- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
காரிலிருந்து இறங்கியதும் அவன் கையடுக்கில் தன் கையை நுழைத்துக் கொண்டாள் தேம்பாவணி..
"ஏய் லூசு என்ன பண்ற..! பப்ளிக்ல இப்படி ஹைப்பரா பிஹேவ் பண்ண கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்..!" அவன் பற்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளோடு நடந்தான்..
"ஏன் அவங்க முன்னாடி நானும் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு காட்டிக்க வேண்டாமா..! நீங்க எல்லாரும் பிரண்ட்ஸா நின்னு சிரிச்சு பேசும் போது நான் மட்டும் லோன்லியா பீல் பண்ண கூடாதுல்ல அதனால நான் இப்படித்தான் உங்களோட க்ளோசா இருப்பேன்..! இங்கிருந்து போற வரைக்கும் என்னை சகிச்சுக்கோங்க ப்ளீஸ்.." என்றவளை முறைக்க மட்டுந்தான் முடிந்தது அவனால்..
"அட அட்டகாசமா இருக்காரு.. யாரு அவர்..?"
"என்னோட ஃப்ரெண்ட் சூரியதேவ்.."
"வாவ்..! உங்களை விட செம ஸ்மார்ட்.. செம ஹான்சம்!"
"அப்படியா..?" என்றவனுக்கு உள்ளூர கொஞ்சம் புகைச்சல்தான்..
"ஆனா அவர விட நீங்க தான் பார்க்க யங்கா தெரியறீங்க.. அவரோட தம்பி மாதிரி..!"
"ரியலி..?" வருணின் கண்கள் விரிந்தன..
"ஆமா பின்ன இல்லையா..! நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நின்னா உங்க ரெண்டு பேரையும் பிரெண்ட்ஸ்னு சொல்ல மாட்டாங்க அண்ணன் தம்பின்னு தான் சொல்லுவாங்க..!" காலரை உயர்த்தி விட்டுக்கொண்டு பெருமிதத்துடன் குரலை செருமியவனை ஏற இறங்க பார்த்தாள் தேம்பாவணி..
"என்ன அப்படி பாக்கற..?"
வேகமாக ஒன்றுமில்லை என தலையசைத்தவள்..
"இன்னைக்கு தான் இவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்களா..?" என்றாள் பேச்சை மாற்றி..
"இல்ல நேத்து காலையில கோவில்ல கல்யாணம் நடந்தது. இன்னைக்கு சட்டப்படி ரெஜிஸ்டர் பண்றாங்க.."
"ஓஹோ அப்ப நீங்க கல்யாணத்துக்கு போகலையா..!"
"என் ஃபிரண்டு கல்யாணத்துக்கு நான் போகாம எப்படி..? நேத்து காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி போயிட்டேன்.. நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை..!"
"ஆமா சாரதா ஆன்ட்டி நீங்க சீக்கிரமா கிளம்பி போயிட்டாதா சொன்னாங்க அது சரி.. என்னை ஏன் கூட்டிட்டு போகல..!" அடுத்த கேள்வி
குழந்தை போல நச்சு நச்சுன்னு.. கொஞ்சம் எரிச்சலாக சிடுசிடுத்து கொண்டான் வரூண்..
"இதென்னடா வம்பா போச்சு.. எங்க போனாலும் ஹனுமார் வால் மாதிரி உன்னை தூக்கிகிட்டே திரியணுமா..! எனக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் ஒன்னு இருக்கு.. அதுல யாரும் இன்வால்வ் ஆகறது எனக்கு பிடிக்காது..!" அவன் பேச்சு த்வனியில் மாறுதல் தெரிய..
"சரி ஓகே நான் எதுவும் கேட்கல..! அவங்க ரெண்டு பேர்ல யாரு கல்யாணப் பொண்ணு.. அதையாவது கேட்டு தெரிஞ்சுக்கலாமா..!"
இறுகி போயிருந்தவன் அவள் முகமும் குரலை மாறியிருந்ததை கண்டு மீண்டும் இயல்புக்கு வந்தான்..
"வலது பக்கம் நிக்கறவங்கதான் பொண்ணு..!"
"ரொம்ப அழகா இருக்காங்க..! லவ் மேரேஜா..?"
"இல்ல லஸ்ட்டு மேரேஜ்..!"
ஆங்..! என அவள் விழித்திருக்க.. "இப்படியே கேள்வி கேட்டுட்டே இங்க நிக்க போறியா..! அங்க எல்லாரும் நம்மளத்தான் பாக்கறாங்க.." என்றபடியே அவளோடு வேகமாக நடந்தான் வருண்..!
இருவரும் ஜோடியாக நடந்து வந்ததில் சூர்யா வருண் பக்கம் திரும்பியவன் அடுத்து கண்களை நகர்த்தி தேம்பாவணியை கீழ்க்கண்ணால் கூர்மையாக பார்க்க..! அவன் இறுகிய முகத்தோற்றத்தில் மருண்டவளாக வருணின் கரத்தை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டாள் தேம்பா..!
இருவரும் நெருக்கமாக நடந்து வந்ததில் பெண்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் .!
வந்ததும் வராததுமாக பேச கூட நேரமின்றி.. உள்ளே சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு ஃபார்மாலிட்டியை முடித்தனர் அனைவருமாக சேர்ந்து..
சட்டப்படி கமலி சூர்ய தேவ், மனைவியாகியிருந்தாள்..
நண்பனாகவே இருந்தாலும் நாகரிகம் கருதி சூர்ய தேவ் மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிட மாட்டான் என்றாலும்..! எதையும் பகுத்துணர்ந்து தனது புத்திசாலித்தனத்தால் உண்மையை கண்டுகொள்ளும் நண்பனின் கூர்மையில் வருண் பிரசாத்துக்குள் கொஞ்சம் படபடப்பும் டென்ஷனும்..
தேம்பாவணியில் ஆரம்பித்து அவன் வீட்டிலிருக்கும் போலி பொண்டாட்டி வரை சென்று நிற்கும் அவன் ஆராய்ச்சி என்பதை வருணுக்கு எந்த சந்தேகமும் இல்லை..
"லேசு பட்ட ஆளில்லை இவன்..! ஜாக்கிரதையா இருக்கணும்.." மனதுக்குள் சொல்லியபடி புருவங்களை ஏற்றி இறக்கினான்..
தேம்பாவணி கமலி மாயாவுடன் கலகலத்துக் கொண்டிருக்க இங்கே தனியாக..
"என்னடா யார் இந்த பொண்ணு..! ரொம்ப நெருக்கமா கைகோர்த்துக்கிட்டு வருது.. சரியில்லையே நீ..! சைக்கியாட்ரிக் டாக்டர் உனக்கே ட்ரீட்மென்ட் தேவைப்படும் போலிருக்கே..!" சட்டையை முழங்கைக்கு மேலே ஏற்றிவிட்டு கையை உதறினான்..
"என்னோட பேஷண்ட் டா..!" உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது அவனுக்குள்ளே..
"பேஷன்ட் கூட இவ்ளோ நெருக்கமா பழகுவாங்களா என்ன..! கல்யாணம் ஆனவன் எவனாச்சும் இப்படி செய்வானா..?"
ரைட்டு சரியா பாயிண்டுக்கு வந்து நின்னுட்டான்..! அடுத்து ஏதாவது பேசி உன் வாயிலிருந்து உண்மையை வாங்கி திலோத்தமாவை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி உஷாராகிடு வருண்..!
"என்னடா பேசற..? .நீ கூட தான் என் பேஷன்ட்.. உன்கூட நான் நெருக்கமா பழகலையா என்ன..?" வருண் அசடு வழிய..
"பேச்சு நல்லாத்தான் இருக்கு ஆனா லாஜிக் தப்பா இருக்கே..!" புருவங்களை உயர்த்தி முன் கை கட்டியபடி பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமென்ற ரீதியில் கால்களை ஊன்றி நின்றான் சூர்யா..
இழுத்து மூச்சுவிட்டு.. "அவளுக்கு வீட்ல நிறைய பிரச்சனை டா..! மனசு ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கா..! அதான் தனியா கூட்டிட்டு வந்து எங்க வீட்ல தங்க வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்கேன்..!" என்றான் உண்மையாகவே தேம்பாவணியின் மீதான இரக்க உணர்வோடு..
"அவ்வளவுதானா..!"
ஒரு சில நொடிகள் மௌனத்திற்கு பின்.. "அவ்வளவுதான் வேற எதுவும் இல்லை" என்றான் முகம் இறுகி..!
"அவ்வளவுதான் வேறென்ன..!" இப்படி தோளை குலுக்கி சொல்லணும்.. வருண் ஸ்டைல் இதுதானே.. இதென்ன பாகற்காய் முழுங்கின மாதிரி பதில் சொல்ற..!" கீழுதட்டை கடித்தான் சூர்யா..
"ரொம்ப முக்கியம்.. எத முழுங்குனா என்னடா.. அதான் உனக்கு தேவையான பதிலை சொல்லிட்டேனே..!" எரிச்சலாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டவனின் முகத்தை குறுகுறுவென பார்த்தான் சூர்யதேவ்..
"அப்படி பாக்காதடா.. என்னை லவ் பண்றியா நீ..!"
"இல்ல மச்சி.. உன் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் ஒரு குழப்பம் என்னால கண்டுபிடிக்கவே முடியல..!"
"நான்தான் சைக்கியாட்ரிக் டாக்டர்.. நீ இல்ல..! என் வேலையை நீ பாக்காத.. நீ.. நீ போய் உன் பொண்டாட்டிய பாரு..!" என்றதும் இருவருமாக பெண்கள் பக்கம் வந்தனர்..
வருண் வந்ததும் அவனோடு ஒட்டிக்கொண்டாள் தேம்பாவணி..
பெண்களும் சூர்யதேவுக்கு என்ன சந்தேகம் எழுந்ததோ அதையே திருப்பி கேட்க..! பேஷன்ட்.. என்று பதில் சொல்லி சமாளித்தான் வருண்..
அதற்குள் தேம்பாவிற்கு ஃபோன்..
"ஹலோ சத்யா..! இதோ வந்துடுவேன்.." என்று அவள் சிரித்து பேசியதில் டென்ஷனின் உச்சிக்கே சென்றிருந்தான் வருண்..
"என்ன வருண்.. எப்பவுமே கூலா இருப்பீங்க இன்னைக்கு என்னமோ மாதிரி தெரியறீங்க.. கல்யாணம் எங்களுக்குத்தானே.. நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க..!" கமலி வெளிப்படையாக கேட்டு விட மீண்டும் சூர்ய தேவ்வின் கூர்ந்த பார்வை வருண் மேல் பதிந்தது..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே..!" பேருக்காக புன்னகைத்தவனின் பார்வை தேம்பாவணியின் மேல்..
இரண்டு பெண்களும் அவன் பார்வை போகும் திசை.. தேம்பாவணியிடம் வருண் நெருக்கமாக அவன் பழகும் விதம் இரண்டையும் கண்டு குழம்பித்தான் போயினர்..
"கல்யாணமாகி பொண்டாட்டி இருக்கறதா சொல்றவர் இந்த பொண்ணு கிட்ட ஏன் இப்படி நெருங்கி பழகணும்..! அதுவும் பார்வையெல்லாம் வித்தியாசமா தெரியற மாதிரி உனக்கு தோணல.." மாயா கமலியிடம் கிசுகிசுக்க..!
"சும்மா இருடி.. வருண் அவரோட ஃப்ரெண்ட்.. தேவையில்லாம ஏதாவது பேசி வாங்கி கட்டிக்காத.." மாயாவை அடக்கினாள் கமலி..
"பேஷன்ட்னு சொல்றீங்க என்ன பிரச்சனை அந்த பொண்ணுக்கு..!" கமலியின் கேள்விக்கு..
ஹாலுசினேஷன்.. ட்ரீட்மென்ட் மூலம் சரிபடுத்தி அவள் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி வைத்தான்..!
போன் பேசி முடித்துவிட்டு தேம்பாவணி அங்கு வந்துவிட.. நேரமாச்சு கிளம்பறோம்..! வருண் விட்டால் போதும் சாமி என அவசரமாக விடைபெற்றுக்கொள்ள நினைத்தான்..
"ஏன் இப்படி கால்ல சுடுதண்ணி ஊத்தின மாதிரி பறக்கறீங்க.. கொஞ்ச நேரம் இருங்களேன்.. எல்லாருமா சேர்ந்து சாப்பிட்டு போகலாம்..!" என்றாள் கமலி..
"இல்ல வீட்டிலேயே டிபன் முடிச்சாச்சு..! நேரமாச்சு போகணும்.." என்னும்போது திலோத்தமாவிடமிருந்து அழைப்பு..
"அம்மா உங்களுக்காக காத்திருக்காங்க..! எங்க இருக்கீங்க..? சீக்கிரமா வாங்க.." அவள் குழைந்த பேச்சில்..
"இப்பதானே வீட்டிலிருந்து வந்தோம் திரும்ப எதுக்காக கூப்பிடுறா இவ..! உண்மையிலேயே அம்மா தான் கூப்பிட சொன்னாங்களா?" அவனுக்குள் சந்தேகம் எழுந்த போதிலும் அவர்களின் முன்பு எதையும் வெளி காட்டாதவனாய் "இதோ வந்துட்டேன்.." என அலைபேசியை அணைத்து பாக்கெட்டுக்குள் வைத்தவன்.. "பொண்டாட்டி கால் பண்றா..! கிளம்பியே ஆகணும்" என்று சிரித்துக் கொள்ள..
பொண்டாட்டி என்ற வார்த்தையில் தேம்பாவணியின் முகம் மாறியதை கண்டுகொண்டான் சூர்யதேவ்..
"வா போகலாம்" தேம்பாவணியை இழுத்துக் கொண்டு நடந்தான் அவன்..
தன்னை தெளிவுப் படுத்தி தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக உதவிய நண்பன் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை சூர்யாவால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!
ஆனால் அவனாக வந்து தன் பிரச்சனையை சொல்ல வேண்டும்..! என்றாவது ஒருநாள் நண்பன் தன்னிடம் வருவான் என்ற நம்பிக்கையோடு அதுவரை அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே..
கமலி மாயா இருவரிடமும்.. "எதுவானாலும் தீர விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்.. அவனுக்கு கல்யாணமாகி மனைவி இருக்காங்க..! இப்ப அழைச்சிட்டு வந்தது அவனுடைய பேஷன்ட்.. தேவையில்லாம பேசக்கூடாது..!" என்று கண்டித்திருந்தான்..
போதும்.. சூர்ய தேவ் கமலி பத்தி போதும் போதுங்கற அளவு மருத்துவ முத்தத்துல படிச்சாச்சு.. இப்போ வருண் கதைக்கு வருவோம்..!
கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் வந்திருந்தான் வருண்..
"அந்த ராஸ்கல் சத்யா கால் செஞ்சானா..? சிரிச்சு சிரிச்சு அவங்க கிட்ட பேசிட்டு இருக்க..! எவ்ளோ கஷ்டப்பட்டு அவன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கேன்..! மறுபடி அந்த சைக்கோ கூட போய் ஒட்டிக்கலாம்னு பாக்கறியா.. போயேன் எனக்கென்ன கவலை..! அர்த்தமில்லாத அந்த பந்தம் தான் உனக்கு மதிப்பு தருதுன்னா சந்தோஷத்தை தருதுன்னா தாராளமா அவன் கூட போய் சேர்ந்து வாழ்ந்துக்க.. நான் உன்னை தடுக்கல..!"
என்ன ஏதென்று கேட்காமல் மனநல மருத்துவன் பட படவென்று பொரிந்து தள்ளினான்.
"பேசி முடிச்சிட்டீங்களா..!"
காரின் மீது சாய்ந்து நின்று கைகட்டியபடி அவளை முறைத்தான் வருண்..
"சத்யான்னா அந்த சத்யா இல்லை.. இவன் என்னோட காலேஜ் மேட் சத்யவாணி..! என்னோட நோட்ஸ் புக்ஸ் எல்லாம் சத்யா வீட்ல இருக்கு.. படிக்கணும் ப்ராஜெக்ட் பண்ணனும்.. பிராக்டிகல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும்.. அதுக்காக அவ கைல கால்ல விழுந்து ரெக்கார்ட் நோட் வாங்கிட்டு வந்தேன்.. போர்த் அவர் பிராக்டிகல் கிளாஸ்.. ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணனும்.. அதனாலதான் போன் பண்ணி எங்க இருக்கேன்னு கேட்டா..!"
அவள் சொல்ல சொல்ல வருணின் கண்கள் மன்னிப்பை யாசிப்பதை போல் கனிந்தன..
"அவ்வளவுதானா விஷயம்..! நான் கூட உன் புருஷன்கிட்ட தான் உருகி உருகி பேசிகிட்டு இருந்தியோன்னு நினைச்சேன்.. என்ன இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சொல்ற தமிழ் பெண்மணி இல்லையா நீ..! இத்தனை நாள் அந்த சைக்கோவை சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மாதரசியாச்சே..!"
"கல்லானா ரோட்டுக்கு புல்லானா மாட்டுக்குன்னு போயிட்டே இருப்பேனாக்கும்.." தேம்பாவணி தோள்களை ஏற்றி இறக்க.. "வாவ் இதுவல்லவோ தெளிவு.." என கை தட்டினான் வருண்..
"இன்னும் கொஞ்ச நேரம் அவங்களோடு இருந்திருக்கலாம்.." ஆதங்கத்தோட தேம்பாவணி உதடு சுழிக்க..!
"ஆணியே புடுங்க வேண்டாம் நீ வண்டியில ஏறு.." என அவளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து பறந்தான் அவன்..
தொடரும்..
"ஏய் லூசு என்ன பண்ற..! பப்ளிக்ல இப்படி ஹைப்பரா பிஹேவ் பண்ண கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்..!" அவன் பற்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளோடு நடந்தான்..
"ஏன் அவங்க முன்னாடி நானும் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு காட்டிக்க வேண்டாமா..! நீங்க எல்லாரும் பிரண்ட்ஸா நின்னு சிரிச்சு பேசும் போது நான் மட்டும் லோன்லியா பீல் பண்ண கூடாதுல்ல அதனால நான் இப்படித்தான் உங்களோட க்ளோசா இருப்பேன்..! இங்கிருந்து போற வரைக்கும் என்னை சகிச்சுக்கோங்க ப்ளீஸ்.." என்றவளை முறைக்க மட்டுந்தான் முடிந்தது அவனால்..
"அட அட்டகாசமா இருக்காரு.. யாரு அவர்..?"
"என்னோட ஃப்ரெண்ட் சூரியதேவ்.."
"வாவ்..! உங்களை விட செம ஸ்மார்ட்.. செம ஹான்சம்!"
"அப்படியா..?" என்றவனுக்கு உள்ளூர கொஞ்சம் புகைச்சல்தான்..
"ஆனா அவர விட நீங்க தான் பார்க்க யங்கா தெரியறீங்க.. அவரோட தம்பி மாதிரி..!"
"ரியலி..?" வருணின் கண்கள் விரிந்தன..
"ஆமா பின்ன இல்லையா..! நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நின்னா உங்க ரெண்டு பேரையும் பிரெண்ட்ஸ்னு சொல்ல மாட்டாங்க அண்ணன் தம்பின்னு தான் சொல்லுவாங்க..!" காலரை உயர்த்தி விட்டுக்கொண்டு பெருமிதத்துடன் குரலை செருமியவனை ஏற இறங்க பார்த்தாள் தேம்பாவணி..
"என்ன அப்படி பாக்கற..?"
வேகமாக ஒன்றுமில்லை என தலையசைத்தவள்..
"இன்னைக்கு தான் இவங்க கல்யாணம் பண்ணிக்க போறாங்களா..?" என்றாள் பேச்சை மாற்றி..
"இல்ல நேத்து காலையில கோவில்ல கல்யாணம் நடந்தது. இன்னைக்கு சட்டப்படி ரெஜிஸ்டர் பண்றாங்க.."
"ஓஹோ அப்ப நீங்க கல்யாணத்துக்கு போகலையா..!"
"என் ஃபிரண்டு கல்யாணத்துக்கு நான் போகாம எப்படி..? நேத்து காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி போயிட்டேன்.. நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை..!"
"ஆமா சாரதா ஆன்ட்டி நீங்க சீக்கிரமா கிளம்பி போயிட்டாதா சொன்னாங்க அது சரி.. என்னை ஏன் கூட்டிட்டு போகல..!" அடுத்த கேள்வி
குழந்தை போல நச்சு நச்சுன்னு.. கொஞ்சம் எரிச்சலாக சிடுசிடுத்து கொண்டான் வரூண்..
"இதென்னடா வம்பா போச்சு.. எங்க போனாலும் ஹனுமார் வால் மாதிரி உன்னை தூக்கிகிட்டே திரியணுமா..! எனக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் ஒன்னு இருக்கு.. அதுல யாரும் இன்வால்வ் ஆகறது எனக்கு பிடிக்காது..!" அவன் பேச்சு த்வனியில் மாறுதல் தெரிய..
"சரி ஓகே நான் எதுவும் கேட்கல..! அவங்க ரெண்டு பேர்ல யாரு கல்யாணப் பொண்ணு.. அதையாவது கேட்டு தெரிஞ்சுக்கலாமா..!"
இறுகி போயிருந்தவன் அவள் முகமும் குரலை மாறியிருந்ததை கண்டு மீண்டும் இயல்புக்கு வந்தான்..
"வலது பக்கம் நிக்கறவங்கதான் பொண்ணு..!"
"ரொம்ப அழகா இருக்காங்க..! லவ் மேரேஜா..?"
"இல்ல லஸ்ட்டு மேரேஜ்..!"
ஆங்..! என அவள் விழித்திருக்க.. "இப்படியே கேள்வி கேட்டுட்டே இங்க நிக்க போறியா..! அங்க எல்லாரும் நம்மளத்தான் பாக்கறாங்க.." என்றபடியே அவளோடு வேகமாக நடந்தான் வருண்..!
இருவரும் ஜோடியாக நடந்து வந்ததில் சூர்யா வருண் பக்கம் திரும்பியவன் அடுத்து கண்களை நகர்த்தி தேம்பாவணியை கீழ்க்கண்ணால் கூர்மையாக பார்க்க..! அவன் இறுகிய முகத்தோற்றத்தில் மருண்டவளாக வருணின் கரத்தை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டாள் தேம்பா..!
இருவரும் நெருக்கமாக நடந்து வந்ததில் பெண்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் .!
வந்ததும் வராததுமாக பேச கூட நேரமின்றி.. உள்ளே சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு ஃபார்மாலிட்டியை முடித்தனர் அனைவருமாக சேர்ந்து..
சட்டப்படி கமலி சூர்ய தேவ், மனைவியாகியிருந்தாள்..
நண்பனாகவே இருந்தாலும் நாகரிகம் கருதி சூர்ய தேவ் மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிட மாட்டான் என்றாலும்..! எதையும் பகுத்துணர்ந்து தனது புத்திசாலித்தனத்தால் உண்மையை கண்டுகொள்ளும் நண்பனின் கூர்மையில் வருண் பிரசாத்துக்குள் கொஞ்சம் படபடப்பும் டென்ஷனும்..
தேம்பாவணியில் ஆரம்பித்து அவன் வீட்டிலிருக்கும் போலி பொண்டாட்டி வரை சென்று நிற்கும் அவன் ஆராய்ச்சி என்பதை வருணுக்கு எந்த சந்தேகமும் இல்லை..
"லேசு பட்ட ஆளில்லை இவன்..! ஜாக்கிரதையா இருக்கணும்.." மனதுக்குள் சொல்லியபடி புருவங்களை ஏற்றி இறக்கினான்..
தேம்பாவணி கமலி மாயாவுடன் கலகலத்துக் கொண்டிருக்க இங்கே தனியாக..
"என்னடா யார் இந்த பொண்ணு..! ரொம்ப நெருக்கமா கைகோர்த்துக்கிட்டு வருது.. சரியில்லையே நீ..! சைக்கியாட்ரிக் டாக்டர் உனக்கே ட்ரீட்மென்ட் தேவைப்படும் போலிருக்கே..!" சட்டையை முழங்கைக்கு மேலே ஏற்றிவிட்டு கையை உதறினான்..
"என்னோட பேஷண்ட் டா..!" உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது அவனுக்குள்ளே..
"பேஷன்ட் கூட இவ்ளோ நெருக்கமா பழகுவாங்களா என்ன..! கல்யாணம் ஆனவன் எவனாச்சும் இப்படி செய்வானா..?"
ரைட்டு சரியா பாயிண்டுக்கு வந்து நின்னுட்டான்..! அடுத்து ஏதாவது பேசி உன் வாயிலிருந்து உண்மையை வாங்கி திலோத்தமாவை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி உஷாராகிடு வருண்..!
"என்னடா பேசற..? .நீ கூட தான் என் பேஷன்ட்.. உன்கூட நான் நெருக்கமா பழகலையா என்ன..?" வருண் அசடு வழிய..
"பேச்சு நல்லாத்தான் இருக்கு ஆனா லாஜிக் தப்பா இருக்கே..!" புருவங்களை உயர்த்தி முன் கை கட்டியபடி பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமென்ற ரீதியில் கால்களை ஊன்றி நின்றான் சூர்யா..
இழுத்து மூச்சுவிட்டு.. "அவளுக்கு வீட்ல நிறைய பிரச்சனை டா..! மனசு ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கா..! அதான் தனியா கூட்டிட்டு வந்து எங்க வீட்ல தங்க வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்கேன்..!" என்றான் உண்மையாகவே தேம்பாவணியின் மீதான இரக்க உணர்வோடு..
"அவ்வளவுதானா..!"
ஒரு சில நொடிகள் மௌனத்திற்கு பின்.. "அவ்வளவுதான் வேற எதுவும் இல்லை" என்றான் முகம் இறுகி..!
"அவ்வளவுதான் வேறென்ன..!" இப்படி தோளை குலுக்கி சொல்லணும்.. வருண் ஸ்டைல் இதுதானே.. இதென்ன பாகற்காய் முழுங்கின மாதிரி பதில் சொல்ற..!" கீழுதட்டை கடித்தான் சூர்யா..
"ரொம்ப முக்கியம்.. எத முழுங்குனா என்னடா.. அதான் உனக்கு தேவையான பதிலை சொல்லிட்டேனே..!" எரிச்சலாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டவனின் முகத்தை குறுகுறுவென பார்த்தான் சூர்யதேவ்..
"அப்படி பாக்காதடா.. என்னை லவ் பண்றியா நீ..!"
"இல்ல மச்சி.. உன் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் ஒரு குழப்பம் என்னால கண்டுபிடிக்கவே முடியல..!"
"நான்தான் சைக்கியாட்ரிக் டாக்டர்.. நீ இல்ல..! என் வேலையை நீ பாக்காத.. நீ.. நீ போய் உன் பொண்டாட்டிய பாரு..!" என்றதும் இருவருமாக பெண்கள் பக்கம் வந்தனர்..
வருண் வந்ததும் அவனோடு ஒட்டிக்கொண்டாள் தேம்பாவணி..
பெண்களும் சூர்யதேவுக்கு என்ன சந்தேகம் எழுந்ததோ அதையே திருப்பி கேட்க..! பேஷன்ட்.. என்று பதில் சொல்லி சமாளித்தான் வருண்..
அதற்குள் தேம்பாவிற்கு ஃபோன்..
"ஹலோ சத்யா..! இதோ வந்துடுவேன்.." என்று அவள் சிரித்து பேசியதில் டென்ஷனின் உச்சிக்கே சென்றிருந்தான் வருண்..
"என்ன வருண்.. எப்பவுமே கூலா இருப்பீங்க இன்னைக்கு என்னமோ மாதிரி தெரியறீங்க.. கல்யாணம் எங்களுக்குத்தானே.. நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க..!" கமலி வெளிப்படையாக கேட்டு விட மீண்டும் சூர்ய தேவ்வின் கூர்ந்த பார்வை வருண் மேல் பதிந்தது..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே..!" பேருக்காக புன்னகைத்தவனின் பார்வை தேம்பாவணியின் மேல்..
இரண்டு பெண்களும் அவன் பார்வை போகும் திசை.. தேம்பாவணியிடம் வருண் நெருக்கமாக அவன் பழகும் விதம் இரண்டையும் கண்டு குழம்பித்தான் போயினர்..
"கல்யாணமாகி பொண்டாட்டி இருக்கறதா சொல்றவர் இந்த பொண்ணு கிட்ட ஏன் இப்படி நெருங்கி பழகணும்..! அதுவும் பார்வையெல்லாம் வித்தியாசமா தெரியற மாதிரி உனக்கு தோணல.." மாயா கமலியிடம் கிசுகிசுக்க..!
"சும்மா இருடி.. வருண் அவரோட ஃப்ரெண்ட்.. தேவையில்லாம ஏதாவது பேசி வாங்கி கட்டிக்காத.." மாயாவை அடக்கினாள் கமலி..
"பேஷன்ட்னு சொல்றீங்க என்ன பிரச்சனை அந்த பொண்ணுக்கு..!" கமலியின் கேள்விக்கு..
ஹாலுசினேஷன்.. ட்ரீட்மென்ட் மூலம் சரிபடுத்தி அவள் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி வைத்தான்..!
போன் பேசி முடித்துவிட்டு தேம்பாவணி அங்கு வந்துவிட.. நேரமாச்சு கிளம்பறோம்..! வருண் விட்டால் போதும் சாமி என அவசரமாக விடைபெற்றுக்கொள்ள நினைத்தான்..
"ஏன் இப்படி கால்ல சுடுதண்ணி ஊத்தின மாதிரி பறக்கறீங்க.. கொஞ்ச நேரம் இருங்களேன்.. எல்லாருமா சேர்ந்து சாப்பிட்டு போகலாம்..!" என்றாள் கமலி..
"இல்ல வீட்டிலேயே டிபன் முடிச்சாச்சு..! நேரமாச்சு போகணும்.." என்னும்போது திலோத்தமாவிடமிருந்து அழைப்பு..
"அம்மா உங்களுக்காக காத்திருக்காங்க..! எங்க இருக்கீங்க..? சீக்கிரமா வாங்க.." அவள் குழைந்த பேச்சில்..
"இப்பதானே வீட்டிலிருந்து வந்தோம் திரும்ப எதுக்காக கூப்பிடுறா இவ..! உண்மையிலேயே அம்மா தான் கூப்பிட சொன்னாங்களா?" அவனுக்குள் சந்தேகம் எழுந்த போதிலும் அவர்களின் முன்பு எதையும் வெளி காட்டாதவனாய் "இதோ வந்துட்டேன்.." என அலைபேசியை அணைத்து பாக்கெட்டுக்குள் வைத்தவன்.. "பொண்டாட்டி கால் பண்றா..! கிளம்பியே ஆகணும்" என்று சிரித்துக் கொள்ள..
பொண்டாட்டி என்ற வார்த்தையில் தேம்பாவணியின் முகம் மாறியதை கண்டுகொண்டான் சூர்யதேவ்..
"வா போகலாம்" தேம்பாவணியை இழுத்துக் கொண்டு நடந்தான் அவன்..
தன்னை தெளிவுப் படுத்தி தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக உதவிய நண்பன் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை சூர்யாவால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!
ஆனால் அவனாக வந்து தன் பிரச்சனையை சொல்ல வேண்டும்..! என்றாவது ஒருநாள் நண்பன் தன்னிடம் வருவான் என்ற நம்பிக்கையோடு அதுவரை அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே..
கமலி மாயா இருவரிடமும்.. "எதுவானாலும் தீர விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்.. அவனுக்கு கல்யாணமாகி மனைவி இருக்காங்க..! இப்ப அழைச்சிட்டு வந்தது அவனுடைய பேஷன்ட்.. தேவையில்லாம பேசக்கூடாது..!" என்று கண்டித்திருந்தான்..
போதும்.. சூர்ய தேவ் கமலி பத்தி போதும் போதுங்கற அளவு மருத்துவ முத்தத்துல படிச்சாச்சு.. இப்போ வருண் கதைக்கு வருவோம்..!
கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் வந்திருந்தான் வருண்..
"அந்த ராஸ்கல் சத்யா கால் செஞ்சானா..? சிரிச்சு சிரிச்சு அவங்க கிட்ட பேசிட்டு இருக்க..! எவ்ளோ கஷ்டப்பட்டு அவன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்கேன்..! மறுபடி அந்த சைக்கோ கூட போய் ஒட்டிக்கலாம்னு பாக்கறியா.. போயேன் எனக்கென்ன கவலை..! அர்த்தமில்லாத அந்த பந்தம் தான் உனக்கு மதிப்பு தருதுன்னா சந்தோஷத்தை தருதுன்னா தாராளமா அவன் கூட போய் சேர்ந்து வாழ்ந்துக்க.. நான் உன்னை தடுக்கல..!"
என்ன ஏதென்று கேட்காமல் மனநல மருத்துவன் பட படவென்று பொரிந்து தள்ளினான்.
"பேசி முடிச்சிட்டீங்களா..!"
காரின் மீது சாய்ந்து நின்று கைகட்டியபடி அவளை முறைத்தான் வருண்..
"சத்யான்னா அந்த சத்யா இல்லை.. இவன் என்னோட காலேஜ் மேட் சத்யவாணி..! என்னோட நோட்ஸ் புக்ஸ் எல்லாம் சத்யா வீட்ல இருக்கு.. படிக்கணும் ப்ராஜெக்ட் பண்ணனும்.. பிராக்டிகல் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும்.. அதுக்காக அவ கைல கால்ல விழுந்து ரெக்கார்ட் நோட் வாங்கிட்டு வந்தேன்.. போர்த் அவர் பிராக்டிகல் கிளாஸ்.. ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணனும்.. அதனாலதான் போன் பண்ணி எங்க இருக்கேன்னு கேட்டா..!"
அவள் சொல்ல சொல்ல வருணின் கண்கள் மன்னிப்பை யாசிப்பதை போல் கனிந்தன..
"அவ்வளவுதானா விஷயம்..! நான் கூட உன் புருஷன்கிட்ட தான் உருகி உருகி பேசிகிட்டு இருந்தியோன்னு நினைச்சேன்.. என்ன இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சொல்ற தமிழ் பெண்மணி இல்லையா நீ..! இத்தனை நாள் அந்த சைக்கோவை சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மாதரசியாச்சே..!"
"கல்லானா ரோட்டுக்கு புல்லானா மாட்டுக்குன்னு போயிட்டே இருப்பேனாக்கும்.." தேம்பாவணி தோள்களை ஏற்றி இறக்க.. "வாவ் இதுவல்லவோ தெளிவு.." என கை தட்டினான் வருண்..
"இன்னும் கொஞ்ச நேரம் அவங்களோடு இருந்திருக்கலாம்.." ஆதங்கத்தோட தேம்பாவணி உதடு சுழிக்க..!
"ஆணியே புடுங்க வேண்டாம் நீ வண்டியில ஏறு.." என அவளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து பறந்தான் அவன்..
தொடரும்..
Last edited: