• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 21

Active member
Joined
Jul 10, 2024
Messages
45
அருந்ததிக்கு ரிஷி வைத்த பேரு அருமை. அதைவிட அருமை கோங்ரா. அருந்ததி செல்லப்பெயர் வைக்கிற அளவுக்கு ரிஷிகிட்ட நெருங்கியாச்சா. 👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍👍
 
Joined
Mar 14, 2023
Messages
25
மகளைக் கட்டியணைத்து கண்ணீருடன் மகரிஷியை பார்த்தவள் கைகூப்பி தனது நன்றியை கண்ளால் தெரிவிக்க அவன் உள்ளமும் அருந்ததியின் ஆனந்தக் கண்ணீரில் குளிர்ந்து போனது..

அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு மகளின் முகத்தை கையிலேந்தினாள் அருந்ததி..

"ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன் இப்படி உட்காரு.." என்று சந்திரமதியை அந்த திண்ணையில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்றாள்..

மோத்தி வாலாட்டிக்கொண்டே அவள் கால் பக்கத்தில் வந்து நிற்க..

"ஏய்.. மோத்தி..!" என்று சந்தோஷத்துடன் மோத்தியை கையில் அள்ளிக் கொள்ள.. சந்திரமதியை வெகு நாள் கழித்து பார்த்த பரவசத்தில் அவள் கையிலிருந்து துள்ளி வேகமாக வாலை சுழட்டி.. உடலை நெளித்து.. சுற்றி சுற்றி வந்து தனது பாச உணர்வை வெளிப்படுத்தினான் அவன்..

பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

"ஏமி சந்திராம்மா.. நீவு ஹாப்பிகா உன்னாவா..?"

"ம்ம்..?" சந்திரமதி நனைந்த விழிகளோடு நிமிர்ந்தாள்..

"இல்ல அம்மாவை பார்த்தாச்சு இப்ப சந்தோஷம் தானே..?" என்றதும் வார்த்தைகள் வராமல் புன்னகைத்து தன் பதிலை தந்தாள் சந்திரமதி..

உள்ளே எட்டிப் பார்த்தான் மகரிஷி..

"ஜேஜம்மா உள்ள கிச்சன்ல ஏதோ வேலையா இருக்காங்க.. அவங்க வர்றதுக்குள்ள நான் உனக்கு ஒரு சின்ன கதை சொல்லி முடிக்கட்டுமா..?"

சந்திரமதி மவுனப் பார்வையை சம்மதமாக எடுத்துக் கொண்டு அவன் தொடர்ந்தான்..

"இது ஒரு பொண்ணோட கதை. அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.. அவளோட அம்மாவுக்கும் உன்னோட அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்னு நீ சொல்லணும் சரியா..?"

"ம்ம்.." என்ற தலையசைத்தாள் சந்திரமதி..

"உன்ன மாதிரியே ஒரு அழகான பொண்ணு..‌ என்ன அந்த குழந்தை கொஞ்சம் கருப்பா பொறந்துட்டா.. பொம்பள புள்ளையா பொறந்த பாவத்துக்காக அந்த பொண்ணை அவங்க அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை.. அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன்.. ஆம்பள பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளோட அருமையை சொல்லி வளர்க்கணும் அவங்களை பாதுகாக்க சொல்லி தரணும்.. ஆனா இந்த குழந்தையோட அம்மா அவங்க மகன மட்டும் தான் நல்லா பாத்துக்கிட்டாங்க.. தன்னோட பெண் குழந்தையயை ஒரு பொருட்டா மதிக்கவே இல்லை.. யோசிச்சு பாரு.. தன்னோட சொந்த வீட்டிலேயே தன்னோட அம்மாவால ஒதுக்கப்பட்ட அந்த குழந்தையோட மனநிலை என்னவா இருக்கும்.."

ரிஷியின் கேள்வியில் சந்திரமதியின் கருவிழிகள் யோசனையாக சுழன்றன..

"காலப்போக்குல இந்த பெண் குழந்தையும் வளர்ந்து ஆளாகிட்டா.. 16 வயசு குழந்தை.. உன்ன விட ஒரு நாலு வயசு ஜாஸ்தி. அவ்வளவுதான்.. வயசுக்கு மீறுன வளர்ச்சின்னு அந்த சின்ன பொண்ணு ஒரு 33 வயசு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.."

"ஐயோ..!" சந்திரமதி அதிர்ந்தாள்..

"ம்ம்.. எதுவுமே தெரியாத அந்த பருவத்துல அப்புறம் அந்த பொண்ணு அனுபவிச்ச கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.. அழகில்ல..‌ நிறமமில்லன்னு பெத்தவங்க முதக்கொண்டு எல்லாராலயும் கேலி செய்யப்பட்ட அந்த பொண்ண புருஷனும் இதே வார்த்தைகளை சொல்லி தினம் தினம் நோகடிச்சான்.. அடி உதை.. மாமியார் கொடுமை.. மாமனாரோட வக்கிரமான புத்தின்னு அந்தப் பொண்ணு அந்த வீட்டில சந்தோஷமா இல்ல சந்திராம்மா.."

"அவளால பிறந்த வீட்டுக்கு போக முடியல போனாலும் அங்க அவள வச்சு காப்பாத்த அங்க யாருக்கும் மனசில்ல..‌ அந்த பொண்ணோட அண்ணன் ஒரு பொறுப்பில்லாத ராட்சசன்.. அண்ணி ஒரு தாடகை.. அவளோட அம்மாவ பத்தி சொல்லவே வேண்டாம்.. தனக்கு ஒரு பொண்ணு இருக்குதுங்கிறதையே சுத்தமா மறந்துட்டாங்க போலிருக்கு.."

"16 வயசுல கல்யாணம்.. 17 வயசுல குழந்தை.. அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு.. பிறந்தது பெண் குழந்தைன்னு அந்த சின்னஞ்சிறு பிஞ்சு உயிரை கூட அந்த வீட்ல எல்லாரும் வெறுத்தாங்க.. .நாளுக்கு நாள் அந்த வீடு நரகமா மாறிப்போச்சு.."

"அங்க வாழ முடியல.. வேறவழிழில்லாம அவ ஒரு முடிவெடுத்தா..‌ தனக்கு வந்த இந்த நிலைமை தன் குழந்தைக்கு வரக்கூடாது.. ததன்னை போல தன்மகளும் அறியாமையினால் சீரழிஞ்சு போய்ட்ட கூடாது..‌ அவள நல்லா படிக்க வைக்கணும்.. சமுதாயத்தில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகணும்னு வைராக்கியத்தோட அந்த வீட்டை விட்டு வெளியே வந்தா.."

"தனியா ஒரு பொம்பள இந்த சமுதாயத்தில் வாழறது அவ்வளவு ஈஸி இல்ல சந்திராம்மா.."

"தினம் தினம் எதிரிகளை சந்திக்க வேண்டியதாயிருக்கும்.. இந்த எதிரிகள் முன்னாடி நின்னு நேருக்கு நேரா சண்டை போடுறவங்க இல்லை.. முதுகுக்கு பின்னாடி நின்னு கோழைத்தனமா பேசுறவங்க.. தனியா நிக்கிற பொண்ணு எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டான்னு தப்பா நினைச்சு அவ கிட்ட வக்கிரமா நடந்துக்க முயற்சி செய்யறவங்க.. இவங்க எல்லாரையும் அலட்சியமா கடந்து போய் கடினமா உழைச்சு தன்னோட பொண்ண வளர்த்து ஆளாக்கினா அவ..!"

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமான்னு தெரியல ஆனா சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்.. 19 வயசுல வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு பொண்ணுக்கு எவ்வளவு தொல்லைகள் இருக்கும் தெரியுமா..?"

"20 வயசு படிக்கிற வயசு.. பட்டாம்பூச்சியா தெரிகிற வயசு.. பாக்கற அழகைல்லாம் காதலிக்கிற வயசு.. அந்த வயசுல அவ தன்னோட மகளுக்காக வேலைக்கு போய் கடினமா உழைச்சா.. தனக்குன்னு எந்த சந்தோஷமும் இல்லாம குழந்தைக்காகவே வாழ ஆரம்பிச்சா.. தன்னோட கஷ்டம் எதுவும் தன்னோட குழந்தைக்கு தெரிய கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு சந்தோஷத்தை மட்டுமே குழந்தைக்கு கொடுத்துட்டு வலிகளையும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அவ அனுபவிச்சா.."

"ஆனா ஒரு விஷயம் தெரியுமா சந்திரமா.. அவ பெத்த மக அந்த இரும்பு மனுசய புரிஞ்சுக்கவே இல்ல.. ஏன் தெரியுமா..?"

"ஏ.. ஏன்..?" சந்திராவின் குரல் நடுங்கியது.. விழிகள் ரிஷியின் முகத்தில் நிலை குத்தி நின்றன.. சந்திரமதி எதையோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்..

"அம்மா பார்க்க அழகா இல்லையாம்.. ஒரு இட்லி விக்கிற ஆயாம்மாவை அம்மான்னு சொல்லவே அவமானமா இருந்துச்சாம்..! அந்த குட்டி பொண்ணுக்கு அம்மா வேண்டாமா அப்பா தான் வேணுமாம்..!"

"தினம் குடிச்சு குடிச்சு பொண்டாட்டிய கொடுமை படுத்தின ஒரு இரக்கமே இல்லாத மிருகம் தன்னோட மகளை மட்டும் நல்லபடியா வச்சுக்க போறானா என்ன..! இந்த உண்மை தாய்க்கு தெரிஞ்சிருந்தது.. ஆனால் மகளுக்கு புரியல.. என்ன பண்றது..? சில பேருக்கு அனுபவப்பட்டாதான் புத்தி வருது.."

சந்திரமதி மீண்டும் அழ ஆரம்பித்தாள்..

"நான் யாரை பத்தி பேசுறேன்னு உனக்கு புரிஞ்சிருச்சா..?"

முகத்தை மூடிக்கொண்டு இன்னும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சந்திரா..

சில கணங்கள் மதியை அழவிட்டு அமைதி காத்தவன் மீண்டும் தொடர்ந்தான்..

"உன்னை அழ வைக்கணும்னு இத சொல்லல சந்திரா மா.. உன் அம்மாவோட கஷ்டத்தை நீ புரிஞ்சுக்கணும்.. உன்னோட அம்மா எது செஞ்சாலும் அது உனக்காக மட்டும் தான்..! நீ உன் அம்மாவ எவ்வளவு கேவலமா பேசி இருப்ப.. இப்ப சொல்லு அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அவங்க தகுதியானவங்களா..?"

அழுது கொண்டே இல்லை என்பதாய் தலையசைத்தாள் சந்திரா..

"இதை நான் முன்னாடியே சொல்லி இருந்தா உன் புத்தியில ஏறி இருக்காது.. ஏன்னா நீ குழந்தை.. அனுபவத்தை விட ஒரு சிறந்த ஆசான் இந்த உலகத்தில் கிடையாது.. உன் அப்பாவோட குணத்தை புரிஞ்சுக்க இது உனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு.. இனியாவது உன் அம்மாவை காயப்படுத்தாம இரு.." என்று சொல்லி முடிக்கும் போது டம்ளரில் பாலை ஆற்றிக் கொண்டே வெளியே வந்தாள் அருந்ததி..

"இன்னும் சமைக்கல.. இந்தா இந்த பால முதல்ல குடி..! அம்மா சீக்கிரம் சமைச்சுடறேன்.." என்று சரியான சூட்டோடு பாலை ஆற்றி அவள் கையில் கொடுக்க.. கீறிய விழிகளாய் கண்ணீரை சிந்தினாள் சந்திரா..

"குடி டி.." டம்ளரை அவள் வாய்க்கு நேரே கொண்டு செல்ல.. கண்களை துடைத்துக்கொண்டு பாலை அருந்தினாள்..

அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. மறுபக்கம் ரிஷி அமர்ந்திருந்தான்.. கூச்சம் தயக்கம் எதுவுமின்றி மகளின் மீது மட்டுமே அவள் முழு கவனமும் பதிந்திருந்தது..

"பிஸ்கட் வேணுமா பாப்பா.."

வேண்டாம் என்பதாக தலையசைத்தாள்..

"1500 ரூபாய்ல ஒரு செருப்பு கேட்டியே.. இன்னைக்கு வாங்க போகலாமா.." என்றதும் சந்திரமதி நிமிர்ந்து பார்க்க..

"உனக்கு என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. உனக்கு பிடிக்காததை இனி நான் செய்யல.. நீ சந்தோஷமா இருந்தா மட்டும் போதும்.. எனக்கு வேண்டியதெல்லாம் நீ ஒழுங்கா படிக்கணும்.. நல்ல நிலைமைக்கு வரணும் அவ்வளவுதான்..! உனக்கு பிடிக்காட்டி இனி நான் ஸ்கூல் பக்கமே வரமாட்டேன்.. அம்மா உன்னை அடிச்சிருந்தா ஏதாவது தப்பா திட்டி இருந்தா என்னை மன்னிச்சிடு.. ஆ.. ஆனா என்னை தவிக்க விட்டுட்டு சொல்லாம கொள்ளாம எங்கேயும் போய்டாதடி.. என்னால தாங்க முடியல.. அம்மா வாழறதே உனக்காக மட்டும் தான்.. நீயும் என்னை விட்டுப் போயிட்டா அப்புறம் இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்குது..! நீ அந்த வீட்டுக்கு போயிட்டன்னு தெரிஞ்சதும் உன்னை நினைச்சு நான் எவ்வளவு தவிச்சு போயிட்டேன் தெரியுமா.. உயிரே போய்டுச்சு.. அவங்க யாரும் நல்லவங்க இல்ல கண்ணம்மா புரிஞ்சுக்கோ.." அழுகையும் தவிப்புமாக அருந்ததி சொல்லவும்..

"இ.. இனி எங்கேயும் போக மாட்டேன்ம்மா.." என்றாள் சந்திரமதி அழுகையில் தளர்ந்த குரலோடு..

அருந்ததியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு.. "அது போதும் அது போதும் என் செல்லம்மா.. பா.. பால குடி.. இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம்..! மத்தியானம் அம்மா உனக்கு பிரியாணி பண்ணி தரேன்.. இப்ப காலையில என்ன டிபன் பண்ணட்டும் நீயே சொல்லு.." என்றாள் படபடப்பு குறையாமல்..

"இட்லி சாம்பார்.. பண்ணுங்க..!" என்றவளிள் மீது அருந்ததியின் பார்வை தீர்க்கமாக நிலைத்தது..

"இட்லி உனக்கு பிடிக்காதேடா.."

"இப்ப பிடிச்சிருக்கு..! இட்லியும் பிடிக்குது அம்மாவையும் பிடிக்குது.." என்ற மகளின் முகத்தை கையில் ஏந்தி நெத்தியில் நெகிழ்ச்சியோடு முத்தமிட்டாள்.‌

அத்தனை காட்சிகளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

அன்று அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் காலை உணவு சமைத்திருந்தாள்.. வியாபாரத்திற்காக இட்லி செய்யவில்லை..

அவசர அவசரமாக அதே நேரத்தில் மணக்க மணக்க இட்லி சாம்பார் சட்னி என்று சமைத்து எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்து தட்டுகளை வரிசைப்படுத்திய அன்னையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"மதி போய் அவரையும் கூப்பிடு..!" அருந்ததி சொல்ல சந்திரமதி எழுந்து சென்று மகரிஷியை அழைத்து வந்தாள்.. கூடவே இலவச இணைப்பாக தட்டை வாயில் கவ்வி கொண்டு மோத்தியும் அங்கு வந்து நின்றது..

அருந்ததி சந்திரமதியோடு அமர்ந்து சாப்பிட மகரிஷியிடம் எந்த தயக்கமும் இருக்கவில்லை.. மாறாத அவன் முகத்தில் ஒரு பொலிவு ஒரு சந்தோஷம்..!

அந்த வித்தியாசமான அழகு அருந்ததியை ஒரு கணம் படபடக்க செய்தது..

முதலில் தட்டில் இட்லிகளை எடுத்து வைத்து அவனுக்கு தான் பரிமாறினாள்..

"ஓஹோ நன்றி கடனா?" என்ற ரீதியில் அவன் உதட்டில் ஒரு சிரிப்பு..

மேலும் இரண்டு இட்லிகளை அவனிடம் நீட்ட..

"ஐயோ போதுங்க வயிறு வெடிச்சிடும்.." என்றான் அவன்..

"உங்களுக்கு இல்ல.. அ..துக்கு..!" என்று மோத்தியின் பக்கம் கண்ணை காட்டினாள்..

"அதுக்கு.." என்ற வார்த்தை மட்டும் சுருதியிறங்கி மெதுவாய் வந்தது..

"மோத்தி அக்கட வெல்லு.." என்று அவனை அந்த பக்கம் அனுப்பி விட.. ரிஷி வாங்கி நாயின் தட்டில் வைப்பான் என்று எதிர்பார்த்திருந்தவள் மோத்தி வாலை குழைத்து கொண்டு தட்டை வாயில் கவியபடி தன்னிடம் வரவும் ஒரு கணத்தில் திருதிருவென விழித்துவிட்டு அதன் தட்டில் இட்லியையும் ஆற வைத்த சாம்பாரையும் ஊற்றினாள்..

அருந்ததியின் வெகு அருகில் மோத்தி..

அவன் உண்ணுவதை சில கணங்கள் தன்னை மறந்து பார்த்திருந்தவள் பிறகு மகளுக்கும் உணவை பரிமாறி ஊட்ட ஆரம்பித்தாள்..

திருப்தியாய் உண்டுவிட்டு அன்னையின் அருகாமை தந்த பாதுகாப்பிலும் நிம்மதியிலும் சந்திரமதி அவள் மடியிலேயே படுத்து உறங்கிப் போய்விட.. அவள் தலையை தடவி கொடுத்துக் கொண்டிருந்த அருந்ததி வேலைக்கு செல்வதற்காக தயாராகி வெளியே வந்த மகரிஷியை கண்டதும்..

"ஒரு நிமிஷம்.." என்று குரல் கொடுத்து சந்திரமதியின் தலையை தூக்கி தலையணையில் வைத்து விட்டு வேகமாக அவனிடம் வந்தாள்..

"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல..!" சொல்லும்போதே விழிகளில் கண்ணீர் முட்டியது.. அந்த கண்ணீர் மகரிஷி என்னவோ செய்தது..

விவாகரத்துக்கு பின்னும் அவன் நற்பெயரை குலைத்த அந்த சம்பவத்திற்கு பின்னும் கூட தன்னிடம் வந்து வலிய பேசி ஆறுதல் சொல்வதைப் போல் நெருங்க முயன்ற வெள்ளை சரும பெண்களிடமும்.. அவர்களின் அழகான கண்களிடமும் திசை திரும்பாத மனது மாற்று வழி இல்லாத ஒற்றையடி பாதையாய் அருந்ததின் பக்கம் சறுக்கலாக சென்று கொண்டிருப்பது ஏன் என புரியவில்லை..!

"எதுக்கு தேங்க்ஸ்.. அதான் நன்றி கடனை சாப்பாடு போட்டு தீர்த்துட்டீங்களே..!' என்றான் ஒரு மாதிரியான நக்கல் குரலில்..

"நன்றி கடனுக்காக ஒன்னும் சாப்பாடு போடல..!"

"அப்புறம்..?" கைகட்டி புருவங்களை உயர்த்தி அவன் பார்த்த பார்வையில் ஏதோ ஒரு ஆர்வம் எதிர்பார்ப்பு..

பாவம் அருந்ததிக்கு பதில் சொல்ல தெரியவில்லை..

குடும்பத்தில் ஒருவனாகிவிட்ட உணர்வில் அவனையும் அழைக்க சொல்லி உணவு பரிமாறினாள்.. இதை எப்படி அவனிடம் வெளிப்படையாக சொல்ல முடியும்..

"எல்லாரும் ஒன்னா தானே இருக்கோம்.. அதான் சேர்ந்து சாப்பிடலாம்னு.."

"உன்ன தான் இருக்கணும்னு நானும் ஆசைப்படுறேன்.."

"புரியல..?"

"ஒன்னும் இல்ல.. வழக்கம்போல இட்லி சாம்பார் ரொம்ப நல்லா இருந்துச்சு..!"

"சந்திரமதி கிட்ட என்ன சொன்னீங்க..?"

"என்னமோ சொன்னேன்.. அது எங்க ரெண்டு பேருக்குள்ள சீக்ரெட்.. சொன்ன மாதிரி உங்க மகளை கொண்டு வந்து உங்க கிட்ட சேர்த்துட்டேன் இல்ல..! இப்போ உங்களுக்கு சந்தோஷமா.." குனிந்து அவள் முகம் பார்த்தான்..

அந்த குறுகுறு பார்வை அருந்ததியை தடுமாற செய்தது..

"ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்..'

"வரேன் ஜேஜெம்மா..!"

கையை மேலே தூக்கி டாடா காட்டி விடை பெற்றுக்கொண்டு வாசலில் அவனை நோக்கி ஓடிய மோத்தியிடம் ஏதோ பேசிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான்..

அருந்ததி யோசனையாக முகம் சுருக்கினாள்..

"ஜெயந்திமாவா..? ஏன் எப்ப பாரு இப்படியே கூப்பிடறார்.. ஒருவேளை ஏதாவது விவகாரமான வார்த்தையா இருக்குமோ.. குண்டம்மா.. கருப்பி.. பேரல் அண்டா இப்படி ஏதாவது..! இதைத் தாண்டி பெருசா வேற என்ன அடைமொழி வச்சுடப் போறார்.. எல்லாரும் நம்மள தமிழ்ல கேலி செய்யறாங்க.. இவர் தெலுங்குல சொல்றாரு போலிருக்கு.. இந்த மனுஷனுக்கு ரொம்ப லொள்ளுதான்..

"போய்யா கோங்ரா.." உதட்டை சுழித்து விட்டு வீட்டுக்குள் சென்றாள் அருந்ததி..

தொடரும்..
Super super super
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
46
மகளைக் கட்டியணைத்து கண்ணீருடன் மகரிஷியை பார்த்தவள் கைகூப்பி தனது நன்றியை கண்ளால் தெரிவிக்க அவன் உள்ளமும் அருந்ததியின் ஆனந்தக் கண்ணீரில் குளிர்ந்து போனது..

அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு மகளின் முகத்தை கையிலேந்தினாள் அருந்ததி..

"ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன் இப்படி உட்காரு.." என்று சந்திரமதியை அந்த திண்ணையில் அமர வைத்துவிட்டு உள்ளே சென்றாள்..

மோத்தி வாலாட்டிக்கொண்டே அவள் கால் பக்கத்தில் வந்து நிற்க..

"ஏய்.. மோத்தி..!" என்று சந்தோஷத்துடன் மோத்தியை கையில் அள்ளிக் கொள்ள.. சந்திரமதியை வெகு நாள் கழித்து பார்த்த பரவசத்தில் அவள் கையிலிருந்து துள்ளி வேகமாக வாலை சுழட்டி.. உடலை நெளித்து.. சுற்றி சுற்றி வந்து தனது பாச உணர்வை வெளிப்படுத்தினான் அவன்..

பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் மகரிஷி..

"ஏமி சந்திராம்மா.. நீவு ஹாப்பிகா உன்னாவா..?"

"ம்ம்..?" சந்திரமதி நனைந்த விழிகளோடு நிமிர்ந்தாள்..

"இல்ல அம்மாவை பார்த்தாச்சு இப்ப சந்தோஷம் தானே..?" என்றதும் வார்த்தைகள் வராமல் புன்னகைத்து தன் பதிலை தந்தாள் சந்திரமதி..

உள்ளே எட்டிப் பார்த்தான் மகரிஷி..

"ஜேஜம்மா உள்ள கிச்சன்ல ஏதோ வேலையா இருக்காங்க.. அவங்க வர்றதுக்குள்ள நான் உனக்கு ஒரு சின்ன கதை சொல்லி முடிக்கட்டுமா..?"

சந்திரமதி மவுனப் பார்வையை சம்மதமாக எடுத்துக் கொண்டு அவன் தொடர்ந்தான்..

"இது ஒரு பொண்ணோட கதை. அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.. அவளோட அம்மாவுக்கும் உன்னோட அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்னு நீ சொல்லணும் சரியா..?"

"ம்ம்.." என்ற தலையசைத்தாள் சந்திரமதி..

"உன்ன மாதிரியே ஒரு அழகான பொண்ணு..‌ என்ன அந்த குழந்தை கொஞ்சம் கருப்பா பொறந்துட்டா.. பொம்பள புள்ளையா பொறந்த பாவத்துக்காக அந்த பொண்ணை அவங்க அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை.. அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன்.. ஆம்பள பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளோட அருமையை சொல்லி வளர்க்கணும் அவங்களை பாதுகாக்க சொல்லி தரணும்.. ஆனா இந்த குழந்தையோட அம்மா அவங்க மகன மட்டும் தான் நல்லா பாத்துக்கிட்டாங்க.. தன்னோட பெண் குழந்தையயை ஒரு பொருட்டா மதிக்கவே இல்லை.. யோசிச்சு பாரு.. தன்னோட சொந்த வீட்டிலேயே தன்னோட அம்மாவால ஒதுக்கப்பட்ட அந்த குழந்தையோட மனநிலை என்னவா இருக்கும்.."

ரிஷியின் கேள்வியில் சந்திரமதியின் கருவிழிகள் யோசனையாக சுழன்றன..

"காலப்போக்குல இந்த பெண் குழந்தையும் வளர்ந்து ஆளாகிட்டா.. 16 வயசு குழந்தை.. உன்ன விட ஒரு நாலு வயசு ஜாஸ்தி. அவ்வளவுதான்.. வயசுக்கு மீறுன வளர்ச்சின்னு அந்த சின்ன பொண்ணு ஒரு 33 வயசு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.."

"ஐயோ..!" சந்திரமதி அதிர்ந்தாள்..

"ம்ம்.. எதுவுமே தெரியாத அந்த பருவத்துல அப்புறம் அந்த பொண்ணு அனுபவிச்ச கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.. அழகில்ல..‌ நிறமமில்லன்னு பெத்தவங்க முதக்கொண்டு எல்லாராலயும் கேலி செய்யப்பட்ட அந்த பொண்ண புருஷனும் இதே வார்த்தைகளை சொல்லி தினம் தினம் நோகடிச்சான்.. அடி உதை.. மாமியார் கொடுமை.. மாமனாரோட வக்கிரமான புத்தின்னு அந்தப் பொண்ணு அந்த வீட்டில சந்தோஷமா இல்ல சந்திராம்மா.."

"அவளால பிறந்த வீட்டுக்கு போக முடியல போனாலும் அங்க அவள வச்சு காப்பாத்த அங்க யாருக்கும் மனசில்ல..‌ அந்த பொண்ணோட அண்ணன் ஒரு பொறுப்பில்லாத ராட்சசன்.. அண்ணி ஒரு தாடகை.. அவளோட அம்மாவ பத்தி சொல்லவே வேண்டாம்.. தனக்கு ஒரு பொண்ணு இருக்குதுங்கிறதையே சுத்தமா மறந்துட்டாங்க போலிருக்கு.."

"16 வயசுல கல்யாணம்.. 17 வயசுல குழந்தை.. அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு.. பிறந்தது பெண் குழந்தைன்னு அந்த சின்னஞ்சிறு பிஞ்சு உயிரை கூட அந்த வீட்ல எல்லாரும் வெறுத்தாங்க.. .நாளுக்கு நாள் அந்த வீடு நரகமா மாறிப்போச்சு.."

"அங்க வாழ முடியல.. வேறவழிழில்லாம அவ ஒரு முடிவெடுத்தா..‌ தனக்கு வந்த இந்த நிலைமை தன் குழந்தைக்கு வரக்கூடாது.. ததன்னை போல தன்மகளும் அறியாமையினால் சீரழிஞ்சு போய்ட்ட கூடாது..‌ அவள நல்லா படிக்க வைக்கணும்.. சமுதாயத்தில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகணும்னு வைராக்கியத்தோட அந்த வீட்டை விட்டு வெளியே வந்தா.."

"தனியா ஒரு பொம்பள இந்த சமுதாயத்தில் வாழறது அவ்வளவு ஈஸி இல்ல சந்திராம்மா.."

"தினம் தினம் எதிரிகளை சந்திக்க வேண்டியதாயிருக்கும்.. இந்த எதிரிகள் முன்னாடி நின்னு நேருக்கு நேரா சண்டை போடுறவங்க இல்லை.. முதுகுக்கு பின்னாடி நின்னு கோழைத்தனமா பேசுறவங்க.. தனியா நிக்கிற பொண்ணு எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டான்னு தப்பா நினைச்சு அவ கிட்ட வக்கிரமா நடந்துக்க முயற்சி செய்யறவங்க.. இவங்க எல்லாரையும் அலட்சியமா கடந்து போய் கடினமா உழைச்சு தன்னோட பொண்ண வளர்த்து ஆளாக்கினா அவ..!"

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமான்னு தெரியல ஆனா சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்.. 19 வயசுல வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு பொண்ணுக்கு எவ்வளவு தொல்லைகள் இருக்கும் தெரியுமா..?"

"20 வயசு படிக்கிற வயசு.. பட்டாம்பூச்சியா தெரிகிற வயசு.. பாக்கற அழகைல்லாம் காதலிக்கிற வயசு.. அந்த வயசுல அவ தன்னோட மகளுக்காக வேலைக்கு போய் கடினமா உழைச்சா.. தனக்குன்னு எந்த சந்தோஷமும் இல்லாம குழந்தைக்காகவே வாழ ஆரம்பிச்சா.. தன்னோட கஷ்டம் எதுவும் தன்னோட குழந்தைக்கு தெரிய கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு சந்தோஷத்தை மட்டுமே குழந்தைக்கு கொடுத்துட்டு வலிகளையும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அவ அனுபவிச்சா.."

"ஆனா ஒரு விஷயம் தெரியுமா சந்திரமா.. அவ பெத்த மக அந்த இரும்பு மனுசய புரிஞ்சுக்கவே இல்ல.. ஏன் தெரியுமா..?"

"ஏ.. ஏன்..?" சந்திராவின் குரல் நடுங்கியது.. விழிகள் ரிஷியின் முகத்தில் நிலை குத்தி நின்றன.. சந்திரமதி எதையோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்..

"அம்மா பார்க்க அழகா இல்லையாம்.. ஒரு இட்லி விக்கிற ஆயாம்மாவை அம்மான்னு சொல்லவே அவமானமா இருந்துச்சாம்..! அந்த குட்டி பொண்ணுக்கு அம்மா வேண்டாமா அப்பா தான் வேணுமாம்..!"

"தினம் குடிச்சு குடிச்சு பொண்டாட்டிய கொடுமை படுத்தின ஒரு இரக்கமே இல்லாத மிருகம் தன்னோட மகளை மட்டும் நல்லபடியா வச்சுக்க போறானா என்ன..! இந்த உண்மை தாய்க்கு தெரிஞ்சிருந்தது.. ஆனால் மகளுக்கு புரியல.. என்ன பண்றது..? சில பேருக்கு அனுபவப்பட்டாதான் புத்தி வருது.."

சந்திரமதி மீண்டும் அழ ஆரம்பித்தாள்..

"நான் யாரை பத்தி பேசுறேன்னு உனக்கு புரிஞ்சிருச்சா..?"

முகத்தை மூடிக்கொண்டு இன்னும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சந்திரா..

சில கணங்கள் மதியை அழவிட்டு அமைதி காத்தவன் மீண்டும் தொடர்ந்தான்..

"உன்னை அழ வைக்கணும்னு இத சொல்லல சந்திரா மா.. உன் அம்மாவோட கஷ்டத்தை நீ புரிஞ்சுக்கணும்.. உன்னோட அம்மா எது செஞ்சாலும் அது உனக்காக மட்டும் தான்..! நீ உன் அம்மாவ எவ்வளவு கேவலமா பேசி இருப்ப.. இப்ப சொல்லு அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அவங்க தகுதியானவங்களா..?"

அழுது கொண்டே இல்லை என்பதாய் தலையசைத்தாள் சந்திரா..

"இதை நான் முன்னாடியே சொல்லி இருந்தா உன் புத்தியில ஏறி இருக்காது.. ஏன்னா நீ குழந்தை.. அனுபவத்தை விட ஒரு சிறந்த ஆசான் இந்த உலகத்தில் கிடையாது.. உன் அப்பாவோட குணத்தை புரிஞ்சுக்க இது உனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு.. இனியாவது உன் அம்மாவை காயப்படுத்தாம இரு.." என்று சொல்லி முடிக்கும் போது டம்ளரில் பாலை ஆற்றிக் கொண்டே வெளியே வந்தாள் அருந்ததி..

"இன்னும் சமைக்கல.. இந்தா இந்த பால முதல்ல குடி..! அம்மா சீக்கிரம் சமைச்சுடறேன்.." என்று சரியான சூட்டோடு பாலை ஆற்றி அவள் கையில் கொடுக்க.. கீறிய விழிகளாய் கண்ணீரை சிந்தினாள் சந்திரா..

"குடி டி.." டம்ளரை அவள் வாய்க்கு நேரே கொண்டு செல்ல.. கண்களை துடைத்துக்கொண்டு பாலை அருந்தினாள்..

அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் அருந்ததி.. மறுபக்கம் ரிஷி அமர்ந்திருந்தான்.. கூச்சம் தயக்கம் எதுவுமின்றி மகளின் மீது மட்டுமே அவள் முழு கவனமும் பதிந்திருந்தது..

"பிஸ்கட் வேணுமா பாப்பா.."

வேண்டாம் என்பதாக தலையசைத்தாள்..

"1500 ரூபாய்ல ஒரு செருப்பு கேட்டியே.. இன்னைக்கு வாங்க போகலாமா.." என்றதும் சந்திரமதி நிமிர்ந்து பார்க்க..

"உனக்கு என்ன வேணுமோ கேளு வாங்கி தரேன்.. உனக்கு பிடிக்காததை இனி நான் செய்யல.. நீ சந்தோஷமா இருந்தா மட்டும் போதும்.. எனக்கு வேண்டியதெல்லாம் நீ ஒழுங்கா படிக்கணும்.. நல்ல நிலைமைக்கு வரணும் அவ்வளவுதான்..! உனக்கு பிடிக்காட்டி இனி நான் ஸ்கூல் பக்கமே வரமாட்டேன்.. அம்மா உன்னை அடிச்சிருந்தா ஏதாவது தப்பா திட்டி இருந்தா என்னை மன்னிச்சிடு.. ஆ.. ஆனா என்னை தவிக்க விட்டுட்டு சொல்லாம கொள்ளாம எங்கேயும் போய்டாதடி.. என்னால தாங்க முடியல.. அம்மா வாழறதே உனக்காக மட்டும் தான்.. நீயும் என்னை விட்டுப் போயிட்டா அப்புறம் இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்குது..! நீ அந்த வீட்டுக்கு போயிட்டன்னு தெரிஞ்சதும் உன்னை நினைச்சு நான் எவ்வளவு தவிச்சு போயிட்டேன் தெரியுமா.. உயிரே போய்டுச்சு.. அவங்க யாரும் நல்லவங்க இல்ல கண்ணம்மா புரிஞ்சுக்கோ.." அழுகையும் தவிப்புமாக அருந்ததி சொல்லவும்..

"இ.. இனி எங்கேயும் போக மாட்டேன்ம்மா.." என்றாள் சந்திரமதி அழுகையில் தளர்ந்த குரலோடு..

அருந்ததியின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு.. "அது போதும் அது போதும் என் செல்லம்மா.. பா.. பால குடி.. இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம்..! மத்தியானம் அம்மா உனக்கு பிரியாணி பண்ணி தரேன்.. இப்ப காலையில என்ன டிபன் பண்ணட்டும் நீயே சொல்லு.." என்றாள் படபடப்பு குறையாமல்..

"இட்லி சாம்பார்.. பண்ணுங்க..!" என்றவளிள் மீது அருந்ததியின் பார்வை தீர்க்கமாக நிலைத்தது..

"இட்லி உனக்கு பிடிக்காதேடா.."

"இப்ப பிடிச்சிருக்கு..! இட்லியும் பிடிக்குது அம்மாவையும் பிடிக்குது.." என்ற மகளின் முகத்தை கையில் ஏந்தி நெத்தியில் நெகிழ்ச்சியோடு முத்தமிட்டாள்.‌

அத்தனை காட்சிகளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகரிஷி..

அன்று அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் காலை உணவு சமைத்திருந்தாள்.. வியாபாரத்திற்காக இட்லி செய்யவில்லை..

அவசர அவசரமாக அதே நேரத்தில் மணக்க மணக்க இட்லி சாம்பார் சட்னி என்று சமைத்து எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்து தட்டுகளை வரிசைப்படுத்திய அன்னையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரமதி..

"மதி போய் அவரையும் கூப்பிடு..!" அருந்ததி சொல்ல சந்திரமதி எழுந்து சென்று மகரிஷியை அழைத்து வந்தாள்.. கூடவே இலவச இணைப்பாக தட்டை வாயில் கவ்வி கொண்டு மோத்தியும் அங்கு வந்து நின்றது..

அருந்ததி சந்திரமதியோடு அமர்ந்து சாப்பிட மகரிஷியிடம் எந்த தயக்கமும் இருக்கவில்லை.. மாறாத அவன் முகத்தில் ஒரு பொலிவு ஒரு சந்தோஷம்..!

அந்த வித்தியாசமான அழகு அருந்ததியை ஒரு கணம் படபடக்க செய்தது..

முதலில் தட்டில் இட்லிகளை எடுத்து வைத்து அவனுக்கு தான் பரிமாறினாள்..

"ஓஹோ நன்றி கடனா?" என்ற ரீதியில் அவன் உதட்டில் ஒரு சிரிப்பு..

மேலும் இரண்டு இட்லிகளை அவனிடம் நீட்ட..

"ஐயோ போதுங்க வயிறு வெடிச்சிடும்.." என்றான் அவன்..

"உங்களுக்கு இல்ல.. அ..துக்கு..!" என்று மோத்தியின் பக்கம் கண்ணை காட்டினாள்..

"அதுக்கு.." என்ற வார்த்தை மட்டும் சுருதியிறங்கி மெதுவாய் வந்தது..

"மோத்தி அக்கட வெல்லு.." என்று அவனை அந்த பக்கம் அனுப்பி விட.. ரிஷி வாங்கி நாயின் தட்டில் வைப்பான் என்று எதிர்பார்த்திருந்தவள் மோத்தி வாலை குழைத்து கொண்டு தட்டை வாயில் கவியபடி தன்னிடம் வரவும் ஒரு கணத்தில் திருதிருவென விழித்துவிட்டு அதன் தட்டில் இட்லியையும் ஆற வைத்த சாம்பாரையும் ஊற்றினாள்..

அருந்ததியின் வெகு அருகில் மோத்தி..

அவன் உண்ணுவதை சில கணங்கள் தன்னை மறந்து பார்த்திருந்தவள் பிறகு மகளுக்கும் உணவை பரிமாறி ஊட்ட ஆரம்பித்தாள்..

திருப்தியாய் உண்டுவிட்டு அன்னையின் அருகாமை தந்த பாதுகாப்பிலும் நிம்மதியிலும் சந்திரமதி அவள் மடியிலேயே படுத்து உறங்கிப் போய்விட.. அவள் தலையை தடவி கொடுத்துக் கொண்டிருந்த அருந்ததி வேலைக்கு செல்வதற்காக தயாராகி வெளியே வந்த மகரிஷியை கண்டதும்..

"ஒரு நிமிஷம்.." என்று குரல் கொடுத்து சந்திரமதியின் தலையை தூக்கி தலையணையில் வைத்து விட்டு வேகமாக அவனிடம் வந்தாள்..

"ரொம்ப தேங்க்ஸ்ங்க.. வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல..!" சொல்லும்போதே விழிகளில் கண்ணீர் முட்டியது.. அந்த கண்ணீர் மகரிஷி என்னவோ செய்தது..

விவாகரத்துக்கு பின்னும் அவன் நற்பெயரை குலைத்த அந்த சம்பவத்திற்கு பின்னும் கூட தன்னிடம் வந்து வலிய பேசி ஆறுதல் சொல்வதைப் போல் நெருங்க முயன்ற வெள்ளை சரும பெண்களிடமும்.. அவர்களின் அழகான கண்களிடமும் திசை திரும்பாத மனது மாற்று வழி இல்லாத ஒற்றையடி பாதையாய் அருந்ததின் பக்கம் சறுக்கலாக சென்று கொண்டிருப்பது ஏன் என புரியவில்லை..!

"எதுக்கு தேங்க்ஸ்.. அதான் நன்றி கடனை சாப்பாடு போட்டு தீர்த்துட்டீங்களே..!' என்றான் ஒரு மாதிரியான நக்கல் குரலில்..

"நன்றி கடனுக்காக ஒன்னும் சாப்பாடு போடல..!"

"அப்புறம்..?" கைகட்டி புருவங்களை உயர்த்தி அவன் பார்த்த பார்வையில் ஏதோ ஒரு ஆர்வம் எதிர்பார்ப்பு..

பாவம் அருந்ததிக்கு பதில் சொல்ல தெரியவில்லை..

குடும்பத்தில் ஒருவனாகிவிட்ட உணர்வில் அவனையும் அழைக்க சொல்லி உணவு பரிமாறினாள்.. இதை எப்படி அவனிடம் வெளிப்படையாக சொல்ல முடியும்..

"எல்லாரும் ஒன்னா தானே இருக்கோம்.. அதான் சேர்ந்து சாப்பிடலாம்னு.."

"உன்ன தான் இருக்கணும்னு நானும் ஆசைப்படுறேன்.."

"புரியல..?"

"ஒன்னும் இல்ல.. வழக்கம்போல இட்லி சாம்பார் ரொம்ப நல்லா இருந்துச்சு..!"

"சந்திரமதி கிட்ட என்ன சொன்னீங்க..?"

"என்னமோ சொன்னேன்.. அது எங்க ரெண்டு பேருக்குள்ள சீக்ரெட்.. சொன்ன மாதிரி உங்க மகளை கொண்டு வந்து உங்க கிட்ட சேர்த்துட்டேன் இல்ல..! இப்போ உங்களுக்கு சந்தோஷமா.." குனிந்து அவள் முகம் பார்த்தான்..

அந்த குறுகுறு பார்வை அருந்ததியை தடுமாற செய்தது..

"ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்..'

"வரேன் ஜேஜெம்மா..!"

கையை மேலே தூக்கி டாடா காட்டி விடை பெற்றுக்கொண்டு வாசலில் அவனை நோக்கி ஓடிய மோத்தியிடம் ஏதோ பேசிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான்..

அருந்ததி யோசனையாக முகம் சுருக்கினாள்..

"ஜெயந்திமாவா..? ஏன் எப்ப பாரு இப்படியே கூப்பிடறார்.. ஒருவேளை ஏதாவது விவகாரமான வார்த்தையா இருக்குமோ.. குண்டம்மா.. கருப்பி.. பேரல் அண்டா இப்படி ஏதாவது..! இதைத் தாண்டி பெருசா வேற என்ன அடைமொழி வச்சுடப் போறார்.. எல்லாரும் நம்மள தமிழ்ல கேலி செய்யறாங்க.. இவர் தெலுங்குல சொல்றாரு போலிருக்கு.. இந்த மனுஷனுக்கு ரொம்ப லொள்ளுதான்..

"போய்யா கோங்ரா.." உதட்டை சுழித்து விட்டு வீட்டுக்குள் சென்றாள் அருந்ததி..

தொடரும்..
சந்தூ மா குட்டோ குட் கேர்ளா மாறியாச்சி மோத்தி பையனக்கு இட்லி வைக்கிற அளவுக்கு முன்னேற்றம் அரு கிட்ட சூப்பரு செம செம 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
அய்யோ அரு அது ஜெயந்தி அம்மாவும் இல்ல தமயந்தி அம்மாவும் இல்ல ஜே
 
New member
Joined
Mar 14, 2023
Messages
8
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
117
Very nice ud....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🍎🍎😭😻😻😻😻😻😻😻😻😻😻
 
Top