- Joined
- Jan 10, 2023
- Messages
- 83
- Thread Author
- #1
உதய கிருஷ்ணன் காலையில் எழும்போது.. எதையாவது உருட்டி சத்தம் எழுப்பிக்கொண்டு அவன் உறக்கத்தை கலைக்கும் பத்மினி அங்கே இல்லை.. கண்களை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தான்..
சமீப நாட்களாக அசடு வழிந்து கொண்டு அவள் சொல்லும் காலை வணக்கத்தோடுதான் நாள் துவங்குகிறது.. இன்று அது மிஸ்ஸிங்..
சுற்றும் முற்றும் சில நொடிகள் பார்த்துவிட்டு தன் அலைபேசிக்கு கண்களை கொடுத்தவன்.. முக்கியமான மெயில்களை பார்த்து அதற்கு பதில் அனுப்பிவிட்டு ஜாகிங் செல்ல எழுந்து வீட்டை விட்டு வெளியேறினான்.. அப்போதும் பத்மினியை பார்க்க முடியவில்லை..
ஒருமணி நேரம் கழித்து வீடு வந்தவன் துணிமணிகளோடு அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்..
"என்ன ஆளையே காணோம்.. இவ்வளவு நேரம் கண்முன்னே வராம இருக்க வாய்ப்பில்லையே..!! பூத்துண்டால் தலைத் துவட்டி கொண்டிருந்த உதய்கிருஷ்ணன் யோசிக்காமல் இல்லை..
"ஏன்ப்பா உதய்.." கதவைத் தட்டிக் கொண்டிருந்தார் ரமணி..
"கதவு திறந்துதான் இருக்கு உள்ள வாங்க.." என்றான் வழக்கம் போல விரைப்பான குரலில்..
மீண்டும் "உதய்" என்று அழைத்துக் கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தார் ரமணி..
"சொல்லுங்க.."
"ஒன்னும் இல்லப்பா.. பத்மினி ஏதோ வேலையா போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கா..!! காலையிலேயே எழுந்து கிளம்பி போயிட்டா.. அங்கே வேலையை முடிச்சிட்டு அப்படியே பேங்க்கும் போயிட்டு வர்றதா சொன்னா.."
"என்கிட்ட எதுவும் சொல்லலையே..!!" அவன் புருவங்கள் யோசனையோடு முடிச்சிட்டன..
"என்கிட்ட சொன்னாளே..!! ஏதோ அவசர வேலையாம்.. இன்னைக்கே முடிக்கணுமாம்.."
உதய் கிருஷ்ணனின் முகம் இறுகியது.. அதுக்கு..?
"இன்னிக்கு ஒரு நாள் உன்னை சமைக்க சொன்னா..!!"
உதய் பற்களை கடித்தான்.. "என்ன விளையாடறாளா அவ.. இதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணிக்கனும்னு தெரியாதா..!! நேத்து ராத்திரி முழுக்க என் பக்கத்துலதான் இருந்தா.." என்று சொன்னதும் ரமணியம்மா அவனைக் கண்கள் விரித்துப் பார்த்தார்.. உதய் அதை உணர்ந்தான் இல்லை..
"ஒரு வார்த்தை.. நாளைக்கு வெளி வேலை இருக்கு.. நீங்க சமைச்சிடுங்கன்னு சொல்லிட்டு போயிருக்கலாமில்ல.. நானும் சீக்கிரம் எழுந்து அதுக்கேத்த மாதிரி என்னோட ஷெட்யூல் பிளான் பண்ணி இருப்பேன்.."
"சரி விடுடா மறந்திருப்பா..!!"
"உங்ககிட்ட சொல்லனும்னு தோணுது.. என்னை எழுப்பி சொல்லணும்னு அவளுக்கு தெரியலையா..!!" உதய் விடுவதாய் இல்லை..
"என்னடா இது..!! ஏட்டிக்கு போட்டியா நின்னா என்ன செய்ய முடியும்.. நீ தூங்கிட்டு இருந்த.. உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்ன்னு சொல்லாம போயிருக்கலாம்.."
"ஏன் நீங்க மட்டும் அத்தன காலம்பர எழுந்து கந்த சஷ்டி கவசம் சொல்லிட்டு இருந்தீங்களா..!!"
"எனக்கு காலையிலேயே முழிப்பு வந்துடுச்சு.. புக் படிச்சிட்டு இருந்தேன்.. அதனால என்கிட்ட சொல்லிட்டு போயிருப்பா.."
"இதெல்லாம் நொண்டி சாக்கு.."
"உதய்.." அழுத்தமாக அழைத்த அம்மாவை தீர்க்கமாக ஏறிட்டுப் பார்த்தான் அவன்..
"இப்போ உனக்கு சமைக்கணுமேங்கிறது பிரச்சனையா..!! இல்ல அவ உன்கிட்ட சொல்லிட்டு போகலைங்கறது பிரச்சினையா..!!"
அமைதியாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..
"அவ எங்க போனாலும் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு உரிமையா எதிர்பார்க்கிற அதானே..!!! ரமணி எதிர்பார்ப்புடன் புன்னகைத்தாள்..
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. அவன் எப்படி போனா எனக்கென்ன வந்துச்சு.. ஆபீஸ்க்கு நேரமாச்சு.. இப்ப நான் சமைக்கணும்.. அதுதான் பெரிய பிரச்சனை..!!" அவ்வளவு கோபத்திலும் ஈரத் துண்டை கட்டிலின் விளிம்பில் காய போட்டு விட்டு அம்மாவை கடந்து வெளியேறி சென்றான் உதய்..
"இவ்வளவு சிரமப்பட்டு நீ ஒன்னும் சமைக்க தேவையில்லை.. ஒரு நாள் பட்டினி கிடந்து நான் ஒன்னும் செத்துட மாட்டேன்..!!"
"அம்மா சும்மா இருங்க.. நானே கடுப்புல இருக்கேன்.. !! அப்புறம் ஏதாவது பேசிட போறேன்.." சமையலறையிலிருந்து சத்தம் வந்தது..
"நானும்தான்டா கடுப்புல இருக்கேன்.. பத்மினியோட நல்ல சமையலை சாப்பிட்டு பழகிட்டேன்.. இன்னைக்கு மறுபடி உன்னோட உப்பு சப்பில்லாத சமையலை சாப்பிடனுமே..!!" சோகமாக கன்னத்தில் கை வைத்தவருக்கு மூளையில் பளிச்சென பல்பு எரிந்தது..
"ஒருவேளை அப்படி இருக்குமோ..?" கண்களை உருட்டினார்..
"ஒருவேளை பத்மினியை.. அவ சமையல் மிஸ் பண்றானோ.. அதனாலதான் இவ்வளவு கோபம் வருதோ..? இவனுக்கு எல்லாத்தையும் கோபமா காட்டித்தானே பழக்கம்.. என்ன செய்ய..? நம்ம வளர்ப்பு அப்படி.. எந்த உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு சொல்லி சொல்லி.. அவனை ஜடமா மாத்தி வச்சிருக்கேனோ.. பசிக்குதுன்னா கூட எரிச்சலாத்தானே சொல்லுவான்.. அந்த மாதிரி பத்மினி இல்லாத கோபத்தை இப்படி காட்டறானோ.." தீவிரமாக யோசித்தார் ரமணி.. ஆனால் வாய்ப்பில்ல ராஜா.. என்று மனசாட்சி உலக உருண்டை போல் கையை உருட்டி காட்ட..
"அதானே இவனாவது.. அவளை நினைத்து ஏங்கறதாவது.. இப்ப சமைக்கிறதுதான் இவனை பொருத்தவரை பெரிய பிரச்சனை.. அதுக்காக தான் இந்த கோபம்..!! பாவம் பத்மினி இவனாண்ட மாட்டிக்கிட்டு படாத பாடுபடறா.. நான் கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்.." புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றார் ரமணி..
ஏதோ அவசரமாக சமைத்து முடித்து உடை மாற்றுவதற்காக அறைக்குள் வந்த உதய் கிருஷ்ணாவின் கண்களில் பட்டது மேஜை மீது மறதியாக அவள் தனியாக எடுத்து வைத்திருந்த வாடி கசங்கிய மல்லிகை சரம்..
"வாடி போன பிறகும் குப்பை கூடையில் போட மனசு வரலையோ..!!" ஆங்காங்கே பூக்கள் உதிர்ந்து.. நூலும் பூவுமாக நீண்டிருந்த சரத்தை கையில் எடுத்து குப்பை கூடையில் வீசியெறிய போனவன் என்ன நினைத்தானோ.. மீண்டும் அதே இடத்தில் பூவை வைத்திருந்தான்..
வங்கிக்கு சென்ற இடத்தில் பத்மினிக்கு வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை.. அலுவலகத்திற்கு விடுப்பு சொல்ல அலைபேசியை எடுத்த நேரத்தில் அனுஷாவை பார்க்க நேர்ந்தது..
தம்பி மனைவி என்றாலும் அனுஷாவின் மீது வெறுப்பு மண்டி கிடக்கிறது.. வாழ்ந்துட்டு போங்க என்று தம்பிக்காக மட்டுமே விரத்தியோடு அங்கிருந்து பிரிந்து விடுதிக்கு வந்தாள்..
இப்போது நேருக்கு நேராக பார்க்க.. வேறு வழியில்லாமல் சினேகமாக புன்னகைக்க வேண்டியிருக்கிறது.. நிச்சயமாக அந்த புன்னகையில் உயிர்ப்பில்லை..
ஆனால் அந்த இங்கிதம் கூட அனுஷாவிற்கு கிடையாது..
திருமணத்தன்று தன் கணவனின் பொருட்டு வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள்.. இங்கே அந்த மாதிரியான எந்த அவசியமும் இல்லையே..!!
"என்ன பத்மினி.. சந்தோஷமா இருக்கீங்களா..!! அது சரி எப்படி சந்தோஷமா இருக்க முடியும்.. இன்னொரு குடியை கெடுத்துட்டு தான் மற்றும் சந்தோஷமாக வாழ்ந்திட முடியுமா என்ன..?" அனுஷாவின் ஏளன பேச்சில் பத்மினியின் முகம் மாறியது..
"என்ன பேசற அனுஷா..?"
"நான் ஒன்னும் இல்லாததை சொல்லல.. என் அண்ணன் மேல இல்லாததும் பொல்லாததும் பழியை சுமத்திட்டு அவன் வாழ்க்கையை நிம்மதி இல்லாம ஆக்கிட்டு.. நீ மட்டும் சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா என்ன.. அதான் அன்னைக்கே பார்த்தேனே உன் புருஷன் மூஞ்சியை.. எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தம்பட்டம் போட்டுக்க ஒரு கல்யாணம்.."
"என்னடா பணக்கார ஆளா இருக்கானே.. உன்கிட்ட வந்து எப்படி சிக்கினான்னு யோசிச்சேன்.. பேருக்கு ஒரு மனைவின்னு உன்னை கல்யாணம் பண்ணி இருக்கார்.. கல்யாணத்தன்னைக்கே உன் மூஞ்சியை நிமிர்ந்து கூட பாக்கலையே.. உன் புருஷன் உன்னை ஒரு மனுஷியாக கூட மதிக்கலைன்னு அவர் நடந்துகிட்ட முறையிலேயே எங்களுக்கு தெரிஞ்சிருச்சு.. பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. பின்ன எங்க வயித்தெரிச்சல் சும்மா விடுமா.. என்னமோ நீதான் உலகத்திலேயே ரதி மேனகை மாதிரி என்ன ஆட்டம் போட்ட.. எல்லா ஆம்பளைங்களும் உன்கிட்ட மயங்கி விழுந்துடுவாங்கன்னு நினைப்பு.. வச்சார்ல கடவுள் ஆப்பு.. சொந்த புருஷனே உன்னை கண்டுக்க மாட்டேங்றார்.. யார்கண்டா அவருக்கும் உன்னோட கேவலமான குணம் தெரிஞ்சிருக்கும்.. அதனாலதான் உன்னை நாயை விட கேவலமா நடத்தறார்.."
இருதயம் சுக்கு நூறாக உடைய.. அவள் முன்பு அழக்கூடாது என்ற இறுமாப்போடு நின்று கொண்டிருந்தாள் பத்மினி..
"யோசிச்சு பாத்தியா.. நீ எவ்வளவு சபிக்கப்பட்டவளா இருந்தா சராசரி பெண்களுக்கு அமையற சாதாரணமான வாழ்க்கை கூட உனக்கு அமையலன்னு.. மொத புருஷன் அல்பாய்ஸ்ல போய்ட்டான்.. இரண்டாவது புருஷன் உன்னை மனுஷியாக கூட ஏத்துக்க தயாரா இல்லை.. வயிறு எரிஞ்சு சொல்றேன்.. உன்னோட கேவலமான எண்ணங்களுக்கு இதை விட அனுபவிப்ப..!!" முடிந்தவரை தனது வன்மத்தை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அனுஷா..
"எப்படி பத்மினி.. எப்படி அந்த மைனரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச.. கால்ல விழுந்துட்டியா..!! விழுந்தாலும் விழுந்திருப்ப.. நினைச்சதை சாதிக்க நீ என்ன வேணா செய்வியே..!! மத்தவங்க மாதிரி கல்யாணத்தின் மூலமா ஒரு போலியா அங்கீகாரம் உனக்கு கிடைச்சிருக்கலாம்.. ஒரு குடும்பத்து பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எந்த சந்தோஷமும் எப்பவும் உனக்கு கிடைக்காது.. எங்க அண்ணன் கிட்ட தரம் தாழ்ந்து நடந்துகிட்டியே..!! அந்த மாதிரி எவன்கிட்டயாவது தப்பான வழியில் போனாத்தான் உண்டு..!!" பேசி முடிக்கவில்லை.. பொறுமை இழந்து கொதித்து போனவள் அவள் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தாள்..
அத்தனை பேரும் திரும்பி பார்க்க அறை வாங்கிய அவமானத்தில் சிவந்து நின்றிருந்தாள் அனுஷா..
மதிய உணவு இடைவேளை ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் ரமணியம்மா உதய் கிருஷ்ணனுக்கு அழைத்து ஒரே புலம்பல்..
"என்னடா சமைச்சு வச்சிருக்க.. சாதம் குழைஞ்சி போயிடுச்சு.. கஞ்சி தண்ணியை சரியா வடிக்கலையா நீ..!! தட்டுல எடுத்து போட முடியல.. பேஸ்ட் மாதிரி இருக்குது.. புடலங்காய் கறியில உப்பே இல்லை.." டென்ஷனானான் அவன்..
"இவ்வளவு குறை சொல்றவங்க நீங்களே சமைச்சுக்க வேண்டியதுதானே..!!"
"எத்தனை வருஷமா உனக்கு சமைச்சு போட்டுருப்பேன்.. வயசாயிடுச்சு.. அடுப்படியில் அஞ்சு நிமிஷம் நிக்க முடியல.. என்ன பண்றது.. என் தலையெழுத்து அப்படி.. உன்னாண்ட வாங்கி கட்டிக்கணும்னு.. உன்ன குறை சொன்னா மட்டும் இவ்வளவு கோபம் வருதே.. நீ மட்டும் மத்தவங்களை வண்டி வண்டியாக குறை சொல்றியே..!! என்ன இருந்தாலும் பத்மினி சமையல் மாதிரி வராது.."
"ஏன் சொல்ல மாட்டீங்க.. நீங்க பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு பார்த்து பார்த்து சமைச்சு போடறேன் பாருங்க.. எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.. உடம்பு எக்கேடும் கெட்டுப் போகணும்னு ஹோட்டல் ஆர்டர் பண்ணி கொடுத்திருக்கணும்.."
"சமைச்சேன்னு சொல்லு.. பார்த்து பார்த்து சமைச்சேன்னு சொல்லாதே..!!"
"அம்மா.."
"இப்ப நான் எப்படி சாப்பிடறது இதை..!! ஹோட்டலில் இருந்து ஏதாவது ஆர்டர் பண்ணி வரவழை.."
"ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு கெடுதி.. இன்னைக்கு ஒரு நாள் தயிர் ஊத்தி சாப்பிடுங்க.. நான் சமையல் கட்டு பக்கமே வரல.. உங்க செல்ல மருமகளையே இனி சமைக்க சொல்லுங்க.. நீங்க சாப்பிட்டாலும் சரி பட்டினியா கடந்தாலும் சரி.. இனி எனக்கு எந்த அக்கறையும் இல்லை..!!" கோபத்தோடு அழைப்பை துண்டித்தான்..
அம்மாவை சரி கட்டியாயிற்று.. இப்போது இன்னொரு பெரிய பிரச்சனை.. அவனும் அதே உணவைத்தான் சாப்பிட வேண்டும்..
ஹோட்டல் உணவு அவனுக்கும் இறங்காது.. வேகாத நெத்து நெத்தாய் சோடா உப்பு சேர்த்த சாதம்.. ஹோட்டல் சமையலுக்கே உரிய வாசனையோடு கூடிய சாம்பார் ரசம் பொரியல்.. எதுவும் பிடிக்கிறது இல்லை..
தனது கேரியர் டிபன் பாக்ஸை எடுத்து ஒவ்வொன்றாய் பிரித்தான்..
சாதத்தை தட்டில் தட்டினான்.. குழைந்த சாதம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பந்து போல் ஒரு சேர தட்டில் விழுந்தது.. அதிலும் அந்த புடலங்காய் கறி.. சிறுபருப்பு வேகவே இல்லை.. உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இல்லை.. பசிக்கு உணவு என்று இதில் ருசிக்கு என்ன அவசியம் என்று சொல்லிக் கொண்டிருந்தவனால் அவன் சமைத்த சாப்பாட்டை அவனாலையே சாப்பிட முடியவில்லை..
பழைய உதய கிருஷ்ணன் கடமைக்காகவாது உணவை அள்ளி விழுங்கி இருப்பான்.. ஆனால் இவன்.. உணவில் கை வைத்து விட்டு உண்ணாமல் கண்கள் மூடி திறந்தான்.. "சமைச்சு வச்சிட்டாவது போயிருக்கலாமில்ல.." வாய்க்குள் முணுமுணுத்தபடி வேறு வழியில்லாமல் உணவை பிசைந்து அள்ளி வாயில் வைத்தான்.. அவளைப் பிடிக்கவில்லை.. ஒருவேளை அவள் சமையல் பிடித்திருக்கிறதோ..
உணவை வீணாக்க கூடாது என்ற ரீதியில் உண்டு முடித்து விட்டான்.. ஆனால் காலையிலிருந்து ஏனோ இன்று அளவுக்கதிகமான கோபமும் டென்ஷனும்.. ஏதோ சரியாக இல்லை.. காலையிலிருந்து ஒரே சொதப்பல்..
"என்ன..? சார் இன்னைக்கு கூடுதல் டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது.. பத்மினி மேடம் இல்லையே.. அதான் சார் ஏக்கத்தில் வருந்தி தவிக்கிறார் போலிருக்கு..!!" கேலி கிண்டல் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன..
"யார் கதவைத் திறந்தாலும் எதிர்பார்ப்போட பாக்கற மாதிரி தெரியுதே..!!"
"ஏன் அம்மணி சார் கிட்ட லீவ் சொல்லிட்டு போகலையா..!!"
"சொல்லிட்டு போனாலும் எப்ப வருவாங்கற எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல..!!"
"அப்படி என்ன எதிர்பார்ப்பு.. சார் முகத்தில் தெரியற ஏக்கத்தை நானும் பார்க்கணுமே..!!" ஏதோ ஒரு ஃபைலை தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற ஒருத்தி
கண்கள் விரிய வெளியே வந்தாள்..
"ஆமான்டி.. மே ஐ கம் இன் கேட்கறேன்.. தலையை தூக்கி பார்த்தார் பாரு ஒரு பார்வை.. !! அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு.. பத்மினிக்காகதான் இந்த பார்வையா..? எனக்காக இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.."
"போதும் அவர் ஓல்ட் மேன் போய் வேலையை பாரு.."
"ஓல்ட் மேன்னா இருந்தாலும் கோல்டுமேன்.. உடம்பை உயரத்துக்கு ஏத்த மாதிரி கின்னுன்னு வச்சிருக்கார்.. முகத்தில் ஒரு சுருக்கம் இல்லை.. அதனாலதான் பத்மினி தன்னோட தொந்தி புருஷனை விட்டுட்டு இவரை இறுக்கமா பிடிச்சுகிட்டா.. வீட்ல ஒன்னு வெளியில ஒன்னு எப்படித்தான் மெயின்டெயின் பண்றாளோ.." ஏக்க பெருமூச்சு..
"சரி போதும் இங்கிருந்து போ.. சார் கண்ணாடி வழியா இங்கதான் பாக்கறார்.."
"பத்மினியை தேடறாரோ.." அந்தப் பெண்களிடம் ஒரே சிரிப்பு..
நெருப்பில்லாமல் புகையாது என்பது சில நேரங்களில் உண்மையாகி விடுகிறதோ..!!
ஆனால் பத்மினி வந்ததும் அவன் நடந்து கொண்ட முறை..?
தொடரும்..
சமீப நாட்களாக அசடு வழிந்து கொண்டு அவள் சொல்லும் காலை வணக்கத்தோடுதான் நாள் துவங்குகிறது.. இன்று அது மிஸ்ஸிங்..
சுற்றும் முற்றும் சில நொடிகள் பார்த்துவிட்டு தன் அலைபேசிக்கு கண்களை கொடுத்தவன்.. முக்கியமான மெயில்களை பார்த்து அதற்கு பதில் அனுப்பிவிட்டு ஜாகிங் செல்ல எழுந்து வீட்டை விட்டு வெளியேறினான்.. அப்போதும் பத்மினியை பார்க்க முடியவில்லை..
ஒருமணி நேரம் கழித்து வீடு வந்தவன் துணிமணிகளோடு அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்..
"என்ன ஆளையே காணோம்.. இவ்வளவு நேரம் கண்முன்னே வராம இருக்க வாய்ப்பில்லையே..!! பூத்துண்டால் தலைத் துவட்டி கொண்டிருந்த உதய்கிருஷ்ணன் யோசிக்காமல் இல்லை..
"ஏன்ப்பா உதய்.." கதவைத் தட்டிக் கொண்டிருந்தார் ரமணி..
"கதவு திறந்துதான் இருக்கு உள்ள வாங்க.." என்றான் வழக்கம் போல விரைப்பான குரலில்..
மீண்டும் "உதய்" என்று அழைத்துக் கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தார் ரமணி..
"சொல்லுங்க.."
"ஒன்னும் இல்லப்பா.. பத்மினி ஏதோ வேலையா போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கா..!! காலையிலேயே எழுந்து கிளம்பி போயிட்டா.. அங்கே வேலையை முடிச்சிட்டு அப்படியே பேங்க்கும் போயிட்டு வர்றதா சொன்னா.."
"என்கிட்ட எதுவும் சொல்லலையே..!!" அவன் புருவங்கள் யோசனையோடு முடிச்சிட்டன..
"என்கிட்ட சொன்னாளே..!! ஏதோ அவசர வேலையாம்.. இன்னைக்கே முடிக்கணுமாம்.."
உதய் கிருஷ்ணனின் முகம் இறுகியது.. அதுக்கு..?
"இன்னிக்கு ஒரு நாள் உன்னை சமைக்க சொன்னா..!!"
உதய் பற்களை கடித்தான்.. "என்ன விளையாடறாளா அவ.. இதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணிக்கனும்னு தெரியாதா..!! நேத்து ராத்திரி முழுக்க என் பக்கத்துலதான் இருந்தா.." என்று சொன்னதும் ரமணியம்மா அவனைக் கண்கள் விரித்துப் பார்த்தார்.. உதய் அதை உணர்ந்தான் இல்லை..
"ஒரு வார்த்தை.. நாளைக்கு வெளி வேலை இருக்கு.. நீங்க சமைச்சிடுங்கன்னு சொல்லிட்டு போயிருக்கலாமில்ல.. நானும் சீக்கிரம் எழுந்து அதுக்கேத்த மாதிரி என்னோட ஷெட்யூல் பிளான் பண்ணி இருப்பேன்.."
"சரி விடுடா மறந்திருப்பா..!!"
"உங்ககிட்ட சொல்லனும்னு தோணுது.. என்னை எழுப்பி சொல்லணும்னு அவளுக்கு தெரியலையா..!!" உதய் விடுவதாய் இல்லை..
"என்னடா இது..!! ஏட்டிக்கு போட்டியா நின்னா என்ன செய்ய முடியும்.. நீ தூங்கிட்டு இருந்த.. உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்ன்னு சொல்லாம போயிருக்கலாம்.."
"ஏன் நீங்க மட்டும் அத்தன காலம்பர எழுந்து கந்த சஷ்டி கவசம் சொல்லிட்டு இருந்தீங்களா..!!"
"எனக்கு காலையிலேயே முழிப்பு வந்துடுச்சு.. புக் படிச்சிட்டு இருந்தேன்.. அதனால என்கிட்ட சொல்லிட்டு போயிருப்பா.."
"இதெல்லாம் நொண்டி சாக்கு.."
"உதய்.." அழுத்தமாக அழைத்த அம்மாவை தீர்க்கமாக ஏறிட்டுப் பார்த்தான் அவன்..
"இப்போ உனக்கு சமைக்கணுமேங்கிறது பிரச்சனையா..!! இல்ல அவ உன்கிட்ட சொல்லிட்டு போகலைங்கறது பிரச்சினையா..!!"
அமைதியாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..
"அவ எங்க போனாலும் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு உரிமையா எதிர்பார்க்கிற அதானே..!!! ரமணி எதிர்பார்ப்புடன் புன்னகைத்தாள்..
"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. அவன் எப்படி போனா எனக்கென்ன வந்துச்சு.. ஆபீஸ்க்கு நேரமாச்சு.. இப்ப நான் சமைக்கணும்.. அதுதான் பெரிய பிரச்சனை..!!" அவ்வளவு கோபத்திலும் ஈரத் துண்டை கட்டிலின் விளிம்பில் காய போட்டு விட்டு அம்மாவை கடந்து வெளியேறி சென்றான் உதய்..
"இவ்வளவு சிரமப்பட்டு நீ ஒன்னும் சமைக்க தேவையில்லை.. ஒரு நாள் பட்டினி கிடந்து நான் ஒன்னும் செத்துட மாட்டேன்..!!"
"அம்மா சும்மா இருங்க.. நானே கடுப்புல இருக்கேன்.. !! அப்புறம் ஏதாவது பேசிட போறேன்.." சமையலறையிலிருந்து சத்தம் வந்தது..
"நானும்தான்டா கடுப்புல இருக்கேன்.. பத்மினியோட நல்ல சமையலை சாப்பிட்டு பழகிட்டேன்.. இன்னைக்கு மறுபடி உன்னோட உப்பு சப்பில்லாத சமையலை சாப்பிடனுமே..!!" சோகமாக கன்னத்தில் கை வைத்தவருக்கு மூளையில் பளிச்சென பல்பு எரிந்தது..
"ஒருவேளை அப்படி இருக்குமோ..?" கண்களை உருட்டினார்..
"ஒருவேளை பத்மினியை.. அவ சமையல் மிஸ் பண்றானோ.. அதனாலதான் இவ்வளவு கோபம் வருதோ..? இவனுக்கு எல்லாத்தையும் கோபமா காட்டித்தானே பழக்கம்.. என்ன செய்ய..? நம்ம வளர்ப்பு அப்படி.. எந்த உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு சொல்லி சொல்லி.. அவனை ஜடமா மாத்தி வச்சிருக்கேனோ.. பசிக்குதுன்னா கூட எரிச்சலாத்தானே சொல்லுவான்.. அந்த மாதிரி பத்மினி இல்லாத கோபத்தை இப்படி காட்டறானோ.." தீவிரமாக யோசித்தார் ரமணி.. ஆனால் வாய்ப்பில்ல ராஜா.. என்று மனசாட்சி உலக உருண்டை போல் கையை உருட்டி காட்ட..
"அதானே இவனாவது.. அவளை நினைத்து ஏங்கறதாவது.. இப்ப சமைக்கிறதுதான் இவனை பொருத்தவரை பெரிய பிரச்சனை.. அதுக்காக தான் இந்த கோபம்..!! பாவம் பத்மினி இவனாண்ட மாட்டிக்கிட்டு படாத பாடுபடறா.. நான் கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்.." புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றார் ரமணி..
ஏதோ அவசரமாக சமைத்து முடித்து உடை மாற்றுவதற்காக அறைக்குள் வந்த உதய் கிருஷ்ணாவின் கண்களில் பட்டது மேஜை மீது மறதியாக அவள் தனியாக எடுத்து வைத்திருந்த வாடி கசங்கிய மல்லிகை சரம்..
"வாடி போன பிறகும் குப்பை கூடையில் போட மனசு வரலையோ..!!" ஆங்காங்கே பூக்கள் உதிர்ந்து.. நூலும் பூவுமாக நீண்டிருந்த சரத்தை கையில் எடுத்து குப்பை கூடையில் வீசியெறிய போனவன் என்ன நினைத்தானோ.. மீண்டும் அதே இடத்தில் பூவை வைத்திருந்தான்..
வங்கிக்கு சென்ற இடத்தில் பத்மினிக்கு வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை.. அலுவலகத்திற்கு விடுப்பு சொல்ல அலைபேசியை எடுத்த நேரத்தில் அனுஷாவை பார்க்க நேர்ந்தது..
தம்பி மனைவி என்றாலும் அனுஷாவின் மீது வெறுப்பு மண்டி கிடக்கிறது.. வாழ்ந்துட்டு போங்க என்று தம்பிக்காக மட்டுமே விரத்தியோடு அங்கிருந்து பிரிந்து விடுதிக்கு வந்தாள்..
இப்போது நேருக்கு நேராக பார்க்க.. வேறு வழியில்லாமல் சினேகமாக புன்னகைக்க வேண்டியிருக்கிறது.. நிச்சயமாக அந்த புன்னகையில் உயிர்ப்பில்லை..
ஆனால் அந்த இங்கிதம் கூட அனுஷாவிற்கு கிடையாது..
திருமணத்தன்று தன் கணவனின் பொருட்டு வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள்.. இங்கே அந்த மாதிரியான எந்த அவசியமும் இல்லையே..!!
"என்ன பத்மினி.. சந்தோஷமா இருக்கீங்களா..!! அது சரி எப்படி சந்தோஷமா இருக்க முடியும்.. இன்னொரு குடியை கெடுத்துட்டு தான் மற்றும் சந்தோஷமாக வாழ்ந்திட முடியுமா என்ன..?" அனுஷாவின் ஏளன பேச்சில் பத்மினியின் முகம் மாறியது..
"என்ன பேசற அனுஷா..?"
"நான் ஒன்னும் இல்லாததை சொல்லல.. என் அண்ணன் மேல இல்லாததும் பொல்லாததும் பழியை சுமத்திட்டு அவன் வாழ்க்கையை நிம்மதி இல்லாம ஆக்கிட்டு.. நீ மட்டும் சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா என்ன.. அதான் அன்னைக்கே பார்த்தேனே உன் புருஷன் மூஞ்சியை.. எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தம்பட்டம் போட்டுக்க ஒரு கல்யாணம்.."
"என்னடா பணக்கார ஆளா இருக்கானே.. உன்கிட்ட வந்து எப்படி சிக்கினான்னு யோசிச்சேன்.. பேருக்கு ஒரு மனைவின்னு உன்னை கல்யாணம் பண்ணி இருக்கார்.. கல்யாணத்தன்னைக்கே உன் மூஞ்சியை நிமிர்ந்து கூட பாக்கலையே.. உன் புருஷன் உன்னை ஒரு மனுஷியாக கூட மதிக்கலைன்னு அவர் நடந்துகிட்ட முறையிலேயே எங்களுக்கு தெரிஞ்சிருச்சு.. பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. பின்ன எங்க வயித்தெரிச்சல் சும்மா விடுமா.. என்னமோ நீதான் உலகத்திலேயே ரதி மேனகை மாதிரி என்ன ஆட்டம் போட்ட.. எல்லா ஆம்பளைங்களும் உன்கிட்ட மயங்கி விழுந்துடுவாங்கன்னு நினைப்பு.. வச்சார்ல கடவுள் ஆப்பு.. சொந்த புருஷனே உன்னை கண்டுக்க மாட்டேங்றார்.. யார்கண்டா அவருக்கும் உன்னோட கேவலமான குணம் தெரிஞ்சிருக்கும்.. அதனாலதான் உன்னை நாயை விட கேவலமா நடத்தறார்.."
இருதயம் சுக்கு நூறாக உடைய.. அவள் முன்பு அழக்கூடாது என்ற இறுமாப்போடு நின்று கொண்டிருந்தாள் பத்மினி..
"யோசிச்சு பாத்தியா.. நீ எவ்வளவு சபிக்கப்பட்டவளா இருந்தா சராசரி பெண்களுக்கு அமையற சாதாரணமான வாழ்க்கை கூட உனக்கு அமையலன்னு.. மொத புருஷன் அல்பாய்ஸ்ல போய்ட்டான்.. இரண்டாவது புருஷன் உன்னை மனுஷியாக கூட ஏத்துக்க தயாரா இல்லை.. வயிறு எரிஞ்சு சொல்றேன்.. உன்னோட கேவலமான எண்ணங்களுக்கு இதை விட அனுபவிப்ப..!!" முடிந்தவரை தனது வன்மத்தை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அனுஷா..
"எப்படி பத்மினி.. எப்படி அந்த மைனரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச.. கால்ல விழுந்துட்டியா..!! விழுந்தாலும் விழுந்திருப்ப.. நினைச்சதை சாதிக்க நீ என்ன வேணா செய்வியே..!! மத்தவங்க மாதிரி கல்யாணத்தின் மூலமா ஒரு போலியா அங்கீகாரம் உனக்கு கிடைச்சிருக்கலாம்.. ஒரு குடும்பத்து பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய எந்த சந்தோஷமும் எப்பவும் உனக்கு கிடைக்காது.. எங்க அண்ணன் கிட்ட தரம் தாழ்ந்து நடந்துகிட்டியே..!! அந்த மாதிரி எவன்கிட்டயாவது தப்பான வழியில் போனாத்தான் உண்டு..!!" பேசி முடிக்கவில்லை.. பொறுமை இழந்து கொதித்து போனவள் அவள் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தாள்..
அத்தனை பேரும் திரும்பி பார்க்க அறை வாங்கிய அவமானத்தில் சிவந்து நின்றிருந்தாள் அனுஷா..
மதிய உணவு இடைவேளை ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் ரமணியம்மா உதய் கிருஷ்ணனுக்கு அழைத்து ஒரே புலம்பல்..
"என்னடா சமைச்சு வச்சிருக்க.. சாதம் குழைஞ்சி போயிடுச்சு.. கஞ்சி தண்ணியை சரியா வடிக்கலையா நீ..!! தட்டுல எடுத்து போட முடியல.. பேஸ்ட் மாதிரி இருக்குது.. புடலங்காய் கறியில உப்பே இல்லை.." டென்ஷனானான் அவன்..
"இவ்வளவு குறை சொல்றவங்க நீங்களே சமைச்சுக்க வேண்டியதுதானே..!!"
"எத்தனை வருஷமா உனக்கு சமைச்சு போட்டுருப்பேன்.. வயசாயிடுச்சு.. அடுப்படியில் அஞ்சு நிமிஷம் நிக்க முடியல.. என்ன பண்றது.. என் தலையெழுத்து அப்படி.. உன்னாண்ட வாங்கி கட்டிக்கணும்னு.. உன்ன குறை சொன்னா மட்டும் இவ்வளவு கோபம் வருதே.. நீ மட்டும் மத்தவங்களை வண்டி வண்டியாக குறை சொல்றியே..!! என்ன இருந்தாலும் பத்மினி சமையல் மாதிரி வராது.."
"ஏன் சொல்ல மாட்டீங்க.. நீங்க பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு பார்த்து பார்த்து சமைச்சு போடறேன் பாருங்க.. எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.. உடம்பு எக்கேடும் கெட்டுப் போகணும்னு ஹோட்டல் ஆர்டர் பண்ணி கொடுத்திருக்கணும்.."
"சமைச்சேன்னு சொல்லு.. பார்த்து பார்த்து சமைச்சேன்னு சொல்லாதே..!!"
"அம்மா.."
"இப்ப நான் எப்படி சாப்பிடறது இதை..!! ஹோட்டலில் இருந்து ஏதாவது ஆர்டர் பண்ணி வரவழை.."
"ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு கெடுதி.. இன்னைக்கு ஒரு நாள் தயிர் ஊத்தி சாப்பிடுங்க.. நான் சமையல் கட்டு பக்கமே வரல.. உங்க செல்ல மருமகளையே இனி சமைக்க சொல்லுங்க.. நீங்க சாப்பிட்டாலும் சரி பட்டினியா கடந்தாலும் சரி.. இனி எனக்கு எந்த அக்கறையும் இல்லை..!!" கோபத்தோடு அழைப்பை துண்டித்தான்..
அம்மாவை சரி கட்டியாயிற்று.. இப்போது இன்னொரு பெரிய பிரச்சனை.. அவனும் அதே உணவைத்தான் சாப்பிட வேண்டும்..
ஹோட்டல் உணவு அவனுக்கும் இறங்காது.. வேகாத நெத்து நெத்தாய் சோடா உப்பு சேர்த்த சாதம்.. ஹோட்டல் சமையலுக்கே உரிய வாசனையோடு கூடிய சாம்பார் ரசம் பொரியல்.. எதுவும் பிடிக்கிறது இல்லை..
தனது கேரியர் டிபன் பாக்ஸை எடுத்து ஒவ்வொன்றாய் பிரித்தான்..
சாதத்தை தட்டில் தட்டினான்.. குழைந்த சாதம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பந்து போல் ஒரு சேர தட்டில் விழுந்தது.. அதிலும் அந்த புடலங்காய் கறி.. சிறுபருப்பு வேகவே இல்லை.. உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இல்லை.. பசிக்கு உணவு என்று இதில் ருசிக்கு என்ன அவசியம் என்று சொல்லிக் கொண்டிருந்தவனால் அவன் சமைத்த சாப்பாட்டை அவனாலையே சாப்பிட முடியவில்லை..
பழைய உதய கிருஷ்ணன் கடமைக்காகவாது உணவை அள்ளி விழுங்கி இருப்பான்.. ஆனால் இவன்.. உணவில் கை வைத்து விட்டு உண்ணாமல் கண்கள் மூடி திறந்தான்.. "சமைச்சு வச்சிட்டாவது போயிருக்கலாமில்ல.." வாய்க்குள் முணுமுணுத்தபடி வேறு வழியில்லாமல் உணவை பிசைந்து அள்ளி வாயில் வைத்தான்.. அவளைப் பிடிக்கவில்லை.. ஒருவேளை அவள் சமையல் பிடித்திருக்கிறதோ..
உணவை வீணாக்க கூடாது என்ற ரீதியில் உண்டு முடித்து விட்டான்.. ஆனால் காலையிலிருந்து ஏனோ இன்று அளவுக்கதிகமான கோபமும் டென்ஷனும்.. ஏதோ சரியாக இல்லை.. காலையிலிருந்து ஒரே சொதப்பல்..
"என்ன..? சார் இன்னைக்கு கூடுதல் டென்ஷனா இருக்கற மாதிரி தெரியுது.. பத்மினி மேடம் இல்லையே.. அதான் சார் ஏக்கத்தில் வருந்தி தவிக்கிறார் போலிருக்கு..!!" கேலி கிண்டல் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன..
"யார் கதவைத் திறந்தாலும் எதிர்பார்ப்போட பாக்கற மாதிரி தெரியுதே..!!"
"ஏன் அம்மணி சார் கிட்ட லீவ் சொல்லிட்டு போகலையா..!!"
"சொல்லிட்டு போனாலும் எப்ப வருவாங்கற எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல..!!"
"அப்படி என்ன எதிர்பார்ப்பு.. சார் முகத்தில் தெரியற ஏக்கத்தை நானும் பார்க்கணுமே..!!" ஏதோ ஒரு ஃபைலை தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற ஒருத்தி
கண்கள் விரிய வெளியே வந்தாள்..
"ஆமான்டி.. மே ஐ கம் இன் கேட்கறேன்.. தலையை தூக்கி பார்த்தார் பாரு ஒரு பார்வை.. !! அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு.. பத்மினிக்காகதான் இந்த பார்வையா..? எனக்காக இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.."
"போதும் அவர் ஓல்ட் மேன் போய் வேலையை பாரு.."
"ஓல்ட் மேன்னா இருந்தாலும் கோல்டுமேன்.. உடம்பை உயரத்துக்கு ஏத்த மாதிரி கின்னுன்னு வச்சிருக்கார்.. முகத்தில் ஒரு சுருக்கம் இல்லை.. அதனாலதான் பத்மினி தன்னோட தொந்தி புருஷனை விட்டுட்டு இவரை இறுக்கமா பிடிச்சுகிட்டா.. வீட்ல ஒன்னு வெளியில ஒன்னு எப்படித்தான் மெயின்டெயின் பண்றாளோ.." ஏக்க பெருமூச்சு..
"சரி போதும் இங்கிருந்து போ.. சார் கண்ணாடி வழியா இங்கதான் பாக்கறார்.."
"பத்மினியை தேடறாரோ.." அந்தப் பெண்களிடம் ஒரே சிரிப்பு..
நெருப்பில்லாமல் புகையாது என்பது சில நேரங்களில் உண்மையாகி விடுகிறதோ..!!
ஆனால் பத்மினி வந்ததும் அவன் நடந்து கொண்ட முறை..?
தொடரும்..
Last edited: