- Joined
- Jan 10, 2023
- Messages
- 82
- Thread Author
- #1
சூர்ய தேவ் அவளை படுக்கை பாவையாக உபயோகித்துக்கொள்ள நினைக்கவில்லை.. தனக்குள் தோன்றும் உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்ள அவளொருத்தியே சரணாகதி என்று அவளிடம் வடிகால் தேடுகிறான்...
தோன்றும் போதெல்லாம் ஒரு முத்தம்.. ஒரு அணைப்பு.. சின்ன சின்னதாய் தீண்டல் அள்ளி விழுங்கும் பார்வை.. அவளிடமிருந்து இதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான்.. கட்டில் தேடல் இரண்டாம் பட்சம் தான்..
புரிதலுக்கு பின்பு தான் வாழ்க்கை தொடங்க வேண்டும்.. உண்மைதான்.. மனைவியின் மனம் மாறும் வரை காத்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கே எல்லாம் தலைகீழ்..
பெண்களின் அந்தரங்க பாகங்களை பற்றி படித்தறிந்தவன்.. பெண் வர்க்கத்தின் ஆழ்மனதை பற்றி அறிந்ததில்லை.. அதற்கேனும் மெனக்கெட்டு முயன்றதுமில்லை..
அவனுக்கு அவள் வேண்டும்.. அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே தீவிரமாக இருக்கிறான்..
விரிசல் விட்ட வறண்ட நிலத்தில் உண்டான நீரூற்று மீண்டும் வற்றி போய்விடுமோ என்ற பதட்டம்.. கமலியை தன்னோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம்.. அதைத் தாண்டி அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் தோன்றும் பூகம்பம் அதிர்வுகள்.. எல்லாம் சேர்ந்து அவனை பாடாய்ப் படுத்துகிறது..
உள்ளுக்குள் உருவான ஹார்மோன் மாற்றங்கள் வரமா சாபமா என்று இதுவரை அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் கமலியை தன் வாழ்க்கையில் கிடைத்த வரமாகத்தான் எண்ணுகிறான்..
கமலி கணவன் மனைவியாக வாழலாம் என்று சொன்னவுடன்
தாமதிக்காமல் முத்தமிட்டதற்கு காரணம் இதுதான்..!!
அவனால் காத்திருக்கவே முடியவில்லை.. அவள் இதழை தனக்குள் புதைத்துக் கொள்ளும் துடிப்பு.. அடங்கவே இல்லை..
ஆவேசமான முதல் முத்தத்தில் திணறி போனாள் கமலி.. இந்த கன்னங்களை அழுத்தமாக பற்றி இரண்டு உதடுகளையும் தனக்குள் அடக்கியிருந்தான்.. விட்டு விட்டு முத்தமிடாமல்.. அவன் அதரங்களுக்குள் சிறைப்பட்ட உதடுகள் வெளியே வராமல்.. பற்களுக்கு நடுவே சிக்கி சிதைந்து..
கமலி திண்டாடி போனாள்..
ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல் அவனிடமிருந்து விலகினாள்..
"என்ன பண்றீங்க..!! மூச்சடைச்சு செத்தே போய்டுவேன் போலிருக்கு.." வேகமாக மூச்சு வாங்கினாள் கமலி..
அவன் ஆழ்ந்த கண்கள் கமலியை பார்த்துக் கொண்டிருந்தன..
"க..ம..லி.." தாபத்தில் தவித்து மீண்டும் தன் கரத்தை நீட்டினான்..
"ஒ.. ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.."
"க.. கமலி ப்ளீஸ்.. கிட்ட வா.." அவளை இழுத்து மீண்டும் முத்தமிட்டான்..
"கொஞ்சம் ஜென்டிலா.. ஸ்லோவா.. என்னால முடியல..!!" கமலியின் வார்த்தைகளில் அவன் வேகம் தனிந்து நிதானத்தை கடைப்பிடித்தான்..
கீழ் உதட்டை பொறுமையோடு சுவைத்து பிறகு மேல் உதட்டை ரசனையாக ருசித்தான்.. அவனுக்கு எதிர்மாறாக உணர்ச்சிகள் துடைத்து நிச்சலமாய் நின்று கொண்டிருந்தாள் அவள்..
அவள் மனதிலிருப்பதை படிக்க முயலவில்லை அவன்.. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கிறுகிறுத்த மோகம்.. அதற்கு இடம் தரவில்லை..
சம்மதம் சொன்னதால் அவளுக்கும் விருப்பம் உண்டு என்று நினைத்தானோ அல்லது சம்மதித்ததால் தானாக விருப்பம் வந்துவிடும் என்று நினைத்தானோ என்னவோ.. அவன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் பிரதானமாய் நின்றான்..
ஆனால்.. உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தன் உடற்பசியை தீர்த்துக் கொள்ளத்தான் டாக்டர் அலைகிறார். என்றெண்ணிய கமலிக்கு ஏமாற்றம்தான்..
முத்தமிட்டு முத்தமிட்டு அவள் இதழ்களை புண்ணாக்கி இருந்தவன் அடுத்த கட்டத்திற்கு போகாமல்.. அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கிப் போயிருந்தான்..
கமலி தன்னை தொடுவதற்கு அனுமதி தந்த நாளிலிருந்து டாக்டர் சார்.. நிம்மதியாகத்தான் உறங்குகிறார்..
கமலி தான் இவன் என்ன ரகம் என்று யோசித்து யோசித்து.. தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறாள்..
புரிந்து கொள்ளவே முடியாத சிக்கலான தியரம்(Theorem) இந்த டாக்டர்.. கமலிக்கு அவன் நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகிறது..
சூர்ய தேவ் டாக்டர் மண்டைக்குள் ஒரு வைஃபை (wifi) கருவியை பொருத்தி.. கமலியிடம் செல்போனை தந்து விட்டால் அவள் இந்திரலோகத்திற்கு சென்று நின்றாலும் சிக்னல் கிடைக்கும்.. பக்கத்தில் அவளை சுற்றி அரையடி தூரத்திற்குள் எங்கேயாவது நின்று கொண்டிருப்பான் அவன்..
வெங்காயம் வெட்டுவதை கூட பக்கத்தில் நின்று உரசி கொண்டே ஆராய்ச்சி பார்வை பார்க்கையில்.. சில நேரங்களில் கமலிக்கு சிரிப்பு வரும்.. இந்த வாலி படத்தில் ஹீரோவுக்கு அண்ணன் கேரக்டர் ஒன்று உண்டு.. நாயகி எங்கே சென்றாலும் நாய் குட்டி போல் பின்னாடியே சுற்றும்..
ஆனால் அந்த வில்லன் போல் வக்கிர மனது படைத்தவன் இல்லை இந்த சூர்யதேவ்.. இயல்பான ஆசைகளோடு மனைவியை தேடுகிறான்.. என்ன..? சற்று அதிகமாகவே தேடுகிறான்..
ஒருமுறை கூடிக் களித்து தேவையை தீர்த்துக் கொண்டால் ஆசைகள் அத்தோடு முடிந்து போகும்.. ஆனால் அவன் அணுகுமுறைகள் வித்தியாசமாக இருக்கிறதே..!!
தொலைக்காட்சி பார்க்கும்போது பக்கத்தில் அமர்ந்து சேலை விலகிய அவள் இடுப்பை வருடி கொண்டே இருக்க வேண்டும்..
ஊஞ்சலில் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டு.. அந்த கமலை சுண்டி விட்டு ரசிக்க வேண்டும்..
ஒரு முறை அவன் ஏதோ சொன்னதற்காக கமலி உதட்டை சுழித்து விட்டு செல்ல.. அவள் கைப்பற்றி இழுத்து ஒரு கரத்தால் சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டு.. மறு கையால் அவள் இரு கன்னங்களை அழுத்தி பிடித்து.. "இன்னொரு வாட்டி பண்ணு" என்று சொல்ல..
"என்ன..? என்ன பண்ணனும்..?" கன்னங்கள் பிதுங்கிக் குவிந்த உதடுகளுக்கு இடையில் பேச முடியாமல் தவித்தாள் கமலி..
"அடிக்கடி உதட்ட சுழிக்கறியே.. அந்த மாதிரி செய்.." அவன் கருவிழிகளின் மின்னல்கள் வெட்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தன..
"என்னடா இது கொடுமை" என்றானது அவளுக்கு..
"பண்ணுடி.." மீண்டும் கன்னங்களை அழுத்தினான்..
"இப்படி இறுக்கமா பிடிச்சுட்டு இருந்தா எப்படி பண்றது.. கன்னம் வலிக்குது விடுங்க.." என்ற பிறகு கொஞ்சம் பிடியை தளர்த்தினான்.. அப்போதும் விடவில்லை..
"அதெல்லாம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி இயல்பா குடுக்குற ரியாக்ஷன்.. இப்படி மிரட்டி பண்ண சொல்றதெல்லாம் நல்லதுக்கில்ல.." சொல்லிவிட்டு உதட்டை சுழிக்க.. சப்.. என்ற சத்தத்தோடு தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தியிருந்தான் சூர்யதேவ்.. அடிக்கடி இப்படி நடக்கும்..
கமலி கணவன் மனைவியாக வாழலாம் என்று சொன்னது முழுக்க முழுக்க அவனுக்காக மட்டுமே..
கட்டிலில் அவளை சூறையாடி உடல் தேவையை மட்டும் தீர்த்துக் கொண்டிருந்தால்.. திருமணமான கடமைக்காக விதியே என்று கண்களை மூடி பற்களை கடித்து அவனை சகித்துக் கொண்டிருப்பாள்.. ச்சீ.. நீ இவ்வளவு தானா என்று தன் கணவன் மீது.. ஒரு கீழ்த்தரமான எண்ணம் தோன்றியிருக்க வாய்ப்புண்டு..
ஆனால் சூர்யதேவ் செய்வதெல்லாம்.. ஒவ்வொரு நிமிடமும் மனதை வதைக்கும் தொந்தரவு.. சலனப்படுத்தும் முயற்சி..
கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருப்பாள்..
எதிர்பாராத நேரத்திற்கு அவளை தன் பக்கம் எழுத்து.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவான்..
எப்போதும் பெண்ணவளை சுவற்றோடு சாய்த்து அவள் இரு கரங்களையும் மேல் நோக்கி உயர்த்தி தன் ஒரு கரத்திற்குள் அடக்கி.. அவள் இடுப்பை தன் பக்கம் வளைத்து முத்தமிடுவது தான் வழக்கம்..
அவள் உதடுகள் விலகும் போதெல்லாம்.. அவன் இதழ்கள் பின் தொடர்ந்து சென்று துரத்திப் பிடித்து.. இரையை கவ்விக் கொண்டு வாய்க்குள் அசைபோடும்..
"ஏன்.. ஏன் இப்படி..? எப்பவும் என் கை ரெண்டுத்தையும் இப்படி பிடிச்சுகிட்டா எப்படி..?" கமலி அங்கலாய்ப்பாள்..
"நீ என் நெஞ்சில் கை வச்சு தள்ளி விடுற.. எனக்கு அது பிடிக்கல.. அதனாலதான் இப்படி.. வேணும்னா என்னை கட்டிப்பிடிச்சுக்க.. உன் கைய லாக் பண்றதை விட்டுடறேன்.." என்று சொன்னபோது முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக சென்றுவிட்டாள்..
அவன் முத்தமிடும்போது.. எவ்வளவு முயன்றாலும் அவளையும் மீறி.. தன்னிச்சையாக தள்ளிவிடத்தான் தோன்றுகிறது.. அவளால் அவனோடு ஒன்றி போக முடியவில்லை..
கமலிக்கு சூர்ய தேவ் ஒரு மனைவியாக தன்னை எவ்வளவு தேடுகிறான் என்று புரியாமல் இல்லை.. ஆனாலும் இந்த நெருக்கம் இனிக்கவில்லை..
அஷோக் கூட இப்படித்தான் திகட்ட திகட்ட காதலித்தான்.. நீ இல்லாமல் நான் இல்லை.. ஒரு நொடி உன்னை பிரிந்தாலும் என் உயிர் வாழாது.. என அன்று தேனாய் இனித்த காதல் வசனங்கள் இன்று நினைத்துப் பார்க்கையில் வேப்பங்காயாய் கசக்கின்றன.. ஒரு கட்டத்தில் அவனுக்கு இந்த காதல் சலித்து போயிற்று.. கமலி இரண்டாம் பட்சமாகிப் போனாள்..
ஐந்து வருட திருமண வாழ்க்கை பொய்த்துப் போன நிலையில்.. எந்தவித அடித்தளமும் இல்லாத இந்த இரண்டாம் திருமணத்தில் நம்பிக்கையற்று போனது..
அவளுக்கே தெரியாமல் அவள் கவனத்தை சூர்ய தேவ் தன் பக்கம் திருப்பி விடுகிறான் என்பது உண்மைதான்..
சின்ன சின்னதாய் சலன பூக்கள் மலர்ந்த போதிலும்.. அவன்பால் சிற்றோடை போல் ஈர்ப்பு சுரந்த போதிலும்.. எத்தனை நாளைக்கு இதெல்லாம் என்று விரக்தி வந்து தொற்றிக் கொள்கிறது அவளுக்குள்.. எதிலுமே பற்றில்லாத நிலை.. எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை.. ஞானி போல் வாழ நினைக்கிறாள்.. ஆனால் அதுவும் கூட எந்த அளவிற்கு சாத்தியம்..
கமலியின் மனம் புரிந்து.. அவள் வலிகளை அறிந்து.. அவள் நம்பிக்கையை பெற வேண்டும்.. அந்த புள்ளியில் அவள் மனதில் காதல் மலரலாம்..
நேசம் கொண்ட பெண்ணோடு வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டதென சூர்ய தேவ் அப்போது சுகித்து தெரிந்து கொள்வான்..
கமலிக்கு இரவு பணி ஒரு வழியாக முடிந்து.. வழக்கமான பகல் நேர பணிக்கு ஷிப்ட் மாறியிருந்தது..
மருத்துவனும் அவளோடு சேர்ந்து பகல் நேர பணிக்கு தன்னை மாற்றிக் கொண்டான்..
எமர்ஜென்சி தவிர மற்ற நேரங்களில் இரவில் மருத்துவமனைக்கு செல்வதில்லை..
இரவு வேளையில்.. சரசரவென்று கமலியின் கையை தன் பக்கம் பற்றியிழுத்து.. மிக நெருக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு.. கழுத்துக்கு கீழே அவள் மார்பில் தலை வைத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.. அந்த தலையணையை விட இந்த தலையணை தான் மெத்து மெத்தென்று இருக்கிறதாம்.. வாய்விட்டு சொல்லி இருந்தான்..
முதலில் கமலிக்கு கூச்சமாக இருந்தது.. இப்போது பழகி விட்டது.. சவரம் செய்து புதிதாக வளர துடிக்கும் முள்தாடியும்.. அடர்த்தியான மீசையும் நெஞ்சுக் குழியில் குத்துகிறது..
அவ்வளவுதானா..? இவருக்கு வேற எதுவுமே வேண்டாமா..? வாய்விட்டு கேட்கத் தோன்றும் சந்தேகத்தை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்வாள் கமலி..
ஆமா எல்லாம் வேணும் என்று.. சிறுத்தை போல் பாய்ந்து விட்டால் என்ன செய்வது..?
அன்று மருத்துவமனையில் சூர்ய தேவ் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தான்..
அந்த வார்டுக்குள் ஒரே களேபரம்.. குழந்தை பெற்றிருந்த ஒரு பெண் அழுது கொண்டே இருந்தாள்.. அவளை சுற்றி இரண்டு நர்ஸும் ஒரு டாக்டரும் நின்று கொண்டிருந்தனர்..
அவள் மடியிலிருந்த குழந்தை கதறி கொண்டே இருந்தது..
"என்ன ஆச்சு..?" அந்த அறைக்குள் நின்று விசாரித்தான் சூர்யதேவ்..
"குழந்தை பால் குடிக்க மாட்டேங்குது டாக்டர்.." என்றாள் நர்ஸ் மீரா..
"டாக்டர்... தாய்ப்பால் குடிக்கலனா பரவால்ல குழந்தை பசியில் அழுதுகிட்டே இருக்கு.. கொஞ்சமா பசும்பால் கொடுத்து பாக்கட்டுமா..?" குழந்தை பெற்ற அந்த பெண்ணின் தாய் கண்களில் ஈரத்தோடு சூர்ய தேவ் முன் வேண்டி நின்றாள்..
"நோ..நோ.. அப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு செய்யக்கூடாது.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்னன்னு பாப்போம்.."
என்று காவ்யாவை பார்த்தான் சூர்ய தேவ்..
"இல்ல டாக்டர் அந்த பொண்ணுக்கு பால் செக்ரீட்(secrete) ஆகலைன்னு நினைக்கறேன்.. பேபி ஃபீட் பண்ண ட்ரை செஞ்சாலே ரொம்ப அழுகுது.." என்றாள் அவள்..
"ஓகே அப்ப பால் சுரக்க மெடிசன்ஸ் பிரிஸ்கிரைப் பண்ணுங்க.. பீரியாடிரிஷியன் கிட்ட ரிப்போர்ட் வாங்கிட்டு ஃபார்முலா மில்க் சஜஸ்ட் பண்ணுங்க.." என்று காவ்யாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான் அவன்..
ஆனால் இரண்டு நாட்களாக.. அந்தப் பக்கமாக செல்ல நேர்ந்த போது கமலி அந்த வார்டில் என்று ஏதோ துறுதுறுவென செய்து கொண்டிருப்பதை காண நேர்ந்தது..
அந்தப் பெண்ணின் மடியில் குழந்தையை வைத்து.. பாலூட்ட சொல்லி வலியுறுத்திக் கொண்டிருந்தாள் கமலி..
குழந்தை வீறிட்டு அழுதது.. மார்பு காம்பில் வாய் வைக்காமல் திணறியது.. குழந்தையின் கதறலை பார்த்து அந்த தாயும் அழுதாள்..
"நீ.. நீங்க கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இருங்க.. நீங்க இப்படி அழுது டென்ஷனான பால் எப்படி சுரக்கும்..?"
"முதல்ல உங்களுக்கும் குழந்தைக்கு இடையில் ஒரு நெருக்கம் உருவாகனும்.. எப்பவும் குழந்தையை தொட்டில்ல போட்டு வச்சுக்காம.. உங்க நெஞ்சோடு அணைச்சு பிடிச்சுக்கோங்க.. அடிக்கடி உங்க குரல் குழந்தைக்கு கேட்கணும்.. ஏதாவது பேசிட்டே இருங்க.. அம்மாவோட வாசனை குழந்தைக்கு நல்லாவே தெரியும்.. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பால் கொடுக்க ட்ரை பண்ணுங்க.. நிச்சயமா நீங்களும் உங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.." என்று சொன்னதோடு நில்லாமல் மூன்று வேளையும் குழந்தையை அந்த பெண்ணின் கையில் கொடுத்து பால் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினாள்..
"என்ன சிஸ்டர்.. டாக்டரே முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. ஏதோ மாத்திரை எழுதி தரேன்னு சொன்னாங்க.. அதுவும் ரெண்டு நாள் பார்த்துட்டு.. அப்புறமா தான் தருவாங்களாம்.. குழந்தை பவுடர் பால் குடிக்கிறத பாத்துட்டு எனக்கு ரத்தக்கண்ணீர் வருகுது.. நீங்க என்னடான்னா அடிக்கடி குழந்தையை மடியில் தூக்கி வைச்சு பாலூட்ட சொல்றீங்க.. வத்தி போன மார்ல பால் வராம.. பிள்ளைக்கு பசியாத்த முடியாமல் என் பொண்ணு கண்ணீர் வடிக்கறதை பாக்கும்போது.. பெத்த வயிறு கலங்குது.." என்று வயதான தாய் புடவை முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு அழுதாள்..
"நீங்கதான் உங்க பொண்ணுக்கு ஆறுதல் சொல்லணும்.. பெரியவங்க பாசிட்டிவா பேசுங்க.. எல்லாம் சரியாகிடும்.. தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் கிட்டருந்து கிடைக்க வேண்டிய உரிமை மட்டுமில்ல.. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையே கடைசி வரைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கக்கூடிய உன்னத பாலம்.. தாய்ப்பால் பூலோக அமிர்தம்.. முடிந்தவரை முயற்சி செய்வோம்.. நான் சொன்ன மாதிரி செய்யுங்க.." இளம் புன்னகையோடு அங்கிருந்து சென்றிருந்தாள் கமலி..
தன்னவள் வித்தியாசமானவள்.. மருத்துவத்தை தாண்டி.. அறிவியலைக் கடந்து.. உணர்வு பூர்வமாக இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேறு பார்வையில் பார்க்க கூடியவள் என்பதை சூர்ய தேவ் நன்றாகவே அறிவான்..!!
ஆனாலும் அவளின் இந்த முயற்சியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அவனுள்ளும் அளவு கடந்த சுவாரசியமும் ஏக்கமும்..
அவன் ரவுண்ட்ஸ் போகும்போது அந்த பெண் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்..
அவசரமாக அவன் உள்ளே நுழைந்தான் சூர்யதேவ்..
"வாட்ஸ் ஹாப்பனிங்..?" அவன் குரலில் கடுமை கூடியது..
"இல்ல டாக்டர் குழந்தைக்கு ஃபீட் பண்றாங்க.." விஜி சொல்லவும்
கடுமையை தாண்டிய கண்கள் அடுத்த கணம் தணிந்து யோசனையோடு இடுங்கியது..
"கமலி.. கமலி.. ஹூ ஆர் யூ கேர்ள்..?" அவன் மனதில் தென்றல் வீசியது..
"சரி அதுக்கு ஏன் அழறாங்க..!!"
"சந்தோஷத்துல அழறாங்க டாக்டர்.." விஜி மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.. அவளும் உணர்ச்சி வசப் பட்டிருந்தாள்..
சூர்ய தேவ் அந்த தாயையும் சேயையும் திரும்பிப் பார்த்தான்.. அமுதுண்ட குழந்தை.. இதழ்கடையோரம் ஈரத்தோடு லேசாக புன்னகைப்பதாய் தோன்றியது.. தன் செல்வத்தை அணைத்து உச்சி முகர்ந்தாள் அவள்.. கோடி பணம் கொடுத்தாலும் காண கிடைக்காத காட்சி..
இந்த தாய் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. ஒன்றுமறியா சிசுவின் குட்டி கண்களில் இதனால் வரை அவன் காணாத பொலிவு..
உணர்வுபூர்வமாக அவர்கள் மகிழ்ச்சியை தன்னுள் வாங்கிக் கொண்டான் சூர்யதேவ்.. மெய் சிலிர்த்து மயிர் கூச்செறிந்தான்..
"கமலி.. யூ ஆர் எ மேஜிக்கல் உமன்.." நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சூர்யதேவ்..
மாலையில் காரில் அவளுக்காக காத்திருந்தாள்..
உடைமாற்றிக் கொண்டு சுடிதாரில் ஆஸ்பத்திரி வாசலிலிருந்து இறங்கியவள் பார்க்கிங் நோக்கி துள்ளலோடும் புன்னகையோடும் நடந்து வந்தாள்..
வெறும் பார்வையாளனான அவனுக்கே அவ்வளவு சந்தோஷம் என்றால்.. மனரீதியான உணர்வுகளின் மூலம் பெரும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருப்பவள் பூரித்துப் போகாமல் இருப்பாளா என்ன..?
கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான் சூர்யதேவ்..
அவன் குறுகுறு பார்வையில் கமலியின் துள்ளல் அடங்கிப் போனது.. அமைதியாக நடந்து வந்து காரில் ஏறிக் கொண்டாள்..
வந்ததும் வராததுமாக அவளை அணைத்துக் கொண்டான் சூர்ய தேவ்..
"எ.. என்னாச்சு.." கமலி விழித்தாள்..
"ஷட்டப்.." அவள் தோளில் முகம் புதைத்தான்..
சில நிமிடங்களுக்கு பிறகு அவள் நெத்தியிலும் கன்னத்திலும் முத்தமிட்டான்..
யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று கமலிக்கு கூச்சமாக இருந்தது..
ஆனால் அந்த பார்க்கிங்கில் யாரும் இல்லை..
"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது என்னை மட்டும் ஏன் பிடிக்குதுன்னு கேட்டியே..?" என்று அவள் விழிகளுக்குள் ஊடுருவினான்..
கமலி விழித்தாள்..
"இதுதாண்டி காரணம்.. சில விஷயங்கள் உன்னால மட்டும்தான் முடியுது.. என்னை முழுசா மாத்தினதையும் சேர்த்து.."
"யூ ஆர் சம்திங் டிஃப்ரண்ட்.. ரியலி யூ ஆர் எ மேஜிக் கமலி.." என்றவன் அவள் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்..
ஆத்மார்த்தமான காமமில்லா முத்தம்..
மருத்துவ முத்தம்..
மருத்துவனுக்கான முத்தம்..
தொடரும்..
தோன்றும் போதெல்லாம் ஒரு முத்தம்.. ஒரு அணைப்பு.. சின்ன சின்னதாய் தீண்டல் அள்ளி விழுங்கும் பார்வை.. அவளிடமிருந்து இதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான்.. கட்டில் தேடல் இரண்டாம் பட்சம் தான்..
புரிதலுக்கு பின்பு தான் வாழ்க்கை தொடங்க வேண்டும்.. உண்மைதான்.. மனைவியின் மனம் மாறும் வரை காத்திருக்க வேண்டும்.. ஆனால் இங்கே எல்லாம் தலைகீழ்..
பெண்களின் அந்தரங்க பாகங்களை பற்றி படித்தறிந்தவன்.. பெண் வர்க்கத்தின் ஆழ்மனதை பற்றி அறிந்ததில்லை.. அதற்கேனும் மெனக்கெட்டு முயன்றதுமில்லை..
அவனுக்கு அவள் வேண்டும்.. அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே தீவிரமாக இருக்கிறான்..
விரிசல் விட்ட வறண்ட நிலத்தில் உண்டான நீரூற்று மீண்டும் வற்றி போய்விடுமோ என்ற பதட்டம்.. கமலியை தன்னோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயம்.. அதைத் தாண்டி அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் தோன்றும் பூகம்பம் அதிர்வுகள்.. எல்லாம் சேர்ந்து அவனை பாடாய்ப் படுத்துகிறது..
உள்ளுக்குள் உருவான ஹார்மோன் மாற்றங்கள் வரமா சாபமா என்று இதுவரை அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் கமலியை தன் வாழ்க்கையில் கிடைத்த வரமாகத்தான் எண்ணுகிறான்..
கமலி கணவன் மனைவியாக வாழலாம் என்று சொன்னவுடன்
தாமதிக்காமல் முத்தமிட்டதற்கு காரணம் இதுதான்..!!
அவனால் காத்திருக்கவே முடியவில்லை.. அவள் இதழை தனக்குள் புதைத்துக் கொள்ளும் துடிப்பு.. அடங்கவே இல்லை..
ஆவேசமான முதல் முத்தத்தில் திணறி போனாள் கமலி.. இந்த கன்னங்களை அழுத்தமாக பற்றி இரண்டு உதடுகளையும் தனக்குள் அடக்கியிருந்தான்.. விட்டு விட்டு முத்தமிடாமல்.. அவன் அதரங்களுக்குள் சிறைப்பட்ட உதடுகள் வெளியே வராமல்.. பற்களுக்கு நடுவே சிக்கி சிதைந்து..
கமலி திண்டாடி போனாள்..
ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல் அவனிடமிருந்து விலகினாள்..
"என்ன பண்றீங்க..!! மூச்சடைச்சு செத்தே போய்டுவேன் போலிருக்கு.." வேகமாக மூச்சு வாங்கினாள் கமலி..
அவன் ஆழ்ந்த கண்கள் கமலியை பார்த்துக் கொண்டிருந்தன..
"க..ம..லி.." தாபத்தில் தவித்து மீண்டும் தன் கரத்தை நீட்டினான்..
"ஒ.. ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.."
"க.. கமலி ப்ளீஸ்.. கிட்ட வா.." அவளை இழுத்து மீண்டும் முத்தமிட்டான்..
"கொஞ்சம் ஜென்டிலா.. ஸ்லோவா.. என்னால முடியல..!!" கமலியின் வார்த்தைகளில் அவன் வேகம் தனிந்து நிதானத்தை கடைப்பிடித்தான்..
கீழ் உதட்டை பொறுமையோடு சுவைத்து பிறகு மேல் உதட்டை ரசனையாக ருசித்தான்.. அவனுக்கு எதிர்மாறாக உணர்ச்சிகள் துடைத்து நிச்சலமாய் நின்று கொண்டிருந்தாள் அவள்..
அவள் மனதிலிருப்பதை படிக்க முயலவில்லை அவன்.. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கிறுகிறுத்த மோகம்.. அதற்கு இடம் தரவில்லை..
சம்மதம் சொன்னதால் அவளுக்கும் விருப்பம் உண்டு என்று நினைத்தானோ அல்லது சம்மதித்ததால் தானாக விருப்பம் வந்துவிடும் என்று நினைத்தானோ என்னவோ.. அவன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் பிரதானமாய் நின்றான்..
ஆனால்.. உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தன் உடற்பசியை தீர்த்துக் கொள்ளத்தான் டாக்டர் அலைகிறார். என்றெண்ணிய கமலிக்கு ஏமாற்றம்தான்..
முத்தமிட்டு முத்தமிட்டு அவள் இதழ்களை புண்ணாக்கி இருந்தவன் அடுத்த கட்டத்திற்கு போகாமல்.. அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக்கொண்டு நிம்மதியாக உறங்கிப் போயிருந்தான்..
கமலி தன்னை தொடுவதற்கு அனுமதி தந்த நாளிலிருந்து டாக்டர் சார்.. நிம்மதியாகத்தான் உறங்குகிறார்..
கமலி தான் இவன் என்ன ரகம் என்று யோசித்து யோசித்து.. தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறாள்..
புரிந்து கொள்ளவே முடியாத சிக்கலான தியரம்(Theorem) இந்த டாக்டர்.. கமலிக்கு அவன் நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகிறது..
சூர்ய தேவ் டாக்டர் மண்டைக்குள் ஒரு வைஃபை (wifi) கருவியை பொருத்தி.. கமலியிடம் செல்போனை தந்து விட்டால் அவள் இந்திரலோகத்திற்கு சென்று நின்றாலும் சிக்னல் கிடைக்கும்.. பக்கத்தில் அவளை சுற்றி அரையடி தூரத்திற்குள் எங்கேயாவது நின்று கொண்டிருப்பான் அவன்..
வெங்காயம் வெட்டுவதை கூட பக்கத்தில் நின்று உரசி கொண்டே ஆராய்ச்சி பார்வை பார்க்கையில்.. சில நேரங்களில் கமலிக்கு சிரிப்பு வரும்.. இந்த வாலி படத்தில் ஹீரோவுக்கு அண்ணன் கேரக்டர் ஒன்று உண்டு.. நாயகி எங்கே சென்றாலும் நாய் குட்டி போல் பின்னாடியே சுற்றும்..
ஆனால் அந்த வில்லன் போல் வக்கிர மனது படைத்தவன் இல்லை இந்த சூர்யதேவ்.. இயல்பான ஆசைகளோடு மனைவியை தேடுகிறான்.. என்ன..? சற்று அதிகமாகவே தேடுகிறான்..
ஒருமுறை கூடிக் களித்து தேவையை தீர்த்துக் கொண்டால் ஆசைகள் அத்தோடு முடிந்து போகும்.. ஆனால் அவன் அணுகுமுறைகள் வித்தியாசமாக இருக்கிறதே..!!
தொலைக்காட்சி பார்க்கும்போது பக்கத்தில் அமர்ந்து சேலை விலகிய அவள் இடுப்பை வருடி கொண்டே இருக்க வேண்டும்..
ஊஞ்சலில் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டு.. அந்த கமலை சுண்டி விட்டு ரசிக்க வேண்டும்..
ஒரு முறை அவன் ஏதோ சொன்னதற்காக கமலி உதட்டை சுழித்து விட்டு செல்ல.. அவள் கைப்பற்றி இழுத்து ஒரு கரத்தால் சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டு.. மறு கையால் அவள் இரு கன்னங்களை அழுத்தி பிடித்து.. "இன்னொரு வாட்டி பண்ணு" என்று சொல்ல..
"என்ன..? என்ன பண்ணனும்..?" கன்னங்கள் பிதுங்கிக் குவிந்த உதடுகளுக்கு இடையில் பேச முடியாமல் தவித்தாள் கமலி..
"அடிக்கடி உதட்ட சுழிக்கறியே.. அந்த மாதிரி செய்.." அவன் கருவிழிகளின் மின்னல்கள் வெட்டி அவளையே பார்த்துக் கொண்டிருந்தன..
"என்னடா இது கொடுமை" என்றானது அவளுக்கு..
"பண்ணுடி.." மீண்டும் கன்னங்களை அழுத்தினான்..
"இப்படி இறுக்கமா பிடிச்சுட்டு இருந்தா எப்படி பண்றது.. கன்னம் வலிக்குது விடுங்க.." என்ற பிறகு கொஞ்சம் பிடியை தளர்த்தினான்.. அப்போதும் விடவில்லை..
"அதெல்லாம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி இயல்பா குடுக்குற ரியாக்ஷன்.. இப்படி மிரட்டி பண்ண சொல்றதெல்லாம் நல்லதுக்கில்ல.." சொல்லிவிட்டு உதட்டை சுழிக்க.. சப்.. என்ற சத்தத்தோடு தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தியிருந்தான் சூர்யதேவ்.. அடிக்கடி இப்படி நடக்கும்..
கமலி கணவன் மனைவியாக வாழலாம் என்று சொன்னது முழுக்க முழுக்க அவனுக்காக மட்டுமே..
கட்டிலில் அவளை சூறையாடி உடல் தேவையை மட்டும் தீர்த்துக் கொண்டிருந்தால்.. திருமணமான கடமைக்காக விதியே என்று கண்களை மூடி பற்களை கடித்து அவனை சகித்துக் கொண்டிருப்பாள்.. ச்சீ.. நீ இவ்வளவு தானா என்று தன் கணவன் மீது.. ஒரு கீழ்த்தரமான எண்ணம் தோன்றியிருக்க வாய்ப்புண்டு..
ஆனால் சூர்யதேவ் செய்வதெல்லாம்.. ஒவ்வொரு நிமிடமும் மனதை வதைக்கும் தொந்தரவு.. சலனப்படுத்தும் முயற்சி..
கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருப்பாள்..
எதிர்பாராத நேரத்திற்கு அவளை தன் பக்கம் எழுத்து.. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவான்..
எப்போதும் பெண்ணவளை சுவற்றோடு சாய்த்து அவள் இரு கரங்களையும் மேல் நோக்கி உயர்த்தி தன் ஒரு கரத்திற்குள் அடக்கி.. அவள் இடுப்பை தன் பக்கம் வளைத்து முத்தமிடுவது தான் வழக்கம்..
அவள் உதடுகள் விலகும் போதெல்லாம்.. அவன் இதழ்கள் பின் தொடர்ந்து சென்று துரத்திப் பிடித்து.. இரையை கவ்விக் கொண்டு வாய்க்குள் அசைபோடும்..
"ஏன்.. ஏன் இப்படி..? எப்பவும் என் கை ரெண்டுத்தையும் இப்படி பிடிச்சுகிட்டா எப்படி..?" கமலி அங்கலாய்ப்பாள்..
"நீ என் நெஞ்சில் கை வச்சு தள்ளி விடுற.. எனக்கு அது பிடிக்கல.. அதனாலதான் இப்படி.. வேணும்னா என்னை கட்டிப்பிடிச்சுக்க.. உன் கைய லாக் பண்றதை விட்டுடறேன்.." என்று சொன்னபோது முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக சென்றுவிட்டாள்..
அவன் முத்தமிடும்போது.. எவ்வளவு முயன்றாலும் அவளையும் மீறி.. தன்னிச்சையாக தள்ளிவிடத்தான் தோன்றுகிறது.. அவளால் அவனோடு ஒன்றி போக முடியவில்லை..
கமலிக்கு சூர்ய தேவ் ஒரு மனைவியாக தன்னை எவ்வளவு தேடுகிறான் என்று புரியாமல் இல்லை.. ஆனாலும் இந்த நெருக்கம் இனிக்கவில்லை..
அஷோக் கூட இப்படித்தான் திகட்ட திகட்ட காதலித்தான்.. நீ இல்லாமல் நான் இல்லை.. ஒரு நொடி உன்னை பிரிந்தாலும் என் உயிர் வாழாது.. என அன்று தேனாய் இனித்த காதல் வசனங்கள் இன்று நினைத்துப் பார்க்கையில் வேப்பங்காயாய் கசக்கின்றன.. ஒரு கட்டத்தில் அவனுக்கு இந்த காதல் சலித்து போயிற்று.. கமலி இரண்டாம் பட்சமாகிப் போனாள்..
ஐந்து வருட திருமண வாழ்க்கை பொய்த்துப் போன நிலையில்.. எந்தவித அடித்தளமும் இல்லாத இந்த இரண்டாம் திருமணத்தில் நம்பிக்கையற்று போனது..
அவளுக்கே தெரியாமல் அவள் கவனத்தை சூர்ய தேவ் தன் பக்கம் திருப்பி விடுகிறான் என்பது உண்மைதான்..
சின்ன சின்னதாய் சலன பூக்கள் மலர்ந்த போதிலும்.. அவன்பால் சிற்றோடை போல் ஈர்ப்பு சுரந்த போதிலும்.. எத்தனை நாளைக்கு இதெல்லாம் என்று விரக்தி வந்து தொற்றிக் கொள்கிறது அவளுக்குள்.. எதிலுமே பற்றில்லாத நிலை.. எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை.. ஞானி போல் வாழ நினைக்கிறாள்.. ஆனால் அதுவும் கூட எந்த அளவிற்கு சாத்தியம்..
கமலியின் மனம் புரிந்து.. அவள் வலிகளை அறிந்து.. அவள் நம்பிக்கையை பெற வேண்டும்.. அந்த புள்ளியில் அவள் மனதில் காதல் மலரலாம்..
நேசம் கொண்ட பெண்ணோடு வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டதென சூர்ய தேவ் அப்போது சுகித்து தெரிந்து கொள்வான்..
கமலிக்கு இரவு பணி ஒரு வழியாக முடிந்து.. வழக்கமான பகல் நேர பணிக்கு ஷிப்ட் மாறியிருந்தது..
மருத்துவனும் அவளோடு சேர்ந்து பகல் நேர பணிக்கு தன்னை மாற்றிக் கொண்டான்..
எமர்ஜென்சி தவிர மற்ற நேரங்களில் இரவில் மருத்துவமனைக்கு செல்வதில்லை..
இரவு வேளையில்.. சரசரவென்று கமலியின் கையை தன் பக்கம் பற்றியிழுத்து.. மிக நெருக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு.. கழுத்துக்கு கீழே அவள் மார்பில் தலை வைத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.. அந்த தலையணையை விட இந்த தலையணை தான் மெத்து மெத்தென்று இருக்கிறதாம்.. வாய்விட்டு சொல்லி இருந்தான்..
முதலில் கமலிக்கு கூச்சமாக இருந்தது.. இப்போது பழகி விட்டது.. சவரம் செய்து புதிதாக வளர துடிக்கும் முள்தாடியும்.. அடர்த்தியான மீசையும் நெஞ்சுக் குழியில் குத்துகிறது..
அவ்வளவுதானா..? இவருக்கு வேற எதுவுமே வேண்டாமா..? வாய்விட்டு கேட்கத் தோன்றும் சந்தேகத்தை உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்வாள் கமலி..
ஆமா எல்லாம் வேணும் என்று.. சிறுத்தை போல் பாய்ந்து விட்டால் என்ன செய்வது..?
அன்று மருத்துவமனையில் சூர்ய தேவ் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தான்..
அந்த வார்டுக்குள் ஒரே களேபரம்.. குழந்தை பெற்றிருந்த ஒரு பெண் அழுது கொண்டே இருந்தாள்.. அவளை சுற்றி இரண்டு நர்ஸும் ஒரு டாக்டரும் நின்று கொண்டிருந்தனர்..
அவள் மடியிலிருந்த குழந்தை கதறி கொண்டே இருந்தது..
"என்ன ஆச்சு..?" அந்த அறைக்குள் நின்று விசாரித்தான் சூர்யதேவ்..
"குழந்தை பால் குடிக்க மாட்டேங்குது டாக்டர்.." என்றாள் நர்ஸ் மீரா..
"டாக்டர்... தாய்ப்பால் குடிக்கலனா பரவால்ல குழந்தை பசியில் அழுதுகிட்டே இருக்கு.. கொஞ்சமா பசும்பால் கொடுத்து பாக்கட்டுமா..?" குழந்தை பெற்ற அந்த பெண்ணின் தாய் கண்களில் ஈரத்தோடு சூர்ய தேவ் முன் வேண்டி நின்றாள்..
"நோ..நோ.. அப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு செய்யக்கூடாது.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்னன்னு பாப்போம்.."
என்று காவ்யாவை பார்த்தான் சூர்ய தேவ்..
"இல்ல டாக்டர் அந்த பொண்ணுக்கு பால் செக்ரீட்(secrete) ஆகலைன்னு நினைக்கறேன்.. பேபி ஃபீட் பண்ண ட்ரை செஞ்சாலே ரொம்ப அழுகுது.." என்றாள் அவள்..
"ஓகே அப்ப பால் சுரக்க மெடிசன்ஸ் பிரிஸ்கிரைப் பண்ணுங்க.. பீரியாடிரிஷியன் கிட்ட ரிப்போர்ட் வாங்கிட்டு ஃபார்முலா மில்க் சஜஸ்ட் பண்ணுங்க.." என்று காவ்யாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான் அவன்..
ஆனால் இரண்டு நாட்களாக.. அந்தப் பக்கமாக செல்ல நேர்ந்த போது கமலி அந்த வார்டில் என்று ஏதோ துறுதுறுவென செய்து கொண்டிருப்பதை காண நேர்ந்தது..
அந்தப் பெண்ணின் மடியில் குழந்தையை வைத்து.. பாலூட்ட சொல்லி வலியுறுத்திக் கொண்டிருந்தாள் கமலி..
குழந்தை வீறிட்டு அழுதது.. மார்பு காம்பில் வாய் வைக்காமல் திணறியது.. குழந்தையின் கதறலை பார்த்து அந்த தாயும் அழுதாள்..
"நீ.. நீங்க கொஞ்சம் பதட்டப்படாம அமைதியா இருங்க.. நீங்க இப்படி அழுது டென்ஷனான பால் எப்படி சுரக்கும்..?"
"முதல்ல உங்களுக்கும் குழந்தைக்கு இடையில் ஒரு நெருக்கம் உருவாகனும்.. எப்பவும் குழந்தையை தொட்டில்ல போட்டு வச்சுக்காம.. உங்க நெஞ்சோடு அணைச்சு பிடிச்சுக்கோங்க.. அடிக்கடி உங்க குரல் குழந்தைக்கு கேட்கணும்.. ஏதாவது பேசிட்டே இருங்க.. அம்மாவோட வாசனை குழந்தைக்கு நல்லாவே தெரியும்.. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பால் கொடுக்க ட்ரை பண்ணுங்க.. நிச்சயமா நீங்களும் உங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.." என்று சொன்னதோடு நில்லாமல் மூன்று வேளையும் குழந்தையை அந்த பெண்ணின் கையில் கொடுத்து பால் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினாள்..
"என்ன சிஸ்டர்.. டாக்டரே முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. ஏதோ மாத்திரை எழுதி தரேன்னு சொன்னாங்க.. அதுவும் ரெண்டு நாள் பார்த்துட்டு.. அப்புறமா தான் தருவாங்களாம்.. குழந்தை பவுடர் பால் குடிக்கிறத பாத்துட்டு எனக்கு ரத்தக்கண்ணீர் வருகுது.. நீங்க என்னடான்னா அடிக்கடி குழந்தையை மடியில் தூக்கி வைச்சு பாலூட்ட சொல்றீங்க.. வத்தி போன மார்ல பால் வராம.. பிள்ளைக்கு பசியாத்த முடியாமல் என் பொண்ணு கண்ணீர் வடிக்கறதை பாக்கும்போது.. பெத்த வயிறு கலங்குது.." என்று வயதான தாய் புடவை முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு அழுதாள்..
"நீங்கதான் உங்க பொண்ணுக்கு ஆறுதல் சொல்லணும்.. பெரியவங்க பாசிட்டிவா பேசுங்க.. எல்லாம் சரியாகிடும்.. தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் கிட்டருந்து கிடைக்க வேண்டிய உரிமை மட்டுமில்ல.. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையே கடைசி வரைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கக்கூடிய உன்னத பாலம்.. தாய்ப்பால் பூலோக அமிர்தம்.. முடிந்தவரை முயற்சி செய்வோம்.. நான் சொன்ன மாதிரி செய்யுங்க.." இளம் புன்னகையோடு அங்கிருந்து சென்றிருந்தாள் கமலி..
தன்னவள் வித்தியாசமானவள்.. மருத்துவத்தை தாண்டி.. அறிவியலைக் கடந்து.. உணர்வு பூர்வமாக இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேறு பார்வையில் பார்க்க கூடியவள் என்பதை சூர்ய தேவ் நன்றாகவே அறிவான்..!!
ஆனாலும் அவளின் இந்த முயற்சியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அவனுள்ளும் அளவு கடந்த சுவாரசியமும் ஏக்கமும்..
அவன் ரவுண்ட்ஸ் போகும்போது அந்த பெண் சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தாள்..
அவசரமாக அவன் உள்ளே நுழைந்தான் சூர்யதேவ்..
"வாட்ஸ் ஹாப்பனிங்..?" அவன் குரலில் கடுமை கூடியது..
"இல்ல டாக்டர் குழந்தைக்கு ஃபீட் பண்றாங்க.." விஜி சொல்லவும்
கடுமையை தாண்டிய கண்கள் அடுத்த கணம் தணிந்து யோசனையோடு இடுங்கியது..
"கமலி.. கமலி.. ஹூ ஆர் யூ கேர்ள்..?" அவன் மனதில் தென்றல் வீசியது..
"சரி அதுக்கு ஏன் அழறாங்க..!!"
"சந்தோஷத்துல அழறாங்க டாக்டர்.." விஜி மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.. அவளும் உணர்ச்சி வசப் பட்டிருந்தாள்..
சூர்ய தேவ் அந்த தாயையும் சேயையும் திரும்பிப் பார்த்தான்.. அமுதுண்ட குழந்தை.. இதழ்கடையோரம் ஈரத்தோடு லேசாக புன்னகைப்பதாய் தோன்றியது.. தன் செல்வத்தை அணைத்து உச்சி முகர்ந்தாள் அவள்.. கோடி பணம் கொடுத்தாலும் காண கிடைக்காத காட்சி..
இந்த தாய் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. ஒன்றுமறியா சிசுவின் குட்டி கண்களில் இதனால் வரை அவன் காணாத பொலிவு..
உணர்வுபூர்வமாக அவர்கள் மகிழ்ச்சியை தன்னுள் வாங்கிக் கொண்டான் சூர்யதேவ்.. மெய் சிலிர்த்து மயிர் கூச்செறிந்தான்..
"கமலி.. யூ ஆர் எ மேஜிக்கல் உமன்.." நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சூர்யதேவ்..
மாலையில் காரில் அவளுக்காக காத்திருந்தாள்..
உடைமாற்றிக் கொண்டு சுடிதாரில் ஆஸ்பத்திரி வாசலிலிருந்து இறங்கியவள் பார்க்கிங் நோக்கி துள்ளலோடும் புன்னகையோடும் நடந்து வந்தாள்..
வெறும் பார்வையாளனான அவனுக்கே அவ்வளவு சந்தோஷம் என்றால்.. மனரீதியான உணர்வுகளின் மூலம் பெரும் அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருப்பவள் பூரித்துப் போகாமல் இருப்பாளா என்ன..?
கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்தான் சூர்யதேவ்..
அவன் குறுகுறு பார்வையில் கமலியின் துள்ளல் அடங்கிப் போனது.. அமைதியாக நடந்து வந்து காரில் ஏறிக் கொண்டாள்..
வந்ததும் வராததுமாக அவளை அணைத்துக் கொண்டான் சூர்ய தேவ்..
"எ.. என்னாச்சு.." கமலி விழித்தாள்..
"ஷட்டப்.." அவள் தோளில் முகம் புதைத்தான்..
சில நிமிடங்களுக்கு பிறகு அவள் நெத்தியிலும் கன்னத்திலும் முத்தமிட்டான்..
யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று கமலிக்கு கூச்சமாக இருந்தது..
ஆனால் அந்த பார்க்கிங்கில் யாரும் இல்லை..
"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது என்னை மட்டும் ஏன் பிடிக்குதுன்னு கேட்டியே..?" என்று அவள் விழிகளுக்குள் ஊடுருவினான்..
கமலி விழித்தாள்..
"இதுதாண்டி காரணம்.. சில விஷயங்கள் உன்னால மட்டும்தான் முடியுது.. என்னை முழுசா மாத்தினதையும் சேர்த்து.."
"யூ ஆர் சம்திங் டிஃப்ரண்ட்.. ரியலி யூ ஆர் எ மேஜிக் கமலி.." என்றவன் அவள் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்..
ஆத்மார்த்தமான காமமில்லா முத்தம்..
மருத்துவ முத்தம்..
மருத்துவனுக்கான முத்தம்..
தொடரும்..
Last edited: