- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
"இங்க பாருங்க.. உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லை.. கிளாசுக்கு டைம் ஆச்சு..! பத்து நிமிஷத்துல ஃபுட் டெலிவரி ஆயிடும்னு நோட்டிபிகேஷன் வந்துச்சு.. ஆனா நீங்க 40 நிமிஷம் கழிச்சு வர்றீங்க.. எனக்கு லன்ச் டைம் வேற முடிஞ்சு போச்சு..! இதுக்கு மேல எனக்கு சாப்பிட நேரமில்ல.. இந்த பார்சலை வாங்கினாலும் கொண்டு போய் குப்பையில தான் கொட்டணும்.. நீங்க தயவு செஞ்சு இதை எடுத்துட்டு போயிடுங்க.. நான் இந்த ஃபுட்டுக்கு பே பண்ண மாட்டேன்.. அத்தோட டெலிவரி பார்ட்னர் சரியில்லைன்னு உங்களுக்கு ஸ்டார் குறைச்சு கம்ப்ளைன்ட் பண்ண போறேன்.." கோபமாக கத்திக் கொண்டிருந்தவனின் எதிரில் டென்ஷனாக நின்றிருந்தாள் அருந்ததி..
"சார் ட்ராபிக் சார்.. வேணும்னு லேட் பண்ணல.."
"இந்த ரூட்ல டிராபிக் இருக்கும்னு தெரியுமில்ல.. அப்ப கொஞ்சம் சீக்கிரம் புறப்பட்டு வரனும்.. இல்லைனா வேற ரூட் எடுத்திருக்கணும்.."
"எப்படி இருந்தாலும் நீங்க ஆர்டர் செஞ்ச பிறகு தானே சார் ஃபுட் எடுத்துட்டு வர முடியும்..!"
"ஹலோ என்ன.. வாய்ஸ் ரெயிஸ் பண்றே..?"
"உண்மையை சொல்றேன் சார்.. ஃபுட் டெலிவரி பர்சன் தான் அதுக்காக நீ வா போன்னு மரியாதை இல்லாம பேசறது சரி இல்ல சார்..!"
"உனக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு.. உன்னால நான் இன்னைக்கு பட்டினி.. என்னோட லன்ச் டைம் வீணா போச்சு..! இந்த மாதிரி வேலைகளுக்கு உன்ன மாதிரி பொம்பளைங்கள எதுக்கு எடுக்கறாங்கன்னு தெரியல.. பொறுப்பில்லாம ஏதாவது மரத்து நிழல்ல வண்டியை நிறுத்தி காத்து வாங்கிட்டு லாஸ்ட் மினிட்ல அரக்க பறக்க ஓடி வர வேண்டியது.. அப்புறம் டிராபிக்.. கீழ விழுந்துட்டேன் கையில அடிபட்டுடுச்சுன்னு சாக்கு சொல்ல வேண்டியது.. ச்சே..!"
"சார் நெஜமாவே பைக்லருந்து கீழே விழுந்துட்டேன் சார்..! உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கென்ன ஆகப்போகுது.."
"இந்த டிராமா போடுற வேலையெல்லாம் வேண்டாம் உன் ஃபுட்ட எடுத்துக்கிட்டு இங்கருந்து கிளம்பு..! கரெக்ட் டைம் டெலிவரி செய்யாத ஃபுட்டுக்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும்..?"
"சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..!" அருந்ததி கெஞ்சி கொண்டிருக்கும்போதே அங்கு வந்து நின்றான் துரோணன் மகரிஷி..
"வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர் நந்தகுமார்..?"
குரல் கேட்டதில் தங்களை விடவும் உயரமாக நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தனர் அருந்ததியும் நந்த குமாரும் ..
"ஓஹோ..! இது இவர் வேலை செய்யற இடமா..?" ஒரு கணம் ஆச்சரியத்தில் மலர்ந்த அவள் முகம் அடுத்த கணம் அவமானத்தில் சுருங்கி போனது..
"எப்பவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில தான் நான் இவரை பார்க்கணுமா..?"
மனசு நிறைஞ்ச மகிழ்ச்சியோட ஒரு இனிமையான தருணத்தில நாங்க ரெண்டு பேரும் சந்திப்பதற்கான வாய்ப்பே கிடையாதோ..!
வெறுமையான எண்ணங்களுடன் தலை குனிந்து கொண்டாள் அருந்ததி..
"பாருங்க ரிஷி..! கரெக்ட் டைம்க்கு ஃபுட் டெலிவரி பண்ணல.. ஏன் எதுக்குன்னு காரணம் கேட்டா கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே இல்லாம ஓவரா பேசுறாங்க..!" அதே கோபத்துடன் மகரிஷியிடம் புகார் செய்தான் நந்தகுமார்..
மகரிஷி அருந்ததியை திரும்பி பார்த்தான்.. வீட்டில் நின்று பேசும்போது அவன் முகத்தில் தெரியும் கனிவும் புன்னகையும் முழுக்க துடைக்கப்பட்டு ஆசிரியருக்குரிய மிடுக்குடன் நின்று கொண்டிருந்தான்..
அந்த இறுக்கமான கம்பீரம் கூட அவள் உள்ளத்தை துளைத்தெடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..
வெகுநேரமாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அந்தப் பார்வையில் உன் தரப்பு நியாயத்தை சொல் என்ற அர்த்தம் பொதிந்திருப்பதை தாமதமாக உணர்ந்து கொண்டவள் சட்டென சுதாரித்து..
"சார் இவர் ஆர்டர் கொடுத்து பத்து நிமிஷம் நிமிஷம் கழிச்சு தான் ஃபுட் ரெடியாச்சு..! 20 நிமிஷத்துல இங்க வந்து சேர வேண்டியது.. டிராபிக்.. வழியில் ஒரு சின்ன ஆக்சிடென்ட்.." எனும்போது அவன் புருவச் சுருக்கத்தோடு லேசாக அதிர்வதை கண்டுகொண்டாள் அருந்ததி..
"கொஞ்சம் லேட்டாயிடுச்சு சார்.. மத்தபடி இவர் சொல்ற மாதிரி பொறுப்பில்லாம மரத்தடியில் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு ஒன்னும் வரல.."
கைகட்டி அவள் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் நந்தகுமாரன் பக்கம் திரும்பினான்..
"அவங்கதான் சொல்றாங்களே..! கொஞ்சம் அவங்க பக்கமிருந்து யோசிச்சு பார்க்கலாம் இல்லையா..?"
"இல்ல சார்.. எத்தனையோ முறை சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன்.. ஃபுட் டெலிவரி செய்கிற ஆம்பளைங்க யாரும் இதுவரைக்கும் லேட்டா வந்ததே இல்லை.. இதோ இந்த மாதிரி பொம்பளைங்க தான் எப்பவுமே எல்லாத்துலயும் சொதப்பல்.. ஈக்குவாலிட்டி வேணும்.. ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்க ஒன்னும் குறைச்சல் இல்ல.. எங்களால எல்லா வேலையும் செய்ய முடியும்னு காட்டிக்கறதுக்காக தேவையில்லாம எல்லா ஃபீல்டுலயும் மூக்கை நுழைச்சு இப்படி ஏதாவது ஏடாகூடம் செஞ்சு வச்சு அடுத்தவனுக்கு ஏழரைய கூட்டறது..!" என்றபடி அருந்ததியை வெறுப்பாக பார்த்தான நந்தகுமார்..
"நந்தகுமார் இப்போ உங்களுக்கு சரியான நேரத்தில ஃபுட் டெலிவரி பண்ணலங்கிறது பிரச்சனையா.. இல்ல ஃபுட் டெலிவரி பார்ட்னர் ஒரு பொண்ணுங்கறது பிரச்சனையா..?"
"ரெண்டுமே பிரச்சினை தான்..! பொண்ணா இருக்கறதனாலதான கரெக்ட் டைம்க்கு ஆர்டர் டெலிவரி பண்ண முடியல.. இதே இடத்தில ஒரு பையன் இருந்திருந்தா.."
"இருந்திருந்தா..? ட்ராபிக்ல சூப்பர் மேன் மாதிரி பறந்து ஓடி வந்துருப்பானா.. இல்ல குறுக்கே வர்ற லாரிக்கடியில புகுந்து ஸ்பைடர் மேன் மாதிரி எகிறிக் குதிச்சு வந்திருப்பானா.. என்ன சொல்ல வர்றீங்க நந்தகுமார்.. பெண்கள் எல்லா துறையிலும் தலையெடுக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..!"
"என்னவோ தெரியல சார் இவங்கள பாத்தாலே எரிச்சலா வருது.."
"ஆட்டோ ஓட்டுற பொண்ணுங்களும் ஃபுட் டெலிவரி பண்ற இவங்கள மாதிரி பெண்களும் சுகவாசியா ஏசி அறையில் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இல்ல.. ஆம்பளைங்களுக்கு இணையா வெயில்ல கடுமையா உழைக்கறாங்க.. பொம்பளைங்கறதால இவங்களுக்கு எந்த சலுகையும் எக்ஸ்ட்ராவா தரப்படறது இல்லை.. சொல்லப்போனா நம்மள மாதிரி ஆம்பளைங்களால் பிரச்சனைகள் மட்டும்தான் வண்டி வண்டியா வந்து குவியுது..! அத்தனை தொந்தரவுகளையும் பொறுத்துக்கிட்டு குடும்ப சூழல் இயலாமை காரணமா இப்படி ஒரு வேலைக்கு வந்து கஷ்டப்படறவங்களை மதிக்க வேண்டாம்..! இப்படி அவமானப் படுத்தாம இருக்கலாம்"
நந்தகுமாரன் அமைதியாக இருந்தான்..!
"அவங்களுக்கு கையில அடிபட்டிருக்கு.. காயத்தை பார்த்த பிறகுமா உங்க மனசு இறங்கல.. வயசானவங்க கஷ்டப்படும் போது அந்த இடத்துல நம்ம அம்மா அப்பாவை வச்சு பாக்கணும்.. இந்த மாதிரி பொண்ணுங்க கஷ்டப்படும்போது அவங்க இடத்துல நம்ம வீட்டு பொம்பளைங்கள வச்சு பாத்து உணரனும்..!"
"எங்க வீட்டு பொண்ணுங்க ஏன் இப்படி ரோடு ரோடா அலைய போறாங்க..! என் பொண்டாட்டி பேங்க்ல வேலை செய்யறா..! என் தங்கச்சி மெடிசன் படிக்கறா.. என்னோட பையன் கான்வென்ட்ல படிக்கிறான்.." நந்த குமார் உதட்டில் இளக்கார சிரிப்பு..
மகரிஷி சிரித்தான்..!
"பொருளாதார நிலையில கீழே இருக்கிறவங்கள தரக் குறைவா பாக்கற இந்த குணம் உங்களை தவிர உங்க குடும்பத்துல வேற யாருக்கும் இருந்திடக் கூடாதுன்னு நான் கடவுளை வேண்டிக்கறேன்.."
"போதும் ரிஷி..! இப்ப என்ன சொல்ல வர்றீங்க.. ஒருமுறை இப்படி பனிஷ் பண்ணினா தான் அடுத்த முறை இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டாங்க.."
"பனிஷ் பண்றதுக்கு அவங்க எந்த தப்பும் செய்யல சார்..! தயவுசெஞ்சு அந்த சாப்பாட்டு பார்சலை கையில வாங்கிட்டு காசு கொடுத்துடுங்க.." நிதானமாக பேசியபோதிலும் அந்த வார்த்தையில் அழுத்தம் இருந்தது.. நந்தகுமாரனால் அவன் மறுக்க முடியவில்லை..
ஒரு முறைப்போடு உணவை வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலம் பைசாவை செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்..
அருந்ததி நன்றி பெருக்கோடு ரிஷியை பார்த்தாள்..
"ரொம்ப தேங்க்ஸ்.."
"இருக்கட்டும்.. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க.. கரெக்ட் டைம்ல உணவு டெலிவரி பண்ணனும் ஓகே.. ஆனா அதைவிட முக்கியம் உங்க உயிர்.. உங்களை நம்பி உங்க பொண்ணு இருக்கா.. அப்புறம் நானும்.." என்றதும் அருந்ததி இமைதட்டி விழிக்க..
"நீங்க இன்னும் என் கடன அடைக்கவே இல்லையே..! உங்களை நம்பி நாப்பத்தஞ்சாயிரம் தந்திருக்கேன் ஞாபகம் இருக்கட்டும்." என்றதும் அவள் கண்களில் தோன்றிய பொலிவு மயங்கிப் போனது..
"சீக்கிரம் திருப்பி தந்திடுவேன் சார்.."
"காசு கொடுக்கறது இருக்கட்டும்.. முதல்ல வண்டி ஓட்டும்போது கவனமா இருங்க.. உயிரை பணயம் வச்சு அப்படி ஒன்னும் வேலை செய்யணும்னு அவசியமில்ல புரிஞ்சுதா..? ஆசிரியரின் கண்டிப்புடன் அவன் சொல்ல வேறு வழியில்லாமல் சரி என தலையசைத்து..
"கிளம்பறேன் சார்" என்றாள் அருந்ததி..
"ஒரு நிமிஷம்.." என்றவன் இடப்பக்கம் திரும்பி கிஷோர் என்று ஒரு மாணவனை சத்தமாக அழைத்து "கம் ஹியர்" என்றான்..
"சார்" என்று அழைத்தபடி அந்த மாணவன் பக்கத்தில் ஓடி வந்து பணிவோடு நிற்க..
"ஸ்டாப் ரூம்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும்.. எடுத்துட்டு வா..!" என்று மாணவனை அனுப்பிவிட்டு அருந்ததியின் பக்கம் திரும்பினான்..
"எதுக்கு சார்.. பரவாயில்ல இருக்கட்டும் சின்ன காயம் தானே.. அதுவே சரியாகிடும்.."
"முதல்ல நீங்க இப்படி உட்காருங்க.. உங்களை அப்படியே அனுப்பிவிட்டா எனக்கு வேலை ஓடாது.. கிளாஸ் எடுக்க பிரிப்பேர் பண்ணி வச்சதெல்லாம் மறந்து போயிடும்.." என்றவனை இமைக்காமல் பார்த்தபடியே பின்னுக்கு நகர்ந்தவள் அந்த சிமெண்ட் இருக்கையில் தடுமாறி அமரவும்..
"ஏய்.. அருந்ததி.. பாத்து டி.." என்றான் தன்னை மறந்து..
மாணவன் வந்துவிட்டான்..
அவனை அருந்ததியின் எதிரில் அமரச் சொல்லி.. மருந்தை தடவி கட்டு போட சொன்னான் மகரிஷி..
என்ன செய்ய வேண்டும் எப்படி கட்டுப் போட வேண்டுமென்று குறிப்புகளை மட்டும் அவன் தந்து கொண்டிருக்க அவன் சொன்னதை கேட்டு கிஷோர் அருந்ததிக்கு முதலுதவி செய்து கட்டுப்போட்டு விட்டான்..
"தேங்க்ஸ்..! எனக்கு நிறைய உதவி பண்றீங்க..!"
"என்ன உதவி.. என்னை யாராவது கேவலமா திட்டினா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பீங்களா..?"
"ஐயோ இல்ல.."
"என் கையில அடிபட்டு ரத்தம் வந்தா பார்த்து சந்தோஷப்படுவீங்களா..?"
"என்ன பேச்சு இது..?" அருந்ததி பதறினாள்..
"உங்களுக்குள்ள இப்ப வர்ற கோபமும் பதட்டமும் தான் எனக்குள்ளேயும்.. சாப்டீங்களா..?"
"இன்னும் இல்ல..!"
"ஏதாவது வேலை இருக்கா.. பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு.. போய் சாப்பிடலாமா..?"
"என்னங்க இது..? தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்..?" அருந்ததி கவலையாக கேட்டாள்..
"என்னங்க பண்றது..! சந்திராம்மாவுக்கு அக்கறையான அம்மா கிடைச்சிருக்காங்க.. தினமும் லஞ்ச் பிரிப்பேர் பண்ணி தர்றாங்க.. என்னை கவனிச்சிக்க யாரு இருக்கா.." என்றபடி பரிதாபமாக அவளை பார்த்தான்..
"என்னங்க இப்படி பேசறீங்க..! உங்களுக்கு நானும் மதியும் இல்லையா..? நாளையிலிருந்து உங்களுக்கும் சேர்த்து சமைச்சு லஞ்ச் கட்டிக் கொடுத்துடறேன்..! இன்னொரு வாட்டி உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்லாதீங்க..?" உண்மையான படபடப்பும் கோபமும் அந்த வார்த்தைகளில் இருந்ததை புரிந்து கொண்டிருந்தவனின் முகத்தில் பிரகாசம்..
"அப்படி வழிக்கு வாடி அருந்ததி.." மனதுக்குள் உல்லாசம்..
இருவரும் பக்கத்தில் உயர்தர சைவ உணவகத்திற்கு சென்று மதிய உணவை உண்டனர்..
அவளுக்கு முன்பாகவே உண்டு முடித்து கை கழுவி விட்டு வந்து அமர்ந்தவன் கன்னத்தில் கை வைத்து அருந்ததியை பார்த்துக் கொண்டிருந்தான்..
"என்ன ஆச்சு ஏன் இப்படி பாக்கறீங்க..?"
"ஏமிலேது..!" என்றான் புன்னகையோடு தலையைசைத்து..
யாரும் தன் முகத்தை இத்தனை ரசித்துப் பார்த்ததாய் நினைவில்லை.. இதுதான் முதல் நிகழ்வு.. ரசிக்கிறானா அல்லது அருவருக்கிறானா..!
அருவருத்தால் முகத்தை திருப்பிக் கொள்ளத் தானே வேண்டும்.. இப்படி இமை வெட்டாமல் யார் பார்ப்பார்கள்..?
"என் முகம் பார்க்க அவ்வளவு அசிங்கமா இருக்கா..?"
"நுவ்வு சால அந்தங்கா உன்னாவு..'
"திட்றீங்க.."
"அழகா இருக்கடி..!"
அவன் பார்க்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி அவமானப்பட்டு கொண்டிருக்கிறாள்.. உருவமும் பேச்சும் ஏன் செய்யும் செயல்களும் கூட அவனை ஈர்க்கும் வகையில் இல்லையே என்று தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு வருந்தி சங்கடத்தில் ஆழ்ந்திருக்க.. இப்படி ஒரு வார்த்தை அவளை நம்ப முடியாத வியப்பில் ஆழ்த்தி.. வெயிலில் உஷ்ணமிட்ட மேனியெங்கும் குளிர் சாரலாய் சிதறியது..
அதிலும் மகரிஷி அந்த வார்த்தையை சொல்லும்போது அவன் கண்களில் தெரிந்த போதை பார்வை தவறானதாகவே இருந்தாலும்.. அருந்ததியை கட்டியிழுத்து மையல் கொள்ள செய்தது..
பில்லுக்கான பணத்தை அவனே கட்டினான்..
"எவ்ளோ ஆச்சுங்க.. நான் பைசா தரேன்..!"
"குடுங்க.. ஐயாயிரம் ரூபா..!"
"ஐயோ..!"
"அப்புறம் என்ன..! அமைதியா இருடி ஜேஜம்மா..!"
"கோங்ரா.."
"இந்த ஹோட்டலில் அதெல்லாம் கிடைக்காது.."
ம்ம்.. சரிதான்.. உதடு மடித்து சிரித்துக்கொண்டாள் அருந்ததி..
அவளை வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றான் மகரிஷி..
சாலையில் பயணிக்கும் போதெல்லாம் அவன் நினைவுகள் மட்டுமே..!
எப்போதோ எங்கேயோ கேட்ட மெல்லிசை பாடல்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவள் செவிகளை நனைத்து இதயத்தை மயிலிறகால் வருடி தந்தன.. எல்லா பாடல்களிலும் அவள்தான் நாயகி..
மலைகளில் ஓடினாள்..
வயலில் சுற்றித் திரிந்தாள்..
தேவதையாய்.. அழகியாய்.. அவள் மட்டுமே அந்த திரையில்..
மகரிஷி தன் செயல்களால் அருந்ததியை ஈர்த்திருந்தான்.. அவன் செயல்கள் பிடித்ததால் அந்த அழகும் அவன் ஆண்மையும் அருந்ததியின் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறது..
வாழ்க்கையில் இது போன்ற அழகான உணர்வுகளை முதன்முறையாக அனுபவிக்கிறாள்.. இது எனக்கு தேவையில்லாதது என்று விலக்கித் தள்ளவும் முடியவில்லை.. கடும் தாகத்தில் கிடைத்த ஒரு குவளை தண்ணீர் போல் இதுபோன்ற இனிமையான தருணங்கள் அவளின் களைப்பான வாழ்க்கையை கொஞ்சம் இதமடைய செய்திருந்தன..
சிக்னலில் நிற்கும் போது பக்கத்தில் நின்றிருந்த ஒரு காரின் பக்கம் தற்செயலாக திரும்பியவள்.. அதில் தன் முகத்தை பார்த்து லேசாக முறுவலித்தாள்.. எத்தனையோ வருடங்களுக்கு பிறகு மிக நிதானமாக தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்..
அழகா இருக்கடி..
ரிஷியின் குரல் கசிகிறது..
வெயிலில் கருத்து முன்நெற்றியில் விழுந்த முடிகளை கோதிவிட்டபடி.. "அப்படி என்ன அழகு தெரியலையே?" அந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தபடி அவள் புன்னகையோடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க.. பக்கத்து இருசக்கர வாகனங்களில் நின்றவர்களின் முகத்தில் கேலி சிரிப்பு..
யாரையும் பொருட்படுத்தாமல் அருந்ததி தன்னை ரசிக்கிறாள் முதல் முறையாக..
அன்று மாலை மகரிஷியை பற்றி பரவசத்துடன் புகழ்ந்து தள்ளினாள் சந்திரமதி..
"எப்பவும் என்னை ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்கமா அந்த டீச்சர்.. நம்ம ரிஷி என்ன சொன்னாருன்னு தெரியல.. இன்னைக்கு ஃபுல்லா என்னை திட்டவே இல்ல தெரியுமா.. என்கிட்ட அன்பா நடந்துக்கிட்ட மாதிரி தெரிஞ்சது.. என் கிளாஸ் பசங்க எல்லாரும் கேட்டாங்க.. என்னடி பத்மா டீச்சர் இன்னைக்கு ஃபுல்லா உன்ன திட்டவே இல்லைன்னு.. எல்லாத்துக்கும் ரிஷி தான்மா காரணம்.." குதுகலித்தாள் சின்னவள்..
"உன் வாத்தியாருக்கு தேங்க்ஸ் சொன்னியா..?"
"சொன்னேன்.. இதெல்லாம் வேண்டாம் நல்லா படிக்கணும்னு சொல்லிட்டு போய்ட்டார்.." என்றதும் அரை மூடி தேங்காயை துருவிக் கொண்டிருந்த அருந்ததி அவன் அறை பக்கமாய் எட்டிப் பார்த்தாள்..
மிகக் கருத்தாய் புத்தகத்தை புரட்டி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..
"என்னம்மா நீ.. உன் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் காணும்.. சுத்த வேஸ்ட்டும்மா நீ..!" சந்திரமதி சலித்துக் கொண்டாள்..
"என்னை என்ன பண்ண சொல்ற.. நானும் சேர்த்து ஒரு தேங்க்ஸ் சொல்லிடறேன் போதுமா.." என்றபடி வெள்ளைப் பூவாய் நிரம்பியிருந்த தேங்காய் துருவல் தட்டோடு எழுந்து சமையற்கட்டுக்குள் சென்றாள்..
பழக்கமில்லாத உணர்வுகளோடு அவள் போராடிக் கொண்டிருப்பது மகளுக்கு தெரியாதே..!
இன்று தனக்கு பெரும் உபகாரம் செய்திருக்கிறான்.. மகளுக்கும் நன்மை செய்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறான்..!
பருவ வயதில் சினிமாவில் டிஷ்யூம் டிஷ்யூம் என்ற சண்டை போட்டு நாயகியை காப்பாற்றும் நாயகனிடம் கூட இத்தனை கிறுக்குத்தனம் தோன்றியதில்லை..
ஒரு ஹீரோ மெட்டீரியல் போல்.. குறுகுறுப்பு உணர்வுடன் அருந்ததியின் இதயத்தை ஆட்கொண்டிருந்தான் மகரிஷி..
காலம் போன வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா என்று எங்கோ ஒரு மூலையில் ஒரு உருக்குலைந்து முதிர்ச்சியடைந்த மனது அவள் தலையை தட்ட..
என்ன வயசு.. 29 கூட முடியல இதெல்லாம் ஒரு வயசா..? இன்னொரு குரல் அவளுக்கு பரிந்து பேசியது..
"என்ன சார்.. எப்ப பாரு ஏதாவது படிச்சுக்கிட்டே இருக்கீங்க..! தினமும் எடுக்கிற அதே பாடம் தானே.. ஒவ்வொரு நாளும் படிக்கணும்னு அவசியமா என்ன..?" ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அருந்ததி கேட்க..
"நம்மள விட குழந்தைகள் இப்ப ரொம்ப அப்டேட்டடா இருக்காங்க அருந்ததி..! புக்ல இருக்குற பாடத்தை ஒரே மாதிரியா டீச் பண்ணி அவங்களுக்கு புரிய வைக்க முடியல.. அவங்க கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லணும்.. வித்தியாசமா பாடம் நடத்தி அவங்க கவனத்தை கவர்ந்து பாடங்களை மனசுல பதிய வைக்கனும்னா நிறைய புத்தகங்களை படிச்சு நாம அவங்களை விட அப்டேட்டடா இருக்கணும்..!" ரிஷி சொன்னதில் பாதி அவளுக்கு புரியவில்லை.. ஆனால் வாய் பிளந்தபடி தலை சாய்த்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
இதுதான் சாக்கென்று வாஞ்சையின் சாயலாக அவள் முதுகோடு உரசி சென்றது மோத்தி..
அடுத்த நாளிலிருந்து அவனுக்கு மதிய உணவு சேர்த்து சமைத்து பேக் செய்து கொடுத்தாள்..
காலையில் சுடிதார் அணிந்து கொண்டு யூனிபார்ம் பனியனை போட்டுக் கொள்ளாமல் வெகு நேரம் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தாள் சந்திரமதி..!
"என்னமா ஆச்சு உங்களுக்கு..?"
"ஒ.. ஒன்னும் இல்லையே..!" தடுமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்து கொள்ள சந்திரமதிக்குள் ஏதோ உறுத்தல்..!
இன்னொரு நாள்..
"மதி பவுடர் எங்கடி வச்சிருக்க?" என்று புறப்படும் அவசரத்தில் கேட்ட அன்னையை வித்தியாசமாக பார்த்தாள் சந்திரமதி..
"என்னடி அப்படி பாக்கற..?"
"இல்லம்மா இதுவரைக்கும் நீங்க முகத்துக்கு பவுடர் போட்டு நான் பார்த்ததே இல்லையே..!"
அருந்ததியின் முகம் மாறியது..
"ஆமால..! மறந்து போயிடுச்சு.." சிரிப்பும் திணறலுமாக கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் அருந்ததி..
பெட்ரோல் செலவுக்கு பயந்து நடை பயணமாக காய்கறி வாங்கிக்கொண்டு மார்க்கெட் வழியே நடந்து வந்தவளை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தான் ரிஷி..
அந்த ஏரியா மக்களுக்கு அவலாய் மெல்லுவதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன..
பெரும்பாலான நேரங்களில் இருவரையும் சேர்த்து பார்த்து அந்த தெரு மக்கள் ரிஷியை பட்டவர்த்தனமாய் அருந்ததியின் கள்ளக்காதலனாய் பட்டம் கட்டினர்..
துரோணன் மகரிஷி என்ற பெயர் அங்கு யாருக்கும் தெரிவதில்லை.. இப்படி சொன்னால் தான் அவனை அடையாளம் தெரியும்..
கள்ளக் காதலன்..
தொடரும்..
"சார் ட்ராபிக் சார்.. வேணும்னு லேட் பண்ணல.."
"இந்த ரூட்ல டிராபிக் இருக்கும்னு தெரியுமில்ல.. அப்ப கொஞ்சம் சீக்கிரம் புறப்பட்டு வரனும்.. இல்லைனா வேற ரூட் எடுத்திருக்கணும்.."
"எப்படி இருந்தாலும் நீங்க ஆர்டர் செஞ்ச பிறகு தானே சார் ஃபுட் எடுத்துட்டு வர முடியும்..!"
"ஹலோ என்ன.. வாய்ஸ் ரெயிஸ் பண்றே..?"
"உண்மையை சொல்றேன் சார்.. ஃபுட் டெலிவரி பர்சன் தான் அதுக்காக நீ வா போன்னு மரியாதை இல்லாம பேசறது சரி இல்ல சார்..!"
"உனக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு.. உன்னால நான் இன்னைக்கு பட்டினி.. என்னோட லன்ச் டைம் வீணா போச்சு..! இந்த மாதிரி வேலைகளுக்கு உன்ன மாதிரி பொம்பளைங்கள எதுக்கு எடுக்கறாங்கன்னு தெரியல.. பொறுப்பில்லாம ஏதாவது மரத்து நிழல்ல வண்டியை நிறுத்தி காத்து வாங்கிட்டு லாஸ்ட் மினிட்ல அரக்க பறக்க ஓடி வர வேண்டியது.. அப்புறம் டிராபிக்.. கீழ விழுந்துட்டேன் கையில அடிபட்டுடுச்சுன்னு சாக்கு சொல்ல வேண்டியது.. ச்சே..!"
"சார் நெஜமாவே பைக்லருந்து கீழே விழுந்துட்டேன் சார்..! உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கென்ன ஆகப்போகுது.."
"இந்த டிராமா போடுற வேலையெல்லாம் வேண்டாம் உன் ஃபுட்ட எடுத்துக்கிட்டு இங்கருந்து கிளம்பு..! கரெக்ட் டைம் டெலிவரி செய்யாத ஃபுட்டுக்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும்..?"
"சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க..!" அருந்ததி கெஞ்சி கொண்டிருக்கும்போதே அங்கு வந்து நின்றான் துரோணன் மகரிஷி..
"வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர் நந்தகுமார்..?"
குரல் கேட்டதில் தங்களை விடவும் உயரமாக நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தனர் அருந்ததியும் நந்த குமாரும் ..
"ஓஹோ..! இது இவர் வேலை செய்யற இடமா..?" ஒரு கணம் ஆச்சரியத்தில் மலர்ந்த அவள் முகம் அடுத்த கணம் அவமானத்தில் சுருங்கி போனது..
"எப்பவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில தான் நான் இவரை பார்க்கணுமா..?"
மனசு நிறைஞ்ச மகிழ்ச்சியோட ஒரு இனிமையான தருணத்தில நாங்க ரெண்டு பேரும் சந்திப்பதற்கான வாய்ப்பே கிடையாதோ..!
வெறுமையான எண்ணங்களுடன் தலை குனிந்து கொண்டாள் அருந்ததி..
"பாருங்க ரிஷி..! கரெக்ட் டைம்க்கு ஃபுட் டெலிவரி பண்ணல.. ஏன் எதுக்குன்னு காரணம் கேட்டா கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே இல்லாம ஓவரா பேசுறாங்க..!" அதே கோபத்துடன் மகரிஷியிடம் புகார் செய்தான் நந்தகுமார்..
மகரிஷி அருந்ததியை திரும்பி பார்த்தான்.. வீட்டில் நின்று பேசும்போது அவன் முகத்தில் தெரியும் கனிவும் புன்னகையும் முழுக்க துடைக்கப்பட்டு ஆசிரியருக்குரிய மிடுக்குடன் நின்று கொண்டிருந்தான்..
அந்த இறுக்கமான கம்பீரம் கூட அவள் உள்ளத்தை துளைத்தெடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..
வெகுநேரமாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அந்தப் பார்வையில் உன் தரப்பு நியாயத்தை சொல் என்ற அர்த்தம் பொதிந்திருப்பதை தாமதமாக உணர்ந்து கொண்டவள் சட்டென சுதாரித்து..
"சார் இவர் ஆர்டர் கொடுத்து பத்து நிமிஷம் நிமிஷம் கழிச்சு தான் ஃபுட் ரெடியாச்சு..! 20 நிமிஷத்துல இங்க வந்து சேர வேண்டியது.. டிராபிக்.. வழியில் ஒரு சின்ன ஆக்சிடென்ட்.." எனும்போது அவன் புருவச் சுருக்கத்தோடு லேசாக அதிர்வதை கண்டுகொண்டாள் அருந்ததி..
"கொஞ்சம் லேட்டாயிடுச்சு சார்.. மத்தபடி இவர் சொல்ற மாதிரி பொறுப்பில்லாம மரத்தடியில் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு ஒன்னும் வரல.."
கைகட்டி அவள் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் நந்தகுமாரன் பக்கம் திரும்பினான்..
"அவங்கதான் சொல்றாங்களே..! கொஞ்சம் அவங்க பக்கமிருந்து யோசிச்சு பார்க்கலாம் இல்லையா..?"
"இல்ல சார்.. எத்தனையோ முறை சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன்.. ஃபுட் டெலிவரி செய்கிற ஆம்பளைங்க யாரும் இதுவரைக்கும் லேட்டா வந்ததே இல்லை.. இதோ இந்த மாதிரி பொம்பளைங்க தான் எப்பவுமே எல்லாத்துலயும் சொதப்பல்.. ஈக்குவாலிட்டி வேணும்.. ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்க ஒன்னும் குறைச்சல் இல்ல.. எங்களால எல்லா வேலையும் செய்ய முடியும்னு காட்டிக்கறதுக்காக தேவையில்லாம எல்லா ஃபீல்டுலயும் மூக்கை நுழைச்சு இப்படி ஏதாவது ஏடாகூடம் செஞ்சு வச்சு அடுத்தவனுக்கு ஏழரைய கூட்டறது..!" என்றபடி அருந்ததியை வெறுப்பாக பார்த்தான நந்தகுமார்..
"நந்தகுமார் இப்போ உங்களுக்கு சரியான நேரத்தில ஃபுட் டெலிவரி பண்ணலங்கிறது பிரச்சனையா.. இல்ல ஃபுட் டெலிவரி பார்ட்னர் ஒரு பொண்ணுங்கறது பிரச்சனையா..?"
"ரெண்டுமே பிரச்சினை தான்..! பொண்ணா இருக்கறதனாலதான கரெக்ட் டைம்க்கு ஆர்டர் டெலிவரி பண்ண முடியல.. இதே இடத்தில ஒரு பையன் இருந்திருந்தா.."
"இருந்திருந்தா..? ட்ராபிக்ல சூப்பர் மேன் மாதிரி பறந்து ஓடி வந்துருப்பானா.. இல்ல குறுக்கே வர்ற லாரிக்கடியில புகுந்து ஸ்பைடர் மேன் மாதிரி எகிறிக் குதிச்சு வந்திருப்பானா.. என்ன சொல்ல வர்றீங்க நந்தகுமார்.. பெண்கள் எல்லா துறையிலும் தலையெடுக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..!"
"என்னவோ தெரியல சார் இவங்கள பாத்தாலே எரிச்சலா வருது.."
"ஆட்டோ ஓட்டுற பொண்ணுங்களும் ஃபுட் டெலிவரி பண்ற இவங்கள மாதிரி பெண்களும் சுகவாசியா ஏசி அறையில் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இல்ல.. ஆம்பளைங்களுக்கு இணையா வெயில்ல கடுமையா உழைக்கறாங்க.. பொம்பளைங்கறதால இவங்களுக்கு எந்த சலுகையும் எக்ஸ்ட்ராவா தரப்படறது இல்லை.. சொல்லப்போனா நம்மள மாதிரி ஆம்பளைங்களால் பிரச்சனைகள் மட்டும்தான் வண்டி வண்டியா வந்து குவியுது..! அத்தனை தொந்தரவுகளையும் பொறுத்துக்கிட்டு குடும்ப சூழல் இயலாமை காரணமா இப்படி ஒரு வேலைக்கு வந்து கஷ்டப்படறவங்களை மதிக்க வேண்டாம்..! இப்படி அவமானப் படுத்தாம இருக்கலாம்"
நந்தகுமாரன் அமைதியாக இருந்தான்..!
"அவங்களுக்கு கையில அடிபட்டிருக்கு.. காயத்தை பார்த்த பிறகுமா உங்க மனசு இறங்கல.. வயசானவங்க கஷ்டப்படும் போது அந்த இடத்துல நம்ம அம்மா அப்பாவை வச்சு பாக்கணும்.. இந்த மாதிரி பொண்ணுங்க கஷ்டப்படும்போது அவங்க இடத்துல நம்ம வீட்டு பொம்பளைங்கள வச்சு பாத்து உணரனும்..!"
"எங்க வீட்டு பொண்ணுங்க ஏன் இப்படி ரோடு ரோடா அலைய போறாங்க..! என் பொண்டாட்டி பேங்க்ல வேலை செய்யறா..! என் தங்கச்சி மெடிசன் படிக்கறா.. என்னோட பையன் கான்வென்ட்ல படிக்கிறான்.." நந்த குமார் உதட்டில் இளக்கார சிரிப்பு..
மகரிஷி சிரித்தான்..!
"பொருளாதார நிலையில கீழே இருக்கிறவங்கள தரக் குறைவா பாக்கற இந்த குணம் உங்களை தவிர உங்க குடும்பத்துல வேற யாருக்கும் இருந்திடக் கூடாதுன்னு நான் கடவுளை வேண்டிக்கறேன்.."
"போதும் ரிஷி..! இப்ப என்ன சொல்ல வர்றீங்க.. ஒருமுறை இப்படி பனிஷ் பண்ணினா தான் அடுத்த முறை இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டாங்க.."
"பனிஷ் பண்றதுக்கு அவங்க எந்த தப்பும் செய்யல சார்..! தயவுசெஞ்சு அந்த சாப்பாட்டு பார்சலை கையில வாங்கிட்டு காசு கொடுத்துடுங்க.." நிதானமாக பேசியபோதிலும் அந்த வார்த்தையில் அழுத்தம் இருந்தது.. நந்தகுமாரனால் அவன் மறுக்க முடியவில்லை..
ஒரு முறைப்போடு உணவை வாங்கிக் கொண்டு கூகுள் பே மூலம் பைசாவை செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்..
அருந்ததி நன்றி பெருக்கோடு ரிஷியை பார்த்தாள்..
"ரொம்ப தேங்க்ஸ்.."
"இருக்கட்டும்.. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க.. கரெக்ட் டைம்ல உணவு டெலிவரி பண்ணனும் ஓகே.. ஆனா அதைவிட முக்கியம் உங்க உயிர்.. உங்களை நம்பி உங்க பொண்ணு இருக்கா.. அப்புறம் நானும்.." என்றதும் அருந்ததி இமைதட்டி விழிக்க..
"நீங்க இன்னும் என் கடன அடைக்கவே இல்லையே..! உங்களை நம்பி நாப்பத்தஞ்சாயிரம் தந்திருக்கேன் ஞாபகம் இருக்கட்டும்." என்றதும் அவள் கண்களில் தோன்றிய பொலிவு மயங்கிப் போனது..
"சீக்கிரம் திருப்பி தந்திடுவேன் சார்.."
"காசு கொடுக்கறது இருக்கட்டும்.. முதல்ல வண்டி ஓட்டும்போது கவனமா இருங்க.. உயிரை பணயம் வச்சு அப்படி ஒன்னும் வேலை செய்யணும்னு அவசியமில்ல புரிஞ்சுதா..? ஆசிரியரின் கண்டிப்புடன் அவன் சொல்ல வேறு வழியில்லாமல் சரி என தலையசைத்து..
"கிளம்பறேன் சார்" என்றாள் அருந்ததி..
"ஒரு நிமிஷம்.." என்றவன் இடப்பக்கம் திரும்பி கிஷோர் என்று ஒரு மாணவனை சத்தமாக அழைத்து "கம் ஹியர்" என்றான்..
"சார்" என்று அழைத்தபடி அந்த மாணவன் பக்கத்தில் ஓடி வந்து பணிவோடு நிற்க..
"ஸ்டாப் ரூம்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும்.. எடுத்துட்டு வா..!" என்று மாணவனை அனுப்பிவிட்டு அருந்ததியின் பக்கம் திரும்பினான்..
"எதுக்கு சார்.. பரவாயில்ல இருக்கட்டும் சின்ன காயம் தானே.. அதுவே சரியாகிடும்.."
"முதல்ல நீங்க இப்படி உட்காருங்க.. உங்களை அப்படியே அனுப்பிவிட்டா எனக்கு வேலை ஓடாது.. கிளாஸ் எடுக்க பிரிப்பேர் பண்ணி வச்சதெல்லாம் மறந்து போயிடும்.." என்றவனை இமைக்காமல் பார்த்தபடியே பின்னுக்கு நகர்ந்தவள் அந்த சிமெண்ட் இருக்கையில் தடுமாறி அமரவும்..
"ஏய்.. அருந்ததி.. பாத்து டி.." என்றான் தன்னை மறந்து..
மாணவன் வந்துவிட்டான்..
அவனை அருந்ததியின் எதிரில் அமரச் சொல்லி.. மருந்தை தடவி கட்டு போட சொன்னான் மகரிஷி..
என்ன செய்ய வேண்டும் எப்படி கட்டுப் போட வேண்டுமென்று குறிப்புகளை மட்டும் அவன் தந்து கொண்டிருக்க அவன் சொன்னதை கேட்டு கிஷோர் அருந்ததிக்கு முதலுதவி செய்து கட்டுப்போட்டு விட்டான்..
"தேங்க்ஸ்..! எனக்கு நிறைய உதவி பண்றீங்க..!"
"என்ன உதவி.. என்னை யாராவது கேவலமா திட்டினா நீங்க பாத்துட்டு சும்மா இருப்பீங்களா..?"
"ஐயோ இல்ல.."
"என் கையில அடிபட்டு ரத்தம் வந்தா பார்த்து சந்தோஷப்படுவீங்களா..?"
"என்ன பேச்சு இது..?" அருந்ததி பதறினாள்..
"உங்களுக்குள்ள இப்ப வர்ற கோபமும் பதட்டமும் தான் எனக்குள்ளேயும்.. சாப்டீங்களா..?"
"இன்னும் இல்ல..!"
"ஏதாவது வேலை இருக்கா.. பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு.. போய் சாப்பிடலாமா..?"
"என்னங்க இது..? தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்..?" அருந்ததி கவலையாக கேட்டாள்..
"என்னங்க பண்றது..! சந்திராம்மாவுக்கு அக்கறையான அம்மா கிடைச்சிருக்காங்க.. தினமும் லஞ்ச் பிரிப்பேர் பண்ணி தர்றாங்க.. என்னை கவனிச்சிக்க யாரு இருக்கா.." என்றபடி பரிதாபமாக அவளை பார்த்தான்..
"என்னங்க இப்படி பேசறீங்க..! உங்களுக்கு நானும் மதியும் இல்லையா..? நாளையிலிருந்து உங்களுக்கும் சேர்த்து சமைச்சு லஞ்ச் கட்டிக் கொடுத்துடறேன்..! இன்னொரு வாட்டி உங்களுக்கு யாரும் இல்லைன்னு சொல்லாதீங்க..?" உண்மையான படபடப்பும் கோபமும் அந்த வார்த்தைகளில் இருந்ததை புரிந்து கொண்டிருந்தவனின் முகத்தில் பிரகாசம்..
"அப்படி வழிக்கு வாடி அருந்ததி.." மனதுக்குள் உல்லாசம்..
இருவரும் பக்கத்தில் உயர்தர சைவ உணவகத்திற்கு சென்று மதிய உணவை உண்டனர்..
அவளுக்கு முன்பாகவே உண்டு முடித்து கை கழுவி விட்டு வந்து அமர்ந்தவன் கன்னத்தில் கை வைத்து அருந்ததியை பார்த்துக் கொண்டிருந்தான்..
"என்ன ஆச்சு ஏன் இப்படி பாக்கறீங்க..?"
"ஏமிலேது..!" என்றான் புன்னகையோடு தலையைசைத்து..
யாரும் தன் முகத்தை இத்தனை ரசித்துப் பார்த்ததாய் நினைவில்லை.. இதுதான் முதல் நிகழ்வு.. ரசிக்கிறானா அல்லது அருவருக்கிறானா..!
அருவருத்தால் முகத்தை திருப்பிக் கொள்ளத் தானே வேண்டும்.. இப்படி இமை வெட்டாமல் யார் பார்ப்பார்கள்..?
"என் முகம் பார்க்க அவ்வளவு அசிங்கமா இருக்கா..?"
"நுவ்வு சால அந்தங்கா உன்னாவு..'
"திட்றீங்க.."
"அழகா இருக்கடி..!"
அவன் பார்க்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி அவமானப்பட்டு கொண்டிருக்கிறாள்.. உருவமும் பேச்சும் ஏன் செய்யும் செயல்களும் கூட அவனை ஈர்க்கும் வகையில் இல்லையே என்று தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு வருந்தி சங்கடத்தில் ஆழ்ந்திருக்க.. இப்படி ஒரு வார்த்தை அவளை நம்ப முடியாத வியப்பில் ஆழ்த்தி.. வெயிலில் உஷ்ணமிட்ட மேனியெங்கும் குளிர் சாரலாய் சிதறியது..
அதிலும் மகரிஷி அந்த வார்த்தையை சொல்லும்போது அவன் கண்களில் தெரிந்த போதை பார்வை தவறானதாகவே இருந்தாலும்.. அருந்ததியை கட்டியிழுத்து மையல் கொள்ள செய்தது..
பில்லுக்கான பணத்தை அவனே கட்டினான்..
"எவ்ளோ ஆச்சுங்க.. நான் பைசா தரேன்..!"
"குடுங்க.. ஐயாயிரம் ரூபா..!"
"ஐயோ..!"
"அப்புறம் என்ன..! அமைதியா இருடி ஜேஜம்மா..!"
"கோங்ரா.."
"இந்த ஹோட்டலில் அதெல்லாம் கிடைக்காது.."
ம்ம்.. சரிதான்.. உதடு மடித்து சிரித்துக்கொண்டாள் அருந்ததி..
அவளை வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றான் மகரிஷி..
சாலையில் பயணிக்கும் போதெல்லாம் அவன் நினைவுகள் மட்டுமே..!
எப்போதோ எங்கேயோ கேட்ட மெல்லிசை பாடல்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவள் செவிகளை நனைத்து இதயத்தை மயிலிறகால் வருடி தந்தன.. எல்லா பாடல்களிலும் அவள்தான் நாயகி..
மலைகளில் ஓடினாள்..
வயலில் சுற்றித் திரிந்தாள்..
தேவதையாய்.. அழகியாய்.. அவள் மட்டுமே அந்த திரையில்..
மகரிஷி தன் செயல்களால் அருந்ததியை ஈர்த்திருந்தான்.. அவன் செயல்கள் பிடித்ததால் அந்த அழகும் அவன் ஆண்மையும் அருந்ததியின் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறது..
வாழ்க்கையில் இது போன்ற அழகான உணர்வுகளை முதன்முறையாக அனுபவிக்கிறாள்.. இது எனக்கு தேவையில்லாதது என்று விலக்கித் தள்ளவும் முடியவில்லை.. கடும் தாகத்தில் கிடைத்த ஒரு குவளை தண்ணீர் போல் இதுபோன்ற இனிமையான தருணங்கள் அவளின் களைப்பான வாழ்க்கையை கொஞ்சம் இதமடைய செய்திருந்தன..
சிக்னலில் நிற்கும் போது பக்கத்தில் நின்றிருந்த ஒரு காரின் பக்கம் தற்செயலாக திரும்பியவள்.. அதில் தன் முகத்தை பார்த்து லேசாக முறுவலித்தாள்.. எத்தனையோ வருடங்களுக்கு பிறகு மிக நிதானமாக தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்..
அழகா இருக்கடி..
ரிஷியின் குரல் கசிகிறது..
வெயிலில் கருத்து முன்நெற்றியில் விழுந்த முடிகளை கோதிவிட்டபடி.. "அப்படி என்ன அழகு தெரியலையே?" அந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தபடி அவள் புன்னகையோடு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க.. பக்கத்து இருசக்கர வாகனங்களில் நின்றவர்களின் முகத்தில் கேலி சிரிப்பு..
யாரையும் பொருட்படுத்தாமல் அருந்ததி தன்னை ரசிக்கிறாள் முதல் முறையாக..
அன்று மாலை மகரிஷியை பற்றி பரவசத்துடன் புகழ்ந்து தள்ளினாள் சந்திரமதி..
"எப்பவும் என்னை ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்கமா அந்த டீச்சர்.. நம்ம ரிஷி என்ன சொன்னாருன்னு தெரியல.. இன்னைக்கு ஃபுல்லா என்னை திட்டவே இல்ல தெரியுமா.. என்கிட்ட அன்பா நடந்துக்கிட்ட மாதிரி தெரிஞ்சது.. என் கிளாஸ் பசங்க எல்லாரும் கேட்டாங்க.. என்னடி பத்மா டீச்சர் இன்னைக்கு ஃபுல்லா உன்ன திட்டவே இல்லைன்னு.. எல்லாத்துக்கும் ரிஷி தான்மா காரணம்.." குதுகலித்தாள் சின்னவள்..
"உன் வாத்தியாருக்கு தேங்க்ஸ் சொன்னியா..?"
"சொன்னேன்.. இதெல்லாம் வேண்டாம் நல்லா படிக்கணும்னு சொல்லிட்டு போய்ட்டார்.." என்றதும் அரை மூடி தேங்காயை துருவிக் கொண்டிருந்த அருந்ததி அவன் அறை பக்கமாய் எட்டிப் பார்த்தாள்..
மிகக் கருத்தாய் புத்தகத்தை புரட்டி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..
"என்னம்மா நீ.. உன் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் காணும்.. சுத்த வேஸ்ட்டும்மா நீ..!" சந்திரமதி சலித்துக் கொண்டாள்..
"என்னை என்ன பண்ண சொல்ற.. நானும் சேர்த்து ஒரு தேங்க்ஸ் சொல்லிடறேன் போதுமா.." என்றபடி வெள்ளைப் பூவாய் நிரம்பியிருந்த தேங்காய் துருவல் தட்டோடு எழுந்து சமையற்கட்டுக்குள் சென்றாள்..
பழக்கமில்லாத உணர்வுகளோடு அவள் போராடிக் கொண்டிருப்பது மகளுக்கு தெரியாதே..!
இன்று தனக்கு பெரும் உபகாரம் செய்திருக்கிறான்.. மகளுக்கும் நன்மை செய்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறான்..!
பருவ வயதில் சினிமாவில் டிஷ்யூம் டிஷ்யூம் என்ற சண்டை போட்டு நாயகியை காப்பாற்றும் நாயகனிடம் கூட இத்தனை கிறுக்குத்தனம் தோன்றியதில்லை..
ஒரு ஹீரோ மெட்டீரியல் போல்.. குறுகுறுப்பு உணர்வுடன் அருந்ததியின் இதயத்தை ஆட்கொண்டிருந்தான் மகரிஷி..
காலம் போன வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா என்று எங்கோ ஒரு மூலையில் ஒரு உருக்குலைந்து முதிர்ச்சியடைந்த மனது அவள் தலையை தட்ட..
என்ன வயசு.. 29 கூட முடியல இதெல்லாம் ஒரு வயசா..? இன்னொரு குரல் அவளுக்கு பரிந்து பேசியது..
"என்ன சார்.. எப்ப பாரு ஏதாவது படிச்சுக்கிட்டே இருக்கீங்க..! தினமும் எடுக்கிற அதே பாடம் தானே.. ஒவ்வொரு நாளும் படிக்கணும்னு அவசியமா என்ன..?" ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அருந்ததி கேட்க..
"நம்மள விட குழந்தைகள் இப்ப ரொம்ப அப்டேட்டடா இருக்காங்க அருந்ததி..! புக்ல இருக்குற பாடத்தை ஒரே மாதிரியா டீச் பண்ணி அவங்களுக்கு புரிய வைக்க முடியல.. அவங்க கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லணும்.. வித்தியாசமா பாடம் நடத்தி அவங்க கவனத்தை கவர்ந்து பாடங்களை மனசுல பதிய வைக்கனும்னா நிறைய புத்தகங்களை படிச்சு நாம அவங்களை விட அப்டேட்டடா இருக்கணும்..!" ரிஷி சொன்னதில் பாதி அவளுக்கு புரியவில்லை.. ஆனால் வாய் பிளந்தபடி தலை சாய்த்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..
இதுதான் சாக்கென்று வாஞ்சையின் சாயலாக அவள் முதுகோடு உரசி சென்றது மோத்தி..
அடுத்த நாளிலிருந்து அவனுக்கு மதிய உணவு சேர்த்து சமைத்து பேக் செய்து கொடுத்தாள்..
காலையில் சுடிதார் அணிந்து கொண்டு யூனிபார்ம் பனியனை போட்டுக் கொள்ளாமல் வெகு நேரம் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தாள் சந்திரமதி..!
"என்னமா ஆச்சு உங்களுக்கு..?"
"ஒ.. ஒன்னும் இல்லையே..!" தடுமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்து கொள்ள சந்திரமதிக்குள் ஏதோ உறுத்தல்..!
இன்னொரு நாள்..
"மதி பவுடர் எங்கடி வச்சிருக்க?" என்று புறப்படும் அவசரத்தில் கேட்ட அன்னையை வித்தியாசமாக பார்த்தாள் சந்திரமதி..
"என்னடி அப்படி பாக்கற..?"
"இல்லம்மா இதுவரைக்கும் நீங்க முகத்துக்கு பவுடர் போட்டு நான் பார்த்ததே இல்லையே..!"
அருந்ததியின் முகம் மாறியது..
"ஆமால..! மறந்து போயிடுச்சு.." சிரிப்பும் திணறலுமாக கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் அருந்ததி..
பெட்ரோல் செலவுக்கு பயந்து நடை பயணமாக காய்கறி வாங்கிக்கொண்டு மார்க்கெட் வழியே நடந்து வந்தவளை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தான் ரிஷி..
அந்த ஏரியா மக்களுக்கு அவலாய் மெல்லுவதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன..
பெரும்பாலான நேரங்களில் இருவரையும் சேர்த்து பார்த்து அந்த தெரு மக்கள் ரிஷியை பட்டவர்த்தனமாய் அருந்ததியின் கள்ளக்காதலனாய் பட்டம் கட்டினர்..
துரோணன் மகரிஷி என்ற பெயர் அங்கு யாருக்கும் தெரிவதில்லை.. இப்படி சொன்னால் தான் அவனை அடையாளம் தெரியும்..
கள்ளக் காதலன்..
தொடரும்..
Last edited: