- Joined
- Jan 10, 2023
- Messages
- 85
- Thread Author
- #1
குளியலறை கதவை அவசரமாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் கதவை வேகமாக சாத்தினாள்.. அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு கிளம்பியது.. மனம் எரிமலையாய் குமுறியது.. வாய் பொத்தி சத்தம் வராமல் கதற ஆரம்பித்தாள்..
என்ன வார்த்தைகள் பேசி விட்டான் நடராஜன்.. இத்தனை நாட்களாய் சத்தம் காட்டாமல் மிரட்டி விட்டு சென்றவனுக்கு இன்று எங்கிருந்து வந்தது அவ்வளவு தைரியம்.. பகிரங்கமாக அத்தனை பேர் முன்னிலையில் உன்னை அடையாமல் விடமாட்டேன் என்று எச்சரித்து விட்டு செல்கிறானே..!!
நடராஜ் என்ற மிருகத்திடமிருந்து வேறு என்ன மாதிரியான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்.. அவன் வார்த்தைகளில் கோபம் உண்டு..
ஆனால் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களில் பலர் பேசிய பேச்சில் மனதில் தீராத ரணம்.. மனசாட்சி இல்லாமல்.. நாக்கில் நரம்பில்லாமல் ஒரு பெண்ணை எப்படி இழித்துப் பேச முடிகிறது இவர்களால்.. என்னைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு..? சக மனுஷியாய் உடன் வேலை செய்யும் பெண்ணின் மீது கொஞ்சம் கூடவா இரக்கமில்லாமல் போய்விடும்.. அத்தனை வன்மம் ஏன்..!!
என் மனதை புண்படுத்திவிட்டு இவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது..!! ஒருவரை காயப்படுத்தி இன்பம் காணுவதுதான் வாழ்க்கையா..? நெஞ்சம் நெருப்பாக கொதிக்கிறது.. ஒரு பெண் தனித்திருந்தால் அவள் நடத்தையை எளிதாக பாழ்படுத்தும் சமூகத்தின் மீது வெறுப்புணர்ச்சி பரவியது.. யாரோ செய்த தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது.. ஆறுதல் சொல்லவும் ஆளில்லாமல் அடி வயிற்றிலிருந்து கதறினாள்..
வெளியிலிருந்து யாரோ கதவை தட்டும் சத்தம்.. சட்டென வாயை பொத்திக் கொண்டாள்.. விம்மலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.. பெண்கள் குடியிருக்கும் ஹாஸ்டல் அல்லவா..!! வீடு போல் இஷ்டத்திற்கு குளியலறையை கழிப்பறையை உபயோகிக்க முடியாது.. மனம் விட்டு அழ கூட முடியாத துரதிஷ்டசாலி..
அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. குழாயை திறந்து தண்ணீரை முகத்திலடித்து கழுவினாள்.. மீண்டும் கதவை தட்டும் ஓசை..
"ஹான்.. இதோ வந்துட்டேன்.." இப்படி குரல் கொடுத்தால் வெளியே நிற்கும் நபர்கள் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காக்க வாய்ப்புண்டு.. சில சமயங்களில் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது..? என்ற எரிச்சலும் வெளிப்படும்..
முகத்தை சுடிதார் துப்பட்டாவால் அழுத்தமாக துடைத்துக் கொண்டு கண்ணீரில் சிவந்த கண்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவள்.. நீண்ட பெருமூச்சோடு கதவை திறந்து கொண்டு.. மற்றவர்கள் தன் முகத்தைப் பார்ப்பதற்கு முன் அவசரமாக வெளியேறினாள்..
நல்ல வேலையாக ராகவி பக்கத்து கட்டிலில் உறங்கிக் விட்டிருந்தாள்.. விளக்குகள் அணைக்கப்பட்டு மஞ்சள் நிற குமிழ் விளக்கு மட்டும் அந்த அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்தது.. சில பெண்கள் உறக்கம் வராமல் கிசுகிசுப்பான குரலில் அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்..
அமைதியாக படுத்துக் கொண்டாள் பத்மினி..
அலுவலகத்தில் நேர்ந்த அவமானத்தில் உடனடியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்திருக்கவில்லை.. மன சாந்திக்காக கோயிலுக்கு சென்றவள்.. இதெல்லாம் உனக்கே நியாயமாக படுகிறதா.. ஏன் இப்படி ஒரு அவல நிலையில் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாய்.. அவரவர் துன்பங்களுக்கு அவரவரே காரணம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு.. என் துன்பத்திற்கு எந்த விதத்தில் நான் காரணமாகி போனேன்.. இந்தக் கேவலமான உலகத்தில் பெண் ஜென்மமாய் ஏன் என்னை படைத்தாய் இறைவா..!! என்று கடவுளிடம் கதறி தீர்த்து விட்டுதான் ஹாஸ்டலுக்கு வந்தாள்..
"உனக்காக சாப்பாடு வாங்கி வைத்திருக்கிறேன். மறக்காமல் வந்து உண்டு விடு.." என்ற ராகவியின் வார்த்தைகளை எந்த அளவுக்கு மூளை கிரகித்துக் கொண்டது என்று தெரியவில்லை..
எப்படி உனக்கு திருமணம் நடக்கிறது என்று பார்க்கலாம் என்றானே.. இப்படியெல்லாம் என் பெயரை அசிங்கப்படுத்தி கட்டுக் கதைகளை காற்றோடு சேர்த்து பரப்பி விட்டால் எனக்கு திருமணமே நடக்காது என்ற எண்ணம்..
ஏளனமாக எக்காளமிட்டு சிரித்துக் கொண்டிருக்கும் இவன் மமதையை காலில் போட்டு மிதிக்கவாவது நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாமா..!!
இவனைப் பார்த்து பயந்து ஓடவில்லை.. ஆனால் நிமிர்ந்து நிற்கிறேன்.. திருமணம் என்பது ஒரு தீர்வு அல்லதான்.. ஆனால் இவனுக்கு கொடுக்கும் பதிலடி.. திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன்.. அதைக் கண்ணார பார்த்து விட்டு உன் குடும்பமே வயிற்றெரிச்சல் பட்டு சாகட்டும்.. ஆக்ரோஷம் பொங்க அவள் உள்ளம் சிரித்தது.. இப்போதைக்கு அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே சாய்ஸ் உதய் கிருஷ்ணன்..
அவன் குணம் சர்வ சுத்தமாய் பிடிக்கவில்லை.. ஆனால் எந்த வகையிலும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்ற அவனது பேச்சு தற்போதைக்கு அவனுக்கு சம்மதம் சொல்ல போதுமான ஒரே காரணமாய் அமைந்து போனது..
அலைபேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள்.. அவனை அழைத்து பேசினாள்..
ஆபீஸ் வளாகத்தில் நடந்த சர்ச்சை நிச்சயமாக அவன் காதுகளுக்கு போக வாய்ப்பு உண்டு.. தானே தெளிவுபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவனிடம் அது பற்றி பேச ஆரம்பித்தாள்..
ஆனால் இடைமறித்து அவன் சொன்ன பதில் ஈட்டியாய் அவள் நெஞ்சை கீறியது.. வாழும் ஆசை வற்றி சோர்ந்து போனாள் பத்மினி.. ஏற்கனவே நடராஜ் செய்த இழிவான காரியத்தால் மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தவள்.. உதய் கிருஷ்ணன் சொன்ன கடைசி வார்த்தைகளில்.. இப்படி ஒரு திருமணம் தேவைதானா? என்று மீண்டும் மனக்குழப்பத்தில் ஆழ்ந்து விட்டாள்..
ஒரு நரகத்திலிருந்து தப்பிக்க இன்னொரு நரகமோ..!! மண்டையே வெடிப்பது போல் தலைவலி.. வெறும் வயிற்றில் ஒரு மாத்திரையை விழுங்கிக் கொண்டு கட்டிலில் விழுந்து விழி மூடினாள்..
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருக்க மீண்டும் எங்கே பெரிதாக வெடித்து அழுது விடுவோமோ என்ற பயத்தில்.. கசப்பான நினைவுகளை ஓரம் தள்ளி.. போனில் ரீல்ஸ் ஷார்ட்ஸ் என்று ஏதேதோ பார்த்து தன் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்..
"சத்தத்தை கம்மியா வைங்க பத்மினி.." எதிர்க்கட்டிலில் பரமேஸ்வரியின் எரிச்சலான குரல்.. பாவம் அவள்.. அதிகாலை நான்கு மணிக்கு ஷிப்ட் போக வேண்டும்.. இப்போது உறங்கினால்தான் உண்டு.. அவள் பிரச்சனை அவளுக்கு.. இயர் போனை தேடி எடுத்து காதில் மாட்டிக் கொண்டாள்.. ஏதோ ஒரு பாடலை யூடியூபில் தட்டி விட்டு விழிகளை மூடிக்கொண்டாள்..
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சாிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்..
ஸ்வர்ணலதா.. குரலில் உருகிக் கொண்டிருந்தார்.. பாடல் அவளுக்காகவே எழுதப்பட்டதை போல்.. இன்னிசை எனும் தெய்வம் கனக்கும் பாரத்தை லேசாக்கி துயரத்தை சற்று மறக்கத்தான் வைக்கிறது..
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீா்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே!!
மூடியிருந்த விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர் பக்கவாட்டில் வழிந்து தலையணையை நனைத்தது..
அடுத்த நாள் தன் விதியை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் பத்மினி.. எந்த சூழ்நிலையிலும் அவமானத்திற்கு பயந்து தன்னை கூட்டுக்குள் ஒடுக்கிக் கொண்டதில்லை அவள்.. அந்த நிமிர்வுதான் அவள் பலமும்.. இந்த பலம்தான் மற்றவர்களை ஆத்திரப்பட வைக்கிறது..
"இவ்வளவு விஷயம் நடந்த பிறகும் எப்படித்தான் வெட்கமில்லாமல் வெளியே வராளோ..!!" பத்தினி தேவிகளின் அறுவறுப்பையும் ஏக பத்தினி விரதன்களின் ஏளனங்களையும் உதாசீனப்படுத்தி கண்டு கொள்ளாமல் கடந்து வந்தவள் தனது கணினியை உயிர்ப்பித்து வேலையை துவங்கியிருந்தாள்.. என்னதான் அவள் மீது பழி சுமத்த இப்படி ஒரு கூட்டம் அலைந்தாலும்.. அவள் நடத்தையில் சந்தேகம் கொள்ளாத நல்ல உள்ளங்களும் அங்கே உண்டு.. அப்படிபட்டவர்கள் அவள் காயத்தை குத்தி கிளறாமல் ஒரு மென்மையான புன்னகையுடன் குட் மார்னிங் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர்..
உதய் கிருஷ்ணா அனைவரின் வணக்கங்களையும் ஏற்று உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து முதல் வேலையாக பத்மினியைத்தான் அழைத்தான்..
"பத்மினி.. பர்சனல் விஷயங்களை ஆபீஸில் பேச வேண்டாம்.. ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சதும் சரவணபவன்ல வெயிட் பண்ணுங்க.. மேற்கொண்டு மத்த விஷயங்களை பேசி முடிச்சிடலாம்..!!"
"ம்ம்..சார்.."
"ஞாபகம் இருக்கட்டும்.. இது என் அம்மாவின் விருப்பத்துக்காக நடக்கிற கல்யாணம்.. மத்தபடி இதுல எனக்கு எந்த விருப்பமும் இல்லை.. சொல்லப்போனால் நான் கல்யாணம் ஆனவன்னு சொல்லிக்கிறதுல கூட எனக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை.."
"புரியுது சார்..!! நானும் எதையும் எதிர்பார்க்கல.. எனக்கும் கல்யாணம் அப்படிங்கற அடையாளம் தேவைப்படுது.. அவ்வளவுதான்" என்றாள் சோர்வான குரலில்.. அழைப்பை துண்டித்து விட்டான்..
மாலையில் அவள் புறப்பட்ட அதே நேரத்திற்குதான் உதய் கிருஷ்ணாவும் அலுவலகத்திலிருந்து கிளம்பினான்.. அவள் ஒரு பக்கம் ஆட்டோவில் வந்தாள்.. அவன் காரில் வந்தான்.. போகும் வழி ஒன்றுதான்.. அவளை ஏற்றிக்கொண்டு ஹோட்டலுக்கு செல்லலாம் என்ற எண்ணம் கூட இல்லை..!!
பத்மினி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூட.. இன்றைக்கு வியாழக்கிழமை என்று ரீதியில்தான் தாயிடம் தெரிவித்தான்.. தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரவசப்பட்டதென்னவோ ரமணி அம்மாதான்.. போதும் ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்.. என்று அவர் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டை போட்டு அடக்கியிருந்தான் உதய்..
சரவணபவனில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர்..
ஹாய் ஹலோ எதுவுமின்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..
"கல்யாணம் சிம்பிளா நடந்தா போதும்.. உங்க வீட்டு ஆளுங்களை கூப்பிடறதுன்னு கூப்பிடலாம்.. உன் இஷ்டம்.. என் பக்கமிருந்து அம்மா மட்டும்தான் வருவாங்க..!!"
"கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. அப்பதான் ஃபியூச்சர்ல பிரச்சனை வந்தா டிவோர்ஸ் வாங்க ஈஸியா இருக்கும்.. " அவன் கத்தி போன்ற கூர்மையான வார்த்தைகளில் திகைத்து நிமிர்ந்தாள் பத்மினி..
"என்ன பார்வை..!! நாம என்ன ரெண்டு பேரும் மனமொத்து விரும்பியா கல்யாணம் செஞ்சிக்கறோம்.." எரிச்சலான வார்த்தைகள் அவனிடமிருந்து.. இப்படி தன் முன்னே அமர்ந்து பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டாள்..
"அப்புறம் நான் ஏற்கனவே சொன்னதுதான்.. கல்யாணம் ஆகிட்டதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு உன் செலவுகளுக்கு என்னை எதிர்பார்க்கக் கூடாது.. உன் தேவைகளை நீதான் பாத்துக்கணும்.. முக்கியமான விஷயம்.. நீ இன்னும் வேலையை ரிசைன் பண்ணல.. என்னோட கம்பெனியில் வேலை செய்யறதும் ராஜினாமா பண்றதும் உன் இஷ்டம்.. ஆனா வேலையை விட்டு நிக்கிறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே பிரையர் நோட்டீஸ் கொடுக்கணும்.. பெண்டிங் ஒர்க் முடிச்சு கொடுத்துட்டு போகணும்.."
"முக்கியமான விஷயம்.. கல்யாணத்துக்கு பிறகு நீதான் என்னோட மனைவின்னு ஆபீஸ் முழுக்க தம்பட்டம் அடிச்சு அதன் மூலமா கிடைக்கப் போற சலுகைகளை அனுபவிக்கலாம்ன்னு நினைக்காதே..!! என் அம்மாவுக்காக மட்டும்தான் இந்த கல்யாணம்.. அதைத் தவிர்த்து வெளியே உன்னை என்னோட மனைவின்னு சொல்லிக்க நான் விரும்பல.. அதுவும் ஆபீஸ் என்னோட ராஜ்ஜியம்.. அங்கே உறவை சொல்லிக்கிட்டு உரிமை எடுத்து ஆட்டம் போடுவது எனக்கு பிடிக்காது.."
"இவ்வளவுதான் என்னோட கண்டிஷன்ஸ்..!! உனக்கு ஏதாவது நிபந்தனைகள் இருக்கா..?" அழுத்தமான பார்வை அவள் முகத்தை ஊடுருவியது..
"இருந்துட்டா மட்டும்..!!" மனதுக்குள் சலிப்பான பதில்.. வாய் திறந்து சொல்ல முடியவில்லை..
"எனக்கு ஓகேதான் சார்.. எனக்கு எந்த நிபந்தனைகளும் இல்ல.. என்னை நிம்மதியா வாழ விட்டிங்கனா அதுவே போதும்.." விரக்தியான பேச்சு அவளிடமிருந்து..
பதில் சொல்லாமல் அவள் முகத்தை அமைதியாக பார்த்தான் உதய்..
"சரி அம்மா.. உனக்கு போன் பண்ணுவாங்க.. எந்த விஷயமா இருந்தாலும் அவங்க கிட்ட பேசிக்கோ.. என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.." அவ்வளவுதான் என்பதை போல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டான்.. தன்னந்தனியாக அமர்ந்திருந்தாள் பத்மினி.. புயலடித்து ஓய்ந்த அமைதி.. எப்படி இவனோடு வாழப்போகிறோம் என்று கலவரம் நெஞ்சில் மூண்டது.
ஆனா செக்ஸுவல் அசால்ட்டை விட இந்த எரிச்சல் மிகுந்த இவன் பேச்சுக்களை தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.. இவனோடு தனியாக வாழப்போவதில்லையே.. வீட்டில் ஒரு வயதான பெண்மணியின் துணையும் கிடைக்கப்போகிறது.. பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம்..
அடுத்த நாள் லைனில் ரமணியம்மா வந்து விட்டாள்.. "நீ எதுவும் வாங்கி உன்னோட காசை வீணாக்க வேண்டாம்.. எல்லாத்தையும் நானே வாங்கிடறேன்.. புடவையும் நகையும் வாங்க மட்டும் நீ வந்தா போதும்..!!" என்று சொல்ல..
"வேண்டாம்மா.. எல்லாத்தையும் நீங்களே வாங்கிடுங்க.. நீங்க எப்படி வாங்கினாலும் எனக்கு ஒகேதான்.. எவ்வளவு செலவுன்னு மட்டும் சொல்லுங்க.. பணம் நான் கொடுத்துடறேன்.." நிமிர்வோடு சொன்னாள் பத்மினி..
"காசு குடுப்பியா..? உதை விழும்.. என்ன எடுத்தெறிஞ்ச பேச்சு இது.. உனக்கு வாங்கிக் கொடுக்கிறது என்னோட கடமை இல்லையா.. ? எங்க வீட்டு பொண்ணு எனக்கே காசு கொடுத்து என்னை அவமானப்படுத்துவியா..?" என்று உரிமையாக கடிந்து கொண்ட ரமணி அம்மா எங்கே..? தாமரை இலை நீர்த்துளி போல் ஒட்டாமல் பேசும் அவர் மகன் எங்கே..?
"ஐயோ அப்படியெல்லாம் இல்லைம்மா..!!" பத்மினி பதறினாள்..
"எப்படி எல்லாம் இல்லை.. ஜவுளி வாங்க நீ என்கூட வரணும். அவ்வளவுதான்.. வேணும்னா உன் குடும்பத்தையும் அழைச்சிட்டு வா.."
"இல்ல வேண்டாம் நான் மட்டும் வரேன்..!!"
ஞாயிற்றுக்கிழமையில் ரமணியம்மாவை அழைத்துக் கொண்டு கல்யாண வேலைக்காக ஷாப்பிங் செய்தாள் அவள்.. ரமணியம்மா அவளோடு வெளியே சுற்றியதில் உற்சாகமாகத்தான் இருந்தார்..
ஷாப்பிங் முடிந்த கையோடு.. விவரத்தை விசாரித்துக் கொண்டு அம்மாவை அழைத்துச் செல்ல காரோடு வந்திருந்தான் உதய் கிருஷ்ணா.. பத்மினியை முறைப்போடு ஒரு பார்வை பார்த்தான்.. ஒரே பார்வைதான்..
"ஜவுளி எடுக்க வந்திருக்கலாமே..!! வேலைன்னு சொல்லி நழுவிக்கிட்டயே உதய்.." அம்மா அங்கலாயித்தாள்.. அவன் கண்டு கொள்ளவில்லை..
"போகலாம்.."
"அவளையும் ஏத்திக்கலாம்.. ஹாஸ்டல்ல விட்டுடு..!!"
"ஹாஸ்டல் பக்கத்துலதான்.. அவங்க நடந்து போயிடுவாங்க.. எனக்கு வேலை இருக்கு.. வர்றீங்களா இல்ல உங்களையும் விட்டுட்டு போகட்டுமா.." அவன் கத்தியதை தாங்க முடியாமல் காரில் ஏறினார் ரமணி.. "ரொம்ப பண்றடா உதய்" என்ற ஆதங்கத்துடன்..
"பரவாயில்லைமா.. பக்கத்துலதான் ஹாஸ்டல்.. நான் நடந்தே போயிடுவேன் நீங்க போங்க.." அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் பத்மினி.. விடைபெறும் நாகரீகத்தோடு திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.. அவளை நடுத்தெருவில் விட்டு காரோடு சென்று விட்டான்.. என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்று அழுத்திச் சொல்வதைப் போல் அவன் ஒவ்வொரு நடவடிக்கையும்..
இதோ முருகன் கோவிலில்.. அவன் பக்கம் தாய்.. இவள் பக்கம் நெருங்கிய சொந்தம் என்று நாலு பேர் சூழ்ந்திருக்க விரல் நுனி கூட அவள் மீது படாமல் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டு பெயரளவில் பத்மினியை தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தான் உதய் கிருஷ்ணா..
"புடிச்சாலும் புடிச்சா பெரிய புளியங்கொம்பா பிடிச்சுட்டா.." என்றாள் அனுஷா..
"ம்ம்.. ஆபீஸ்க்கு வேலைக்கு போன மாதிரி தெரியலையே.. ஆம்பளையை பிடிக்க போனாப்புல இருக்கு.. வெற்றிகரமா தன்னோட வேலையை நடத்திக்கிட்டா.. இனியாவது ஒழுக்கமா இருந்தா சரிதான்.." நாக்கில் நரம்பில்லாமல் கோவில் வாசலில் வைத்து நடராஜ் மனைவி மஞ்சரி பேசிய பேச்சு கடவுளுக்கே அடுக்காது.. எதுவும் பேசாமல் திகுதிகுவென எரியும் விழிகளோடு ஜோடி பொருத்தத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நடராஜ்.. இறுக்கமான முகத்தோடு அலட்சிய பார்வை பார்க்கும் உதய கிருஷ்ணாவிடம் திருமணத்தை நிறுத்தும் அவன் கீழ்த்தரமான முயற்சிகள் எடுபடவில்லை..
தம்பதிகளை மனமார வாழ்த்தி.. வேலைகளை இழுத்துப் போட்டு செய்த இரு நல்ல உள்ளங்கள் கேசவனும் ரமணி அம்மாவும் மட்டும்தான்.. இந்த திருமணத்தின் மூலம் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல அன்புறவு துளிர் விட்டிருந்தது..
"உன் டிராமாவை கோவிலோட முடிச்சுக்கோ.. என் வீட்டுக்கு யாரும் வரக்கூடாது.." முதலிலேயே உத்தரவு போட்டு விட்டான் உதய் கிருஷ்ணா..
அதன்படி.. கோவிலோடு அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு.. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் பத்மினி..
தொடரும்..
என்ன வார்த்தைகள் பேசி விட்டான் நடராஜன்.. இத்தனை நாட்களாய் சத்தம் காட்டாமல் மிரட்டி விட்டு சென்றவனுக்கு இன்று எங்கிருந்து வந்தது அவ்வளவு தைரியம்.. பகிரங்கமாக அத்தனை பேர் முன்னிலையில் உன்னை அடையாமல் விடமாட்டேன் என்று எச்சரித்து விட்டு செல்கிறானே..!!
நடராஜ் என்ற மிருகத்திடமிருந்து வேறு என்ன மாதிரியான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்.. அவன் வார்த்தைகளில் கோபம் உண்டு..
ஆனால் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்தவர்களில் பலர் பேசிய பேச்சில் மனதில் தீராத ரணம்.. மனசாட்சி இல்லாமல்.. நாக்கில் நரம்பில்லாமல் ஒரு பெண்ணை எப்படி இழித்துப் பேச முடிகிறது இவர்களால்.. என்னைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு..? சக மனுஷியாய் உடன் வேலை செய்யும் பெண்ணின் மீது கொஞ்சம் கூடவா இரக்கமில்லாமல் போய்விடும்.. அத்தனை வன்மம் ஏன்..!!
என் மனதை புண்படுத்திவிட்டு இவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது..!! ஒருவரை காயப்படுத்தி இன்பம் காணுவதுதான் வாழ்க்கையா..? நெஞ்சம் நெருப்பாக கொதிக்கிறது.. ஒரு பெண் தனித்திருந்தால் அவள் நடத்தையை எளிதாக பாழ்படுத்தும் சமூகத்தின் மீது வெறுப்புணர்ச்சி பரவியது.. யாரோ செய்த தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது.. ஆறுதல் சொல்லவும் ஆளில்லாமல் அடி வயிற்றிலிருந்து கதறினாள்..
வெளியிலிருந்து யாரோ கதவை தட்டும் சத்தம்.. சட்டென வாயை பொத்திக் கொண்டாள்.. விம்மலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.. பெண்கள் குடியிருக்கும் ஹாஸ்டல் அல்லவா..!! வீடு போல் இஷ்டத்திற்கு குளியலறையை கழிப்பறையை உபயோகிக்க முடியாது.. மனம் விட்டு அழ கூட முடியாத துரதிஷ்டசாலி..
அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. குழாயை திறந்து தண்ணீரை முகத்திலடித்து கழுவினாள்.. மீண்டும் கதவை தட்டும் ஓசை..
"ஹான்.. இதோ வந்துட்டேன்.." இப்படி குரல் கொடுத்தால் வெளியே நிற்கும் நபர்கள் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காக்க வாய்ப்புண்டு.. சில சமயங்களில் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது..? என்ற எரிச்சலும் வெளிப்படும்..
முகத்தை சுடிதார் துப்பட்டாவால் அழுத்தமாக துடைத்துக் கொண்டு கண்ணீரில் சிவந்த கண்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவள்.. நீண்ட பெருமூச்சோடு கதவை திறந்து கொண்டு.. மற்றவர்கள் தன் முகத்தைப் பார்ப்பதற்கு முன் அவசரமாக வெளியேறினாள்..
நல்ல வேலையாக ராகவி பக்கத்து கட்டிலில் உறங்கிக் விட்டிருந்தாள்.. விளக்குகள் அணைக்கப்பட்டு மஞ்சள் நிற குமிழ் விளக்கு மட்டும் அந்த அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்தது.. சில பெண்கள் உறக்கம் வராமல் கிசுகிசுப்பான குரலில் அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்..
அமைதியாக படுத்துக் கொண்டாள் பத்மினி..
அலுவலகத்தில் நேர்ந்த அவமானத்தில் உடனடியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்திருக்கவில்லை.. மன சாந்திக்காக கோயிலுக்கு சென்றவள்.. இதெல்லாம் உனக்கே நியாயமாக படுகிறதா.. ஏன் இப்படி ஒரு அவல நிலையில் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாய்.. அவரவர் துன்பங்களுக்கு அவரவரே காரணம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு.. என் துன்பத்திற்கு எந்த விதத்தில் நான் காரணமாகி போனேன்.. இந்தக் கேவலமான உலகத்தில் பெண் ஜென்மமாய் ஏன் என்னை படைத்தாய் இறைவா..!! என்று கடவுளிடம் கதறி தீர்த்து விட்டுதான் ஹாஸ்டலுக்கு வந்தாள்..
"உனக்காக சாப்பாடு வாங்கி வைத்திருக்கிறேன். மறக்காமல் வந்து உண்டு விடு.." என்ற ராகவியின் வார்த்தைகளை எந்த அளவுக்கு மூளை கிரகித்துக் கொண்டது என்று தெரியவில்லை..
எப்படி உனக்கு திருமணம் நடக்கிறது என்று பார்க்கலாம் என்றானே.. இப்படியெல்லாம் என் பெயரை அசிங்கப்படுத்தி கட்டுக் கதைகளை காற்றோடு சேர்த்து பரப்பி விட்டால் எனக்கு திருமணமே நடக்காது என்ற எண்ணம்..
ஏளனமாக எக்காளமிட்டு சிரித்துக் கொண்டிருக்கும் இவன் மமதையை காலில் போட்டு மிதிக்கவாவது நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாமா..!!
இவனைப் பார்த்து பயந்து ஓடவில்லை.. ஆனால் நிமிர்ந்து நிற்கிறேன்.. திருமணம் என்பது ஒரு தீர்வு அல்லதான்.. ஆனால் இவனுக்கு கொடுக்கும் பதிலடி.. திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன்.. அதைக் கண்ணார பார்த்து விட்டு உன் குடும்பமே வயிற்றெரிச்சல் பட்டு சாகட்டும்.. ஆக்ரோஷம் பொங்க அவள் உள்ளம் சிரித்தது.. இப்போதைக்கு அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே சாய்ஸ் உதய் கிருஷ்ணன்..
அவன் குணம் சர்வ சுத்தமாய் பிடிக்கவில்லை.. ஆனால் எந்த வகையிலும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்ற அவனது பேச்சு தற்போதைக்கு அவனுக்கு சம்மதம் சொல்ல போதுமான ஒரே காரணமாய் அமைந்து போனது..
அலைபேசியை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள்.. அவனை அழைத்து பேசினாள்..
ஆபீஸ் வளாகத்தில் நடந்த சர்ச்சை நிச்சயமாக அவன் காதுகளுக்கு போக வாய்ப்பு உண்டு.. தானே தெளிவுபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவனிடம் அது பற்றி பேச ஆரம்பித்தாள்..
ஆனால் இடைமறித்து அவன் சொன்ன பதில் ஈட்டியாய் அவள் நெஞ்சை கீறியது.. வாழும் ஆசை வற்றி சோர்ந்து போனாள் பத்மினி.. ஏற்கனவே நடராஜ் செய்த இழிவான காரியத்தால் மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தவள்.. உதய் கிருஷ்ணன் சொன்ன கடைசி வார்த்தைகளில்.. இப்படி ஒரு திருமணம் தேவைதானா? என்று மீண்டும் மனக்குழப்பத்தில் ஆழ்ந்து விட்டாள்..
ஒரு நரகத்திலிருந்து தப்பிக்க இன்னொரு நரகமோ..!! மண்டையே வெடிப்பது போல் தலைவலி.. வெறும் வயிற்றில் ஒரு மாத்திரையை விழுங்கிக் கொண்டு கட்டிலில் விழுந்து விழி மூடினாள்..
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருக்க மீண்டும் எங்கே பெரிதாக வெடித்து அழுது விடுவோமோ என்ற பயத்தில்.. கசப்பான நினைவுகளை ஓரம் தள்ளி.. போனில் ரீல்ஸ் ஷார்ட்ஸ் என்று ஏதேதோ பார்த்து தன் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்..
"சத்தத்தை கம்மியா வைங்க பத்மினி.." எதிர்க்கட்டிலில் பரமேஸ்வரியின் எரிச்சலான குரல்.. பாவம் அவள்.. அதிகாலை நான்கு மணிக்கு ஷிப்ட் போக வேண்டும்.. இப்போது உறங்கினால்தான் உண்டு.. அவள் பிரச்சனை அவளுக்கு.. இயர் போனை தேடி எடுத்து காதில் மாட்டிக் கொண்டாள்.. ஏதோ ஒரு பாடலை யூடியூபில் தட்டி விட்டு விழிகளை மூடிக்கொண்டாள்..
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சாிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்..
ஸ்வர்ணலதா.. குரலில் உருகிக் கொண்டிருந்தார்.. பாடல் அவளுக்காகவே எழுதப்பட்டதை போல்.. இன்னிசை எனும் தெய்வம் கனக்கும் பாரத்தை லேசாக்கி துயரத்தை சற்று மறக்கத்தான் வைக்கிறது..
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீா்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே!!
மூடியிருந்த விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர் பக்கவாட்டில் வழிந்து தலையணையை நனைத்தது..
அடுத்த நாள் தன் விதியை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் பத்மினி.. எந்த சூழ்நிலையிலும் அவமானத்திற்கு பயந்து தன்னை கூட்டுக்குள் ஒடுக்கிக் கொண்டதில்லை அவள்.. அந்த நிமிர்வுதான் அவள் பலமும்.. இந்த பலம்தான் மற்றவர்களை ஆத்திரப்பட வைக்கிறது..
"இவ்வளவு விஷயம் நடந்த பிறகும் எப்படித்தான் வெட்கமில்லாமல் வெளியே வராளோ..!!" பத்தினி தேவிகளின் அறுவறுப்பையும் ஏக பத்தினி விரதன்களின் ஏளனங்களையும் உதாசீனப்படுத்தி கண்டு கொள்ளாமல் கடந்து வந்தவள் தனது கணினியை உயிர்ப்பித்து வேலையை துவங்கியிருந்தாள்.. என்னதான் அவள் மீது பழி சுமத்த இப்படி ஒரு கூட்டம் அலைந்தாலும்.. அவள் நடத்தையில் சந்தேகம் கொள்ளாத நல்ல உள்ளங்களும் அங்கே உண்டு.. அப்படிபட்டவர்கள் அவள் காயத்தை குத்தி கிளறாமல் ஒரு மென்மையான புன்னகையுடன் குட் மார்னிங் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர்..
உதய் கிருஷ்ணா அனைவரின் வணக்கங்களையும் ஏற்று உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து முதல் வேலையாக பத்மினியைத்தான் அழைத்தான்..
"பத்மினி.. பர்சனல் விஷயங்களை ஆபீஸில் பேச வேண்டாம்.. ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சதும் சரவணபவன்ல வெயிட் பண்ணுங்க.. மேற்கொண்டு மத்த விஷயங்களை பேசி முடிச்சிடலாம்..!!"
"ம்ம்..சார்.."
"ஞாபகம் இருக்கட்டும்.. இது என் அம்மாவின் விருப்பத்துக்காக நடக்கிற கல்யாணம்.. மத்தபடி இதுல எனக்கு எந்த விருப்பமும் இல்லை.. சொல்லப்போனால் நான் கல்யாணம் ஆனவன்னு சொல்லிக்கிறதுல கூட எனக்கு எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை.."
"புரியுது சார்..!! நானும் எதையும் எதிர்பார்க்கல.. எனக்கும் கல்யாணம் அப்படிங்கற அடையாளம் தேவைப்படுது.. அவ்வளவுதான்" என்றாள் சோர்வான குரலில்.. அழைப்பை துண்டித்து விட்டான்..
மாலையில் அவள் புறப்பட்ட அதே நேரத்திற்குதான் உதய் கிருஷ்ணாவும் அலுவலகத்திலிருந்து கிளம்பினான்.. அவள் ஒரு பக்கம் ஆட்டோவில் வந்தாள்.. அவன் காரில் வந்தான்.. போகும் வழி ஒன்றுதான்.. அவளை ஏற்றிக்கொண்டு ஹோட்டலுக்கு செல்லலாம் என்ற எண்ணம் கூட இல்லை..!!
பத்மினி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூட.. இன்றைக்கு வியாழக்கிழமை என்று ரீதியில்தான் தாயிடம் தெரிவித்தான்.. தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரவசப்பட்டதென்னவோ ரமணி அம்மாதான்.. போதும் ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்.. என்று அவர் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டை போட்டு அடக்கியிருந்தான் உதய்..
சரவணபவனில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர்..
ஹாய் ஹலோ எதுவுமின்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..
"கல்யாணம் சிம்பிளா நடந்தா போதும்.. உங்க வீட்டு ஆளுங்களை கூப்பிடறதுன்னு கூப்பிடலாம்.. உன் இஷ்டம்.. என் பக்கமிருந்து அம்மா மட்டும்தான் வருவாங்க..!!"
"கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்.. அப்பதான் ஃபியூச்சர்ல பிரச்சனை வந்தா டிவோர்ஸ் வாங்க ஈஸியா இருக்கும்.. " அவன் கத்தி போன்ற கூர்மையான வார்த்தைகளில் திகைத்து நிமிர்ந்தாள் பத்மினி..
"என்ன பார்வை..!! நாம என்ன ரெண்டு பேரும் மனமொத்து விரும்பியா கல்யாணம் செஞ்சிக்கறோம்.." எரிச்சலான வார்த்தைகள் அவனிடமிருந்து.. இப்படி தன் முன்னே அமர்ந்து பேசுவதை கூட அவன் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டாள்..
"அப்புறம் நான் ஏற்கனவே சொன்னதுதான்.. கல்யாணம் ஆகிட்டதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு உன் செலவுகளுக்கு என்னை எதிர்பார்க்கக் கூடாது.. உன் தேவைகளை நீதான் பாத்துக்கணும்.. முக்கியமான விஷயம்.. நீ இன்னும் வேலையை ரிசைன் பண்ணல.. என்னோட கம்பெனியில் வேலை செய்யறதும் ராஜினாமா பண்றதும் உன் இஷ்டம்.. ஆனா வேலையை விட்டு நிக்கிறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே பிரையர் நோட்டீஸ் கொடுக்கணும்.. பெண்டிங் ஒர்க் முடிச்சு கொடுத்துட்டு போகணும்.."
"முக்கியமான விஷயம்.. கல்யாணத்துக்கு பிறகு நீதான் என்னோட மனைவின்னு ஆபீஸ் முழுக்க தம்பட்டம் அடிச்சு அதன் மூலமா கிடைக்கப் போற சலுகைகளை அனுபவிக்கலாம்ன்னு நினைக்காதே..!! என் அம்மாவுக்காக மட்டும்தான் இந்த கல்யாணம்.. அதைத் தவிர்த்து வெளியே உன்னை என்னோட மனைவின்னு சொல்லிக்க நான் விரும்பல.. அதுவும் ஆபீஸ் என்னோட ராஜ்ஜியம்.. அங்கே உறவை சொல்லிக்கிட்டு உரிமை எடுத்து ஆட்டம் போடுவது எனக்கு பிடிக்காது.."
"இவ்வளவுதான் என்னோட கண்டிஷன்ஸ்..!! உனக்கு ஏதாவது நிபந்தனைகள் இருக்கா..?" அழுத்தமான பார்வை அவள் முகத்தை ஊடுருவியது..
"இருந்துட்டா மட்டும்..!!" மனதுக்குள் சலிப்பான பதில்.. வாய் திறந்து சொல்ல முடியவில்லை..
"எனக்கு ஓகேதான் சார்.. எனக்கு எந்த நிபந்தனைகளும் இல்ல.. என்னை நிம்மதியா வாழ விட்டிங்கனா அதுவே போதும்.." விரக்தியான பேச்சு அவளிடமிருந்து..
பதில் சொல்லாமல் அவள் முகத்தை அமைதியாக பார்த்தான் உதய்..
"சரி அம்மா.. உனக்கு போன் பண்ணுவாங்க.. எந்த விஷயமா இருந்தாலும் அவங்க கிட்ட பேசிக்கோ.. என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.." அவ்வளவுதான் என்பதை போல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டான்.. தன்னந்தனியாக அமர்ந்திருந்தாள் பத்மினி.. புயலடித்து ஓய்ந்த அமைதி.. எப்படி இவனோடு வாழப்போகிறோம் என்று கலவரம் நெஞ்சில் மூண்டது.
ஆனா செக்ஸுவல் அசால்ட்டை விட இந்த எரிச்சல் மிகுந்த இவன் பேச்சுக்களை தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.. இவனோடு தனியாக வாழப்போவதில்லையே.. வீட்டில் ஒரு வயதான பெண்மணியின் துணையும் கிடைக்கப்போகிறது.. பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம்..
அடுத்த நாள் லைனில் ரமணியம்மா வந்து விட்டாள்.. "நீ எதுவும் வாங்கி உன்னோட காசை வீணாக்க வேண்டாம்.. எல்லாத்தையும் நானே வாங்கிடறேன்.. புடவையும் நகையும் வாங்க மட்டும் நீ வந்தா போதும்..!!" என்று சொல்ல..
"வேண்டாம்மா.. எல்லாத்தையும் நீங்களே வாங்கிடுங்க.. நீங்க எப்படி வாங்கினாலும் எனக்கு ஒகேதான்.. எவ்வளவு செலவுன்னு மட்டும் சொல்லுங்க.. பணம் நான் கொடுத்துடறேன்.." நிமிர்வோடு சொன்னாள் பத்மினி..
"காசு குடுப்பியா..? உதை விழும்.. என்ன எடுத்தெறிஞ்ச பேச்சு இது.. உனக்கு வாங்கிக் கொடுக்கிறது என்னோட கடமை இல்லையா.. ? எங்க வீட்டு பொண்ணு எனக்கே காசு கொடுத்து என்னை அவமானப்படுத்துவியா..?" என்று உரிமையாக கடிந்து கொண்ட ரமணி அம்மா எங்கே..? தாமரை இலை நீர்த்துளி போல் ஒட்டாமல் பேசும் அவர் மகன் எங்கே..?
"ஐயோ அப்படியெல்லாம் இல்லைம்மா..!!" பத்மினி பதறினாள்..
"எப்படி எல்லாம் இல்லை.. ஜவுளி வாங்க நீ என்கூட வரணும். அவ்வளவுதான்.. வேணும்னா உன் குடும்பத்தையும் அழைச்சிட்டு வா.."
"இல்ல வேண்டாம் நான் மட்டும் வரேன்..!!"
ஞாயிற்றுக்கிழமையில் ரமணியம்மாவை அழைத்துக் கொண்டு கல்யாண வேலைக்காக ஷாப்பிங் செய்தாள் அவள்.. ரமணியம்மா அவளோடு வெளியே சுற்றியதில் உற்சாகமாகத்தான் இருந்தார்..
ஷாப்பிங் முடிந்த கையோடு.. விவரத்தை விசாரித்துக் கொண்டு அம்மாவை அழைத்துச் செல்ல காரோடு வந்திருந்தான் உதய் கிருஷ்ணா.. பத்மினியை முறைப்போடு ஒரு பார்வை பார்த்தான்.. ஒரே பார்வைதான்..
"ஜவுளி எடுக்க வந்திருக்கலாமே..!! வேலைன்னு சொல்லி நழுவிக்கிட்டயே உதய்.." அம்மா அங்கலாயித்தாள்.. அவன் கண்டு கொள்ளவில்லை..
"போகலாம்.."
"அவளையும் ஏத்திக்கலாம்.. ஹாஸ்டல்ல விட்டுடு..!!"
"ஹாஸ்டல் பக்கத்துலதான்.. அவங்க நடந்து போயிடுவாங்க.. எனக்கு வேலை இருக்கு.. வர்றீங்களா இல்ல உங்களையும் விட்டுட்டு போகட்டுமா.." அவன் கத்தியதை தாங்க முடியாமல் காரில் ஏறினார் ரமணி.. "ரொம்ப பண்றடா உதய்" என்ற ஆதங்கத்துடன்..
"பரவாயில்லைமா.. பக்கத்துலதான் ஹாஸ்டல்.. நான் நடந்தே போயிடுவேன் நீங்க போங்க.." அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் பத்மினி.. விடைபெறும் நாகரீகத்தோடு திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.. அவளை நடுத்தெருவில் விட்டு காரோடு சென்று விட்டான்.. என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்று அழுத்திச் சொல்வதைப் போல் அவன் ஒவ்வொரு நடவடிக்கையும்..
இதோ முருகன் கோவிலில்.. அவன் பக்கம் தாய்.. இவள் பக்கம் நெருங்கிய சொந்தம் என்று நாலு பேர் சூழ்ந்திருக்க விரல் நுனி கூட அவள் மீது படாமல் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டு பெயரளவில் பத்மினியை தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தான் உதய் கிருஷ்ணா..
"புடிச்சாலும் புடிச்சா பெரிய புளியங்கொம்பா பிடிச்சுட்டா.." என்றாள் அனுஷா..
"ம்ம்.. ஆபீஸ்க்கு வேலைக்கு போன மாதிரி தெரியலையே.. ஆம்பளையை பிடிக்க போனாப்புல இருக்கு.. வெற்றிகரமா தன்னோட வேலையை நடத்திக்கிட்டா.. இனியாவது ஒழுக்கமா இருந்தா சரிதான்.." நாக்கில் நரம்பில்லாமல் கோவில் வாசலில் வைத்து நடராஜ் மனைவி மஞ்சரி பேசிய பேச்சு கடவுளுக்கே அடுக்காது.. எதுவும் பேசாமல் திகுதிகுவென எரியும் விழிகளோடு ஜோடி பொருத்தத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நடராஜ்.. இறுக்கமான முகத்தோடு அலட்சிய பார்வை பார்க்கும் உதய கிருஷ்ணாவிடம் திருமணத்தை நிறுத்தும் அவன் கீழ்த்தரமான முயற்சிகள் எடுபடவில்லை..
தம்பதிகளை மனமார வாழ்த்தி.. வேலைகளை இழுத்துப் போட்டு செய்த இரு நல்ல உள்ளங்கள் கேசவனும் ரமணி அம்மாவும் மட்டும்தான்.. இந்த திருமணத்தின் மூலம் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல அன்புறவு துளிர் விட்டிருந்தது..
"உன் டிராமாவை கோவிலோட முடிச்சுக்கோ.. என் வீட்டுக்கு யாரும் வரக்கூடாது.." முதலிலேயே உத்தரவு போட்டு விட்டான் உதய் கிருஷ்ணா..
அதன்படி.. கோவிலோடு அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு.. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் பத்மினி..
தொடரும்..
Last edited: