• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
82
ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்..

அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா..

உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே வரவேற்றது.. யோசனையோடு சுவற்றை தடவி விளக்கை உயிர்ப்பித்தவள்.. சோபாவில் சுருண்டு படுத்திருந்த கமலினியை கவலையோடு பார்த்தாள்..

"என்னடி லைட்ட கூட போடாம படுத்திருக்க..?" என்று கைப்பையை இன்னொரு சோபாவில் வீசி விட்டு அவளருகே வந்து அமர.. கமலினியும் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள்..

தலை கலைந்து.. சோர்ந்த முகத்தோடு வர்ணம் தீட்டப்படாத மங்கிய ஓவியம் போல் காணப்பட்ட கமலியை கண்டு மாயாவின் இதயம் பாரமானது ..

எந்த சஞ்சலங்களையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மான்குட்டி போல் சந்தோஷமாக துள்ளி திரிந்தவள் .. ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் அவள் பேச்சு முழுக்க உற்சாகமாக காதலோடு அஷோக்கை மட்டுமே சுற்றி வரும்.. அஷோக் கமலினி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் மாயா..

அஷோக்கோடு வாழ்ந்த காலங்களில் கமலினியின் முகம் தங்கமாய் மின்னும்..!! வசதி வாய்ப்போடு கண்ணிறைந்த கணவன் தன் தோழிக்கு கிடைத்து விட்டதாய் மாயா கடவுளுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை.. இப்போது அதே கடவுளை சபித்து கொண்டிருக்கிறாள்..

அஷோக் கமலினி தம்பதிகளின் நெருக்கம் நம்மிடையே ஏன் இல்லை என்று மாயா தன் கணவன் விஷ்ணுவிடம் கூட சண்டை போட்டதுண்டு..

அப்படிப்பட்ட வலுவான பந்தமே முறிந்து போய்விட்டது என்றால் இந்த உலகில் எது தான் நிரந்தரம் என்ற பயம் மாயாவின் நெஞ்சை ஆட்டுவிப்பதாய்..

மாயா கமலினியை தன் அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து இத்தோடு வருடமொன்று முடிவடைந்திருந்தது..

மாயாவின் கணவன் விஷ்ணு கலிபோர்னியாவில் பணி புரிகிறான்..!! மாயா இங்கே ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருக்கிறாள்.. இப்போதைக்கு குழந்தை இல்லை..

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பாதித்த பணத்தை சேர்த்துக்கொண்டு தாய் நாட்டிற்கு வந்த பின் சொந்த தொழில் தொடங்குவதாக எண்ணம்..

இத்தனை பெரிய அப்பார்ட்மெண்டில் தனிமையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மாயாவிற்கு கமலினி நல்ல துணைதான் என்றாலும்.. தோழியின் இந்த நிலை.. மாயாவிற்கு பெருங்கவலை அளிக்கிறது..

கணவனிடமிருந்து பிரிந்து இங்கு வந்த நாளிலிருந்து ஏதோ நடை பிணம் போல் வீட்டை சுற்றி வளைய வருகிறாள் கமலி..

அன்று அஷோக்கிடம் நிமிர்ந்து தைரியமாக.. சரிதான் போடா என்ற தோரணையில் பேசி விட்டு வந்த கமலினி இவள் இல்லை..

ஒருவேளை அவனிடம் மட்டும் தைரியமாக இருப்பது போல் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது மாயாவிற்கு

சரியாக சாப்பிடுவதில்லை உறங்குவதில்லை..!! பெரிதாக எதையோ இழந்தவள் போல்.. இழந்து தான் இருக்கிறாள்.. ஆனால் அவள் இழந்த பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லையே..!!

மாயா முற்றிலுமாக உடைந்து போயிருக்கும் தன் தோழியை ஒவ்வொரு முறையும் தேற்றத்தான் முயற்சிக்கிறாள்.. ஆனாலும் பாவம் கமலினியால் அந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவதில்லை..

இதோ இன்றும் கூட காலையில் மாயா அலுவலகத்திற்கு புறப்படும் போது இந்த சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் கமலினி..

மாயா இன்னொரு சாவி வைத்திருந்ததால் அவளே கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்..

இப்போது திரும்பி வந்து பார்த்தால் அதே சோபாவில்.. அமர்ந்திருப்பதிலிருந்து மாற்றமாக படுத்திருக்கிறாள் அவ்வளவுதான்..

நிச்சயமாக எதையும் உண்டிருக்க மாட்டாள்.. ஏன் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள்..

"என்னடி..!! காலையில நான் போனதுக்கப்புறம் இங்கிருந்து நீ நகரவே இல்லையா..?" மாயாவின் குரல் கோபமாக வெளிப்பட்டது..

கமலினியிடம் பதில் இல்லை.. அழுதிருப்பாள் போலிருக்கிறது.. மூக்கை உறிஞ்சி கொண்டு அலங்கோலமாக விரிந்து கிடந்த தன் கூந்தலை சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டாள்..

"கமலி எனக்கு புரியல..!! உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒருத்தனுக்கு எதுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற..? எதுக்காக இடிஞ்சு போய் உன்னையே வருத்திக்கற..!! நீ இப்படி அழுதுட்டு இருக்கற நேரத்துல உன் புருஷன் அவன் ரெண்டாவது பொண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா இருப்பான்.."

"அதுதான் என்னால தாங்க முடியல..!! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால ஜீரணிக்கவே முடியல.." கமலியின் குரல் தழுதழுத்தது.. கண்ணீர் வற்றிப் போன விழிகள் எதிர் திசையில் நிலை குத்தி நின்றன.

"நான் அவனுக்கு என்னடி குறை வச்சேன்..!! எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. அஞ்சு வருஷ வாழ்க்கையில அவன் மட்டும்தான் என்னோட உலகமா இருந்தான்.. அவனைத் தவிர வேற எதையும் நான் யோசிச்சதே இல்லையே..!! அவன் மட்டும் எப்படி..?" அழுகையோடு தொண்டைக் குழீக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் மாயா..

"விடுடி அவன் சுயரூபம் இப்ப தெரிஞ்சிருக்கு சந்தோஷப்படு.. அவனையே நினைச்சுட்டு இருக்காம உன் வாழ்க்கையை பாரு.. அதுதான் உனக்கு நல்லது.." என்றாள்..

"முடியல.. முடியலடி..!!" இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டு கண்களை உருட்டியபடி குனிந்தாள்.. "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகத்துக்கு வருது..!! என்னால ஏத்துக்கவே முடியல.." தலையை இடம் வலமாக அசைத்தாள்..

"அதுக்காக எத்தனை நாள் இப்படியே இருப்ப..? இதுதான் நிஜம்.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.." என்றாள் மாயா அழுத்தமாக..

"அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் மாயா.. அவன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் இந்த ஐடியாவுக்கு சம்மதிச்சேன்.. ஆனா அது எனக்கே..?" என்றவளுக்கு நெஞ்சடைத்து மூச்சு வாங்கியது..

"பேபி.. கமலி காம் டவுன்..!!" அவள் தோளை தட்டிக் கொடுத்தாள் மாயா..

"அவனோட வாரிசை வயித்தில சுமந்ததால அவ மேல அன்பு வந்துடுச்சா..? இல்ல குழந்தை பெத்து தர முடியலைங்கிறதுக்காக என்னை ஒதுக்கி தள்ளிட்டானா..!! எப்படி மாயா? அவ்வளவுதானா? எனக்கு புரியவே இல்ல" தாங்க முடியாமல் கண்ணீர் வழிய.. ஆதங்கத்தில் வார்த்தைகள் வெடித்தன..

"கமலி.. நீ எவ்வளவு புலம்பினாலும் இதுதான் நிஜம்.. இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ.. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லல.. நீதான் அவனை வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க..!! காதல் கத்திரிக்காய்ன்னு பலவீனமா அவன் கால்ல விழுந்து கதறாம.. தைரியமா புத்திசாலித்தனமா இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு உன்னை நினைச்சு நீயே பெருமைப்படணும்.. அதை விட்டுட்டு.. இப்படி அழுது புலம்பினா எப்படி..!! அவன் உண்மை முகம் தெரிஞ்சு வருஷமாக போகுது.. இதோ விவாகரத்து கூட கிடைச்சாச்சு.. அடுத்த வேலையை பாக்காம.. துரோகத்தை ஜீரணிக்க முடியலைன்னு.. உன்னை நீயே அழிச்சுக்கிறது சரியா..!! நீ இங்க அழுதுட்டு இருக்கற ஒவ்வொரு நொடியும் அவன் அங்க சந்தோஷமா சிரிச்சிட்டு இருப்பான்.. அதை நினைச்சாத்தான் எனக்கு வயிறெல்லாம் பத்தி எரியுது.. தப்பு செய்யாத நீ எதுக்குடி இப்படி கலங்கி நிக்கிற..?" கோபத்தில் கத்தினாள் மாயா..

"ஒவ்வொரு முறையும்.. இதிலிருந்து வெளியே வரணும்னு நான் எடுக்கற முயற்சிகள் எல்லாம்.. நான் உடைஞ்சு போற ஒரே நொடியில் வீணாகிப் போயிடுது..!!" கண்களைத் துடைத்துக்கொண்டாள் கமலி..

"வீட்ல சும்மா உக்காந்திருந்தா இப்படித்தான் பைத்தியக்காரத்தனமா ஏதாவது யோசிக்க தோணும்.. எம்டி மைண்ட் இஸ் டெவில் ஒர்க்ஷாப் அப்படின்னு சொல்லுவாங்க..!! உபயோகமா ஏதாவது பண்ணு கமலி.." என்றாள் அழுத்தமாக..

"என்ன செய்யறது ஒன்னும் புரியலையே..!!" மக்குப் பெண் போல் விழித்தவளை கண்டு ஆத்திரம் பொங்கியது மாயாவிற்கு..

"அடி வாங்க போற.. நீ நர்சிங் படிச்சிருக்க.. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?" என்று கேட்ட பிறகுதான் ஆஞ்சநேயருக்கு தன் பலம் தெரிவது போல.. விழிகளின் மூடி திறந்தாள் கமலி..

மாயா கமலினி இருவரும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பிள்ளைகள்..

இருவரும் நல்லபடியாக படித்து அவரவர் துறையில் காலூன்றி நின்ற சாதனைப் பெண்கள் தான்..

படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளிவந்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து.. அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்..

மாயா பொறியியல் முடித்து அது சம்பந்தமான வேலையில் சேர்ந்திருந்தாள்..

கமலி BSc நர்சிங் (mid wifery) ஸ்பெஷல் கேட்டகரி முடித்துவிட்டு.. ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவரவருக்கான காதல் துணையை கண்டறிந்து திருமணம் செய்து கொண்ட பின்.. வேலை காதல் கலாட்டா கொண்டாட்டம் என வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது..

கமலி அசோக்கை திருமணம் செய்து கொண்ட அடுத்த இரண்டு வருடங்களில் மாயா விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்..

அஷோக் ஆடிட்டர்.. வசதி படைத்த குடும்பம்.. வீட்டை எதிர்த்து தான் கமலினியை திருமணம் செய்து கொண்டான்..

காதலால் கசிந்துருகி அப்படி ஒரு இன்ப வாழ்க்கை..!! ஆசிரமத்தில் அன்பு காட்ட ஆளில்லாத தனி பெண்ணாக வாழ்ந்தவள் கணவனின் அன்பில் முழு முற்றாக மூழ்கி இல்லற சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்தாள்..

"நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே.. நீ வேற எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்லயே இருந்து என்னை கவனிச்சுக்கோயேன் பட்டுமா.."

"அசோக் கொஞ்சலோடு சொல்ல அதற்கும் சம்மதித்து 24 மணி நேர பதி சேவையில் மூழ்கி போனாள் கமலி..‌ அஷோக் மீது அத்தனை நேசம்.. அவனுக்காக உயிரோடு சேர்த்து சகலத்தையும் துறக்க தயாராக இருந்தாள்.. இந்த வேலை எம்மாத்திரம்..?"

அதன் பிறகு வேலையை மறந்து அவன் மட்டுமே உலகமென வாழ்ந்தவளுக்கு.. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தான்‌ படித்த படிப்பே என்னவென நினைவில் வருகிறது.. காலம் கடந்த பின்.. வாழ்க்கை திசைமாறிய பின்தான்.. தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிகிறது..

ஆனால் அந்த வகையில் மாயா அதிர்ஷ்டசாலி.. அடையாளத்தை தொலைக்காமல் படித்த படிப்பிற்கான வேலையை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.. பொருளாதாரத்தை சற்று மேம்படுத்திவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விஷ்ணு மாயா இருவரின் திட்டமாக இருக்கிறது..

இந்த விவாகரத்து விஷயத்தில் கூட.. கமலிக்கு போன் செய்து ஓரிரு முறை ஆறுதல் கூறியிருக்கிறான் விஷ்ணு..

"கவலைப்படாதே கமலி உனக்காக நாங்க இருக்கோம்.. என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேளு..!!" என்று அவள் உடைந்து போயிருந்த நேரத்தில் தைரியம் தந்திருக்கிறான்..

"ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணு கமலி.. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்..!! நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.." என்றாள் மாயா இறங்கிய குரலில்..

"எனக்கு இந்த ஊரே வேண்டாம் மாயா..!! இங்க இருக்கவே பிடிக்கல.. நெஞ்செல்லாம் அடைக்குது.. இந்த ஊர்ல என்னால எந்த வேலைக்கும் போக முடியாது.." தலையை வேகமாக அசைத்தாள் கமலி..

"என்னடி சொல்ற..?" மாயா திகைத்தாள்..

"ஆமா..!! ஒவ்வொரு நாளும் எங்கே அவன் என் முன்னாடி வந்துருவானோ.. ஏதாவது ஒரு தருணத்தில என்னையும் மீறி உடைஞ்சு அழுதுடுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு.. அப்படி மட்டும் ஒரு சந்தர்ப்பம் வந்துட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. நா.. நான் அவன்கிட்ட தோக்க விரும்பல.." இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் கமலி..

"அவனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட போறியா..? அவன் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டாமா.. என்னடி பைத்தியக்காரத்தனம் இது.. தெரியாத ஊர்ல போய் என்ன செய்வ..?" கவலையும் கோபமுமாக கேட்டாள்‌ மாயா..!!

"என்னை மாதிரி அனாதைகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்..!! எந்த ஊரானாலும் பழகிக்கணும்.." விரத்தியாகச் சொன்னாள் கமலி..

"அடி பின்னிடுவேன்.. என்ன பேச்சு இது.. யார் அனாதை? உனக்கு நான் இல்லையா..?" மாயாவிற்கு கோபத்தில் மூச்சு வாங்கியது..

"நீ மட்டும்தான் எனக்காக இருக்க மாயா.. ஏதாவது ஒரு கட்டத்துல உன்னையும் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு..!! நீ எனக்கு வேணும் மாயா.. அதனால தான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்.."

"என்னடி பேசுற..?" மாயாவுக்கு புரியவில்லை..

"நான் நேசிக்கிறது எதுவும் எனக்கு நிலைக்க மாட்டேங்குதே..!!" அவள் கண்ணீரோடு சொல்ல..

"ஏய் லூசு.." என்று அதட்டினாள் மாயா..

"ப்ளீஸ் மாயா என்னை புரிஞ்சுக்கோ.. எனக்கும் ஒரு மாற்றம் தேவை.. இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும்.. அவனுடைய ஞாபகங்கள் அதிகமா என்னை வாட்டி வதைக்கும்.. ஏதாவது தவறான முடிவு எடுத்துடுவேனோனு பயமா இருக்கு.." கெஞ்சலாக பார்த்தாள் கமலி..

"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதடி.. இன்னுமுமா அந்த துரோகியை விரும்பற.?"

"நிச்சயமா இல்லை..!! என்னைக்கு அவனோட கீழ்த்தரமான குணம் தெரிய வந்துச்சோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன்.. இப்ப என்னோட தேங்கி நிக்கறதெல்லாம்.. அவன் எனக்கு செஞ்ச அநியாயங்கள் மட்டும்தான்.."

"அதை மறந்து தொலையேன்டி..‌!!" மாயா சலித்தாள்..

"முடியலையே..!! நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் கூட போனேனே.. எந்த பயனும் இல்லை.. நல்ல வேலையா தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்துட்டேன்..!!" என்று இழுத்து மூச்சு விட்டாள்..

தோழியின் நிலை புரிந்தும் அவள் துயரத்தை போக்க முடியாத கையாலாகத்தனத்தோடு அமர்ந்திருந்தாள் மாயா..‌!!

உண்மையை சொல்லப்போனால் எவராலும் இப்படி ஒரு துரோகத்தை ஜீரணிக்க இயலாது.. இருந்த போதிலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..!!

"சரி வெளியூர் போய் வேலை பாக்கணும்ங்கற என்னத்துல உறுதியா இருக்கியா..?"

"ம்ம்.. நிச்சயமா போயே ஆகணும்.. இங்க மூச்சடைக்குது.. என்னால முடியல.."

நீண்ட பெருமூச்சு விட்டாள் மாயா.. "கன்ஸ்டிரக்ஷன் ஃபீல்டுல இருக்கிறதுனால எனக்கு நிறைய ஆளுங்களை தெரியும்.. அந்த கான்டாக்ட்ஸ் வெச்சு.. ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல உனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா பார்க்கறேன்.. தயவு செஞ்சு இப்படி இருளடைஞ்சு போய் உட்கார்ந்துருக்காதே.. என் கூட இருக்கிற வரைக்குமாவது சந்தோஷமா இரேன்.. இப்படியே அழுது வடிஞ்சு நீ என்னை விட்டு போனா என்னால தாங்கிக்க முடியாது..‌ ப்ளீஸ் டி..!!" மாயாவின் கவலையான குரலில் அவள் பக்கம் திரும்பி மெல்ல சிரிக்க முயற்சித்தாள் கமலி..

"குட்..‌ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வா..‌ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல?" அவள் முறைத்தபடி கேட்க..

அமைதியாக இருந்தாள் கமலி..

"உன்னை என்னதான் செய்யறதோ..!! இனி இந்த பட்டினி கிடக்கற வேலையெல்லாம் வச்சுக்காத..‌ ஒழுங்கா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாதான் இங்கிருந்து உன்னை அனுப்பி வைப்பேன்.. இல்லைனா எங்கேயும் போக விட மாட்டேன்.. இரு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..!!" என்று மாயா எழுந்திருக்க..

"இருடி நீயே ஆபிஸ்லருந்து இப்பதான் வந்திருக்க.. உனக்கும் சேர்த்து நானே ஏதாவது எடுத்துட்டு வரேன்..!!" என்று அவளை அமர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள் கமலி..

வெட்டியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பதை விட ஏதாவது வேலை செய்தால் அவள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் என்பதால் மாயா தடுக்கவில்லை..!!

சொல்லப்போனால் தொண தொணவென்று பேசிக்கொண்டும்.. நச்சரித்து வேலை வாங்கிய படியும் பரபரப்பான சூழ்நிலையில் கமலியின் மனநிலையை மாற்றத்தான் முயல்கிறாள் மாயா..

ஆனால் அதையும் மீறி.. கிடைக்கும் இடைவெளிகளில் இப்படி ஜடமாக அமர்ந்துவிடும் தோழியை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியவில்லை..

கமலி தன் தலைமுடியை திருத்தி முகத்தை கழுவிக்கொண்டு.. ஒரு வட்ட பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..

ஏதோ அவளிடமிருந்து ஆத்மாவை பிடுங்கியது போல் முகம் களையிழந்து போயிருந்தது…

"என்னடி இப்படி இருக்க..? ம்ஹூம்.. இது சரிவராது.. உன்னை நீதான் தேத்திக்கணும்.. வெளிய வா கமலி.. அஷோக்கை தான்டி இந்த உலகத்தில் நீ கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. வாழ ஒரு வாழ்க்கை இருக்கு.. அவன் சவால் விட்ட மாதிரி துவண்டு போய்டாதே..!!" தனக்குத்தானே வலிமையோடு சமாதானம் சொல்லிக்கொண்டு.. ஓரளவு தெளிவான மனநிலையோடு சமையலறைக்குள் புகுந்தாள்..

இருவருக்குமாக பிரட் ரோஸ்ட் டீ தயாரித்து எடுத்து வந்து டேபிளில் வைக்க.. அதே நேரத்தில் வேறு உடைக்கு மாறியிருந்த மாயா சிரித்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்..

"நீ ரொம்ப குடுத்து வச்சவ கமலி.. வேலைக்கு போகணும்னு சொன்ன.. உடனே வழி கிடைச்சிடுச்சு.." என்றவளை கோப்பையை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே ஆர்வமாக பார்த்தாள் கமலி..

எங்க கம்பெனி கிளைன்ட் ஒருத்தர் கோயம்புத்தூர்ல இருக்காரு.. அவரோட ஹாஸ்பிடல் நாங்கதான் டிசைன் பண்ணி கட்டிக் கொடுத்தோம்.."

"என்ன ஹாஸ்பிடல்..?" தேநீரை பருகிக் கொண்டே கேட்டாள் கமலி..

"சூர்யா மெட்டர்நிட்டி சென்டர்..!! ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் சூர்ய தேவ் எங்க கம்பெனியோட கிளைன்ட்.."

கோப்பையை கீழே வைத்துவிட்டு ‌"ஓ மை காட்..!! அவர் கிட்டயா இப்ப பேசின..?" திகைத்தாள் கமலி..

"ஏன் இவ்வளவு ஷாக்..‌ அவரைப் பத்தி உனக்கு தெரியுமா..?" பிரட் டோஸ்ட்டை எடுத்து ஒரு துண்டு கடித்துக் கொண்டே கேட்டாள் மாயா..

"கேள்விப்பட்டிருக்கேன்.. நேர்ல பார்த்ததில்லை..‌ ஆனா அந்த ஹாஸ்பிடல் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மெடர்னிட்டி ஹாஸ்பிட்டலாச்சே..!! அங்கே எனக்கு வேலை கிடைக்குமா..? எனக்கு அவ்வளவா எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாதே.. நடுவுல கேப் விழுந்து போச்சு.. பட் வேலை கிடைச்சா என்னோட பியூச்சருக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.." கவலையில் ஆரம்பித்து எதிர்பார்ப்பில் முடித்தாள் கமலி..

"நான் மனசு வச்சா கிடைக்கும்.." காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவளை கேள்வியாக பார்த்தாள் கமலி..

அந்த ஹாஸ்பிடல் கட்டும்போது.. எங்க கம்பெனியிலிருந்து ஒரு டீம் அங்க போய் பிளான் போட்டு டிசைன் பண்ணி பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்ணி தந்தோம்.. அந்த டீம்ல நானும் ஒருத்தி.. கன்ஸ்டிரக்சன்க்காக டெடிகேட்டடா நான் ஒர்க் பண்ணினதா அவரே என்னை பாராட்டி இருக்கார்.. என் மேல சூர்ய தேவுக்கு நல்ல மரியாதை உண்டு.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு.. இப்ப அவர்கிட்ட பேசினேன்.. வேக்கன்சி இருக்கு.. வர சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.." என்று குதூகலமாக தோள்களை குலுக்கினாள்..

"நெஜமாவா சொல்ற..!!" நம்ப இயலாத பார்வையோடு கேட்டாள் கமலி..

"நான் எதுக்குடி பொய் சொல்ல போறேன்.. இன்னும் ஒரு வாரத்துல நீ இங்கிருந்து கிளம்பனும்..!!"

"இன்டர்வியூ எதுவும் இல்லையா..?" அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை அவளால்..

"அதெல்லாம் எதுவும் இல்லைடி.. நீ முன்னாடி வேலை பார்த்த பழைய ஹாஸ்பிடல் பேரை சொன்னேன்.. ஓகேன்னு சொல்லிட்டார்.."

"என்னால இப்ப கூட நம்பவே முடியல..!!" கண்களை விரித்தாள் கமலி..

"ஹலோ மேடம்.. மிஸ்டர் சூர்ய தேவ் என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையில நான் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.." என்று கடைசி துண்டு பிரட் டோஸ்ட்டடையும் வாயில் போட்டு மென்றாள் மாயா..

தேனீரை ஒரு மிடறு விழுங்கியபடி டேபிளை பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"இன்னும் என்னடி யோசனை.. அந்த பாழாப்போன பழைய ஞாபகங்களை தூக்கி போட்டுட்டு.. வேலை கிடைச்சதை கொண்டாடு கமலி.." மாயா அயர்வாக பார்த்தாள் அவளை..

"அது இல்லைடி..!! உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிடுச்சு.. ஆனா தங்கறதுக்கு ஹாஸ்பிடல் பக்கத்திலேயே பாதுகாப்பான நல்ல ஹாஸ்டல் இல்லனா பிஜி ஏதாவது கிடைக்குமான்னு நெட்ல பாக்கணும்.. அதைப்பத்திதான் யோசிக்கறேன்..!!" யோசனையோடு விரல்களால் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது..!!" மாயா தயக்கத்தோடு பீடிகை போடவும்..

"என்ன..? அதையும் ஏற்பாடு பண்ணிட்டியா..?" கமலியின் கண்கள் ஆச்சரியத்தோடு விரிந்தன..

"பின்ன..? எந்த ஐடியாவும் இல்லாம அப்படியே குருட்டுத்தனமா உன்னை இங்கிருந்து அனுப்பி வச்சிடுவேன் நினைச்சியா..? எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பற்றி உன்கிட்ட பேசவே வந்தேன்.." என்ற தோழியை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் கமலி.. இப்படி ஒரு தோழி கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ..!! என்று கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..

"தங்கறதுக்கான இடமெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. ஆனா நீ சம்மதிக்கனும். அதுதான் பிரச்சனை..!!" என்று இழுத்தாள்..

"என்னடி பிரச்சனை..?" கண்களைக் குறுக்கி மாயாவை கூர்மையாக பார்த்தாள் கமலி..

"நான் இப்போ வேலைக்காக ரெக்கமண்ட் பண்ணி இருக்கற ஆஸ்பிட்டல் ஓனர் டாக்டர் சூர்யா தேவ்.. அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியாதான் இருக்குது.. அங்கேயே நீ தங்கறதுக்கு பர்மிஷன் கேட்டு ஏற்பாடு பண்ணிட்டேன்.."

"ஒஹோ.. டாக்டர் வீட்ல இதுக்கு ஒகே சொல்லிட்டாங்களா..? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை குழந்தைங்க.." கமலி இயல்பான ஆர்வத்தோடு கேட்க..

"ஹிஹி.. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்பா மட்டும்தான் இருந்தார்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் மேலே போய்ட்டார்.. இப்ப டாக்டர் தனிக்கட்டை.." என்று அசடுவழிந்தவளை
தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் கமலி..

"முறைக்காதடி..!! டாக்டர் பெண்கள் விஷயத்துல ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. எனக்கென்னமோ அவர் வீட்டில் நீ இருக்கிறது பாதுகாப்புன்னு தோணுச்சு.. அதனாலதான்..!!"

"என்ன விளையாடுறியா..? கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லிட்டு எதுக்காக அங்க போய் என்னை தங்க வைக்க நினைக்கற..!! இருக்கிற பிரச்சினையே போதும்.. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து தலையில போட்டுக்க நான் தயாரா இல்லை.. நான் ஹாஸ்டல் ஏதாவது பாத்துக்கறேன்" என்றாள் கமலி கோபமாக..

"கோவப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு..!! அவரால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. அவர் கூட ஆறு மாசம் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அந்த அனுபவத்துல தான் சொல்றேன்.. ஹாஸ்டல்ல என்ன வசதி இருக்குமோ..!! அவரு வீட்டுல நீ தங்கினா உன் இஷ்டப்படி இருக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன் புரிஞ்சுக்க டி.." மாயாவின் பொறுமையான விளக்கம் ஓரளவு பலனளித்தது..

"உண்மையிலேயே அந்த டாக்டர் நல்லவர்ன்னு சொல்றியா அவரால எனக்கு எந்த தொல்லையும் வந்துடாதே..?" கமலி கேட்க.. மாயாவிற்கு அப்பாடா என நிம்மதி..

"வராதுடி..!! ஆள் கொஞ்சம் சிடுசிடுப்பான ஆளு.. கண்டிப்பான பேர்வழி ஆனா பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவர்.."

"அதெல்லாம் சரிதான்.. ஆனா நான் அங்க தங்கறதுக்குகு அவர் எப்படி சமாதிச்சார்.. ஏதோ இடிக்குதே..!! தனியாளு வேற.. இன்னொரு பொண்ணு மேல் வீட்டு போர்ஷன்ல இருந்தா தேவையில்லாத குழப்பங்கள் வரும்ன்னு அவருக்கு தெரியாதா..?"

"இவ்வளவு யோசிக்காதே கமலி.. உன்னை மாதிரி அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார்.. உன்னால அவருக்கும் அவர் பிரைவசிக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டார்.. நான்தான் கவலையே படாதீங்க.. உங்களோட ஃபீமேல் வர்ஷன்தான் என் பிரண்டு கமலி.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்..!!"

"அவ்வளவு கட்டன் ரைட்டா இருக்கிற ஆள் வீட்டுல நான் எதுக்காக போய் தங்கனும்.." வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் தோன்ற..

"அம்மா தாயே..!! தயவுசெய்து மறுபடி குட்டையை குழப்பாத.. உன்னை பாக்க கோயம்புத்தூர் வந்தாலும் ஒரு வாரம் தாராளமா வசதியா என்னால் அங்க தங்க முடியும்.. ஹாஸ்டல்ல வந்து உன் கூட தங்க முடியுமா..? நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன்னு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு.. இல்லேன்னா உன் இஷ்டம்.." காலியான காபி கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள் மாயா..

மூளையை தட்டி தட்டி யோசித்தவளுக்கு.. தோழி சொன்னதை ஆமோதிப்பதே சரியென்று தோன்றியது.. அத்தோடு அத்தனை பெரிய மருத்துவமனையில் வேலை கிடைப்பது சாதாரண காரியம் அல்லவே..

கமலி எழுந்து சமையலறைக்குள் சென்றவள்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காபி கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த தோழியை சிரிப்போடு பார்த்தாள்..

"மூஞ்சிய இப்படி வச்சுக்காத.. நல்லாவே இல்ல" என்று அவள் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக் கொள்ள.. மாயா அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சரிடி போறேன்.. அவர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்.. ஆனா பிரச்சனை வந்துச்சுன்னு வை நேரா சென்னை கிளம்பி வந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன் பாத்துக்கோ.." கழுத்தை நெறிப்பது போல் அவளை பிடித்து ஆட்டினாள்..

"ஐயோ என் செல்லமே.. நீ சம்மதிச்சதே போதும்.. ஒரு பிரச்சினையும் வந்துடாது.. ஏன்னா நீ நெருப்பு.. அவர் ஒரு சிடுமூஞ்சி.. நவகிரகம் மாதிரி நீ ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமா இருக்க போறீங்க.. சோ டோன்ட் வொர்ரி" என்று கமலியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..

அப்போதும் விழி தாழ்ந்து கமலி எதையோ யோசித்துக் கொண்டிருக்க..

"netflixல ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் மூவி ரிலீஸ் ஆகியிருக்கு.. பாக்கலாமாடி..?" என்று கேட்க.. உதட்டை குவித்துக் கொண்டு சரி என்ற தலையைசைத்தாள் கமலி..

"வா..வா.. டிவியை ஆன் பண்ணு.." தோழியை தோளில் கை வைத்து நகர்த்திக் கொண்டே சென்றாள் மாயா..

கோயமுத்தூர் மருத்துவமனையில்..
"டாக்டர் அந்த நந்தினிங்கிற பேஷண்டோட அப்பா உங்களை பாக்கணும்னு வெயிட் பண்றார்.. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கல.." நர்ஸ் வந்து சொல்ல..

நெற்றியை தேய்த்தபடி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சூர்ய தேவ் நிமிர்ந்தான்..

"நந்தினியா..?" புருவங்களை சுருக்கினான்..

ஆமா டாக்டர் சிசேரியன் கேஸ்.. இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு.." என்று சொல்ல தீவிரமாக யோசித்தான் சூரியதேவ்..

பிரசவித்து குழந்தை வெளிவரும் நேரத்தில் அந்தப் பெண் மயக்கமாகிவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக்கு திணறி கொண்டிருந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாய் போனது.. அதை நினைவுப் படுத்திக் கொண்டவன்..

"ஹான்.. என்னவாம்..?" என்றான் புருவங்களை நெளித்து..

"ஏற்கனவே அட்மிஷன் அப்போ 20000 ரூபாய் கட்டிட்டாங்க.. இப்ப டெலிவரிக்கு பிறகு மேற்கொண்டு அறுபதாயிரம் கட்டனும்.. அவ்வளவு பணம் கையிருப்பு இல்லையாம்.. அதனால உங்க கிட்ட பேசணும்னு..!!"

ஏளனமாக உதடு வளைத்தான் அவன்..

"பணம் இல்லைனா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போக வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்.. நம்பர் ஒன் ஹாஸ்பிடல்.. இங்க வந்தா ட்ரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நம்பி தானே வராங்க.. அப்புறம் காசு இல்லைன்னு கருணையை எதிர்பார்த்தா எப்படி.. நானும் அதே கருணையை வச்சு ஹாஸ்பிடல் நடத்த முடியாது.. சம்பளம் இல்லாம கருணையின் அடிப்படையில் நீங்களும் சேவை செய்ய முடியாது.. பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.. இவங்க பாப்புலேஷனை இன்க்ரீஸ் பண்ணிட்டே போவாங்க..!! நாம ஃப்ரீ சர்விஸ் பண்ண முடியுமா..? பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.." என்றான் கனத்த குரலில்..

அப்போதும் நர்ஸ் தயங்கி நிற்க..

"குழைஞ்சு குழைஞ்சு கருணையோடு பேச இது ஒன்னும் சேவா சங்கம் கிடையாது.. ஹாஸ்பிடல்.. கண்டிப்பும் கறாருமுமா இருந்தாதான் விதிமுறைகளை சரியா கடைபிடிக்க முடியும்.. புரிஞ்சுதா..!!" அவன் கடுமையான குரலில்.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள் அந்த நர்ஸ்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Aug 8, 2024
Messages
23
Very nice epi... interesting 👌 👌 👌 👌 👌 👌
 
Member
Joined
Dec 23, 2023
Messages
29
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Apr 7, 2023
Messages
45
👌👌👌👌👌👌👌
 
Joined
Sep 18, 2024
Messages
29
ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்..

அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா..

உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே வரவேற்றது.. யோசனையோடு சுவற்றை தடவி விளக்கை உயிர்ப்பித்தவள்.. சோபாவில் சுருண்டு படுத்திருந்த கமலினியை கவலையோடு பார்த்தாள்..

"என்னடி லைட்ட கூட போடாம படுத்திருக்க..?" என்று கைப்பையை இன்னொரு சோபாவில் வீசி விட்டு அவளருகே வந்து அமர.. கமலினியும் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள்..

தலை கலைந்து.. சோர்ந்த முகத்தோடு வர்ணம் தீட்டப்படாத மங்கிய ஓவியம் போல் காணப்பட்ட கமலியை கண்டு மாயாவின் இதயம் பாரமானது ..

எந்த சஞ்சலங்களையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மான்குட்டி போல் சந்தோஷமாக துள்ளி திரிந்தவள் .. ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் அவள் பேச்சு முழுக்க உற்சாகமாக காதலோடு அஷோக்கை மட்டுமே சுற்றி வரும்.. அஷோக் கமலினி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் மாயா..

அஷோக்கோடு வாழ்ந்த காலங்களில் கமலினியின் முகம் தங்கமாய் மின்னும்..!! வசதி வாய்ப்போடு கண்ணிறைந்த கணவன் தன் தோழிக்கு கிடைத்து விட்டதாய் மாயா கடவுளுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை.. இப்போது அதே கடவுளை சபித்து கொண்டிருக்கிறாள்..

அஷோக் கமலினி தம்பதிகளின் நெருக்கம் நம்மிடையே ஏன் இல்லை என்று மாயா தன் கணவன் விஷ்ணுவிடம் கூட சண்டை போட்டதுண்டு..

அப்படிப்பட்ட வலுவான பந்தமே முறிந்து போய்விட்டது என்றால் இந்த உலகில் எது தான் நிரந்தரம் என்ற பயம் மாயாவின் நெஞ்சை ஆட்டுவிப்பதாய்..

மாயா கமலினியை தன் அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து இத்தோடு வருடமொன்று முடிவடைந்திருந்தது..

மாயாவின் கணவன் விஷ்ணு கலிபோர்னியாவில் வேலை பார்க்கிறான்..!! மாயா இங்கே ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.. இப்போதைக்கு குழந்தை இல்லை..

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பாதித்த பணத்தை சேர்த்துக்கொண்டு தாய் நாட்டிற்கு வந்து சொந்த தொழில் தொடங்குவதாக எண்ணம்..

இத்தனை பெரிய அப்பார்ட்மெண்டில் தனிமையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மாயாவிற்கு கமலினி நல்ல துணைதான் என்றாலும்.. தோழியின் இந்த நிலை.. மாயாவிற்கு பெருங்கவலை அளிக்கிறது..

கணவனிடமிருந்து பிரிந்து இங்கு வந்த நாளிலிருந்து ஏதோ நடை பிணம் போல் வீட்டை சுற்றி வளைய வருகிறாள் கமலி..

அன்று அஷோக்கிடம் நிமிர்ந்து தைரியமாக.. சரிதான் போடா என்ற தோரணையில் பேசி விட்டு வந்த கமலினி இவள் இல்லை..

ஒருவேளை அவனிடம் மட்டும் தைரியமாக இருப்பது போல் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது மாயாவிற்கு

சரியாக சாப்பிடுவதில்லை உறங்குவதில்லை..!! பெரிதாக எதையோ இழந்தவள் போல்.. இழந்து தான் இருக்கிறாள்.. ஆனால் அவள் இழந்த பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லையே..!!

மாயா முற்றிலுமாக உடைந்து போயிருக்கும் தன் தோழியை ஒவ்வொரு முறையும் தேற்றத்தான் முயற்சிக்கிறாள்.. ஆனாலும் பாவம் கமலினியால் அந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவதில்லை..

இதோ இன்றும் கூட காலையில் மாயா அலுவலகத்திற்கு புறப்படும் போது இந்த சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் கமலினி..

மாயா இன்னொரு சாவி வைத்திருந்ததால் அவளே கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்..

இதோ இப்போது திரும்பி வந்து பார்த்தால் அதே சோபாவில்.. அமர்ந்திருப்பதிலிருந்து மாற்றமாக படுத்திருக்கிறாள் அவ்வளவுதான்..

நிச்சயமாக எதையும் உண்டிருக்க மாட்டாள்.. ஏன் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள்..

"என்னடி..!! காலையில நான் போனதுக்கப்புறம் இங்கிருந்து நீ நகரவே இல்லையா..?" மாயாவின் குரல் கோபமாக வெளிப்பட்டது..

கமலினியிடம் பதில் இல்லை.. அழுதிருப்பாள் போலிருக்கிறது.. மூக்கை உறிஞ்சி கொண்டு அலங்கோலமாக விரிந்து கிடந்த தன் கூந்தலை சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டாள்..

"கமலி எனக்கு புரியல..!! உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒருத்தனுக்கு எதுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற..? எதுக்காக இடிஞ்சு போய் உன்னையே நீ வருத்திக்கற..!! நீ இப்படி அழுதுட்டு இருக்குற நேரத்துல உன் புருஷன் அவன் ரெண்டாவது பொண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா இருப்பான்.."

"அதுதான் என்னால தாங்க முடியல..!! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால ஜீரணிக்கவே முடியல.." கமலியின் குரல் தழுதழுத்தது.. கண்ணீர் வற்றிப் போன விழிகள் எதிர் திசையில் நிலை குத்தி நின்றன.

"நான் அவனுக்கு என்னடி குறை வச்சேன்..!! எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. அஞ்சு வருஷ வாழ்க்கையில அவன் மட்டும்தான் என்னோட உலகமா இருந்தான்.. அவனைத் தவிர வேற எதையும் நான் யோசிச்சதே இல்லையே..!! அவன் மட்டும் எப்படி..?" அழுகையோடு தொண்டைக் குழீக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் மாயா..

"விடுடி அவன் சுயரூபம் இப்ப தெரிஞ்சிருக்கு சந்தோஷப்படு.. அவனையே நினைச்சுட்டு இருக்காம உன் வாழ்க்கையை பாரு.. அதுதான் உனக்கு நல்லது.." என்றாள்..

"முடியல.. முடியலடி..!!" இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டு கண்களை உருட்டியபடி குனிந்தாள்.. "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகத்துக்கு வருது..!! என்னால ஏத்துக்கவே முடியல.." தலையை இடம் வலமாக அசைத்தாள்..

"அதுக்காக எத்தனை நாள் இப்படியே இருப்ப..? இதுதான் நிஜம்.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.." என்றாள் மாயா அழுத்தமாக..

"அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் மாயா.. அவன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் இந்த ஐடியாவுக்கு சம்மதிச்சேன்.. ஆனா அது எனக்கே..?" என்றவளுக்கு நெஞ்சடைத்து மூச்சு வாங்கியது..

"பேபி.. கமலி காம் டவுன்..!!" அவள் தோளை தட்டிக் கொடுத்தாள் மாயா..

"அவனோட வாரிசை வயித்தில சுமந்ததால அவ மேல அன்பு வந்துடுச்சா..? குழந்தை இல்லைங்கிறதுக்காக என்னை ஒதுக்கி தள்ளிட்டானா..!! எப்படி மாயா? எனக்கு புரியவே இல்ல?" தாங்க முடியாமல் கண்ணீர் வழிய.. ஆதங்கத்தில் வார்த்தைகள் வெடித்தன..

"கமலி.. நீ எவ்வளவு புலம்பினாலும் இதுதான் நிஜம்.. இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ.. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லல.. நீதான் அவனை வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க..!! காதல் கத்திரிக்காய்ன்னு பலவீனமா அவன் கால்ல விழுந்து கதறாம.. தைரியமா புத்திசாலித்தனமா இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு உன்னை நினைச்சு நீயே பெருமைப்படணும்.. அதை விட்டுட்டு.. இப்படி அழுது புலம்பினா எப்படி..!! அவன் உண்மை முகம் தெரிஞ்சு வருஷமாக போகுது.. இதோ விவாகரத்து கூட கிடைச்சாச்சு.. அடுத்த வேலையை பாக்காம.. துரோகத்தை ஜீரணிக்க முடியலைன்னு.. உன்னை நீயே அழிச்சுக்கிறது சரியா..!! நீ இங்க அழுதுட்டு இருக்குற ஒவ்வொரு நொடியும் அவன் அங்க சந்தோஷமா இருப்பான்.. எனக்கு அதை நினைச்சாத்தான் வயிறெல்லாம் பத்தி எரியுது.. தப்பு செய்யாத நீ எதுக்குடி இப்படி கலங்கி நிக்கிற..?" கோபத்தில் கத்தினாள் மாயா..

"ஒவ்வொரு முறையும்.. இதிலிருந்து வெளியே வரணும்னு நான் எடுக்கற முயற்சிகள் எல்லாம்.. ஒரே நொடியில் வீணாகிப் போயிடுது..!!" கண்களைத் துடைத்துக்கொண்டாள் கமலி..

"வீட்ல சும்மா உக்காந்திருந்தா இப்படித்தான் பைத்தியக்காரத்தனமா ஏதாவது யோசிக்க தோணும்.. எம்டி மைண்ட் இஸ் டெவில் ஒர்க்ஷாப் அப்படின்னு சொல்லுவாங்க..!! உபயோகமா ஏதாவது பண்ணு கமலி.." என்றாள் அழுத்தமாக..

"என்ன செய்யறது ஒன்னும் புரியலையே..!!" மக்குப் பெண் போல் விழித்தவளை கண்டு ஆத்திரம் பொங்கியது மாயாவிற்கு..

"அடி வாங்க போற.. நீ நர்சிங் படிச்சிருக்க.. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?" என்று கேட்ட பிறகுதான் ஆஞ்சநேயருக்கு தன் பலம் தெரிவது போல.. விழிகளின் மூடி திறந்தாள் கமலி..

மாயா கமலினி இருவரும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பிள்ளைகள்..

இருவரும் நல்லபடியாக படித்து அவரவர் துறையில் காலூன்றி நின்ற சாதனைப் பெண்கள் தான்..

படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளிவந்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து.. அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்..

மாயா பொறியியல் முடித்து அது சம்பந்தமான வேலையில் சேர்ந்திருந்தாள்..

கமலி BSc நர்சிங் (mid wifery) ஸ்பெஷல் கேட்டகரி முடித்துவிட்டு.. ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவரவருக்கான காதல் துணையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்ட பின்.. வேலை காதல் கலாட்டா கொண்டாட்டம் என வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது..

கமலி அசோக்கை திருமணம் செய்து கொண்ட அடுத்த இரண்டு வருடங்களில் மாயா விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்..

அஷோக் ஆடிட்டர்.. வசதி படைத்த குடும்பம்.. வீட்டை எதிர்த்து தான் கமலினியை திருமணம் செய்து கொண்டான்..

காதலால் கசிந்துருகி அப்படி ஒரு இன்ப வாழ்க்கை..!! ஆசிரமத்தில் அன்பு காட்ட ஆளில்லாத தனி பெண்ணாக வாழ்ந்தவள் கணவனின் அன்பில் முழு முற்றாக மூழ்கி இல்லற சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்தாள்..

"நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே.. நீ வேற எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்லயே இருந்து என்னை கவனிச்சுக்கோயேன் பட்டுமா.."

"அசோக் கொஞ்சலோடு சொல்ல அதற்கும் சம்மதித்து 24 மணி நேர பதி சேவையில் மூழ்கி போனாள் கமலி..‌ அஷோக் மீது அத்தனை நேசம்.. அவனுக்காக உயிரோடு சேர்த்து சகலத்தையும் துறக்க தயாராக இருந்தாள்.. இந்த வேலை எம்மாத்திரம்..?"

அதன் பிறகு வேலையை மறந்து அவன் மட்டுமே உலகமென வாழ்ந்தவளுக்கு.. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தான்‌ படித்த படிப்பே என்னவென நினைவில் வருகிறது.. காலம் கடந்த பின்.. வாழ்க்கை திசைமாறிய பின்.. தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிகிறது..

ஆனால் அந்த வகையில் மாயா அதிர்ஷ்டசாலிதான்.. அடையாளத்தை தொலைக்காமல் படித்த படிப்பிற்கான வேலையை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.. பொருளாதாரத்தை சற்று மேம்படுத்திவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விஷ்ணு மாயா இருவரின் திட்டமாக இருக்கிறது..

இந்த விவாகரத்து விஷயத்தில் கூட.. கமலிக்கு போன் செய்து ஓரிரு முறை ஆறுதல் கூறியிருக்கிறான் விஷ்ணு..

"கவலைப்படாதே கமலி உனக்காக நாங்க இருக்கோம்.. என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேளு..!!" என்று அவள் உடைந்து போயிருந்த நேரத்தில் தைரியம் தந்திருக்கிறான்..

"ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணு கமலி.. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்..!! நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.." என்றாள் மாயா இறங்கிய குரலில்..

"எனக்கு இந்த ஊரே வேண்டாம் மாயா..!! இங்க இருக்கவே பிடிக்கல.. நெஞ்செல்லாம் அடைக்குது.. இந்த ஊர்ல என்னால எந்த வேலைக்கும் போக முடியாது.." தலையை வேகமாக அசைத்தாள் கமலி..

"என்னடி சொல்ற..?" மாயா திகைத்தாள்..

"ஆமா..!! ஒவ்வொரு நாளும் எங்கே அவன் என் முன்னாடி வந்துருவானோ.. ஏதாவது ஒரு தருணத்தில என்னையும் மீறி உடைஞ்சு அழுதுடுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு.. அப்படி மட்டும் ஒரு சந்தர்ப்பம் வந்துட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. நா.. நான் அவன்கிட்ட தோக்க விரும்பல.." இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் கமலி..

"அவனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட போறியா..? அவன் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டாமா.. என்னடி பைத்தியக்காரத்தனம் இது.. தெரியாத ஊர்ல போய் என்ன செய்வ..?" கவலையும் கோபமுமாக கேட்டாள்‌ மாயா..!!

"என்னை மாதிரி அனாதைகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்..!! எந்த ஊரானாலும் பழகிக்கணும்.." விரத்தியாகச் சொன்னாள் கமலி..

"அடி பின்னிடுவேன்.. என்ன பேச்சு இது.. யார் அனாதை? உனக்கு நான் இல்லையா..?" மாயாவிற்கு கோபத்தில் மூச்சு வாங்கியது..

"நீ மட்டும்தான் எனக்காக இருக்க மாயா.. ஏதாவது ஒரு கட்டத்துல உன்னையும் நான் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு..!! நீ எனக்கு வேணும் மாயா.. அதனால தான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்.."

"என்னடி பேசுற..?" மாயாவுக்கு புரியவில்லை..

"நான் நேசிக்கிறது எதுவும் எனக்கு நிலைக்க மாட்டேங்குதே..!!" அவள் கண்ணீரோடு சொல்ல..

"ஏய் லூசு.." என்று அதட்டினாள் மாயா..

"ப்ளீஸ் மாயா என்னை புரிஞ்சுக்கோ.. எனக்கும் ஒரு மாற்றம் தேவை.. இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும்.. அவனுடைய ஞாபகங்கள் அதிகமா என்னை வாட்டி வதைக்கும்.. ஏதாவது தவறான முடிவு எடுத்துடுவேனோனு பயமா இருக்கு.." கெஞ்சலாக பார்த்தாள் கமலி..

"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதடி.. இன்னுமுமா அந்த துரோகியை விரும்பற.?"

"நிச்சயமா இல்லை..!! என்னைக்கு அவனோட கீழ்த்தரமான குணம் தெரிய வந்துச்சோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன்.. இப்ப என்னோட தேங்கி நிக்கறதெல்லாம்.. அவன் எனக்கு செஞ்ச அநியாயங்கள் மட்டும்தான்.."

"அதை மறந்து தொலையேன்டி..‌!!" மாயா சலித்தாள்..

"முடியலையே..!! நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் கூட போனேனே.. எந்த பயனும் இல்லை.. நல்ல வேலையா தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்துட்டேன்..!!" என்று இழுத்து மூச்சு விட்டாள்..

தோழியின் நிலை புரிந்தும் அவள் துயரத்தை போக்க முடியாத கையாலாகத்தனத்தோடு அமர்ந்திருந்தாள் மாயா..‌!!

உண்மையை சொல்லப்போனால் எவராலும் இப்படி ஒரு துரோகத்தை ஜீரணிக்க இயலாது.. இருந்த போதிலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..!!

"சரி வெளியூர் போய் வேலை பாக்கணும்ங்கற என்னத்துல உறுதியா இருக்கியா..?"

"ம்ம்.. நிச்சயமா போயே ஆகணும்.. இங்க மூச்சடைக்குது.. என்னால முடியல.."

நீண்ட பெருமூச்சு விட்டாள் மாயா.. "கன்ஸ்டிரக்ஷன் ஃபீல்டுல இருக்கிறதுனால எனக்கு நிறைய ஆளுங்களை தெரியும்.. அந்த கான்டாக்ட்ஸ் வெச்சு.. ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல உனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா பார்க்கறேன்.. தயவு செஞ்சு இப்படி இருளடைஞ்சு போய் உட்கார்ந்துருக்காதே.. என் கூட இருக்கிற வரைக்குமாவது சந்தோஷமா இரேன்.. இப்படியே அழுது வடிஞ்சு நீ என்னை விட்டு போனா என்னால தாங்கிக்க முடியாது..‌ ப்ளீஸ் டி..!!" மாயாவின் கவலையான குரலில் அவள் பக்கம் திரும்பி மெல்ல சிரிக்க முயற்சித்தாள் கமலி..

"குட்..‌ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வா..‌ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல?" அவள் முறைத்தபடி கேட்க..

அமைதியாக இருந்தாள் கமலி..

"உன்னை என்னதான் செய்யறதோ..!! இனி இந்த பட்டினி கிடக்கற வேலையெல்லாம் வச்சுக்காத..‌ ஒழுங்கா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாதான் இங்கிருந்து உன்னை அனுப்பி வைப்பேன்.. இல்லைனா எங்கேயும் போக விட மாட்டேன்.. இரு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..!!" என்று மாயா எழுந்திருக்க..

"இருடி நீயே ஆபிஸ்லருந்து இப்பதான் வந்திருக்க.. உனக்கும் சேர்த்து நானே ஏதாவது எடுத்துட்டு வரேன்..!!" என்று அவளை அமர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள் கமலி..

வெட்டியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பதை விட ஏதாவது வேலை செய்தால் அவள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் என்பதால் மாயா தடுக்கவில்லை..!!

சொல்லப்போனால் தொண தொணவென்று பேசிக்கொண்டும்.. நச்சரித்து வேலை வாங்கிய படியும் பரபரப்பான சூழ்நிலையில் கமலியின் மனநிலையை மாற்றத்தான் முயல்கிறாள் மாயா..

ஆனால் அதையும் மீறி.. கிடைக்கும் இடைவெளிகளில் இப்படி ஜடமாக அமர்ந்துவிடும் தோழியை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியவில்லை..

கமலி தன் தலைமுடியை திருத்தி முகத்தை கழுவிக்கொண்டு.. ஒரு வட்ட பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..

ஏதோ அவளிடமிருந்து ஆத்மாவை பிடுங்கியது போல் முகம் களையிழந்து போயிருந்தது…

"என்னடி இப்படி இருக்க..? ம்ஹூம்.. இது சரிவராது.. உன்னை நீதான் தேத்திக்கணும்.. வெளிய வா கமலி.. அஷோக்கை தான்டி இந்த உலகத்தில் நீ கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. வாழ ஒரு வாழ்க்கை இருக்கு.. அவன் சவால் விட்ட மாதிரி துவண்டு போய்டாதே..!!" தனக்குத்தானே வலிமையோடு சமாதானம் சொல்லிக்கொண்டு.. ஓரளவு தெளிவான மனநிலையோடு சமையலறைக்குள் புகுந்தாள்..

இருவருக்குமாக பிரட் ரோஸ்ட் டீ தயாரித்து எடுத்து வந்து டேபிளில் வைக்க.. அதே நேரத்தில் வேறு உடைக்கு மாறியிருந்த மாயா சிரித்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்..

"நீ ரொம்ப குடுத்து வச்சவ கமலி.. வேலைக்கு போகணும்னு சொன்ன.. உடனே வழி கிடைச்சிடுச்சு.." என்றவளை கோப்பையை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே ஆர்வமாக பார்த்தாள் கமலி..

எங்க கம்பெனி கிளைன்ட் ஒருத்தர் கோயம்புத்தூர்ல இருக்காரு.. அவரோட ஹாஸ்பிடல் நாங்கதான் டிசைன் பண்ணி கட்டிக் கொடுத்தோம்.."

"என்ன ஹாஸ்பிடல்..?" தேநீரை பருகிக் கொண்டே கேட்டாள் கமலி..

"சூர்யா மெட்டர்நிட்டி சென்டர்..!! ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் சூர்ய தேவ் எங்க கம்பெனியோட கிளைன்ட்.."

கோப்பையை கீழே வைத்துவிட்டு ‌"ஓ மை காட்..!! அவர் கிட்டயா இப்ப பேசின..?" திகைத்தாள் கமலி..

"ஏன் இவ்வளவு ஷாக்..‌ அவரைப் பத்தி உனக்கு தெரியுமா..?" பிரட் டோஸ்ட்டை எடுத்து ஒரு துண்டு கடித்துக் கொண்டே கேட்டாள் மாயா..

"கேள்விப்பட்டிருக்கேன்.. நேர்ல பார்த்ததில்லை..‌ ஆனா அந்த ஹாஸ்பிடல் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மெடர்னிட்டி ஹாஸ்பிட்டலாச்சே..!! அங்கே எனக்கு வேலை கிடைக்குமா..? எனக்கு அவ்வளவா எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாதே.. நடுவுல கேப் விழுந்து போச்சு.. பட் வேலை கிடைச்சா என்னோட பியூச்சருக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.." கவலையில் ஆரம்பித்து எதிர்பார்ப்பில் முடித்தாள் கமலி..

"நான் மனசு வச்சா கிடைக்கும்.." காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவளை கேள்வியாக பார்த்தாள் கமலி..

அந்த ஹாஸ்பிடல் கட்டும்போது.. எங்க கம்பெனியிலிருந்து ஒரு டீம் அங்க போய் பிளான் போட்டு டிசைன் பண்ணி பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்ணி தந்தோம்.. அந்த டீம்ல நானும் ஒருத்தி.. கன்ஸ்டிரக்சன்க்காக டெடிகேட்டடா நான் ஒர்க் பண்ணினதா அவரே என்னை பாராட்டி இருக்கார்.. என் மேல சூர்ய தேவுக்கு நல்ல மரியாதை உண்டு.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு.. இப்ப அவர்கிட்ட பேசினேன்.. வேக்கன்சி இருக்கு.. வர சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.." என்று குதூகலமாக தோள்களை குலுக்கினாள்..

"நெஜமாவா சொல்ற..!!" நம்ப இயலாத பார்வையோடு கேட்டாள் கமலி..

"நான் எதுக்குடி பொய் சொல்ல போறேன்.. இன்னும் ஒரு வாரத்துல நீ இங்கிருந்து கிளம்பனும்..!!"

"இன்டர்வியூ எதுவும் இல்லையா..?" அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது என்பதை ஏன் நம்ப முடியவில்லை அவளால்..

"அதெல்லாம் எதுவும் இல்லைடி.. நீ முன்னாடி வேலை பார்த்த பழைய ஹாஸ்பிடல் பேரை சொன்னேன்.. ஓகேன்னு சொல்லிட்டார்.."

"என்னால இப்ப கூட நம்பவே முடியல..!!" கண்களை விரித்தாள் கமலி..

"ஹலோ மேடம்.. அவர் என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையில நான் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.. மிஸ்டர் சூர்ய தேவ் என் மேல வச்சிருக்கற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.." என்று கடைசி துண்டு பிரட் டோஸ்ட்டடையும் வாயில் போட்டு மென்றாள் மாயா..

தேனீரை ஒரு மிடறு விழுங்கியபடி டேபிளை பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"இன்னும் என்னடி யோசனை.. அந்த பாழாப்போன பழைய ஞாபகங்களை தூக்கி போட்டுட்டு.. வேலை கிடைச்சதை கொண்டாடு கமலி.." மாயா அயர்வாக பார்த்தாள் அவளை..

"அது இல்லைடி..!! உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிடுச்சு.. ஆனா தங்கறதுக்கு ஹாஸ்பிடல் பக்கத்திலேயே பாதுகாப்பான நல்ல ஹாஸ்டல் இல்லனா பிஜி ஏதாவது கிடைக்குமான்னு நெட்ல பாக்கணும்.. அதைப்பத்திதான் யோசிக்கறேன்..!!" யோசனையோடு விரல்களால் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது..!!" மாயா பீடிகை போடவும்..

"என்ன..? அதையும் ஏற்பாடு பண்ணிட்டியா..?" கமலியின் கண்கள் ஆச்சரியத்தோடு விரிந்தன..

"பின்ன..? எந்த ஐடியாவும் இல்லாம அப்படியே குருட்டுத்தனமா உன்னை இங்கிருந்து அனுப்பி வச்சிடுவேன் நினைச்சியா..? எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பற்றி உன்கிட்ட பேசவே வந்தேன்.." என்ற தோழியை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் கமலி.. இப்படி ஒரு தோழி கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ..!! என்று கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..

"தங்கறதுக்கான இடமெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. ஆனா நீ சம்மதிக்கனும். அதுதான் பிரச்சனை..!!" என்று இழுத்தாள்..

"என்னடி பிரச்சனை..?" கண்களைக் குறுக்கி மாயாவை கூர்மையாக பார்த்தாள் கமலி..

"நான் இப்போ வேலைக்காக ரெக்கமண்ட் பண்ணி இருக்கற ஆஸ்பிட்டல் ஓனர் டாக்டர் சூர்யா தேவ்.. அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியாதான் இருக்குது.. அங்கேயே நீ தங்கறதுக்கு பர்மிஷன் கேட்டு ஏற்பாடு பண்ணிட்டேன்.."

"ஒஹோ.. டாக்டர் வீட்ல இதுக்கு ஒகே சொல்லிட்டாங்களா..? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை குழந்தைங்க.." கமலி இயல்பாக கேட்க..

"ஹிஹி.. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்பா மட்டும்தான் இருந்தார்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் மேலே போய்ட்டார்.. இப்ப டாக்டர் தனிக்கட்டை.." என்று அசடுவழிந்தவளை
தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் கமலி..

"முறைக்காதடி..!! டாக்டர் பெண்கள் விஷயத்துல ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. எனக்கென்னமோ அவர் வீட்டில் நீ இருக்கிறது பாதுகாப்புன்னு தோணுச்சு.. அதனாலதான்..!!"

"என்ன விளையாடுறியா..? கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லிட்டு எதுக்காக அங்க போய் என்னை தங்க வைக்க நினைக்கற..!! இருக்கிற பிரச்சினையே போதும்.. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து தலையில போட்டுக்க நான் தயாரா இல்லை.. நான் ஹாஸ்டல் ஏதாவது பாத்துக்கறேன்" என்றாள் கமலி கோபமாக..

"கோவப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு..!! அவரால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. அவர் கூட ஆறு மாசம் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அந்த அனுபவத்துல தான் சொல்றேன்..!! ஹாஸ்டல்ல என்ன வசதி இருக்குமோ..!! அவரு வீட்டுல நீ தங்கினா உன் இஷ்டப்படி இருக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன் புரிஞ்சுக்க டி..!!" மாயாவின் பொறுமையான விளக்கம் ஓரளவு பலனளித்தது..

"உண்மையிலேயே அந்த டாக்டர் நல்லவர்ன்னு சொல்றியா அவரால எனக்கு எந்த தொல்லையும் வந்துடாதே..!!" கமலி கேட்க.. மாயாவிற்கு அப்பாடா என நிம்மதி..

"வராதுடி..!! ஆள் கொஞ்சம் சிடுசிடுப்பான ஆளு.. கண்டிப்பான பேர்வழி ஆனா பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவர்.."

"அதெல்லாம் சரிதான்.. ஆனா நான் அங்க தங்கறதுக்குகு அவர் எப்படி சமாதிச்சார்.. ஏதோ இடிக்குதே..!! தனியாளு வேற.. இன்னொரு பொண்ணு மேல் வீட்டு போர்ஷன்ல இருந்தா தேவையில்லாத குழப்பங்கள் வரும்ன்னு அவருக்கு தெரியாதா..?"

"இவ்வளவு யோசிக்காதே கமலி..!! உன்னை மாதிரி அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார்.. உன்னால அவருக்கும் அவர் பிரைவசிக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டார்.. நான்தான் கவலையே படாதீங்க.. உங்களோட ஃபீமேல் வர்ஷன்தான் என் பிரண்டு கமலி.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்..!!"

"அவ்வளவு கட்டன் ரைட்டா இருக்கிற ஆள் வீட்டுல நான் எதுக்காக போய் தங்கனும்.." வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் தோன்ற..

"அம்மா தாயே..!! தயவுசெய்து மறுபடி குட்டையை குழப்பாத.. உன்னை பாக்க கோயம்புத்தூர் வந்தாலும் ஒரு வாரம் தாராளமா வசதியா என்னால் அங்க தங்க முடியும்.. ஹாஸ்டல்ல வந்து உன் கூட தங்க முடியுமா..? நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன்னு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு.. இல்லேன்னா உன் இஷ்டம்.." காலியான காபி கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள் மாயா..

மூளையை தட்டி தட்டி யோசித்தவளுக்கு.. தோழி சொன்னதை ஆமோதிப்பதே சரியென்று தோன்றவே..

எழுந்து சமையலறைக்குள் சென்றவள்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காபி கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த தோழியை சிரிப்போடு பார்த்தாள்..

"மூஞ்சிய இப்படி வச்சுக்காத.. நல்லாவே இல்ல" என்று அவள் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக் கொள்ள.. மாயா அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சரிடி போறேன்.. அவர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்.. ஆனா பிரச்சனை வந்துச்சுன்னு வை நேரா சென்னை கிளம்பி வந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன் பாத்துக்கோ.." கழுத்தை நெறிப்பது போல் அவளை பிடித்து ஆட்டினாள்..

"ஐயோ என் செல்லமே.. நீ சம்மதிச்சதே போதும்.. ஒரு பிரச்சினையும் வந்துடாது.. ஏன்னா நீ நெருப்பு.. அவர் ஒரு சிடுமூஞ்சி.. நவகிரகம் மாதிரி நீ ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமா இருக்க போறீங்க.. சோ டோன்ட் வொர்ரி" என்று கமலியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..

அப்போதும் விழி தாழ்ந்து கமலி எதையோ யோசித்துக் கொண்டிருக்க..

"netflixல ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் மூவி ரிலீஸ் ஆகியிருக்கு.. பாக்கலாமாடி..?" என்று கேட்க.. உதட்டை குவித்துக் கொண்டு சரி என்ற தலையைசைத்தாள் கமலி..

"வா..வா.. டிவியை ஆன் பண்ணு.." தோழியை தோளில் கை வைத்து நகர்த்திக் கொண்டே சென்றாள் மாயா..

"டாக்டர் அந்த நந்தினிங்கிற பேஷண்டோட அப்பா உங்களை பாக்கணும்னு வெயிட் பண்றார்.. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கல.." நர்ஸ் வந்து சொல்ல..

நெற்றியை தேய்த்தபடி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சூர்ய தேவ் நிமிர்ந்தான்..

"நந்தினியா..?" புருவங்களை சுருக்கினான்..

ஆமா டாக்டர் சிசேரியன் கேஸ்.. இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு.." என்று சொல்ல தீவிரமாக யோசித்தான் சூரியதேவ்..

பிரசவித்து குழந்தை வெளிவரும் நேரத்தில் அந்தப் பெண் மயக்கமாகிவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக்கு திணறி கொண்டிருந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாய் போனது.. அதை நினைவுப் படுத்திக் கொண்டவன்..

"ஹான்.. என்னவாம்..?" என்றான் புருவங்களை நெளித்து..

"ஏற்கனவே அட்மிஷன் அப்போ 20000 ரூபாய் கட்டிட்டாங்க.. இப்ப டெலிவரிக்கு பிறகு மேற்கொண்டு அறுபதாயிரம் கட்டனும்.. அவ்வளவு பணம் கையிருப்பு இல்லையாம்.. அதனால உங்க கிட்ட பேசணும்னு..!!"

ஏளனமாக உதடு வளைத்தான் அவன்..

"காசு இல்லைனா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போக வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்.. நம்பர் ஒன் ஹாஸ்பிடல்.. இங்க வந்தா ட்ரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நம்பி தானே வராங்க.. அப்புறம் காசு இல்லைன்னு கருணையை எதிர்பார்த்தா எப்படி.. நானும் அதே கருணையை வச்சு ஹாஸ்பிடல் நடத்த முடியாது.. சம்பளம் இல்லாம கருணையின் அடிப்படையில் நீங்களும் சேவை செய்ய முடியாது.. பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.. இவங்க பாப்புலேஷனை இன்க்ரீஸ் பண்ணிட்டே போவாங்க..!! நாம ஃப்ரீ சர்விஸ் பண்ண முடியுமா..? பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.." என்றான் கனத்த குரலில்..

அப்போதும் நர்ஸ் தயங்கி நிற்க..

"குழைஞ்சு குழைஞ்சு கருணையோடு பேச இது ஒன்னும் சேவா சங்கம் கிடையாது.. ஹாஸ்பிடல்.. கண்டிப்பும் கறாருமுமா இருந்தாதான் விதிமுறைகள் சரியா கடைபிடிக்கப்படும்.. புரிஞ்சுதா..!!" அவன் கடுமையான குரலில்.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள் அந்த நர்ஸ்..

தொடரும்..
Appa problem solved
.......... Kamali ponathum.,........ Enna nadagapoghuthu..... Waiting........ Ud 👌👌👌👌👌👌👌💝💖
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
66
ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்..

அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா..

உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே வரவேற்றது.. யோசனையோடு சுவற்றை தடவி விளக்கை உயிர்ப்பித்தவள்.. சோபாவில் சுருண்டு படுத்திருந்த கமலினியை கவலையோடு பார்த்தாள்..

"என்னடி லைட்ட கூட போடாம படுத்திருக்க..?" என்று கைப்பையை இன்னொரு சோபாவில் வீசி விட்டு அவளருகே வந்து அமர.. கமலினியும் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள்..

தலை கலைந்து.. சோர்ந்த முகத்தோடு வர்ணம் தீட்டப்படாத மங்கிய ஓவியம் போல் காணப்பட்ட கமலியை கண்டு மாயாவின் இதயம் பாரமானது ..

எந்த சஞ்சலங்களையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மான்குட்டி போல் சந்தோஷமாக துள்ளி திரிந்தவள் .. ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் அவள் பேச்சு முழுக்க உற்சாகமாக காதலோடு அஷோக்கை மட்டுமே சுற்றி வரும்.. அஷோக் கமலினி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் மாயா..

அஷோக்கோடு வாழ்ந்த காலங்களில் கமலினியின் முகம் தங்கமாய் மின்னும்..!! வசதி வாய்ப்போடு கண்ணிறைந்த கணவன் தன் தோழிக்கு கிடைத்து விட்டதாய் மாயா கடவுளுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை.. இப்போது அதே கடவுளை சபித்து கொண்டிருக்கிறாள்..

அஷோக் கமலினி தம்பதிகளின் நெருக்கம் நம்மிடையே ஏன் இல்லை என்று மாயா தன் கணவன் விஷ்ணுவிடம் கூட சண்டை போட்டதுண்டு..

அப்படிப்பட்ட வலுவான பந்தமே முறிந்து போய்விட்டது என்றால் இந்த உலகில் எது தான் நிரந்தரம் என்ற பயம் மாயாவின் நெஞ்சை ஆட்டுவிப்பதாய்..

மாயா கமலினியை தன் அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து இத்தோடு வருடமொன்று முடிவடைந்திருந்தது..

மாயாவின் கணவன் விஷ்ணு கலிபோர்னியாவில் வேலை பார்க்கிறான்..!! மாயா இங்கே ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.. இப்போதைக்கு குழந்தை இல்லை..

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பாதித்த பணத்தை சேர்த்துக்கொண்டு தாய் நாட்டிற்கு வந்து சொந்த தொழில் தொடங்குவதாக எண்ணம்..

இத்தனை பெரிய அப்பார்ட்மெண்டில் தனிமையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மாயாவிற்கு கமலினி நல்ல துணைதான் என்றாலும்.. தோழியின் இந்த நிலை.. மாயாவிற்கு பெருங்கவலை அளிக்கிறது..

கணவனிடமிருந்து பிரிந்து இங்கு வந்த நாளிலிருந்து ஏதோ நடை பிணம் போல் வீட்டை சுற்றி வளைய வருகிறாள் கமலி..

அன்று அஷோக்கிடம் நிமிர்ந்து தைரியமாக.. சரிதான் போடா என்ற தோரணையில் பேசி விட்டு வந்த கமலினி இவள் இல்லை..

ஒருவேளை அவனிடம் மட்டும் தைரியமாக இருப்பது போல் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது மாயாவிற்கு

சரியாக சாப்பிடுவதில்லை உறங்குவதில்லை..!! பெரிதாக எதையோ இழந்தவள் போல்.. இழந்து தான் இருக்கிறாள்.. ஆனால் அவள் இழந்த பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லையே..!!

மாயா முற்றிலுமாக உடைந்து போயிருக்கும் தன் தோழியை ஒவ்வொரு முறையும் தேற்றத்தான் முயற்சிக்கிறாள்.. ஆனாலும் பாவம் கமலினியால் அந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவதில்லை..

இதோ இன்றும் கூட காலையில் மாயா அலுவலகத்திற்கு புறப்படும் போது இந்த சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் கமலினி..

மாயா இன்னொரு சாவி வைத்திருந்ததால் அவளே கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்..

இதோ இப்போது திரும்பி வந்து பார்த்தால் அதே சோபாவில்.. அமர்ந்திருப்பதிலிருந்து மாற்றமாக படுத்திருக்கிறாள் அவ்வளவுதான்..

நிச்சயமாக எதையும் உண்டிருக்க மாட்டாள்.. ஏன் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள்..

"என்னடி..!! காலையில நான் போனதுக்கப்புறம் இங்கிருந்து நீ நகரவே இல்லையா..?" மாயாவின் குரல் கோபமாக வெளிப்பட்டது..

கமலினியிடம் பதில் இல்லை.. அழுதிருப்பாள் போலிருக்கிறது.. மூக்கை உறிஞ்சி கொண்டு அலங்கோலமாக விரிந்து கிடந்த தன் கூந்தலை சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டாள்..

"கமலி எனக்கு புரியல..!! உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒருத்தனுக்கு எதுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற..? எதுக்காக இடிஞ்சு போய் உன்னையே நீ வருத்திக்கற..!! நீ இப்படி அழுதுட்டு இருக்குற நேரத்துல உன் புருஷன் அவன் ரெண்டாவது பொண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா இருப்பான்.."

"அதுதான் என்னால தாங்க முடியல..!! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால ஜீரணிக்கவே முடியல.." கமலியின் குரல் தழுதழுத்தது.. கண்ணீர் வற்றிப் போன விழிகள் எதிர் திசையில் நிலை குத்தி நின்றன.

"நான் அவனுக்கு என்னடி குறை வச்சேன்..!! எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. அஞ்சு வருஷ வாழ்க்கையில அவன் மட்டும்தான் என்னோட உலகமா இருந்தான்.. அவனைத் தவிர வேற எதையும் நான் யோசிச்சதே இல்லையே..!! அவன் மட்டும் எப்படி..?" அழுகையோடு தொண்டைக் குழீக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் மாயா..

"விடுடி அவன் சுயரூபம் இப்ப தெரிஞ்சிருக்கு சந்தோஷப்படு.. அவனையே நினைச்சுட்டு இருக்காம உன் வாழ்க்கையை பாரு.. அதுதான் உனக்கு நல்லது.." என்றாள்..

"முடியல.. முடியலடி..!!" இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டு கண்களை உருட்டியபடி குனிந்தாள்.. "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகத்துக்கு வருது..!! என்னால ஏத்துக்கவே முடியல.." தலையை இடம் வலமாக அசைத்தாள்..

"அதுக்காக எத்தனை நாள் இப்படியே இருப்ப..? இதுதான் நிஜம்.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.." என்றாள் மாயா அழுத்தமாக..

"அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் மாயா.. அவன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் இந்த ஐடியாவுக்கு சம்மதிச்சேன்.. ஆனா அது எனக்கே..?" என்றவளுக்கு நெஞ்சடைத்து மூச்சு வாங்கியது..

"பேபி.. கமலி காம் டவுன்..!!" அவள் தோளை தட்டிக் கொடுத்தாள் மாயா..

"அவனோட வாரிசை வயித்தில சுமந்ததால அவ மேல அன்பு வந்துடுச்சா..? குழந்தை இல்லைங்கிறதுக்காக என்னை ஒதுக்கி தள்ளிட்டானா..!! எப்படி மாயா? எனக்கு புரியவே இல்ல?" தாங்க முடியாமல் கண்ணீர் வழிய.. ஆதங்கத்தில் வார்த்தைகள் வெடித்தன..

"கமலி.. நீ எவ்வளவு புலம்பினாலும் இதுதான் நிஜம்.. இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ.. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லல.. நீதான் அவனை வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க..!! காதல் கத்திரிக்காய்ன்னு பலவீனமா அவன் கால்ல விழுந்து கதறாம.. தைரியமா புத்திசாலித்தனமா இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு உன்னை நினைச்சு நீயே பெருமைப்படணும்.. அதை விட்டுட்டு.. இப்படி அழுது புலம்பினா எப்படி..!! அவன் உண்மை முகம் தெரிஞ்சு வருஷமாக போகுது.. இதோ விவாகரத்து கூட கிடைச்சாச்சு.. அடுத்த வேலையை பாக்காம.. துரோகத்தை ஜீரணிக்க முடியலைன்னு.. உன்னை நீயே அழிச்சுக்கிறது சரியா..!! நீ இங்க அழுதுட்டு இருக்குற ஒவ்வொரு நொடியும் அவன் அங்க சந்தோஷமா இருப்பான்.. எனக்கு அதை நினைச்சாத்தான் வயிறெல்லாம் பத்தி எரியுது.. தப்பு செய்யாத நீ எதுக்குடி இப்படி கலங்கி நிக்கிற..?" கோபத்தில் கத்தினாள் மாயா..

"ஒவ்வொரு முறையும்.. இதிலிருந்து வெளியே வரணும்னு நான் எடுக்கற முயற்சிகள் எல்லாம்.. ஒரே நொடியில் வீணாகிப் போயிடுது..!!" கண்களைத் துடைத்துக்கொண்டாள் கமலி..

"வீட்ல சும்மா உக்காந்திருந்தா இப்படித்தான் பைத்தியக்காரத்தனமா ஏதாவது யோசிக்க தோணும்.. எம்டி மைண்ட் இஸ் டெவில் ஒர்க்ஷாப் அப்படின்னு சொல்லுவாங்க..!! உபயோகமா ஏதாவது பண்ணு கமலி.." என்றாள் அழுத்தமாக..

"என்ன செய்யறது ஒன்னும் புரியலையே..!!" மக்குப் பெண் போல் விழித்தவளை கண்டு ஆத்திரம் பொங்கியது மாயாவிற்கு..

"அடி வாங்க போற.. நீ நர்சிங் படிச்சிருக்க.. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?" என்று கேட்ட பிறகுதான் ஆஞ்சநேயருக்கு தன் பலம் தெரிவது போல.. விழிகளின் மூடி திறந்தாள் கமலி..

மாயா கமலினி இருவரும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பிள்ளைகள்..

இருவரும் நல்லபடியாக படித்து அவரவர் துறையில் காலூன்றி நின்ற சாதனைப் பெண்கள் தான்..

படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளிவந்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து.. அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்..

மாயா பொறியியல் முடித்து அது சம்பந்தமான வேலையில் சேர்ந்திருந்தாள்..

கமலி BSc நர்சிங் (mid wifery) ஸ்பெஷல் கேட்டகரி முடித்துவிட்டு.. ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவரவருக்கான காதல் துணையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்ட பின்.. வேலை காதல் கலாட்டா கொண்டாட்டம் என வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது..

கமலி அசோக்கை திருமணம் செய்து கொண்ட அடுத்த இரண்டு வருடங்களில் மாயா விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்..

அஷோக் ஆடிட்டர்.. வசதி படைத்த குடும்பம்.. வீட்டை எதிர்த்து தான் கமலினியை திருமணம் செய்து கொண்டான்..

காதலால் கசிந்துருகி அப்படி ஒரு இன்ப வாழ்க்கை..!! ஆசிரமத்தில் அன்பு காட்ட ஆளில்லாத தனி பெண்ணாக வாழ்ந்தவள் கணவனின் அன்பில் முழு முற்றாக மூழ்கி இல்லற சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்தாள்..

"நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே.. நீ வேற எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்லயே இருந்து என்னை கவனிச்சுக்கோயேன் பட்டுமா.."

"அசோக் கொஞ்சலோடு சொல்ல அதற்கும் சம்மதித்து 24 மணி நேர பதி சேவையில் மூழ்கி போனாள் கமலி..‌ அஷோக் மீது அத்தனை நேசம்.. அவனுக்காக உயிரோடு சேர்த்து சகலத்தையும் துறக்க தயாராக இருந்தாள்.. இந்த வேலை எம்மாத்திரம்..?"

அதன் பிறகு வேலையை மறந்து அவன் மட்டுமே உலகமென வாழ்ந்தவளுக்கு.. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தான்‌ படித்த படிப்பே என்னவென நினைவில் வருகிறது.. காலம் கடந்த பின்.. வாழ்க்கை திசைமாறிய பின்.. தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிகிறது..

ஆனால் அந்த வகையில் மாயா அதிர்ஷ்டசாலிதான்.. அடையாளத்தை தொலைக்காமல் படித்த படிப்பிற்கான வேலையை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.. பொருளாதாரத்தை சற்று மேம்படுத்திவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விஷ்ணு மாயா இருவரின் திட்டமாக இருக்கிறது..

இந்த விவாகரத்து விஷயத்தில் கூட.. கமலிக்கு போன் செய்து ஓரிரு முறை ஆறுதல் கூறியிருக்கிறான் விஷ்ணு..

"கவலைப்படாதே கமலி உனக்காக நாங்க இருக்கோம்.. என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேளு..!!" என்று அவள் உடைந்து போயிருந்த நேரத்தில் தைரியம் தந்திருக்கிறான்..

"ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணு கமலி.. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்..!! நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.." என்றாள் மாயா இறங்கிய குரலில்..

"எனக்கு இந்த ஊரே வேண்டாம் மாயா..!! இங்க இருக்கவே பிடிக்கல.. நெஞ்செல்லாம் அடைக்குது.. இந்த ஊர்ல என்னால எந்த வேலைக்கும் போக முடியாது.." தலையை வேகமாக அசைத்தாள் கமலி..

"என்னடி சொல்ற..?" மாயா திகைத்தாள்..

"ஆமா..!! ஒவ்வொரு நாளும் எங்கே அவன் என் முன்னாடி வந்துருவானோ.. ஏதாவது ஒரு தருணத்தில என்னையும் மீறி உடைஞ்சு அழுதுடுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு.. அப்படி மட்டும் ஒரு சந்தர்ப்பம் வந்துட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. நா.. நான் அவன்கிட்ட தோக்க விரும்பல.." இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் கமலி..

"அவனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட போறியா..? அவன் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டாமா.. என்னடி பைத்தியக்காரத்தனம் இது.. தெரியாத ஊர்ல போய் என்ன செய்வ..?" கவலையும் கோபமுமாக கேட்டாள்‌ மாயா..!!

"என்னை மாதிரி அனாதைகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்..!! எந்த ஊரானாலும் பழகிக்கணும்.." விரத்தியாகச் சொன்னாள் கமலி..

"அடி பின்னிடுவேன்.. என்ன பேச்சு இது.. யார் அனாதை? உனக்கு நான் இல்லையா..?" மாயாவிற்கு கோபத்தில் மூச்சு வாங்கியது..

"நீ மட்டும்தான் எனக்காக இருக்க மாயா.. ஏதாவது ஒரு கட்டத்துல உன்னையும் நான் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு..!! நீ எனக்கு வேணும் மாயா.. அதனால தான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்.."

"என்னடி பேசுற..?" மாயாவுக்கு புரியவில்லை..

"நான் நேசிக்கிறது எதுவும் எனக்கு நிலைக்க மாட்டேங்குதே..!!" அவள் கண்ணீரோடு சொல்ல..

"ஏய் லூசு.." என்று அதட்டினாள் மாயா..

"ப்ளீஸ் மாயா என்னை புரிஞ்சுக்கோ.. எனக்கும் ஒரு மாற்றம் தேவை.. இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும்.. அவனுடைய ஞாபகங்கள் அதிகமா என்னை வாட்டி வதைக்கும்.. ஏதாவது தவறான முடிவு எடுத்துடுவேனோனு பயமா இருக்கு.." கெஞ்சலாக பார்த்தாள் கமலி..

"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதடி.. இன்னுமுமா அந்த துரோகியை விரும்பற.?"

"நிச்சயமா இல்லை..!! என்னைக்கு அவனோட கீழ்த்தரமான குணம் தெரிய வந்துச்சோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன்.. இப்ப என்னோட தேங்கி நிக்கறதெல்லாம்.. அவன் எனக்கு செஞ்ச அநியாயங்கள் மட்டும்தான்.."

"அதை மறந்து தொலையேன்டி..‌!!" மாயா சலித்தாள்..

"முடியலையே..!! நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் கூட போனேனே.. எந்த பயனும் இல்லை.. நல்ல வேலையா தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்துட்டேன்..!!" என்று இழுத்து மூச்சு விட்டாள்..

தோழியின் நிலை புரிந்தும் அவள் துயரத்தை போக்க முடியாத கையாலாகத்தனத்தோடு அமர்ந்திருந்தாள் மாயா..‌!!

உண்மையை சொல்லப்போனால் எவராலும் இப்படி ஒரு துரோகத்தை ஜீரணிக்க இயலாது.. இருந்த போதிலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..!!

"சரி வெளியூர் போய் வேலை பாக்கணும்ங்கற என்னத்துல உறுதியா இருக்கியா..?"

"ம்ம்.. நிச்சயமா போயே ஆகணும்.. இங்க மூச்சடைக்குது.. என்னால முடியல.."

நீண்ட பெருமூச்சு விட்டாள் மாயா.. "கன்ஸ்டிரக்ஷன் ஃபீல்டுல இருக்கிறதுனால எனக்கு நிறைய ஆளுங்களை தெரியும்.. அந்த கான்டாக்ட்ஸ் வெச்சு.. ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல உனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா பார்க்கறேன்.. தயவு செஞ்சு இப்படி இருளடைஞ்சு போய் உட்கார்ந்துருக்காதே.. என் கூட இருக்கிற வரைக்குமாவது சந்தோஷமா இரேன்.. இப்படியே அழுது வடிஞ்சு நீ என்னை விட்டு போனா என்னால தாங்கிக்க முடியாது..‌ ப்ளீஸ் டி..!!" மாயாவின் கவலையான குரலில் அவள் பக்கம் திரும்பி மெல்ல சிரிக்க முயற்சித்தாள் கமலி..

"குட்..‌ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வா..‌ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல?" அவள் முறைத்தபடி கேட்க..

அமைதியாக இருந்தாள் கமலி..

"உன்னை என்னதான் செய்யறதோ..!! இனி இந்த பட்டினி கிடக்கற வேலையெல்லாம் வச்சுக்காத..‌ ஒழுங்கா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாதான் இங்கிருந்து உன்னை அனுப்பி வைப்பேன்.. இல்லைனா எங்கேயும் போக விட மாட்டேன்.. இரு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..!!" என்று மாயா எழுந்திருக்க..

"இருடி நீயே ஆபிஸ்லருந்து இப்பதான் வந்திருக்க.. உனக்கும் சேர்த்து நானே ஏதாவது எடுத்துட்டு வரேன்..!!" என்று அவளை அமர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள் கமலி..

வெட்டியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பதை விட ஏதாவது வேலை செய்தால் அவள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் என்பதால் மாயா தடுக்கவில்லை..!!

சொல்லப்போனால் தொண தொணவென்று பேசிக்கொண்டும்.. நச்சரித்து வேலை வாங்கிய படியும் பரபரப்பான சூழ்நிலையில் கமலியின் மனநிலையை மாற்றத்தான் முயல்கிறாள் மாயா..

ஆனால் அதையும் மீறி.. கிடைக்கும் இடைவெளிகளில் இப்படி ஜடமாக அமர்ந்துவிடும் தோழியை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியவில்லை..

கமலி தன் தலைமுடியை திருத்தி முகத்தை கழுவிக்கொண்டு.. ஒரு வட்ட பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..

ஏதோ அவளிடமிருந்து ஆத்மாவை பிடுங்கியது போல் முகம் களையிழந்து போயிருந்தது…

"என்னடி இப்படி இருக்க..? ம்ஹூம்.. இது சரிவராது.. உன்னை நீதான் தேத்திக்கணும்.. வெளிய வா கமலி.. அஷோக்கை தான்டி இந்த உலகத்தில் நீ கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. வாழ ஒரு வாழ்க்கை இருக்கு.. அவன் சவால் விட்ட மாதிரி துவண்டு போய்டாதே..!!" தனக்குத்தானே வலிமையோடு சமாதானம் சொல்லிக்கொண்டு.. ஓரளவு தெளிவான மனநிலையோடு சமையலறைக்குள் புகுந்தாள்..

இருவருக்குமாக பிரட் ரோஸ்ட் டீ தயாரித்து எடுத்து வந்து டேபிளில் வைக்க.. அதே நேரத்தில் வேறு உடைக்கு மாறியிருந்த மாயா சிரித்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்..

"நீ ரொம்ப குடுத்து வச்சவ கமலி.. வேலைக்கு போகணும்னு சொன்ன.. உடனே வழி கிடைச்சிடுச்சு.." என்றவளை கோப்பையை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே ஆர்வமாக பார்த்தாள் கமலி..

எங்க கம்பெனி கிளைன்ட் ஒருத்தர் கோயம்புத்தூர்ல இருக்காரு.. அவரோட ஹாஸ்பிடல் நாங்கதான் டிசைன் பண்ணி கட்டிக் கொடுத்தோம்.."

"என்ன ஹாஸ்பிடல்..?" தேநீரை பருகிக் கொண்டே கேட்டாள் கமலி..

"சூர்யா மெட்டர்நிட்டி சென்டர்..!! ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் சூர்ய தேவ் எங்க கம்பெனியோட கிளைன்ட்.."

கோப்பையை கீழே வைத்துவிட்டு ‌"ஓ மை காட்..!! அவர் கிட்டயா இப்ப பேசின..?" திகைத்தாள் கமலி..

"ஏன் இவ்வளவு ஷாக்..‌ அவரைப் பத்தி உனக்கு தெரியுமா..?" பிரட் டோஸ்ட்டை எடுத்து ஒரு துண்டு கடித்துக் கொண்டே கேட்டாள் மாயா..

"கேள்விப்பட்டிருக்கேன்.. நேர்ல பார்த்ததில்லை..‌ ஆனா அந்த ஹாஸ்பிடல் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மெடர்னிட்டி ஹாஸ்பிட்டலாச்சே..!! அங்கே எனக்கு வேலை கிடைக்குமா..? எனக்கு அவ்வளவா எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாதே.. நடுவுல கேப் விழுந்து போச்சு.. பட் வேலை கிடைச்சா என்னோட பியூச்சருக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.." கவலையில் ஆரம்பித்து எதிர்பார்ப்பில் முடித்தாள் கமலி..

"நான் மனசு வச்சா கிடைக்கும்.." காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவளை கேள்வியாக பார்த்தாள் கமலி..

அந்த ஹாஸ்பிடல் கட்டும்போது.. எங்க கம்பெனியிலிருந்து ஒரு டீம் அங்க போய் பிளான் போட்டு டிசைன் பண்ணி பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்ணி தந்தோம்.. அந்த டீம்ல நானும் ஒருத்தி.. கன்ஸ்டிரக்சன்க்காக டெடிகேட்டடா நான் ஒர்க் பண்ணினதா அவரே என்னை பாராட்டி இருக்கார்.. என் மேல சூர்ய தேவுக்கு நல்ல மரியாதை உண்டு.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு.. இப்ப அவர்கிட்ட பேசினேன்.. வேக்கன்சி இருக்கு.. வர சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.." என்று குதூகலமாக தோள்களை குலுக்கினாள்..

"நெஜமாவா சொல்ற..!!" நம்ப இயலாத பார்வையோடு கேட்டாள் கமலி..

"நான் எதுக்குடி பொய் சொல்ல போறேன்.. இன்னும் ஒரு வாரத்துல நீ இங்கிருந்து கிளம்பனும்..!!"

"இன்டர்வியூ எதுவும் இல்லையா..?" அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது என்பதை ஏன் நம்ப முடியவில்லை அவளால்..

"அதெல்லாம் எதுவும் இல்லைடி.. நீ முன்னாடி வேலை பார்த்த பழைய ஹாஸ்பிடல் பேரை சொன்னேன்.. ஓகேன்னு சொல்லிட்டார்.."

"என்னால இப்ப கூட நம்பவே முடியல..!!" கண்களை விரித்தாள் கமலி..

"ஹலோ மேடம்.. அவர் என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையில நான் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.. மிஸ்டர் சூர்ய தேவ் என் மேல வச்சிருக்கற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.." என்று கடைசி துண்டு பிரட் டோஸ்ட்டடையும் வாயில் போட்டு மென்றாள் மாயா..

தேனீரை ஒரு மிடறு விழுங்கியபடி டேபிளை பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"இன்னும் என்னடி யோசனை.. அந்த பாழாப்போன பழைய ஞாபகங்களை தூக்கி போட்டுட்டு.. வேலை கிடைச்சதை கொண்டாடு கமலி.." மாயா அயர்வாக பார்த்தாள் அவளை..

"அது இல்லைடி..!! உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிடுச்சு.. ஆனா தங்கறதுக்கு ஹாஸ்பிடல் பக்கத்திலேயே பாதுகாப்பான நல்ல ஹாஸ்டல் இல்லனா பிஜி ஏதாவது கிடைக்குமான்னு நெட்ல பாக்கணும்.. அதைப்பத்திதான் யோசிக்கறேன்..!!" யோசனையோடு விரல்களால் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது..!!" மாயா பீடிகை போடவும்..

"என்ன..? அதையும் ஏற்பாடு பண்ணிட்டியா..?" கமலியின் கண்கள் ஆச்சரியத்தோடு விரிந்தன..

"பின்ன..? எந்த ஐடியாவும் இல்லாம அப்படியே குருட்டுத்தனமா உன்னை இங்கிருந்து அனுப்பி வச்சிடுவேன் நினைச்சியா..? எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பற்றி உன்கிட்ட பேசவே வந்தேன்.." என்ற தோழியை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் கமலி.. இப்படி ஒரு தோழி கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ..!! என்று கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..

"தங்கறதுக்கான இடமெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. ஆனா நீ சம்மதிக்கனும். அதுதான் பிரச்சனை..!!" என்று இழுத்தாள்..

"என்னடி பிரச்சனை..?" கண்களைக் குறுக்கி மாயாவை கூர்மையாக பார்த்தாள் கமலி..

"நான் இப்போ வேலைக்காக ரெக்கமண்ட் பண்ணி இருக்கற ஆஸ்பிட்டல் ஓனர் டாக்டர் சூர்யா தேவ்.. அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியாதான் இருக்குது.. அங்கேயே நீ தங்கறதுக்கு பர்மிஷன் கேட்டு ஏற்பாடு பண்ணிட்டேன்.."

"ஒஹோ.. டாக்டர் வீட்ல இதுக்கு ஒகே சொல்லிட்டாங்களா..? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை குழந்தைங்க.." கமலி இயல்பாக கேட்க..

"ஹிஹி.. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்பா மட்டும்தான் இருந்தார்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் மேலே போய்ட்டார்.. இப்ப டாக்டர் தனிக்கட்டை.." என்று அசடுவழிந்தவளை
தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் கமலி..

"முறைக்காதடி..!! டாக்டர் பெண்கள் விஷயத்துல ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. எனக்கென்னமோ அவர் வீட்டில் நீ இருக்கிறது பாதுகாப்புன்னு தோணுச்சு.. அதனாலதான்..!!"

"என்ன விளையாடுறியா..? கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லிட்டு எதுக்காக அங்க போய் என்னை தங்க வைக்க நினைக்கற..!! இருக்கிற பிரச்சினையே போதும்.. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து தலையில போட்டுக்க நான் தயாரா இல்லை.. நான் ஹாஸ்டல் ஏதாவது பாத்துக்கறேன்" என்றாள் கமலி கோபமாக..

"கோவப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு..!! அவரால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. அவர் கூட ஆறு மாசம் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அந்த அனுபவத்துல தான் சொல்றேன்..!! ஹாஸ்டல்ல என்ன வசதி இருக்குமோ..!! அவரு வீட்டுல நீ தங்கினா உன் இஷ்டப்படி இருக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன் புரிஞ்சுக்க டி..!!" மாயாவின் பொறுமையான விளக்கம் ஓரளவு பலனளித்தது..

"உண்மையிலேயே அந்த டாக்டர் நல்லவர்ன்னு சொல்றியா அவரால எனக்கு எந்த தொல்லையும் வந்துடாதே..!!" கமலி கேட்க.. மாயாவிற்கு அப்பாடா என நிம்மதி..

"வராதுடி..!! ஆள் கொஞ்சம் சிடுசிடுப்பான ஆளு.. கண்டிப்பான பேர்வழி ஆனா பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவர்.."

"அதெல்லாம் சரிதான்.. ஆனா நான் அங்க தங்கறதுக்குகு அவர் எப்படி சமாதிச்சார்.. ஏதோ இடிக்குதே..!! தனியாளு வேற.. இன்னொரு பொண்ணு மேல் வீட்டு போர்ஷன்ல இருந்தா தேவையில்லாத குழப்பங்கள் வரும்ன்னு அவருக்கு தெரியாதா..?"

"இவ்வளவு யோசிக்காதே கமலி..!! உன்னை மாதிரி அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார்.. உன்னால அவருக்கும் அவர் பிரைவசிக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டார்.. நான்தான் கவலையே படாதீங்க.. உங்களோட ஃபீமேல் வர்ஷன்தான் என் பிரண்டு கமலி.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்..!!"

"அவ்வளவு கட்டன் ரைட்டா இருக்கிற ஆள் வீட்டுல நான் எதுக்காக போய் தங்கனும்.." வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் தோன்ற..

"அம்மா தாயே..!! தயவுசெய்து மறுபடி குட்டையை குழப்பாத.. உன்னை பாக்க கோயம்புத்தூர் வந்தாலும் ஒரு வாரம் தாராளமா வசதியா என்னால் அங்க தங்க முடியும்.. ஹாஸ்டல்ல வந்து உன் கூட தங்க முடியுமா..? நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன்னு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு.. இல்லேன்னா உன் இஷ்டம்.." காலியான காபி கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள் மாயா..

மூளையை தட்டி தட்டி யோசித்தவளுக்கு.. தோழி சொன்னதை ஆமோதிப்பதே சரியென்று தோன்றவே..

எழுந்து சமையலறைக்குள் சென்றவள்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காபி கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த தோழியை சிரிப்போடு பார்த்தாள்..

"மூஞ்சிய இப்படி வச்சுக்காத.. நல்லாவே இல்ல" என்று அவள் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக் கொள்ள.. மாயா அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சரிடி போறேன்.. அவர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்.. ஆனா பிரச்சனை வந்துச்சுன்னு வை நேரா சென்னை கிளம்பி வந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன் பாத்துக்கோ.." கழுத்தை நெறிப்பது போல் அவளை பிடித்து ஆட்டினாள்..

"ஐயோ என் செல்லமே.. நீ சம்மதிச்சதே போதும்.. ஒரு பிரச்சினையும் வந்துடாது.. ஏன்னா நீ நெருப்பு.. அவர் ஒரு சிடுமூஞ்சி.. நவகிரகம் மாதிரி நீ ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமா இருக்க போறீங்க.. சோ டோன்ட் வொர்ரி" என்று கமலியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..

அப்போதும் விழி தாழ்ந்து கமலி எதையோ யோசித்துக் கொண்டிருக்க..

"netflixல ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் மூவி ரிலீஸ் ஆகியிருக்கு.. பாக்கலாமாடி..?" என்று கேட்க.. உதட்டை குவித்துக் கொண்டு சரி என்ற தலையைசைத்தாள் கமலி..

"வா..வா.. டிவியை ஆன் பண்ணு.." தோழியை தோளில் கை வைத்து நகர்த்திக் கொண்டே சென்றாள் மாயா..

"டாக்டர் அந்த நந்தினிங்கிற பேஷண்டோட அப்பா உங்களை பாக்கணும்னு வெயிட் பண்றார்.. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கல.." நர்ஸ் வந்து சொல்ல..

நெற்றியை தேய்த்தபடி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சூர்ய தேவ் நிமிர்ந்தான்..

"நந்தினியா..?" புருவங்களை சுருக்கினான்..

ஆமா டாக்டர் சிசேரியன் கேஸ்.. இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு.." என்று சொல்ல தீவிரமாக யோசித்தான் சூரியதேவ்..

பிரசவித்து குழந்தை வெளிவரும் நேரத்தில் அந்தப் பெண் மயக்கமாகிவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக்கு திணறி கொண்டிருந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாய் போனது.. அதை நினைவுப் படுத்திக் கொண்டவன்..

"ஹான்.. என்னவாம்..?" என்றான் புருவங்களை நெளித்து..

"ஏற்கனவே அட்மிஷன் அப்போ 20000 ரூபாய் கட்டிட்டாங்க.. இப்ப டெலிவரிக்கு பிறகு மேற்கொண்டு அறுபதாயிரம் கட்டனும்.. அவ்வளவு பணம் கையிருப்பு இல்லையாம்.. அதனால உங்க கிட்ட பேசணும்னு..!!"

ஏளனமாக உதடு வளைத்தான் அவன்..

"காசு இல்லைனா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போக வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்.. நம்பர் ஒன் ஹாஸ்பிடல்.. இங்க வந்தா ட்ரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நம்பி தானே வராங்க.. அப்புறம் காசு இல்லைன்னு கருணையை எதிர்பார்த்தா எப்படி.. நானும் அதே கருணையை வச்சு ஹாஸ்பிடல் நடத்த முடியாது.. சம்பளம் இல்லாம கருணையின் அடிப்படையில் நீங்களும் சேவை செய்ய முடியாது.. பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.. இவங்க பாப்புலேஷனை இன்க்ரீஸ் பண்ணிட்டே போவாங்க..!! நாம ஃப்ரீ சர்விஸ் பண்ண முடியுமா..? பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.." என்றான் கனத்த குரலில்..

அப்போதும் நர்ஸ் தயங்கி நிற்க..

"குழைஞ்சு குழைஞ்சு கருணையோடு பேச இது ஒன்னும் சேவா சங்கம் கிடையாது.. ஹாஸ்பிடல்.. கண்டிப்பும் கறாருமுமா இருந்தாதான் விதிமுறைகள் சரியா கடைபிடிக்கப்படும்.. புரிஞ்சுதா..!!" அவன் கடுமையான குரலில்.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள் அந்த நர்ஸ்..

தொடரும்..
கதையின் போக்கு அருமை, கமலி மற்றும் சூர்யா வின் சந்திப்பிற்காக ஆவலாக காத்திருக்கிறோம்
 
Member
Joined
Jul 19, 2024
Messages
51
ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்..

அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா..

உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே வரவேற்றது.. யோசனையோடு சுவற்றை தடவி விளக்கை உயிர்ப்பித்தவள்.. சோபாவில் சுருண்டு படுத்திருந்த கமலினியை கவலையோடு பார்த்தாள்..

"என்னடி லைட்ட கூட போடாம படுத்திருக்க..?" என்று கைப்பையை இன்னொரு சோபாவில் வீசி விட்டு அவளருகே வந்து அமர.. கமலினியும் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள்..

தலை கலைந்து.. சோர்ந்த முகத்தோடு வர்ணம் தீட்டப்படாத மங்கிய ஓவியம் போல் காணப்பட்ட கமலியை கண்டு மாயாவின் இதயம் பாரமானது ..

எந்த சஞ்சலங்களையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மான்குட்டி போல் சந்தோஷமாக துள்ளி திரிந்தவள் .. ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் அவள் பேச்சு முழுக்க உற்சாகமாக காதலோடு அஷோக்கை மட்டுமே சுற்றி வரும்.. அஷோக் கமலினி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் மாயா..

அஷோக்கோடு வாழ்ந்த காலங்களில் கமலினியின் முகம் தங்கமாய் மின்னும்..!! வசதி வாய்ப்போடு கண்ணிறைந்த கணவன் தன் தோழிக்கு கிடைத்து விட்டதாய் மாயா கடவுளுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை.. இப்போது அதே கடவுளை சபித்து கொண்டிருக்கிறாள்..

அஷோக் கமலினி தம்பதிகளின் நெருக்கம் நம்மிடையே ஏன் இல்லை என்று மாயா தன் கணவன் விஷ்ணுவிடம் கூட சண்டை போட்டதுண்டு..

அப்படிப்பட்ட வலுவான பந்தமே முறிந்து போய்விட்டது என்றால் இந்த உலகில் எது தான் நிரந்தரம் என்ற பயம் மாயாவின் நெஞ்சை ஆட்டுவிப்பதாய்..

மாயா கமலினியை தன் அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து இத்தோடு வருடமொன்று முடிவடைந்திருந்தது..

மாயாவின் கணவன் விஷ்ணு கலிபோர்னியாவில் வேலை பார்க்கிறான்..!! மாயா இங்கே ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.. இப்போதைக்கு குழந்தை இல்லை..

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பாதித்த பணத்தை சேர்த்துக்கொண்டு தாய் நாட்டிற்கு வந்து சொந்த தொழில் தொடங்குவதாக எண்ணம்..

இத்தனை பெரிய அப்பார்ட்மெண்டில் தனிமையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மாயாவிற்கு கமலினி நல்ல துணைதான் என்றாலும்.. தோழியின் இந்த நிலை.. மாயாவிற்கு பெருங்கவலை அளிக்கிறது..

கணவனிடமிருந்து பிரிந்து இங்கு வந்த நாளிலிருந்து ஏதோ நடை பிணம் போல் வீட்டை சுற்றி வளைய வருகிறாள் கமலி..

அன்று அஷோக்கிடம் நிமிர்ந்து தைரியமாக.. சரிதான் போடா என்ற தோரணையில் பேசி விட்டு வந்த கமலினி இவள் இல்லை..

ஒருவேளை அவனிடம் மட்டும் தைரியமாக இருப்பது போல் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது மாயாவிற்கு

சரியாக சாப்பிடுவதில்லை உறங்குவதில்லை..!! பெரிதாக எதையோ இழந்தவள் போல்.. இழந்து தான் இருக்கிறாள்.. ஆனால் அவள் இழந்த பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லையே..!!

மாயா முற்றிலுமாக உடைந்து போயிருக்கும் தன் தோழியை ஒவ்வொரு முறையும் தேற்றத்தான் முயற்சிக்கிறாள்.. ஆனாலும் பாவம் கமலினியால் அந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவதில்லை..

இதோ இன்றும் கூட காலையில் மாயா அலுவலகத்திற்கு புறப்படும் போது இந்த சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் கமலினி..

மாயா இன்னொரு சாவி வைத்திருந்ததால் அவளே கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்..

இதோ இப்போது திரும்பி வந்து பார்த்தால் அதே சோபாவில்.. அமர்ந்திருப்பதிலிருந்து மாற்றமாக படுத்திருக்கிறாள் அவ்வளவுதான்..

நிச்சயமாக எதையும் உண்டிருக்க மாட்டாள்.. ஏன் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள்..

"என்னடி..!! காலையில நான் போனதுக்கப்புறம் இங்கிருந்து நீ நகரவே இல்லையா..?" மாயாவின் குரல் கோபமாக வெளிப்பட்டது..

கமலினியிடம் பதில் இல்லை.. அழுதிருப்பாள் போலிருக்கிறது.. மூக்கை உறிஞ்சி கொண்டு அலங்கோலமாக விரிந்து கிடந்த தன் கூந்தலை சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டாள்..

"கமலி எனக்கு புரியல..!! உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒருத்தனுக்கு எதுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற..? எதுக்காக இடிஞ்சு போய் உன்னையே நீ வருத்திக்கற..!! நீ இப்படி அழுதுட்டு இருக்குற நேரத்துல உன் புருஷன் அவன் ரெண்டாவது பொண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா இருப்பான்.."

"அதுதான் என்னால தாங்க முடியல..!! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால ஜீரணிக்கவே முடியல.." கமலியின் குரல் தழுதழுத்தது.. கண்ணீர் வற்றிப் போன விழிகள் எதிர் திசையில் நிலை குத்தி நின்றன.

"நான் அவனுக்கு என்னடி குறை வச்சேன்..!! எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. அஞ்சு வருஷ வாழ்க்கையில அவன் மட்டும்தான் என்னோட உலகமா இருந்தான்.. அவனைத் தவிர வேற எதையும் நான் யோசிச்சதே இல்லையே..!! அவன் மட்டும் எப்படி..?" அழுகையோடு தொண்டைக் குழீக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் மாயா..

"விடுடி அவன் சுயரூபம் இப்ப தெரிஞ்சிருக்கு சந்தோஷப்படு.. அவனையே நினைச்சுட்டு இருக்காம உன் வாழ்க்கையை பாரு.. அதுதான் உனக்கு நல்லது.." என்றாள்..

"முடியல.. முடியலடி..!!" இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டு கண்களை உருட்டியபடி குனிந்தாள்.. "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகத்துக்கு வருது..!! என்னால ஏத்துக்கவே முடியல.." தலையை இடம் வலமாக அசைத்தாள்..

"அதுக்காக எத்தனை நாள் இப்படியே இருப்ப..? இதுதான் நிஜம்.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.." என்றாள் மாயா அழுத்தமாக..

"அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் மாயா.. அவன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் இந்த ஐடியாவுக்கு சம்மதிச்சேன்.. ஆனா அது எனக்கே..?" என்றவளுக்கு நெஞ்சடைத்து மூச்சு வாங்கியது..

"பேபி.. கமலி காம் டவுன்..!!" அவள் தோளை தட்டிக் கொடுத்தாள் மாயா..

"அவனோட வாரிசை வயித்தில சுமந்ததால அவ மேல அன்பு வந்துடுச்சா..? குழந்தை இல்லைங்கிறதுக்காக என்னை ஒதுக்கி தள்ளிட்டானா..!! எப்படி மாயா? எனக்கு புரியவே இல்ல?" தாங்க முடியாமல் கண்ணீர் வழிய.. ஆதங்கத்தில் வார்த்தைகள் வெடித்தன..

"கமலி.. நீ எவ்வளவு புலம்பினாலும் இதுதான் நிஜம்.. இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ.. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லல.. நீதான் அவனை வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க..!! காதல் கத்திரிக்காய்ன்னு பலவீனமா அவன் கால்ல விழுந்து கதறாம.. தைரியமா புத்திசாலித்தனமா இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு உன்னை நினைச்சு நீயே பெருமைப்படணும்.. அதை விட்டுட்டு.. இப்படி அழுது புலம்பினா எப்படி..!! அவன் உண்மை முகம் தெரிஞ்சு வருஷமாக போகுது.. இதோ விவாகரத்து கூட கிடைச்சாச்சு.. அடுத்த வேலையை பாக்காம.. துரோகத்தை ஜீரணிக்க முடியலைன்னு.. உன்னை நீயே அழிச்சுக்கிறது சரியா..!! நீ இங்க அழுதுட்டு இருக்குற ஒவ்வொரு நொடியும் அவன் அங்க சந்தோஷமா இருப்பான்.. எனக்கு அதை நினைச்சாத்தான் வயிறெல்லாம் பத்தி எரியுது.. தப்பு செய்யாத நீ எதுக்குடி இப்படி கலங்கி நிக்கிற..?" கோபத்தில் கத்தினாள் மாயா..

"ஒவ்வொரு முறையும்.. இதிலிருந்து வெளியே வரணும்னு நான் எடுக்கற முயற்சிகள் எல்லாம்.. ஒரே நொடியில் வீணாகிப் போயிடுது..!!" கண்களைத் துடைத்துக்கொண்டாள் கமலி..

"வீட்ல சும்மா உக்காந்திருந்தா இப்படித்தான் பைத்தியக்காரத்தனமா ஏதாவது யோசிக்க தோணும்.. எம்டி மைண்ட் இஸ் டெவில் ஒர்க்ஷாப் அப்படின்னு சொல்லுவாங்க..!! உபயோகமா ஏதாவது பண்ணு கமலி.." என்றாள் அழுத்தமாக..

"என்ன செய்யறது ஒன்னும் புரியலையே..!!" மக்குப் பெண் போல் விழித்தவளை கண்டு ஆத்திரம் பொங்கியது மாயாவிற்கு..

"அடி வாங்க போற.. நீ நர்சிங் படிச்சிருக்க.. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?" என்று கேட்ட பிறகுதான் ஆஞ்சநேயருக்கு தன் பலம் தெரிவது போல.. விழிகளின் மூடி திறந்தாள் கமலி..

மாயா கமலினி இருவரும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பிள்ளைகள்..

இருவரும் நல்லபடியாக படித்து அவரவர் துறையில் காலூன்றி நின்ற சாதனைப் பெண்கள் தான்..

படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளிவந்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து.. அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்..

மாயா பொறியியல் முடித்து அது சம்பந்தமான வேலையில் சேர்ந்திருந்தாள்..

கமலி BSc நர்சிங் (mid wifery) ஸ்பெஷல் கேட்டகரி முடித்துவிட்டு.. ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவரவருக்கான காதல் துணையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்ட பின்.. வேலை காதல் கலாட்டா கொண்டாட்டம் என வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது..

கமலி அசோக்கை திருமணம் செய்து கொண்ட அடுத்த இரண்டு வருடங்களில் மாயா விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்..

அஷோக் ஆடிட்டர்.. வசதி படைத்த குடும்பம்.. வீட்டை எதிர்த்து தான் கமலினியை திருமணம் செய்து கொண்டான்..

காதலால் கசிந்துருகி அப்படி ஒரு இன்ப வாழ்க்கை..!! ஆசிரமத்தில் அன்பு காட்ட ஆளில்லாத தனி பெண்ணாக வாழ்ந்தவள் கணவனின் அன்பில் முழு முற்றாக மூழ்கி இல்லற சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்தாள்..

"நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே.. நீ வேற எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்லயே இருந்து என்னை கவனிச்சுக்கோயேன் பட்டுமா.."

"அசோக் கொஞ்சலோடு சொல்ல அதற்கும் சம்மதித்து 24 மணி நேர பதி சேவையில் மூழ்கி போனாள் கமலி..‌ அஷோக் மீது அத்தனை நேசம்.. அவனுக்காக உயிரோடு சேர்த்து சகலத்தையும் துறக்க தயாராக இருந்தாள்.. இந்த வேலை எம்மாத்திரம்..?"

அதன் பிறகு வேலையை மறந்து அவன் மட்டுமே உலகமென வாழ்ந்தவளுக்கு.. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தான்‌ படித்த படிப்பே என்னவென நினைவில் வருகிறது.. காலம் கடந்த பின்.. வாழ்க்கை திசைமாறிய பின்.. தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிகிறது..

ஆனால் அந்த வகையில் மாயா அதிர்ஷ்டசாலிதான்.. அடையாளத்தை தொலைக்காமல் படித்த படிப்பிற்கான வேலையை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.. பொருளாதாரத்தை சற்று மேம்படுத்திவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விஷ்ணு மாயா இருவரின் திட்டமாக இருக்கிறது..

இந்த விவாகரத்து விஷயத்தில் கூட.. கமலிக்கு போன் செய்து ஓரிரு முறை ஆறுதல் கூறியிருக்கிறான் விஷ்ணு..

"கவலைப்படாதே கமலி உனக்காக நாங்க இருக்கோம்.. என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேளு..!!" என்று அவள் உடைந்து போயிருந்த நேரத்தில் தைரியம் தந்திருக்கிறான்..

"ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணு கமலி.. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்..!! நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.." என்றாள் மாயா இறங்கிய குரலில்..

"எனக்கு இந்த ஊரே வேண்டாம் மாயா..!! இங்க இருக்கவே பிடிக்கல.. நெஞ்செல்லாம் அடைக்குது.. இந்த ஊர்ல என்னால எந்த வேலைக்கும் போக முடியாது.." தலையை வேகமாக அசைத்தாள் கமலி..

"என்னடி சொல்ற..?" மாயா திகைத்தாள்..

"ஆமா..!! ஒவ்வொரு நாளும் எங்கே அவன் என் முன்னாடி வந்துருவானோ.. ஏதாவது ஒரு தருணத்தில என்னையும் மீறி உடைஞ்சு அழுதுடுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு.. அப்படி மட்டும் ஒரு சந்தர்ப்பம் வந்துட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. நா.. நான் அவன்கிட்ட தோக்க விரும்பல.." இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் கமலி..

"அவனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட போறியா..? அவன் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டாமா.. என்னடி பைத்தியக்காரத்தனம் இது.. தெரியாத ஊர்ல போய் என்ன செய்வ..?" கவலையும் கோபமுமாக கேட்டாள்‌ மாயா..!!

"என்னை மாதிரி அனாதைகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்..!! எந்த ஊரானாலும் பழகிக்கணும்.." விரத்தியாகச் சொன்னாள் கமலி..

"அடி பின்னிடுவேன்.. என்ன பேச்சு இது.. யார் அனாதை? உனக்கு நான் இல்லையா..?" மாயாவிற்கு கோபத்தில் மூச்சு வாங்கியது..

"நீ மட்டும்தான் எனக்காக இருக்க மாயா.. ஏதாவது ஒரு கட்டத்துல உன்னையும் நான் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு..!! நீ எனக்கு வேணும் மாயா.. அதனால தான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்.."

"என்னடி பேசுற..?" மாயாவுக்கு புரியவில்லை..

"நான் நேசிக்கிறது எதுவும் எனக்கு நிலைக்க மாட்டேங்குதே..!!" அவள் கண்ணீரோடு சொல்ல..

"ஏய் லூசு.." என்று அதட்டினாள் மாயா..

"ப்ளீஸ் மாயா என்னை புரிஞ்சுக்கோ.. எனக்கும் ஒரு மாற்றம் தேவை.. இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும்.. அவனுடைய ஞாபகங்கள் அதிகமா என்னை வாட்டி வதைக்கும்.. ஏதாவது தவறான முடிவு எடுத்துடுவேனோனு பயமா இருக்கு.." கெஞ்சலாக பார்த்தாள் கமலி..

"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதடி.. இன்னுமுமா அந்த துரோகியை விரும்பற.?"

"நிச்சயமா இல்லை..!! என்னைக்கு அவனோட கீழ்த்தரமான குணம் தெரிய வந்துச்சோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன்.. இப்ப என்னோட தேங்கி நிக்கறதெல்லாம்.. அவன் எனக்கு செஞ்ச அநியாயங்கள் மட்டும்தான்.."

"அதை மறந்து தொலையேன்டி..‌!!" மாயா சலித்தாள்..

"முடியலையே..!! நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் கூட போனேனே.. எந்த பயனும் இல்லை.. நல்ல வேலையா தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்துட்டேன்..!!" என்று இழுத்து மூச்சு விட்டாள்..

தோழியின் நிலை புரிந்தும் அவள் துயரத்தை போக்க முடியாத கையாலாகத்தனத்தோடு அமர்ந்திருந்தாள் மாயா..‌!!

உண்மையை சொல்லப்போனால் எவராலும் இப்படி ஒரு துரோகத்தை ஜீரணிக்க இயலாது.. இருந்த போதிலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..!!

"சரி வெளியூர் போய் வேலை பாக்கணும்ங்கற என்னத்துல உறுதியா இருக்கியா..?"

"ம்ம்.. நிச்சயமா போயே ஆகணும்.. இங்க மூச்சடைக்குது.. என்னால முடியல.."

நீண்ட பெருமூச்சு விட்டாள் மாயா.. "கன்ஸ்டிரக்ஷன் ஃபீல்டுல இருக்கிறதுனால எனக்கு நிறைய ஆளுங்களை தெரியும்.. அந்த கான்டாக்ட்ஸ் வெச்சு.. ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல உனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா பார்க்கறேன்.. தயவு செஞ்சு இப்படி இருளடைஞ்சு போய் உட்கார்ந்துருக்காதே.. என் கூட இருக்கிற வரைக்குமாவது சந்தோஷமா இரேன்.. இப்படியே அழுது வடிஞ்சு நீ என்னை விட்டு போனா என்னால தாங்கிக்க முடியாது..‌ ப்ளீஸ் டி..!!" மாயாவின் கவலையான குரலில் அவள் பக்கம் திரும்பி மெல்ல சிரிக்க முயற்சித்தாள் கமலி..

"குட்..‌ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வா..‌ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல?" அவள் முறைத்தபடி கேட்க..

அமைதியாக இருந்தாள் கமலி..

"உன்னை என்னதான் செய்யறதோ..!! இனி இந்த பட்டினி கிடக்கற வேலையெல்லாம் வச்சுக்காத..‌ ஒழுங்கா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாதான் இங்கிருந்து உன்னை அனுப்பி வைப்பேன்.. இல்லைனா எங்கேயும் போக விட மாட்டேன்.. இரு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..!!" என்று மாயா எழுந்திருக்க..

"இருடி நீயே ஆபிஸ்லருந்து இப்பதான் வந்திருக்க.. உனக்கும் சேர்த்து நானே ஏதாவது எடுத்துட்டு வரேன்..!!" என்று அவளை அமர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள் கமலி..

வெட்டியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பதை விட ஏதாவது வேலை செய்தால் அவள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் என்பதால் மாயா தடுக்கவில்லை..!!

சொல்லப்போனால் தொண தொணவென்று பேசிக்கொண்டும்.. நச்சரித்து வேலை வாங்கிய படியும் பரபரப்பான சூழ்நிலையில் கமலியின் மனநிலையை மாற்றத்தான் முயல்கிறாள் மாயா..

ஆனால் அதையும் மீறி.. கிடைக்கும் இடைவெளிகளில் இப்படி ஜடமாக அமர்ந்துவிடும் தோழியை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியவில்லை..

கமலி தன் தலைமுடியை திருத்தி முகத்தை கழுவிக்கொண்டு.. ஒரு வட்ட பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..

ஏதோ அவளிடமிருந்து ஆத்மாவை பிடுங்கியது போல் முகம் களையிழந்து போயிருந்தது…

"என்னடி இப்படி இருக்க..? ம்ஹூம்.. இது சரிவராது.. உன்னை நீதான் தேத்திக்கணும்.. வெளிய வா கமலி.. அஷோக்கை தான்டி இந்த உலகத்தில் நீ கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. வாழ ஒரு வாழ்க்கை இருக்கு.. அவன் சவால் விட்ட மாதிரி துவண்டு போய்டாதே..!!" தனக்குத்தானே வலிமையோடு சமாதானம் சொல்லிக்கொண்டு.. ஓரளவு தெளிவான மனநிலையோடு சமையலறைக்குள் புகுந்தாள்..

இருவருக்குமாக பிரட் ரோஸ்ட் டீ தயாரித்து எடுத்து வந்து டேபிளில் வைக்க.. அதே நேரத்தில் வேறு உடைக்கு மாறியிருந்த மாயா சிரித்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்..

"நீ ரொம்ப குடுத்து வச்சவ கமலி.. வேலைக்கு போகணும்னு சொன்ன.. உடனே வழி கிடைச்சிடுச்சு.." என்றவளை கோப்பையை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே ஆர்வமாக பார்த்தாள் கமலி..

எங்க கம்பெனி கிளைன்ட் ஒருத்தர் கோயம்புத்தூர்ல இருக்காரு.. அவரோட ஹாஸ்பிடல் நாங்கதான் டிசைன் பண்ணி கட்டிக் கொடுத்தோம்.."

"என்ன ஹாஸ்பிடல்..?" தேநீரை பருகிக் கொண்டே கேட்டாள் கமலி..

"சூர்யா மெட்டர்நிட்டி சென்டர்..!! ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் சூர்ய தேவ் எங்க கம்பெனியோட கிளைன்ட்.."

கோப்பையை கீழே வைத்துவிட்டு ‌"ஓ மை காட்..!! அவர் கிட்டயா இப்ப பேசின..?" திகைத்தாள் கமலி..

"ஏன் இவ்வளவு ஷாக்..‌ அவரைப் பத்தி உனக்கு தெரியுமா..?" பிரட் டோஸ்ட்டை எடுத்து ஒரு துண்டு கடித்துக் கொண்டே கேட்டாள் மாயா..

"கேள்விப்பட்டிருக்கேன்.. நேர்ல பார்த்ததில்லை..‌ ஆனா அந்த ஹாஸ்பிடல் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மெடர்னிட்டி ஹாஸ்பிட்டலாச்சே..!! அங்கே எனக்கு வேலை கிடைக்குமா..? எனக்கு அவ்வளவா எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாதே.. நடுவுல கேப் விழுந்து போச்சு.. பட் வேலை கிடைச்சா என்னோட பியூச்சருக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.." கவலையில் ஆரம்பித்து எதிர்பார்ப்பில் முடித்தாள் கமலி..

"நான் மனசு வச்சா கிடைக்கும்.." காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவளை கேள்வியாக பார்த்தாள் கமலி..

அந்த ஹாஸ்பிடல் கட்டும்போது.. எங்க கம்பெனியிலிருந்து ஒரு டீம் அங்க போய் பிளான் போட்டு டிசைன் பண்ணி பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்ணி தந்தோம்.. அந்த டீம்ல நானும் ஒருத்தி.. கன்ஸ்டிரக்சன்க்காக டெடிகேட்டடா நான் ஒர்க் பண்ணினதா அவரே என்னை பாராட்டி இருக்கார்.. என் மேல சூர்ய தேவுக்கு நல்ல மரியாதை உண்டு.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு.. இப்ப அவர்கிட்ட பேசினேன்.. வேக்கன்சி இருக்கு.. வர சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.." என்று குதூகலமாக தோள்களை குலுக்கினாள்..

"நெஜமாவா சொல்ற..!!" நம்ப இயலாத பார்வையோடு கேட்டாள் கமலி..

"நான் எதுக்குடி பொய் சொல்ல போறேன்.. இன்னும் ஒரு வாரத்துல நீ இங்கிருந்து கிளம்பனும்..!!"

"இன்டர்வியூ எதுவும் இல்லையா..?" அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது என்பதை ஏன் நம்ப முடியவில்லை அவளால்..

"அதெல்லாம் எதுவும் இல்லைடி.. நீ முன்னாடி வேலை பார்த்த பழைய ஹாஸ்பிடல் பேரை சொன்னேன்.. ஓகேன்னு சொல்லிட்டார்.."

"என்னால இப்ப கூட நம்பவே முடியல..!!" கண்களை விரித்தாள் கமலி..

"ஹலோ மேடம்.. அவர் என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையில நான் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.. மிஸ்டர் சூர்ய தேவ் என் மேல வச்சிருக்கற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.." என்று கடைசி துண்டு பிரட் டோஸ்ட்டடையும் வாயில் போட்டு மென்றாள் மாயா..

தேனீரை ஒரு மிடறு விழுங்கியபடி டேபிளை பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"இன்னும் என்னடி யோசனை.. அந்த பாழாப்போன பழைய ஞாபகங்களை தூக்கி போட்டுட்டு.. வேலை கிடைச்சதை கொண்டாடு கமலி.." மாயா அயர்வாக பார்த்தாள் அவளை..

"அது இல்லைடி..!! உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிடுச்சு.. ஆனா தங்கறதுக்கு ஹாஸ்பிடல் பக்கத்திலேயே பாதுகாப்பான நல்ல ஹாஸ்டல் இல்லனா பிஜி ஏதாவது கிடைக்குமான்னு நெட்ல பாக்கணும்.. அதைப்பத்திதான் யோசிக்கறேன்..!!" யோசனையோடு விரல்களால் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது..!!" மாயா பீடிகை போடவும்..

"என்ன..? அதையும் ஏற்பாடு பண்ணிட்டியா..?" கமலியின் கண்கள் ஆச்சரியத்தோடு விரிந்தன..

"பின்ன..? எந்த ஐடியாவும் இல்லாம அப்படியே குருட்டுத்தனமா உன்னை இங்கிருந்து அனுப்பி வச்சிடுவேன் நினைச்சியா..? எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பற்றி உன்கிட்ட பேசவே வந்தேன்.." என்ற தோழியை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் கமலி.. இப்படி ஒரு தோழி கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ..!! என்று கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..

"தங்கறதுக்கான இடமெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. ஆனா நீ சம்மதிக்கனும். அதுதான் பிரச்சனை..!!" என்று இழுத்தாள்..

"என்னடி பிரச்சனை..?" கண்களைக் குறுக்கி மாயாவை கூர்மையாக பார்த்தாள் கமலி..

"நான் இப்போ வேலைக்காக ரெக்கமண்ட் பண்ணி இருக்கற ஆஸ்பிட்டல் ஓனர் டாக்டர் சூர்யா தேவ்.. அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியாதான் இருக்குது.. அங்கேயே நீ தங்கறதுக்கு பர்மிஷன் கேட்டு ஏற்பாடு பண்ணிட்டேன்.."

"ஒஹோ.. டாக்டர் வீட்ல இதுக்கு ஒகே சொல்லிட்டாங்களா..? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை குழந்தைங்க.." கமலி இயல்பாக கேட்க..

"ஹிஹி.. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்பா மட்டும்தான் இருந்தார்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் மேலே போய்ட்டார்.. இப்ப டாக்டர் தனிக்கட்டை.." என்று அசடுவழிந்தவளை
தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் கமலி..

"முறைக்காதடி..!! டாக்டர் பெண்கள் விஷயத்துல ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. எனக்கென்னமோ அவர் வீட்டில் நீ இருக்கிறது பாதுகாப்புன்னு தோணுச்சு.. அதனாலதான்..!!"

"என்ன விளையாடுறியா..? கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லிட்டு எதுக்காக அங்க போய் என்னை தங்க வைக்க நினைக்கற..!! இருக்கிற பிரச்சினையே போதும்.. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து தலையில போட்டுக்க நான் தயாரா இல்லை.. நான் ஹாஸ்டல் ஏதாவது பாத்துக்கறேன்" என்றாள் கமலி கோபமாக..

"கோவப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு..!! அவரால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. அவர் கூட ஆறு மாசம் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அந்த அனுபவத்துல தான் சொல்றேன்..!! ஹாஸ்டல்ல என்ன வசதி இருக்குமோ..!! அவரு வீட்டுல நீ தங்கினா உன் இஷ்டப்படி இருக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன் புரிஞ்சுக்க டி..!!" மாயாவின் பொறுமையான விளக்கம் ஓரளவு பலனளித்தது..

"உண்மையிலேயே அந்த டாக்டர் நல்லவர்ன்னு சொல்றியா அவரால எனக்கு எந்த தொல்லையும் வந்துடாதே..!!" கமலி கேட்க.. மாயாவிற்கு அப்பாடா என நிம்மதி..

"வராதுடி..!! ஆள் கொஞ்சம் சிடுசிடுப்பான ஆளு.. கண்டிப்பான பேர்வழி ஆனா பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவர்.."

"அதெல்லாம் சரிதான்.. ஆனா நான் அங்க தங்கறதுக்குகு அவர் எப்படி சமாதிச்சார்.. ஏதோ இடிக்குதே..!! தனியாளு வேற.. இன்னொரு பொண்ணு மேல் வீட்டு போர்ஷன்ல இருந்தா தேவையில்லாத குழப்பங்கள் வரும்ன்னு அவருக்கு தெரியாதா..?"

"இவ்வளவு யோசிக்காதே கமலி..!! உன்னை மாதிரி அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார்.. உன்னால அவருக்கும் அவர் பிரைவசிக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டார்.. நான்தான் கவலையே படாதீங்க.. உங்களோட ஃபீமேல் வர்ஷன்தான் என் பிரண்டு கமலி.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்..!!"

"அவ்வளவு கட்டன் ரைட்டா இருக்கிற ஆள் வீட்டுல நான் எதுக்காக போய் தங்கனும்.." வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் தோன்ற..

"அம்மா தாயே..!! தயவுசெய்து மறுபடி குட்டையை குழப்பாத.. உன்னை பாக்க கோயம்புத்தூர் வந்தாலும் ஒரு வாரம் தாராளமா வசதியா என்னால் அங்க தங்க முடியும்.. ஹாஸ்டல்ல வந்து உன் கூட தங்க முடியுமா..? நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன்னு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு.. இல்லேன்னா உன் இஷ்டம்.." காலியான காபி கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள் மாயா..

மூளையை தட்டி தட்டி யோசித்தவளுக்கு.. தோழி சொன்னதை ஆமோதிப்பதே சரியென்று தோன்றவே..

எழுந்து சமையலறைக்குள் சென்றவள்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காபி கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த தோழியை சிரிப்போடு பார்த்தாள்..

"மூஞ்சிய இப்படி வச்சுக்காத.. நல்லாவே இல்ல" என்று அவள் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக் கொள்ள.. மாயா அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சரிடி போறேன்.. அவர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்.. ஆனா பிரச்சனை வந்துச்சுன்னு வை நேரா சென்னை கிளம்பி வந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன் பாத்துக்கோ.." கழுத்தை நெறிப்பது போல் அவளை பிடித்து ஆட்டினாள்..

"ஐயோ என் செல்லமே.. நீ சம்மதிச்சதே போதும்.. ஒரு பிரச்சினையும் வந்துடாது.. ஏன்னா நீ நெருப்பு.. அவர் ஒரு சிடுமூஞ்சி.. நவகிரகம் மாதிரி நீ ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமா இருக்க போறீங்க.. சோ டோன்ட் வொர்ரி" என்று கமலியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..

அப்போதும் விழி தாழ்ந்து கமலி எதையோ யோசித்துக் கொண்டிருக்க..

"netflixல ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் மூவி ரிலீஸ் ஆகியிருக்கு.. பாக்கலாமாடி..?" என்று கேட்க.. உதட்டை குவித்துக் கொண்டு சரி என்ற தலையைசைத்தாள் கமலி..

"வா..வா.. டிவியை ஆன் பண்ணு.." தோழியை தோளில் கை வைத்து நகர்த்திக் கொண்டே சென்றாள் மாயா..

"டாக்டர் அந்த நந்தினிங்கிற பேஷண்டோட அப்பா உங்களை பாக்கணும்னு வெயிட் பண்றார்.. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கல.." நர்ஸ் வந்து சொல்ல..

நெற்றியை தேய்த்தபடி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சூர்ய தேவ் நிமிர்ந்தான்..

"நந்தினியா..?" புருவங்களை சுருக்கினான்..

ஆமா டாக்டர் சிசேரியன் கேஸ்.. இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு.." என்று சொல்ல தீவிரமாக யோசித்தான் சூரியதேவ்..

பிரசவித்து குழந்தை வெளிவரும் நேரத்தில் அந்தப் பெண் மயக்கமாகிவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக்கு திணறி கொண்டிருந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாய் போனது.. அதை நினைவுப் படுத்திக் கொண்டவன்..

"ஹான்.. என்னவாம்..?" என்றான் புருவங்களை நெளித்து..

"ஏற்கனவே அட்மிஷன் அப்போ 20000 ரூபாய் கட்டிட்டாங்க.. இப்ப டெலிவரிக்கு பிறகு மேற்கொண்டு அறுபதாயிரம் கட்டனும்.. அவ்வளவு பணம் கையிருப்பு இல்லையாம்.. அதனால உங்க கிட்ட பேசணும்னு..!!"

ஏளனமாக உதடு வளைத்தான் அவன்..

"காசு இல்லைனா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போக வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்.. நம்பர் ஒன் ஹாஸ்பிடல்.. இங்க வந்தா ட்ரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நம்பி தானே வராங்க.. அப்புறம் காசு இல்லைன்னு கருணையை எதிர்பார்த்தா எப்படி.. நானும் அதே கருணையை வச்சு ஹாஸ்பிடல் நடத்த முடியாது.. சம்பளம் இல்லாம கருணையின் அடிப்படையில் நீங்களும் சேவை செய்ய முடியாது.. பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.. இவங்க பாப்புலேஷனை இன்க்ரீஸ் பண்ணிட்டே போவாங்க..!! நாம ஃப்ரீ சர்விஸ் பண்ண முடியுமா..? பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.." என்றான் கனத்த குரலில்..

அப்போதும் நர்ஸ் தயங்கி நிற்க..

"குழைஞ்சு குழைஞ்சு கருணையோடு பேச இது ஒன்னும் சேவா சங்கம் கிடையாது.. ஹாஸ்பிடல்.. கண்டிப்பும் கறாருமுமா இருந்தாதான் விதிமுறைகள் சரியா கடைபிடிக்கப்படும்.. புரிஞ்சுதா..!!" அவன் கடுமையான குரலில்.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள் அந்த நர்ஸ்..

தொடரும்..
Intha musudu kita yepadi ?🤔🤔🤔🤔
 
Member
Joined
Jan 26, 2024
Messages
56
அருமையான பதிவு
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
127
💯💯💯💯💯💯💯💯💜💜💙💙💜💜💯💯💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
60
இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைச்சா சாதிக்கலாம். சூப்பர் மாயா. இரண்டு பேரையும் கோர்த்து விட்டிருக்க. என்ன நடக்குமோ.

இந்த டாக்டர் என்ன இப்படி இருக்கான். ஓவர் சிடுமூஞ்சி. அது ஒரு அழு மூஞ்சியா வேற வருது. பார்க்கலாம்.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
139
ஆடம்பர அப்பார்ட்மெண்டுகளை தன்னகத்தை அடக்கிக் கொண்டு ஓங்கி உயரமாக நின்றிருந்தன அந்த கட்டிடங்கள்..

அப்படி ஒரு கட்டிடத்தின் பி பிளாக்கில்.. நான்காவது மாடியில்.. கைப்பையில் வைத்திருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு தனது அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தாள் மாயா..

உள்ளே நுழைந்தவளை இருள் மட்டுமே வரவேற்றது.. யோசனையோடு சுவற்றை தடவி விளக்கை உயிர்ப்பித்தவள்.. சோபாவில் சுருண்டு படுத்திருந்த கமலினியை கவலையோடு பார்த்தாள்..

"என்னடி லைட்ட கூட போடாம படுத்திருக்க..?" என்று கைப்பையை இன்னொரு சோபாவில் வீசி விட்டு அவளருகே வந்து அமர.. கமலினியும் பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள்..

தலை கலைந்து.. சோர்ந்த முகத்தோடு வர்ணம் தீட்டப்படாத மங்கிய ஓவியம் போல் காணப்பட்ட கமலியை கண்டு மாயாவின் இதயம் பாரமானது ..

எந்த சஞ்சலங்களையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மான்குட்டி போல் சந்தோஷமாக துள்ளி திரிந்தவள் .. ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் அவள் பேச்சு முழுக்க உற்சாகமாக காதலோடு அஷோக்கை மட்டுமே சுற்றி வரும்.. அஷோக் கமலினி இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் மாயா..

அஷோக்கோடு வாழ்ந்த காலங்களில் கமலினியின் முகம் தங்கமாய் மின்னும்..!! வசதி வாய்ப்போடு கண்ணிறைந்த கணவன் தன் தோழிக்கு கிடைத்து விட்டதாய் மாயா கடவுளுக்கு நன்றி சொல்லாத நாள் இல்லை.. இப்போது அதே கடவுளை சபித்து கொண்டிருக்கிறாள்..

அஷோக் கமலினி தம்பதிகளின் நெருக்கம் நம்மிடையே ஏன் இல்லை என்று மாயா தன் கணவன் விஷ்ணுவிடம் கூட சண்டை போட்டதுண்டு..

அப்படிப்பட்ட வலுவான பந்தமே முறிந்து போய்விட்டது என்றால் இந்த உலகில் எது தான் நிரந்தரம் என்ற பயம் மாயாவின் நெஞ்சை ஆட்டுவிப்பதாய்..

மாயா கமலினியை தன் அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து வந்து இத்தோடு வருடமொன்று முடிவடைந்திருந்தது..

மாயாவின் கணவன் விஷ்ணு கலிபோர்னியாவில் வேலை பார்க்கிறான்..!! மாயா இங்கே ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.. இப்போதைக்கு குழந்தை இல்லை..

இன்னும் ஓரிரு வருடங்களில் சம்பாதித்த பணத்தை சேர்த்துக்கொண்டு தாய் நாட்டிற்கு வந்து சொந்த தொழில் தொடங்குவதாக எண்ணம்..

இத்தனை பெரிய அப்பார்ட்மெண்டில் தனிமையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் மாயாவிற்கு கமலினி நல்ல துணைதான் என்றாலும்.. தோழியின் இந்த நிலை.. மாயாவிற்கு பெருங்கவலை அளிக்கிறது..

கணவனிடமிருந்து பிரிந்து இங்கு வந்த நாளிலிருந்து ஏதோ நடை பிணம் போல் வீட்டை சுற்றி வளைய வருகிறாள் கமலி..

அன்று அஷோக்கிடம் நிமிர்ந்து தைரியமாக.. சரிதான் போடா என்ற தோரணையில் பேசி விட்டு வந்த கமலினி இவள் இல்லை..

ஒருவேளை அவனிடம் மட்டும் தைரியமாக இருப்பது போல் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது மாயாவிற்கு

சரியாக சாப்பிடுவதில்லை உறங்குவதில்லை..!! பெரிதாக எதையோ இழந்தவள் போல்.. இழந்து தான் இருக்கிறாள்.. ஆனால் அவள் இழந்த பொருளுக்கு எந்த மதிப்பும் இல்லையே..!!

மாயா முற்றிலுமாக உடைந்து போயிருக்கும் தன் தோழியை ஒவ்வொரு முறையும் தேற்றத்தான் முயற்சிக்கிறாள்.. ஆனாலும் பாவம் கமலினியால் அந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவதில்லை..

இதோ இன்றும் கூட காலையில் மாயா அலுவலகத்திற்கு புறப்படும் போது இந்த சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியே எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் கமலினி..

மாயா இன்னொரு சாவி வைத்திருந்ததால் அவளே கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்..

இதோ இப்போது திரும்பி வந்து பார்த்தால் அதே சோபாவில்.. அமர்ந்திருப்பதிலிருந்து மாற்றமாக படுத்திருக்கிறாள் அவ்வளவுதான்..

நிச்சயமாக எதையும் உண்டிருக்க மாட்டாள்.. ஏன் தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டாள்..

"என்னடி..!! காலையில நான் போனதுக்கப்புறம் இங்கிருந்து நீ நகரவே இல்லையா..?" மாயாவின் குரல் கோபமாக வெளிப்பட்டது..

கமலினியிடம் பதில் இல்லை.. அழுதிருப்பாள் போலிருக்கிறது.. மூக்கை உறிஞ்சி கொண்டு அலங்கோலமாக விரிந்து கிடந்த தன் கூந்தலை சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டாள்..

"கமலி எனக்கு புரியல..!! உன்னை கொஞ்சம் கூட மதிக்காத ஒருத்தனுக்கு எதுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற..? எதுக்காக இடிஞ்சு போய் உன்னையே நீ வருத்திக்கற..!! நீ இப்படி அழுதுட்டு இருக்குற நேரத்துல உன் புருஷன் அவன் ரெண்டாவது பொண்டாட்டியோட ரொம்ப சந்தோஷமா இருப்பான்.."

"அதுதான் என்னால தாங்க முடியல..!! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால ஜீரணிக்கவே முடியல.." கமலியின் குரல் தழுதழுத்தது.. கண்ணீர் வற்றிப் போன விழிகள் எதிர் திசையில் நிலை குத்தி நின்றன.

"நான் அவனுக்கு என்னடி குறை வச்சேன்..!! எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.. அஞ்சு வருஷ வாழ்க்கையில அவன் மட்டும்தான் என்னோட உலகமா இருந்தான்.. அவனைத் தவிர வேற எதையும் நான் யோசிச்சதே இல்லையே..!! அவன் மட்டும் எப்படி..?" அழுகையோடு தொண்டைக் குழீக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் மாயா..

"விடுடி அவன் சுயரூபம் இப்ப தெரிஞ்சிருக்கு சந்தோஷப்படு.. அவனையே நினைச்சுட்டு இருக்காம உன் வாழ்க்கையை பாரு.. அதுதான் உனக்கு நல்லது.." என்றாள்..

"முடியல.. முடியலடி..!!" இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டு கண்களை உருட்டியபடி குனிந்தாள்.. "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எனக்கு செஞ்ச துரோகம் தான் ஞாபகத்துக்கு வருது..!! என்னால ஏத்துக்கவே முடியல.." தலையை இடம் வலமாக அசைத்தாள்..

"அதுக்காக எத்தனை நாள் இப்படியே இருப்ப..? இதுதான் நிஜம்.. இதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.." என்றாள் மாயா அழுத்தமாக..

"அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் மாயா.. அவன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் இந்த ஐடியாவுக்கு சம்மதிச்சேன்.. ஆனா அது எனக்கே..?" என்றவளுக்கு நெஞ்சடைத்து மூச்சு வாங்கியது..

"பேபி.. கமலி காம் டவுன்..!!" அவள் தோளை தட்டிக் கொடுத்தாள் மாயா..

"அவனோட வாரிசை வயித்தில சுமந்ததால அவ மேல அன்பு வந்துடுச்சா..? குழந்தை இல்லைங்கிறதுக்காக என்னை ஒதுக்கி தள்ளிட்டானா..!! எப்படி மாயா? எனக்கு புரியவே இல்ல?" தாங்க முடியாமல் கண்ணீர் வழிய.. ஆதங்கத்தில் வார்த்தைகள் வெடித்தன..

"கமலி.. நீ எவ்வளவு புலம்பினாலும் இதுதான் நிஜம்.. இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ.. அவன் உன்னை வேண்டாம்னு சொல்லல.. நீதான் அவனை வேண்டாம்ன்னு உதறி தள்ளிட்டு வந்திருக்க..!! காதல் கத்திரிக்காய்ன்னு பலவீனமா அவன் கால்ல விழுந்து கதறாம.. தைரியமா புத்திசாலித்தனமா இப்படி ஒரு முடிவு எடுத்ததுக்கு உன்னை நினைச்சு நீயே பெருமைப்படணும்.. அதை விட்டுட்டு.. இப்படி அழுது புலம்பினா எப்படி..!! அவன் உண்மை முகம் தெரிஞ்சு வருஷமாக போகுது.. இதோ விவாகரத்து கூட கிடைச்சாச்சு.. அடுத்த வேலையை பாக்காம.. துரோகத்தை ஜீரணிக்க முடியலைன்னு.. உன்னை நீயே அழிச்சுக்கிறது சரியா..!! நீ இங்க அழுதுட்டு இருக்குற ஒவ்வொரு நொடியும் அவன் அங்க சந்தோஷமா இருப்பான்.. எனக்கு அதை நினைச்சாத்தான் வயிறெல்லாம் பத்தி எரியுது.. தப்பு செய்யாத நீ எதுக்குடி இப்படி கலங்கி நிக்கிற..?" கோபத்தில் கத்தினாள் மாயா..

"ஒவ்வொரு முறையும்.. இதிலிருந்து வெளியே வரணும்னு நான் எடுக்கற முயற்சிகள் எல்லாம்.. ஒரே நொடியில் வீணாகிப் போயிடுது..!!" கண்களைத் துடைத்துக்கொண்டாள் கமலி..

"வீட்ல சும்மா உக்காந்திருந்தா இப்படித்தான் பைத்தியக்காரத்தனமா ஏதாவது யோசிக்க தோணும்.. எம்டி மைண்ட் இஸ் டெவில் ஒர்க்ஷாப் அப்படின்னு சொல்லுவாங்க..!! உபயோகமா ஏதாவது பண்ணு கமலி.." என்றாள் அழுத்தமாக..

"என்ன செய்யறது ஒன்னும் புரியலையே..!!" மக்குப் பெண் போல் விழித்தவளை கண்டு ஆத்திரம் பொங்கியது மாயாவிற்கு..

"அடி வாங்க போற.. நீ நர்சிங் படிச்சிருக்க.. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..?" என்று கேட்ட பிறகுதான் ஆஞ்சநேயருக்கு தன் பலம் தெரிவது போல.. விழிகளின் மூடி திறந்தாள் கமலி..

மாயா கமலினி இருவரும் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பிள்ளைகள்..

இருவரும் நல்லபடியாக படித்து அவரவர் துறையில் காலூன்றி நின்ற சாதனைப் பெண்கள் தான்..

படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளிவந்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து.. அங்கிருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்..

மாயா பொறியியல் முடித்து அது சம்பந்தமான வேலையில் சேர்ந்திருந்தாள்..

கமலி BSc நர்சிங் (mid wifery) ஸ்பெஷல் கேட்டகரி முடித்துவிட்டு.. ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவரவருக்கான காதல் துணையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்ட பின்.. வேலை காதல் கலாட்டா கொண்டாட்டம் என வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது..

கமலி அசோக்கை திருமணம் செய்து கொண்ட அடுத்த இரண்டு வருடங்களில் மாயா விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டாள்..

அஷோக் ஆடிட்டர்.. வசதி படைத்த குடும்பம்.. வீட்டை எதிர்த்து தான் கமலினியை திருமணம் செய்து கொண்டான்..

காதலால் கசிந்துருகி அப்படி ஒரு இன்ப வாழ்க்கை..!! ஆசிரமத்தில் அன்பு காட்ட ஆளில்லாத தனி பெண்ணாக வாழ்ந்தவள் கணவனின் அன்பில் முழு முற்றாக மூழ்கி இல்லற சந்தோஷத்தை திகட்ட திகட்ட அனுபவித்தாள்..

"நான்தான் நல்லா சம்பாதிக்கிறேனே.. நீ வேற எதுக்கு வேலைக்கு போகணும்.. வீட்லயே இருந்து என்னை கவனிச்சுக்கோயேன் பட்டுமா.."

"அசோக் கொஞ்சலோடு சொல்ல அதற்கும் சம்மதித்து 24 மணி நேர பதி சேவையில் மூழ்கி போனாள் கமலி..‌ அஷோக் மீது அத்தனை நேசம்.. அவனுக்காக உயிரோடு சேர்த்து சகலத்தையும் துறக்க தயாராக இருந்தாள்.. இந்த வேலை எம்மாத்திரம்..?"

அதன் பிறகு வேலையை மறந்து அவன் மட்டுமே உலகமென வாழ்ந்தவளுக்கு.. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் தான்‌ படித்த படிப்பே என்னவென நினைவில் வருகிறது.. காலம் கடந்த பின்.. வாழ்க்கை திசைமாறிய பின்.. தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிகிறது..

ஆனால் அந்த வகையில் மாயா அதிர்ஷ்டசாலிதான்.. அடையாளத்தை தொலைக்காமல் படித்த படிப்பிற்கான வேலையை இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.. பொருளாதாரத்தை சற்று மேம்படுத்திவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விஷ்ணு மாயா இருவரின் திட்டமாக இருக்கிறது..

இந்த விவாகரத்து விஷயத்தில் கூட.. கமலிக்கு போன் செய்து ஓரிரு முறை ஆறுதல் கூறியிருக்கிறான் விஷ்ணு..

"கவலைப்படாதே கமலி உனக்காக நாங்க இருக்கோம்.. என்ன உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேளு..!!" என்று அவள் உடைந்து போயிருந்த நேரத்தில் தைரியம் தந்திருக்கிறான்..

"ஏதாவது வேலைக்கு அப்ளை பண்ணு கமலி.. உன் மனசுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்..!! நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்கிறேன்.." என்றாள் மாயா இறங்கிய குரலில்..

"எனக்கு இந்த ஊரே வேண்டாம் மாயா..!! இங்க இருக்கவே பிடிக்கல.. நெஞ்செல்லாம் அடைக்குது.. இந்த ஊர்ல என்னால எந்த வேலைக்கும் போக முடியாது.." தலையை வேகமாக அசைத்தாள் கமலி..

"என்னடி சொல்ற..?" மாயா திகைத்தாள்..

"ஆமா..!! ஒவ்வொரு நாளும் எங்கே அவன் என் முன்னாடி வந்துருவானோ.. ஏதாவது ஒரு தருணத்தில என்னையும் மீறி உடைஞ்சு அழுதுடுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு.. அப்படி மட்டும் ஒரு சந்தர்ப்பம் வந்துட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. நா.. நான் அவன்கிட்ட தோக்க விரும்பல.." இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் கமலி..

"அவனுக்கு பயந்து ஊரை விட்டு ஓட போறியா..? அவன் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டாமா.. என்னடி பைத்தியக்காரத்தனம் இது.. தெரியாத ஊர்ல போய் என்ன செய்வ..?" கவலையும் கோபமுமாக கேட்டாள்‌ மாயா..!!

"என்னை மாதிரி அனாதைகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்..!! எந்த ஊரானாலும் பழகிக்கணும்.." விரத்தியாகச் சொன்னாள் கமலி..

"அடி பின்னிடுவேன்.. என்ன பேச்சு இது.. யார் அனாதை? உனக்கு நான் இல்லையா..?" மாயாவிற்கு கோபத்தில் மூச்சு வாங்கியது..

"நீ மட்டும்தான் எனக்காக இருக்க மாயா.. ஏதாவது ஒரு கட்டத்துல உன்னையும் நான் இழந்திடுவேனோன்னு பயமா இருக்கு..!! நீ எனக்கு வேணும் மாயா.. அதனால தான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்.."

"என்னடி பேசுற..?" மாயாவுக்கு புரியவில்லை..

"நான் நேசிக்கிறது எதுவும் எனக்கு நிலைக்க மாட்டேங்குதே..!!" அவள் கண்ணீரோடு சொல்ல..

"ஏய் லூசு.." என்று அதட்டினாள் மாயா..

"ப்ளீஸ் மாயா என்னை புரிஞ்சுக்கோ.. எனக்கும் ஒரு மாற்றம் தேவை.. இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும்.. அவனுடைய ஞாபகங்கள் அதிகமா என்னை வாட்டி வதைக்கும்.. ஏதாவது தவறான முடிவு எடுத்துடுவேனோனு பயமா இருக்கு.." கெஞ்சலாக பார்த்தாள் கமலி..

"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதடி.. இன்னுமுமா அந்த துரோகியை விரும்பற.?"

"நிச்சயமா இல்லை..!! என்னைக்கு அவனோட கீழ்த்தரமான குணம் தெரிய வந்துச்சோ அப்பவே அவனை தலை முழுகிட்டேன்.. இப்ப என்னோட தேங்கி நிக்கறதெல்லாம்.. அவன் எனக்கு செஞ்ச அநியாயங்கள் மட்டும்தான்.."

"அதை மறந்து தொலையேன்டி..‌!!" மாயா சலித்தாள்..

"முடியலையே..!! நீ சொன்ன மாதிரி கவுன்சிலிங் கூட போனேனே.. எந்த பயனும் இல்லை.. நல்ல வேலையா தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட்டு வந்துட்டேன்..!!" என்று இழுத்து மூச்சு விட்டாள்..

தோழியின் நிலை புரிந்தும் அவள் துயரத்தை போக்க முடியாத கையாலாகத்தனத்தோடு அமர்ந்திருந்தாள் மாயா..‌!!

உண்மையை சொல்லப்போனால் எவராலும் இப்படி ஒரு துரோகத்தை ஜீரணிக்க இயலாது.. இருந்த போதிலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..!!

"சரி வெளியூர் போய் வேலை பாக்கணும்ங்கற என்னத்துல உறுதியா இருக்கியா..?"

"ம்ம்.. நிச்சயமா போயே ஆகணும்.. இங்க மூச்சடைக்குது.. என்னால முடியல.."

நீண்ட பெருமூச்சு விட்டாள் மாயா.. "கன்ஸ்டிரக்ஷன் ஃபீல்டுல இருக்கிறதுனால எனக்கு நிறைய ஆளுங்களை தெரியும்.. அந்த கான்டாக்ட்ஸ் வெச்சு.. ஒரு நல்ல ஹாஸ்பிடல்ல உனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா பார்க்கறேன்.. தயவு செஞ்சு இப்படி இருளடைஞ்சு போய் உட்கார்ந்துருக்காதே.. என் கூட இருக்கிற வரைக்குமாவது சந்தோஷமா இரேன்.. இப்படியே அழுது வடிஞ்சு நீ என்னை விட்டு போனா என்னால தாங்கிக்க முடியாது..‌ ப்ளீஸ் டி..!!" மாயாவின் கவலையான குரலில் அவள் பக்கம் திரும்பி மெல்ல சிரிக்க முயற்சித்தாள் கமலி..

"குட்..‌ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெளியே வா..‌ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல இல்ல?" அவள் முறைத்தபடி கேட்க..

அமைதியாக இருந்தாள் கமலி..

"உன்னை என்னதான் செய்யறதோ..!! இனி இந்த பட்டினி கிடக்கற வேலையெல்லாம் வச்சுக்காத..‌ ஒழுங்கா சாப்பிட்டு சந்தோஷமா இருந்தாதான் இங்கிருந்து உன்னை அனுப்பி வைப்பேன்.. இல்லைனா எங்கேயும் போக விட மாட்டேன்.. இரு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்..!!" என்று மாயா எழுந்திருக்க..

"இருடி நீயே ஆபிஸ்லருந்து இப்பதான் வந்திருக்க.. உனக்கும் சேர்த்து நானே ஏதாவது எடுத்துட்டு வரேன்..!!" என்று அவளை அமர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள் கமலி..

வெட்டியாக அமர்ந்து விட்டத்தை பார்ப்பதை விட ஏதாவது வேலை செய்தால் அவள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் என்பதால் மாயா தடுக்கவில்லை..!!

சொல்லப்போனால் தொண தொணவென்று பேசிக்கொண்டும்.. நச்சரித்து வேலை வாங்கிய படியும் பரபரப்பான சூழ்நிலையில் கமலியின் மனநிலையை மாற்றத்தான் முயல்கிறாள் மாயா..

ஆனால் அதையும் மீறி.. கிடைக்கும் இடைவெளிகளில் இப்படி ஜடமாக அமர்ந்துவிடும் தோழியை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியவில்லை..

கமலி தன் தலைமுடியை திருத்தி முகத்தை கழுவிக்கொண்டு.. ஒரு வட்ட பொட்டை நெற்றியில் ஒட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..

ஏதோ அவளிடமிருந்து ஆத்மாவை பிடுங்கியது போல் முகம் களையிழந்து போயிருந்தது…

"என்னடி இப்படி இருக்க..? ம்ஹூம்.. இது சரிவராது.. உன்னை நீதான் தேத்திக்கணும்.. வெளிய வா கமலி.. அஷோக்கை தான்டி இந்த உலகத்தில் நீ கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.. வாழ ஒரு வாழ்க்கை இருக்கு.. அவன் சவால் விட்ட மாதிரி துவண்டு போய்டாதே..!!" தனக்குத்தானே வலிமையோடு சமாதானம் சொல்லிக்கொண்டு.. ஓரளவு தெளிவான மனநிலையோடு சமையலறைக்குள் புகுந்தாள்..

இருவருக்குமாக பிரட் ரோஸ்ட் டீ தயாரித்து எடுத்து வந்து டேபிளில் வைக்க.. அதே நேரத்தில் வேறு உடைக்கு மாறியிருந்த மாயா சிரித்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்..

"நீ ரொம்ப குடுத்து வச்சவ கமலி.. வேலைக்கு போகணும்னு சொன்ன.. உடனே வழி கிடைச்சிடுச்சு.." என்றவளை கோப்பையை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே ஆர்வமாக பார்த்தாள் கமலி..

எங்க கம்பெனி கிளைன்ட் ஒருத்தர் கோயம்புத்தூர்ல இருக்காரு.. அவரோட ஹாஸ்பிடல் நாங்கதான் டிசைன் பண்ணி கட்டிக் கொடுத்தோம்.."

"என்ன ஹாஸ்பிடல்..?" தேநீரை பருகிக் கொண்டே கேட்டாள் கமலி..

"சூர்யா மெட்டர்நிட்டி சென்டர்..!! ஹாஸ்பிடல் ஓனர் மிஸ்டர் சூர்ய தேவ் எங்க கம்பெனியோட கிளைன்ட்.."

கோப்பையை கீழே வைத்துவிட்டு ‌"ஓ மை காட்..!! அவர் கிட்டயா இப்ப பேசின..?" திகைத்தாள் கமலி..

"ஏன் இவ்வளவு ஷாக்..‌ அவரைப் பத்தி உனக்கு தெரியுமா..?" பிரட் டோஸ்ட்டை எடுத்து ஒரு துண்டு கடித்துக் கொண்டே கேட்டாள் மாயா..

"கேள்விப்பட்டிருக்கேன்.. நேர்ல பார்த்ததில்லை..‌ ஆனா அந்த ஹாஸ்பிடல் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மெடர்னிட்டி ஹாஸ்பிட்டலாச்சே..!! அங்கே எனக்கு வேலை கிடைக்குமா..? எனக்கு அவ்வளவா எக்ஸ்பீரியன்ஸ் கூட கிடையாதே.. நடுவுல கேப் விழுந்து போச்சு.. பட் வேலை கிடைச்சா என்னோட பியூச்சருக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.." கவலையில் ஆரம்பித்து எதிர்பார்ப்பில் முடித்தாள் கமலி..

"நான் மனசு வச்சா கிடைக்கும்.." காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவளை கேள்வியாக பார்த்தாள் கமலி..

அந்த ஹாஸ்பிடல் கட்டும்போது.. எங்க கம்பெனியிலிருந்து ஒரு டீம் அங்க போய் பிளான் போட்டு டிசைன் பண்ணி பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்ணி தந்தோம்.. அந்த டீம்ல நானும் ஒருத்தி.. கன்ஸ்டிரக்சன்க்காக டெடிகேட்டடா நான் ஒர்க் பண்ணினதா அவரே என்னை பாராட்டி இருக்கார்.. என் மேல சூர்ய தேவுக்கு நல்ல மரியாதை உண்டு.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு.. இப்ப அவர்கிட்ட பேசினேன்.. வேக்கன்சி இருக்கு.. வர சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.." என்று குதூகலமாக தோள்களை குலுக்கினாள்..

"நெஜமாவா சொல்ற..!!" நம்ப இயலாத பார்வையோடு கேட்டாள் கமலி..

"நான் எதுக்குடி பொய் சொல்ல போறேன்.. இன்னும் ஒரு வாரத்துல நீ இங்கிருந்து கிளம்பனும்..!!"

"இன்டர்வியூ எதுவும் இல்லையா..?" அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது என்பதை ஏன் நம்ப முடியவில்லை அவளால்..

"அதெல்லாம் எதுவும் இல்லைடி.. நீ முன்னாடி வேலை பார்த்த பழைய ஹாஸ்பிடல் பேரை சொன்னேன்.. ஓகேன்னு சொல்லிட்டார்.."

"என்னால இப்ப கூட நம்பவே முடியல..!!" கண்களை விரித்தாள் கமலி..

"ஹலோ மேடம்.. அவர் என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையில நான் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.. மிஸ்டர் சூர்ய தேவ் என் மேல வச்சிருக்கற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு.." என்று கடைசி துண்டு பிரட் டோஸ்ட்டடையும் வாயில் போட்டு மென்றாள் மாயா..

தேனீரை ஒரு மிடறு விழுங்கியபடி டேபிளை பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் கமலி..

"இன்னும் என்னடி யோசனை.. அந்த பாழாப்போன பழைய ஞாபகங்களை தூக்கி போட்டுட்டு.. வேலை கிடைச்சதை கொண்டாடு கமலி.." மாயா அயர்வாக பார்த்தாள் அவளை..

"அது இல்லைடி..!! உன் புண்ணியத்துல வேலை கிடைச்சிடுச்சு.. ஆனா தங்கறதுக்கு ஹாஸ்பிடல் பக்கத்திலேயே பாதுகாப்பான நல்ல ஹாஸ்டல் இல்லனா பிஜி ஏதாவது கிடைக்குமான்னு நெட்ல பாக்கணும்.. அதைப்பத்திதான் யோசிக்கறேன்..!!" யோசனையோடு விரல்களால் டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது..!!" மாயா பீடிகை போடவும்..

"என்ன..? அதையும் ஏற்பாடு பண்ணிட்டியா..?" கமலியின் கண்கள் ஆச்சரியத்தோடு விரிந்தன..

"பின்ன..? எந்த ஐடியாவும் இல்லாம அப்படியே குருட்டுத்தனமா உன்னை இங்கிருந்து அனுப்பி வச்சிடுவேன் நினைச்சியா..? எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு தான் இந்த விஷயத்தை பற்றி உன்கிட்ட பேசவே வந்தேன்.." என்ற தோழியை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் கமலி.. இப்படி ஒரு தோழி கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ..!! என்று கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது..

"தங்கறதுக்கான இடமெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு.. ஆனா நீ சம்மதிக்கனும். அதுதான் பிரச்சனை..!!" என்று இழுத்தாள்..

"என்னடி பிரச்சனை..?" கண்களைக் குறுக்கி மாயாவை கூர்மையாக பார்த்தாள் கமலி..

"நான் இப்போ வேலைக்காக ரெக்கமண்ட் பண்ணி இருக்கற ஆஸ்பிட்டல் ஓனர் டாக்டர் சூர்யா தேவ்.. அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியாதான் இருக்குது.. அங்கேயே நீ தங்கறதுக்கு பர்மிஷன் கேட்டு ஏற்பாடு பண்ணிட்டேன்.."

"ஒஹோ.. டாக்டர் வீட்ல இதுக்கு ஒகே சொல்லிட்டாங்களா..? அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை குழந்தைங்க.." கமலி இயல்பாக கேட்க..

"ஹிஹி.. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்பா மட்டும்தான் இருந்தார்.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவரும் மேலே போய்ட்டார்.. இப்ப டாக்டர் தனிக்கட்டை.." என்று அசடுவழிந்தவளை
தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள் கமலி..

"முறைக்காதடி..!! டாக்டர் பெண்கள் விஷயத்துல ரொம்ப நல்லவர்.. கண்ணியமானவர்.. எனக்கென்னமோ அவர் வீட்டில் நீ இருக்கிறது பாதுகாப்புன்னு தோணுச்சு.. அதனாலதான்..!!"

"என்ன விளையாடுறியா..? கல்யாணம் ஆகாத தனிக்கட்டைன்னு சொல்லிட்டு எதுக்காக அங்க போய் என்னை தங்க வைக்க நினைக்கற..!! இருக்கிற பிரச்சினையே போதும்.. தேவையில்லாத பிரச்சனையை இழுத்து தலையில போட்டுக்க நான் தயாரா இல்லை.. நான் ஹாஸ்டல் ஏதாவது பாத்துக்கறேன்" என்றாள் கமலி கோபமாக..

"கோவப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு..!! அவரால உனக்கு எந்த பிரச்சனையும் வராது.. டாக்டர் ரொம்ப நல்லவர்.. அவர் கூட ஆறு மாசம் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அந்த அனுபவத்துல தான் சொல்றேன்..!! ஹாஸ்டல்ல என்ன வசதி இருக்குமோ..!! அவரு வீட்டுல நீ தங்கினா உன் இஷ்டப்படி இருக்கலாம்.. நானும் நிம்மதியா இருப்பேன் புரிஞ்சுக்க டி..!!" மாயாவின் பொறுமையான விளக்கம் ஓரளவு பலனளித்தது..

"உண்மையிலேயே அந்த டாக்டர் நல்லவர்ன்னு சொல்றியா அவரால எனக்கு எந்த தொல்லையும் வந்துடாதே..!!" கமலி கேட்க.. மாயாவிற்கு அப்பாடா என நிம்மதி..

"வராதுடி..!! ஆள் கொஞ்சம் சிடுசிடுப்பான ஆளு.. கண்டிப்பான பேர்வழி ஆனா பெண்கள் விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவர்.."

"அதெல்லாம் சரிதான்.. ஆனா நான் அங்க தங்கறதுக்குகு அவர் எப்படி சமாதிச்சார்.. ஏதோ இடிக்குதே..!! தனியாளு வேற.. இன்னொரு பொண்ணு மேல் வீட்டு போர்ஷன்ல இருந்தா தேவையில்லாத குழப்பங்கள் வரும்ன்னு அவருக்கு தெரியாதா..?"

"இவ்வளவு யோசிக்காதே கமலி..!! உன்னை மாதிரி அவரும் ஆயிரம் கேள்வி கேட்டார்.. உன்னால அவருக்கும் அவர் பிரைவசிக்கும் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டார்.. நான்தான் கவலையே படாதீங்க.. உங்களோட ஃபீமேல் வர்ஷன்தான் என் பிரண்டு கமலி.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்..!!"

"அவ்வளவு கட்டன் ரைட்டா இருக்கிற ஆள் வீட்டுல நான் எதுக்காக போய் தங்கனும்.." வேதாளம் முருங்கை மரம் ஏறுவதை போல் தோன்ற..

"அம்மா தாயே..!! தயவுசெய்து மறுபடி குட்டையை குழப்பாத.. உன்னை பாக்க கோயம்புத்தூர் வந்தாலும் ஒரு வாரம் தாராளமா வசதியா என்னால் அங்க தங்க முடியும்.. ஹாஸ்டல்ல வந்து உன் கூட தங்க முடியுமா..? நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன்னு நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு.. இல்லேன்னா உன் இஷ்டம்.." காலியான காபி கோப்பைகளையும் தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று விட்டாள் மாயா..

மூளையை தட்டி தட்டி யோசித்தவளுக்கு.. தோழி சொன்னதை ஆமோதிப்பதே சரியென்று தோன்றவே..

எழுந்து சமையலறைக்குள் சென்றவள்.. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு காபி கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த தோழியை சிரிப்போடு பார்த்தாள்..

"மூஞ்சிய இப்படி வச்சுக்காத.. நல்லாவே இல்ல" என்று அவள் கழுத்தைப் பின்புறமிருந்து கட்டிக் கொள்ள.. மாயா அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"சரிடி போறேன்.. அவர் வீட்டிலேயே தங்கிக்கிறேன்.. ஆனா பிரச்சனை வந்துச்சுன்னு வை நேரா சென்னை கிளம்பி வந்து உன்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன் பாத்துக்கோ.." கழுத்தை நெறிப்பது போல் அவளை பிடித்து ஆட்டினாள்..

"ஐயோ என் செல்லமே.. நீ சம்மதிச்சதே போதும்.. ஒரு பிரச்சினையும் வந்துடாது.. ஏன்னா நீ நெருப்பு.. அவர் ஒரு சிடுமூஞ்சி.. நவகிரகம் மாதிரி நீ ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமா இருக்க போறீங்க.. சோ டோன்ட் வொர்ரி" என்று கமலியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மாயா..

அப்போதும் விழி தாழ்ந்து கமலி எதையோ யோசித்துக் கொண்டிருக்க..

"netflixல ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் மூவி ரிலீஸ் ஆகியிருக்கு.. பாக்கலாமாடி..?" என்று கேட்க.. உதட்டை குவித்துக் கொண்டு சரி என்ற தலையைசைத்தாள் கமலி..

"வா..வா.. டிவியை ஆன் பண்ணு.." தோழியை தோளில் கை வைத்து நகர்த்திக் கொண்டே சென்றாள் மாயா..

"டாக்டர் அந்த நந்தினிங்கிற பேஷண்டோட அப்பா உங்களை பாக்கணும்னு வெயிட் பண்றார்.. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கல.." நர்ஸ் வந்து சொல்ல..

நெற்றியை தேய்த்தபடி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சூர்ய தேவ் நிமிர்ந்தான்..

"நந்தினியா..?" புருவங்களை சுருக்கினான்..

ஆமா டாக்டர் சிசேரியன் கேஸ்.. இன்னைக்கு தான் குழந்தை பிறந்திருக்கு.." என்று சொல்ல தீவிரமாக யோசித்தான் சூரியதேவ்..

பிரசவித்து குழந்தை வெளிவரும் நேரத்தில் அந்தப் பெண் மயக்கமாகிவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக்கு திணறி கொண்டிருந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாய் போனது.. அதை நினைவுப் படுத்திக் கொண்டவன்..

"ஹான்.. என்னவாம்..?" என்றான் புருவங்களை நெளித்து..

"ஏற்கனவே அட்மிஷன் அப்போ 20000 ரூபாய் கட்டிட்டாங்க.. இப்ப டெலிவரிக்கு பிறகு மேற்கொண்டு அறுபதாயிரம் கட்டனும்.. அவ்வளவு பணம் கையிருப்பு இல்லையாம்.. அதனால உங்க கிட்ட பேசணும்னு..!!"

ஏளனமாக உதடு வளைத்தான் அவன்..

"காசு இல்லைனா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் போக வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்.. நம்பர் ஒன் ஹாஸ்பிடல்.. இங்க வந்தா ட்ரீட்மென்ட் நல்லா இருக்கும்னு நம்பி தானே வராங்க.. அப்புறம் காசு இல்லைன்னு கருணையை எதிர்பார்த்தா எப்படி.. நானும் அதே கருணையை வச்சு ஹாஸ்பிடல் நடத்த முடியாது.. சம்பளம் இல்லாம கருணையின் அடிப்படையில் நீங்களும் சேவை செய்ய முடியாது.. பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.. இவங்க பாப்புலேஷனை இன்க்ரீஸ் பண்ணிட்டே போவாங்க..!! நாம ஃப்ரீ சர்விஸ் பண்ண முடியுமா..? பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.." என்றான் கனத்த குரலில்..

அப்போதும் நர்ஸ் தயங்கி நிற்க..

"குழைஞ்சு குழைஞ்சு கருணையோடு பேச இது ஒன்னும் சேவா சங்கம் கிடையாது.. ஹாஸ்பிடல்.. கண்டிப்பும் கறாருமுமா இருந்தாதான் விதிமுறைகள் சரியா கடைபிடிக்கப்படும்.. புரிஞ்சுதா..!!" அவன் கடுமையான குரலில்.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள் அந்த நர்ஸ்..

தொடரும்..
😇😇😇😇😇
 
Member
Joined
Nov 30, 2024
Messages
29
Super friend Maya👏👏👏👏👏 intresting ah poitu iruku super ❤️ 👏 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Top