- Joined
- Jan 10, 2023
- Messages
- 69
- Thread Author
- #1
கௌதமன் உயிரோடு இருக்கிறான் என்ற தகவல் மட்டுமே அவள் நிம்மதிக்கு போதுமானதாய் இருக்க.. செண்பக பாண்டியன் உன் கௌதமன் என்று அழுத்திச் சொன்ன விதம் மனதில் பதியவில்லை..
"என்ன.. என்ன சொல்றிங்க?".. விழிகளில் ஆனந்த கண்ணீருடன் ஆர்ப்பரித்து.. தேன்மலர் கேட்ட விதத்தில் அவன் வேதனை கொள்ளவில்லை.. இறந்து போனதாக சொல்லப்பட்டவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டதில் இயல்பாக தோன்றும் மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம்..
அதுதான் உண்மையும் கூட.. மூன்றாம் மனிதர்களால் கூட இறந்தவன் உயிரோடு வந்துவிட்டான் என்று கேட்க இப்படி சந்தோஷப்பட முடியும்.. கௌதம் தன்னால் தான் தற்கொலை செய்து கொண்டதாக இதுநாள் வரையிலும் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவள் தன்னை மீட்டுக் கொண்டதற்கான ஆனந்தத்தின் வெளிப்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம்..
ஆனால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் அழுது தீர்த்தவள் அடுத்து சொன்ன வார்த்தை.. "எனக்கு அவர் கூட பேசணும்.. ஒரே ஒருமுறை அவர் கூட பேசணும்.. ப்ளீஸ் ஏற்பாடு செய்யுங்க".. காலில் விழாத குறையாக கெஞ்சிய நிலைதான் சகிக்க முடியாத கசப்பை சுவைப்பதாய்!!..
"நம்பர் இருக்கு".. என்று தனது அலைபேசியிலிருந்து கவுதமிற்கு அழைத்து அவளிடம் கொடுத்தான் செண்பகன்..
"ஹலோ.. ஹலோ".. என்றவளுக்கு எதிர் முனையில் பேசுவது கேட்கவில்லை..
"ஒ.. ஒரு நிமிஷம்.. வெளியே வந்து பேசறேன்".. கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடியவளின் முதுகை வெறுமையான விழிகளுடன் வெறித்தான் அவன்..
ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து கட்டிலில் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தவனிடம் ஃபோனை கொடுத்தாள்..
"பேசியாச்சா?".. கற்பாறையாக இறுகிய முகத்தோடு அவள் விழி பார்க்க தவிர்த்து ஃபோனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்..
"ஹ்ம்ம்".. என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு உங்க பெரிய தங்கச்சியோட கணவர் மதன் குமார் .. எங்களுக்கு தூரத்து சொந்தம்.. அண்ணன் முறை..
"ஹ்ம்ம் தெரியும்!!".. என்றான் தலையசைத்து..
"அவர்தான் கௌதம்மை மிரட்டி ஊரை விட்டுப் போக வச்சிருக்காரு.. என் ஃப்ரெண்ட் திவ்யா மூலமா கௌதம் இறந்துட்டதா எனக்கு தெரியப்படுத்தி இருக்காரு.. ஆனா ஏன்னு தெரியல".. குழம்பி நின்றாள் தேன்மலர்..
"அதற்கு காரணம் நீதான்!!" என்றால் செண்பக பாண்டியன் அவளை ஏறிட்டு..
"நா.. நானா?"..
"ஆமாம்.. கல்யாணத்துக்கு முதல் நாள் எனக்கு போன் செஞ்சதா சொன்னியே.. அந்த கால் அட்டெண்ட் செஞ்சது உன்னோட அண்ணன் மதன்குமார் தான்"..
அதிர்ச்சியில் விழி விரித்தாள் அவள்..
"என்னை தேடி அறைக்கு வந்தவர் போன் ரிங் ஆனதுல ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கலாம்னு.. கால் அட்டென்ட் பண்ணி பேசி இருக்கார்"..
"அப்பதான் நீ ஃபோன்ல பேசினது நான்னு நினைச்சு கல்யாணத்தை நிறுத்த சொல்லி அழுதிருக்க.. இது எங்க குடும்பம் மட்டும் இல்ல அவங்க குடும்ப கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. ஏன்னா அவர் மூலமா தான் நாங்க உன்னை பெண் பார்க்க வந்ததும் திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சதும்.. கல்யாணம் நின்னு ஏதாவது ஏடாகூடம் ஆகிட்டா அது எங்க ரெண்டு குடும்ப உறவுகளை ரொம்பவே பாதிக்கும்.. அண்ணனா உனக்கு பதில் சொன்னா நீ மறுபடியும் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வேன்னுதான்.. என்னை மாதிரியே பேசி உன்னை குழப்பி விட்டிருக்காரு"..
"அதுவுமில்லாம.. கௌதமனை கொல்ல முடியாது ஆனால் செத்துப் போன மாதிரி வதந்தியை கிளப்பி விட்டுட்டா அவனை மறந்துட்டு நீ சந்தோஷமா இருப்பேன்னு தான் இப்படி ஒரு வேலை பார்த்திருக்கிறாரு".. அதிர்ச்சியில் உறைந்து போனாள் தேன் மலர்..
"அப்போ அவருக்கு முன்னாடியே எல்லா விஷயமும் தெரியுமா?"..
"தெரியாது.. நீதான் போன்ல உளறி மாட்டிக்கிட்ட.. ஆனாலும் அடுத்த நாள் காலையில கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஏதாவது தப்பு நடந்துட்டா உன் அப்பாவோட மானமும் என்னோட மரியாதையும் பாதிக்கப்படும்னு தான் அவர் அப்படி சொன்னது.. அடுத்த நாள் உன் அப்பா கிட்ட விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு கௌதமன் ஊருக்கு நேரடியா போய் மத்த வேலைகளை நேக்கா பார்த்து முடிச்சிட்டாரு.. இது உன் அப்பாவுக்கே தெரியாது..
"ஆ.. ஆனா அம்மாகிட்டே கவுதமன் செத்துட்டாரா கேட்டதுக்கு ஆமாம்னு சொன்னாங்களே?".. சட்டென நினைவில் தேன்றியதை கேட்டாள்..
"அப்படி சொன்னாதானே நீ எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா வாழ்வே!!.. நீ கேட்டே அவங்க ஆமாம்னு சொன்னாங்க. அவ்வளவுதான்".. என்றதும் எல்லாம் புரிந்தது அவளுக்கு..
"நீ அன்னிக்கு நடந்த உண்மையை சொன்ன பிறகு யார் இந்த வேலையை பார்த்திருப்பாங்கன்னு ரொம்ப யோசிச்சேன்.. உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரே ஆள் என்னோட மச்சான் மதன் குமார் தான்.. அவரைக் கூப்பிட்டு விசாரிச்சேன்.. உண்மையை ஒத்துக்கிட்டார்.. ஆனா நீ கவலைப்பட வேண்டாம் இந்த விஷயத்தை அவர் யார்கிட்டயும் சொல்ல மாட்டார்.. ஏன்னா நம்ம குடும்பத்தோட மானம் மரியாதைல அவருக்கும் பங்குண்டு".. என்றான் நீண்ட விளக்கமாக..
இழுத்து பெருமூச்சு விட்டாள் தேன்மலர்.. "அவரால எவ்வளவு குழப்பம்.. உங்களை தப்பா நினைச்சு நானும் குற்ற உணர்ச்சியில மருகி தவிச்சு அப்பப்பா.. தேவையில்லாத எவ்வளவு பிரச்சனைகள்".. விழிகள் மூடி திறந்தவள் நன்றாக தெளிந்திருந்தாள்.. அவள் பேச்சிலும் கூட சட்டென வானம் இருட்டிக்கொண்டு சில்லென காற்றோடு சாரல் தெளிப்பதாய் புத்துணர்ச்சி தென்படுவதை சிறுதலையசைப்புடன் குறித்துக் கொண்டான் செண்பக பாண்டியன்..
அவர் நமக்கு நல்லது செய்யத்தான் நினைச்சார்.. ஆனா குழப்பம் ஆகிடுச்சு.. எனக்காக அவரை மன்னிச்சிடு..
"அச்சோ.. நான் போய் அவரை மன்னிக்கிறதாவது.. எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது அதுவரை சந்தோஷம்".. புன்னகையோடு மலர்ந்து சொன்னவளை.. விழிகள் சுருங்க ஆராய்ந்தான் செண்பகன்.. எது நல்லபடியா முடிஞ்சது? இதயத்திற்குள் கேள்வி..
கௌதமனோடு என்ன பேசினாய் என்று அவனும் கேட்கவில்லை.. இதைத்தான் பேசினேன் என்று அவளும் சொல்லவில்லை..
ஆனால் பிரச்சினைகள் சங்கிலி தொடர்களாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வாழ்க்கையில் தீராத துயரங்களை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால்.. தன் மனதின் உணர்வுகளை வெளிப்படையாக அவனிடம் கொட்டி தீர்த்தீருப்பாள்..
அன்று.. காலை ஐந்து மணியளவில் தரையில் படுக்கிறேன் பேர்வழி என்று உருண்டு வந்து தன் படுக்கை விரிப்பில் படுத்து கொண்டிருந்தவளை ஐந்து நிமிடங்களாய் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்.. பின் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்.. வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன்.. ஈர முகத்தை துடைத்துக் கொண்டே தேன் மலரை தட்டி எழுப்பினான்..
உறக்க கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
"முக்கியமான வேலை இருக்கு நான் புறப்படறேன்.. கதவை தாழிட்டுக்கோ".. என்றுவிட்டு வெளியேறி விட.. நித்திரை தந்த மயக்கத்திலும் எழுந்து செல்ல சலித்து சோம்பேறித்தனத்திலும் வழக்கம் போல் கதவை தாழிட்டுக்க் கொள்ளாமல் அந்த இடத்திலேயே உறங்கிப் போனது அவளுக்கே பாதகமாய் முடிந்து போனது..
செண்பகன் வேலைகளை முடித்து திரும்பி வந்த நேரத்தில்.. வீடே ஒரே களேபரமாய் இருந்தது..
கூடத்தில் தேன்மலர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டது போல் அழுது கொண்டிருந்தாள்..
வழக்கம்போல் ராகினி இந்த வழக்கின் நடுவர் போல் அலட்டலாக நின்று கொண்டிருக்க.. நீலவேணியின் முகத்தில் ஒரு ஏகப்பட்ட குழப்பம்.. தர்ஷினி சொல்புத்தி பிள்ளையாய் ராகினி பக்கம் நின்று கொண்டிருந்தாள்..
தேன்மலரின் எதிர் வாதமில்லாத அமைதியும் அழுகையும்.. ராகினியின் குற்றச்சாட்டை வலுவாக்கிக் கொண்டிருக்க..
"வாய் திறந்து ஏதாவது பதில் சொல்லுங்க அண்ணி" என்று.. கேள்விகளால் அவளை துளைத்துக் கொண்டிருந்தான் கார்முகிலன்..
"என்ன நடக்குது?.. என்ன ஆச்சு".. தேன்மலர் அழுது கொண்டிருந்ததிலும் குற்றம் சாட்டும் தோரணையோடு மற்றவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த விதத்திலும் செண்பக பாண்டியனின் குரலில் கடுமை கூடியிருந்தது..
"இதோ இவரே வந்துட்டாரு.. இவர்கிட்டேயே கேளுங்களேன்".. ராகினி இதுதான் சாக்கென்று செண்பகனிடம் தாவினாள்..
"என்ன விஷயம்னு கேக்கறேன்ல.. ராகினியிடம் பேச விருப்பமில்லாது தன் அன்னையிடம் கத்தினான் செண்பகன்..
"நானே சொல்றேன்".. முன் வந்து நின்று துவங்கினாள் ராகினி..
"வேலை செய்றவங்க ஆறு மணிக்கு வந்துருவாங்க.. அதனால கதவை திறந்து வைக்கலாம்னு வந்தேன்.. அப்போதான் அந்த ஆள் கதவை திறந்துக்கிட்டு உள்ளே வந்தான்.. யாராவது இருக்காங்களான்னு திருட்டுத்தனமா சுத்தி சுத்தி பார்த்துகிட்டு சத்தம் போடாம இதோ அத்தான் அறைக்குள்ள போனான்.. நான் அப்படியே திகைச்சு போயிட்டேன்"..
"ஒருவேளை திருடனா இருப்பானோ.. உள்ளே மலர் வேற இருக்காளே.. இவனால அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துருச்சுன்னா.. ஒருவேளை அத்தான் அறையில இருந்து எதையாவது திருட வந்துருந்தா.. கையும் களவுமாக பிடிக்கணுமே.. அதனால வேகமா போய் அறைக்கு வெளியே நின்னு எட்டி பாத்தேன்"..
"அங்கே.. அங்கே.. மலரோட கையை பிடிச்சுக்கிட்டு அவன் என்னமோ உருகி உருகி பேசிகிட்டு இருந்தான்.. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்த மாதிரி ரொம்ப நெருக்கமா நின்னுகிட்டு இருந்தாங்க.. ஆனா என்ன பேசிக்கிட்டாங்க காதுல விழல"..
"டேய் யாருடா நீ.. நீங்க என்ன செய்றன்னு நான் கத்தின பிறகு அவன் என்னை தள்ளி விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.. உண்மை எல்லாருக்கும் தெரியனும்தான்தான் சபையை கூட்டினேன்..
தேன்மலரின் அருகே வந்தான் செண்பக பாண்டியன்..
"யாரு வந்தது?"..
இதழ் கடித்து அழுகையை விழுங்கி கொண்டு.. "க.. கவுதம்".. என்றதில் திகைத்து நின்றான் செண்பக பாண்டியன்..
"இப்ப தெரியுதா உங்க பொண்டாட்டி ஏன் உங்களை பிடிக்கலைன்னு சொன்னான்னு.. ஏன்னா அவளுக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருந்துருக்கு".. முடிப்பதற்குள் பளாரென ஒரு அறை விழுந்தது..
செண்பக பாண்டியன் கண்கள் சிவந்து நின்று கொண்டிருக்க அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது மொத்த குடும்பமும்..
"அடி.. அடிச்சிட்டீங்க.. என்னை அடிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?".. ஆத்திரத்தில் வெடித்தாள் ராகினி.. இதில் யாரும் அவனை ஒரு கேள்வி கேட்கவில்லை என்றதில் மென்மேலும் கொதிப்பு..
"என் படுக்கை அறையை எட்டிப் பார்க்க உனக்கு உரிமை இருக்குன்னா உன்னை அடிக்கிற உரிமை எனக்கும் இருக்கு.. என் பொண்டாட்டி மேல பழி சொல்ற அளவுக்கு உனக்கு துணிச்சல் இருக்குன்னா உன்னை அடிக்கிறதுக்கான வலுவான காரணம் என்கிட்டேயும் இருக்கு".. என்றான் அழுத்தமாக..
"ஓஹோ.. உங்க பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றீங்களா!!.. வாசல் கதவையும்.. பெட்ரூம் கதவையும் நீங்க போன பிறகு திறந்து வைச்சு அவனை உள்ளே விட்டது அவ தானே?"..
"காலையில வேலையா கிளம்பும்போது ரூம் கதவையும் வாசல் கதவையும் திறந்து வெச்சிட்டு போனது நானு.. தூக்க கலக்கத்துல மறுபடியும் எழுந்து வந்து அவ தாழ் போட மறந்துட்டா.. வீட்டு வாசலும்.. என் ரூம் வாசலும் திறந்திருந்த விஷயம் எனக்கே தெரியும்.. நீ ஒன்னும் விளக்கம் கொடுக்க வேண்டாம்..
"ஹான்.. அப்போ.. அவன் கையைப் பிடிச்சு பேசிட்டு நின்னது?"..
"கண்டிப்பா இதுக்கு நான் விளக்கம் கொடுக்கணுமா".. புருவங்களை உயர்த்தினான் கூர் பார்வையுடன்..
"ஆமா.. விஷயம் சபைக்கு வந்த பிறகு எல்லாரும் தெரிஞ்சுக்கட்டுமே!!"..
"சரி.. தெரிஞ்சிக்க.. அந்த கௌதம் கொஞ்ச நாள் என்னோட சூப்பர் மார்க்கெட்ல மேனேஜரா வேலை பார்த்தான்.. ஏகப்பட்ட தகிடு தத்தோம்.. திருட்டுத்தனம் செஞ்சு மாட்டிக்கிட்டான்.. அவன் போர்ஜரி வேலைகள் செய்து கையும் களவுமா மாட்டிக்கிட்டதுக்கான ஆதாரங்களை வீட்லதான் வச்சிருந்தேன்.. எங்க நான் போலீஸ் கிட்ட சொல்லிடுவேனோன்னு பயந்து நான் எப்ப வெளியே போவேன்னு காத்திருந்து அந்த ஃபைலை திருட வந்திருக்கலாம்.. கதவை திறந்திருந்தது அவனுக்கு வசதியா போயிடுச்சு.. அறைக்குள்ள நுழைஞ்ச நேரத்துல தேன்மலர் எழுந்து சத்தம் போட்டிருக்கலாம்"..
"சத்தம் போட்டு காட்டி கொடுத்துடாதீங்கன்னு அவ கையை பிடித்து அவன் கெஞ்சி இருக்கலாம்"..
"எல்லாம் யூகம்தானே?".. நக்கலாக இதழ் வளைத்தாள் ராகினி..
"இதுதான் உண்மை.. என் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துட்டேன்.. நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம்.. இதுக்கு மேல அவளைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லி இருக்கனும்.. அவளை நிக்க வைச்சு கேள்வி கேட்க நீ யாரு?.. வடிவேலா உன் பொண்டாட்டிய அடக்கி வை.. எப்பவும் இதே மாதிரி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்".. கடைசி வார்த்தைகளில் கர்ஜித்தான் அவன்..
"ஹான்.. பிடிக்கலன்னு அவமானப்படுத்திட்டு போன பொண்டாட்டி மேல இவ்ளோ நம்பிக்கை.. இன்னும் பிடிச்சு குடும்பம் நடத்தியிருந்தா இவரை கையிலே பிடிக்க முடியாது".. முணுமுணுப்பதை போல் ராகினி சத்தமாக சொல்லியிருக்க.. செண்பக பாண்டியன் உயிரில் அடி வாங்கி தேன் மலரை பார்க்க அவளும் இவ்வார்த்தைகளில் துடித்துப் போனாள்..
மீண்டும் ஒரு முறை பளாரென அறை விழுந்தது.. இம்முறை அவள் கணவன் வடிவேலன்தான் அறைந்திருந்தான்.. ராகினி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்தம்பித்து நிற்க..
"என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஓவரா பேசிகிட்டு இருக்க.. இது அவங்க சம்பந்தப்பட்ட பிரச்சனை அவங்களே பேசித் தீர்த்துக்குவாங்க.. இந்த வீட்டுக்கு நீ என்னடி நாட்டாமை!!.. என் அண்ணன் பிரச்சனையை இழுத்துட்டு வந்து இங்க வைச்சு பேசற அளவுக்கு உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தது.. முதல்ல நீ எதுக்குடி நம்பனும்.. என் அண்ணன் அண்ணியை நம்பறாரு.. அது போதும்.. ஒழுங்கா வாய மூடிக்கிட்டு தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாம இங்க இருக்கறதுனா இரு.. இல்லனா இப்பவே உங்க வீட்டுக்கு நடையை கட்டு".. என்றவனை நம்ப இயலாத அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ராகினி.. மானே தேனே பொன்மானே என்று மையலோடு கொஞ்சியவனா இவன்..
பிரச்சனை என்று வெளிப்படுகிறதோ அன்றுதானே தீர்வு கிடைக்கும்.. அவ்வப்போது குதர்க்கமாக பேசிக் கொண்டிருந்தாலும் மூன்றாவது மருமகள் வந்த பிறகு தானே ராகினியின் குணங்கள் தேள் கொடுக்காக வெளிப்படுகிறது..
இனியும் அங்கு நிற்பது சரிவராது என தங்கள் அறைக்குள் ஓடியிருந்தாள் தேன்மலர்..
அண்ணனிடம் அடி வாங்கியது போதாதென தம்பியிடமும் அடிவாங்கி.. அவமானப்பட்டு அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் ராகினி..
"இதே தான் உனக்கும் தேவையில்லாத விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க பழகு" அதையே சாக்காக வைத்து வடிவேலனும் தர்ஷினியிடம் சீறினான்.. "ஆத்தாடி நமக்கு அடி வாங்க தெம்பில்லை".. என்ற ரீதியில் கமுக்கமாக தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்..
"அண்ணா சாரி தேவையில்லாம எதையோ இழுத்து வச்சு உங்க மனச கஷ்டப்படுத்திட்டா.. அவளுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எழுந்து சென்றான் வடிவேலன்..
கார்முகிலனும் தர்ஷினியும் கூட மன்னிப்பு கேட்டு விட்டு சென்றுவிட அன்னையிடம் வந்தான் செண்பக பாண்டியன்..
"என்னம்மா நீங்களும் அவளை நம்பலையா?".. அவனின் அழுத்தமான கேள்விக்கு சாந்தமான பார்வையுடன் மகனை ஏறிட்டாள் நீலவேணி..
"இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும் அந்த விஷயத்தை மனசில் தூக்கி வைச்சு விவாதிக்க நான் ஒன்னும் ராகினி இல்லை.. நான் உன்னோட அம்மாடா"..
"ஆனா.. ஒரு விஷயம்.. உண்மை என்னன்னு உனக்கும் தெரியாது.. இருந்தாலும் அவளை கண்மூடித்தனமா நம்பி அழகா விளக்கம் கொடுக்கிறியே.. அதுதான் ஏன்னு தெரியல"..
"அம்மா!!"..
"குடும்பத்து ஆளுங்க முன்னாடி அவளை ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுக்காமல் நீ பேசுறதும்.. அவ அழுத உடனே துடிக்கிறதும்.. உன் பொண்டாட்டி மேல நீ வைச்சிருக்கிற பிரியம் தானே.. இன்னும் அவளை விரும்பறியா கண்ணா!!"
அமைதியாக நின்றான் செண்பக பாண்டியன்.. மகனின் தடுமாற்றம் கண்டு..
"யோசிச்சு தெளிவா ஒரு முடிவெடு செண்பா.. திரும்பத் திரும்ப நீ ஏமாந்து நிக்கிறதை பார்க்க எனக்கு சக்தி இல்லை".. என்று விட்டு நீலவேணி அங்கிருந்து சென்றுவிட.. சிலகணங்கள் அமைதியாக அங்கேயே நின்று கொண்டிருந்தான் செண்பகன்..
அறைக்குள் அவன் நுழைகையில் கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் தேன்மலர்..
பார்வையில் தடுமாற்றத்தோடு நெஞ்சோரம் நீவி விட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.. "சாரி கௌதமனை திருடனா சித்தரிச்சிட்டேன் மன்னிச்சிடு"..
கண்ணீருடன் நிமிர்ந்தாள் மலர்.. "எதுக்காக அப்படி ஒரு பொய் சொன்னீங்க"..
"உன்னை யாரும் தப்பா பேசக்கூடாது.. யார் முன்னாடியும் நீ தலை குனிஞ்சு நிக்கக்கூடாது"..
"ஆனா நான் உங்களை தல குனிஞ்சு நிக்க வைச்சிட்டேனே!!..
"அது பரவாயில்ல விட்டுடு"..
என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் மலர்..
"சரி அழாதே!!".. அழுத்தமாக பற்களை கடித்து சொன்னவன் மீண்டும் நெஞ்சை தடவிக் கொண்டான்..
"நான் எனக்காக ஒண்ணும் அழல"..
"ஒஹோ.. புரியுது".. அவன் யாரை நினைத்தானோ தெரியவில்லை..
சில நொடிகள் மவுனத்திற்கு பின்
"கௌதம் ஏன் இங்கே வந்தார் என்ன பேசினார்ன்னு கேட்க மாட்டீங்களா?"..
"அது எனக்கு தேவையில்லாத விஷயம்.. ரொம்ப தலை வலிக்குது நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்".. என்றவன்... படுக்கை விரிப்பை கீழே விரித்து படுத்துக் கொள்ள மவுனப் பார்வையோடு அவனை வெறித்தாள் மலர்..
அடுத்த நான்காவது நாளில் யாருக்கும் தெரியாமல் கவுதமனை சந்திக்க சென்றிருந்தாள் அவள்.. இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த வேளையில் அழையா விருந்தாளியாக அங்கு வந்து நின்றான் செண்பக பாண்டியன்.. அடுத்து அங்கே நிகழ்ந்ததெல்லாம் விரும்பதகாத சம்பவங்களாகிப் போக.. விதிர்த்து போனாள் மலர்..
தொடரும்..
"என்ன.. என்ன சொல்றிங்க?".. விழிகளில் ஆனந்த கண்ணீருடன் ஆர்ப்பரித்து.. தேன்மலர் கேட்ட விதத்தில் அவன் வேதனை கொள்ளவில்லை.. இறந்து போனதாக சொல்லப்பட்டவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டதில் இயல்பாக தோன்றும் மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம்..
அதுதான் உண்மையும் கூட.. மூன்றாம் மனிதர்களால் கூட இறந்தவன் உயிரோடு வந்துவிட்டான் என்று கேட்க இப்படி சந்தோஷப்பட முடியும்.. கௌதம் தன்னால் தான் தற்கொலை செய்து கொண்டதாக இதுநாள் வரையிலும் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவள் தன்னை மீட்டுக் கொண்டதற்கான ஆனந்தத்தின் வெளிப்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம்..
ஆனால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் அழுது தீர்த்தவள் அடுத்து சொன்ன வார்த்தை.. "எனக்கு அவர் கூட பேசணும்.. ஒரே ஒருமுறை அவர் கூட பேசணும்.. ப்ளீஸ் ஏற்பாடு செய்யுங்க".. காலில் விழாத குறையாக கெஞ்சிய நிலைதான் சகிக்க முடியாத கசப்பை சுவைப்பதாய்!!..
"நம்பர் இருக்கு".. என்று தனது அலைபேசியிலிருந்து கவுதமிற்கு அழைத்து அவளிடம் கொடுத்தான் செண்பகன்..
"ஹலோ.. ஹலோ".. என்றவளுக்கு எதிர் முனையில் பேசுவது கேட்கவில்லை..
"ஒ.. ஒரு நிமிஷம்.. வெளியே வந்து பேசறேன்".. கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடியவளின் முதுகை வெறுமையான விழிகளுடன் வெறித்தான் அவன்..
ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து கட்டிலில் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தவனிடம் ஃபோனை கொடுத்தாள்..
"பேசியாச்சா?".. கற்பாறையாக இறுகிய முகத்தோடு அவள் விழி பார்க்க தவிர்த்து ஃபோனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்..
"ஹ்ம்ம்".. என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு உங்க பெரிய தங்கச்சியோட கணவர் மதன் குமார் .. எங்களுக்கு தூரத்து சொந்தம்.. அண்ணன் முறை..
"ஹ்ம்ம் தெரியும்!!".. என்றான் தலையசைத்து..
"அவர்தான் கௌதம்மை மிரட்டி ஊரை விட்டுப் போக வச்சிருக்காரு.. என் ஃப்ரெண்ட் திவ்யா மூலமா கௌதம் இறந்துட்டதா எனக்கு தெரியப்படுத்தி இருக்காரு.. ஆனா ஏன்னு தெரியல".. குழம்பி நின்றாள் தேன்மலர்..
"அதற்கு காரணம் நீதான்!!" என்றால் செண்பக பாண்டியன் அவளை ஏறிட்டு..
"நா.. நானா?"..
"ஆமாம்.. கல்யாணத்துக்கு முதல் நாள் எனக்கு போன் செஞ்சதா சொன்னியே.. அந்த கால் அட்டெண்ட் செஞ்சது உன்னோட அண்ணன் மதன்குமார் தான்"..
அதிர்ச்சியில் விழி விரித்தாள் அவள்..
"என்னை தேடி அறைக்கு வந்தவர் போன் ரிங் ஆனதுல ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கலாம்னு.. கால் அட்டென்ட் பண்ணி பேசி இருக்கார்"..
"அப்பதான் நீ ஃபோன்ல பேசினது நான்னு நினைச்சு கல்யாணத்தை நிறுத்த சொல்லி அழுதிருக்க.. இது எங்க குடும்பம் மட்டும் இல்ல அவங்க குடும்ப கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. ஏன்னா அவர் மூலமா தான் நாங்க உன்னை பெண் பார்க்க வந்ததும் திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சதும்.. கல்யாணம் நின்னு ஏதாவது ஏடாகூடம் ஆகிட்டா அது எங்க ரெண்டு குடும்ப உறவுகளை ரொம்பவே பாதிக்கும்.. அண்ணனா உனக்கு பதில் சொன்னா நீ மறுபடியும் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்வேன்னுதான்.. என்னை மாதிரியே பேசி உன்னை குழப்பி விட்டிருக்காரு"..
"அதுவுமில்லாம.. கௌதமனை கொல்ல முடியாது ஆனால் செத்துப் போன மாதிரி வதந்தியை கிளப்பி விட்டுட்டா அவனை மறந்துட்டு நீ சந்தோஷமா இருப்பேன்னு தான் இப்படி ஒரு வேலை பார்த்திருக்கிறாரு".. அதிர்ச்சியில் உறைந்து போனாள் தேன் மலர்..
"அப்போ அவருக்கு முன்னாடியே எல்லா விஷயமும் தெரியுமா?"..
"தெரியாது.. நீதான் போன்ல உளறி மாட்டிக்கிட்ட.. ஆனாலும் அடுத்த நாள் காலையில கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஏதாவது தப்பு நடந்துட்டா உன் அப்பாவோட மானமும் என்னோட மரியாதையும் பாதிக்கப்படும்னு தான் அவர் அப்படி சொன்னது.. அடுத்த நாள் உன் அப்பா கிட்ட விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு கௌதமன் ஊருக்கு நேரடியா போய் மத்த வேலைகளை நேக்கா பார்த்து முடிச்சிட்டாரு.. இது உன் அப்பாவுக்கே தெரியாது..
"ஆ.. ஆனா அம்மாகிட்டே கவுதமன் செத்துட்டாரா கேட்டதுக்கு ஆமாம்னு சொன்னாங்களே?".. சட்டென நினைவில் தேன்றியதை கேட்டாள்..
"அப்படி சொன்னாதானே நீ எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா வாழ்வே!!.. நீ கேட்டே அவங்க ஆமாம்னு சொன்னாங்க. அவ்வளவுதான்".. என்றதும் எல்லாம் புரிந்தது அவளுக்கு..
"நீ அன்னிக்கு நடந்த உண்மையை சொன்ன பிறகு யார் இந்த வேலையை பார்த்திருப்பாங்கன்னு ரொம்ப யோசிச்சேன்.. உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரே ஆள் என்னோட மச்சான் மதன் குமார் தான்.. அவரைக் கூப்பிட்டு விசாரிச்சேன்.. உண்மையை ஒத்துக்கிட்டார்.. ஆனா நீ கவலைப்பட வேண்டாம் இந்த விஷயத்தை அவர் யார்கிட்டயும் சொல்ல மாட்டார்.. ஏன்னா நம்ம குடும்பத்தோட மானம் மரியாதைல அவருக்கும் பங்குண்டு".. என்றான் நீண்ட விளக்கமாக..
இழுத்து பெருமூச்சு விட்டாள் தேன்மலர்.. "அவரால எவ்வளவு குழப்பம்.. உங்களை தப்பா நினைச்சு நானும் குற்ற உணர்ச்சியில மருகி தவிச்சு அப்பப்பா.. தேவையில்லாத எவ்வளவு பிரச்சனைகள்".. விழிகள் மூடி திறந்தவள் நன்றாக தெளிந்திருந்தாள்.. அவள் பேச்சிலும் கூட சட்டென வானம் இருட்டிக்கொண்டு சில்லென காற்றோடு சாரல் தெளிப்பதாய் புத்துணர்ச்சி தென்படுவதை சிறுதலையசைப்புடன் குறித்துக் கொண்டான் செண்பக பாண்டியன்..
அவர் நமக்கு நல்லது செய்யத்தான் நினைச்சார்.. ஆனா குழப்பம் ஆகிடுச்சு.. எனக்காக அவரை மன்னிச்சிடு..
"அச்சோ.. நான் போய் அவரை மன்னிக்கிறதாவது.. எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது அதுவரை சந்தோஷம்".. புன்னகையோடு மலர்ந்து சொன்னவளை.. விழிகள் சுருங்க ஆராய்ந்தான் செண்பகன்.. எது நல்லபடியா முடிஞ்சது? இதயத்திற்குள் கேள்வி..
கௌதமனோடு என்ன பேசினாய் என்று அவனும் கேட்கவில்லை.. இதைத்தான் பேசினேன் என்று அவளும் சொல்லவில்லை..
ஆனால் பிரச்சினைகள் சங்கிலி தொடர்களாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வாழ்க்கையில் தீராத துயரங்களை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால்.. தன் மனதின் உணர்வுகளை வெளிப்படையாக அவனிடம் கொட்டி தீர்த்தீருப்பாள்..
அன்று.. காலை ஐந்து மணியளவில் தரையில் படுக்கிறேன் பேர்வழி என்று உருண்டு வந்து தன் படுக்கை விரிப்பில் படுத்து கொண்டிருந்தவளை ஐந்து நிமிடங்களாய் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்.. பின் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்.. வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன்.. ஈர முகத்தை துடைத்துக் கொண்டே தேன் மலரை தட்டி எழுப்பினான்..
உறக்க கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
"முக்கியமான வேலை இருக்கு நான் புறப்படறேன்.. கதவை தாழிட்டுக்கோ".. என்றுவிட்டு வெளியேறி விட.. நித்திரை தந்த மயக்கத்திலும் எழுந்து செல்ல சலித்து சோம்பேறித்தனத்திலும் வழக்கம் போல் கதவை தாழிட்டுக்க் கொள்ளாமல் அந்த இடத்திலேயே உறங்கிப் போனது அவளுக்கே பாதகமாய் முடிந்து போனது..
செண்பகன் வேலைகளை முடித்து திரும்பி வந்த நேரத்தில்.. வீடே ஒரே களேபரமாய் இருந்தது..
கூடத்தில் தேன்மலர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டது போல் அழுது கொண்டிருந்தாள்..
வழக்கம்போல் ராகினி இந்த வழக்கின் நடுவர் போல் அலட்டலாக நின்று கொண்டிருக்க.. நீலவேணியின் முகத்தில் ஒரு ஏகப்பட்ட குழப்பம்.. தர்ஷினி சொல்புத்தி பிள்ளையாய் ராகினி பக்கம் நின்று கொண்டிருந்தாள்..
தேன்மலரின் எதிர் வாதமில்லாத அமைதியும் அழுகையும்.. ராகினியின் குற்றச்சாட்டை வலுவாக்கிக் கொண்டிருக்க..
"வாய் திறந்து ஏதாவது பதில் சொல்லுங்க அண்ணி" என்று.. கேள்விகளால் அவளை துளைத்துக் கொண்டிருந்தான் கார்முகிலன்..
"என்ன நடக்குது?.. என்ன ஆச்சு".. தேன்மலர் அழுது கொண்டிருந்ததிலும் குற்றம் சாட்டும் தோரணையோடு மற்றவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த விதத்திலும் செண்பக பாண்டியனின் குரலில் கடுமை கூடியிருந்தது..
"இதோ இவரே வந்துட்டாரு.. இவர்கிட்டேயே கேளுங்களேன்".. ராகினி இதுதான் சாக்கென்று செண்பகனிடம் தாவினாள்..
"என்ன விஷயம்னு கேக்கறேன்ல.. ராகினியிடம் பேச விருப்பமில்லாது தன் அன்னையிடம் கத்தினான் செண்பகன்..
"நானே சொல்றேன்".. முன் வந்து நின்று துவங்கினாள் ராகினி..
"வேலை செய்றவங்க ஆறு மணிக்கு வந்துருவாங்க.. அதனால கதவை திறந்து வைக்கலாம்னு வந்தேன்.. அப்போதான் அந்த ஆள் கதவை திறந்துக்கிட்டு உள்ளே வந்தான்.. யாராவது இருக்காங்களான்னு திருட்டுத்தனமா சுத்தி சுத்தி பார்த்துகிட்டு சத்தம் போடாம இதோ அத்தான் அறைக்குள்ள போனான்.. நான் அப்படியே திகைச்சு போயிட்டேன்"..
"ஒருவேளை திருடனா இருப்பானோ.. உள்ளே மலர் வேற இருக்காளே.. இவனால அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துருச்சுன்னா.. ஒருவேளை அத்தான் அறையில இருந்து எதையாவது திருட வந்துருந்தா.. கையும் களவுமாக பிடிக்கணுமே.. அதனால வேகமா போய் அறைக்கு வெளியே நின்னு எட்டி பாத்தேன்"..
"அங்கே.. அங்கே.. மலரோட கையை பிடிச்சுக்கிட்டு அவன் என்னமோ உருகி உருகி பேசிகிட்டு இருந்தான்.. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்த மாதிரி ரொம்ப நெருக்கமா நின்னுகிட்டு இருந்தாங்க.. ஆனா என்ன பேசிக்கிட்டாங்க காதுல விழல"..
"டேய் யாருடா நீ.. நீங்க என்ன செய்றன்னு நான் கத்தின பிறகு அவன் என்னை தள்ளி விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.. உண்மை எல்லாருக்கும் தெரியனும்தான்தான் சபையை கூட்டினேன்..
தேன்மலரின் அருகே வந்தான் செண்பக பாண்டியன்..
"யாரு வந்தது?"..
இதழ் கடித்து அழுகையை விழுங்கி கொண்டு.. "க.. கவுதம்".. என்றதில் திகைத்து நின்றான் செண்பக பாண்டியன்..
"இப்ப தெரியுதா உங்க பொண்டாட்டி ஏன் உங்களை பிடிக்கலைன்னு சொன்னான்னு.. ஏன்னா அவளுக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருந்துருக்கு".. முடிப்பதற்குள் பளாரென ஒரு அறை விழுந்தது..
செண்பக பாண்டியன் கண்கள் சிவந்து நின்று கொண்டிருக்க அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது மொத்த குடும்பமும்..
"அடி.. அடிச்சிட்டீங்க.. என்னை அடிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?".. ஆத்திரத்தில் வெடித்தாள் ராகினி.. இதில் யாரும் அவனை ஒரு கேள்வி கேட்கவில்லை என்றதில் மென்மேலும் கொதிப்பு..
"என் படுக்கை அறையை எட்டிப் பார்க்க உனக்கு உரிமை இருக்குன்னா உன்னை அடிக்கிற உரிமை எனக்கும் இருக்கு.. என் பொண்டாட்டி மேல பழி சொல்ற அளவுக்கு உனக்கு துணிச்சல் இருக்குன்னா உன்னை அடிக்கிறதுக்கான வலுவான காரணம் என்கிட்டேயும் இருக்கு".. என்றான் அழுத்தமாக..
"ஓஹோ.. உங்க பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றீங்களா!!.. வாசல் கதவையும்.. பெட்ரூம் கதவையும் நீங்க போன பிறகு திறந்து வைச்சு அவனை உள்ளே விட்டது அவ தானே?"..
"காலையில வேலையா கிளம்பும்போது ரூம் கதவையும் வாசல் கதவையும் திறந்து வெச்சிட்டு போனது நானு.. தூக்க கலக்கத்துல மறுபடியும் எழுந்து வந்து அவ தாழ் போட மறந்துட்டா.. வீட்டு வாசலும்.. என் ரூம் வாசலும் திறந்திருந்த விஷயம் எனக்கே தெரியும்.. நீ ஒன்னும் விளக்கம் கொடுக்க வேண்டாம்..
"ஹான்.. அப்போ.. அவன் கையைப் பிடிச்சு பேசிட்டு நின்னது?"..
"கண்டிப்பா இதுக்கு நான் விளக்கம் கொடுக்கணுமா".. புருவங்களை உயர்த்தினான் கூர் பார்வையுடன்..
"ஆமா.. விஷயம் சபைக்கு வந்த பிறகு எல்லாரும் தெரிஞ்சுக்கட்டுமே!!"..
"சரி.. தெரிஞ்சிக்க.. அந்த கௌதம் கொஞ்ச நாள் என்னோட சூப்பர் மார்க்கெட்ல மேனேஜரா வேலை பார்த்தான்.. ஏகப்பட்ட தகிடு தத்தோம்.. திருட்டுத்தனம் செஞ்சு மாட்டிக்கிட்டான்.. அவன் போர்ஜரி வேலைகள் செய்து கையும் களவுமா மாட்டிக்கிட்டதுக்கான ஆதாரங்களை வீட்லதான் வச்சிருந்தேன்.. எங்க நான் போலீஸ் கிட்ட சொல்லிடுவேனோன்னு பயந்து நான் எப்ப வெளியே போவேன்னு காத்திருந்து அந்த ஃபைலை திருட வந்திருக்கலாம்.. கதவை திறந்திருந்தது அவனுக்கு வசதியா போயிடுச்சு.. அறைக்குள்ள நுழைஞ்ச நேரத்துல தேன்மலர் எழுந்து சத்தம் போட்டிருக்கலாம்"..
"சத்தம் போட்டு காட்டி கொடுத்துடாதீங்கன்னு அவ கையை பிடித்து அவன் கெஞ்சி இருக்கலாம்"..
"எல்லாம் யூகம்தானே?".. நக்கலாக இதழ் வளைத்தாள் ராகினி..
"இதுதான் உண்மை.. என் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துட்டேன்.. நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம்.. இதுக்கு மேல அவளைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லி இருக்கனும்.. அவளை நிக்க வைச்சு கேள்வி கேட்க நீ யாரு?.. வடிவேலா உன் பொண்டாட்டிய அடக்கி வை.. எப்பவும் இதே மாதிரி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்".. கடைசி வார்த்தைகளில் கர்ஜித்தான் அவன்..
"ஹான்.. பிடிக்கலன்னு அவமானப்படுத்திட்டு போன பொண்டாட்டி மேல இவ்ளோ நம்பிக்கை.. இன்னும் பிடிச்சு குடும்பம் நடத்தியிருந்தா இவரை கையிலே பிடிக்க முடியாது".. முணுமுணுப்பதை போல் ராகினி சத்தமாக சொல்லியிருக்க.. செண்பக பாண்டியன் உயிரில் அடி வாங்கி தேன் மலரை பார்க்க அவளும் இவ்வார்த்தைகளில் துடித்துப் போனாள்..
மீண்டும் ஒரு முறை பளாரென அறை விழுந்தது.. இம்முறை அவள் கணவன் வடிவேலன்தான் அறைந்திருந்தான்.. ராகினி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்தம்பித்து நிற்க..
"என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. ஓவரா பேசிகிட்டு இருக்க.. இது அவங்க சம்பந்தப்பட்ட பிரச்சனை அவங்களே பேசித் தீர்த்துக்குவாங்க.. இந்த வீட்டுக்கு நீ என்னடி நாட்டாமை!!.. என் அண்ணன் பிரச்சனையை இழுத்துட்டு வந்து இங்க வைச்சு பேசற அளவுக்கு உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தது.. முதல்ல நீ எதுக்குடி நம்பனும்.. என் அண்ணன் அண்ணியை நம்பறாரு.. அது போதும்.. ஒழுங்கா வாய மூடிக்கிட்டு தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாம இங்க இருக்கறதுனா இரு.. இல்லனா இப்பவே உங்க வீட்டுக்கு நடையை கட்டு".. என்றவனை நம்ப இயலாத அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ராகினி.. மானே தேனே பொன்மானே என்று மையலோடு கொஞ்சியவனா இவன்..
பிரச்சனை என்று வெளிப்படுகிறதோ அன்றுதானே தீர்வு கிடைக்கும்.. அவ்வப்போது குதர்க்கமாக பேசிக் கொண்டிருந்தாலும் மூன்றாவது மருமகள் வந்த பிறகு தானே ராகினியின் குணங்கள் தேள் கொடுக்காக வெளிப்படுகிறது..
இனியும் அங்கு நிற்பது சரிவராது என தங்கள் அறைக்குள் ஓடியிருந்தாள் தேன்மலர்..
அண்ணனிடம் அடி வாங்கியது போதாதென தம்பியிடமும் அடிவாங்கி.. அவமானப்பட்டு அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டிருந்தாள் ராகினி..
"இதே தான் உனக்கும் தேவையில்லாத விஷயத்துல தலையிட்டா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க பழகு" அதையே சாக்காக வைத்து வடிவேலனும் தர்ஷினியிடம் சீறினான்.. "ஆத்தாடி நமக்கு அடி வாங்க தெம்பில்லை".. என்ற ரீதியில் கமுக்கமாக தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் அவள்..
"அண்ணா சாரி தேவையில்லாம எதையோ இழுத்து வச்சு உங்க மனச கஷ்டப்படுத்திட்டா.. அவளுக்காக என்னை மன்னிச்சிடுங்க".. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எழுந்து சென்றான் வடிவேலன்..
கார்முகிலனும் தர்ஷினியும் கூட மன்னிப்பு கேட்டு விட்டு சென்றுவிட அன்னையிடம் வந்தான் செண்பக பாண்டியன்..
"என்னம்மா நீங்களும் அவளை நம்பலையா?".. அவனின் அழுத்தமான கேள்விக்கு சாந்தமான பார்வையுடன் மகனை ஏறிட்டாள் நீலவேணி..
"இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும் அந்த விஷயத்தை மனசில் தூக்கி வைச்சு விவாதிக்க நான் ஒன்னும் ராகினி இல்லை.. நான் உன்னோட அம்மாடா"..
"ஆனா.. ஒரு விஷயம்.. உண்மை என்னன்னு உனக்கும் தெரியாது.. இருந்தாலும் அவளை கண்மூடித்தனமா நம்பி அழகா விளக்கம் கொடுக்கிறியே.. அதுதான் ஏன்னு தெரியல"..
"அம்மா!!"..
"குடும்பத்து ஆளுங்க முன்னாடி அவளை ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுக்காமல் நீ பேசுறதும்.. அவ அழுத உடனே துடிக்கிறதும்.. உன் பொண்டாட்டி மேல நீ வைச்சிருக்கிற பிரியம் தானே.. இன்னும் அவளை விரும்பறியா கண்ணா!!"
அமைதியாக நின்றான் செண்பக பாண்டியன்.. மகனின் தடுமாற்றம் கண்டு..
"யோசிச்சு தெளிவா ஒரு முடிவெடு செண்பா.. திரும்பத் திரும்ப நீ ஏமாந்து நிக்கிறதை பார்க்க எனக்கு சக்தி இல்லை".. என்று விட்டு நீலவேணி அங்கிருந்து சென்றுவிட.. சிலகணங்கள் அமைதியாக அங்கேயே நின்று கொண்டிருந்தான் செண்பகன்..
அறைக்குள் அவன் நுழைகையில் கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் தேன்மலர்..
பார்வையில் தடுமாற்றத்தோடு நெஞ்சோரம் நீவி விட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.. "சாரி கௌதமனை திருடனா சித்தரிச்சிட்டேன் மன்னிச்சிடு"..
கண்ணீருடன் நிமிர்ந்தாள் மலர்.. "எதுக்காக அப்படி ஒரு பொய் சொன்னீங்க"..
"உன்னை யாரும் தப்பா பேசக்கூடாது.. யார் முன்னாடியும் நீ தலை குனிஞ்சு நிக்கக்கூடாது"..
"ஆனா நான் உங்களை தல குனிஞ்சு நிக்க வைச்சிட்டேனே!!..
"அது பரவாயில்ல விட்டுடு"..
என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் மலர்..
"சரி அழாதே!!".. அழுத்தமாக பற்களை கடித்து சொன்னவன் மீண்டும் நெஞ்சை தடவிக் கொண்டான்..
"நான் எனக்காக ஒண்ணும் அழல"..
"ஒஹோ.. புரியுது".. அவன் யாரை நினைத்தானோ தெரியவில்லை..
சில நொடிகள் மவுனத்திற்கு பின்
"கௌதம் ஏன் இங்கே வந்தார் என்ன பேசினார்ன்னு கேட்க மாட்டீங்களா?"..
"அது எனக்கு தேவையில்லாத விஷயம்.. ரொம்ப தலை வலிக்குது நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்".. என்றவன்... படுக்கை விரிப்பை கீழே விரித்து படுத்துக் கொள்ள மவுனப் பார்வையோடு அவனை வெறித்தாள் மலர்..
அடுத்த நான்காவது நாளில் யாருக்கும் தெரியாமல் கவுதமனை சந்திக்க சென்றிருந்தாள் அவள்.. இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த வேளையில் அழையா விருந்தாளியாக அங்கு வந்து நின்றான் செண்பக பாண்டியன்.. அடுத்து அங்கே நிகழ்ந்ததெல்லாம் விரும்பதகாத சம்பவங்களாகிப் போக.. விதிர்த்து போனாள் மலர்..
தொடரும்..
Last edited: