- Joined
- Jan 10, 2023
- Messages
- 80
- Thread Author
- #1
"அருந்ததி பொங்கல் இருக்கா.. ஐயோ காலி ஆயிருச்சா..?"
'இன்னைக்கு செய்யவே இல்லையா.."
"பூரி வடகறி இருக்கா..!"
இப்போதெல்லாம் முன்பை விட கூட்டம் சற்று அதிகரித்திருப்பதாக தோன்றியது அருந்ததிக்கு..
இட்லிக்கு வாடிக்கையாளர்கள் பாதி பேர் என்றால் பொங்கல் பூரி வடகறி வடை என்று விதவிதமாய் கேட்டு மீதி பேர் வரிசை கட்டுகின்றனர் அவள் வீட்டு வாசலில்..
உற்சாகத்தோடு மகரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
ஆம் கட் பனியன் ஷாட்சும் போட்டுக் கொண்டு ஈர தலையை துவட்டி கொண்டிருந்தான் அவன்..
அருந்ததிக்கு காதோரம் ஜில்லென ஒரு சிலிர்ப்பு..
வாத்தியாரே..! வாசலில் நின்று அவள் அழைக்கவும்.. ஜன்னல் பார்த்து நின்றவன் திரும்பி அவளைப் பார்த்தான்..
அவன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து அருகே வரவர.. கமகமவென்ற சோப்பின் மணம் அருந்ததியை சுற்றி வளைத்து இறுக்கியது..
பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற ஆராய்ச்சி போல் ஆண்கள் உபயோகிக்கும் சோப்பிற்கு பிரத்தியேக வாசனை உண்டா என்ற சிந்தனைதேடல் அவளுள்..
"ஹலோ மேடம்..!" அவள் கண்கள் முன்பு சொடுக்கு போட்டான்..
"வாத்தியாரே..?"
"வாத்தியாருக்கு பேர் இல்லையோ..?"
'கோங்ரா..?"
"உண்மையை சொல்லு என் பேர் தெரியுமா தெரியாதா உனக்கு.. " தலையை துவட்டிய பூத்துண்டை தோளில் போட்டபடி கேட்டான்..
"ரிஷி.."
"முழு பெயர் என்ன.."
"என்ன ரொம்ப கறாரா கேக்கறீங்க.. வாத்தியார்ன்னு நிரூபிக்கிறீங்களோ..!"
"சொல்லுடி.."
"மகரிஷி.."
"அவ்ளோதானா.."
அவ்வளவுதான் எனக்கு தெரியும்.. சந்திரமதி உங்க பேரு மகரிஷின்னு சொல்லியிருக்கா.. நீங்க இதுவரைக்கும் உங்க பேரு என்னன்னு என்கிட்ட வந்து சொன்னீங்களா..?
"நீ என்னைக்காவது கேட்டுருக்கியா..?"
"சரி இப்ப கேக்கறேன் சொல்லுங்க.. உங்க முழு பேர் என்ன..?"
"சொல்ல மாட்டேன் நீயே கண்டுபிடி.."
"அடடா இது என்ன டெஸ்ட்டா..?"
"அப்படித்தான் வச்சுக்கோயேன்.. உனக்கு ஒரு வாரம் டைம் அதுக்குள்ள என் பேரை கண்டுபிடிச்சிடனும்.."
"இல்லைனா.."
"இல்லைன்னா நான் கேக்கறதை நீ தரணும்..!"
"ஆமா இது பெரிய கம்ப சூத்திரமா என்ன.. எதுக்கு ஒரு வாரம்.. ரெண்டே நாள்ல உங்க பேரை கண்டுபிடிக்கிறேன்னா இல்லையா பாருங்க.."
"அதையும் பார்க்கலாம்.."
நாக்கை உள் பக்கமாக சுழட்டியவன்.. "நான் என்ன கேட்டாலும் நீ தரணும்.. வாக்கு தந்திருக்க.. மறந்துடாதே.." என்றான் கல்மிஷ புன்னகையோடு..
"பெருசா என்ன கேட்டுட போறீங்க.. இட்லி மீன் குழம்பு.. தோசை கறி குழம்பு..! வெங்காய ஊத்தப்பம் தேங்காய் சட்னி.. இதானே..!" உதட்டை சுழித்துக்கொண்டாள் அருந்ததி..
"என்ன வாய்க்குள்ள முனங்கற.."
"ப்ச்..! பாருங்க உங்க கிட்ட எதையோ சொல்ல வந்து இப்ப எதையோ பேசிட்டு இருக்கேன் உங்கள பாத்தாலே எல்லாம் மறந்து போகுது.."
"எனக்கும் அதேதான் உன்ன பார்த்தாலே எல்லாம் மறந்து போகுது..!"
நேர்கோடாக அருந்ததி சொன்ன வார்த்தைகளை கள்ளுப் பானையில் முக்கியெடுத்து மயக்கத்துடன் சொல்ல.. அதை புரிந்து கொள்ளாமல்..
"சரி இப்பவாவது என்னை சொல்ல விடுங்க.. நீங்க சொன்னது சரிதான்.. ஆரம்பத்துல ரெண்டு நாள்ல எந்த வித்தியாசமும் தெரியல ஆனா இப்போ எல்லாரும் பொங்கல் வேணும் பூரி வேணும் வடை இல்லையான்னு கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க..! புதுசு புதுசா ஆளுங்கள பார்க்க முடியுது..! முன்னாடி பத்து பதினஞ்சு பேர் வர்றதே பெரிய விஷயம்.. இப்ப என்னடான்னா திடீர்னு ஒரே நேரத்தில் இருபது பேர் வந்து நின்னுட்டாங்க..! சில பேருக்கு இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்ப வேண்டியதா போயிடுச்சு.." சந்தோஷத்துடன் ஆரம்பித்து பற்றாக்குறையால் திருப்பி அனுப்பிய சோகத்துடன் சொல்லி முடித்திருந்தாள் அருந்ததி..
"பரவாயில்லை.. அதுக்காக குவான்டிட்டி அதிகம் பண்ணி உன் உடம்பை கெடுத்துக்காதே.. பொருள் குறைவா இருந்தாதான் டிமாண்ட் அதிகமா இருக்கும்.. நான் சொன்ன மாதிரியே செய்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மெனு மாத்திக்கலாம்.. இந்த நாள்ல இதுதான் விற்கப்படும்னு ஒரு போர்டுல எழுதி வாசல்ல வெச்சிடலாம்..!"
"நாம என்ன ஓட்டலா நடத்தறோம்.. இவ்ளோ மெனக்கெட்டு போர்டெல்லாம் வெளியே எடுத்து வச்சு திட்டம் போட்டு மெனு எழுதி போட..!"
"யாருக்கு தெரியும்..? சின்ன கடையில் ஆரம்பிச்சு பெரிய ஹோட்டலா மாத்தி வாழ்க்கையில் முன்னேறினவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. முயற்சி மட்டும்தான் நம்மளுடையது திட்டம் கடவுளுடையது..! எப்பவும் நான் சொல்றத மட்டும் கேளு.. நீ சந்தோஷமா இருப்ப..!" என்றவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
"என்ன ஜேஜம்மா சந்தோஷமா தானே இருக்க..?"
"இல்ல ரொம்ப சோகமா இருக்கேன்..!"
"பாத்தா அப்படி தெரியலையே.." ஒருமார்க்கமாக சொன்னவனின் கண்கள்
அருந்ததியை தலை முதல் கால் வரை வருட தவறவில்லை..
"எப்படி தெரியுதாம்.."
"கருப்பட்டி பொண்ணு தங்கத்துல குழைச்ச சந்தனமாட்டம் மாறிட்ட மாதிரியில்ல தெரியுது.."
"புரியலையே..?"
"புரியலன்னா விடு.. ஆனா எனக்கு கருப்பட்டியோட இனிப்பும் பிடிக்கும் சந்தன வாசனையும் பிடிக்கும்..!"
சுவற்றில் சாய்ந்து முன் கை கட்டி நின்றிருந்தான் ரிஷி..
வழக்கமாக குளித்துவிட்டு கொண்டையை தூக்கி முடிந்து கொண்டு காலை பணிகளை துவங்குபவள்.. கடந்த சில நாட்களை போல் இன்றும் தலையை சீவி பின்னலிட்டு முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளோடு பளபளவென்று அவன் முன்பு நின்று கொண்டிருக்கிறாள்..
பூங்காவின் புதிய காதலர்கள் போல் இருவரும் பேசிக்கொள்வது கிசுகிசுவென அவர்களை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை..!
"அம்மா.. ம்மா.." குளித்து முடித்துவிட்டு சீருடைகள் சுடிதார் டாப்பும் பேண்டுமாக வெளியே வந்து வாசலில் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள் சந்திரமதி..
"ஹான்..! இதோ வந்துட்டேன்" என்று வேகமாக ஓடிய அருந்ததி சூரிய ஒளியை நிலவு கடன் வாங்கி கொள்வதை போல் சந்திரமதியின் சுறுசுறுப்பை கொஞ்சமாக எடுத்துக் கொண்டாளோ என்னவோ..!
பேச்சு பார்வை நடவடிக்கை அனைத்திலும் இளமையில் அவள் தொலைத்த துருதுருப்பை காண முடிந்தது..
வாசலில் ஒரு நான்கு பேர் விதவிதமான டிபன் ஐட்டங்களை வகைப்படுத்தி சந்திரமதியிடம் கூச்சலிட.. அவளோ திணறிப் போய் அம்மாவை அழைத்திருந்தாள்..
"என்ன அருந்ததி எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கோம்.. காது கேட்கலையா உனக்கு..! முன்னாடி காலடி சத்தத்தை கேட்டாலே வெளிய ஓடி வந்து நிப்ப..! இப்ப என்னடி ஆச்சு உனக்கு.." என்றார் தெரிந்த பெண் ஒருத்தி..
"வேலையா இருந்தேன் கா.. டிபன் எல்லாம் தீர்ந்து போச்சு நாளைக்கு வாங்களேன்" என்று சொல்லி அனுப்ப வேண்டியதாய் போனது அத்தனை பேரிடமும்..!
பொதுவாக ஒரு நாளில் எப்படியும் பத்து இட்லிகளாவது மிஞ்சாமல் போனதே இல்லை.. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடைசியாக வரும் பத்து பேரிடம் டிபன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்..
"ஐயோ நிறைய பேர் கேக்கறாங்களேன்னு அளவை அதிகமா போட்டு ஜாஸ்தியா செய்வோம்னு முட்டாள்தனமா எதுவும் செஞ்சு வைக்காதே.. கண்டிப்பா மிஞ்சி போய்டும்.. ஒரு நாளைக்கு இவ்வளவு தான் செய்யணும்னு நீயே நிர்ணயிச்சுக்கோ.. அதை தாண்டி ஒரு கிராம் கூட அதிகமா போகக்கூடாது..!"
"இங்க டிபன் கிடைக்கலன்னு அவங்க வேற கடைக்கு போயிட்டா..?"
"போகட்டும்.. உன் சமையலுக்கு செய்யற பொருளோட ருசிக்கும் மவுசு இருக்கற வரைக்கும் உன் வியாபாரம் சரியாது கவலைப்படாதே.." என்றான் அவன்..
திறமைசாலியான சரளமான ஆங்கில புலமை பெற்ற வாத்தியார்.. உடை தோற்றம் பேச்சு.. என அனைத்திலும் பணக்கார களை நர்த்தனமாடும் ஒருவன் கவுரவம் பார்க்காமல் சின்ன இட்லி கடை வியாபாரத்தை பற்றி இத்தனை விஷயம் பேசுவதே அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!
வக்கீல் தாமோதரன் விவாகரத்து விண்ணப்பத்தை பிரபாகரன் வீட்டு முகவரிக்கு அனுப்பிவிட்டிருந்தார் போலும்..
குடும்பமே படையெடுத்து வந்து அருந்ததியின் வீட்டு வாசலில் நின்றிருந்தது..
சங்கரி மருதமுத்து காந்திமதி கோபி என அத்தனை பேரும் வந்திருக்க.. அண்ணன் தங்கை மட்டும் அதில் மிஸ்ஸிங்..
வேலைக்கு செல்லும் முன் அவளை பிடித்து விடும் நோக்கத்தோடு காலையிலேயே ஆஜர்.
வந்தவர்களை வாங்க என்று அழைக்கவில்லை அவள்.. ஒட்டுமொத்த குடும்பத்தை பார்த்ததும் திகைப்பு. ஏன் இங்கு வந்திருக்கிறார்கள் என்ற கோபம்.. இதுதான் விஷயமோ என்ற யூகம் இத்தனையும் மீறி இன்னைக்கு வியாபாரம் போச்சு என்ற சலிப்பு இதை தாண்டி சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எந்த உணர்வுகளும் அவள் நெஞ்சில் தோன்றவில்லை..
சந்திரமதி அம்மாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்..
"என்ன வேணும் உங்களுக்கு.. எதுக்காக இத்தனை பேர் வந்துருக்கீங்க..?" கொஞ்சம் கூட ஏற்றம் இறக்கமில்லாத தீர்க்கமான குரலில் அத்தனை பேருக்கும் திகைப்பு..
"என்னடி.. திமிரா.. வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்க.." காந்திமதி தான் கோபத்தோடு ஆரம்பித்தார்..
அம்மா என்ற பாசம் கூட இல்லையே இந்த பெண்ணுக்கு என்று உள்ளுற ஏதோ ஒரு குறை..
"உள்ள கூப்பிட்டு வச்சு பேசுற அளவுக்கு நீங்க முக்கியமானவங்களும் இல்ல.. நிச்சயமா நீங்க எனக்கு நல்லது செய்யப் போறதும் இல்ல.. எதுக்காக என் வீடு தேடி வந்துருக்கீங்க.. அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க.."
"என்ன திமிர் பாத்தீங்களா இந்த பொண்ணுக்கு..! இங்க பாரு உன் கிட்ட நல்ல விதமாத்தான் பேச வந்தோம்.. ஆனா நீ பேசற விதமே சரியில்லை.. ஏதோ சின்ன சின்ன சண்டைன்னு வீட்டை விட்டு ஓடி வந்து தனியா வாழறாளே.. எப்படியாவது சமரசம் பண்ணி கூட்டிட்டு போயிடலாம்னு பார்த்தா மொத்தமா விவாகரத்துக்கு எழுதி கொடுத்து உறவை அறுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா.. என்னடி இதெல்லாம்.." இது சங்கரி..
"இங்க பாருமா குடும்பம்னா ஆயிரம் இருக்கும்.. வீட்ல வர்ற சின்ன சின்ன பிரச்சனைங்கள மனசுல வச்சுக்கிட்டு விவாகரத்து கேக்கறதெல்லாம் சரியா படல சொல்லிட்டேன்.. புத்தி பேதலிச்சு போச்சா உனக்கு.." மருதமுத்து முன்னே வந்தான்..
மற்றவர்கள் பேசும்போது கூட நிதானமாகத்தான் இருந்தாள் ஆனால் செய்வதையும் செய்துவிட்டு எதுவுமே நடவாதது போல் மருதமுத்து பேசுவதைத்தான் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை உள்ளம் கொதித்து போனது.. விரிசலுக்கு தன் கேவலமான நடத்தையின் மூலம் முதல் படி தொடங்கி வைத்தவனே இவன்தானே..
"சின்ன பிரச்சனையா..? சின்ன சின்ன பிரச்சனையா உனக்கு.. பெத்த மகளா நினைக்க வேண்டிய பொண்ணு கிட்ட கீழ்த்தரமா பொறுக்கி மாதிரி நீ தப்பா பேசினதும் நடந்துகிட்டதும் சின்ன விஷயம் இல்ல..?"
"ஏய்.. என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா பேசிட்டே போற.. இல்லாத விஷயத்தை நீயா இட்டுக்கட்டி நல்லவங்க மேல பழி போடாதே.. நீ என்னதான் தப்பு செஞ்சாலும் உன்னை ஏத்துக்கிறேன்னு வந்து நிக்கிறாங்களே அவங்க பெருந்தன்மையான மனச பாரு.." அண்ணனாக கோபி வந்து சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினான்..
"ஆமா யார் நீ..?"
"செருப்பால அடிப்பேன்.. நான் உன் அண்ணன்.. அது கூட மறந்து போச்சா..!"
"அடேங்கப்பா எத்தன வருஷத்துக்கு அப்புறம் இந்த வார்த்தையை கேட்கறேன்.. கூடப்பிறந்த அண்ணனா இதுவரைக்கும் என்னடா நீ செஞ்சிருக்க எனக்காக.. பாசமா நாலு வார்த்தை பேசி இருக்கியா.. இல்ல கஷ்ட நஷ்டத்துல என் கூட துணையா இருந்திருக்கியா..! உனக்கெல்லாம் பேசவே தகுதி இல்லை.. என் வாழ்க்கையில தலையிட நீ யாரு.. மரியாதையா போயிடு.. இல்லைனா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே அத நான் செய்ய வேண்டியதா இருக்கும்.."
அருந்ததியின் அவதாரம் இது..
ஆடிப்போனாள் சங்கரி..
"என்னடி சொன்ன..?" கோபி அடிப்பதற்காக கையை ஓங்கிக் கொண்டு வர.. தீர்க்க விழிகளோடு முடிந்தால் அடித்துதான் பாரேன் என்று அருந்ததி அசையாமல் நின்றிருந்த நேரம்.. ஓங்கி வீசிய அவன் கரத்தை இன்னொரு கரம் இரும்பாக தடுத்திருந்தது..
மகரிஷி..
"பேச்சுவார்த்தை தானே நடக்குது எதுக்கு கைய ஓங்கிட்டு அடிக்க வர்றீங்க.. தள்ளி நில்லுங்க.." பேச்சில் பொறுமை.. கையை முறுக்கி தள்ளிவிட்ட வேகத்தில் அவன் கோபத்தின் வீரியம் தெரிந்திருக்கும் கோபிக்கு..
"நீ யாருடா..?"
கோபி அதே ஆவேசத்துடன் முன்னேறி வர அவன் கையை பிடித்து இழுத்தாள் சங்கரி..
"ஐயோ மாப்ள அடக்கி வாசிங்க.. இவன்தான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து நம்ம பிரபாகரனை அடி அடின்னு அடிச்சுப்புட்டான்.. ஆள் பாக்கவே பயங்கரமா இருக்கான்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. நமக்கு அருந்ததி தான் வேணும் பேசுவோம் இருங்க.."
"இதுக்கு மேல என்னத்த பேசணும்.. இவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்.. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் அடிச்சு ஓட விடனும்.. ஏய் இங்க பாரு.. தேவையில்லாத விஷயத்துல தலையிட்டா அப்புறம் நடக்கறதே வேற.. மரியாதையா போயிடு நான் என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்.."
"அவங்க தான் நீ என் அண்ணனே இல்லைன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் என்ன தங்கச்சி.. எல்லாரும் இங்கிருந்து போங்க.. எதுவானாலும் ஹியரிங்ல கோர்ட்ல வந்து பேசிக்கோங்க.." மிகத் தெளிவாக நிதானமாக அதே நேரத்தில் தீர்க்கமாக பேசினான் மகரிஷி..
"என்னடி இதெல்லாம்..! அப்ப ஊர்ல பேசிக்கிறதெல்லாம் உண்மையா.. இவனுக்காக தான் உன் புருஷன் கூட வாழ மாட்டேன்னு சொல்றியா.." காந்திமதி அழுகையும் அதட்டலுமாக கேட்க.. கொஞ்சம் கூட நிலை தடுமாறாமல் அமைதியாக நின்றாள் அருந்ததி..
"சந்தேகமே இல்லை..! உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி கள்ளத்தனமா காதல் பண்ணனும்.. அதனால தான் நல்லவனான என் புள்ளையை வேண்டாம்ன்னு சொல்லிட்டா.. பதவிசா ஆளு மினுமினுப்பா இருக்கும்போதே தெரியல..! இப்ப புதுசா இவனத்தான் உங்க பொண்ணு வச்சிருக்கா.."
சங்கரி சொல்லவும் கோபியின் கன்னத்தில் பளாரென்று ஒரு அடி விழுந்தது..!
"ஏய் அந்தம்மா சொன்னதுக்கு என்னை ஏன்டா அடிக்கற.."
"பொம்பளைங்கள அடிக்க முடியாதே.. அதனாலதான் உன்னை அடிக்கறேன்.. இந்த ரெண்டு பொம்பளைங்களும் என்ன பேசினாலும் உனக்கும் உன் மாமனாருக்கு தான் அடி விழும்.." என்றதும் மருதமுத்து பின் கை கட்டிக்கொண்டு அவசரமாக கேட்டை தாண்டி வெளியேறி சென்றான்..
"என்னடி நடக்குது அங்க போய் பாக்கலாமா..?" கனகா வீட்டு பக்கம் ஒரே சலசலப்பு..
"எதுக்கு..? இது என் குடும்ப விஷயம்.. நீங்க தலையிடாதீங்கன்னு அவ மூக்கை உடைச்சு திருப்பி அனுப்புறதுக்கா.. ஏதாவது பிரச்சனைனா பாத்துக்கலாம்.." கனகா மற்ற பெண்களை அடக்கினாள்..
"தாலி கட்டின புருஷனை ஏமாத்தி விட்டுட்டு வந்து இன்னொருத்தனோட சந்தோஷமா வாழ்ந்துருவியாடி நீ..! காலம் போன காலத்துல உனக்கு காதல் மொட்டு விடுதோ..! வயசு புள்ள உக்காந்த நேரத்துல உன் மூஞ்சிக்கு இளமை திரும்புது இல்ல.. இருக்கட்டும் இந்த தெருவே உன்னை பார்த்து காறி துப்பி சிரிக்கற நாள் வரும்டி.. அதையும் நான் பார்க்க தானே போறேன்.. நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. ரோட்ல.." சங்கரி சாபம் கொடுக்கத் துவங்க மீண்டும் கோபிக்கு ஒரு அடி..
"அத்தை வாய வெச்சுகிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு.."
"ஏன்டி.. ஏன்டி இப்படி குடும்ப மானத்த வாங்குற.. புருஷனோட ஒத்துப்பட்டு வாழ்றத விட்டுட்டு இப்படி தனியா வந்து இன்னொருத்தனோட கூத்தடிக்கிறது சரியா சொல்லு.."
"உன்னை அம்மானு கூப்பிடவே வாயெல்லாம் கூசுது.. ஒழுங்கா இங்கிருந்து போயிடு.. இல்லைன்னா நானே அடிச்சு விரட்டுவேன்" அருந்ததிக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்ததோ..!
விதிர்த்துப் போனாள் காந்திமதி..
"ஏன்யா.. அவளுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்கய்யா போச்சு புத்தி.. குடும்ப பொண்ணுங்கள மயக்கி கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தறியே.. நீயெல்லாம் நல்ல குடும்பத்திலதான் பொறந்தியா..? ஒரு குடும்பத்தை கெடுத்த பாவமெல்லாம் உன்னை சும்மா விடாது..
"அதை நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டீங்க இல்ல.. இங்கிருந்து கிளம்புங்க" என்றான் மகரிஷி..
"ச்சே.. என்ன இது.. இத்தனை குடும்பம் வாழற இடத்துல அசிங்கம் பண்ணிக்கிட்டு.. கல்யாணமமான பொம்பளைய கூட்டிட்டு வந்து திருட்டுத்தனமா வச்சு வாழறான்.. யாருமே இதை தட்டி கேட்கலையா..?" மீண்டும் சங்கரி வாயெடுக்க கன்னங்களை பொத்திக் கொண்டான் கோபி..
"ஆமா.. நான் இவளை வச்சிருக்கேன்.. இப்ப என்ன அதுக்கு..!" என்ற மகரிஷியை திரும்பி பார்த்தாள் அருந்ததி..
"அப்போ நீங்க ரெண்டு பேரும் கள்ளக்காதலர்கள்ன்னு ஒத்துக்கறீங்க அப்படித்தானே.."
"ஆமா.. ஆமா.. கள்ளக்காதல் தான்.. விவரம் போதுமா இல்ல வேற ஏதாவது வேணுமா..?"
அங்கிருந்த கூட்டம் மட்டுமல்ல.. எதிர் திசையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிசிடிவி கும்பல்களும் வாயடைத்து போயின..
"தெரிய வேண்டியது தெரிஞ்சிடுச்சு இல்ல.. இனி ஒரு நிமிஷம் யாரும் இங்க நிக்கக்கூடாது.. கிளம்புங்க இல்லனா போலீஸ்க்கு போன் பண்ணுவேன்..!" அவன் ஆக்ரோஷத்திலும் ரௌத்திரத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடி அந்த நால்வரும் மௌனமாக அங்கிருந்து திரும்பி செல்ல
அருந்ததியை அழுத்தமாக ஒரு பார்வையை பார்த்தவன் நகர்ந்து உள்ளே சென்றுவிட்டான்..
அவர்கள் குற்றச்சாட்டை ஆமோதித்து அவன் சொன்ன வார்த்தைகளில் உடைந்து வீறல் விட்ட சிலையாய் நின்றிருந்தாள் அருந்ததி..
தொடரும்..
'இன்னைக்கு செய்யவே இல்லையா.."
"பூரி வடகறி இருக்கா..!"
இப்போதெல்லாம் முன்பை விட கூட்டம் சற்று அதிகரித்திருப்பதாக தோன்றியது அருந்ததிக்கு..
இட்லிக்கு வாடிக்கையாளர்கள் பாதி பேர் என்றால் பொங்கல் பூரி வடகறி வடை என்று விதவிதமாய் கேட்டு மீதி பேர் வரிசை கட்டுகின்றனர் அவள் வீட்டு வாசலில்..
உற்சாகத்தோடு மகரிஷியிடம் வந்தாள் அருந்ததி..
ஆம் கட் பனியன் ஷாட்சும் போட்டுக் கொண்டு ஈர தலையை துவட்டி கொண்டிருந்தான் அவன்..
அருந்ததிக்கு காதோரம் ஜில்லென ஒரு சிலிர்ப்பு..
வாத்தியாரே..! வாசலில் நின்று அவள் அழைக்கவும்.. ஜன்னல் பார்த்து நின்றவன் திரும்பி அவளைப் பார்த்தான்..
அவன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து அருகே வரவர.. கமகமவென்ற சோப்பின் மணம் அருந்ததியை சுற்றி வளைத்து இறுக்கியது..
பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற ஆராய்ச்சி போல் ஆண்கள் உபயோகிக்கும் சோப்பிற்கு பிரத்தியேக வாசனை உண்டா என்ற சிந்தனைதேடல் அவளுள்..
"ஹலோ மேடம்..!" அவள் கண்கள் முன்பு சொடுக்கு போட்டான்..
"வாத்தியாரே..?"
"வாத்தியாருக்கு பேர் இல்லையோ..?"
'கோங்ரா..?"
"உண்மையை சொல்லு என் பேர் தெரியுமா தெரியாதா உனக்கு.. " தலையை துவட்டிய பூத்துண்டை தோளில் போட்டபடி கேட்டான்..
"ரிஷி.."
"முழு பெயர் என்ன.."
"என்ன ரொம்ப கறாரா கேக்கறீங்க.. வாத்தியார்ன்னு நிரூபிக்கிறீங்களோ..!"
"சொல்லுடி.."
"மகரிஷி.."
"அவ்ளோதானா.."
அவ்வளவுதான் எனக்கு தெரியும்.. சந்திரமதி உங்க பேரு மகரிஷின்னு சொல்லியிருக்கா.. நீங்க இதுவரைக்கும் உங்க பேரு என்னன்னு என்கிட்ட வந்து சொன்னீங்களா..?
"நீ என்னைக்காவது கேட்டுருக்கியா..?"
"சரி இப்ப கேக்கறேன் சொல்லுங்க.. உங்க முழு பேர் என்ன..?"
"சொல்ல மாட்டேன் நீயே கண்டுபிடி.."
"அடடா இது என்ன டெஸ்ட்டா..?"
"அப்படித்தான் வச்சுக்கோயேன்.. உனக்கு ஒரு வாரம் டைம் அதுக்குள்ள என் பேரை கண்டுபிடிச்சிடனும்.."
"இல்லைனா.."
"இல்லைன்னா நான் கேக்கறதை நீ தரணும்..!"
"ஆமா இது பெரிய கம்ப சூத்திரமா என்ன.. எதுக்கு ஒரு வாரம்.. ரெண்டே நாள்ல உங்க பேரை கண்டுபிடிக்கிறேன்னா இல்லையா பாருங்க.."
"அதையும் பார்க்கலாம்.."
நாக்கை உள் பக்கமாக சுழட்டியவன்.. "நான் என்ன கேட்டாலும் நீ தரணும்.. வாக்கு தந்திருக்க.. மறந்துடாதே.." என்றான் கல்மிஷ புன்னகையோடு..
"பெருசா என்ன கேட்டுட போறீங்க.. இட்லி மீன் குழம்பு.. தோசை கறி குழம்பு..! வெங்காய ஊத்தப்பம் தேங்காய் சட்னி.. இதானே..!" உதட்டை சுழித்துக்கொண்டாள் அருந்ததி..
"என்ன வாய்க்குள்ள முனங்கற.."
"ப்ச்..! பாருங்க உங்க கிட்ட எதையோ சொல்ல வந்து இப்ப எதையோ பேசிட்டு இருக்கேன் உங்கள பாத்தாலே எல்லாம் மறந்து போகுது.."
"எனக்கும் அதேதான் உன்ன பார்த்தாலே எல்லாம் மறந்து போகுது..!"
நேர்கோடாக அருந்ததி சொன்ன வார்த்தைகளை கள்ளுப் பானையில் முக்கியெடுத்து மயக்கத்துடன் சொல்ல.. அதை புரிந்து கொள்ளாமல்..
"சரி இப்பவாவது என்னை சொல்ல விடுங்க.. நீங்க சொன்னது சரிதான்.. ஆரம்பத்துல ரெண்டு நாள்ல எந்த வித்தியாசமும் தெரியல ஆனா இப்போ எல்லாரும் பொங்கல் வேணும் பூரி வேணும் வடை இல்லையான்னு கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க..! புதுசு புதுசா ஆளுங்கள பார்க்க முடியுது..! முன்னாடி பத்து பதினஞ்சு பேர் வர்றதே பெரிய விஷயம்.. இப்ப என்னடான்னா திடீர்னு ஒரே நேரத்தில் இருபது பேர் வந்து நின்னுட்டாங்க..! சில பேருக்கு இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்ப வேண்டியதா போயிடுச்சு.." சந்தோஷத்துடன் ஆரம்பித்து பற்றாக்குறையால் திருப்பி அனுப்பிய சோகத்துடன் சொல்லி முடித்திருந்தாள் அருந்ததி..
"பரவாயில்லை.. அதுக்காக குவான்டிட்டி அதிகம் பண்ணி உன் உடம்பை கெடுத்துக்காதே.. பொருள் குறைவா இருந்தாதான் டிமாண்ட் அதிகமா இருக்கும்.. நான் சொன்ன மாதிரியே செய்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மெனு மாத்திக்கலாம்.. இந்த நாள்ல இதுதான் விற்கப்படும்னு ஒரு போர்டுல எழுதி வாசல்ல வெச்சிடலாம்..!"
"நாம என்ன ஓட்டலா நடத்தறோம்.. இவ்ளோ மெனக்கெட்டு போர்டெல்லாம் வெளியே எடுத்து வச்சு திட்டம் போட்டு மெனு எழுதி போட..!"
"யாருக்கு தெரியும்..? சின்ன கடையில் ஆரம்பிச்சு பெரிய ஹோட்டலா மாத்தி வாழ்க்கையில் முன்னேறினவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. முயற்சி மட்டும்தான் நம்மளுடையது திட்டம் கடவுளுடையது..! எப்பவும் நான் சொல்றத மட்டும் கேளு.. நீ சந்தோஷமா இருப்ப..!" என்றவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
"என்ன ஜேஜம்மா சந்தோஷமா தானே இருக்க..?"
"இல்ல ரொம்ப சோகமா இருக்கேன்..!"
"பாத்தா அப்படி தெரியலையே.." ஒருமார்க்கமாக சொன்னவனின் கண்கள்
அருந்ததியை தலை முதல் கால் வரை வருட தவறவில்லை..
"எப்படி தெரியுதாம்.."
"கருப்பட்டி பொண்ணு தங்கத்துல குழைச்ச சந்தனமாட்டம் மாறிட்ட மாதிரியில்ல தெரியுது.."
"புரியலையே..?"
"புரியலன்னா விடு.. ஆனா எனக்கு கருப்பட்டியோட இனிப்பும் பிடிக்கும் சந்தன வாசனையும் பிடிக்கும்..!"
சுவற்றில் சாய்ந்து முன் கை கட்டி நின்றிருந்தான் ரிஷி..
வழக்கமாக குளித்துவிட்டு கொண்டையை தூக்கி முடிந்து கொண்டு காலை பணிகளை துவங்குபவள்.. கடந்த சில நாட்களை போல் இன்றும் தலையை சீவி பின்னலிட்டு முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளோடு பளபளவென்று அவன் முன்பு நின்று கொண்டிருக்கிறாள்..
பூங்காவின் புதிய காதலர்கள் போல் இருவரும் பேசிக்கொள்வது கிசுகிசுவென அவர்களை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை..!
"அம்மா.. ம்மா.." குளித்து முடித்துவிட்டு சீருடைகள் சுடிதார் டாப்பும் பேண்டுமாக வெளியே வந்து வாசலில் நின்று அழைத்துக் கொண்டிருந்தாள் சந்திரமதி..
"ஹான்..! இதோ வந்துட்டேன்" என்று வேகமாக ஓடிய அருந்ததி சூரிய ஒளியை நிலவு கடன் வாங்கி கொள்வதை போல் சந்திரமதியின் சுறுசுறுப்பை கொஞ்சமாக எடுத்துக் கொண்டாளோ என்னவோ..!
பேச்சு பார்வை நடவடிக்கை அனைத்திலும் இளமையில் அவள் தொலைத்த துருதுருப்பை காண முடிந்தது..
வாசலில் ஒரு நான்கு பேர் விதவிதமான டிபன் ஐட்டங்களை வகைப்படுத்தி சந்திரமதியிடம் கூச்சலிட.. அவளோ திணறிப் போய் அம்மாவை அழைத்திருந்தாள்..
"என்ன அருந்ததி எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கோம்.. காது கேட்கலையா உனக்கு..! முன்னாடி காலடி சத்தத்தை கேட்டாலே வெளிய ஓடி வந்து நிப்ப..! இப்ப என்னடி ஆச்சு உனக்கு.." என்றார் தெரிந்த பெண் ஒருத்தி..
"வேலையா இருந்தேன் கா.. டிபன் எல்லாம் தீர்ந்து போச்சு நாளைக்கு வாங்களேன்" என்று சொல்லி அனுப்ப வேண்டியதாய் போனது அத்தனை பேரிடமும்..!
பொதுவாக ஒரு நாளில் எப்படியும் பத்து இட்லிகளாவது மிஞ்சாமல் போனதே இல்லை.. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடைசியாக வரும் பத்து பேரிடம் டிபன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்..
"ஐயோ நிறைய பேர் கேக்கறாங்களேன்னு அளவை அதிகமா போட்டு ஜாஸ்தியா செய்வோம்னு முட்டாள்தனமா எதுவும் செஞ்சு வைக்காதே.. கண்டிப்பா மிஞ்சி போய்டும்.. ஒரு நாளைக்கு இவ்வளவு தான் செய்யணும்னு நீயே நிர்ணயிச்சுக்கோ.. அதை தாண்டி ஒரு கிராம் கூட அதிகமா போகக்கூடாது..!"
"இங்க டிபன் கிடைக்கலன்னு அவங்க வேற கடைக்கு போயிட்டா..?"
"போகட்டும்.. உன் சமையலுக்கு செய்யற பொருளோட ருசிக்கும் மவுசு இருக்கற வரைக்கும் உன் வியாபாரம் சரியாது கவலைப்படாதே.." என்றான் அவன்..
திறமைசாலியான சரளமான ஆங்கில புலமை பெற்ற வாத்தியார்.. உடை தோற்றம் பேச்சு.. என அனைத்திலும் பணக்கார களை நர்த்தனமாடும் ஒருவன் கவுரவம் பார்க்காமல் சின்ன இட்லி கடை வியாபாரத்தை பற்றி இத்தனை விஷயம் பேசுவதே அருந்ததிக்கு ஆச்சரியம் தான்..!
வக்கீல் தாமோதரன் விவாகரத்து விண்ணப்பத்தை பிரபாகரன் வீட்டு முகவரிக்கு அனுப்பிவிட்டிருந்தார் போலும்..
குடும்பமே படையெடுத்து வந்து அருந்ததியின் வீட்டு வாசலில் நின்றிருந்தது..
சங்கரி மருதமுத்து காந்திமதி கோபி என அத்தனை பேரும் வந்திருக்க.. அண்ணன் தங்கை மட்டும் அதில் மிஸ்ஸிங்..
வேலைக்கு செல்லும் முன் அவளை பிடித்து விடும் நோக்கத்தோடு காலையிலேயே ஆஜர்.
வந்தவர்களை வாங்க என்று அழைக்கவில்லை அவள்.. ஒட்டுமொத்த குடும்பத்தை பார்த்ததும் திகைப்பு. ஏன் இங்கு வந்திருக்கிறார்கள் என்ற கோபம்.. இதுதான் விஷயமோ என்ற யூகம் இத்தனையும் மீறி இன்னைக்கு வியாபாரம் போச்சு என்ற சலிப்பு இதை தாண்டி சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எந்த உணர்வுகளும் அவள் நெஞ்சில் தோன்றவில்லை..
சந்திரமதி அம்மாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்..
"என்ன வேணும் உங்களுக்கு.. எதுக்காக இத்தனை பேர் வந்துருக்கீங்க..?" கொஞ்சம் கூட ஏற்றம் இறக்கமில்லாத தீர்க்கமான குரலில் அத்தனை பேருக்கும் திகைப்பு..
"என்னடி.. திமிரா.. வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்க.." காந்திமதி தான் கோபத்தோடு ஆரம்பித்தார்..
அம்மா என்ற பாசம் கூட இல்லையே இந்த பெண்ணுக்கு என்று உள்ளுற ஏதோ ஒரு குறை..
"உள்ள கூப்பிட்டு வச்சு பேசுற அளவுக்கு நீங்க முக்கியமானவங்களும் இல்ல.. நிச்சயமா நீங்க எனக்கு நல்லது செய்யப் போறதும் இல்ல.. எதுக்காக என் வீடு தேடி வந்துருக்கீங்க.. அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க.."
"என்ன திமிர் பாத்தீங்களா இந்த பொண்ணுக்கு..! இங்க பாரு உன் கிட்ட நல்ல விதமாத்தான் பேச வந்தோம்.. ஆனா நீ பேசற விதமே சரியில்லை.. ஏதோ சின்ன சின்ன சண்டைன்னு வீட்டை விட்டு ஓடி வந்து தனியா வாழறாளே.. எப்படியாவது சமரசம் பண்ணி கூட்டிட்டு போயிடலாம்னு பார்த்தா மொத்தமா விவாகரத்துக்கு எழுதி கொடுத்து உறவை அறுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா.. என்னடி இதெல்லாம்.." இது சங்கரி..
"இங்க பாருமா குடும்பம்னா ஆயிரம் இருக்கும்.. வீட்ல வர்ற சின்ன சின்ன பிரச்சனைங்கள மனசுல வச்சுக்கிட்டு விவாகரத்து கேக்கறதெல்லாம் சரியா படல சொல்லிட்டேன்.. புத்தி பேதலிச்சு போச்சா உனக்கு.." மருதமுத்து முன்னே வந்தான்..
மற்றவர்கள் பேசும்போது கூட நிதானமாகத்தான் இருந்தாள் ஆனால் செய்வதையும் செய்துவிட்டு எதுவுமே நடவாதது போல் மருதமுத்து பேசுவதைத்தான் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை உள்ளம் கொதித்து போனது.. விரிசலுக்கு தன் கேவலமான நடத்தையின் மூலம் முதல் படி தொடங்கி வைத்தவனே இவன்தானே..
"சின்ன பிரச்சனையா..? சின்ன சின்ன பிரச்சனையா உனக்கு.. பெத்த மகளா நினைக்க வேண்டிய பொண்ணு கிட்ட கீழ்த்தரமா பொறுக்கி மாதிரி நீ தப்பா பேசினதும் நடந்துகிட்டதும் சின்ன விஷயம் இல்ல..?"
"ஏய்.. என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா பேசிட்டே போற.. இல்லாத விஷயத்தை நீயா இட்டுக்கட்டி நல்லவங்க மேல பழி போடாதே.. நீ என்னதான் தப்பு செஞ்சாலும் உன்னை ஏத்துக்கிறேன்னு வந்து நிக்கிறாங்களே அவங்க பெருந்தன்மையான மனச பாரு.." அண்ணனாக கோபி வந்து சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினான்..
"ஆமா யார் நீ..?"
"செருப்பால அடிப்பேன்.. நான் உன் அண்ணன்.. அது கூட மறந்து போச்சா..!"
"அடேங்கப்பா எத்தன வருஷத்துக்கு அப்புறம் இந்த வார்த்தையை கேட்கறேன்.. கூடப்பிறந்த அண்ணனா இதுவரைக்கும் என்னடா நீ செஞ்சிருக்க எனக்காக.. பாசமா நாலு வார்த்தை பேசி இருக்கியா.. இல்ல கஷ்ட நஷ்டத்துல என் கூட துணையா இருந்திருக்கியா..! உனக்கெல்லாம் பேசவே தகுதி இல்லை.. என் வாழ்க்கையில தலையிட நீ யாரு.. மரியாதையா போயிடு.. இல்லைனா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே அத நான் செய்ய வேண்டியதா இருக்கும்.."
அருந்ததியின் அவதாரம் இது..
ஆடிப்போனாள் சங்கரி..
"என்னடி சொன்ன..?" கோபி அடிப்பதற்காக கையை ஓங்கிக் கொண்டு வர.. தீர்க்க விழிகளோடு முடிந்தால் அடித்துதான் பாரேன் என்று அருந்ததி அசையாமல் நின்றிருந்த நேரம்.. ஓங்கி வீசிய அவன் கரத்தை இன்னொரு கரம் இரும்பாக தடுத்திருந்தது..
மகரிஷி..
"பேச்சுவார்த்தை தானே நடக்குது எதுக்கு கைய ஓங்கிட்டு அடிக்க வர்றீங்க.. தள்ளி நில்லுங்க.." பேச்சில் பொறுமை.. கையை முறுக்கி தள்ளிவிட்ட வேகத்தில் அவன் கோபத்தின் வீரியம் தெரிந்திருக்கும் கோபிக்கு..
"நீ யாருடா..?"
கோபி அதே ஆவேசத்துடன் முன்னேறி வர அவன் கையை பிடித்து இழுத்தாள் சங்கரி..
"ஐயோ மாப்ள அடக்கி வாசிங்க.. இவன்தான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து நம்ம பிரபாகரனை அடி அடின்னு அடிச்சுப்புட்டான்.. ஆள் பாக்கவே பயங்கரமா இருக்கான்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. நமக்கு அருந்ததி தான் வேணும் பேசுவோம் இருங்க.."
"இதுக்கு மேல என்னத்த பேசணும்.. இவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்.. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் அடிச்சு ஓட விடனும்.. ஏய் இங்க பாரு.. தேவையில்லாத விஷயத்துல தலையிட்டா அப்புறம் நடக்கறதே வேற.. மரியாதையா போயிடு நான் என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்.."
"அவங்க தான் நீ என் அண்ணனே இல்லைன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் என்ன தங்கச்சி.. எல்லாரும் இங்கிருந்து போங்க.. எதுவானாலும் ஹியரிங்ல கோர்ட்ல வந்து பேசிக்கோங்க.." மிகத் தெளிவாக நிதானமாக அதே நேரத்தில் தீர்க்கமாக பேசினான் மகரிஷி..
"என்னடி இதெல்லாம்..! அப்ப ஊர்ல பேசிக்கிறதெல்லாம் உண்மையா.. இவனுக்காக தான் உன் புருஷன் கூட வாழ மாட்டேன்னு சொல்றியா.." காந்திமதி அழுகையும் அதட்டலுமாக கேட்க.. கொஞ்சம் கூட நிலை தடுமாறாமல் அமைதியாக நின்றாள் அருந்ததி..
"சந்தேகமே இல்லை..! உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி கள்ளத்தனமா காதல் பண்ணனும்.. அதனால தான் நல்லவனான என் புள்ளையை வேண்டாம்ன்னு சொல்லிட்டா.. பதவிசா ஆளு மினுமினுப்பா இருக்கும்போதே தெரியல..! இப்ப புதுசா இவனத்தான் உங்க பொண்ணு வச்சிருக்கா.."
சங்கரி சொல்லவும் கோபியின் கன்னத்தில் பளாரென்று ஒரு அடி விழுந்தது..!
"ஏய் அந்தம்மா சொன்னதுக்கு என்னை ஏன்டா அடிக்கற.."
"பொம்பளைங்கள அடிக்க முடியாதே.. அதனாலதான் உன்னை அடிக்கறேன்.. இந்த ரெண்டு பொம்பளைங்களும் என்ன பேசினாலும் உனக்கும் உன் மாமனாருக்கு தான் அடி விழும்.." என்றதும் மருதமுத்து பின் கை கட்டிக்கொண்டு அவசரமாக கேட்டை தாண்டி வெளியேறி சென்றான்..
"என்னடி நடக்குது அங்க போய் பாக்கலாமா..?" கனகா வீட்டு பக்கம் ஒரே சலசலப்பு..
"எதுக்கு..? இது என் குடும்ப விஷயம்.. நீங்க தலையிடாதீங்கன்னு அவ மூக்கை உடைச்சு திருப்பி அனுப்புறதுக்கா.. ஏதாவது பிரச்சனைனா பாத்துக்கலாம்.." கனகா மற்ற பெண்களை அடக்கினாள்..
"தாலி கட்டின புருஷனை ஏமாத்தி விட்டுட்டு வந்து இன்னொருத்தனோட சந்தோஷமா வாழ்ந்துருவியாடி நீ..! காலம் போன காலத்துல உனக்கு காதல் மொட்டு விடுதோ..! வயசு புள்ள உக்காந்த நேரத்துல உன் மூஞ்சிக்கு இளமை திரும்புது இல்ல.. இருக்கட்டும் இந்த தெருவே உன்னை பார்த்து காறி துப்பி சிரிக்கற நாள் வரும்டி.. அதையும் நான் பார்க்க தானே போறேன்.. நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. ரோட்ல.." சங்கரி சாபம் கொடுக்கத் துவங்க மீண்டும் கோபிக்கு ஒரு அடி..
"அத்தை வாய வெச்சுகிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு.."
"ஏன்டி.. ஏன்டி இப்படி குடும்ப மானத்த வாங்குற.. புருஷனோட ஒத்துப்பட்டு வாழ்றத விட்டுட்டு இப்படி தனியா வந்து இன்னொருத்தனோட கூத்தடிக்கிறது சரியா சொல்லு.."
"உன்னை அம்மானு கூப்பிடவே வாயெல்லாம் கூசுது.. ஒழுங்கா இங்கிருந்து போயிடு.. இல்லைன்னா நானே அடிச்சு விரட்டுவேன்" அருந்ததிக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்ததோ..!
விதிர்த்துப் போனாள் காந்திமதி..
"ஏன்யா.. அவளுக்குதான் அறிவு இல்ல உனக்கு எங்கய்யா போச்சு புத்தி.. குடும்ப பொண்ணுங்கள மயக்கி கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தறியே.. நீயெல்லாம் நல்ல குடும்பத்திலதான் பொறந்தியா..? ஒரு குடும்பத்தை கெடுத்த பாவமெல்லாம் உன்னை சும்மா விடாது..
"அதை நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டீங்க இல்ல.. இங்கிருந்து கிளம்புங்க" என்றான் மகரிஷி..
"ச்சே.. என்ன இது.. இத்தனை குடும்பம் வாழற இடத்துல அசிங்கம் பண்ணிக்கிட்டு.. கல்யாணமமான பொம்பளைய கூட்டிட்டு வந்து திருட்டுத்தனமா வச்சு வாழறான்.. யாருமே இதை தட்டி கேட்கலையா..?" மீண்டும் சங்கரி வாயெடுக்க கன்னங்களை பொத்திக் கொண்டான் கோபி..
"ஆமா.. நான் இவளை வச்சிருக்கேன்.. இப்ப என்ன அதுக்கு..!" என்ற மகரிஷியை திரும்பி பார்த்தாள் அருந்ததி..
"அப்போ நீங்க ரெண்டு பேரும் கள்ளக்காதலர்கள்ன்னு ஒத்துக்கறீங்க அப்படித்தானே.."
"ஆமா.. ஆமா.. கள்ளக்காதல் தான்.. விவரம் போதுமா இல்ல வேற ஏதாவது வேணுமா..?"
அங்கிருந்த கூட்டம் மட்டுமல்ல.. எதிர் திசையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிசிடிவி கும்பல்களும் வாயடைத்து போயின..
"தெரிய வேண்டியது தெரிஞ்சிடுச்சு இல்ல.. இனி ஒரு நிமிஷம் யாரும் இங்க நிக்கக்கூடாது.. கிளம்புங்க இல்லனா போலீஸ்க்கு போன் பண்ணுவேன்..!" அவன் ஆக்ரோஷத்திலும் ரௌத்திரத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபடி அந்த நால்வரும் மௌனமாக அங்கிருந்து திரும்பி செல்ல
அருந்ததியை அழுத்தமாக ஒரு பார்வையை பார்த்தவன் நகர்ந்து உள்ளே சென்றுவிட்டான்..
அவர்கள் குற்றச்சாட்டை ஆமோதித்து அவன் சொன்ன வார்த்தைகளில் உடைந்து வீறல் விட்ட சிலையாய் நின்றிருந்தாள் அருந்ததி..
தொடரும்..
Last edited: