- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
ஃபெசிலிட்டியில் நோயாளிகளை சந்தித்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக பரிசோதித்து ரிப்போர்ட் ஷீட் எடுத்து கம்ப்யூட்டரில் அப்லோடு செய்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தான் வருண்..!
அங்கே ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு பிரச்சனை..
கண் முன் வித்யாசமான உருவம் தெரிவதாய் காதுக்குள் விதவிதமான சத்தம் கேட்பதாய்.. நிஜத்தோடு கலக்காமல் தனக்கான கற்பனை உலகத்தில் வாழ்வதாய்.. உடம்பெல்லாம் ஏதோ ஊர்வதை போல் அடிக்கடி ஆடைகளை கழற்றி போடுவதாய்.. வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவதாய்.. மூர்க்கமாக தாக்குவதாய்.. என ஏகப்பட்ட வித்தியாசமான மனப் பிறழ்வு நோய்களோடு அங்கு அட்மிட் ஆகியிருந்தனர்..!
ஆனால் இவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து குறைவு.. கொலை செய்பவன் கொள்ளையடிப்பவன் கற்பழிப்பவன் சைக்கோ கொலைகாரன்.. மனைவியை அடித்து துன்புறுத்துபவன் அடுத்தவனை காயப்படுத்துபவன்.. முகநூலில் முகம் தெரியாமல் கேவலமாக விமர்சித்து விட்டு செல்பவன் என அத்தனை கொடிய மன நோயாளிகளும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க அவர்களோடு ஒப்பிடும்போது மிகச் சாதாரண பிரச்சனைகளை கொண்ட இவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வேடிக்கையான விஷயமாக தோன்றியது வருணுக்கு..!
வாயில் பான்பராக்கை குதப்பிக் கொண்டு அர்த்தமே இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொள்ளும் இரு லுங்கி ஆசாமிகளை ரோட்டில் காண நேர்ந்தது..! கடைசிவரை அவன் என்ன பேசுகிறான் என இவனுக்கு புரியவில்லை இவன் சொல்வதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.. மற்றவர்களுக்கு புரிய வைக்கப் போராடுகிறார்களா? இல்லை தனக்கு தானே பேசிக் கொள்கிறார்களா.. முழங்கையை ஜன்னல் பக்கம் ஊன்றி கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களைதான் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..!
தோட்டத்தில் செடிகளை கண்டமேனிக்கு பிடுங்கி போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் நோயாளி வார்டன் செடிகளின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னதை கேட்டு தலையாட்டிக்கொண்டு அமைதியாக சென்றதை நினைவு கூர்ந்தான் வருண்..
இப்ப இவங்க கிட்ட போய் சண்டை போடாதீங்கன்னு நம்ம மருத்துவ டெர்ம்ல சொன்னா எப்படி இருக்கும்..! யோசித்துப் பார்க்கையில் வண்ண வண்ணமாய் அவர்கள் சொல்லும் பதிலை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது..!
அதற்குள் கிரீன் சிக்னல் போட்டு விட காரை கிளப்பினான்..!
மருத்துவமனையில் அத்தனை நோயாளிகளையும் வரிசையாக பரிசோதித்து மருந்துகளை பரிந்துரைத்து விட்டு.. புதிதாக வந்த இரண்டு பேருக்கு ஃபார்மாலிட்டி முடித்து அட்மிஷன் போட்டு.. என பரபரப்பாக அத்தனை வேலைகளையும் செய்து முடித்து.. இப்போது கார் ஓட்டும் போது.. சாலையில் கண் பதித்து சுற்றுப்புற சூழ்நிலையை கண்களில் நிரப்பிக் கொண்டு
ஏதோ.. மோகம்..
ஏதோ தாகம்..
ஜானகியின் குரல் தேனாக செவிகளுக்குள் இறங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சிந்தனையின் இடுக்குகளில் தேம்பாவணி எட்டிப் பார்க்கிறாள்..
அவள் பிஞ்சு கரம் சில்லிட்டு கன்னத்தில் பதிவது போல் தோன்றுகிறது..
கொஞ்சம் சிலிர்த்து தான் போனான் வருண்..!
"என்ன ஆச்சும்மா சொன்னாதானே தெரியும்..!"
போனை எடுத்து அவளுக்கு அழைத்து பார்க்கிறான்..
போன் முழுதாக ரிங் போய் துண்டிக்கப்பட்டது..!
"என்ன பண்ற தேம்ஸ் என்னை..!"
"Such a bad day today..! 24 மணி நேரமா ஒரு பொண்ண பத்தி மட்டுமே யோசிச்சிருந்திருக்க..! என்னடா ஆச்சு வருண் உனக்கு..? அவதான் உன்னை நம்ப மாட்டேங்கறாளே.. அப்புறம் எதுக்காக அவளை நினைச்சு இவ்வளவு கவலைப்படுற..! ஹேய்.. She is my patient man.. என் முன்னாடி ஒருத்தி கஷ்டப்படும்போது பார்த்துகிட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்.. என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியும்னா let's give a try..!"
அடுத்த சிக்னலில் காரை நிறுத்திவிட்டு அவன் முனுமுனுப்பாக பேசிக் கொண்டிருக்க கார் கதவை தட்டினார் ஒரு யாசகர்..
கார் கண்ணாடியை இறக்கி இரண்டாக மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டை அவன் தட்டில் போட்ட பிறகும் அந்த ஆள் அசையவில்லை..!
"என்னங்கய்யா வேணும்..! சாப்பிட ஏதாவது தரனுமா..?" நிதானமாக கேட்டான் அவன்.
"இதுக்கு முன்னாடி யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க தம்பி வண்டிக்குள்ள யாரையுமே காணோமே..!" அவருக்கு இது அனாவசிய கேள்விதான்.. ஆனாலும் ஏதோ ஒரு ஆர்வம்..
அவர் சொன்ன பிறகு தான் இத்தனை நேரம் தான் தனியாக புலம்பிக் கொண்டு வந்ததை உணர்ந்தான் வருண்..
"அடிப்பாவி என்னையவே தனியா பேச வச்சுட்டாளே..!" அதையும் அவன் வெளிப்படையாகவே சாலையை பார்த்து சொல்ல..
"தம்பி பைத்தியம் போலிருக்கு தனியாவே பேசிக்குது.. இந்த காலத்துப் பசங்கல்லாம் இப்படித்தான்.. கேட்டா டிப்ரஷன் டிகாஷன்னு ஏதாவது சொல்லுவாங்க..!" டாக்டருக்கே பாடம் எடுத்துவிட்டு சென்றார் அந்த முதியவர்..
"எனக்கே டிப்ரஷனா.. சரிதான் எல்லாம் என் நேரம்..!" கன்னத்தில் கை வைத்து அவரை பார்த்து ஒரு மார்க்கமாக தலையசைத்தான் வருண்..!
வீட்டுக்குள் வேகமாக வந்தவன் கூடத்தில் அமர்ந்திருந்த யாரையும் கண்டு கொள்ளாது படுக்கையறைக்குள் நுழைந்து.. கைகளை கோர்த்தவாறு கட்டிலில் அமர்ந்தான்..
"உள்ளே வந்த திலோத்தமா என்னாச்சு உங்களுக்கு..!" என்றாள் புருவங்கள் இடுங்க..!
"ஏன்..! அடுத்து நீ என்ன கேக்க போற..?" அவன் குரலில் சிடுசிடுப்பு..
"இல்ல பெட்ரூம் வரைக்கும் ஷூ போட்டுட்டு உள்ள வந்திருக்கீங்க..! அதனாலதான் கேட்டேன்.." என்றதும் குனிந்து காலை பார்த்தான் வருண்..
"ஆமா ஏதோ ஒரு வேகத்துல வந்துட்டேன்.. இப்ப என்ன அதுக்கு..!"
"நான் ஒன்னும் சொல்லல.. எப்பவும் இப்படி வர மாட்டீங்களே அதனாலதான் கேட்டேன்.. பாருங்க தரையெல்லாம் மண்ணு.. எது சொன்னாலும் எரிச்சல் பட்டா எப்படி.." என்றபடி அறைக்குள் நுழைந்து கொள்ள..
"மண்ணு இருந்தா என்ன..? நீயா பெருக்கி தள்ள போற..!" திரும்பி அவள் அறையை பார்த்து கத்தினான் வருண்..
"இவ்ளோ பெரிய பங்களாவுக்கு வீட்டை பெருக்கத்தான் வேலைக்காரியா என்னை கூட்டிட்டு வந்தீங்களா..! கால்ல மண்ணு நரன்னு நரனு மிதிப்படுதேனு சொன்னேன்.. சரி ஷுவை கழட்டி கொடுங்க.."
"எதுக்கு..?"
"கொண்டு போய் ஷூ ஸ்டான்ட்ல வைக்கத்தான்.. பின்ன உங்க காலணிய வச்சு பூஜை பண்ணவா கேட்டேன்..!"
"ஆள் இல்லாத இந்த இடத்துல எதுக்காக இப்ப ஓவர் பர்பாமென்ஸ் பண்ற..! ஷு கழட்டி ஸ்டாண்ட்ல கொண்டு போய் வைக்க எனக்கு வழி தெரியாதா..?"
"உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனா வெளியே இருக்கிறவங்க.. பொண்டாட்டியாகபட்டவ இத கூட செய்ய மாட்டாளான்னு பேசுவாங்களே..! அதுவும் உங்க அக்கா.. ஷ்ஷ்ஷ்..!" என்று தலையை உலுக்கினாள்..
"என் குடும்பத்தை பற்றி குறை சொல்லதான் உன்னை கூட்டிட்டு வந்தேனா..! கணவன் மனைவி அன்னியோன்யமா இருக்கற மாதிரி காட்டறதுக்க்காக சில வேலைகளை செஞ்சுதான் ஆகணும்.. என் அம்மா என் அப்பாவுக்கு செய்யறாங்க என் அக்கா என் மாமாவுக்கு செய்யறா.. .அதே அன்பை நீ என்கிட்ட காட்டணும்னு அவங்க எதிர்பார்க்கறாங்க..!"
"ஏன் உங்க வீட்ல இருக்குற பெண்கள் எல்லாரும் ஆம்பளைங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துட்டாங்களா..?"
"வார்த்தையை அளந்து பேசு..! எங்க வீட்ல ஆம்பள பொம்பள பேதமெல்லாம் கிடையாது.. புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டிவா இருப்பாங்க..!"
"என்னவோ இதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க சொன்னதையெல்லாம் லிஸ்ட் போட்டு உங்களுக்கு செஞ்சுகிட்டு இருக்கேன்.. ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க மாத்திக்கறேன்" அவ்வளவுதான்..
"நீ இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். தயவு செஞ்சு இங்கிருந்து போ..!"
"என்ன நானும் பாத்துட்டே இருக்கேன்.. சும்மா சும்மா எரிஞ்சு விழுந்துகிட்டே இருக்கீங்க..! வர வர உங்க நடவடிக்கை எதுவுமே சரியில்லை..!"
"நான் எப்படி நடந்துக்கிட்டா உனக்கென்ன..! அளவுக்கு மீறி பேசாதே திலோத்தமா..!"
பேச்சு முறையில் திலோத்தமா அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொள்வதாக தோன்றியது வருணுக்கு..
"அழுக்கு துணி ஏதாவது இருந்தா குடுங்க..!"
"இன்னும் தூங்காம என்ன பண்றீங்க..?"
"சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவீங்க.."
ஆள் இல்லாத சமயங்களில் அவள் இது போல் உரிமையெடுத்து பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை..!
கதவை திறந்து கொண்டு சாருமதி உள்ளே ஓடி வந்தாள்..
"மாமா என் கையில படிப்பு ரேகை எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க..!"
"படிப்பு ரேகை எங்க இருக்குது..? ஃபுல்லா நடிப்பு ரேகைதான் ஓடுது.."
"மாமா..?"
"நேத்து லேசா சுகுனேஷோட கை உன் மேல பட்டதுக்கு.. அவன் என்னை அடிச்சிட்டான்னு என்ன ஆர்ப்பாட்டம் செஞ்ச நீ..! அப்பதான சுகா அடி வாங்குவான்.. அதானே உன்னோட பிளான்..!" புருவம் உயர்த்தினான் அவன்..
"கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லாதீங்க மாமா.."
"சரிதான்..!"
"அதெல்லாம் விடுங்க.. படிப்பு ரேகை எவ்வளவு தூரத்துக்கு இருக்குன்னு பார்த்து சொல்லுங்க.."
பிரிந்த ரோஜாவின் அகலமிருந்த உள்ளங்கையை அவனை நோக்கி நீட்டினாள்.. பிள்ளையின் கைபிடித்து உற்றுப் பார்த்தவனுக்கு அந்த கையின் மென்மை மீண்டும் தேம்பாவணியை நினைவு படுத்தியது..
ஒரு சின்ன வட்டத்துக்குள் ஒரு லோடு செங்கற்களை கொட்டியது போல்.. மென்மையான உள்ளங்கையிலும் விரல்களிலும் வரி வரியாக எத்தனை சிகப்பு தடங்கள்..! ரோஜா பூவாய் நுனிவிரல்கள்.. உள்ளங்கை முழுக்க விகாரமாய் வீங்கி..
கண்களை மூடி திறந்தான் வருண்..!
"மாமா உங்களை சாப்பிட வர சொன்னாங்க..!" சுகுனேஷ் உள்ளே வந்து சொல்ல..
"இதோ போறேன்..!" என்றவன் "திலோத்தமா.. சாப்பிட கூப்பிட்டாங்க சீக்கிரமா வந்துடு" என்று விட்டு வெளியே செல்ல.. குழந்தைகள் அவனோடு நடக்காமல் பூனை போல் நகர்ந்து அந்த உள்ளறையை திறந்து கொண்டு எட்டி பார்க்கவும் கால் மேல் கால் போட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த திலோத்தமா குழந்தைகளின் தலையை கண்டதும் டென்ஷனாகிவிட்டாள்..
"ஏய்.. இது என்ன பழக்கம் ஒருத்தர் ரூமுக்குள்ள எட்டி பாக்க கூடாதுனு உங்க அம்மா சொல்லித் தரலையா..! இனி இந்த வேலை வைச்சுக்கிட்டீங்க கால உடைச்சிடுவேன்" திலோத்தமா எழுந்து வெளியே வர குழந்தைகள் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்..
"சனியனுங்க..! கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா.. நான் என்ன செய்யறேன்.. எங்க போறேன் என்னத்த திங்கறேன்னு கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்க்க வேண்டியது.. இதுங்களுக்கும் இதுங்க ஆத்தாளுக்கும் வேற வேலையே இல்லை..!" ஒற்றையாய் மிதக்க விட்டிருந்த புடவை முந்தானையை படக்கென தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றாள் திலோத்தமா..
இரவு நேரம்..! உண்டு முடித்து குடும்பத்தோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அறைக்கு வந்தான் வருண்..
தலையணையை வைத்து கட்டிலில் சாய்ந்த படி தேம்பாவணியை பற்றிய யோசனையிலிருக்க .. கதவை திறந்து உள்ளே வந்த திலோத்தமா.. "இன்னும் நீங்க தூங்கலையா" என்று கேட்ட கேள்வியில் அவன் பார்வை முறைப்பாய் மாறியது..
"சாதாரணமா கேட்கற கேள்விக்கு ஏன் இப்படி முறைக்கறீங்க.. டைனிங் டேபிள் கிளீன் பண்ணி சாப்பிட்ட தட்டையெல்லாம் கழுவி.. சமையலறையை ஏறக்கட்டற வரைக்கும் நான் அங்கதான் இருக்கணுமா..!"
"இதெல்லாம் நீ தான் செஞ்சியா..?"
"இல்ல.. வேலைக்காரங்க தான் செஞ்சாங்க ஆனா உங்க அம்மாவும் அக்காவும் அங்க நின்னு பேசிட்டு இருக்கற வரைக்கும் நானும் அங்கதான் இருக்கணுமாம் உங்க அம்மா சொல்றாங்க..!"
சலிப்போடு நீண்ட பெருமூச்செடுத்தான் வருண்..
கொஞ்ச நேரம் அங்க நின்னு பேசிட்டு வர்றதுல உனக்கு என்னதான் பிரச்சனை..!
"ஏற்கனவே தலை வலிக்குது.. குட்டி சா.." என ஆரம்பித்து பின் நிறுத்தியவள் "பிள்ளைங்க சத்தம் வேற காதை அடைக்குது.. இதுல இவங்க ரெண்டு பேரும் வண்டி சலங்கை உடையற மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசுறதை கேட்கும் போது என் தலையே வெடிச்சிடும் போலிருக்கு.." என உதடு குவித்து ஊதினாள்..
"உன்னை ஒன்னும் கேட்கல நீ தயவு செஞ்சு உள்ள போ.. என்னை இரிடேட் பண்ணாதே..!" வருண் கண்களை மூடிக்கொள்ள.. பற்களை கடித்தவள் வேகமாக சென்று கதவை அறைந்து சாத்தி கொண்டாள்..
இதுவரை நான்கு முறை தேம்பாவணிக்கு அழைத்து விட்டான்..
அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.. இதில் திலோத்தமா வேறு ரம்பம் அறுக்கும் சத்தம் போல் காதருகில் வந்து கத்தி விட்டுப் போனதில் மிகுந்த எரிச்சலில் இருந்தான்..!
கண்கள் மூடி படுத்திருக்க மீண்டும் அந்த உள்ளங்கை ஜில்லிப்போடு அவன் கன்னத்தில் படுவது போன்ற உணர்வு.
சட்டென கண்விழித்த நேரத்தில் அலைபேசி சத்தமெழுப்பியது..
எழுந்தமர்ந்து போனை எடுத்துப் பார்த்தான்..
தேம்பாவணி அழைத்திருக்கிறாள்..
"ஓ மை காட்.." சில நொடிகளுக்குள் பரீட்சைகளுக்குள் நுழைய வேண்டிய மாணவனை போல் பரபரத்து அழைப்பை ஏற்றான்..
"சொல்லு தேம்பாவணி..!"
எதிர்பக்கம் பதிலில்லை..
"லைன்ல இருக்காளா" என்று பார்க்கும்போதுதான் அது காணொளி அழைப்பு என்று தெரியவந்தது..
"அவசரத்தில் அதைக்கூட கவனிக்காம விட்டுட்டேனா!" நெற்றியை தேய்த்தபடி கீழே உதட்டை கடித்து லேசாக சிரித்துக்கொண்டான்..
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் தேம்பாவணி.. அலைபேசியை மேஜையில் நிற்க வைத்திருக்க வேண்டும்..
"தேம்ஸ் உன் கை எப்படி இருக்கு..! வலி பரவாயில்லையா? நான் தந்த மருந்தை போட்டுக்கிட்டியா.." அக்கறை பூசிய வர்த்தைகளுக்கு மதிப்பில்லாமல் போனது..
முறைத்தமேனிக்கு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துக்கொண்டாள்..
"ஒஹோ.. மேடம் பயந்து எனக்கு கால் பண்ணி இருக்கீங்க..! சரி.. தூங்குங்க.. குட் நைட்.." கன்னத்தில் கை வைத்து இழுத்து சொன்னவன் தொடுதிரையில் தெரிந்தவளை பார்த்துக் கொண்டிருக்க.. விழிகளை மூடியவள் ஐந்து நிமிடத்தில் சட்டென எழுந்து போன் திரையை பார்த்தாள்..
"நான் இங்கதான் இருக்கேன்.. உன்னை விட்டுட்டு எங்கேயும் போகல.. நிம்மதியா தூங்கு.." அமைதியான இரவில் அவன் மென்மையான குரல் தாலாட்டு போல் தோன்றியதோ என்னவோ..!
திரையில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருகி உறங்கிப் போயிருந்தாள் தேம்பாவணி..
"தேம்ஸ்..! ஆர் யூ ஆல்ரைட்.."
என்று கேட்டுவிட்டு "நோ.. நாட் ரியலி.." என பதிலையும் அவனே சொல்லிக் கொண்டான்..
மலர்ந்த தாமரையாய் கட்டில் மீது கிடந்த உள்ளங்கையில் அவன் பார்வை விழுந்தது.. ரத்தச் சிவப்பு மங்கி போகவில்லை..
"புவர் தேம்ஸ்..!"
திரையில் தெரிந்த அவள் கரத்தை தொட்டான்.. மறுபக்கம் சின்னதாய் சினுங்கி மீண்டும் உறங்க தொடங்கினாள் தேம்பாவணி..
தொடரும்..
அங்கே ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு பிரச்சனை..
கண் முன் வித்யாசமான உருவம் தெரிவதாய் காதுக்குள் விதவிதமான சத்தம் கேட்பதாய்.. நிஜத்தோடு கலக்காமல் தனக்கான கற்பனை உலகத்தில் வாழ்வதாய்.. உடம்பெல்லாம் ஏதோ ஊர்வதை போல் அடிக்கடி ஆடைகளை கழற்றி போடுவதாய்.. வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவதாய்.. மூர்க்கமாக தாக்குவதாய்.. என ஏகப்பட்ட வித்தியாசமான மனப் பிறழ்வு நோய்களோடு அங்கு அட்மிட் ஆகியிருந்தனர்..!
ஆனால் இவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து குறைவு.. கொலை செய்பவன் கொள்ளையடிப்பவன் கற்பழிப்பவன் சைக்கோ கொலைகாரன்.. மனைவியை அடித்து துன்புறுத்துபவன் அடுத்தவனை காயப்படுத்துபவன்.. முகநூலில் முகம் தெரியாமல் கேவலமாக விமர்சித்து விட்டு செல்பவன் என அத்தனை கொடிய மன நோயாளிகளும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க அவர்களோடு ஒப்பிடும்போது மிகச் சாதாரண பிரச்சனைகளை கொண்ட இவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வேடிக்கையான விஷயமாக தோன்றியது வருணுக்கு..!
வாயில் பான்பராக்கை குதப்பிக் கொண்டு அர்த்தமே இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொள்ளும் இரு லுங்கி ஆசாமிகளை ரோட்டில் காண நேர்ந்தது..! கடைசிவரை அவன் என்ன பேசுகிறான் என இவனுக்கு புரியவில்லை இவன் சொல்வதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.. மற்றவர்களுக்கு புரிய வைக்கப் போராடுகிறார்களா? இல்லை தனக்கு தானே பேசிக் கொள்கிறார்களா.. முழங்கையை ஜன்னல் பக்கம் ஊன்றி கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களைதான் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்..!
தோட்டத்தில் செடிகளை கண்டமேனிக்கு பிடுங்கி போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் நோயாளி வார்டன் செடிகளின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னதை கேட்டு தலையாட்டிக்கொண்டு அமைதியாக சென்றதை நினைவு கூர்ந்தான் வருண்..
இப்ப இவங்க கிட்ட போய் சண்டை போடாதீங்கன்னு நம்ம மருத்துவ டெர்ம்ல சொன்னா எப்படி இருக்கும்..! யோசித்துப் பார்க்கையில் வண்ண வண்ணமாய் அவர்கள் சொல்லும் பதிலை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது..!
அதற்குள் கிரீன் சிக்னல் போட்டு விட காரை கிளப்பினான்..!
மருத்துவமனையில் அத்தனை நோயாளிகளையும் வரிசையாக பரிசோதித்து மருந்துகளை பரிந்துரைத்து விட்டு.. புதிதாக வந்த இரண்டு பேருக்கு ஃபார்மாலிட்டி முடித்து அட்மிஷன் போட்டு.. என பரபரப்பாக அத்தனை வேலைகளையும் செய்து முடித்து.. இப்போது கார் ஓட்டும் போது.. சாலையில் கண் பதித்து சுற்றுப்புற சூழ்நிலையை கண்களில் நிரப்பிக் கொண்டு
ஏதோ.. மோகம்..
ஏதோ தாகம்..
ஜானகியின் குரல் தேனாக செவிகளுக்குள் இறங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சிந்தனையின் இடுக்குகளில் தேம்பாவணி எட்டிப் பார்க்கிறாள்..
அவள் பிஞ்சு கரம் சில்லிட்டு கன்னத்தில் பதிவது போல் தோன்றுகிறது..
கொஞ்சம் சிலிர்த்து தான் போனான் வருண்..!
"என்ன ஆச்சும்மா சொன்னாதானே தெரியும்..!"
போனை எடுத்து அவளுக்கு அழைத்து பார்க்கிறான்..
போன் முழுதாக ரிங் போய் துண்டிக்கப்பட்டது..!
"என்ன பண்ற தேம்ஸ் என்னை..!"
"Such a bad day today..! 24 மணி நேரமா ஒரு பொண்ண பத்தி மட்டுமே யோசிச்சிருந்திருக்க..! என்னடா ஆச்சு வருண் உனக்கு..? அவதான் உன்னை நம்ப மாட்டேங்கறாளே.. அப்புறம் எதுக்காக அவளை நினைச்சு இவ்வளவு கவலைப்படுற..! ஹேய்.. She is my patient man.. என் முன்னாடி ஒருத்தி கஷ்டப்படும்போது பார்த்துகிட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்.. என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியும்னா let's give a try..!"
அடுத்த சிக்னலில் காரை நிறுத்திவிட்டு அவன் முனுமுனுப்பாக பேசிக் கொண்டிருக்க கார் கதவை தட்டினார் ஒரு யாசகர்..
கார் கண்ணாடியை இறக்கி இரண்டாக மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டை அவன் தட்டில் போட்ட பிறகும் அந்த ஆள் அசையவில்லை..!
"என்னங்கய்யா வேணும்..! சாப்பிட ஏதாவது தரனுமா..?" நிதானமாக கேட்டான் அவன்.
"இதுக்கு முன்னாடி யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க தம்பி வண்டிக்குள்ள யாரையுமே காணோமே..!" அவருக்கு இது அனாவசிய கேள்விதான்.. ஆனாலும் ஏதோ ஒரு ஆர்வம்..
அவர் சொன்ன பிறகு தான் இத்தனை நேரம் தான் தனியாக புலம்பிக் கொண்டு வந்ததை உணர்ந்தான் வருண்..
"அடிப்பாவி என்னையவே தனியா பேச வச்சுட்டாளே..!" அதையும் அவன் வெளிப்படையாகவே சாலையை பார்த்து சொல்ல..
"தம்பி பைத்தியம் போலிருக்கு தனியாவே பேசிக்குது.. இந்த காலத்துப் பசங்கல்லாம் இப்படித்தான்.. கேட்டா டிப்ரஷன் டிகாஷன்னு ஏதாவது சொல்லுவாங்க..!" டாக்டருக்கே பாடம் எடுத்துவிட்டு சென்றார் அந்த முதியவர்..
"எனக்கே டிப்ரஷனா.. சரிதான் எல்லாம் என் நேரம்..!" கன்னத்தில் கை வைத்து அவரை பார்த்து ஒரு மார்க்கமாக தலையசைத்தான் வருண்..!
வீட்டுக்குள் வேகமாக வந்தவன் கூடத்தில் அமர்ந்திருந்த யாரையும் கண்டு கொள்ளாது படுக்கையறைக்குள் நுழைந்து.. கைகளை கோர்த்தவாறு கட்டிலில் அமர்ந்தான்..
"உள்ளே வந்த திலோத்தமா என்னாச்சு உங்களுக்கு..!" என்றாள் புருவங்கள் இடுங்க..!
"ஏன்..! அடுத்து நீ என்ன கேக்க போற..?" அவன் குரலில் சிடுசிடுப்பு..
"இல்ல பெட்ரூம் வரைக்கும் ஷூ போட்டுட்டு உள்ள வந்திருக்கீங்க..! அதனாலதான் கேட்டேன்.." என்றதும் குனிந்து காலை பார்த்தான் வருண்..
"ஆமா ஏதோ ஒரு வேகத்துல வந்துட்டேன்.. இப்ப என்ன அதுக்கு..!"
"நான் ஒன்னும் சொல்லல.. எப்பவும் இப்படி வர மாட்டீங்களே அதனாலதான் கேட்டேன்.. பாருங்க தரையெல்லாம் மண்ணு.. எது சொன்னாலும் எரிச்சல் பட்டா எப்படி.." என்றபடி அறைக்குள் நுழைந்து கொள்ள..
"மண்ணு இருந்தா என்ன..? நீயா பெருக்கி தள்ள போற..!" திரும்பி அவள் அறையை பார்த்து கத்தினான் வருண்..
"இவ்ளோ பெரிய பங்களாவுக்கு வீட்டை பெருக்கத்தான் வேலைக்காரியா என்னை கூட்டிட்டு வந்தீங்களா..! கால்ல மண்ணு நரன்னு நரனு மிதிப்படுதேனு சொன்னேன்.. சரி ஷுவை கழட்டி கொடுங்க.."
"எதுக்கு..?"
"கொண்டு போய் ஷூ ஸ்டான்ட்ல வைக்கத்தான்.. பின்ன உங்க காலணிய வச்சு பூஜை பண்ணவா கேட்டேன்..!"
"ஆள் இல்லாத இந்த இடத்துல எதுக்காக இப்ப ஓவர் பர்பாமென்ஸ் பண்ற..! ஷு கழட்டி ஸ்டாண்ட்ல கொண்டு போய் வைக்க எனக்கு வழி தெரியாதா..?"
"உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனா வெளியே இருக்கிறவங்க.. பொண்டாட்டியாகபட்டவ இத கூட செய்ய மாட்டாளான்னு பேசுவாங்களே..! அதுவும் உங்க அக்கா.. ஷ்ஷ்ஷ்..!" என்று தலையை உலுக்கினாள்..
"என் குடும்பத்தை பற்றி குறை சொல்லதான் உன்னை கூட்டிட்டு வந்தேனா..! கணவன் மனைவி அன்னியோன்யமா இருக்கற மாதிரி காட்டறதுக்க்காக சில வேலைகளை செஞ்சுதான் ஆகணும்.. என் அம்மா என் அப்பாவுக்கு செய்யறாங்க என் அக்கா என் மாமாவுக்கு செய்யறா.. .அதே அன்பை நீ என்கிட்ட காட்டணும்னு அவங்க எதிர்பார்க்கறாங்க..!"
"ஏன் உங்க வீட்ல இருக்குற பெண்கள் எல்லாரும் ஆம்பளைங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துட்டாங்களா..?"
"வார்த்தையை அளந்து பேசு..! எங்க வீட்ல ஆம்பள பொம்பள பேதமெல்லாம் கிடையாது.. புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டிவா இருப்பாங்க..!"
"என்னவோ இதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க சொன்னதையெல்லாம் லிஸ்ட் போட்டு உங்களுக்கு செஞ்சுகிட்டு இருக்கேன்.. ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க மாத்திக்கறேன்" அவ்வளவுதான்..
"நீ இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். தயவு செஞ்சு இங்கிருந்து போ..!"
"என்ன நானும் பாத்துட்டே இருக்கேன்.. சும்மா சும்மா எரிஞ்சு விழுந்துகிட்டே இருக்கீங்க..! வர வர உங்க நடவடிக்கை எதுவுமே சரியில்லை..!"
"நான் எப்படி நடந்துக்கிட்டா உனக்கென்ன..! அளவுக்கு மீறி பேசாதே திலோத்தமா..!"
பேச்சு முறையில் திலோத்தமா அதிகப்படியாக உரிமை எடுத்துக் கொள்வதாக தோன்றியது வருணுக்கு..
"அழுக்கு துணி ஏதாவது இருந்தா குடுங்க..!"
"இன்னும் தூங்காம என்ன பண்றீங்க..?"
"சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவீங்க.."
ஆள் இல்லாத சமயங்களில் அவள் இது போல் உரிமையெடுத்து பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை..!
கதவை திறந்து கொண்டு சாருமதி உள்ளே ஓடி வந்தாள்..
"மாமா என் கையில படிப்பு ரேகை எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க..!"
"படிப்பு ரேகை எங்க இருக்குது..? ஃபுல்லா நடிப்பு ரேகைதான் ஓடுது.."
"மாமா..?"
"நேத்து லேசா சுகுனேஷோட கை உன் மேல பட்டதுக்கு.. அவன் என்னை அடிச்சிட்டான்னு என்ன ஆர்ப்பாட்டம் செஞ்ச நீ..! அப்பதான சுகா அடி வாங்குவான்.. அதானே உன்னோட பிளான்..!" புருவம் உயர்த்தினான் அவன்..
"கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்லாதீங்க மாமா.."
"சரிதான்..!"
"அதெல்லாம் விடுங்க.. படிப்பு ரேகை எவ்வளவு தூரத்துக்கு இருக்குன்னு பார்த்து சொல்லுங்க.."
பிரிந்த ரோஜாவின் அகலமிருந்த உள்ளங்கையை அவனை நோக்கி நீட்டினாள்.. பிள்ளையின் கைபிடித்து உற்றுப் பார்த்தவனுக்கு அந்த கையின் மென்மை மீண்டும் தேம்பாவணியை நினைவு படுத்தியது..
ஒரு சின்ன வட்டத்துக்குள் ஒரு லோடு செங்கற்களை கொட்டியது போல்.. மென்மையான உள்ளங்கையிலும் விரல்களிலும் வரி வரியாக எத்தனை சிகப்பு தடங்கள்..! ரோஜா பூவாய் நுனிவிரல்கள்.. உள்ளங்கை முழுக்க விகாரமாய் வீங்கி..
கண்களை மூடி திறந்தான் வருண்..!
"மாமா உங்களை சாப்பிட வர சொன்னாங்க..!" சுகுனேஷ் உள்ளே வந்து சொல்ல..
"இதோ போறேன்..!" என்றவன் "திலோத்தமா.. சாப்பிட கூப்பிட்டாங்க சீக்கிரமா வந்துடு" என்று விட்டு வெளியே செல்ல.. குழந்தைகள் அவனோடு நடக்காமல் பூனை போல் நகர்ந்து அந்த உள்ளறையை திறந்து கொண்டு எட்டி பார்க்கவும் கால் மேல் கால் போட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த திலோத்தமா குழந்தைகளின் தலையை கண்டதும் டென்ஷனாகிவிட்டாள்..
"ஏய்.. இது என்ன பழக்கம் ஒருத்தர் ரூமுக்குள்ள எட்டி பாக்க கூடாதுனு உங்க அம்மா சொல்லித் தரலையா..! இனி இந்த வேலை வைச்சுக்கிட்டீங்க கால உடைச்சிடுவேன்" திலோத்தமா எழுந்து வெளியே வர குழந்தைகள் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்..
"சனியனுங்க..! கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா.. நான் என்ன செய்யறேன்.. எங்க போறேன் என்னத்த திங்கறேன்னு கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்க்க வேண்டியது.. இதுங்களுக்கும் இதுங்க ஆத்தாளுக்கும் வேற வேலையே இல்லை..!" ஒற்றையாய் மிதக்க விட்டிருந்த புடவை முந்தானையை படக்கென தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றாள் திலோத்தமா..
இரவு நேரம்..! உண்டு முடித்து குடும்பத்தோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அறைக்கு வந்தான் வருண்..
தலையணையை வைத்து கட்டிலில் சாய்ந்த படி தேம்பாவணியை பற்றிய யோசனையிலிருக்க .. கதவை திறந்து உள்ளே வந்த திலோத்தமா.. "இன்னும் நீங்க தூங்கலையா" என்று கேட்ட கேள்வியில் அவன் பார்வை முறைப்பாய் மாறியது..
"சாதாரணமா கேட்கற கேள்விக்கு ஏன் இப்படி முறைக்கறீங்க.. டைனிங் டேபிள் கிளீன் பண்ணி சாப்பிட்ட தட்டையெல்லாம் கழுவி.. சமையலறையை ஏறக்கட்டற வரைக்கும் நான் அங்கதான் இருக்கணுமா..!"
"இதெல்லாம் நீ தான் செஞ்சியா..?"
"இல்ல.. வேலைக்காரங்க தான் செஞ்சாங்க ஆனா உங்க அம்மாவும் அக்காவும் அங்க நின்னு பேசிட்டு இருக்கற வரைக்கும் நானும் அங்கதான் இருக்கணுமாம் உங்க அம்மா சொல்றாங்க..!"
சலிப்போடு நீண்ட பெருமூச்செடுத்தான் வருண்..
கொஞ்ச நேரம் அங்க நின்னு பேசிட்டு வர்றதுல உனக்கு என்னதான் பிரச்சனை..!
"ஏற்கனவே தலை வலிக்குது.. குட்டி சா.." என ஆரம்பித்து பின் நிறுத்தியவள் "பிள்ளைங்க சத்தம் வேற காதை அடைக்குது.. இதுல இவங்க ரெண்டு பேரும் வண்டி சலங்கை உடையற மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசுறதை கேட்கும் போது என் தலையே வெடிச்சிடும் போலிருக்கு.." என உதடு குவித்து ஊதினாள்..
"உன்னை ஒன்னும் கேட்கல நீ தயவு செஞ்சு உள்ள போ.. என்னை இரிடேட் பண்ணாதே..!" வருண் கண்களை மூடிக்கொள்ள.. பற்களை கடித்தவள் வேகமாக சென்று கதவை அறைந்து சாத்தி கொண்டாள்..
இதுவரை நான்கு முறை தேம்பாவணிக்கு அழைத்து விட்டான்..
அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.. இதில் திலோத்தமா வேறு ரம்பம் அறுக்கும் சத்தம் போல் காதருகில் வந்து கத்தி விட்டுப் போனதில் மிகுந்த எரிச்சலில் இருந்தான்..!
கண்கள் மூடி படுத்திருக்க மீண்டும் அந்த உள்ளங்கை ஜில்லிப்போடு அவன் கன்னத்தில் படுவது போன்ற உணர்வு.
சட்டென கண்விழித்த நேரத்தில் அலைபேசி சத்தமெழுப்பியது..
எழுந்தமர்ந்து போனை எடுத்துப் பார்த்தான்..
தேம்பாவணி அழைத்திருக்கிறாள்..
"ஓ மை காட்.." சில நொடிகளுக்குள் பரீட்சைகளுக்குள் நுழைய வேண்டிய மாணவனை போல் பரபரத்து அழைப்பை ஏற்றான்..
"சொல்லு தேம்பாவணி..!"
எதிர்பக்கம் பதிலில்லை..
"லைன்ல இருக்காளா" என்று பார்க்கும்போதுதான் அது காணொளி அழைப்பு என்று தெரியவந்தது..
"அவசரத்தில் அதைக்கூட கவனிக்காம விட்டுட்டேனா!" நெற்றியை தேய்த்தபடி கீழே உதட்டை கடித்து லேசாக சிரித்துக்கொண்டான்..
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் தேம்பாவணி.. அலைபேசியை மேஜையில் நிற்க வைத்திருக்க வேண்டும்..
"தேம்ஸ் உன் கை எப்படி இருக்கு..! வலி பரவாயில்லையா? நான் தந்த மருந்தை போட்டுக்கிட்டியா.." அக்கறை பூசிய வர்த்தைகளுக்கு மதிப்பில்லாமல் போனது..
முறைத்தமேனிக்கு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துக்கொண்டாள்..
"ஒஹோ.. மேடம் பயந்து எனக்கு கால் பண்ணி இருக்கீங்க..! சரி.. தூங்குங்க.. குட் நைட்.." கன்னத்தில் கை வைத்து இழுத்து சொன்னவன் தொடுதிரையில் தெரிந்தவளை பார்த்துக் கொண்டிருக்க.. விழிகளை மூடியவள் ஐந்து நிமிடத்தில் சட்டென எழுந்து போன் திரையை பார்த்தாள்..
"நான் இங்கதான் இருக்கேன்.. உன்னை விட்டுட்டு எங்கேயும் போகல.. நிம்மதியா தூங்கு.." அமைதியான இரவில் அவன் மென்மையான குரல் தாலாட்டு போல் தோன்றியதோ என்னவோ..!
திரையில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருகி உறங்கிப் போயிருந்தாள் தேம்பாவணி..
"தேம்ஸ்..! ஆர் யூ ஆல்ரைட்.."
என்று கேட்டுவிட்டு "நோ.. நாட் ரியலி.." என பதிலையும் அவனே சொல்லிக் கொண்டான்..
மலர்ந்த தாமரையாய் கட்டில் மீது கிடந்த உள்ளங்கையில் அவன் பார்வை விழுந்தது.. ரத்தச் சிவப்பு மங்கி போகவில்லை..
"புவர் தேம்ஸ்..!"
திரையில் தெரிந்த அவள் கரத்தை தொட்டான்.. மறுபக்கம் சின்னதாய் சினுங்கி மீண்டும் உறங்க தொடங்கினாள் தேம்பாவணி..
தொடரும்..
Last edited: