செல்லப்பிராணியுடன் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்த அம்மாவை கண்டு ஆச்சரியப்பட்டு போனாள் சந்திரமதி..
"என்னமா எப்ப நீங்களும் மோத்தியும் ஃபிரண்டா ஆனீங்க..! இல்லாத அதிசயமெல்லாம் நடக்குதே..!"
"என்னடி அதிசயம்..?" நைட்டியின் மீது தோளிலிருந்து சரிந்த துண்டை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள் அருந்ததி...