- Joined
- Jan 10, 2023
- Messages
- 129
- Thread Author
- #1
"என்ன தர்மா..! விஷயம் கேள்விப்பட்டேன்.. அந்த பொண்ண உன் வீட்டுலதான் தங்க வச்சிருக்கியாம்.." கடுமையேறிய குரலில் கேட்டார் காயத்ரி..
தர்மன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. எப்படி இருந்தாலும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று அவனுக்கு தெரியும்..
"ஆமா மேடம்..! சுப்ரியா இப்ப என் வீட்டுல தான் இருக்காங்க..!" என்றான் சாதாரண குரலில்..
"அவங்க என்ன உனக்கு உறவா..?"
"இல்ல மேடம்.."
"தெரிஞ்ச பொண்ணா..!"
"தெரிஞ்சுகிட்ட பொண்ணு.."
"என்னது..?"
"மேடம் தப்பு எந்த பக்கம்னு எனக்கு தெரியல.. ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு நிராதரவா நின்னவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை செஞ்சேன் அவ்வளவுதான்..!"
"சாருக்கு பெரிய வள்ளல்னு நினைப்போ..! ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டு மேனேஜ்மென்ட்க்கு எதிரான காரியங்கள்ல ஈடுபட்டா உத்தியோகம் பறிபோகும்னு தெரியுமா தெரியாதா..!" காயத்ரியின் பேச்சில் நக்கலும் லேசான கோபமும்..
"மேனேஜ்மென்ட்க்கு எதிரா நான் எந்த காரியத்தையும் செய்யல..! தன்னந்தனியா நிக்கற ஒரு பொண்ணுக்கு ஆதரவு தந்திருக்கேன்.. இது எந்த விதத்தில் தப்புன்னு சொல்றீங்க சொல்லப்போனா இது என்னோட பர்சனல் விஷயம்..! இதுல தலையிட யாருக்கும் உரிமை இல்லைனு நினைக்கறேன்.."
"யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு போய் உன் வீட்டில் தங்க வச்சிருந்தா அது உன்னோட தனிப்பட்ட விஷயம்.. ஆனா ஹாஸ்பிடல் வந்து பிரச்சனை பண்ணிட்டு போன ஒருத்தியை வீட்ல கூட்டிட்டு போய் வச்சுட்டு இந்த ஹாஸ்பிடல் பெயரை கெடுக்கற மாதிரி தப்பான விஷயங்களை ஃபீட் பண்றியோன்னு மேனேஜ்மென்ட்க்கு உன் மேல சந்தேகம்..!"
"சந்தேகம் யாருக்கு வேணாலும் வரலாம்.. என்ன வேணாலும் தோணலாம்.. ஆனா உண்மைன்னு ஒன்னு இருக்குல்ல..! அந்த பொண்ணு ஏதாவது தப்பான முடிவெடுத்திருந்தா அப்பவும் நம்ம ஹாஸ்பிடல் தான் பாதிக்கப்பட்டுருக்கும்.. ஏன்னா அவ கைல ரிப்போர்ட் இருக்கு..! டீடைல்டா எல்லாத்தையும் எழுதி வச்சுட்டு ஏடாகூடமா ஏதாவது முடிவெடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க.. பிரஸ் மீடியான்னு ஹாஸ்பிடல் பேர் கொடிக்கட்டி பறக்காதா..?"
காயத்ரி நிமிர்ந்து அமர்ந்து அவனை கூர்மையாக பார்த்தார்..
"அவளுக்கு தெரியலைன்னாலும் நீயே ஐடியா கொடுப்ப போலிருக்கு.."
"மேடம் இந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பா யோசிக்காம ஒரு பொண்ணா யோசிச்சு பாருங்க.. நீங்க கொடுத்த ஒரு தப்பான ரிப்போர்ட்னால அவங்க தன்னோட வாழ்க்கையவே இழந்துட்டு நிக்கிறாங்க..! எத்தனையோ குடும்பங்களை வாழ வச்சு அவங்க சிரிப்புக்கு காரணமா இருந்த நீங்க முதல்முறையா ஒரு பொண்ணோட அழுகைக்கு காரணமா போயிட்டீங்க..
காயத்ரி விதிர்த்து போனார்..
"ஏய்.. என்ன மேன் என்னையவே குறை சொல்ற..! தப்பு என் மேல இல்ல.. ரிப்போர்ட் உண்மையா பொய்யான்னு எனக்கும் தெரியாது.. வழக்கமா லேப்லருந்து வர்ற ரிப்போர்ட்ல நான் கையெழுத்து போட்டேன் அவ்வளவுதான்..!"
"அப்ப அந்த ரிப்போர்ட் சரியா தவறான்னு கண்டுபிடிங்க மேடம்..! அந்த பொண்ணுக்கு நீதி வாங்கி தாங்க..! அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு இன்னொரு வாட்டி பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணினா தெரிஞ்சிடும் இல்லையா..!"
"அந்த அத்தாரிட்டி எனக்கு இல்ல தர்மன்.. மேற்கொண்டு என்ன செய்யணும்னு மேலிடம்தான் முடிவு பண்ணனும்..! நான் டீன் கிட்ட பேசுறேன்.."
"எனக்கு வேலாயுதம் சார் கிட்ட பேசணும்.."
"வாட்..! யு மீன் ஃபவுண்டர்..! தர்மா உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க..! நீ நெனச்ச நேரம் அவர போய் பார்க்க முடியாது அவர் நினைக்கணும்.. ஹாஸ்பிடல் மேனேஜிங் டைரக்டர்.. டீன்.. யாரா இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தான் அவர போய் பார்க்க முடியும்.. உன் இஷ்டத்துக்கு ரொம்ப சாதாரணமா வேலாயுதம் சாரை மீட் பண்ணனும்னு சொல்ற..!"
"சரி அவர் நினைக்கட்டும்.. நீங்க நினைக்க வைங்க..! இந்த ஹாஸ்பிடல் வளர்ச்சியில் அவருக்கு பங்கு இருக்குன்னா பிரச்சனை வரும்போதும் அவர் தலையிட்டுதானே ஆகணும்..! எனக்கு வேலாயுதம் சாரை இன்னைக்கே பாக்கணும்..!"
"புரியாம பேசாதே..! விஷயம் அவர் வரைக்கும் கொண்டு போகாம எப்படி சரி கட்டலாம்னு மேனேஜ்மென்ட் யோசிக்கறாங்க..!"
"அதுதான் எனக்கு கவலையா இருக்கு.. நியாயத்தை குழி தோண்டி புதைச்சுட்டு பழியை துக்கி என் மேல போட்டு வேலையை விட்டு தூக்கிடுவீங்களோனு பயமா இருக்கு..! வேலை போனா எனக்கொன்னும் கவலை இல்லை.. ஆனா அதுக்கொரு நியாயமான காரணம் இருக்கணும்னு நினைக்கறேன்.."
"டீன் கிட்ட பேசி சாரை மீட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க மேடம்.. எனக்கு தெரியும் ஹாஸ்பிடலுக்காக உழைச்சாலும் நீங்களும் நேர்மையானவங்க.." அவன் சொல்லிவிட்டு வெளியே சென்று விட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் காயத்ரி..
நிர்வாகம் சார்பாக அவனை விசாரித்து எச்சரிக்க வேண்டியிருந்த போதிலும் ஒரு பெண்ணாக.. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மதிப்பளித்து அவளுக்கு ஆதரவு தந்த தர்மனின் மீது மருத்துவர் காயத்ரிக்கு மதிப்பு பெருகியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்..!
இந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அந்த பரிசோதனை முடிவில் ஏதோ பிழை இருக்கிறது.. ஃபால்ஸ் ரிப்போர்ட் என்று அவருக்கும் தெரியும்.. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாதே..! மேலிடத்திலிருந்து ஏகப்பட்ட பிரஷர்.. மருத்துவமனைக்கு சொந்தக்காரரான வேலாயுதம் நேர்மையானவர்..! குறைந்த செலவில் ஏழைகளும் பயன் பெற வேண்டும்.. நல்ல மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறார்..
அப்படிப்பட்டவர் நிச்சயம் இதுபோன்ற அலட்சிய பிழைகளை அனுமதிக்கவே மாட்டார் என்பதால் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இந்த விஷயத்தை அவர் காதுவரை கொண்டு போக அச்சம் கொண்டிருந்தனர்.. முடிந்தவரை தங்களுக்குள்ளேயே பேசி இந்த தவறை மறைத்து விட முடிவெடுத்திருந்தனர்..
மீண்டும் சுப்ரியாவிற்கு பிளட் டெஸ்ட் எடுத்து சோதனை முடிவு தவறு என்று தெரிந்தால் நிச்சயம் பிரச்சனை வெடிக்கும்..! அதை சரி கட்டி சுப்ரியாவின் வாயடைத்து எப்படி தங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்று மேலிடம் யோசித்துக் கொண்டிருக்க தர்மனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முதலாளியை பார்த்து பேச வேண்டும் என்று சொன்னதில் மேலிடம் ஸ்தம்பித்து போயிருந்தது..
தர்மன் வேலாயுதம் சந்திப்புக்காக மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..!
ஆனால் அவனை அன்று மாலை மருத்துவமனையின் ஓனர் வேலாயுதத்தை பார்ப்பதற்காக அவர் வீடு வரை சென்றிருந்தான் தர்மன்..
படா டோபமான பெரிய பங்களா என்று சொல்லிவிட முடியாது.. பெரிய வசதியான வீடு.. அந்த கால கட்டிட வடிவமைப்பு.. சுற்றிலும் மரம் செடி கொடி.. ஈரத்தில் நனைந்து போயிருந்த இலைகளின் பச்சை நெடியும்.. பல வித பழங்களின் வாசனையும்.. மலர்களின் சுகந்த நறுமணமும் வாசல் கேட்டில் நிற்கும் போதே நாசியை தழுவி வந்தவர்களை வரவேற்கும்.. மொத்தத்தில் இயற்கை சூழலுக்கு ஏற்றார் போல் கட்டியமைக்கப்பட்ட பசுமை வனம் அது..
"என்ன தர்மா..! சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நின்னா எப்படி.. ஐயா திட்டுவாங்களே.. நீ ஒன்னு பண்ணு.. ஃபோன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டு நாளைக்கு வா..!" செக்யூரிட்டி தர்மனை வாசலோடு நிற்க வைத்தார்..
பலமுறை இந்த வீட்டுக்கு வந்து போயிருக்கிறான்.. முக்கியமான கோப்புகளை கையெழுத்து வாங்க நம்பிக்கைக்குரிய டாக்குமென்ட்களை கொண்டு வந்து கொடுக்க.. என மருத்துவ நிர்வாகம் நம்பிக்கைக்குரியவனாக தேர்ந்தெடுத்து இந்த வீட்டிற்கு அனுப்பும் ஒரே ஆள் தர்மன்தான்.. அதனால் செக்யூரிட்டி அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் என அனைவரோடும் தர்மனுக்கு நல்ல பழக்கம் உண்டு..
ஆனாலும் அந்த வீட்டுக்கென்று சில சட்ட திட்டங்கள் உண்டு.. முதலாளி வரச் சொன்னால் மட்டுமே காத்திருப்பவர்களை உள்ளே அனுப்ப முடியும்..!
"அண்ணா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..! நீங்க வேணும்னா ஐயா கிட்ட போய் தர்மன் வந்திருக்கான்னு சொல்லுங்களேன்.."
"ஐயோ அப்படியெல்லாம் போய் சொல்ல முடியாதுப்பா..! ஹாஸ்பிடல்ல இருந்து அனுப்பி இருக்காங்க.. இல்ல ஐயா வர சொன்னாருன்னு சொல்லு.. நான் உள்ள விடறேன்.. நீயா பேச வந்திருக்கேனா முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் வரணும்.. உனக்கு தான் ரூல்ஸ் எல்லாம் தெரியுமே.. நீ பாட்டுக்கு ஏதாவது செஞ்சு என் வேலைக்கு உலை வச்சுட்டு போயிடாத சாமி..' தன்மையாகத்தான் சொன்னார் அவர்..!
அதற்கு மேல் அங்கு நின்று வாதிட விரும்பவில்லை அவன்.. ஏமாற்றத்துடன் திரும்பி நடக்கும் வேளையில்..
"துரைசாமி..!" வீட்டின் மேல் ஜன்னல் பக்கமாய் ஒரு குரல்.. தர்மனும் திரும்பி நின்று எட்டிப் பார்த்தான்.. வேலாயுதம் ஜன்னல் பக்கமாக நின்று அழைத்துக் கொண்டிருந்தார்..
ஐயா..! என்று பதறி கொண்டு ஓடி வந்தார் அந்த செக்யூரிட்டி..
"யார் வந்திருக்கா.. தர்மனா..?"
"ஆமாங்கய்யா.. உங்கள பாக்கணுமாம்.."
"என்ன விஷயமா..?"
"தெரியலைங்களே..!"
"சரி உள்ள அனுப்பு..!" அவர் உருவம் மறைந்தது..
"ஓடி வந்து கேட்டை திறந்தார் செக்யூரிட்டி.. ஏதோ உன் நல்ல நேரம் ஐயா உன்னை பார்த்துட்டாங்க..! சீக்கிரமா போ..!"
தர்மனை உள்ளே அனுமதித்ததற்கு அவனை விட அந்த செக்யூரிட்டி சந்தோஷமாக தெரிந்தார்..
மேற்புற ஜன்னலை பார்த்தபடியே வீட்டு படியேறி உள்ளே சென்றான் தர்மன்..
பணக்காரன் என்ற ஆர்ப்பாட்டம் இல்லை.. ஆங்காங்கே வேலையாட்களின் கூட்டம் இல்லை.. ஒன்றிரண்டு பேர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க வெளியே ஒரு தோட்டக்காரர் வாயிலில் ஒரு காவல்காரன்.. மொத்தமாகவே ஒரு ஐந்து பணியாளர்கள் மட்டும்தான் அவ்வீட்டில் இருக்கக்கூடும்..
"ஐயா மேலே இருக்கார் தர்மா..!" மாப் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் சொன்னதும் தாவி படிகளில் ஏறினான் அவன்.. "பாத்து போ.. தர்மா.. தரை.. ஈரமா இருக்கு.." என்றபடி படிகளை துடைத்துக்கொண்டே கீழே இறங்கினார் அவர்..
மாடிக்கு வந்தவனுக்கு எந்த அறையில் வேலாயுதம் இருப்பார் என்று தெரிந்திருந்தது..
"ஐயா..!" கதவை தட்டினான்..
"உள்ள வா தர்மா..!" கணீர் குரலொன்று அவனை கட்டளையிட்டு உள்ளே அழைத்தது..
கதவை திறந்து கொண்டு உள்ளே போக.. "வா..தர்மா.." என்றவர் நிச்சயம் அறுபத்தைந்து வயதை கடந்திருக்கக்கூடும்..! தலைமுடி வெளுத்து கன்னங்களும் கண்களின் பக்கவாட்டு சதையும் சுருங்கி தோற்றம் முதுமையை காட்டிய போதும் அந்த முகத்தில் ஒரு கம்பீரம் தெரிந்தது.. அந்த வயதுக்கான தளர்வுடன் வேட்டி சட்டையில் இருந்தார்.. தொப்பை இல்லை.. எலும்பு கூடான ஒடிசலான தேகமும் இல்லை.. ஏற்ற இறக்கங்கள் இல்லாத நேர்கோடான உடம்பு..
கட்டிலை தாண்டி ஒரு சாய்வு இருக்கையில் அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி.. அவர் மனைவி வேதா..
அறுபதை தொட்டுக் கொண்டிருப்பவர்.. வாய் லேசாக கோணியிருக்க.. ஒரு கரத்தை நெஞ்சுக்கு நேராக வளைத்திருந்தார்..
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட ஓடியாடி நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென படுக்கையில் விழுந்துவிட்டார்..
மற்றவர்களுக்கு நல்ல மருத்துவம் தர வேண்டுமென்று ஆசைப்பட்டவரின் மனைவியின் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் பலனில்லாமல் போனது.. கடுமையான பக்கவாதம் அவரை பீடித்துக்கொள்ள இப்போது மனைவிக்கான அனைத்து பணிவிடைகளும் இந்த கணவனின் கடமையானது..
"ஐயா நான் ஏதாவது உதவி செய்யட்டுமா..!"
படுக்கையை சுத்தம் செய்துவிட்டு புது படுக்கை விரிப்பை விரித்து சமன்படுத்திய வேலாயுதம் நிமிர்ந்தார்..
"முடிஞ்சிடுச்சுப்பா.. கொஞ்சம் வேதாவை தூக்கி இங்க படுக்க வைக்கறியா..! வயசாகிடுச்சு.. முடியல.." என சன்னமாய் சிரித்தார்..
அடுத்த கணம் வேதாம்மாவை அலுங்காமல் தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான் தர்மன்..
அவன் தோளை தொட்டு.. உளறலாக என்னவோ கேட்டார் வேதா..
"நல்லா இருக்கேன் மா..!" தன் நெஞ்சில் கை வைத்து பணிவாக சிரித்தபடி பதில் சொன்னார் தர்மன்..
அவரும் தலையசைத்துக் கொண்டார்..
"மாத்திரை போட்டுருக்கா.. அவ கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. நீ இப்படி வா..!" தர்மனை அழைத்துக் கொண்டு சற்று தொலைவிலிருந்த சோபாவில் அமர்ந்தார்..
"உட்காரு தர்மா.."
"இருக்கட்டும் ஐயா.." அவன் கைகட்டி நின்றான்..
"அட உட்காருப்பா..!" அவர் அதட்டலில் வேறு வழியில்லாமல் இருக்கையில் அமர்ந்து இருக்கைகளை கோர்த்தபடி நிலம் பார்த்துக் கொண்டிருந்தான்..
சீருடையுடன் அமர்ந்திருந்தவனை உற்றுப் பார்த்தார் வேலாயுதம்.. தலையில் தொப்பி இல்லை..
"என்ன தர்மா.. ஏதாவது நல்ல விஷயமா.. கல்யாணம் பேசி முடிச்சாச்சா.. பத்திரிகை குடுக்கறதுக்காக வந்திருக்கியா..?"
கண்கள் இடுங்க அவர் குறும்போடு கேட்டதும்.. அந்த கேலி பேச்சை அவனால் ரசிக்க முடியவில்லை..
"இல்லைங்க ஐயா வேற ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்காக வந்தேன்.."
"முக்கியமான விஷயமா..!" தீவிர பாவனையுடன் கண்கள் சுருக்கி கேள்வியாக அவனைப் பார்த்தார்..
நடந்ததை சொல்லி முடித்திருந்தான் தர்மன்..
நீண்ட மூச்சுவிட்டு தாடையை தேய்த்தபடி யோசித்திருந்தார் வேலாயுதம்..
"கண்டிப்பா நீ பொய் சொல்ல மாட்டே தர்மா.. எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு.. தப்பு நம்ம பக்கந்தான் இருக்குதுன்னா அது நிச்சயமா தண்டிக்கப்பட வேண்டிய ஒன்னுதான்..! இந்த அலட்சியமும் கவனக்குறைவும் இனி தொடராம பாத்துக்கணும்.. நான் ஒன்னு பண்றேன்.. டீன் கிட்ட பேசி அந்த பொண்ணுக்கு மறுபடி ரத்த பரிசோதனை பண்ண சொல்லலாம்.. ஒருவேளை முன்னெடுத்த ரிப்போர்ட் தப்பா இருக்கும் பட்சத்துல மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிப்போம்..!"
"ரொம்ப நன்றிங்க ஐயா..!* நிம்மதியுடன் கை கூப்பினான் தர்மன்..
"இதுல நன்றி சொல்ல என்ன இருக்கு தர்மா..! நம்ம ஹாஸ்பிடலால பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு நியாயம் செய்ய வேண்டியது நம்மளோட கடமை.. மக்களுக்கு நம்ம மேல உள்ள நம்பிக்கை போயிடுச்சுன்னா இவ்வளவு நாள் நாம செஞ்ச சேவைக்கும் காப்பாத்தி வச்சிருக்கற நல்ல பேருக்கும் அர்த்தமில்லாம போயிடும்..! எப்பவும் நேர்மையை கடைப்பிடிக்கிறவன் நான்.. என் ஹாஸ்பிடல்ல இருக்கிறவங்களும் அதே சின்சியாரிட்டியை ஃபாலோ பண்ணனும்னு நினைப்பேன்.. இந்த விஷயத்தை என் வரைக்கும் அவங்க கொண்டு வராம மறைச்சதே பெரிய தப்பு.. அவங்கள நான் பார்த்துக்கிறேன்.. நீ இப்ப கிளம்பு.."
"வரேன் ஐயா..!" மரியாதையாக விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..
"என்ன வேதா.. இன்னும் தூங்கல..!" மனைவியின் அருகே வந்தார் வேலாயுதம்..
தர்மன் சென்ற திசையை காட்டி வாய் துடிக்க ஏதோ பேச முற்பட்டார் வேதா..
"எனக்கு புரியுது வேதா தர்மனுக்கு உதவி செய்யனும்னு சொல்ற.. அப்படித்தானே..! தர்மனை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கும் தெரியும்.. கண்டிப்பா அவனுக்கு வேண்டிய அந்த பொண்ணுக்கு நியாயமானதை நான் செய்வேன்.. கவலைப்படாதே..!" மனைவியின் தலை வருடி தந்தார் வேலாயுதம்..
சில நேரங்களில் வேதாம்மாவின் உடல்நிலை மோசமாகி.. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசரத் தருணங்களில்.. தர்மன் தான் வீட்டுக்கு வருவான்..
வேதாவை தூக்கி வாகனத்தில் படுக்க வைப்பதிலிருந்து மருத்துவமனை சிகிச்சை பிரிவு வரை அழைத்துச் செல்லும் அனைத்து பொறுப்புகளும் அவனுடையது..!
எதற்கெடுத்தாலும் தர்மனை வர சொல்லுங்க என்று வாய்குளறி அவர் சொல்லும் அந்த ஒரு வார்த்தை மட்டும் அங்கிருக்கும் அனைவருக்குமே புரியும் ..
முதலாளியின் மனைவிக்கு ராஜ வைத்தியம் பார்க்கவும் பணிவிடைகளை செய்யவும் அந்த மருத்துவமனையில் டாக்டர் நர்ஸ் என பல பேர் இருந்தாலும்.. வேதாம்மாவை மருத்துவமனை அழைத்து வந்ததிலிருந்து வீட்டில் கொண்டு போய் விட்டு கட்டிலில் படுக்க வைத்து உடம்ப பாத்துக்கோங்கம்மா..! நான் கிளம்பறேன் என்று கையை பிடித்து விடைபெற்றுக் கொண்டு வரும் வரையில் கூடவே நிற்கும் தர்மனின் முகம் மட்டும் தான் அத்தனை பேரையும் தாண்டி அவர் மனதில் ஆழமாய் பதிந்து போயிருக்கும்..
மற்றவர்களை பொறுத்தவரை வேலாயுதம் ஐயாவிற்கு பத்தோடு பதினொன்றாய் அவனும் ஒரு ஊழியன்..!
ஆனால் தம்பதிகள் இருவரின் மனதில் தர்மன் ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறான் என்ற விஷயம் அவனுக்கும் கூட தெரியாது..!
மறுநாள் காயத்ரி தர்மனை அழைத்து பேசினார்..
"தர்மா அந்த பொண்ண கூட்டிட்டு வா..! மறுபடி பிளட் டெஸ்ட் எடுத்து செக் பண்ணி என்னன்னு பாப்போம்.. சார் பெரிய ஆள்தான் வேலாயுதம் சாரை போய் பார்த்து நினைச்சதை சாதிச்சிட்டீங்க போலிருக்கே..!" அவர் பேச்சிலிருந்தது நக்கலா கடுப்பா தெரியவில்லை..
"சாரி மேடம்.. யாரையும் மாட்டிவிடனும்னு நான் நினைக்கல.. அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணுங்கற ஒரே நோக்கத்துல மட்டும்தான் அவரை போய் பார்த்தேன்.."
"புரியுது தர்மா..! ஆனா ரிப்போர்ட் முடிவு சுப்ரியாவுக்கு சாதகமா இருக்கும் பட்சத்துல வேலாயுதம் சார் அடுத்து என்ன மாதிரி யோசிப்பாங்கன்னு தெரியல..! பாப்போம்.." கடைசி வார்த்தைகளில் இருளடித்து போயிருந்தார் காயத்ரி..
ஆஸ்பத்திரி நிர்வாகம் தவறிழைத்து விட்டது என நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட கூடியவர்களில் நிச்சயம் காயத்ரியும் ஒருவராக இருப்பார்..
மறுநாள் சுப்ரியாவை மருத்துவமனை அழைத்து வந்தான் தர்மன்..
பரிசோதனைக்காக சுப்ரியாவின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது..
இரண்டு நாட்களில் முடிவு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தான் தர்மன்..
தொடரும்..
தர்மன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. எப்படி இருந்தாலும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று அவனுக்கு தெரியும்..
"ஆமா மேடம்..! சுப்ரியா இப்ப என் வீட்டுல தான் இருக்காங்க..!" என்றான் சாதாரண குரலில்..
"அவங்க என்ன உனக்கு உறவா..?"
"இல்ல மேடம்.."
"தெரிஞ்ச பொண்ணா..!"
"தெரிஞ்சுகிட்ட பொண்ணு.."
"என்னது..?"
"மேடம் தப்பு எந்த பக்கம்னு எனக்கு தெரியல.. ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு நிராதரவா நின்னவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை செஞ்சேன் அவ்வளவுதான்..!"
"சாருக்கு பெரிய வள்ளல்னு நினைப்போ..! ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டு மேனேஜ்மென்ட்க்கு எதிரான காரியங்கள்ல ஈடுபட்டா உத்தியோகம் பறிபோகும்னு தெரியுமா தெரியாதா..!" காயத்ரியின் பேச்சில் நக்கலும் லேசான கோபமும்..
"மேனேஜ்மென்ட்க்கு எதிரா நான் எந்த காரியத்தையும் செய்யல..! தன்னந்தனியா நிக்கற ஒரு பொண்ணுக்கு ஆதரவு தந்திருக்கேன்.. இது எந்த விதத்தில் தப்புன்னு சொல்றீங்க சொல்லப்போனா இது என்னோட பர்சனல் விஷயம்..! இதுல தலையிட யாருக்கும் உரிமை இல்லைனு நினைக்கறேன்.."
"யாரோ ஒரு பொண்ண கூட்டிட்டு போய் உன் வீட்டில் தங்க வச்சிருந்தா அது உன்னோட தனிப்பட்ட விஷயம்.. ஆனா ஹாஸ்பிடல் வந்து பிரச்சனை பண்ணிட்டு போன ஒருத்தியை வீட்ல கூட்டிட்டு போய் வச்சுட்டு இந்த ஹாஸ்பிடல் பெயரை கெடுக்கற மாதிரி தப்பான விஷயங்களை ஃபீட் பண்றியோன்னு மேனேஜ்மென்ட்க்கு உன் மேல சந்தேகம்..!"
"சந்தேகம் யாருக்கு வேணாலும் வரலாம்.. என்ன வேணாலும் தோணலாம்.. ஆனா உண்மைன்னு ஒன்னு இருக்குல்ல..! அந்த பொண்ணு ஏதாவது தப்பான முடிவெடுத்திருந்தா அப்பவும் நம்ம ஹாஸ்பிடல் தான் பாதிக்கப்பட்டுருக்கும்.. ஏன்னா அவ கைல ரிப்போர்ட் இருக்கு..! டீடைல்டா எல்லாத்தையும் எழுதி வச்சுட்டு ஏடாகூடமா ஏதாவது முடிவெடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க.. பிரஸ் மீடியான்னு ஹாஸ்பிடல் பேர் கொடிக்கட்டி பறக்காதா..?"
காயத்ரி நிமிர்ந்து அமர்ந்து அவனை கூர்மையாக பார்த்தார்..
"அவளுக்கு தெரியலைன்னாலும் நீயே ஐடியா கொடுப்ப போலிருக்கு.."
"மேடம் இந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பா யோசிக்காம ஒரு பொண்ணா யோசிச்சு பாருங்க.. நீங்க கொடுத்த ஒரு தப்பான ரிப்போர்ட்னால அவங்க தன்னோட வாழ்க்கையவே இழந்துட்டு நிக்கிறாங்க..! எத்தனையோ குடும்பங்களை வாழ வச்சு அவங்க சிரிப்புக்கு காரணமா இருந்த நீங்க முதல்முறையா ஒரு பொண்ணோட அழுகைக்கு காரணமா போயிட்டீங்க..
காயத்ரி விதிர்த்து போனார்..
"ஏய்.. என்ன மேன் என்னையவே குறை சொல்ற..! தப்பு என் மேல இல்ல.. ரிப்போர்ட் உண்மையா பொய்யான்னு எனக்கும் தெரியாது.. வழக்கமா லேப்லருந்து வர்ற ரிப்போர்ட்ல நான் கையெழுத்து போட்டேன் அவ்வளவுதான்..!"
"அப்ப அந்த ரிப்போர்ட் சரியா தவறான்னு கண்டுபிடிங்க மேடம்..! அந்த பொண்ணுக்கு நீதி வாங்கி தாங்க..! அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு இன்னொரு வாட்டி பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணினா தெரிஞ்சிடும் இல்லையா..!"
"அந்த அத்தாரிட்டி எனக்கு இல்ல தர்மன்.. மேற்கொண்டு என்ன செய்யணும்னு மேலிடம்தான் முடிவு பண்ணனும்..! நான் டீன் கிட்ட பேசுறேன்.."
"எனக்கு வேலாயுதம் சார் கிட்ட பேசணும்.."
"வாட்..! யு மீன் ஃபவுண்டர்..! தர்மா உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க..! நீ நெனச்ச நேரம் அவர போய் பார்க்க முடியாது அவர் நினைக்கணும்.. ஹாஸ்பிடல் மேனேஜிங் டைரக்டர்.. டீன்.. யாரா இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தான் அவர போய் பார்க்க முடியும்.. உன் இஷ்டத்துக்கு ரொம்ப சாதாரணமா வேலாயுதம் சாரை மீட் பண்ணனும்னு சொல்ற..!"
"சரி அவர் நினைக்கட்டும்.. நீங்க நினைக்க வைங்க..! இந்த ஹாஸ்பிடல் வளர்ச்சியில் அவருக்கு பங்கு இருக்குன்னா பிரச்சனை வரும்போதும் அவர் தலையிட்டுதானே ஆகணும்..! எனக்கு வேலாயுதம் சாரை இன்னைக்கே பாக்கணும்..!"
"புரியாம பேசாதே..! விஷயம் அவர் வரைக்கும் கொண்டு போகாம எப்படி சரி கட்டலாம்னு மேனேஜ்மென்ட் யோசிக்கறாங்க..!"
"அதுதான் எனக்கு கவலையா இருக்கு.. நியாயத்தை குழி தோண்டி புதைச்சுட்டு பழியை துக்கி என் மேல போட்டு வேலையை விட்டு தூக்கிடுவீங்களோனு பயமா இருக்கு..! வேலை போனா எனக்கொன்னும் கவலை இல்லை.. ஆனா அதுக்கொரு நியாயமான காரணம் இருக்கணும்னு நினைக்கறேன்.."
"டீன் கிட்ட பேசி சாரை மீட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க மேடம்.. எனக்கு தெரியும் ஹாஸ்பிடலுக்காக உழைச்சாலும் நீங்களும் நேர்மையானவங்க.." அவன் சொல்லிவிட்டு வெளியே சென்று விட தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் காயத்ரி..
நிர்வாகம் சார்பாக அவனை விசாரித்து எச்சரிக்க வேண்டியிருந்த போதிலும் ஒரு பெண்ணாக.. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மதிப்பளித்து அவளுக்கு ஆதரவு தந்த தர்மனின் மீது மருத்துவர் காயத்ரிக்கு மதிப்பு பெருகியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்..!
இந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அந்த பரிசோதனை முடிவில் ஏதோ பிழை இருக்கிறது.. ஃபால்ஸ் ரிப்போர்ட் என்று அவருக்கும் தெரியும்.. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாதே..! மேலிடத்திலிருந்து ஏகப்பட்ட பிரஷர்.. மருத்துவமனைக்கு சொந்தக்காரரான வேலாயுதம் நேர்மையானவர்..! குறைந்த செலவில் ஏழைகளும் பயன் பெற வேண்டும்.. நல்ல மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறார்..
அப்படிப்பட்டவர் நிச்சயம் இதுபோன்ற அலட்சிய பிழைகளை அனுமதிக்கவே மாட்டார் என்பதால் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இந்த விஷயத்தை அவர் காதுவரை கொண்டு போக அச்சம் கொண்டிருந்தனர்.. முடிந்தவரை தங்களுக்குள்ளேயே பேசி இந்த தவறை மறைத்து விட முடிவெடுத்திருந்தனர்..
மீண்டும் சுப்ரியாவிற்கு பிளட் டெஸ்ட் எடுத்து சோதனை முடிவு தவறு என்று தெரிந்தால் நிச்சயம் பிரச்சனை வெடிக்கும்..! அதை சரி கட்டி சுப்ரியாவின் வாயடைத்து எப்படி தங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்று மேலிடம் யோசித்துக் கொண்டிருக்க தர்மனோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முதலாளியை பார்த்து பேச வேண்டும் என்று சொன்னதில் மேலிடம் ஸ்தம்பித்து போயிருந்தது..
தர்மன் வேலாயுதம் சந்திப்புக்காக மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..!
ஆனால் அவனை அன்று மாலை மருத்துவமனையின் ஓனர் வேலாயுதத்தை பார்ப்பதற்காக அவர் வீடு வரை சென்றிருந்தான் தர்மன்..
படா டோபமான பெரிய பங்களா என்று சொல்லிவிட முடியாது.. பெரிய வசதியான வீடு.. அந்த கால கட்டிட வடிவமைப்பு.. சுற்றிலும் மரம் செடி கொடி.. ஈரத்தில் நனைந்து போயிருந்த இலைகளின் பச்சை நெடியும்.. பல வித பழங்களின் வாசனையும்.. மலர்களின் சுகந்த நறுமணமும் வாசல் கேட்டில் நிற்கும் போதே நாசியை தழுவி வந்தவர்களை வரவேற்கும்.. மொத்தத்தில் இயற்கை சூழலுக்கு ஏற்றார் போல் கட்டியமைக்கப்பட்ட பசுமை வனம் அது..
"என்ன தர்மா..! சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நின்னா எப்படி.. ஐயா திட்டுவாங்களே.. நீ ஒன்னு பண்ணு.. ஃபோன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டு நாளைக்கு வா..!" செக்யூரிட்டி தர்மனை வாசலோடு நிற்க வைத்தார்..
பலமுறை இந்த வீட்டுக்கு வந்து போயிருக்கிறான்.. முக்கியமான கோப்புகளை கையெழுத்து வாங்க நம்பிக்கைக்குரிய டாக்குமென்ட்களை கொண்டு வந்து கொடுக்க.. என மருத்துவ நிர்வாகம் நம்பிக்கைக்குரியவனாக தேர்ந்தெடுத்து இந்த வீட்டிற்கு அனுப்பும் ஒரே ஆள் தர்மன்தான்.. அதனால் செக்யூரிட்டி அங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் என அனைவரோடும் தர்மனுக்கு நல்ல பழக்கம் உண்டு..
ஆனாலும் அந்த வீட்டுக்கென்று சில சட்ட திட்டங்கள் உண்டு.. முதலாளி வரச் சொன்னால் மட்டுமே காத்திருப்பவர்களை உள்ளே அனுப்ப முடியும்..!
"அண்ணா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..! நீங்க வேணும்னா ஐயா கிட்ட போய் தர்மன் வந்திருக்கான்னு சொல்லுங்களேன்.."
"ஐயோ அப்படியெல்லாம் போய் சொல்ல முடியாதுப்பா..! ஹாஸ்பிடல்ல இருந்து அனுப்பி இருக்காங்க.. இல்ல ஐயா வர சொன்னாருன்னு சொல்லு.. நான் உள்ள விடறேன்.. நீயா பேச வந்திருக்கேனா முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் வரணும்.. உனக்கு தான் ரூல்ஸ் எல்லாம் தெரியுமே.. நீ பாட்டுக்கு ஏதாவது செஞ்சு என் வேலைக்கு உலை வச்சுட்டு போயிடாத சாமி..' தன்மையாகத்தான் சொன்னார் அவர்..!
அதற்கு மேல் அங்கு நின்று வாதிட விரும்பவில்லை அவன்.. ஏமாற்றத்துடன் திரும்பி நடக்கும் வேளையில்..
"துரைசாமி..!" வீட்டின் மேல் ஜன்னல் பக்கமாய் ஒரு குரல்.. தர்மனும் திரும்பி நின்று எட்டிப் பார்த்தான்.. வேலாயுதம் ஜன்னல் பக்கமாக நின்று அழைத்துக் கொண்டிருந்தார்..
ஐயா..! என்று பதறி கொண்டு ஓடி வந்தார் அந்த செக்யூரிட்டி..
"யார் வந்திருக்கா.. தர்மனா..?"
"ஆமாங்கய்யா.. உங்கள பாக்கணுமாம்.."
"என்ன விஷயமா..?"
"தெரியலைங்களே..!"
"சரி உள்ள அனுப்பு..!" அவர் உருவம் மறைந்தது..
"ஓடி வந்து கேட்டை திறந்தார் செக்யூரிட்டி.. ஏதோ உன் நல்ல நேரம் ஐயா உன்னை பார்த்துட்டாங்க..! சீக்கிரமா போ..!"
தர்மனை உள்ளே அனுமதித்ததற்கு அவனை விட அந்த செக்யூரிட்டி சந்தோஷமாக தெரிந்தார்..
மேற்புற ஜன்னலை பார்த்தபடியே வீட்டு படியேறி உள்ளே சென்றான் தர்மன்..
பணக்காரன் என்ற ஆர்ப்பாட்டம் இல்லை.. ஆங்காங்கே வேலையாட்களின் கூட்டம் இல்லை.. ஒன்றிரண்டு பேர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க வெளியே ஒரு தோட்டக்காரர் வாயிலில் ஒரு காவல்காரன்.. மொத்தமாகவே ஒரு ஐந்து பணியாளர்கள் மட்டும்தான் அவ்வீட்டில் இருக்கக்கூடும்..
"ஐயா மேலே இருக்கார் தர்மா..!" மாப் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் சொன்னதும் தாவி படிகளில் ஏறினான் அவன்.. "பாத்து போ.. தர்மா.. தரை.. ஈரமா இருக்கு.." என்றபடி படிகளை துடைத்துக்கொண்டே கீழே இறங்கினார் அவர்..
மாடிக்கு வந்தவனுக்கு எந்த அறையில் வேலாயுதம் இருப்பார் என்று தெரிந்திருந்தது..
"ஐயா..!" கதவை தட்டினான்..
"உள்ள வா தர்மா..!" கணீர் குரலொன்று அவனை கட்டளையிட்டு உள்ளே அழைத்தது..
கதவை திறந்து கொண்டு உள்ளே போக.. "வா..தர்மா.." என்றவர் நிச்சயம் அறுபத்தைந்து வயதை கடந்திருக்கக்கூடும்..! தலைமுடி வெளுத்து கன்னங்களும் கண்களின் பக்கவாட்டு சதையும் சுருங்கி தோற்றம் முதுமையை காட்டிய போதும் அந்த முகத்தில் ஒரு கம்பீரம் தெரிந்தது.. அந்த வயதுக்கான தளர்வுடன் வேட்டி சட்டையில் இருந்தார்.. தொப்பை இல்லை.. எலும்பு கூடான ஒடிசலான தேகமும் இல்லை.. ஏற்ற இறக்கங்கள் இல்லாத நேர்கோடான உடம்பு..
கட்டிலை தாண்டி ஒரு சாய்வு இருக்கையில் அமர்ந்திருந்தார் ஒரு பெண்மணி.. அவர் மனைவி வேதா..
அறுபதை தொட்டுக் கொண்டிருப்பவர்.. வாய் லேசாக கோணியிருக்க.. ஒரு கரத்தை நெஞ்சுக்கு நேராக வளைத்திருந்தார்..
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட ஓடியாடி நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென படுக்கையில் விழுந்துவிட்டார்..
மற்றவர்களுக்கு நல்ல மருத்துவம் தர வேண்டுமென்று ஆசைப்பட்டவரின் மனைவியின் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் பலனில்லாமல் போனது.. கடுமையான பக்கவாதம் அவரை பீடித்துக்கொள்ள இப்போது மனைவிக்கான அனைத்து பணிவிடைகளும் இந்த கணவனின் கடமையானது..
"ஐயா நான் ஏதாவது உதவி செய்யட்டுமா..!"
படுக்கையை சுத்தம் செய்துவிட்டு புது படுக்கை விரிப்பை விரித்து சமன்படுத்திய வேலாயுதம் நிமிர்ந்தார்..
"முடிஞ்சிடுச்சுப்பா.. கொஞ்சம் வேதாவை தூக்கி இங்க படுக்க வைக்கறியா..! வயசாகிடுச்சு.. முடியல.." என சன்னமாய் சிரித்தார்..
அடுத்த கணம் வேதாம்மாவை அலுங்காமல் தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான் தர்மன்..
அவன் தோளை தொட்டு.. உளறலாக என்னவோ கேட்டார் வேதா..
"நல்லா இருக்கேன் மா..!" தன் நெஞ்சில் கை வைத்து பணிவாக சிரித்தபடி பதில் சொன்னார் தர்மன்..
அவரும் தலையசைத்துக் கொண்டார்..
"மாத்திரை போட்டுருக்கா.. அவ கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. நீ இப்படி வா..!" தர்மனை அழைத்துக் கொண்டு சற்று தொலைவிலிருந்த சோபாவில் அமர்ந்தார்..
"உட்காரு தர்மா.."
"இருக்கட்டும் ஐயா.." அவன் கைகட்டி நின்றான்..
"அட உட்காருப்பா..!" அவர் அதட்டலில் வேறு வழியில்லாமல் இருக்கையில் அமர்ந்து இருக்கைகளை கோர்த்தபடி நிலம் பார்த்துக் கொண்டிருந்தான்..
சீருடையுடன் அமர்ந்திருந்தவனை உற்றுப் பார்த்தார் வேலாயுதம்.. தலையில் தொப்பி இல்லை..
"என்ன தர்மா.. ஏதாவது நல்ல விஷயமா.. கல்யாணம் பேசி முடிச்சாச்சா.. பத்திரிகை குடுக்கறதுக்காக வந்திருக்கியா..?"
கண்கள் இடுங்க அவர் குறும்போடு கேட்டதும்.. அந்த கேலி பேச்சை அவனால் ரசிக்க முடியவில்லை..
"இல்லைங்க ஐயா வேற ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்காக வந்தேன்.."
"முக்கியமான விஷயமா..!" தீவிர பாவனையுடன் கண்கள் சுருக்கி கேள்வியாக அவனைப் பார்த்தார்..
நடந்ததை சொல்லி முடித்திருந்தான் தர்மன்..
நீண்ட மூச்சுவிட்டு தாடையை தேய்த்தபடி யோசித்திருந்தார் வேலாயுதம்..
"கண்டிப்பா நீ பொய் சொல்ல மாட்டே தர்மா.. எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு.. தப்பு நம்ம பக்கந்தான் இருக்குதுன்னா அது நிச்சயமா தண்டிக்கப்பட வேண்டிய ஒன்னுதான்..! இந்த அலட்சியமும் கவனக்குறைவும் இனி தொடராம பாத்துக்கணும்.. நான் ஒன்னு பண்றேன்.. டீன் கிட்ட பேசி அந்த பொண்ணுக்கு மறுபடி ரத்த பரிசோதனை பண்ண சொல்லலாம்.. ஒருவேளை முன்னெடுத்த ரிப்போர்ட் தப்பா இருக்கும் பட்சத்துல மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிப்போம்..!"
"ரொம்ப நன்றிங்க ஐயா..!* நிம்மதியுடன் கை கூப்பினான் தர்மன்..
"இதுல நன்றி சொல்ல என்ன இருக்கு தர்மா..! நம்ம ஹாஸ்பிடலால பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு நியாயம் செய்ய வேண்டியது நம்மளோட கடமை.. மக்களுக்கு நம்ம மேல உள்ள நம்பிக்கை போயிடுச்சுன்னா இவ்வளவு நாள் நாம செஞ்ச சேவைக்கும் காப்பாத்தி வச்சிருக்கற நல்ல பேருக்கும் அர்த்தமில்லாம போயிடும்..! எப்பவும் நேர்மையை கடைப்பிடிக்கிறவன் நான்.. என் ஹாஸ்பிடல்ல இருக்கிறவங்களும் அதே சின்சியாரிட்டியை ஃபாலோ பண்ணனும்னு நினைப்பேன்.. இந்த விஷயத்தை என் வரைக்கும் அவங்க கொண்டு வராம மறைச்சதே பெரிய தப்பு.. அவங்கள நான் பார்த்துக்கிறேன்.. நீ இப்ப கிளம்பு.."
"வரேன் ஐயா..!" மரியாதையாக விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..
"என்ன வேதா.. இன்னும் தூங்கல..!" மனைவியின் அருகே வந்தார் வேலாயுதம்..
தர்மன் சென்ற திசையை காட்டி வாய் துடிக்க ஏதோ பேச முற்பட்டார் வேதா..
"எனக்கு புரியுது வேதா தர்மனுக்கு உதவி செய்யனும்னு சொல்ற.. அப்படித்தானே..! தர்மனை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கும் தெரியும்.. கண்டிப்பா அவனுக்கு வேண்டிய அந்த பொண்ணுக்கு நியாயமானதை நான் செய்வேன்.. கவலைப்படாதே..!" மனைவியின் தலை வருடி தந்தார் வேலாயுதம்..
சில நேரங்களில் வேதாம்மாவின் உடல்நிலை மோசமாகி.. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசரத் தருணங்களில்.. தர்மன் தான் வீட்டுக்கு வருவான்..
வேதாவை தூக்கி வாகனத்தில் படுக்க வைப்பதிலிருந்து மருத்துவமனை சிகிச்சை பிரிவு வரை அழைத்துச் செல்லும் அனைத்து பொறுப்புகளும் அவனுடையது..!
எதற்கெடுத்தாலும் தர்மனை வர சொல்லுங்க என்று வாய்குளறி அவர் சொல்லும் அந்த ஒரு வார்த்தை மட்டும் அங்கிருக்கும் அனைவருக்குமே புரியும் ..
முதலாளியின் மனைவிக்கு ராஜ வைத்தியம் பார்க்கவும் பணிவிடைகளை செய்யவும் அந்த மருத்துவமனையில் டாக்டர் நர்ஸ் என பல பேர் இருந்தாலும்.. வேதாம்மாவை மருத்துவமனை அழைத்து வந்ததிலிருந்து வீட்டில் கொண்டு போய் விட்டு கட்டிலில் படுக்க வைத்து உடம்ப பாத்துக்கோங்கம்மா..! நான் கிளம்பறேன் என்று கையை பிடித்து விடைபெற்றுக் கொண்டு வரும் வரையில் கூடவே நிற்கும் தர்மனின் முகம் மட்டும் தான் அத்தனை பேரையும் தாண்டி அவர் மனதில் ஆழமாய் பதிந்து போயிருக்கும்..
மற்றவர்களை பொறுத்தவரை வேலாயுதம் ஐயாவிற்கு பத்தோடு பதினொன்றாய் அவனும் ஒரு ஊழியன்..!
ஆனால் தம்பதிகள் இருவரின் மனதில் தர்மன் ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறான் என்ற விஷயம் அவனுக்கும் கூட தெரியாது..!
மறுநாள் காயத்ரி தர்மனை அழைத்து பேசினார்..
"தர்மா அந்த பொண்ண கூட்டிட்டு வா..! மறுபடி பிளட் டெஸ்ட் எடுத்து செக் பண்ணி என்னன்னு பாப்போம்.. சார் பெரிய ஆள்தான் வேலாயுதம் சாரை போய் பார்த்து நினைச்சதை சாதிச்சிட்டீங்க போலிருக்கே..!" அவர் பேச்சிலிருந்தது நக்கலா கடுப்பா தெரியவில்லை..
"சாரி மேடம்.. யாரையும் மாட்டிவிடனும்னு நான் நினைக்கல.. அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணுங்கற ஒரே நோக்கத்துல மட்டும்தான் அவரை போய் பார்த்தேன்.."
"புரியுது தர்மா..! ஆனா ரிப்போர்ட் முடிவு சுப்ரியாவுக்கு சாதகமா இருக்கும் பட்சத்துல வேலாயுதம் சார் அடுத்து என்ன மாதிரி யோசிப்பாங்கன்னு தெரியல..! பாப்போம்.." கடைசி வார்த்தைகளில் இருளடித்து போயிருந்தார் காயத்ரி..
ஆஸ்பத்திரி நிர்வாகம் தவறிழைத்து விட்டது என நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட கூடியவர்களில் நிச்சயம் காயத்ரியும் ஒருவராக இருப்பார்..
மறுநாள் சுப்ரியாவை மருத்துவமனை அழைத்து வந்தான் தர்மன்..
பரிசோதனைக்காக சுப்ரியாவின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது..
இரண்டு நாட்களில் முடிவு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் சுப்ரியாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தான் தர்மன்..
தொடரும்..
Last edited: