- Joined
- Jan 10, 2023
- Messages
- 78
- Thread Author
- #1
குழந்தை வீல்.. வீலென்று கத்திக் கொண்டிருக்க.. புடவை முந்தானையை வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள் குழந்தையை தோளில் போட்டு "அழாதே கண்ணா.. என் செல்லம்ல.." என தேற்றும் குரல் கேட்டு வீட்டின் வெளியே விளக்குகள் ஒவ்வொன்றாய் ஒளிர்ந்தன..
"தம்பி" என ஆச்சார்யாவும்.. அன்பு.. "ராசாத்தி.." என வடிவும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர்..
இரண்டு மூன்று முறை கதவைத் தட்டிய பிறகு குழந்தையோடு வெளியே வந்தாள் அன்பரசி..
"ஏம்மா.. புள்ள இப்படி அழுவுது.." குழந்தையை கையில் வாங்கிக் கொண்டாள் வடிவு..
"தெரியல.. பாட்டி ராத்திரி ஆனாலே இதே ரோதனை.." வெளியே வந்து மேல்மாடத்தை இரு கைகளால் பற்றியபடி நின்றிருந்த தன் கணவனை முறைத்தபடி கூறினாள்..
"பிள்ளைக்கு பசிக்குது.. பால் கொடுக்க வேண்டியதுதானே..!!" வடிவு கேட்க அன்பரசி பதில் சொல்லவில்லை..
"குழந்தைக்கு பால் பத்தலையோ என்னவோ.. நான் போய் பசும்பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்.." ஆச்சார்யா குழந்தையை வாங்கிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள வடிவு சமையலறைக்குள் நுழைந்தாள்..
சமையலறையிலும் பால் இல்லை.. "அடடா இந்த திருட்டு பூனை எல்லா பாலையும் குடிச்சிடுச்சே.." வடிவு கன்னத்தில் கை வைத்து உச் கொட்ட.. "இங்கேயும் அதேதான்" பற்களை கடித்து கணவனை முறைத்தாள் அன்பரசி.. அவனோ மேல் மாடத்தில் தாளம் தட்டியபடி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விசிலடித்து சிரித்தான்.. இன்னும் குழந்தை சமாதானம் அடையவில்லை..
"இப்போ.. என்னத்துக்கு.. இவ்வளவு கலாட்டா.. குழந்தை என்கிட்ட கொடுங்க.. எப்படி அவன் அழுகையை நிறுத்துறேன்னு மட்டும் பாருங்க.." வெளியே வந்த குரு குழந்தையை கையில் வாங்கி.. சட்டையை தூக்கி முதுகை ஆராய.. சின்னதாக எறும்பு குழந்தையை கடித்து மிருதுவான சருமத்தை சிவக்க வைத்திருந்தது.. எறும்பை எடுத்து கீழே போட்டு அந்த இடத்தை மென்மையாக தேய்த்து விட்டான் குரு.. அன்பரசி பெற்ற குருவின் மகன் அழுகை நிறுத்தி விட்டான்.. நான்கு மாதங்களே நிரம்பிய குழந்தை பொக்கை வாயோடு சிரித்து தகப்பனின் நெற்றி முட்டியது .. மற்றவர்களுக்கோ பெரும் ஆச்சரியம்..
"பாத்தியாடா கண்ணா.. உனக்கு என்ன வேணும்னு பெத்த அம்மாவுக்கே தெரியல.. புள்ள அழுதாலே பசின்னு நினைச்சா எப்படி.. அவனுக்கும் ஆயிரத்தெட்டு உபாதைகள் இருக்குமுல்ல.. குழந்தை எதுக்காக அழறான்னு பெத்த தாய் சரியா புரிஞ்சுக்க வேண்டாமா.. ம்ம்.. எல்லாரும் விளக்கை அணைச்சுட்டு போய் தூங்குங்க.. நீ வாடா கண்ணா.. நாம பேய் படம் பாக்கலாம்.." குழந்தையை கொஞ்சியபடி அன்பரசியை இடித்து தள்ளிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் குரு.. பேய் படம் என்று சொல்வது அன்பரசி அடுத்து வழங்கப் போகும் அர்ச்சனைகளை.. சொட்டு விடாமல் விழுங்கி தீர்த்தால் பெற்ற தாய்க்கு கோபம் வரத்தானே செய்யும்..!!
சண்டையும் சச்சரவுகளும் ஊடலும் கூடலுமாய் வாழ்க்கை நகர்கின்றது..
விமலா கிளினிக்கில் அமர்ந்திருந்தனர் இருவரும்..
"இங்க பாரு குரு, முதல் குழந்தைக்கே நீ அவளை படுத்தின பாட்டுல.. பேசாம டெலிவரிக்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு பண்ணி விட்டுடலாம்ன்னு நினைச்சேன்.. இப்ப என்னடான்னா குழந்தைக்கு ரெண்டு வயசு கூட ஆகல.. அதுக்குள்ள வயித்துல புள்ளையோட வந்து நிக்கிறா.. அவ என்ன பொம்பளையா இல்ல.. புள்ள பெத்துக்கற மிஷினா..?" மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு மருத்துவர் இறைந்ததை காதில் வாங்காமல் மனைவியின் பக்கம் திரும்பினான் குரு..
"ஏன்டி.. இப்ப குழந்தை வேண்டாம்ன்னு நான்தானே சொன்னேன்.. நீ தான் என்னை மயக்கி என்னென்னவோ சொல்லி வயித்துல ஒன்னு வாங்கிட்டே.. இப்ப பாரு இந்தம்மா என்ன திட்டுது.. இது சரிவராது.. வா வேற டாக்டர பாக்கலாம்.." படபடவென பொரிந்தவனை கண்களால் கெஞ்சி அமைதிப் படுத்த முயன்று கொண்டிருந்தாள் அன்பு..
"ஹலோ.. பையா இங்க பார்த்து பேசு.." விமலாவின் குரலில்.. "உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இவதான்.. இவள.."
"என்னப்பா அடிக்க போறியா..? உன் ரியாக்ஷனை பார்த்தா அடிக்கிற மாதிரி தெரியலையே.. அடேய் அடேய்.. இதையெல்லாம் வீட்ல போய் வச்சுக்கடா.. முதல்ல என்ன பாரு.." மேஜையில் கிடந்த அட்டையை அவன் மீது தூக்கி எரிந்தார் விமலா..
"சொல்லுங்க.." கடுப்போடு மருத்துவரின் பக்கம் திரும்பினான்..
"அப்புறம் இன்னொரு விஷயம்.. கட்டிபிடிக்கிறேன் காலை அமுக்கறேன். ஒத்தடம் கொடுக்கிறேன்னு முரட்டுத்தனமா நடந்துகிட்டு இடுப்பு வலிக்குது.. கை சுளுக்கிடுச்சு.. கால் மரத்துடுச்சுன்னு போனமுறை மாதிரி என்கிட்ட வந்து நிக்க கூடாது.. நான் ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்.."
"ஏன்டி போன முறை எதனால இப்படி ஆச்சுன்னு டாக்டர்கிட்ட சொல்லவே இல்லையா.. அது ஒன்னும் இல்ல டாக்டர் ஜோன்னு மழை பெய்ஞ்சிதா.. டிவில முந்தானை முடிச்சு..!!"
"யோவ்.. சும்மா இருய்யா.. உண்மைய சொன்னா இனி இந்த ஆஸ்பிட்டல் பக்கமே வராதீங்கன்னு துரத்தி விட்டுருவாங்க.." அன்பு கிசுகிசுப்பான குரலில் அவனை அடக்கினாள்..
"அங்கே என்ன பேச்சு..?"
"இந்த டாக்டரம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பேசுது.. வா வேற டாக்டரை பார்க்கலாம்.." குரு எரிச்சலாக சிடுசிடுத்தான்..
"ஐயோ.. இவங்கதான் கைராசி டாக்டர்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் பாத்துக்கறேன்.." அன்பரசி அவனை சமாதானப்படுத்தினாள்..
"அப்புறம் இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க.." என்று ஒரு விண்ணப்பத்தை குருவின் பக்கம் நீட்டினாள் விமலா..
"என்னது இது..!!"
"ஹான்.. போன வாட்டி உன் பொண்டாட்டி பிரசவ வலியில் அழுது துடிச்சு டாக்டர் வர ஒரு பத்து நிமிஷம் லேட் ஆகிடுச்சுன்னு ஹாஸ்பிடலோட கதவு கண்ணாடி ஜன்னலை உடைச்சு வச்சியே.. அந்த மாதிரி இந்த வாட்டி எந்த அசம்பாவிதமும் நடக்காதுன்னு உறுதி கொடுத்து நீ கையெழுத்து போடற லெட்டர்.." குரு அன்பரசியை முறைத்து வைக்க "கையெழுத்து போடுங்களேன்.." என்று கண்களால் கெஞ்சினாள் அவள்..
"அப்புறம் அன்பரசி மாசம் எட்டு ஆகிடுச்சு.. ரொம்ப கவனமா இருக்கணும்.. போன வாட்டி மாதிரி அவஸ்தைப்படாதே.." குருவை முறைத்துக் கொண்டே விமலா சொன்னதில் அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று புரிந்து விட்டது..
"போகலாம்" என்று அன்பரசி எழுந்து நிற்க.. "அப்புறம் டாக்டர்.. இன்னொரு முக்கியமான டவுட்.." குரு கன்னத்தில் கை வைத்து அமர்ந்தான்..
"சொல்லு..!!"
"நேத்து கொஞ்சம் ஹெவியா கடிச்சு வச்சுட்டேன்.. விஷம் ஏறிடுமோ..!! எதுக்கும் ஒரு டிடி போட்டுடுங்களேன்..!!" அவன் சொன்னதை தொடர்ந்து விமலாவிற்கு மேல் மூச்சு வாங்கியது..
"அன்பு.. இவன் உனக்கு தேவைதானா.?" டாக்டர் கேட்ட அடுத்த நிமிடம் மேஜை டமாரென உடையும் சத்தம்.. கணவனும் மனைவியுமாக இருவரும் வெளியே வர உள்ளே விமலா.. "நாசமா போறவனே.. உன்னை போலீஸ்ல புடிச்சு தரல நான் டாக்டர் விமலா இல்ல.. அன்பரசி அடுத்தவாட்டி இவனை கூட்டிட்டு வந்த உனக்கு ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்.." காச் மூச்சென கத்தும் சத்தம்.. அன்பரசி தன் பெரிய வயிற்றில் கை வைத்து மெதுவாக நடந்தபடி கணவனை கொலை வெறியுடன் முறைத்தாள்..
அவனும் அவளை சட்டை செய்யாமல்.. போனை எடுத்து ஆச்சார்யாவிற்கு அழைத்தான்..
"அப்பா.."
"டாக்டர் கிளினிக்ல டேபிள் ஒன்னு ஒடஞ்சு போச்சு.. புதுசா ஆர்டர் பண்ணி உடனே வரவழைச்சிடுங்க.. ஆமா உடனே" அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..!!
"அட சொன்னதை செய்யுங்கப்பா.. வீட்டுக்கு வந்த பிறகு உங்க கச்சேரியை வச்சுக்கோங்க.." போனை அணைத்து விட்டு.. மனைவியை பார்த்து கண்சமிட்டியவன் அவள் தோள் மீது கை போட்டு நடந்தான்..
"நீங்க திருந்தவே மாட்டீங்க இல்ல..?"
"ஏய் என்னடி.. நான் உனக்கு தேவை இல்லைன்னு அந்த டாக்டரம்மா சொல்லுது.. கேட்டுட்டு அமைதியா இருக்க சொல்றியா.. ஆரம்பத்துல இருந்தே எனக்கும் அந்தம்மாவுக்கும் ஏதோ சரியில்லை.. ரொம்ப முட்டிக்குது.. எனக்கு இந்த டாக்டரை பிடிக்கவே இல்லை.." என்றான் குரு எரிச்சலாக..
"போதும்.. போதும்.. இப்படித்தான் போன முறை இரண்டு பேரும் கார்கில் வார் மாதிரி சண்டை போட்டுட்டு அப்புறம் குழந்தை பிறந்த பிறகு நன்றி சொல்றேன்கிற பேர்ல அவங்கள கட்டிப்பிடிச்சு கையில முத்தம் கொடுத்து விமலா டாக்டரை ஓட ஓட விட்டீங்களே.. மறக்க முடியுமா அந்த காட்சியை..!!" அன்பரசி வேடிக்கையாக சிரிக்க..
"ப்ச்.. கொஞ்சம் நல்லவங்கதான்.. என்ன வாய் தான் காது வரைக்கும் நீளுது.." சொல்லி தலையை கலைத்து விட்டு அழகாக வெட்கப்பட்டான் குரு..
"அப்படி.. அப்படியே இருங்க.. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்.." அவள் சொல்லி முடிப்பதற்குள் முகபாவனை மாறிவிட்டது.. மின்னலென சில நொடிகள் மட்டுமே தோன்றும் அழகான மாற்றம் இது.. மனதினுள் அழகாக சேமித்து வைத்திருக்கிறாள்.. ஆனால் அலைபேசியில்தான் சேமிக்க முடியவில்லை..
நான்கு வயது சாரதியை இடுப்பில் வைத்துக் கொண்டு வடிவு குருவின் அறையை நெருங்கிய நேரத்தில்.. சப்பென ஒரு சத்தம்..
"என்னாச்சு".. வடிவு பதட்டத்தோடு எட்டிப் பார்த்தாள்..
அன்பரசி குருவை அறைந்திருந்தாள்.. கதவிடுக்கின் வழியே காட்சியை கண்ணில் பார்த்த வடிவுக்கு தலை சுற்றியது..
"ஆத்தாடி.. அன்பரசி அடிக்கிறாளா.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ.. எம்மா இந்த விளையாட்டுக்கு நான் வரல.." வந்த வழியே திரும்பி ஓடியிருந்தாள்.. ஆனால் அவள் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை..
அடியை வாங்கிக்கொண்டு கோபத்தில் ஜிவ்வென சிவந்து நின்றிருந்தான் அவன்..
இரண்டே வயதான மின்மினி சாக்லேட் வாயில் ஒழுக வைத்துக்கொண்டே இருவரையும் வேடிக்கை பார்க்க..
"ஏய்.. சத்தியமா நேத்து எப்படி சரக்கு போட்டேனு எனக்கே தெரியலைடி.. ஏதோ ஜூஸ்ன்னு குடுத்தானுங்க.. கல்யாண வீட்ல வேண்டாம்னு மறுக்க முடியல.. நான்தான் உண்மையை சொல்றேன்ல.. ஓவரா பேசுற.. புருஷனை அடிக்க கைநீட்டறியா நீ.. ராங்கி.. இனிமே நானா வந்து உன்கிட்டே பேசினா என்னை செருப்பால அடி.." குட்டி பாப்பாவை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான் குரு..
பின்பக்க வேப்ப மரத்தடியில் தன் மகள் மின்மினியை தோளில் வைத்துக் கொண்டு.. போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்..
"158 மூட்டையும் 252 மூட்டையும் சேர்த்து மொத்தம்.." என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க..
"410 மூட்டை.."
திரும்பியும் பார்க்காமல் குரலை அடையாளம் கண்டு கொண்டவன்.. ஃபோனை அணைத்துவிட்டு ஆமா இவங்க படிச்சவங்கன்னு காட்டுறாங்க.. எங்களுக்கு தெரியாது பாருஊஊ.." குரல் தேய்ந்து போனது.. கண்கள் சிமிட்ட மறந்து போனது..
குரலை செருமிக் கொண்டு.. தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரத்தை தோளில் வழியவிட்டபடி குட்டி கை ஜாக்கெட்டும் புதுப் புடவையும் புன்னகையுமாய் அங்கே நின்றிருந்தாள் அன்பு..
தான் கிறங்கி உருகுவது அவனுக்கே அதிகப்படியாக தோன்ற குரலை செருமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்..
"இப்ப எதுக்காக இங்க வந்த..?" குரல் சுத்தமாக வீரியம் இல்லாமல் போகவே.. இதுதான் உன்னோட கோபமா.. மனசாட்சி அவனை கேள்வி கேட்டது..
"மட்டன் பிரியாணியும்.. பாதாம் அல்வாவும் செஞ்சு வெச்சிருக்கேன்.. வாங்க.." அதிகமாக சிணுங்கினாள்..
"வரமாட்டேன்.."
"ப்ச்.. என்கிட்ட கோவிச்சுக்கிட்டு எங்கே போவீங்களாம்.. என் செல்லம்ல..!!"
"அப்போ.. அடிச்சதுக்கு மன்னிப்பு கேளு.."
"சாரிதானே.. ராத்திரி ஆகட்டும்.. உங்களை நிக்க வச்சு முட்டிப்போட்டு மன்னிப்பு கேட்கிறேன்.. போதுமா..!!" உருவங்கள் உயர "டபுள் ஓகே" வேகமாக தலையசைத்தான்.. "இப்போ.. வாங்க.." குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் முன்னால் நடக்க.. ஒரு கணம் அந்த பெரிய விழி பார்வையில் தொலைந்தவன் பிறகு தலையை உலுக்கி.. ஓடி சென்று குழந்தையோடு அவளையும் தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டு வீட்டுக்குள் ஓடினான்..
"தாத்தா.. தாத்தா.." ஐந்து வயது சாரதியும் மூன்று வயது மின்மினியும் தாத்தாவின் படுக்கையறைக்குள் ஓடி வந்தனர்..
"சொல்லுங்க.. தங்கம்.. " ஆச்சார்யா எழுந்து அமர்ந்தார்..
"அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை.. தூங்கவே முடியல.. "
"அப்பா ரொம்ப கோவமா இருக்காரு.. அம்மா பதிலுக்கு பதில் பேசிக்கிட்டே இருக்காங்க.." சாரதி கண்களை விரித்து அழகாக சொல்ல ஆச்சார்யா சிரித்தார்..
"சரி என் கூடவே தூங்குங்க உங்களுக்கு நான் கதை சொல்றேன்.." என குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு படுத்தார் அவர் ..
அடுத்த நாள் சாரதி வடிவை அழைத்து வந்து அறையை காண்பித்தான்..
"நான் சொன்னேன்ல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிய சண்ட போலிருக்கு.. பாருங்க.. கட்டில் உடைஞ்சு போச்சு.." ஒரு பக்கம் கால் உடைந்து தூங்கி போன கட்டிலை காண்பித்தான்.. குரு வடிவை ஓரப்பார்வை பார்த்துவிட்டு சுத்தியலால் அடித்து கட்டிலை சரிப்படுத்திக் கொண்டிருந்தான்..
"அப்பனும் புள்ளையும் சேர்ந்து என் மானத்தை வாங்குறானுங்க.." புடவை முந்தானையை இழுத்து சொருகியபடி கணவனை முறைத்தாள் அன்பு..
"நீ வா சின்ன ராசா.. உனக்கு தம்பியோ தங்கச்சியோ வரப்போகுது.."எளிதாக சொல்லிவிட்டு சாரதியை கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றாள் வடிவு..
"நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.." இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக தூக்கிக்கொண்டு அழுதபடி நின்றாள் அன்பரசி..
"மறுபடியும் சண்டையா..?" அலுத்துக் கொண்டு ஆச்சார்யாவும் வடிவும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்..
"போய்தான் பாரேன் காலை வெட்டி போடறேன்.."
"அதானே.. எப்ப பாரு வெட்டுறேன் குத்துறேன்னு.. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அவனை அடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்.."
"பொம்பள புள்ள மேல கைய வச்சிருக்கான்.. சும்மா விட சொல்றியா.. நமக்கும் ஒரு புள்ள இருக்கு.. ஞாபகம் இருக்கட்டும்.." பதிலுக்கு பதில்..
"அவன் செஞ்சது பெரிய தப்பு தான் ஒத்துக்கிறேன்.. அதுக்காக அந்த அடி அடிக்கிறதா..!! இந்த முரட்டுத்தனம் உன்னை விட்டு எப்ப தான்யா போகும்.."
"ஒத்தடம் கொடுக்குற மாதிரி அடிக்க எனக்கு தெரியாது போடி.."
"நீங்க என்ன செய்றீங்களோ அதைப் பார்த்து தான் உங்க பையனும் கத்துக்குவான்.. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க.."
"நான் ஒன்னும் தப்பு செய்யல.. நியாயமாதான் நடந்துக்கிறேன்.. என் பையனும் நல்லவனாத்தான் வளருவான்.. வளர்ப்பேன்.. நீ தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற.. என்னை புரிஞ்சுக்காதவ இந்த வீட்ல இருக்கவே வேண்டாம்.. என் குழந்தைகளை கொடு.. நீ கெளம்பி உங்க அப்பன் வீட்டுக்கு போடி.." இரு குழந்தைகளையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. வாசல் வரை போவதற்குள் அவளுக்கு முன்னால் சென்று இவன் நிற்பான்.. அதற்கு தான் இந்த பாடு..
"நீங்க வாங்க செல்லங்களா.. நாம பொருட்காட்சிக்கு போகலாம்.. இதுங்களுக்கு வேற வேலை இல்ல.." குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆச்சார்யா வெளியே சென்று விட்டார்.. அதைக் கூட கவனிக்கவில்லை குரு..
"வீட்டை விட்டு துரத்துறீங்களா..!! வாயும் வயிறுமாய் இருக்கிற பொண்டாட்டியை மனசாட்சி இல்லாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுறீங்களே..!!" அன்பரசி கண்ணை கசக்கினாள்..
"என்னது.. வாயும்.. வயிறு.. ஏய்ய்.. சொல்லவே இல்ல.." கண்களில் மின்னலோடு அவளருகே வந்தான்..
"என்னத்த சொல்ல.. அதான் எப்ப பாரு திட்டறீங்களே.."
"நான் எப்ப டி திட்டினேன்.."
"கழுத்தை பிடிச்சு வீட்டை விட்டு வெளியே தள்ளுறீங்களே.." பரிதாபமாக பார்த்தாள் அன்பு..
"அடிப்பாவி.."
"கொடுமை படுத்தறீங்களே.."
"கடவுளுக்கே அடுக்காதுடி.."
மானம் ரோஷம் சூடு சொரணை அனைத்தும் வாசல் வழியே சென்றுவிட மனைவியின் கைப்பற்றி அமர வைத்து அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான் குரு..
"தள்ளி போய் எத்தனை நாளாச்சு.. செல்லக்குட்டி.."
"50 நாள்.."
"விமலா டாக்டர் கிட்ட போவோமா..!!"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி கர்ப்பமா இருக்கறதா சொன்னேன்.. ஏதோ ஆளில்லாத தீவுக்கு மெடிக்கல் கேம்ப் போய்ட்டாங்களாம்.."
"அச்சோ.. சரி விடு வேற டாக்டர் பாக்கலாம்.."
"என் தங்கத்துக்கு என்ன வேணும்..!!" அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
"ஒன்னும் வேண்டாம்.. போய்யா.. பேசுறதெல்லாம் பேசிட்டு.." என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு அவன் கையை பார்த்தாள்..
"பபில்ஸ்..!!" அவள் கண்கள் மின்னியது..
"எனக்காகவா..!!"
"ஆமா.. வரும்போது உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தேன்.. அதுக்குள்ளே இஷ்டத்துக்கு வார்த்தைகளை விடறே.." செல்லமாக கோபித்து சிணுங்கினான்..
"சாரி தங்கம்.." அவன் கேசத்தை பற்றியிழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்..
"அதன் பிறகென்ன..!!" தோட்டத்தில் ரவுடி பயலும் அன்பரசி குழந்தைகளாக மாறிவிட்டிருந்தனர்..
ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த சோப்பு நுரைகளின் நடுவே அன்பரசியும் குருவும் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு கொண்டிருக்க அவன் மூளையில் டோப்பமைன் மிதமான அளவில் சுரந்து ஏகாந்த நிலையை அனுபவிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தது.. மனைவியை கையில் அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான் குரு.. எப்படிப்பட்ட விளையாட்டும் இங்கு தான் வந்து முடியும்.. ஒன்றும் சொல்வதற்கில்லை..
குருஷேத்ரா.. அன்பரசியின் வரவுக்கு பின் மகானாய் மாறிவிடவில்லை..
அவன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து.. மனிதனாய் மாற்றி இருக்கிறாள்..
இப்போதும் அவனிடம் மூர்க்கத்தனமும் முரட்டுத்தனமும் குறைந்துவிடவில்லை.. ஆனால் அதற்கு இணையான அன்பும் கருணையும்.. நேசமும் பாசமும் நிறைந்து வழிகிறது..
நல்ல தந்தையாய்.. நல்ல கணவனாய் நல்ல மகனாய் நல்ல முதலாளியாய்.. குறை இல்லாமல் பரிமளிக்க காரணம்.. அன்பரசியும் அவள் காதலும் மட்டுமே..
அவன் ஏடாகூட அலட்சிய பேச்சும்.. அவள் பொய் கோபமும்.. அவன் முரட்டுத்தனமும் அவள் மென்மையும்.. அவன் சண்டையும் அவள் சமாதானங்களும்.. என சின்ன சின்னதாய் நிறைய ஊடல்களுக்கு மத்தியில் கூடலும் காதலும் என இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி விடை பெறுவோமாக..
சுபம்..
நன்றிகளுடன்
சனாகீத்..
"தம்பி" என ஆச்சார்யாவும்.. அன்பு.. "ராசாத்தி.." என வடிவும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர்..
இரண்டு மூன்று முறை கதவைத் தட்டிய பிறகு குழந்தையோடு வெளியே வந்தாள் அன்பரசி..
"ஏம்மா.. புள்ள இப்படி அழுவுது.." குழந்தையை கையில் வாங்கிக் கொண்டாள் வடிவு..
"தெரியல.. பாட்டி ராத்திரி ஆனாலே இதே ரோதனை.." வெளியே வந்து மேல்மாடத்தை இரு கைகளால் பற்றியபடி நின்றிருந்த தன் கணவனை முறைத்தபடி கூறினாள்..
"பிள்ளைக்கு பசிக்குது.. பால் கொடுக்க வேண்டியதுதானே..!!" வடிவு கேட்க அன்பரசி பதில் சொல்லவில்லை..
"குழந்தைக்கு பால் பத்தலையோ என்னவோ.. நான் போய் பசும்பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்.." ஆச்சார்யா குழந்தையை வாங்கிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள வடிவு சமையலறைக்குள் நுழைந்தாள்..
சமையலறையிலும் பால் இல்லை.. "அடடா இந்த திருட்டு பூனை எல்லா பாலையும் குடிச்சிடுச்சே.." வடிவு கன்னத்தில் கை வைத்து உச் கொட்ட.. "இங்கேயும் அதேதான்" பற்களை கடித்து கணவனை முறைத்தாள் அன்பரசி.. அவனோ மேல் மாடத்தில் தாளம் தட்டியபடி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விசிலடித்து சிரித்தான்.. இன்னும் குழந்தை சமாதானம் அடையவில்லை..
"இப்போ.. என்னத்துக்கு.. இவ்வளவு கலாட்டா.. குழந்தை என்கிட்ட கொடுங்க.. எப்படி அவன் அழுகையை நிறுத்துறேன்னு மட்டும் பாருங்க.." வெளியே வந்த குரு குழந்தையை கையில் வாங்கி.. சட்டையை தூக்கி முதுகை ஆராய.. சின்னதாக எறும்பு குழந்தையை கடித்து மிருதுவான சருமத்தை சிவக்க வைத்திருந்தது.. எறும்பை எடுத்து கீழே போட்டு அந்த இடத்தை மென்மையாக தேய்த்து விட்டான் குரு.. அன்பரசி பெற்ற குருவின் மகன் அழுகை நிறுத்தி விட்டான்.. நான்கு மாதங்களே நிரம்பிய குழந்தை பொக்கை வாயோடு சிரித்து தகப்பனின் நெற்றி முட்டியது .. மற்றவர்களுக்கோ பெரும் ஆச்சரியம்..
"பாத்தியாடா கண்ணா.. உனக்கு என்ன வேணும்னு பெத்த அம்மாவுக்கே தெரியல.. புள்ள அழுதாலே பசின்னு நினைச்சா எப்படி.. அவனுக்கும் ஆயிரத்தெட்டு உபாதைகள் இருக்குமுல்ல.. குழந்தை எதுக்காக அழறான்னு பெத்த தாய் சரியா புரிஞ்சுக்க வேண்டாமா.. ம்ம்.. எல்லாரும் விளக்கை அணைச்சுட்டு போய் தூங்குங்க.. நீ வாடா கண்ணா.. நாம பேய் படம் பாக்கலாம்.." குழந்தையை கொஞ்சியபடி அன்பரசியை இடித்து தள்ளிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் குரு.. பேய் படம் என்று சொல்வது அன்பரசி அடுத்து வழங்கப் போகும் அர்ச்சனைகளை.. சொட்டு விடாமல் விழுங்கி தீர்த்தால் பெற்ற தாய்க்கு கோபம் வரத்தானே செய்யும்..!!
சண்டையும் சச்சரவுகளும் ஊடலும் கூடலுமாய் வாழ்க்கை நகர்கின்றது..
விமலா கிளினிக்கில் அமர்ந்திருந்தனர் இருவரும்..
"இங்க பாரு குரு, முதல் குழந்தைக்கே நீ அவளை படுத்தின பாட்டுல.. பேசாம டெலிவரிக்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு பண்ணி விட்டுடலாம்ன்னு நினைச்சேன்.. இப்ப என்னடான்னா குழந்தைக்கு ரெண்டு வயசு கூட ஆகல.. அதுக்குள்ள வயித்துல புள்ளையோட வந்து நிக்கிறா.. அவ என்ன பொம்பளையா இல்ல.. புள்ள பெத்துக்கற மிஷினா..?" மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு மருத்துவர் இறைந்ததை காதில் வாங்காமல் மனைவியின் பக்கம் திரும்பினான் குரு..
"ஏன்டி.. இப்ப குழந்தை வேண்டாம்ன்னு நான்தானே சொன்னேன்.. நீ தான் என்னை மயக்கி என்னென்னவோ சொல்லி வயித்துல ஒன்னு வாங்கிட்டே.. இப்ப பாரு இந்தம்மா என்ன திட்டுது.. இது சரிவராது.. வா வேற டாக்டர பாக்கலாம்.." படபடவென பொரிந்தவனை கண்களால் கெஞ்சி அமைதிப் படுத்த முயன்று கொண்டிருந்தாள் அன்பு..
"ஹலோ.. பையா இங்க பார்த்து பேசு.." விமலாவின் குரலில்.. "உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இவதான்.. இவள.."
"என்னப்பா அடிக்க போறியா..? உன் ரியாக்ஷனை பார்த்தா அடிக்கிற மாதிரி தெரியலையே.. அடேய் அடேய்.. இதையெல்லாம் வீட்ல போய் வச்சுக்கடா.. முதல்ல என்ன பாரு.." மேஜையில் கிடந்த அட்டையை அவன் மீது தூக்கி எரிந்தார் விமலா..
"சொல்லுங்க.." கடுப்போடு மருத்துவரின் பக்கம் திரும்பினான்..
"அப்புறம் இன்னொரு விஷயம்.. கட்டிபிடிக்கிறேன் காலை அமுக்கறேன். ஒத்தடம் கொடுக்கிறேன்னு முரட்டுத்தனமா நடந்துகிட்டு இடுப்பு வலிக்குது.. கை சுளுக்கிடுச்சு.. கால் மரத்துடுச்சுன்னு போனமுறை மாதிரி என்கிட்ட வந்து நிக்க கூடாது.. நான் ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்.."
"ஏன்டி போன முறை எதனால இப்படி ஆச்சுன்னு டாக்டர்கிட்ட சொல்லவே இல்லையா.. அது ஒன்னும் இல்ல டாக்டர் ஜோன்னு மழை பெய்ஞ்சிதா.. டிவில முந்தானை முடிச்சு..!!"
"யோவ்.. சும்மா இருய்யா.. உண்மைய சொன்னா இனி இந்த ஆஸ்பிட்டல் பக்கமே வராதீங்கன்னு துரத்தி விட்டுருவாங்க.." அன்பு கிசுகிசுப்பான குரலில் அவனை அடக்கினாள்..
"அங்கே என்ன பேச்சு..?"
"இந்த டாக்டரம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா பேசுது.. வா வேற டாக்டரை பார்க்கலாம்.." குரு எரிச்சலாக சிடுசிடுத்தான்..
"ஐயோ.. இவங்கதான் கைராசி டாக்டர்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் பாத்துக்கறேன்.." அன்பரசி அவனை சமாதானப்படுத்தினாள்..
"அப்புறம் இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க.." என்று ஒரு விண்ணப்பத்தை குருவின் பக்கம் நீட்டினாள் விமலா..
"என்னது இது..!!"
"ஹான்.. போன வாட்டி உன் பொண்டாட்டி பிரசவ வலியில் அழுது துடிச்சு டாக்டர் வர ஒரு பத்து நிமிஷம் லேட் ஆகிடுச்சுன்னு ஹாஸ்பிடலோட கதவு கண்ணாடி ஜன்னலை உடைச்சு வச்சியே.. அந்த மாதிரி இந்த வாட்டி எந்த அசம்பாவிதமும் நடக்காதுன்னு உறுதி கொடுத்து நீ கையெழுத்து போடற லெட்டர்.." குரு அன்பரசியை முறைத்து வைக்க "கையெழுத்து போடுங்களேன்.." என்று கண்களால் கெஞ்சினாள் அவள்..
"அப்புறம் அன்பரசி மாசம் எட்டு ஆகிடுச்சு.. ரொம்ப கவனமா இருக்கணும்.. போன வாட்டி மாதிரி அவஸ்தைப்படாதே.." குருவை முறைத்துக் கொண்டே விமலா சொன்னதில் அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று புரிந்து விட்டது..
"போகலாம்" என்று அன்பரசி எழுந்து நிற்க.. "அப்புறம் டாக்டர்.. இன்னொரு முக்கியமான டவுட்.." குரு கன்னத்தில் கை வைத்து அமர்ந்தான்..
"சொல்லு..!!"
"நேத்து கொஞ்சம் ஹெவியா கடிச்சு வச்சுட்டேன்.. விஷம் ஏறிடுமோ..!! எதுக்கும் ஒரு டிடி போட்டுடுங்களேன்..!!" அவன் சொன்னதை தொடர்ந்து விமலாவிற்கு மேல் மூச்சு வாங்கியது..
"அன்பு.. இவன் உனக்கு தேவைதானா.?" டாக்டர் கேட்ட அடுத்த நிமிடம் மேஜை டமாரென உடையும் சத்தம்.. கணவனும் மனைவியுமாக இருவரும் வெளியே வர உள்ளே விமலா.. "நாசமா போறவனே.. உன்னை போலீஸ்ல புடிச்சு தரல நான் டாக்டர் விமலா இல்ல.. அன்பரசி அடுத்தவாட்டி இவனை கூட்டிட்டு வந்த உனக்கு ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்.." காச் மூச்சென கத்தும் சத்தம்.. அன்பரசி தன் பெரிய வயிற்றில் கை வைத்து மெதுவாக நடந்தபடி கணவனை கொலை வெறியுடன் முறைத்தாள்..
அவனும் அவளை சட்டை செய்யாமல்.. போனை எடுத்து ஆச்சார்யாவிற்கு அழைத்தான்..
"அப்பா.."
"டாக்டர் கிளினிக்ல டேபிள் ஒன்னு ஒடஞ்சு போச்சு.. புதுசா ஆர்டர் பண்ணி உடனே வரவழைச்சிடுங்க.. ஆமா உடனே" அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..!!
"அட சொன்னதை செய்யுங்கப்பா.. வீட்டுக்கு வந்த பிறகு உங்க கச்சேரியை வச்சுக்கோங்க.." போனை அணைத்து விட்டு.. மனைவியை பார்த்து கண்சமிட்டியவன் அவள் தோள் மீது கை போட்டு நடந்தான்..
"நீங்க திருந்தவே மாட்டீங்க இல்ல..?"
"ஏய் என்னடி.. நான் உனக்கு தேவை இல்லைன்னு அந்த டாக்டரம்மா சொல்லுது.. கேட்டுட்டு அமைதியா இருக்க சொல்றியா.. ஆரம்பத்துல இருந்தே எனக்கும் அந்தம்மாவுக்கும் ஏதோ சரியில்லை.. ரொம்ப முட்டிக்குது.. எனக்கு இந்த டாக்டரை பிடிக்கவே இல்லை.." என்றான் குரு எரிச்சலாக..
"போதும்.. போதும்.. இப்படித்தான் போன முறை இரண்டு பேரும் கார்கில் வார் மாதிரி சண்டை போட்டுட்டு அப்புறம் குழந்தை பிறந்த பிறகு நன்றி சொல்றேன்கிற பேர்ல அவங்கள கட்டிப்பிடிச்சு கையில முத்தம் கொடுத்து விமலா டாக்டரை ஓட ஓட விட்டீங்களே.. மறக்க முடியுமா அந்த காட்சியை..!!" அன்பரசி வேடிக்கையாக சிரிக்க..
"ப்ச்.. கொஞ்சம் நல்லவங்கதான்.. என்ன வாய் தான் காது வரைக்கும் நீளுது.." சொல்லி தலையை கலைத்து விட்டு அழகாக வெட்கப்பட்டான் குரு..
"அப்படி.. அப்படியே இருங்க.. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்.." அவள் சொல்லி முடிப்பதற்குள் முகபாவனை மாறிவிட்டது.. மின்னலென சில நொடிகள் மட்டுமே தோன்றும் அழகான மாற்றம் இது.. மனதினுள் அழகாக சேமித்து வைத்திருக்கிறாள்.. ஆனால் அலைபேசியில்தான் சேமிக்க முடியவில்லை..
நான்கு வயது சாரதியை இடுப்பில் வைத்துக் கொண்டு வடிவு குருவின் அறையை நெருங்கிய நேரத்தில்.. சப்பென ஒரு சத்தம்..
"என்னாச்சு".. வடிவு பதட்டத்தோடு எட்டிப் பார்த்தாள்..
அன்பரசி குருவை அறைந்திருந்தாள்.. கதவிடுக்கின் வழியே காட்சியை கண்ணில் பார்த்த வடிவுக்கு தலை சுற்றியது..
"ஆத்தாடி.. அன்பரசி அடிக்கிறாளா.. அடுத்து என்ன நடக்கப்போகுதோ.. எம்மா இந்த விளையாட்டுக்கு நான் வரல.." வந்த வழியே திரும்பி ஓடியிருந்தாள்.. ஆனால் அவள் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை..
அடியை வாங்கிக்கொண்டு கோபத்தில் ஜிவ்வென சிவந்து நின்றிருந்தான் அவன்..
இரண்டே வயதான மின்மினி சாக்லேட் வாயில் ஒழுக வைத்துக்கொண்டே இருவரையும் வேடிக்கை பார்க்க..
"ஏய்.. சத்தியமா நேத்து எப்படி சரக்கு போட்டேனு எனக்கே தெரியலைடி.. ஏதோ ஜூஸ்ன்னு குடுத்தானுங்க.. கல்யாண வீட்ல வேண்டாம்னு மறுக்க முடியல.. நான்தான் உண்மையை சொல்றேன்ல.. ஓவரா பேசுற.. புருஷனை அடிக்க கைநீட்டறியா நீ.. ராங்கி.. இனிமே நானா வந்து உன்கிட்டே பேசினா என்னை செருப்பால அடி.." குட்டி பாப்பாவை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான் குரு..
பின்பக்க வேப்ப மரத்தடியில் தன் மகள் மின்மினியை தோளில் வைத்துக் கொண்டு.. போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்..
"158 மூட்டையும் 252 மூட்டையும் சேர்த்து மொத்தம்.." என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க..
"410 மூட்டை.."
திரும்பியும் பார்க்காமல் குரலை அடையாளம் கண்டு கொண்டவன்.. ஃபோனை அணைத்துவிட்டு ஆமா இவங்க படிச்சவங்கன்னு காட்டுறாங்க.. எங்களுக்கு தெரியாது பாருஊஊ.." குரல் தேய்ந்து போனது.. கண்கள் சிமிட்ட மறந்து போனது..
குரலை செருமிக் கொண்டு.. தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரத்தை தோளில் வழியவிட்டபடி குட்டி கை ஜாக்கெட்டும் புதுப் புடவையும் புன்னகையுமாய் அங்கே நின்றிருந்தாள் அன்பு..
தான் கிறங்கி உருகுவது அவனுக்கே அதிகப்படியாக தோன்ற குரலை செருமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்..
"இப்ப எதுக்காக இங்க வந்த..?" குரல் சுத்தமாக வீரியம் இல்லாமல் போகவே.. இதுதான் உன்னோட கோபமா.. மனசாட்சி அவனை கேள்வி கேட்டது..
"மட்டன் பிரியாணியும்.. பாதாம் அல்வாவும் செஞ்சு வெச்சிருக்கேன்.. வாங்க.." அதிகமாக சிணுங்கினாள்..
"வரமாட்டேன்.."
"ப்ச்.. என்கிட்ட கோவிச்சுக்கிட்டு எங்கே போவீங்களாம்.. என் செல்லம்ல..!!"
"அப்போ.. அடிச்சதுக்கு மன்னிப்பு கேளு.."
"சாரிதானே.. ராத்திரி ஆகட்டும்.. உங்களை நிக்க வச்சு முட்டிப்போட்டு மன்னிப்பு கேட்கிறேன்.. போதுமா..!!" உருவங்கள் உயர "டபுள் ஓகே" வேகமாக தலையசைத்தான்.. "இப்போ.. வாங்க.." குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் முன்னால் நடக்க.. ஒரு கணம் அந்த பெரிய விழி பார்வையில் தொலைந்தவன் பிறகு தலையை உலுக்கி.. ஓடி சென்று குழந்தையோடு அவளையும் தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டு வீட்டுக்குள் ஓடினான்..
"தாத்தா.. தாத்தா.." ஐந்து வயது சாரதியும் மூன்று வயது மின்மினியும் தாத்தாவின் படுக்கையறைக்குள் ஓடி வந்தனர்..
"சொல்லுங்க.. தங்கம்.. " ஆச்சார்யா எழுந்து அமர்ந்தார்..
"அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை.. தூங்கவே முடியல.. "
"அப்பா ரொம்ப கோவமா இருக்காரு.. அம்மா பதிலுக்கு பதில் பேசிக்கிட்டே இருக்காங்க.." சாரதி கண்களை விரித்து அழகாக சொல்ல ஆச்சார்யா சிரித்தார்..
"சரி என் கூடவே தூங்குங்க உங்களுக்கு நான் கதை சொல்றேன்.." என குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு படுத்தார் அவர் ..
அடுத்த நாள் சாரதி வடிவை அழைத்து வந்து அறையை காண்பித்தான்..
"நான் சொன்னேன்ல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிய சண்ட போலிருக்கு.. பாருங்க.. கட்டில் உடைஞ்சு போச்சு.." ஒரு பக்கம் கால் உடைந்து தூங்கி போன கட்டிலை காண்பித்தான்.. குரு வடிவை ஓரப்பார்வை பார்த்துவிட்டு சுத்தியலால் அடித்து கட்டிலை சரிப்படுத்திக் கொண்டிருந்தான்..
"அப்பனும் புள்ளையும் சேர்ந்து என் மானத்தை வாங்குறானுங்க.." புடவை முந்தானையை இழுத்து சொருகியபடி கணவனை முறைத்தாள் அன்பு..
"நீ வா சின்ன ராசா.. உனக்கு தம்பியோ தங்கச்சியோ வரப்போகுது.."எளிதாக சொல்லிவிட்டு சாரதியை கைப்பற்றி அழைத்துக் கொண்டு சென்றாள் வடிவு..
"நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.." இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக தூக்கிக்கொண்டு அழுதபடி நின்றாள் அன்பரசி..
"மறுபடியும் சண்டையா..?" அலுத்துக் கொண்டு ஆச்சார்யாவும் வடிவும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்..
"போய்தான் பாரேன் காலை வெட்டி போடறேன்.."
"அதானே.. எப்ப பாரு வெட்டுறேன் குத்துறேன்னு.. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம அவனை அடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்.."
"பொம்பள புள்ள மேல கைய வச்சிருக்கான்.. சும்மா விட சொல்றியா.. நமக்கும் ஒரு புள்ள இருக்கு.. ஞாபகம் இருக்கட்டும்.." பதிலுக்கு பதில்..
"அவன் செஞ்சது பெரிய தப்பு தான் ஒத்துக்கிறேன்.. அதுக்காக அந்த அடி அடிக்கிறதா..!! இந்த முரட்டுத்தனம் உன்னை விட்டு எப்ப தான்யா போகும்.."
"ஒத்தடம் கொடுக்குற மாதிரி அடிக்க எனக்கு தெரியாது போடி.."
"நீங்க என்ன செய்றீங்களோ அதைப் பார்த்து தான் உங்க பையனும் கத்துக்குவான்.. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க.."
"நான் ஒன்னும் தப்பு செய்யல.. நியாயமாதான் நடந்துக்கிறேன்.. என் பையனும் நல்லவனாத்தான் வளருவான்.. வளர்ப்பேன்.. நீ தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற.. என்னை புரிஞ்சுக்காதவ இந்த வீட்ல இருக்கவே வேண்டாம்.. என் குழந்தைகளை கொடு.. நீ கெளம்பி உங்க அப்பன் வீட்டுக்கு போடி.." இரு குழந்தைகளையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.. வாசல் வரை போவதற்குள் அவளுக்கு முன்னால் சென்று இவன் நிற்பான்.. அதற்கு தான் இந்த பாடு..
"நீங்க வாங்க செல்லங்களா.. நாம பொருட்காட்சிக்கு போகலாம்.. இதுங்களுக்கு வேற வேலை இல்ல.." குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆச்சார்யா வெளியே சென்று விட்டார்.. அதைக் கூட கவனிக்கவில்லை குரு..
"வீட்டை விட்டு துரத்துறீங்களா..!! வாயும் வயிறுமாய் இருக்கிற பொண்டாட்டியை மனசாட்சி இல்லாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுறீங்களே..!!" அன்பரசி கண்ணை கசக்கினாள்..
"என்னது.. வாயும்.. வயிறு.. ஏய்ய்.. சொல்லவே இல்ல.." கண்களில் மின்னலோடு அவளருகே வந்தான்..
"என்னத்த சொல்ல.. அதான் எப்ப பாரு திட்டறீங்களே.."
"நான் எப்ப டி திட்டினேன்.."
"கழுத்தை பிடிச்சு வீட்டை விட்டு வெளியே தள்ளுறீங்களே.." பரிதாபமாக பார்த்தாள் அன்பு..
"அடிப்பாவி.."
"கொடுமை படுத்தறீங்களே.."
"கடவுளுக்கே அடுக்காதுடி.."
மானம் ரோஷம் சூடு சொரணை அனைத்தும் வாசல் வழியே சென்றுவிட மனைவியின் கைப்பற்றி அமர வைத்து அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான் குரு..
"தள்ளி போய் எத்தனை நாளாச்சு.. செல்லக்குட்டி.."
"50 நாள்.."
"விமலா டாக்டர் கிட்ட போவோமா..!!"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி கர்ப்பமா இருக்கறதா சொன்னேன்.. ஏதோ ஆளில்லாத தீவுக்கு மெடிக்கல் கேம்ப் போய்ட்டாங்களாம்.."
"அச்சோ.. சரி விடு வேற டாக்டர் பாக்கலாம்.."
"என் தங்கத்துக்கு என்ன வேணும்..!!" அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
"ஒன்னும் வேண்டாம்.. போய்யா.. பேசுறதெல்லாம் பேசிட்டு.." என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு அவன் கையை பார்த்தாள்..
"பபில்ஸ்..!!" அவள் கண்கள் மின்னியது..
"எனக்காகவா..!!"
"ஆமா.. வரும்போது உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தேன்.. அதுக்குள்ளே இஷ்டத்துக்கு வார்த்தைகளை விடறே.." செல்லமாக கோபித்து சிணுங்கினான்..
"சாரி தங்கம்.." அவன் கேசத்தை பற்றியிழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்..
"அதன் பிறகென்ன..!!" தோட்டத்தில் ரவுடி பயலும் அன்பரசி குழந்தைகளாக மாறிவிட்டிருந்தனர்..
ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த சோப்பு நுரைகளின் நடுவே அன்பரசியும் குருவும் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு கொண்டிருக்க அவன் மூளையில் டோப்பமைன் மிதமான அளவில் சுரந்து ஏகாந்த நிலையை அனுபவிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தது.. மனைவியை கையில் அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான் குரு.. எப்படிப்பட்ட விளையாட்டும் இங்கு தான் வந்து முடியும்.. ஒன்றும் சொல்வதற்கில்லை..
குருஷேத்ரா.. அன்பரசியின் வரவுக்கு பின் மகானாய் மாறிவிடவில்லை..
அவன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து.. மனிதனாய் மாற்றி இருக்கிறாள்..
இப்போதும் அவனிடம் மூர்க்கத்தனமும் முரட்டுத்தனமும் குறைந்துவிடவில்லை.. ஆனால் அதற்கு இணையான அன்பும் கருணையும்.. நேசமும் பாசமும் நிறைந்து வழிகிறது..
நல்ல தந்தையாய்.. நல்ல கணவனாய் நல்ல மகனாய் நல்ல முதலாளியாய்.. குறை இல்லாமல் பரிமளிக்க காரணம்.. அன்பரசியும் அவள் காதலும் மட்டுமே..
அவன் ஏடாகூட அலட்சிய பேச்சும்.. அவள் பொய் கோபமும்.. அவன் முரட்டுத்தனமும் அவள் மென்மையும்.. அவன் சண்டையும் அவள் சமாதானங்களும்.. என சின்ன சின்னதாய் நிறைய ஊடல்களுக்கு மத்தியில் கூடலும் காதலும் என இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி விடை பெறுவோமாக..
சுபம்..
நன்றிகளுடன்
சனாகீத்..
Last edited: