- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
இந்த ஒரு வாரமாக மகளும் மகரிஷியும் பழகும் விதத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் அருந்ததி..
"சந்திராம்மா கீ இந்த ஜன்னலுக்கு பின்னாடி வச்சிருக்கேன்.. ஸ்கூல் விட்டு வந்து வெளியே உட்கார வேண்டாம்.. கதவை திறந்து உள்ள போய் உட்காருங்க.." என்று சாவி வைத்திருந்த இடத்தை சந்திரமதியை அழைத்து காண்பித்துக் கொண்டிருக்க அருந்ததியோ யோசனையாக புருவம் சுருக்கினாள்..
"அம்மா.. நான் ரிஷிகிட்ட டியூஷன் படிக்கப் போறேன்..!" சந்திரமதி ஆரம்பிக்க..
"செருப்பால அடிப்பேன்.. அது என்ன பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடற பழக்கம்.." அரிசி கழுவிய கையை அடிப்பதற்காக உயர்த்தி விட்டாள் அருந்ததி..
"அய்யே.. என்ன எதுக்கெடுத்தாலும் அடிக்க கையை ஓங்குற..! நான் மரியாதையா அங்கிள்னுதான் கூப்பிட்டேன்.. சார் தான் பேர் சொல்லி கூப்பிட சொன்னார் தெரியுமா.. எதுவும் தெரிஞ்சிக்காம அடிக்க வர்ற..? மதியின் முகம் சுருங்கியது..
"அந்த ஆளு ஏன் உன்னை பேர் சொல்லி கூப்பிட சொன்னான்.. ம்கூம்.. எதுவும் சரியில்ல.. இங்க பாரு மதி.. நீ அவன் கிட்ட போய் பேசுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..! யார் என்னன்னு குணம் தெரியாம ஒருத்தர் கிட்ட பழகறதே தப்பு.. எதுக்கும் நீ அந்த ஆள் கிட்ட ஜாக்கிரதையா இரு.. வீட்டுக்கு வந்தப்புறம் அந்த ஆள் வந்துட்டா வெளிய வந்து திண்ணையில உக்காந்துக்க.. இல்ல கனகாக்கா வீட்டுக்கு போயிடு.."
"போம்மா.. நீயும் உன் கனகா அக்காவும்.. அந்த ஆன்ட்டியோட புருஷன் பார்க்கற பார்வையே சரியில்ல..! எனக்கு அங்க போகவே பிடிக்கல.. நான் இங்கேயே பாதுகாப்பா தான் இருக்கேன்.. என்கூட விளையாடத்தான் மோத்தி இருக்கானே..!"
"அய்யோ.. எத்தன தடவை சொல்றது.. முதல்ல அந்த நாய கையில தூக்கி வச்சு கொஞ்சறதை நிறுத்து..! முதல்ல ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க.. இன்னும் ஒரு வாரத்துக்கு தான் நாம இங்க இருக்க போறோம் அப்புறம் வேற வீடு பார்த்துட்டு போயிடுவோம்.. அதனால தேவையில்லாம மத்தவங்க கூட நட்புறவா பழகறத நிறுத்திக்க.. இன்னொருவாட்டி அந்த நாய நீ தொடுறத பார்த்தேன்னு வை அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.."
"இப்ப மட்டும் என்ன மனுஷியாவா இருக்க..?" சந்திரமதி வாய்க்குள் முணுமுணுப்பு..
"என்னடி சொன்ன..?" அருந்ததி சீறி கொண்டு வர.. "அம்..மாஆஆ..!" ராகமாக இழுத்து சிணுங்கினாள் சந்திரமதி..
"ரிஷிகிட்ட நான் டியூஷன் போக போறேன்..!"
"பேசவே கூடாதுங்கறேன்.. டியூஷன் போக போறேன்னு என்கிட்டயே வந்து சொல்ற..!"
"அம்மா அவர் சயின்ஸ் வாத்தியார்..!"
"அப்படியா..! அது சரி அந்த ஆள் பேரு ரிஷின்னு நீ சொல்லித்தான் எனக்கு தெரியுது அவர் என்ன வேலை செஞ்சா எனக்கென்ன..!"
"அம்மா ஆஆ.." என்று பொறுமை இழந்து உறுமியவள் "சயின்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்குது.. எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னை தேத்திக்கவே முடியல.. அதனால அந்த அங்கிள் கிட்ட டியூஷன் படிக்கப் போறேன்.."
"வேற எங்கேயாவது நல்ல இடமாக பார்த்து டியூஷன் சேர்த்து விடுறேன் அமைதியா இரு..!"
"இப்படியே சொல்லி ஒரு வருஷம் ஓட்டியாச்சு..! மார்க் குறைஞ்சா மட்டும் திட்டுற.. கண்ணா பின்னான்னு அடிக்கிற.. மார்க் அதிகமா வாங்கறதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தியா நீ.."
"நான் என்ன முயற்சி எடுக்கணும் நீ தான் நல்லா படிச்சு மார்க் வாங்க முயற்சி பண்ணனும்..!"
"அதான் என்னால முடியலையே ரிஷி அங்கிள் எனக்கு கண்டிப்பாக ஹெல்ப் பண்ணுவாரு.."
"எனக்கு அந்த ஆள பிடிக்கல ஆம்பளைங்க மேல பெருசா நம்பிக்கை இல்லை.. இந்த உலகத்துல எவனும் சரியில்ல நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்..! அவன் வேண்டாம் அவ்வளவு தான் சொல்லுவேன்.."
"நீ சொன்னா நான் ஏன் கேட்கணும்.. நான் அங்கிள்கிட்டதான் டியூஷன் படிப்பேன்.. அவர் ரொம்ப நல்லவரு.. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் ஆகாது.. முதல்ல இப்படி கன்னாபின்னான்னு கற்பனை பண்றது நிறுத்து.."
"பெரிய மனுஷியாட்டம் எனக்கு அட்வைஸ் பண்ணாத..!"
"உனக்கொன்னும் நான் அட்வைஸ் பண்ணல.. ஆனா யார் என்னை எப்படி பாக்கறாங்கன்னு எனக்கு தெரியாதா.. ரிஷி சார் ரொம்ப நல்லவர்.. என்கிட்ட பாசமாத்தான் பேசுறார்.."
"ஐயோ, உனக்கு புரியாதுடி, நான் சொல்றத..!"
"கவலைப்படாதேம்மா.. என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.. நான் தைரியமான பொண்ணு.. படிக்கணும்ங்கற எண்ணத்துலதான் அவர்கிட்ட டியூஷன் போறேன்.. நீ வேண்டாம்னு சொன்னா அப்புறம் படிச்சு மார்க் வாங்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன் அவ்வளவுதான்.." இப்படி மகள் சொல்லவும் அருந்ததியால் மறுக்க முடியவில்லை..!
மறுத்தாலும் எல்லா பாடப்பிரிவுகளிலும் மிக குறைவாக மார்க் எடுத்து விட்டு.. "நீ டியூஷன் அனுப்பல அதனாலதான் நான் இப்படி ஃபெயில் ஆகிட்டேன்" என்று தன்னைத்தான் குற்றம் சொல்லுவாள்.. இத்தனை வருடங்களாக பார்க்கிறாளே மகளின் சாமர்த்தியத்தை.. படிப்பதற்காக எடுக்கும் முயற்சியை விட படிக்காமலிக்க அவள் தேடும் காரணங்களுக்கான முயற்சி அதிகமல்லவா..
காலையில் "குட் மார்னிங் சந்திராம்மா.." என்று ஆரம்பித்து தன் மகளிடம் சிரித்து பேசுவதும் நடந்து செல்லும் பைக்கை நிறுத்தி அழைத்துச் செல்வதும்.. மாலையில் திண்ணையில் அமர்ந்து டியூஷன் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று தலையில் தட்டி சந்திரமதியை சிரிக்க சிரிக்க வைப்பதும் அருந்ததிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை..!
மகளை தனியாக வீட்டில் விட்டுச் செல்லவே பயமாக இருந்தது அவளுக்கு..
இளங்கன்று பயமறியாது.. சரி இந்த கன்றுக்கு உலகமும் தெரியவில்லையே..! சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறதே மரமண்டு..
வேலையின் நிமித்தம் டெலிவரிக்காக சுற்றித் திரியும் போது கூட மகளின் ஞாபகம்தான்.. அவளைத்தான் கண்டிக்க முடியும்.. அந்த வளர்ந்து கெட்டவனிடம் போய் என் மகளிடமிருந்து தள்ளி இரு என்று சொன்னால் இந்த நிமிடமே வீட்டை காலி செய்யென சொல்ல மாட்டானா..! சரிதான் போடா என்று மூட்டை முடிச்சுகளை வாரிக் கட்டிக்கொண்டு செல்ல வேறு போக்கிடமா இருக்கிறது.. மிகச் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில் கொஞ்சம் கவனமாக கண்காணிக்க வேண்டும்..
அன்று அருந்ததி கேட்டை தாண்டி உள்ளே நுழையும்போதே மகளைத் தான் தேடினாள்..
எப்போதும் வாசலில் மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் இருவரையும் இன்று காணவில்லையே..!
மோத்தி துள்ளி குதித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தவன் அருந்ததியின் பார்வையில் மீண்டும் உள்ளே ஓடிவிட்டான்..!
செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள் பார்வை நேரடியாக மகரிஷியின் அறையை நோக்கி பாய்ந்தது..
கதவு திறந்துதான் இருந்தது.. ஒரு மேஜையின் எதிரெதிர் பக்கம் மகரிஷியும் சந்திரமதியும் அமர்ந்திருந்தனர்..
சந்திரமதி மிக ஆர்வமாக அவன் சொல்லும் பாட விளக்கங்களை தலையசைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.. இப்போதுதான் அருந்ததிக்கு நிம்மதி பெருமூச்சு வருகிறது..
பையை அங்கிருந்த அலமாரியில் வைத்து விட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை துப்பட்டாவால் துடைத்துக் கொள்கிறாள்..
அவன் தப்பானவன் என்றர்த்தம் இல்லை.. ஆனாலும் இது சரி இல்லையே.. யாரேனும் பார்க்க நேரிட்டால் ஒரு சிறிய குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரென்று எத்தனை பேருக்கு எண்ணம் தோன்றும்.. வக்கிர மனம் படைத்தவர்களால் அப்படி தெளிவாக தீர்க்கமாக யோசிக்க முடியுமா..! உள்ளுக்குள் குழம்பிப் போயிருந்தவள் மகரிஷியிடம் இது பற்றி வெளிப்படையாக பேசியும் இருந்தாள்..
"சார்..!"
கண்கள் குறுக்கி பார்த்தான் மகரிஷி..
"இல்ல.. நீங்க டியூஷன் பீஸ் எவ்வளவு வேணும்னு சொல்லிட்டீங்கன்னா..!"
"தவுசன்ட் ருபீஸ்..!" என்றான் தயக்கமே இல்லாமல்..
"ஆயிரம் ரூபாயா.." அருந்ததி திறந்த வாய் மூடவில்லை..! சாதாரணமாக வெளியே நடத்தப்படும் டியூஷன்களில் இதைவிட அதிகமாக வசூலிக்கப்படுகிறது தான்.. ஆனாலும் இந்த ஆயிரம் ரூபாய் தொகை அருந்ததியை பொறுத்தவரை அவள் வருமானத்திற்கு அதிகப்படி..
"சார் அவ்ளோ பீஸ் கட்ட முடியாது ஒரு ஐநூறு.."
"ஓகே, 1500 குடுத்துடுங்க.."
"என்னது..! சார் நான் 500 ரூபா கூட்டிக்க சொல்லல.. குறைச்சுக்க சொன்னேன்.."
"ம்ம்.. பார்க்கலாம் முதல்ல உங்க பொண்ணு நல்லா படிச்சு மார்க் எடுக்கட்டும்..! அப்புறம் என்ன பீஸ் கொடுக்கணும்னு நீங்களே முடிவு பண்ணுங்க.."
"சார் அப்புறம் இன்னொரு விஷயம்..!"
"சீக்கிரம் சொல்லுங்க..!"
"சார் டியூஷன் சொல்லிக் கொடுக்கறதுன்னா இப்படி திண்ணையில் உட்கார வச்சு சொல்லி கொடுங்க.. ரூமுக்குள்ள வேண்டாம்..! சின்ன குழந்தை அவ எதிர்காலத்தை பற்றி யோசிச்சு பாருங்க.."
"இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா..! அ பிட்டதோ தள்ளிலா மாட்லாடு" (அந்த குழந்தையோட அம்மா மாதிரி பேசுங்க) அவன் முகத்தில் கோப கனல்..
"பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்..ஏன்னா நீங்க சொல்ற மாதிரி நான் என் குழந்தையோட அம்மா..! படிப்பை விட அவ மனநலமும் எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியம்.."
அருந்ததியின் தெளிவான பேச்சில் நிதர்சனம் புரியவே கட்டுக்குள் வந்தான்..
"வாசல்ல உட்கார முடியலங்க.. தோம காது.. கொசுக்கடி.. உங்க பொண்ணோட முகத்தில் சிவப்பு சிவப்பா தடிப்பா இருக்கே.. பார்த்தீங்களா இல்லையா..! அம்மான்னு வாயில சொல்லிக்கிட்டா மட்டும் பத்தாது.."
"சார்..!"
"இங்க பாருங்க.. தேவையில்லாம என்னை அசிங்கப்படுத்தறீங்க.. நான் சந்திரமதிய சின்ன குழந்தையா பாக்கறேன்.. உள்ள தான் டியூஷன் நடக்கும்.. உங்களுக்கு இஷ்டம் இல்லைனா டியூசனை விட்டு நிறுத்திக்கோங்க.." என்றான் காரசாரமான குரலில்..
"ஒரு வாரத்துக்கு பிறகு நாங்க வேற இடத்துக்கு போயிடுவோம் சார்.."
"ஒரு வாரம் முடிஞ்ச பிறகு அதை யோசிக்கலாம்.. இப்போ உங்ககிட்ட நின்னு பேச எனக்கு நேரமில்லை..!" என்றவன் அத்தோடு அந்த பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்..
வீடு பார்க்க வேண்டும்.. இன்று நாளை என்று இழுத்தடிக்கிறது.. நகர முடியாத அளவிற்கு டெலிவரி வேலை அவளை விழுங்கிக் கொண்டது.. ஒவ்வொரு டெலிவரிக்கும் கொஞ்சம் இன்சென்டிவ் கிடைக்கும்.. அதைவிடுத்து வேறு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அவளால்..!
அவளாக நிர்ணயித்துக் கொண்ட ஒரு வார காலக்கெடு முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில்.. இப்போதுதானா அந்த கந்து வட்டிக்காரன் வீட்டு வாசலில் வந்து நிற்க வேண்டும்..!
நாராசமான வார்த்தைகளால் அருந்ததியின் மானமரியாதையை வீதியில் கிழித்து வீசிக் கொண்டிருந்தான் அவன்..!
"சார் கத்தாதீங்க..! எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுங்க எப்படியாவது அசலை அடைச்சுடுவேன்.." அவமானத்தில் சுருண்டு கொதித்த நீருற்றாய் வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்..
"எப்படி அடைப்ப? ஏற்கனவே ஒரு வருஷமா இந்தா தரேன் அந்த தரேன்னு டிமிக்கி தந்தவ தானே நீ..! இப்போ நீ சொல்றத நம்பி உன்னை அப்படியே விட்டுட்டு போக என்னைய பாத்தா இளிச்ச மாதிரி தெரியுதா.. ஹான்? அந்த மனிதன் பேய் போல் உறுமினான்..
அங்கே பேச்சுவார்த்தை நடக்கும்போதே அறையில் இருந்து வெளிப்பட்ட மகரிஷி கூடத்தில் மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த சந்திரமதியை பார்த்து "என்னாச்சும்மா..?" என உருவங்களை உயர்த்தினான்..
"வெளிய சண்ட.. அம்மா வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க!" சைகையில் சொன்னாள் சந்திரமதி..
ஓ.. என்றவன் வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும் சண்டையை பொருட்படுத்தாமல் பைக்கில் ஏறி ஆக்ஸிலரேட்டரை முறுக்கினான்..
காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் அருந்ததியை தொய்த்து எடுத்துக் கொண்டிருந்தான் அந்த ஆள்..
"கடனை கட்டி முடிக்க வழி இல்லன்னா நான் வேணா ஒரு வழி சொல்லட்டுமா..!"
"அண்ணா உங்க பேச்சு சரியில்ல.."
அட முழுசா கேளுங்கறேன்..
நீ பார்க்க ரொம்ப சுமாரா தான் இருக்க.. ஆனா உன் பொண்ணு ரொம்ப சோக்கா இருக்கா..! அவள தூக்கிட்டு போறேன்.. வாங்கிற பணத்தை வட்டியோடு கொடுத்துட்டு வந்து பொண்ண கூட்டிட்டு போ.."
"ச்சீ.. நீயெல்லாம் மனுஷனா.. அவ குழந்தைடா உங்க மவ வயசுள்ள பொண்ண தப்பா பேசற நீயெல்லாம் நாசமா நாதியத்துதான் போவ.." கோபத்தில் வார்த்தைகள் புரண்டன அருந்ததிக்கு..
"நியாயதர்மம் பார்த்தா தொழில் செய்ய முடியாதே..! டேய் அந்த புள்ளைய போய் தூக்கிட்டு வாங்கடா..! இவ்ளோ திமிரா பேசுற நீ பணத்தை வைச்சுட்டு உம்மவள கூட்டிட்டு போ.." தனக்கு பின்னால் நின்றிருந்த இருவரை வீட்டுக்குள் செல்லுமாறு கண்ணை காட்டினான் அந்த வட்டிக்காரன்..
அவர்களுக்கு முன்பாக வீட்டு வாசலை வழிமறித்து நின்றான் மகரிஷி..
"ஒருத்தன் வீட்டுக்குள்ள நுழையக்கூடாது..! எவனாவது குழந்தை மேல கைய வைக்கணும்னு நினைச்சா கூட உடம்புல உயிர் இருக்காது.."
ஆக்ரோஷமான இந்த குரலில் விக்கித்து போனாள் அருந்ததி..
"என்னடா செய்வ.. அவள சொன்னா உனக்கு கோவம் வருது..! என்னடா சம்பந்தம் உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஆமா நீ பேசுற விதமே சரியில்லையே எந்த ஊருடா நீ..!"
"எந்த ஊரா இருந்தா.. என்னடா தப்புதட்டி கேட்க யாரு வேணா வரலாம்..!"
"அப்போ சாரு ஹீரோவா.."
"அம்மாவையும் பொண்ணையும் டார்ச்சர் பண்றதா கந்து வட்டி கேஸ்ல உன்னை உள்ள தள்ளி கம்பி எண்ண வைக்க முடியும் தெரியுமா..?"
"ஆஹா பாருடா.. எனக்கு சட்டம் சொல்லித் தர்றாரு ஐயா.. இதெல்லாம் தெரியாமத்தான் வட்டிக்கு விட்டு பொழைக்கிறோமா.. கஷ்டம்னு கை நீட்டி காசு வாங்க வேண்டியது.. அப்புறம் வட்டியும் தரமா அசலும் குடுக்காம இழுத்தடிச்சா இப்படித்தான் வேற வழியில வசூலிக்க முடியும்.."
"ஏய்ய்ய்.. உன்ன பணத்தை கேட்டு வாங்க வேண்டாம்னு சொல்லல.. ஆனா கேக்கறதுக்கு ஒரு முறை இருக்கு.."
"வரிசைத்தட்டு வைச்சு முறையோட கேக்கனுமா..? அவ்ளோ அக்கறை இருந்தா நீ எடுத்து வை அந்த காச..!"
நீண்ட மூச்சுவிட்டு அருந்ததியை ஒரு பார்வை பார்த்தான் மகரிஷி..
"எவ்வளவு தரணும்..?"
"அசலும் வட்டியுமா சேத்து நாப்பத்தஞ்சாயிரம் ரூபா தரணும்.."
"உன் அக்கவுண்ட் நம்பர் சொல்லு.. காசு அனுப்பி விடுறேன்.. ஆனா இதுக்கப்புறம் இந்த வீட்டு பக்கம் உன் முகத்தை பார்த்தா அப்புடு நீவு பூர்த்திகா இன்ட்டிகி சேரலேவு.. அர்த்தமாயிந்தா..!" (முழுசா வீடு போய் சேர முடியாது)
"ஓ.. தெலுங்கா..! எப்பவும் வந்தாரை வாழவைக்குமாம் தமிழகம்.. இங்க வித்தியாசமா தமிழுக்கு தெலுங்கு உதவி செய்யுதே.. ரைட்..டு.. நமக்கு காசு வந்தா போதும்.. யார் எக்கேடு போனா நமக்கென்ன..!" என்றவன் அக்கவுண்டில் காசு வந்ததும் ஆட்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..
அழுகையை உதட்டுக்குள் அடக்கி ஆஸ்துமா நோயாளி போல் திணறியபடி நின்றிருந்தாள் அருந்ததி..!
"நீங்க ஓகே தானே..!" மிக நெருக்கத்தில் கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர்..
"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நீங்க மட்டும் வராமல் போயிருந்தா!"
"நீ தேங்க்ஸ செத்த புட்டலோ வேயன்டி.."
(உன் நன்றியை தூக்கி குப்பையில போடு..)
கோபத்தோடு அவளிடம் பாய்ந்தான் மகரிஷி..
கண்களில் மிரட்சியோடு நின்றிருந்தவளிடம் அதற்கு மேல் அவனால் கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை..
"அறிவில்ல.. பினான்ஸ் வாங்கறது தப்பு இல்ல ஆனா யார்கிட்ட வாங்கணும்னு தெரிஞ்சு வாங்கணும்.. துணையில்லாம தனியா இருக்கறோம்னு தெரிஞ்சும் இப்படி ஒரு ரவுடி கிட்ட எந்த முட்டாளாவது கடன் வாங்குவானா..!"
"வாங்கும் போது நல்லபடியாத்தான் பேசினான்.. போகப் போகத்தான் சுயரூபம் தெரிஞ்சுது..!" அருந்ததியின் குரல் நடுங்கியது..
உண்மைதானே.. ஒருவேளை ரிஷி மட்டும் இல்லாமல் போயிருந்தால்.. அடுத்து என்ன நிகழ்ந்திருக்குமென அருந்ததியால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. அய்யோ என் மகள்.. தேகம் கொதிப்பும் நடுக்கமுமாக தடதடத்தது..
மகரிஷியால் அவள் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது தாய்ப் பாசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது..
அருந்ததியை இளக்கமாக ஒரு பார்வை பார்த்தான்.. அதற்கு மேல் எதுவும் பேசவில்லை..
தலை சாய்த்து உள்ளே பார்த்தவன் "சந்திராம்மா டைம் ஆகிப் போயிந்தி.. வர்றியா..!" என்றான் சத்தமாக..!
"இது வந்துட்டேன் ரிஷி..!" புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தவள் "அம்மா டாட்டா டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டேன்" என்று சொல்லியபடி ரிஷியோடு பைக்கில் பின்பக்கம் ஏறி அமர்ந்தாள்..
இருவரும் சென்றுவிட தன்னந்தனியாய் நின்றிருந்தவள் உ..உ..உ.. என்ற கிசுகிசுப்பான சத்தத்தில் கீழே குனிந்து பார்த்தாள்..
மோத்தி அவளை நிமிர்ந்து பார்த்தது..
தொடரும்..
"சந்திராம்மா கீ இந்த ஜன்னலுக்கு பின்னாடி வச்சிருக்கேன்.. ஸ்கூல் விட்டு வந்து வெளியே உட்கார வேண்டாம்.. கதவை திறந்து உள்ள போய் உட்காருங்க.." என்று சாவி வைத்திருந்த இடத்தை சந்திரமதியை அழைத்து காண்பித்துக் கொண்டிருக்க அருந்ததியோ யோசனையாக புருவம் சுருக்கினாள்..
"அம்மா.. நான் ரிஷிகிட்ட டியூஷன் படிக்கப் போறேன்..!" சந்திரமதி ஆரம்பிக்க..
"செருப்பால அடிப்பேன்.. அது என்ன பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடற பழக்கம்.." அரிசி கழுவிய கையை அடிப்பதற்காக உயர்த்தி விட்டாள் அருந்ததி..
"அய்யே.. என்ன எதுக்கெடுத்தாலும் அடிக்க கையை ஓங்குற..! நான் மரியாதையா அங்கிள்னுதான் கூப்பிட்டேன்.. சார் தான் பேர் சொல்லி கூப்பிட சொன்னார் தெரியுமா.. எதுவும் தெரிஞ்சிக்காம அடிக்க வர்ற..? மதியின் முகம் சுருங்கியது..
"அந்த ஆளு ஏன் உன்னை பேர் சொல்லி கூப்பிட சொன்னான்.. ம்கூம்.. எதுவும் சரியில்ல.. இங்க பாரு மதி.. நீ அவன் கிட்ட போய் பேசுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..! யார் என்னன்னு குணம் தெரியாம ஒருத்தர் கிட்ட பழகறதே தப்பு.. எதுக்கும் நீ அந்த ஆள் கிட்ட ஜாக்கிரதையா இரு.. வீட்டுக்கு வந்தப்புறம் அந்த ஆள் வந்துட்டா வெளிய வந்து திண்ணையில உக்காந்துக்க.. இல்ல கனகாக்கா வீட்டுக்கு போயிடு.."
"போம்மா.. நீயும் உன் கனகா அக்காவும்.. அந்த ஆன்ட்டியோட புருஷன் பார்க்கற பார்வையே சரியில்ல..! எனக்கு அங்க போகவே பிடிக்கல.. நான் இங்கேயே பாதுகாப்பா தான் இருக்கேன்.. என்கூட விளையாடத்தான் மோத்தி இருக்கானே..!"
"அய்யோ.. எத்தன தடவை சொல்றது.. முதல்ல அந்த நாய கையில தூக்கி வச்சு கொஞ்சறதை நிறுத்து..! முதல்ல ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க.. இன்னும் ஒரு வாரத்துக்கு தான் நாம இங்க இருக்க போறோம் அப்புறம் வேற வீடு பார்த்துட்டு போயிடுவோம்.. அதனால தேவையில்லாம மத்தவங்க கூட நட்புறவா பழகறத நிறுத்திக்க.. இன்னொருவாட்டி அந்த நாய நீ தொடுறத பார்த்தேன்னு வை அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.."
"இப்ப மட்டும் என்ன மனுஷியாவா இருக்க..?" சந்திரமதி வாய்க்குள் முணுமுணுப்பு..
"என்னடி சொன்ன..?" அருந்ததி சீறி கொண்டு வர.. "அம்..மாஆஆ..!" ராகமாக இழுத்து சிணுங்கினாள் சந்திரமதி..
"ரிஷிகிட்ட நான் டியூஷன் போக போறேன்..!"
"பேசவே கூடாதுங்கறேன்.. டியூஷன் போக போறேன்னு என்கிட்டயே வந்து சொல்ற..!"
"அம்மா அவர் சயின்ஸ் வாத்தியார்..!"
"அப்படியா..! அது சரி அந்த ஆள் பேரு ரிஷின்னு நீ சொல்லித்தான் எனக்கு தெரியுது அவர் என்ன வேலை செஞ்சா எனக்கென்ன..!"
"அம்மா ஆஆ.." என்று பொறுமை இழந்து உறுமியவள் "சயின்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்குது.. எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னை தேத்திக்கவே முடியல.. அதனால அந்த அங்கிள் கிட்ட டியூஷன் படிக்கப் போறேன்.."
"வேற எங்கேயாவது நல்ல இடமாக பார்த்து டியூஷன் சேர்த்து விடுறேன் அமைதியா இரு..!"
"இப்படியே சொல்லி ஒரு வருஷம் ஓட்டியாச்சு..! மார்க் குறைஞ்சா மட்டும் திட்டுற.. கண்ணா பின்னான்னு அடிக்கிற.. மார்க் அதிகமா வாங்கறதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தியா நீ.."
"நான் என்ன முயற்சி எடுக்கணும் நீ தான் நல்லா படிச்சு மார்க் வாங்க முயற்சி பண்ணனும்..!"
"அதான் என்னால முடியலையே ரிஷி அங்கிள் எனக்கு கண்டிப்பாக ஹெல்ப் பண்ணுவாரு.."
"எனக்கு அந்த ஆள பிடிக்கல ஆம்பளைங்க மேல பெருசா நம்பிக்கை இல்லை.. இந்த உலகத்துல எவனும் சரியில்ல நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்..! அவன் வேண்டாம் அவ்வளவு தான் சொல்லுவேன்.."
"நீ சொன்னா நான் ஏன் கேட்கணும்.. நான் அங்கிள்கிட்டதான் டியூஷன் படிப்பேன்.. அவர் ரொம்ப நல்லவரு.. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் ஆகாது.. முதல்ல இப்படி கன்னாபின்னான்னு கற்பனை பண்றது நிறுத்து.."
"பெரிய மனுஷியாட்டம் எனக்கு அட்வைஸ் பண்ணாத..!"
"உனக்கொன்னும் நான் அட்வைஸ் பண்ணல.. ஆனா யார் என்னை எப்படி பாக்கறாங்கன்னு எனக்கு தெரியாதா.. ரிஷி சார் ரொம்ப நல்லவர்.. என்கிட்ட பாசமாத்தான் பேசுறார்.."
"ஐயோ, உனக்கு புரியாதுடி, நான் சொல்றத..!"
"கவலைப்படாதேம்மா.. என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.. நான் தைரியமான பொண்ணு.. படிக்கணும்ங்கற எண்ணத்துலதான் அவர்கிட்ட டியூஷன் போறேன்.. நீ வேண்டாம்னு சொன்னா அப்புறம் படிச்சு மார்க் வாங்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன் அவ்வளவுதான்.." இப்படி மகள் சொல்லவும் அருந்ததியால் மறுக்க முடியவில்லை..!
மறுத்தாலும் எல்லா பாடப்பிரிவுகளிலும் மிக குறைவாக மார்க் எடுத்து விட்டு.. "நீ டியூஷன் அனுப்பல அதனாலதான் நான் இப்படி ஃபெயில் ஆகிட்டேன்" என்று தன்னைத்தான் குற்றம் சொல்லுவாள்.. இத்தனை வருடங்களாக பார்க்கிறாளே மகளின் சாமர்த்தியத்தை.. படிப்பதற்காக எடுக்கும் முயற்சியை விட படிக்காமலிக்க அவள் தேடும் காரணங்களுக்கான முயற்சி அதிகமல்லவா..
காலையில் "குட் மார்னிங் சந்திராம்மா.." என்று ஆரம்பித்து தன் மகளிடம் சிரித்து பேசுவதும் நடந்து செல்லும் பைக்கை நிறுத்தி அழைத்துச் செல்வதும்.. மாலையில் திண்ணையில் அமர்ந்து டியூஷன் சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று தலையில் தட்டி சந்திரமதியை சிரிக்க சிரிக்க வைப்பதும் அருந்ததிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை..!
மகளை தனியாக வீட்டில் விட்டுச் செல்லவே பயமாக இருந்தது அவளுக்கு..
இளங்கன்று பயமறியாது.. சரி இந்த கன்றுக்கு உலகமும் தெரியவில்லையே..! சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறதே மரமண்டு..
வேலையின் நிமித்தம் டெலிவரிக்காக சுற்றித் திரியும் போது கூட மகளின் ஞாபகம்தான்.. அவளைத்தான் கண்டிக்க முடியும்.. அந்த வளர்ந்து கெட்டவனிடம் போய் என் மகளிடமிருந்து தள்ளி இரு என்று சொன்னால் இந்த நிமிடமே வீட்டை காலி செய்யென சொல்ல மாட்டானா..! சரிதான் போடா என்று மூட்டை முடிச்சுகளை வாரிக் கட்டிக்கொண்டு செல்ல வேறு போக்கிடமா இருக்கிறது.. மிகச் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில் கொஞ்சம் கவனமாக கண்காணிக்க வேண்டும்..
அன்று அருந்ததி கேட்டை தாண்டி உள்ளே நுழையும்போதே மகளைத் தான் தேடினாள்..
எப்போதும் வாசலில் மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் இருவரையும் இன்று காணவில்லையே..!
மோத்தி துள்ளி குதித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தவன் அருந்ததியின் பார்வையில் மீண்டும் உள்ளே ஓடிவிட்டான்..!
செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள் பார்வை நேரடியாக மகரிஷியின் அறையை நோக்கி பாய்ந்தது..
கதவு திறந்துதான் இருந்தது.. ஒரு மேஜையின் எதிரெதிர் பக்கம் மகரிஷியும் சந்திரமதியும் அமர்ந்திருந்தனர்..
சந்திரமதி மிக ஆர்வமாக அவன் சொல்லும் பாட விளக்கங்களை தலையசைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.. இப்போதுதான் அருந்ததிக்கு நிம்மதி பெருமூச்சு வருகிறது..
பையை அங்கிருந்த அலமாரியில் வைத்து விட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை துப்பட்டாவால் துடைத்துக் கொள்கிறாள்..
அவன் தப்பானவன் என்றர்த்தம் இல்லை.. ஆனாலும் இது சரி இல்லையே.. யாரேனும் பார்க்க நேரிட்டால் ஒரு சிறிய குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரென்று எத்தனை பேருக்கு எண்ணம் தோன்றும்.. வக்கிர மனம் படைத்தவர்களால் அப்படி தெளிவாக தீர்க்கமாக யோசிக்க முடியுமா..! உள்ளுக்குள் குழம்பிப் போயிருந்தவள் மகரிஷியிடம் இது பற்றி வெளிப்படையாக பேசியும் இருந்தாள்..
"சார்..!"
கண்கள் குறுக்கி பார்த்தான் மகரிஷி..
"இல்ல.. நீங்க டியூஷன் பீஸ் எவ்வளவு வேணும்னு சொல்லிட்டீங்கன்னா..!"
"தவுசன்ட் ருபீஸ்..!" என்றான் தயக்கமே இல்லாமல்..
"ஆயிரம் ரூபாயா.." அருந்ததி திறந்த வாய் மூடவில்லை..! சாதாரணமாக வெளியே நடத்தப்படும் டியூஷன்களில் இதைவிட அதிகமாக வசூலிக்கப்படுகிறது தான்.. ஆனாலும் இந்த ஆயிரம் ரூபாய் தொகை அருந்ததியை பொறுத்தவரை அவள் வருமானத்திற்கு அதிகப்படி..
"சார் அவ்ளோ பீஸ் கட்ட முடியாது ஒரு ஐநூறு.."
"ஓகே, 1500 குடுத்துடுங்க.."
"என்னது..! சார் நான் 500 ரூபா கூட்டிக்க சொல்லல.. குறைச்சுக்க சொன்னேன்.."
"ம்ம்.. பார்க்கலாம் முதல்ல உங்க பொண்ணு நல்லா படிச்சு மார்க் எடுக்கட்டும்..! அப்புறம் என்ன பீஸ் கொடுக்கணும்னு நீங்களே முடிவு பண்ணுங்க.."
"சார் அப்புறம் இன்னொரு விஷயம்..!"
"சீக்கிரம் சொல்லுங்க..!"
"சார் டியூஷன் சொல்லிக் கொடுக்கறதுன்னா இப்படி திண்ணையில் உட்கார வச்சு சொல்லி கொடுங்க.. ரூமுக்குள்ள வேண்டாம்..! சின்ன குழந்தை அவ எதிர்காலத்தை பற்றி யோசிச்சு பாருங்க.."
"இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா..! அ பிட்டதோ தள்ளிலா மாட்லாடு" (அந்த குழந்தையோட அம்மா மாதிரி பேசுங்க) அவன் முகத்தில் கோப கனல்..
"பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்..ஏன்னா நீங்க சொல்ற மாதிரி நான் என் குழந்தையோட அம்மா..! படிப்பை விட அவ மனநலமும் எதிர்காலமும் எனக்கு ரொம்ப முக்கியம்.."
அருந்ததியின் தெளிவான பேச்சில் நிதர்சனம் புரியவே கட்டுக்குள் வந்தான்..
"வாசல்ல உட்கார முடியலங்க.. தோம காது.. கொசுக்கடி.. உங்க பொண்ணோட முகத்தில் சிவப்பு சிவப்பா தடிப்பா இருக்கே.. பார்த்தீங்களா இல்லையா..! அம்மான்னு வாயில சொல்லிக்கிட்டா மட்டும் பத்தாது.."
"சார்..!"
"இங்க பாருங்க.. தேவையில்லாம என்னை அசிங்கப்படுத்தறீங்க.. நான் சந்திரமதிய சின்ன குழந்தையா பாக்கறேன்.. உள்ள தான் டியூஷன் நடக்கும்.. உங்களுக்கு இஷ்டம் இல்லைனா டியூசனை விட்டு நிறுத்திக்கோங்க.." என்றான் காரசாரமான குரலில்..
"ஒரு வாரத்துக்கு பிறகு நாங்க வேற இடத்துக்கு போயிடுவோம் சார்.."
"ஒரு வாரம் முடிஞ்ச பிறகு அதை யோசிக்கலாம்.. இப்போ உங்ககிட்ட நின்னு பேச எனக்கு நேரமில்லை..!" என்றவன் அத்தோடு அந்த பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்..
வீடு பார்க்க வேண்டும்.. இன்று நாளை என்று இழுத்தடிக்கிறது.. நகர முடியாத அளவிற்கு டெலிவரி வேலை அவளை விழுங்கிக் கொண்டது.. ஒவ்வொரு டெலிவரிக்கும் கொஞ்சம் இன்சென்டிவ் கிடைக்கும்.. அதைவிடுத்து வேறு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அவளால்..!
அவளாக நிர்ணயித்துக் கொண்ட ஒரு வார காலக்கெடு முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில்.. இப்போதுதானா அந்த கந்து வட்டிக்காரன் வீட்டு வாசலில் வந்து நிற்க வேண்டும்..!
நாராசமான வார்த்தைகளால் அருந்ததியின் மானமரியாதையை வீதியில் கிழித்து வீசிக் கொண்டிருந்தான் அவன்..!
"சார் கத்தாதீங்க..! எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுங்க எப்படியாவது அசலை அடைச்சுடுவேன்.." அவமானத்தில் சுருண்டு கொதித்த நீருற்றாய் வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்..
"எப்படி அடைப்ப? ஏற்கனவே ஒரு வருஷமா இந்தா தரேன் அந்த தரேன்னு டிமிக்கி தந்தவ தானே நீ..! இப்போ நீ சொல்றத நம்பி உன்னை அப்படியே விட்டுட்டு போக என்னைய பாத்தா இளிச்ச மாதிரி தெரியுதா.. ஹான்? அந்த மனிதன் பேய் போல் உறுமினான்..
அங்கே பேச்சுவார்த்தை நடக்கும்போதே அறையில் இருந்து வெளிப்பட்ட மகரிஷி கூடத்தில் மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த சந்திரமதியை பார்த்து "என்னாச்சும்மா..?" என உருவங்களை உயர்த்தினான்..
"வெளிய சண்ட.. அம்மா வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க!" சைகையில் சொன்னாள் சந்திரமதி..
ஓ.. என்றவன் வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும் சண்டையை பொருட்படுத்தாமல் பைக்கில் ஏறி ஆக்ஸிலரேட்டரை முறுக்கினான்..
காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் அருந்ததியை தொய்த்து எடுத்துக் கொண்டிருந்தான் அந்த ஆள்..
"கடனை கட்டி முடிக்க வழி இல்லன்னா நான் வேணா ஒரு வழி சொல்லட்டுமா..!"
"அண்ணா உங்க பேச்சு சரியில்ல.."
அட முழுசா கேளுங்கறேன்..
நீ பார்க்க ரொம்ப சுமாரா தான் இருக்க.. ஆனா உன் பொண்ணு ரொம்ப சோக்கா இருக்கா..! அவள தூக்கிட்டு போறேன்.. வாங்கிற பணத்தை வட்டியோடு கொடுத்துட்டு வந்து பொண்ண கூட்டிட்டு போ.."
"ச்சீ.. நீயெல்லாம் மனுஷனா.. அவ குழந்தைடா உங்க மவ வயசுள்ள பொண்ண தப்பா பேசற நீயெல்லாம் நாசமா நாதியத்துதான் போவ.." கோபத்தில் வார்த்தைகள் புரண்டன அருந்ததிக்கு..
"நியாயதர்மம் பார்த்தா தொழில் செய்ய முடியாதே..! டேய் அந்த புள்ளைய போய் தூக்கிட்டு வாங்கடா..! இவ்ளோ திமிரா பேசுற நீ பணத்தை வைச்சுட்டு உம்மவள கூட்டிட்டு போ.." தனக்கு பின்னால் நின்றிருந்த இருவரை வீட்டுக்குள் செல்லுமாறு கண்ணை காட்டினான் அந்த வட்டிக்காரன்..
அவர்களுக்கு முன்பாக வீட்டு வாசலை வழிமறித்து நின்றான் மகரிஷி..
"ஒருத்தன் வீட்டுக்குள்ள நுழையக்கூடாது..! எவனாவது குழந்தை மேல கைய வைக்கணும்னு நினைச்சா கூட உடம்புல உயிர் இருக்காது.."
ஆக்ரோஷமான இந்த குரலில் விக்கித்து போனாள் அருந்ததி..
"என்னடா செய்வ.. அவள சொன்னா உனக்கு கோவம் வருது..! என்னடா சம்பந்தம் உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஆமா நீ பேசுற விதமே சரியில்லையே எந்த ஊருடா நீ..!"
"எந்த ஊரா இருந்தா.. என்னடா தப்புதட்டி கேட்க யாரு வேணா வரலாம்..!"
"அப்போ சாரு ஹீரோவா.."
"அம்மாவையும் பொண்ணையும் டார்ச்சர் பண்றதா கந்து வட்டி கேஸ்ல உன்னை உள்ள தள்ளி கம்பி எண்ண வைக்க முடியும் தெரியுமா..?"
"ஆஹா பாருடா.. எனக்கு சட்டம் சொல்லித் தர்றாரு ஐயா.. இதெல்லாம் தெரியாமத்தான் வட்டிக்கு விட்டு பொழைக்கிறோமா.. கஷ்டம்னு கை நீட்டி காசு வாங்க வேண்டியது.. அப்புறம் வட்டியும் தரமா அசலும் குடுக்காம இழுத்தடிச்சா இப்படித்தான் வேற வழியில வசூலிக்க முடியும்.."
"ஏய்ய்ய்.. உன்ன பணத்தை கேட்டு வாங்க வேண்டாம்னு சொல்லல.. ஆனா கேக்கறதுக்கு ஒரு முறை இருக்கு.."
"வரிசைத்தட்டு வைச்சு முறையோட கேக்கனுமா..? அவ்ளோ அக்கறை இருந்தா நீ எடுத்து வை அந்த காச..!"
நீண்ட மூச்சுவிட்டு அருந்ததியை ஒரு பார்வை பார்த்தான் மகரிஷி..
"எவ்வளவு தரணும்..?"
"அசலும் வட்டியுமா சேத்து நாப்பத்தஞ்சாயிரம் ரூபா தரணும்.."
"உன் அக்கவுண்ட் நம்பர் சொல்லு.. காசு அனுப்பி விடுறேன்.. ஆனா இதுக்கப்புறம் இந்த வீட்டு பக்கம் உன் முகத்தை பார்த்தா அப்புடு நீவு பூர்த்திகா இன்ட்டிகி சேரலேவு.. அர்த்தமாயிந்தா..!" (முழுசா வீடு போய் சேர முடியாது)
"ஓ.. தெலுங்கா..! எப்பவும் வந்தாரை வாழவைக்குமாம் தமிழகம்.. இங்க வித்தியாசமா தமிழுக்கு தெலுங்கு உதவி செய்யுதே.. ரைட்..டு.. நமக்கு காசு வந்தா போதும்.. யார் எக்கேடு போனா நமக்கென்ன..!" என்றவன் அக்கவுண்டில் காசு வந்ததும் ஆட்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..
அழுகையை உதட்டுக்குள் அடக்கி ஆஸ்துமா நோயாளி போல் திணறியபடி நின்றிருந்தாள் அருந்ததி..!
"நீங்க ஓகே தானே..!" மிக நெருக்கத்தில் கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர்..
"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நீங்க மட்டும் வராமல் போயிருந்தா!"
"நீ தேங்க்ஸ செத்த புட்டலோ வேயன்டி.."
(உன் நன்றியை தூக்கி குப்பையில போடு..)
கோபத்தோடு அவளிடம் பாய்ந்தான் மகரிஷி..
கண்களில் மிரட்சியோடு நின்றிருந்தவளிடம் அதற்கு மேல் அவனால் கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை..
"அறிவில்ல.. பினான்ஸ் வாங்கறது தப்பு இல்ல ஆனா யார்கிட்ட வாங்கணும்னு தெரிஞ்சு வாங்கணும்.. துணையில்லாம தனியா இருக்கறோம்னு தெரிஞ்சும் இப்படி ஒரு ரவுடி கிட்ட எந்த முட்டாளாவது கடன் வாங்குவானா..!"
"வாங்கும் போது நல்லபடியாத்தான் பேசினான்.. போகப் போகத்தான் சுயரூபம் தெரிஞ்சுது..!" அருந்ததியின் குரல் நடுங்கியது..
உண்மைதானே.. ஒருவேளை ரிஷி மட்டும் இல்லாமல் போயிருந்தால்.. அடுத்து என்ன நிகழ்ந்திருக்குமென அருந்ததியால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. அய்யோ என் மகள்.. தேகம் கொதிப்பும் நடுக்கமுமாக தடதடத்தது..
மகரிஷியால் அவள் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது தாய்ப் பாசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது..
அருந்ததியை இளக்கமாக ஒரு பார்வை பார்த்தான்.. அதற்கு மேல் எதுவும் பேசவில்லை..
தலை சாய்த்து உள்ளே பார்த்தவன் "சந்திராம்மா டைம் ஆகிப் போயிந்தி.. வர்றியா..!" என்றான் சத்தமாக..!
"இது வந்துட்டேன் ரிஷி..!" புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தவள் "அம்மா டாட்டா டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டேன்" என்று சொல்லியபடி ரிஷியோடு பைக்கில் பின்பக்கம் ஏறி அமர்ந்தாள்..
இருவரும் சென்றுவிட தன்னந்தனியாய் நின்றிருந்தவள் உ..உ..உ.. என்ற கிசுகிசுப்பான சத்தத்தில் கீழே குனிந்து பார்த்தாள்..
மோத்தி அவளை நிமிர்ந்து பார்த்தது..
தொடரும்..
Last edited: