்றான் அவன்..
இரண்டை மட்டும் அவன் தட்டில் வைத்துவிட்டு மீதியை பாத்திரத்தோடு கீழே வைத்தவள் "வேணும்னா போட்டுக்கோங்க" என்றவள் சாம்பாரையும் சட்னியையும் பரிமாறி முடித்து மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்..
ஆறு இட்லிகளையும் காலி செய்து முடித்திருந்தான் அவன்..
"இட்லியை இப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிடற அபூர்வ ஜீவனை இப்பதான் பார்க்கறேன்.." கன்னத்தில் கை வைத்தபடி அவனையே பார்த்திருந்தாள் சந்திரமதி..
உனக்கு அருமை தெரியலைன்னு "சொல்லு.. சரி நான் ஒரு விஷயம் கேட்கிறேன்.. காலையிலிருந்து உங்க அம்மாகிட்ட இட்லி வாங்க எத்தனை பேர் வந்துட்டு போனாங்க.."
"சரியா தெரியல.. ஒரு பதினைஞ்சு இல்ல இருபது பேர் வந்திருப்பாங்க.."
"இட்லி நல்லா இல்லாமத்தான் இத்தனை பேர் வந்து வாங்கறாங்களா..! அவங்களும் உன்னை மாதிரி தினமும் தானே வாங்கி சாப்பிடுறாங்க.. இட்லியோட டேஸ்ட் அவங்களுக்கு சலிச்சு போகலையே..! உனக்கு இட்லி பிடிக்கலையா.. இல்ல உன்னோட அம்மா இட்லி விக்கறது பிடிக்கலையா.." என்றவன் காலி தட்டை எடுத்துக்கொண்டு கார்ப்பரேஷன் குழாயை நோக்கி சென்றான்..
சந்திரமதி யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்..
தட்டை கழுவி சந்திரமதியிடம் தந்தவன் "இது உங்க வீட்டு தட்டு.. உள்ள வச்சிட்டு வர்றியா புறப்படலாம்..!" என்று சொல்ல வேகமாக தலையசைத்து தட்டை உள்ளே வைத்துவிட்டு புத்தகப் பையோடு வெளியே வந்தாள்..
அவளோடு சேர்ந்து அருந்ததியும் வெளியே வர.. இட்லிக்கான பணத்தை தன் வாலட்டிலிருந்து எடுத்து அவளிடம் தந்துவிட்டு சந்திரமதியோடு புறப்பட்டான் மகரிஷி..
சந்திரமதி தாயிடம் சொல்லிக் கொள்ளவில்லை.. ஆனால் மகரிஷியின் பார்வை அருந்ததியை ஒருமுறை தொட்டு மீண்டது..
"பை பை மோத்தி..!"
கேட்டை தாண்டி வெளியே சென்ற பைக்கை ஏக்கத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தான் மோத்தி..!
கையை பிசைந்தபடி கேட் வரையிலும் வேகமாக வந்த அருந்ததி ஒரு மாதிரியான குழப்பத்தில் இருந்தாள்..
எதிர் திசையில் தெரிந்த நிழலொன்று பார்வையால் குத்தி துளைக்க கண்களை அந்த பக்கம் திருப்பினாள்.. எதிர்வீட்டு கனகா..!
சிநேக பாவனையுடன் இவள் புன்னகைக்க கனகா முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..
"என்ன ஆச்சு இந்த கனகாக்காவுக்கு..! கடனா கைமாத்தா கூட காசெதுவும் வாங்கலையே.." ஒன்றும் புரியாமல் சில கணங்கள் அங்கேயே நின்றிருந்தவள் வேலைக்கு நேரமாவதை உணர்ந்து பையை எடுத்துக்கொண்டு வண்டியில் புறப்பட்டாள்..
கேட்டை தாண்டும் வரை அவள் பின்னால் ஓடினான் மோத்தி..
பைக்கில் செல்லுகையில்
"ஏமைந்தி சந்திராம்மா.. நீங்க ரொம்ப சோகமா இருக்கிற மாதிரி தெரியுது.. அம்மா அடிச்சிட்டாங்களா..?" மெல்ல பேச்சு கொடுத்தான் மகரிஷி..
"அடிக்கல ஆனா அம்மாவுக்கும் எனக்கும் சண்டை..!"
"எந்துக்கு?"
"புது வீட்டுக்கு குடி போகணுமாம்.. ரிஷி எனக்கு அந்த வீடு பிடிக்கவே இல்லை.. நான் இங்கேயே இருக்கலாம்ன்னு சொன்னா அம்மா கேட்க மாட்டேங்கிறாங்க.. எனக்காக நீ அம்மா கிட்ட பேசுறியா ப்ளீஸ்.. "
"அதெல்லாம் பேச முடியாது..!"
சந்திரமதியின் முகம் வாடியது..
"ஏன்னா நான் தான் ஏற்கனவே பேசிட்டேனே.. நீங்க வீட்டை காலி பண்ணவே வேண்டாம்.. இங்கேயே இருக்கலாம்..! இப்ப சந்திராம்மா ஹாப்பியா..?" அவன் முகத்தை மட்டும் பின்னால் திருப்பி கேட்க.. மெல்ல விரிந்த உற்சாகத்துடன்..
"நெஜமாத்தான் சொல்றியா ரிஷி? புது வீட்டுக்கு போக வேண்டாமா?" என்றாள் சந்திரமதி கண்களை விரித்து..
"நான் சொல்றது நிஜம்.. சந்தேகமா இருந்தா ஈவினிங் வீட்டுக்கு போய் உன் அம்மாகிட்ட கேட்டு பாரு.."
"ஓஓஓஓஓ.. தேங்க்யூ ரிஷி.." இரு கைகளை மேலே உயர்த்தி உற்சாக கூச்சலிட்டவள் அவன் தோள்களை அழுத்தி முதுகில் தன் தலையால் முட்டினாள்..
"ஓய் வண்டிய ஆட்டாதே..! உன் தேங்க்ஸெல்லாம் எனக்கு வேண்டாம்.. உன் அம்மாவ டெய்லி மார்னிங் பிரேக் பாஸ்ட்க்கு இட்லி பண்ணி தர சொல்லு அது போதும்.."
"அய்யே இவ்வளவுதானா..! நீ எங்களுக்கு செஞ்ச உதவிக்கு உனக்கு விருந்தே சமைச்சு போடலாம்.. மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல மத்தியானம் டிபன் நைட் லன்ச் எல்லாத்தையும் பண்ணித் தர சொல்றேன்.." அவளுக்கே உரிய குழந்தை தனத்துடன் தலையை செய்து உற்சாகத்தோடு பேசினாள் சந்திரமதி..
"சரி அம்மா கூட வேற ஏதாவது சண்டையா..?"
உற்சாகம் மறைந்து சந்திரமதியின் முகம் மாறியது..
"என்னமா ஆச்சு.."
"எனக்கு அம்மாவ பிடிக்கவே இல்ல ரிஷி.."
"ஏன் சந்திராம்மா..?"
"எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க.. எனக்கு எதை பிடிக்காதோ அதைத்தான் செய்றாங்க..!"
"கரெக்ட்..! இப்படி இருக்கிற அம்மாவை யாருக்கு தான் பிடிக்கும் இல்ல..!"
"இவங்களால எனக்கு எங்க போனாலும் அவமானமா இருக்குது.."
"உன் நிலைமை எனக்கு புரியுது சந்திராம்மா.."
"இந்த உலகத்துல என்னை புரிஞ்சுக்க அட்லீஸ்ட் நீயாவது இருக்கியே ரிஷி!"
"எஸ்.. ஐ கேன் பீல் யுவர் பெயின்" என்றான் உதடு பிதுக்கி..
அதற்குள் பள்ளி வந்துவிட சந்திரமதி அவன் பைக்கிலிருந்து இறங்கினாள்..
"என்னோட அம்மா உன் அம்மா மாதிரி இல்ல சந்திராம்மா.. அவங்க ரொம்ப நல்லவங்க.. என் மேல உயிரையே வச்சிருந்தாங்க.. ஆனா சின்ன வயசுல நான் படிக்கலைன்னா அடிப்பாங்க திட்டுவாங்க..! எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்காங்க அதெல்லாம் அப்ப புரியல.. எல்லாம் எனக்கு பிடிக்காததா செஞ்சதைப்போல தோணுச்சு.. வெறுப்பா இருக்கும்.. அந்த வயசுல என்னால எதையும் புரிஞ்சுக்க முடியல.. ஆனா இப்ப யோசிக்கும்போது எல்லாமே நல்லதுக்காகன்னு புரியுது.. ஒருவேளை அவங்க அவ்வளவு கண்டிப்பு காட்டாம போயிருந்தா நான் இப்படி படிச்சு இந்த நிலமைக்கு வந்திருப்பேனா தெரியல..! இப்போ அம்மா தந்த படிப்பும் பண்பும் என் கூட இருக்குது.. ஆனா அம்மா என் கூட இல்லை.. அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. யாரும் இருக்கிற வரைக்கும் அவங்க அருமை தெரியாது..! தாயின் நினைவில் கலங்க துடித்த கண்களை கட்டுபடுத்தியபடி பேசியவன் சந்திரமதி தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் சட்டென சிரித்தான்..
"அய்யோ சந்திராம்மா என்னோட அனுபவத்தை தான் சொன்னேன்.. அப்புறம் உன் கிளாஸ்ல அம்மா இல்லாதவங்க யாராவது இருக்காங்களா..?"
"ம்ம்.. ப்ரீத்தி..?"
"போய் கேட்டுப் பாரு.. அம்மா அடிக்கறதும் கண்டிக்கறதும் எவ்வளவு சந்தோஷம்ன்னு அவ உனக்கு சொல்லுவா.."
சந்திரமதி அமைதியாக நின்றிருக்க பைக்கை கிளப்பி அங்கிருந்து புறப்பட்டிருந்தான் மகரிஷி..
தொடரும்..
Last edited: