- Joined
- Jan 10, 2023
- Messages
- 63
- Thread Author
- #1
எதிரே உறுமிக் கொண்டிருந்த புலியை அப்போதுதான் கண்டு கொண்டான் கைலாஷ்.. ஆக்ரோஷமான புலியை விட வருணியின் அதி மென்மையான காதல் பார்வை அகம் வரை துளைத்து பயமுறுத்தியது.. எழுந்து நடப்பதற்குள் அவள் அனுவித்த வலிகளை வேதனைகளை மனதால் உணர்ந்தவனின் இதயம் சுத்தியலால் உடைக்கப்பட்டதை போல் சில்லு சில்லாக சிதறியது.. கருங்கல்லால் செதுக்கப்பட்ட கைலாஷ் என்ற சிற்பம்.. காதல் என்ற உளி பட்டு மெழுகாக கரைந்துருகியது.. கரைந்துருகிய மெழுகு மலர்க் குவியலாக மாறி வருணியின் பாதங்களை சரணைடைந்தது..
புலியைக் கண்ட பயத்தில் உடல் விரைத்து நின்றிருந்தாள் வருணி.. அப்போதும் அவள் சொன்ன வார்த்தைகள் குத்தீட்டியாய் அவன் நெஞ்சை துளைத்தது..
"இங்கேருந்து போய்டு அன்பு.. நான் இங்கேயே நிக்கிறேன். புலி என்னை இரையா எடுத்துக்கட்டும்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நீ ஓடிடு".. என்றாள் திடமாக.. கண்களில் அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதி மின்ன..
வெறித்த பார்வையுடன் அந்த விழிகளை நோக்கியவனோ.. "என்ன? சாகப் போறவ எனக்காக செய்ய போற தியாகமா".. என்றான் கேலி இழையோட.. ஏதாவது ஒரு விதத்தில் அவள் காதல் பொய் என்று நிரூபித்து விட்டால்.. இது காதலே அல்ல என்று அவன் மனதிற்கு சமாதானம் சொல்லிவிட்டால்.. நடுங்கும் தன் ஆன்மாவை பழையபடி மீட்டுக் கொள்ளலாம்.. இஷ்டம் போல் வாழலாம் என மிச்சமிருந்த நம்பிக்கையுடன் வினவினான்..
உன் வாழ்க்கை என் கையில் என்னும்விதமாக நிதானமான பார்வையுடன் நிமிர்ந்தவளோ "நான் நூறு வருஷம் வாழற மாதிரி இருந்தாலும் உனக்காக இதைத்தான் செய்வேன் அன்பு".. என்றாள் கண்கள் கலங்கி.. ஆத்மார்த்தமான வார்த்தைகள்.. உயிரை சுடும் உண்மை.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டிருந்தவன் "விலகி நில்லு".. என்று அவளை ஓரமாக நிற்க வைத்துவிட்டு உறுமிக் கொண்டே தாக்குதலுக்கு தயாரான புலியை விழிகளால் அளவிட்டபடி "நீ அந்த மரத்துக்கு பின்னாடி போ" என்று கட்டளையிட்டான்..
"உங்களை விட்டு போக மாட்டேன் அன்பு.. நீங்களும் வந்திருங்க".. என்று சட்டையை பிடித்து இழுத்தவளை.. "நீ போடி.. நான் எப்படியும் வந்திருவேன்".. என்று புலியைக் கண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பி விழிகள் பளபளத்து "உனக்காக கண்டிப்பா வருவேன்டி".. என்று மீண்டுமொருமுறை அழுத்திச் சொல்லி.. இமைக்கும் நொடியில் அவள் முதுகை பற்றியிழுத்து இதழில் முத்தமிட்டிருந்தான்..
ஓரிரு நொடிகள் மட்டுமே நீடித்த அந்த முத்தத்துடன் அவளை பின்னால் பிடித்து தள்ள.. அழுது கொண்டே கால்கள் தள்ளாட நகர்ந்தவளோ மிரட்சியுடன் தன் மீது வந்து மோதிய மான் குட்டியை கையில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த மரத்தின் பின்னால் சென்று ஒளிந்தாள்.. இரை ஒன்று தப்பி ஓடுவதை கண்ட புலியோ முழு வேகத்துடன் பாய்ந்து அவளை தாக்க முற்பட குறுக்கே புகுந்தவனோ புலியின் மீது பாய்ந்து ஓரிரு கணங்களில் சரியவைத்து துடிக்க வைத்திருந்தான் அக்கொடிய மிருகத்தை..
அவன் மீது விழுந்த முந்நூறு கிலோ எடை கொண்ட மிருகத்தை இரம்புகரம் கொண்டு விலக்கி போட்டான்.. சிரமம்தான்.. ஆனால் வேறு வழியில்லையே.. புலியின் காலில் பலத்த காயம்.. தன் கையிலிருந்த பாக்கெட் கத்தியால் புலியின் காலை கிழித்திருந்தான் கைலாஷ்.. இரத்தம் சொட்ட சொட்ட தடுமாறி விழுந்த புலி சுதாரிப்பதற்குள் சட்டென எழுந்தமர்ந்து பேன்ட் பாக்கெட்டை துழாவி அவசரத் தேவைக்காக வைத்திருந்த பாக்கெட் லிக்வரை எடுத்து சருகுகளில் ஊற்றி லைட்டரால் பற்ற வைக்க.. நெருப்பு குப்பென பற்றிக் கொண்டது.. அடுத்த கணமே கொழுந்து விட்டெறியும் தீயைக் கண்டு மிரண்ட புலியோ அடிபட்ட காலுடன் தட்டு தடுமாறி அங்கிருந்து ஓடிவிட வியர்த்து போயிருந்தவனோ நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றான் நிம்மதியாக..
அடுத்த கணமே ஓடிவந்து அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் வருணி.. மேனி சிலிர்க்க அவள் அணைப்பில் உடல் தளர்ந்து கருத்த இதழில் புன்னகையை வழியவிட்டவன் ஒரு கரத்தால் பெண்ணவளை முன்னிழுத்து அவள் விழிகளுக்குள் நோக்கினான் தன் பிம்பத்தை.. அவன் பார்வை என்னும் அம்பு மோதி வேடன் என வந்துவிட்டானா என பயந்த மான் குட்டி அவள் கையிலிருந்து நழுவி கீழே இறங்கி ஓடிவிட..
"வ.. வருணி".. என்றான் குரல் தழுதழுக்க.. அழைத்தலில் வித்தியாசம் தோன்றவே புருவங்களை நெரித்தாள் அவள்..
"இனி நீ என்னோட வருணி".. என்று இடையோடு தூக்கி கொண்டான் தன்னை புதுபித்தவளை..
"என்ன புதுசா வருணி?.. வருண் அழகாதானே இருந்துச்சு".. என்றாள் இதழ் விரிய..
அது?.. என ஒரு கணம் பேச்சற்று தடுமாறியவன் மீண்டும் சுதாரித்து "புதைகுழியிலே விழுந்து புதுசா பிறந்துட்டேன்ல.. இது எனக்கு இன்னொரு பிறவி.. அதனால இனி நீ எனக்கு வருணிதான்.. எனக்கு மட்டுமே சொந்தமான வருணி".. என்றான் உறுதியான குரலில்..
மெலிதாக சிரித்தவளும் "கொஞ்ச நாள்தான் உனக்கு சொந்தம் அப்புறம் இந்த வருணி எமனுக்குதான் சொந்தம்".. இன்று இலகுவாக சிரித்திருக்க.. சட்டென முகம் கன்றி போனான் கைலாஷ்.. கரங்கள் தளர்ந்து போக அவன் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருந்தாள் வருணி.. அவன் இயல்புக்கு மாறாக கலங்க துடித்த கண்களை கட்டுப்படுத்திக் கொண்டவனோ சட்டென முகபாவத்தை மாற்றிக் கொண்டு இதழ் விரித்து விழிகளால் அதிசயித்து "நீ நடக்கிறே.. வருணி".. என்றான் உண்மையான மகிழ்ச்சியோடு.. நடந்த கலவரங்களில் தான் நடப்பதை மறந்து போயிருந்தவளுக்கு அவன் வார்த்தைகள் உற்சாகமூட்டவே கைலாஷ் கழுத்தை கட்டிக்கொண்டு கீழே குனிந்த தன் கால்களை பார்த்தாள் பரவசம் பொங்க.. கால்கள் இன்னும் தரையை தொட்டிருக்கவில்லை..
"இறக்கி விடு அன்பு நான் நடக்கிறேன்".. இன்று தன் பாதங்களை பார்த்துக் கொண்டே ஆர்வத்துடன் சொல்ல.. சருகுகளில் அவள் பாதங்களை படவிடாமல் தன் கால்களில் நிறுத்திக் கொண்டவனோ "இப்படியே நட".. என்றான் பொன்னால் இழைத்த முகத்தை ஆசை விழிகளால் அள்ளிப் பருகிக் கொண்டே..
"நான் கீழே இறங்கி நடக்கிறேனே" என்று கிள்ளையாய் கொஞ்சியவளை துளி காமம் இல்லாது ரசித்த தன் மனதை எண்ணி அதிசயித்தான்..
"ஏன் நான் சேறு படிஞ்சு அழுக்கா இருக்கேனா வருணி.. அருவருப்பா இருக்கா என்னை பாக்க.. என்னை பிடிக்கலையா?".. என்று ஏக்கத்துடன் கேட்டவனுடன் இன்னும் நெருங்கி நின்று கொண்டவளோ..
"இந்தச் சேறும் அழுக்கும் நிரந்தரமில்லை அன்பு.. வெளித்தோற்றத்துல நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.. ஆனா உள்ளுக்குள்ளே அழுக்கு படியாத கறந்த பாலை விட சுத்தமான உன் மனசு.. அதுதான் அளவுக்கதிகமாக பைத்தியக்காரத்தனமா உன்னை விரும்ப வைக்குது".. என்று மெய்யுருகும் வார்த்தைகளில் நெஞ்சில் முள் தைக்க முகம் கறுத்து போனான் கைலாஷ்.. சிறிய தடுமாற்றத்துடன் தொண்டைக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவனோ இறுகிய முகத்துடன் "வீட்டுக்கு போகலாம்" என்று அவளை கையிலேந்தி கொண்டான்.. எரிந்து கொண்டிருந்த தீயுடன் சேர்த்து அவன் தீய எண்ணங்களும் பொசுங்கி சாம்பலாகியிருக்க பெண்மானை தூக்கிக் கொண்டு அவ்விடம் விட்டு நகரந்தான் கைலாஷ்..
"வீல் சேர்?".. என்று வருணி வீல் சேர் விழுந்திருந்த திசையை காட்ட.. "இனி அதுக்கு அவசியம் இல்ல".. என்று அங்கிருந்து கிளம்பினான் அவன்.. அவன் கைககுள்ளிருந்து எதையோ தேடினாள் வருணி.. அவள் தேடிய மான்குட்டி ஜோடி போட்டுக்கொண்டு தன் அன்னையுடன் செல்வதை கண்டு திருப்தியானவள் கைலாஷ் கழுத்தை கட்டிக் கொண்டாள் தன்னவனை தாயாக பாவித்து..
ஆடாமல் அசங்காமல் கசங்கிவிடும் மெல்லிய மலர் போல் அவளை கையிலேந்திக் கொண்டே மெயின் ரோட்டை வந்தடைந்தான் கைலாஷ்.. "கை வலிக்கலியா அன்பு".. அவள் பரிவுடன் தலைகோதி வினவ.. "நீ இப்படி அன்பு அன்புன்னு கூப்பிடுறதுதான் மனசு வலிக்குது".. என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் தத்தளித்தவனுக்கு ஒரு முறை கைலாஷ் என்று அழைக்கமாட்டாளா என நெஞ்சுமுழுக்க ஏக்கம் பரவியது..
காட்டுக்கு நடுவே காலியான சாலை இருவரையும் வரவேற்க.. "உன் தங்கச்சி காரை எடுத்துட்டு போய்ட்டா".. என எரிச்சல் பட்டபடி அவளை இறக்கி விட்டவன் நெற்றி வியர்வையை துடைத்தபடி வேறு ஏதாவது வண்டி வருகிறதா என சாலையை எட்டிப் பார்த்தான்..
"இப்படிப்பட்ட பாசக்கார சொந்தங்களுக்குதான் ஒட்டு மொத்த பிராப்பர்ட்டிஸ் எழுதி வைக்க சொன்னீங்க அன்பு".. என்றாள் கேலியாக..
இடுப்பில் கைவைத்து அவளை கூர்ந்து நோக்கியவனோ தான் செய்தது மிகப்பெரிய தவறென உணர்ந்தான் முதல் முறையாக.. அடுத்த கணம் அவள் விழிகளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள.. "இந்த சொத்துக்கள் என்னை விட்டுப் போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. சொத்துக்கள் மேல எனக்கு எந்த ஆசையும் இருந்ததில்ல.. ஆனா இவ்ளோ சுயநலமா யோசிக்கிறவங்க.. நம்மமையே நம்பியிருக்கிற தொழிலாளிகள் நலனில் எப்படி அக்கறை செலுத்துவாங்க.. இலாபத்தை மட்டும் கணக்கிட்டு அவங்க வயித்துல அடிச்சு.. உழைப்பை மட்டும் அட்டை மாதிரி உறிஞ்சி எடுப்ப்பாங்க.. அதை நினைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கு".. என்றாள் முகத்தில் ஒருவித தீவிரத்துடன்..
"இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே வருணி".. அவன் குற்ற உணர்ச்சியுடன் வினவ..
"நான்தான் சொன்னேனே அன்பு.. நீதான் உன் வாதத்துல உறுதியா இருந்தே.. நீ சொல்லி நான் கேக்காம போவேனா?" என்றாள் புன்னகை மாறாமல்.. உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் கைலாஷ் பதில் சொல்ல தெரியாமல் விழித்து நின்றான் குற்றவாளியாக..
"சரி விடு.. இப்போ வீட்டுக்கு எப்படி போறதுன்னு பாப்போம்.. இன்னும் அந்த வீடு என்னோட பேர்ல தான் இருக்கு.. யாரும் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்த முடியாது.. அதனால எப்பவும் போல அந்த வீட்டோட ராஜகுமாரன் நீ தான்" என்று கண்ணடித்தாள் வருணி..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட எப்படி சிரிக்க முடிகிறது இந்த பெண்ணால்.. பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.. சொத்து பறி போனது.. உயிரை வதைக்கும் நோயுடன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.. உறவினர்களின் துரோகங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், ஆனாலும் சிரிக்கின்றாள்.. "எப்படி வருணி".. கேட்காமல் இருக்க முடியவில்லை..
"நீ என் கூட இருக்கியே அன்பு.. வேறென்ன வேணும்".. அவன் மனதில் பிரளயத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை மிக சாதாரணமாக தோளைக் குலுக்கி சொல்லி முடித்து விட்டாள்.. பூக்கள் மலரும் போது பூகம்பம் ஏற்படுவதை போல் அவள் மென்மையான காதல் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆடவனின் உயிரை பயங்கர ஆயுதமாய் இரக்கமின்றி குத்தி கிழிக்கிறது..
எதுவும் பேசாமல் மவுனமாக நின்றான்.. அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களை தாங்க முடியாமல் ஹைட்ராலிக் பிரஷர் போல ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருக்க இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருந்தது..
அவன் தவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வகையில் டெம்போ வேன் ஒன்று அந்தப்பக்கம் வரவே.. இருவரின் வனவாசம் அத்துடன் முடிவடைந்தது.. அழகு மயிலாக நடந்து சென்றவளை விழிகள் மின்ன ரசித்தான் கைலாஷ்.. முதன்முதலாக தத்தி தத்தி நடக்க ஆரம்பிக்கும் பிள்ளையை ரசிக்கும் தந்தை போல.. "என்ன ஆச்சு எனக்கு".. உதட்டை கடித்து பின் தலையை தட்டிக் கொண்டான்..
இதுவரை முரட்டுத்தனமான சூறைக்காற்று வீசிய பாலைதனில் மெல்லிய தென்றல் சில்லென வீச சாரலாய் மழை பொழிய பூத்துக்குலுங்கிய முதல் மலராய் காதல் அவன் நெஞ்சினுள்.. அழகான உணர்வு.. ரசிக்க ரசிக்க பேரின்பம்.. தன்னை அறியாமல் அவளுடன் கைகோர்த்து அமர்ந்து கொண்டான் அந்த வண்டியில்..
காலம் முழுதும் அவளுடன் பயணிக்க வேண்டும்.. எப்படி முடியும்?.. வழியில் காலன் காத்துக்கொண்டிருக்கிறானே.. நெஞ்சில் ரத்தம் வடிவது போன்ற உணர்வு.. தென்றல் வீசிய இடத்தில் யாரோ ஆணி அடித்த வலி.. அடுத்தவரை வலிக்க வைத்தவன் முதன்முறையாக வலி உணர்கிறான்.. அழும் குழந்தையாக இறுக அணைத்துக் கொண்டான் அவளை..
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல் புகைப்படத்தில் தெரிந்த பெண்ணவளை ஆசையாக முத்தமிட்டிருந்தான் ஒருவன்.. புகைப்படத்தில் இருந்தவள் வருணிகா.. முத்தமிட்டவனோ ஒரிஜினல் அன்பு.. "ஐம் கம்மிங் போர் யூ வருண்".. என்றான் தேனோழுக..
துரதிஷ்டவசமாக போலி அன்புவின் நெஞ்சினில் உண்மை காதல் உதயமாகியிருக்க.. உண்மையை போலி என்று நிருபிக்க நிஜ அன்பு வருகிறான்.. ஒரு பக்கம் மரணம்.. மறுபக்கம் உண்மை..
வரப்போகும் இரு பேரிடர்களை எப்படி சமாளிக்க போகிறான் வில்வேந்திரன் கைலாஷ்.. காதலை உணர்த்திவிட்ட காரிகை அவன் கைகளுக்குள் நிலைப்பாளா.. கைமீறி செல்வாளா?
தொடரும்..
புலியைக் கண்ட பயத்தில் உடல் விரைத்து நின்றிருந்தாள் வருணி.. அப்போதும் அவள் சொன்ன வார்த்தைகள் குத்தீட்டியாய் அவன் நெஞ்சை துளைத்தது..
"இங்கேருந்து போய்டு அன்பு.. நான் இங்கேயே நிக்கிறேன். புலி என்னை இரையா எடுத்துக்கட்டும்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நீ ஓடிடு".. என்றாள் திடமாக.. கண்களில் அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதி மின்ன..
வெறித்த பார்வையுடன் அந்த விழிகளை நோக்கியவனோ.. "என்ன? சாகப் போறவ எனக்காக செய்ய போற தியாகமா".. என்றான் கேலி இழையோட.. ஏதாவது ஒரு விதத்தில் அவள் காதல் பொய் என்று நிரூபித்து விட்டால்.. இது காதலே அல்ல என்று அவன் மனதிற்கு சமாதானம் சொல்லிவிட்டால்.. நடுங்கும் தன் ஆன்மாவை பழையபடி மீட்டுக் கொள்ளலாம்.. இஷ்டம் போல் வாழலாம் என மிச்சமிருந்த நம்பிக்கையுடன் வினவினான்..
உன் வாழ்க்கை என் கையில் என்னும்விதமாக நிதானமான பார்வையுடன் நிமிர்ந்தவளோ "நான் நூறு வருஷம் வாழற மாதிரி இருந்தாலும் உனக்காக இதைத்தான் செய்வேன் அன்பு".. என்றாள் கண்கள் கலங்கி.. ஆத்மார்த்தமான வார்த்தைகள்.. உயிரை சுடும் உண்மை.. ஆழ்ந்த பார்வையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டிருந்தவன் "விலகி நில்லு".. என்று அவளை ஓரமாக நிற்க வைத்துவிட்டு உறுமிக் கொண்டே தாக்குதலுக்கு தயாரான புலியை விழிகளால் அளவிட்டபடி "நீ அந்த மரத்துக்கு பின்னாடி போ" என்று கட்டளையிட்டான்..
"உங்களை விட்டு போக மாட்டேன் அன்பு.. நீங்களும் வந்திருங்க".. என்று சட்டையை பிடித்து இழுத்தவளை.. "நீ போடி.. நான் எப்படியும் வந்திருவேன்".. என்று புலியைக் கண்டிருந்தவன் அவள் பக்கம் திரும்பி விழிகள் பளபளத்து "உனக்காக கண்டிப்பா வருவேன்டி".. என்று மீண்டுமொருமுறை அழுத்திச் சொல்லி.. இமைக்கும் நொடியில் அவள் முதுகை பற்றியிழுத்து இதழில் முத்தமிட்டிருந்தான்..
ஓரிரு நொடிகள் மட்டுமே நீடித்த அந்த முத்தத்துடன் அவளை பின்னால் பிடித்து தள்ள.. அழுது கொண்டே கால்கள் தள்ளாட நகர்ந்தவளோ மிரட்சியுடன் தன் மீது வந்து மோதிய மான் குட்டியை கையில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த மரத்தின் பின்னால் சென்று ஒளிந்தாள்.. இரை ஒன்று தப்பி ஓடுவதை கண்ட புலியோ முழு வேகத்துடன் பாய்ந்து அவளை தாக்க முற்பட குறுக்கே புகுந்தவனோ புலியின் மீது பாய்ந்து ஓரிரு கணங்களில் சரியவைத்து துடிக்க வைத்திருந்தான் அக்கொடிய மிருகத்தை..
அவன் மீது விழுந்த முந்நூறு கிலோ எடை கொண்ட மிருகத்தை இரம்புகரம் கொண்டு விலக்கி போட்டான்.. சிரமம்தான்.. ஆனால் வேறு வழியில்லையே.. புலியின் காலில் பலத்த காயம்.. தன் கையிலிருந்த பாக்கெட் கத்தியால் புலியின் காலை கிழித்திருந்தான் கைலாஷ்.. இரத்தம் சொட்ட சொட்ட தடுமாறி விழுந்த புலி சுதாரிப்பதற்குள் சட்டென எழுந்தமர்ந்து பேன்ட் பாக்கெட்டை துழாவி அவசரத் தேவைக்காக வைத்திருந்த பாக்கெட் லிக்வரை எடுத்து சருகுகளில் ஊற்றி லைட்டரால் பற்ற வைக்க.. நெருப்பு குப்பென பற்றிக் கொண்டது.. அடுத்த கணமே கொழுந்து விட்டெறியும் தீயைக் கண்டு மிரண்ட புலியோ அடிபட்ட காலுடன் தட்டு தடுமாறி அங்கிருந்து ஓடிவிட வியர்த்து போயிருந்தவனோ நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றான் நிம்மதியாக..
அடுத்த கணமே ஓடிவந்து அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் வருணி.. மேனி சிலிர்க்க அவள் அணைப்பில் உடல் தளர்ந்து கருத்த இதழில் புன்னகையை வழியவிட்டவன் ஒரு கரத்தால் பெண்ணவளை முன்னிழுத்து அவள் விழிகளுக்குள் நோக்கினான் தன் பிம்பத்தை.. அவன் பார்வை என்னும் அம்பு மோதி வேடன் என வந்துவிட்டானா என பயந்த மான் குட்டி அவள் கையிலிருந்து நழுவி கீழே இறங்கி ஓடிவிட..
"வ.. வருணி".. என்றான் குரல் தழுதழுக்க.. அழைத்தலில் வித்தியாசம் தோன்றவே புருவங்களை நெரித்தாள் அவள்..
"இனி நீ என்னோட வருணி".. என்று இடையோடு தூக்கி கொண்டான் தன்னை புதுபித்தவளை..
"என்ன புதுசா வருணி?.. வருண் அழகாதானே இருந்துச்சு".. என்றாள் இதழ் விரிய..
அது?.. என ஒரு கணம் பேச்சற்று தடுமாறியவன் மீண்டும் சுதாரித்து "புதைகுழியிலே விழுந்து புதுசா பிறந்துட்டேன்ல.. இது எனக்கு இன்னொரு பிறவி.. அதனால இனி நீ எனக்கு வருணிதான்.. எனக்கு மட்டுமே சொந்தமான வருணி".. என்றான் உறுதியான குரலில்..
மெலிதாக சிரித்தவளும் "கொஞ்ச நாள்தான் உனக்கு சொந்தம் அப்புறம் இந்த வருணி எமனுக்குதான் சொந்தம்".. இன்று இலகுவாக சிரித்திருக்க.. சட்டென முகம் கன்றி போனான் கைலாஷ்.. கரங்கள் தளர்ந்து போக அவன் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருந்தாள் வருணி.. அவன் இயல்புக்கு மாறாக கலங்க துடித்த கண்களை கட்டுப்படுத்திக் கொண்டவனோ சட்டென முகபாவத்தை மாற்றிக் கொண்டு இதழ் விரித்து விழிகளால் அதிசயித்து "நீ நடக்கிறே.. வருணி".. என்றான் உண்மையான மகிழ்ச்சியோடு.. நடந்த கலவரங்களில் தான் நடப்பதை மறந்து போயிருந்தவளுக்கு அவன் வார்த்தைகள் உற்சாகமூட்டவே கைலாஷ் கழுத்தை கட்டிக்கொண்டு கீழே குனிந்த தன் கால்களை பார்த்தாள் பரவசம் பொங்க.. கால்கள் இன்னும் தரையை தொட்டிருக்கவில்லை..
"இறக்கி விடு அன்பு நான் நடக்கிறேன்".. இன்று தன் பாதங்களை பார்த்துக் கொண்டே ஆர்வத்துடன் சொல்ல.. சருகுகளில் அவள் பாதங்களை படவிடாமல் தன் கால்களில் நிறுத்திக் கொண்டவனோ "இப்படியே நட".. என்றான் பொன்னால் இழைத்த முகத்தை ஆசை விழிகளால் அள்ளிப் பருகிக் கொண்டே..
"நான் கீழே இறங்கி நடக்கிறேனே" என்று கிள்ளையாய் கொஞ்சியவளை துளி காமம் இல்லாது ரசித்த தன் மனதை எண்ணி அதிசயித்தான்..
"ஏன் நான் சேறு படிஞ்சு அழுக்கா இருக்கேனா வருணி.. அருவருப்பா இருக்கா என்னை பாக்க.. என்னை பிடிக்கலையா?".. என்று ஏக்கத்துடன் கேட்டவனுடன் இன்னும் நெருங்கி நின்று கொண்டவளோ..
"இந்தச் சேறும் அழுக்கும் நிரந்தரமில்லை அன்பு.. வெளித்தோற்றத்துல நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.. ஆனா உள்ளுக்குள்ளே அழுக்கு படியாத கறந்த பாலை விட சுத்தமான உன் மனசு.. அதுதான் அளவுக்கதிகமாக பைத்தியக்காரத்தனமா உன்னை விரும்ப வைக்குது".. என்று மெய்யுருகும் வார்த்தைகளில் நெஞ்சில் முள் தைக்க முகம் கறுத்து போனான் கைலாஷ்.. சிறிய தடுமாற்றத்துடன் தொண்டைக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவனோ இறுகிய முகத்துடன் "வீட்டுக்கு போகலாம்" என்று அவளை கையிலேந்தி கொண்டான்.. எரிந்து கொண்டிருந்த தீயுடன் சேர்த்து அவன் தீய எண்ணங்களும் பொசுங்கி சாம்பலாகியிருக்க பெண்மானை தூக்கிக் கொண்டு அவ்விடம் விட்டு நகரந்தான் கைலாஷ்..
"வீல் சேர்?".. என்று வருணி வீல் சேர் விழுந்திருந்த திசையை காட்ட.. "இனி அதுக்கு அவசியம் இல்ல".. என்று அங்கிருந்து கிளம்பினான் அவன்.. அவன் கைககுள்ளிருந்து எதையோ தேடினாள் வருணி.. அவள் தேடிய மான்குட்டி ஜோடி போட்டுக்கொண்டு தன் அன்னையுடன் செல்வதை கண்டு திருப்தியானவள் கைலாஷ் கழுத்தை கட்டிக் கொண்டாள் தன்னவனை தாயாக பாவித்து..
ஆடாமல் அசங்காமல் கசங்கிவிடும் மெல்லிய மலர் போல் அவளை கையிலேந்திக் கொண்டே மெயின் ரோட்டை வந்தடைந்தான் கைலாஷ்.. "கை வலிக்கலியா அன்பு".. அவள் பரிவுடன் தலைகோதி வினவ.. "நீ இப்படி அன்பு அன்புன்னு கூப்பிடுறதுதான் மனசு வலிக்குது".. என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் தத்தளித்தவனுக்கு ஒரு முறை கைலாஷ் என்று அழைக்கமாட்டாளா என நெஞ்சுமுழுக்க ஏக்கம் பரவியது..
காட்டுக்கு நடுவே காலியான சாலை இருவரையும் வரவேற்க.. "உன் தங்கச்சி காரை எடுத்துட்டு போய்ட்டா".. என எரிச்சல் பட்டபடி அவளை இறக்கி விட்டவன் நெற்றி வியர்வையை துடைத்தபடி வேறு ஏதாவது வண்டி வருகிறதா என சாலையை எட்டிப் பார்த்தான்..
"இப்படிப்பட்ட பாசக்கார சொந்தங்களுக்குதான் ஒட்டு மொத்த பிராப்பர்ட்டிஸ் எழுதி வைக்க சொன்னீங்க அன்பு".. என்றாள் கேலியாக..
இடுப்பில் கைவைத்து அவளை கூர்ந்து நோக்கியவனோ தான் செய்தது மிகப்பெரிய தவறென உணர்ந்தான் முதல் முறையாக.. அடுத்த கணம் அவள் விழிகளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள.. "இந்த சொத்துக்கள் என்னை விட்டுப் போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. சொத்துக்கள் மேல எனக்கு எந்த ஆசையும் இருந்ததில்ல.. ஆனா இவ்ளோ சுயநலமா யோசிக்கிறவங்க.. நம்மமையே நம்பியிருக்கிற தொழிலாளிகள் நலனில் எப்படி அக்கறை செலுத்துவாங்க.. இலாபத்தை மட்டும் கணக்கிட்டு அவங்க வயித்துல அடிச்சு.. உழைப்பை மட்டும் அட்டை மாதிரி உறிஞ்சி எடுப்ப்பாங்க.. அதை நினைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கு".. என்றாள் முகத்தில் ஒருவித தீவிரத்துடன்..
"இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே வருணி".. அவன் குற்ற உணர்ச்சியுடன் வினவ..
"நான்தான் சொன்னேனே அன்பு.. நீதான் உன் வாதத்துல உறுதியா இருந்தே.. நீ சொல்லி நான் கேக்காம போவேனா?" என்றாள் புன்னகை மாறாமல்.. உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் கைலாஷ் பதில் சொல்ல தெரியாமல் விழித்து நின்றான் குற்றவாளியாக..
"சரி விடு.. இப்போ வீட்டுக்கு எப்படி போறதுன்னு பாப்போம்.. இன்னும் அந்த வீடு என்னோட பேர்ல தான் இருக்கு.. யாரும் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்த முடியாது.. அதனால எப்பவும் போல அந்த வீட்டோட ராஜகுமாரன் நீ தான்" என்று கண்ணடித்தாள் வருணி..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட எப்படி சிரிக்க முடிகிறது இந்த பெண்ணால்.. பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.. சொத்து பறி போனது.. உயிரை வதைக்கும் நோயுடன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.. உறவினர்களின் துரோகங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், ஆனாலும் சிரிக்கின்றாள்.. "எப்படி வருணி".. கேட்காமல் இருக்க முடியவில்லை..
"நீ என் கூட இருக்கியே அன்பு.. வேறென்ன வேணும்".. அவன் மனதில் பிரளயத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை மிக சாதாரணமாக தோளைக் குலுக்கி சொல்லி முடித்து விட்டாள்.. பூக்கள் மலரும் போது பூகம்பம் ஏற்படுவதை போல் அவள் மென்மையான காதல் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆடவனின் உயிரை பயங்கர ஆயுதமாய் இரக்கமின்றி குத்தி கிழிக்கிறது..
எதுவும் பேசாமல் மவுனமாக நின்றான்.. அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களை தாங்க முடியாமல் ஹைட்ராலிக் பிரஷர் போல ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருக்க இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருந்தது..
அவன் தவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வகையில் டெம்போ வேன் ஒன்று அந்தப்பக்கம் வரவே.. இருவரின் வனவாசம் அத்துடன் முடிவடைந்தது.. அழகு மயிலாக நடந்து சென்றவளை விழிகள் மின்ன ரசித்தான் கைலாஷ்.. முதன்முதலாக தத்தி தத்தி நடக்க ஆரம்பிக்கும் பிள்ளையை ரசிக்கும் தந்தை போல.. "என்ன ஆச்சு எனக்கு".. உதட்டை கடித்து பின் தலையை தட்டிக் கொண்டான்..
இதுவரை முரட்டுத்தனமான சூறைக்காற்று வீசிய பாலைதனில் மெல்லிய தென்றல் சில்லென வீச சாரலாய் மழை பொழிய பூத்துக்குலுங்கிய முதல் மலராய் காதல் அவன் நெஞ்சினுள்.. அழகான உணர்வு.. ரசிக்க ரசிக்க பேரின்பம்.. தன்னை அறியாமல் அவளுடன் கைகோர்த்து அமர்ந்து கொண்டான் அந்த வண்டியில்..
காலம் முழுதும் அவளுடன் பயணிக்க வேண்டும்.. எப்படி முடியும்?.. வழியில் காலன் காத்துக்கொண்டிருக்கிறானே.. நெஞ்சில் ரத்தம் வடிவது போன்ற உணர்வு.. தென்றல் வீசிய இடத்தில் யாரோ ஆணி அடித்த வலி.. அடுத்தவரை வலிக்க வைத்தவன் முதன்முறையாக வலி உணர்கிறான்.. அழும் குழந்தையாக இறுக அணைத்துக் கொண்டான் அவளை..
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல் புகைப்படத்தில் தெரிந்த பெண்ணவளை ஆசையாக முத்தமிட்டிருந்தான் ஒருவன்.. புகைப்படத்தில் இருந்தவள் வருணிகா.. முத்தமிட்டவனோ ஒரிஜினல் அன்பு.. "ஐம் கம்மிங் போர் யூ வருண்".. என்றான் தேனோழுக..
துரதிஷ்டவசமாக போலி அன்புவின் நெஞ்சினில் உண்மை காதல் உதயமாகியிருக்க.. உண்மையை போலி என்று நிருபிக்க நிஜ அன்பு வருகிறான்.. ஒரு பக்கம் மரணம்.. மறுபக்கம் உண்மை..
வரப்போகும் இரு பேரிடர்களை எப்படி சமாளிக்க போகிறான் வில்வேந்திரன் கைலாஷ்.. காதலை உணர்த்திவிட்ட காரிகை அவன் கைகளுக்குள் நிலைப்பாளா.. கைமீறி செல்வாளா?
தொடரும்..
Last edited: