- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
தயங்கி தயங்கி கண்ணபிரானின் முன்பு வந்து நின்றாள் கண்ணகி..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு.. உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்ச மயிரா வருது.." முந்தைய நாள் இரவு அத்தனை முறை முத்தமிட்டு சிவக்க வைத்த அந்த முகம் தான் இப்போது எரிச்சலை தருகிறதாம்..
காதலுக்கு கண்ணில்லை என்பதைப்போல் காமத்திற்கும் கண்மண் தெரிவதில்லை போலும்..
"இல்ல அது வந்து.."
"ஏய் சீக்கிரம் சொல்லித் தொலை. நேரமாகுது..!"
"ஜாக்கெட் எல்லாம் நஞ்சு போச்சு.. கைய தூக்கினாலே கிழிஞ்சிடும் போலிருக்கு.. புதுசு வாங்கணும்..!" என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.. வாங்கி தரீங்களா என்று கேட்கும் உரிமையெல்லாம் அவளுக்கு இல்லை..
"ஜாக்கெட் எல்லாம் பழசாகி போச்சா..! அச்சச்சோ.." என்று போலியாக உச்சி கொட்டியவன் "இப்படி பக்கத்துல வா.." என்றழைத்தான் மீசையை நீவியபடி அவளை பார்வையால் துளைத்துக் கொண்டே..
குரலின் சுருதி மாறி போயிருக்கவே கண்ணகிக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.. அவன் அழைத்த குரலுக்கு மதிப்பு கொடுத்து பக்கத்தில் வராமல் போனாலும் அடி விழுமே..!
தயங்கி தயங்கி அவன் முன்பு வந்து நின்றாள்..
"ஆமா இதுக்கு முன்னாடி எப்ப உனக்கு டிரஸ் வாங்கி கொடுத்தேன்..?"
"ரெ.. ரெண்டு வருஷம் ஆகிடுச்சு..!" சொல்லும்போதே கண்கள் கலங்கி போனது..
யாரேனும் பிறந்தநாள்.. திருமண நாளுக்காக தரும் அன்பளிப்பு உடைகள் கூட வேலைக்கார பெண்களைப் போய் சேர்ந்தடையுமே அன்றி அவளுக்கு சொந்தமானதாய் சரித்திரமே இல்லை..!
கண்ணபிரான் என்ன வாங்கித் தருகிறானோ அதைத்தான் அவள் உடுத்த வேண்டும்..
வெளியே பகட்டாக செல்வதற்கு ஒரு பத்து பட்டு புடவைகளை வாங்கி தந்திருக்கிறான்.. அவன் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டுமே.. அந்த நோக்கத்திற்காக மட்டும்..
வீட்டில் வெறும் நூல் புடவைகள் மட்டுமே..! அதுவும் எந்த காலத்தில் வாங்கித் தந்ததோ அவளுக்கே நினைவில்லை.. அடிக்கடி துவைத்து உலர்த்தி சுத்தமாக ஓரளவு பராமரித்து வைத்திருக்கிறாள்..
எதிர்பாராத நேரத்தில் விருந்தாளிகளோ கட்சி ஆட்களோ வந்துவிட்டால் அப்போது மட்டும் உடுத்திக் கொள்ள நான்கைந்து தரமான புடவைகள் உண்டு..!
இவ்வளவுதான் கண்ணகியின் புடவை கலெக்ஷன்..
ரவிக்கைகள் கூட பச்சை மஞ்சள் சிகப்பு.. நீலம்.. கருப்பு வெள்ளை என ஆறு முக்கியமான நிறங்களை மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள்..
தையல் விட்டுப் போனால் டெய்லரிடம் கொடுத்து ஆல்டர் செய்து கொள்ளலாம்.. துணியே நைய்ந்து போய்விட்டதே..!
"ஆமா எங்க கிழிஞ்சிருக்கு காமி.." அவன் போலி அக்கறையோடு கேட்க.. கையை தூக்கி காண்பித்தாள் கண்ணகி..
"அச்சச்சோ.." என்றவன் அவன் பலத்திற்கு லேசாக இழுக்க.. எப்போது எப்போது என காத்திருந்ததை போல் டர்ர்.. என பழைய துணி கிழிந்து போனது..
"அய்யோ..!" அவசரமாக கையை கீழே இறக்கினாள் கண்ணகி..
உதடுகள் அழுகையில் துடித்தன..!
"என்னம்மா இப்படி கிழிஞ்சு போச்சு.. இனி என்ன செய்யப் போற.." அவன் உச் கொட்டி போலி பரிதாபத்துடன் கேட்க.. புடவை இழுத்து ரவிக்கையின் கிழிந்த பகுதியை மூடி கொண்டாள் கண்ணகி..
"இதை நீ அப்பவே செஞ்சிருக்கலாம் இல்ல..! நீ கேட்டவுடனே நான் வாங்கி தரணுமாடி.. இந்த வீட்ல வேலைக்காரங்களுக்கு கூட வருஷத்துக்கு ஒருமுறைதான் துணி எடுத்து குடுக்கிறோம்.. நீ என்னோட அடிமை.. நான் நெனச்சாதான் உனக்கு எதுவும் கிடைக்கும்..!" வார்த்தைக்கு வார்த்தை அவன் குரலில் அழுத்தமும் கடுமையும் கூடியது..
வஞ்சி மென்று விழுங்கி கொண்டு அமைதியாக நின்றாள்..
"ஐயோ கண்ணீர் கொட்டுதே..! உடுப்பு கிழிஞ்சு போனதும் அழுக வருதோ.. பரவாயில்ல பேருக்கேத்த மாதிரி நீயும் பத்தினி தான்..! போ போய் வேலைய பாரு..! இப்படி அழுது வடிஞ்சு மூதேவி மாதிரி என் முன்னாடி நிக்காத.. போற காரியத்துல ஏதாவது தடங்கல் வந்துச்சு உன்னை கொன்னே போட்டுருவேன்..!" அவன் கண்களை உருட்டி அடி குரலில் கர்ஜிக்க வேகமாக அங்கிருந்து சென்றிருந்தாள் கண்ணகி..!
அன்று முழுக்க அவள் சேலையை இழுத்து போர்த்திக் கொண்டே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்ததில் வஞ்சி ஒரு மாதிரி வித்தியாசமாக அவளை பார்த்தாள்..
"என்ன அண்ணி என்ன ஆச்சு..! ஏன் அந்த கால சரோஜாதேவி மாதிரி இழுத்து போத்திக்கிட்டு வேலை செய்யறீங்க..!" வெளிப்படையாகவே கேட்க...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போ..!" என்றாள் இவள்..
"அண்ணன் அடிச்சிடுச்சா..! என்னாச்சு காட்டுங்க.."
"ஜாக்கெட் கிழிஞ்சு போச்சுடி.. சும்மா தொந்தரவு பண்ணாம போய் உன் வேலைய பாரு.."
"சரி கிழிஞ்சு போனா என்ன.. புது ஜாக்கெட் மாத்துங்க..!" என்றவளை பரிதாபமாக பார்த்தாள் கண்ணகி.. உனக்குதான் அவன் பாசக்கார அண்ணன்.. எனக்கோ கொடுங்கோலன்.. இந்த விஷயம் உனக்கு தெரியாதா என்பதைப் போல் அந்த பார்வை..
போர்த்திக்கிட்டே போய் வேலை செய் என்று சொன்ன பிறகு சொன்ன சொல் மீறவே கூடாது.. வேறு ரவிக்கை எடுத்து அணிந்து கொள்வதெல்லாம் தண்டனைக்கான குற்றம் அல்லவா..!
"நான் வேணும்னா என்னோட ஜாக்கெட் எதையாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. இல்லைனா கடைக்கு போய் புது ரவிக்கை வாங்கிக்கலாமா..?"
"ஐயோ வேண்டாம்" என்று பதறினாள் கண்ணகி..
ஒருமுறை இப்படித்தானே "என்னடி வயசானவ மாதிரி இத்துப்போன நூல் சீலையா கட்டுற..! இரு என்கிட்ட இருக்கிற நல்ல நல்ல புடவையெல்லாம் எடுத்து தரேன்.. தினமும் ஒன்னா அதைக் கட்டு..! என்று மாமியார்காரி பாக்கியம் சொன்னதில் அகமகிழ்ந்து போனவளுக்கு அன்னாளில் கண்ணபிரான் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட தன்னை நோட்டம் விட்டு வதைப்பான் என்று தெரியாமல் போனது..
பெண்களுக்கே உரித்தான புடவை ஆசை.. அழகான சேலை ஒன்றை மாமியாரிடம் வாங்கி உடுத்திக் கொண்டு சந்தோஷமாக வலம் வந்தாள்..
அன்று தானா மழை கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும்..
இரவில் அவளை அணைத்தவன் அப்போதுதான் அந்த சேலையை கவனித்தான்..!
"இது நான் வாங்கி தந்த சேலை இல்லையே..?"
"அ.. அத்த.. தந்தாங்க.."
அடுத்த கணம் அவள் சேலையை உருவி இருந்தான்..
எப்போதும் போல் கூடலுக்காக புடவையை அவிழ்க்கிறான் என்று தான் நினைத்திருந்தாள்.. ஆனால் அடித்துக் கொட்டும் மழையில் அவளை வெளியே தள்ளியிருந்தான்..
அதிலும் யார் பார்வையும் படாத பால்கனி வாயிலில் அவளை நிறுத்தி இருந்தான்..
"அங்கேயே நில்லு.. அந்த இடத்தை விட்டு அசைய கூடாது" என்ற உத்தரவு வேறு..
அப்போது பொய்கை வடிவேலன் அவள் வயிற்றில் மூன்று மாத கரு..!
"எனக்காக வேண்டாம் குழந்தைக்காக என்னை உள்ளே விடுங்களேன்.." என்று கேட்டபோது கூட மனமிரங்கவில்லையே..
"வயித்துல இருக்கற குழந்தையை வச்சு வாய்க்கு ருசியா திக்கறதும்.. வசதியா வாழறதும் மத்த பொண்ணுங்களுக்கு.. உனக்கெல்லாம் அந்த தகுதியே கிடையாது..! புள்ளைய வச்சு நீ தப்பிச்சுக்க முடியாது..!" என்று கதவை அறைந்து சாத்தியிருந்தான்..
"இப்படி ஒரு ராட்சசன் கிட்ட எதுக்காக வாழுற.. உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட போயிடு.." மாமியார் நாத்தனார் மற்றும் அவள் மீது பரிவு கொண்ட மனசாட்சியுள்ள வேலையாட்கள் என அனைவரின் சொல்பேச்சு கேட்டு ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் வீட்டிற்கு கூட ஒரு முறை அடைக்கலம் தேடி சென்றாளே..!
அண்ணன் என்ற பெயரில் ஒரு சுயநலவாதி.. அவள் வருவதை தெரிந்துகொண்டு வெளிப்பக்கம் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டது அந்த குடும்பம்..
மொட்டை வெயிலில் சேலைத் தலைப்பால் முக்காடு போட்டுக் கொண்டு கதவருகே வெகு நேரம் அமர்ந்துவிட்டு பிறகு சோர்ந்து போனவளாக வீடு திரும்பினாள்..
நல்ல வேளை அந்த சமயத்தில் ஏழு மாத கர்ப்பிணி.. கன்னம் பழுக்க இரண்டு அறைகளோடு தப்பித்துக் கொண்டாள்.. இல்லையேல் தண்டனை மிகக் கொடூரமாக இருந்திருக்கலாம்..
ஆக அவளுக்காக யாரும் இரக்கம் பார்க்க போவதில்லை.. நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வெயிலும் மழையும் அவளுக்காக மனமிரங்கினால் தான் உண்டு..
அன்று இரவு வேலைகளை முடித்துவிட்டு கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்தாள் கண்ணகி..
கட்டிலில் கால் நீட்டியபடி கண்ணபிரான் அமர்ந்திருந்தான்.. பொய்கை வடிவேலன் தந்தையின் கால்களை அணைத்தவாறு உறங்கிப் போயிருந்தான்..
கண்ணபிரானை பார்த்தவுடன் கண்ணகி புடவையை இன்னும் இழுத்து போர்த்திக் கொள்ள..
"என் முன்னாடி காட்டலாம்.. தப்பில்ல" என்றான் நக்கலாக புன்னகைத்தவாறு..
கண்ணகி அமைதியாக நின்றாள்.. அவன் படுத்து உறங்கி விட்டால் வெறுந்தரையிலாவது சென்று படுத்துக் கொள்ளலாம்.. இல்லையேல் இந்த இரவில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனிடம் தான் கேட்க வேண்டும்.. இப்படி ஒரு அடிமை வாழ்க்கை..
படித்து உயர்ந்த பதவிகளில் பணியாற்றும் பெண்களே குடும்ப நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டு தள்ளாடி தடுமாறி அறிவிழந்து முட்டாள்த்தனமாக தற்கொலை செய்து கொள்ளும்போது.. ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டு கொத்தடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகிக்கு எல்லாம் விடிவு காலம் எப்போது வருமோ..!
ஒன்று அவளாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையில் அவன் திருந்த வேண்டும்..
அவன் உறங்கி இருப்பான் என்று நினைத்துதான் தாமதமாக அறைக்குள் வந்தாள்..
விழித்திருக்கிறானே..! கட்டில் சுகத்துக்காக காத்திருக்கிறான் போலும்.. அவன் கிறங்கிய பார்வை அப்படித்தான் சொல்லியது..
"கிழிஞ்சு போன ரவிக்கையை எதுக்கு போட்டுகிட்டு சுத்தறவ.. அங்கேயே கழட்டி என்கிட்ட கொண்டு வா..!" என்றான்..
எப்போதும் சில சமயங்களில் அவனையும் அறியாமல் மோக தருணங்களில் வார்த்தைகளில் மட்டுமே மென்மை எட்டிப் பார்க்கும்..
பெருமூச்சோடு ரவிக்கையை கழட்டி போட்டுவிட்டு புடவையை போர்த்திக்கொள்ள..
"நான் உன்னை இப்ப போத்திக்க சொல்லலையே..!" என்றான் சற்று கோபமான குரலில்..
இப்படி வேறு விதமாய் தன் தேகத்தை காட்ட வேண்டுமா..! எத்தனையோ முறை அவன் முன்பு ஆடை இழந்து நிராயுதபாணியாக அவன் இச்சைக்கு தன்னை வழங்கி இருக்கிறதாள்தான்.. ஆனாலும் சில நேரங்களில் அவன் செய்யச் சொல்லும் செயல்கள் அடிப்பாதம் வரை அவளை கூச்சமுற செய்கின்றது..
மேலாடை களைந்து அவனை நோக்கி வந்தாள்..
"மெதுவா ஒன்னும் அவசரம் இல்லை..! சீக்கிரம் ஓடிவந்து எந்த கோட்டையும் பிடிக்க போறது இல்ல..!"
ஆஹா எவ்வளவு பெருந்தன்மை..!
ஏய்.. சனியனே.. மூதேவி.. கண்ணகி.. என்று கூப்பிட்ட குரலுக்கு அந்த வார்த்தைகள் முடியும்முன்னே வந்து நிற்க வேண்டும்.. இப்போது மட்டும் பொறுமையாக வந்தால் பரவாயில்லையா..?
அவள் அழகை ஆற அமர ரசிக்க வேண்டுமாம்..
மெல்ல நடந்து வந்த அவளின் அழகை கூர்மையான கண்கள் உறிஞ்சி பருகின..
மார்பை நோக்கி மறைக்க சென்ற கைகள்.. "கையால மறைக்காதே" என்ற வார்த்தைகளில் தோற்றுப் போயின..
கட்டிலை விட்டு எழுந்து நின்றான் கண்ணபிரான்..
அவள் அறைக்குள் வந்த நொடியிலிருந்து.. சேகரித்து வைத்திருந்த மோகத்தோடு அவளை ஆரத்தழுவி அள்ளி அணைத்துக் கொண்டு மஞ்சத்தில் வேட்டையாடினான்..
நல்லவேளை அடுத்த நாளும் அந்த கிழிந்த ரவிக்கையை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.. அதுவரை கண்ணகி பிழைத்தாள்..
மறுநாள் அவளுக்கான உடைகள் வந்து சேர்ந்திருந்தன..!
"இந்தா..!" என்று துணி பைகளை அவள் மீது வீசி எறிந்தான்..
மொத்தமாய் பத்து புடவைகள்.. ஒவ்வொரு புடவையாய் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் பார்த்தவரை அத்தனையும் தரமான புடவைகள்..
"எப்படி மனசு வந்துச்சு இந்த மனுஷனுக்கு..! மாமியார் நாத்தனாரிடம் காண்பிக்க வேண்டுமே.." ஆசையாக அனைத்தையும் அள்ளிக் கொண்டு செல்ல..
"ஏய்.. எங்கே போற..! நில்லு.." என்று பற்களை கடித்தான்..
விஸ்தாரமான முற்றத்தின் இருக்கையில் அவன் கால் மேல் கால் போட்டு ராஜா போல் அமர்ந்து கொள்ள.. பக்கத்தில் வந்து நின்றாள் கண்ணகி..
"வேலைக்காரங்களை கூப்பிடு.." தன் உதவியாள் மருதவேலிடம் சொல்லி அனுப்பினான்..
வரிசையாக ஆறு பெண்கள் வந்து நின்றனர்.. தரமான விலை உயர்ந்த அந்த ஆறு புடவைகளும் அந்த பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன..
மிச்சமிருந்த நான்கு விலை குறைந்த கைத்தறி புடவைகள் வேண்டா வெறுப்பாக கண்ணகியின் கைகளில் வைக்கப்பட்டது..
"உனக்கு விதிச்சது இதுதான்.. என்னை தாண்டி இந்த வீட்ல உனக்கு நல்ல கவனிப்பு போலிருக்கு.. அதான் கண்டபடி கொழுப்பும் திமிரும் கூடி போயி ரவிக்கை கூட உன்னை சுத்திக்க முடியாம திணறி கிழிஞ்சு போகுது..!" கழுத்துக்கு கீழ் இளக்காரமாக பார்த்துவிட்டு இப்படி சொல்லி விட்டு செல்ல..
கண்ணகியின் கையிலிருந்த நூல் புடவைகள் இரும்பு தகரங்களாய் கனத்தன..
தொடரும்..
"என்ன விஷயம் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு.. உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்ச மயிரா வருது.." முந்தைய நாள் இரவு அத்தனை முறை முத்தமிட்டு சிவக்க வைத்த அந்த முகம் தான் இப்போது எரிச்சலை தருகிறதாம்..
காதலுக்கு கண்ணில்லை என்பதைப்போல் காமத்திற்கும் கண்மண் தெரிவதில்லை போலும்..
"இல்ல அது வந்து.."
"ஏய் சீக்கிரம் சொல்லித் தொலை. நேரமாகுது..!"
"ஜாக்கெட் எல்லாம் நஞ்சு போச்சு.. கைய தூக்கினாலே கிழிஞ்சிடும் போலிருக்கு.. புதுசு வாங்கணும்..!" என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.. வாங்கி தரீங்களா என்று கேட்கும் உரிமையெல்லாம் அவளுக்கு இல்லை..
"ஜாக்கெட் எல்லாம் பழசாகி போச்சா..! அச்சச்சோ.." என்று போலியாக உச்சி கொட்டியவன் "இப்படி பக்கத்துல வா.." என்றழைத்தான் மீசையை நீவியபடி அவளை பார்வையால் துளைத்துக் கொண்டே..
குரலின் சுருதி மாறி போயிருக்கவே கண்ணகிக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.. அவன் அழைத்த குரலுக்கு மதிப்பு கொடுத்து பக்கத்தில் வராமல் போனாலும் அடி விழுமே..!
தயங்கி தயங்கி அவன் முன்பு வந்து நின்றாள்..
"ஆமா இதுக்கு முன்னாடி எப்ப உனக்கு டிரஸ் வாங்கி கொடுத்தேன்..?"
"ரெ.. ரெண்டு வருஷம் ஆகிடுச்சு..!" சொல்லும்போதே கண்கள் கலங்கி போனது..
யாரேனும் பிறந்தநாள்.. திருமண நாளுக்காக தரும் அன்பளிப்பு உடைகள் கூட வேலைக்கார பெண்களைப் போய் சேர்ந்தடையுமே அன்றி அவளுக்கு சொந்தமானதாய் சரித்திரமே இல்லை..!
கண்ணபிரான் என்ன வாங்கித் தருகிறானோ அதைத்தான் அவள் உடுத்த வேண்டும்..
வெளியே பகட்டாக செல்வதற்கு ஒரு பத்து பட்டு புடவைகளை வாங்கி தந்திருக்கிறான்.. அவன் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டுமே.. அந்த நோக்கத்திற்காக மட்டும்..
வீட்டில் வெறும் நூல் புடவைகள் மட்டுமே..! அதுவும் எந்த காலத்தில் வாங்கித் தந்ததோ அவளுக்கே நினைவில்லை.. அடிக்கடி துவைத்து உலர்த்தி சுத்தமாக ஓரளவு பராமரித்து வைத்திருக்கிறாள்..
எதிர்பாராத நேரத்தில் விருந்தாளிகளோ கட்சி ஆட்களோ வந்துவிட்டால் அப்போது மட்டும் உடுத்திக் கொள்ள நான்கைந்து தரமான புடவைகள் உண்டு..!
இவ்வளவுதான் கண்ணகியின் புடவை கலெக்ஷன்..
ரவிக்கைகள் கூட பச்சை மஞ்சள் சிகப்பு.. நீலம்.. கருப்பு வெள்ளை என ஆறு முக்கியமான நிறங்களை மாற்றி மாற்றி அணிந்து கொண்டிருக்கிறாள்..
தையல் விட்டுப் போனால் டெய்லரிடம் கொடுத்து ஆல்டர் செய்து கொள்ளலாம்.. துணியே நைய்ந்து போய்விட்டதே..!
"ஆமா எங்க கிழிஞ்சிருக்கு காமி.." அவன் போலி அக்கறையோடு கேட்க.. கையை தூக்கி காண்பித்தாள் கண்ணகி..
"அச்சச்சோ.." என்றவன் அவன் பலத்திற்கு லேசாக இழுக்க.. எப்போது எப்போது என காத்திருந்ததை போல் டர்ர்.. என பழைய துணி கிழிந்து போனது..
"அய்யோ..!" அவசரமாக கையை கீழே இறக்கினாள் கண்ணகி..
உதடுகள் அழுகையில் துடித்தன..!
"என்னம்மா இப்படி கிழிஞ்சு போச்சு.. இனி என்ன செய்யப் போற.." அவன் உச் கொட்டி போலி பரிதாபத்துடன் கேட்க.. புடவை இழுத்து ரவிக்கையின் கிழிந்த பகுதியை மூடி கொண்டாள் கண்ணகி..
"இதை நீ அப்பவே செஞ்சிருக்கலாம் இல்ல..! நீ கேட்டவுடனே நான் வாங்கி தரணுமாடி.. இந்த வீட்ல வேலைக்காரங்களுக்கு கூட வருஷத்துக்கு ஒருமுறைதான் துணி எடுத்து குடுக்கிறோம்.. நீ என்னோட அடிமை.. நான் நெனச்சாதான் உனக்கு எதுவும் கிடைக்கும்..!" வார்த்தைக்கு வார்த்தை அவன் குரலில் அழுத்தமும் கடுமையும் கூடியது..
வஞ்சி மென்று விழுங்கி கொண்டு அமைதியாக நின்றாள்..
"ஐயோ கண்ணீர் கொட்டுதே..! உடுப்பு கிழிஞ்சு போனதும் அழுக வருதோ.. பரவாயில்ல பேருக்கேத்த மாதிரி நீயும் பத்தினி தான்..! போ போய் வேலைய பாரு..! இப்படி அழுது வடிஞ்சு மூதேவி மாதிரி என் முன்னாடி நிக்காத.. போற காரியத்துல ஏதாவது தடங்கல் வந்துச்சு உன்னை கொன்னே போட்டுருவேன்..!" அவன் கண்களை உருட்டி அடி குரலில் கர்ஜிக்க வேகமாக அங்கிருந்து சென்றிருந்தாள் கண்ணகி..!
அன்று முழுக்க அவள் சேலையை இழுத்து போர்த்திக் கொண்டே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்ததில் வஞ்சி ஒரு மாதிரி வித்தியாசமாக அவளை பார்த்தாள்..
"என்ன அண்ணி என்ன ஆச்சு..! ஏன் அந்த கால சரோஜாதேவி மாதிரி இழுத்து போத்திக்கிட்டு வேலை செய்யறீங்க..!" வெளிப்படையாகவே கேட்க...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போ..!" என்றாள் இவள்..
"அண்ணன் அடிச்சிடுச்சா..! என்னாச்சு காட்டுங்க.."
"ஜாக்கெட் கிழிஞ்சு போச்சுடி.. சும்மா தொந்தரவு பண்ணாம போய் உன் வேலைய பாரு.."
"சரி கிழிஞ்சு போனா என்ன.. புது ஜாக்கெட் மாத்துங்க..!" என்றவளை பரிதாபமாக பார்த்தாள் கண்ணகி.. உனக்குதான் அவன் பாசக்கார அண்ணன்.. எனக்கோ கொடுங்கோலன்.. இந்த விஷயம் உனக்கு தெரியாதா என்பதைப் போல் அந்த பார்வை..
போர்த்திக்கிட்டே போய் வேலை செய் என்று சொன்ன பிறகு சொன்ன சொல் மீறவே கூடாது.. வேறு ரவிக்கை எடுத்து அணிந்து கொள்வதெல்லாம் தண்டனைக்கான குற்றம் அல்லவா..!
"நான் வேணும்னா என்னோட ஜாக்கெட் எதையாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. இல்லைனா கடைக்கு போய் புது ரவிக்கை வாங்கிக்கலாமா..?"
"ஐயோ வேண்டாம்" என்று பதறினாள் கண்ணகி..
ஒருமுறை இப்படித்தானே "என்னடி வயசானவ மாதிரி இத்துப்போன நூல் சீலையா கட்டுற..! இரு என்கிட்ட இருக்கிற நல்ல நல்ல புடவையெல்லாம் எடுத்து தரேன்.. தினமும் ஒன்னா அதைக் கட்டு..! என்று மாமியார்காரி பாக்கியம் சொன்னதில் அகமகிழ்ந்து போனவளுக்கு அன்னாளில் கண்ணபிரான் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட தன்னை நோட்டம் விட்டு வதைப்பான் என்று தெரியாமல் போனது..
பெண்களுக்கே உரித்தான புடவை ஆசை.. அழகான சேலை ஒன்றை மாமியாரிடம் வாங்கி உடுத்திக் கொண்டு சந்தோஷமாக வலம் வந்தாள்..
அன்று தானா மழை கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும்..
இரவில் அவளை அணைத்தவன் அப்போதுதான் அந்த சேலையை கவனித்தான்..!
"இது நான் வாங்கி தந்த சேலை இல்லையே..?"
"அ.. அத்த.. தந்தாங்க.."
அடுத்த கணம் அவள் சேலையை உருவி இருந்தான்..
எப்போதும் போல் கூடலுக்காக புடவையை அவிழ்க்கிறான் என்று தான் நினைத்திருந்தாள்.. ஆனால் அடித்துக் கொட்டும் மழையில் அவளை வெளியே தள்ளியிருந்தான்..
அதிலும் யார் பார்வையும் படாத பால்கனி வாயிலில் அவளை நிறுத்தி இருந்தான்..
"அங்கேயே நில்லு.. அந்த இடத்தை விட்டு அசைய கூடாது" என்ற உத்தரவு வேறு..
அப்போது பொய்கை வடிவேலன் அவள் வயிற்றில் மூன்று மாத கரு..!
"எனக்காக வேண்டாம் குழந்தைக்காக என்னை உள்ளே விடுங்களேன்.." என்று கேட்டபோது கூட மனமிரங்கவில்லையே..
"வயித்துல இருக்கற குழந்தையை வச்சு வாய்க்கு ருசியா திக்கறதும்.. வசதியா வாழறதும் மத்த பொண்ணுங்களுக்கு.. உனக்கெல்லாம் அந்த தகுதியே கிடையாது..! புள்ளைய வச்சு நீ தப்பிச்சுக்க முடியாது..!" என்று கதவை அறைந்து சாத்தியிருந்தான்..
"இப்படி ஒரு ராட்சசன் கிட்ட எதுக்காக வாழுற.. உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட போயிடு.." மாமியார் நாத்தனார் மற்றும் அவள் மீது பரிவு கொண்ட மனசாட்சியுள்ள வேலையாட்கள் என அனைவரின் சொல்பேச்சு கேட்டு ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் வீட்டிற்கு கூட ஒரு முறை அடைக்கலம் தேடி சென்றாளே..!
அண்ணன் என்ற பெயரில் ஒரு சுயநலவாதி.. அவள் வருவதை தெரிந்துகொண்டு வெளிப்பக்கம் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டது அந்த குடும்பம்..
மொட்டை வெயிலில் சேலைத் தலைப்பால் முக்காடு போட்டுக் கொண்டு கதவருகே வெகு நேரம் அமர்ந்துவிட்டு பிறகு சோர்ந்து போனவளாக வீடு திரும்பினாள்..
நல்ல வேளை அந்த சமயத்தில் ஏழு மாத கர்ப்பிணி.. கன்னம் பழுக்க இரண்டு அறைகளோடு தப்பித்துக் கொண்டாள்.. இல்லையேல் தண்டனை மிகக் கொடூரமாக இருந்திருக்கலாம்..
ஆக அவளுக்காக யாரும் இரக்கம் பார்க்க போவதில்லை.. நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வெயிலும் மழையும் அவளுக்காக மனமிரங்கினால் தான் உண்டு..
அன்று இரவு வேலைகளை முடித்துவிட்டு கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்தாள் கண்ணகி..
கட்டிலில் கால் நீட்டியபடி கண்ணபிரான் அமர்ந்திருந்தான்.. பொய்கை வடிவேலன் தந்தையின் கால்களை அணைத்தவாறு உறங்கிப் போயிருந்தான்..
கண்ணபிரானை பார்த்தவுடன் கண்ணகி புடவையை இன்னும் இழுத்து போர்த்திக் கொள்ள..
"என் முன்னாடி காட்டலாம்.. தப்பில்ல" என்றான் நக்கலாக புன்னகைத்தவாறு..
கண்ணகி அமைதியாக நின்றாள்.. அவன் படுத்து உறங்கி விட்டால் வெறுந்தரையிலாவது சென்று படுத்துக் கொள்ளலாம்.. இல்லையேல் இந்த இரவில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனிடம் தான் கேட்க வேண்டும்.. இப்படி ஒரு அடிமை வாழ்க்கை..
படித்து உயர்ந்த பதவிகளில் பணியாற்றும் பெண்களே குடும்ப நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டு தள்ளாடி தடுமாறி அறிவிழந்து முட்டாள்த்தனமாக தற்கொலை செய்து கொள்ளும்போது.. ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டு கொத்தடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகிக்கு எல்லாம் விடிவு காலம் எப்போது வருமோ..!
ஒன்று அவளாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையில் அவன் திருந்த வேண்டும்..
அவன் உறங்கி இருப்பான் என்று நினைத்துதான் தாமதமாக அறைக்குள் வந்தாள்..
விழித்திருக்கிறானே..! கட்டில் சுகத்துக்காக காத்திருக்கிறான் போலும்.. அவன் கிறங்கிய பார்வை அப்படித்தான் சொல்லியது..
"கிழிஞ்சு போன ரவிக்கையை எதுக்கு போட்டுகிட்டு சுத்தறவ.. அங்கேயே கழட்டி என்கிட்ட கொண்டு வா..!" என்றான்..
எப்போதும் சில சமயங்களில் அவனையும் அறியாமல் மோக தருணங்களில் வார்த்தைகளில் மட்டுமே மென்மை எட்டிப் பார்க்கும்..
பெருமூச்சோடு ரவிக்கையை கழட்டி போட்டுவிட்டு புடவையை போர்த்திக்கொள்ள..
"நான் உன்னை இப்ப போத்திக்க சொல்லலையே..!" என்றான் சற்று கோபமான குரலில்..
இப்படி வேறு விதமாய் தன் தேகத்தை காட்ட வேண்டுமா..! எத்தனையோ முறை அவன் முன்பு ஆடை இழந்து நிராயுதபாணியாக அவன் இச்சைக்கு தன்னை வழங்கி இருக்கிறதாள்தான்.. ஆனாலும் சில நேரங்களில் அவன் செய்யச் சொல்லும் செயல்கள் அடிப்பாதம் வரை அவளை கூச்சமுற செய்கின்றது..
மேலாடை களைந்து அவனை நோக்கி வந்தாள்..
"மெதுவா ஒன்னும் அவசரம் இல்லை..! சீக்கிரம் ஓடிவந்து எந்த கோட்டையும் பிடிக்க போறது இல்ல..!"
ஆஹா எவ்வளவு பெருந்தன்மை..!
ஏய்.. சனியனே.. மூதேவி.. கண்ணகி.. என்று கூப்பிட்ட குரலுக்கு அந்த வார்த்தைகள் முடியும்முன்னே வந்து நிற்க வேண்டும்.. இப்போது மட்டும் பொறுமையாக வந்தால் பரவாயில்லையா..?
அவள் அழகை ஆற அமர ரசிக்க வேண்டுமாம்..
மெல்ல நடந்து வந்த அவளின் அழகை கூர்மையான கண்கள் உறிஞ்சி பருகின..
மார்பை நோக்கி மறைக்க சென்ற கைகள்.. "கையால மறைக்காதே" என்ற வார்த்தைகளில் தோற்றுப் போயின..
கட்டிலை விட்டு எழுந்து நின்றான் கண்ணபிரான்..
அவள் அறைக்குள் வந்த நொடியிலிருந்து.. சேகரித்து வைத்திருந்த மோகத்தோடு அவளை ஆரத்தழுவி அள்ளி அணைத்துக் கொண்டு மஞ்சத்தில் வேட்டையாடினான்..
நல்லவேளை அடுத்த நாளும் அந்த கிழிந்த ரவிக்கையை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.. அதுவரை கண்ணகி பிழைத்தாள்..
மறுநாள் அவளுக்கான உடைகள் வந்து சேர்ந்திருந்தன..!
"இந்தா..!" என்று துணி பைகளை அவள் மீது வீசி எறிந்தான்..
மொத்தமாய் பத்து புடவைகள்.. ஒவ்வொரு புடவையாய் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் பார்த்தவரை அத்தனையும் தரமான புடவைகள்..
"எப்படி மனசு வந்துச்சு இந்த மனுஷனுக்கு..! மாமியார் நாத்தனாரிடம் காண்பிக்க வேண்டுமே.." ஆசையாக அனைத்தையும் அள்ளிக் கொண்டு செல்ல..
"ஏய்.. எங்கே போற..! நில்லு.." என்று பற்களை கடித்தான்..
விஸ்தாரமான முற்றத்தின் இருக்கையில் அவன் கால் மேல் கால் போட்டு ராஜா போல் அமர்ந்து கொள்ள.. பக்கத்தில் வந்து நின்றாள் கண்ணகி..
"வேலைக்காரங்களை கூப்பிடு.." தன் உதவியாள் மருதவேலிடம் சொல்லி அனுப்பினான்..
வரிசையாக ஆறு பெண்கள் வந்து நின்றனர்.. தரமான விலை உயர்ந்த அந்த ஆறு புடவைகளும் அந்த பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன..
மிச்சமிருந்த நான்கு விலை குறைந்த கைத்தறி புடவைகள் வேண்டா வெறுப்பாக கண்ணகியின் கைகளில் வைக்கப்பட்டது..
"உனக்கு விதிச்சது இதுதான்.. என்னை தாண்டி இந்த வீட்ல உனக்கு நல்ல கவனிப்பு போலிருக்கு.. அதான் கண்டபடி கொழுப்பும் திமிரும் கூடி போயி ரவிக்கை கூட உன்னை சுத்திக்க முடியாம திணறி கிழிஞ்சு போகுது..!" கழுத்துக்கு கீழ் இளக்காரமாக பார்த்துவிட்டு இப்படி சொல்லி விட்டு செல்ல..
கண்ணகியின் கையிலிருந்த நூல் புடவைகள் இரும்பு தகரங்களாய் கனத்தன..
தொடரும்..
Last edited: