- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
தன் ஃபெசிலிட்டியில் இருக்கும் மனநோயாளிகளின் தகவல்களை வருணுக்கு அனுப்பியிருந்தார் டாக்டர் ஸ்ரீனிவாசன்..!
அவர்களது கேஸ் ஹிஸ்டரியில் கொஞ்சம் குழப்பம் இருந்ததால்.. விவரங்களை முழுமையாக படித்துவிட்டு தன்னிடம் கலந்த ஆலோசிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்..!
நான்கு நபரின் முழு விவரங்களையும் படித்து முடிக்கையில் மணி இரவு 11:30 தொட்டிருந்தது..! மாலினியை 6:00 மணிக்கெல்லாம் புறப்பட சொல்லிவிட்டு கிளினிக்கில் தனியாகத்தான் இருந்தான் வரூண்..
கேஸ் ஹிஸ்டரியை படிக்கும் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை..!
கண்கள் கலைத்து உடல் சோர்வுற்ற நேரம் வசதியாக சாய்ந்து அமர்ந்து நீண்ட மூச்சுவிட்டு மணியை பார்க்க கடிகாரம் நடு ஜாமத்திற்கு இன்னும் சிறிது நேரமே இருப்பதாக எடுத்துரைத்தது..
"ஓ மை காட்..! டைம் 11:30 யா..? எப்படி பாக்காம விட்டேன்.." என்று அதிர்ந்தவனின் கண்களுக்குள் அவசரமாக வந்து போனவள் தேம்பாவணி மட்டுமே..!
அலைபேசியை எடுத்து பார்க்க அதில் அம்மா அப்பா.. வெண்மதி.. தேம்ஸ்.. என்று ஏகப்பட்ட அழைப்புகள்..! தொந்தரவாக இருக்கக் கூடாதென அலைபேசியை சைலன்டில் போட்டு வைத்தது ஞாபகம் வர.. தன் மறதியை எண்ணி தலையிலடித்துக் கொண்டு.. கைபேசியில் முதல் வேலையாக தன் அன்னைக்கு அழைத்து விபரத்தை சொல்லியபடியே அங்கிருந்து புறப்பட்டான்..
"ஆமாமா..! முக்கியமான வேலை.. சில பேஷண்ட்ஸோட கேஸ் ஹிஸ்டரியெல்லாம் வெரிஃபை பண்ண வேண்டியிருந்தது..!"
"ஃபோன் சைலன்ட்ல போட்டிருந்தேன்மா பாக்கல.. சரி கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.. தேம்பாவணி என்ன பண்றா.. ரூமுக்கு போய்ட்டாளா..?"
"அவ என்ன செய்றான்னு செக் பண்ணி பாருங்களேன்..
"ஆமாமா.. அப்படித்தான்.. அவ குழந்தை தான்.. தனியா இருக்க பயப்படுவா..! நீங்க வெட்டிப்பேச்சு பேசாம உடனே போய் பாருங்க.."
"முழிச்சுதான் இருக்காளா.? கொஞ்சம் தூங்க வச்சுடுங்களேன்.."
"கண்ண மூடுன உடனே வெளியே வந்துராதீங்க.. டீப் ஸ்லீப்புக்கு போன பிறகு சத்தம் போடாமல் கதவை சாத்திட்டு வெளியே போயிடுங்க.. இல்லன்னா அரைகுறை தூக்கத்துல எழுந்து கத்தி கலாட்டா பண்ணுவா..!"
"அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. இருட்டுன்னா கொஞ்சம் பயம்.. சின்ன பொண்ணுதானே போகப்போக சரியாகிடும்.. அப்புறம் இதையெல்லாம் போய் உங்க பொண்ணு உங்க மருமக கிட்ட சொல்லிக்கிட்டு நிக்காதிங்க..!"
"இன்னும் சாப்பிடல.. நீங்க எடுத்து வச்சுட்டு போங்க.. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்.."
"திலோத்தமாவுக்கா..! சரி சரி பேசறேன்.. அவளுக்கு தகவல் சொல்லாம எப்படி.. போன் பண்ணி சொல்றேன்.. இல்லை ஏற்கனவே சொல்லிட்டேன்.. ஐயோ ஃபோன வைங்களேன்மா..!"
காரில் ஏறி பாதி தூரம் பயணிக்கும் போதே மீண்டும் சாரதா விடமிருந்து அழைப்பு..
"டேய் வருண்..!"
"என்னமா தூங்கிட்டாளா..?"
"அந்த பொண்ணு நீ வந்தாதான் தூங்குவேன்னு சொல்லுது.. என்னடா இதெல்லாம்..!" சாரதாவுக்கு ஒன்றும் புரியாத நிலை..
"அம்மா உன் மகன் ஒரு சைக்யாட்ரிக் டாக்டர்.. மறந்துட்டீங்களா..? எவ்வளவோ பேஷன்ட்ஸை ஹிப்னோ தெரபி.. கவுன்சிலிங் மூலமா சரி படுத்தியிருக்கேன். அப்படித்தான் இதுவும்.. என் பேச்சுல மனசு ரிலாக்ஸ் ஆகறதா அவ ஃபீல் பண்றா.. நான் பக்கத்துல இருந்தா பயமில்லாம தூங்க முடியும்னு அவன் நம்புறா..!"
"எல்லாம் சரிதாண்டா.. அதுக்காக எப்பவும் நீ அவ கூடவே இருக்க முடியுமா என்ன..?"
எதிர்முனையில் வருண் மௌனம் காத்தான்..
"ஏன் உன் முகத்தை பார்த்தால் தான் அவளுக்கு தூக்கம் வருமா..? நான் பக்கத்துல இருந்தா தூங்க மாட்டாளாமா..?" சாரதாவின் குரலில் சின்ன கோபமும் பொறாமையும் தெரிய வருண் சிரித்தான்..!
"என்னமா சின்ன குழந்தை மாதிரி போட்டி போடறீங்க..!"
"இத்தனை நாள் அவளை நான் தானே கவனிச்சுக்கறேன்.. நான் பக்கத்திலேயே இருக்கறேன்.. பயப்படாம தூங்குன்னு சொன்னா வருண சார் வந்தா தான் தூங்குவேன்னு சட்டமா சொல்றா..! நான் என்ன அவளை கடிச்சா தின்னுட போறேன்..!"
"அப்படியெல்லாம் இல்லம்மா.. அவ உங்ககிட்ட சரியா பழகல..! அதனால கொஞ்சம் தயங்கறா..!"
"பழகத்தானே முயற்சி பண்றேன்..! எவ்வளவு அன்பு காட்டி பக்குவமா நடந்துக்கிட்டாலும் நீதான் வேணும்னு கேட்டா நான் என்ன செய்யறது..!"
"நான்தான் வேணுமா..!" உதட்டுக்குள் உச்சரித்துக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு..
"சரி நீங்க ஃபோன வைங்க..! நான் வந்துட்டே இருக்கேன்.. நீங்க போய் படுத்துக்கங்க.. நான் பாத்துக்கறேன் விடுங்க.."
என்றவன் வீட்டுக்கு வந்த நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க சாரதா எதிரே வந்தார்..
"என்னமா நான் உங்களை போய் தூங்க சொன்னேன் எதுக்காக இப்படி கண்ணு முழிச்சு உடம்ப கெடுத்துக்கறீங்க.."
நீ வர்ற வரைக்கும் பாப்பா கூட இருக்கலாம்னு.. தனியா விட மனசில்ல..!
வரூண் இதமான புன்னகையோடு தாயை பார்த்தான்..
அப்படியே நீ வந்ததும் உனக்கு சாப்பாடு எடுத்து வைச்சிட்டு போய்டலாம்னு பார்த்தேன்..
"நான் என்ன குழந்தையா எடுத்து போட்டு சாப்பிட்டுக்க மாட்டேனா..! நீ போ மம்மி.. காத்தால வேற கோழி கூவுறதுக்கு முன்னாடி எழுந்து எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செய்யற.. நைட்டும் சரியா தூங்கலைன்னா உடம்பு அது வேலையை காட்ட ஆரம்பிச்சிடும்.. அப்பா தூங்கிட்டாரா..?"
"எப்பவோ தூங்கியாச்சு இந்நேரம் குறட்டையில இருப்பார்.."
சரிதான் நீங்களும் போங்க..!! எப்படித்தான் இத்தனை வருஷமா இந்த கொரில்லா குறட்டை சத்தத்தை சகிச்சுக்கறீங்களோ இதுக்கே உங்களுக்கு நிதான சிகரம் விருது வழங்கணும்..!"
"உதை வாங்குவ படவா..!" சிரித்துக் கொண்டே வருணின் முதுகில் மெதுவாக அடிக்க.. ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் வருண்..
வழக்கம்போல் மோட்டு வலையை பார்த்தபடி கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..!
"ஏய் மணி என்ன ஆகுது இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்க..!" சின்ன அதட்டலோடு உள்ளே வந்தான் அவன்..!
"நீங்க வந்து குட் நைட் சொல்லாம எப்படி தூங்க முடியும்.." என்றபடியே அவளும் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க.. இருவருக்கும் எதிரே இருந்த நிலைக் கண்ணாடியின் மீது அவன் பார்வை பதிந்தது..
அப்பா பொண்ணு மாதிரி இருக்கீங்க.. திலோத்தமா சொன்ன வார்த்தைகள் மனதோடு உரசியதில்
"ஒரு போன் பண்ணியீருந்தா அப்பவே குட் நைட் சொல்லி இருப்பேனே தேவையில்லாம எதற்காக இவ்வளவு நேரம் காத்திருக்கனும்..?" என்றபடி அவளை தன் முன்னால் நிற்க வைத்து தோளோடு உரசியபடி பின்பக்கம் நின்று தாடையை தேய்த்தபடி புருவங்களை உயர்த்தி கண்ணாடியில் இருவரையும் பார்த்திருந்தான்..
"ஃபோன்ல குட்நைட் சொன்னா நேர்ல உங்க முகத்தை பார்க்க வேண்டாமா..! நீங்க என் பக்கத்துல இருந்தாத்தான் என்னால பயமில்லாமல் தூங்க முடியும்.." அவளும் கண்ணாடியில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்துக் கொண்டே இப்படி சொல்ல..
வருண் முகத்தில் சட்டென மென்மை படர்ந்தது..
அட நீல நிற சட்டையும் கருப்பு பேண்ட் அணிந்து.. தலையை கோதியபடி இடம் வலமாய் தன் முகத்தை திருப்பி. அவ்வப்போது சரியான விடையை பொருத்துக என்பதை போல் இருவரின் உருவங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவனை தேம்பாவணி ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்..
நீடித்து நிலைக்கும் நறுமணம் டிவி விளம்பரம் போல்.. அவனிடமிருந்து வெளிப்பட்ட ராயல் பர்ஃபியும் வாசனை அவளில் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது..
"அதான் அம்மாவை அனுப்பினேனே அவங்கள பக்கத்துல வச்சுக்கிட்டு தூங்க வேண்டியது தானே..!" பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டே கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை பார்த்தபடி சிரித்தான் வருண்..
"எனக்கு நீங்கதான் வேணும்..!"
இதயத்தில் ஒரு அதிர்வுடன் அவன் புருவங்கள் மேலேறின.. நிலைக் கண்ணாடியிலிருந்து பார்வையை விடுத்து பக்கத்தில் நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான்..
"சரி நேரமாச்சு போய் படு..!"
"கிளினிக்கிலிருந்து இப்பதான் வந்தீங்களா டாக்டர்..!" என்றபடியே கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..
"ஆமா ஏன் கேக்கற..?"
"டிரஸ் கூட மாத்தாம அவசரமா ரூமுக்குள்ள நுழைஞ்சுருக்கீங்களே..!" தோள்களை குலுக்கி சிரித்தாள்..
"சாப்பிட்டீங்களா..?"
"இல்ல இனிமேதான்..!"
"அய்யோ போய் சாப்பிட்டு வந்துருங்க.. எனக்காக நீங்க ஒன்னும் பட்டினியாக கிடைக்க வேண்டாம்.."
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் நீ முதல்ல படுத்து தூங்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு காலையில காலேஜ் போகணும் இல்ல..!"
ஒருக்களித்து படுத்தபடி.. "நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கேட்கவே இல்லையே நீங்க..?" என்றாள்..
"அம்மா உன்னை சாப்பிட வைச்சிருப்பாங்கன்னு எனக்கு தெரியும்..!"
"மாத்திரை போட்டேனான்னு..!" எனும்போதே அவள் உறங்கியிருக்க..
"டேப்லெட் போட்டாச்சா தேம்பா.."
என்ற வார்த்தைக்கு அவளிடம் பதில் இல்லாமல் போகவே.. முன் கைகட்டி கட்டிலின் ஓரத்தில் சாய்ந்த படி சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..
"ஸ்லீப்பிங் பியூட்டி.." என்று சிரித்தான்..
பிறகு விளக்கை அணைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தன்னறைக்கு செல்ல.. பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சமையலறை செல்லப் போன வெண்மதி..
நடு ஜாமத்தில் ஒரு வயது பெண்ணின் அறையிலிருந்து வெளியேறி செல்லும் தன் சகோதரனை கண்டு யோசனையாக முகத்தை சுருக்கினாள்..!
"ஆமான்டி இந்த வீட்ல என்னென்னமோ நடக்குது..! புதுசா வந்த பொண்ணு கூட இந்த பையன் ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி எனக்கு தோணுது.. எதுவும் சரியா படல.. நீ கொஞ்சம் கிளம்பி வாயேன்.." தனது தங்கை நிவேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் வெண்மதி..
"அம்மாகிட்ட சொல்லி பாத்துட்டேன்..! அவங்க பெருசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல..! திலோத்தமா இதையெல்லாம் கேட்டா மனசு கஷ்டப்படுவாளாம். தேவையில்லாத பிரச்சினையை இழுத்து வச்சுட்டு நீ பாட்டுக்கு ஊருக்கு போயிடுவ.. இங்க நாங்க தான் அவதிபடனும் ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு அமைதியா இருன்னு என்னையே அடக்கறாங்க.."
"ஐயோ உனக்கு புரியல நிவேதா.. என்னதான் தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும் நைட் 11 மணிக்கு மேல ஒரு வயசு புள்ள ரூம்ல என்ன வேலை இவனுக்கு..!"
"என்னது..? நான் போய் அவன் கிட்ட கேட்கறதா..? ஐயோ நீ வேற.. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேங்கறான்.. திடீர்னு மூஞ்சிய காமிச்சு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறான்.. அம்மா வீட்ல கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்னு வந்துட்டு தேவையில்லாம எதுக்கு நிம்மதியா கெடுத்துக்கணும்னு பார்க்கறேன்.. அதுக்காக அப்படியே விடவும் மனசு இல்ல.. நீ கொஞ்சம் கிளம்பி வாயன்.. என்ன ஏதுன்னு தெளிவா விவரம் தெரிஞ்சுட்டா நாமளும் கொஞ்சம் திருப்தியா ஊர் போய் சேரலாமே..! சரி வச்சுடறேன்..!"
சகோதரிக்கு பேசி முடித்து அம்மா அழைக்கவும் பூஜை அறைக்குள் சென்றாள்..
அன்றும் குட்டி சிலை காணாமல் போக.. யாருக்கும் தெரியாமல் இன்னொன்றைக் கொண்டு வந்து இருப்பிடத்தில் வைத்து விட்டு சென்றாள் வெண்மதி..
"என்ன டாக்டர்.. இன்னிக்கு சீக்கிரமாவே கிளம்பி என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க..!" காரில் போகும்போது கேட்டாள் தேம்பாவணி..
"என் க்ளோஸ் ஃபிரண்டோட மேரேஜ்..! அட்டெண்ட் பண்ணிட்டு கிளினிக் போகணும்.."
"அப்படியா..! உங்க ஃப்ரெண்ட் பெயர் என்ன?' அவள் ஆர்வமாக கேட்க..
"டாக்டர் சூர்யதேவ்.. கைனகாலஜிஸ்ட்.." என்றான் அவன் சாலையை பார்த்தபடி..
"நானும் கல்யாணத்துக்கு வரட்டுமா..!"
"ஒழுங்கா காலேஜ் போய் சேரு.. நானே அவசர கதியா மேரேஜ் அட்டென்ட் பண்ணிட்டு கிளினிக் போகணும்னு இருக்கேன்.."
"டாக்டர் சார் எனக்கு நண்பர்களே கிடையாது தெரியுமா..?"
"அப்ப நான் உன் நண்பன் இல்லையா..?" அவன் புருவங்கள் நெற்றிக்கு ஏறின..
"ப்ச்..! நீங்க இப்பதானே எனக்கு ஃபிரண்ட்.. அதுக்கு முன்னாடி யாருமே என்னோட நட்போட பழக்க மாட்டாங்க.. எல்லாருமே என்னை கண்டா தெறிச்சு ஓடுவாங்க.."
"தெரியும்.. நீ யார் கூட பழகினாலும் உன் அப்பா அவங்களோட சண்டை போட்டு உன்னை அவங்களே ஒதுக்கற மாதிரி பண்ணிடுவார்.."
"என்ன பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!" ஆச்சர்யமாக பார்த்தாள் தேம்பா..
"உன்னை புரிஞ்சுக்கத்தான் முடியல அட்லீஸ்ட் உன்னை பத்தி தெரிஞ்சுக்கவாவது செய்யலாம்ன்னுதான்..!"
"டாக்டர் சார் எனக்கும் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பேசி பழகி சந்தோஷமா இருக்கணும்னு ரொம்ப ஆசை.. அதுக்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கல.. அட்லீஸ்ட் உங்கள மாதிரி நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து ரீ யூனியன் பண்ணும்போது கூடவாவது இருந்து பார்த்து சந்தோஷப்பட்டுக்கறேனே..! ப்ளீஸ் ப்ளீஸ்.."
"காலேஜ் மட்டம் போடுறதுன்னு முடிவு பண்ணிட்ட..!"
"இஇஇஇ.." என சிரித்தாள் தேம்பாவணி..
"சரி வந்து தொலை..!" என்றதும்..
"தேங்க்யூ" என உற்சாகமாக அவன் கரத்தோடு தன் கரத்தை சேர்த்து கட்டிக் கொள்ள.. சட்டென காரை நிறுத்தியிருந்தான் அவன்..
"என்னாச்சு டாக்டர் சார்..?"
"திடீர்னு இப்படி ஷாக் கொடுக்காதம்மா..! எதுவானாலும் சொல்லிட்டு செய்.. பக்குனு ஆகுதுல" என்று நெஞ்சை பிடித்துக் கொண்டான்..
"டாக்டர் சார் நான் உங்களை வருண்னு பேர் சொல்லி கூப்பிடட்டுமா..!"
"வயசுக்கு மரியாதை இல்லையா..?"
"ஆமா உங்க வயசென்ன..?"
"என் வயசு உனக்கெதுக்கு.. இது உனக்கு சம்பந்தமில்லாத கேள்வி.."
"ஏன் திடீர்னு கோவ படுறீங்க.. சரி விடுங்க.. நான் என்ன வாடா போடான்னா கூப்பிட போறேன்.. பேர் சொல்லிக் கூப்பிடறதுல மரியாதை என்ன கெட்டுப்போயிட போகுது.."
"வேண்டாம்னு சொன்னா விடவா போற.. என்னமோ பண்ணு..! ஆனா அவங்க முன்னாடி உன் ஹைபர் பிஹேவியரா கொஞ்சம் குறைச்சுக்கோ.."
"ட்ரை பண்றேன்..!"
"குட்.." என்றபடி காரை ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி செலுத்தினான் அவன்..
தொடரும்..
அவர்களது கேஸ் ஹிஸ்டரியில் கொஞ்சம் குழப்பம் இருந்ததால்.. விவரங்களை முழுமையாக படித்துவிட்டு தன்னிடம் கலந்த ஆலோசிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்..!
நான்கு நபரின் முழு விவரங்களையும் படித்து முடிக்கையில் மணி இரவு 11:30 தொட்டிருந்தது..! மாலினியை 6:00 மணிக்கெல்லாம் புறப்பட சொல்லிவிட்டு கிளினிக்கில் தனியாகத்தான் இருந்தான் வரூண்..
கேஸ் ஹிஸ்டரியை படிக்கும் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை..!
கண்கள் கலைத்து உடல் சோர்வுற்ற நேரம் வசதியாக சாய்ந்து அமர்ந்து நீண்ட மூச்சுவிட்டு மணியை பார்க்க கடிகாரம் நடு ஜாமத்திற்கு இன்னும் சிறிது நேரமே இருப்பதாக எடுத்துரைத்தது..
"ஓ மை காட்..! டைம் 11:30 யா..? எப்படி பாக்காம விட்டேன்.." என்று அதிர்ந்தவனின் கண்களுக்குள் அவசரமாக வந்து போனவள் தேம்பாவணி மட்டுமே..!
அலைபேசியை எடுத்து பார்க்க அதில் அம்மா அப்பா.. வெண்மதி.. தேம்ஸ்.. என்று ஏகப்பட்ட அழைப்புகள்..! தொந்தரவாக இருக்கக் கூடாதென அலைபேசியை சைலன்டில் போட்டு வைத்தது ஞாபகம் வர.. தன் மறதியை எண்ணி தலையிலடித்துக் கொண்டு.. கைபேசியில் முதல் வேலையாக தன் அன்னைக்கு அழைத்து விபரத்தை சொல்லியபடியே அங்கிருந்து புறப்பட்டான்..
"ஆமாமா..! முக்கியமான வேலை.. சில பேஷண்ட்ஸோட கேஸ் ஹிஸ்டரியெல்லாம் வெரிஃபை பண்ண வேண்டியிருந்தது..!"
"ஃபோன் சைலன்ட்ல போட்டிருந்தேன்மா பாக்கல.. சரி கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.. தேம்பாவணி என்ன பண்றா.. ரூமுக்கு போய்ட்டாளா..?"
"அவ என்ன செய்றான்னு செக் பண்ணி பாருங்களேன்..
"ஆமாமா.. அப்படித்தான்.. அவ குழந்தை தான்.. தனியா இருக்க பயப்படுவா..! நீங்க வெட்டிப்பேச்சு பேசாம உடனே போய் பாருங்க.."
"முழிச்சுதான் இருக்காளா.? கொஞ்சம் தூங்க வச்சுடுங்களேன்.."
"கண்ண மூடுன உடனே வெளியே வந்துராதீங்க.. டீப் ஸ்லீப்புக்கு போன பிறகு சத்தம் போடாமல் கதவை சாத்திட்டு வெளியே போயிடுங்க.. இல்லன்னா அரைகுறை தூக்கத்துல எழுந்து கத்தி கலாட்டா பண்ணுவா..!"
"அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. இருட்டுன்னா கொஞ்சம் பயம்.. சின்ன பொண்ணுதானே போகப்போக சரியாகிடும்.. அப்புறம் இதையெல்லாம் போய் உங்க பொண்ணு உங்க மருமக கிட்ட சொல்லிக்கிட்டு நிக்காதிங்க..!"
"இன்னும் சாப்பிடல.. நீங்க எடுத்து வச்சுட்டு போங்க.. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்.."
"திலோத்தமாவுக்கா..! சரி சரி பேசறேன்.. அவளுக்கு தகவல் சொல்லாம எப்படி.. போன் பண்ணி சொல்றேன்.. இல்லை ஏற்கனவே சொல்லிட்டேன்.. ஐயோ ஃபோன வைங்களேன்மா..!"
காரில் ஏறி பாதி தூரம் பயணிக்கும் போதே மீண்டும் சாரதா விடமிருந்து அழைப்பு..
"டேய் வருண்..!"
"என்னமா தூங்கிட்டாளா..?"
"அந்த பொண்ணு நீ வந்தாதான் தூங்குவேன்னு சொல்லுது.. என்னடா இதெல்லாம்..!" சாரதாவுக்கு ஒன்றும் புரியாத நிலை..
"அம்மா உன் மகன் ஒரு சைக்யாட்ரிக் டாக்டர்.. மறந்துட்டீங்களா..? எவ்வளவோ பேஷன்ட்ஸை ஹிப்னோ தெரபி.. கவுன்சிலிங் மூலமா சரி படுத்தியிருக்கேன். அப்படித்தான் இதுவும்.. என் பேச்சுல மனசு ரிலாக்ஸ் ஆகறதா அவ ஃபீல் பண்றா.. நான் பக்கத்துல இருந்தா பயமில்லாம தூங்க முடியும்னு அவன் நம்புறா..!"
"எல்லாம் சரிதாண்டா.. அதுக்காக எப்பவும் நீ அவ கூடவே இருக்க முடியுமா என்ன..?"
எதிர்முனையில் வருண் மௌனம் காத்தான்..
"ஏன் உன் முகத்தை பார்த்தால் தான் அவளுக்கு தூக்கம் வருமா..? நான் பக்கத்துல இருந்தா தூங்க மாட்டாளாமா..?" சாரதாவின் குரலில் சின்ன கோபமும் பொறாமையும் தெரிய வருண் சிரித்தான்..!
"என்னமா சின்ன குழந்தை மாதிரி போட்டி போடறீங்க..!"
"இத்தனை நாள் அவளை நான் தானே கவனிச்சுக்கறேன்.. நான் பக்கத்திலேயே இருக்கறேன்.. பயப்படாம தூங்குன்னு சொன்னா வருண சார் வந்தா தான் தூங்குவேன்னு சட்டமா சொல்றா..! நான் என்ன அவளை கடிச்சா தின்னுட போறேன்..!"
"அப்படியெல்லாம் இல்லம்மா.. அவ உங்ககிட்ட சரியா பழகல..! அதனால கொஞ்சம் தயங்கறா..!"
"பழகத்தானே முயற்சி பண்றேன்..! எவ்வளவு அன்பு காட்டி பக்குவமா நடந்துக்கிட்டாலும் நீதான் வேணும்னு கேட்டா நான் என்ன செய்யறது..!"
"நான்தான் வேணுமா..!" உதட்டுக்குள் உச்சரித்துக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு..
"சரி நீங்க ஃபோன வைங்க..! நான் வந்துட்டே இருக்கேன்.. நீங்க போய் படுத்துக்கங்க.. நான் பாத்துக்கறேன் விடுங்க.."
என்றவன் வீட்டுக்கு வந்த நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க சாரதா எதிரே வந்தார்..
"என்னமா நான் உங்களை போய் தூங்க சொன்னேன் எதுக்காக இப்படி கண்ணு முழிச்சு உடம்ப கெடுத்துக்கறீங்க.."
நீ வர்ற வரைக்கும் பாப்பா கூட இருக்கலாம்னு.. தனியா விட மனசில்ல..!
வரூண் இதமான புன்னகையோடு தாயை பார்த்தான்..
அப்படியே நீ வந்ததும் உனக்கு சாப்பாடு எடுத்து வைச்சிட்டு போய்டலாம்னு பார்த்தேன்..
"நான் என்ன குழந்தையா எடுத்து போட்டு சாப்பிட்டுக்க மாட்டேனா..! நீ போ மம்மி.. காத்தால வேற கோழி கூவுறதுக்கு முன்னாடி எழுந்து எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செய்யற.. நைட்டும் சரியா தூங்கலைன்னா உடம்பு அது வேலையை காட்ட ஆரம்பிச்சிடும்.. அப்பா தூங்கிட்டாரா..?"
"எப்பவோ தூங்கியாச்சு இந்நேரம் குறட்டையில இருப்பார்.."
சரிதான் நீங்களும் போங்க..!! எப்படித்தான் இத்தனை வருஷமா இந்த கொரில்லா குறட்டை சத்தத்தை சகிச்சுக்கறீங்களோ இதுக்கே உங்களுக்கு நிதான சிகரம் விருது வழங்கணும்..!"
"உதை வாங்குவ படவா..!" சிரித்துக் கொண்டே வருணின் முதுகில் மெதுவாக அடிக்க.. ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் வருண்..
வழக்கம்போல் மோட்டு வலையை பார்த்தபடி கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..!
"ஏய் மணி என்ன ஆகுது இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்க..!" சின்ன அதட்டலோடு உள்ளே வந்தான் அவன்..!
"நீங்க வந்து குட் நைட் சொல்லாம எப்படி தூங்க முடியும்.." என்றபடியே அவளும் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க.. இருவருக்கும் எதிரே இருந்த நிலைக் கண்ணாடியின் மீது அவன் பார்வை பதிந்தது..
அப்பா பொண்ணு மாதிரி இருக்கீங்க.. திலோத்தமா சொன்ன வார்த்தைகள் மனதோடு உரசியதில்
"ஒரு போன் பண்ணியீருந்தா அப்பவே குட் நைட் சொல்லி இருப்பேனே தேவையில்லாம எதற்காக இவ்வளவு நேரம் காத்திருக்கனும்..?" என்றபடி அவளை தன் முன்னால் நிற்க வைத்து தோளோடு உரசியபடி பின்பக்கம் நின்று தாடையை தேய்த்தபடி புருவங்களை உயர்த்தி கண்ணாடியில் இருவரையும் பார்த்திருந்தான்..
"ஃபோன்ல குட்நைட் சொன்னா நேர்ல உங்க முகத்தை பார்க்க வேண்டாமா..! நீங்க என் பக்கத்துல இருந்தாத்தான் என்னால பயமில்லாமல் தூங்க முடியும்.." அவளும் கண்ணாடியில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்துக் கொண்டே இப்படி சொல்ல..
வருண் முகத்தில் சட்டென மென்மை படர்ந்தது..
அட நீல நிற சட்டையும் கருப்பு பேண்ட் அணிந்து.. தலையை கோதியபடி இடம் வலமாய் தன் முகத்தை திருப்பி. அவ்வப்போது சரியான விடையை பொருத்துக என்பதை போல் இருவரின் உருவங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவனை தேம்பாவணி ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்..
நீடித்து நிலைக்கும் நறுமணம் டிவி விளம்பரம் போல்.. அவனிடமிருந்து வெளிப்பட்ட ராயல் பர்ஃபியும் வாசனை அவளில் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது..
"அதான் அம்மாவை அனுப்பினேனே அவங்கள பக்கத்துல வச்சுக்கிட்டு தூங்க வேண்டியது தானே..!" பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டே கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை பார்த்தபடி சிரித்தான் வருண்..
"எனக்கு நீங்கதான் வேணும்..!"
இதயத்தில் ஒரு அதிர்வுடன் அவன் புருவங்கள் மேலேறின.. நிலைக் கண்ணாடியிலிருந்து பார்வையை விடுத்து பக்கத்தில் நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான்..
"சரி நேரமாச்சு போய் படு..!"
"கிளினிக்கிலிருந்து இப்பதான் வந்தீங்களா டாக்டர்..!" என்றபடியே கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..
"ஆமா ஏன் கேக்கற..?"
"டிரஸ் கூட மாத்தாம அவசரமா ரூமுக்குள்ள நுழைஞ்சுருக்கீங்களே..!" தோள்களை குலுக்கி சிரித்தாள்..
"சாப்பிட்டீங்களா..?"
"இல்ல இனிமேதான்..!"
"அய்யோ போய் சாப்பிட்டு வந்துருங்க.. எனக்காக நீங்க ஒன்னும் பட்டினியாக கிடைக்க வேண்டாம்.."
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் நீ முதல்ல படுத்து தூங்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு காலையில காலேஜ் போகணும் இல்ல..!"
ஒருக்களித்து படுத்தபடி.. "நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கேட்கவே இல்லையே நீங்க..?" என்றாள்..
"அம்மா உன்னை சாப்பிட வைச்சிருப்பாங்கன்னு எனக்கு தெரியும்..!"
"மாத்திரை போட்டேனான்னு..!" எனும்போதே அவள் உறங்கியிருக்க..
"டேப்லெட் போட்டாச்சா தேம்பா.."
என்ற வார்த்தைக்கு அவளிடம் பதில் இல்லாமல் போகவே.. முன் கைகட்டி கட்டிலின் ஓரத்தில் சாய்ந்த படி சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்..
"ஸ்லீப்பிங் பியூட்டி.." என்று சிரித்தான்..
பிறகு விளக்கை அணைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தன்னறைக்கு செல்ல.. பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சமையலறை செல்லப் போன வெண்மதி..
நடு ஜாமத்தில் ஒரு வயது பெண்ணின் அறையிலிருந்து வெளியேறி செல்லும் தன் சகோதரனை கண்டு யோசனையாக முகத்தை சுருக்கினாள்..!
"ஆமான்டி இந்த வீட்ல என்னென்னமோ நடக்குது..! புதுசா வந்த பொண்ணு கூட இந்த பையன் ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி எனக்கு தோணுது.. எதுவும் சரியா படல.. நீ கொஞ்சம் கிளம்பி வாயேன்.." தனது தங்கை நிவேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் வெண்மதி..
"அம்மாகிட்ட சொல்லி பாத்துட்டேன்..! அவங்க பெருசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல..! திலோத்தமா இதையெல்லாம் கேட்டா மனசு கஷ்டப்படுவாளாம். தேவையில்லாத பிரச்சினையை இழுத்து வச்சுட்டு நீ பாட்டுக்கு ஊருக்கு போயிடுவ.. இங்க நாங்க தான் அவதிபடனும் ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு அமைதியா இருன்னு என்னையே அடக்கறாங்க.."
"ஐயோ உனக்கு புரியல நிவேதா.. என்னதான் தெரிஞ்ச பொண்ணா இருந்தாலும் நைட் 11 மணிக்கு மேல ஒரு வயசு புள்ள ரூம்ல என்ன வேலை இவனுக்கு..!"
"என்னது..? நான் போய் அவன் கிட்ட கேட்கறதா..? ஐயோ நீ வேற.. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேங்கறான்.. திடீர்னு மூஞ்சிய காமிச்சு சிடுசிடுன்னு எரிஞ்சு விழறான்.. அம்மா வீட்ல கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்னு வந்துட்டு தேவையில்லாம எதுக்கு நிம்மதியா கெடுத்துக்கணும்னு பார்க்கறேன்.. அதுக்காக அப்படியே விடவும் மனசு இல்ல.. நீ கொஞ்சம் கிளம்பி வாயன்.. என்ன ஏதுன்னு தெளிவா விவரம் தெரிஞ்சுட்டா நாமளும் கொஞ்சம் திருப்தியா ஊர் போய் சேரலாமே..! சரி வச்சுடறேன்..!"
சகோதரிக்கு பேசி முடித்து அம்மா அழைக்கவும் பூஜை அறைக்குள் சென்றாள்..
அன்றும் குட்டி சிலை காணாமல் போக.. யாருக்கும் தெரியாமல் இன்னொன்றைக் கொண்டு வந்து இருப்பிடத்தில் வைத்து விட்டு சென்றாள் வெண்மதி..
"என்ன டாக்டர்.. இன்னிக்கு சீக்கிரமாவே கிளம்பி என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க..!" காரில் போகும்போது கேட்டாள் தேம்பாவணி..
"என் க்ளோஸ் ஃபிரண்டோட மேரேஜ்..! அட்டெண்ட் பண்ணிட்டு கிளினிக் போகணும்.."
"அப்படியா..! உங்க ஃப்ரெண்ட் பெயர் என்ன?' அவள் ஆர்வமாக கேட்க..
"டாக்டர் சூர்யதேவ்.. கைனகாலஜிஸ்ட்.." என்றான் அவன் சாலையை பார்த்தபடி..
"நானும் கல்யாணத்துக்கு வரட்டுமா..!"
"ஒழுங்கா காலேஜ் போய் சேரு.. நானே அவசர கதியா மேரேஜ் அட்டென்ட் பண்ணிட்டு கிளினிக் போகணும்னு இருக்கேன்.."
"டாக்டர் சார் எனக்கு நண்பர்களே கிடையாது தெரியுமா..?"
"அப்ப நான் உன் நண்பன் இல்லையா..?" அவன் புருவங்கள் நெற்றிக்கு ஏறின..
"ப்ச்..! நீங்க இப்பதானே எனக்கு ஃபிரண்ட்.. அதுக்கு முன்னாடி யாருமே என்னோட நட்போட பழக்க மாட்டாங்க.. எல்லாருமே என்னை கண்டா தெறிச்சு ஓடுவாங்க.."
"தெரியும்.. நீ யார் கூட பழகினாலும் உன் அப்பா அவங்களோட சண்டை போட்டு உன்னை அவங்களே ஒதுக்கற மாதிரி பண்ணிடுவார்.."
"என்ன பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!" ஆச்சர்யமாக பார்த்தாள் தேம்பா..
"உன்னை புரிஞ்சுக்கத்தான் முடியல அட்லீஸ்ட் உன்னை பத்தி தெரிஞ்சுக்கவாவது செய்யலாம்ன்னுதான்..!"
"டாக்டர் சார் எனக்கும் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பேசி பழகி சந்தோஷமா இருக்கணும்னு ரொம்ப ஆசை.. அதுக்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கல.. அட்லீஸ்ட் உங்கள மாதிரி நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து ரீ யூனியன் பண்ணும்போது கூடவாவது இருந்து பார்த்து சந்தோஷப்பட்டுக்கறேனே..! ப்ளீஸ் ப்ளீஸ்.."
"காலேஜ் மட்டம் போடுறதுன்னு முடிவு பண்ணிட்ட..!"
"இஇஇஇ.." என சிரித்தாள் தேம்பாவணி..
"சரி வந்து தொலை..!" என்றதும்..
"தேங்க்யூ" என உற்சாகமாக அவன் கரத்தோடு தன் கரத்தை சேர்த்து கட்டிக் கொள்ள.. சட்டென காரை நிறுத்தியிருந்தான் அவன்..
"என்னாச்சு டாக்டர் சார்..?"
"திடீர்னு இப்படி ஷாக் கொடுக்காதம்மா..! எதுவானாலும் சொல்லிட்டு செய்.. பக்குனு ஆகுதுல" என்று நெஞ்சை பிடித்துக் கொண்டான்..
"டாக்டர் சார் நான் உங்களை வருண்னு பேர் சொல்லி கூப்பிடட்டுமா..!"
"வயசுக்கு மரியாதை இல்லையா..?"
"ஆமா உங்க வயசென்ன..?"
"என் வயசு உனக்கெதுக்கு.. இது உனக்கு சம்பந்தமில்லாத கேள்வி.."
"ஏன் திடீர்னு கோவ படுறீங்க.. சரி விடுங்க.. நான் என்ன வாடா போடான்னா கூப்பிட போறேன்.. பேர் சொல்லிக் கூப்பிடறதுல மரியாதை என்ன கெட்டுப்போயிட போகுது.."
"வேண்டாம்னு சொன்னா விடவா போற.. என்னமோ பண்ணு..! ஆனா அவங்க முன்னாடி உன் ஹைபர் பிஹேவியரா கொஞ்சம் குறைச்சுக்கோ.."
"ட்ரை பண்றேன்..!"
"குட்.." என்றபடி காரை ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி செலுத்தினான் அவன்..
தொடரும்..
Last edited: