- Joined
- Jan 10, 2023
- Messages
- 47
- Thread Author
- #1
கண்ணன் விலாசுக்கு இணையாக பரந்து விரிந்து நிற்கிறது இந்த பிரம்மாண்ட வீடு.. அது கண்ணன் விலாஸ் என்றால் இது வஞ்சிக்கோட்டை.. வீம்புக்காகவே இந்த பெயர் வைத்திருக்கிறான் பெயருக்கு சொந்தக்காரியை உரிமையாக சொந்தம் கொண்டாட கூடியவனான கிருஷ்ண தேவராயன்.. ஆனால் உரிமையும் சொந்தமும் அப்போது இருந்தது.. இப்போது உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்று உறவை முறித்துக் கொண்டு சென்றுவிட்டாள் கிருஷ்ணனின் ராதை.. ராயனின் சீதையான வஞ்சிக்கொடி..
இந்த வஞ்சிக்கோட்டை ஒவ்வொரு செங்கலையும் தரமாக தேர்ந்தெடுத்து அவளுக்காக பார்த்து பார்த்து கட்டப்பட்ட காதல் கோட்டை.. பிறந்த வீட்டில் வசதியாக வாழ்ந்தவள் புகுந்த வீட்டிலும்.. வசதிக்கு குறைவில்லாமல் சந்தோஷமாக தன்னோடு குடித்தனம் நடத்த வேண்டும் என்பதற்காக.. தன்னவளுக்கென தேவராயன் காதலோடு அமைத்த குட்டி தாஜ்மஹால்..
இப்போது கோட்டை மட்டும் தான் நிமிர்ந்து நிற்கிறது.. கவர்னர் மாளிகை மான் குட்டியாக.. வீட்டுக்குள் சந்தோஷமாக துள்ளி திரிந்து இன்ப ராகம் இசைக்க வேண்டிய வஞ்சிக்கொடி தலைவனை வஞ்சித்து விட்டு விலகி சென்று விட்டாளே..!
"கனகவல்லி.. ஏ புள்ள கனகவல்லி..!" அழைத்துக் கொண்டே.. பூ.. பழம் ஒரு ரவிக்கை பிட்டு.. குங்குமச்சிமிழ் அத்தோடு சேர்த்து ஒரு பத்திரிக்கையும் சேர்ந்த சீர்வரிசை தட்டை கையில் ஏந்தியபடி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்.. அவளோடு இரண்டு வயதான சுமங்கலி பெண்களும் துணையாக வந்திருந்தனர்..
மிக விசாலமான அந்த கூடத்தில் மர நாற்காலியில் அமர்ந்து வெற்றிலையை வாயில் குதப்பி கொண்டிருந்தார் பெரியசாமி..!
"வா ராசாத்தி.. வாங்கம்மா.. எப்படி இருக்கவே.. ஏ புள்ள செல்வி.. அந்த பாய் எடுத்து போடு.. உட்காருமா ராசாத்தி..! கனகவல்லி..! இந்த ராசாத்தி வந்துருக்குது பாரு.. கூடவே பட்டமாவும் மீனாட்சியும் வந்திருக்காங்க.. மூணு பேருக்கு குடிக்க காபித் தண்ணி இல்ல நீர் மோரு ஏதாச்சு கொண்டா.." என்று சமையலறை நோக்கி சத்தம் போட..
"இருக்கட்டுண்ண.. நிறைய ஜோலி
கிடக்குது.. இன்னும் பத்து வீட்டுக்கு போய் பத்திரிகை குடுக்கணும்.. கனகவள்ளிய வர சொன்னிங்கனா பத்திரிக்கையை கொடுத்துப்புட்டு.. கிளம்பிருவேன்.." புன்னகைத்தபடி கொண்டு வந்திருந்த தட்டை மேஜையின் மீது வைத்தாள் ராசாத்தி..
"வா.. ராசாத்தி.. ஒரு வழியா உன் பேத்திக்கு மொட்டை அடிச்சு காது குத்த நாள் குறிச்சாச்சு போல..!" புன்னகையோடு அங்கே வந்து நின்றாள் கனகவல்லி..
"அட ஆமா வள்ளி.. பொண்ணுக்கு உடம்பு முடியல.. மருமகனுக்கு ஆக்சிடென்ட்டு.. பாப்பாவுக்கு வேற அம்மை போட்டு.. குறிச்ச தேதியில காதுகுத்து விழா நடக்காம தள்ளிப்போனதுல எல்லாரும் ஏகத்துக்கும் நொந்து போயிட்டோம்.. நல்ல வேலை இப்பதான் கஷ்டம் தீர்ந்து அந்த சாமி ஒரு வழியா கண்ண தொறந்திருக்கு.. 16ஆம் தேதி முனீஸ்வரன் கோவில்ல மொட்டை அடிச்சு காது குத்தறோம்.. பக்கத்து மண்டபத்தில் விழாவும் விருந்தும்.. கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும்..!"
"அதுக்கென்ன.. எல்லாரும் வந்துட்டா போச்சு..!" கனகவள்ளியை முந்திக்கொண்டு சொன்னார் பெரியசாமி..
"கண்டிப்பா உன் மவனை கூட்டிட்டு வரணும்.. அப்புறம் அம்மாச்சி எங்க? ஆள காணோம்.." ராசாத்தியின் பார்வை வீடு முழுக்க அந்த வயதான பெண்மணியை தேடி துழாவியது..
"எங்க போய்ட போறாவ.. உனக்கு தெரியாதா..? பேராண்டி எங்க இருக்கானோ அங்கதானே அவுக உசிரும் சுத்தி வரும்..? அதுவும் இல்லனா சண்டை போட பேத்தியை தேடி போயிருப்பாங்க..!" என்றபடி பெருமூச்செறிந்தாள் கனகவல்லி..
"யாரு நம்ம அற்புதாவையா சொல்லுற..! அவ மேல இன்னுமா அம்மாச்சிக்கு கோவம் தீரல.. நீங்க எல்லாரும் அவளை ஏத்துக்கிட்டதாக கேள்விப்பட்டேன்.."
"அட.. நான் அவளை பத்தி பேசல..! நம்ம தேவரா பொண்டாட்டி வஞ்சியை பத்தி சொல்லுறேன்.. செல்ல பேராண்டி அப்பத்தா கிட்ட புலம்பி இருப்பான்.. இவகளும் நியாயம் கேட்கிறேன்னு அந்த புள்ள வீடு வரைக்கும் வீரநடை போட்டு போயிருப்பாக.. அடிக்கடி நடக்கற விசயந்தான.." சலிப்பாக தலையை உலுகினாள் கனகவல்லி..
மூன்று பெண்களும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்..
"என்ன பண்றது வள்ளி.. பேரனோட வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சேன்னு அம்மாச்சிக்கு கவலை..! ஏதோ தன்னால முடிஞ்சதை செஞ்சு சின்னஞ்சிறுசுகள சேர்த்து வைக்க முடியுமான்னு பாக்கறாக.. பிரச்சனை தீர்ந்து இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டா பழனி முருகனுக்கு உன் புள்ளைய காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்க..! உன் மனசு போல எல்லாம் நல்லதாவே நடக்கும்.. சரி நான் வந்து நேரமாச்சே..! இந்தா இதை எடுத்துக்க.." மேஜை மீது வைத்திருந்த தட்டை எடுத்து கனகவல்லியிடம் தந்தாள் ராசாத்தி..
"கண்டிப்பா வந்துடனும்.. நான் எதிர்பார்ப்பேன்.." என்று விட்டு மூன்று பெண்களும் அங்கிருந்து விடைபெற்று கொண்டு செல்ல.. போன நிமிடம் வரை அவள் இதழில் உறைந்திருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது..
மஞ்சளும் ரோஸ் நிறமுமாய் சதுரமாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை மெல்ல வருடி பார்த்துக் கொண்டிருந்தாள் கனகவல்லி..
"என்ன வள்ளி ஏன் ஒரு மாதிரியா ஆகிட்ட..?" மனைவியின் முகத்தை சரியாக படித்து விட்டார் பெரியசாமி..
நீண்ட பெருமூச்சுடன்.. "என்னத்த சொல்ல..? எல்லாம் சரியா நடந்திருந்தா நம்ம பேரப் பிள்ளைக்கும் இந்நேரம் ஒன்னரை வயசாகி இருக்கும்.. நாமளும் இந்த மாதிரி பத்திரிகை அடிச்சு ஊரே வாய பொளக்கற அளவுக்கு.. விசேஷமா காது குத்து விழா நடத்தி இருப்போம்.. எல்லாம் மண்ணா போச்சே..!" வேதனையோடு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்..
"என்ன செய்ய வள்ளி.. எல்லாம் விதி.. இப்படித்தான் நடக்கணும்னு இருக்கு.. உன் மகனோட அவசர பத்தி.. முரட்டு சுபாவம்.. அவன் தலையில அவனே மண்ணள்ளி போட்டுக்கிட்டான்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருந்தா உண்மை என்னன்னு விளங்கி இருக்கும்.." அவருக்கும் வருத்தத்தில் குரல் இறங்கியது..
"பாவம் என் புள்ள.. ராவெல்லாம் தூக்கம் இல்லாம நிம்மதி கெட்டுப்போய் தவிக்கிறானே..! நான் கும்பிடற சாமி மனசிறங்கி அவன் வாழ்க்கைக்கு ஒரு வழியை காட்டக் கூடாதா..!"
"உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்.. தப்பு அவனோடது.. அவன் பிரச்சினைக்கு அவன் தான் தீர்வு காணனும்.." என்றவரை கலக்கத்தோடு பார்த்தாள் கனகவல்லி..
"வஞ்சி இறங்கி வர்ற மாதிரி தெரியலங்களே..! கோவம் தணியாம புடிச்ச புடியில பிடிவாதமா நிக்கறாளே.." மீண்டும் கண்ணீர் ஊற்றெக்க
"அதெல்லாம் உன் புள்ள பக்குவமா பேசி நம்ம மருமக மனச மாத்திடுவான்.. நம்பிக்கையை விட்டுடாதே.. முதல்ல கண்ண தொடை..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.." பெரியசாமியின் ஆறுதலான வார்த்தைகளை சற்று ஆசுவாசமானாள் கனகவல்லி..
"சரி.. எங்கம்மா எங்க போச்சு..! காலையிலிருந்து ஆள காணோமே.."
"எனக்கும் தெரியலங்க..! நான் தான் சொன்னேனே.. உங்க புள்ள எங்க இருக்கானோ அங்கனதானே அவகளும் இருப்பாக..! ரெண்டு பேரும் சேர்ந்து அப்படி என்னதான் பேசிக்குவாகளோ தெரியல.. எப்பவும் வம்புதான் வந்து சேருது..!"
"ஏண்டி தப்பு செஞ்சதெல்லாம் உன் புள்ள.. என் அம்மாவ குறை சொல்லலைன்னா உனக்கு தூக்கம் வராதே..?" பெற்ற தாய்க்காக அவர் குரல் உயர.. வெண்மையாய் நீண்டிருந்த மீசையும் சேர்ந்து துடித்தது..
"ஆமா ஏதோ ஒருமுறை அவசரப்பட்டு தப்பு செஞ்சிட்டான்.. சும்மா அதையே சொல்லிக் காட்டாதீங்க.. பெரியவங்களா லட்சணமா அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்தணும்.. அத விட்டுட்டு என் பேராண்டி செய்யறதெல்லாம் சரின்னு ஆதரவா போர் கொடி தூக்கிட்டு நின்னா அவன் எப்படி திருந்துவான்.. புருஷன் பொண்டாட்டியை சேர்த்து வைக்கிறேன்னு உங்க அம்மா அடிக்கிற லூட்டி தாங்கல.." உதட்டை சுழித்துக்கொண்டாள் வள்ளி..
வழக்கமான மாமியார் மருமகள் மோதல்தான்.. உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியே சாதாரண உரையாடல்களில் கூட இருவரது வாயும் சும்மா இருப்பதில்லை..
"சும்மா எங்க அம்மாவ பத்தி ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்காத.. எங்க இருக்காங்கன்னு போன் போட்டு கேட்கறேன்.." என்று தன் அலைபேசியை எடுத்து அன்னைக்கு அழைத்தார் பெரியசாமி..
இரண்டே ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டது..
"அலோ.. அழகி.. ஸ்பூக்கிங்.."
"எழவெடுத்த இங்கிலீஷ் ஒன்னு தான் குறைச்சல்.. யம்மா.. எங்கம்மா இருக்க..?"
"உன் அருமை புள்ள யாரையோ தூக்கி போட்டு மிதிக்கிறானாம்.. அதை லவ்வா பாக்க வேகமா ஓடிக்கிட்டு இருக்கேன்.."
"லவ்வா பார்க்க போறியா..! லைவ்வா.. ?"
"என்ன கருமமோ.. நேரடியா பார்த்து படம் பிடிக்க போறேன்..! போன வெச்சு தொலடா.. பேசிக்கிட்டே ஓட முடியல மூச்சு வாங்குது.."
"எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம்.. உன்னை தூக்கி போட்டு மிதிச்சா எல்லாம் சரியா வரும்..!"
"மிதிப்ப மிதிப்ப.. என் புருஷன் ஆவுடையப்பன் நீ தூக்கிப்போட்டு மிதிக்கத்தான் என்ன உன்கிட்ட விட்டுட்டு போனாரு பாரு..!"
"ஏம்மா.. இப்ப எதுக்கு தேவையில்லாம இந்த அடிதடி.. அடிவாங்கறவன் எந்த பைய.. செத்து கித்து போயிடப் போறான்.. முதல்ல தேவரா எங்க இருக்கான்னு சொல்லு நான் உடனே வரேன்.. இவன் முன்கோபத்தால வந்த பிரச்சனையெல்லாம் போதாதா.. புதுசு புதுசா வம்ப விலை கொடுத்து வாங்குறானா உன் பேரன்.." போனை காதில் வைத்துக் கொண்டே எழுந்து வேட்டியை மடித்து கட்டினார்..
"என் பேராண்டி ஒன்னும் காரண காரியமில்லாம யாரையும் தூக்கி போட்டு மிதிக்கல.. இந்த கோட்டிக்கார பைய கதிரு.. கூட நாலு உதவாக்கர பயலுங்கள சேத்துக்கிட்டு உட்டுட்டு போன அவன் பொண்டாட்டிய பத்தி தப்பு தப்பா நாக்கு மேல பல்லை போட்டு பேசி இருக்கான் தூத்தெறி.. நம்ம தேவராவுக்கு கோபம் வந்துருச்சு.. கிழிச்சு நாறுநாறா தொங்க வுட்டுட்டு இருக்கானாம்..! நான் போய் நேரடியா போன்ல படம் புடிச்சு உனக்கு ரோசாப்பூல அனுப்பி வைக்கிறேன்.."
"வாட்சாப்பு.."
"அதான்.. அந்த பூ தான்.. நீ ஃபோன வை எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.." அழைப்பை துண்டித்த அடுத்த கணாம் அப்பத்தாவின் காலில் வந்து விழுந்தான் ஒருவன்..
நெற்றி மூக்கு வாய் என பாரபட்சமில்லாமல் ரத்தம் வடிந்து கொண்டிருக்க.. "ஐயோ அப்பத்தா காப்பாத்து.. உன் பேரன் என்ன கொல்ல வரான்..!" என்று அப்பத்தாவின் கால்களை பிடித்துக் கொண்டு கதறினான்..
கொத்தியெடுத்து விதைகளை உள்வாங்கிக் கொள்ள தயாராகியிருந்த விசாலமான வரி வரியான கரிசல் மண் நிலத்தில் அப்பத்தாவின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் ஒருவன்.. நகல் எடுத்தது போல் அதே மாதிரியான காயங்களோடு அப்பத்தாவை கடந்து அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தனர் மற்ற நால்வரும்..
அப்பத்தாவின் காலில் விழுந்து கிடந்தவனை காலரை பிடித்து தூக்கினான் ஒருவன்.. கிராமத்து கட்டிளங் காளையாக.. வேஷ்டி சட்டையை அடையாளமாக கொள்ளாமல்.. பட்டணத்தான் போல் நேர்த்தியாக பேண்ட் சட்டை அணிந்திருந்தான்..
கிருஷ்ண தேவராயன்..
படித்த இளைஞன்..
முதுகலை பொறியியல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறான்..
கிருஷ்ணா ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற டொமேடோ கெட்சப் கம்பெனியை நடத்தி வரும் வெற்றிகரமான தொழிலதிபன்..
தேவையான மூலப்பொருள் தக்காளியை தன் ஊரிலேயே விளைவித்து உற்பத்தி செய்து விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்து கொள்கிறான்..
படித்த பெண்களுக்கும் சொந்த காலில் நிற்க விரும்பும் குடும்ப பெண்மணிகளுக்கும் தன் ஃபேக்டரிலேயே வேலை போட்டு தந்திருக்கிறான்..
தேவராயனால் விவசாயமும் வாழ்கிறது.. ஊரும் வளர்கிறது..
கண்ணபிரானுக்கு சமமான அந்தஸ்துள்ள ஒரே குடும்பம் இவனுடையது..
ராஜ்கிரனுக்கும் ராமராஜனுக்கும் பேன்ட் சட்டை போட்டாலும் கோட் சூட் போட்டாலும்.. கிராமத்து நாயகர்கள் என்பதை முகம் காட்டி கொடுத்து விடுவதைப் போல..
இவன் முரட்டு தோற்றமும் இறுகிய உடலும்.. கிருஷ்ணதேவராயன் ஒரு கிராமத்து இளைஞன் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி விடும்..
அளவான அடர்ந்த கத்தரித்த மீசை.. குறுகுறுவென குத்தும் தாடி.. கூர்மையும் சீற்றமும் வாய்ந்த இதே கண்களில்தான் சில நேரங்களில் குறும்பும் கொப்பளிக்கும்.. அழகாக சிரிப்பான். அதே நேரத்தில் அடங்காத கோபம் கொண்டவன்.. இந்த முன்கோபமும் அவசர புத்தியும் தான் இவன் சத்ரு..
சற்று அதிகப்படியாகவே வளர்ந்திருந்தான். அப்பத்தா அவன் இடுப்புக்கு தான் இருந்தது..
அந்த நெடியவனிடம் சிக்கிக் கொண்டிருந்தவனோ கழுத்து வரை இருந்தான்..
"ஏன்டா இவன் உடம்ப பாத்துமா வம்படியா வந்து வாய கொடுத்த.. உங்க ஆத்தா போட்ட கறி சோறு எல்லாம் இப்படி ரத்தமா வடியுதேடா.." அப்பத்தா போலியாக இரக்கப் பட்டார்..
"ஏதோ தெரியாம பேசிட்டேன் அப்பத்தா மன்னிச்சு விட்டுட சொல்லு.."
"எடுபட்ட பயலே.. இதையெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்..! உன்ன பாத்து இனி எவனும் என் பேரனை நாக்கு மேல பல்ல போட்டு பேசிட கூடாதுல்ல.. தேவையில்லாம பேசினா இப்படித்தான் அனுபவிக்கணும்..
பீஸ்.. தீஸ்.. கஸ்கஸ்.."
"என்னது..!" அடிவாங்கியவன் கேட்க..
"ஃபேஸ் த கான்சிகுவென்ஸஸ்.." கம்பீரமாக கரகரத்த குரலில் ஆங்கிலத்தில் சொல்லியபடி
பக்கென்று மூக்கில் ஒரு குத்து விட்டான் அப்பத்தாவின் பேரன்..
வயிற்றில் ஒரு குத்து.. கன்னத்தில் பளாரென்று ஒரு அடி..
"டேய் போதும்டா விட்டுடு.. செத்து தொலைய போறான்.." அப்பத்தாவுக்கு பயம் வந்துவிட்டது..
தேவரா அவனை விடுவதாய் இல்லை..
"அது எப்படி டா.. என் அம்முவ பத்தி அப்படி ஒரு வார்த்தை சொல்லுவ நீ.. விட்டுட்டு போய்ட்டா உறவில்லைன்னு ஆகிப்போயிடுமா.. சாகற வரைக்கும் அவ என் பொண்டாட்டி தான்டா..!" மீண்டும் ஒரு குத்து..
"அடேய் விட்டு தொலைடா..!"
"அது எப்படி அப்பத்தா.. இந்த நாய் அப்படி சொல்லலாம்..!"
"தெரியாம சொல்லிட்டான் போய் தொலையட்டும் விடுடா..!"
"முடியாது.. என் பொண்டாட்டிய பத்தி தப்பா சொன்ன இந்த வாயில ஒரு பல்லு கூட இருக்க கூடாது.." முஷ்டியை மடக்கி கையை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஓங்கிக் கொண்டு வர..
"தேவரா உன் பொண்டாட்டி நைட்டு சிவன் கோவிலுக்கு வர்றாளாம்.." அவசரமாக அப்பத்தா உதிர்ந்த வார்த்தைகள் பலனை தந்தது..
ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி இருந்தவன் பார்வையை அப்பத்தாவின் பக்கம் திருப்பினான்..
"என்ன அழகி சொல்லுற..!"
"இன்னைக்கு சிவராத்திரி.. கோவில்ல பூஜை இருக்குது.. உன் பொண்டாட்டி பூஜைக்கு வருவா இத தான் சொல்ல வந்தேன்.."
தேவராவின் பிடி இறுகியது.. முகம் மாறியது.. கண்கள் மின்னியது..
"என்னலே இன்னும் இங்கனவே நிக்கற..ஓடி தொல.." அழகி திரு திருவென என விழித்துக் கொண்டிருந்தவன் காதில் கிசுகிசுக்க.. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி இருந்தான் கதிர்..
"ஏய் கிழவி நீ ஒன்னும் பொய் சொல்லலையே.. நெசமாத்தான் அம்மு கோவிலுக்கு வர்றாளா..!"
"ஏன் உனக்கு தெரியாதா.. போன வருஷந்தான் ரெண்டு பேருமா சேர்ந்து ஜோடியாக கோவிலுக்கு போனீகளே..!"
"என்ன செய்ய.. இந்த வருஷம் அந்த பாக்கியம் இல்லாம போயிட்டதே.." அவன் முகத்தில் உண்மையான வருத்தம்..
"சரி கவலைப்படாதே.. இன்னைக்கு ராவு கோவிலுக்கு போற.. பொண்ண தூக்கற"
"ரைட்டு.." கிருஷ்ணதேவராயன் கண்சிமிட்டு சிரித்தான்..
"ஆத்தி.. ஏன் அழகு பேராண்டி உன்ன போய் விட்டுட்டு போய்ட்டாளே.. ரசனை கெட்ட சிறுக்கி.." பேரனுக்கு திருஷ்டி எடுத்தபடி அங்கலாய்த்தாள் அழகி..
"ஆமா இல்ல..?" கொஞ்சமாக வளர்ந்த தாடியை நீவியவனின் கண்களோடு சேர்ந்து இதழ்களும் சிரித்துக்கொண்டன.. அழகியின் தோளில் கை போட்டுக் கொள்ள இருவருமாக கரிசல் மண்ணில் நடந்தார்கள்..
"ஏன் அப்பத்தா?"
"சொல்லுடா பேராண்டி.."
"இன்னும் ரெண்டு மணி நேரத்துல இராவு வந்திடுமுல.."
"12 மணி வெயிலு பல்ல காட்டுதுடா.. உன் அக்கப்போருக்கு ஒரு அளவில்லையா..?"
"நாம ஏன் சூரியனுக்கு லீவு தரக்கூடாது.."
"பேசாம நடடா..! எங்கடா உன் ஜீப்பு..?"
"அந்தா மரத்தின் நிழல்ல நிக்குதே கண்ணு தெரியலையா உனக்கு..!"
"விஷயத்தைச் சொல்ல ஓடி வந்ததுல காலெல்லாம் ஒரே வலி.. மருவாதயா ஜீப் வரைக்கும் என்னை தூக்கிட்டு நட..!"
"முடியாதுன்னு சொன்னா..!"
"இராத்திரி சோத்துல தூக்க மாத்திரை கலந்து வச்சிருவேன்.. அப்புறம் குப்புற படுத்து குறட்டை விட வேண்டியதுதான்.."
"நீ செஞ்சாலும் செய்வ கிழவி.." என்று அப்பத்தாவை தூக்கி கொண்டான் தேவரா..
"அழகிய தூக்க வேண்டிய கையில கிழவிய தூக்க வேண்டியதா போச்சு.." சலிப்பாக உச் கொட்டினான் தேவரா..
"என் பேரும் அழகி தான்டா.. சலம்பாம நட..!"
"சிவராத்திரி.." பேரன் பாட
"தூக்கமேது.." அப்பத்தா பாட..
"ஹோய்ய்ய்.."
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து கோரசாக பாடினார்கள்..
தொடரும்..
இந்த வஞ்சிக்கோட்டை ஒவ்வொரு செங்கலையும் தரமாக தேர்ந்தெடுத்து அவளுக்காக பார்த்து பார்த்து கட்டப்பட்ட காதல் கோட்டை.. பிறந்த வீட்டில் வசதியாக வாழ்ந்தவள் புகுந்த வீட்டிலும்.. வசதிக்கு குறைவில்லாமல் சந்தோஷமாக தன்னோடு குடித்தனம் நடத்த வேண்டும் என்பதற்காக.. தன்னவளுக்கென தேவராயன் காதலோடு அமைத்த குட்டி தாஜ்மஹால்..
இப்போது கோட்டை மட்டும் தான் நிமிர்ந்து நிற்கிறது.. கவர்னர் மாளிகை மான் குட்டியாக.. வீட்டுக்குள் சந்தோஷமாக துள்ளி திரிந்து இன்ப ராகம் இசைக்க வேண்டிய வஞ்சிக்கொடி தலைவனை வஞ்சித்து விட்டு விலகி சென்று விட்டாளே..!
"கனகவல்லி.. ஏ புள்ள கனகவல்லி..!" அழைத்துக் கொண்டே.. பூ.. பழம் ஒரு ரவிக்கை பிட்டு.. குங்குமச்சிமிழ் அத்தோடு சேர்த்து ஒரு பத்திரிக்கையும் சேர்ந்த சீர்வரிசை தட்டை கையில் ஏந்தியபடி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயது பெண்.. அவளோடு இரண்டு வயதான சுமங்கலி பெண்களும் துணையாக வந்திருந்தனர்..
மிக விசாலமான அந்த கூடத்தில் மர நாற்காலியில் அமர்ந்து வெற்றிலையை வாயில் குதப்பி கொண்டிருந்தார் பெரியசாமி..!
"வா ராசாத்தி.. வாங்கம்மா.. எப்படி இருக்கவே.. ஏ புள்ள செல்வி.. அந்த பாய் எடுத்து போடு.. உட்காருமா ராசாத்தி..! கனகவல்லி..! இந்த ராசாத்தி வந்துருக்குது பாரு.. கூடவே பட்டமாவும் மீனாட்சியும் வந்திருக்காங்க.. மூணு பேருக்கு குடிக்க காபித் தண்ணி இல்ல நீர் மோரு ஏதாச்சு கொண்டா.." என்று சமையலறை நோக்கி சத்தம் போட..
"இருக்கட்டுண்ண.. நிறைய ஜோலி
கிடக்குது.. இன்னும் பத்து வீட்டுக்கு போய் பத்திரிகை குடுக்கணும்.. கனகவள்ளிய வர சொன்னிங்கனா பத்திரிக்கையை கொடுத்துப்புட்டு.. கிளம்பிருவேன்.." புன்னகைத்தபடி கொண்டு வந்திருந்த தட்டை மேஜையின் மீது வைத்தாள் ராசாத்தி..
"வா.. ராசாத்தி.. ஒரு வழியா உன் பேத்திக்கு மொட்டை அடிச்சு காது குத்த நாள் குறிச்சாச்சு போல..!" புன்னகையோடு அங்கே வந்து நின்றாள் கனகவல்லி..
"அட ஆமா வள்ளி.. பொண்ணுக்கு உடம்பு முடியல.. மருமகனுக்கு ஆக்சிடென்ட்டு.. பாப்பாவுக்கு வேற அம்மை போட்டு.. குறிச்ச தேதியில காதுகுத்து விழா நடக்காம தள்ளிப்போனதுல எல்லாரும் ஏகத்துக்கும் நொந்து போயிட்டோம்.. நல்ல வேலை இப்பதான் கஷ்டம் தீர்ந்து அந்த சாமி ஒரு வழியா கண்ண தொறந்திருக்கு.. 16ஆம் தேதி முனீஸ்வரன் கோவில்ல மொட்டை அடிச்சு காது குத்தறோம்.. பக்கத்து மண்டபத்தில் விழாவும் விருந்தும்.. கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும்..!"
"அதுக்கென்ன.. எல்லாரும் வந்துட்டா போச்சு..!" கனகவள்ளியை முந்திக்கொண்டு சொன்னார் பெரியசாமி..
"கண்டிப்பா உன் மவனை கூட்டிட்டு வரணும்.. அப்புறம் அம்மாச்சி எங்க? ஆள காணோம்.." ராசாத்தியின் பார்வை வீடு முழுக்க அந்த வயதான பெண்மணியை தேடி துழாவியது..
"எங்க போய்ட போறாவ.. உனக்கு தெரியாதா..? பேராண்டி எங்க இருக்கானோ அங்கதானே அவுக உசிரும் சுத்தி வரும்..? அதுவும் இல்லனா சண்டை போட பேத்தியை தேடி போயிருப்பாங்க..!" என்றபடி பெருமூச்செறிந்தாள் கனகவல்லி..
"யாரு நம்ம அற்புதாவையா சொல்லுற..! அவ மேல இன்னுமா அம்மாச்சிக்கு கோவம் தீரல.. நீங்க எல்லாரும் அவளை ஏத்துக்கிட்டதாக கேள்விப்பட்டேன்.."
"அட.. நான் அவளை பத்தி பேசல..! நம்ம தேவரா பொண்டாட்டி வஞ்சியை பத்தி சொல்லுறேன்.. செல்ல பேராண்டி அப்பத்தா கிட்ட புலம்பி இருப்பான்.. இவகளும் நியாயம் கேட்கிறேன்னு அந்த புள்ள வீடு வரைக்கும் வீரநடை போட்டு போயிருப்பாக.. அடிக்கடி நடக்கற விசயந்தான.." சலிப்பாக தலையை உலுகினாள் கனகவல்லி..
மூன்று பெண்களும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்..
"என்ன பண்றது வள்ளி.. பேரனோட வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சேன்னு அம்மாச்சிக்கு கவலை..! ஏதோ தன்னால முடிஞ்சதை செஞ்சு சின்னஞ்சிறுசுகள சேர்த்து வைக்க முடியுமான்னு பாக்கறாக.. பிரச்சனை தீர்ந்து இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டா பழனி முருகனுக்கு உன் புள்ளைய காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்க..! உன் மனசு போல எல்லாம் நல்லதாவே நடக்கும்.. சரி நான் வந்து நேரமாச்சே..! இந்தா இதை எடுத்துக்க.." மேஜை மீது வைத்திருந்த தட்டை எடுத்து கனகவல்லியிடம் தந்தாள் ராசாத்தி..
"கண்டிப்பா வந்துடனும்.. நான் எதிர்பார்ப்பேன்.." என்று விட்டு மூன்று பெண்களும் அங்கிருந்து விடைபெற்று கொண்டு செல்ல.. போன நிமிடம் வரை அவள் இதழில் உறைந்திருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது..
மஞ்சளும் ரோஸ் நிறமுமாய் சதுரமாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை மெல்ல வருடி பார்த்துக் கொண்டிருந்தாள் கனகவல்லி..
"என்ன வள்ளி ஏன் ஒரு மாதிரியா ஆகிட்ட..?" மனைவியின் முகத்தை சரியாக படித்து விட்டார் பெரியசாமி..
நீண்ட பெருமூச்சுடன்.. "என்னத்த சொல்ல..? எல்லாம் சரியா நடந்திருந்தா நம்ம பேரப் பிள்ளைக்கும் இந்நேரம் ஒன்னரை வயசாகி இருக்கும்.. நாமளும் இந்த மாதிரி பத்திரிகை அடிச்சு ஊரே வாய பொளக்கற அளவுக்கு.. விசேஷமா காது குத்து விழா நடத்தி இருப்போம்.. எல்லாம் மண்ணா போச்சே..!" வேதனையோடு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்..
"என்ன செய்ய வள்ளி.. எல்லாம் விதி.. இப்படித்தான் நடக்கணும்னு இருக்கு.. உன் மகனோட அவசர பத்தி.. முரட்டு சுபாவம்.. அவன் தலையில அவனே மண்ணள்ளி போட்டுக்கிட்டான்.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருந்தா உண்மை என்னன்னு விளங்கி இருக்கும்.." அவருக்கும் வருத்தத்தில் குரல் இறங்கியது..
"பாவம் என் புள்ள.. ராவெல்லாம் தூக்கம் இல்லாம நிம்மதி கெட்டுப்போய் தவிக்கிறானே..! நான் கும்பிடற சாமி மனசிறங்கி அவன் வாழ்க்கைக்கு ஒரு வழியை காட்டக் கூடாதா..!"
"உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்.. தப்பு அவனோடது.. அவன் பிரச்சினைக்கு அவன் தான் தீர்வு காணனும்.." என்றவரை கலக்கத்தோடு பார்த்தாள் கனகவல்லி..
"வஞ்சி இறங்கி வர்ற மாதிரி தெரியலங்களே..! கோவம் தணியாம புடிச்ச புடியில பிடிவாதமா நிக்கறாளே.." மீண்டும் கண்ணீர் ஊற்றெக்க
"அதெல்லாம் உன் புள்ள பக்குவமா பேசி நம்ம மருமக மனச மாத்திடுவான்.. நம்பிக்கையை விட்டுடாதே.. முதல்ல கண்ண தொடை..! எல்லாம் நல்லபடியா நடக்கும்.." பெரியசாமியின் ஆறுதலான வார்த்தைகளை சற்று ஆசுவாசமானாள் கனகவல்லி..
"சரி.. எங்கம்மா எங்க போச்சு..! காலையிலிருந்து ஆள காணோமே.."
"எனக்கும் தெரியலங்க..! நான் தான் சொன்னேனே.. உங்க புள்ள எங்க இருக்கானோ அங்கனதானே அவகளும் இருப்பாக..! ரெண்டு பேரும் சேர்ந்து அப்படி என்னதான் பேசிக்குவாகளோ தெரியல.. எப்பவும் வம்புதான் வந்து சேருது..!"
"ஏண்டி தப்பு செஞ்சதெல்லாம் உன் புள்ள.. என் அம்மாவ குறை சொல்லலைன்னா உனக்கு தூக்கம் வராதே..?" பெற்ற தாய்க்காக அவர் குரல் உயர.. வெண்மையாய் நீண்டிருந்த மீசையும் சேர்ந்து துடித்தது..
"ஆமா ஏதோ ஒருமுறை அவசரப்பட்டு தப்பு செஞ்சிட்டான்.. சும்மா அதையே சொல்லிக் காட்டாதீங்க.. பெரியவங்களா லட்சணமா அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்தணும்.. அத விட்டுட்டு என் பேராண்டி செய்யறதெல்லாம் சரின்னு ஆதரவா போர் கொடி தூக்கிட்டு நின்னா அவன் எப்படி திருந்துவான்.. புருஷன் பொண்டாட்டியை சேர்த்து வைக்கிறேன்னு உங்க அம்மா அடிக்கிற லூட்டி தாங்கல.." உதட்டை சுழித்துக்கொண்டாள் வள்ளி..
வழக்கமான மாமியார் மருமகள் மோதல்தான்.. உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியே சாதாரண உரையாடல்களில் கூட இருவரது வாயும் சும்மா இருப்பதில்லை..
"சும்மா எங்க அம்மாவ பத்தி ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்காத.. எங்க இருக்காங்கன்னு போன் போட்டு கேட்கறேன்.." என்று தன் அலைபேசியை எடுத்து அன்னைக்கு அழைத்தார் பெரியசாமி..
இரண்டே ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டது..
"அலோ.. அழகி.. ஸ்பூக்கிங்.."
"எழவெடுத்த இங்கிலீஷ் ஒன்னு தான் குறைச்சல்.. யம்மா.. எங்கம்மா இருக்க..?"
"உன் அருமை புள்ள யாரையோ தூக்கி போட்டு மிதிக்கிறானாம்.. அதை லவ்வா பாக்க வேகமா ஓடிக்கிட்டு இருக்கேன்.."
"லவ்வா பார்க்க போறியா..! லைவ்வா.. ?"
"என்ன கருமமோ.. நேரடியா பார்த்து படம் பிடிக்க போறேன்..! போன வெச்சு தொலடா.. பேசிக்கிட்டே ஓட முடியல மூச்சு வாங்குது.."
"எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம்.. உன்னை தூக்கி போட்டு மிதிச்சா எல்லாம் சரியா வரும்..!"
"மிதிப்ப மிதிப்ப.. என் புருஷன் ஆவுடையப்பன் நீ தூக்கிப்போட்டு மிதிக்கத்தான் என்ன உன்கிட்ட விட்டுட்டு போனாரு பாரு..!"
"ஏம்மா.. இப்ப எதுக்கு தேவையில்லாம இந்த அடிதடி.. அடிவாங்கறவன் எந்த பைய.. செத்து கித்து போயிடப் போறான்.. முதல்ல தேவரா எங்க இருக்கான்னு சொல்லு நான் உடனே வரேன்.. இவன் முன்கோபத்தால வந்த பிரச்சனையெல்லாம் போதாதா.. புதுசு புதுசா வம்ப விலை கொடுத்து வாங்குறானா உன் பேரன்.." போனை காதில் வைத்துக் கொண்டே எழுந்து வேட்டியை மடித்து கட்டினார்..
"என் பேராண்டி ஒன்னும் காரண காரியமில்லாம யாரையும் தூக்கி போட்டு மிதிக்கல.. இந்த கோட்டிக்கார பைய கதிரு.. கூட நாலு உதவாக்கர பயலுங்கள சேத்துக்கிட்டு உட்டுட்டு போன அவன் பொண்டாட்டிய பத்தி தப்பு தப்பா நாக்கு மேல பல்லை போட்டு பேசி இருக்கான் தூத்தெறி.. நம்ம தேவராவுக்கு கோபம் வந்துருச்சு.. கிழிச்சு நாறுநாறா தொங்க வுட்டுட்டு இருக்கானாம்..! நான் போய் நேரடியா போன்ல படம் புடிச்சு உனக்கு ரோசாப்பூல அனுப்பி வைக்கிறேன்.."
"வாட்சாப்பு.."
"அதான்.. அந்த பூ தான்.. நீ ஃபோன வை எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.." அழைப்பை துண்டித்த அடுத்த கணாம் அப்பத்தாவின் காலில் வந்து விழுந்தான் ஒருவன்..
நெற்றி மூக்கு வாய் என பாரபட்சமில்லாமல் ரத்தம் வடிந்து கொண்டிருக்க.. "ஐயோ அப்பத்தா காப்பாத்து.. உன் பேரன் என்ன கொல்ல வரான்..!" என்று அப்பத்தாவின் கால்களை பிடித்துக் கொண்டு கதறினான்..
கொத்தியெடுத்து விதைகளை உள்வாங்கிக் கொள்ள தயாராகியிருந்த விசாலமான வரி வரியான கரிசல் மண் நிலத்தில் அப்பத்தாவின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் ஒருவன்.. நகல் எடுத்தது போல் அதே மாதிரியான காயங்களோடு அப்பத்தாவை கடந்து அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தனர் மற்ற நால்வரும்..
அப்பத்தாவின் காலில் விழுந்து கிடந்தவனை காலரை பிடித்து தூக்கினான் ஒருவன்.. கிராமத்து கட்டிளங் காளையாக.. வேஷ்டி சட்டையை அடையாளமாக கொள்ளாமல்.. பட்டணத்தான் போல் நேர்த்தியாக பேண்ட் சட்டை அணிந்திருந்தான்..
கிருஷ்ண தேவராயன்..
படித்த இளைஞன்..
முதுகலை பொறியியல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறான்..
கிருஷ்ணா ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற டொமேடோ கெட்சப் கம்பெனியை நடத்தி வரும் வெற்றிகரமான தொழிலதிபன்..
தேவையான மூலப்பொருள் தக்காளியை தன் ஊரிலேயே விளைவித்து உற்பத்தி செய்து விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்து கொள்கிறான்..
படித்த பெண்களுக்கும் சொந்த காலில் நிற்க விரும்பும் குடும்ப பெண்மணிகளுக்கும் தன் ஃபேக்டரிலேயே வேலை போட்டு தந்திருக்கிறான்..
தேவராயனால் விவசாயமும் வாழ்கிறது.. ஊரும் வளர்கிறது..
கண்ணபிரானுக்கு சமமான அந்தஸ்துள்ள ஒரே குடும்பம் இவனுடையது..
ராஜ்கிரனுக்கும் ராமராஜனுக்கும் பேன்ட் சட்டை போட்டாலும் கோட் சூட் போட்டாலும்.. கிராமத்து நாயகர்கள் என்பதை முகம் காட்டி கொடுத்து விடுவதைப் போல..
இவன் முரட்டு தோற்றமும் இறுகிய உடலும்.. கிருஷ்ணதேவராயன் ஒரு கிராமத்து இளைஞன் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி விடும்..
அளவான அடர்ந்த கத்தரித்த மீசை.. குறுகுறுவென குத்தும் தாடி.. கூர்மையும் சீற்றமும் வாய்ந்த இதே கண்களில்தான் சில நேரங்களில் குறும்பும் கொப்பளிக்கும்.. அழகாக சிரிப்பான். அதே நேரத்தில் அடங்காத கோபம் கொண்டவன்.. இந்த முன்கோபமும் அவசர புத்தியும் தான் இவன் சத்ரு..
சற்று அதிகப்படியாகவே வளர்ந்திருந்தான். அப்பத்தா அவன் இடுப்புக்கு தான் இருந்தது..
அந்த நெடியவனிடம் சிக்கிக் கொண்டிருந்தவனோ கழுத்து வரை இருந்தான்..
"ஏன்டா இவன் உடம்ப பாத்துமா வம்படியா வந்து வாய கொடுத்த.. உங்க ஆத்தா போட்ட கறி சோறு எல்லாம் இப்படி ரத்தமா வடியுதேடா.." அப்பத்தா போலியாக இரக்கப் பட்டார்..
"ஏதோ தெரியாம பேசிட்டேன் அப்பத்தா மன்னிச்சு விட்டுட சொல்லு.."
"எடுபட்ட பயலே.. இதையெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்..! உன்ன பாத்து இனி எவனும் என் பேரனை நாக்கு மேல பல்ல போட்டு பேசிட கூடாதுல்ல.. தேவையில்லாம பேசினா இப்படித்தான் அனுபவிக்கணும்..
பீஸ்.. தீஸ்.. கஸ்கஸ்.."
"என்னது..!" அடிவாங்கியவன் கேட்க..
"ஃபேஸ் த கான்சிகுவென்ஸஸ்.." கம்பீரமாக கரகரத்த குரலில் ஆங்கிலத்தில் சொல்லியபடி
பக்கென்று மூக்கில் ஒரு குத்து விட்டான் அப்பத்தாவின் பேரன்..
வயிற்றில் ஒரு குத்து.. கன்னத்தில் பளாரென்று ஒரு அடி..
"டேய் போதும்டா விட்டுடு.. செத்து தொலைய போறான்.." அப்பத்தாவுக்கு பயம் வந்துவிட்டது..
தேவரா அவனை விடுவதாய் இல்லை..
"அது எப்படி டா.. என் அம்முவ பத்தி அப்படி ஒரு வார்த்தை சொல்லுவ நீ.. விட்டுட்டு போய்ட்டா உறவில்லைன்னு ஆகிப்போயிடுமா.. சாகற வரைக்கும் அவ என் பொண்டாட்டி தான்டா..!" மீண்டும் ஒரு குத்து..
"அடேய் விட்டு தொலைடா..!"
"அது எப்படி அப்பத்தா.. இந்த நாய் அப்படி சொல்லலாம்..!"
"தெரியாம சொல்லிட்டான் போய் தொலையட்டும் விடுடா..!"
"முடியாது.. என் பொண்டாட்டிய பத்தி தப்பா சொன்ன இந்த வாயில ஒரு பல்லு கூட இருக்க கூடாது.." முஷ்டியை மடக்கி கையை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஓங்கிக் கொண்டு வர..
"தேவரா உன் பொண்டாட்டி நைட்டு சிவன் கோவிலுக்கு வர்றாளாம்.." அவசரமாக அப்பத்தா உதிர்ந்த வார்த்தைகள் பலனை தந்தது..
ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி இருந்தவன் பார்வையை அப்பத்தாவின் பக்கம் திருப்பினான்..
"என்ன அழகி சொல்லுற..!"
"இன்னைக்கு சிவராத்திரி.. கோவில்ல பூஜை இருக்குது.. உன் பொண்டாட்டி பூஜைக்கு வருவா இத தான் சொல்ல வந்தேன்.."
தேவராவின் பிடி இறுகியது.. முகம் மாறியது.. கண்கள் மின்னியது..
"என்னலே இன்னும் இங்கனவே நிக்கற..ஓடி தொல.." அழகி திரு திருவென என விழித்துக் கொண்டிருந்தவன் காதில் கிசுகிசுக்க.. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி இருந்தான் கதிர்..
"ஏய் கிழவி நீ ஒன்னும் பொய் சொல்லலையே.. நெசமாத்தான் அம்மு கோவிலுக்கு வர்றாளா..!"
"ஏன் உனக்கு தெரியாதா.. போன வருஷந்தான் ரெண்டு பேருமா சேர்ந்து ஜோடியாக கோவிலுக்கு போனீகளே..!"
"என்ன செய்ய.. இந்த வருஷம் அந்த பாக்கியம் இல்லாம போயிட்டதே.." அவன் முகத்தில் உண்மையான வருத்தம்..
"சரி கவலைப்படாதே.. இன்னைக்கு ராவு கோவிலுக்கு போற.. பொண்ண தூக்கற"
"ரைட்டு.." கிருஷ்ணதேவராயன் கண்சிமிட்டு சிரித்தான்..
"ஆத்தி.. ஏன் அழகு பேராண்டி உன்ன போய் விட்டுட்டு போய்ட்டாளே.. ரசனை கெட்ட சிறுக்கி.." பேரனுக்கு திருஷ்டி எடுத்தபடி அங்கலாய்த்தாள் அழகி..
"ஆமா இல்ல..?" கொஞ்சமாக வளர்ந்த தாடியை நீவியவனின் கண்களோடு சேர்ந்து இதழ்களும் சிரித்துக்கொண்டன.. அழகியின் தோளில் கை போட்டுக் கொள்ள இருவருமாக கரிசல் மண்ணில் நடந்தார்கள்..
"ஏன் அப்பத்தா?"
"சொல்லுடா பேராண்டி.."
"இன்னும் ரெண்டு மணி நேரத்துல இராவு வந்திடுமுல.."
"12 மணி வெயிலு பல்ல காட்டுதுடா.. உன் அக்கப்போருக்கு ஒரு அளவில்லையா..?"
"நாம ஏன் சூரியனுக்கு லீவு தரக்கூடாது.."
"பேசாம நடடா..! எங்கடா உன் ஜீப்பு..?"
"அந்தா மரத்தின் நிழல்ல நிக்குதே கண்ணு தெரியலையா உனக்கு..!"
"விஷயத்தைச் சொல்ல ஓடி வந்ததுல காலெல்லாம் ஒரே வலி.. மருவாதயா ஜீப் வரைக்கும் என்னை தூக்கிட்டு நட..!"
"முடியாதுன்னு சொன்னா..!"
"இராத்திரி சோத்துல தூக்க மாத்திரை கலந்து வச்சிருவேன்.. அப்புறம் குப்புற படுத்து குறட்டை விட வேண்டியதுதான்.."
"நீ செஞ்சாலும் செய்வ கிழவி.." என்று அப்பத்தாவை தூக்கி கொண்டான் தேவரா..
"அழகிய தூக்க வேண்டிய கையில கிழவிய தூக்க வேண்டியதா போச்சு.." சலிப்பாக உச் கொட்டினான் தேவரா..
"என் பேரும் அழகி தான்டா.. சலம்பாம நட..!"
"சிவராத்திரி.." பேரன் பாட
"தூக்கமேது.." அப்பத்தா பாட..
"ஹோய்ய்ய்.."
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து கோரசாக பாடினார்கள்..
தொடரும்..
Last edited: