- Joined
- Jan 10, 2023
- Messages
- 83
- Thread Author
- #1
"என்னடி.. பத்மினி இன்னைக்கு சாரி லோஹிப்ல கட்டல..? என்ன காரணமா இருக்கும்..!!" இரண்டு பெண்கள் சரியாக உதய் கிருஷ்ணா தன் அறைக்கதவை திறக்கும் போது கலகலவென சிரித்துக் கொண்டு போக.. படு துல்லியமாக இந்த உரையாடல் அவன் காதில் விழுந்தது.
இரண்டு பெண்களையும் சொடக்கு போட்டு அழைத்துவிட்டு உள்ளே சென்றான் உதய் கிருஷ்ணா..
திருத்திருவென விழித்துக் கொண்டு கலவர முகத்தோடு இரு பெண்களும் உள்ளே செல்ல.. அதற்குள் இருக்கையில் அமர்ந்திருந்தவன் இருவரையும் அழுத்தமாகப் பார்த்தான்..
"உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. வேலை செய்ய வர்றீங்களா.. இல்ல பத்மினி எப்படி சேலை கட்டி இருக்கான்னு கமெண்ட் பண்ண வரிங்களா..!!" கடுமையான விழிகளுடன் வார்த்தைகள் தெறித்து விழ.. இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
எப்போதும் பத்மினியை பற்றியதான பேச்சு கூடுதல் காரசாரத்துடன் எல்லை மீறி விவாதிக்கப்படும் என்றாலும் இன்று அந்த அளவுக்கு ஒன்றும் தவறாக பேசிவிடவில்லையே.. இதைவிட அதிகமாக மற்ற பெண்களை கேலி செய்து இந்த இருவரும் பேசிய விஷயங்கள் உதய் கிருஷ்ணனின் காதுக்கு வராமல் இருந்ததில்லை.. ஒரு வார்த்தையை வைத்து புத்தகமே எழுதி விடும் மனிதர்களிடம்.. நன்றாக திரித்து பேசி கதை வசனமெழுத கருவை கொடுத்திருக்கிறான் இவன்.. ஆனால் பத்மினியின் விஷயத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் இந்த சிடுமூஞ்சி கிருஷ்ணன் என்று யோசிக்காமல் இருப்பார்களா இருவரும்..!!
"அதிலும் பத்மினி சேலை கட்டியதை பற்றி டிஸ்கஸ் பண்ண வரிங்களா.." என்று கேட்டதில் ஏதோ ஒரு உரிமை உணர்வு எழுந்ததை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.. மற்றவர்களின் உடைகளை பற்றி விவாதிக்க வருகிறீர்களா என்று கூட கேட்டிருக்கலாமே..!! உதய் கிருஷ்ணன் பெண்களைப் பற்றி பேசும் ஆள் இல்லையே..!! இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்..?
"சாரி சார்?? சும்மா நார்மலா தான் பேசிட்டு இருந்தோம்.. இனி இப்படி நடக்காது.." என்று மன்னிப்பை யாசித்த பின்பும் அந்த பெண்களை முறைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. பாவம் அவர்கள்தான் அவன் கடுமையின் கொதிப்பு தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்..
வெளியே வந்த பெண்கள் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்திருந்தால் தான் ஆச்சரியம்..
"பத்மினி இடுப்பை பற்றி பேசினா சாருக்கு ரொம்ப கோவம் வருது.. சார் அவ இடுப்புல கபடி விளையாடி இருப்பாரு போலிருக்கே.." இப்படித்தான் ஹாட் நீயூஸ் சுடச்சுட பரவுகிறது..
நெருப்பில்லாமல் புகையாதோ.. உண்மையும் அதுதானே.. லோ ஹிப் என்று அவர்கள் பேசியதில் அந்த ஹிப் என்ற வார்த்தை மட்டும் அவன் நெஞ்சில் ஆழப் பதிந்து போயிருக்க வேண்டும்..
இல்லையேல் ஏதோ ஒரு ஃபைலை தூக்கிக்கொண்டு சந்தேகத்தை கேட்க உள்ளே வந்தவளின் இடுப்பு பகுதியை ஏன்பார்க்க வேண்டும்..
உண்மையில் புடவையை இன்று நாபி புள்ளி தெரியாதவாறு சற்று மேலே உயர்த்திதான் கட்டியிருக்கிறாள்..
"சார் மெயில் போட்டாச்சு இன்னும் ரிப்ளை வரல.. திரும்ப ஒருவாட்டி ரிமைண்டர் கொடுக்கணுமா.." என்று கேட்டவள் அவன் கண்கள் தன் இடைப்பகுதியில் பதிந்து மீள்வதை கண்டுகொண்டு
"இப்படி கேவலமா பாக்காதீங்க சார்.." என்று விழிகளை உருட்ட அவன் பார்வை திகைப்புடன் அவள் முகத்தில் நிலை கொண்டது..
"ஐ மீன் என்னை குற்றம் சாட்டுவதைப் போல் இவ்வளவு கேவலமா பாக்க வேண்டிய அவசியம் இல்லை.. நீங்க யாரும் விமர்சிக்கிற அளவு நான் புடவை கட்டிட்டு வரல.. அதனால நீங்க என்னை திட்ட வேண்டிய அவசியமே இல்லை.." என்றாள் பத்மினி.. உதய் வெறுப்பாக தான் சேலை கட்டியிருந்த விதத்தை பார்க்கிறான் என்ற நினைப்பு அவளுக்கு.. உண்மைதான் சேலைக்குள் மறைந்திருக்கும் இடுப்பை வெறுப்புடன் தேடிக் கொண்டிருக்கிறான்..
அவன் கண்களை சுருக்கினான்..
"ஏன் நேத்து.. அந்த ஆனந்த் உன்னை கேவலமா கமெண்ட் செஞ்சதால இந்த மாற்றமோ..?"
"அப்படியெல்லாம் இல்ல.. என் வாழ்க்கையில் சம்பந்தப்படாத ஆட்களுக்காக என்னை மாத்திக்கிற ஆள் நான் இல்லை..!!"
"குட்.. அப்புறம் ஏன் இந்த திடீர் மாற்றம்..!!"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" அவள் குரலில் எரிச்சல்..
அவள் முகத்தை ஊன்றி பார்த்தவனுக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை..
"சரி விடுங்க சார்.. பேப்பர் செக் பண்ணி சைன் பண்ணி குடுங்க.. நான் மெயில் அனுப்பனும்.." மார்பின் குறுக்கே கைகட்டி நின்றாள்..
அவளை சில வினாடிகள் பார்த்துக் கொண்டே இருந்தவன் பிறகு காகிதங்களில் கண் பதித்து கவனத்தை குவித்து சரிபார்த்து கையெழுத்திட்டுக் கொடுத்தான்..
பத்மினி கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக..
பத்மினி என்று அவன் அழைக்க.. கதவை திறந்து வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள்..
"அந்த ரேக்ல 14B ஃபைல் கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போ.." என்றவன் தன் வேலையில் கவனமானான்.. அவன் அழைத்ததையும் கதவை சாத்திவிட்டு மீண்டும் அவள் உள்ளே வந்ததையும் ஒட்டுமொத்த அலுவலகமும் பார்த்துக் கொண்டிருந்தது.. புதிதாக கிடைத்த பொழுதுபோக்கு.. தவறவிட யாருக்கும் மனமில்லை..
இடது பக்கம் கணினியில் அவன் திரும்பி வேலை செய்து கொண்டிருந்த அதே பக்கத்தில்தான் அந்த கபோர்ட் இருந்தது.. மேல் வரிசையில் சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கோப்பை இரு கைகளை உயர்த்தி நுனி பாதங்களில் நின்று எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் பத்மினி..
"ஃபைல் கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னுமா எடுக்கல" என்று நினைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் முதலில் பதிந்தது அவள் இடுப்புதான்.. பளீரென்ற வெண்ணிற இடுப்பில் செக்கச்சிவந்த விரல்களின் தடமும் நகக் கீறலும்..
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" என்று அவள் எரிச்சலோடு கேட்டதன் பொருள் இப்போது புரிகிறது..
மிக மென்மையான பகுதி.. கிள்ளி எடுக்கும்போது எப்படி வலித்திருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது அவனால்.. இன்னும் மேலடுக்கில் வைத்திருந்த அந்த பைலை எடுக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறாள்.. இது வேலைக்காகாது என்று அவனே எழுந்தான்..
பைலை எடுக்கும் நோக்கத்தோடு அவளை இடித்துக் கொண்டு நின்றான்..
அவன் சாய்ந்த வேகத்தில் பத்மினியின் வலது கன்னம் கப்போர்டின் பலகையில் இடித்துக் கொண்டது.. "ஆஆஆ" என்ற சத்தம்..
சாரி சாரி.. பைலை எடுத்துக் கொண்டு விலகியவன்.. வலியில் சுணங்கிய அவள் முகத்தை பார்த்தான்.. கண்களுக்கும் கன்னத்திற்கும் நடுவே சிவப்பு.. சட்டென உயர்ந்த அவன் கரம் மெதுவாக தாழ்ந்து கொண்டது..
"வேணும்னு பண்ணல.. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.." தன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான்..
கன்னத்தை தேய்த்துக் கொண்டே வெளியே வந்தாள் பத்மினி..
வெளியே உள்ள மக்களுக்கு இது போதாதா.. சேலை இறங்கிய இடுப்பில் காயம்.. கன்னத்திலும் காயம்.. நான்கைந்து நாட்களுக்கு சலிக்காமல் பேசுவதற்கு நல்லதாக கன்டென்ட் கிடைத்துவிட்டது..
"ஆனந்த் சொல்லிட்டு போனது உண்மைதான் போலிருக்கே..!! விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு.. ஏதோ பார்க்க கூடாததை பார்த்திருக்கான்.. அதனாலதான் சார்வாள் வேலையை விட்டு தூக்கிட்டார் போலிருக்கு.."
"ஆனாலும் இந்த மனுஷன் எப்படி போய் விழுந்தது தான் ஆச்சரியம்.."
"ஜல்லிக்கட்டு காளையை எப்படி அடக்கனும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு..!! நமக்கு அந்த சாமத்தியம் இல்ல விடு.." சில பெண்களிடம் பெருமூச்சு..
பத்மினி இது போன்ற புரணி பேச்சுகளில் சோர்ந்து போய்விட்டாள்.. இப்போதெல்லாம் எதையும் கண்டு கொள்வதில்லை..
ஆனால் காசோலையில் கையெழுத்து வாங்க வந்த திவ்யா.. இவர்களின் பேச்சுக்களை சகித்துக் கொள்ள முடியாமல் "சார் அந்த பொண்ணை ரொம்ப வறுத்தெடுக்குறாங்க.. எல்லாரையும் கூப்பிட்டு கொஞ்சம் வார்ன் பண்ணி விடுங்க சார்.." என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..
"சின்ன குழந்தைகளா அவங்க..? இல்ல எனக்கு அது மட்டும் தான் வேலையா.." என்று நிதானமாக நெருப்பை இறைக்க ஒரு கணம் விக்கித்து போனாள் திவ்யா.. ஏன்தான் இந்த பேச்சை எடுத்தோம் என்றாகிவிட்டது..
"என்ன பேசிக்கிறாங்க யாரைப் பத்தி பேசுறாங்க..?" கடுகடுப்பான அதே குரலில் கேட்டான்..
"ப.. பத்மினி சார்.."
"என்னவாம்..!!"
"அது.." என்று அவள் இழுக்க..
"இங்க பாருங்க திவ்யா நீங்கதான் ஆரம்பிச்சு வச்சீங்க.. நீங்களே முடிச்சுருங்க.." என்றான் கடுமை குறையாத விழிகளோடு..
"இல்ல சார்.. அவ கன்னத்துலயும் இடுப்புலயும் காயம்.. அது உ.. உங்களாலதான்னு ரொம்ப வக்கிரமா பேசிக்கிறாங்க.." ஒரு வழியாக சொல்லி முடித்து எச்சில் விழுங்கினாள் திவ்யா..
"என்னாலதான் காயமாச்சு.. ஆனால் அதை தவறான முறையில் வக்கிரமாக பேச என்னை இருக்கிறது.." யோசித்துப் பார்த்தவன் சிலையாக அமர்ந்திருந்தான்..
ஒருவேளை அவள் கன்னத்தை கடித்திருந்தால்..?
அவள் இடுப்பை அழுத்தமாக பற்றி இதழில் முத்தமிட்டு இருந்தால்.. அப்படி நினைத்திருப்பார்களோ..!!
காமத்தை அனுபவித்ததில்லை.. அதற்காக காமம் பற்றி தெரியாது என்று அர்த்தம் இல்லை.. நாற்பது வயதை நெருங்கியவன் இப்படி யோசிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்..
எண்ணும்போதே காட்சிகள் நம் மூளையில் வந்து போவது இயற்கை..
ரோட்ல ஒரு ஆக்சிடென்ட்.. பைக்கோட கார் மோதிடுச்சு எனும்போதே அந்த காட்சி நம் மனதினில் வந்து போகும்..
யாரோ ஒருவர் தன் சொந்த கதை சோகக் கதைகளை புலம்பும்போது.. அறிமுகம் இல்லாத ஒருவரை நாமாக கற்பனை செய்து நமக்கு ஏற்றவாறு காட்சிகளை வடித்துக் கொள்வது மூளையில் நடக்கும் இன்பில்ட் ப்ரோக்ராம்..
அப்படித்தான்.. திவ்யா சொன்ன விஷயம் காட்சியாக மனக்கண்ணீல் வந்து போனது..
"சார்.. சார்..!!" திவ்யா அழைத்துக் கொண்டிருந்தாள்..
சில நொடிகளுக்குப் பிறகு.. ஹான்.. என்றவன்.. எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு கணினியில் கண் பதித்துக் கொண்டான்..
"சார் ரொம்ப டென்ஷனாகிட்டார் போலிருக்கு.. நல்லவேளை.. இந்த மாதிரியான விஷயங்களை காது கொடுத்து கேட்டு என்கிட்ட வந்து சொல்றதுதான் உங்க வேலையா.. அப்படின்னு என்னை வறுத்தெடுக்கல.. அப்பாடா" என்று நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..
ஒருவேளை அந்த வதந்தியை ரசிக்கிறானோ..!!
பள்ளி கல்லூரிகளில் சிவனே என்று தன்பாட்டுக்கு படிக்கும் ஆண் பெண் இருவரை சேர்த்து வைத்து கேலி கிண்டல் செய்தால் அந்த கிளுகிளுப்பில் சம்பந்தப்பட்ட இருவருமே உண்மையில் காதலிக்க துவங்கி விடுவதை பார்த்திருப்போம் .. அது போலவா? வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் இந்த விதி பொருந்தும் போலிருக்கிறது. கிசுகிசுக்கள் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு உண்மையாக்கப் படுகிறது சில நேரங்களில்..
வீட்டுக்கு வந்த பின் அம்மாவும் பத்மினியை விசாரித்தாள்.. கன்னத்தில் என்னடி காயம்..!! அவர் ராகமிழுக்க..
ஹான்.. உங்க செல்ல மகன் செஞ்ச மாயம்.. என்று குறும்போடு அவள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் சரியாக சாப்பிட வந்து அமர்ந்தான் உதய் கிருஷ்ணா.. இரு பெண்களும் வாயை மூடி கொண்டனர்..
ரமணியம்மாள் காயம் என்று வாயெடுத்த பின் அந்த இடத்தை பார்க்காமல் இருக்க முடியுமா.. காயத்தை கொடுத்த குற்ற உணர்ச்சியாக கூட இருக்கலாம்.. காயத்தை பார்க்கும்போது சதைப்பற்றான கன்னங்களையும் பார்க்க நேரிடுகிறதே.. !!
வேண்டுமென்று விரும்பியா பார்க்கிறான்.. சாதாரணமாக பார்த்தாலும் அந்த கன்னங்கள் மனதில் பதிந்து போய்விடுகின்றன.. இதில் அவன் தவறு ஒன்றும் இல்லை..
அன்றும் தலையில் மல்லிகை பூவை வைத்து அறைக்குள் அனுப்பி வைத்தாள் ரமணிய்ம்மா..
"ஐயோ ரமணி அம்மா.. எதுக்காக இந்த மல்லிகை பூவை தினமும் எனக்கு வச்சு அனுப்புறீங்க.. உங்க புள்ளகிட்ட என்னால திட்டு வாங்க முடியல..!! ஏன் திடீர்னு உங்களுக்கு இப்படி ஒரு யோசனை..?" என்று சற்று எரிச்சலாகத்தான் கேட்டாள்.. சென்றவுடன் கழட்டி வைக்கத்தான் போகிறாள்.. ஒரு மணி நேரத்திற்கு ஏன் இந்த அலங்காரம் என்று அலுப்பாக இருக்கிறது..
"நான் என்னத்த கண்டேன்.. தினமும் உன் மருமகளுக்கு ராத்திரி ரூமுக்கு போறதுக்கு முன்னாடி மல்லிகை பூ வச்சு விடுன்னு.."
"உங்க தோழிகள் சொன்னாங்களா.." பத்மினி முறைத்தாள்..
"ஆமாம்.." என்று ரமணியம்மா பரிதாபமாக தலையசைக்க..
"அவங்களுக்கும் வேற வேலை இல்ல.. உங்களுக்கும் வேற வேலை இல்ல.. வர வர உங்கள் லூட்டி எல்லை மீறி போகுது.." என்றவள் தலையை உலுக்கியபடி அறைக்குள் சென்று விட்டாள்..
என்னவோ..!! ஆசையாக ரமணியம்மா தலையில் வைத்து அனுப்பிய மல்லிகை சரத்தை இன்று எடுத்து வைக்க மனம் வரவில்லை..
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா.. அவள் உள்ளே வரவும் சட்டென அவன் விழிகள் நிமிர்ந்து அவளை ஏறிட்டன.. வழக்கம்போல மேஜையில் மல்லிச் சரத்தை பிரித்து வைக்காமல்.. அப்படியே படுத்துக் கொள்வது வரை வெறித்துப் பார்த்தான்..
என்ன குறை சொல்லலாம்.. எதை வைத்து திட்டலாம்னு பலமா யோசிக்கிறார் போலிருக்கு.. இவள் நினைப்பு இப்படி..
கட்டிலில் அப்படியே படுத்தவள் தனது அலைபேசியில் ஏதோ ஒரு பாட்டை ஒலிக்க விட்டாள்..
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேராசை..
"சத்தத்தை குறை.. போனை ஆஃப் பண்ணு.. தலை வலிக்குது.. எரிச்சலா இருக்கு.." வாய் ஓயாமல் கத்துபவன் இன்று அமைதியாக இருந்தான்..
"என்ன அதிசயமா இருக்கு.. சரவெடி பட்டாசு அமைதியா இருக்கே.." ஆச்சரியமாக பார்த்தாள் பத்மினி..
ரொமான்டிக் பாடல் இதமாக அவளை தாலாட்டியதில்.. விழிகள் மூடி உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
நான் காதலை சொல்ல என்
தாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை
துளி என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
மழை விழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அட மலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா..
தமிழ் பாடல் தானே..!! வரிகளை புரிந்து கொள்ள முடியாதா என்ன.. காதல் வரிகள் புரிந்தன.. பொருத்தமான காதல் பாடல் இதயத்தில் ஊடுருவும் போது சில மாற்றங்களை ஏற்படுத்த தானே செய்யும்..
"கொஞ்சம் பாட்டை ஆஃப் பண்றியா.." தாக்கம் தாங்காமல் எரிச்சலான வார்த்தைகள் அவனிடமிருந்து.. திரும்பி பார்த்தான்..
அவள் உறங்கியிருந்தாள்.. பாடல் நிறுத்தப்பட்டிருந்தது.. இப்ப எதுக்காக கத்தினோம்.. அவனுக்கே புரியவில்லை..
மற்ற வார்த்தைகள் புரிகின்றன.. அதென்ன முன் கோபுர அழகு.. கோபுரமாய் என்ன அழகு.. கன்னங்களா..? திரும்பி அவளை பார்த்தான்.. இல்லவே இல்லை.. அது வழுவழுப்பான கிண்ணம் போல் இருக்கிறது..
சில நாட்களாக வரிசையாக பாடல்கள் கேட்டதில் அவனுக்குள்ளும் ஒரு கவிஞன் உருவாகி இருக்க வேண்டும்..
பின் கோபுரம் என்று குறிப்பிடப்படுவது..?
அவசரமாக யூடியூபில் பாடலை ஓட விட்டான்..
பாடல் வரிகளுக்கு ஏற்ப இயக்குனர் சரியாக காட்சியை அமைத்திருந்தார்.. அந்த வரிகள் எதை குறிப்பிடுகின்றன என்று இப்போது புரிந்து விட்டது..
நடிகையின் முன்னழகை பார்த்து கிளர்ச்சியுறுபவன் நம் நாயகன் இல்லையே..!! பார்க்கும் பெண்கள் அனைவரிலும் காம வயப்பட்டால் அதற்கு பெயர் வேறு..
இப்படியெல்லாம் பாட்டு எழுதி மக்கள் மனசுல கிளுகிளுப்பை உண்டாக்கி பணம் சம்பாதிக்க வேண்டியது..!! இப்படித்தான் யோசித்தான்..
"ஏன் இவனுக்கு கிளுகிளுப்பு உண்டாகவில்லையா..?"
புரண்டு படுத்தாள் பத்மினி.. உடலோடு பசை போட்டு ஒட்டிக்கொள்ள அவள் என்ன இரும்பு சேலையா கட்டி இருக்கிறாள்..!! சாதாரண நூல் சேலை அதன் வேலையை காட்டத்தான் செய்யும்..
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே..!!
இப்போது எந்த தாவணியும் அவள் அழகை மூடவில்லை..
அறையை நிறைத்த மல்லிகையின் மணம்.. தற்போது கேட்ட பாடல்.. கண்முன்னே அருவி போல் வளைந்து படுத்திருக்கும் பெண்ணொருத்தி..
உயிரணுக்களை உற்பத்தி செய்து தகுந்த இடத்தில் சேர்ப்பிக்க காத்துக் கொண்டிருக்கின்றன அவனுள் விழித்துக் கொண்ட உயிரை உருவாக்கும் இயந்திரம் ஒன்று..
தொடரும்..
இரண்டு பெண்களையும் சொடக்கு போட்டு அழைத்துவிட்டு உள்ளே சென்றான் உதய் கிருஷ்ணா..
திருத்திருவென விழித்துக் கொண்டு கலவர முகத்தோடு இரு பெண்களும் உள்ளே செல்ல.. அதற்குள் இருக்கையில் அமர்ந்திருந்தவன் இருவரையும் அழுத்தமாகப் பார்த்தான்..
"உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. வேலை செய்ய வர்றீங்களா.. இல்ல பத்மினி எப்படி சேலை கட்டி இருக்கான்னு கமெண்ட் பண்ண வரிங்களா..!!" கடுமையான விழிகளுடன் வார்த்தைகள் தெறித்து விழ.. இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
எப்போதும் பத்மினியை பற்றியதான பேச்சு கூடுதல் காரசாரத்துடன் எல்லை மீறி விவாதிக்கப்படும் என்றாலும் இன்று அந்த அளவுக்கு ஒன்றும் தவறாக பேசிவிடவில்லையே.. இதைவிட அதிகமாக மற்ற பெண்களை கேலி செய்து இந்த இருவரும் பேசிய விஷயங்கள் உதய் கிருஷ்ணனின் காதுக்கு வராமல் இருந்ததில்லை.. ஒரு வார்த்தையை வைத்து புத்தகமே எழுதி விடும் மனிதர்களிடம்.. நன்றாக திரித்து பேசி கதை வசனமெழுத கருவை கொடுத்திருக்கிறான் இவன்.. ஆனால் பத்மினியின் விஷயத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் இந்த சிடுமூஞ்சி கிருஷ்ணன் என்று யோசிக்காமல் இருப்பார்களா இருவரும்..!!
"அதிலும் பத்மினி சேலை கட்டியதை பற்றி டிஸ்கஸ் பண்ண வரிங்களா.." என்று கேட்டதில் ஏதோ ஒரு உரிமை உணர்வு எழுந்ததை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.. மற்றவர்களின் உடைகளை பற்றி விவாதிக்க வருகிறீர்களா என்று கூட கேட்டிருக்கலாமே..!! உதய் கிருஷ்ணன் பெண்களைப் பற்றி பேசும் ஆள் இல்லையே..!! இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்..?
"சாரி சார்?? சும்மா நார்மலா தான் பேசிட்டு இருந்தோம்.. இனி இப்படி நடக்காது.." என்று மன்னிப்பை யாசித்த பின்பும் அந்த பெண்களை முறைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.. பாவம் அவர்கள்தான் அவன் கடுமையின் கொதிப்பு தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்..
வெளியே வந்த பெண்கள் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்திருந்தால் தான் ஆச்சரியம்..
"பத்மினி இடுப்பை பற்றி பேசினா சாருக்கு ரொம்ப கோவம் வருது.. சார் அவ இடுப்புல கபடி விளையாடி இருப்பாரு போலிருக்கே.." இப்படித்தான் ஹாட் நீயூஸ் சுடச்சுட பரவுகிறது..
நெருப்பில்லாமல் புகையாதோ.. உண்மையும் அதுதானே.. லோ ஹிப் என்று அவர்கள் பேசியதில் அந்த ஹிப் என்ற வார்த்தை மட்டும் அவன் நெஞ்சில் ஆழப் பதிந்து போயிருக்க வேண்டும்..
இல்லையேல் ஏதோ ஒரு ஃபைலை தூக்கிக்கொண்டு சந்தேகத்தை கேட்க உள்ளே வந்தவளின் இடுப்பு பகுதியை ஏன்பார்க்க வேண்டும்..
உண்மையில் புடவையை இன்று நாபி புள்ளி தெரியாதவாறு சற்று மேலே உயர்த்திதான் கட்டியிருக்கிறாள்..
"சார் மெயில் போட்டாச்சு இன்னும் ரிப்ளை வரல.. திரும்ப ஒருவாட்டி ரிமைண்டர் கொடுக்கணுமா.." என்று கேட்டவள் அவன் கண்கள் தன் இடைப்பகுதியில் பதிந்து மீள்வதை கண்டுகொண்டு
"இப்படி கேவலமா பாக்காதீங்க சார்.." என்று விழிகளை உருட்ட அவன் பார்வை திகைப்புடன் அவள் முகத்தில் நிலை கொண்டது..
"ஐ மீன் என்னை குற்றம் சாட்டுவதைப் போல் இவ்வளவு கேவலமா பாக்க வேண்டிய அவசியம் இல்லை.. நீங்க யாரும் விமர்சிக்கிற அளவு நான் புடவை கட்டிட்டு வரல.. அதனால நீங்க என்னை திட்ட வேண்டிய அவசியமே இல்லை.." என்றாள் பத்மினி.. உதய் வெறுப்பாக தான் சேலை கட்டியிருந்த விதத்தை பார்க்கிறான் என்ற நினைப்பு அவளுக்கு.. உண்மைதான் சேலைக்குள் மறைந்திருக்கும் இடுப்பை வெறுப்புடன் தேடிக் கொண்டிருக்கிறான்..
அவன் கண்களை சுருக்கினான்..
"ஏன் நேத்து.. அந்த ஆனந்த் உன்னை கேவலமா கமெண்ட் செஞ்சதால இந்த மாற்றமோ..?"
"அப்படியெல்லாம் இல்ல.. என் வாழ்க்கையில் சம்பந்தப்படாத ஆட்களுக்காக என்னை மாத்திக்கிற ஆள் நான் இல்லை..!!"
"குட்.. அப்புறம் ஏன் இந்த திடீர் மாற்றம்..!!"
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" அவள் குரலில் எரிச்சல்..
அவள் முகத்தை ஊன்றி பார்த்தவனுக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை..
"சரி விடுங்க சார்.. பேப்பர் செக் பண்ணி சைன் பண்ணி குடுங்க.. நான் மெயில் அனுப்பனும்.." மார்பின் குறுக்கே கைகட்டி நின்றாள்..
அவளை சில வினாடிகள் பார்த்துக் கொண்டே இருந்தவன் பிறகு காகிதங்களில் கண் பதித்து கவனத்தை குவித்து சரிபார்த்து கையெழுத்திட்டுக் கொடுத்தான்..
பத்மினி கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போக..
பத்மினி என்று அவன் அழைக்க.. கதவை திறந்து வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள்..
"அந்த ரேக்ல 14B ஃபைல் கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போ.." என்றவன் தன் வேலையில் கவனமானான்.. அவன் அழைத்ததையும் கதவை சாத்திவிட்டு மீண்டும் அவள் உள்ளே வந்ததையும் ஒட்டுமொத்த அலுவலகமும் பார்த்துக் கொண்டிருந்தது.. புதிதாக கிடைத்த பொழுதுபோக்கு.. தவறவிட யாருக்கும் மனமில்லை..
இடது பக்கம் கணினியில் அவன் திரும்பி வேலை செய்து கொண்டிருந்த அதே பக்கத்தில்தான் அந்த கபோர்ட் இருந்தது.. மேல் வரிசையில் சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கோப்பை இரு கைகளை உயர்த்தி நுனி பாதங்களில் நின்று எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் பத்மினி..
"ஃபைல் கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னுமா எடுக்கல" என்று நினைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் முதலில் பதிந்தது அவள் இடுப்புதான்.. பளீரென்ற வெண்ணிற இடுப்பில் செக்கச்சிவந்த விரல்களின் தடமும் நகக் கீறலும்..
"ஏன் உங்களுக்கு தெரியாதா..?" என்று அவள் எரிச்சலோடு கேட்டதன் பொருள் இப்போது புரிகிறது..
மிக மென்மையான பகுதி.. கிள்ளி எடுக்கும்போது எப்படி வலித்திருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது அவனால்.. இன்னும் மேலடுக்கில் வைத்திருந்த அந்த பைலை எடுக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறாள்.. இது வேலைக்காகாது என்று அவனே எழுந்தான்..
பைலை எடுக்கும் நோக்கத்தோடு அவளை இடித்துக் கொண்டு நின்றான்..
அவன் சாய்ந்த வேகத்தில் பத்மினியின் வலது கன்னம் கப்போர்டின் பலகையில் இடித்துக் கொண்டது.. "ஆஆஆ" என்ற சத்தம்..
சாரி சாரி.. பைலை எடுத்துக் கொண்டு விலகியவன்.. வலியில் சுணங்கிய அவள் முகத்தை பார்த்தான்.. கண்களுக்கும் கன்னத்திற்கும் நடுவே சிவப்பு.. சட்டென உயர்ந்த அவன் கரம் மெதுவாக தாழ்ந்து கொண்டது..
"வேணும்னு பண்ணல.. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.." தன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான்..
கன்னத்தை தேய்த்துக் கொண்டே வெளியே வந்தாள் பத்மினி..
வெளியே உள்ள மக்களுக்கு இது போதாதா.. சேலை இறங்கிய இடுப்பில் காயம்.. கன்னத்திலும் காயம்.. நான்கைந்து நாட்களுக்கு சலிக்காமல் பேசுவதற்கு நல்லதாக கன்டென்ட் கிடைத்துவிட்டது..
"ஆனந்த் சொல்லிட்டு போனது உண்மைதான் போலிருக்கே..!! விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு.. ஏதோ பார்க்க கூடாததை பார்த்திருக்கான்.. அதனாலதான் சார்வாள் வேலையை விட்டு தூக்கிட்டார் போலிருக்கு.."
"ஆனாலும் இந்த மனுஷன் எப்படி போய் விழுந்தது தான் ஆச்சரியம்.."
"ஜல்லிக்கட்டு காளையை எப்படி அடக்கனும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு..!! நமக்கு அந்த சாமத்தியம் இல்ல விடு.." சில பெண்களிடம் பெருமூச்சு..
பத்மினி இது போன்ற புரணி பேச்சுகளில் சோர்ந்து போய்விட்டாள்.. இப்போதெல்லாம் எதையும் கண்டு கொள்வதில்லை..
ஆனால் காசோலையில் கையெழுத்து வாங்க வந்த திவ்யா.. இவர்களின் பேச்சுக்களை சகித்துக் கொள்ள முடியாமல் "சார் அந்த பொண்ணை ரொம்ப வறுத்தெடுக்குறாங்க.. எல்லாரையும் கூப்பிட்டு கொஞ்சம் வார்ன் பண்ணி விடுங்க சார்.." என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..
"சின்ன குழந்தைகளா அவங்க..? இல்ல எனக்கு அது மட்டும் தான் வேலையா.." என்று நிதானமாக நெருப்பை இறைக்க ஒரு கணம் விக்கித்து போனாள் திவ்யா.. ஏன்தான் இந்த பேச்சை எடுத்தோம் என்றாகிவிட்டது..
"என்ன பேசிக்கிறாங்க யாரைப் பத்தி பேசுறாங்க..?" கடுகடுப்பான அதே குரலில் கேட்டான்..
"ப.. பத்மினி சார்.."
"என்னவாம்..!!"
"அது.." என்று அவள் இழுக்க..
"இங்க பாருங்க திவ்யா நீங்கதான் ஆரம்பிச்சு வச்சீங்க.. நீங்களே முடிச்சுருங்க.." என்றான் கடுமை குறையாத விழிகளோடு..
"இல்ல சார்.. அவ கன்னத்துலயும் இடுப்புலயும் காயம்.. அது உ.. உங்களாலதான்னு ரொம்ப வக்கிரமா பேசிக்கிறாங்க.." ஒரு வழியாக சொல்லி முடித்து எச்சில் விழுங்கினாள் திவ்யா..
"என்னாலதான் காயமாச்சு.. ஆனால் அதை தவறான முறையில் வக்கிரமாக பேச என்னை இருக்கிறது.." யோசித்துப் பார்த்தவன் சிலையாக அமர்ந்திருந்தான்..
ஒருவேளை அவள் கன்னத்தை கடித்திருந்தால்..?
அவள் இடுப்பை அழுத்தமாக பற்றி இதழில் முத்தமிட்டு இருந்தால்.. அப்படி நினைத்திருப்பார்களோ..!!
காமத்தை அனுபவித்ததில்லை.. அதற்காக காமம் பற்றி தெரியாது என்று அர்த்தம் இல்லை.. நாற்பது வயதை நெருங்கியவன் இப்படி யோசிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்..
எண்ணும்போதே காட்சிகள் நம் மூளையில் வந்து போவது இயற்கை..
ரோட்ல ஒரு ஆக்சிடென்ட்.. பைக்கோட கார் மோதிடுச்சு எனும்போதே அந்த காட்சி நம் மனதினில் வந்து போகும்..
யாரோ ஒருவர் தன் சொந்த கதை சோகக் கதைகளை புலம்பும்போது.. அறிமுகம் இல்லாத ஒருவரை நாமாக கற்பனை செய்து நமக்கு ஏற்றவாறு காட்சிகளை வடித்துக் கொள்வது மூளையில் நடக்கும் இன்பில்ட் ப்ரோக்ராம்..
அப்படித்தான்.. திவ்யா சொன்ன விஷயம் காட்சியாக மனக்கண்ணீல் வந்து போனது..
"சார்.. சார்..!!" திவ்யா அழைத்துக் கொண்டிருந்தாள்..
சில நொடிகளுக்குப் பிறகு.. ஹான்.. என்றவன்.. எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு கணினியில் கண் பதித்துக் கொண்டான்..
"சார் ரொம்ப டென்ஷனாகிட்டார் போலிருக்கு.. நல்லவேளை.. இந்த மாதிரியான விஷயங்களை காது கொடுத்து கேட்டு என்கிட்ட வந்து சொல்றதுதான் உங்க வேலையா.. அப்படின்னு என்னை வறுத்தெடுக்கல.. அப்பாடா" என்று நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..
ஒருவேளை அந்த வதந்தியை ரசிக்கிறானோ..!!
பள்ளி கல்லூரிகளில் சிவனே என்று தன்பாட்டுக்கு படிக்கும் ஆண் பெண் இருவரை சேர்த்து வைத்து கேலி கிண்டல் செய்தால் அந்த கிளுகிளுப்பில் சம்பந்தப்பட்ட இருவருமே உண்மையில் காதலிக்க துவங்கி விடுவதை பார்த்திருப்போம் .. அது போலவா? வயது வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் இந்த விதி பொருந்தும் போலிருக்கிறது. கிசுகிசுக்கள் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு உண்மையாக்கப் படுகிறது சில நேரங்களில்..
வீட்டுக்கு வந்த பின் அம்மாவும் பத்மினியை விசாரித்தாள்.. கன்னத்தில் என்னடி காயம்..!! அவர் ராகமிழுக்க..
ஹான்.. உங்க செல்ல மகன் செஞ்ச மாயம்.. என்று குறும்போடு அவள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் சரியாக சாப்பிட வந்து அமர்ந்தான் உதய் கிருஷ்ணா.. இரு பெண்களும் வாயை மூடி கொண்டனர்..
ரமணியம்மாள் காயம் என்று வாயெடுத்த பின் அந்த இடத்தை பார்க்காமல் இருக்க முடியுமா.. காயத்தை கொடுத்த குற்ற உணர்ச்சியாக கூட இருக்கலாம்.. காயத்தை பார்க்கும்போது சதைப்பற்றான கன்னங்களையும் பார்க்க நேரிடுகிறதே.. !!
வேண்டுமென்று விரும்பியா பார்க்கிறான்.. சாதாரணமாக பார்த்தாலும் அந்த கன்னங்கள் மனதில் பதிந்து போய்விடுகின்றன.. இதில் அவன் தவறு ஒன்றும் இல்லை..
அன்றும் தலையில் மல்லிகை பூவை வைத்து அறைக்குள் அனுப்பி வைத்தாள் ரமணிய்ம்மா..
"ஐயோ ரமணி அம்மா.. எதுக்காக இந்த மல்லிகை பூவை தினமும் எனக்கு வச்சு அனுப்புறீங்க.. உங்க புள்ளகிட்ட என்னால திட்டு வாங்க முடியல..!! ஏன் திடீர்னு உங்களுக்கு இப்படி ஒரு யோசனை..?" என்று சற்று எரிச்சலாகத்தான் கேட்டாள்.. சென்றவுடன் கழட்டி வைக்கத்தான் போகிறாள்.. ஒரு மணி நேரத்திற்கு ஏன் இந்த அலங்காரம் என்று அலுப்பாக இருக்கிறது..
"நான் என்னத்த கண்டேன்.. தினமும் உன் மருமகளுக்கு ராத்திரி ரூமுக்கு போறதுக்கு முன்னாடி மல்லிகை பூ வச்சு விடுன்னு.."
"உங்க தோழிகள் சொன்னாங்களா.." பத்மினி முறைத்தாள்..
"ஆமாம்.." என்று ரமணியம்மா பரிதாபமாக தலையசைக்க..
"அவங்களுக்கும் வேற வேலை இல்ல.. உங்களுக்கும் வேற வேலை இல்ல.. வர வர உங்கள் லூட்டி எல்லை மீறி போகுது.." என்றவள் தலையை உலுக்கியபடி அறைக்குள் சென்று விட்டாள்..
என்னவோ..!! ஆசையாக ரமணியம்மா தலையில் வைத்து அனுப்பிய மல்லிகை சரத்தை இன்று எடுத்து வைக்க மனம் வரவில்லை..
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா.. அவள் உள்ளே வரவும் சட்டென அவன் விழிகள் நிமிர்ந்து அவளை ஏறிட்டன.. வழக்கம்போல மேஜையில் மல்லிச் சரத்தை பிரித்து வைக்காமல்.. அப்படியே படுத்துக் கொள்வது வரை வெறித்துப் பார்த்தான்..
என்ன குறை சொல்லலாம்.. எதை வைத்து திட்டலாம்னு பலமா யோசிக்கிறார் போலிருக்கு.. இவள் நினைப்பு இப்படி..
கட்டிலில் அப்படியே படுத்தவள் தனது அலைபேசியில் ஏதோ ஒரு பாட்டை ஒலிக்க விட்டாள்..
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேராசை..
"சத்தத்தை குறை.. போனை ஆஃப் பண்ணு.. தலை வலிக்குது.. எரிச்சலா இருக்கு.." வாய் ஓயாமல் கத்துபவன் இன்று அமைதியாக இருந்தான்..
"என்ன அதிசயமா இருக்கு.. சரவெடி பட்டாசு அமைதியா இருக்கே.." ஆச்சரியமாக பார்த்தாள் பத்மினி..
ரொமான்டிக் பாடல் இதமாக அவளை தாலாட்டியதில்.. விழிகள் மூடி உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
நான் காதலை சொல்ல என்
தாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை
துளி என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
மழை விழும் பொழுதெல்லாம்
என்னை வந்து சேர்வாயா
காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
அட மலர்களில் மழை விழும்
வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா..
தமிழ் பாடல் தானே..!! வரிகளை புரிந்து கொள்ள முடியாதா என்ன.. காதல் வரிகள் புரிந்தன.. பொருத்தமான காதல் பாடல் இதயத்தில் ஊடுருவும் போது சில மாற்றங்களை ஏற்படுத்த தானே செய்யும்..
"கொஞ்சம் பாட்டை ஆஃப் பண்றியா.." தாக்கம் தாங்காமல் எரிச்சலான வார்த்தைகள் அவனிடமிருந்து.. திரும்பி பார்த்தான்..
அவள் உறங்கியிருந்தாள்.. பாடல் நிறுத்தப்பட்டிருந்தது.. இப்ப எதுக்காக கத்தினோம்.. அவனுக்கே புரியவில்லை..
மற்ற வார்த்தைகள் புரிகின்றன.. அதென்ன முன் கோபுர அழகு.. கோபுரமாய் என்ன அழகு.. கன்னங்களா..? திரும்பி அவளை பார்த்தான்.. இல்லவே இல்லை.. அது வழுவழுப்பான கிண்ணம் போல் இருக்கிறது..
சில நாட்களாக வரிசையாக பாடல்கள் கேட்டதில் அவனுக்குள்ளும் ஒரு கவிஞன் உருவாகி இருக்க வேண்டும்..
பின் கோபுரம் என்று குறிப்பிடப்படுவது..?
அவசரமாக யூடியூபில் பாடலை ஓட விட்டான்..
பாடல் வரிகளுக்கு ஏற்ப இயக்குனர் சரியாக காட்சியை அமைத்திருந்தார்.. அந்த வரிகள் எதை குறிப்பிடுகின்றன என்று இப்போது புரிந்து விட்டது..
நடிகையின் முன்னழகை பார்த்து கிளர்ச்சியுறுபவன் நம் நாயகன் இல்லையே..!! பார்க்கும் பெண்கள் அனைவரிலும் காம வயப்பட்டால் அதற்கு பெயர் வேறு..
இப்படியெல்லாம் பாட்டு எழுதி மக்கள் மனசுல கிளுகிளுப்பை உண்டாக்கி பணம் சம்பாதிக்க வேண்டியது..!! இப்படித்தான் யோசித்தான்..
"ஏன் இவனுக்கு கிளுகிளுப்பு உண்டாகவில்லையா..?"
புரண்டு படுத்தாள் பத்மினி.. உடலோடு பசை போட்டு ஒட்டிக்கொள்ள அவள் என்ன இரும்பு சேலையா கட்டி இருக்கிறாள்..!! சாதாரண நூல் சேலை அதன் வேலையை காட்டத்தான் செய்யும்..
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே..!!
இப்போது எந்த தாவணியும் அவள் அழகை மூடவில்லை..
அறையை நிறைத்த மல்லிகையின் மணம்.. தற்போது கேட்ட பாடல்.. கண்முன்னே அருவி போல் வளைந்து படுத்திருக்கும் பெண்ணொருத்தி..
உயிரணுக்களை உற்பத்தி செய்து தகுந்த இடத்தில் சேர்ப்பிக்க காத்துக் கொண்டிருக்கின்றன அவனுள் விழித்துக் கொண்ட உயிரை உருவாக்கும் இயந்திரம் ஒன்று..
தொடரும்..
Last edited: