- Joined
- Jan 10, 2023
- Messages
- 83
- Thread Author
- #1
தன் பின்னே நிழல் உருவமாய் யாரோ பின்தொடர்வதாய் கண்டு கொண்டவள் சட்டென திரும்பி பார்க்க.. திவாகரை கண்டு நெஞ்சம் திடுக்கிட்டுப் போனாள் பத்மினி..
"இப்ப எதுக்காக என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க.. என்ன வேணும் உங்களுக்கு..?" அவள் பார்வையும் பேச்சும் கடுமையை மட்டுமே பிரதிபலித்தது..
"ஒன்னும் இல்ல சும்மா உங்ககிட்ட பேசலாம்னு..!!"
"இங்க வந்து என்ன சார் பேச்சு வேண்டி கிடக்கு.. உங்க நடவடிக்கையே சரியில்லையே..!!" சிடுசிடுவென காந்தலாக இரைந்தாள் அவள்..
திவாகர் அவள் கடும்பார்வைக்கு அசராமல் "உங்க நடவடிக்கை கூட தான் சரியில்ல.. அதான் பாக்கறோமே.. உங்க லட்சணத்தை.. என்னமோ பத்தினி தெய்வம் மாதிரி சீன் போடறீங்க..!!" நக்கலாக இதழ் வளைத்தான் அவன்..
"வேண்டாம் திவாகர்.. உங்கள் பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.. ஆபீஸ்னு கூட பார்க்க மாட்டேன்..!!"
"அதான் நல்லா தெரியுமே..!! உன்னை பொறுத்த வரைக்கும் எல்லா இடமும் அந்தப்புரம் தானே.. அதுல எனக்கும் கொஞ்சம் சரசம் பண்ண இடம் கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்.. நெல்லுக்கு பாயற நீர் புல்லுக்கும் கொஞ்சம் பாயட்டுமே..!!"
"ச்சீ.. பொறுக்கி உன்ன மாதிரி ஆளுங்களால தான் பொம்பளைங்க வெளியே எங்கேயும் நிம்மதியா வேலை செய்ய முடியல.. இதே கேள்வியை உன் பொண்டாட்டியை பாத்து வேற எவனாவது கேட்டா என்ன செய்வ..? என்றாள் பத்மினி ரௌத்திரப் பார்வையுடன்..
"என்னடி ஓவரா பேசற.. உண்மைய சொன்னா உனக்கு கோபம் வேற வருதோ..!! என் பொண்டாட்டி ஒன்னும் உன்னை மாதிரி ஊர் மேயறவ இல்ல.. வீட்டுக்குள்ள வச்சு அவளை மகாராணி மாதிரி பார்த்துக்கறேன்.. அவளைப் பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல..
இங்க பாரு நான் சொல்றதை கேளு.. உன்னோட லட்சணம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.. பேசாம என்னையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ.. ரொம்ப வசதியா இல்லையெனாலும் ஓரளவுக்கு நல்லாவே உன்னை மெயின்டெய்ன் பண்ணி பாத்துக்கறேன்.." கோபம் எல்லை மீறியது.. தேகமெங்கும் அனலாக சிவந்து போனாள் பத்மினி..
"வாய மூடுடா பொறுக்கி.. உன்கிட்ட பேசி என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல.. எங்க பேசணுமோ அங்க பேசிக்கிறேன்.. விளைவுகளை சந்திக்க தயாராய் இரு.." என்று அவனை கடந்து போக முற்பட.. "நில்லுடி.." அவள் கையை பற்றியிருந்தான் திவாகர்..
அடுத்த கணமே அவனை நெருப்பாக சுடும் விழிகளுடன் பளாரென அறைந்திருந்தாள்.. பத்மினி..
அடி வாங்கிய அதிர்ச்சியிலும் அவமானத்திலும் முகம் கருத்து நின்றிருந்தான் திவாகர்..
"உன் வேலையை என்கிட்ட காட்டணும்னு நினைக்காத.. தொலைச்சிடுவேன் ராஸ்கல்.." பற்களை கடித்து அவள் காளியாக உறுமி விட்டு செல்ல.. ஒரு பெண் தன்னை அவமானப்படுத்தியதில் ஆண்மை அடி வாங்கியதாக உணர்ந்தான் திவாகர்.. அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற வன்மம் அவன் இதயத்தில் தலைவிரித்தாடியது.. கண்களில் குரோதம் குடியேறி நிற்க.. தன்னை கடந்து சென்றவளை பழிவெறியோடு முறைத்தான் அவன்..
வந்து தன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு மனம் ஆறவே இல்லை.. திவாகருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டாலும் அவன் நடந்து கொண்ட விதத்தை இயல்பாக கடக்க முடியவில்லை.. உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டிருக்கிறது..
இது போன்ற கீழ்த்தரமான ஜென்மங்களின் மத்தியில் வேலை செய்ய வேண்டிய தன் நிலையை எண்ணி நொந்து போனாள் பத்மினி.. அவன் பேசிய வார்த்தைகளையும் பார்த்த பார்வையும் எண்ணி எண்ணி மனம் நெருப்பில் வந்த கொள்கலனாய் கொதித்து போகிறது..
உடனடியாக திவாகரை பற்றி உதய் கிருஷ்ணாவிடம் புகார் சொல்லத்தான் நினைத்தாள்..
ஆனால் ஏற்கனவே ஆனந்த் தன் அங்கத்தைப் பற்றி படுகேவலமாக விமர்சித்து அது பிரச்சினையாகி எம்டி வரையிலும் கொண்டு சென்று.. அவன் வேலையை விட்டு நிறுத்தப்பட்ட காரணத்திற்கு இவள் மீது பழி சுமத்தி கம்பெனி முழுக்க இவளைத்தானே வசை பாடியது..
"ஏன்..? நாங்க எல்லாம் பொண்ணுங்க இல்லையா.. எங்க இடுப்பையெல்லாம் பார்த்து கமெண்ட்டா அடிக்கிறான்.. ஒழுங்கா டிரஸ் பண்ணினா எவனும் நம்மள அசிங்கமா பார்க்க மாட்டான்.. பொண்ணுங்க நெருப்பு மாதிரி இருக்கணும்.. இப்படி பார்த்தவுடன் பத்திக்கிற நெருப்பு மாதிரி இருந்தா.. பார்க்கிறவன் கை வைக்கத்தான் நினைப்பான்.. பாவம் ஆனந்த் இந்த வேலையை நம்பி ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் வச்சிருந்தான்.. இப்ப என்ன செய்யப் போறானோ தெரியல..!! இப்படி இவ சுயநலத்துக்காக அடுத்தவன் வயித்துல அடிக்கிறாளே.. இவளெல்லாம் எங்கிருந்து உருப்பட போறா.." என்று ஏகப்பட்ட சாபங்களும் வசை மொழிகளும் ஜாடை மடையாக அவள் காதுகளை வந்தடைந்திருந்தன.. இதையெல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் தன் நிம்மதிதான் கெடும் என்பதால் சிரமத்துடன் புறந்தள்ளி விட்டாள்..
இப்போது திவாகரை பற்றி போய் உதய் கிருஷ்ணாவிடம் சொன்னால்.. உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது எடுக்காமலும் போகலாம்.. அவன் குணத்தை கணிக்கவே முடியாது..
தனக்காக இல்லாது போனாலும் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பை கருதி உதய் கிருஷ்ணா திவாகரை வேலையை விட்டு தூக்கினால் அந்த பாவமும் பழியும் தன் தலையில் தானே வந்து விழும்..
இந்த கீழ்த்தரமானவனுக்காக அவன் குடும்பத்தை ஏன் தண்டிப்பானேன்.. சாந்தமான முகம் கொண்ட அவன் மனைவியும்.. குட்டியான அவன் மகனும் நினைவில் வந்து போனதில் தனது கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டாள்.. அவன் குடும்பத்திற்காக இந்த கேடு கெட்டவனை மன்னிக்க முயல்கிறாள்..
ஆனால் அவள் பெருந்தன்மைக்கு கொஞ்சம் கூட அருகதையே இல்லாதவன் அல்லவா இந்த திவாகர்.. தான் கேவலமாக நடந்து கொண்டதை மறந்து அவளிடம் அடி வாங்கியதை பெரும் அவமானமாக எண்ணிக்கொண்டு பத்மினியை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறான்..
தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு வேலையில் கவனம் செலுத்த முயன்றாள் பத்மினி..
அது அத்தனை எளிதாக இருக்கவில்லை.. திருமணமான பின்பு பிரச்சனைகள் தீர்ந்து போகும் என்று நினைத்தால் இங்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன..
உதய கிருஷ்ணாவோடு திருமணமான விஷயம் தெரியாதே தவிர.. பத்மினிக்கு திருமணமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாக விஷயம்தான் அலுவலகம் முழுக்க தெரியுமே.. இப்போதும் கூட இந்த ஆண்கள் அடங்காமல் சீண்டி தன்னிடம் எல்லை மீற நினைப்பதேன் என்று அவளுக்கு புரியவே இல்லை..!!
தன்னை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்பதை சுற்றி இருப்பவர்களின் ஜாடை மடையான பேச்சின் மூலம் உணர்ந்திருந்தாலும்.. உதய கிருஷ்ணாவோடு தன்னை இணைத்து பேசுகிறார்கள் என்று இந்நாள் வரையிலும் அவள் அறியவில்லை.. !!
அப்படி அறிந்து கொண்டால் மட்டும் பெரிதாக அவளால் என்ன செய்து விட முடியும்..!! உதய கிருஷ்ணாவின் காதுகளுக்கு அதைக் கொண்டு செல்வாளா என்பது பெருத்த சந்தேகம்.. மற்ற ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் போல் இதயம் கடந்து செல்லத்தான் முயலுவாள்..
உடமைப் பட்டவன் வந்து உண்மையை சொல்ல வேண்டும்.. அவனுக்கே இவளை மனைவி என்று சொல்ல இஷ்டம் இல்லாத போது அவள் மட்டும் தனியாக போராடிக் கொண்டிருக்க இயலாதே..!!
அவள் அப்படி இருக்க.. இங்கே உதய் கிருஷ்ணா முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இருந்தான்..
தேன் உண்ணும் ஆசையோடு மலரையே சுற்றி வரும் வண்டு போல் அவன் மனமும் துடித்துக் கொண்டிருக்கிறது..
மீண்டும் அந்த விவகாரமான கருவண்டுகளை பார்த்து காதல் கொள்ள ஆசை.. காலையிலிருந்து இப்படித்தான்.. அவ்வப்போது அவள் நினைவுகள் வந்து தொல்லை செய்கிறது.. மறக்கவே முடியாத ஏதோ ஒன்று அவன் கண் முன்னால் இரட்டை பீரங்கியாக நிலைகுத்தி கொல்கிறது..
மடியில் அமர்த்திக் கொண்டு.. அவள் இதழ்களுக்கு ஓய்வு தந்து குவிந்த குன்றுகளான பெண்ணழகை நிதானமாக சுவைத்தபடி இடையில் வீணை மீட்டிய நினைவு வந்து போக.. உள்ளுக்குள் உச்சந்தலைவரை ஏதோ ஒரு ராட்சச உணர்வு ஜிவ்வென்று பரவியது..
திரைச்சீலைகளை மூடிவிட்டு பத்மினியை அறைக்குள் அழைத்தான் உதய் கிருஷ்ணா.. அலுவலகத்தில் சச்சரவுகளை கிளப்பும் அந்த கூட்டத்திற்கு சிறந்த பொழுதுபோக்கும் மென்று தின்ன அவலுமாய் பத்மினி..
"சொல்லுங்க சார்" என்று பெருமூச்சு விட்டு உதய் கிருஷ்ணாவின் அறைக்குள் வந்து நின்றாள் பத்மினி..
"என்ன சொல்லணும்..!! மேடம் ரொம்ப பிசியா இருக்கீங்க போலிருக்கே.." எழுந்து வந்து மேஜையில் அமர்ந்தவன் அவள் கைப்பற்றி இழுத்தான்..
"ப்ச்.. என்னை விடுங்க சார் எனக்கு வேலை இருக்கு.." அவனிடமிருந்து நழுவ முயன்றாள்.. வெட்கப்பட்டு அவன் இழுத்த இழப்பிற்குள் குழையும் நிலையில் அவள் இல்லை..
"வேலையெல்லாம் இருக்கட்டும்.. அப்பப்ப என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க மேடம்.. நான் பாவம் இல்லையா..!!" கருணை காட்டு என்பதை கூட அதிகாரத் தொனியில்தான் சொல்ல இவனால்தான் முடியும்.. பாஸ்ஸி ஆட்டிடியூட்..
பதில் பேசாமல்.. சலிப்பான முகபாவனையோடு தெரிந்தவளை கூர்ந்த பார்வையில் அடையாளம் கண்டு கொண்டான் அவன்..
"என்னாச்சு பத்மினி.. ஏன் ஒரு மாதிரியா இருக்க..!! என்ன விஷயம்..?" என்றான் தீவிர பாவனையோடு கண்கள் சுருக்கி..
அவன் ஊடுருவும் பார்வைதனில் சட்டென்று சுதாரித்தாள் அவள்..
"அச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே..!! நான் நார்மலாத்தானே இருக்கேன்.. நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க.. கொஞ்சம் வேலை.. முடிக்க வேண்டிய அவசரம்.. அதான் டென்ஷன்.."
"அப்படி என்ன வேலை என்கிட்ட சொல்லுங்க மேடம்.." அவள் தாடையை தன்னை நோக்கி நிமிர்த்தி குறுகுறுவென்று முகம் பார்த்தான்.. உண்மைதானே அவனுக்கு தெரியாத வேலை அங்கே என்ன இருக்கிறது..?
அவள் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் இதழ்களில் முத்தமிட்டு.. தாகம் கொண்ட பாகம்தனில் தன் வேலையை காட்டியிருந்தான் உதய்..
சட்டென திடுக்கிட்டவளாய்.. "உதய் ஸ்டாப் இட்.. என்ன செய்யறீங்க.." என்று கோபம் கொண்டு சட்டென துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள்.. நிச்சயமாக அந்த இடம் சிவந்து போயிருக்கும்.. அப்படி ஒரு வலுவான கிடுக்கு பிடி..
"ஏன் பத்மினி எப்படி தொளதொளன்னு சுடிதார் போட்டிருக்க.. எது எங்க இருக்குன்னு தெரிய மாட்டேங்குது.. உன் இடுப்பை பார்க்காம பைத்தியம் பிடிக்குது.." உதய கிருஷ்ணா ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் இடையைப் பற்றி தன் பக்கம் இழுக்க.. திவாகரின் பேச்சில் புகைந்து கொண்டிருந்த ஆத்திரம்.. உதய் கிருஷ்ணா தன்னை அணுகிய விதத்தில் விஸ்வரூபமாக வெடித்து கிளம்பியது..
"ஏன் சார் இப்படி தொந்தரவு பண்றீங்க.. என் மனநிலையை பற்றி யோசிக்கவே மாட்டீங்களா.. இவ்வளவு சுயநலமா இருக்கீங்களே.. எப்பவும் உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் அக்கறை.. நான் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லை.." மூச்சு வாங்க கத்தியவளை நிதானமாக கவனித்தான் உதய் கிருஷ்ணா..
"இப்ப எதுக்காக இப்படி கத்தற.. சம்திங் இஸ் ராங்.. என்ன விஷயம் இப்படி வா..!! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. ஐ வில் ஹெல்ப் யூ.. அதை விட்டுட்டு இப்படி தேவை இல்லாம கத்தி உன் மன அமைதியை கெடுத்துகிட்டு என்னையும் டென்ஷன் ஆக்காதே.." என்றான் அதட்டலான குரலில்..
"ஒ.. ஒண்ணும் இல்ல.. என்னை விட்டுடுங்க நான் போறேன்.." என்று தலையை உலுக்கி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து செல்ல முற்பட்டவள் அங்கேயே நின்று அவனிடம் திரும்பி வந்தாள்..
"சார்.." என்று அழைக்க.. யோசனையோடு தலை தாழ்ந்திருந்தவன் சட்டென நிமிர்ந்தான்..
"என்ன பத்மினி" என்று எழுந்து நின்றான்.. உதய் தனக்காக எழுந்து நின்று முக்கியத்துவம் கொடுப்பது அவளுக்கு பிடித்திருந்தது..
சட்டென அவனை அணைத்துக் கொண்டாள் பத்மினி..
"திட்ட மாட்டீங்கன்னு நம்பறேன்.. கொஞ்ச நேரம் இப்படியே இருந்துக்கிறேன் ப்ளீஸ்.." என்றவள் அவனை அணைத்தபடியே நிற்க.. தானும் அவளை அணைத்துக் கொண்டு குனிந்து அவள் முகம் பார்த்து எம்மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முயன்றான்.. ஆனால் பத்மினி முகத்தை தன் மார்பில் அழுத்தமாக புதைத்திருந்ததில்.. "என்னம்மா ஆச்சு சொன்னாதானே தெரியும்.." என்றான் அவனுக்கே புதிதான கலக்கமான குரலில்..
"ஒன்னும் இல்ல.. ஏதோ மனசு படபடன்னு இருந்துச்சு.. உங்களை இறுக்கமாக கட்டிக்கிட்டா சரியாகிடும்னு தோணுச்சு.. இப்போ சரியாயிடுச்சு.. நான் போகட்டுமா..!!" என்று விலக முயன்றவளை மீண்டும் இறுக தன்னோடு அணைத்து கொண்டான்.. இழுத்த வேகத்தில் அவன் மார்போடு வந்து மோதினாள் பத்மினி..
"மனசு விட்டு பேசவே மாட்டேங்கற பத்மினி.. அன்னைக்கும் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுல வச்சுக்கிட்டு தனியா உட்கார்ந்து அழுதுட்டே இருந்த.. இன்னைக்கும் அப்படித்தான்.. உன்னை நீயே குழப்பிக்கிட்டு ரொம்ப டென்ஷனா தெரியுற.." என்று தன் கண்களுக்குள் கலந்தவனை எதிர்கொள்ள முடியாமல் தலை தாழ்ந்தாள் பத்மினி..
அவள் முகத்தை நிமிர்த்தினான் உதய் கிருஷ்ணன்..
"எது நடந்தாலும் மனசை இரும்பா வச்சுக்கணும் கவலைப்பட கூடாது.. கலங்கறவன் கோழைன்னு.. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. நான் எதுக்காகவும் கவலைப்பட்டதில்ல.. கவலைப்படறவங்களை பார்த்தால் எனக்கு கோபமா வரும்.. எரிச்சல் முட்டும்.. ஏன் இவங்க எல்லாம் உயிர் வாழ்கிறாங்கன்னு தோணும்.. அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது பத்மினி வாயை திறந்து ஏதோ சொல்ல வர ஒற்றைவிரலால் அவள் இதழில் ஒற்றி தடுத்தவன் மேலும் தொடர்ந்தான்..
"நீ அழுதா மட்டும் எனக்குள்ளே ஏதோ செய்யுது.. மனசு ஒரு மாதிரி கரையுது.. எனக்கு சரியா சொல்ல தெரியல பத்மினி.. உன்னை அழ விடக்கூடாதுன்னு தோணுது.. ஏன் பத்மினி..?"
தெ.. தெரியல சார்.. பத்மினி எச்சில் விழுங்கினாள்.. அவளுக்குள்ளும் சொல்லொண்ணா உணர்வுகள் பெருக்கெடுத்தன..
"என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன்.. உனக்காக இருப்பேன் பத்மினி.." தீர்க்கமாகவும் தெளிவாகவும் சொன்னவனை கண்கள் அகல பார்த்தாள் பத்மினி..
"யார் என்ன சொன்னாலும் நீங்க என்னை நம்புவீங்களா.. எனக்காக பேசுவீங்களா..!!" அவளையும் அறியாமல் ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகளை தொடர்ந்து கண்களில் நீர்த்திரள்கள் உருண்டது..
சில கணங்கள் அந்த கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. விரல்களால் அவள் விழி நீரை துடைத்து விட்டான்..
"உனக்காக நான் இருக்கேன் பத்மினி.." என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.. அவன் அணைப்பிலும் ஆறுதலான பேச்சிலும்.. நம்பிக்கையான பார்வையிலும்.. நிதானத்திற்கு வந்திருந்தாள் பத்மினி.. சுற்றிலும் யார் யாரோ சேற்றை வாரி இறைத்தாலும்.. எதுவுமே தன் மீது படாதவாறு வலுவான கரம் ஒன்று அவளை அணைத்துக் கொண்டு யானை பலம் தருவதாக உணர்ந்தாள்.. கண்களை துடைத்துக் கொண்டு.. அவன் இதழில் முத்தமிட்டதை கூட அறியாத வண்ணம் உருகி நின்றிருந்தாள்..
"ஏதோ கேட்டீங்களே..!!" பத்மினியின் முகத்தில் வெட்கமும்.. வார்த்தைகளை லேசான தடுமாற்றமும்..
"என்ன கேட்டேன்..?"
"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் போன் பண்ணி வர சொன்னீங்க..?'
"ஆமா அது வேணுமே..!!"
"எது..?" பத்மினி இதழ்களுக்குள் குறுகுறுப்பு..
கொஞ்சமும் கூச்சமில்லாமல்.. அவள் மார்பை நோக்கி சுட்டிக்காட்டினான் உதய்.. ஆனால் பாவம் அவள்தான் வெட்கத்தில் துவண்டாள்.. இப்படி ஒரு மோகம் ஆகாது.. காலையிலேயே பார்த்தாளே.. கைகளில் அள்ளி.. ஆசைதீர முத்தமிட்டு.. ஏதோ பாலும் பாலும் தெளிதேனும் சுரந்து வரும் அட்சய கிண்ணமாக எண்ணிய பைத்தியக்காரனை போல் ஆவேசமாக அவன் செய்த செயலை எண்ணிப் பார்க்கவும் உலர்ந்து போயிருந்த ஈர தாமரை உதடுகள் மலர்ந்து போயின..
"எனக்கு பைத்தியமே பிடிக்குது.. எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணவே முடியல.. ஆபீஸ் வேலை கரெக்ட்டா நடக்கணும்.. என்ன பண்ணலாம் நீயே சொல்லு.. "அவள் கன்னங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கினான்.
"நான் என்ன பண்ணனும்..?"
"எனக்கு தெரியலடி.." விழி மூடி அவள் வாசனையை முகர்ந்து கொண்டிருந்தான்..
"என் டாப்பை கழட்டிட்டு உங்க மடியில வந்து உட்காரணுமா..!!"
"வேண்டாம்..!!"
"அப்புறம்..? டாப்லெஸ்சா இந்த டேபிள் மேல உட்காரணுமா.."
"ப்ச்.. சும்மாருடி.. நீ என்னை அசிங்கப்படுத்தற.. நான் ஒன்னும் அந்த அளவு மோசமானவன் இல்லை.. என் பீலிங்சைதான் சொன்னேன்.. மத்தபடி உன் மரியாதையும் மதிப்பும் எனக்கும் ரொம்ப முக்கியம்.. மத்தவங்க முன்னாடி நிச்சயம் உன்னை அவமானப்படுத்த மாட்டேன்.. நம்ம அந்தரங்கம் நம்ம வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள இருக்கட்டும்.."
"ஆனா அப்பப்போ இந்த மாதிரி சின்ன சின்னதா முத்தம் கொடுத்துட்டு போ.. எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்கும்.." என்றவன் மீண்டும் அவள் இதழோடு இதழ் இணைத்து முத்தமிட்டு.. அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தான்.. இதுதான் மனைவிக்கு தரும் மரியாதை..
கடுகடுவென உள்ளே போனவள் பெரும் நிம்மதியோடு சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்..
தொடரும்..
"இப்ப எதுக்காக என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க.. என்ன வேணும் உங்களுக்கு..?" அவள் பார்வையும் பேச்சும் கடுமையை மட்டுமே பிரதிபலித்தது..
"ஒன்னும் இல்ல சும்மா உங்ககிட்ட பேசலாம்னு..!!"
"இங்க வந்து என்ன சார் பேச்சு வேண்டி கிடக்கு.. உங்க நடவடிக்கையே சரியில்லையே..!!" சிடுசிடுவென காந்தலாக இரைந்தாள் அவள்..
திவாகர் அவள் கடும்பார்வைக்கு அசராமல் "உங்க நடவடிக்கை கூட தான் சரியில்ல.. அதான் பாக்கறோமே.. உங்க லட்சணத்தை.. என்னமோ பத்தினி தெய்வம் மாதிரி சீன் போடறீங்க..!!" நக்கலாக இதழ் வளைத்தான் அவன்..
"வேண்டாம் திவாகர்.. உங்கள் பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.. ஆபீஸ்னு கூட பார்க்க மாட்டேன்..!!"
"அதான் நல்லா தெரியுமே..!! உன்னை பொறுத்த வரைக்கும் எல்லா இடமும் அந்தப்புரம் தானே.. அதுல எனக்கும் கொஞ்சம் சரசம் பண்ண இடம் கிடைச்சா நல்லாத்தான் இருக்கும்.. நெல்லுக்கு பாயற நீர் புல்லுக்கும் கொஞ்சம் பாயட்டுமே..!!"
"ச்சீ.. பொறுக்கி உன்ன மாதிரி ஆளுங்களால தான் பொம்பளைங்க வெளியே எங்கேயும் நிம்மதியா வேலை செய்ய முடியல.. இதே கேள்வியை உன் பொண்டாட்டியை பாத்து வேற எவனாவது கேட்டா என்ன செய்வ..? என்றாள் பத்மினி ரௌத்திரப் பார்வையுடன்..
"என்னடி ஓவரா பேசற.. உண்மைய சொன்னா உனக்கு கோபம் வேற வருதோ..!! என் பொண்டாட்டி ஒன்னும் உன்னை மாதிரி ஊர் மேயறவ இல்ல.. வீட்டுக்குள்ள வச்சு அவளை மகாராணி மாதிரி பார்த்துக்கறேன்.. அவளைப் பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல..
இங்க பாரு நான் சொல்றதை கேளு.. உன்னோட லட்சணம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.. பேசாம என்னையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ.. ரொம்ப வசதியா இல்லையெனாலும் ஓரளவுக்கு நல்லாவே உன்னை மெயின்டெய்ன் பண்ணி பாத்துக்கறேன்.." கோபம் எல்லை மீறியது.. தேகமெங்கும் அனலாக சிவந்து போனாள் பத்மினி..
"வாய மூடுடா பொறுக்கி.. உன்கிட்ட பேசி என்னை நானே அசிங்கப்படுத்திக்க விரும்பல.. எங்க பேசணுமோ அங்க பேசிக்கிறேன்.. விளைவுகளை சந்திக்க தயாராய் இரு.." என்று அவனை கடந்து போக முற்பட.. "நில்லுடி.." அவள் கையை பற்றியிருந்தான் திவாகர்..
அடுத்த கணமே அவனை நெருப்பாக சுடும் விழிகளுடன் பளாரென அறைந்திருந்தாள்.. பத்மினி..
அடி வாங்கிய அதிர்ச்சியிலும் அவமானத்திலும் முகம் கருத்து நின்றிருந்தான் திவாகர்..
"உன் வேலையை என்கிட்ட காட்டணும்னு நினைக்காத.. தொலைச்சிடுவேன் ராஸ்கல்.." பற்களை கடித்து அவள் காளியாக உறுமி விட்டு செல்ல.. ஒரு பெண் தன்னை அவமானப்படுத்தியதில் ஆண்மை அடி வாங்கியதாக உணர்ந்தான் திவாகர்.. அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற வன்மம் அவன் இதயத்தில் தலைவிரித்தாடியது.. கண்களில் குரோதம் குடியேறி நிற்க.. தன்னை கடந்து சென்றவளை பழிவெறியோடு முறைத்தான் அவன்..
வந்து தன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு மனம் ஆறவே இல்லை.. திவாகருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டாலும் அவன் நடந்து கொண்ட விதத்தை இயல்பாக கடக்க முடியவில்லை.. உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டிருக்கிறது..
இது போன்ற கீழ்த்தரமான ஜென்மங்களின் மத்தியில் வேலை செய்ய வேண்டிய தன் நிலையை எண்ணி நொந்து போனாள் பத்மினி.. அவன் பேசிய வார்த்தைகளையும் பார்த்த பார்வையும் எண்ணி எண்ணி மனம் நெருப்பில் வந்த கொள்கலனாய் கொதித்து போகிறது..
உடனடியாக திவாகரை பற்றி உதய் கிருஷ்ணாவிடம் புகார் சொல்லத்தான் நினைத்தாள்..
ஆனால் ஏற்கனவே ஆனந்த் தன் அங்கத்தைப் பற்றி படுகேவலமாக விமர்சித்து அது பிரச்சினையாகி எம்டி வரையிலும் கொண்டு சென்று.. அவன் வேலையை விட்டு நிறுத்தப்பட்ட காரணத்திற்கு இவள் மீது பழி சுமத்தி கம்பெனி முழுக்க இவளைத்தானே வசை பாடியது..
"ஏன்..? நாங்க எல்லாம் பொண்ணுங்க இல்லையா.. எங்க இடுப்பையெல்லாம் பார்த்து கமெண்ட்டா அடிக்கிறான்.. ஒழுங்கா டிரஸ் பண்ணினா எவனும் நம்மள அசிங்கமா பார்க்க மாட்டான்.. பொண்ணுங்க நெருப்பு மாதிரி இருக்கணும்.. இப்படி பார்த்தவுடன் பத்திக்கிற நெருப்பு மாதிரி இருந்தா.. பார்க்கிறவன் கை வைக்கத்தான் நினைப்பான்.. பாவம் ஆனந்த் இந்த வேலையை நம்பி ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் வச்சிருந்தான்.. இப்ப என்ன செய்யப் போறானோ தெரியல..!! இப்படி இவ சுயநலத்துக்காக அடுத்தவன் வயித்துல அடிக்கிறாளே.. இவளெல்லாம் எங்கிருந்து உருப்பட போறா.." என்று ஏகப்பட்ட சாபங்களும் வசை மொழிகளும் ஜாடை மடையாக அவள் காதுகளை வந்தடைந்திருந்தன.. இதையெல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் தன் நிம்மதிதான் கெடும் என்பதால் சிரமத்துடன் புறந்தள்ளி விட்டாள்..
இப்போது திவாகரை பற்றி போய் உதய் கிருஷ்ணாவிடம் சொன்னால்.. உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது எடுக்காமலும் போகலாம்.. அவன் குணத்தை கணிக்கவே முடியாது..
தனக்காக இல்லாது போனாலும் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பை கருதி உதய் கிருஷ்ணா திவாகரை வேலையை விட்டு தூக்கினால் அந்த பாவமும் பழியும் தன் தலையில் தானே வந்து விழும்..
இந்த கீழ்த்தரமானவனுக்காக அவன் குடும்பத்தை ஏன் தண்டிப்பானேன்.. சாந்தமான முகம் கொண்ட அவன் மனைவியும்.. குட்டியான அவன் மகனும் நினைவில் வந்து போனதில் தனது கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டாள்.. அவன் குடும்பத்திற்காக இந்த கேடு கெட்டவனை மன்னிக்க முயல்கிறாள்..
ஆனால் அவள் பெருந்தன்மைக்கு கொஞ்சம் கூட அருகதையே இல்லாதவன் அல்லவா இந்த திவாகர்.. தான் கேவலமாக நடந்து கொண்டதை மறந்து அவளிடம் அடி வாங்கியதை பெரும் அவமானமாக எண்ணிக்கொண்டு பத்மினியை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறான்..
தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு வேலையில் கவனம் செலுத்த முயன்றாள் பத்மினி..
அது அத்தனை எளிதாக இருக்கவில்லை.. திருமணமான பின்பு பிரச்சனைகள் தீர்ந்து போகும் என்று நினைத்தால் இங்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன..
உதய கிருஷ்ணாவோடு திருமணமான விஷயம் தெரியாதே தவிர.. பத்மினிக்கு திருமணமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாக விஷயம்தான் அலுவலகம் முழுக்க தெரியுமே.. இப்போதும் கூட இந்த ஆண்கள் அடங்காமல் சீண்டி தன்னிடம் எல்லை மீற நினைப்பதேன் என்று அவளுக்கு புரியவே இல்லை..!!
தன்னை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்பதை சுற்றி இருப்பவர்களின் ஜாடை மடையான பேச்சின் மூலம் உணர்ந்திருந்தாலும்.. உதய கிருஷ்ணாவோடு தன்னை இணைத்து பேசுகிறார்கள் என்று இந்நாள் வரையிலும் அவள் அறியவில்லை.. !!
அப்படி அறிந்து கொண்டால் மட்டும் பெரிதாக அவளால் என்ன செய்து விட முடியும்..!! உதய கிருஷ்ணாவின் காதுகளுக்கு அதைக் கொண்டு செல்வாளா என்பது பெருத்த சந்தேகம்.. மற்ற ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் போல் இதயம் கடந்து செல்லத்தான் முயலுவாள்..
உடமைப் பட்டவன் வந்து உண்மையை சொல்ல வேண்டும்.. அவனுக்கே இவளை மனைவி என்று சொல்ல இஷ்டம் இல்லாத போது அவள் மட்டும் தனியாக போராடிக் கொண்டிருக்க இயலாதே..!!
அவள் அப்படி இருக்க.. இங்கே உதய் கிருஷ்ணா முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இருந்தான்..
தேன் உண்ணும் ஆசையோடு மலரையே சுற்றி வரும் வண்டு போல் அவன் மனமும் துடித்துக் கொண்டிருக்கிறது..
மீண்டும் அந்த விவகாரமான கருவண்டுகளை பார்த்து காதல் கொள்ள ஆசை.. காலையிலிருந்து இப்படித்தான்.. அவ்வப்போது அவள் நினைவுகள் வந்து தொல்லை செய்கிறது.. மறக்கவே முடியாத ஏதோ ஒன்று அவன் கண் முன்னால் இரட்டை பீரங்கியாக நிலைகுத்தி கொல்கிறது..
மடியில் அமர்த்திக் கொண்டு.. அவள் இதழ்களுக்கு ஓய்வு தந்து குவிந்த குன்றுகளான பெண்ணழகை நிதானமாக சுவைத்தபடி இடையில் வீணை மீட்டிய நினைவு வந்து போக.. உள்ளுக்குள் உச்சந்தலைவரை ஏதோ ஒரு ராட்சச உணர்வு ஜிவ்வென்று பரவியது..
திரைச்சீலைகளை மூடிவிட்டு பத்மினியை அறைக்குள் அழைத்தான் உதய் கிருஷ்ணா.. அலுவலகத்தில் சச்சரவுகளை கிளப்பும் அந்த கூட்டத்திற்கு சிறந்த பொழுதுபோக்கும் மென்று தின்ன அவலுமாய் பத்மினி..
"சொல்லுங்க சார்" என்று பெருமூச்சு விட்டு உதய் கிருஷ்ணாவின் அறைக்குள் வந்து நின்றாள் பத்மினி..
"என்ன சொல்லணும்..!! மேடம் ரொம்ப பிசியா இருக்கீங்க போலிருக்கே.." எழுந்து வந்து மேஜையில் அமர்ந்தவன் அவள் கைப்பற்றி இழுத்தான்..
"ப்ச்.. என்னை விடுங்க சார் எனக்கு வேலை இருக்கு.." அவனிடமிருந்து நழுவ முயன்றாள்.. வெட்கப்பட்டு அவன் இழுத்த இழப்பிற்குள் குழையும் நிலையில் அவள் இல்லை..
"வேலையெல்லாம் இருக்கட்டும்.. அப்பப்ப என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க மேடம்.. நான் பாவம் இல்லையா..!!" கருணை காட்டு என்பதை கூட அதிகாரத் தொனியில்தான் சொல்ல இவனால்தான் முடியும்.. பாஸ்ஸி ஆட்டிடியூட்..
பதில் பேசாமல்.. சலிப்பான முகபாவனையோடு தெரிந்தவளை கூர்ந்த பார்வையில் அடையாளம் கண்டு கொண்டான் அவன்..
"என்னாச்சு பத்மினி.. ஏன் ஒரு மாதிரியா இருக்க..!! என்ன விஷயம்..?" என்றான் தீவிர பாவனையோடு கண்கள் சுருக்கி..
அவன் ஊடுருவும் பார்வைதனில் சட்டென்று சுதாரித்தாள் அவள்..
"அச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே..!! நான் நார்மலாத்தானே இருக்கேன்.. நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க.. கொஞ்சம் வேலை.. முடிக்க வேண்டிய அவசரம்.. அதான் டென்ஷன்.."
"அப்படி என்ன வேலை என்கிட்ட சொல்லுங்க மேடம்.." அவள் தாடையை தன்னை நோக்கி நிமிர்த்தி குறுகுறுவென்று முகம் பார்த்தான்.. உண்மைதானே அவனுக்கு தெரியாத வேலை அங்கே என்ன இருக்கிறது..?
அவள் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் இதழ்களில் முத்தமிட்டு.. தாகம் கொண்ட பாகம்தனில் தன் வேலையை காட்டியிருந்தான் உதய்..
சட்டென திடுக்கிட்டவளாய்.. "உதய் ஸ்டாப் இட்.. என்ன செய்யறீங்க.." என்று கோபம் கொண்டு சட்டென துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள்.. நிச்சயமாக அந்த இடம் சிவந்து போயிருக்கும்.. அப்படி ஒரு வலுவான கிடுக்கு பிடி..
"ஏன் பத்மினி எப்படி தொளதொளன்னு சுடிதார் போட்டிருக்க.. எது எங்க இருக்குன்னு தெரிய மாட்டேங்குது.. உன் இடுப்பை பார்க்காம பைத்தியம் பிடிக்குது.." உதய கிருஷ்ணா ஆழ்ந்த குரலில் சொன்னவன்.. அவள் இடையைப் பற்றி தன் பக்கம் இழுக்க.. திவாகரின் பேச்சில் புகைந்து கொண்டிருந்த ஆத்திரம்.. உதய் கிருஷ்ணா தன்னை அணுகிய விதத்தில் விஸ்வரூபமாக வெடித்து கிளம்பியது..
"ஏன் சார் இப்படி தொந்தரவு பண்றீங்க.. என் மனநிலையை பற்றி யோசிக்கவே மாட்டீங்களா.. இவ்வளவு சுயநலமா இருக்கீங்களே.. எப்பவும் உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் அக்கறை.. நான் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லை.." மூச்சு வாங்க கத்தியவளை நிதானமாக கவனித்தான் உதய் கிருஷ்ணா..
"இப்ப எதுக்காக இப்படி கத்தற.. சம்திங் இஸ் ராங்.. என்ன விஷயம் இப்படி வா..!! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. ஐ வில் ஹெல்ப் யூ.. அதை விட்டுட்டு இப்படி தேவை இல்லாம கத்தி உன் மன அமைதியை கெடுத்துகிட்டு என்னையும் டென்ஷன் ஆக்காதே.." என்றான் அதட்டலான குரலில்..
"ஒ.. ஒண்ணும் இல்ல.. என்னை விட்டுடுங்க நான் போறேன்.." என்று தலையை உலுக்கி குழப்பமான மனநிலையுடன் அங்கிருந்து செல்ல முற்பட்டவள் அங்கேயே நின்று அவனிடம் திரும்பி வந்தாள்..
"சார்.." என்று அழைக்க.. யோசனையோடு தலை தாழ்ந்திருந்தவன் சட்டென நிமிர்ந்தான்..
"என்ன பத்மினி" என்று எழுந்து நின்றான்.. உதய் தனக்காக எழுந்து நின்று முக்கியத்துவம் கொடுப்பது அவளுக்கு பிடித்திருந்தது..
சட்டென அவனை அணைத்துக் கொண்டாள் பத்மினி..
"திட்ட மாட்டீங்கன்னு நம்பறேன்.. கொஞ்ச நேரம் இப்படியே இருந்துக்கிறேன் ப்ளீஸ்.." என்றவள் அவனை அணைத்தபடியே நிற்க.. தானும் அவளை அணைத்துக் கொண்டு குனிந்து அவள் முகம் பார்த்து எம்மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முயன்றான்.. ஆனால் பத்மினி முகத்தை தன் மார்பில் அழுத்தமாக புதைத்திருந்ததில்.. "என்னம்மா ஆச்சு சொன்னாதானே தெரியும்.." என்றான் அவனுக்கே புதிதான கலக்கமான குரலில்..
"ஒன்னும் இல்ல.. ஏதோ மனசு படபடன்னு இருந்துச்சு.. உங்களை இறுக்கமாக கட்டிக்கிட்டா சரியாகிடும்னு தோணுச்சு.. இப்போ சரியாயிடுச்சு.. நான் போகட்டுமா..!!" என்று விலக முயன்றவளை மீண்டும் இறுக தன்னோடு அணைத்து கொண்டான்.. இழுத்த வேகத்தில் அவன் மார்போடு வந்து மோதினாள் பத்மினி..
"மனசு விட்டு பேசவே மாட்டேங்கற பத்மினி.. அன்னைக்கும் ஏதோ ஒரு பிரச்சனையை மனசுல வச்சுக்கிட்டு தனியா உட்கார்ந்து அழுதுட்டே இருந்த.. இன்னைக்கும் அப்படித்தான்.. உன்னை நீயே குழப்பிக்கிட்டு ரொம்ப டென்ஷனா தெரியுற.." என்று தன் கண்களுக்குள் கலந்தவனை எதிர்கொள்ள முடியாமல் தலை தாழ்ந்தாள் பத்மினி..
அவள் முகத்தை நிமிர்த்தினான் உதய் கிருஷ்ணன்..
"எது நடந்தாலும் மனசை இரும்பா வச்சுக்கணும் கவலைப்பட கூடாது.. கலங்கறவன் கோழைன்னு.. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. நான் எதுக்காகவும் கவலைப்பட்டதில்ல.. கவலைப்படறவங்களை பார்த்தால் எனக்கு கோபமா வரும்.. எரிச்சல் முட்டும்.. ஏன் இவங்க எல்லாம் உயிர் வாழ்கிறாங்கன்னு தோணும்.. அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது பத்மினி வாயை திறந்து ஏதோ சொல்ல வர ஒற்றைவிரலால் அவள் இதழில் ஒற்றி தடுத்தவன் மேலும் தொடர்ந்தான்..
"நீ அழுதா மட்டும் எனக்குள்ளே ஏதோ செய்யுது.. மனசு ஒரு மாதிரி கரையுது.. எனக்கு சரியா சொல்ல தெரியல பத்மினி.. உன்னை அழ விடக்கூடாதுன்னு தோணுது.. ஏன் பத்மினி..?"
தெ.. தெரியல சார்.. பத்மினி எச்சில் விழுங்கினாள்.. அவளுக்குள்ளும் சொல்லொண்ணா உணர்வுகள் பெருக்கெடுத்தன..
"என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன்.. உனக்காக இருப்பேன் பத்மினி.." தீர்க்கமாகவும் தெளிவாகவும் சொன்னவனை கண்கள் அகல பார்த்தாள் பத்மினி..
"யார் என்ன சொன்னாலும் நீங்க என்னை நம்புவீங்களா.. எனக்காக பேசுவீங்களா..!!" அவளையும் அறியாமல் ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகளை தொடர்ந்து கண்களில் நீர்த்திரள்கள் உருண்டது..
சில கணங்கள் அந்த கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. விரல்களால் அவள் விழி நீரை துடைத்து விட்டான்..
"உனக்காக நான் இருக்கேன் பத்மினி.." என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.. அவன் அணைப்பிலும் ஆறுதலான பேச்சிலும்.. நம்பிக்கையான பார்வையிலும்.. நிதானத்திற்கு வந்திருந்தாள் பத்மினி.. சுற்றிலும் யார் யாரோ சேற்றை வாரி இறைத்தாலும்.. எதுவுமே தன் மீது படாதவாறு வலுவான கரம் ஒன்று அவளை அணைத்துக் கொண்டு யானை பலம் தருவதாக உணர்ந்தாள்.. கண்களை துடைத்துக் கொண்டு.. அவன் இதழில் முத்தமிட்டதை கூட அறியாத வண்ணம் உருகி நின்றிருந்தாள்..
"ஏதோ கேட்டீங்களே..!!" பத்மினியின் முகத்தில் வெட்கமும்.. வார்த்தைகளை லேசான தடுமாற்றமும்..
"என்ன கேட்டேன்..?"
"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் போன் பண்ணி வர சொன்னீங்க..?'
"ஆமா அது வேணுமே..!!"
"எது..?" பத்மினி இதழ்களுக்குள் குறுகுறுப்பு..
கொஞ்சமும் கூச்சமில்லாமல்.. அவள் மார்பை நோக்கி சுட்டிக்காட்டினான் உதய்.. ஆனால் பாவம் அவள்தான் வெட்கத்தில் துவண்டாள்.. இப்படி ஒரு மோகம் ஆகாது.. காலையிலேயே பார்த்தாளே.. கைகளில் அள்ளி.. ஆசைதீர முத்தமிட்டு.. ஏதோ பாலும் பாலும் தெளிதேனும் சுரந்து வரும் அட்சய கிண்ணமாக எண்ணிய பைத்தியக்காரனை போல் ஆவேசமாக அவன் செய்த செயலை எண்ணிப் பார்க்கவும் உலர்ந்து போயிருந்த ஈர தாமரை உதடுகள் மலர்ந்து போயின..
"எனக்கு பைத்தியமே பிடிக்குது.. எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணவே முடியல.. ஆபீஸ் வேலை கரெக்ட்டா நடக்கணும்.. என்ன பண்ணலாம் நீயே சொல்லு.. "அவள் கன்னங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கினான்.
"நான் என்ன பண்ணனும்..?"
"எனக்கு தெரியலடி.." விழி மூடி அவள் வாசனையை முகர்ந்து கொண்டிருந்தான்..
"என் டாப்பை கழட்டிட்டு உங்க மடியில வந்து உட்காரணுமா..!!"
"வேண்டாம்..!!"
"அப்புறம்..? டாப்லெஸ்சா இந்த டேபிள் மேல உட்காரணுமா.."
"ப்ச்.. சும்மாருடி.. நீ என்னை அசிங்கப்படுத்தற.. நான் ஒன்னும் அந்த அளவு மோசமானவன் இல்லை.. என் பீலிங்சைதான் சொன்னேன்.. மத்தபடி உன் மரியாதையும் மதிப்பும் எனக்கும் ரொம்ப முக்கியம்.. மத்தவங்க முன்னாடி நிச்சயம் உன்னை அவமானப்படுத்த மாட்டேன்.. நம்ம அந்தரங்கம் நம்ம வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள இருக்கட்டும்.."
"ஆனா அப்பப்போ இந்த மாதிரி சின்ன சின்னதா முத்தம் கொடுத்துட்டு போ.. எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்கும்.." என்றவன் மீண்டும் அவள் இதழோடு இதழ் இணைத்து முத்தமிட்டு.. அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தான்.. இதுதான் மனைவிக்கு தரும் மரியாதை..
கடுகடுவென உள்ளே போனவள் பெரும் நிம்மதியோடு சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்..
தொடரும்..
Last edited: