- Joined
- Jan 10, 2023
- Messages
- 78
- Thread Author
- #1
உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணனும்.. என்பதைப் போல்.. உலகின் கோடான கோடி பெண்களை தாண்டி கமலியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு..
தன்னை இழிவு படுத்தியவர்களின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கமலியின் வீராப்பு..
இரண்டும்தான் இந்த திருமணத்தின் அடித்தளம்..
கமலி சூர்ய தேவ் எளிமையாக திருமணத்தை கோவிலில் நடத்திக் கொண்டு ரெஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர்..
தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த மாயாவால் முழுதாக மனம் நிறைந்து மகிழ முடியவில்லை.. ஏகப்பட்ட குழப்பங்களோடு தான் இந்த திருமணத்திற்கு வந்திருந்தாள்..
காரணங்கள் நிறைய உண்டு.. தோழியின் மனம் அவள் நன்றாகவே அறிவாள்..
முதல் திருமண ஏமாற்றங்களிலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையை பெரும்பாரமாக கருதி மிகுந்த மன அழுத்தத்தோடு போராடிக் கொண்டிருக்கும் தன் தோழி.. இரண்டாம் திருமணத்திற்கு எப்படி சம்மதித்தாள்..
ஒருவேளை டாக்டர் காதலால் கசிந்துருகி காலில் விழுந்து அவள் மனதை மாற்றி விட்டாரா என்று கேட்டால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்பதையும் அவள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்..
"டாக்டரை கல்யாணம் பண்ணிக்க போறேன்..!!" என்பதை இன்று செவ்வாய்க்கிழமை என்பதை போல் உணர்ச்சி இல்லாத குரலில் அலைபேசியில் கமலி நட்பிடம் சொன்னபோது..
ஒரு நிமிடம் அதிர்ந்து பின் மகிழ்ந்து பின் குழம்பி என கலவையான உணர்வுகளோடு திணறிக் கொண்டிருந்த மாயா..
"கமலி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, எனக்கு சந்தோஷம்தான்.. ஆனா திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு.. நீ சந்தோஷமா மனசார விருப்பப்பட்டு இந்த கல்யாணத்தை பண்ணிக்கல.. அது மட்டும் எனக்கு தெரியுது ஒழுங்கா மரியாதையா காரணத்தை சொல்லு.." என்றாள் அழுத்தமாகவும் அதட்டலாகவும்..
"என்னை எதுவும் கேட்காதே.. டாக்டர் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாரு.. நானும் ஓகே சொல்லிட்டேன்.. மத்தவங்கள போல சந்தோஷமா வாழ எனக்கும் எல்லா தகுதியும் இருக்கு அப்படித்தானே மாயா.." கமலி லேசான உடைந்த குரலில் கேட்க.. மாயா ஏதோ துணுக்குற்றாள்..
"என்னடி ஏதாவது பிரச்சனையா..? மறுபடியும் அந்த அஷோக் உன்னை ஏதாவது தொந்தரவு பண்றானா..?" தோழியின் மனதை படம் பிடித்து பார்த்தது போல் சரியாக கணித்து கேட்க.. கமலி திணறினாள்..
"அது.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. வாழ்க்கையில எனக்கும் ஒரு மாற்றம் வேணுமே.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்.. எல்லாத்துக்கும் மேல டாக்டர்.. ரெண்டு பேருமே மருத்துவத் துறையில் இருக்கோம்.. அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டபோது எனக்கு மறுக்க எந்த காரணமும் இல்லை அதனால ஓகே சொல்லிட்டேன்.."
மாயாவிடம் அஷோக் போனில் பேசியதையும்.. இந்த திருமணத்திற்கு அவள் சம்மதிப்பதற்கான அடித்தளத்தை அவன் தான் உருவாக்கினான். என்பதையும் கவனமாக மறைத்து விட்டாள் கமலி..
"ஆனா டாக்டர் எப்படி உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணினாரு..!! பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஆஞ்சநேயர் வம்சமாச்சே அவர்..
இத்தனை வருஷங்களா கல்யாணமே வேணாம்னு இருந்தவர் இப்படி திடீர்னு மாற காரணம் என்ன..? நீ அழகிதான்.. ஆனா அழகுல மயங்கறவர் இல்லையே அந்த டாக்டர்.. எனக்கு சந்தேகமா இருக்குது.. இதுல வேற ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ.. நான் வேணா டாக்டர் கிட்ட பேசி பார்க்கட்டுமா..?" மாயா பதட்டமும் படபடப்புமாக கேட்க தோழியின் அக்கறையில் நெகிழ்ந்து போனாள் கமலி..
"ஏன் டாக்டர் என்னை பொய் சொல்லி கல்யாணம் பண்ணி அப்புறம் சைகோவா மாறி கொடுமைப்படுத்தி கொலை பண்ணிடுவார்ன்னு பயப்படுறியா..?" இதழ் நகைப்போடு சிரித்தாள் கமலி..
"எல்லாமே உனக்கு விளையாட்டுதான் கமலி.. இப்படித்தான் அன்னைக்கு அஷோக்கை நான் விரும்பறேன்னு சொல்லி வந்து நின்ன..!! அப்பவே எனக்குள்ள ஏதோ உறுத்தல்.. வேண்டாம்னு சொன்னேன்.. நீ கேட்கவே இல்லை.. கடைசில கணவன் மனைவியா ஒன்னா வாழ்ந்தபிறகு உங்களுக்குள்ள எதுவுமே ஒத்து போகல.. இந்த முறை அப்படி எதுவும் ஆகிட கூடாதுன்னு எனக்கு பயமா இருக்கு..!!" மாயாவின் குரலில் லேசான நடுக்கம்..
"கணவன் மனைவியா வாழ்ந்தாதானே..?" தனக்குள் விரக்தியாக சிரித்தாள் கமலி..
"பயப்படாதே மாயா அப்படி எதுவும் ஆகாது.. நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. இந்த முறை ஏமாற மாட்டேன்.."
எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை தரும்.. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இங்கே ஏற்படப்போவதில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. "உன் குளோஸ் பிரண்டுக்கு கல்யாணம்.. சந்தோஷப்படாம இப்படி நெகட்டிவிட்டியா பேசி என்னை மூட்வுட் பண்ணலாமா நீ..?" கமலி கடைசி வார்த்தைகளை செல்ல கோபத்தோடு கேட்க.. மாயா அதற்கு மேலும் தோண்டி துருவாமல்..
"என்னடி இப்படி சொல்லிட்ட..? ஒரு பிரண்டா இந்த கல்யாணத்துல என்னென்ன நிறைகுறைகள் இருக்குன்னு ஆராய்ந்து பார்க்க வேண்டியது என் கடமை இல்லையா.. வாழ போறவ நீ.. உனக்கு பிடிச்சிருந்தா ஓகே தான்.. நீ சந்தோஷமா இருக்கணும்.. அவ்ளோதான்.. கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு போன் பண்ணு.. நான் புறப்பட்டு வரேன்.." என்றிருந்தாள்..
கமலிக்கு திருமணம் என்று விஷ்ணுவிற்கு அழைத்து இதை பற்றி பேசியிருக்க..
"இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகு கமலி இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கான்னா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்..!! நீயும் குழம்பி அவளையும் குழப்பிடாதே.. அவ எந்த கோணத்திலிருந்து யோசிக்கிறா ன்னு நமக்கு தெரியல.. ஒரு பிரண்டா அவளுக்கு சப்போர்ட்டிவா நில்லு.. இந்த நேரத்துல நீ செய்ய வேண்டியது இது மட்டும்தான்" என்றிருந்தான் அவள் கணவன்..
மருதமலை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட போது கூட வருண் மற்றும் மாயாவின் கண்கள் மணமக்களின் முகங்களை குறுகுறுவென்று ஆராய்ந்தன..
ஏதோ சினிமா பிரபலங்கள் உள்நோக்கத்திற்காக செய்து கொள்ளும் ஒட்டுறவில்லாத ஒப்பந்த திருமணம் போல்.. இயந்திரத்தனமாக இவர்கள் திருமணம் அரங்கேறியதாக தோன்றியது இருவருக்கும்..
கமலி முகத்தில் தெளிவில்லை.. சூரிய தேவ் வழக்கம் போல் இறுகி தெரிந்தான்..
அகல கால் வைத்ததைப் போல் இருவரும் மணமேடை வரை வந்துவிட்ட போதிலும்..!! இந்த மண வாழ்க்கை தங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.. என்பதில் இருவருக்கும் இனம் புரியாத தவிப்பும் குழப்பமும்..!!
ஆயிரம் எண்ண ஓட்டங்களுக்கு மத்தியிலும் கமலியின் மணக்கோலத்தை அங்குல அங்குலமாக கவனிக்க தவறவில்லை சூர்ய தேவ்..
வீட்டிலிருந்து இருவரும் ஒன்றாகத்தான் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார்கள்..
ஆடம்பரமில்லாத எளிமையான குங்கும நிற பட்டுப்புடவையில்.. தானாகவே செய்து கொண்ட லேசான ஒப்பனையோடு.. பின்னலில் மல்லிகைகை சரம் சூடி.. சற்று பெரியதாக பொட்டு வைத்து புடவையின் மடிப்புகளை சரி செய்தபடி.. கேட்டை தாண்டி நடந்து வந்து காருக்குள் ஏறியவளை.. மீள முடியாத மயக்கத்தோடு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் டாக்டர் என்று அழைத்த பிறகு தான் தெளிந்து காரை எடுத்தான்..
மாயா சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு நேரடியாக கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தாள்..
சூர்ய தேவ் அனுமதியோடு தான் வேலைபார்க்கும் மருத்துவமனையிலிருந்து தனக்கு பரிச்சயமானவர்களும் மிக நெருக்கமானவர்களுமான ஷீலா.. விஜயலட்சுமி.. காவ்யா இவர்களோடு சேர்த்து இன்னும் மூன்று பேரை மட்டும் திருமணத்திற்காக அழைத்திருந்தாள் கமலி..
விஷயத்தை சொல்லி திருமணத்திற்கு அழைப்பு விடுக்க.. அவர்களுக்கும் இது எதிர்பாராத அதிர்ச்சி..
"நம்ம சீஃப் டாக்டருக்கு கல்யாணமா..? நம்பவே முடியலையே..!!"
"பொண்ணு யாரு தெரியுமா? நம்ம நர்ஸ் கமலி.."
"அடடே நல்ல பொண்ணு தான்.. துருதுருன்னு எல்லாரையும் சிரிக்க வச்சு.. இந்த ஹாஸ்பிடலையே தலைகீழா மாத்திட்டாளே..!!"
"அதே மாதிரி டாக்டர் மனசையும் மாத்தி இருப்பா போலிருக்கு.."
"அப்ப டாக்டர் காதல்ல விழுந்துட்டார் சொல்றியா..? அப்படி எதுவும் தெரியலையே..!! எப்பவும் போல கமலி கிட்ட சிடுசிடுன்னுதான் பேசறார்.."
"அதேதான் காதலிக்கிறவங்க கிட்ட தெரியற மாற்றங்கள் எதுவும் இவங்க கிட்ட இல்லையே.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்கிட்டது கூட கிடையாது.."
"டாக்டர் வீட்ல தான் கமலி வாடகைக்கு இருக்காளாம் இந்த விஷயம் இப்பதான் தெரிஞ்சது.."
"அப்ப வீட்ல காதல் மலர்ந்திருக்கும்.."
"யாருக்கு.. நம்ம டாக்டருக்கு.. ம்க்கூம்.. சரிதான்..!!
"அவரே ஒரு ரோபோட்.."
"அப்புறம் எப்படி இந்த கல்யாணம்..?"
"ஐயோ தலைய பிச்சுக்கலாம் போலிருக்கு.."
"அட விடுங்கப்பா.. அவங்க வாழ்க்கை அவங்க முடிவு.. நல்லா இருந்தா சரி.. கமலி கல்யாணத்துக்கு கூப்பிட்டுருக்கா.. போய் தலையை காட்டிட்டு கிப்ட் குடுத்துட்டு வருவோம்.."
இப்படியாக சம்பாஷனை முடிந்தது அவர்களுக்குள்..
திருமணத்திற்கு வந்து பார்த்தால்
இருவர் முகத்திலும் மருந்துக்கும் சிரிப்பில்லை.. சந்தோஷம் இல்லை..
"ஒருவேளை சொசைட்டிக்கு பதில் சொல்ல முடியாம.. கல்யாணம் எப்போன்னு கேக்கறவங்க வாயை அடைக்கிறதுக்காக மேரேஜ் பண்ணிக்கிறாங்களோ..!!" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்..
நாலு வார்த்தை இனிமையாக பேசத் தெரியாத இந்த டாக்டர் என் தோழியை எப்படி சந்தோஷமாக வச்சிக்க போறார்.. மாயா கவலைப்பட்டாள்..
"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ கடவுளே.. என்ன காரணத்துக்காக இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா தெரியல.. என் கமலி துன்பப்பட்டதெல்லாம் போதும்.. இனியாவது அவ வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குடு.." மருதமலை முருகனை மனதார வேண்டிக்கொண்டாள் மாயா..
ஐயரின் மந்திரங்களை அடுத்து.. கமலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து அவளை தன் மனைவியாக்கிக்கொண்டான். சூர்ய தேவ்..
கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரம் நீண்ட பெருமூச்செடுத்து தன் பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள் கமலி..
தோழியின் தோளை ஆதரவாக தொட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..
இருவருக்கும் வாழ்த்துக்களை சொன்னான் வருண்..
"நான் சொல்லல.. இவங்க ரெண்டு பேரும் ஏதோ கட்டாயத்தின் பெயரில் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க.." என்றாள் ஷீலா..
"யாரு கட்டாயப்படுத்தி இருப்பாங்க? ஒருவேளை அந்த ஐயரா இருக்குமோ.. அவர்தான் சீக்கிரம் தாலி கட்டுங்க முகூர்த்த முடிய போறதுன்னு சொன்னார்.." என்ற விஜயலட்சுமி மற்றவர்கள் முறைப்புகளை பெற்றுக் கொண்டாள்..
காவ்யாவிற்கு தன்னை நிராகரித்துவிட்டு கமலியை டாக்டர் சூர்யதேவ் தேர்ந்தெடுத்ததில் சற்று வருத்தம்தான்..
ஆனால் இப்படிப்பட்ட கறாரான சிடுமூஞ்சி மனிதனோடு காலந் தள்ள முடியாது என்பதை தன் காதலை தெரிவித்து சூர்யதேவ் நிராகரித்த சில நாட்களிலேயே அவள் புரிந்து கொண்டிருந்ததால் மனதுக்குள் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை..
இருந்தபோதிலும் இந்நேரம் சூர்ய தேவ் வசீகரத் தோற்றமும்.. அந்தக் கூர்மையான கண்களும் ஓங்குதாங்கான உடற்கட்டும்.. கச்சிதமாக பொருந்தியிருக்கும் அவன் வேட்டி சட்டையும்.. எதையோ இழந்துவிட்ட மன குறையோடு உள்ளுக்குள் உறுத்தத்தான் செய்கிறது..
கிடைக்கவில்லை எனும்போது.. ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..
மாயாவை வருணுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் கமலி..
"நீங்க டாக்டர் சூர்ய தேவ் க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு சொல்றீங்க.. உங்க ஃபிரண்டு.. கமலியை கல்யாணம் பண்ணிக்க என்ன காரணம்.. அவர் அவளை காதலிக்கிறாரா.. இல்ல இதுக்கு பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்கா..?" தன் மனதில் முகாமிட்டிருந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் வருணிடம் கேட்டு வைத்தாள் மாயா..
வருண் சிரித்தான்..
"உங்க ஃப்ரெண்ட் மேல நீங்க வச்சிருக்கிற அக்கறை புரியுது.. ஆனா இவ்வளவு கவலை பட வேண்டிய அவசியமில்லை.. சூர்ய தேவ் விருப்பப்பட்டுதான் கமலியே கல்யாணம் பண்ணிக்கறான்.. நிச்சயமா அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க.. நம்பிக்கையோடு இருங்க.."
வருண் வார்த்தைகள் அவளுக்கு திருப்தியை தரவில்லை..
சூர்யதேவ் மற்றவர்களை போல் சாதாரண மனிதனாய் இருந்திருந்தால் மாயாவிற்கு இப்படி ஒரு கேள்வியும் சந்தேகம் வந்திருக்காது.. அவன் குண நலன்களையும் செயல்களையும் கண்கூடாக பார்த்தவளுக்கு தோழியை நினைத்து கவலையாகத்தான் இருந்தது..
கழுத்தில் தாலி ஏறிய அடுத்த கனம் மணக்கோலத்தில் சூரியதேவ்வுடன் ஜோடியாக நின்று செல்ஃபி எடுத்து அஷோக்கிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தாள் கமலி..
புளு டிக் காட்டியது.. ஆனால் பதில் வரவில்லை..
அந்த ஒரு கணம் அவள் முகத்தில் சொல்ல முடியாத திருப்தி வந்து போனது..
பைவ் ஸ்டார் ஹோட்டலில் வந்தவர்களுக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
கமலிக்காக மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் மற்றும் மாயா வரும் இவர்களை தவிர பெரிதாக கூட்டமில்லை..
வந்தவர்கள் உணவு முடித்து சூர்யதேவ் கமலிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்று சென்றுவிட மாயாவும் வருணும் வீடு வரை வந்தனர்..
கையில் மாலையுடன் காரிலிருந்து இறங்கியவர்களை கண்டு மன நிறைவோடு புன்னகைத்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
கமலி அவரிடம் தங்கள் திருமணத்தைப் பற்றி ஏற்கனவே தகவலாக சொல்லி இருந்தாள்.. டாக்டரின் மாற்றங்களை கண்கூடாக பார்த்து வந்தவருக்கு இந்த திருமணம் அப்படி ஒன்றும் பெரிய அதிசயமாக தெரியவில்லை..
கமலி தான் டாக்டருக்கு சரியான பொருத்தம் என்ற எண்ணத்தோடு இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் மூர்த்தி..
மாயா வருண் நிறைய பேசி கலகலத்தனர்.. கமலி அவ்வப்போது அவர்கள் உரையாடலில் குறுக்கிட்டு.. ஏதாவது சொல்லி சிரித்தாள்.. சூர்யதேவ் அமைதியாக மூவரையும் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்..
கமலி பேசும் போது மட்டும் சற்று கூடுதலாகவே கவனித்தான்..
அவன் குணம் தெரியும் என்பதால் மற்ற மூவரும் சூரியதேவ் அமைதியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
பொதுவாக இது போன்ற கலகலப்பான கலந்துரையாடல்களில் ஈடுபாடு இல்லாத சூர்யா.. இந்த அளவிற்கு தங்களோடு அமர்ந்திருப்பதே பெரிய அதிசயம் தான்.. என்று எண்ணினான் வருண்..
மாயா கூட அதே மனநிலையில் தான் இருந்தாள்..
இந்நேரம் டாக்டர் ரூமுக்குள்ள போய் கதவை சாத்தி இருக்கணுமே..!! இது என்ன அதிசயம் என்ற ரீதியில் அவ்வப்போது அவனை வினோதமாக பார்த்தாள்..
வருண் ஒரு மணி நேரம் அவர்களோடு இருந்தான்.. பிறகு விடை பெற்று புறப்பட்டு சென்று விட்டான்..
மறுநாள் காலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டி இருந்ததால் நேரடியாக ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு தான் சென்றிருந்தான்..
மாயா கமலியோடு மாடி போர்ஷனில் தங்கி கொண்டாள்..
"ஏண்டி புதுசா கல்யாணம் ஆனவ.. என் கூட வந்து தங்கினா என்ன அர்த்தம்.. நீ கீழ போய் டாக்டர் கூட இரு.. நான் பாத்துக்கறேன்.." என்று கமலியை டாக்டரோடு இருக்கச் சொல்லி வற்புறுத்தினாள் மாயா..
"வாழ்க்கை பூரா இனி அவர் கூட தானே இருக்க போறேன்.. நாளைக்கு ஈவினிங் நீ கிளம்பிடுவ.. அப்புறம் உன்னை எப்ப பார்க்க போறேன்னு தெரியல.. அதனால நீ இங்க இருக்கிற வரைக்கும் நான் உன் கூடத்தான் இருப்பேன்.." என்று கமலி உறுதியாக சொன்ன பிறகு மாயாவால் மறுக்க முடியவில்லை..
இரவில் சூர்ய தேவ் மாடிக்கு வந்து அவர்களோடு சேர்ந்து உணவருந்தினான்..
சமையலறை வரை சென்று கமலியோடு ஏதோ ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மாயா காண நேர்ந்தது..
அத்தோடு உரிமையாக அவளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு பரிமாறச் சொன்னதும்..
சத்தமாக ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைக்க சொல்லி கோபப்படாமல்.. அதை கண்டுகொள்ளாதவன் போல் உணவருந்திக் கொண்டிருந்ததும் மாயாவை ஆச்சரியப்படுத்தின..
டாக்டர் இப்போதெல்லாம் எனக்கு அதிகமாக தொல்லை கொடுப்பதில்லை.. நாங்கள் இருவரும் நண்பர்களாகி விட்டோம்.. என்று கமலி சொன்னபோது கூட அவ்வளவாக நம்பிக்கை பிறக்கவில்லை..
இப்போது கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
இந்த டாக்டருக்கு சவுண்ட் அலர்ஜியா.. சத்தமே ஆக மாட்டேங்குதே..!! என்று மாயா கூட தன் டீம் நண்பர்களோடு சேர்ந்து சூர்யாவை கிண்டல் செய்ததுண்டு..
ஆனால் இப்போது அவன் குணாதிசயம் தலைகீழாக மாறி போயிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறாளே..!! கமலியின் பொருட்டு கவலை கொண்ட மனம் சற்று அமைதியடைகிறது..
இத்தனைக்கும் அதன் கலகலவென்று பேசவில்லை பேருக்கு ஒரு புன்னகை கூட இல்லை.. தரையில் இறக்கி விடப்பட்ட குழந்தை நேரடியாக அம்மாவை தேடி ஓடுவதை போல்.. அவன் கண்களும் கவனமும் கமலி ஒருத்தியிடமே குவிந்திருந்தது..
எல்லாம் முடிந்து அங்கிருந்து புறப்படுகையில்
"குட் நைட் டாக்டர்.." கமலி சொன்னதற்கு பதிலாக..
"குட் நைட்" என்று விட்டு வெளியே நடக்க துவங்கினான் அவன்..
"குட் நைட் டாக்டர்.."
மாயாவின் குரலுக்கு பதில் வரவில்லை..
"ம்ம்.. சரிதான்.." உதட்டு சுளிப்போடு ஒரு மார்க்கமாக தலையசைத்தாள் மாயா..
தொடரும்..
தன்னை இழிவு படுத்தியவர்களின் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கமலியின் வீராப்பு..
இரண்டும்தான் இந்த திருமணத்தின் அடித்தளம்..
கமலி சூர்ய தேவ் எளிமையாக திருமணத்தை கோவிலில் நடத்திக் கொண்டு ரெஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர்..
தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த மாயாவால் முழுதாக மனம் நிறைந்து மகிழ முடியவில்லை.. ஏகப்பட்ட குழப்பங்களோடு தான் இந்த திருமணத்திற்கு வந்திருந்தாள்..
காரணங்கள் நிறைய உண்டு.. தோழியின் மனம் அவள் நன்றாகவே அறிவாள்..
முதல் திருமண ஏமாற்றங்களிலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையை பெரும்பாரமாக கருதி மிகுந்த மன அழுத்தத்தோடு போராடிக் கொண்டிருக்கும் தன் தோழி.. இரண்டாம் திருமணத்திற்கு எப்படி சம்மதித்தாள்..
ஒருவேளை டாக்டர் காதலால் கசிந்துருகி காலில் விழுந்து அவள் மனதை மாற்றி விட்டாரா என்று கேட்டால் அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்பதையும் அவள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்..
"டாக்டரை கல்யாணம் பண்ணிக்க போறேன்..!!" என்பதை இன்று செவ்வாய்க்கிழமை என்பதை போல் உணர்ச்சி இல்லாத குரலில் அலைபேசியில் கமலி நட்பிடம் சொன்னபோது..
ஒரு நிமிடம் அதிர்ந்து பின் மகிழ்ந்து பின் குழம்பி என கலவையான உணர்வுகளோடு திணறிக் கொண்டிருந்த மாயா..
"கமலி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, எனக்கு சந்தோஷம்தான்.. ஆனா திடீர்னு ஏன் இப்படி ஒரு முடிவு.. நீ சந்தோஷமா மனசார விருப்பப்பட்டு இந்த கல்யாணத்தை பண்ணிக்கல.. அது மட்டும் எனக்கு தெரியுது ஒழுங்கா மரியாதையா காரணத்தை சொல்லு.." என்றாள் அழுத்தமாகவும் அதட்டலாகவும்..
"என்னை எதுவும் கேட்காதே.. டாக்டர் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாரு.. நானும் ஓகே சொல்லிட்டேன்.. மத்தவங்கள போல சந்தோஷமா வாழ எனக்கும் எல்லா தகுதியும் இருக்கு அப்படித்தானே மாயா.." கமலி லேசான உடைந்த குரலில் கேட்க.. மாயா ஏதோ துணுக்குற்றாள்..
"என்னடி ஏதாவது பிரச்சனையா..? மறுபடியும் அந்த அஷோக் உன்னை ஏதாவது தொந்தரவு பண்றானா..?" தோழியின் மனதை படம் பிடித்து பார்த்தது போல் சரியாக கணித்து கேட்க.. கமலி திணறினாள்..
"அது.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. வாழ்க்கையில எனக்கும் ஒரு மாற்றம் வேணுமே.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்.. எல்லாத்துக்கும் மேல டாக்டர்.. ரெண்டு பேருமே மருத்துவத் துறையில் இருக்கோம்.. அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டபோது எனக்கு மறுக்க எந்த காரணமும் இல்லை அதனால ஓகே சொல்லிட்டேன்.."
மாயாவிடம் அஷோக் போனில் பேசியதையும்.. இந்த திருமணத்திற்கு அவள் சம்மதிப்பதற்கான அடித்தளத்தை அவன் தான் உருவாக்கினான். என்பதையும் கவனமாக மறைத்து விட்டாள் கமலி..
"ஆனா டாக்டர் எப்படி உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணினாரு..!! பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஆஞ்சநேயர் வம்சமாச்சே அவர்..
இத்தனை வருஷங்களா கல்யாணமே வேணாம்னு இருந்தவர் இப்படி திடீர்னு மாற காரணம் என்ன..? நீ அழகிதான்.. ஆனா அழகுல மயங்கறவர் இல்லையே அந்த டாக்டர்.. எனக்கு சந்தேகமா இருக்குது.. இதுல வேற ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ.. நான் வேணா டாக்டர் கிட்ட பேசி பார்க்கட்டுமா..?" மாயா பதட்டமும் படபடப்புமாக கேட்க தோழியின் அக்கறையில் நெகிழ்ந்து போனாள் கமலி..
"ஏன் டாக்டர் என்னை பொய் சொல்லி கல்யாணம் பண்ணி அப்புறம் சைகோவா மாறி கொடுமைப்படுத்தி கொலை பண்ணிடுவார்ன்னு பயப்படுறியா..?" இதழ் நகைப்போடு சிரித்தாள் கமலி..
"எல்லாமே உனக்கு விளையாட்டுதான் கமலி.. இப்படித்தான் அன்னைக்கு அஷோக்கை நான் விரும்பறேன்னு சொல்லி வந்து நின்ன..!! அப்பவே எனக்குள்ள ஏதோ உறுத்தல்.. வேண்டாம்னு சொன்னேன்.. நீ கேட்கவே இல்லை.. கடைசில கணவன் மனைவியா ஒன்னா வாழ்ந்தபிறகு உங்களுக்குள்ள எதுவுமே ஒத்து போகல.. இந்த முறை அப்படி எதுவும் ஆகிட கூடாதுன்னு எனக்கு பயமா இருக்கு..!!" மாயாவின் குரலில் லேசான நடுக்கம்..
"கணவன் மனைவியா வாழ்ந்தாதானே..?" தனக்குள் விரக்தியாக சிரித்தாள் கமலி..
"பயப்படாதே மாயா அப்படி எதுவும் ஆகாது.. நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. இந்த முறை ஏமாற மாட்டேன்.."
எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை தரும்.. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இங்கே ஏற்படப்போவதில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. "உன் குளோஸ் பிரண்டுக்கு கல்யாணம்.. சந்தோஷப்படாம இப்படி நெகட்டிவிட்டியா பேசி என்னை மூட்வுட் பண்ணலாமா நீ..?" கமலி கடைசி வார்த்தைகளை செல்ல கோபத்தோடு கேட்க.. மாயா அதற்கு மேலும் தோண்டி துருவாமல்..
"என்னடி இப்படி சொல்லிட்ட..? ஒரு பிரண்டா இந்த கல்யாணத்துல என்னென்ன நிறைகுறைகள் இருக்குன்னு ஆராய்ந்து பார்க்க வேண்டியது என் கடமை இல்லையா.. வாழ போறவ நீ.. உனக்கு பிடிச்சிருந்தா ஓகே தான்.. நீ சந்தோஷமா இருக்கணும்.. அவ்ளோதான்.. கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு போன் பண்ணு.. நான் புறப்பட்டு வரேன்.." என்றிருந்தாள்..
கமலிக்கு திருமணம் என்று விஷ்ணுவிற்கு அழைத்து இதை பற்றி பேசியிருக்க..
"இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகு கமலி இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கான்னா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்..!! நீயும் குழம்பி அவளையும் குழப்பிடாதே.. அவ எந்த கோணத்திலிருந்து யோசிக்கிறா ன்னு நமக்கு தெரியல.. ஒரு பிரண்டா அவளுக்கு சப்போர்ட்டிவா நில்லு.. இந்த நேரத்துல நீ செய்ய வேண்டியது இது மட்டும்தான்" என்றிருந்தான் அவள் கணவன்..
மருதமலை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட போது கூட வருண் மற்றும் மாயாவின் கண்கள் மணமக்களின் முகங்களை குறுகுறுவென்று ஆராய்ந்தன..
ஏதோ சினிமா பிரபலங்கள் உள்நோக்கத்திற்காக செய்து கொள்ளும் ஒட்டுறவில்லாத ஒப்பந்த திருமணம் போல்.. இயந்திரத்தனமாக இவர்கள் திருமணம் அரங்கேறியதாக தோன்றியது இருவருக்கும்..
கமலி முகத்தில் தெளிவில்லை.. சூரிய தேவ் வழக்கம் போல் இறுகி தெரிந்தான்..
அகல கால் வைத்ததைப் போல் இருவரும் மணமேடை வரை வந்துவிட்ட போதிலும்..!! இந்த மண வாழ்க்கை தங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது.. என்பதில் இருவருக்கும் இனம் புரியாத தவிப்பும் குழப்பமும்..!!
ஆயிரம் எண்ண ஓட்டங்களுக்கு மத்தியிலும் கமலியின் மணக்கோலத்தை அங்குல அங்குலமாக கவனிக்க தவறவில்லை சூர்ய தேவ்..
வீட்டிலிருந்து இருவரும் ஒன்றாகத்தான் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார்கள்..
ஆடம்பரமில்லாத எளிமையான குங்கும நிற பட்டுப்புடவையில்.. தானாகவே செய்து கொண்ட லேசான ஒப்பனையோடு.. பின்னலில் மல்லிகைகை சரம் சூடி.. சற்று பெரியதாக பொட்டு வைத்து புடவையின் மடிப்புகளை சரி செய்தபடி.. கேட்டை தாண்டி நடந்து வந்து காருக்குள் ஏறியவளை.. மீள முடியாத மயக்கத்தோடு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் டாக்டர் என்று அழைத்த பிறகு தான் தெளிந்து காரை எடுத்தான்..
மாயா சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு நேரடியாக கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தாள்..
சூர்ய தேவ் அனுமதியோடு தான் வேலைபார்க்கும் மருத்துவமனையிலிருந்து தனக்கு பரிச்சயமானவர்களும் மிக நெருக்கமானவர்களுமான ஷீலா.. விஜயலட்சுமி.. காவ்யா இவர்களோடு சேர்த்து இன்னும் மூன்று பேரை மட்டும் திருமணத்திற்காக அழைத்திருந்தாள் கமலி..
விஷயத்தை சொல்லி திருமணத்திற்கு அழைப்பு விடுக்க.. அவர்களுக்கும் இது எதிர்பாராத அதிர்ச்சி..
"நம்ம சீஃப் டாக்டருக்கு கல்யாணமா..? நம்பவே முடியலையே..!!"
"பொண்ணு யாரு தெரியுமா? நம்ம நர்ஸ் கமலி.."
"அடடே நல்ல பொண்ணு தான்.. துருதுருன்னு எல்லாரையும் சிரிக்க வச்சு.. இந்த ஹாஸ்பிடலையே தலைகீழா மாத்திட்டாளே..!!"
"அதே மாதிரி டாக்டர் மனசையும் மாத்தி இருப்பா போலிருக்கு.."
"அப்ப டாக்டர் காதல்ல விழுந்துட்டார் சொல்றியா..? அப்படி எதுவும் தெரியலையே..!! எப்பவும் போல கமலி கிட்ட சிடுசிடுன்னுதான் பேசறார்.."
"அதேதான் காதலிக்கிறவங்க கிட்ட தெரியற மாற்றங்கள் எதுவும் இவங்க கிட்ட இல்லையே.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்கிட்டது கூட கிடையாது.."
"டாக்டர் வீட்ல தான் கமலி வாடகைக்கு இருக்காளாம் இந்த விஷயம் இப்பதான் தெரிஞ்சது.."
"அப்ப வீட்ல காதல் மலர்ந்திருக்கும்.."
"யாருக்கு.. நம்ம டாக்டருக்கு.. ம்க்கூம்.. சரிதான்..!!
"அவரே ஒரு ரோபோட்.."
"அப்புறம் எப்படி இந்த கல்யாணம்..?"
"ஐயோ தலைய பிச்சுக்கலாம் போலிருக்கு.."
"அட விடுங்கப்பா.. அவங்க வாழ்க்கை அவங்க முடிவு.. நல்லா இருந்தா சரி.. கமலி கல்யாணத்துக்கு கூப்பிட்டுருக்கா.. போய் தலையை காட்டிட்டு கிப்ட் குடுத்துட்டு வருவோம்.."
இப்படியாக சம்பாஷனை முடிந்தது அவர்களுக்குள்..
திருமணத்திற்கு வந்து பார்த்தால்
இருவர் முகத்திலும் மருந்துக்கும் சிரிப்பில்லை.. சந்தோஷம் இல்லை..
"ஒருவேளை சொசைட்டிக்கு பதில் சொல்ல முடியாம.. கல்யாணம் எப்போன்னு கேக்கறவங்க வாயை அடைக்கிறதுக்காக மேரேஜ் பண்ணிக்கிறாங்களோ..!!" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்..
நாலு வார்த்தை இனிமையாக பேசத் தெரியாத இந்த டாக்டர் என் தோழியை எப்படி சந்தோஷமாக வச்சிக்க போறார்.. மாயா கவலைப்பட்டாள்..
"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ கடவுளே.. என்ன காரணத்துக்காக இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா தெரியல.. என் கமலி துன்பப்பட்டதெல்லாம் போதும்.. இனியாவது அவ வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குடு.." மருதமலை முருகனை மனதார வேண்டிக்கொண்டாள் மாயா..
ஐயரின் மந்திரங்களை அடுத்து.. கமலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து அவளை தன் மனைவியாக்கிக்கொண்டான். சூர்ய தேவ்..
கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரம் நீண்ட பெருமூச்செடுத்து தன் பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள் கமலி..
தோழியின் தோளை ஆதரவாக தொட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..
இருவருக்கும் வாழ்த்துக்களை சொன்னான் வருண்..
"நான் சொல்லல.. இவங்க ரெண்டு பேரும் ஏதோ கட்டாயத்தின் பெயரில் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க.." என்றாள் ஷீலா..
"யாரு கட்டாயப்படுத்தி இருப்பாங்க? ஒருவேளை அந்த ஐயரா இருக்குமோ.. அவர்தான் சீக்கிரம் தாலி கட்டுங்க முகூர்த்த முடிய போறதுன்னு சொன்னார்.." என்ற விஜயலட்சுமி மற்றவர்கள் முறைப்புகளை பெற்றுக் கொண்டாள்..
காவ்யாவிற்கு தன்னை நிராகரித்துவிட்டு கமலியை டாக்டர் சூர்யதேவ் தேர்ந்தெடுத்ததில் சற்று வருத்தம்தான்..
ஆனால் இப்படிப்பட்ட கறாரான சிடுமூஞ்சி மனிதனோடு காலந் தள்ள முடியாது என்பதை தன் காதலை தெரிவித்து சூர்யதேவ் நிராகரித்த சில நாட்களிலேயே அவள் புரிந்து கொண்டிருந்ததால் மனதுக்குள் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை..
இருந்தபோதிலும் இந்நேரம் சூர்ய தேவ் வசீகரத் தோற்றமும்.. அந்தக் கூர்மையான கண்களும் ஓங்குதாங்கான உடற்கட்டும்.. கச்சிதமாக பொருந்தியிருக்கும் அவன் வேட்டி சட்டையும்.. எதையோ இழந்துவிட்ட மன குறையோடு உள்ளுக்குள் உறுத்தத்தான் செய்கிறது..
கிடைக்கவில்லை எனும்போது.. ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..
மாயாவை வருணுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் கமலி..
"நீங்க டாக்டர் சூர்ய தேவ் க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு சொல்றீங்க.. உங்க ஃபிரண்டு.. கமலியை கல்யாணம் பண்ணிக்க என்ன காரணம்.. அவர் அவளை காதலிக்கிறாரா.. இல்ல இதுக்கு பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்கா..?" தன் மனதில் முகாமிட்டிருந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் வருணிடம் கேட்டு வைத்தாள் மாயா..
வருண் சிரித்தான்..
"உங்க ஃப்ரெண்ட் மேல நீங்க வச்சிருக்கிற அக்கறை புரியுது.. ஆனா இவ்வளவு கவலை பட வேண்டிய அவசியமில்லை.. சூர்ய தேவ் விருப்பப்பட்டுதான் கமலியே கல்யாணம் பண்ணிக்கறான்.. நிச்சயமா அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க.. நம்பிக்கையோடு இருங்க.."
வருண் வார்த்தைகள் அவளுக்கு திருப்தியை தரவில்லை..
சூர்யதேவ் மற்றவர்களை போல் சாதாரண மனிதனாய் இருந்திருந்தால் மாயாவிற்கு இப்படி ஒரு கேள்வியும் சந்தேகம் வந்திருக்காது.. அவன் குண நலன்களையும் செயல்களையும் கண்கூடாக பார்த்தவளுக்கு தோழியை நினைத்து கவலையாகத்தான் இருந்தது..
கழுத்தில் தாலி ஏறிய அடுத்த கனம் மணக்கோலத்தில் சூரியதேவ்வுடன் ஜோடியாக நின்று செல்ஃபி எடுத்து அஷோக்கிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருந்தாள் கமலி..
புளு டிக் காட்டியது.. ஆனால் பதில் வரவில்லை..
அந்த ஒரு கணம் அவள் முகத்தில் சொல்ல முடியாத திருப்தி வந்து போனது..
பைவ் ஸ்டார் ஹோட்டலில் வந்தவர்களுக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
கமலிக்காக மருத்துவமனையில் இருந்து வந்தவர்கள் மற்றும் மாயா வரும் இவர்களை தவிர பெரிதாக கூட்டமில்லை..
வந்தவர்கள் உணவு முடித்து சூர்யதேவ் கமலிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்று சென்றுவிட மாயாவும் வருணும் வீடு வரை வந்தனர்..
கையில் மாலையுடன் காரிலிருந்து இறங்கியவர்களை கண்டு மன நிறைவோடு புன்னகைத்தார் செக்யூரிட்டி மூர்த்தி..
கமலி அவரிடம் தங்கள் திருமணத்தைப் பற்றி ஏற்கனவே தகவலாக சொல்லி இருந்தாள்.. டாக்டரின் மாற்றங்களை கண்கூடாக பார்த்து வந்தவருக்கு இந்த திருமணம் அப்படி ஒன்றும் பெரிய அதிசயமாக தெரியவில்லை..
கமலி தான் டாக்டருக்கு சரியான பொருத்தம் என்ற எண்ணத்தோடு இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் மூர்த்தி..
மாயா வருண் நிறைய பேசி கலகலத்தனர்.. கமலி அவ்வப்போது அவர்கள் உரையாடலில் குறுக்கிட்டு.. ஏதாவது சொல்லி சிரித்தாள்.. சூர்யதேவ் அமைதியாக மூவரையும் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்..
கமலி பேசும் போது மட்டும் சற்று கூடுதலாகவே கவனித்தான்..
அவன் குணம் தெரியும் என்பதால் மற்ற மூவரும் சூரியதேவ் அமைதியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
பொதுவாக இது போன்ற கலகலப்பான கலந்துரையாடல்களில் ஈடுபாடு இல்லாத சூர்யா.. இந்த அளவிற்கு தங்களோடு அமர்ந்திருப்பதே பெரிய அதிசயம் தான்.. என்று எண்ணினான் வருண்..
மாயா கூட அதே மனநிலையில் தான் இருந்தாள்..
இந்நேரம் டாக்டர் ரூமுக்குள்ள போய் கதவை சாத்தி இருக்கணுமே..!! இது என்ன அதிசயம் என்ற ரீதியில் அவ்வப்போது அவனை வினோதமாக பார்த்தாள்..
வருண் ஒரு மணி நேரம் அவர்களோடு இருந்தான்.. பிறகு விடை பெற்று புறப்பட்டு சென்று விட்டான்..
மறுநாள் காலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டி இருந்ததால் நேரடியாக ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு தான் சென்றிருந்தான்..
மாயா கமலியோடு மாடி போர்ஷனில் தங்கி கொண்டாள்..
"ஏண்டி புதுசா கல்யாணம் ஆனவ.. என் கூட வந்து தங்கினா என்ன அர்த்தம்.. நீ கீழ போய் டாக்டர் கூட இரு.. நான் பாத்துக்கறேன்.." என்று கமலியை டாக்டரோடு இருக்கச் சொல்லி வற்புறுத்தினாள் மாயா..
"வாழ்க்கை பூரா இனி அவர் கூட தானே இருக்க போறேன்.. நாளைக்கு ஈவினிங் நீ கிளம்பிடுவ.. அப்புறம் உன்னை எப்ப பார்க்க போறேன்னு தெரியல.. அதனால நீ இங்க இருக்கிற வரைக்கும் நான் உன் கூடத்தான் இருப்பேன்.." என்று கமலி உறுதியாக சொன்ன பிறகு மாயாவால் மறுக்க முடியவில்லை..
இரவில் சூர்ய தேவ் மாடிக்கு வந்து அவர்களோடு சேர்ந்து உணவருந்தினான்..
சமையலறை வரை சென்று கமலியோடு ஏதோ ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மாயா காண நேர்ந்தது..
அத்தோடு உரிமையாக அவளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு பரிமாறச் சொன்னதும்..
சத்தமாக ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைக்க சொல்லி கோபப்படாமல்.. அதை கண்டுகொள்ளாதவன் போல் உணவருந்திக் கொண்டிருந்ததும் மாயாவை ஆச்சரியப்படுத்தின..
டாக்டர் இப்போதெல்லாம் எனக்கு அதிகமாக தொல்லை கொடுப்பதில்லை.. நாங்கள் இருவரும் நண்பர்களாகி விட்டோம்.. என்று கமலி சொன்னபோது கூட அவ்வளவாக நம்பிக்கை பிறக்கவில்லை..
இப்போது கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
இந்த டாக்டருக்கு சவுண்ட் அலர்ஜியா.. சத்தமே ஆக மாட்டேங்குதே..!! என்று மாயா கூட தன் டீம் நண்பர்களோடு சேர்ந்து சூர்யாவை கிண்டல் செய்ததுண்டு..
ஆனால் இப்போது அவன் குணாதிசயம் தலைகீழாக மாறி போயிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறாளே..!! கமலியின் பொருட்டு கவலை கொண்ட மனம் சற்று அமைதியடைகிறது..
இத்தனைக்கும் அதன் கலகலவென்று பேசவில்லை பேருக்கு ஒரு புன்னகை கூட இல்லை.. தரையில் இறக்கி விடப்பட்ட குழந்தை நேரடியாக அம்மாவை தேடி ஓடுவதை போல்.. அவன் கண்களும் கவனமும் கமலி ஒருத்தியிடமே குவிந்திருந்தது..
எல்லாம் முடிந்து அங்கிருந்து புறப்படுகையில்
"குட் நைட் டாக்டர்.." கமலி சொன்னதற்கு பதிலாக..
"குட் நைட்" என்று விட்டு வெளியே நடக்க துவங்கினான் அவன்..
"குட் நைட் டாக்டர்.."
மாயாவின் குரலுக்கு பதில் வரவில்லை..
"ம்ம்.. சரிதான்.." உதட்டு சுளிப்போடு ஒரு மார்க்கமாக தலையசைத்தாள் மாயா..
தொடரும்..
Last edited: