- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
"பெயின் ஏதாவது இருக்கா..? மோஷன் போனீங்களா..? ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே.. சூச்சஸ்(தையல்) செக் பண்ணிட்டீங்களா விஜி.. நார்மல் தானே..?"
"ஓகே.. இன்னைக்கு டிஸ்சார்ச் பண்ணிடலாம்.."
"10 டேஸ் கழிச்சு திரும்ப அப்சர்வேஷனுக்கு ஹாஸ்பிடல் வரணும்.. குழந்தை கரெக்டா யூரின் போறாளா செக் பண்ணிக்கோங்க.. நீங்க பாத்ரூம் போயிட்டு வந்தா ஹாட் வாட்டர்ல வாஷ் பண்ணிடுங்க.. அப்பதான் இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்கும்.. தையலும் சீக்கிரமா உதிர்ந்திடும்.. அன்ட் மூணுமாசத்துக்கு இன்டர்கோர்ஸ் கூடாது.."
"பீடியாட்ரிசியன் கொடுத்த ரிப்போர்ட் எங்க..?"
ஸ்வேதாவிடம் டாக்டர் காவ்யா டிஸ்சார்ஜ் செய்யும் பொருட்டு பொதுவான மருத்துவ அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்..
பக்கத்தில் ஸ்வேதாவின் கணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.. ஸ்வேதாவின் தாய் தந்தை இருவரும் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்..
வெள்ளை கோட் சகிதம் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் டாக்டர் சூர்ய தேவ்..
அவன் நுழைந்த கணம் டாக்டரும் நர்சும் தன் உடல் மொழியை மாற்றி மரியாதை தோரணையோடு நிற்க..
"எல்லாம் ஓகே தானே..!!" சூர்ய தேவ் காவ்யாவிடம் கேட்டான்..
அவன் பார்வை மனைவியின் கரத்தை அனுசரணையாக பற்றிக் கொண்டிருந்த ஸ்வேதாவின் கணவன் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.. கமலி கண்முன் வந்து போனாள்..
"எஸ் டாக்டர்.. எவரிதிங் நார்மல்.. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.." காவ்யா பதில் சொல்ல.. ஆமோதிப்பாக தலையசைத்தவனின் பார்வை தன்னிச்சையாக தொட்டிலில் கை காலை அசைத்துக் கொண்டிருந்த குட்டி குழந்தையை வருடியது..
"தன்னோட சின்ன கண்ணை உருட்டி உருட்டி பாக்குது.. குழந்தை அவ்வளவு அழகு.." கமலியின் வார்த்தைகள் நினைவுகளில் ரிங்காரமிட்டது..
எத்தனையோ பிஞ்சு குழந்தைகளை பூமி தாங்கும் முன் தன் கைகளில் தாங்கி இருக்கிறான் இந்த சூர்யதேவ்.. அப்போதெல்லாம் தோன்றாத ஏதோ ஒரு உணர்வு.. புரியாத சிலிர்ப்பு.. இந்த கணம் அவனுள்..
மொட்டு மொட்டென கண்களும் குட்டி ரோஜா இதழ்களும்.. அடர்த்தியாக வளர்ந்திருந்த சுருட்டை முடியும்.. அவளுக்காகவே தயாரித்திருந்ததை போல் குட்டிச் சட்டையும் என மொத்தத்தில் குழந்தையின் அழகு அவன் நெஞ்சை குட்டி மயிலிறகாய் வருடியது..
"டாக்டர்.. பேபிக்கு எந்த பிராப்ளமும் இல்லை.. ஷீ எஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. ஹெபாடைடிஸ் ரிப்போர்ட் கூட நார்மல் தான் டாக்டர்.."
சூர்ய தேவ் வித்தியாசமாக தொட்டிலில் குழந்தையை எட்டி பார்ப்பதை கண்டு தானாகவே குழந்தை பற்றிய விவரங்களை ஒப்பித்தாள் காவ்யா..
பிறகு டாக்டர் இப்படி குழந்தையை குறுகுறுவென்று பார்க்கிறார் என்றால் குழந்தைக்கு ஏதோ பிரச்சனையென பரிசோதிக்கிறார் என்பது காவ்யாவின் கணிப்பு.. சில நேரங்களில் பிலிருபின்(bilirubin) அதிகரிப்பில் மஞ்சள் காமாலையின் தாக்கத்தில் கண்களும் சருமமும் மஞ்சள் நிறமாக காணப்படுவதுண்டு.. ஒருவேளை டாக்டர் அப்படி ஏதாவது நோய் தாக்கம் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறாரோ.. என நினைத்தாள்.. ஆனால் அவன் குழந்தையின் அழகை ரசிக்கிறான் என்று கடவுளே வந்து சொன்னாலும் நம்ப போவதில்லை அவள்..
காவ்யா சொன்னதைக் கேட்டு ம்ம்.. என்ற தலையசைப்போடு அங்கிருந்து வெளியே வந்தான் சூர்யதேவ்..
வழியில் ஷீலா அவனை நிறுத்தி ஏதோ கேட்டாள்..
"இவளால மட்டும் எப்படி எல்லாரையும் சிரிக்க வைக்க முடியுது.. என்னை சிரிக்க வைப்பாளா?"
"டாக்டர்.. டாக்டர்?"
"ஹான்..!!" கண் முன் நிற்கும் ஷீலாவை இப்போதுதான் பார்க்கிறான்.. ஆனால் பாவம் அவள் ஒரே கேள்வியை இரண்டு முறை கேட்டு விட்டாள்.. இப்போது மூன்றாவது முறை..
"இல்ல அந்த பேஷன்ட் திவ்யா.. அவங்களுக்கு இன்னும் பெயின் வரல.. வெயிட் பண்ணலாமா இல்ல.. பெயின் இன்ட்யூஸ் பண்ணலாமா டாக்டர்..?"
"வெயிட் பண்ணலாம்..!!" ஒரே வார்த்தையோடு சென்றிருந்தான்..
அவன் சென்ற திசையை குழப்பமாக பார்த்தாள் ஷீலா..
"டாக்டர் ஏன் ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியறார்.. பாவம் தனிக்கட்டை.. அவருக்கு என்ன பிரச்சனையோ..?" பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
"கமலிமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. டாக்டர் வந்தா என்னைத்தான் கத்துவாரு.. அவர் கோபம் உங்களுக்கு தெரிஞ்சதுதானே..!!" செக்யூரிட்டி மூர்த்தி அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்..
"ப்ச்.. டென்ஷன் ஆகாதீங்க மூர்த்தி அண்ணா, நான் பாத்துக்கறேன்.. பாருங்க தோட்டம் இப்போ எவ்வளவு சுத்தமா இருக்கு.. இதை பார்த்த பிறகும் உங்க டாக்டர் கத்துவாரா என்ன..?" அவள் கேட்ட கேள்வி நியாயம் தான்..
தோட்டத்தை சுற்றிப் பார்த்தார்.. அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து.. ஒரு ஆளையும் கூலிக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தை சுத்தப்படுத்தி சீர்படுத்தி இருந்தாள்..
நல்ல முயற்சி.. தோட்டம் அழகாக மாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் முதலாளிக்கு பிடிக்க வேண்டுமே..!! ஏற்கனவே இப்போதுதான் கோல பிரச்சினையில் ஒரு சமரச நிலைக்கு வந்திருக்கிறார்.. இப்போது களப்பணியை கண்டு ருத்ரதாண்டவம் ஆடிவிட்டால்?
தாறுமாறாக வளர்ந்திருந்த செடிகளை கத்தரித்து சீர்படுத்தி.. கொடிகள் படர்வதற்கு ஆதாரம் அமைத்து அதற்கான ஒரு இடத்தை ஒதுக்கி தந்து.. தொட்டி செடிகளை நிறவாரியான பூக்களோடு வரிசையாக அடுக்கி வைத்து.. பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத இலை சருகுகளை பெருக்கி ஓரந் தள்ளி.. என பெரும்பாலான வேலைகளை கூலிக்கு அழைத்திருந்த ஆள்தான் செய்தார்.. குழந்தைகள் கூடமாட சின்ன சின்ன உதவிகள் செய்தனர்.. ஆனால் அடர்ந்து சருகுகளும் இலைகளுமாக.. வண்ண பூக்களின் வனப்பு தெரியாமல்.. தாறுமாறாக காடு போல் வளர்ந்திருந்த செடிகளோடு சேர்ந்த அந்தத் தோட்டத்தை.. தன் சாமத்திய வழிகாட்டுதலால் நந்தவனத்தை பிருந்தாவனம் ஆக்கியிருந்தாள் கமலி..
வெகு நாட்களாக செய்து முடிக்க நினைத்திருந்த வேலை இது.. ஒவ்வொரு முறை இந்த தோட்டத்தை கடக்கும் போது.. ரொம்ப சீர்கெட்டு போப்பிருக்கே..!! உனக்கு ஏதாவது செய்யணும் என்று நெஞ்சுக்குள் உருத்திக் கொண்டே இருக்கும்..
வார விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை நிஜமாகி இருந்தாள் கமலி..
சூர்ய தேவ் விடுமுறையிலும் வீடு தங்காமல் வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்றிருந்தான்..
சிங்காரம் மூலம் தோட்டத்து வேலை செய்யும் ஆள் அறிமுகம் கிடைத்திருக்க.. ஏற்கனவே அவரோடு ஒருமுறை பேசி வைத்திருந்தாள்..
இப்போது சூர்ய தேவ் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை தனதாக்கி கொண்டு குழந்தைகளையும் வேலை செய்பவரையும் அழைத்து வந்து வேலையை ஜரூராக துவங்கி இதோ முடிய போகும் தருவாய்..!!
ஹாரன் சத்தத்தோடு கார் வாசலில் நின்றது..
"போச்சு.. ஏம்மா சொன்னா கேக்கவே மாட்டேங்கற.. உன்னால நானும் சேர்ந்து திட்டு வாங்கணும்.." வெளிப்படையாக சொல்லாமல் கண்களால் ஆதங்கத்தை வெளிப்படுத்திய படி கேட்டை திறக்க ஓடினார் செக்யூரிட்டி மூர்த்தி..
குழந்தைகள் காரை கண்டுகொள்ளாமல்.. தொட்டியை தூக்கி இடமாற்றுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும்.. குப்பைகளை பொறுக்கி கூடையில் போடுவதுமாக அவள் தந்த சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க.. உள்ளே வந்து கொண்டிருந்த காரிலிருந்து கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்தான் சூர்ய தேவ்.. தூரத்திலிருந்தாலும் துளைக்கும் பார்வை அது..
கோபப்படுத்தாமல் பேசி புரிய வைக்க வேண்டும் என்று பெருமூச்சுவிட்டு பதட்டத்தை ஓரங்கட்டி தன்னை திடப்படுத்திக் கொள்கிறாள் என்று அவள் கண்களை பார்த்ததும் புரிந்து போயிருக்கும் அவனுக்கு..
காரிலிருந்து இறங்கியவன் பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அழுத்தமான காலடிகளோடு அவர்களை நோக்கி நடந்து வந்தான்..
தயக்கத்தோடு அவனருகே வந்து நின்றாள் கமலி.. சுடிதார் துப்பட்டாவை.. தாவணி போல் மார்பை மூடி இடுப்போடு சேர்த்து கட்டி இருந்தாள்..
இறுகிய அழுத்தமான உதடுகளோடு இடுங்கிய விழிகளால் அவளை ஊடுருவினான் சூர்யதேவ்..
"சாரி டாக்டர்.. இந்த இடத்தை மாத்தி அமைச்சா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்.. ஆனா கார்டனிங் மன அமைதி சம்பந்தப்பட்டது.. தோட்டம் ஒரு மாதிரி பாழடைஞ்சு போயிருக்கிறதை பார்க்கும்போதெல்லாம் மனசு உறுத்தலா இருந்துச்சு.. செடி கொடிகளும் நம்மள நம்பி தானே இருக்குது.. அதுகளை கண்டுக்காம கவனிக்காம இருக்கிறது தப்பில்லையா.. அதனாலதான் கிளீன் பண்றோம்.. குழந்தைங்க உங்களை தொந்தரவு பண்ண மாட்டாங்க.. வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு போயிடுவாங்க.. வேலை செய்றவருக்கு கூட காசு நானே கொடுத்துடுவேன்.. எதுவும் திட்டிடாதீங்க டாக்டர்.. ப்ளீஸ்..!!" கண்களால் கெஞ்சி நிற்கிறாள்..
எப்படி திட்ட மனம் வரும்..
பார்வையை அவளிடமிருந்து பிரித்துக் கொண்டு தோட்டத்து சுற்று பரப்பில் கண்களை சுழற்றி மேய விட்டான் சூர்ய தேவ்..
எண்ணெய் குளியலோடு மினுமினுக்கும் புத்தம் புது குழந்தையாய் தளிர்களும் இலைகளுமாய்.. பூக்களும் கனிகளுமாய் சிரித்துக்கொண்டிருந்தது அவன் தோட்டம்..
மீண்டும் ஒரு முறை கமலியை ஆழ்ந்து பார்த்தான்..
மொட்டு மொட்டென்று கண்களை மூடி திறந்து அந்த குழந்தையை நினைவு படுத்தினாள் இவள்..
கோ வித் த ஃப்ளோவ்.. உனக்கு பாதிப்புகள் எதுவும் இல்லாத பட்சத்தில் எதையும் தடுக்காதே சூர்யா.. வருணின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தானோ அல்லது இன்னும் என்னென்ன செய்யப் போகிறாய் பெண்ணே!! என்ற சுவாரசியத்திற்கு இடமளித்தானோ..!!
பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவன் வேக எட்டுகளோடு படிகளில் ஏறி வீட்டுக்குள் சென்று கதவை அடைத்திருந்தான்..
"என்னமா எதுவும் சொல்லாம போறாரு..?" மூர்த்தி ஒன்றும் புரியாமல் அவளிடம் ஓடி வந்தார்..
"எதுவும் சொல்லாம போனா.. நம்ம மேல எந்த கோபமும் இல்லைன்னு அர்த்தம்.. பயப்படாம இருங்க.." தலை சாய்த்து புன்னகையோடு சொன்னவள் மிச்ச வேலைகளை பார்க்க சென்று விட்டாள்..
சட்டை பட்டன்களை கழட்டியபடி.. உட்பக்கமிருந்து ஜன்னல் திரையை விலக்கினான் சூர்ய தேவ்..
மரத்தின் தடுப்பில் வைத்திருந்த அவள் அலைபேசியிலிருந்து..
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. மெல்லிய சத்தமாக அந்த பாடல் வரிகள் அவர் செவிகளில் விழ.. கமலியை தேடி கண்டுபிடித்து அவளோடு ஒட்டிக்கொண்டது அவன் விழிகள்..
பிள்ளைகள் மீது தண்ணீர் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தாள்..
உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை..
பாடல் வரிகளில் பெண்ணவளை ஆழ்ந்து நோக்கின அவன் விழிகள்..
நீ ஒரு பெண்ணை உன்னை மறந்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாய் சூர்ய தேவ்.. மூளை இதயத்திற்கு அலர்ட் மெசேஜ் அனுப்ப.. கண்கள் உருத்து விழிக்க திடுக்கிட்டவன் ஜன்னல் திரையை வேகமாக மூடியிருந்தான்..
"எல்லாருக்கும் கப் கேக்.. சாக்லேட் மில்க் தருவேன்.. ஆனா அமைதியா வரணும்.. டாக்டருக்கு தெரிஞ்சா சத்தம் போடுவார்.." கமலி கிசுகிசுப்பான குரலில் சொல்லியபடி குழந்தைகளை ரகசியமாக மாடிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்..
ஜன்னல் பக்கமாக நின்று கொண்டிருந்தவன் அவள் மெல்லிய குரலில் தலையை திருப்பினான்.. ஜன்னல் திரையை விலக்க வில்லை.. பிள்ளைகளை அவனுக்கு தெரியாமல் மேலே அழைத்துச் செல்கிறாள் என்று கோபப்படவும் இல்லை.. நீண்ட மூச்செடுத்து சட்டை பட்டன்களை கழட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான்..
மறுநாள் காலையில் ஜாகிங் செய்வதற்காக வெளியே வந்தான் சூர்ய தேவ்..
நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
மெலடி பாடல் செவியை தீண்டி இதமாக வருடியது..
வழக்கமான டென்ஷன் எதுவுமில்லாமல் பாடலை கேட்டு எரிச்சல் படாமல்.. கத்தி கூச்சல் போடாமல்.. வரிகளை உள்வாங்கி தன்னையும் அறியாமல் தொடையில் விரலால் தாளம் தட்டியவாறு படிகளில் இறங்கினான் சூர்யதேவ்..
"குட் மார்னிங் டாக்டர்.." பக்கவாட்டிலிருந்து அவள் குரல்..
வெட்டி சீரமைத்த தோட்டத்தின் நடுவிலான அகண்ட இடைவெளியில் ஸ்கிப்பிங் கயிறோடு நின்று கொண்டிருந்தாள் கமலினி..
பளீரென்று வெள்ளை புன்னகையோடு பூக்களின் நடுவே சிரித்துக் கொண்டிருந்தாள்..
"கு.. குட் மார்னிங்.." என்று சிரிக்காமல் சொன்னவன் தோட்டத்தை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு வழக்கத்திற்கு மாறாக தன் நடையில் உற்சாகத்தை காட்டினான் என்பதை அவள் அறியவில்லை..
இப்போதெல்லாம் வீட்டை சுற்றி ஆங்காங்கே ஒலிக்கும் பாடல்களுக்கு அவனிடமிருந்து எந்த எதிர்ப்பும் வருவதில்லை..
"என்ன ஆச்சு டாக்டர்க்கு.. பாட்டுக்கு பழகிட்டாரா..? இல்ல எக்கேடும் கெட்டுப்போ அப்படின்னு என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரா.. அப்படி விடக்கூடிய ஆள் இல்லையே.. ரொம்ப அடக்கி வாசிக்கற மாதிரி தெரியுதே..?" கமலிக்கும் அவன் மாற்றங்களில் குழப்பம்தான்..
ஆனால் டாக்டரிடம் தெரிந்த அவளை கடுப்பேற்றாத இந்த மாதிரியான நல்ல மாற்றங்கள் அவளுக்கும் பிடித்திருந்தது..
சூர்ய தேவ் இளமைக்காலத்தில் சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தவன் தான்.. நண்பர்களோடு சினிமாவிற்கு சென்றிருக்கிறான்.. காதல் பாடல்களை ரசித்திருக்கிறான்.. படிப்பு தொழில் என்பதை தாண்டி தொலைக்காட்சியில் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும் காதல் பாடல்களையும்.. குத்து பாடல்களையும் கூடவே முணுமுணுத்துக் கொண்டு சில பாடல்களின் வரிகளில் லயித்து.. சில வரிகளில் சிலிர்த்து.. சில வரிகளில் சிரித்து.. மற்ற மனிதர்களைப் போல் சினிமா பாடல்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொண்டிருந்தவன் தான் அவனும்..
ஆனால் என்று காதலோடு கலவி தன் வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தானோ.. அன்றிலிருந்து இசை மீதான தன் நாட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.. அதற்கு காரணம் காதல் பாடல்கள் அனைத்தும் கலவியை தொட்டுச் செல்வதாய் நினைத்தான்.. அவர் இயலாமையை பறைசாற்றுவதாய் ஆத்திரப்பட்டான்..
சோகப் பாடல்கள் தத்துவ பாடல்களும் அவன் மன பாரத்தை இன்னும் கூட்டுவதாய்..!! மன அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் தானே பாடல்கள் கேட்பது.. அந்தப் பாடல்களை அவன் மன அமைதியை குலைப்பதாக எண்ணி பாடல்கள் கேட்கும் ஆர்வத்தை மூட்டை கட்டி இருட்டு அறையில் தூக்கி போட்டிருந்தான்..
மேற்கத்திய இசையில் ஆர்வம் இல்லை.. இந்துஸ்தானி கர்நாடிக் என பின்னணியை இசையை கேட்பதிலும் நாட்டமில்லை..
ஆனால் இப்போதெல்லாம் கமலியால் பாடல்களுக்கு பழகி இருந்தான்..
ஏ ஆர் ரகுமான் இளையராஜா தேவா.. ராஜ்குமார்.. அனிருத்.. விஜய் ஆன்டனி என அத்தனை இசையமைப்பாளர்களுக்கும்.. அனைத்து பாடகர்களுக்கும் தன் செவிவழியே ஊடுருவி மனதுக்குள் இடம் பிடிக்க அனுமதி அளித்திருந்தான்..
அன்று நல்ல மழை..!!
சூர்ய தேவ் முன்னதாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்..
மேல் வீட்டு மாடியில் விளக்கு எரியவில்லை.. பாடல் கேட்கவில்லை.. அப்படியானால் கமலி இன்னும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.. காலையில் போட்ட கோலம் வேறு மழையில் நனைந்து.. ஓடும் நீரோடு கலந்து அவன் எரிச்சலை கிளப்பி இருந்தது..
கோலத்தின் தடம் தெரியாமல்.. அவள் உருவத்தையும் காண முடியாமல் மனதுக்குள் ஏதோ சிடுசிடுப்பும்.. வெறுமையும்..!!
அடிக்கடி ஜன்னல் திரையை திறந்து பார்த்தான்.. மூன்று முறை கதவை திறந்து பார்த்தான்..
அதையும் தாண்டி ஒரு முறை படிகளில் இறங்கி வந்து மேல்மாடியை பார்த்தான்..
செக்யூரிட்டியை அழைத்தான்..
"அந்த பொண்ணு இன்னும் வரலையா..?"
வரலையே சார்..!! செக்யூரிட்டி பதிலில் திருப்தி இல்லாதவனாக உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டான்..
"ஊரு விட்டு ஊரு வந்து.. என் வீட்டில் தங்கி இருக்கும்போது நேரத்துக்கு வரணும்னு தெரியாதா இவளுக்கு.. மாயா என்னை நம்பி தானே அனுப்பி வைச்சாங்க.. ஏதாவது பிரச்சனைனா நான் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா.. இந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.." தன் தவிப்பிற்கு காரணம் சொல்லிக் கொண்டான்..
உட்புறம் விடிவெள்ளி விளக்கை மட்டும் எரியவிட்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்..
வாசலில் ஸ்கூட்டர் சத்தம்.. அவசரமாக ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தான்..
ஷீலாவோடு வந்திறங்கினாள் கமலி.. ஷீலா ரெயின்கோட் அணிந்திருந்தாள்.. ஆனால் கமலி ஒரு பாலிதீன் கவரை மட்டும் தலையில் சுற்றிக்கொண்டு.. ஷீலாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள்..
இருளில் நிழலாக அவள் உருவத்தை பார்த்தான்..
ஆழ்ந்த பெருமூச்சு இவனிடம்..!!
கமலி மழையை சமாளித்து மாடிப்படிகளில் ஏறினாள்.. மாடி விளக்குகள் உயிர் பெற்றன.. அவனும் ஒளி பெற்றான்..
பத்து நிமிடம் கழித்து அவனும் கதவை திறந்து கொண்டு குடையோடு மாடிப்படி ஏறினான்..
"கமலினி.. கமலினி.." திறந்திருந்த கதவை தட்டினான்..
அவசரமாக ஓடி வந்தாள் கமலினி..
"டாக்டர்..?" எதற்காக இந்நேரம் வந்திருக்கிறார்.. திட்ட போகிறாரோ? என்ற அச்சத்தை அவள் விழிகள் பிரதிபலித்தன..
"உங்க டிபன் பாக்ஸ்..!! சாரி மறந்துட்டேன்.." என்று அவளிடம் பாத்திரத்தை நீட்டினான்..
"இதை தரவா மழையில மாடி ஏறி வந்தீங்க.." புரியாத பார்வையோடு டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டாள் கமலினி..
எப்போதும் முகத்தில் மட்டுமே நிலைத்திருக்கும் அவன் பார்வை இப்போது கழுத்தை நோக்கி இடம்பெயர்ந்து கீழிறங்கின..
ஈரத்தில் தேகத்தோடு ஒட்டி உறவாடிய அவள் புடவை.. அவள் அங்கத்தின் வளைவு நெளிவுகளை அனாட்டமி வகுப்பு பாடங்களாக படம் பிடித்துக் காட்ட..
எப்போதும் பெண் தேகத்தை அறிவியலாக பார்ப்பவன் இன்று அழகோவியமாக கண்கள் திறந்து உள்வாங்கினான்.. வேதியியல் மாற்றங்களின் தொடக்கம்..
போதாக்குறைக்கு இளையராஜாவும் ஜானகியும் வேறு அவன் உயிரை வாங்கிக் கொண்டிருந்தார்கள்..
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா..!!
அலைபேசியில் பாட்டு வந்த திசையில் அவன் விழிகள் ஓடின..
"நீங்க தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சு தான்.. கொஞ்சம் பாட்டு கேக்கலாம்னு ப்ளே பண்ணேன்.. சத்தியமா உங்களை டென்ஷன் பண்ணணும்னு நினைக்கல.." அவள் வருந்தி மன்னிப்பு கேட்க.. அவனோ தனக்குள் புதிதாக தோன்றிய உணர்வுகளில் திக்கு முக்காடி போயிருந்தான்.. இப்போதும் முகம் கனியவில்லை..
வரம்பு மீறிய பார்வையிலும் தன்னுள் கிளர்ச்சி அடைந்த ஹார்மோன் தூண்டுதல்களிலும் அவனால் சந்தோஷப்பட முடியவில்லை.. மாறாக ஒரு பெண்ணை எல்லை மீறி பார்த்ததற்கான குற்றக்குறுகுறுப்பு மட்டுமே அவனை கூண்டில் ஏற்றி நிற்க வைத்தது..
"சா.. சாரிம்மா.." என்றவன் அவசரமாக கீழே இறங்கி சென்றிருக்க.. கமலி ஒன்றும் புரியாமல் அவனை வெறித்தபடி கதவு பக்கத்திலேயே நின்றிருந்தாள்..
இரவு தூக்கம் எட்டா கனியாகி போக
விடிந்தும் விடியாததுமாக வருண் கிளினிக்கில் அவன் முன்பு அமர்ந்திருந்தான் சூர்ய தேவ்..
"நான் அந்த பொண்ணை தப்பா பாத்துட்டேன் வருண்.. ரொம்ப பெரிய தப்பு.. இப்படியெல்லாம் நான் நடந்துக்கிட்டதே இல்ல.. எனக்கே என்னை நெனச்சா அசிங்கமா இருக்கு.. பேசாம ஏதாவது விஷ ஊசி போட்டு என்னை கொன்னுடேன்.." என்று படபடக்க.. நாற்காலியிலிருந்து தடுமாறி கீழே விழுந்தான் வருண்..
தொடரும்..
"ஓகே.. இன்னைக்கு டிஸ்சார்ச் பண்ணிடலாம்.."
"10 டேஸ் கழிச்சு திரும்ப அப்சர்வேஷனுக்கு ஹாஸ்பிடல் வரணும்.. குழந்தை கரெக்டா யூரின் போறாளா செக் பண்ணிக்கோங்க.. நீங்க பாத்ரூம் போயிட்டு வந்தா ஹாட் வாட்டர்ல வாஷ் பண்ணிடுங்க.. அப்பதான் இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்கும்.. தையலும் சீக்கிரமா உதிர்ந்திடும்.. அன்ட் மூணுமாசத்துக்கு இன்டர்கோர்ஸ் கூடாது.."
"பீடியாட்ரிசியன் கொடுத்த ரிப்போர்ட் எங்க..?"
ஸ்வேதாவிடம் டாக்டர் காவ்யா டிஸ்சார்ஜ் செய்யும் பொருட்டு பொதுவான மருத்துவ அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்..
பக்கத்தில் ஸ்வேதாவின் கணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.. ஸ்வேதாவின் தாய் தந்தை இருவரும் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்..
வெள்ளை கோட் சகிதம் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் டாக்டர் சூர்ய தேவ்..
அவன் நுழைந்த கணம் டாக்டரும் நர்சும் தன் உடல் மொழியை மாற்றி மரியாதை தோரணையோடு நிற்க..
"எல்லாம் ஓகே தானே..!!" சூர்ய தேவ் காவ்யாவிடம் கேட்டான்..
அவன் பார்வை மனைவியின் கரத்தை அனுசரணையாக பற்றிக் கொண்டிருந்த ஸ்வேதாவின் கணவன் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.. கமலி கண்முன் வந்து போனாள்..
"எஸ் டாக்டர்.. எவரிதிங் நார்மல்.. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.." காவ்யா பதில் சொல்ல.. ஆமோதிப்பாக தலையசைத்தவனின் பார்வை தன்னிச்சையாக தொட்டிலில் கை காலை அசைத்துக் கொண்டிருந்த குட்டி குழந்தையை வருடியது..
"தன்னோட சின்ன கண்ணை உருட்டி உருட்டி பாக்குது.. குழந்தை அவ்வளவு அழகு.." கமலியின் வார்த்தைகள் நினைவுகளில் ரிங்காரமிட்டது..
எத்தனையோ பிஞ்சு குழந்தைகளை பூமி தாங்கும் முன் தன் கைகளில் தாங்கி இருக்கிறான் இந்த சூர்யதேவ்.. அப்போதெல்லாம் தோன்றாத ஏதோ ஒரு உணர்வு.. புரியாத சிலிர்ப்பு.. இந்த கணம் அவனுள்..
மொட்டு மொட்டென கண்களும் குட்டி ரோஜா இதழ்களும்.. அடர்த்தியாக வளர்ந்திருந்த சுருட்டை முடியும்.. அவளுக்காகவே தயாரித்திருந்ததை போல் குட்டிச் சட்டையும் என மொத்தத்தில் குழந்தையின் அழகு அவன் நெஞ்சை குட்டி மயிலிறகாய் வருடியது..
"டாக்டர்.. பேபிக்கு எந்த பிராப்ளமும் இல்லை.. ஷீ எஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. ஹெபாடைடிஸ் ரிப்போர்ட் கூட நார்மல் தான் டாக்டர்.."
சூர்ய தேவ் வித்தியாசமாக தொட்டிலில் குழந்தையை எட்டி பார்ப்பதை கண்டு தானாகவே குழந்தை பற்றிய விவரங்களை ஒப்பித்தாள் காவ்யா..
பிறகு டாக்டர் இப்படி குழந்தையை குறுகுறுவென்று பார்க்கிறார் என்றால் குழந்தைக்கு ஏதோ பிரச்சனையென பரிசோதிக்கிறார் என்பது காவ்யாவின் கணிப்பு.. சில நேரங்களில் பிலிருபின்(bilirubin) அதிகரிப்பில் மஞ்சள் காமாலையின் தாக்கத்தில் கண்களும் சருமமும் மஞ்சள் நிறமாக காணப்படுவதுண்டு.. ஒருவேளை டாக்டர் அப்படி ஏதாவது நோய் தாக்கம் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறாரோ.. என நினைத்தாள்.. ஆனால் அவன் குழந்தையின் அழகை ரசிக்கிறான் என்று கடவுளே வந்து சொன்னாலும் நம்ப போவதில்லை அவள்..
காவ்யா சொன்னதைக் கேட்டு ம்ம்.. என்ற தலையசைப்போடு அங்கிருந்து வெளியே வந்தான் சூர்யதேவ்..
வழியில் ஷீலா அவனை நிறுத்தி ஏதோ கேட்டாள்..
"இவளால மட்டும் எப்படி எல்லாரையும் சிரிக்க வைக்க முடியுது.. என்னை சிரிக்க வைப்பாளா?"
"டாக்டர்.. டாக்டர்?"
"ஹான்..!!" கண் முன் நிற்கும் ஷீலாவை இப்போதுதான் பார்க்கிறான்.. ஆனால் பாவம் அவள் ஒரே கேள்வியை இரண்டு முறை கேட்டு விட்டாள்.. இப்போது மூன்றாவது முறை..
"இல்ல அந்த பேஷன்ட் திவ்யா.. அவங்களுக்கு இன்னும் பெயின் வரல.. வெயிட் பண்ணலாமா இல்ல.. பெயின் இன்ட்யூஸ் பண்ணலாமா டாக்டர்..?"
"வெயிட் பண்ணலாம்..!!" ஒரே வார்த்தையோடு சென்றிருந்தான்..
அவன் சென்ற திசையை குழப்பமாக பார்த்தாள் ஷீலா..
"டாக்டர் ஏன் ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியறார்.. பாவம் தனிக்கட்டை.. அவருக்கு என்ன பிரச்சனையோ..?" பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
"கமலிமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. டாக்டர் வந்தா என்னைத்தான் கத்துவாரு.. அவர் கோபம் உங்களுக்கு தெரிஞ்சதுதானே..!!" செக்யூரிட்டி மூர்த்தி அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்..
"ப்ச்.. டென்ஷன் ஆகாதீங்க மூர்த்தி அண்ணா, நான் பாத்துக்கறேன்.. பாருங்க தோட்டம் இப்போ எவ்வளவு சுத்தமா இருக்கு.. இதை பார்த்த பிறகும் உங்க டாக்டர் கத்துவாரா என்ன..?" அவள் கேட்ட கேள்வி நியாயம் தான்..
தோட்டத்தை சுற்றிப் பார்த்தார்.. அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து.. ஒரு ஆளையும் கூலிக்கு அழைத்துக் கொண்டு தோட்டத்தை சுத்தப்படுத்தி சீர்படுத்தி இருந்தாள்..
நல்ல முயற்சி.. தோட்டம் அழகாக மாறிக் கொண்டிருக்கிறது.. ஆனால் முதலாளிக்கு பிடிக்க வேண்டுமே..!! ஏற்கனவே இப்போதுதான் கோல பிரச்சினையில் ஒரு சமரச நிலைக்கு வந்திருக்கிறார்.. இப்போது களப்பணியை கண்டு ருத்ரதாண்டவம் ஆடிவிட்டால்?
தாறுமாறாக வளர்ந்திருந்த செடிகளை கத்தரித்து சீர்படுத்தி.. கொடிகள் படர்வதற்கு ஆதாரம் அமைத்து அதற்கான ஒரு இடத்தை ஒதுக்கி தந்து.. தொட்டி செடிகளை நிறவாரியான பூக்களோடு வரிசையாக அடுக்கி வைத்து.. பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத இலை சருகுகளை பெருக்கி ஓரந் தள்ளி.. என பெரும்பாலான வேலைகளை கூலிக்கு அழைத்திருந்த ஆள்தான் செய்தார்.. குழந்தைகள் கூடமாட சின்ன சின்ன உதவிகள் செய்தனர்.. ஆனால் அடர்ந்து சருகுகளும் இலைகளுமாக.. வண்ண பூக்களின் வனப்பு தெரியாமல்.. தாறுமாறாக காடு போல் வளர்ந்திருந்த செடிகளோடு சேர்ந்த அந்தத் தோட்டத்தை.. தன் சாமத்திய வழிகாட்டுதலால் நந்தவனத்தை பிருந்தாவனம் ஆக்கியிருந்தாள் கமலி..
வெகு நாட்களாக செய்து முடிக்க நினைத்திருந்த வேலை இது.. ஒவ்வொரு முறை இந்த தோட்டத்தை கடக்கும் போது.. ரொம்ப சீர்கெட்டு போப்பிருக்கே..!! உனக்கு ஏதாவது செய்யணும் என்று நெஞ்சுக்குள் உருத்திக் கொண்டே இருக்கும்..
வார விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை நிஜமாகி இருந்தாள் கமலி..
சூர்ய தேவ் விடுமுறையிலும் வீடு தங்காமல் வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்றிருந்தான்..
சிங்காரம் மூலம் தோட்டத்து வேலை செய்யும் ஆள் அறிமுகம் கிடைத்திருக்க.. ஏற்கனவே அவரோடு ஒருமுறை பேசி வைத்திருந்தாள்..
இப்போது சூர்ய தேவ் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை தனதாக்கி கொண்டு குழந்தைகளையும் வேலை செய்பவரையும் அழைத்து வந்து வேலையை ஜரூராக துவங்கி இதோ முடிய போகும் தருவாய்..!!
ஹாரன் சத்தத்தோடு கார் வாசலில் நின்றது..
"போச்சு.. ஏம்மா சொன்னா கேக்கவே மாட்டேங்கற.. உன்னால நானும் சேர்ந்து திட்டு வாங்கணும்.." வெளிப்படையாக சொல்லாமல் கண்களால் ஆதங்கத்தை வெளிப்படுத்திய படி கேட்டை திறக்க ஓடினார் செக்யூரிட்டி மூர்த்தி..
குழந்தைகள் காரை கண்டுகொள்ளாமல்.. தொட்டியை தூக்கி இடமாற்றுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும்.. குப்பைகளை பொறுக்கி கூடையில் போடுவதுமாக அவள் தந்த சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருக்க.. உள்ளே வந்து கொண்டிருந்த காரிலிருந்து கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்தான் சூர்ய தேவ்.. தூரத்திலிருந்தாலும் துளைக்கும் பார்வை அது..
கோபப்படுத்தாமல் பேசி புரிய வைக்க வேண்டும் என்று பெருமூச்சுவிட்டு பதட்டத்தை ஓரங்கட்டி தன்னை திடப்படுத்திக் கொள்கிறாள் என்று அவள் கண்களை பார்த்ததும் புரிந்து போயிருக்கும் அவனுக்கு..
காரிலிருந்து இறங்கியவன் பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அழுத்தமான காலடிகளோடு அவர்களை நோக்கி நடந்து வந்தான்..
தயக்கத்தோடு அவனருகே வந்து நின்றாள் கமலி.. சுடிதார் துப்பட்டாவை.. தாவணி போல் மார்பை மூடி இடுப்போடு சேர்த்து கட்டி இருந்தாள்..
இறுகிய அழுத்தமான உதடுகளோடு இடுங்கிய விழிகளால் அவளை ஊடுருவினான் சூர்யதேவ்..
"சாரி டாக்டர்.. இந்த இடத்தை மாத்தி அமைச்சா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்.. ஆனா கார்டனிங் மன அமைதி சம்பந்தப்பட்டது.. தோட்டம் ஒரு மாதிரி பாழடைஞ்சு போயிருக்கிறதை பார்க்கும்போதெல்லாம் மனசு உறுத்தலா இருந்துச்சு.. செடி கொடிகளும் நம்மள நம்பி தானே இருக்குது.. அதுகளை கண்டுக்காம கவனிக்காம இருக்கிறது தப்பில்லையா.. அதனாலதான் கிளீன் பண்றோம்.. குழந்தைங்க உங்களை தொந்தரவு பண்ண மாட்டாங்க.. வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு போயிடுவாங்க.. வேலை செய்றவருக்கு கூட காசு நானே கொடுத்துடுவேன்.. எதுவும் திட்டிடாதீங்க டாக்டர்.. ப்ளீஸ்..!!" கண்களால் கெஞ்சி நிற்கிறாள்..
எப்படி திட்ட மனம் வரும்..
பார்வையை அவளிடமிருந்து பிரித்துக் கொண்டு தோட்டத்து சுற்று பரப்பில் கண்களை சுழற்றி மேய விட்டான் சூர்ய தேவ்..
எண்ணெய் குளியலோடு மினுமினுக்கும் புத்தம் புது குழந்தையாய் தளிர்களும் இலைகளுமாய்.. பூக்களும் கனிகளுமாய் சிரித்துக்கொண்டிருந்தது அவன் தோட்டம்..
மீண்டும் ஒரு முறை கமலியை ஆழ்ந்து பார்த்தான்..
மொட்டு மொட்டென்று கண்களை மூடி திறந்து அந்த குழந்தையை நினைவு படுத்தினாள் இவள்..
கோ வித் த ஃப்ளோவ்.. உனக்கு பாதிப்புகள் எதுவும் இல்லாத பட்சத்தில் எதையும் தடுக்காதே சூர்யா.. வருணின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தானோ அல்லது இன்னும் என்னென்ன செய்யப் போகிறாய் பெண்ணே!! என்ற சுவாரசியத்திற்கு இடமளித்தானோ..!!
பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவன் வேக எட்டுகளோடு படிகளில் ஏறி வீட்டுக்குள் சென்று கதவை அடைத்திருந்தான்..
"என்னமா எதுவும் சொல்லாம போறாரு..?" மூர்த்தி ஒன்றும் புரியாமல் அவளிடம் ஓடி வந்தார்..
"எதுவும் சொல்லாம போனா.. நம்ம மேல எந்த கோபமும் இல்லைன்னு அர்த்தம்.. பயப்படாம இருங்க.." தலை சாய்த்து புன்னகையோடு சொன்னவள் மிச்ச வேலைகளை பார்க்க சென்று விட்டாள்..
சட்டை பட்டன்களை கழட்டியபடி.. உட்பக்கமிருந்து ஜன்னல் திரையை விலக்கினான் சூர்ய தேவ்..
மரத்தின் தடுப்பில் வைத்திருந்த அவள் அலைபேசியிலிருந்து..
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. மெல்லிய சத்தமாக அந்த பாடல் வரிகள் அவர் செவிகளில் விழ.. கமலியை தேடி கண்டுபிடித்து அவளோடு ஒட்டிக்கொண்டது அவன் விழிகள்..
பிள்ளைகள் மீது தண்ணீர் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தாள்..
உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை..
பாடல் வரிகளில் பெண்ணவளை ஆழ்ந்து நோக்கின அவன் விழிகள்..
நீ ஒரு பெண்ணை உன்னை மறந்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாய் சூர்ய தேவ்.. மூளை இதயத்திற்கு அலர்ட் மெசேஜ் அனுப்ப.. கண்கள் உருத்து விழிக்க திடுக்கிட்டவன் ஜன்னல் திரையை வேகமாக மூடியிருந்தான்..
"எல்லாருக்கும் கப் கேக்.. சாக்லேட் மில்க் தருவேன்.. ஆனா அமைதியா வரணும்.. டாக்டருக்கு தெரிஞ்சா சத்தம் போடுவார்.." கமலி கிசுகிசுப்பான குரலில் சொல்லியபடி குழந்தைகளை ரகசியமாக மாடிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்..
ஜன்னல் பக்கமாக நின்று கொண்டிருந்தவன் அவள் மெல்லிய குரலில் தலையை திருப்பினான்.. ஜன்னல் திரையை விலக்க வில்லை.. பிள்ளைகளை அவனுக்கு தெரியாமல் மேலே அழைத்துச் செல்கிறாள் என்று கோபப்படவும் இல்லை.. நீண்ட மூச்செடுத்து சட்டை பட்டன்களை கழட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான்..
மறுநாள் காலையில் ஜாகிங் செய்வதற்காக வெளியே வந்தான் சூர்ய தேவ்..
நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..
மெலடி பாடல் செவியை தீண்டி இதமாக வருடியது..
வழக்கமான டென்ஷன் எதுவுமில்லாமல் பாடலை கேட்டு எரிச்சல் படாமல்.. கத்தி கூச்சல் போடாமல்.. வரிகளை உள்வாங்கி தன்னையும் அறியாமல் தொடையில் விரலால் தாளம் தட்டியவாறு படிகளில் இறங்கினான் சூர்யதேவ்..
"குட் மார்னிங் டாக்டர்.." பக்கவாட்டிலிருந்து அவள் குரல்..
வெட்டி சீரமைத்த தோட்டத்தின் நடுவிலான அகண்ட இடைவெளியில் ஸ்கிப்பிங் கயிறோடு நின்று கொண்டிருந்தாள் கமலினி..
பளீரென்று வெள்ளை புன்னகையோடு பூக்களின் நடுவே சிரித்துக் கொண்டிருந்தாள்..
"கு.. குட் மார்னிங்.." என்று சிரிக்காமல் சொன்னவன் தோட்டத்தை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு வழக்கத்திற்கு மாறாக தன் நடையில் உற்சாகத்தை காட்டினான் என்பதை அவள் அறியவில்லை..
இப்போதெல்லாம் வீட்டை சுற்றி ஆங்காங்கே ஒலிக்கும் பாடல்களுக்கு அவனிடமிருந்து எந்த எதிர்ப்பும் வருவதில்லை..
"என்ன ஆச்சு டாக்டர்க்கு.. பாட்டுக்கு பழகிட்டாரா..? இல்ல எக்கேடும் கெட்டுப்போ அப்படின்னு என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரா.. அப்படி விடக்கூடிய ஆள் இல்லையே.. ரொம்ப அடக்கி வாசிக்கற மாதிரி தெரியுதே..?" கமலிக்கும் அவன் மாற்றங்களில் குழப்பம்தான்..
ஆனால் டாக்டரிடம் தெரிந்த அவளை கடுப்பேற்றாத இந்த மாதிரியான நல்ல மாற்றங்கள் அவளுக்கும் பிடித்திருந்தது..
சூர்ய தேவ் இளமைக்காலத்தில் சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தவன் தான்.. நண்பர்களோடு சினிமாவிற்கு சென்றிருக்கிறான்.. காதல் பாடல்களை ரசித்திருக்கிறான்.. படிப்பு தொழில் என்பதை தாண்டி தொலைக்காட்சியில் அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும் காதல் பாடல்களையும்.. குத்து பாடல்களையும் கூடவே முணுமுணுத்துக் கொண்டு சில பாடல்களின் வரிகளில் லயித்து.. சில வரிகளில் சிலிர்த்து.. சில வரிகளில் சிரித்து.. மற்ற மனிதர்களைப் போல் சினிமா பாடல்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொண்டிருந்தவன் தான் அவனும்..
ஆனால் என்று காதலோடு கலவி தன் வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தானோ.. அன்றிலிருந்து இசை மீதான தன் நாட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.. அதற்கு காரணம் காதல் பாடல்கள் அனைத்தும் கலவியை தொட்டுச் செல்வதாய் நினைத்தான்.. அவர் இயலாமையை பறைசாற்றுவதாய் ஆத்திரப்பட்டான்..
சோகப் பாடல்கள் தத்துவ பாடல்களும் அவன் மன பாரத்தை இன்னும் கூட்டுவதாய்..!! மன அமைதிக்காகவும் நிம்மதிக்காகவும் தானே பாடல்கள் கேட்பது.. அந்தப் பாடல்களை அவன் மன அமைதியை குலைப்பதாக எண்ணி பாடல்கள் கேட்கும் ஆர்வத்தை மூட்டை கட்டி இருட்டு அறையில் தூக்கி போட்டிருந்தான்..
மேற்கத்திய இசையில் ஆர்வம் இல்லை.. இந்துஸ்தானி கர்நாடிக் என பின்னணியை இசையை கேட்பதிலும் நாட்டமில்லை..
ஆனால் இப்போதெல்லாம் கமலியால் பாடல்களுக்கு பழகி இருந்தான்..
ஏ ஆர் ரகுமான் இளையராஜா தேவா.. ராஜ்குமார்.. அனிருத்.. விஜய் ஆன்டனி என அத்தனை இசையமைப்பாளர்களுக்கும்.. அனைத்து பாடகர்களுக்கும் தன் செவிவழியே ஊடுருவி மனதுக்குள் இடம் பிடிக்க அனுமதி அளித்திருந்தான்..
அன்று நல்ல மழை..!!
சூர்ய தேவ் முன்னதாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்..
மேல் வீட்டு மாடியில் விளக்கு எரியவில்லை.. பாடல் கேட்கவில்லை.. அப்படியானால் கமலி இன்னும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.. காலையில் போட்ட கோலம் வேறு மழையில் நனைந்து.. ஓடும் நீரோடு கலந்து அவன் எரிச்சலை கிளப்பி இருந்தது..
கோலத்தின் தடம் தெரியாமல்.. அவள் உருவத்தையும் காண முடியாமல் மனதுக்குள் ஏதோ சிடுசிடுப்பும்.. வெறுமையும்..!!
அடிக்கடி ஜன்னல் திரையை திறந்து பார்த்தான்.. மூன்று முறை கதவை திறந்து பார்த்தான்..
அதையும் தாண்டி ஒரு முறை படிகளில் இறங்கி வந்து மேல்மாடியை பார்த்தான்..
செக்யூரிட்டியை அழைத்தான்..
"அந்த பொண்ணு இன்னும் வரலையா..?"
வரலையே சார்..!! செக்யூரிட்டி பதிலில் திருப்தி இல்லாதவனாக உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டான்..
"ஊரு விட்டு ஊரு வந்து.. என் வீட்டில் தங்கி இருக்கும்போது நேரத்துக்கு வரணும்னு தெரியாதா இவளுக்கு.. மாயா என்னை நம்பி தானே அனுப்பி வைச்சாங்க.. ஏதாவது பிரச்சனைனா நான் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா.. இந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.." தன் தவிப்பிற்கு காரணம் சொல்லிக் கொண்டான்..
உட்புறம் விடிவெள்ளி விளக்கை மட்டும் எரியவிட்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்..
வாசலில் ஸ்கூட்டர் சத்தம்.. அவசரமாக ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தான்..
ஷீலாவோடு வந்திறங்கினாள் கமலி.. ஷீலா ரெயின்கோட் அணிந்திருந்தாள்.. ஆனால் கமலி ஒரு பாலிதீன் கவரை மட்டும் தலையில் சுற்றிக்கொண்டு.. ஷீலாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள்..
இருளில் நிழலாக அவள் உருவத்தை பார்த்தான்..
ஆழ்ந்த பெருமூச்சு இவனிடம்..!!
கமலி மழையை சமாளித்து மாடிப்படிகளில் ஏறினாள்.. மாடி விளக்குகள் உயிர் பெற்றன.. அவனும் ஒளி பெற்றான்..
பத்து நிமிடம் கழித்து அவனும் கதவை திறந்து கொண்டு குடையோடு மாடிப்படி ஏறினான்..
"கமலினி.. கமலினி.." திறந்திருந்த கதவை தட்டினான்..
அவசரமாக ஓடி வந்தாள் கமலினி..
"டாக்டர்..?" எதற்காக இந்நேரம் வந்திருக்கிறார்.. திட்ட போகிறாரோ? என்ற அச்சத்தை அவள் விழிகள் பிரதிபலித்தன..
"உங்க டிபன் பாக்ஸ்..!! சாரி மறந்துட்டேன்.." என்று அவளிடம் பாத்திரத்தை நீட்டினான்..
"இதை தரவா மழையில மாடி ஏறி வந்தீங்க.." புரியாத பார்வையோடு டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டாள் கமலினி..
எப்போதும் முகத்தில் மட்டுமே நிலைத்திருக்கும் அவன் பார்வை இப்போது கழுத்தை நோக்கி இடம்பெயர்ந்து கீழிறங்கின..
ஈரத்தில் தேகத்தோடு ஒட்டி உறவாடிய அவள் புடவை.. அவள் அங்கத்தின் வளைவு நெளிவுகளை அனாட்டமி வகுப்பு பாடங்களாக படம் பிடித்துக் காட்ட..
எப்போதும் பெண் தேகத்தை அறிவியலாக பார்ப்பவன் இன்று அழகோவியமாக கண்கள் திறந்து உள்வாங்கினான்.. வேதியியல் மாற்றங்களின் தொடக்கம்..
போதாக்குறைக்கு இளையராஜாவும் ஜானகியும் வேறு அவன் உயிரை வாங்கிக் கொண்டிருந்தார்கள்..
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா..!!
அலைபேசியில் பாட்டு வந்த திசையில் அவன் விழிகள் ஓடின..
"நீங்க தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சு தான்.. கொஞ்சம் பாட்டு கேக்கலாம்னு ப்ளே பண்ணேன்.. சத்தியமா உங்களை டென்ஷன் பண்ணணும்னு நினைக்கல.." அவள் வருந்தி மன்னிப்பு கேட்க.. அவனோ தனக்குள் புதிதாக தோன்றிய உணர்வுகளில் திக்கு முக்காடி போயிருந்தான்.. இப்போதும் முகம் கனியவில்லை..
வரம்பு மீறிய பார்வையிலும் தன்னுள் கிளர்ச்சி அடைந்த ஹார்மோன் தூண்டுதல்களிலும் அவனால் சந்தோஷப்பட முடியவில்லை.. மாறாக ஒரு பெண்ணை எல்லை மீறி பார்த்ததற்கான குற்றக்குறுகுறுப்பு மட்டுமே அவனை கூண்டில் ஏற்றி நிற்க வைத்தது..
"சா.. சாரிம்மா.." என்றவன் அவசரமாக கீழே இறங்கி சென்றிருக்க.. கமலி ஒன்றும் புரியாமல் அவனை வெறித்தபடி கதவு பக்கத்திலேயே நின்றிருந்தாள்..
இரவு தூக்கம் எட்டா கனியாகி போக
விடிந்தும் விடியாததுமாக வருண் கிளினிக்கில் அவன் முன்பு அமர்ந்திருந்தான் சூர்ய தேவ்..
"நான் அந்த பொண்ணை தப்பா பாத்துட்டேன் வருண்.. ரொம்ப பெரிய தப்பு.. இப்படியெல்லாம் நான் நடந்துக்கிட்டதே இல்ல.. எனக்கே என்னை நெனச்சா அசிங்கமா இருக்கு.. பேசாம ஏதாவது விஷ ஊசி போட்டு என்னை கொன்னுடேன்.." என்று படபடக்க.. நாற்காலியிலிருந்து தடுமாறி கீழே விழுந்தான் வருண்..
தொடரும்..
Last edited: