- Joined
- Jan 10, 2023
- Messages
- 90
- Thread Author
- #1
வருணின் மன போராட்டங்கள் அவனைத் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.. தானும் சராசரி மனிதன் என்பதை அவனே உணர மறுப்பது தான் பிரச்சனைகளுக்கு காரணம்..
ஒரு கதை உண்டு..
குளிரான சீதோஷ்ண நிலையில் வெறும் உடம்போடு வாழ பழகிய ஒரு சாலையோர யாசகனுக்கு எதிரே புதிதாக துவங்கப்பட்டிருந்த ஸ்வெட்டர் கடையில்.. பஞ்சப்பொதியின் மென்மையுடன் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த தடிமனான கம்பளி ஆடைகளை பார்த்தவுடன் அதை அணிய ஆசை வந்ததாம்..
இந்த கம்பளி ஆடை அணிந்து கொண்டால் உடம்பு எத்தனை கதகதப்பாய் இருக்கும் என்ற எண்ணமே அவன் இதுவரை அனுபவித்திராத அந்த ஊசியாக ஊடுருவும் குளிரை உடம்புக்குள் அனுமதி தந்திருந்தது..
குளிர் தாங்க முடியாமல் கம்பளி ஆடைகளை வாங்க முடியாமல் இறுதியில் இறந்தே போனான் அந்த யாசகன்.. இப்படியாக அந்த கதை முடியும்..
வருணி நிலையும் அப்படித்தான்.. தேம்பாவணியை பார்ப்பதற்கு முன் அவனுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை.. வயதுக்கான இயல்பான உணர்ச்சிகள் உண்டு.. ஆனால் அளவுக்கு மீறி பேயாட்டம் போட்டு உணர்ந்ததில்லை..
இப்போது தனக்கானவளின் அருகாமையில் காதலும் காமமும் சேர்ந்து அவனை பேயாய் தின்று கொண்டிருக்கிறது.. பெண்ணவளை தள்ளி வைக்கவும் முடியாமல்.. இயல்பான மனிதனுக்குரிய இயற்கை உணர்ச்சிகளை பிடுங்கி வீசி எறியவும் முடியாமல் உணர்ச்சிப் போராட்டத்தினுள் சிக்கி தவிக்கிறான்..
மிக நெருக்கத்தில் பெண்ணவள் நிமிர்ந்து அவள் உயரத்திற்கு தான் குனியும் போதெல்லாம் அந்த முத்தம் தான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது.. அவன் தலையை தன்னை நோக்கி இழுத்து குனியச் செய்து உதட்டை தொட்டுத் தொட்டு கவ்வியெடுத்த இனிய முத்தம்..
முதல் முத்தம் அவனால் மறக்கவே முடியவில்லை..
கிளினிக்கில் சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டு இரு கைகளால் சின்ன பேனாவை உருட்டிக்கொண்டு தன் போக்கில் சிரிக்க வைக்கும் அழகான முத்தம்..
மாலினி கூட அவன் தன் போக்கில் புன்னகைப்பதை விசித்திரமாய் பார்த்திருக்கிறாள்..
38 வருட காலமாய் தான் கடந்து வந்த எத்தனையோ அழகிகளைத் தாண்டி இந்த ஒற்றை பெண்ணிடம் கிளர்ந்தெழுந்த மோக எழுச்சியை அவன் ஆட்சேபிக்க வில்லை..
ஆனால் ஒரு 19 வயது பெண்ணிடமா தன் ஹார்மோன்கள் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.. இதுதான் அவன் பெரிய கவலை..
இந்த பொசசிவ்னஸ் உரிமை உணர்வு ஒரு அழகான ஊடல்..
இருவரும் சேர்ந்து அந்த ஊடலின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்..
தேம்பாவணி அவனை வெறுப்பேற்ற நினைத்தாள்.. அவனோ பொருள் எங்கே தன்னை விட்டு பறிபோய் விடுமோ என்ற மடை திறந்த வெள்ளமாய் பொங்கியெழுந்த கோபத்திலும் பயத்திலும் அவளை அடித்துவிட்டான்..
அவசரப்பட்டு பெண்களை காயப்படுத்தி விட்டு பிறகு வருந்துவது ஆண்கள் என்னும் முன்கோபிகளின் வழக்கமாகி போய்விட்டது..
தேம்பாவணி பிடிவாதக்காரியாக இருந்தாள்..
சமாதானமாகாமல் கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு அவனை அலைகழித்தாள்.
இரவு உணவின்போது அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் வருண்..
அவனாகவே தட்டை மாற்றி வைக்க.. முறைத்துவிட்டு சுற்றம் கருதி அமைதியாக தட்டிலிருந்த உணவை உண்டாள்..
சிஐடி வேலை பார்த்து சோர்ந்து போன வெண்மதி இருவரின் செல்ல சில்மிஷங்களை கண்டுகொள்ளவில்லை..
வருண் இடுப்பில் கிள்ளி வைக்க அவள் துள்ளி வைக்க கையிலிருந்த சிக்கன் துண்டு வெண்மதி தட்டில் விழுந்த போதுதான் நிமிர்ந்தாள்..
"சிக்கன் பீஸ் வேணும்னா கேட்டு வாங்கி எனக்கு சாப்பிட தெரியாதா..? இதை யார் என் தட்டில் போட்டு விளையாடறது..!" குடும்பத்தாரை சுற்றிப் பார்த்து முறைக்க..
நான் இல்லையே.. நீயா..! என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள அதில் தேம்பாவணியும் ஒருத்தி..
"சாப்பிடுற இடத்துல என்ன விளையாட்டு வேண்டியிருக்கு.. வெக்கங்கெட்ட ஜென்மங்க.." சரியாக தேம்பாவணியை பாயிண்ட் பார்த்து அடித்து கூடுதல் மசாலா சேர்த்தாள் திலோத்தமா..
யாரும் அவள் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம்..
இரவு.. வழக்கத்திற்கு மாறாக கதவை தாழிட்டிருந்தாள் தேம்பாவணி.. வருண் கதவைத் தட்டினான்..
"தேம்ஸ் கதவை திற..!"
"மாட்டேன்.."
"ஒரே ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்.."
"எனக்கு உங்ககிட்ட ஒன்னும் பேச வேண்டாம்.. இங்கிருந்து போங்க.."
"நான் இல்லாம எப்படி தூங்குவ நீ..?"
"நீங்க இல்லாம ஒன்னும் செத்துப் போயிட மாட்டேன்.. நேத்து அதுக்கு முந்தைய நாள் நீங்க இல்லாமத்தானே இருந்தேன்.. அப்படியே இருந்துக்குவேன்.. என்கிட்ட வராதீங்க போங்க.."
"நான் போயிட்டேன்.. இனி வரமாட்டேன்டி.."
"தேவையில்லை.."
அதன்பின் எதிர்பக்கத்திலிருந்து சத்தமில்லை..
ஒருவேளை போயிட்டாரோ..! என்னதான் கோபத்தில் அவனை சீண்டிப் பார்த்தாலும்.. வருண் திரும்பி சென்று விட்டதில் மனம் ஏதோ வெறுமை அடைந்த உணர்வு..
கண்கள் விரிய கதவை திறந்து எட்டிப் பார்த்த நேரத்தில் சடாரென்று அவளை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்தினான் வருண்..
ஆங்.. அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் வாயை பிளந்தவள் ஒரு நொடியில் முகத்தை இயல்பாக்கி கொண்டு "இப்ப எதுக்காக உள்ள வந்தீங்க வெளிய போங்க..?" என்றாள் கோபத்தை பொய்யாக முகத்தில் தக்க வைத்துக்கொண்டு..
"முடியாதுடி.. என்னடி பண்ணுவ..?" கதவில் சாய்ந்து கைகட்டி நின்றபடி உதட்டில் குறுகுறுப்போடு அவளை பார்த்தான்..
"என்ன இவர்.. பார்வையே சரியில்லையே..?" தடுமாற்றத்துடன் எச்சில் விழுங்கிக் கொண்டவள்..
"சரி இங்கேயே நில்லுங்க எனக்கென்ன.. நான் போய் படுக்கறேன்.." தோள் குலுக்களுடன் அங்கிருந்து நகர்ந்தவளை கைப்பற்றி இழுத்து மார்பில் மோதியவளை இறுக அணைத்துக் கொண்டான் வருண்..
மூச்சு விட முடியவில்லை, விலக முடியவில்லை.. இரும்பு கைகளால் அவளை நகரவிடாமல் தன்னோடு ஒட்ட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதை போல் அப்படி ஒரு முரட்டுத்தனமான அணைப்பு..
துடிக்கும் மீனின் துடுப்பாக கை கால்களை உதைத்து அவள் அடம்பிடிக்க சின்ன சிரிப்போடு அவள் கழுத்தில் இதழ்களை புதைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் வருண்..
"விடுங்க டாக்டர் சார்..!" அவள் கத்தினாள்..
"நீதான் பெரிய வீராங்கனையாச்சே.. முடிஞ்சா என்னை தள்ளிவிட்டு நீயா விலகி போ..!"
"எனக்கு வலிக்குது.." அவள் சினுங்கினாள்..
"வலிக்கட்டும்.."
"மூச்சு விட முடியல..!"
"என் மூச்சு காத்தை தரட்டுமா..!" அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்..
"இன்னைக்கு நீங்க நடந்துக்கற விதமே சரியில்ல.. இப்படியே செஞ்சீங்கன்னா நான் கத்தி எல்லாரையும் எழுப்பி விட்ருவேன்.."
"நீ கத்துனா உன்னை எப்படி ஆஃப் பண்றதுன்னு எனக்கு தெரியும்.." என்றபடி அவள் உதடுகளை கண்களால் விழுங்கினான்..
தேம்பா அவன் பார்வையில் தடுமாறி போய் உறைந்து நின்றிருக்க..
அவள் கன்னத்தை வருடிய படி
"சாரிடி ஏதோ ஒரு கோவத்துல அடிச்சிட்டேன்" என்றான் கிறக்கமான குரலில்..
"நீங்க அடிச்சது கூட எனக்கு கோவம் இல்லை.. ஆனா என்னை தப்பா புரிஞ்சுகிட்டு அடிச்சீங்க பாத்தீங்களா.. அதுதான் என்னால தாங்க முடியல.." குரல் அழுகையோடு தழுதழுத்தது..
"தேம்ஸ்.. நான் உனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல.." அவன் ஏதோ சொல்ல வரும் முன்
"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் இங்கருந்து போங்க.." மீண்டும் அவள் முரண்டு பிடிக்க தன் அணைப்பை இறுக்கினான் வருண்..
"அப்புறம் நான் கடிச்சு வச்சுருவேன்.." என்ற போதும் அவன் அசராமல் நிற்கவே..
சட்டை பட்டன்கள் அவிழ்ந்திருந்த அவன் மார்பில் அழுத்தமாக கடித்து வைக்க..
"ஆஆஆஆ.." என்று வலியோடு அடிக்குரலில் அலறினானேயன்றி பிடியை தளர்த்திக் கொள்ளவில்லை..
அவன் கத்தியதில் மிரண்டு விழித்தாள் தேம்பாவணி.. கடித்த இடத்தை விழி தாழ்ந்து பார்க்க.. பற்களின் வடிவத்தோடு கோணல் வட்டமாக சிவந்து போயிருந்தது அந்த இடம்..
"ஐயோ வலிக்குதா..!" அவள் பதறிப்போனாள்..
"வலிக்குதாவா..? வலி உயிர் போகுதுடி எருமை.."
"நான் எருமையா..?"
"இல்ல கன்னு குட்டி.." அவன் கண் சிமிட்டி சிரித்த கணம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
"இப்படியெல்லாம் பேசி என்னை சமாதானம் பண்ண நினைக்க வேண்டாம்.."
"நீதான் ஏற்கனவே சமாதானம் ஆகிட்டியே செல்லக்குட்டி..!" குனிந்து அவள் முகம் பார்த்தபடி கொஞ்சும் குரலில் சிரித்தான்..
"இல்ல.. நான் கோவமாத்தான் இருக்கேன்.."
"அப்படியா..! கோபத்தை நான் குறைக்கட்டுமா..?" ஆழ்ந்த கண்களை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
"பாரு நீ கடிச்ச இடம் எரியுது.. ஹாஸ்பிடல் போய் டிடி போடணும்.. என்ன மிருகம் கடிச்சதுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்.."
தேம்பாவணி அவனை முறைத்தாள்..
"பழிக்கு பழி.. ரத்தத்துக்கு ரத்தம்.. நீ என்னை கடிச்ச அதே இடத்துல நானும் உன்னை கடிக்கட்டுமா..!"
அவனை கடித்து வைத்திருந்த இடத்தை பார்த்தவளுக்கு தொண்டை குழி விக்கியது..
"இல்ல வேண்டாம் எனக்கு தூக்கம் வருது.."
"இல்லை எனக்கு வேணும்.. வேணும்.." சிணுங்கியபடி ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு இன்னொரு கையை கழுத்திலிருந்து படர்ந்த மேனிக்கு அவள் நெஞ்சை நோக்கி இறக்கினான்..
சட்டென தன் பலத்தை திரட்டி அவனை தள்ளிவிட்டு விலகி ஓடிப்போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..
வருண் உதட்டை மடித்துக் கொண்டு சிரிக்க.. போர்வையை போர்த்திக்கொண்டு..
"தேம்பா தூங்கிட்டா.. குட் நைட்.." என்று அவள் இறுக விழிகளை மூடிக்கொள்ள..
"டேப்லெட் போட்டியா பேபி.." என்றபடிக்கு மருந்து குப்பியை திறந்து பார்த்தான்.. அதில் இன்னும் பத்து மாத்திரைகள் மிச்சமிருந்தன..
வருண் பெரிதாக அதை கணக்கிட்டு கொள்ளவில்லை.. தேம்பாவணியின் தற்கொலை திட்டமெல்லாம் அவனுக்கு தெரியாதே..!
மாத்திரைகள் முடிந்து போன பின் அவள் மாற்றத்தை பார்த்துவிட்டு வேறு மருந்துகளை பிரிஸ்கிரைப் செய்வதை பற்றி யோசிக்கலாம் என்று நினைத்திருந்தான்..
வருண் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் இல்லை..
கருவிழிகள் உருளும் மூடிய இமைகளும் துடிக்கும் உதடுகளும் அவனுள் சிரிப்பை வரவழைத்தன..
"நடுராத்திரியில உன்னை தேடி ரிமோட் பேய் வரப்போகுது.." அவன் சொன்னதும்..
"அய்யோஓஓ.." என அவள் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொள்ள.. இடுப்பில் கை வைத்து கலகலவென சிரித்தவன்..
"குட் நைட் தேம்ஸ்" என போர்த்தியிருந்த போர்வைக்கு மேல் அவள் தலையில் அழுத்தமாக முத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்து கதவை சாத்திக் கொண்டான்.
தனது படுக்கையறைக்கு வந்த பின் சட்டையை விலக்கி அடிபட்ட இடத்தில் ஆயின்மென்ட் எடுத்து தடவிக் கொள்ள.. திலோத்தமாக அவன் முன்பு வந்து நின்றாள்.
"என்ன ஆச்சு ஏதாவது அடிபட்டுச்சா..!"
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டையை இழுத்து காயத்தை மறைத்துக் கொண்டான்..
"ஒன்னும் இல்ல.. என்ன விஷயம்.." அவளிடம் பேசும் அதே கடுகடுப்பான த்வனியில்..
"இல்ல ரொம்ப நேரமா உங்களை காணாத மாதிரி இருந்தது..
அதான் கேட்டேன்.. எங்க போனீங்க..?"
சலிப்பாக இழுத்து மூச்சு விட்டான் வருண்..
"என் மேல தேவையில்லாம உரிமை எடுத்துக்க வேண்டாம்னு நான் பலமுறை சொல்லிட்டேன்.."
"இந்த வீட்டை பொருத்தவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. அந்த உறவுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கோங்க.. இப்பல்லாம் நீங்க அந்த சின்ன பொண்ணு கிட்ட ரொம்ப நெருக்கமா பழகற மாதிரி தெரியுது." திலோத்தமாவின் பேச்சில் விழிகள் சுருக்கினான் வருண்..
"இப்போ அதுல உனக்கென்ன பிரச்சனை..?"
"எனக்கு அதுல எந்த பிரச்சினையும் இல்லை.. தேவையில்லாம அந்த பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிடாதீங்க.. பாவம் சின்ன பொண்ணு.."
"என்னை பார்த்தா அப்பாவி பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கற பொறுக்கி மாதிரி தெரியுதா..?" அவன் கண்களில் கோபம் ஜொலித்தது..
"நான் அப்படி சொல்ல வரல.. விவரம் தெரியாத அந்த பொண்ணு உங்க மேல ரொம்ப ஈடுபாடா இருக்கிற மாதிரி தெரியுது. கொஞ்சம் விலகி நில்லுங்கன்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல. பாவம் எதை பார்த்தாலும் பட்டுனு ஆசைப்படற வயசு. ஆனா நம்ம வயசுக்குன்னு ஒரு பக்குவம் இருக்குல்ல.. நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுல இருக்கோம்.. அதனால உங்களை என்னால புரிஞ்சுக்க முடியும்.. ஆனா அந்த பொண்ணு.. மேலோட்டமான கவர்ச்சியை பார்த்து மயங்கி மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்க கூடாதே..! இந்த மாதிரி பொண்ணுங்க தேவையில்லாத பிரச்சினை இழுத்து விட்டு பெயரை கெடுத்து விட்டுட்டு போயிடுவாங்க.. உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்.. பேசாம அவளை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அடுத்த வேலைய பாருங்க.. அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.."
"உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி.. போய் தூங்கறியா.. குட் நைட்..!" வருணின் அலட்சியத்தில் முகம் கருத்து அங்கிருந்து நகர்ந்தாள் திலோத்தமா..
திலோத்தமாவின் வார்த்தைகள் அவன் முகத்தை மீண்டும் இறுக வைத்திருக்க.. நெஞ்சில் மெதுவாய் கை வைத்தான்..
ஸ்ஸ்ஆஆ.. என்ற முனகலோடு அடுத்த கணம் அவள் தந்த காயம் ஒரு இனிய வலியோடு விறுவிறுத்ததில் மெல்லிய சிரிப்பு அவன் இதழ்களில் உதயமானது..
"நாய்க்குட்டி..!" மென்மையாக காயத்தை தடவிக் கொண்டு கீழுதட்டை கடித்து சிரித்தான்..
நெஞ்சம் முழுக்க வியாபித்திருந்த காதல் உணர்வுகள் திலோத்தமாவின் தேவையில்லாத அசட்டு பேச்சை கண் காணாத ஏதோ ஒரு இடத்தில் தூக்கி வீசியெறிந்திருக்க.. கண்களை மூடி இனிப்பான கனவுகளுடன் உறங்கிப் போனான் வருண்..
மறுநாள் காலையில அவள் கோப முகம் தொடரவே வருண் பார்வையால் அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து மன்னிப்பை யாசித்தான்..
அன்று பூஜை அறையில் மென்மதியின் கலர் பிள்ளையார் பொம்மையோடு இன்னொரு நவீன மாடர்ன் கணபதியாரும் தேம்பாவை பார்த்து கண்ணடிக்க.. விழிகள் சுருக்கி வருணை திரும்பி பார்த்தாள் அவள்.
கண் சிமிட்டி முத்தமிடுவதைப் போல் உதட்டை குவித்தவனின் சேஷ்டையில்.. கண்களை விரித்து திணறிப் போனவள் மீண்டும் கைகூப்பி பூஜையில் கவனம் செலுத்தினாள்..
பூஜை முடிந்து வெளியே வரும்போது அவளின் இரு கைகளும் ரகசியங்களோடு நிறைந்திருந்தன..
துள்ளி குதித்து நடந்து போனவளை விழிகளில் பொங்கிய தாப ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..
காரில் போகும்போது கூட அவள் கைப்பிடித்து அழுத்திக்கொண்டான்..
அவள் தன் கரத்தை உருவிக்கொள்ள அவன் மீண்டும் இழுக்க.. பயணம் முழுக்க இதே போராட்டமானது..
கல்லூரிக்கு சற்று முன்னதான தூரத்தில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து பட்டுப்படாமல் உதட்டில் முத்தமிட்டிருந்தான்..
மிகச்சில நொடிகளே உதடுகள் உரசி கொண்ட சின்ன முத்தம்..
தேம்பாவணி இன்பத்திகைப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க..
"காலேஜ் வந்திருச்சி.. மேடம் இறங்கி போங்க" என்றான் சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு..
எச்சில் விழுங்கி தடுமாற்றத்துடன் கதவை திறந்து இறங்கியவள் அவனை திரும்பத் திரும்ப பார்த்தபடி நடந்து சென்றாள்..
அதற்கு மேல் அவன் மீதான கோபம் ஒரு துளி தங்காமல் வெளியேறி சென்றிருக்க இதழில் அதிகமான புன்னகை..
வகுப்புகளில் கூட கலர் கலர் கனவுகளோடு ஹார்டினை பறக்கவிட்டு கன்னத்தில் கை வைத்து அவன் தந்த சின்ன முத்தத்தின் ஏகாந்த இனிமையோடு சந்தோஷமாய் அமர்ந்திருந்தாள்..
"தேம்பாவணி உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க.." கல்லூரி பியூன் வந்து அழைத்தார்..
"யாரு..?"
"உனக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொன்னாங்க.?"
"வரூண்..!" வாய் கொள்ளா சிரிப்புடன் வகுப்பை விட்டு வெளியேறி சொன்ன இடத்தை நோக்கி ஓடியவளுக்கு நெஞ்சம் நிறைந்த அதிர்ச்சி.. கால்கள் நகர மரத்து செயலிழந்ததைப் போல் ஒரு உணர்வு..
அவள் எதிரே நின்றிருந்தவர்கள்
சத்யாவும்.. கேஷவ் மூர்த்தியும்..
தொடரும்..
ஒரு கதை உண்டு..
குளிரான சீதோஷ்ண நிலையில் வெறும் உடம்போடு வாழ பழகிய ஒரு சாலையோர யாசகனுக்கு எதிரே புதிதாக துவங்கப்பட்டிருந்த ஸ்வெட்டர் கடையில்.. பஞ்சப்பொதியின் மென்மையுடன் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த தடிமனான கம்பளி ஆடைகளை பார்த்தவுடன் அதை அணிய ஆசை வந்ததாம்..
இந்த கம்பளி ஆடை அணிந்து கொண்டால் உடம்பு எத்தனை கதகதப்பாய் இருக்கும் என்ற எண்ணமே அவன் இதுவரை அனுபவித்திராத அந்த ஊசியாக ஊடுருவும் குளிரை உடம்புக்குள் அனுமதி தந்திருந்தது..
குளிர் தாங்க முடியாமல் கம்பளி ஆடைகளை வாங்க முடியாமல் இறுதியில் இறந்தே போனான் அந்த யாசகன்.. இப்படியாக அந்த கதை முடியும்..
வருணி நிலையும் அப்படித்தான்.. தேம்பாவணியை பார்ப்பதற்கு முன் அவனுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை.. வயதுக்கான இயல்பான உணர்ச்சிகள் உண்டு.. ஆனால் அளவுக்கு மீறி பேயாட்டம் போட்டு உணர்ந்ததில்லை..
இப்போது தனக்கானவளின் அருகாமையில் காதலும் காமமும் சேர்ந்து அவனை பேயாய் தின்று கொண்டிருக்கிறது.. பெண்ணவளை தள்ளி வைக்கவும் முடியாமல்.. இயல்பான மனிதனுக்குரிய இயற்கை உணர்ச்சிகளை பிடுங்கி வீசி எறியவும் முடியாமல் உணர்ச்சிப் போராட்டத்தினுள் சிக்கி தவிக்கிறான்..
மிக நெருக்கத்தில் பெண்ணவள் நிமிர்ந்து அவள் உயரத்திற்கு தான் குனியும் போதெல்லாம் அந்த முத்தம் தான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது.. அவன் தலையை தன்னை நோக்கி இழுத்து குனியச் செய்து உதட்டை தொட்டுத் தொட்டு கவ்வியெடுத்த இனிய முத்தம்..
முதல் முத்தம் அவனால் மறக்கவே முடியவில்லை..
கிளினிக்கில் சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டு இரு கைகளால் சின்ன பேனாவை உருட்டிக்கொண்டு தன் போக்கில் சிரிக்க வைக்கும் அழகான முத்தம்..
மாலினி கூட அவன் தன் போக்கில் புன்னகைப்பதை விசித்திரமாய் பார்த்திருக்கிறாள்..
38 வருட காலமாய் தான் கடந்து வந்த எத்தனையோ அழகிகளைத் தாண்டி இந்த ஒற்றை பெண்ணிடம் கிளர்ந்தெழுந்த மோக எழுச்சியை அவன் ஆட்சேபிக்க வில்லை..
ஆனால் ஒரு 19 வயது பெண்ணிடமா தன் ஹார்மோன்கள் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.. இதுதான் அவன் பெரிய கவலை..
இந்த பொசசிவ்னஸ் உரிமை உணர்வு ஒரு அழகான ஊடல்..
இருவரும் சேர்ந்து அந்த ஊடலின் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்..
தேம்பாவணி அவனை வெறுப்பேற்ற நினைத்தாள்.. அவனோ பொருள் எங்கே தன்னை விட்டு பறிபோய் விடுமோ என்ற மடை திறந்த வெள்ளமாய் பொங்கியெழுந்த கோபத்திலும் பயத்திலும் அவளை அடித்துவிட்டான்..
அவசரப்பட்டு பெண்களை காயப்படுத்தி விட்டு பிறகு வருந்துவது ஆண்கள் என்னும் முன்கோபிகளின் வழக்கமாகி போய்விட்டது..
தேம்பாவணி பிடிவாதக்காரியாக இருந்தாள்..
சமாதானமாகாமல் கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு அவனை அலைகழித்தாள்.
இரவு உணவின்போது அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் வருண்..
அவனாகவே தட்டை மாற்றி வைக்க.. முறைத்துவிட்டு சுற்றம் கருதி அமைதியாக தட்டிலிருந்த உணவை உண்டாள்..
சிஐடி வேலை பார்த்து சோர்ந்து போன வெண்மதி இருவரின் செல்ல சில்மிஷங்களை கண்டுகொள்ளவில்லை..
வருண் இடுப்பில் கிள்ளி வைக்க அவள் துள்ளி வைக்க கையிலிருந்த சிக்கன் துண்டு வெண்மதி தட்டில் விழுந்த போதுதான் நிமிர்ந்தாள்..
"சிக்கன் பீஸ் வேணும்னா கேட்டு வாங்கி எனக்கு சாப்பிட தெரியாதா..? இதை யார் என் தட்டில் போட்டு விளையாடறது..!" குடும்பத்தாரை சுற்றிப் பார்த்து முறைக்க..
நான் இல்லையே.. நீயா..! என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள அதில் தேம்பாவணியும் ஒருத்தி..
"சாப்பிடுற இடத்துல என்ன விளையாட்டு வேண்டியிருக்கு.. வெக்கங்கெட்ட ஜென்மங்க.." சரியாக தேம்பாவணியை பாயிண்ட் பார்த்து அடித்து கூடுதல் மசாலா சேர்த்தாள் திலோத்தமா..
யாரும் அவள் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம்..
இரவு.. வழக்கத்திற்கு மாறாக கதவை தாழிட்டிருந்தாள் தேம்பாவணி.. வருண் கதவைத் தட்டினான்..
"தேம்ஸ் கதவை திற..!"
"மாட்டேன்.."
"ஒரே ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்.."
"எனக்கு உங்ககிட்ட ஒன்னும் பேச வேண்டாம்.. இங்கிருந்து போங்க.."
"நான் இல்லாம எப்படி தூங்குவ நீ..?"
"நீங்க இல்லாம ஒன்னும் செத்துப் போயிட மாட்டேன்.. நேத்து அதுக்கு முந்தைய நாள் நீங்க இல்லாமத்தானே இருந்தேன்.. அப்படியே இருந்துக்குவேன்.. என்கிட்ட வராதீங்க போங்க.."
"நான் போயிட்டேன்.. இனி வரமாட்டேன்டி.."
"தேவையில்லை.."
அதன்பின் எதிர்பக்கத்திலிருந்து சத்தமில்லை..
ஒருவேளை போயிட்டாரோ..! என்னதான் கோபத்தில் அவனை சீண்டிப் பார்த்தாலும்.. வருண் திரும்பி சென்று விட்டதில் மனம் ஏதோ வெறுமை அடைந்த உணர்வு..
கண்கள் விரிய கதவை திறந்து எட்டிப் பார்த்த நேரத்தில் சடாரென்று அவளை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்தினான் வருண்..
ஆங்.. அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் வாயை பிளந்தவள் ஒரு நொடியில் முகத்தை இயல்பாக்கி கொண்டு "இப்ப எதுக்காக உள்ள வந்தீங்க வெளிய போங்க..?" என்றாள் கோபத்தை பொய்யாக முகத்தில் தக்க வைத்துக்கொண்டு..
"முடியாதுடி.. என்னடி பண்ணுவ..?" கதவில் சாய்ந்து கைகட்டி நின்றபடி உதட்டில் குறுகுறுப்போடு அவளை பார்த்தான்..
"என்ன இவர்.. பார்வையே சரியில்லையே..?" தடுமாற்றத்துடன் எச்சில் விழுங்கிக் கொண்டவள்..
"சரி இங்கேயே நில்லுங்க எனக்கென்ன.. நான் போய் படுக்கறேன்.." தோள் குலுக்களுடன் அங்கிருந்து நகர்ந்தவளை கைப்பற்றி இழுத்து மார்பில் மோதியவளை இறுக அணைத்துக் கொண்டான் வருண்..
மூச்சு விட முடியவில்லை, விலக முடியவில்லை.. இரும்பு கைகளால் அவளை நகரவிடாமல் தன்னோடு ஒட்ட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதை போல் அப்படி ஒரு முரட்டுத்தனமான அணைப்பு..
துடிக்கும் மீனின் துடுப்பாக கை கால்களை உதைத்து அவள் அடம்பிடிக்க சின்ன சிரிப்போடு அவள் கழுத்தில் இதழ்களை புதைத்து ஆழ்ந்து முத்தமிட்டான் வருண்..
"விடுங்க டாக்டர் சார்..!" அவள் கத்தினாள்..
"நீதான் பெரிய வீராங்கனையாச்சே.. முடிஞ்சா என்னை தள்ளிவிட்டு நீயா விலகி போ..!"
"எனக்கு வலிக்குது.." அவள் சினுங்கினாள்..
"வலிக்கட்டும்.."
"மூச்சு விட முடியல..!"
"என் மூச்சு காத்தை தரட்டுமா..!" அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்..
"இன்னைக்கு நீங்க நடந்துக்கற விதமே சரியில்ல.. இப்படியே செஞ்சீங்கன்னா நான் கத்தி எல்லாரையும் எழுப்பி விட்ருவேன்.."
"நீ கத்துனா உன்னை எப்படி ஆஃப் பண்றதுன்னு எனக்கு தெரியும்.." என்றபடி அவள் உதடுகளை கண்களால் விழுங்கினான்..
தேம்பா அவன் பார்வையில் தடுமாறி போய் உறைந்து நின்றிருக்க..
அவள் கன்னத்தை வருடிய படி
"சாரிடி ஏதோ ஒரு கோவத்துல அடிச்சிட்டேன்" என்றான் கிறக்கமான குரலில்..
"நீங்க அடிச்சது கூட எனக்கு கோவம் இல்லை.. ஆனா என்னை தப்பா புரிஞ்சுகிட்டு அடிச்சீங்க பாத்தீங்களா.. அதுதான் என்னால தாங்க முடியல.." குரல் அழுகையோடு தழுதழுத்தது..
"தேம்ஸ்.. நான் உனக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல.." அவன் ஏதோ சொல்ல வரும் முன்
"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் இங்கருந்து போங்க.." மீண்டும் அவள் முரண்டு பிடிக்க தன் அணைப்பை இறுக்கினான் வருண்..
"அப்புறம் நான் கடிச்சு வச்சுருவேன்.." என்ற போதும் அவன் அசராமல் நிற்கவே..
சட்டை பட்டன்கள் அவிழ்ந்திருந்த அவன் மார்பில் அழுத்தமாக கடித்து வைக்க..
"ஆஆஆஆ.." என்று வலியோடு அடிக்குரலில் அலறினானேயன்றி பிடியை தளர்த்திக் கொள்ளவில்லை..
அவன் கத்தியதில் மிரண்டு விழித்தாள் தேம்பாவணி.. கடித்த இடத்தை விழி தாழ்ந்து பார்க்க.. பற்களின் வடிவத்தோடு கோணல் வட்டமாக சிவந்து போயிருந்தது அந்த இடம்..
"ஐயோ வலிக்குதா..!" அவள் பதறிப்போனாள்..
"வலிக்குதாவா..? வலி உயிர் போகுதுடி எருமை.."
"நான் எருமையா..?"
"இல்ல கன்னு குட்டி.." அவன் கண் சிமிட்டி சிரித்த கணம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
"இப்படியெல்லாம் பேசி என்னை சமாதானம் பண்ண நினைக்க வேண்டாம்.."
"நீதான் ஏற்கனவே சமாதானம் ஆகிட்டியே செல்லக்குட்டி..!" குனிந்து அவள் முகம் பார்த்தபடி கொஞ்சும் குரலில் சிரித்தான்..
"இல்ல.. நான் கோவமாத்தான் இருக்கேன்.."
"அப்படியா..! கோபத்தை நான் குறைக்கட்டுமா..?" ஆழ்ந்த கண்களை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
"பாரு நீ கடிச்ச இடம் எரியுது.. ஹாஸ்பிடல் போய் டிடி போடணும்.. என்ன மிருகம் கடிச்சதுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்.."
தேம்பாவணி அவனை முறைத்தாள்..
"பழிக்கு பழி.. ரத்தத்துக்கு ரத்தம்.. நீ என்னை கடிச்ச அதே இடத்துல நானும் உன்னை கடிக்கட்டுமா..!"
அவனை கடித்து வைத்திருந்த இடத்தை பார்த்தவளுக்கு தொண்டை குழி விக்கியது..
"இல்ல வேண்டாம் எனக்கு தூக்கம் வருது.."
"இல்லை எனக்கு வேணும்.. வேணும்.." சிணுங்கியபடி ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு இன்னொரு கையை கழுத்திலிருந்து படர்ந்த மேனிக்கு அவள் நெஞ்சை நோக்கி இறக்கினான்..
சட்டென தன் பலத்தை திரட்டி அவனை தள்ளிவிட்டு விலகி ஓடிப்போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..
வருண் உதட்டை மடித்துக் கொண்டு சிரிக்க.. போர்வையை போர்த்திக்கொண்டு..
"தேம்பா தூங்கிட்டா.. குட் நைட்.." என்று அவள் இறுக விழிகளை மூடிக்கொள்ள..
"டேப்லெட் போட்டியா பேபி.." என்றபடிக்கு மருந்து குப்பியை திறந்து பார்த்தான்.. அதில் இன்னும் பத்து மாத்திரைகள் மிச்சமிருந்தன..
வருண் பெரிதாக அதை கணக்கிட்டு கொள்ளவில்லை.. தேம்பாவணியின் தற்கொலை திட்டமெல்லாம் அவனுக்கு தெரியாதே..!
மாத்திரைகள் முடிந்து போன பின் அவள் மாற்றத்தை பார்த்துவிட்டு வேறு மருந்துகளை பிரிஸ்கிரைப் செய்வதை பற்றி யோசிக்கலாம் என்று நினைத்திருந்தான்..
வருண் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் இல்லை..
கருவிழிகள் உருளும் மூடிய இமைகளும் துடிக்கும் உதடுகளும் அவனுள் சிரிப்பை வரவழைத்தன..
"நடுராத்திரியில உன்னை தேடி ரிமோட் பேய் வரப்போகுது.." அவன் சொன்னதும்..
"அய்யோஓஓ.." என அவள் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொள்ள.. இடுப்பில் கை வைத்து கலகலவென சிரித்தவன்..
"குட் நைட் தேம்ஸ்" என போர்த்தியிருந்த போர்வைக்கு மேல் அவள் தலையில் அழுத்தமாக முத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்து கதவை சாத்திக் கொண்டான்.
தனது படுக்கையறைக்கு வந்த பின் சட்டையை விலக்கி அடிபட்ட இடத்தில் ஆயின்மென்ட் எடுத்து தடவிக் கொள்ள.. திலோத்தமாக அவன் முன்பு வந்து நின்றாள்.
"என்ன ஆச்சு ஏதாவது அடிபட்டுச்சா..!"
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டையை இழுத்து காயத்தை மறைத்துக் கொண்டான்..
"ஒன்னும் இல்ல.. என்ன விஷயம்.." அவளிடம் பேசும் அதே கடுகடுப்பான த்வனியில்..
"இல்ல ரொம்ப நேரமா உங்களை காணாத மாதிரி இருந்தது..
அதான் கேட்டேன்.. எங்க போனீங்க..?"
சலிப்பாக இழுத்து மூச்சு விட்டான் வருண்..
"என் மேல தேவையில்லாம உரிமை எடுத்துக்க வேண்டாம்னு நான் பலமுறை சொல்லிட்டேன்.."
"இந்த வீட்டை பொருத்தவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி.. அந்த உறவுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கோங்க.. இப்பல்லாம் நீங்க அந்த சின்ன பொண்ணு கிட்ட ரொம்ப நெருக்கமா பழகற மாதிரி தெரியுது." திலோத்தமாவின் பேச்சில் விழிகள் சுருக்கினான் வருண்..
"இப்போ அதுல உனக்கென்ன பிரச்சனை..?"
"எனக்கு அதுல எந்த பிரச்சினையும் இல்லை.. தேவையில்லாம அந்த பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிடாதீங்க.. பாவம் சின்ன பொண்ணு.."
"என்னை பார்த்தா அப்பாவி பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கற பொறுக்கி மாதிரி தெரியுதா..?" அவன் கண்களில் கோபம் ஜொலித்தது..
"நான் அப்படி சொல்ல வரல.. விவரம் தெரியாத அந்த பொண்ணு உங்க மேல ரொம்ப ஈடுபாடா இருக்கிற மாதிரி தெரியுது. கொஞ்சம் விலகி நில்லுங்கன்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல. பாவம் எதை பார்த்தாலும் பட்டுனு ஆசைப்படற வயசு. ஆனா நம்ம வயசுக்குன்னு ஒரு பக்குவம் இருக்குல்ல.. நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுல இருக்கோம்.. அதனால உங்களை என்னால புரிஞ்சுக்க முடியும்.. ஆனா அந்த பொண்ணு.. மேலோட்டமான கவர்ச்சியை பார்த்து மயங்கி மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்க கூடாதே..! இந்த மாதிரி பொண்ணுங்க தேவையில்லாத பிரச்சினை இழுத்து விட்டு பெயரை கெடுத்து விட்டுட்டு போயிடுவாங்க.. உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்.. பேசாம அவளை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அடுத்த வேலைய பாருங்க.. அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.."
"உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி.. போய் தூங்கறியா.. குட் நைட்..!" வருணின் அலட்சியத்தில் முகம் கருத்து அங்கிருந்து நகர்ந்தாள் திலோத்தமா..
திலோத்தமாவின் வார்த்தைகள் அவன் முகத்தை மீண்டும் இறுக வைத்திருக்க.. நெஞ்சில் மெதுவாய் கை வைத்தான்..
ஸ்ஸ்ஆஆ.. என்ற முனகலோடு அடுத்த கணம் அவள் தந்த காயம் ஒரு இனிய வலியோடு விறுவிறுத்ததில் மெல்லிய சிரிப்பு அவன் இதழ்களில் உதயமானது..
"நாய்க்குட்டி..!" மென்மையாக காயத்தை தடவிக் கொண்டு கீழுதட்டை கடித்து சிரித்தான்..
நெஞ்சம் முழுக்க வியாபித்திருந்த காதல் உணர்வுகள் திலோத்தமாவின் தேவையில்லாத அசட்டு பேச்சை கண் காணாத ஏதோ ஒரு இடத்தில் தூக்கி வீசியெறிந்திருக்க.. கண்களை மூடி இனிப்பான கனவுகளுடன் உறங்கிப் போனான் வருண்..
மறுநாள் காலையில அவள் கோப முகம் தொடரவே வருண் பார்வையால் அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து மன்னிப்பை யாசித்தான்..
அன்று பூஜை அறையில் மென்மதியின் கலர் பிள்ளையார் பொம்மையோடு இன்னொரு நவீன மாடர்ன் கணபதியாரும் தேம்பாவை பார்த்து கண்ணடிக்க.. விழிகள் சுருக்கி வருணை திரும்பி பார்த்தாள் அவள்.
கண் சிமிட்டி முத்தமிடுவதைப் போல் உதட்டை குவித்தவனின் சேஷ்டையில்.. கண்களை விரித்து திணறிப் போனவள் மீண்டும் கைகூப்பி பூஜையில் கவனம் செலுத்தினாள்..
பூஜை முடிந்து வெளியே வரும்போது அவளின் இரு கைகளும் ரகசியங்களோடு நிறைந்திருந்தன..
துள்ளி குதித்து நடந்து போனவளை விழிகளில் பொங்கிய தாப ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..
காரில் போகும்போது கூட அவள் கைப்பிடித்து அழுத்திக்கொண்டான்..
அவள் தன் கரத்தை உருவிக்கொள்ள அவன் மீண்டும் இழுக்க.. பயணம் முழுக்க இதே போராட்டமானது..
கல்லூரிக்கு சற்று முன்னதான தூரத்தில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து பட்டுப்படாமல் உதட்டில் முத்தமிட்டிருந்தான்..
மிகச்சில நொடிகளே உதடுகள் உரசி கொண்ட சின்ன முத்தம்..
தேம்பாவணி இன்பத்திகைப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க..
"காலேஜ் வந்திருச்சி.. மேடம் இறங்கி போங்க" என்றான் சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக்கொண்டு..
எச்சில் விழுங்கி தடுமாற்றத்துடன் கதவை திறந்து இறங்கியவள் அவனை திரும்பத் திரும்ப பார்த்தபடி நடந்து சென்றாள்..
அதற்கு மேல் அவன் மீதான கோபம் ஒரு துளி தங்காமல் வெளியேறி சென்றிருக்க இதழில் அதிகமான புன்னகை..
வகுப்புகளில் கூட கலர் கலர் கனவுகளோடு ஹார்டினை பறக்கவிட்டு கன்னத்தில் கை வைத்து அவன் தந்த சின்ன முத்தத்தின் ஏகாந்த இனிமையோடு சந்தோஷமாய் அமர்ந்திருந்தாள்..
"தேம்பாவணி உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க.." கல்லூரி பியூன் வந்து அழைத்தார்..
"யாரு..?"
"உனக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொன்னாங்க.?"
"வரூண்..!" வாய் கொள்ளா சிரிப்புடன் வகுப்பை விட்டு வெளியேறி சொன்ன இடத்தை நோக்கி ஓடியவளுக்கு நெஞ்சம் நிறைந்த அதிர்ச்சி.. கால்கள் நகர மரத்து செயலிழந்ததைப் போல் ஒரு உணர்வு..
அவள் எதிரே நின்றிருந்தவர்கள்
சத்யாவும்.. கேஷவ் மூர்த்தியும்..
தொடரும்..
Last edited: