- Joined
- Jan 10, 2023
- Messages
- 75
- Thread Author
- #1
அறைக்குள் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை பேருக்கு புரட்டிக் கொண்டிருந்தவன் மனம் அதில் லயிக்காமல் போகவே நீண்ட பெருமூச்சுவிட்டு புத்தகத்தை கீழே வைத்து கையை தலைக்கு அண்ட கொடுத்தபடி சாய்ந்து படுத்தான்..!
விரட்டி விட்டாலும் மீண்டும் தாயிடம் ஓடும் குழந்தையாய் நெஞ்சம் அருந்ததியை சுற்றி சுற்றி வந்தது..! அவளின் அழுத முகம் கண்முன்னே தோன்றி கலக்கத்தை ஏற்படுத்தியது..
வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்திற்கு மேலாயிற்று.. வாசலில் வண்டி சத்தம் கேட்டவுடன் கேட்டின் மேல் காலை வைத்து எம்பி நின்று எட்டிப் பார்த்து ரிஷி வண்டியிலிருந்து இறங்கிய கணம் முதல் வாலை சுழட்டி கொண்டு காலை சுற்றி சுற்றி வரும் மோத்தி பயலும் இவ்வளவு நேரமான பின்னும் அவனை வந்து பார்க்கவில்லை..
ஒரு உந்துதலில் மெத்தையிலிருந்து எழுந்து ஜன்னலை திறந்து வைத்து வெளியே எட்டிப் பார்த்தான்.. அருந்ததி அழுதபடி திண்ணையில் படுத்திருக்க அவள் காலடியில் அமர்ந்திருந்தான் மோத்தி..!
மோத்தி அருந்ததியின் மேல் காட்டும் காருண்யத்தை காணுகையில் ரிஷிக்கு வியப்பாக இருந்தது..!
யாரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் ஜீவனல்ல அவன்.. நான்கு சுவற்றுக்குள்ளான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் மகரிஷியை தாண்டி விரிந்ததில்லை அவன் பார்வை.. குரைத்து கடித்து மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ரகமில்லை என்றாலும்.. பிஸ்கட்டையோ பிரியாணியையோ காட்டி அவனை எளிதில் ஈர்த்து விட முடியாது..!
சந்திரமதியாவது பரவாயில்லை பொதுவாக வாயில்லா பிராணிகளுக்கு குழந்தைகளை பிடிக்கும் என்று ரீதியில் ஏற்றுக்கொள்ளலாம்..
ஜீவகாருண்யம் பரிவு எதுவுமில்லாது வெறுப்பால் விரட்டிக் கொண்டிருக்கும் அருந்ததி மேல் இவனுக்கேன் இத்தனை பிரியம் என்று புரியவில்லை மகரிஷிக்கு..!
அருந்ததியின் அழுகை அவன் இதயத்தை நசுக்கியது.. மற்றவர் விஷயத்தில் தலையிடும் ஆள் இல்லையே இவன்.. அருந்ததியின் தாய்பாசம்.. உழைப்பு.. குழைவில்லா நிமிர்வு நேர்மை.. அவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருந்தது..
அருந்ததியின் தாய்மை உணர்வில் தன் அன்னையை கண்டான் மகரிஷி.. ஆனால் சந்திரமதி பெற்றவளை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்துவது அவன் மனதுக்கு வேதனையை தருகிறது..
அறைக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவன் மொபைல் தொலைக்காட்சி புத்தகம் என தனது நேரத்தை கரைக்க முயன்றான்..
தெளிவான மனநிலையில் இருந்திருந்தால் நேரத்தை அவன் கையாண்டிருப்பான்..
இப்போது அருந்ததியால் அவன் மனதில் சஞ்சலம்..! எதிலும் தன் சிந்தனையை கருத்தாக நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை..
இரவு ஒன்பது மணியான பின்னும் அருந்ததி உள்ளே வராமல் போகவே ஜன்னல் திரையை விலக்கி சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவுடன் வெளியே வந்து செருப்பை போட்டுக் கொண்டு வண்டியை கிளப்பினான்..
இவ்வளவு நேரம் அவள் காலடியில் அசையாமல் படுத்திருந்த மோத்தி.. ரிஷியை கண்டதும் தலையை தூக்கிப் பார்த்து வேகமாக ஓடிச் சென்று வண்டியில் ஏறிக்கொண்டது..
"இப்பதான் நான் உனக்கு கண்ணுக்கு தெரியறேனாடா..?" சின்ன அதட்டலுடன் மோத்தியின் தலையில் தட்டி வண்டியை உசுப்பினான்..
உள்ளிருந்து வெளியே வந்தவனின் பார்வையோ காலடி சத்தமோ மோத்தியின் துள்ளலோ அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.. அசையாமல் விழி நீருடன் மகளை நினைத்து ஏங்கிய வண்ணம் அப்படியே படுத்திருந்தாள் அருந்ததி.. வாசல் விளக்கை கூட மகரிஷிதான் போட்டுவிட்டு சென்றான்..
வழக்கமாக வாசல் படியிலோ திண்ணையிலோ தலையில் கை வைத்து யோசனையோடு கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தால் போதும் எதிர் வீட்டு கனகாவோ மூன்றாம் வீட்டு கலாவோ..
'என்ன ஆச்சு அருந்ததி..? ஏதாச்சும் பிரச்சனையா..! பாக்கவே ஒரு மாதிரி தெரியறயே..?" வேலை மெனக்கிட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து அக்கறையாக விசாரிப்பது வழக்கம்..
இன்று சத்தம் போட்டு அழுதிருக்கிறாள்.. வெகு நேரமாய் விழிகளில் கண்ணீருடன் வாசல் திண்ணையில் படுத்திருக்கிறாள்..!
தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு தங்களுக்குள்ளே ரகசியமாய் உரையாடிய அந்த நாலுபேரில் ஒருத்தி கூட வந்து அருந்ததியின் துயரத்தில் பங்கெடுத்து கொள்ளவில்லை..
என்னை ஏது என்று தோண்டி துருவி விஷயத்தை கறப்பதை தவிர அவர்களிடமிருந்து பெரிதாக ஆறுதல் ஒன்று கிடைத்து விடப்போவதில்லை என்றாலும்.. அக்கறையாக அக்கம்பக்கத்துக்கு வீட்டார் விசாரிக்கும் ஓரிரு வார்த்தைகள் கூட துணையாக இல்லாமல் போனதில் நெஞ்சோரம் நெருடலாக ஏதோ கசந்து போனது.. அதை இழுத்து வைத்து முக்கியத்துவம் தந்து யோசிக்கும் நிலையில் இல்லை அருந்ததி..
உணவுப் பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..
திண்ணையில் கண்கள் மூடி படுத்திருந்தவளை பார்த்துக்கொண்டே பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு உள்ளே சென்று தண்ணீர் பாட்டிலோடு அவள் பக்கத்தில் வந்தான்..
அதற்குள் இரு கால்களால் அவன் தோள் வரை எக்கி தொட்டு பரவசத்தோடு கீச்சு குரலில் கத்திக் கொண்டிருந்தான் மோத்தி..
"வஸ்துன்னாவு மோத்தி.. கொட்டிகா உந்து..!"
என்றவன் அருந்ததியின் தோள் தொட்டு மெல்ல உலுக்கினான்..
அடித்து பதறி எழுந்து அமர்ந்தாள் அருந்ததி..
"சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்.. வாங்க சாப்பிடலாம்.." என்று உணவு பொட்டலத்தை எடுத்து வெளியே வைக்க.. அவசரமாக மறுத்து வேண்டாம் என்று தலையசைத்தாள் அருந்ததி..
தலை சாய்த்து அயற்சியோடு அவளைப் பார்த்தான்..
"எத்தனை நாளைக்கு இப்படி சாப்பிடாம இருக்க போறீங்க..! என்ன உண்ணா விரதமா..? யாருக்காக..?"
"ஐயோ எனக்கு பசிக்கலைங்க விட்டுடுங்க மனசு சரியில்ல..!"
"உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு அருந்ததி.. சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்காதீங்க.. உங்க மக திரும்பி வரும்போது அவளை தோளோடு சேர்த்து அணைச்சுக்க உங்களுக்கும் தெம்பு வேணும் இல்லையா..!"
அவன் அறிவுரையைக் கேட்கும் நிலையில் இல்லை அவள்..
"சார் என்னை கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ் கொஞ்சம் தனியா விடுங்க.." எரிச்சலும் சோர்வுமாக வெளிப்பட்ட வார்த்தைகளில்.. அழுத்தமான பார்வையுடன் பெருமூச்செறிந்தவன்..
"ஓகே அப்புறம் உங்க இஷ்டம்" என்று மோதிக்கு மட்டும் அவன் வாயில் கவ்வி வந்த தட்டில் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு மிச்சத்தை பொட்டலங்கட்டி எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்..!
மீண்டும் சுவற்றில் சாய்ந்து வெற்றிடத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி..
மோதிக்கு மிக பிடித்த சிக்கன் பிரைட் ரைஸ்..! தட்டை முகர்ந்து பார்த்தவன் அருந்ததியை நிமிர்ந்து பார்த்தான்.. நாக்கை சுழட்டி ஒரே ஒரு சிக்கன் பீஸையும் சில சோற்று பருக்கைகளையும் மட்டும் உள்ளுக்குள் இழுத்துக்கொண்டவன் மீண்டும் அருந்ததியை தொந்தரவு பண்ணாமல் சற்று தள்ளி ஓரமாக அமர்ந்து கொண்டான்..
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த மகரிஷி மோத்தியின் உணவு தட்டு காலியாகாமல் இருப்பதைக் கண்டு..!
"ஏன்டா..! அந்தம்மா அவங்க பொண்ணுக்காக பட்டினி விரதம் கிடக்கறாங்க.. உனக்கென்னடா தலையெழுத்து..! சாப்பிட மாட்டேங்கற.. உள்ள வர மாட்டேங்குற.. என்னடா ஆச்சு உனக்கு..?" சற்று அதட்டலாகவே கேட்க மோத்தி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் நீட்டி வைத்த தன் இரு கால்களுக்கிடையே தலையை வைத்துக் கொண்டது..
அருந்ததியின் பார்வை தன்னிச்சையாக மோத்தியின் தட்டிற்கு சென்றது..
கண்களை சுருக்கி மோத்தியின் பக்கம் பார்வையை செலுத்தியவளுக்கு அவன் அன்பு புரிந்ததா தெரியவில்லை..
"சாப்பிட்டு உள்ள வர்றியா.. இல்ல இங்கேயே கிடக்கறியா.." மோத்தியை பார்த்து கேட்க அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை..!
செல்லங் கொடுத்து வளர்த்த தனக்கு செவி சாய்க்காமல் யாரோ ஒருத்தியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோறு தண்ணி துறந்து காவல் காத்தபடி அமர்ந்திருக்கும் மோத்தியின் மீது சின்ன கோபமா பொறாமையா தெரியவில்லை..!
"எக்கடும் கெட்டு போ.." என்றவனின் பார்வை மோத்தியை தாண்டி கோபமாக அருந்ததியின் மேல் படிந்து அடுத்த நொடி விலகியது..
"சார்.."
வாசலை தாண்டி உள்ளே சென்றவன் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து வெளியே வந்தான்..
"நீங்க சாப்டீங்களா..?"
"ரொம்பதாங்க அக்கற உங்களுக்கு..!" அவன் உதட்டில் நக்கல் சிரிப்பு..
"அப்ப நீங்க இன்னும் சாப்பிடலையா..?"
கண் முன்னாடி ஒருத்தர் பட்டினியா கிடக்கும்போது மனசாட்சியே இல்லாம தட்டுல சோத்தை போட்டு அள்ளி திங்கற அளவுக்கு நான் கல்நெஞ்சகாரன் இல்லை.."
"எனக்காக நீங்க ஏன் பட்டினி கிடக்கணும்.. போய் சாப்பிடுங்க.."
"அதான் சொன்னேனே..! ஒருத்தர் பட்டினி கிடக்கும் போது என்னால மனசாட்சிய ஓரங்கட்டி வச்சுட்டு கவலையே இல்லாமல் அள்ளி திங்க முடியாதுன்னு.. உங்களுக்கு தமிழ் தெரியாதா..?"
நேரந்தான்.. என்பது போல் அவள் பார்க்க..
"சரி நான் தூங்க போறேன்.. நீங்க இங்கேயே படுக்கிறதும் உள்ள போறதும் உங்க இஷ்டம்.." என்றவன் "மோத்தி வர்றியா இல்லையா..?" மீண்டும் அவனிடம் கோபமாக நின்றான்..
அவன் காதுகள் மட்டும் துருத்திக் கொண்டும் மெல்ல அசைந்தன..
இருவரையும் மாறி மாறி பார்த்த அருந்ததி..
"சரி சாப்பிடலாம்..! எடுத்துட்டு வாங்க.." என்றாள் மெல்லிய குரலில்..
சின்ன புன்னகையுடன் உள்ளிருந்து பார்சலை எடுத்து வந்தான். அருந்ததியும் சமையலறைக்கு சென்று தட்டு தண்ணீர் என அனைத்தையும் எடுத்து வந்து வைக்க.. திண்ணையில் அமர்ந்து இருவருமாக பகிர்ந்து உணவை உண்டனர்..!
அருந்ததியும் மகரிஷியும் உணவுண்ண ஆரம்பித்த அடுத்த இரண்டே நிமிடங்களில் மோத்தி முழு தட்டையும் காலி செய்திருந்தான்..
"ரொம்ப தேங்க்ஸ்ங்க.."
"உங்க மனசு எனக்கு புரியுது.. உங்க உணர்வுகளை நான் மதிக்கிறேன்.. அதுக்காக திண்ணையில படுத்து உங்க பிரச்சனையை ஊர் உலகத்துக்கு படம் போட்டு காட்டணும்னு அவசியமில்லை.. உள்ள போய் படுங்க..! குட் நைட்" மோடியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள அருந்ததி பெருமூச்செறிந்து உள்ளே வந்து கதவை சாத்திக்கொண்டு படுக்கையை தட்டி போட்டு படுத்துக்கொண்டாள்..
மறுநாள் காலையில்.. இட்லி வாங்க வந்த பெண்மணி ஒருத்தி..
"என்ன அருந்ததி உன் பொண்ண காணோம்.." என்று வீட்டுக்குள் எட்டிப் பார்க்க..!
"உன் சந்தோஷத்துக்கு தடையா இருக்கான்னு சொந்தக்காரங்க வீட்டிற்கு அனுப்பி வெச்சிட்டியா என்ன..?" என்றாள் இன்னொருத்தி..
"என்ன சந்தோஷம் ஒன்னும் புரியலையே..?" அவள் நீட்டியிருந்த எவர் சில்வர் ஜோடுதலையில் சாம்பாரை ஊற்றிக் கொண்டே கேட்டாள் அருந்ததி..
"ஒன்னுமில்ல.. உனக்கும் சின்ன வயசு தான..! நல்லது கெட்டது அனுபவிக்கனும்னு தோணும்ல.. வளர்ந்த பொண்ண மடியில கட்டிட்டு கனத்தோட சுத்த முடியாதுல்ல.. எப்படியோ சந்தோஷமா இருந்தா சரிதான்.."
"ஆனா எல்லாத்துக்கும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. மானம் மரியாதையோட பொழைக்கற கௌரவமான ஜனங்க வாழற இடம்.. ஒருத்தரால மத்தவங்க பேரு நாறிட கூடாதே.." அருந்ததியில் ஆரம்பித்து அந்த இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்க.. ஏற்கனவே அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் தலைப்போகும் பிரச்சனைகளில் இவர்கள் பேச்சு உரைக்கவில்லை புரியவும் இல்லை..
இருவரும் காசை தந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல.. அவர்கள் முதுகையே பார்த்தபடி யோசனையோடு நின்றவளின் பின்புறம் கேட்டது அவன் குரல்..
"குட் மார்னிங்.."
சட்டென திரும்பி பார்க்க புன்னகையோடு நின்றிருந்தான் மகரிஷி..
உடற்பயிற்சி அவன் தேகத்தை இறுக்கிப்பிடித்து இன்னும் வடிவமான உடற்கட்டை கொண்டு வந்திருக்க.. முன்பை விட ஆள் மெருகேறி விட்டதாய் தோன்றியது அவளுக்கு..
ஆணழகன் என்று மையல் கொள்ளும் சபலம் எதுவுமில்லை.. வசீகரமாய் புன்னகைக்கும் அந்த வரிசை கவர்ச்சியான பற்கள் தந்த ஆறுதல் அவள் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது..
"கு.. குட் மார்னிங்..!" என்றவள் அங்கிருந்த நகர்ந்து கொண்டாள்..
உடற்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பெரிய இட்லி பாத்திரத்தை குழாயில் வைத்து கழுவிக் கொண்டிருந்தவர்களிடம் "டிபன் ரெடியா இருக்கா?" என்றான் உரிமைப்பட்டவன் போல்..
அவன் குரலில் அவசரமாக நைட்டியின் மேல் விலகியிருந்த துண்டை சரி செய்து கொண்டு
"ம்ம் இருக்கு..!" என்றாள்..
"சூடா இருக்கா..?"
"ஆமா.. உங்களுக்கு தனியா ஹாட் பாக்ஸ்ல எடுத்து வச்சுட்டேன்.."
காய்கறி கூடையோடு கடைத் தெருவுக்கு சென்று விட்டு திரும்பி வந்த கனகா இந்த உரையாடலை மனதில் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாக தலையசைத்துக் கொண்டே சென்றாள்..
வாசலில் பல்துலக்கி கொண்டே எதிர்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் உடை எங்கே விலகி.. அங்கே என்ன தெரிகிறது.. என கண்களில் ஜும் போட்டு ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருந்த கனகாவின் கணவன் சத்யராஜ்..
யோவ்..! என்ற குரலில் அடித்து பதறி அட்டென்ஷனில் நின்றான்..
"இன்னுமா பல்லு விளக்குற..! மணி எட்டே கால்..! எப்ப குளிச்சு எப்ப வேலைக்கு போறத ஐடியா..?" வெங்கல பானைக்குள் கூழங்கல்லை உருட்டிய குரலில்..
"இதோ பத்தே நிமிஷம்.. இதுக்கு தான் இப்படி கத்துனியா..!" என்றவனுக்குள் அப்பாடா என்ற நிம்மதி பெரும் மூச்சு..!
"யோவ் ஒரு நிமிஷம் நில்லு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." கறார் குரலில் கனகா சொல்லவும்
"என்னடி என்ன ஆச்சு" உள்ளுக்குள் மறுபடி மரண பீதி..
"அந்த எதிர் வீட்டு அருந்ததி இருக்காள்ல..?"
"இருக்கா..! வேலைக்காகாத தீஞ்சு போன அண்டா.. இப்ப என்ன அதுக்கு.." என்ற சலித்தான் அவன்..
"அய்யே..! நீ வேற.. அவ பொண்ண நேத்துலருந்து காணல..!"
"அப்புறம்..?" ஆர்வமாக கேட்டான் அவன்..
"என்னன்னு தெரியல.. ராத்திரியெல்லாம் அழுதுகிட்டு கிடந்தா.. இப்ப காலையில என்னன்னா மினுக்கிக்கிட்டு அந்த ஆள் கிட்ட கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருக்கா..?"
"எந்த ஆளுடி..!"
"அதான் வாட்ட சாட்டமா தெலுங்கு பட ஹீரோ மாதிரி அந்த வீட்ல ஒரு ஆள் வந்து உட்கார்ந்திருக்கானே அவன் தான்.."
மனைவியின் இந்த வர்ணனை சத்யராஜுக்கு பிடிக்கவில்லை.. அவன் மட்டும் தான் நைட்டி அணிந்து குனிந்து நிமிர்ந்து தண்ணீர் குடம் தூக்கும் பெண்களை வெறிக்க வெறிக்க ரசிக்கலாம்.. கட்டிய மனைவி வாயால் கூட அடுத்த ஆணை அழகன் என்று சொல்லி விடக்கூடாது..! பதிவிரதை தன்மை பறிபோய்விடும்..
"என்ன பெரிய அழகு..! அவன் உயரமும் உடம்பும்.. தெலுங்கு பட ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி இருக்கான்.. அவனுக்கு நானே பரவாயில்லை.." என்றவனை ஏற இறங்க பார்த்தாள் கனகா..
"எ.. என்ன அப்படி பாக்கற.. ஏன் நான் அழகாத்தான இருக்கேன்.." தன் மேடிட்ட வயிற்றுக்கு கீழ் இறங்கிய லுங்கியை சரி செய்து கொண்டே அவன் கேட்க..
"நீ அழகா இல்லையான்னு அப்புறம் கண்ணாடிய போய் பார்த்து தெரிஞ்சுக்க.. நான் சொல்ல வந்த விஷயத்தை கேளு.."
"சீக்கிரம் சொல்லு..!"
"நேத்து பூரா பொண்ண காணலன்னு அழுதுட்டு இருந்தவ இப்ப மினுக்கலா சிரிச்சு அந்த ஆள் கிட்ட கொஞ்சிக்கிட்டு நிக்கிறாளே..?"
"அவங்க ரெண்டு பேரும் கொஞ்சிக்கறாங்கன்னு உனக்கெப்படி தெரியும்..?"
"அட.. டிபன் ரெடியான்னு பொண்டாட்டி மாதிரி உரிமையா கேக்கறதும் ஹாட் பாக்ஸ்ல உங்களுக்கு தனியா எடுத்து வச்சிருக்கேன்னு அவ வழிஞ்சிக்கிட்டு சொல்றதும்.. இதுக்கு மேல என்னய்யா வேணும்..!"
"என்னடி சொல்ற.. அவன் என் அளவுக்கு இல்லனாலும் பாக்க கொஞ்சம் சுமாரா அழகாத்தான் இருக்கான்.. அந்தாளுக்கு இப்படி ஒரு டேஸ்ட்டா..?"
"காஞ்ச மாடு காகிதத்தை கூட தின்னும்.. இவளுக்கு பணம் வேணும்.. அவனுக்கு சுகம் வேணும்..! ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா இருக்காங்க போல.. இடைஞ்சலா இருந்த புள்ளைய எங்கேயோ துரத்தி விட்டுட்டாங்களோ என்னவோ..!"
"ஆமான்டி அந்த பொண்ணு கூட இந்த ஆள் வந்ததிலிருந்து அனத்திக்கிட்டே கிடந்துச்சு.. இதுதான் பிரச்சினையா இருக்குமோ.."
இல்லையே சின்னது இவளுக்கு மேல அவன்கிட்ட இளிக்குதே..?
என்ன சங்கதி ஒன்னும் புரியல"
"வயசு வந்த புள்ளைய வெச்சுகிட்டு உடம்பு அரிப்பெடுக்குதாமா இவளுக்கு..! இனி அவ வீட்டு பக்கம் போய் நின்னு பேசு.. உன்ன வகுந்துடறேன்.."
"எனக்கென்னவோ இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும்னு தோணுது.. பிளான் பண்ணி தான் இந்த வீட்டுக்கு வரவச்சிருப்பா.."
"அப்புறம் எதுக்குடி வாடகைக்கு வீடு தேடணும்.."
"எல்லாம் நடிப்பு..! ஊர் உலகம் தன்னை தப்பா பேசக்கூடாதுன்னு ஒரு பசப்பல் நாடகம் தான் வேறென்ன..?"
"அப்ப ரெண்டு பேருக்குள்ள கள்ள உறவு இருக்குன்னு சொல்ற..!"
"ராத்திரி அந்த பொண்ணு தூங்கினதும் ரெண்டு பேரும் உள் ரூமுக்குள்ள போய் கதவ தாப்பா போட்டுக்கிட்டு கட்டி பிடிச்சிக்கிட்டத நான்தான் பார்த்தேனே.."
"அய்யோ..!"
"ரெண்டு மூணு நாளா அவங்க ரெண்டு பேரும் கொஞ்சற அசிங்கத்த இந்த தெருவே பாத்து காரி துப்புது.. இந்த ரோமியோ அவளோட கள்ளக்காதலனாம்..!"
"நல்ல புருஷன விட்டுட்டு வந்த இவள மாதிரி ஆளுங்களுக்கு காஜிய தீர்த்துக்க இப்படி கள்ளக்காதலன் கிடைச்சா தான் உண்டு..! கௌரவமா வச்சு வாழ எவனும் வரமாட்டான்.. நீ உள்ள போ..!" கனகாவை வீட்டுக்குள் அனுப்பி விட்டு தனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா என எதிர் வீட்டை எட்டிப் பார்த்தான் சத்யராஜ்..
தொடரும்..
விரட்டி விட்டாலும் மீண்டும் தாயிடம் ஓடும் குழந்தையாய் நெஞ்சம் அருந்ததியை சுற்றி சுற்றி வந்தது..! அவளின் அழுத முகம் கண்முன்னே தோன்றி கலக்கத்தை ஏற்படுத்தியது..
வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்திற்கு மேலாயிற்று.. வாசலில் வண்டி சத்தம் கேட்டவுடன் கேட்டின் மேல் காலை வைத்து எம்பி நின்று எட்டிப் பார்த்து ரிஷி வண்டியிலிருந்து இறங்கிய கணம் முதல் வாலை சுழட்டி கொண்டு காலை சுற்றி சுற்றி வரும் மோத்தி பயலும் இவ்வளவு நேரமான பின்னும் அவனை வந்து பார்க்கவில்லை..
ஒரு உந்துதலில் மெத்தையிலிருந்து எழுந்து ஜன்னலை திறந்து வைத்து வெளியே எட்டிப் பார்த்தான்.. அருந்ததி அழுதபடி திண்ணையில் படுத்திருக்க அவள் காலடியில் அமர்ந்திருந்தான் மோத்தி..!
மோத்தி அருந்ததியின் மேல் காட்டும் காருண்யத்தை காணுகையில் ரிஷிக்கு வியப்பாக இருந்தது..!
யாரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் ஜீவனல்ல அவன்.. நான்கு சுவற்றுக்குள்ளான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் மகரிஷியை தாண்டி விரிந்ததில்லை அவன் பார்வை.. குரைத்து கடித்து மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் ரகமில்லை என்றாலும்.. பிஸ்கட்டையோ பிரியாணியையோ காட்டி அவனை எளிதில் ஈர்த்து விட முடியாது..!
சந்திரமதியாவது பரவாயில்லை பொதுவாக வாயில்லா பிராணிகளுக்கு குழந்தைகளை பிடிக்கும் என்று ரீதியில் ஏற்றுக்கொள்ளலாம்..
ஜீவகாருண்யம் பரிவு எதுவுமில்லாது வெறுப்பால் விரட்டிக் கொண்டிருக்கும் அருந்ததி மேல் இவனுக்கேன் இத்தனை பிரியம் என்று புரியவில்லை மகரிஷிக்கு..!
அருந்ததியின் அழுகை அவன் இதயத்தை நசுக்கியது.. மற்றவர் விஷயத்தில் தலையிடும் ஆள் இல்லையே இவன்.. அருந்ததியின் தாய்பாசம்.. உழைப்பு.. குழைவில்லா நிமிர்வு நேர்மை.. அவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருந்தது..
அருந்ததியின் தாய்மை உணர்வில் தன் அன்னையை கண்டான் மகரிஷி.. ஆனால் சந்திரமதி பெற்றவளை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்துவது அவன் மனதுக்கு வேதனையை தருகிறது..
அறைக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தவன் மொபைல் தொலைக்காட்சி புத்தகம் என தனது நேரத்தை கரைக்க முயன்றான்..
தெளிவான மனநிலையில் இருந்திருந்தால் நேரத்தை அவன் கையாண்டிருப்பான்..
இப்போது அருந்ததியால் அவன் மனதில் சஞ்சலம்..! எதிலும் தன் சிந்தனையை கருத்தாக நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை..
இரவு ஒன்பது மணியான பின்னும் அருந்ததி உள்ளே வராமல் போகவே ஜன்னல் திரையை விலக்கி சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவுடன் வெளியே வந்து செருப்பை போட்டுக் கொண்டு வண்டியை கிளப்பினான்..
இவ்வளவு நேரம் அவள் காலடியில் அசையாமல் படுத்திருந்த மோத்தி.. ரிஷியை கண்டதும் தலையை தூக்கிப் பார்த்து வேகமாக ஓடிச் சென்று வண்டியில் ஏறிக்கொண்டது..
"இப்பதான் நான் உனக்கு கண்ணுக்கு தெரியறேனாடா..?" சின்ன அதட்டலுடன் மோத்தியின் தலையில் தட்டி வண்டியை உசுப்பினான்..
உள்ளிருந்து வெளியே வந்தவனின் பார்வையோ காலடி சத்தமோ மோத்தியின் துள்ளலோ அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.. அசையாமல் விழி நீருடன் மகளை நினைத்து ஏங்கிய வண்ணம் அப்படியே படுத்திருந்தாள் அருந்ததி.. வாசல் விளக்கை கூட மகரிஷிதான் போட்டுவிட்டு சென்றான்..
வழக்கமாக வாசல் படியிலோ திண்ணையிலோ தலையில் கை வைத்து யோசனையோடு கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தால் போதும் எதிர் வீட்டு கனகாவோ மூன்றாம் வீட்டு கலாவோ..
'என்ன ஆச்சு அருந்ததி..? ஏதாச்சும் பிரச்சனையா..! பாக்கவே ஒரு மாதிரி தெரியறயே..?" வேலை மெனக்கிட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து அக்கறையாக விசாரிப்பது வழக்கம்..
இன்று சத்தம் போட்டு அழுதிருக்கிறாள்.. வெகு நேரமாய் விழிகளில் கண்ணீருடன் வாசல் திண்ணையில் படுத்திருக்கிறாள்..!
தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு தங்களுக்குள்ளே ரகசியமாய் உரையாடிய அந்த நாலுபேரில் ஒருத்தி கூட வந்து அருந்ததியின் துயரத்தில் பங்கெடுத்து கொள்ளவில்லை..
என்னை ஏது என்று தோண்டி துருவி விஷயத்தை கறப்பதை தவிர அவர்களிடமிருந்து பெரிதாக ஆறுதல் ஒன்று கிடைத்து விடப்போவதில்லை என்றாலும்.. அக்கறையாக அக்கம்பக்கத்துக்கு வீட்டார் விசாரிக்கும் ஓரிரு வார்த்தைகள் கூட துணையாக இல்லாமல் போனதில் நெஞ்சோரம் நெருடலாக ஏதோ கசந்து போனது.. அதை இழுத்து வைத்து முக்கியத்துவம் தந்து யோசிக்கும் நிலையில் இல்லை அருந்ததி..
உணவுப் பொட்டலத்துடன் வண்டியிலிருந்து இறங்கினான் மகரிஷி..
திண்ணையில் கண்கள் மூடி படுத்திருந்தவளை பார்த்துக்கொண்டே பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு உள்ளே சென்று தண்ணீர் பாட்டிலோடு அவள் பக்கத்தில் வந்தான்..
அதற்குள் இரு கால்களால் அவன் தோள் வரை எக்கி தொட்டு பரவசத்தோடு கீச்சு குரலில் கத்திக் கொண்டிருந்தான் மோத்தி..
"வஸ்துன்னாவு மோத்தி.. கொட்டிகா உந்து..!"
என்றவன் அருந்ததியின் தோள் தொட்டு மெல்ல உலுக்கினான்..
அடித்து பதறி எழுந்து அமர்ந்தாள் அருந்ததி..
"சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்.. வாங்க சாப்பிடலாம்.." என்று உணவு பொட்டலத்தை எடுத்து வெளியே வைக்க.. அவசரமாக மறுத்து வேண்டாம் என்று தலையசைத்தாள் அருந்ததி..
தலை சாய்த்து அயற்சியோடு அவளைப் பார்த்தான்..
"எத்தனை நாளைக்கு இப்படி சாப்பிடாம இருக்க போறீங்க..! என்ன உண்ணா விரதமா..? யாருக்காக..?"
"ஐயோ எனக்கு பசிக்கலைங்க விட்டுடுங்க மனசு சரியில்ல..!"
"உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு அருந்ததி.. சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்காதீங்க.. உங்க மக திரும்பி வரும்போது அவளை தோளோடு சேர்த்து அணைச்சுக்க உங்களுக்கும் தெம்பு வேணும் இல்லையா..!"
அவன் அறிவுரையைக் கேட்கும் நிலையில் இல்லை அவள்..
"சார் என்னை கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ் கொஞ்சம் தனியா விடுங்க.." எரிச்சலும் சோர்வுமாக வெளிப்பட்ட வார்த்தைகளில்.. அழுத்தமான பார்வையுடன் பெருமூச்செறிந்தவன்..
"ஓகே அப்புறம் உங்க இஷ்டம்" என்று மோதிக்கு மட்டும் அவன் வாயில் கவ்வி வந்த தட்டில் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு மிச்சத்தை பொட்டலங்கட்டி எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்..!
மீண்டும் சுவற்றில் சாய்ந்து வெற்றிடத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி..
மோதிக்கு மிக பிடித்த சிக்கன் பிரைட் ரைஸ்..! தட்டை முகர்ந்து பார்த்தவன் அருந்ததியை நிமிர்ந்து பார்த்தான்.. நாக்கை சுழட்டி ஒரே ஒரு சிக்கன் பீஸையும் சில சோற்று பருக்கைகளையும் மட்டும் உள்ளுக்குள் இழுத்துக்கொண்டவன் மீண்டும் அருந்ததியை தொந்தரவு பண்ணாமல் சற்று தள்ளி ஓரமாக அமர்ந்து கொண்டான்..
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த மகரிஷி மோத்தியின் உணவு தட்டு காலியாகாமல் இருப்பதைக் கண்டு..!
"ஏன்டா..! அந்தம்மா அவங்க பொண்ணுக்காக பட்டினி விரதம் கிடக்கறாங்க.. உனக்கென்னடா தலையெழுத்து..! சாப்பிட மாட்டேங்கற.. உள்ள வர மாட்டேங்குற.. என்னடா ஆச்சு உனக்கு..?" சற்று அதட்டலாகவே கேட்க மோத்தி அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் நீட்டி வைத்த தன் இரு கால்களுக்கிடையே தலையை வைத்துக் கொண்டது..
அருந்ததியின் பார்வை தன்னிச்சையாக மோத்தியின் தட்டிற்கு சென்றது..
கண்களை சுருக்கி மோத்தியின் பக்கம் பார்வையை செலுத்தியவளுக்கு அவன் அன்பு புரிந்ததா தெரியவில்லை..
"சாப்பிட்டு உள்ள வர்றியா.. இல்ல இங்கேயே கிடக்கறியா.." மோத்தியை பார்த்து கேட்க அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை..!
செல்லங் கொடுத்து வளர்த்த தனக்கு செவி சாய்க்காமல் யாரோ ஒருத்தியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோறு தண்ணி துறந்து காவல் காத்தபடி அமர்ந்திருக்கும் மோத்தியின் மீது சின்ன கோபமா பொறாமையா தெரியவில்லை..!
"எக்கடும் கெட்டு போ.." என்றவனின் பார்வை மோத்தியை தாண்டி கோபமாக அருந்ததியின் மேல் படிந்து அடுத்த நொடி விலகியது..
"சார்.."
வாசலை தாண்டி உள்ளே சென்றவன் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து வெளியே வந்தான்..
"நீங்க சாப்டீங்களா..?"
"ரொம்பதாங்க அக்கற உங்களுக்கு..!" அவன் உதட்டில் நக்கல் சிரிப்பு..
"அப்ப நீங்க இன்னும் சாப்பிடலையா..?"
கண் முன்னாடி ஒருத்தர் பட்டினியா கிடக்கும்போது மனசாட்சியே இல்லாம தட்டுல சோத்தை போட்டு அள்ளி திங்கற அளவுக்கு நான் கல்நெஞ்சகாரன் இல்லை.."
"எனக்காக நீங்க ஏன் பட்டினி கிடக்கணும்.. போய் சாப்பிடுங்க.."
"அதான் சொன்னேனே..! ஒருத்தர் பட்டினி கிடக்கும் போது என்னால மனசாட்சிய ஓரங்கட்டி வச்சுட்டு கவலையே இல்லாமல் அள்ளி திங்க முடியாதுன்னு.. உங்களுக்கு தமிழ் தெரியாதா..?"
நேரந்தான்.. என்பது போல் அவள் பார்க்க..
"சரி நான் தூங்க போறேன்.. நீங்க இங்கேயே படுக்கிறதும் உள்ள போறதும் உங்க இஷ்டம்.." என்றவன் "மோத்தி வர்றியா இல்லையா..?" மீண்டும் அவனிடம் கோபமாக நின்றான்..
அவன் காதுகள் மட்டும் துருத்திக் கொண்டும் மெல்ல அசைந்தன..
இருவரையும் மாறி மாறி பார்த்த அருந்ததி..
"சரி சாப்பிடலாம்..! எடுத்துட்டு வாங்க.." என்றாள் மெல்லிய குரலில்..
சின்ன புன்னகையுடன் உள்ளிருந்து பார்சலை எடுத்து வந்தான். அருந்ததியும் சமையலறைக்கு சென்று தட்டு தண்ணீர் என அனைத்தையும் எடுத்து வந்து வைக்க.. திண்ணையில் அமர்ந்து இருவருமாக பகிர்ந்து உணவை உண்டனர்..!
அருந்ததியும் மகரிஷியும் உணவுண்ண ஆரம்பித்த அடுத்த இரண்டே நிமிடங்களில் மோத்தி முழு தட்டையும் காலி செய்திருந்தான்..
"ரொம்ப தேங்க்ஸ்ங்க.."
"உங்க மனசு எனக்கு புரியுது.. உங்க உணர்வுகளை நான் மதிக்கிறேன்.. அதுக்காக திண்ணையில படுத்து உங்க பிரச்சனையை ஊர் உலகத்துக்கு படம் போட்டு காட்டணும்னு அவசியமில்லை.. உள்ள போய் படுங்க..! குட் நைட்" மோடியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள அருந்ததி பெருமூச்செறிந்து உள்ளே வந்து கதவை சாத்திக்கொண்டு படுக்கையை தட்டி போட்டு படுத்துக்கொண்டாள்..
மறுநாள் காலையில்.. இட்லி வாங்க வந்த பெண்மணி ஒருத்தி..
"என்ன அருந்ததி உன் பொண்ண காணோம்.." என்று வீட்டுக்குள் எட்டிப் பார்க்க..!
"உன் சந்தோஷத்துக்கு தடையா இருக்கான்னு சொந்தக்காரங்க வீட்டிற்கு அனுப்பி வெச்சிட்டியா என்ன..?" என்றாள் இன்னொருத்தி..
"என்ன சந்தோஷம் ஒன்னும் புரியலையே..?" அவள் நீட்டியிருந்த எவர் சில்வர் ஜோடுதலையில் சாம்பாரை ஊற்றிக் கொண்டே கேட்டாள் அருந்ததி..
"ஒன்னுமில்ல.. உனக்கும் சின்ன வயசு தான..! நல்லது கெட்டது அனுபவிக்கனும்னு தோணும்ல.. வளர்ந்த பொண்ண மடியில கட்டிட்டு கனத்தோட சுத்த முடியாதுல்ல.. எப்படியோ சந்தோஷமா இருந்தா சரிதான்.."
"ஆனா எல்லாத்துக்கும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. மானம் மரியாதையோட பொழைக்கற கௌரவமான ஜனங்க வாழற இடம்.. ஒருத்தரால மத்தவங்க பேரு நாறிட கூடாதே.." அருந்ததியில் ஆரம்பித்து அந்த இருவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்க.. ஏற்கனவே அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் தலைப்போகும் பிரச்சனைகளில் இவர்கள் பேச்சு உரைக்கவில்லை புரியவும் இல்லை..
இருவரும் காசை தந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல.. அவர்கள் முதுகையே பார்த்தபடி யோசனையோடு நின்றவளின் பின்புறம் கேட்டது அவன் குரல்..
"குட் மார்னிங்.."
சட்டென திரும்பி பார்க்க புன்னகையோடு நின்றிருந்தான் மகரிஷி..
உடற்பயிற்சி அவன் தேகத்தை இறுக்கிப்பிடித்து இன்னும் வடிவமான உடற்கட்டை கொண்டு வந்திருக்க.. முன்பை விட ஆள் மெருகேறி விட்டதாய் தோன்றியது அவளுக்கு..
ஆணழகன் என்று மையல் கொள்ளும் சபலம் எதுவுமில்லை.. வசீகரமாய் புன்னகைக்கும் அந்த வரிசை கவர்ச்சியான பற்கள் தந்த ஆறுதல் அவள் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது..
"கு.. குட் மார்னிங்..!" என்றவள் அங்கிருந்த நகர்ந்து கொண்டாள்..
உடற்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் பெரிய இட்லி பாத்திரத்தை குழாயில் வைத்து கழுவிக் கொண்டிருந்தவர்களிடம் "டிபன் ரெடியா இருக்கா?" என்றான் உரிமைப்பட்டவன் போல்..
அவன் குரலில் அவசரமாக நைட்டியின் மேல் விலகியிருந்த துண்டை சரி செய்து கொண்டு
"ம்ம் இருக்கு..!" என்றாள்..
"சூடா இருக்கா..?"
"ஆமா.. உங்களுக்கு தனியா ஹாட் பாக்ஸ்ல எடுத்து வச்சுட்டேன்.."
காய்கறி கூடையோடு கடைத் தெருவுக்கு சென்று விட்டு திரும்பி வந்த கனகா இந்த உரையாடலை மனதில் வாங்கிக் கொண்டு ஒரு மார்க்கமாக தலையசைத்துக் கொண்டே சென்றாள்..
வாசலில் பல்துலக்கி கொண்டே எதிர்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் உடை எங்கே விலகி.. அங்கே என்ன தெரிகிறது.. என கண்களில் ஜும் போட்டு ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருந்த கனகாவின் கணவன் சத்யராஜ்..
யோவ்..! என்ற குரலில் அடித்து பதறி அட்டென்ஷனில் நின்றான்..
"இன்னுமா பல்லு விளக்குற..! மணி எட்டே கால்..! எப்ப குளிச்சு எப்ப வேலைக்கு போறத ஐடியா..?" வெங்கல பானைக்குள் கூழங்கல்லை உருட்டிய குரலில்..
"இதோ பத்தே நிமிஷம்.. இதுக்கு தான் இப்படி கத்துனியா..!" என்றவனுக்குள் அப்பாடா என்ற நிம்மதி பெரும் மூச்சு..!
"யோவ் ஒரு நிமிஷம் நில்லு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." கறார் குரலில் கனகா சொல்லவும்
"என்னடி என்ன ஆச்சு" உள்ளுக்குள் மறுபடி மரண பீதி..
"அந்த எதிர் வீட்டு அருந்ததி இருக்காள்ல..?"
"இருக்கா..! வேலைக்காகாத தீஞ்சு போன அண்டா.. இப்ப என்ன அதுக்கு.." என்ற சலித்தான் அவன்..
"அய்யே..! நீ வேற.. அவ பொண்ண நேத்துலருந்து காணல..!"
"அப்புறம்..?" ஆர்வமாக கேட்டான் அவன்..
"என்னன்னு தெரியல.. ராத்திரியெல்லாம் அழுதுகிட்டு கிடந்தா.. இப்ப காலையில என்னன்னா மினுக்கிக்கிட்டு அந்த ஆள் கிட்ட கொஞ்சி கொஞ்சி பேசிட்டு இருக்கா..?"
"எந்த ஆளுடி..!"
"அதான் வாட்ட சாட்டமா தெலுங்கு பட ஹீரோ மாதிரி அந்த வீட்ல ஒரு ஆள் வந்து உட்கார்ந்திருக்கானே அவன் தான்.."
மனைவியின் இந்த வர்ணனை சத்யராஜுக்கு பிடிக்கவில்லை.. அவன் மட்டும் தான் நைட்டி அணிந்து குனிந்து நிமிர்ந்து தண்ணீர் குடம் தூக்கும் பெண்களை வெறிக்க வெறிக்க ரசிக்கலாம்.. கட்டிய மனைவி வாயால் கூட அடுத்த ஆணை அழகன் என்று சொல்லி விடக்கூடாது..! பதிவிரதை தன்மை பறிபோய்விடும்..
"என்ன பெரிய அழகு..! அவன் உயரமும் உடம்பும்.. தெலுங்கு பட ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி இருக்கான்.. அவனுக்கு நானே பரவாயில்லை.." என்றவனை ஏற இறங்க பார்த்தாள் கனகா..
"எ.. என்ன அப்படி பாக்கற.. ஏன் நான் அழகாத்தான இருக்கேன்.." தன் மேடிட்ட வயிற்றுக்கு கீழ் இறங்கிய லுங்கியை சரி செய்து கொண்டே அவன் கேட்க..
"நீ அழகா இல்லையான்னு அப்புறம் கண்ணாடிய போய் பார்த்து தெரிஞ்சுக்க.. நான் சொல்ல வந்த விஷயத்தை கேளு.."
"சீக்கிரம் சொல்லு..!"
"நேத்து பூரா பொண்ண காணலன்னு அழுதுட்டு இருந்தவ இப்ப மினுக்கலா சிரிச்சு அந்த ஆள் கிட்ட கொஞ்சிக்கிட்டு நிக்கிறாளே..?"
"அவங்க ரெண்டு பேரும் கொஞ்சிக்கறாங்கன்னு உனக்கெப்படி தெரியும்..?"
"அட.. டிபன் ரெடியான்னு பொண்டாட்டி மாதிரி உரிமையா கேக்கறதும் ஹாட் பாக்ஸ்ல உங்களுக்கு தனியா எடுத்து வச்சிருக்கேன்னு அவ வழிஞ்சிக்கிட்டு சொல்றதும்.. இதுக்கு மேல என்னய்யா வேணும்..!"
"என்னடி சொல்ற.. அவன் என் அளவுக்கு இல்லனாலும் பாக்க கொஞ்சம் சுமாரா அழகாத்தான் இருக்கான்.. அந்தாளுக்கு இப்படி ஒரு டேஸ்ட்டா..?"
"காஞ்ச மாடு காகிதத்தை கூட தின்னும்.. இவளுக்கு பணம் வேணும்.. அவனுக்கு சுகம் வேணும்..! ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா இருக்காங்க போல.. இடைஞ்சலா இருந்த புள்ளைய எங்கேயோ துரத்தி விட்டுட்டாங்களோ என்னவோ..!"
"ஆமான்டி அந்த பொண்ணு கூட இந்த ஆள் வந்ததிலிருந்து அனத்திக்கிட்டே கிடந்துச்சு.. இதுதான் பிரச்சினையா இருக்குமோ.."
இல்லையே சின்னது இவளுக்கு மேல அவன்கிட்ட இளிக்குதே..?
என்ன சங்கதி ஒன்னும் புரியல"
"வயசு வந்த புள்ளைய வெச்சுகிட்டு உடம்பு அரிப்பெடுக்குதாமா இவளுக்கு..! இனி அவ வீட்டு பக்கம் போய் நின்னு பேசு.. உன்ன வகுந்துடறேன்.."
"எனக்கென்னவோ இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும்னு தோணுது.. பிளான் பண்ணி தான் இந்த வீட்டுக்கு வரவச்சிருப்பா.."
"அப்புறம் எதுக்குடி வாடகைக்கு வீடு தேடணும்.."
"எல்லாம் நடிப்பு..! ஊர் உலகம் தன்னை தப்பா பேசக்கூடாதுன்னு ஒரு பசப்பல் நாடகம் தான் வேறென்ன..?"
"அப்ப ரெண்டு பேருக்குள்ள கள்ள உறவு இருக்குன்னு சொல்ற..!"
"ராத்திரி அந்த பொண்ணு தூங்கினதும் ரெண்டு பேரும் உள் ரூமுக்குள்ள போய் கதவ தாப்பா போட்டுக்கிட்டு கட்டி பிடிச்சிக்கிட்டத நான்தான் பார்த்தேனே.."
"அய்யோ..!"
"ரெண்டு மூணு நாளா அவங்க ரெண்டு பேரும் கொஞ்சற அசிங்கத்த இந்த தெருவே பாத்து காரி துப்புது.. இந்த ரோமியோ அவளோட கள்ளக்காதலனாம்..!"
"நல்ல புருஷன விட்டுட்டு வந்த இவள மாதிரி ஆளுங்களுக்கு காஜிய தீர்த்துக்க இப்படி கள்ளக்காதலன் கிடைச்சா தான் உண்டு..! கௌரவமா வச்சு வாழ எவனும் வரமாட்டான்.. நீ உள்ள போ..!" கனகாவை வீட்டுக்குள் அனுப்பி விட்டு தனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா என எதிர் வீட்டை எட்டிப் பார்த்தான் சத்யராஜ்..
தொடரும்..
Last edited: