• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
திவாகரின் தொல்லை நீங்கியது விரும்பியவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியவில்லை.. கவலையில் உடலும் மனமும் சோர்ந்து போனதிலும்.. பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததிலும் கண்கள் சொருகியது.. மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடினாள் மான்வி.. இனி தாய் தந்தையுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது.. மூடிய விழிகளை தாண்டி கண்ணீர் வழிந்தது..

இருபத்து மூன்று வருடங்கள் அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.. பாசம் கொட்டி வளர்த்தவர்கள்.. பிள்ளைகளுக்காகவே உழைத்து ஊன் தேய்ந்து போனவர் நீலகண்டன்.. ஜீவா விஷயத்தில் தன்னோடு சேர்த்து மொத்த குடும்பமும் அவனுக்கு அநீதி இழைத்திருந்தாலும் அப்பாவும் அம்மாவும் தனக்கு கெட்டவர்கள் இல்லையே.. ஜீவாவின் கட்டளைக்கேற்ப பாசத்தை சட்டென்று ஒதுக்கி வைத்து இயந்திரமாக இருக்க முடியவில்லை அவளால்..

தனிமையில் கழிந்த இரவு தாய் தந்தையரை மேலும் மேலும் நினைவு படுத்தியது.. ஒருவேளை ஜீவா மான்வியை பாசத்தோடு தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டிருந்தால் இந்த ஏக்கம் மறைந்து போயிருக்குமோ என்னவோ!!.. நினைவுச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டவள் போல் ஏதேதோ எண்ணங்களில் உழன்று அப்படியே உறங்கிப் போனாள் மான்வி..

மறுநாள் காலையில்.. கதவைத் தட்டும் ஓசை எங்கோ கேட்பது போல் காதுகளை தொடவும்.. மெல்ல உறக்கம் கலைந்து பூவிழிகளை திறந்தாள் அவள்..

மெல்ல எழுந்து அமர்ந்தவள் தன்னையும் அறியாது உடல் நெளித்து சோம்பல் முறித்தாள்.. உறக்கம் முற்றிலும் களைந்து சுற்றம் உணர்ந்து தான் ஜீவாவின் வீட்டில் இருக்கிறோம் என்று உணரவே சில நிமிடங்கள் பிடித்தன..

கதவு உடைபடுவதைப் போல் தட்டிக் கொண்டிருப்பது அப்போதுதான் அவள் சிந்தையில் பதிந்தது.. நெஞ்சுக்குள் சிறு திடுக்கிடலோடு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் மான்வி..

"எவ்வளவு நேரம் கதவை தட்டறது.. தூங்குனியா இல்ல மயங்கி விழுந்துட்டியா!!.. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட வேகமாக வந்த கடுமையான வார்த்தைகளே காலை நேர பூபால ராகமாக அவளை வரவேற்றது..

"இல்ல.. தூங்கிட்டேன் ஜீவா".. பதட்ட விழிகளோடு கூறினாள் அவள்..

உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க.. அவங்களைப் பேசி அனுப்பி விடறதும் இல்ல அவங்களோட சேர்ந்து அப்படியே திரும்பி பாக்காம போய்டறதும் உன்னோட விருப்பம்.. ஆனா இனிமே அவங்க என் வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது".. அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பெருமூச்சுடன் தன் விதியை எண்ணி நொந்து கொண்டு கொண்டு.. உள்ளே வந்தவள்.. முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி கொண்டு.. கண்ணாடி முன் நின்று கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டாள்.. புரண்டு படுத்ததன் காரணமாக நெற்றியின் ஓரம் ஒதுங்கியிருந்த பொட்டை சரியாக வைத்துக் கொண்டவள்.. கசக்கியிருந்த புடவையை சரியாக மடிப்பு வைத்து கட்டிக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்த்தாள்.. திருப்தியாக உணர முடியவில்லை.. ஏதோ இழந்ததைப் போன்ற முகத் தோற்றம்.. அது சரி.. பெற்றவர்கள் சம்மதத்தோடு ஜீவா விருப்பப்பட்டு இந்த திருமணம் நடக்கவில்லையே.. பிறகு எதற்காக நடிக்க வேண்டும் இந்த அலங்காரமே போதும்.. என்ற மனநிலையோடு அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு சென்றிருந்தாள்..

கொலுசு சத்தத்தோடு மகளின் காலடி ஓசையை கேட்டதும்.. தலை குனிந்து அமர்ந்திருந்த நீலகண்டனும் ரமாவும்.. எழுந்து நின்றனர்.. "மான்விஇஇ".. என்று அழைத்துக் கொண்டே புன்னகைத் ததும்பிய முகத்துடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் ரமா..

"எப்படி இருக்க டா?".. கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது..

"உங்களை விட்டு பிரிஞ்சு வந்து ஒரு நாள் தானே ஆகுது".. கைகளை உருவிக்கொண்டு பட்டும் படாமலும் பதில் சொன்னாள் மான்வி.. தங்களைப் பார்த்த பிறகும் கனியாத அவள் முகம் கண்டு.. கண்களை சுருக்கி தன் மகளை உற்று நோக்கினார் நீலகண்டன்..

"என்னடா எங்க மேல கோவமா அப்பா முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிறியே!! அவர் நேரடியாகவே கேட்டு விட..

தயக்கங்களை ஓரந்தள்ளிவிட்டு "அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இனிமே.. என்னை பார்க்க யாரும் இங்கு வர வேண்டாம்.. உ.. உங்களோடு நான் உறவு வச்சுக்கிறது அவருக்கு பிடிக்கல".. மான்வியின் உணர்ச்சி இல்லாத குரலில் வருத்த சாயலோடு வாடிப்போனது இருவரின் முகமும்.. ஜீவாவின் பாராமுகத்தை எதிர்பார்த்து தான் வந்தனர்.. ஆனால் மகளோடு நிரந்தரமாக உறவு முறிய போகின்றது என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்து நின்ற பெற்றவர்களின் முகத்தை பார்க்க திராணியில்லாமல்.. "அவரோட கோபம் நியாயமானது.. நாம தப்பு செஞ்சிருக்கோம்.. அதுக்கான தண்டனையா இதை நாம எல்லோரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. அவர் மனசுல இருக்குற ரணங்கள் ஆற நாளாகும்.. அதுவரைக்கும் காத்திருக்கணும்.. ஒருவேளை கடைசி வரைக்கும் அவர் கோபம் தணியாம இப்படியே பிடிவாதமா இருந்திட்டா.. இந்த சூழ்நிலையில் வாழ பழகிக்கிறேன்".. என்று பெருமூச்சோடு நிமிர்ந்தவள்.. தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "எது எப்படியோ.. இனிமே என்னை பார்க்க வராதீங்க.. நானும் உங்களை பார்க்க வர மாட்டேன்.. இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. தழுதழுத்த குரலோடு கையெடுத்து கும்பிட்டாள்.. அழுகை முட்டியது..

"அனிதா.. நிவினை நல்லா பாத்துக்கோங்க.. என்னைக்காவது ஒரு நாள் அவர் மனசு மாறுச்சுனா என் புருஷனோட உங்களை பார்க்க வருவேன்.. இனி ஒரு நிமிஷம் கூட இங்கு நிக்க வேண்டாம்.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க".. தன்னையே வெறுத்த நிலையில் கண்கள் மூடி கூறினாள் மான்வி..

நீலகண்டன் நிதர்சனத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதையும் மீறி துக்கம் தொண்டையை அடைத்தது.. ரமா பாரமான இதயத்துடன் பிடிமானம் இல்லாத கொடியாக தளர்ந்து நின்று கொண்டிருந்தாள்.. அவர்கள் இருக்கும் வரை அழவே கூடாது என்று பிரயத்தனப் பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மான்வி..

நீண்ட பெருமூச்சோடு.. "சரிடா.. நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. இனிமே நாங்க இங்க வரல.. ஜீவா உன்னை நல்லா பாத்துக்குவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையோட திருப்தியா தான் இங்கிருந்து போறோம்.. எங்களை நினைச்சு நீ கண் கலங்க வேண்டாம்.. கனத்த இதயத்தோடு மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டார் நீலகண்டன்.. கண்ணீர் பெருகி வழிந்த கண்களோடு.. சிலையாக நின்று கொண்டிருந்த மகளை ஒரு முறை அணைத்து விடுவித்து.. "நாங்க வர்றோம் மான்வி.. நீ சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை எப்பவும் பிரார்த்திச்சுகிட்டே இருப்பேன்".. நெற்றியில் முத்தமிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள் ரமா..

வீட்டுக்கு வந்த பெற்றவர்களுக்கு குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட கொடுக்காமல் திரும்பி அனுப்பியதில் மான்வியின் நெஞ்சம் கலங்கி துடித்தது..

ஏற்கனவே ஜீவாவின் புறக்கணிப்பில் புழுங்கி தவித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் பெற்றவர்களும் விட்டு சென்றதில்.. வேதனை தாளாது.. நீள்விருக்கையில் அமர்ந்து குமிழியிட்டு கிளம்பிய ஊற்றாக பீறிட்டு அழ ஆரம்பித்திருந்தாள்..

"பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே.. ம்ம்.. தட்ஸ் குட்".. எகத்தாளப் பார்வையும் ஏளன பேச்சுமாக கையில் காபி கோப்பையோடு எதிர்விருக்கையில் அமர்ந்தவனை அழுகையை நிறுத்தி விட்டு வெறித்தாள் மான்வி..

அவனைப் பார்த்து அடுத்த கணமே அழக்கூடாது சிம்பதி தேடக்கூடாது என்ற வைராக்கியம் ஒட்டிக்கொள்ள வேகமாக கண்களை துடைத்து.. மிச்சமிருந்த அழுகையை விழுங்கிக் கொண்டு.. "ஜீவா அப்பா செஞ்சது தப்புதான் அந்த நேரத்துல அப்படி பேசி இருக்கக் கூடாது.. ஆனா நாங்க வேணும்னு தப்பு பண்ணல.. இப்படி ஏதாவது பொய் சொல்லி.. என்னை கூட்டிட்டு போய் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப் போறதா அந்த திவாகர் சொன்னான்"..

பேச்சினூடே புகுந்து "ஓஹோ திவாகருக்கு எப்படி அந்த விஷயம் தெரியுமாம்.. அதை நீங்க யோசிக்கவே இல்லையா?".. புருவங்கள் உயர்த்தி கேட்டவனின் குரலில் ஏளனம் ஒட்டிக் கொண்டிருந்ததை மான்வியால் உணர முடிந்தது..

வார்த்தைகள் வராமல் ஒருகணம் தடுமாறியவள்.. மூச்சை இழுத்து விட்டு.. "அது.. அது.. பரத் அண்ணாவும் உங்க அப்பாவும் கார்ல இருந்து இறங்கி பேசறதுக்கு முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு வந்ததை திவாகர் பார்த்ததா அப்பா கிட்ட வந்து அவசரமா சொன்னான்.. அந்த நேரத்துல அப்பா பயந்துட்டாரு.. அவருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. எந்த காரணத்தை கொண்டும் உங்க அப்பா முன்னாடி ரியாக்ட் பண்ண கூடாது.. அவர் என்ன சொன்னாலும் வீட்டை தாண்டி போகக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டாரு.. என்னால அவர் பேச்சை மீற முடியல ஜீவா.. நீங்க கோமாவில் இருக்கீங்கன்னு உங்க அப்பா சொன்னதும் எல்லோரும் அது பொய்ன்னு நினைச்சாங்க.. ஆனா என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்"..

"பாருடா".. ஜீவாவின் இதழ்கள் நக்கலாக விரிந்தன..

"ஆனா நான் வெளியே காட்டிக்கல.. அப்பவும் கூட உங்க அப்பா வெளியே போன பிறகு உங்களுக்காக கலங்கி அவர் பின்னாடி ஓடின என்னை.. அந்த திவாகரும் அப்பாவும் தடுத்து உள்ள கூட்டிட்டு போய் அறையில அடைச்சு வச்சுட்டாங்க.. சத்தியமா இது தான் ஜீவா நடந்தது.. உங்க அப்.. அப்பா இறந்த விஷயம் கூட எங்களுக்கு தெரியாது".. ஜீவாவின் முகபாவனையும் அவன் பார்வையை கண்டு அடுத்து பேச முடியாமல் தொண்டை அடைத்தது.. இதுவரை தான் பேசியதை அவன் ஒரு சதவீதம் கூட நம்பவில்லை என்று தெளிவாக புரிந்து கொண்டாலும்.. எப்படியோ மனதை திறந்து உண்மைகளை கொட்டி விட்டதில் ஓரளவு நிம்மதி அடைந்திருந்தாள்.. ஜீவா என்ன சொல்லப் போகிறான் என்று பரிதவிப்போடு அவன் முகத்தையே மொய்த்திருந்தன அவள் விழிகள்..

"குட்.. குட் ஸ்கிரீன் ப்ளே.. நேத்து நைட் முழுக்க இதைதான் யோசிச்சியோ".. என்றதும் புரியாமல் உருத்து விழித்தாள் அவள்..

"கல்யாணம் செஞ்சாச்சு இனிமே வேற வழி இல்ல.. இவனோட தான் வாழ்ந்தாகணும்.. நம்மளை உருகி உருகி காதலிச்சவன் தானே.. கண்ணீர் விட்டு அழுதா காலடியில வந்து விழுந்துட்டு போறான்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவனை ஆஃப் பண்ணிட்டு.. இந்த இளிச்சவாயன் கூட சந்தோஷமா சுகவாசியா வசதியா வாழலாம் இதுதானே உன்னோட பிளான்".. ஜீவாவின் ஏளனம் வழிந்தோடிய இதழ்களில் மான்வியின் இதயம் பலத்த அடி வாங்கியது..

"ஜீவா என்னை நம்புங்க ப்ளீஸ்".. கண்ணீருடன் இறைஞ்சியவளை கண்டு கரையவில்லை அவன்..

"நம்பணுமே நம்பித்தான் ஆகணும்.. ஏன்னா இப்போ நீ என்னோட மனைவியாச்சே.. இனி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஃபேஸ் பண்ணனுமே.. சோ நீ சொல்ற கட்டுக்கதைகளை சாரி சாரி.. உண்மைகளை நம்புறத தவிர வேற வழியே இல்லை எனக்கு".. வார்த்தைகளோடு பார்வையும் அவளை காயப்படுத்தியதில்.. இதழ் கடித்து தலை குனிந்தாள் மான்வி.. இனி என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.. கனல் கண்களோடு வெறுப்பை உமிழும் அவன் பார்வை அதைவிட கொடுமை.. அங்கிருந்து சென்று விட்டான் ஜீவா.. கால்கள் அசைய மறுத்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள் மான்வி.. திவாகர் என்னும் புயல் தன் வாழ்க்கையை புரட்டிப் போட்டதில் தென்றலின் அருமையை உணராமல் மிகுந்த சேதமடைந்திருந்தாள்.. புதுமண பெண்ணுக்கான களையே இல்லை அவள் முகத்தில்..

சுகந்தம் வீசும் நேச பார்வையோடு தன்னை தீண்டித் தழுவிய ஜீவாவின் தற்போதைய மாற்றம் அவளுக்குள் திராவகத்தை வாரியிறைக்க முடிந்த வரை அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..

தேவைக்கு மட்டுமே அவன் முன் சென்று நின்றாள்.. அதற்கே எரிந்து விழுந்தான் அவன்..

"ரெண்டு நாள்ல நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் ஜீவா.. வீட்டுக்கு வெளியே புல்வெளியில் வெண்ணிற வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தவன்.. அவள் சொன்னதை கேட்டு மெல்ல நிமிர்ந்து.. "இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற".. என்றான் எரிச்சலான குரலுடன்..

"இல்ல.. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணாம எப்படி?".. எச்சில் விழுங்கினாள்..

"என்கிட்ட எந்த இன்ஃபர்மேஷனும் கொடுக்க தேவையில்லை.. ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் தவிர மற்ற விஷயங்களில் நீ உன் இஷ்டப்படி இருக்கலாம்.. எல்லாத்துக்கும் வந்து என்கிட்ட நிக்கணும்னு அவசியம் இல்ல".. கைபேசியை விரல்களால் துழாவிக் கொண்டே அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் பேசினான்.. அவன் பேசிய வேகத்திற்கும்.. உதாசீன பார்வைக்கு அர்த்தம் நான் உன்னை பார்க்கவே விரும்பவில்லை.. அடிக்கடி என் கண் முன்னே வந்து நிற்காதே என்பதே..

தலைமுடி முதற்கொண்டு கால் நகம் வரை அணு அணுவாக ரசித்து போற்றிக் கொண்டாடியவன்.. இதழ் கொண்ட ருசியோடு வடியும் எச்சில் கூட தீர்த்தம் என்று சுவைத்தவன்.. "நீ தூங்கு மானு எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்".. என்று விடிய விடிய விடிய வீடியோ காலில் தூங்காமல் அவள் தூங்குவதை ரசித்தவன்.. இன்றோ அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்தான்.. உணர்ச்சிவசப்பட்டதால் வந்த கோபம் இல்லை இது.. மிக நிதானமாக உருவாகி விஸ்வரூபம் எடுத்திருக்கும் வெறுப்பு.. ஜீவாவை எப்படி சமாதானப்படுத்த போகிறேன் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது.. ஒரு சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை தீண்டத் தகாதவளை போல் எரிச்சலாக ஒரு பார்வை பார்த்தவன் .. அவள் இருப்பு ஊசியாக தன்னை குத்துவது போல் அடுத்த கணமே அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான்.. வேதனையோடு பெருமூச்சுவிட்டு அங்கே அமர்ந்தாள் அவள்.. இந்த மனப் பிணக்குகள் என்று தீருமோ புரியவில்லை.. தீருமா என்று கூட தெரியவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயமும் கவலையும் மனதுக்குள் ஆக்ரமித்திருத்தாலும் ஜீவா மீதான நேசம் கடுகளவும் குறையவில்லை..

காலையில் விடிவதற்கு முன்பே தொழிற்சாலைக்கு கிளம்பி சென்று விட்டான் ஜீவா.. இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான்.. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது..

சமையலுக்கு ஒரு பெண்.. வீட்டை சுத்தம் செய்ய ஒரு ஆண்.. தோட்ட வேலை செய்வதற்கு ஒருவர் என்று மூன்று பணியாளர்கள் மட்டுமே அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்.. மான்விக்கு எந்த வேலையும் இல்லை..

இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பைத்தியமே பிடிச்சிடும்... எடுத்த லீவு போதும் நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு கிளம்பிடனும்.. என்று மான்வி உறுதியாக முடிவெடுத்திருந்த நிலையில் ஜீவா ஃபோனில் அழைத்திருந்தான்.

திரையில் அவன் எண்ணை பார்த்ததும் தாளமுடியாத உற்சாகத்துடன் கண்கள் வேறு கலங்கிவிட.. அவசரமாக அழைப்பை ஏற்று காதினில் வைத்தாள்..

"ஹலோ".. சொல்லுங்க ஜீவா.. அவன் பேசுவதற்கு முன்பே பரவசத்தோடு அவள் ஆரம்பித்திருக்க..

சில மணித்துளிகள் மௌனத்திற்கு பின்.. "என்ன செய்யறே?"..என்றான் மிருதுவான குரலில்..

அவன் அன்பான குரல் கேட்டு அழுகையே வந்தது அவளுக்கு..

"நான்.. நான்.. சும்மாதான்"... வார்த்தைகள் வர மறுத்தன.. மான்வி கண்ணீரோடு கலங்குகிறாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லை..

"இடம் செட் ஆகிடுச்சா.. இப்ப எந்த பிரச்சனையும் இல்லையே".. அவன் எதற்காக கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாமல்.. "அதெல்லாம் ஓகே தான் ஜீவா.. நீங்க என் கூட இல்ல அதுதான் பிரச்சனை".. வாய் விட்டு தனது அன்பையும் ஆதங்கத்தை கொட்டினாள்..

அப்படி ஒரு வார்த்தையே தன் காதில் விழாதவன் போல்.. "நான் இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்.. பிரிப்பேரா இரு".. என்று கூறி வைத்து விட்டான்..

எதற்காக தயாராக இருக்கச் சொல்கிறார் என்று முதலில் புரியாமல் விழித்த மான்வி.. அடுத்த கணமே காரணத்தை உணர்ந்து கொண்டதும் அடிவயிற்றில் பீதி கிளம்பியது..

வலி நிறைந்த பிராசஸ்.. அசிங்கமான உறவின் தொடக்கம் இன்று முதல் ஆரம்பமா.. தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் உணர்ந்தாள்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
திவாகரின் தொல்லை நீங்கியது விரும்பியவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியவில்லை.. கவலையில் உடலும் மனமும் சோர்ந்து போனதிலும்.. பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததிலும் கண்கள் சொருகியது.. மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடினாள் மான்வி.. இனி தாய் தந்தையுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது.. மூடிய விழிகளை தாண்டி கண்ணீர் வழிந்தது..

இருபத்து மூன்று வருடங்கள் அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.. பாசம் கொட்டி வளர்த்தவர்கள்.. பிள்ளைகளுக்காகவே உழைத்து ஊன் தேய்ந்து போனவர் நீலகண்டன்.. ஜீவா விஷயத்தில் தன்னோடு சேர்த்து மொத்த குடும்பமும் அவனுக்கு அநீதி இழைத்திருந்தாலும் அப்பாவும் அம்மாவும் தனக்கு கெட்டவர்கள் இல்லையே.. ஜீவாவின் கட்டளைக்கேற்ப பாசத்தை சட்டென்று ஒதுக்கி வைத்து இயந்திரமாக இருக்க முடியவில்லை அவளால்..

தனிமையில் கழிந்த இரவு தாய் தந்தையரை மேலும் மேலும் நினைவு படுத்தியது.. ஒருவேளை ஜீவா மான்வியை பாசத்தோடு தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டிருந்தால் இந்த ஏக்கம் மறைந்து போயிருக்குமோ என்னவோ!!.. நினைவுச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டவள் போல் ஏதேதோ எண்ணங்களில் உழன்று அப்படியே உறங்கிப் போனாள் மான்வி..

மறுநாள் காலையில்.. கதவைத் தட்டும் ஓசை எங்கோ கேட்பது போல் காதுகளை தொடவும்.. மெல்ல உறக்கம் கலைந்து பூவிழிகளை திறந்தாள் அவள்..

மெல்ல எழுந்து அமர்ந்தவள் தன்னையும் அறியாது உடல் நெளித்து சோம்பல் முறித்தாள்.. உறக்கம் முற்றிலும் களைந்து சுற்றம் உணர்ந்து தான் ஜீவாவின் வீட்டில் இருக்கிறோம் என்று உணரவே சில நிமிடங்கள் பிடித்தன..

கதவு உடைபடுவதைப் போல் தட்டிக் கொண்டிருப்பது அப்போதுதான் அவள் சிந்தையில் பதிந்தது.. நெஞ்சுக்குள் சிறு திடுக்கிடலோடு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் மான்வி..

"எவ்வளவு நேரம் கதவை தட்டறது.. தூங்குனியா இல்ல மயங்கி விழுந்துட்டியா!!.. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட வேகமாக வந்த கடுமையான வார்த்தைகளே காலை நேர பூபால ராகமாக அவளை வரவேற்றது..

"இல்ல.. தூங்கிட்டேன் ஜீவா".. பதட்ட விழிகளோடு கூறினாள் அவள்..

உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க.. அவங்களைப் பேசி அனுப்பி விடறதும் இல்ல அவங்களோட சேர்ந்து அப்படியே திரும்பி பாக்காம போய்டறதும் உன்னோட விருப்பம்.. ஆனா இனிமே அவங்க என் வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது".. அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பெருமூச்சுடன் தன் விதியை எண்ணி நொந்து கொண்டு கொண்டு.. உள்ளே வந்தவள்.. முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி கொண்டு.. கண்ணாடி முன் நின்று கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டாள்.. புரண்டு படுத்ததன் காரணமாக நெற்றியின் ஓரம் ஒதுங்கியிருந்த பொட்டை சரியாக வைத்துக் கொண்டவள்.. கசக்கியிருந்த புடவையை சரியாக மடிப்பு வைத்து கட்டிக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்த்தாள்.. திருப்தியாக உணர முடியவில்லை.. ஏதோ இழந்ததைப் போன்ற முகத் தோற்றம்.. அது சரி.. பெற்றவர்கள் சம்மதத்தோடு ஜீவா விருப்பப்பட்டு இந்த திருமணம் நடக்கவில்லையே.. பிறகு எதற்காக நடிக்க வேண்டும் இந்த அலங்காரமே போதும்.. என்ற மனநிலையோடு அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு சென்றிருந்தாள்..

கொலுசு சத்தத்தோடு மகளின் காலடி ஓசையை கேட்டதும்.. தலை குனிந்து அமர்ந்திருந்த நீலகண்டனும் ரமாவும்.. எழுந்து நின்றனர்.. "மான்விஇஇ".. என்று அழைத்துக் கொண்டே புன்னகைத் ததும்பிய முகத்துடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் ரமா..

"எப்படி இருக்க டா?".. கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது..

"உங்களை விட்டு பிரிஞ்சு வந்து ஒரு நாள் தானே ஆகுது".. கைகளை உருவிக்கொண்டு பட்டும் படாமலும் பதில் சொன்னாள் மான்வி.. தங்களைப் பார்த்த பிறகும் கனியாத அவள் முகம் கண்டு.. கண்களை சுருக்கி தன் மகளை உற்று நோக்கினார் நீலகண்டன்..

"என்னடா எங்க மேல கோவமா அப்பா முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிறியே!! அவர் நேரடியாகவே கேட்டு விட..

தயக்கங்களை ஓரந்தள்ளிவிட்டு "அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இனிமே.. என்னை பார்க்க யாரும் இங்கு வர வேண்டாம்.. உ.. உங்களோடு நான் உறவு வச்சுக்கிறது அவருக்கு பிடிக்கல".. மான்வியின் உணர்ச்சி இல்லாத குரலில் வருத்த சாயலோடு வாடிப்போனது இருவரின் முகமும்.. ஜீவாவின் பாராமுகத்தை எதிர்பார்த்து தான் வந்தனர்.. ஆனால் மகளோடு நிரந்தரமாக உறவு முறிய போகின்றது என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்து நின்ற பெற்றவர்களின் முகத்தை பார்க்க திராணியில்லாமல்.. "அவரோட கோபம் நியாயமானது.. நாம தப்பு செஞ்சிருக்கோம்.. அதுக்கான தண்டனையா இதை நாம எல்லோரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. அவர் மனசுல இருக்குற ரணங்கள் ஆற நாளாகும்.. அதுவரைக்கும் காத்திருக்கணும்.. ஒருவேளை கடைசி வரைக்கும் அவர் கோபம் தணியாம இப்படியே பிடிவாதமா இருந்திட்டா.. இந்த சூழ்நிலையில் வாழ பழகிக்கிறேன்".. என்று பெருமூச்சோடு நிமிர்ந்தவள்.. தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "எது எப்படியோ.. இனிமே என்னை பார்க்க வராதீங்க.. நானும் உங்களை பார்க்க வர மாட்டேன்.. இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. தழுதழுத்த குரலோடு கையெடுத்து கும்பிட்டாள்.. அழுகை முட்டியது..

"அனிதா.. நிவினை நல்லா பாத்துக்கோங்க.. என்னைக்காவது ஒரு நாள் அவர் மனசு மாறுச்சுனா என் புருஷனோட உங்களை பார்க்க வருவேன்.. இனி ஒரு நிமிஷம் கூட இங்கு நிக்க வேண்டாம்.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க".. தன்னையே வெறுத்த நிலையில் கண்கள் மூடி கூறினாள் மான்வி..

நீலகண்டன் நிதர்சனத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதையும் மீறி துக்கம் தொண்டையை அடைத்தது.. ரமா பாரமான இதயத்துடன் பிடிமானம் இல்லாத கொடியாக தளர்ந்து நின்று கொண்டிருந்தாள்.. அவர்கள் இருக்கும் வரை அழவே கூடாது என்று பிரயத்தனப் பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மான்வி..

நீண்ட பெருமூச்சோடு.. "சரிடா.. நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. இனிமே நாங்க இங்க வரல.. ஜீவா உன்னை நல்லா பாத்துக்குவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையோட திருப்தியா தான் இங்கிருந்து போறோம்.. எங்களை நினைச்சு நீ கண் கலங்க வேண்டாம்.. கனத்த இதயத்தோடு மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டார் நீலகண்டன்.. கண்ணீர் பெருகி வழிந்த கண்களோடு.. சிலையாக நின்று கொண்டிருந்த மகளை ஒரு முறை அணைத்து விடுவித்து.. "நாங்க வர்றோம் மான்வி.. நீ சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை எப்பவும் பிரார்த்திச்சுகிட்டே இருப்பேன்".. நெற்றியில் முத்தமிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள் ரமா..

வீட்டுக்கு வந்த பெற்றவர்களுக்கு குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட கொடுக்காமல் திரும்பி அனுப்பியதில் மான்வியின் நெஞ்சம் கலங்கி துடித்தது..

ஏற்கனவே ஜீவாவின் புறக்கணிப்பில் புழுங்கி தவித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் பெற்றவர்களும் விட்டு சென்றதில்.. வேதனை தாளாது.. நீள்விருக்கையில் அமர்ந்து குமிழியிட்டு கிளம்பிய ஊற்றாக பீறிட்டு அழ ஆரம்பித்திருந்தாள்..

"பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே.. ம்ம்.. தட்ஸ் குட்".. எகத்தாளப் பார்வையும் ஏளன பேச்சுமாக கையில் காபி கோப்பையோடு எதிர்விருக்கையில் அமர்ந்தவனை அழுகையை நிறுத்தி விட்டு வெறித்தாள் மான்வி..

அவனைப் பார்த்து அடுத்த கணமே அழக்கூடாது சிம்பதி தேடக்கூடாது என்ற வைராக்கியம் ஒட்டிக்கொள்ள வேகமாக கண்களை துடைத்து.. மிச்சமிருந்த அழுகையை விழுங்கிக் கொண்டு.. "ஜீவா அப்பா செஞ்சது தப்புதான் அந்த நேரத்துல அப்படி பேசி இருக்கக் கூடாது.. ஆனா நாங்க வேணும்னு தப்பு பண்ணல.. இப்படி ஏதாவது பொய் சொல்லி.. என்னை கூட்டிட்டு போய் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப் போறதா அந்த திவாகர் சொன்னான்"..

பேச்சினூடே புகுந்து "ஓஹோ திவாகருக்கு எப்படி அந்த விஷயம் தெரியுமாம்.. அதை நீங்க யோசிக்கவே இல்லையா?".. புருவங்கள் உயர்த்தி கேட்டவனின் குரலில் ஏளனம் ஒட்டிக் கொண்டிருந்ததை மான்வியால் உணர முடிந்தது..

வார்த்தைகள் வராமல் ஒருகணம் தடுமாறியவள்.. மூச்சை இழுத்து விட்டு.. "அது.. அது.. பரத் அண்ணாவும் உங்க அப்பாவும் கார்ல இருந்து இறங்கி பேசறதுக்கு முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு வந்ததை திவாகர் பார்த்ததா அப்பா கிட்ட வந்து அவசரமா சொன்னான்.. அந்த நேரத்துல அப்பா பயந்துட்டாரு.. அவருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. எந்த காரணத்தை கொண்டும் உங்க அப்பா முன்னாடி ரியாக்ட் பண்ண கூடாது.. அவர் என்ன சொன்னாலும் வீட்டை தாண்டி போகக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டாரு.. என்னால அவர் பேச்சை மீற முடியல ஜீவா.. நீங்க கோமாவில் இருக்கீங்கன்னு உங்க அப்பா சொன்னதும் எல்லோரும் அது பொய்ன்னு நினைச்சாங்க.. ஆனா என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்"..

"பாருடா".. ஜீவாவின் இதழ்கள் நக்கலாக விரிந்தன..

"ஆனா நான் வெளியே காட்டிக்கல.. அப்பவும் கூட உங்க அப்பா வெளியே போன பிறகு உங்களுக்காக கலங்கி அவர் பின்னாடி ஓடின என்னை.. அந்த திவாகரும் அப்பாவும் தடுத்து உள்ள கூட்டிட்டு போய் அறையில அடைச்சு வச்சுட்டாங்க.. சத்தியமா இது தான் ஜீவா நடந்தது.. உங்க அப்.. அப்பா இறந்த விஷயம் கூட எங்களுக்கு தெரியாது".. ஜீவாவின் முகபாவனையும் அவன் பார்வையை கண்டு அடுத்து பேச முடியாமல் தொண்டை அடைத்தது.. இதுவரை தான் பேசியதை அவன் ஒரு சதவீதம் கூட நம்பவில்லை என்று தெளிவாக புரிந்து கொண்டாலும்.. எப்படியோ மனதை திறந்து உண்மைகளை கொட்டி விட்டதில் ஓரளவு நிம்மதி அடைந்திருந்தாள்.. ஜீவா என்ன சொல்லப் போகிறான் என்று பரிதவிப்போடு அவன் முகத்தையே மொய்த்திருந்தன அவள் விழிகள்..

"குட்.. குட் ஸ்கிரீன் ப்ளே.. நேத்து நைட் முழுக்க இதைதான் யோசிச்சியோ".. என்றதும் புரியாமல் உருத்து விழித்தாள் அவள்..

"கல்யாணம் செஞ்சாச்சு இனிமே வேற வழி இல்ல.. இவனோட தான் வாழ்ந்தாகணும்.. நம்மளை உருகி உருகி காதலிச்சவன் தானே.. கண்ணீர் விட்டு அழுதா காலடியில வந்து விழுந்துட்டு போறான்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவனை ஆஃப் பண்ணிட்டு.. இந்த இளிச்சவாயன் கூட சந்தோஷமா சுகவாசியா வசதியா வாழலாம் இதுதானே உன்னோட பிளான்".. ஜீவாவின் ஏளனம் வழிந்தோடிய இதழ்களில் மான்வியின் இதயம் பலத்த அடி வாங்கியது..

"ஜீவா என்னை நம்புங்க ப்ளீஸ்".. கண்ணீருடன் இறைஞ்சியவளை கண்டு கரையவில்லை அவன்..

"நம்பணுமே நம்பித்தான் ஆகணும்.. ஏன்னா இப்போ நீ என்னோட மனைவியாச்சே.. இனி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஃபேஸ் பண்ணனுமே.. சோ நீ சொல்ற கட்டுக்கதைகளை சாரி சாரி.. உண்மைகளை நம்புறத தவிர வேற வழியே இல்லை எனக்கு".. வார்த்தைகளோடு பார்வையும் அவளை காயப்படுத்தியதில்.. இதழ் கடித்து தலை குனிந்தாள் மான்வி.. இனி என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.. கனல் கண்களோடு வெறுப்பை உமிழும் அவன் பார்வை அதைவிட கொடுமை.. அங்கிருந்து சென்று விட்டான் ஜீவா.. கால்கள் அசைய மறுத்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள் மான்வி.. திவாகர் என்னும் புயல் தன் வாழ்க்கையை புரட்டிப் போட்டதில் தென்றலின் அருமையை உணராமல் மிகுந்த சேதமடைந்திருந்தாள்.. புதுமண பெண்ணுக்கான களையே இல்லை அவள் முகத்தில்..

சுகந்தம் வீசும் நேச பார்வையோடு தன்னை தீண்டித் தழுவிய ஜீவாவின் தற்போதைய மாற்றம் அவளுக்குள் திராவகத்தை வாரியிறைக்க முடிந்த வரை அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..

தேவைக்கு மட்டுமே அவன் முன் சென்று நின்றாள்.. அதற்கே எரிந்து விழுந்தான் அவன்..

"ரெண்டு நாள்ல நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் ஜீவா.. வீட்டுக்கு வெளியே புல்வெளியில் வெண்ணிற வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தவன்.. அவள் சொன்னதை கேட்டு மெல்ல நிமிர்ந்து.. "இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற".. என்றான் எரிச்சலான குரலுடன்..

"இல்ல.. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணாம எப்படி?".. எச்சில் விழுங்கினாள்..

"என்கிட்ட எந்த இன்ஃபர்மேஷனும் கொடுக்க தேவையில்லை.. ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் தவிர மற்ற விஷயங்களில் நீ உன் இஷ்டப்படி இருக்கலாம்.. எல்லாத்துக்கும் வந்து என்கிட்ட நிக்கணும்னு அவசியம் இல்ல".. கைபேசியை விரல்களால் துழாவிக் கொண்டே அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் பேசினான்.. அவன் பேசிய வேகத்திற்கும்.. உதாசீன பார்வைக்கு அர்த்தம் நான் உன்னை பார்க்கவே விரும்பவில்லை.. அடிக்கடி என் கண் முன்னே வந்து நிற்காதே என்பதே..

தலைமுடி முதற்கொண்டு கால் நகம் வரை அணு அணுவாக ரசித்து போற்றிக் கொண்டாடியவன்.. இதழ் கொண்ட ருசியோடு வடியும் எச்சில் கூட தீர்த்தம் என்று சுவைத்தவன்.. "நீ தூங்கு மானு எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்".. என்று விடிய விடிய விடிய வீடியோ காலில் தூங்காமல் அவள் தூங்குவதை ரசித்தவன்.. இன்றோ அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்தான்.. உணர்ச்சிவசப்பட்டதால் வந்த கோபம் இல்லை இது.. மிக நிதானமாக உருவாகி விஸ்வரூபம் எடுத்திருக்கும் வெறுப்பு.. ஜீவாவை எப்படி சமாதானப்படுத்த போகிறேன் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது.. ஒரு சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை தீண்டத் தகாதவளை போல் எரிச்சலாக ஒரு பார்வை பார்த்தவன் .. அவள் இருப்பு ஊசியாக தன்னை குத்துவது போல் அடுத்த கணமே அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான்.. வேதனையோடு பெருமூச்சுவிட்டு அங்கே அமர்ந்தாள் அவள்.. இந்த மனப் பிணக்குகள் என்று தீருமோ புரியவில்லை.. தீருமா என்று கூட தெரியவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயமும் கவலையும் மனதுக்குள் ஆக்ரமித்திருத்தாலும் ஜீவா மீதான நேசம் கடுகளவும் குறையவில்லை..

காலையில் விடிவதற்கு முன்பே தொழிற்சாலைக்கு கிளம்பி சென்று விட்டான் ஜீவா.. இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான்.. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது..

சமையலுக்கு ஒரு பெண்.. வீட்டை சுத்தம் செய்ய ஒரு ஆண்.. தோட்ட வேலை செய்வதற்கு ஒருவர் என்று மூன்று பணியாளர்கள் மட்டுமே அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்.. மான்விக்கு எந்த வேலையும் இல்லை..

இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பைத்தியமே பிடிச்சிடும்... எடுத்த லீவு போதும் நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு கிளம்பிடனும்.. என்று மான்வி உறுதியாக முடிவெடுத்திருந்த நிலையில் ஜீவா ஃபோனில் அழைத்திருந்தான்.

திரையில் அவன் எண்ணை பார்த்ததும் தாளமுடியாத உற்சாகத்துடன் கண்கள் வேறு கலங்கிவிட.. அவசரமாக அழைப்பை ஏற்று காதினில் வைத்தாள்..

"ஹலோ".. சொல்லுங்க ஜீவா.. அவன் பேசுவதற்கு முன்பே பரவசத்தோடு அவள் ஆரம்பித்திருக்க..

சில மணித்துளிகள் மௌனத்திற்கு பின்.. "என்ன செய்யறே?"..என்றான் மிருதுவான குரலில்..

அவன் அன்பான குரல் கேட்டு அழுகையே வந்தது அவளுக்கு..

"நான்.. நான்.. சும்மாதான்"... வார்த்தைகள் வர மறுத்தன.. மான்வி கண்ணீரோடு கலங்குகிறாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லை..

"இடம் செட் ஆகிடுச்சா.. இப்ப எந்த பிரச்சனையும் இல்லையே".. அவன் எதற்காக கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாமல்.. "அதெல்லாம் ஓகே தான் ஜீவா.. நீங்க என் கூட இல்ல அதுதான் பிரச்சனை".. வாய் விட்டு தனது அன்பையும் ஆதங்கத்தை கொட்டினாள்..

அப்படி ஒரு வார்த்தையே தன் காதில் விழாதவன் போல்.. "நான் இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்.. பிரிப்பேரா இரு".. என்று கூறி வைத்து விட்டான்..

எதற்காக தயாராக இருக்கச் சொல்கிறார் என்று முதலில் புரியாமல் விழித்த மான்வி.. அடுத்த கணமே காரணத்தை உணர்ந்து கொண்டதும் அடிவயிற்றில் பீதி கிளம்பியது..

வலி நிறைந்த பிராசஸ்.. அசிங்கமான உறவின் தொடக்கம் இன்று முதல் ஆரம்பமா.. தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் உணர்ந்தாள்..

தொடரும்..
Paavam😢
 
Joined
Jul 25, 2023
Messages
36
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Member
Joined
Jan 26, 2024
Messages
50
அருமையான பதிவு
 
Member
Joined
Dec 23, 2023
Messages
17
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
திவாகரின் தொல்லை நீங்கியது விரும்பியவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியவில்லை.. கவலையில் உடலும் மனமும் சோர்ந்து போனதிலும்.. பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததிலும் கண்கள் சொருகியது.. மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடினாள் மான்வி.. இனி தாய் தந்தையுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது.. மூடிய விழிகளை தாண்டி கண்ணீர் வழிந்தது..

இருபத்து மூன்று வருடங்கள் அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.. பாசம் கொட்டி வளர்த்தவர்கள்.. பிள்ளைகளுக்காகவே உழைத்து ஊன் தேய்ந்து போனவர் நீலகண்டன்.. ஜீவா விஷயத்தில் தன்னோடு சேர்த்து மொத்த குடும்பமும் அவனுக்கு அநீதி இழைத்திருந்தாலும் அப்பாவும் அம்மாவும் தனக்கு கெட்டவர்கள் இல்லையே.. ஜீவாவின் கட்டளைக்கேற்ப பாசத்தை சட்டென்று ஒதுக்கி வைத்து இயந்திரமாக இருக்க முடியவில்லை அவளால்..

தனிமையில் கழிந்த இரவு தாய் தந்தையரை மேலும் மேலும் நினைவு படுத்தியது.. ஒருவேளை ஜீவா மான்வியை பாசத்தோடு தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டிருந்தால் இந்த ஏக்கம் மறைந்து போயிருக்குமோ என்னவோ!!.. நினைவுச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டவள் போல் ஏதேதோ எண்ணங்களில் உழன்று அப்படியே உறங்கிப் போனாள் மான்வி..

மறுநாள் காலையில்.. கதவைத் தட்டும் ஓசை எங்கோ கேட்பது போல் காதுகளை தொடவும்.. மெல்ல உறக்கம் கலைந்து பூவிழிகளை திறந்தாள் அவள்..

மெல்ல எழுந்து அமர்ந்தவள் தன்னையும் அறியாது உடல் நெளித்து சோம்பல் முறித்தாள்.. உறக்கம் முற்றிலும் களைந்து சுற்றம் உணர்ந்து தான் ஜீவாவின் வீட்டில் இருக்கிறோம் என்று உணரவே சில நிமிடங்கள் பிடித்தன..

கதவு உடைபடுவதைப் போல் தட்டிக் கொண்டிருப்பது அப்போதுதான் அவள் சிந்தையில் பதிந்தது.. நெஞ்சுக்குள் சிறு திடுக்கிடலோடு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் மான்வி..

"எவ்வளவு நேரம் கதவை தட்டறது.. தூங்குனியா இல்ல மயங்கி விழுந்துட்டியா!!.. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட வேகமாக வந்த கடுமையான வார்த்தைகளே காலை நேர பூபால ராகமாக அவளை வரவேற்றது..

"இல்ல.. தூங்கிட்டேன் ஜீவா".. பதட்ட விழிகளோடு கூறினாள் அவள்..

உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க.. அவங்களைப் பேசி அனுப்பி விடறதும் இல்ல அவங்களோட சேர்ந்து அப்படியே திரும்பி பாக்காம போய்டறதும் உன்னோட விருப்பம்.. ஆனா இனிமே அவங்க என் வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது".. அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பெருமூச்சுடன் தன் விதியை எண்ணி நொந்து கொண்டு கொண்டு.. உள்ளே வந்தவள்.. முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி கொண்டு.. கண்ணாடி முன் நின்று கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டாள்.. புரண்டு படுத்ததன் காரணமாக நெற்றியின் ஓரம் ஒதுங்கியிருந்த பொட்டை சரியாக வைத்துக் கொண்டவள்.. கசக்கியிருந்த புடவையை சரியாக மடிப்பு வைத்து கட்டிக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்த்தாள்.. திருப்தியாக உணர முடியவில்லை.. ஏதோ இழந்ததைப் போன்ற முகத் தோற்றம்.. அது சரி.. பெற்றவர்கள் சம்மதத்தோடு ஜீவா விருப்பப்பட்டு இந்த திருமணம் நடக்கவில்லையே.. பிறகு எதற்காக நடிக்க வேண்டும் இந்த அலங்காரமே போதும்.. என்ற மனநிலையோடு அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு சென்றிருந்தாள்..

கொலுசு சத்தத்தோடு மகளின் காலடி ஓசையை கேட்டதும்.. தலை குனிந்து அமர்ந்திருந்த நீலகண்டனும் ரமாவும்.. எழுந்து நின்றனர்.. "மான்விஇஇ".. என்று அழைத்துக் கொண்டே புன்னகைத் ததும்பிய முகத்துடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் ரமா..

"எப்படி இருக்க டா?".. கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது..

"உங்களை விட்டு பிரிஞ்சு வந்து ஒரு நாள் தானே ஆகுது".. கைகளை உருவிக்கொண்டு பட்டும் படாமலும் பதில் சொன்னாள் மான்வி.. தங்களைப் பார்த்த பிறகும் கனியாத அவள் முகம் கண்டு.. கண்களை சுருக்கி தன் மகளை உற்று நோக்கினார் நீலகண்டன்..

"என்னடா எங்க மேல கோவமா அப்பா முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிறியே!! அவர் நேரடியாகவே கேட்டு விட..

தயக்கங்களை ஓரந்தள்ளிவிட்டு "அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இனிமே.. என்னை பார்க்க யாரும் இங்கு வர வேண்டாம்.. உ.. உங்களோடு நான் உறவு வச்சுக்கிறது அவருக்கு பிடிக்கல".. மான்வியின் உணர்ச்சி இல்லாத குரலில் வருத்த சாயலோடு வாடிப்போனது இருவரின் முகமும்.. ஜீவாவின் பாராமுகத்தை எதிர்பார்த்து தான் வந்தனர்.. ஆனால் மகளோடு நிரந்தரமாக உறவு முறிய போகின்றது என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்து நின்ற பெற்றவர்களின் முகத்தை பார்க்க திராணியில்லாமல்.. "அவரோட கோபம் நியாயமானது.. நாம தப்பு செஞ்சிருக்கோம்.. அதுக்கான தண்டனையா இதை நாம எல்லோரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. அவர் மனசுல இருக்குற ரணங்கள் ஆற நாளாகும்.. அதுவரைக்கும் காத்திருக்கணும்.. ஒருவேளை கடைசி வரைக்கும் அவர் கோபம் தணியாம இப்படியே பிடிவாதமா இருந்திட்டா.. இந்த சூழ்நிலையில் வாழ பழகிக்கிறேன்".. என்று பெருமூச்சோடு நிமிர்ந்தவள்.. தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "எது எப்படியோ.. இனிமே என்னை பார்க்க வராதீங்க.. நானும் உங்களை பார்க்க வர மாட்டேன்.. இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. தழுதழுத்த குரலோடு கையெடுத்து கும்பிட்டாள்.. அழுகை முட்டியது..

"அனிதா.. நிவினை நல்லா பாத்துக்கோங்க.. என்னைக்காவது ஒரு நாள் அவர் மனசு மாறுச்சுனா என் புருஷனோட உங்களை பார்க்க வருவேன்.. இனி ஒரு நிமிஷம் கூட இங்கு நிக்க வேண்டாம்.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க".. தன்னையே வெறுத்த நிலையில் கண்கள் மூடி கூறினாள் மான்வி..

நீலகண்டன் நிதர்சனத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதையும் மீறி துக்கம் தொண்டையை அடைத்தது.. ரமா பாரமான இதயத்துடன் பிடிமானம் இல்லாத கொடியாக தளர்ந்து நின்று கொண்டிருந்தாள்.. அவர்கள் இருக்கும் வரை அழவே கூடாது என்று பிரயத்தனப் பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மான்வி..

நீண்ட பெருமூச்சோடு.. "சரிடா.. நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. இனிமே நாங்க இங்க வரல.. ஜீவா உன்னை நல்லா பாத்துக்குவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையோட திருப்தியா தான் இங்கிருந்து போறோம்.. எங்களை நினைச்சு நீ கண் கலங்க வேண்டாம்.. கனத்த இதயத்தோடு மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டார் நீலகண்டன்.. கண்ணீர் பெருகி வழிந்த கண்களோடு.. சிலையாக நின்று கொண்டிருந்த மகளை ஒரு முறை அணைத்து விடுவித்து.. "நாங்க வர்றோம் மான்வி.. நீ சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை எப்பவும் பிரார்த்திச்சுகிட்டே இருப்பேன்".. நெற்றியில் முத்தமிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள் ரமா..

வீட்டுக்கு வந்த பெற்றவர்களுக்கு குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட கொடுக்காமல் திரும்பி அனுப்பியதில் மான்வியின் நெஞ்சம் கலங்கி துடித்தது..

ஏற்கனவே ஜீவாவின் புறக்கணிப்பில் புழுங்கி தவித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் பெற்றவர்களும் விட்டு சென்றதில்.. வேதனை தாளாது.. நீள்விருக்கையில் அமர்ந்து குமிழியிட்டு கிளம்பிய ஊற்றாக பீறிட்டு அழ ஆரம்பித்திருந்தாள்..

"பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே.. ம்ம்.. தட்ஸ் குட்".. எகத்தாளப் பார்வையும் ஏளன பேச்சுமாக கையில் காபி கோப்பையோடு எதிர்விருக்கையில் அமர்ந்தவனை அழுகையை நிறுத்தி விட்டு வெறித்தாள் மான்வி..

அவனைப் பார்த்து அடுத்த கணமே அழக்கூடாது சிம்பதி தேடக்கூடாது என்ற வைராக்கியம் ஒட்டிக்கொள்ள வேகமாக கண்களை துடைத்து.. மிச்சமிருந்த அழுகையை விழுங்கிக் கொண்டு.. "ஜீவா அப்பா செஞ்சது தப்புதான் அந்த நேரத்துல அப்படி பேசி இருக்கக் கூடாது.. ஆனா நாங்க வேணும்னு தப்பு பண்ணல.. இப்படி ஏதாவது பொய் சொல்லி.. என்னை கூட்டிட்டு போய் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப் போறதா அந்த திவாகர் சொன்னான்"..

பேச்சினூடே புகுந்து "ஓஹோ திவாகருக்கு எப்படி அந்த விஷயம் தெரியுமாம்.. அதை நீங்க யோசிக்கவே இல்லையா?".. புருவங்கள் உயர்த்தி கேட்டவனின் குரலில் ஏளனம் ஒட்டிக் கொண்டிருந்ததை மான்வியால் உணர முடிந்தது..

வார்த்தைகள் வராமல் ஒருகணம் தடுமாறியவள்.. மூச்சை இழுத்து விட்டு.. "அது.. அது.. பரத் அண்ணாவும் உங்க அப்பாவும் கார்ல இருந்து இறங்கி பேசறதுக்கு முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு வந்ததை திவாகர் பார்த்ததா அப்பா கிட்ட வந்து அவசரமா சொன்னான்.. அந்த நேரத்துல அப்பா பயந்துட்டாரு.. அவருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. எந்த காரணத்தை கொண்டும் உங்க அப்பா முன்னாடி ரியாக்ட் பண்ண கூடாது.. அவர் என்ன சொன்னாலும் வீட்டை தாண்டி போகக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டாரு.. என்னால அவர் பேச்சை மீற முடியல ஜீவா.. நீங்க கோமாவில் இருக்கீங்கன்னு உங்க அப்பா சொன்னதும் எல்லோரும் அது பொய்ன்னு நினைச்சாங்க.. ஆனா என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்"..

"பாருடா".. ஜீவாவின் இதழ்கள் நக்கலாக விரிந்தன..

"ஆனா நான் வெளியே காட்டிக்கல.. அப்பவும் கூட உங்க அப்பா வெளியே போன பிறகு உங்களுக்காக கலங்கி அவர் பின்னாடி ஓடின என்னை.. அந்த திவாகரும் அப்பாவும் தடுத்து உள்ள கூட்டிட்டு போய் அறையில அடைச்சு வச்சுட்டாங்க.. சத்தியமா இது தான் ஜீவா நடந்தது.. உங்க அப்.. அப்பா இறந்த விஷயம் கூட எங்களுக்கு தெரியாது".. ஜீவாவின் முகபாவனையும் அவன் பார்வையை கண்டு அடுத்து பேச முடியாமல் தொண்டை அடைத்தது.. இதுவரை தான் பேசியதை அவன் ஒரு சதவீதம் கூட நம்பவில்லை என்று தெளிவாக புரிந்து கொண்டாலும்.. எப்படியோ மனதை திறந்து உண்மைகளை கொட்டி விட்டதில் ஓரளவு நிம்மதி அடைந்திருந்தாள்.. ஜீவா என்ன சொல்லப் போகிறான் என்று பரிதவிப்போடு அவன் முகத்தையே மொய்த்திருந்தன அவள் விழிகள்..

"குட்.. குட் ஸ்கிரீன் ப்ளே.. நேத்து நைட் முழுக்க இதைதான் யோசிச்சியோ".. என்றதும் புரியாமல் உருத்து விழித்தாள் அவள்..

"கல்யாணம் செஞ்சாச்சு இனிமே வேற வழி இல்ல.. இவனோட தான் வாழ்ந்தாகணும்.. நம்மளை உருகி உருகி காதலிச்சவன் தானே.. கண்ணீர் விட்டு அழுதா காலடியில வந்து விழுந்துட்டு போறான்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவனை ஆஃப் பண்ணிட்டு.. இந்த இளிச்சவாயன் கூட சந்தோஷமா சுகவாசியா வசதியா வாழலாம் இதுதானே உன்னோட பிளான்".. ஜீவாவின் ஏளனம் வழிந்தோடிய இதழ்களில் மான்வியின் இதயம் பலத்த அடி வாங்கியது..

"ஜீவா என்னை நம்புங்க ப்ளீஸ்".. கண்ணீருடன் இறைஞ்சியவளை கண்டு கரையவில்லை அவன்..

"நம்பணுமே நம்பித்தான் ஆகணும்.. ஏன்னா இப்போ நீ என்னோட மனைவியாச்சே.. இனி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஃபேஸ் பண்ணனுமே.. சோ நீ சொல்ற கட்டுக்கதைகளை சாரி சாரி.. உண்மைகளை நம்புறத தவிர வேற வழியே இல்லை எனக்கு".. வார்த்தைகளோடு பார்வையும் அவளை காயப்படுத்தியதில்.. இதழ் கடித்து தலை குனிந்தாள் மான்வி.. இனி என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.. கனல் கண்களோடு வெறுப்பை உமிழும் அவன் பார்வை அதைவிட கொடுமை.. அங்கிருந்து சென்று விட்டான் ஜீவா.. கால்கள் அசைய மறுத்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள் மான்வி.. திவாகர் என்னும் புயல் தன் வாழ்க்கையை புரட்டிப் போட்டதில் தென்றலின் அருமையை உணராமல் மிகுந்த சேதமடைந்திருந்தாள்.. புதுமண பெண்ணுக்கான களையே இல்லை அவள் முகத்தில்..

சுகந்தம் வீசும் நேச பார்வையோடு தன்னை தீண்டித் தழுவிய ஜீவாவின் தற்போதைய மாற்றம் அவளுக்குள் திராவகத்தை வாரியிறைக்க முடிந்த வரை அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..

தேவைக்கு மட்டுமே அவன் முன் சென்று நின்றாள்.. அதற்கே எரிந்து விழுந்தான் அவன்..

"ரெண்டு நாள்ல நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் ஜீவா.. வீட்டுக்கு வெளியே புல்வெளியில் வெண்ணிற வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தவன்.. அவள் சொன்னதை கேட்டு மெல்ல நிமிர்ந்து.. "இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற".. என்றான் எரிச்சலான குரலுடன்..

"இல்ல.. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணாம எப்படி?".. எச்சில் விழுங்கினாள்..

"என்கிட்ட எந்த இன்ஃபர்மேஷனும் கொடுக்க தேவையில்லை.. ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் தவிர மற்ற விஷயங்களில் நீ உன் இஷ்டப்படி இருக்கலாம்.. எல்லாத்துக்கும் வந்து என்கிட்ட நிக்கணும்னு அவசியம் இல்ல".. கைபேசியை விரல்களால் துழாவிக் கொண்டே அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் பேசினான்.. அவன் பேசிய வேகத்திற்கும்.. உதாசீன பார்வைக்கு அர்த்தம் நான் உன்னை பார்க்கவே விரும்பவில்லை.. அடிக்கடி என் கண் முன்னே வந்து நிற்காதே என்பதே..

தலைமுடி முதற்கொண்டு கால் நகம் வரை அணு அணுவாக ரசித்து போற்றிக் கொண்டாடியவன்.. இதழ் கொண்ட ருசியோடு வடியும் எச்சில் கூட தீர்த்தம் என்று சுவைத்தவன்.. "நீ தூங்கு மானு எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்".. என்று விடிய விடிய விடிய வீடியோ காலில் தூங்காமல் அவள் தூங்குவதை ரசித்தவன்.. இன்றோ அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்தான்.. உணர்ச்சிவசப்பட்டதால் வந்த கோபம் இல்லை இது.. மிக நிதானமாக உருவாகி விஸ்வரூபம் எடுத்திருக்கும் வெறுப்பு.. ஜீவாவை எப்படி சமாதானப்படுத்த போகிறேன் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது.. ஒரு சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை தீண்டத் தகாதவளை போல் எரிச்சலாக ஒரு பார்வை பார்த்தவன் .. அவள் இருப்பு ஊசியாக தன்னை குத்துவது போல் அடுத்த கணமே அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான்.. வேதனையோடு பெருமூச்சுவிட்டு அங்கே அமர்ந்தாள் அவள்.. இந்த மனப் பிணக்குகள் என்று தீருமோ புரியவில்லை.. தீருமா என்று கூட தெரியவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயமும் கவலையும் மனதுக்குள் ஆக்ரமித்திருத்தாலும் ஜீவா மீதான நேசம் கடுகளவும் குறையவில்லை..

காலையில் விடிவதற்கு முன்பே தொழிற்சாலைக்கு கிளம்பி சென்று விட்டான் ஜீவா.. இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான்.. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது..

சமையலுக்கு ஒரு பெண்.. வீட்டை சுத்தம் செய்ய ஒரு ஆண்.. தோட்ட வேலை செய்வதற்கு ஒருவர் என்று மூன்று பணியாளர்கள் மட்டுமே அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்.. மான்விக்கு எந்த வேலையும் இல்லை..

இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பைத்தியமே பிடிச்சிடும்... எடுத்த லீவு போதும் நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு கிளம்பிடனும்.. என்று மான்வி உறுதியாக முடிவெடுத்திருந்த நிலையில் ஜீவா ஃபோனில் அழைத்திருந்தான்.

திரையில் அவன் எண்ணை பார்த்ததும் தாளமுடியாத உற்சாகத்துடன் கண்கள் வேறு கலங்கிவிட.. அவசரமாக அழைப்பை ஏற்று காதினில் வைத்தாள்..

"ஹலோ".. சொல்லுங்க ஜீவா.. அவன் பேசுவதற்கு முன்பே பரவசத்தோடு அவள் ஆரம்பித்திருக்க..

சில மணித்துளிகள் மௌனத்திற்கு பின்.. "என்ன செய்யறே?"..என்றான் மிருதுவான குரலில்..

அவன் அன்பான குரல் கேட்டு அழுகையே வந்தது அவளுக்கு..

"நான்.. நான்.. சும்மாதான்"... வார்த்தைகள் வர மறுத்தன.. மான்வி கண்ணீரோடு கலங்குகிறாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லை..

"இடம் செட் ஆகிடுச்சா.. இப்ப எந்த பிரச்சனையும் இல்லையே".. அவன் எதற்காக கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாமல்.. "அதெல்லாம் ஓகே தான் ஜீவா.. நீங்க என் கூட இல்ல அதுதான் பிரச்சனை".. வாய் விட்டு தனது அன்பையும் ஆதங்கத்தை கொட்டினாள்..

அப்படி ஒரு வார்த்தையே தன் காதில் விழாதவன் போல்.. "நான் இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்.. பிரிப்பேரா இரு".. என்று கூறி வைத்து விட்டான்..

எதற்காக தயாராக இருக்கச் சொல்கிறார் என்று முதலில் புரியாமல் விழித்த மான்வி.. அடுத்த கணமே காரணத்தை உணர்ந்து கொண்டதும் அடிவயிற்றில் பீதி கிளம்பியது..

வலி நிறைந்த பிராசஸ்.. அசிங்கமான உறவின் தொடக்கம் இன்று முதல் ஆரம்பமா.. தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் உணர்ந்தாள்..

தொடரும்..
கவலை படாதே மான்வி ஜீவா என்ன தான் கோபம் பட்டாலும் அவன் ஆழ் மனதில் உனக்காக காதல் கண்டிப்பாக இருக்கும் அதை அவன் உணரும் வரை காத்திரு
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
ஒன்னும் சொல்லறதுக்கே இல்லை மானு. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இந்த நேரத்தில் உனக்கு பொறுமை மட்டுமே மிக மிக முக்கியம். 🫢🫢🫢🫢

அவசரப்பட்டு மனதில் எதிர்பார்ப்பை வளர்த்துக்காதே. அவன் ஆழ்மனதில் உள்ள காதல் வெளி வரும் வரை நீ எருமையை விட பொறுமையா இருக்கனும் மானும்மா. 👍👍👍👍👍👍
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
திவாகரின் தொல்லை நீங்கியது விரும்பியவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று சந்தோஷப்பட முடியவில்லை.. கவலையில் உடலும் மனமும் சோர்ந்து போனதிலும்.. பல நாட்கள் தூக்கமின்றி தவித்ததிலும் கண்கள் சொருகியது.. மேற்கொண்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடினாள் மான்வி.. இனி தாய் தந்தையுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது.. மூடிய விழிகளை தாண்டி கண்ணீர் வழிந்தது..

இருபத்து மூன்று வருடங்கள் அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.. பாசம் கொட்டி வளர்த்தவர்கள்.. பிள்ளைகளுக்காகவே உழைத்து ஊன் தேய்ந்து போனவர் நீலகண்டன்.. ஜீவா விஷயத்தில் தன்னோடு சேர்த்து மொத்த குடும்பமும் அவனுக்கு அநீதி இழைத்திருந்தாலும் அப்பாவும் அம்மாவும் தனக்கு கெட்டவர்கள் இல்லையே.. ஜீவாவின் கட்டளைக்கேற்ப பாசத்தை சட்டென்று ஒதுக்கி வைத்து இயந்திரமாக இருக்க முடியவில்லை அவளால்..

தனிமையில் கழிந்த இரவு தாய் தந்தையரை மேலும் மேலும் நினைவு படுத்தியது.. ஒருவேளை ஜீவா மான்வியை பாசத்தோடு தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டிருந்தால் இந்த ஏக்கம் மறைந்து போயிருக்குமோ என்னவோ!!.. நினைவுச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டவள் போல் ஏதேதோ எண்ணங்களில் உழன்று அப்படியே உறங்கிப் போனாள் மான்வி..

மறுநாள் காலையில்.. கதவைத் தட்டும் ஓசை எங்கோ கேட்பது போல் காதுகளை தொடவும்.. மெல்ல உறக்கம் கலைந்து பூவிழிகளை திறந்தாள் அவள்..

மெல்ல எழுந்து அமர்ந்தவள் தன்னையும் அறியாது உடல் நெளித்து சோம்பல் முறித்தாள்.. உறக்கம் முற்றிலும் களைந்து சுற்றம் உணர்ந்து தான் ஜீவாவின் வீட்டில் இருக்கிறோம் என்று உணரவே சில நிமிடங்கள் பிடித்தன..

கதவு உடைபடுவதைப் போல் தட்டிக் கொண்டிருப்பது அப்போதுதான் அவள் சிந்தையில் பதிந்தது.. நெஞ்சுக்குள் சிறு திடுக்கிடலோடு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள் மான்வி..

"எவ்வளவு நேரம் கதவை தட்டறது.. தூங்குனியா இல்ல மயங்கி விழுந்துட்டியா!!.. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை விட வேகமாக வந்த கடுமையான வார்த்தைகளே காலை நேர பூபால ராகமாக அவளை வரவேற்றது..

"இல்ல.. தூங்கிட்டேன் ஜீவா".. பதட்ட விழிகளோடு கூறினாள் அவள்..

உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க.. அவங்களைப் பேசி அனுப்பி விடறதும் இல்ல அவங்களோட சேர்ந்து அப்படியே திரும்பி பாக்காம போய்டறதும் உன்னோட விருப்பம்.. ஆனா இனிமே அவங்க என் வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது".. அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.. பெருமூச்சுடன் தன் விதியை எண்ணி நொந்து கொண்டு கொண்டு.. உள்ளே வந்தவள்.. முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி கொண்டு.. கண்ணாடி முன் நின்று கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டாள்.. புரண்டு படுத்ததன் காரணமாக நெற்றியின் ஓரம் ஒதுங்கியிருந்த பொட்டை சரியாக வைத்துக் கொண்டவள்.. கசக்கியிருந்த புடவையை சரியாக மடிப்பு வைத்து கட்டிக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறை தன்னை சரி பார்த்தாள்.. திருப்தியாக உணர முடியவில்லை.. ஏதோ இழந்ததைப் போன்ற முகத் தோற்றம்.. அது சரி.. பெற்றவர்கள் சம்மதத்தோடு ஜீவா விருப்பப்பட்டு இந்த திருமணம் நடக்கவில்லையே.. பிறகு எதற்காக நடிக்க வேண்டும் இந்த அலங்காரமே போதும்.. என்ற மனநிலையோடு அறையை விட்டு வெளியேறி கூடத்திற்கு சென்றிருந்தாள்..

கொலுசு சத்தத்தோடு மகளின் காலடி ஓசையை கேட்டதும்.. தலை குனிந்து அமர்ந்திருந்த நீலகண்டனும் ரமாவும்.. எழுந்து நின்றனர்.. "மான்விஇஇ".. என்று அழைத்துக் கொண்டே புன்னகைத் ததும்பிய முகத்துடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் ரமா..

"எப்படி இருக்க டா?".. கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது..

"உங்களை விட்டு பிரிஞ்சு வந்து ஒரு நாள் தானே ஆகுது".. கைகளை உருவிக்கொண்டு பட்டும் படாமலும் பதில் சொன்னாள் மான்வி.. தங்களைப் பார்த்த பிறகும் கனியாத அவள் முகம் கண்டு.. கண்களை சுருக்கி தன் மகளை உற்று நோக்கினார் நீலகண்டன்..

"என்னடா எங்க மேல கோவமா அப்பா முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிறியே!! அவர் நேரடியாகவே கேட்டு விட..

தயக்கங்களை ஓரந்தள்ளிவிட்டு "அப்பா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இனிமே.. என்னை பார்க்க யாரும் இங்கு வர வேண்டாம்.. உ.. உங்களோடு நான் உறவு வச்சுக்கிறது அவருக்கு பிடிக்கல".. மான்வியின் உணர்ச்சி இல்லாத குரலில் வருத்த சாயலோடு வாடிப்போனது இருவரின் முகமும்.. ஜீவாவின் பாராமுகத்தை எதிர்பார்த்து தான் வந்தனர்.. ஆனால் மகளோடு நிரந்தரமாக உறவு முறிய போகின்றது என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.. உள்ளுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்து நின்ற பெற்றவர்களின் முகத்தை பார்க்க திராணியில்லாமல்.. "அவரோட கோபம் நியாயமானது.. நாம தப்பு செஞ்சிருக்கோம்.. அதுக்கான தண்டனையா இதை நாம எல்லோரும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. அவர் மனசுல இருக்குற ரணங்கள் ஆற நாளாகும்.. அதுவரைக்கும் காத்திருக்கணும்.. ஒருவேளை கடைசி வரைக்கும் அவர் கோபம் தணியாம இப்படியே பிடிவாதமா இருந்திட்டா.. இந்த சூழ்நிலையில் வாழ பழகிக்கிறேன்".. என்று பெருமூச்சோடு நிமிர்ந்தவள்.. தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "எது எப்படியோ.. இனிமே என்னை பார்க்க வராதீங்க.. நானும் உங்களை பார்க்க வர மாட்டேன்.. இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. தழுதழுத்த குரலோடு கையெடுத்து கும்பிட்டாள்.. அழுகை முட்டியது..

"அனிதா.. நிவினை நல்லா பாத்துக்கோங்க.. என்னைக்காவது ஒரு நாள் அவர் மனசு மாறுச்சுனா என் புருஷனோட உங்களை பார்க்க வருவேன்.. இனி ஒரு நிமிஷம் கூட இங்கு நிக்க வேண்டாம்.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க".. தன்னையே வெறுத்த நிலையில் கண்கள் மூடி கூறினாள் மான்வி..

நீலகண்டன் நிதர்சனத்தை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதையும் மீறி துக்கம் தொண்டையை அடைத்தது.. ரமா பாரமான இதயத்துடன் பிடிமானம் இல்லாத கொடியாக தளர்ந்து நின்று கொண்டிருந்தாள்.. அவர்கள் இருக்கும் வரை அழவே கூடாது என்று பிரயத்தனப் பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் மான்வி..

நீண்ட பெருமூச்சோடு.. "சரிடா.. நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. இனிமே நாங்க இங்க வரல.. ஜீவா உன்னை நல்லா பாத்துக்குவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையோட திருப்தியா தான் இங்கிருந்து போறோம்.. எங்களை நினைச்சு நீ கண் கலங்க வேண்டாம்.. கனத்த இதயத்தோடு மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டார் நீலகண்டன்.. கண்ணீர் பெருகி வழிந்த கண்களோடு.. சிலையாக நின்று கொண்டிருந்த மகளை ஒரு முறை அணைத்து விடுவித்து.. "நாங்க வர்றோம் மான்வி.. நீ சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை எப்பவும் பிரார்த்திச்சுகிட்டே இருப்பேன்".. நெற்றியில் முத்தமிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள் ரமா..

வீட்டுக்கு வந்த பெற்றவர்களுக்கு குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட கொடுக்காமல் திரும்பி அனுப்பியதில் மான்வியின் நெஞ்சம் கலங்கி துடித்தது..

ஏற்கனவே ஜீவாவின் புறக்கணிப்பில் புழுங்கி தவித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் பெற்றவர்களும் விட்டு சென்றதில்.. வேதனை தாளாது.. நீள்விருக்கையில் அமர்ந்து குமிழியிட்டு கிளம்பிய ஊற்றாக பீறிட்டு அழ ஆரம்பித்திருந்தாள்..

"பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே.. ம்ம்.. தட்ஸ் குட்".. எகத்தாளப் பார்வையும் ஏளன பேச்சுமாக கையில் காபி கோப்பையோடு எதிர்விருக்கையில் அமர்ந்தவனை அழுகையை நிறுத்தி விட்டு வெறித்தாள் மான்வி..

அவனைப் பார்த்து அடுத்த கணமே அழக்கூடாது சிம்பதி தேடக்கூடாது என்ற வைராக்கியம் ஒட்டிக்கொள்ள வேகமாக கண்களை துடைத்து.. மிச்சமிருந்த அழுகையை விழுங்கிக் கொண்டு.. "ஜீவா அப்பா செஞ்சது தப்புதான் அந்த நேரத்துல அப்படி பேசி இருக்கக் கூடாது.. ஆனா நாங்க வேணும்னு தப்பு பண்ணல.. இப்படி ஏதாவது பொய் சொல்லி.. என்னை கூட்டிட்டு போய் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப் போறதா அந்த திவாகர் சொன்னான்"..

பேச்சினூடே புகுந்து "ஓஹோ திவாகருக்கு எப்படி அந்த விஷயம் தெரியுமாம்.. அதை நீங்க யோசிக்கவே இல்லையா?".. புருவங்கள் உயர்த்தி கேட்டவனின் குரலில் ஏளனம் ஒட்டிக் கொண்டிருந்ததை மான்வியால் உணர முடிந்தது..

வார்த்தைகள் வராமல் ஒருகணம் தடுமாறியவள்.. மூச்சை இழுத்து விட்டு.. "அது.. அது.. பரத் அண்ணாவும் உங்க அப்பாவும் கார்ல இருந்து இறங்கி பேசறதுக்கு முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு வந்ததை திவாகர் பார்த்ததா அப்பா கிட்ட வந்து அவசரமா சொன்னான்.. அந்த நேரத்துல அப்பா பயந்துட்டாரு.. அவருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.. எந்த காரணத்தை கொண்டும் உங்க அப்பா முன்னாடி ரியாக்ட் பண்ண கூடாது.. அவர் என்ன சொன்னாலும் வீட்டை தாண்டி போகக்கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டாரு.. என்னால அவர் பேச்சை மீற முடியல ஜீவா.. நீங்க கோமாவில் இருக்கீங்கன்னு உங்க அப்பா சொன்னதும் எல்லோரும் அது பொய்ன்னு நினைச்சாங்க.. ஆனா என் மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்"..

"பாருடா".. ஜீவாவின் இதழ்கள் நக்கலாக விரிந்தன..

"ஆனா நான் வெளியே காட்டிக்கல.. அப்பவும் கூட உங்க அப்பா வெளியே போன பிறகு உங்களுக்காக கலங்கி அவர் பின்னாடி ஓடின என்னை.. அந்த திவாகரும் அப்பாவும் தடுத்து உள்ள கூட்டிட்டு போய் அறையில அடைச்சு வச்சுட்டாங்க.. சத்தியமா இது தான் ஜீவா நடந்தது.. உங்க அப்.. அப்பா இறந்த விஷயம் கூட எங்களுக்கு தெரியாது".. ஜீவாவின் முகபாவனையும் அவன் பார்வையை கண்டு அடுத்து பேச முடியாமல் தொண்டை அடைத்தது.. இதுவரை தான் பேசியதை அவன் ஒரு சதவீதம் கூட நம்பவில்லை என்று தெளிவாக புரிந்து கொண்டாலும்.. எப்படியோ மனதை திறந்து உண்மைகளை கொட்டி விட்டதில் ஓரளவு நிம்மதி அடைந்திருந்தாள்.. ஜீவா என்ன சொல்லப் போகிறான் என்று பரிதவிப்போடு அவன் முகத்தையே மொய்த்திருந்தன அவள் விழிகள்..

"குட்.. குட் ஸ்கிரீன் ப்ளே.. நேத்து நைட் முழுக்க இதைதான் யோசிச்சியோ".. என்றதும் புரியாமல் உருத்து விழித்தாள் அவள்..

"கல்யாணம் செஞ்சாச்சு இனிமே வேற வழி இல்ல.. இவனோட தான் வாழ்ந்தாகணும்.. நம்மளை உருகி உருகி காதலிச்சவன் தானே.. கண்ணீர் விட்டு அழுதா காலடியில வந்து விழுந்துட்டு போறான்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவனை ஆஃப் பண்ணிட்டு.. இந்த இளிச்சவாயன் கூட சந்தோஷமா சுகவாசியா வசதியா வாழலாம் இதுதானே உன்னோட பிளான்".. ஜீவாவின் ஏளனம் வழிந்தோடிய இதழ்களில் மான்வியின் இதயம் பலத்த அடி வாங்கியது..

"ஜீவா என்னை நம்புங்க ப்ளீஸ்".. கண்ணீருடன் இறைஞ்சியவளை கண்டு கரையவில்லை அவன்..

"நம்பணுமே நம்பித்தான் ஆகணும்.. ஏன்னா இப்போ நீ என்னோட மனைவியாச்சே.. இனி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஃபேஸ் பண்ணனுமே.. சோ நீ சொல்ற கட்டுக்கதைகளை சாரி சாரி.. உண்மைகளை நம்புறத தவிர வேற வழியே இல்லை எனக்கு".. வார்த்தைகளோடு பார்வையும் அவளை காயப்படுத்தியதில்.. இதழ் கடித்து தலை குனிந்தாள் மான்வி.. இனி என்ன சொல்லி எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.. கனல் கண்களோடு வெறுப்பை உமிழும் அவன் பார்வை அதைவிட கொடுமை.. அங்கிருந்து சென்று விட்டான் ஜீவா.. கால்கள் அசைய மறுத்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள் மான்வி.. திவாகர் என்னும் புயல் தன் வாழ்க்கையை புரட்டிப் போட்டதில் தென்றலின் அருமையை உணராமல் மிகுந்த சேதமடைந்திருந்தாள்.. புதுமண பெண்ணுக்கான களையே இல்லை அவள் முகத்தில்..

சுகந்தம் வீசும் நேச பார்வையோடு தன்னை தீண்டித் தழுவிய ஜீவாவின் தற்போதைய மாற்றம் அவளுக்குள் திராவகத்தை வாரியிறைக்க முடிந்த வரை அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..

தேவைக்கு மட்டுமே அவன் முன் சென்று நின்றாள்.. அதற்கே எரிந்து விழுந்தான் அவன்..

"ரெண்டு நாள்ல நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் ஜீவா.. வீட்டுக்கு வெளியே புல்வெளியில் வெண்ணிற வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தவன்.. அவள் சொன்னதை கேட்டு மெல்ல நிமிர்ந்து.. "இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற".. என்றான் எரிச்சலான குரலுடன்..

"இல்ல.. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணாம எப்படி?".. எச்சில் விழுங்கினாள்..

"என்கிட்ட எந்த இன்ஃபர்மேஷனும் கொடுக்க தேவையில்லை.. ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் தவிர மற்ற விஷயங்களில் நீ உன் இஷ்டப்படி இருக்கலாம்.. எல்லாத்துக்கும் வந்து என்கிட்ட நிக்கணும்னு அவசியம் இல்ல".. கைபேசியை விரல்களால் துழாவிக் கொண்டே அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் பேசினான்.. அவன் பேசிய வேகத்திற்கும்.. உதாசீன பார்வைக்கு அர்த்தம் நான் உன்னை பார்க்கவே விரும்பவில்லை.. அடிக்கடி என் கண் முன்னே வந்து நிற்காதே என்பதே..

தலைமுடி முதற்கொண்டு கால் நகம் வரை அணு அணுவாக ரசித்து போற்றிக் கொண்டாடியவன்.. இதழ் கொண்ட ருசியோடு வடியும் எச்சில் கூட தீர்த்தம் என்று சுவைத்தவன்.. "நீ தூங்கு மானு எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்".. என்று விடிய விடிய விடிய வீடியோ காலில் தூங்காமல் அவள் தூங்குவதை ரசித்தவன்.. இன்றோ அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்தான்.. உணர்ச்சிவசப்பட்டதால் வந்த கோபம் இல்லை இது.. மிக நிதானமாக உருவாகி விஸ்வரூபம் எடுத்திருக்கும் வெறுப்பு.. ஜீவாவை எப்படி சமாதானப்படுத்த போகிறேன் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது.. ஒரு சில நிமிடங்கள் அங்கேயே நின்று அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளை தீண்டத் தகாதவளை போல் எரிச்சலாக ஒரு பார்வை பார்த்தவன் .. அவள் இருப்பு ஊசியாக தன்னை குத்துவது போல் அடுத்த கணமே அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான்.. வேதனையோடு பெருமூச்சுவிட்டு அங்கே அமர்ந்தாள் அவள்.. இந்த மனப் பிணக்குகள் என்று தீருமோ புரியவில்லை.. தீருமா என்று கூட தெரியவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயமும் கவலையும் மனதுக்குள் ஆக்ரமித்திருத்தாலும் ஜீவா மீதான நேசம் கடுகளவும் குறையவில்லை..

காலையில் விடிவதற்கு முன்பே தொழிற்சாலைக்கு கிளம்பி சென்று விட்டான் ஜீவா.. இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான்.. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது..

சமையலுக்கு ஒரு பெண்.. வீட்டை சுத்தம் செய்ய ஒரு ஆண்.. தோட்ட வேலை செய்வதற்கு ஒருவர் என்று மூன்று பணியாளர்கள் மட்டுமே அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்.. மான்விக்கு எந்த வேலையும் இல்லை..

இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பைத்தியமே பிடிச்சிடும்... எடுத்த லீவு போதும் நாளைக்கு கண்டிப்பா வேலைக்கு கிளம்பிடனும்.. என்று மான்வி உறுதியாக முடிவெடுத்திருந்த நிலையில் ஜீவா ஃபோனில் அழைத்திருந்தான்.

திரையில் அவன் எண்ணை பார்த்ததும் தாளமுடியாத உற்சாகத்துடன் கண்கள் வேறு கலங்கிவிட.. அவசரமாக அழைப்பை ஏற்று காதினில் வைத்தாள்..

"ஹலோ".. சொல்லுங்க ஜீவா.. அவன் பேசுவதற்கு முன்பே பரவசத்தோடு அவள் ஆரம்பித்திருக்க..

சில மணித்துளிகள் மௌனத்திற்கு பின்.. "என்ன செய்யறே?"..என்றான் மிருதுவான குரலில்..

அவன் அன்பான குரல் கேட்டு அழுகையே வந்தது அவளுக்கு..

"நான்.. நான்.. சும்மாதான்"... வார்த்தைகள் வர மறுத்தன.. மான்வி கண்ணீரோடு கலங்குகிறாள் என்று அவனுக்கு புரியாமல் இல்லை..

"இடம் செட் ஆகிடுச்சா.. இப்ப எந்த பிரச்சனையும் இல்லையே".. அவன் எதற்காக கேட்கிறான் என்று புரிந்து கொள்ளாமல்.. "அதெல்லாம் ஓகே தான் ஜீவா.. நீங்க என் கூட இல்ல அதுதான் பிரச்சனை".. வாய் விட்டு தனது அன்பையும் ஆதங்கத்தை கொட்டினாள்..

அப்படி ஒரு வார்த்தையே தன் காதில் விழாதவன் போல்.. "நான் இன்னைக்கு சீக்கிரம் வந்துருவேன்.. பிரிப்பேரா இரு".. என்று கூறி வைத்து விட்டான்..

எதற்காக தயாராக இருக்கச் சொல்கிறார் என்று முதலில் புரியாமல் விழித்த மான்வி.. அடுத்த கணமே காரணத்தை உணர்ந்து கொண்டதும் அடிவயிற்றில் பீதி கிளம்பியது..

வலி நிறைந்த பிராசஸ்.. அசிங்கமான உறவின் தொடக்கம் இன்று முதல் ஆரம்பமா.. தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் உணர்ந்தாள்..

தொடரும்..
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர்அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
அருமை 😘சூப்பர் 💚அருமை😘சூப்பர் 💚
சூப்பர் 💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
💚அருமை 😘சூப்பர்💚 அருமை 😘
 
Top