- Joined
- Jan 10, 2023
- Messages
- 49
- Thread Author
- #1
இரவு தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு மலர் தோரணங்கள் கட்டில் அலங்காரங்கள் நீக்கப்பட்டு அறை பளிச்சென தெரிய.. கண்களை சுழற்றிப் பார்த்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான் குருக்ஷேத்ரா..
உப்பு புளி மிளகாய் காரத்தோடு அவனுக்கு தனி உணவு.. மிதமான அளவான சேர்மானங்களோடு அவர்களுக்கு தனி உணவு .. என சமயோசிதமாக இந்த முறை கவனமாக சமைத்திருந்தாள் அன்பரசி..
"கிழவி எங்கே போச்சு.. நீ எதுக்காக என் கண் முன்னாடி வர்றே.." தரையில் அமர்ந்தவன் அந்த கண்களைதான் பார்த்தான்..
"உங்க பொண்டாட்டி நான் உங்க கண்முன்னாடி வராம வேற வருவா.." அன்பரசியின் உரிமையான பேச்சு..
"ஏய்.. என்ன.. தைரியம் கூடிப் போச்சா.." அவன் பார்வை சிறுத்தையாய் சிறுத்தது..
பதில் பேசாமல் அமைதியாக அவனருகே அமர்ந்து உணவு பரிமாறினாள்..
"முழு நேரமும் போதையிலேயே இருப்பியா.. உன் கண்ணு ஏன் இப்படி சுருட்டி இழுக்குது.." தரையில் சம்மணமிட்டு அமர்ந்த போதிலும் இடக்கரத்தை தொடையின் மீது ஊன்றி ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்தவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்..
"அப்ப நீங்க தான் போதையில் இருக்கீங்க.." அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்..
"என்னது..!!" குருக்ஷேத்ராவின் புருவங்கள் உயர்ந்தன..
"ஒன்னும் இல்ல சாப்பிடுங்க.. முழங்காலிட்டு அமர்ந்து பனை ஓலை விசிறியால் அவனுக்கு விசிறி விட சில்லென்ற காற்று அவன் கேசம் கலைத்து போனது.. அடுப்படியில் காற்றாடி இல்லை.. எண்ணெய் பளபளக்கும் மிளகாய் தூள் தூக்கலான குழம்பின் உபயத்தால் இதழோரம் சிவந்திருக்க நிமிர்ந்து பார்த்தான் அவன்.. நல்லவேளையாக இந்த முறை தட்டை வீசி எறியவில்லை.. கண்கள் உருட்டி கவளமாக வாயில் வைத்தவன் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத பாவனையோடு தொடர்ந்து உண்டதில் "அப்பாடா.." என்ற நிம்மதி பெருமூச்சு அவளுள்..
"எதுக்கு விசிறி விடற.." கேள்வி கரடு முரடாய்..!!
"உங்களுக்கு வேர்க்குதே.." என்றவளை கண்கள் சுருக்கி வித்தியாசமாக பார்த்தான்..
அவள் சந்தன நிற சருமத்திலும் பன்னீர் துளிகளாய் வியர்வை.. கண்டதில் குருக்ஷேத்ரா காதோரம் சூடேறியது.. ஏன் என்று புரியவில்லை.. அந்த வியர்வைத் துளிகளை சுவைத்துப் பார்க்க நாவோரம் எச்சில் சுரப்பிகளில் தூண்டுதல்..
இடதுகையின் இரு விரல்களால் வியர்வைத்துளிகளை அவள் கன்ன சதையோடு நசுக்கினான்..
"அம்மா.. ஆஆ.." அன்பரசி வலியில் அலறி அவனை வினோதமாக பார்க்க.. வியர்வை என்ற சாதாரண உப்பு நீர் வெளியேற்றம் தனக்குள் ஏன் வேறு மாதிரியான மாற்றங்களை தருகிறது.. அடிவயிற்றிலிருந்து எழுந்த புரியாத உணர்வில் குழம்பினான் அவன்.. உப்பியிருந்த கன்னத்தின் மென்மை அவன் பற்களுக்குள் உமிழ்நீராக ஊறியது..
மீண்டும் கடின முகத்துடன் எக்ஸ்பரிமென்டல் பர்பஸோடு அவன் கன்னத்தை கிள்ளினான்..
"அம்மாஆஆ.." வலியில் முகம் சுணங்கி கன்னம் தேய்த்துக் கொண்டு தட்டில் மீண்டும் சாதம் வைத்தாள்.. சோற்றில் கவனம் இல்லை.. முட்டை கண்களும் மொட்டு கன்னங்களும் அவனை பலத்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தின..
மீண்டும் கிள்ள வர.. "வலிக்குது விடுங்களேன்.." கண்கள் கலங்கி போயிருந்தாள் அன்பரசி.. அவன் கிள்ளிய இடம் வட்டமாக சிவந்து போயிருந்தது..
"பொண்டாட்டிகிட்டே நினைச்து எல்லாத்தையும் செய்யலாம்னு துரைசாமி சொன்னான்.. நீ என்னடான்னா கையை தட்டி விடற.. அவ்ளோ தைரியமா உனக்கு.." அவள் கரம் பற்றி முரட்டுத் தனமாக தன்பக்கம் இழுத்தான்..
"எனக்கு வலிச்சது.."
"வலிச்சா பொறுத்துக்கனும்.. அழுவியா நீ..!!" அவன் கேள்வியில் மேலும் உதடு வளைந்து விசும்பினாள்.. கண்ணீர் கோர்த்துக் கொண்டது விழிகளில்.. அவளின் விதவிதமான பாவனைகள் ஆடவன் கண்களில் நிறம் கூட்டின..
உற்றுப் பார்க்க ஆரம்பித்ததில் அவள் உணர்வுகளும் உள்ளுக்குள் ஊடுருவின.. அந்த கண்ணீர் கூட ஏதோ செய்கிறதே..!!
தனக்குள் என்ன நிகழுகிறதென புரியாமல் பற்களை கடித்தவன் தட்டை தூக்கி அடிக்கும் நேரம் அவன் கரத்தை சட்டென பற்றியவள் தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள்..
அன்பரசியை பார்த்தபடியே தட்டை நங்கென தரையில் வைத்தவன் அவளை முறைத்த படியே உண்பதை தொடர்ந்தான்.. அவன் கன்னம் வேண்டுமாம்.. தேவைகளை தெளிவாக கேட்கத் தெரியவில்லை..
தன் கன்னத்தை அவன் விரல்களால் மென்மையாக வருடிக் கொடுத்தாள் அன்பு.. உணவருந்தும் கரம் அப்படியே நின்றுவிட எச்சில் விழுங்கி தரையை வெறித்தான் அவன்..
"இது என்ன மாவு உருண்டையா.. இத்தனை மெத்துன்னு இருக்கு.." அவன் எண்ணம் இது.. கரடு முரடான தாடிகளுக்குள் மறைந்த கன்னங்களை குமட்டில் குத்தி.. இரத்தம் பார்த்து பழக்கப்பட்டவனுக்கு சந்தனத்தின் வழவழப்பும் உப்பலான ஆப்பிள் கதுப்பும் விளையாட்டு பொருளாய் ஆர்வத்தை தூண்டியது.. காப்பு காய்ச்சிப் போன அவன் உள்ளங்கரத்தை மென்மையாக வருடி இதழால் முத்தமிட்டாள் அன்பு..
ஊசியாய் ஊடுருவிய மின்சாரத்தோடு விழிகள் நிலைகுத்தி அவளையே பார்த்தன..
"இப்போ என்ன செஞ்சே நீ.." உதட்டை குவித்து வரும் சத்தம் முத்தம் என தெரியாது.. முத்தம் வாங்கியதும் இல்லை.. கொடுத்தும் பழக்கம் இல்லை.. முழுக்க முழுக்க காதல் நிறைந்த சினிமா படங்களை பார்க்குமளவிற்கு பொறுமையும் இருந்ததில்லை.. அதற்காக இவன் கூச்சம் நிறைந்த 90ஸ் கிட்டா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..
தயக்கம் கூச்சம் என்ன விலை என்று கேட்பான்.. அவுட் ஆஃப் சிலபஸ் என்று ஒதுக்கி வைத்திருந்த பாடங்களை ஆராயத் துவங்கியதன் முதல்கட்டம்..
அவன் கேள்விக்கு.. "முத்..தம்.." அன்பரசியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..
மீண்டும் அந்த மிருதுவான ஈர இதழ் தன் உள்ளங்கையில் அழுத்த வேண்டும்.. கழுத்திலிருந்து அடிவயிறு வரை இரத்த நாளங்களோடு சூடாக பரவிய அந்த சுகம் வேண்டும் என்று முரட்டு தேகம் பரபரத்தது.. ஆனால் வாய்விட்டு கேட்க வெட்டி ஈகோ தடுக்க.. தேவைப்பட்டதை தானே எடுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு
உள்ளங்கயை அவள் உதட்டில் வைத்து அழுத்தியதில் கண்களை அகல விரித்தாள் அவள்.. மாயச் சுழலாய் அந்த கண்கள் தன்னை உள்ளிழுப்பதாய் உணர்ந்தவன் தலைசாய்த்து அந்த கண்களை பார்த்தான்..
விரல்களை திருப்பி அந்த கன்னத்தை பற்றி இருமுறை அழுத்தினான்.. குழிந்த கன்னங்களை விட்டு பார்வையை எடுக்க இயலவில்லை.. கண்கள் மட்டும் போதையேற்றவில்லை.. இந்த கன்னங்களும்.. இரண்டாக வெட்டி இருபக்கங்களிலும் ஒட்ட வைத்த ஆப்பிள் துண்டுதான் இது.. ஆனால் மெத்தென விழுந்து உருளும் மென்மையோடு.. இப்போதுவரை தொடுதல்.. பார்த்தல் இருபுலன்களால் இன்பம் அறிந்திருக்கிறான் குரு..
பொறுமையின்றி அவள் கன்னத்தை நறுக்கென கிள்ள .. "ஸ்ஸ்ஸ் ஆஆஆ.." மீண்டும் வலியில் அலறினாள்..
"தொட்டுத் தடவிப் பார்க்க எனக்கு பொறுமை இல்ல.. இப்படித்தான் செய்வேன்.. இந்த கன்னத்தில ஓங்கி ஒரு அறை விட்டா எப்படி சிவக்கும்னு பார்க்கத் தோணுது.." அவன் பேச்சில் ஈரக்குலை நடுங்கியது.. முரடனை மாற்றவே முடியாது போலிருக்கிறதே..!!
அவன் காலி செய்த தட்டை எடுத்துக் கொண்டு ஓடியே விட்டாள்..
பாட்டி வைத்தியம் வேலை செய்யுமா.. உள்ளுக்குள் கலக்கம் பரவியது..
மதிய உணவிற்கு பின் வடிவு அன்பரசி ஓய்வாக வேப்ப மரத்தடியின் கட்டிலில் அமர்ந்திருந்தனர்..
அன்பரசியின் முகம் வாடிப் போயிருந்தது.. எதையோ எண்ணி பயந்து போனவளாய் முகம் வெளிறித் தெரிந்தாள்.
"என்னம்மா.. ஏன் கண்ணு ஒருமாதிரி தெரியற.."
"ஒ.. ஒண்ணும்.. இல்ல பாட்டி.." மெல்ல சிரித்து சமாளிக்க முயன்றாள்..
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினாள் வடிவம்பாள்..
"நான் அனுபவஸ்தி.. என்னால உன் கண்ணை பார்த்தே நீ எதுக்காக கலங்கி நிக்கிறேன்னு புரிஞ்சிக்க முடியுது.. ஆனா பயந்து வாசக் கதவை சாத்தி வைச்சிட்டா நினைச்சதை சாதிக்க முடியாதே கண்ணு.."
"அதுக்காக பலிபொருளா என்னையே கொடுக்க சொல்றீங்களா.. ராத்திரி பொழுதை நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு பாட்டி.." குத்துக்காலிட்டு அமர்ந்தாள் அவள்..
"நான் அப்ப சொன்னதைதான் இப்பவும் சொல்றேன்.. உன் புருஷனை பாய்மாதிரி உனக்குள்ள சுருட்டி வைச்சிக்க ஒரே வழி தாம்பத்யம் தான்.."
"போ பாட்டி.. என்னால வாய்விட்டு சொல்ல முடியல.. காட்டுப் புலி மாதிரி பாய்ஞ்சா..!! என்னால தாங்க முடியல.." கண்களை துடைத்துக் கொண்டாள்..
"அவன் காட்டுப் புலியா இருந்தா நீ பெண் புலியா மாறிடு.. அவனை அடக்கற மாயவித்தை உன்கிட்டேதானே இருக்கு.. "
"புரியலையே பாட்டி.." கண்களை சுருக்கினாள் அன்பரசி..
"அந்த முரட்டு பயலுக்கு தாம்பத்தியத்தை பற்றி பெருசா என்ன தெரிஞ்சிட போகுது.. இதுதான் உறவுன்னு அவன் மூளையில பதிஞ்சு போயிருக்கு.. அதை மாத்தி அவனுக்கு வேற ஒரு உலகத்தை காட்ட வேண்டியது யாரோட கடமை.."
"யார் கடமை.." புரியாமல் விழித்தாள் அன்பரசி..
"ஹான்.. என் கொள்ளு பாட்டியோட கடமை.. ஆள பாரு.. இந்தா பொண்ணு.. நான் சொல்றதை கற்பூரம் மாதிரி பிடிச்சுக்க.. அவனுக்கு தாம்பத்திய சுகத்துல புதுசு புதுசா ருசியை காட்டி உனக்கு அடிமையாக்கிடு.. அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்" வடிவு ஹஸ்கி வாய்ஸில் சொல்ல விழிகளை விரித்தாள் அன்பு..
"ஐயோ என்ன பாட்டி இவ்வளவு பச்சையா பேசறீங்க.." காதுகளை மூடினாள் அவள்..
"அப்படி சொன்னாலும் உனக்கு புரியறது இல்லையே.. அதுவும் இல்லாம அவனோட பொண்டாட்டி உன்கிட்ட தானே வாழ்க்கையோட நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.."
"அய்யோ போங்க பாட்டி.. எனக்கு அதெல்லாம் தெரியாது.." வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்..
"அவன் முரட்டு பையன்.. காதல் காமம் வகையறா தெரியாது.. நீ இந்த காலத்து பொண்ணு தானே.. அடிப்படை பாடம் தெரியாதுன்னு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு.."
"அதெல்லாம் தெரியும்.. ஆனா.."
"இது என்ன..?" தன் சேலை முந்தானையை காண்பித்தாள் பாட்டி..
"புடவை.."
"ப்ச்.. இது ஒரு துணி.. இதை புடவையா கட்டலாம்.. சட்டையா தைக்கலாம்.. ஜாக்கெட் துணியா மாத்தலாம்.. அதுல பூ போட்டு எம்பிராய்டரி பண்ணலாம்.. பாவாடை தைக்கலாம் சுடிதார் தைக்கலாம்.. ஒரே துணி தான் ஆனா நமக்கு ஏத்த மாதிரி வெவ்வேறு விதமா மாத்திக்கிறது யாரோட கையில இருக்கு.."
"நம்ம கையில.."
"சரியா சொன்னே.. இப்படி விதவிதமா துணியை வடிவமா மாத்த நமக்கு என்ன வேணும்.."
"எ.. என்ன வேணும்..?"
"ரசனையும்.. படைப்புத் திறனும்.. தாம்பத்திய ரகசியமும் இதுதான்.. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை.. இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.." பாட்டி நொந்து போக.. அன்பரசி ஆங் என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
பாட்டி சொல்லிக் கொடுத்த வித்தையை பிடித்துக் கொண்டு.. அதிலிருந்து தன் முதல் கட்ட பாடங்களை முரட்டு மாணவனுக்கு துவங்கியிருக்க.. அவனும் ஓங்கி அறைந்தால் உன் கன்னம் சிவக்குமா என்று கேட்கிறானே..!!
பாத்திரங்களை எடுத்துச் சென்ற சிங்கில் போட்டு கழுவிக் கொண்டிருந்தாள் அன்பரசி.. திடீரென வலப்பக்கம் சுவரோடு அவரை நசுக்கியபடி இடித்து நின்றான் குரு..
என்னவோ தெரியவில்லை அவள் முகத்தை திரும்ப பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதாம்.. அடிதடியோ காதலோ காமமோ எதிலும் ஓவர் டோஸ் தான்.. அந்த கண்களையும் கன்னங்களையும் ஒரு மாதிரியான மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. முத்தமிட்டது இந்த உதடு தானே.. இந்த உதடு இன்னும் என்னென்ன வித்தைகள் செய்யுமோ..!! கண்கள் மீதான மயக்கம் கன்னங்களில் இறங்கி இப்பொழுது சிவந்த உதட்டின் மேல் தாவியிருந்தது..
கன்னங்களை அழுத்தி இதழ்களை குவியச் செய்தான்.. அந்த உதட்டு வரிகள் அவன் கண்களில் செவ்வரியோடச் செய்தன.. கட்டை விரலால் அவள் உதடுகளை அழுத்தமாக வருடினான்.. வலிக்கத்தான் செய்தது.. பொறுத்துக் கொண்டாள்..
சுவற்றோடு அழுத்தி இருந்ததில் அவள் வலது தோள் அவன் மார்பில் பட்டு உடைந்து விழுமளவிற்கு வலித்தன.. சட்டென அவள் பக்கவாட்டில் திரும்பி சுவற்றில் சாய்ந்து நிற்க.. பிடிமானம் இல்லாமல் அவள் மேலே சாய்ந்தான் குரு.. இருமென்பஞ்சு மேகங்கள் கத்திகளாய் அவன் மார்பை குத்தி கிழித்ததில் விழிகள் பளீரென விரிந்தன..
விஷயம் தெரியாதவன் இல்லை.. பெண் அங்கம் தெரியும்.. அதில் ஆணின் தேவைகளும் சேவைகளும் எங்கெங்கே ஒளிந்து இருக்கிறது தெரியவில்லை.. உரசினால் உடல் முழுக்க மின்சாரம் பாயுமா..!! மேலும் அவளை அழுத்தினான்.. மூச்சு முட்டியது.. மார்பில் கை வைத்து அவனை தள்ளினாள் அன்பு..
கண்கள் கீழிறங்கியது.. சட்டென அவள் புடவை முந்தானையில் கை வைத்திருந்தான்..
"அய்யோ.." தன் மார்போடு கை வைத்து அவனை தடுத்தாள் அன்பு..
"ஹேய்.. கையை எடு.." உள்ளுக்குள் அலைகடலின் ஆர்ப்பரிப்போடு வேகம் கூடியதில் அவன் கர்ஜித்தான்..
"எனக்கு பாக்கணும்.." கையை எடு..
"யாராவது வந்துருவாங்க.. விடுங்க.." அவனிடமிருந்து ஓட முயன்றவளை இழுத்து சுவற்றில் தள்ளினான்..
"நான் கேட்டு தர மாட்டேன்னு சொல்லுவியா..!! என்னை மீறி இங்கே யார் வருவா..?" அடிக்குரலில் இரைந்தான்..
"அய்யோ நான் சொல்றதை கேளுங்க.. நம்ம ரூமுக்கு போயிடலாம்.. அங்கே நீங்க என்ன சொன்னாலும் செய்கிறேன்.. என்ன கேட்டாலும் தரேன்.. அவள் மறுப்புகள் எதுவும் செல்லுபடி ஆகவில்லை.." தடுக்க தடுக்க கேளாமல் அவள் மார்பு சேலையை விலக்கி இருந்தான் குரு..
அவனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அவனிடமே சரணடைந்து இறுக அணைத்துக் கொண்டாள் அன்பரசி.. மலர்மாலையாக தன்னை சுற்றிக் கொண்ட பெண் தேகத்தின் கதகதப்பில் உறைந்து சிலையாகினான் குருக்ஷேத்ரா..
தொடரும்..
உப்பு புளி மிளகாய் காரத்தோடு அவனுக்கு தனி உணவு.. மிதமான அளவான சேர்மானங்களோடு அவர்களுக்கு தனி உணவு .. என சமயோசிதமாக இந்த முறை கவனமாக சமைத்திருந்தாள் அன்பரசி..
"கிழவி எங்கே போச்சு.. நீ எதுக்காக என் கண் முன்னாடி வர்றே.." தரையில் அமர்ந்தவன் அந்த கண்களைதான் பார்த்தான்..
"உங்க பொண்டாட்டி நான் உங்க கண்முன்னாடி வராம வேற வருவா.." அன்பரசியின் உரிமையான பேச்சு..
"ஏய்.. என்ன.. தைரியம் கூடிப் போச்சா.." அவன் பார்வை சிறுத்தையாய் சிறுத்தது..
பதில் பேசாமல் அமைதியாக அவனருகே அமர்ந்து உணவு பரிமாறினாள்..
"முழு நேரமும் போதையிலேயே இருப்பியா.. உன் கண்ணு ஏன் இப்படி சுருட்டி இழுக்குது.." தரையில் சம்மணமிட்டு அமர்ந்த போதிலும் இடக்கரத்தை தொடையின் மீது ஊன்றி ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்தவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்..
"அப்ப நீங்க தான் போதையில் இருக்கீங்க.." அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்..
"என்னது..!!" குருக்ஷேத்ராவின் புருவங்கள் உயர்ந்தன..
"ஒன்னும் இல்ல சாப்பிடுங்க.. முழங்காலிட்டு அமர்ந்து பனை ஓலை விசிறியால் அவனுக்கு விசிறி விட சில்லென்ற காற்று அவன் கேசம் கலைத்து போனது.. அடுப்படியில் காற்றாடி இல்லை.. எண்ணெய் பளபளக்கும் மிளகாய் தூள் தூக்கலான குழம்பின் உபயத்தால் இதழோரம் சிவந்திருக்க நிமிர்ந்து பார்த்தான் அவன்.. நல்லவேளையாக இந்த முறை தட்டை வீசி எறியவில்லை.. கண்கள் உருட்டி கவளமாக வாயில் வைத்தவன் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாத பாவனையோடு தொடர்ந்து உண்டதில் "அப்பாடா.." என்ற நிம்மதி பெருமூச்சு அவளுள்..
"எதுக்கு விசிறி விடற.." கேள்வி கரடு முரடாய்..!!
"உங்களுக்கு வேர்க்குதே.." என்றவளை கண்கள் சுருக்கி வித்தியாசமாக பார்த்தான்..
அவள் சந்தன நிற சருமத்திலும் பன்னீர் துளிகளாய் வியர்வை.. கண்டதில் குருக்ஷேத்ரா காதோரம் சூடேறியது.. ஏன் என்று புரியவில்லை.. அந்த வியர்வைத் துளிகளை சுவைத்துப் பார்க்க நாவோரம் எச்சில் சுரப்பிகளில் தூண்டுதல்..
இடதுகையின் இரு விரல்களால் வியர்வைத்துளிகளை அவள் கன்ன சதையோடு நசுக்கினான்..
"அம்மா.. ஆஆ.." அன்பரசி வலியில் அலறி அவனை வினோதமாக பார்க்க.. வியர்வை என்ற சாதாரண உப்பு நீர் வெளியேற்றம் தனக்குள் ஏன் வேறு மாதிரியான மாற்றங்களை தருகிறது.. அடிவயிற்றிலிருந்து எழுந்த புரியாத உணர்வில் குழம்பினான் அவன்.. உப்பியிருந்த கன்னத்தின் மென்மை அவன் பற்களுக்குள் உமிழ்நீராக ஊறியது..
மீண்டும் கடின முகத்துடன் எக்ஸ்பரிமென்டல் பர்பஸோடு அவன் கன்னத்தை கிள்ளினான்..
"அம்மாஆஆ.." வலியில் முகம் சுணங்கி கன்னம் தேய்த்துக் கொண்டு தட்டில் மீண்டும் சாதம் வைத்தாள்.. சோற்றில் கவனம் இல்லை.. முட்டை கண்களும் மொட்டு கன்னங்களும் அவனை பலத்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தின..
மீண்டும் கிள்ள வர.. "வலிக்குது விடுங்களேன்.." கண்கள் கலங்கி போயிருந்தாள் அன்பரசி.. அவன் கிள்ளிய இடம் வட்டமாக சிவந்து போயிருந்தது..
"பொண்டாட்டிகிட்டே நினைச்து எல்லாத்தையும் செய்யலாம்னு துரைசாமி சொன்னான்.. நீ என்னடான்னா கையை தட்டி விடற.. அவ்ளோ தைரியமா உனக்கு.." அவள் கரம் பற்றி முரட்டுத் தனமாக தன்பக்கம் இழுத்தான்..
"எனக்கு வலிச்சது.."
"வலிச்சா பொறுத்துக்கனும்.. அழுவியா நீ..!!" அவன் கேள்வியில் மேலும் உதடு வளைந்து விசும்பினாள்.. கண்ணீர் கோர்த்துக் கொண்டது விழிகளில்.. அவளின் விதவிதமான பாவனைகள் ஆடவன் கண்களில் நிறம் கூட்டின..
உற்றுப் பார்க்க ஆரம்பித்ததில் அவள் உணர்வுகளும் உள்ளுக்குள் ஊடுருவின.. அந்த கண்ணீர் கூட ஏதோ செய்கிறதே..!!
தனக்குள் என்ன நிகழுகிறதென புரியாமல் பற்களை கடித்தவன் தட்டை தூக்கி அடிக்கும் நேரம் அவன் கரத்தை சட்டென பற்றியவள் தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள்..
அன்பரசியை பார்த்தபடியே தட்டை நங்கென தரையில் வைத்தவன் அவளை முறைத்த படியே உண்பதை தொடர்ந்தான்.. அவன் கன்னம் வேண்டுமாம்.. தேவைகளை தெளிவாக கேட்கத் தெரியவில்லை..
தன் கன்னத்தை அவன் விரல்களால் மென்மையாக வருடிக் கொடுத்தாள் அன்பு.. உணவருந்தும் கரம் அப்படியே நின்றுவிட எச்சில் விழுங்கி தரையை வெறித்தான் அவன்..
"இது என்ன மாவு உருண்டையா.. இத்தனை மெத்துன்னு இருக்கு.." அவன் எண்ணம் இது.. கரடு முரடான தாடிகளுக்குள் மறைந்த கன்னங்களை குமட்டில் குத்தி.. இரத்தம் பார்த்து பழக்கப்பட்டவனுக்கு சந்தனத்தின் வழவழப்பும் உப்பலான ஆப்பிள் கதுப்பும் விளையாட்டு பொருளாய் ஆர்வத்தை தூண்டியது.. காப்பு காய்ச்சிப் போன அவன் உள்ளங்கரத்தை மென்மையாக வருடி இதழால் முத்தமிட்டாள் அன்பு..
ஊசியாய் ஊடுருவிய மின்சாரத்தோடு விழிகள் நிலைகுத்தி அவளையே பார்த்தன..
"இப்போ என்ன செஞ்சே நீ.." உதட்டை குவித்து வரும் சத்தம் முத்தம் என தெரியாது.. முத்தம் வாங்கியதும் இல்லை.. கொடுத்தும் பழக்கம் இல்லை.. முழுக்க முழுக்க காதல் நிறைந்த சினிமா படங்களை பார்க்குமளவிற்கு பொறுமையும் இருந்ததில்லை.. அதற்காக இவன் கூச்சம் நிறைந்த 90ஸ் கிட்டா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..
தயக்கம் கூச்சம் என்ன விலை என்று கேட்பான்.. அவுட் ஆஃப் சிலபஸ் என்று ஒதுக்கி வைத்திருந்த பாடங்களை ஆராயத் துவங்கியதன் முதல்கட்டம்..
அவன் கேள்விக்கு.. "முத்..தம்.." அன்பரசியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..
மீண்டும் அந்த மிருதுவான ஈர இதழ் தன் உள்ளங்கையில் அழுத்த வேண்டும்.. கழுத்திலிருந்து அடிவயிறு வரை இரத்த நாளங்களோடு சூடாக பரவிய அந்த சுகம் வேண்டும் என்று முரட்டு தேகம் பரபரத்தது.. ஆனால் வாய்விட்டு கேட்க வெட்டி ஈகோ தடுக்க.. தேவைப்பட்டதை தானே எடுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு
உள்ளங்கயை அவள் உதட்டில் வைத்து அழுத்தியதில் கண்களை அகல விரித்தாள் அவள்.. மாயச் சுழலாய் அந்த கண்கள் தன்னை உள்ளிழுப்பதாய் உணர்ந்தவன் தலைசாய்த்து அந்த கண்களை பார்த்தான்..
விரல்களை திருப்பி அந்த கன்னத்தை பற்றி இருமுறை அழுத்தினான்.. குழிந்த கன்னங்களை விட்டு பார்வையை எடுக்க இயலவில்லை.. கண்கள் மட்டும் போதையேற்றவில்லை.. இந்த கன்னங்களும்.. இரண்டாக வெட்டி இருபக்கங்களிலும் ஒட்ட வைத்த ஆப்பிள் துண்டுதான் இது.. ஆனால் மெத்தென விழுந்து உருளும் மென்மையோடு.. இப்போதுவரை தொடுதல்.. பார்த்தல் இருபுலன்களால் இன்பம் அறிந்திருக்கிறான் குரு..
பொறுமையின்றி அவள் கன்னத்தை நறுக்கென கிள்ள .. "ஸ்ஸ்ஸ் ஆஆஆ.." மீண்டும் வலியில் அலறினாள்..
"தொட்டுத் தடவிப் பார்க்க எனக்கு பொறுமை இல்ல.. இப்படித்தான் செய்வேன்.. இந்த கன்னத்தில ஓங்கி ஒரு அறை விட்டா எப்படி சிவக்கும்னு பார்க்கத் தோணுது.." அவன் பேச்சில் ஈரக்குலை நடுங்கியது.. முரடனை மாற்றவே முடியாது போலிருக்கிறதே..!!
அவன் காலி செய்த தட்டை எடுத்துக் கொண்டு ஓடியே விட்டாள்..
பாட்டி வைத்தியம் வேலை செய்யுமா.. உள்ளுக்குள் கலக்கம் பரவியது..
மதிய உணவிற்கு பின் வடிவு அன்பரசி ஓய்வாக வேப்ப மரத்தடியின் கட்டிலில் அமர்ந்திருந்தனர்..
அன்பரசியின் முகம் வாடிப் போயிருந்தது.. எதையோ எண்ணி பயந்து போனவளாய் முகம் வெளிறித் தெரிந்தாள்.
"என்னம்மா.. ஏன் கண்ணு ஒருமாதிரி தெரியற.."
"ஒ.. ஒண்ணும்.. இல்ல பாட்டி.." மெல்ல சிரித்து சமாளிக்க முயன்றாள்..
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினாள் வடிவம்பாள்..
"நான் அனுபவஸ்தி.. என்னால உன் கண்ணை பார்த்தே நீ எதுக்காக கலங்கி நிக்கிறேன்னு புரிஞ்சிக்க முடியுது.. ஆனா பயந்து வாசக் கதவை சாத்தி வைச்சிட்டா நினைச்சதை சாதிக்க முடியாதே கண்ணு.."
"அதுக்காக பலிபொருளா என்னையே கொடுக்க சொல்றீங்களா.. ராத்திரி பொழுதை நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு பாட்டி.." குத்துக்காலிட்டு அமர்ந்தாள் அவள்..
"நான் அப்ப சொன்னதைதான் இப்பவும் சொல்றேன்.. உன் புருஷனை பாய்மாதிரி உனக்குள்ள சுருட்டி வைச்சிக்க ஒரே வழி தாம்பத்யம் தான்.."
"போ பாட்டி.. என்னால வாய்விட்டு சொல்ல முடியல.. காட்டுப் புலி மாதிரி பாய்ஞ்சா..!! என்னால தாங்க முடியல.." கண்களை துடைத்துக் கொண்டாள்..
"அவன் காட்டுப் புலியா இருந்தா நீ பெண் புலியா மாறிடு.. அவனை அடக்கற மாயவித்தை உன்கிட்டேதானே இருக்கு.. "
"புரியலையே பாட்டி.." கண்களை சுருக்கினாள் அன்பரசி..
"அந்த முரட்டு பயலுக்கு தாம்பத்தியத்தை பற்றி பெருசா என்ன தெரிஞ்சிட போகுது.. இதுதான் உறவுன்னு அவன் மூளையில பதிஞ்சு போயிருக்கு.. அதை மாத்தி அவனுக்கு வேற ஒரு உலகத்தை காட்ட வேண்டியது யாரோட கடமை.."
"யார் கடமை.." புரியாமல் விழித்தாள் அன்பரசி..
"ஹான்.. என் கொள்ளு பாட்டியோட கடமை.. ஆள பாரு.. இந்தா பொண்ணு.. நான் சொல்றதை கற்பூரம் மாதிரி பிடிச்சுக்க.. அவனுக்கு தாம்பத்திய சுகத்துல புதுசு புதுசா ருசியை காட்டி உனக்கு அடிமையாக்கிடு.. அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்" வடிவு ஹஸ்கி வாய்ஸில் சொல்ல விழிகளை விரித்தாள் அன்பு..
"ஐயோ என்ன பாட்டி இவ்வளவு பச்சையா பேசறீங்க.." காதுகளை மூடினாள் அவள்..
"அப்படி சொன்னாலும் உனக்கு புரியறது இல்லையே.. அதுவும் இல்லாம அவனோட பொண்டாட்டி உன்கிட்ட தானே வாழ்க்கையோட நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.."
"அய்யோ போங்க பாட்டி.. எனக்கு அதெல்லாம் தெரியாது.." வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்..
"அவன் முரட்டு பையன்.. காதல் காமம் வகையறா தெரியாது.. நீ இந்த காலத்து பொண்ணு தானே.. அடிப்படை பாடம் தெரியாதுன்னு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு.."
"அதெல்லாம் தெரியும்.. ஆனா.."
"இது என்ன..?" தன் சேலை முந்தானையை காண்பித்தாள் பாட்டி..
"புடவை.."
"ப்ச்.. இது ஒரு துணி.. இதை புடவையா கட்டலாம்.. சட்டையா தைக்கலாம்.. ஜாக்கெட் துணியா மாத்தலாம்.. அதுல பூ போட்டு எம்பிராய்டரி பண்ணலாம்.. பாவாடை தைக்கலாம் சுடிதார் தைக்கலாம்.. ஒரே துணி தான் ஆனா நமக்கு ஏத்த மாதிரி வெவ்வேறு விதமா மாத்திக்கிறது யாரோட கையில இருக்கு.."
"நம்ம கையில.."
"சரியா சொன்னே.. இப்படி விதவிதமா துணியை வடிவமா மாத்த நமக்கு என்ன வேணும்.."
"எ.. என்ன வேணும்..?"
"ரசனையும்.. படைப்புத் திறனும்.. தாம்பத்திய ரகசியமும் இதுதான்.. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை.. இதுக்கு மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.." பாட்டி நொந்து போக.. அன்பரசி ஆங் என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
பாட்டி சொல்லிக் கொடுத்த வித்தையை பிடித்துக் கொண்டு.. அதிலிருந்து தன் முதல் கட்ட பாடங்களை முரட்டு மாணவனுக்கு துவங்கியிருக்க.. அவனும் ஓங்கி அறைந்தால் உன் கன்னம் சிவக்குமா என்று கேட்கிறானே..!!
பாத்திரங்களை எடுத்துச் சென்ற சிங்கில் போட்டு கழுவிக் கொண்டிருந்தாள் அன்பரசி.. திடீரென வலப்பக்கம் சுவரோடு அவரை நசுக்கியபடி இடித்து நின்றான் குரு..
என்னவோ தெரியவில்லை அவள் முகத்தை திரும்ப பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதாம்.. அடிதடியோ காதலோ காமமோ எதிலும் ஓவர் டோஸ் தான்.. அந்த கண்களையும் கன்னங்களையும் ஒரு மாதிரியான மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. முத்தமிட்டது இந்த உதடு தானே.. இந்த உதடு இன்னும் என்னென்ன வித்தைகள் செய்யுமோ..!! கண்கள் மீதான மயக்கம் கன்னங்களில் இறங்கி இப்பொழுது சிவந்த உதட்டின் மேல் தாவியிருந்தது..
கன்னங்களை அழுத்தி இதழ்களை குவியச் செய்தான்.. அந்த உதட்டு வரிகள் அவன் கண்களில் செவ்வரியோடச் செய்தன.. கட்டை விரலால் அவள் உதடுகளை அழுத்தமாக வருடினான்.. வலிக்கத்தான் செய்தது.. பொறுத்துக் கொண்டாள்..
சுவற்றோடு அழுத்தி இருந்ததில் அவள் வலது தோள் அவன் மார்பில் பட்டு உடைந்து விழுமளவிற்கு வலித்தன.. சட்டென அவள் பக்கவாட்டில் திரும்பி சுவற்றில் சாய்ந்து நிற்க.. பிடிமானம் இல்லாமல் அவள் மேலே சாய்ந்தான் குரு.. இருமென்பஞ்சு மேகங்கள் கத்திகளாய் அவன் மார்பை குத்தி கிழித்ததில் விழிகள் பளீரென விரிந்தன..
விஷயம் தெரியாதவன் இல்லை.. பெண் அங்கம் தெரியும்.. அதில் ஆணின் தேவைகளும் சேவைகளும் எங்கெங்கே ஒளிந்து இருக்கிறது தெரியவில்லை.. உரசினால் உடல் முழுக்க மின்சாரம் பாயுமா..!! மேலும் அவளை அழுத்தினான்.. மூச்சு முட்டியது.. மார்பில் கை வைத்து அவனை தள்ளினாள் அன்பு..
கண்கள் கீழிறங்கியது.. சட்டென அவள் புடவை முந்தானையில் கை வைத்திருந்தான்..
"அய்யோ.." தன் மார்போடு கை வைத்து அவனை தடுத்தாள் அன்பு..
"ஹேய்.. கையை எடு.." உள்ளுக்குள் அலைகடலின் ஆர்ப்பரிப்போடு வேகம் கூடியதில் அவன் கர்ஜித்தான்..
"எனக்கு பாக்கணும்.." கையை எடு..
"யாராவது வந்துருவாங்க.. விடுங்க.." அவனிடமிருந்து ஓட முயன்றவளை இழுத்து சுவற்றில் தள்ளினான்..
"நான் கேட்டு தர மாட்டேன்னு சொல்லுவியா..!! என்னை மீறி இங்கே யார் வருவா..?" அடிக்குரலில் இரைந்தான்..
"அய்யோ நான் சொல்றதை கேளுங்க.. நம்ம ரூமுக்கு போயிடலாம்.. அங்கே நீங்க என்ன சொன்னாலும் செய்கிறேன்.. என்ன கேட்டாலும் தரேன்.. அவள் மறுப்புகள் எதுவும் செல்லுபடி ஆகவில்லை.." தடுக்க தடுக்க கேளாமல் அவள் மார்பு சேலையை விலக்கி இருந்தான் குரு..
அவனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அவனிடமே சரணடைந்து இறுக அணைத்துக் கொண்டாள் அன்பரசி.. மலர்மாலையாக தன்னை சுற்றிக் கொண்ட பெண் தேகத்தின் கதகதப்பில் உறைந்து சிலையாகினான் குருக்ஷேத்ரா..
தொடரும்..
Last edited: