- Joined
- Jan 10, 2023
- Messages
- 75
- Thread Author
- #1
அருந்ததி வேலைக்கு புறப்படுவதற்காக தனது டூவீலரை எடுக்கும்போது மோத்தி வாலாட்டிக் கொண்டே வந்து அவள் காலை உரசவும்.. பதறிக்கொண்டு பின்னால் நகர்ந்தவள் டூவீலரோடு விழப்பார்த்து அடுத்த கணம் சுதாரித்து வண்டியை நேராக நிறுத்தினாள்..
அந்த கோபத்தில் "ஏய் ச்சீ..! போ அப்படி" அவள் எரிச்சலோடு கத்த..
அது என்ன மனநிலையில் இருந்ததோ..! லொள் லொள்.. என குரைத்து ஏதோ சொல்ல முயன்றதில் பயந்து அவசரமாக டூவீலரில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு பின்னால் நகர்ந்து சென்றாள்..
சரியாக அந்த நேரம் ரிஷி ஃபார்மல் உடையில் அமர்க்களமாக தயாராகி வேலைக்கு செல்வதற்காக வண்டி சாவியும் ஹெல்மெட்டுமாக வெளியே வந்தான்..
மோத்தி விடாமல் லொள் லொள் குரைப்போடு அருந்ததியை துரத்திக் கொண்டிருந்தது..
"ஏய் என்னதான் வேணும் உனக்கு..! போ அப்படி.. நீ வேற ஏன் உயிரை வாங்கற.." மரத்திலிருந்து உதிர்ந்திருந்த ஒரு காய்ந்த குச்சியை கையிலெடுத்து ஓங்கியபடி மோத்தியை விரட்டிக் கொண்டிருந்தவள் தோளுக்கு குறுக்காக பையை மாட்டிக்கொண்டு கீழ்க்கண் பார்வையோடு தன்னையே உருத்து பார்த்துக் கொண்டிருந்த மகரிஷியை கண்டதும் எச்சில் விழுங்கி குச்சியை கீழே போட்டாள்.
மோத்தியை தனக்குத்தான் பிடிக்காது.. வாத்தியாருக்கு இந்த நாயின் மீது எத்தனை பிரியமென்று வந்த சில நாட்களிலேயே தெரிந்து வைத்திருந்தவளுக்கு தற்சமயம் அவன் வீசப்போகும் கோபக்கனைகளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை..
அருகே வந்தவன் மோத்தியையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்..
"ஏமைந்தி ஜேஜம்மா.."
"ஜலஜம்மா வா..?"
உதட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்ட சிரிப்புடன்.. "என்ன ஆச்சு அருந்ததி? ஏன் இப்படி பயந்து போய் நிக்கிறீங்கன்னு கேட்டேன்.." என்றான் அவன்..
"சார் உங்க நாயை கொஞ்சம் தள்ளி அப்படி கூட்டிட்டு போங்க.. என்னன்னே தெரியல என்ன பாத்து குரைச்சுக்கிட்டே இருக்குது.. கடிச்சு வச்சிட போகுது சார்.. பயமா இருக்கு.." தன்னிடம் ஓடிவந்த மோத்தியிடமிருந்து விலகி மகரிஷியின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்..
"என் நாய் கடிக்காதுங்க..!"
"நாய் வளக்கறவங்க எல்லாரும் சொல்ற ஒரே வார்த்தை இதுதானே சார்..! கடிச்சு வச்ச பிறகு இதுவரைக்கும் யாரையுமே கடிச்சதில்லை.. முதல் முறையா உங்களதான் கடிச்சிருச்சு.. என்னன்னே தெரியலன்னு சொல்லுவாங்க..! நாய்னா எனக்கு பயம் சார்.. தயவு செஞ்சு உங்க நாய்க்குட்டியை என்கிட்ட வர வேண்டாம்னு சொல்லுங்க.. பாருங்க.. பாருங்க எப்படி குரைக்குது.." மிரண்டு மென்மேலும் பின்னால் நகர்ந்தவளின் தோள்பட்டை அவன் நெஞ்சோடு உரசியதில் திரும்பி பார்த்துவிட்டு விலகி நின்றாள்..
அவனின் உயர்தர பர்பியூம் நறுமணம் அவள் நாசிக்குள் ஊடுருவியது..!
அருந்ததி இது போன்ற நறுமண திரவியங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி..! அவளைப் பொறுத்தவரை இதெல்லாம் அநாவசிய செலவு.. வெயிலில் வியர்வை வழிய ரோடு ரோடாக திரியும் தனக்கு இது போன்ற ஆடம்பர அனாவசிய திரவியம் ஒன்றுதான் குறைச்சலா..? என்ற சிந்தனை.. முந்நூறு செலவழித்து பர்ஃபியும் வாங்குவதற்கு ஆறு கிலோ அரிசி வாங்கி அரை மாதத்திற்கு சோறாக்கலாம் என்ற பொருளாதார வறட்சி..!
"காரணமில்லாம மோத்தி யாரையும் பார்த்து குரைக்க மாட்டான்..! உங்ககிட்ட என்னவோ பிரச்சனை இருக்கு.. அதான் இப்படி விடாம குரைச்சுக்கிட்டே இருக்கான்.."
"என்கிட்ட என்ன பிரச்சனை..? என்னை திருடினு சொல்ல வரீங்களா.. நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவ இல்ல..!" சட்டென நிறம் மாறிய அந்த கண்களை பார்த்து மென்மையாக சிரித்தவன்..
"என்ந்துக்கு அன்த கோபம் ஜேஜம்மா..! நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல.. பிரச்சனை மீன்ஸ் நீங்க ஏதாவது பிரச்சனையில் இருக்கணும்னு சொல்ல வந்தேன்.." என்றவன் அவளை கீழிருந்து மேலாக பார்க்க அருந்ததிக்குள் ஏதோ கூச்சம்..
சட்டென அருகே வந்தவன் கீழே முழங்காலிட்டு அமர்ந்து ஒரு காலை மடக்கியபடி அவள் உடையின் பின்பக்கம் கை வைக்க.. அக்கம்பக்கத்து வீட்டு பொம்மைகள் காட்சியை 3D யில் சூம் செய்தன..
"சார்ர்ர்.." பதட்டத்துடன் பின்னே நகர்ந்தாள் அருந்ததி..
"வெய்ட்..!" அழுத்தமான குரலில் சொன்னவன் சுடிதார் மேலாடையின் அடிப்பக்கத்தில் சிக்கியிருந்த நீளமான கருவேல மர முள்வேரை எடுத்துவிட்டான்..
மோத்தியின் குரைப்பு சத்தம் இப்போது நின்று போனது..
"இதுக்கு தான் அவன் கத்தியிருக்கான்.. இப்படியே போயிருந்தீங்கன்னா இந்த தடிமனான முள்ளு கீழே விழுந்து ஒன்னு வண்டி பஞ்சர் ஆகும்.. இல்லைன்னா உங்க டிரஸ் கிழிஞ்சு போயிருக்கும்.. ஸ்கின்ல முள்ளு கிழிச்சு காயமாகும்.. உங்க நல்லதுக்காக தான் அவன் வார்ன் பண்ணி இருக்கான்.. அதைக் கூட புரிஞ்சுக்காம உங்க இஷ்டத்துக்கு இப்படி திட்டுறது நியாயமே இல்லை.." என்றான் புன்னகையும் அதட்டலுமாய்..
"இல்ல நான் ஒன்னும் பெருசா திட்டலையே..! எனக்கு நாய்னா பயம் அதைத்தான் சொன்னேன்.."
"புரியுது.. அதுக்காக அவசரப்பட்டு நீங்களாவே எந்த முடிவையும் எடுக்காதீங்க.. என் மோத்தியை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சரி.. அது கூட பயத்துல அப்படி பேசிட்டிங்கன்னு வைச்சுக்கலாம்.. ஆனா நான் என்ன சொல்ல வந்தேன்னு கூட பொறுமையா நீங்க கேக்கலையே..?"
"ஐயோ வாத்தி பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டாரே.." அயற்சியாக இருந்தது அருந்ததிக்கு..
"சாரி சார் ரொம்ப நன்றி..!" தனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்.. அப்போதும் கூட மோத்தியை திரும்பி கூட பார்க்கவில்லை.. அதுதான் அவள் முகத்தையே பார்த்தபடி வண்டிக்கு முன்பக்கம் வந்து அமர்ந்திருந்தது..
"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அருந்ததி.." என்றதும் சாவியை திருடியவள் அவனை ஏறிட்டு பார்த்தாள்..
"உங்க மகளை கூப்பிட போறேன்னு அந்த வீட்டு வாசல்ல போய் நிக்க வேண்டாம்.. அப்புறம் நீங்க தான் அவமானப் படனும்.. சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.. மோத்தி மூவ்.." என்றவன் தனது வண்டியை நோக்கி நடந்தான்.. அந்த நடையில் அத்தனை கம்பீரம்..
அவன் பேச்சு அதிக பிரசங்கித்தனமாக தோன்றியது அருந்ததிக்கு..! தேவையில்லாம என் விஷயத்துல ரொம்பவே மூக்கை நுழைக்கறார்.. மனதோடு பொருமியவள் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை..
காரணம் தோற்றத்தில் மிளிர்ந்த கம்பீரத்தால் வாத்தி எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற யூகமோ அல்லது நிறைய உதவிகள் செய்திருப்பதால் அவன் மீது வைத்திருந்த மரியாதையோ.. அவன் அனுசரனையால் விழுந்த நன்றி உணர்வோ ஏதோ ஒன்று சுயமரியாதையோடு வெளியே எட்டி பார்க்கும் அவள் காரசாரமான பதிலடிகளை தலையில் தட்டி இழுத்து கட்டி வைத்திருக்கிறது..
முக்கியமான ஆர்டர் டெலிவரி செய்யும் நேரத்தில் போன் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்க வண்டியை ஓரம் கட்டினாள் அருந்ததி..
"சார் இதோ அஞ்சு நிமிஷம்.. ஆன் தி வே சார்..!" திரையில் வந்த பெயர் யாரென்று பார்க்காமலேயே அவள் பேசிக் கொண்டிருக்க..
"நான் ரிஷி..!" என்றான் கணீர் குரலில்.. இரும்பை வெட்டிய அந்த கூர்மையான குரல் அவன் யாரென்று தெரியப்படுத்தவே.. "இவர் எதுக்காக இந்த நேரத்துல போன் பண்றார்?" என்ற பதட்டத்தோடு
"சொ.. சொல்லுங்க சார்.." என்றாள் அவள்..
"சாப்பிட்டீங்களா..?"
"எ.. என்ன..?"
"இல்ல சாப்டீங்களா ன்னு கேட்டேன்..!"
"அருந்ததிக்கு ஒன்றுமே புரியவில்லை.. கறார் பேர்வழியாக கடுமையை காட்டியிருக்கிறான்.. இப்போது கொஞ்சமாக சிரிக்கிறான் ஆனால் திடீரென இது என்ன..?"
"இ.. இன்னும் இல்ல சார்..!"
"மணி ரெண்டு..! உடம்பை கெடுத்துக்காதீங்க.. சந்திரமதி திரும்பி வரும் போது அவகிட்ட உங்களை ஆரோக்கியமாக ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குது.."
"நேரமாச்சு சார் ஃபுட் டெலிவரி பண்ண போகணும்.."
"ஓகே போயிட்டு வந்து நேரத்துக்கு சாப்பிடுங்க..!"
"ஒ.. ஓகே சார்..! நீ.. நீங்க சாப்பிட்டீங்களா..!" பதிலுக்கு கேட்டு வைக்க வேண்டுமே என்ற ரீதியில் அவளின் சம்பிரதாய கேள்வி..
சில கணங்கள் எதிர் நொடியில் மௌனம்..
"ஹலோ..?"
சாப்ட்டுகிட்டே இருக்கேன்.. ரிஷியின் குரல் கொஞ்சம் கமறுவது போல் தோன்றியது அவளுக்கு..
"சரி போனை வைக்கறேன்.." அழைப்பை துண்டித்தவளுக்கு அவன் குழைவான சாப்டீங்களா என்ற கேள்வி கொஞ்சம் நெருடலை தந்தது.. இதுவரை முகம் கொடுத்து பேசாமல் விலகி நின்றவன் ஏன் இப்போது நெருங்க நினைக்கிறான்..
தவறான எண்ணமா..! அல்லது நல்ல நோக்கம்தானா.. இருந்தாலும் மெனக்கெட்டு போனில் அழைத்து இப்படி கேட்பது அனாவசியம் தானே..! ஏகப்பட்ட உறுத்தல்களைத் தாண்டி.. அந்த மென்மையான சாப்டிங்களா என்ற அக்கறையான கேள்வி அவளுள் இதமாக இறங்கியதென்னவோ உண்மை..!
"என்ன சமைச்சிருக்கீங்க..!"
"உப்புமாவா.. கூடுதலா செஞ்சிருக்கீங்களா.. சேர்ந்து சாப்பிடலாமா..?"
"உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு.. என்னோட அம்மா கூட ரெட் சில்லிக்கு பதிலா க்ரீன் சில்லி சேர்ப்பாங்க.. அது ஒரு மாதிரி வாசனையா இருக்கும்..!"
"லைட் இருக்கட்டுமா நீங்க ஆப் பண்ணிடறீங்களா.."
"இன்னைக்கு சட்னி அரைக்கலையா..?"
"உங்களுக்கு கோங்ரா சட்னி பண்ண தெரியுமா..?"
"ஹலோ அருந்ததி.. சாப்பிட்டீங்களா..! மணி மூணுங்க.. ஏன் இப்படி உடம்பை கெடுத்துக்கறீங்க.."
"ஜேஜம்மா.. உங்க அடுப்புல நான் குக் பண்ணிக்கட்டுமா.. கொஞ்சம் பால் மட்டும் காய்ச்சிக்கறேன்.. என் இன்டக்ஷன் ஸ்டவ் ஏதோ ரிப்பேர்னு நினைக்கறேன்.." இப்படி ஏதாவது அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தான்..
அவன் விரல் நகம் கூட அவளை தீண்டவில்லை ஆனால் பார்வையாலும் வார்த்தையாலும் அத்தனை ஆறுதலை தந்தான்..
இப்படியே இரண்டு நாட்கள் கழித்திருக்க அழுது கொண்டே அவனிடம் வந்து நின்றாள் அருந்ததி..
"சார் ரெண்டு நாள் ஆகிடுச்சு இன்னும் என் குழந்தை வரவே இல்லையே..! எனக்கென்னமோ பயமா இருக்கு நான் போய்.."
"முதல்ல அழுகையை நிறுத்துங்க.."
கண்களை துடைத்துக்கொண்டாள் அருந்ததி..
"என் பொண்ணு இல்லாம செத்து போயிடலாம் போல இருக்கு.. என்னால முடியல சார்.." விசித்து அழுதாள் அருந்ததி..
"உங்க பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்கா.. நீங்கதான் இங்க அழுதுட்டு நிக்கறீங்க.. இன்னும் ரெண்டு நாள்ல சந்திராம்மா உங்ககிட்ட வந்து சேர்ந்திடுவாங்க.. பயப்படாம இருங்க..!"
"சா.. சார்..!"
செப்பன்டி..
"நிஜமாவே என் மதியை அவங்க அப்பா வீட்ல தான் கொண்டு போய் விட்டீங்களா..?" அருந்ததி எச்சில் விழுங்கியபடி கேட்க முன் கை கட்டிக்கொண்டு அவளை முறைத்தான் ரிஷி..!
"என்ன பாத்தா சின்ன பொண்ணுங்கள கொண்டு போய் காசுக்கு விக்கற பர்வட் மாதிரி தெரியுதா..!"
இந்த வார்த்தை நாராசமாக அவள் செவிகளுக்குள் ஊடுருவி நெஞ்சை கிழிக்கத்தான் செய்தது.. அதீத கோபத்தில் நின்றிருந்தான் ரிஷி..
"சார் ஏன் இப்படி கோவப்படுறீங்க.. நீங்க தானே என் மகளை கொண்டு போய் அந்த ஆள் வீட்டுல விட்டுட்டு வந்ததா சொன்னீங்க.. நான் எதையும் கண்ணால கூட பாக்கலையே.. என் பொண்ணு உங்கள தான் நம்புறா.. எனக்கும் உங்கமேல நம்பிக்கை இல்லாம இல்ல.. ஆனா பெத்த மனசு என் குழந்தையை நினைச்சு பரிதவிக்குது.. தயவு செஞ்சு என் நிலைமை புரிஞ்சுகிட்டு கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லுங்க சார்.." படபடப்போடு சொன்னாள் அருந்ததி..
ரிஷி நிதானித்தான்.. அவள் கவலை புரிகிறது.. யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது சரியில்லையே..? நான் யார் இவளுக்கு..
நிமிர்ந்து அருந்ததியை ஆழ்ந்து பார்த்தவன் அந்த கேள்வியை இன்னொரு முறை தனக்குள் கேட்டுக் கொண்டான்..
"நான் யார் இவளுக்கு..?"
"உங்களுக்கு என் மேல சந்தேகம் வந்துடுச்சு.. சரி.. தினமும் சந்திரமதி ஒன்பது மணிக்கு எனக்கு போன் பண்ணுவா..! ஸ்பீக்கர்ல போடுறேன்.. முதல்ல அவ பேசுறதை கேளுங்க.. அப்புறம் எதுனாலும் டிசைட் பண்ணுங்க.. ஆனா குறுக்க பேசக்கூடாது.. புரிஞ்சுதா..?" புருவங்கள் அடர்த்தியாக வளைந்து அவன் விழிகள் தீட்சண்யமாக தெரிந்தன..
இந்த கண்கள்தான் கேள்வி கேட்காமல் நம்ப சொல்லுகிறதோ..?
9:00 மணிக்கு மகள் அழைக்க போகிறாள் என்றதுமே அருந்ததிக்குள் வெளிச்சம்..
"சரி சார்" என்றவளின் குரலில் தெரிந்த சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்..!
வாசற்படியில் வந்தமர்ந்து சந்திரமதியின் அழைப்புக்காக காத்திருந்தான் ரிஷி.. அருந்ததி கையை பிசைந்தபடி பரிதவிப்போடு அவன் பக்கத்தில் நிற்க.. வழக்கம்போல இருளில் வேட்டையாடும் ஒநாயின் ஒளிர்ந்த விழிகளாக அக்கம் பக்கத்து வீட்டு கேமரா கண்கள் அனைத்தும் இவர்கள் மேல்..
மோத்தி மறு திண்ணையில் ஒரு பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான்..
சரியாக 9:00 மணிக்கு சின்னவள் அழைத்திருந்தாள்..
ஸ்பீக்கரில் போட்டான் மகரிஷி..
"ஹலோ சந்திராம்மா.."
"ரிஷி..!" குரல் சாதாரணமாகத்தான் இருந்தது.. உற்சாகமும் இல்லை சோகமும் இல்லை.. மகளின் குரலை கேட்டதும் உடைப்பெடுத்த அழுகையை வாய் பொத்தி அடக்கி கொண்டாள் அருந்ததி..
"எப்படி இருக்கீங்க சந்திராம்மா..?"
"நல்லா இருக்கேன் ரிஷி.. எனக்கு இங்க எந்த குறையும் இல்லை..!"
"சாப்பிட்டீங்களா..?"
"நான் சாப்பிட்டாச்சு ரிஷி நல்ல சாப்பாடு..! ரொம்ப அருமையா இருந்தது நீ சாப்டியா..?"
"இங்கேயும் ரொம்ப நல்ல சாப்பாடு.. அமர்க்களமா சாப்பிட்டாச்சு.." என்றவனின் பார்வை அருந்ததியின் மேல்..
"அப்புறம் என்ன விஷயம் சந்திராம்மா..?"
"ஒன்னும் ஸ்பெஷலா இல்ல.. தினமும் நீ அப்டேட் பண்ண சொல்லுவியே.. அதனால போன் செஞ்சேன்.."
"தட்ஸ் குட்.."
"சரி ரிஷி தூக்கம் வருது போன வைக்கட்டுமா..!" கண்கள் அலைப்புறுதலுடன் இதயம் பரிதவித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி சந்திரமதியின் இறுதி வார்த்தைகளில்.. தன்னை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்ற நெஞ்சு நிறைந்த வேதனையோடு துவண்டு போனவளாய் தளர்ந்த நடையோடு வீட்டுக்குள் சென்று விட்டாள்..
ஃபோனை கையில் வைத்தபடி வீட்டுக்குள் சென்றவளோடு நகர்ந்தன அவன் கண்கள்.. எப்போதும் இந்த அருந்ததியின் கண்ணீர் அவன் இதயத்தை அசைத்து மூச்சு திணற வைப்பது ஏன் என்று புரிவதில்லை..
"ரிஷி.." என்ற அழைத்தலில் உணர்வு தெளிந்து.
"ம்ம்.. சொல்லு சந்திராம்மா" என்றான் லேசான தடுமாற்றத்துடன்..
"அம்மா எப்படி இருக்காங்க..?"
மகரிஷியின் இதழில் லேசான புன்முறுவல்..
"உன் அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க..!"
"ம்ம்.. நான் வைக்கறேன்.." அழைப்பை துண்டித்து விட்டாள்.!
உள்ளே வந்தவன் பாயில் ஒருக்களித்து படுத்தபடி அழுது கொண்டிருந்த அருந்ததியை.. அறைக்குள் செல்லாமல் ஸ்மார்ட் போனை தனது உள்ளங்கையில் தட்டியபடியே பார்த்துக் கொண்டிருந்த ரிஷி.. ஒரு கட்டத்தில் பரிதாப விழிகளோடு நீண்ட பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று விட்டான்..
விளையாடி விளையாடி களைத்து போய் உள்ளே வந்த மோத்தி.. ரிஷியின் அறைக்குள் செல்லாமல் கூடத்தின் ஒரு மூலையில் படுத்துக் கொண்டான்.. அருந்ததிக்கு காவலா அல்லது சந்திரமதியை தேடுகிறானா தெரியவில்லை..
மோத்தியை தேடிவந்த ரிஷி அவன் கூடத்தில் படுத்திருப்பதைக் கண்டு கதவை சாத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்..
"ஐயோ ரெண்டு பேரும் லைட் ஆஃப் பண்ணிட்டு என்ன பண்றாங்க.. கதவு வேற சாத்திட்டாங்க ஜன்னல் மூடிட்டாங்க ஒன்னும் தெரியலையே..!"
"லைட் ஆஃப் பண்ணிட்டு இருட்டுக்குள்ள என்ன செய்யணுமோ அதைத்தான் செய்வாங்க.."
"நான் சொல்லல.. இப்படித்தான் தினமும் நடக்குது.. தள்ளி தள்ளி நின்னு பேசிக் கொஞ்சிக்கிட்டவங்க இப்ப ஒட்டி ஒட்டி உரசிக்கிறாங்க..!"
"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ கடவுளே..!"
"ஹவுஸ் ஓனர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.."
"அந்த வீட்டையே அவன் விலை கொடுத்து வாங்கி சொந்தமாக்கிட்டான்னு பேசிக்கறாங்க.."
"வீட்டை விலை கொடுத்து வாங்கினவன் இவளயும் சின்ன வீடா வச்சுக்கிட்டான் போலிருக்கு.."
"பணம் பாதாளம் வரைக்கும் பாயுமாம்.."
"என்ன டபுள் மீனீங்கா.." அவர்களுக்குள் சிரிப்பு..
"நேரமாச்சு போய் தூங்குங்கடி அடுத்தவங்க பொல்லாப்பு நமக்கெதுக்கு.. நம்ம பிரச்சினையே தலைக்கு மேல கிடக்குது.. முடிந்தவரை வாயில் போட்டு மென்று விட்டு சக்கையை கீழே துப்பிய பெண்கள் அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றனர்..
தினமும் மகரிஷி மதியம் அவளை அலைபேசியில் அழைத்து சாப்பிட்டீங்களா என்று கேட்க தவறுவதில்லை..
அவள் திருப்பிக் கேட்கும் நீங்க சாப்பிட்டீங்ளா வார்த்தையில் அவன் தடுமாறவும் தவறுவதில்லை..
வலிய வலிய வந்து பேசுகிறான்.. உரிமையாக டிபன் எடுத்து வைக்க சொல்லுகிறான்..
"என் வண்டி சர்வீஸ் விட்டுருக்கேன் கொஞ்சம் உங்க வண்டி எடுத்துக்கட்டுமா.. கடைக்குப் போகணும்.." என்கிறான்.. வரும்போது வண்டியின் பெட்ரோல் டேங்க்கை நிரப்பி எடுத்து வருகிறான்..
அருந்ததியின் சமையல்கட்டை பயன்படுத்திக் கொள்கிறான்..
"கடைக்கு போறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று கேட்கிறான்..
இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி கணிசமாக குறைந்திருந்தது..
மோத்தியை பொருத்தமட்டில் அவன் மூன்றடி முன்னால் எடுத்து வைத்தால் நான்கடி பின்னால் ஓடுகிறாள் அருந்ததி..
அன்று இரவு சாப்பிட மறந்து எங்கேயோ வெறித்திருந்த அருந்ததியை தலை சாய்த்து பார்த்தான் மகரிஷி..!
"என்னங்க யோசிக்கிறீங்க..!"
"குழந்தை சாப்பிட்டாளோ இல்லையோ..? தினமும் யாரு அவளுக்கு தலைவாரி விடுவாங்க கேட்டு பார்த்தீங்களா..! இங்கிருந்த வரையில நைட்டு ஒரு டம்ளர் ஃபுல்லா பால் கொடுத்துடுவேன்.. பெ.. பெரிய டம்ளர்.. அங்க என்னமோ தெரியலையே..! அந்த ஆளோட அப்பா வேற ஒரு மாதிரி.. என் பொண்ணு விவரம் தெரியாத சின்ன குழந்தை.. மருமகளையே தப்பா பார்த்த வெறி நாய் எது.. பேத்திய மட்டும் குழந்தையாவா நினைக்க போறான்.. ஐயோ எனக்கு உயிரே போகுது.. நெஞ்செல்லாம் அறுக்குது.."
தட்டில் வைத்த கையுடன் ஒரு பருக்கை கூட உள்ளிறங்காமல் தன் மகளைப் பற்றி புலம்பி கொண்டிருந்தாள் அருந்ததி..
இந்த பாசம் ஏக்கம்.. பரிதவிப்பு எல்லாம் எனக்கானதாய் இருந்திருந்தால்..?
திடீரென குறுக்கே நுழைந்து ராங் ரூட்டில் போகும் லாரி போல் கிறுக்குத்தனமாக யோசித்த தன் மனதின் எண்ணங்களை அவசரமாக ஓரந் தள்ளி தூக்கியெறிய முயன்றான் மகரிஷி..
சிட்டிகை போடுவதைப் போல் ஒரு வாரம் கழிந்திருந்தது.. எதிலும் பிடிப்பில்லாமல் பைத்தியக்காரி போல் ஆகியிருந்தாள் அருந்ததி.. ரிஷி அவள் மாற்றங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறான்..
சந்திரமதியிடமும் எத்தனை மாற்றங்கள்..!
அம்மா எப்படி இருக்காங்க என்று இரண்டாம் நாள் கேட்டவள்..
மூன்றாம் நாள் அம்மா சாப்பிட்டாங்களா என்று கேட்டாள்..
நான்காம் நாள் அம்மாவை பார்த்துக்கோங்க என்றாள்..
ஐந்தாம் நாள் அ..ம்மா.. என விசும்பினாள்..
ஆறாம் நாள் போன் வரவே இல்லை..
அடுத்த நாள்.. அம்மா வேணும் என்று ஒரே அழுகை..
காலையிலிருந்து ரிஷியை காணவில்லை.. மோத்தி வழக்கம்போல் அருந்ததியை மான்குட்டி போல் துள்ளலோடு சுற்றி வந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தான்..
"கடுப்பேத்தாத.. மரியாதையா போயிடு.." ஒட்டுமொத்த எரிச்சலை சேர்த்து வைத்து அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள் அருந்ததி..
வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்த நேரத்தில் மகரிஷியின் பைக் கேட்டுக்கு மறுபக்கம் நின்றது..
"இந்த நேரத்துல எங்க போயிட்டு வர்றாரு" துடைப்பத்துடன் நின்று குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வண்டியின் பின்பக்கத்திலிருந்து இறங்கினாள் சந்திரமதி..
அருந்ததியின் கண்கள் விரிந்தன.. மூச்சு விட முடியாமல் திணறினாள்.. துடைப்பம் கீழே விழுந்தது.. பேசக்கூட முடியாமல் நெஞ்சு விம்மியது.. ஒட்டுமொத்த பலத்தை திரட்டி சந்திரமதி என்று கூட அழைக்க முடியவில்லை.. கண்ணீர் கரைகட்டியது..
"மதி.. ம..தி" அழுது கொண்டே இவள் ஓட..
"அ..அம்மா..!" என கேட்டை திறந்து ஓடி வந்த சந்திரமதி கல் தடுக்க அருந்ததியின் காலடியில் விழுந்திருந்தாள்..
அப்போதும் விடாமல் "அம்மா..ம்மா..அ..ம்மா..!" என்ற குழந்தை எழுந்திருக்க முடியாமல் அவள் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது..
தொடரும்..
அந்த கோபத்தில் "ஏய் ச்சீ..! போ அப்படி" அவள் எரிச்சலோடு கத்த..
அது என்ன மனநிலையில் இருந்ததோ..! லொள் லொள்.. என குரைத்து ஏதோ சொல்ல முயன்றதில் பயந்து அவசரமாக டூவீலரில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு பின்னால் நகர்ந்து சென்றாள்..
சரியாக அந்த நேரம் ரிஷி ஃபார்மல் உடையில் அமர்க்களமாக தயாராகி வேலைக்கு செல்வதற்காக வண்டி சாவியும் ஹெல்மெட்டுமாக வெளியே வந்தான்..
மோத்தி விடாமல் லொள் லொள் குரைப்போடு அருந்ததியை துரத்திக் கொண்டிருந்தது..
"ஏய் என்னதான் வேணும் உனக்கு..! போ அப்படி.. நீ வேற ஏன் உயிரை வாங்கற.." மரத்திலிருந்து உதிர்ந்திருந்த ஒரு காய்ந்த குச்சியை கையிலெடுத்து ஓங்கியபடி மோத்தியை விரட்டிக் கொண்டிருந்தவள் தோளுக்கு குறுக்காக பையை மாட்டிக்கொண்டு கீழ்க்கண் பார்வையோடு தன்னையே உருத்து பார்த்துக் கொண்டிருந்த மகரிஷியை கண்டதும் எச்சில் விழுங்கி குச்சியை கீழே போட்டாள்.
மோத்தியை தனக்குத்தான் பிடிக்காது.. வாத்தியாருக்கு இந்த நாயின் மீது எத்தனை பிரியமென்று வந்த சில நாட்களிலேயே தெரிந்து வைத்திருந்தவளுக்கு தற்சமயம் அவன் வீசப்போகும் கோபக்கனைகளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை..
அருகே வந்தவன் மோத்தியையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்..
"ஏமைந்தி ஜேஜம்மா.."
"ஜலஜம்மா வா..?"
உதட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்ட சிரிப்புடன்.. "என்ன ஆச்சு அருந்ததி? ஏன் இப்படி பயந்து போய் நிக்கிறீங்கன்னு கேட்டேன்.." என்றான் அவன்..
"சார் உங்க நாயை கொஞ்சம் தள்ளி அப்படி கூட்டிட்டு போங்க.. என்னன்னே தெரியல என்ன பாத்து குரைச்சுக்கிட்டே இருக்குது.. கடிச்சு வச்சிட போகுது சார்.. பயமா இருக்கு.." தன்னிடம் ஓடிவந்த மோத்தியிடமிருந்து விலகி மகரிஷியின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்..
"என் நாய் கடிக்காதுங்க..!"
"நாய் வளக்கறவங்க எல்லாரும் சொல்ற ஒரே வார்த்தை இதுதானே சார்..! கடிச்சு வச்ச பிறகு இதுவரைக்கும் யாரையுமே கடிச்சதில்லை.. முதல் முறையா உங்களதான் கடிச்சிருச்சு.. என்னன்னே தெரியலன்னு சொல்லுவாங்க..! நாய்னா எனக்கு பயம் சார்.. தயவு செஞ்சு உங்க நாய்க்குட்டியை என்கிட்ட வர வேண்டாம்னு சொல்லுங்க.. பாருங்க.. பாருங்க எப்படி குரைக்குது.." மிரண்டு மென்மேலும் பின்னால் நகர்ந்தவளின் தோள்பட்டை அவன் நெஞ்சோடு உரசியதில் திரும்பி பார்த்துவிட்டு விலகி நின்றாள்..
அவனின் உயர்தர பர்பியூம் நறுமணம் அவள் நாசிக்குள் ஊடுருவியது..!
அருந்ததி இது போன்ற நறுமண திரவியங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி..! அவளைப் பொறுத்தவரை இதெல்லாம் அநாவசிய செலவு.. வெயிலில் வியர்வை வழிய ரோடு ரோடாக திரியும் தனக்கு இது போன்ற ஆடம்பர அனாவசிய திரவியம் ஒன்றுதான் குறைச்சலா..? என்ற சிந்தனை.. முந்நூறு செலவழித்து பர்ஃபியும் வாங்குவதற்கு ஆறு கிலோ அரிசி வாங்கி அரை மாதத்திற்கு சோறாக்கலாம் என்ற பொருளாதார வறட்சி..!
"காரணமில்லாம மோத்தி யாரையும் பார்த்து குரைக்க மாட்டான்..! உங்ககிட்ட என்னவோ பிரச்சனை இருக்கு.. அதான் இப்படி விடாம குரைச்சுக்கிட்டே இருக்கான்.."
"என்கிட்ட என்ன பிரச்சனை..? என்னை திருடினு சொல்ல வரீங்களா.. நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவ இல்ல..!" சட்டென நிறம் மாறிய அந்த கண்களை பார்த்து மென்மையாக சிரித்தவன்..
"என்ந்துக்கு அன்த கோபம் ஜேஜம்மா..! நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல.. பிரச்சனை மீன்ஸ் நீங்க ஏதாவது பிரச்சனையில் இருக்கணும்னு சொல்ல வந்தேன்.." என்றவன் அவளை கீழிருந்து மேலாக பார்க்க அருந்ததிக்குள் ஏதோ கூச்சம்..
சட்டென அருகே வந்தவன் கீழே முழங்காலிட்டு அமர்ந்து ஒரு காலை மடக்கியபடி அவள் உடையின் பின்பக்கம் கை வைக்க.. அக்கம்பக்கத்து வீட்டு பொம்மைகள் காட்சியை 3D யில் சூம் செய்தன..
"சார்ர்ர்.." பதட்டத்துடன் பின்னே நகர்ந்தாள் அருந்ததி..
"வெய்ட்..!" அழுத்தமான குரலில் சொன்னவன் சுடிதார் மேலாடையின் அடிப்பக்கத்தில் சிக்கியிருந்த நீளமான கருவேல மர முள்வேரை எடுத்துவிட்டான்..
மோத்தியின் குரைப்பு சத்தம் இப்போது நின்று போனது..
"இதுக்கு தான் அவன் கத்தியிருக்கான்.. இப்படியே போயிருந்தீங்கன்னா இந்த தடிமனான முள்ளு கீழே விழுந்து ஒன்னு வண்டி பஞ்சர் ஆகும்.. இல்லைன்னா உங்க டிரஸ் கிழிஞ்சு போயிருக்கும்.. ஸ்கின்ல முள்ளு கிழிச்சு காயமாகும்.. உங்க நல்லதுக்காக தான் அவன் வார்ன் பண்ணி இருக்கான்.. அதைக் கூட புரிஞ்சுக்காம உங்க இஷ்டத்துக்கு இப்படி திட்டுறது நியாயமே இல்லை.." என்றான் புன்னகையும் அதட்டலுமாய்..
"இல்ல நான் ஒன்னும் பெருசா திட்டலையே..! எனக்கு நாய்னா பயம் அதைத்தான் சொன்னேன்.."
"புரியுது.. அதுக்காக அவசரப்பட்டு நீங்களாவே எந்த முடிவையும் எடுக்காதீங்க.. என் மோத்தியை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க சரி.. அது கூட பயத்துல அப்படி பேசிட்டிங்கன்னு வைச்சுக்கலாம்.. ஆனா நான் என்ன சொல்ல வந்தேன்னு கூட பொறுமையா நீங்க கேக்கலையே..?"
"ஐயோ வாத்தி பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டாரே.." அயற்சியாக இருந்தது அருந்ததிக்கு..
"சாரி சார் ரொம்ப நன்றி..!" தனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்.. அப்போதும் கூட மோத்தியை திரும்பி கூட பார்க்கவில்லை.. அதுதான் அவள் முகத்தையே பார்த்தபடி வண்டிக்கு முன்பக்கம் வந்து அமர்ந்திருந்தது..
"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அருந்ததி.." என்றதும் சாவியை திருடியவள் அவனை ஏறிட்டு பார்த்தாள்..
"உங்க மகளை கூப்பிட போறேன்னு அந்த வீட்டு வாசல்ல போய் நிக்க வேண்டாம்.. அப்புறம் நீங்க தான் அவமானப் படனும்.. சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.. மோத்தி மூவ்.." என்றவன் தனது வண்டியை நோக்கி நடந்தான்.. அந்த நடையில் அத்தனை கம்பீரம்..
அவன் பேச்சு அதிக பிரசங்கித்தனமாக தோன்றியது அருந்ததிக்கு..! தேவையில்லாம என் விஷயத்துல ரொம்பவே மூக்கை நுழைக்கறார்.. மனதோடு பொருமியவள் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை..
காரணம் தோற்றத்தில் மிளிர்ந்த கம்பீரத்தால் வாத்தி எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற யூகமோ அல்லது நிறைய உதவிகள் செய்திருப்பதால் அவன் மீது வைத்திருந்த மரியாதையோ.. அவன் அனுசரனையால் விழுந்த நன்றி உணர்வோ ஏதோ ஒன்று சுயமரியாதையோடு வெளியே எட்டி பார்க்கும் அவள் காரசாரமான பதிலடிகளை தலையில் தட்டி இழுத்து கட்டி வைத்திருக்கிறது..
முக்கியமான ஆர்டர் டெலிவரி செய்யும் நேரத்தில் போன் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்க வண்டியை ஓரம் கட்டினாள் அருந்ததி..
"சார் இதோ அஞ்சு நிமிஷம்.. ஆன் தி வே சார்..!" திரையில் வந்த பெயர் யாரென்று பார்க்காமலேயே அவள் பேசிக் கொண்டிருக்க..
"நான் ரிஷி..!" என்றான் கணீர் குரலில்.. இரும்பை வெட்டிய அந்த கூர்மையான குரல் அவன் யாரென்று தெரியப்படுத்தவே.. "இவர் எதுக்காக இந்த நேரத்துல போன் பண்றார்?" என்ற பதட்டத்தோடு
"சொ.. சொல்லுங்க சார்.." என்றாள் அவள்..
"சாப்பிட்டீங்களா..?"
"எ.. என்ன..?"
"இல்ல சாப்டீங்களா ன்னு கேட்டேன்..!"
"அருந்ததிக்கு ஒன்றுமே புரியவில்லை.. கறார் பேர்வழியாக கடுமையை காட்டியிருக்கிறான்.. இப்போது கொஞ்சமாக சிரிக்கிறான் ஆனால் திடீரென இது என்ன..?"
"இ.. இன்னும் இல்ல சார்..!"
"மணி ரெண்டு..! உடம்பை கெடுத்துக்காதீங்க.. சந்திரமதி திரும்பி வரும் போது அவகிட்ட உங்களை ஆரோக்கியமாக ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குது.."
"நேரமாச்சு சார் ஃபுட் டெலிவரி பண்ண போகணும்.."
"ஓகே போயிட்டு வந்து நேரத்துக்கு சாப்பிடுங்க..!"
"ஒ.. ஓகே சார்..! நீ.. நீங்க சாப்பிட்டீங்களா..!" பதிலுக்கு கேட்டு வைக்க வேண்டுமே என்ற ரீதியில் அவளின் சம்பிரதாய கேள்வி..
சில கணங்கள் எதிர் நொடியில் மௌனம்..
"ஹலோ..?"
சாப்ட்டுகிட்டே இருக்கேன்.. ரிஷியின் குரல் கொஞ்சம் கமறுவது போல் தோன்றியது அவளுக்கு..
"சரி போனை வைக்கறேன்.." அழைப்பை துண்டித்தவளுக்கு அவன் குழைவான சாப்டீங்களா என்ற கேள்வி கொஞ்சம் நெருடலை தந்தது.. இதுவரை முகம் கொடுத்து பேசாமல் விலகி நின்றவன் ஏன் இப்போது நெருங்க நினைக்கிறான்..
தவறான எண்ணமா..! அல்லது நல்ல நோக்கம்தானா.. இருந்தாலும் மெனக்கெட்டு போனில் அழைத்து இப்படி கேட்பது அனாவசியம் தானே..! ஏகப்பட்ட உறுத்தல்களைத் தாண்டி.. அந்த மென்மையான சாப்டிங்களா என்ற அக்கறையான கேள்வி அவளுள் இதமாக இறங்கியதென்னவோ உண்மை..!
"என்ன சமைச்சிருக்கீங்க..!"
"உப்புமாவா.. கூடுதலா செஞ்சிருக்கீங்களா.. சேர்ந்து சாப்பிடலாமா..?"
"உங்க சமையல் ரொம்ப நல்லா இருக்கு.. என்னோட அம்மா கூட ரெட் சில்லிக்கு பதிலா க்ரீன் சில்லி சேர்ப்பாங்க.. அது ஒரு மாதிரி வாசனையா இருக்கும்..!"
"லைட் இருக்கட்டுமா நீங்க ஆப் பண்ணிடறீங்களா.."
"இன்னைக்கு சட்னி அரைக்கலையா..?"
"உங்களுக்கு கோங்ரா சட்னி பண்ண தெரியுமா..?"
"ஹலோ அருந்ததி.. சாப்பிட்டீங்களா..! மணி மூணுங்க.. ஏன் இப்படி உடம்பை கெடுத்துக்கறீங்க.."
"ஜேஜம்மா.. உங்க அடுப்புல நான் குக் பண்ணிக்கட்டுமா.. கொஞ்சம் பால் மட்டும் காய்ச்சிக்கறேன்.. என் இன்டக்ஷன் ஸ்டவ் ஏதோ ரிப்பேர்னு நினைக்கறேன்.." இப்படி ஏதாவது அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தான்..
அவன் விரல் நகம் கூட அவளை தீண்டவில்லை ஆனால் பார்வையாலும் வார்த்தையாலும் அத்தனை ஆறுதலை தந்தான்..
இப்படியே இரண்டு நாட்கள் கழித்திருக்க அழுது கொண்டே அவனிடம் வந்து நின்றாள் அருந்ததி..
"சார் ரெண்டு நாள் ஆகிடுச்சு இன்னும் என் குழந்தை வரவே இல்லையே..! எனக்கென்னமோ பயமா இருக்கு நான் போய்.."
"முதல்ல அழுகையை நிறுத்துங்க.."
கண்களை துடைத்துக்கொண்டாள் அருந்ததி..
"என் பொண்ணு இல்லாம செத்து போயிடலாம் போல இருக்கு.. என்னால முடியல சார்.." விசித்து அழுதாள் அருந்ததி..
"உங்க பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்கா.. நீங்கதான் இங்க அழுதுட்டு நிக்கறீங்க.. இன்னும் ரெண்டு நாள்ல சந்திராம்மா உங்ககிட்ட வந்து சேர்ந்திடுவாங்க.. பயப்படாம இருங்க..!"
"சா.. சார்..!"
செப்பன்டி..
"நிஜமாவே என் மதியை அவங்க அப்பா வீட்ல தான் கொண்டு போய் விட்டீங்களா..?" அருந்ததி எச்சில் விழுங்கியபடி கேட்க முன் கை கட்டிக்கொண்டு அவளை முறைத்தான் ரிஷி..!
"என்ன பாத்தா சின்ன பொண்ணுங்கள கொண்டு போய் காசுக்கு விக்கற பர்வட் மாதிரி தெரியுதா..!"
இந்த வார்த்தை நாராசமாக அவள் செவிகளுக்குள் ஊடுருவி நெஞ்சை கிழிக்கத்தான் செய்தது.. அதீத கோபத்தில் நின்றிருந்தான் ரிஷி..
"சார் ஏன் இப்படி கோவப்படுறீங்க.. நீங்க தானே என் மகளை கொண்டு போய் அந்த ஆள் வீட்டுல விட்டுட்டு வந்ததா சொன்னீங்க.. நான் எதையும் கண்ணால கூட பாக்கலையே.. என் பொண்ணு உங்கள தான் நம்புறா.. எனக்கும் உங்கமேல நம்பிக்கை இல்லாம இல்ல.. ஆனா பெத்த மனசு என் குழந்தையை நினைச்சு பரிதவிக்குது.. தயவு செஞ்சு என் நிலைமை புரிஞ்சுகிட்டு கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லுங்க சார்.." படபடப்போடு சொன்னாள் அருந்ததி..
ரிஷி நிதானித்தான்.. அவள் கவலை புரிகிறது.. யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது சரியில்லையே..? நான் யார் இவளுக்கு..
நிமிர்ந்து அருந்ததியை ஆழ்ந்து பார்த்தவன் அந்த கேள்வியை இன்னொரு முறை தனக்குள் கேட்டுக் கொண்டான்..
"நான் யார் இவளுக்கு..?"
"உங்களுக்கு என் மேல சந்தேகம் வந்துடுச்சு.. சரி.. தினமும் சந்திரமதி ஒன்பது மணிக்கு எனக்கு போன் பண்ணுவா..! ஸ்பீக்கர்ல போடுறேன்.. முதல்ல அவ பேசுறதை கேளுங்க.. அப்புறம் எதுனாலும் டிசைட் பண்ணுங்க.. ஆனா குறுக்க பேசக்கூடாது.. புரிஞ்சுதா..?" புருவங்கள் அடர்த்தியாக வளைந்து அவன் விழிகள் தீட்சண்யமாக தெரிந்தன..
இந்த கண்கள்தான் கேள்வி கேட்காமல் நம்ப சொல்லுகிறதோ..?
9:00 மணிக்கு மகள் அழைக்க போகிறாள் என்றதுமே அருந்ததிக்குள் வெளிச்சம்..
"சரி சார்" என்றவளின் குரலில் தெரிந்த சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்..!
வாசற்படியில் வந்தமர்ந்து சந்திரமதியின் அழைப்புக்காக காத்திருந்தான் ரிஷி.. அருந்ததி கையை பிசைந்தபடி பரிதவிப்போடு அவன் பக்கத்தில் நிற்க.. வழக்கம்போல இருளில் வேட்டையாடும் ஒநாயின் ஒளிர்ந்த விழிகளாக அக்கம் பக்கத்து வீட்டு கேமரா கண்கள் அனைத்தும் இவர்கள் மேல்..
மோத்தி மறு திண்ணையில் ஒரு பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான்..
சரியாக 9:00 மணிக்கு சின்னவள் அழைத்திருந்தாள்..
ஸ்பீக்கரில் போட்டான் மகரிஷி..
"ஹலோ சந்திராம்மா.."
"ரிஷி..!" குரல் சாதாரணமாகத்தான் இருந்தது.. உற்சாகமும் இல்லை சோகமும் இல்லை.. மகளின் குரலை கேட்டதும் உடைப்பெடுத்த அழுகையை வாய் பொத்தி அடக்கி கொண்டாள் அருந்ததி..
"எப்படி இருக்கீங்க சந்திராம்மா..?"
"நல்லா இருக்கேன் ரிஷி.. எனக்கு இங்க எந்த குறையும் இல்லை..!"
"சாப்பிட்டீங்களா..?"
"நான் சாப்பிட்டாச்சு ரிஷி நல்ல சாப்பாடு..! ரொம்ப அருமையா இருந்தது நீ சாப்டியா..?"
"இங்கேயும் ரொம்ப நல்ல சாப்பாடு.. அமர்க்களமா சாப்பிட்டாச்சு.." என்றவனின் பார்வை அருந்ததியின் மேல்..
"அப்புறம் என்ன விஷயம் சந்திராம்மா..?"
"ஒன்னும் ஸ்பெஷலா இல்ல.. தினமும் நீ அப்டேட் பண்ண சொல்லுவியே.. அதனால போன் செஞ்சேன்.."
"தட்ஸ் குட்.."
"சரி ரிஷி தூக்கம் வருது போன வைக்கட்டுமா..!" கண்கள் அலைப்புறுதலுடன் இதயம் பரிதவித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருந்ததி சந்திரமதியின் இறுதி வார்த்தைகளில்.. தன்னை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்ற நெஞ்சு நிறைந்த வேதனையோடு துவண்டு போனவளாய் தளர்ந்த நடையோடு வீட்டுக்குள் சென்று விட்டாள்..
ஃபோனை கையில் வைத்தபடி வீட்டுக்குள் சென்றவளோடு நகர்ந்தன அவன் கண்கள்.. எப்போதும் இந்த அருந்ததியின் கண்ணீர் அவன் இதயத்தை அசைத்து மூச்சு திணற வைப்பது ஏன் என்று புரிவதில்லை..
"ரிஷி.." என்ற அழைத்தலில் உணர்வு தெளிந்து.
"ம்ம்.. சொல்லு சந்திராம்மா" என்றான் லேசான தடுமாற்றத்துடன்..
"அம்மா எப்படி இருக்காங்க..?"
மகரிஷியின் இதழில் லேசான புன்முறுவல்..
"உன் அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க..!"
"ம்ம்.. நான் வைக்கறேன்.." அழைப்பை துண்டித்து விட்டாள்.!
உள்ளே வந்தவன் பாயில் ஒருக்களித்து படுத்தபடி அழுது கொண்டிருந்த அருந்ததியை.. அறைக்குள் செல்லாமல் ஸ்மார்ட் போனை தனது உள்ளங்கையில் தட்டியபடியே பார்த்துக் கொண்டிருந்த ரிஷி.. ஒரு கட்டத்தில் பரிதாப விழிகளோடு நீண்ட பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று விட்டான்..
விளையாடி விளையாடி களைத்து போய் உள்ளே வந்த மோத்தி.. ரிஷியின் அறைக்குள் செல்லாமல் கூடத்தின் ஒரு மூலையில் படுத்துக் கொண்டான்.. அருந்ததிக்கு காவலா அல்லது சந்திரமதியை தேடுகிறானா தெரியவில்லை..
மோத்தியை தேடிவந்த ரிஷி அவன் கூடத்தில் படுத்திருப்பதைக் கண்டு கதவை சாத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்..
"ஐயோ ரெண்டு பேரும் லைட் ஆஃப் பண்ணிட்டு என்ன பண்றாங்க.. கதவு வேற சாத்திட்டாங்க ஜன்னல் மூடிட்டாங்க ஒன்னும் தெரியலையே..!"
"லைட் ஆஃப் பண்ணிட்டு இருட்டுக்குள்ள என்ன செய்யணுமோ அதைத்தான் செய்வாங்க.."
"நான் சொல்லல.. இப்படித்தான் தினமும் நடக்குது.. தள்ளி தள்ளி நின்னு பேசிக் கொஞ்சிக்கிட்டவங்க இப்ப ஒட்டி ஒட்டி உரசிக்கிறாங்க..!"
"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ கடவுளே..!"
"ஹவுஸ் ஓனர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.."
"அந்த வீட்டையே அவன் விலை கொடுத்து வாங்கி சொந்தமாக்கிட்டான்னு பேசிக்கறாங்க.."
"வீட்டை விலை கொடுத்து வாங்கினவன் இவளயும் சின்ன வீடா வச்சுக்கிட்டான் போலிருக்கு.."
"பணம் பாதாளம் வரைக்கும் பாயுமாம்.."
"என்ன டபுள் மீனீங்கா.." அவர்களுக்குள் சிரிப்பு..
"நேரமாச்சு போய் தூங்குங்கடி அடுத்தவங்க பொல்லாப்பு நமக்கெதுக்கு.. நம்ம பிரச்சினையே தலைக்கு மேல கிடக்குது.. முடிந்தவரை வாயில் போட்டு மென்று விட்டு சக்கையை கீழே துப்பிய பெண்கள் அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றனர்..
தினமும் மகரிஷி மதியம் அவளை அலைபேசியில் அழைத்து சாப்பிட்டீங்களா என்று கேட்க தவறுவதில்லை..
அவள் திருப்பிக் கேட்கும் நீங்க சாப்பிட்டீங்ளா வார்த்தையில் அவன் தடுமாறவும் தவறுவதில்லை..
வலிய வலிய வந்து பேசுகிறான்.. உரிமையாக டிபன் எடுத்து வைக்க சொல்லுகிறான்..
"என் வண்டி சர்வீஸ் விட்டுருக்கேன் கொஞ்சம் உங்க வண்டி எடுத்துக்கட்டுமா.. கடைக்குப் போகணும்.." என்கிறான்.. வரும்போது வண்டியின் பெட்ரோல் டேங்க்கை நிரப்பி எடுத்து வருகிறான்..
அருந்ததியின் சமையல்கட்டை பயன்படுத்திக் கொள்கிறான்..
"கடைக்கு போறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று கேட்கிறான்..
இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி கணிசமாக குறைந்திருந்தது..
மோத்தியை பொருத்தமட்டில் அவன் மூன்றடி முன்னால் எடுத்து வைத்தால் நான்கடி பின்னால் ஓடுகிறாள் அருந்ததி..
அன்று இரவு சாப்பிட மறந்து எங்கேயோ வெறித்திருந்த அருந்ததியை தலை சாய்த்து பார்த்தான் மகரிஷி..!
"என்னங்க யோசிக்கிறீங்க..!"
"குழந்தை சாப்பிட்டாளோ இல்லையோ..? தினமும் யாரு அவளுக்கு தலைவாரி விடுவாங்க கேட்டு பார்த்தீங்களா..! இங்கிருந்த வரையில நைட்டு ஒரு டம்ளர் ஃபுல்லா பால் கொடுத்துடுவேன்.. பெ.. பெரிய டம்ளர்.. அங்க என்னமோ தெரியலையே..! அந்த ஆளோட அப்பா வேற ஒரு மாதிரி.. என் பொண்ணு விவரம் தெரியாத சின்ன குழந்தை.. மருமகளையே தப்பா பார்த்த வெறி நாய் எது.. பேத்திய மட்டும் குழந்தையாவா நினைக்க போறான்.. ஐயோ எனக்கு உயிரே போகுது.. நெஞ்செல்லாம் அறுக்குது.."
தட்டில் வைத்த கையுடன் ஒரு பருக்கை கூட உள்ளிறங்காமல் தன் மகளைப் பற்றி புலம்பி கொண்டிருந்தாள் அருந்ததி..
இந்த பாசம் ஏக்கம்.. பரிதவிப்பு எல்லாம் எனக்கானதாய் இருந்திருந்தால்..?
திடீரென குறுக்கே நுழைந்து ராங் ரூட்டில் போகும் லாரி போல் கிறுக்குத்தனமாக யோசித்த தன் மனதின் எண்ணங்களை அவசரமாக ஓரந் தள்ளி தூக்கியெறிய முயன்றான் மகரிஷி..
சிட்டிகை போடுவதைப் போல் ஒரு வாரம் கழிந்திருந்தது.. எதிலும் பிடிப்பில்லாமல் பைத்தியக்காரி போல் ஆகியிருந்தாள் அருந்ததி.. ரிஷி அவள் மாற்றங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறான்..
சந்திரமதியிடமும் எத்தனை மாற்றங்கள்..!
அம்மா எப்படி இருக்காங்க என்று இரண்டாம் நாள் கேட்டவள்..
மூன்றாம் நாள் அம்மா சாப்பிட்டாங்களா என்று கேட்டாள்..
நான்காம் நாள் அம்மாவை பார்த்துக்கோங்க என்றாள்..
ஐந்தாம் நாள் அ..ம்மா.. என விசும்பினாள்..
ஆறாம் நாள் போன் வரவே இல்லை..
அடுத்த நாள்.. அம்மா வேணும் என்று ஒரே அழுகை..
காலையிலிருந்து ரிஷியை காணவில்லை.. மோத்தி வழக்கம்போல் அருந்ததியை மான்குட்டி போல் துள்ளலோடு சுற்றி வந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தான்..
"கடுப்பேத்தாத.. மரியாதையா போயிடு.." ஒட்டுமொத்த எரிச்சலை சேர்த்து வைத்து அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள் அருந்ததி..
வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்த நேரத்தில் மகரிஷியின் பைக் கேட்டுக்கு மறுபக்கம் நின்றது..
"இந்த நேரத்துல எங்க போயிட்டு வர்றாரு" துடைப்பத்துடன் நின்று குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வண்டியின் பின்பக்கத்திலிருந்து இறங்கினாள் சந்திரமதி..
அருந்ததியின் கண்கள் விரிந்தன.. மூச்சு விட முடியாமல் திணறினாள்.. துடைப்பம் கீழே விழுந்தது.. பேசக்கூட முடியாமல் நெஞ்சு விம்மியது.. ஒட்டுமொத்த பலத்தை திரட்டி சந்திரமதி என்று கூட அழைக்க முடியவில்லை.. கண்ணீர் கரைகட்டியது..
"மதி.. ம..தி" அழுது கொண்டே இவள் ஓட..
"அ..அம்மா..!" என கேட்டை திறந்து ஓடி வந்த சந்திரமதி கல் தடுக்க அருந்ததியின் காலடியில் விழுந்திருந்தாள்..
அப்போதும் விடாமல் "அம்மா..ம்மா..அ..ம்மா..!" என்ற குழந்தை எழுந்திருக்க முடியாமல் அவள் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது..
தொடரும்..
Last edited: