- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
கண்டிப்பு தான் அவளை சீர்திருத்த கூடும்.. செல்லம் கொடுப்பதும் பாசங் காட்டுவதும் மென்மேலும் சின்னவளின் மனதில் மெத்தனத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்திலே உறக்கத்தின் போது திருட்டுத்தனமாய் தனது தாயன்பையும் கண்ணீரையும் வெளிப்படுத்தி ஆசையும் ஏக்கமுமாய் மகளை அணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டவள் அவள் விழிப்பதற்கு முன்னே விலகி படுத்து விட்டாள்..
எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.. மரத்திலிருந்து காக்கையும் குருவிகளும் காலை சுறுசுறுப்போடு வீட்டு வாசலிலும் கூரையிலும் நின்று குட் மார்னிங் சொல்வதை போல் கத்திய பிறகு தான் மெல்ல விழிப்பு தட்டியது..
கண்களைத் திறந்து நிகழ் உலகத்தோடு கலந்த அடுத்த கணம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளும் தீர்க்கவே முடியாத துன்ப துயரங்களும் எலும்போடு சேர்ந்த சதையை போல் இரக்கமே இல்லாமல் அவளோடு ஒட்டிக்கொண்டன..
தலையாய பிரச்சினை.. வீட்டு பிரச்சினை..
பேசாம அந்த நெடியவனிடம் சென்று ஒரு வாரம் கால அவகாசம் கேட்டால் என்ன..? தருவானா..! அவனின் கடுகடுவென்று இறுக்கமான முகமும் திமிரான பேச்சு தோரணையும் அருந்ததியின் கண் முன் வந்து போக சாத்தியமே இல்லை என்று மனம் உரக்கக் கூவியது..
ஏற்கனவே ஒரு நாள் காலக்கெடு கெஞ்சி கேட்டு தனக்கேற்ற ஒரு வாடகை வீட்டை தேடி கண்டுபிடிக்க முடியாமல் போனதில் ஜீவன் வற்றி போயிருந்தாள் அருந்ததி.. இந்த இலட்சணத்தில் மறுபடியும் அவனிடம் சென்று கூனி குறுகி நிற்க வேண்டுமா..!
என்னவோ முதலாளி போல் முன் கை கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையுடன் செப்பன்டி என்றபடி குரலை செருமிக் கொண்டு தன்னை பார்க்கும்போது முழுதாக பேச்சு வருவதே இல்லை..!
இவ்வளவு நேரம் யோசனையில் இருந்தவள் இப்போதுதான் அந்த பக்கம் திரும்பி பார்க்கிறாள்.. கதவு திறந்திருந்தது.. உள்ளே யாரும் இல்லை..
கலைந்திருந்த கூந்தலை விரித்து அள்ளி முடிந்து கொண்டு.. எழுந்து நைட்டியின் மீது ஒரு துண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்..
மரத்துக்கு மறுபக்கம் சிமெண்ட் போடப்பட்டிருந்த தரையில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..
இலையும் தழையும்.. காய்ந்த சருகுகளுமாய் குப்பையாய் கிடந்த தரை இப்போது நன்றாக பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்தது..
அருந்ததிக்கு அத்தனை பெரிய விசாலமான முன் வாசலை பெருக்கி சுத்தம் செய்ய நேரமே கிடைப்பதில்லை.. வாரத்திற்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ அவ்விடத்தை பெருக்கி குப்பையை கூட்டி தள்ளினால் பெரிய விஷயம்.. செவ்வாய் வெள்ளியில் மட்டும் வீட்டு வாசலிலிருந்து கொஞ்ச தூரம் வரை பெருக்கி தள்ளிவிட்டு தண்ணீர் தெளித்து சின்னதாக கோலம் போட்டு வைப்பாள்..
சந்திரமதியிடம் "வாசல் இவ்வளவு குப்பையா கிடக்குதே.. கொஞ்சம் கூட்டி பெருக்க கூடாதா..!" என்று நல்ல முறையில் சொன்னாலும் அதட்டி செய்ய சொன்னாலும் பலன் எனவோ பூஜ்ஜியம் தான்..! குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய உடம்பு வணங்குவதே இல்லை அந்த சின்ன பெண்ணிற்கு..!
கைகாலுக்கு வேல தராம எப்பவும் சோம்பேறியாட்டம் உட்கார்ந்திருந்தா உடம்பும் மூளையும் மந்தமா போய்டும்.. துவைச்சு போட்ட துணியையாவது மடிச்சு வை.. கண்ணுக்கு முன்னாடி குப்பையாட்டம் சிதறி கிடக்குதே.. அதை ஓரமா தூக்கி வைப்போம்னு அந்த மரமண்டையில தோணுதா.. நீ துவைச்சுப் போட்டிருந்தா கஷ்டம் தெரியும்.. எவளோ ஏமாந்த சிறுக்கி துவைச்சு போடுவா.. நமக்கென்ன வந்துச்சு.. கசங்காம எடுத்து போட்டுட்டு போனோமா.. அழுக்கு துணிய கழட்டி போட்டாமான்னு இருக்கறது மட்டும்தான உன்வேல.." அருந்ததியின் சலசலப்புகள் அவள் காதில் விழுமா..? விழாத தெரியவில்லை.. மரத்தில் மாங்காய்க்கு பதில் கத்திரிக்காய் தொங்குவதைப் போல் அவள் பார்வை எங்கோ ஆச்சரியமாக பதிந்திருக்கும்..
இன்று வழக்கத்திற்கு மாறாக முழு வாசலும் தூசி துரும்பின்றி துடைத்து வைத்ததை போல் சுத்தமாக இருந்ததில் அருந்ததிக்கோ மகிழ்ச்சிக்கு மாறாக வருத்தம்.. என் வீடு என் உரிமை என்று வீட்டை சுத்தப்படுத்தி காட்டுகிறானோ..!
கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவினாள்..
அவன் தண்டால் எடுத்துக் கொண்டிருக்க மோத்தி ஒய்யரமாக அவன் முதுகின் மேலே ஏறி அமர்ந்திருந்தது..
இப்போது இவனிடம் பேசினால் தான் உண்டு பிறகு காலை பரபரப்பில் இந்த மனிதனை பிடித்து நிறுத்துவது கஷ்டம்.. பைக்கில் எந்நேரமும் பறந்து கொண்டே இருக்கிறானே..!
வேகமாக அவனிடம் சென்று நின்றாள் அருந்ததி..
ஒரு துரும்பளவும் அவளை மதிக்கவில்லை மகரிஷி.. அவன்பாட்டுக்கு உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்க மோத்திதான் அவன் முதுகிலிருந்து கீழே இறங்கி நின்றது..
அதன் பக்கம் திரும்ப கூட இல்லை அவள்.. காரியம் முக்கியமாயிற்றே..! மோத்தியிடம் வள்ளென்று விழுந்தால் அவன் கரிசனத்தை எப்படி பெறுவது..
அது என்னவோ அருந்ததிக்கு மிக பழக்கப்பட்டவன் போல் வாலை ஆட்டிக் கொண்டு வாஞ்சையோடு நின்று கொண்டிருந்தது..
"சார்..!"
அப்போதும் அவன் திரும்பவில்லை..
"சார்.."! அவன் முன்னால் வந்து நின்றாள்..
நிமிர்ந்து பார்த்தவன் அழுத்தமான பார்வையுடன் கண்கள் சுருக்கியபடி எழுந்து நின்று செவியிலிருந்த இயர் போனை எடுத்தான்..
"ஓஹோ இதனால தான் நான் கூப்பிட்டது கேட்கலையோ..!" யோசனையுடன் அவள் நின்று கொண்டிருக்க.. என்ன விஷயம் என்று பார்வையால் கேட்டிருந்தான் அவன்..
கையில்லாத ஒரு ஆம் கட் பனியனும் ஷார்ட்சும் அணிந்திருந்தான்.. ஆங்காங்கே வெட்டி செதுக்கி செய்த ஆண் சிற்பம் போல் தெலுங்கு பட நாயகனை ஒத்து அந்த இடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாது வேற்றுமையாக தெரிந்தான் அவன்..
அதை காட்டிலும் அவன் அணிந்திருந்த உடை.. அருந்ததியிடம் ஒரு அசௌகரியத்தை தந்திருந்தது..
வெறும் உடம்பும் லுங்கியுமாய் தொப்பையும் தொந்தியுமாய் பல்லை விளக்கியபடி போகும்போது வரும்போதும் தலை முதல் கால் வரை அளக்கும் ஆண்களின் மத்தியில் இவன் அப்படி ஒன்றும் மோசம் இல்லைதான்.. உடையும் கூட அத்தனை அநாகரீகம் இல்லை.. சொல்லப்போனால் மிக நாகரிகமான உடற்பயிற்சிக்கான உடை.. நீதான் ஒரு நைட்டியும் மேல் துண்டுமாய் வந்து நிற்கிறாய்.. மனசாட்சி குற்றம் சொல்ல.. கண்டபடி அலையும் எண்ணங்களை ஓரங்கட்டி விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
"இன்கா என்த்த செப்பு இலாகே நிசப்தங்கா நில்சுன்டாவா..!"
கடுகடுவென்று அவன் கேட்ட தோரணையில் "எனக்கு மலையாளம் தெரியாது சார்!" என்றாள் அவள்..
விழிகளை அழுத்தமாக மூடி திறந்து நெற்றியை தேய்த்துக் கொண்டான் அவன்..
"இதி மலையாளம் காது. தெலுங்கு."
"ஏதோ பேச வந்துட்டு ஏன் அமைதியா நிக்கிறீங்கன்னு கேட்டேன் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு நேரமில்லை.." இப்படி பரபரப்பாக நின்றால் எப்படி விஷயத்தை சொல்வது..
பொறுமையாக.. கொஞ்சம் பரிதாபம் வருமளவிற்கு பணிவாக சொல்ல வேண்டுமே..!
"சார்.. நேற்று முழுக்க வீடு தேடி அலைஞ்சேன் சார்.. ஆனா வீடு கிடைக்கல.."
"அதுக்கு நான் என்ன செய்யணும் உங்களுக்கு வீடு பார்த்து தரணுமா..!" எகத்தாளமாக கேட்ட போதிலும் அவன் கண்களின் கருவிழி திரைக்குள் டூ வீலரின் ஹேண்ட் பேரில் தலையை சாய்த்துக் கொண்டு அவள் அழுத கோலம் அழியாமல் நிறைந்திருந்தது.. ஏதோ ஒரு இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த காட்சி அவன் மனக்கண்ணிலிருந்து மறையவில்லை அவன் மறக்கவும் இல்லை..
"சார் தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி ஒரு வாரம் டைம் கொடுங்க..! எப்படியாவது வேற வீடு பார்த்துட்டு போயிடுவேன்.. சத்தியமா உங்களை ஏமாத்தணும்னு நினைக்கல.."
"இவ்ளோ பெரிய சென்னை சிட்டில வீடு கிடைக்கலையா..?' புருவங்களை உயர்த்தி எலியாக பார்த்தான் அவன்..
"நான் ஏன் சார் உங்ககிட்ட பொய் சொல்லணும்.. என் நிலைமை அப்படி இருக்குது.. வயசு பொண்ண வச்சுக்கிட்டு பாதுகாப்பில்லாத ஒரு இடத்தில் குடி போக முடியாதே.. எல்லாத்தையும் பாக்கணும்.. வசதி முக்கியம் இல்ல.. வசதியான வீடு பார்க்க என்கிட்ட வருமானமும் இல்லை ஆனா நிம்மதியும் பாதுகாப்பும் முக்கியம் இல்லையா..! அப்படி ஒரு வீட்டை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.."
"தேவையில்லாத இந்த சிம்பதி கதை எனக்கு எதுக்கு..? ஒரு ஒரு வாரத்துல காலி பண்ணிடுங்க..! ஒரு முழு வீட்டுக்கான வாடகையை கொடுத்துட்டு ஒரே ரூம்ல பேச்சுலர் மாதிரி எத்தனை நாள் வாழ முடியும்..! சீக்கிரம் வீடு பாருங்க.." கறாராகவே பேசினான் அவன்..
"சார்..! வீடு பார்க்கிற புரோக்கர் யாரையாவது உங்களுக்கு தெரியுமா..?"
"ஏமி..?" அவன் முகம் சட்டென மாறியது..
"அப்படி இல்ல சார் ப்ரோக்கர் கிட்ட சொல்லி தானே இந்த வீடு பார்த்து குடி வந்திருப்பீங்க.. நம்பர் குடுத்தீங்கன்னா வாடகைக்கு ஏதாவது வீடு இருக்கான்னு நானும் கேட்டு தெரிஞ்சிக்குவேன்.."
நீண்ட மூச்செடுத்து "ப்ரோக்கர் எல்லாம் லேது..! வெப்சைட்ல வாடகைக்கு வீடு வேணும்னு ரெஜிஸ்டர் பண்ணி போன் நம்பர் குடுத்திருந்தேன்.. ஹவுஸ் ஓனர் கால் பண்ணி பேசினார் வீடு பிடிச்சிருந்தது குடி வந்துட்டேன்..!" என்றான் தோள் குலுக்கலுடன்..
"ஓஹ்..! ஓகே சார் அப்ப நானும் என் பொண்ணு கிட்ட சொல்லி நெட்ல பாக்க சொல்றேன்.. நன்றி சார்.." கைகூப்பி நன்றி சொன்ன போதும் அவன் அசையாமல் அதே தோரணையில் நின்றிருந்தான்..
ஒரு சம்பிரதாயத்துக்கு கூட பரவாயில்லைன்னு சொல்லலையே..! என்ன மனுஷாளுங்களோ..! உள்ளுக்குள் சலிப்பு தோன்றிய போதும் பெரிய மனசு பண்ணி ஒரு வாரம் டைம் குடுத்துருக்கானே.. அவனை ஏன் வறுத்துக் கொட்டற.. போய் வீடு தேடுற வழியை பாரு.. என்று மனசாட்சி அவள் தலையை தட்ட வேகமாக வீட்டிற்குள் சென்று உடைமாற்றி காய்கறி கூடையையும் தனது பர்சிலிருந்து பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே சொல்ல போனவள் உறங்கிக் கொண்டிருந்த மகளை ஒரு நிமிடம் ஆழ்ந்து வாஞ்சையுடன் பார்த்துவிட்டு பின் வெளியேறினாள்..
வாயில் கதவை திறக்கும் நேரம்..
"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ..!" என்று அதிகாரமான கணீர் குரல் அருந்ததியை போகவிடாமல் தடுத்து நிறுத்தியது..
"ஐயோ திடீர்னு மனசு மாறிட்டானோ..! ஒரு வாரமெல்லாம் டைம் தர முடியாது.. இன்னைக்கே காலி பண்ணுங்கன்னு சொல்ல போறானோ.." அடிவயிற்றிலிருந்து பீதி கிளம்ப அவனையே கலவரத்துடன் பார்த்தபடி நின்றாள் அருந்ததி..
செவிகளை தொற்றிக் கொண்டிருந்த ப்ளூடூத் இயர் போனை தோளில் தொங்கவிட்டபடி அருகே வந்து நின்றவன்..
"ஏ பக்க எதைன்னா ஜிம் உண்டதா..?"
மறுபடியும் அருந்ததியிடம் விழிப்பு..
அடுத்த கணம் அவளுக்கு புரியவில்லை என்றுணர்ந்து பிடரியை வருடியபடி..
"ஜிம்.. எக்சசைஸ்.." என்று அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய..
"சார் ஜிம்னா என்னன்னு தெரியும்.. அந்த அளவு மக்கு இல்ல நானு.. இந்த பக்கம் ஏதாவது ஜிம் இருக்கான்னு கேக்கறீங்களா..?" கொஞ்சம் கோபத்துடன் அவலாகவே புரிந்து கேட்க..
"எஸ் அதை தான் கேட்க வந்தேன்" என்றான் அவன்..
"இரண்டாவது தெருவுல ஒரு ஜிம் இருக்கு.. சின்ன ஜிம்.. ஆனா ஃபீஸ் மட்டும் ரொம்ப ஜாஸ்தி.."
"ஃபீஸ் ஜாஸ்தியா உங்களுக்கு எப்படி தெரியும்.."
"என் பொண்ணுக்காக கேட்டு பார்த்தேன் சார்.. என் வருமானத்துல பாதிய கேக்கறான் பாவி.." என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியேற..
சின்ன பொண்ணுக்கு எதுக்காக ஜிம் ஒர்க் அவுட் என்று யோசித்தவன் அதைக் கேட்காமல்.. உங்க பொண்ணுக்கு என்ன வயசாகுது என்று கேட்க நினைத்து அதையும் கேட்காமல் தனக்குள் உள்ளடக்கி கொண்டான்..
கேட்டை திறந்தது தான் தாமதம்.. பாதுகாவலன் போல் அருந்ததியை பின்தொடர்ந்து சென்றது மோத்தி..!
ஏதோ மூச்சிரைப்புடன் ஒரு ஜீவன் தன்னை பின் தொடர்ந்து வருவதில் திரும்பி பார்த்தவள் துரு துருவென மோதி வாலை ஆட்டிக்கொண்டு தன்னிடம் வருவதில் எரிச்சலுற்று..
"ஏய்.. போ." என்று கூடையை ஓங்கினாள்..
கொஞ்சம் மிரண்டு பின் வாங்கி பிறகு அப்படியே நின்று அவள் திரும்பியதும் கோலி குண்டு கண்களால் தலை சாய்த்து ஒரு பார்வை பார்த்து மறுபடியும் பின் தொடர ஆரம்பித்தான் மோத்தி..
சருகுகள் உடையும் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி பார்த்தாள் அருந்ததி..
நாய்.. நாய்க்குட்டி என்ற பெயரை பேப்பரில் எழுதிக் கொடுத்தாலே சுக்கல் சுச்சலாக கிழித்து போடுபவள்.. பக்கத்தில் மட்டும் சேர்ப்பாளா என்ன?
பின் தொடர்ந்து வரும் ஜீவனின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அங்கமிங்குமாக கல்லை தேடிக் கொண்டு நிற்க சிறியவன் எடுத்தான் ஒரு ஓட்டம்.. அருந்ததிக்குள் அலுப்பு.."
"இன்னும் ஒரு வாரம் இதை வேற சகிச்சுக்கணுமே.. இந்த சந்திரமதிதான் சொன்ன பேச்சை கேட்கறதே இல்லை.. இந்த சனியன கையில தொட்டு தூக்கி விளையாடறதெல்லாம் பண்றாளே.. எச்சில் பட்டு ஏதாவது நோய் தொத்திக்கிச்சுன்னா என்ன பண்றது.. போன்ல டிவில என்னென்னமோ காட்டறாங்களே.. ஐயோ இந்த நாய்கள பார்த்தாலே நெஞ்செல்லாம் பதறுது.." தனக்குள் புலம்பியபடி காய் கடையை நோக்கி வேகமாக நடக்க.. தூரத்தில் நின்று மடிந்த காதுகளுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மோத்தி..
வாசல் தாண்டி வெளியேறியவனை தேடிக் கொண்டு கேட்பக்கத்தில் இடுப்பில் கை வைத்து நின்றிருந்தான் மகரிஷி..
"சொல்லாம கொள்ளாம வாசல் தாண்டி போறது என்ன பழக்கம்.. வரட்டும்.. வச்சிக்கறேன் தொங்கா.." செல்லமாய் கோபித்துக் கொண்டு அவன் மோத்தியை எதிர்பார்த்து காத்திருக்க பக்கத்தில் வந்த நின்றதோ சந்திரமதி..
அழுது அழுது வீங்கிய முகம் கலைந்த தலை..! அடிவாங்கி சிவந்து போயிருந்த கன்னங்கள்..
ஒரு கணம் அவன் மனதை உருக்கி எடுத்தாலும் விரைப்புடன் என்று வாட்.. என்றான் அதே இறுக்கத்தோடு..
"சா.. சார்..! நீங்க சயின்ஸ் வாத்தியார் தானே.."
"ஆமா..?"
"எனக்கு சயின்ஸ் சுத்தமா வர மாட்டேங்குது.. எனக்கு மட்டும் கொஞ்சம் சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா.. ஃபீஸ் என்ன வருமோ அதை அம்மாகிட்ட கேட்டு வாங்கி தந்துடுவேன்.."
"நீ என்ன படிக்கிற..?"
"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கறேன்.."
"மிஞ்சிப் போனால் 12 வயது தான் இருக்கும்.. ஆனால் 15..16 வயதிற்குள்ள வளர்ச்சி.. நல்ல உயரமாக இருந்தாள்.. முகத்தில் மட்டும் முழுக்க முழுக்க குழந்தைத்தனம்.. ஒருவேளை இந்த வயதுக்கு மீறிய வளர்ச்சியின் காரணமாகத்தான் இவள் தாய் ஜிம்மில் சேர்த்துவிட முயற்சித்தாளோ..!
"சார்..?" மகரிஷியின் யோசனையை கலைத்தாள் சந்திரமதி..
"சார் டியூஷன் எடுக்கறீங்களா?" மீண்டும் அதே கேள்வி..
"ஏன் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கும்போதே படிக்கிறதுக்கு என்ன உனக்கு..?" முன் கை கட்டியபடி மிகக் கடுமையோடு கேட்டான்..
"இப்ப வரைக்கும் சயின்ஸ் சப்ஜெக்ட்க்கு டீச்சர் யாரும் வரல.. அப்பப்ப யாராவது வந்து பாடம் நடத்துவாங்க அதுவும் எனக்கு புரியவே மாட்டேங்குது.." பரிதாபமாக நின்றாள் சந்திரமதி..
பதில் சொல்லாமல் அவன் தனது வீட்டுக்குள் போக.. "சார்.. சார்.." என்று அழைத்தபடி அவனை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..
அறைக்குள் சென்றவனை மீண்டும் சார் சார் என்று அழைத்து நிற்க வைத்தாள்..
கையை உயர்த்தி வாசல் கதவை பிடித்தபடி நின்றிருந்தான் மகரிஷி..
"சார் அடுத்த முறை மார்க் ரொம்ப குறைச்சலா வாங்கினா அம்மா என்னை கொன்னே போட்டுடுவாங்க.." அழும் நிலையில் நின்றாள்..
"அது உன் பிரச்சனை.. அந்த பயம் மனசுல இருந்தா ஒழுங்கா படிக்கணும்.."
"எனக்கு படிப்பு வரல சார்.."
"நல்ல லேடி டீச்சரா பார்த்து டியூஷன் வச்சிக்க..!"
"இங்க யாரும் டியூஷன் எடுக்கல சார்.. ப்ளீஸ் எனக்காக சயின்ஸ் மட்டும் நீங்க டியூஷன் எடுங்க.." சின்னது பிடிவாதம் பிடிக்க
"முடியாது..!" கதவை சாத்திக் கொண்டான் மகரிஷி..
தொடரும்..
எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.. மரத்திலிருந்து காக்கையும் குருவிகளும் காலை சுறுசுறுப்போடு வீட்டு வாசலிலும் கூரையிலும் நின்று குட் மார்னிங் சொல்வதை போல் கத்திய பிறகு தான் மெல்ல விழிப்பு தட்டியது..
கண்களைத் திறந்து நிகழ் உலகத்தோடு கலந்த அடுத்த கணம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளும் தீர்க்கவே முடியாத துன்ப துயரங்களும் எலும்போடு சேர்ந்த சதையை போல் இரக்கமே இல்லாமல் அவளோடு ஒட்டிக்கொண்டன..
தலையாய பிரச்சினை.. வீட்டு பிரச்சினை..
பேசாம அந்த நெடியவனிடம் சென்று ஒரு வாரம் கால அவகாசம் கேட்டால் என்ன..? தருவானா..! அவனின் கடுகடுவென்று இறுக்கமான முகமும் திமிரான பேச்சு தோரணையும் அருந்ததியின் கண் முன் வந்து போக சாத்தியமே இல்லை என்று மனம் உரக்கக் கூவியது..
ஏற்கனவே ஒரு நாள் காலக்கெடு கெஞ்சி கேட்டு தனக்கேற்ற ஒரு வாடகை வீட்டை தேடி கண்டுபிடிக்க முடியாமல் போனதில் ஜீவன் வற்றி போயிருந்தாள் அருந்ததி.. இந்த இலட்சணத்தில் மறுபடியும் அவனிடம் சென்று கூனி குறுகி நிற்க வேண்டுமா..!
என்னவோ முதலாளி போல் முன் கை கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையுடன் செப்பன்டி என்றபடி குரலை செருமிக் கொண்டு தன்னை பார்க்கும்போது முழுதாக பேச்சு வருவதே இல்லை..!
இவ்வளவு நேரம் யோசனையில் இருந்தவள் இப்போதுதான் அந்த பக்கம் திரும்பி பார்க்கிறாள்.. கதவு திறந்திருந்தது.. உள்ளே யாரும் இல்லை..
கலைந்திருந்த கூந்தலை விரித்து அள்ளி முடிந்து கொண்டு.. எழுந்து நைட்டியின் மீது ஒரு துண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்..
மரத்துக்கு மறுபக்கம் சிமெண்ட் போடப்பட்டிருந்த தரையில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான் மகரிஷி..
இலையும் தழையும்.. காய்ந்த சருகுகளுமாய் குப்பையாய் கிடந்த தரை இப்போது நன்றாக பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்தது..
அருந்ததிக்கு அத்தனை பெரிய விசாலமான முன் வாசலை பெருக்கி சுத்தம் செய்ய நேரமே கிடைப்பதில்லை.. வாரத்திற்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ அவ்விடத்தை பெருக்கி குப்பையை கூட்டி தள்ளினால் பெரிய விஷயம்.. செவ்வாய் வெள்ளியில் மட்டும் வீட்டு வாசலிலிருந்து கொஞ்ச தூரம் வரை பெருக்கி தள்ளிவிட்டு தண்ணீர் தெளித்து சின்னதாக கோலம் போட்டு வைப்பாள்..
சந்திரமதியிடம் "வாசல் இவ்வளவு குப்பையா கிடக்குதே.. கொஞ்சம் கூட்டி பெருக்க கூடாதா..!" என்று நல்ல முறையில் சொன்னாலும் அதட்டி செய்ய சொன்னாலும் பலன் எனவோ பூஜ்ஜியம் தான்..! குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய உடம்பு வணங்குவதே இல்லை அந்த சின்ன பெண்ணிற்கு..!
கைகாலுக்கு வேல தராம எப்பவும் சோம்பேறியாட்டம் உட்கார்ந்திருந்தா உடம்பும் மூளையும் மந்தமா போய்டும்.. துவைச்சு போட்ட துணியையாவது மடிச்சு வை.. கண்ணுக்கு முன்னாடி குப்பையாட்டம் சிதறி கிடக்குதே.. அதை ஓரமா தூக்கி வைப்போம்னு அந்த மரமண்டையில தோணுதா.. நீ துவைச்சுப் போட்டிருந்தா கஷ்டம் தெரியும்.. எவளோ ஏமாந்த சிறுக்கி துவைச்சு போடுவா.. நமக்கென்ன வந்துச்சு.. கசங்காம எடுத்து போட்டுட்டு போனோமா.. அழுக்கு துணிய கழட்டி போட்டாமான்னு இருக்கறது மட்டும்தான உன்வேல.." அருந்ததியின் சலசலப்புகள் அவள் காதில் விழுமா..? விழாத தெரியவில்லை.. மரத்தில் மாங்காய்க்கு பதில் கத்திரிக்காய் தொங்குவதைப் போல் அவள் பார்வை எங்கோ ஆச்சரியமாக பதிந்திருக்கும்..
இன்று வழக்கத்திற்கு மாறாக முழு வாசலும் தூசி துரும்பின்றி துடைத்து வைத்ததை போல் சுத்தமாக இருந்ததில் அருந்ததிக்கோ மகிழ்ச்சிக்கு மாறாக வருத்தம்.. என் வீடு என் உரிமை என்று வீட்டை சுத்தப்படுத்தி காட்டுகிறானோ..!
கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவினாள்..
அவன் தண்டால் எடுத்துக் கொண்டிருக்க மோத்தி ஒய்யரமாக அவன் முதுகின் மேலே ஏறி அமர்ந்திருந்தது..
இப்போது இவனிடம் பேசினால் தான் உண்டு பிறகு காலை பரபரப்பில் இந்த மனிதனை பிடித்து நிறுத்துவது கஷ்டம்.. பைக்கில் எந்நேரமும் பறந்து கொண்டே இருக்கிறானே..!
வேகமாக அவனிடம் சென்று நின்றாள் அருந்ததி..
ஒரு துரும்பளவும் அவளை மதிக்கவில்லை மகரிஷி.. அவன்பாட்டுக்கு உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்க மோத்திதான் அவன் முதுகிலிருந்து கீழே இறங்கி நின்றது..
அதன் பக்கம் திரும்ப கூட இல்லை அவள்.. காரியம் முக்கியமாயிற்றே..! மோத்தியிடம் வள்ளென்று விழுந்தால் அவன் கரிசனத்தை எப்படி பெறுவது..
அது என்னவோ அருந்ததிக்கு மிக பழக்கப்பட்டவன் போல் வாலை ஆட்டிக் கொண்டு வாஞ்சையோடு நின்று கொண்டிருந்தது..
"சார்..!"
அப்போதும் அவன் திரும்பவில்லை..
"சார்.."! அவன் முன்னால் வந்து நின்றாள்..
நிமிர்ந்து பார்த்தவன் அழுத்தமான பார்வையுடன் கண்கள் சுருக்கியபடி எழுந்து நின்று செவியிலிருந்த இயர் போனை எடுத்தான்..
"ஓஹோ இதனால தான் நான் கூப்பிட்டது கேட்கலையோ..!" யோசனையுடன் அவள் நின்று கொண்டிருக்க.. என்ன விஷயம் என்று பார்வையால் கேட்டிருந்தான் அவன்..
கையில்லாத ஒரு ஆம் கட் பனியனும் ஷார்ட்சும் அணிந்திருந்தான்.. ஆங்காங்கே வெட்டி செதுக்கி செய்த ஆண் சிற்பம் போல் தெலுங்கு பட நாயகனை ஒத்து அந்த இடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாது வேற்றுமையாக தெரிந்தான் அவன்..
அதை காட்டிலும் அவன் அணிந்திருந்த உடை.. அருந்ததியிடம் ஒரு அசௌகரியத்தை தந்திருந்தது..
வெறும் உடம்பும் லுங்கியுமாய் தொப்பையும் தொந்தியுமாய் பல்லை விளக்கியபடி போகும்போது வரும்போதும் தலை முதல் கால் வரை அளக்கும் ஆண்களின் மத்தியில் இவன் அப்படி ஒன்றும் மோசம் இல்லைதான்.. உடையும் கூட அத்தனை அநாகரீகம் இல்லை.. சொல்லப்போனால் மிக நாகரிகமான உடற்பயிற்சிக்கான உடை.. நீதான் ஒரு நைட்டியும் மேல் துண்டுமாய் வந்து நிற்கிறாய்.. மனசாட்சி குற்றம் சொல்ல.. கண்டபடி அலையும் எண்ணங்களை ஓரங்கட்டி விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
"இன்கா என்த்த செப்பு இலாகே நிசப்தங்கா நில்சுன்டாவா..!"
கடுகடுவென்று அவன் கேட்ட தோரணையில் "எனக்கு மலையாளம் தெரியாது சார்!" என்றாள் அவள்..
விழிகளை அழுத்தமாக மூடி திறந்து நெற்றியை தேய்த்துக் கொண்டான் அவன்..
"இதி மலையாளம் காது. தெலுங்கு."
"ஏதோ பேச வந்துட்டு ஏன் அமைதியா நிக்கிறீங்கன்னு கேட்டேன் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு நேரமில்லை.." இப்படி பரபரப்பாக நின்றால் எப்படி விஷயத்தை சொல்வது..
பொறுமையாக.. கொஞ்சம் பரிதாபம் வருமளவிற்கு பணிவாக சொல்ல வேண்டுமே..!
"சார்.. நேற்று முழுக்க வீடு தேடி அலைஞ்சேன் சார்.. ஆனா வீடு கிடைக்கல.."
"அதுக்கு நான் என்ன செய்யணும் உங்களுக்கு வீடு பார்த்து தரணுமா..!" எகத்தாளமாக கேட்ட போதிலும் அவன் கண்களின் கருவிழி திரைக்குள் டூ வீலரின் ஹேண்ட் பேரில் தலையை சாய்த்துக் கொண்டு அவள் அழுத கோலம் அழியாமல் நிறைந்திருந்தது.. ஏதோ ஒரு இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த காட்சி அவன் மனக்கண்ணிலிருந்து மறையவில்லை அவன் மறக்கவும் இல்லை..
"சார் தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி ஒரு வாரம் டைம் கொடுங்க..! எப்படியாவது வேற வீடு பார்த்துட்டு போயிடுவேன்.. சத்தியமா உங்களை ஏமாத்தணும்னு நினைக்கல.."
"இவ்ளோ பெரிய சென்னை சிட்டில வீடு கிடைக்கலையா..?' புருவங்களை உயர்த்தி எலியாக பார்த்தான் அவன்..
"நான் ஏன் சார் உங்ககிட்ட பொய் சொல்லணும்.. என் நிலைமை அப்படி இருக்குது.. வயசு பொண்ண வச்சுக்கிட்டு பாதுகாப்பில்லாத ஒரு இடத்தில் குடி போக முடியாதே.. எல்லாத்தையும் பாக்கணும்.. வசதி முக்கியம் இல்ல.. வசதியான வீடு பார்க்க என்கிட்ட வருமானமும் இல்லை ஆனா நிம்மதியும் பாதுகாப்பும் முக்கியம் இல்லையா..! அப்படி ஒரு வீட்டை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.."
"தேவையில்லாத இந்த சிம்பதி கதை எனக்கு எதுக்கு..? ஒரு ஒரு வாரத்துல காலி பண்ணிடுங்க..! ஒரு முழு வீட்டுக்கான வாடகையை கொடுத்துட்டு ஒரே ரூம்ல பேச்சுலர் மாதிரி எத்தனை நாள் வாழ முடியும்..! சீக்கிரம் வீடு பாருங்க.." கறாராகவே பேசினான் அவன்..
"சார்..! வீடு பார்க்கிற புரோக்கர் யாரையாவது உங்களுக்கு தெரியுமா..?"
"ஏமி..?" அவன் முகம் சட்டென மாறியது..
"அப்படி இல்ல சார் ப்ரோக்கர் கிட்ட சொல்லி தானே இந்த வீடு பார்த்து குடி வந்திருப்பீங்க.. நம்பர் குடுத்தீங்கன்னா வாடகைக்கு ஏதாவது வீடு இருக்கான்னு நானும் கேட்டு தெரிஞ்சிக்குவேன்.."
நீண்ட மூச்செடுத்து "ப்ரோக்கர் எல்லாம் லேது..! வெப்சைட்ல வாடகைக்கு வீடு வேணும்னு ரெஜிஸ்டர் பண்ணி போன் நம்பர் குடுத்திருந்தேன்.. ஹவுஸ் ஓனர் கால் பண்ணி பேசினார் வீடு பிடிச்சிருந்தது குடி வந்துட்டேன்..!" என்றான் தோள் குலுக்கலுடன்..
"ஓஹ்..! ஓகே சார் அப்ப நானும் என் பொண்ணு கிட்ட சொல்லி நெட்ல பாக்க சொல்றேன்.. நன்றி சார்.." கைகூப்பி நன்றி சொன்ன போதும் அவன் அசையாமல் அதே தோரணையில் நின்றிருந்தான்..
ஒரு சம்பிரதாயத்துக்கு கூட பரவாயில்லைன்னு சொல்லலையே..! என்ன மனுஷாளுங்களோ..! உள்ளுக்குள் சலிப்பு தோன்றிய போதும் பெரிய மனசு பண்ணி ஒரு வாரம் டைம் குடுத்துருக்கானே.. அவனை ஏன் வறுத்துக் கொட்டற.. போய் வீடு தேடுற வழியை பாரு.. என்று மனசாட்சி அவள் தலையை தட்ட வேகமாக வீட்டிற்குள் சென்று உடைமாற்றி காய்கறி கூடையையும் தனது பர்சிலிருந்து பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே சொல்ல போனவள் உறங்கிக் கொண்டிருந்த மகளை ஒரு நிமிடம் ஆழ்ந்து வாஞ்சையுடன் பார்த்துவிட்டு பின் வெளியேறினாள்..
வாயில் கதவை திறக்கும் நேரம்..
"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ..!" என்று அதிகாரமான கணீர் குரல் அருந்ததியை போகவிடாமல் தடுத்து நிறுத்தியது..
"ஐயோ திடீர்னு மனசு மாறிட்டானோ..! ஒரு வாரமெல்லாம் டைம் தர முடியாது.. இன்னைக்கே காலி பண்ணுங்கன்னு சொல்ல போறானோ.." அடிவயிற்றிலிருந்து பீதி கிளம்ப அவனையே கலவரத்துடன் பார்த்தபடி நின்றாள் அருந்ததி..
செவிகளை தொற்றிக் கொண்டிருந்த ப்ளூடூத் இயர் போனை தோளில் தொங்கவிட்டபடி அருகே வந்து நின்றவன்..
"ஏ பக்க எதைன்னா ஜிம் உண்டதா..?"
மறுபடியும் அருந்ததியிடம் விழிப்பு..
அடுத்த கணம் அவளுக்கு புரியவில்லை என்றுணர்ந்து பிடரியை வருடியபடி..
"ஜிம்.. எக்சசைஸ்.." என்று அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய..
"சார் ஜிம்னா என்னன்னு தெரியும்.. அந்த அளவு மக்கு இல்ல நானு.. இந்த பக்கம் ஏதாவது ஜிம் இருக்கான்னு கேக்கறீங்களா..?" கொஞ்சம் கோபத்துடன் அவலாகவே புரிந்து கேட்க..
"எஸ் அதை தான் கேட்க வந்தேன்" என்றான் அவன்..
"இரண்டாவது தெருவுல ஒரு ஜிம் இருக்கு.. சின்ன ஜிம்.. ஆனா ஃபீஸ் மட்டும் ரொம்ப ஜாஸ்தி.."
"ஃபீஸ் ஜாஸ்தியா உங்களுக்கு எப்படி தெரியும்.."
"என் பொண்ணுக்காக கேட்டு பார்த்தேன் சார்.. என் வருமானத்துல பாதிய கேக்கறான் பாவி.." என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியேற..
சின்ன பொண்ணுக்கு எதுக்காக ஜிம் ஒர்க் அவுட் என்று யோசித்தவன் அதைக் கேட்காமல்.. உங்க பொண்ணுக்கு என்ன வயசாகுது என்று கேட்க நினைத்து அதையும் கேட்காமல் தனக்குள் உள்ளடக்கி கொண்டான்..
கேட்டை திறந்தது தான் தாமதம்.. பாதுகாவலன் போல் அருந்ததியை பின்தொடர்ந்து சென்றது மோத்தி..!
ஏதோ மூச்சிரைப்புடன் ஒரு ஜீவன் தன்னை பின் தொடர்ந்து வருவதில் திரும்பி பார்த்தவள் துரு துருவென மோதி வாலை ஆட்டிக்கொண்டு தன்னிடம் வருவதில் எரிச்சலுற்று..
"ஏய்.. போ." என்று கூடையை ஓங்கினாள்..
கொஞ்சம் மிரண்டு பின் வாங்கி பிறகு அப்படியே நின்று அவள் திரும்பியதும் கோலி குண்டு கண்களால் தலை சாய்த்து ஒரு பார்வை பார்த்து மறுபடியும் பின் தொடர ஆரம்பித்தான் மோத்தி..
சருகுகள் உடையும் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி பார்த்தாள் அருந்ததி..
நாய்.. நாய்க்குட்டி என்ற பெயரை பேப்பரில் எழுதிக் கொடுத்தாலே சுக்கல் சுச்சலாக கிழித்து போடுபவள்.. பக்கத்தில் மட்டும் சேர்ப்பாளா என்ன?
பின் தொடர்ந்து வரும் ஜீவனின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அங்கமிங்குமாக கல்லை தேடிக் கொண்டு நிற்க சிறியவன் எடுத்தான் ஒரு ஓட்டம்.. அருந்ததிக்குள் அலுப்பு.."
"இன்னும் ஒரு வாரம் இதை வேற சகிச்சுக்கணுமே.. இந்த சந்திரமதிதான் சொன்ன பேச்சை கேட்கறதே இல்லை.. இந்த சனியன கையில தொட்டு தூக்கி விளையாடறதெல்லாம் பண்றாளே.. எச்சில் பட்டு ஏதாவது நோய் தொத்திக்கிச்சுன்னா என்ன பண்றது.. போன்ல டிவில என்னென்னமோ காட்டறாங்களே.. ஐயோ இந்த நாய்கள பார்த்தாலே நெஞ்செல்லாம் பதறுது.." தனக்குள் புலம்பியபடி காய் கடையை நோக்கி வேகமாக நடக்க.. தூரத்தில் நின்று மடிந்த காதுகளுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மோத்தி..
வாசல் தாண்டி வெளியேறியவனை தேடிக் கொண்டு கேட்பக்கத்தில் இடுப்பில் கை வைத்து நின்றிருந்தான் மகரிஷி..
"சொல்லாம கொள்ளாம வாசல் தாண்டி போறது என்ன பழக்கம்.. வரட்டும்.. வச்சிக்கறேன் தொங்கா.." செல்லமாய் கோபித்துக் கொண்டு அவன் மோத்தியை எதிர்பார்த்து காத்திருக்க பக்கத்தில் வந்த நின்றதோ சந்திரமதி..
அழுது அழுது வீங்கிய முகம் கலைந்த தலை..! அடிவாங்கி சிவந்து போயிருந்த கன்னங்கள்..
ஒரு கணம் அவன் மனதை உருக்கி எடுத்தாலும் விரைப்புடன் என்று வாட்.. என்றான் அதே இறுக்கத்தோடு..
"சா.. சார்..! நீங்க சயின்ஸ் வாத்தியார் தானே.."
"ஆமா..?"
"எனக்கு சயின்ஸ் சுத்தமா வர மாட்டேங்குது.. எனக்கு மட்டும் கொஞ்சம் சயின்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா.. ஃபீஸ் என்ன வருமோ அதை அம்மாகிட்ட கேட்டு வாங்கி தந்துடுவேன்.."
"நீ என்ன படிக்கிற..?"
"சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கறேன்.."
"மிஞ்சிப் போனால் 12 வயது தான் இருக்கும்.. ஆனால் 15..16 வயதிற்குள்ள வளர்ச்சி.. நல்ல உயரமாக இருந்தாள்.. முகத்தில் மட்டும் முழுக்க முழுக்க குழந்தைத்தனம்.. ஒருவேளை இந்த வயதுக்கு மீறிய வளர்ச்சியின் காரணமாகத்தான் இவள் தாய் ஜிம்மில் சேர்த்துவிட முயற்சித்தாளோ..!
"சார்..?" மகரிஷியின் யோசனையை கலைத்தாள் சந்திரமதி..
"சார் டியூஷன் எடுக்கறீங்களா?" மீண்டும் அதே கேள்வி..
"ஏன் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கும்போதே படிக்கிறதுக்கு என்ன உனக்கு..?" முன் கை கட்டியபடி மிகக் கடுமையோடு கேட்டான்..
"இப்ப வரைக்கும் சயின்ஸ் சப்ஜெக்ட்க்கு டீச்சர் யாரும் வரல.. அப்பப்ப யாராவது வந்து பாடம் நடத்துவாங்க அதுவும் எனக்கு புரியவே மாட்டேங்குது.." பரிதாபமாக நின்றாள் சந்திரமதி..
பதில் சொல்லாமல் அவன் தனது வீட்டுக்குள் போக.. "சார்.. சார்.." என்று அழைத்தபடி அவனை பின்தொடர்ந்தாள் சந்திரமதி..
அறைக்குள் சென்றவனை மீண்டும் சார் சார் என்று அழைத்து நிற்க வைத்தாள்..
கையை உயர்த்தி வாசல் கதவை பிடித்தபடி நின்றிருந்தான் மகரிஷி..
"சார் அடுத்த முறை மார்க் ரொம்ப குறைச்சலா வாங்கினா அம்மா என்னை கொன்னே போட்டுடுவாங்க.." அழும் நிலையில் நின்றாள்..
"அது உன் பிரச்சனை.. அந்த பயம் மனசுல இருந்தா ஒழுங்கா படிக்கணும்.."
"எனக்கு படிப்பு வரல சார்.."
"நல்ல லேடி டீச்சரா பார்த்து டியூஷன் வச்சிக்க..!"
"இங்க யாரும் டியூஷன் எடுக்கல சார்.. ப்ளீஸ் எனக்காக சயின்ஸ் மட்டும் நீங்க டியூஷன் எடுங்க.." சின்னது பிடிவாதம் பிடிக்க
"முடியாது..!" கதவை சாத்திக் கொண்டான் மகரிஷி..
தொடரும்..
Last edited: