- Joined
- Jan 10, 2023
- Messages
- 73
- Thread Author
- #1
"மதி.. மத்தியானம் செஞ்ச பிரியாணி மிச்சமிருக்கு.. சூடு பண்ணி வச்சிருக்கேன்.. சாப்பிடுவாறான்னு போய் உன் வாத்தியார் கிட்ட கேளு..!" சந்திரமதியிடம் சொல்லி அனுப்பினாள் அருந்ததி..
சொல்லப்போனால் அது மிச்சமானது அல்ல.. அவனுக்காக தனியாக எடுத்து வைக்கப்பட்ட உணவு.. உங்களுக்காக தனியாக எடுத்து வைத்திருக்கிறேன் என்று நேரடியாக சொல்ல வாய் வரவில்லை.. மதியிடம் அப்படி சொல்லி அனுப்பவும் மனமில்லை..
"ரிஷி..! மதியம் செஞ்ச பிரியாணி மிச்சமிருக்குதாம் சாப்பிடுறியான்னு அம்மா கேக்கறாங்க.." வாசலில் கை வைத்துக் கொண்டு சந்திரமதி தலையை மட்டும் உள்ளே எட்டிப் பார்த்து கேட்க ரிஷி.. அவன் சொல்லப் போகும் பதிலுக்காக இந்த பக்கம் காத்திருந்தாள் அருந்ததி..
"மிச்சமானதா..?"
"ம்ம்.."
"ஓகே சாப்பிடலாமே அதுல என்ன இருக்கு..!"
"அம்மா.. ரிஷி சாப்பிடறேன்னு சொல்லிட்டார்.." பதிலை சொல்லிவிட்டு வெளியே ஓடிவிட்டாள் மதி..
"மிச்சமானது ஒன்னும் இல்ல உங்களுக்காக தனியா எடுத்து வச்சது" என்று வேகமாக அவனிடம் நின்று சொல்லிவிட துடித்தது மனம்..!
அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று கண்டிப்போடு ஏதோ ஒரு தடுப்பு சுவர் தடிமனாக எழுந்து நின்றது அவள் முன்பு..
இரவு ஹாட் பாக்சில் அவனுக்காக பிரத்தியேகமாக எடுத்து வைத்த பிரியாணியை பளிச்சென்று எவர்சில்வர் தட்டில் பரிமாறிய போது மகரிஷியின் உதட்டில் புன்னகை..!
தனக்கும் சந்திரமதிக்கும் அலுமினிய பாத்திரத்திலிருந்து எடுத்து போட்டுக்கொண்டு.. புத்தம் புதிதான ஹாட் கேஸை அவன் பக்கம் தள்ளி வைத்த பிறகும் உண்மை புரியாமல் போகுமா என்ன..?
மோத்திக்கு இன்று நல்ல வேட்டை..
மதியம் தனியாக ஒரு லெக் பீஸ் வைத்து பிரியாணியை அவன் தட்டில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்குள் ஓடி வந்திருந்தாள் அருந்ததி..
இரவு அவனுக்கு உணவு படைக்கும் பொறுப்பு மகரிஷியுடையதாகிப் போனது..
அன்று இரவு ஒரே கசகசப்பு.. தோளில் துண்டை போட்டுக்கொண்டு குளிக்கலாம் என்று குளியலறையை நோக்கி சென்றவளை இடை நிறுத்தினான் மகரிஷி..
"ஒரு நிமிஷம் அருந்ததி.." என்றதும் தோளில் போட்ட துண்டை இரு பக்கமும் போர்த்திக் கொண்டு அவன் பக்கம் திரும்பி நின்றாள் அருந்ததி..
"ஒரு வார்த்தைல நன்றின்னு சொல்றதை விட்டுட்டு நீங்க வித விதமா நன்றி கடனை காட்டறதா நினைச்சு என்னை ஸ்பெஷலா கவனிக்கிறிங்கன்னு தெரியுது.. எனக்காக அவ்வளவு மெனக்கிட வேண்டாம்..! என்னால முடிஞ்ச உதவியை செஞ்சேன் நீங்க கஷ்டப்படாதீங்க..!"
"நான் கஷ்டப்படுறேன் உங்களுக்கு யார் சொன்னது..?"
"அப்படி இல்ல..! சந்திரமதி கிட்ட மாற்றம் தெரியுதோ இல்லையோ உங்ககிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது.. முன்னாடி எப்பவும் என்ன பாத்து முறைச்சுக்கிட்டே இருப்பீங்க.. இப்ப ரொம்ப அன்பா நடந்துக்கறீங்க.."
"அன்பா நடந்துக்கறது ஒரு தப்பா..? அதுக்கெல்லாம் ஏன் ஒரு காரணம் கற்பிக்கறீங்க.. கோங்ரா.."
"ஏமி..?"
"இல்ல கோங்குரா ஊறுகாய் செய்ய தெரியுமான்னு ஒரு நாள் கேட்டீங்களே..? மதி கிட்ட சொல்லி யூடியூப்ல பார்த்து செஞ்சு தரேன்னு சொல்ல வந்தேன்..'
"ஓஹோ.. என் அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க.. அம்மா பொதுவா எல்லா வெரைட்டியும் நல்லா சமைப்பாங்க..! உங்களை மாதிரியே..!" உற்சாகமாக ஆரம்பித்து இறுதியில் அவன் வெறுமையாக முடிக்கவும் கனிந்து நின்றாள் அருந்ததி..
இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தில் மின்விளக்கு துரதிஷ்டவசமாக எரியாமல் போகவே.. அவன் கையை காற்றில் வீசி பேசியதெல்லாம் எதிரே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தெருவாசிகளுக்கு அருந்ததியை தொட்டு தொட்டு சரசமாடுவதை போல் தோன்றியதோ என்னவோ..!
"இங்க பாருங்க.. நன்றி கடனுக்காகவோ இல்ல.. உங்ககிட்ட பணமா வாங்கின கடனுக்காகவோ நான் இதையெல்லாம் செய்யல..!" என்றவள் ஒரு கணம் நிறுத்தி தடுமாற்றத்துடன்.. விருப்பப்பட்டு தான் செய்யறேன்.. என்று தரையை பார்த்தபடி முடித்தாள்..
"விருப்பம்னா.. பிரேமாவா?" (காதல்)அவன் குரல் இறங்கியது..
"எந்த பிரேமா..? பிரேமானு எனக்கு யாரையும் தெரியாது.."
"ஐயோ அது இல்லடி.."
"டி யா..?"
"இது மரியாதையான டி.."
"சரி சொல்லுங்க.."
"ஐ மீன் கா.." என்று ஆரம்பித்தவன்.. "இல்ல என் மேல தனிப்பட்ட அன்பான்னு கேட்க வந்தேன்" என்றான் உதடு கடித்து புன்னகையுடன்..
"தனிப்பட்ட அன்பெல்லாம் இல்ல.. ஒரு பொதுவான அன்பு.. நீங்க ஹவுஸ் ஓனர்.. எங்களுக்கு எவ்வளவோ நன்மை செஞ்சிருக்கீங்க..! உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு அவ்வளவுதான்.." தெளிவாக சொல்லி முடித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றாள் அருந்ததி..
"ஹவுஸ் ஓனரா..? அடியேய்.. அருந்ததி.. அவ்வளவுதானா..?" இடுப்பில் கைவைத்து கீழுட்டை கடித்தான்..
"ஏய்.. ஏய் அங்க பாருடி அருந்ததி பின்னாடி அவனும் பாத்ரூமுக்கு போறான்.." சத்யராஜ் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு எட்டிப் பார்க்க அவன் தலையில் தட்டினாள் கனகா..
"மூதேவி அது அவளோட நிழல்.. அவன் அந்தப் பக்கம் போயாச்சு.." என்றாள் முறைப்பாக..
ஈஈஈஈ.. என்று அசடு வழிந்தவன்.. "ஆனாலும் காணாம போன பொண்ணு எப்படி திரும்பி வந்துச்சு தெரியலையே.." என பேச்சை மாற்றினான் சத்யராஜ்..
"யாருக்கு தெரியும்.. எங்கேயாவது சொந்தக்காரங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துருப்பா..!"
"ஏன்டி சொந்தக்காரங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்து அவளே அழுவாளா என்ன..? ஒருவேளை ஏதாவது லவ் மேட்டரா இருக்குமோ.. அந்த பிள்ளை யாராவது பையன் கூட ஓடிப் போயிருக்குமோ.."
"
ச்சீ.. வாய கழுவு.. சின்ன பிள்ளைய பத்தி கேவலமா பேசிக்கிட்டு.. அந்த பொண்ணுக்கு 12 வயசு தான் ஆகுது.. இன்னும் வயசுக்கு கூட வரல..!"
"ஆமா நீ எந்த காலத்துல இருக்க.. இப்பல்லாம் நண்டும் சிண்டும் ஜோடியா ரீல்ஸ் பண்ணுதுங்க.. 12 வயசானாலும் பார்க்க 16 வயசு புள்ள மாதிரி நெடு நெடுன்னு வளர்ந்து நிக்குதே.. எனக்கென்னமோ இதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்திருக்கும்ன்னு தோணுது.."
"என்னவோ நமக்கென்ன தெரியுது.. போனது நல்லபடியா திரும்பி வந்துடுச்சு.. அது போதும்.. சின்னதவிடு.. வீட்டுக்குள்ள போடுற ஆட்டம் பத்தாதுன்னு வெளிய வந்து இருட்டுல என்ன காம களியாட்டம் வேண்டி கிடக்குது..! மத்தியானம் பிரியாணி.யெல்லாம் அமர்க்களமா தயார் ஆச்சாமே..! நம்ம சஞ்சீவ் பையன் வந்து சொன்னான்.."
"கள்ளக்காதல் பிரியாணிக்கு ருசி அதிகம்..!"
"காபி கொண்டு போய் கொடுக்கறதும் பிரியாணி சமைச்சு வைக்கிறதும்.. தனியா கூப்புட்டு வச்சி ரகசியமா பேசுறதும்.. இதெல்லாம் எதுக்காக..?"
"எல்லாம் இருட்டுல நடக்கப்போற அந்த அஞ்சு நிமிஷம் மேட்டருக்காக தான்.."
"இவனுக்கு வேற ஆளே கிடைக்கலையா..! ஹீரோ மாதிரி இருக்கான்.. கண்ண காட்டினா ஆயிரம் பொண்ணுங்க இவன் காலடியில் வந்து விழுவாங்களே.. இவள போய்"
"ஏய் என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன்.. அன்னையிலிருந்து அந்த ஆள் என்னமோ ரொம்ப அழகன் மாதிரி பேசற.. அவன் சுமாரா தான் இருக்கான்.. ஆனால் இந்த அருந்ததி அதைவிட ரொம்ப சுமார்.. கழுதை இருட்டில் எல்லாம் கருமமும் ஒன்னுதானே..!"
என்றவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. "என்னை விட நீ தான் அந்த வீட்டு விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்கிறாப்ல தெரியுது.. அந்த பக்கம் போகட்டும்.. அப்புறம் பாரு.. அதை புடுங்கி காக்காவுக்கு போட்டுடுவேன்.." இடுப்பில் கை வைத்து கனகா சொன்ன தோரணையில்.
"எதேய்.." அரண்டு போனான் சத்யராஜ்..
"ஹான்.. தேவையில்லாம அந்த பக்கம் மேயற கண்ணத்தான் சொன்னேன்.. பராக்கு பார்த்தது போதும்.. உள்ளவா..!" என்று சொல்லிவிட்டு கனகா முன்னே நடக்க "உன்பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே" என பாடிக்கொண்டே அவளை பின்தொடர்ந்து சென்றான் சத்யராஜ்..
கூடத்தில் வழக்கம்போல் பாய் விரித்து அருந்ததியும் சந்திரமதியும் படுத்திருந்தனர்..
மின்விசிறி வேகமாக சுழல்வதை தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை..
மகரிஷி மோத்தியோடு அறைக்குள் சென்று கதவடைந்து கொண்டு செட்டிலாகிவிட்டான்..
அவன் புன்னகையும்.. குட்நைட்டும்.. அருந்ததியின் நெஞ்சில் நிரம்பி வழிந்தது..
கத விடுக்கின் வழியே கசிந்த ஏசிக் குளிர் மெல்லிசாய் கூடத்தையும் வியாபித்து டெம்பரேச்சரை ஒரு டிகிரி கீழே இறங்கச் செய்திருந்தது..
"ம..தி.." தூக்க கலக்கத்தில் அருந்ததியின் நாக்கு பிறண்டது..
"ம்ம்.." சந்திரமதி இன்னும் உறங்கி இருக்கவில்லை..
"அம்மா மேல எதுவும் கோபம் இல்லையே.."
"இல்லம்மா..! நான்தான் நீங்க கோவப்படுற மாதிரி நடந்துக்கிட்டேன்.. சாரிமா..!"
"சாரி எதுக்குடி.. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து நம்மள அவமானப்படுத்தின எல்லாருக்கும் பதிலடி கொடுக்கணும்..!" தூக்கத்தில் பாதி காற்றும் மீதி வார்த்தைகளுமாக வந்தது..
"கண்டிப்பா மா.."
"மதி.."
"ம்ம்.."
"ஜேஜெம்மான்னா என்னடி..?"
"ஒரு படத்துல வர்ற ஹீரோயின் கேரக்டர் மா தைரியமான ஒரு இளவரசி.."
அதற்குள் அருந்ததி உறங்கி இருந்தாள்.
"கோ...ங்ரா.." உறக்கத்தில் உளறியது தெளிவாக கேட்கவில்லை..
"என்னது கொங்கு நாடா.." சந்திரமதி தலையை தூக்கி தன் அன்னையை பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
சில கணங்கள் அருந்ததியை பார்த்தவாறு அம்மாவை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினாள் சந்திரமதி..
மறுநாள் காலையில் சீருடை அணிந்த சந்திரமதியை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவள் பள்ளிக்கு சென்றான் மகரிஷி..
"ஓகே ரிஷி பை.." புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு அவள் கையசைக்க வண்டியிலிருந்து இறங்கியவன்.. "நான் உன் கூட தான் வரேன் வா..!" என அவளோடு நடந்தான்..
"நீ எதுக்கு என் கூட வரணும்.."
"ஒரு முக்கியமான விஷயமா உன் சைன்ஸ் டீச்சர் பாத்து பேசத்தான்..!"
"என்ன பேச போற.. ஐயோ ரிஷி என்னை பத்தி ஏதாவது ஏடாகூடமாக மாட்டிவிட்டுடாதே.. ஏற்கனவே அந்த டீச்சருக்கு என்னை பிடிக்காது.. எப்ப பாரு எரும மாடு.. நெடுமரம்.. தடி மாடுனு ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்க.. இதுல நீ வேற.."
"அதான்.. அத பத்தி தான் பேசணும் நீ அமைதியா வா..!" என்றவன் சந்திரமதியை அழைத்துக் கொண்டு அவள் வகுப்பறைக்கு சென்றான்..
"இப்ப டீச்சர் வந்திருப்பாங்களா? எங்க இருப்பாங்க..?" வீட்டில் அன்போடு கரையும் அவன் குரல் இப்போது இறுகி கணீரென ஒலித்தது..
"ஸ்டாஃப் ரூம்ல இருப்பாங்க..!" என்ற சந்திரமதியின் குரல் தான் இறங்கி ஒலிக்கிறது..
"
நீ கிளாசுக்கு போ.. நான் டீச்சரை பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்.." என்றவன் ஸ்டாஃப் ரூமை நோக்கி நடந்தான்..
நல்ல உயரமும் கம்பீரமான நடையும் கண்ணைக் கவரும் தோற்றத்தோடு ஒருவனை புதிதாக பள்ளி வளாகத்தில் கண்டு பருவ வயது மாணவிகளும் இளம் வயது ஆசிரியைகளும் இமைக்க மறந்து ஒரு கணம் நின்று அவனை பார்த்து விட்டு நகர்ந்தனர்..
ஸ்டாஃப் ரூம் வெளியே நின்றான் ரிஷி..
ஒரு மாணவியிடம் "பத்மா டீச்சர் பாக்கணும்.. விவேகானந்தா ஸ்கூல் சைன்ஸ் டீச்சர் வந்திருக்கேன்னு சொல்லு.. அவங்களுக்கு தெரியும்.." என்று சொல்லி அனுப்ப அந்த மாணவி உள்ளே சென்று பத்மா டீச்சரை அழைத்து வந்தாள்..
"சொல்லுங்க சார்" என்ற படியே வெளியே வந்த பத்மா டீச்சர் கிட்டத்தட்ட நாற்பதை தாண்டிய வயதில் நின்றார்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளி முடிகள்.. மிதமான உயரத்தில் ஒல்லியாக இருந்தார்..
"ஐ அம் மகரிஷி.. வொர்கிங் அட் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்.."
"எஸ் தெரியுது.. சயின்ஸ் எக்ஸிபிஷனனுக்காக வந்திருந்தீங்களே நாம பேசி இருக்கோம்.. சொல்லுங்க சார்..' மரியாதையாக பேசினாள் பத்மா..
"நம்ம ரெண்டு பேரும் கல்வியை போதிக்கிறவங்க.. மாதா பிதா குரு அப்புறம் தான் தெய்வம்னு சொல்லுவாங்க.. கடவுளுக்கு இணையா குழந்தைகள் நம்மள மதிக்கிறாங்க.. ஆனா நாம அதே மரியாதையை அந்த குழந்தைகளுக்கு திருப்பித் தர்றோமா..!"
"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..?"
'குண்டு ஒல்லி கருப்பு குள்ளம்ன்னு காமெடி பண்ணி சிரிச்ச காலமெல்லாம் மலையேறி போச்சு.. இப்ப இந்த மாதிரி கேலி பண்ற வார்த்தைகள் எல்லாம் பாடி ஷேமிங் கேட்டகரியில் வரும்ன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா..?"
"நேரா விஷயத்துக்கு வந்தா நல்லது.."
"ஒரு ஆசிரியரா படிக்காத குழந்தைகளை கண்டிக்கிற அதிகாரம் உங்களுக்கு இருக்கு.. ஆனா அவங்க உருவத்தை முன் வச்சு திட்டுற உரிமையை உங்களுக்கு யார் தந்தது..?"
"இங்க பாருங்க மிஸ்டர் மகரிஷி.. நீங்க ஒன்னும் எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியும்.. இந்த காலத்து பசங்கள கண்டிக்காம விட்டா.. படிக்காம உருப்படாமல் போயிடுவாங்க.. அதுலயும் பெண் குழந்தைகள்கிட்ட இப்படி ஸ்டிரிக்ட்டா நடந்துகிட்டாதான் வேலைக்காகும்.."
"ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கண்டிப்பு காட்டுறதுக்கு தப்புன்னு நானும் சொல்ல வரல.. படிக்கலைனா தாராளமா திட்டுங்க.. வேண்டாங்கல.. ஆனால் திட்டறதுக்கு ஒரு வரைமுறை இருக்கு.. திட்டக்கூடிய வார்த்தைகள்ல ஒழுக்கம் இருக்கணும்.. அம்மா அப்பாவுக்கு அடுத்து குழந்தைகள் டீச்சரை பார்த்து தான் நிறைய விஷயங்கள் கத்துக்கறாங்க.. அவங்களுக்கு நீங்க தப்பான உதாரணமாகிடாதீங்க.."
"சந்திரமதி வயசுக்கு மீறிய வளர்த்தியா இருக்கலாம்.. அதுக்காக அவளை நெட்ட கொக்கு.. எரும மாடு.. நெடுமரம்.. ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல.. இப்படி எல்லா குழந்தைகள் முன்னாடி அவ உருவத்தை கேலி செஞ்சு பேசுறதுக்கு உங்களை போல படிச்ச ஆசிரியருக்கு அழகில்ல.. ஒரு பெண் குழந்தையோட உடம்பு வளர்ச்சியை பத்தி ஒரு பெண்ணே இப்படி மட்டந்தட்டி கேவலமா பேசுறது வருத்தமா இருக்கு மேடம்.."
பத்மாவதி முகம் கருத்து நின்றிருந்தாள்.. "அதைக் கேட்க நீங்க யாரு மிஸ்டர்..?"
"அந்த குழந்தையோட கார்டியன்.. பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே போனாலும் இந்த டீச்சர் என்னோட ஃபேவரைட்.. இவங்கதான் என்னோட வாழ்க்கையவே மாத்துனவங்க.. இவங்க அட்வைஸ் பண்ணலேன்னா நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே மாட்டேன்னு முன்னுக்கு வந்த பிள்ளைங்க மனசார பூஜிக்கற அளவு ஒரு ஆசிரியர் நடந்துக்கணும்..!"
இந்த டீச்சராலதான் என் படிப்பு போச்சு.. இவங்களால இந்த பாடமே எனக்கு பிடிக்கலன்னு ஒரு குழந்தை சொல்ற அளவுக்கு நீங்க நடந்துக்கிட்டிங்கனா.. நீங்க படிச்ச படிப்புக்கும் பாக்கற வேலைக்கும் அர்த்தமே இல்லாம போய்டும்.."
"சந்திரமதி புத்திசாலி குழந்தை.. ஒருவாட்டி சொல்லிக் கொடுத்தாலும் புரிஞ்சுக்கிற கெப்பாசிட்டி இருக்கு.. அவ மட்டும் இல்ல.. அவளை மாதிரி எத்தனையோ ஸ்டுடென்ட்ஸ் உங்க கிளாஸ்ல படிக்கலாம்.. அவங்க மனச மாத்தி நல்லா படிக்க வைக்க வேண்டிய கடமையை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு வேலை செய்யுங்க.. நான் வரேன்.."
என்றவன் பத்மாவின் பதிலை எதிர்பார்க்காது கைகளை வீசி வேகமாக நடந்து வாயில் கதவை தாண்டி வெளியேறினான்..
தொடரும்..
சொல்லப்போனால் அது மிச்சமானது அல்ல.. அவனுக்காக தனியாக எடுத்து வைக்கப்பட்ட உணவு.. உங்களுக்காக தனியாக எடுத்து வைத்திருக்கிறேன் என்று நேரடியாக சொல்ல வாய் வரவில்லை.. மதியிடம் அப்படி சொல்லி அனுப்பவும் மனமில்லை..
"ரிஷி..! மதியம் செஞ்ச பிரியாணி மிச்சமிருக்குதாம் சாப்பிடுறியான்னு அம்மா கேக்கறாங்க.." வாசலில் கை வைத்துக் கொண்டு சந்திரமதி தலையை மட்டும் உள்ளே எட்டிப் பார்த்து கேட்க ரிஷி.. அவன் சொல்லப் போகும் பதிலுக்காக இந்த பக்கம் காத்திருந்தாள் அருந்ததி..
"மிச்சமானதா..?"
"ம்ம்.."
"ஓகே சாப்பிடலாமே அதுல என்ன இருக்கு..!"
"அம்மா.. ரிஷி சாப்பிடறேன்னு சொல்லிட்டார்.." பதிலை சொல்லிவிட்டு வெளியே ஓடிவிட்டாள் மதி..
"மிச்சமானது ஒன்னும் இல்ல உங்களுக்காக தனியா எடுத்து வச்சது" என்று வேகமாக அவனிடம் நின்று சொல்லிவிட துடித்தது மனம்..!
அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று கண்டிப்போடு ஏதோ ஒரு தடுப்பு சுவர் தடிமனாக எழுந்து நின்றது அவள் முன்பு..
இரவு ஹாட் பாக்சில் அவனுக்காக பிரத்தியேகமாக எடுத்து வைத்த பிரியாணியை பளிச்சென்று எவர்சில்வர் தட்டில் பரிமாறிய போது மகரிஷியின் உதட்டில் புன்னகை..!
தனக்கும் சந்திரமதிக்கும் அலுமினிய பாத்திரத்திலிருந்து எடுத்து போட்டுக்கொண்டு.. புத்தம் புதிதான ஹாட் கேஸை அவன் பக்கம் தள்ளி வைத்த பிறகும் உண்மை புரியாமல் போகுமா என்ன..?
மோத்திக்கு இன்று நல்ல வேட்டை..
மதியம் தனியாக ஒரு லெக் பீஸ் வைத்து பிரியாணியை அவன் தட்டில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்குள் ஓடி வந்திருந்தாள் அருந்ததி..
இரவு அவனுக்கு உணவு படைக்கும் பொறுப்பு மகரிஷியுடையதாகிப் போனது..
அன்று இரவு ஒரே கசகசப்பு.. தோளில் துண்டை போட்டுக்கொண்டு குளிக்கலாம் என்று குளியலறையை நோக்கி சென்றவளை இடை நிறுத்தினான் மகரிஷி..
"ஒரு நிமிஷம் அருந்ததி.." என்றதும் தோளில் போட்ட துண்டை இரு பக்கமும் போர்த்திக் கொண்டு அவன் பக்கம் திரும்பி நின்றாள் அருந்ததி..
"ஒரு வார்த்தைல நன்றின்னு சொல்றதை விட்டுட்டு நீங்க வித விதமா நன்றி கடனை காட்டறதா நினைச்சு என்னை ஸ்பெஷலா கவனிக்கிறிங்கன்னு தெரியுது.. எனக்காக அவ்வளவு மெனக்கிட வேண்டாம்..! என்னால முடிஞ்ச உதவியை செஞ்சேன் நீங்க கஷ்டப்படாதீங்க..!"
"நான் கஷ்டப்படுறேன் உங்களுக்கு யார் சொன்னது..?"
"அப்படி இல்ல..! சந்திரமதி கிட்ட மாற்றம் தெரியுதோ இல்லையோ உங்ககிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது.. முன்னாடி எப்பவும் என்ன பாத்து முறைச்சுக்கிட்டே இருப்பீங்க.. இப்ப ரொம்ப அன்பா நடந்துக்கறீங்க.."
"அன்பா நடந்துக்கறது ஒரு தப்பா..? அதுக்கெல்லாம் ஏன் ஒரு காரணம் கற்பிக்கறீங்க.. கோங்ரா.."
"ஏமி..?"
"இல்ல கோங்குரா ஊறுகாய் செய்ய தெரியுமான்னு ஒரு நாள் கேட்டீங்களே..? மதி கிட்ட சொல்லி யூடியூப்ல பார்த்து செஞ்சு தரேன்னு சொல்ல வந்தேன்..'
"ஓஹோ.. என் அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க.. அம்மா பொதுவா எல்லா வெரைட்டியும் நல்லா சமைப்பாங்க..! உங்களை மாதிரியே..!" உற்சாகமாக ஆரம்பித்து இறுதியில் அவன் வெறுமையாக முடிக்கவும் கனிந்து நின்றாள் அருந்ததி..
இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தில் மின்விளக்கு துரதிஷ்டவசமாக எரியாமல் போகவே.. அவன் கையை காற்றில் வீசி பேசியதெல்லாம் எதிரே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தெருவாசிகளுக்கு அருந்ததியை தொட்டு தொட்டு சரசமாடுவதை போல் தோன்றியதோ என்னவோ..!
"இங்க பாருங்க.. நன்றி கடனுக்காகவோ இல்ல.. உங்ககிட்ட பணமா வாங்கின கடனுக்காகவோ நான் இதையெல்லாம் செய்யல..!" என்றவள் ஒரு கணம் நிறுத்தி தடுமாற்றத்துடன்.. விருப்பப்பட்டு தான் செய்யறேன்.. என்று தரையை பார்த்தபடி முடித்தாள்..
"விருப்பம்னா.. பிரேமாவா?" (காதல்)அவன் குரல் இறங்கியது..
"எந்த பிரேமா..? பிரேமானு எனக்கு யாரையும் தெரியாது.."
"ஐயோ அது இல்லடி.."
"டி யா..?"
"இது மரியாதையான டி.."
"சரி சொல்லுங்க.."
"ஐ மீன் கா.." என்று ஆரம்பித்தவன்.. "இல்ல என் மேல தனிப்பட்ட அன்பான்னு கேட்க வந்தேன்" என்றான் உதடு கடித்து புன்னகையுடன்..
"தனிப்பட்ட அன்பெல்லாம் இல்ல.. ஒரு பொதுவான அன்பு.. நீங்க ஹவுஸ் ஓனர்.. எங்களுக்கு எவ்வளவோ நன்மை செஞ்சிருக்கீங்க..! உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு அவ்வளவுதான்.." தெளிவாக சொல்லி முடித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றாள் அருந்ததி..
"ஹவுஸ் ஓனரா..? அடியேய்.. அருந்ததி.. அவ்வளவுதானா..?" இடுப்பில் கைவைத்து கீழுட்டை கடித்தான்..
"ஏய்.. ஏய் அங்க பாருடி அருந்ததி பின்னாடி அவனும் பாத்ரூமுக்கு போறான்.." சத்யராஜ் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு எட்டிப் பார்க்க அவன் தலையில் தட்டினாள் கனகா..
"மூதேவி அது அவளோட நிழல்.. அவன் அந்தப் பக்கம் போயாச்சு.." என்றாள் முறைப்பாக..
ஈஈஈஈ.. என்று அசடு வழிந்தவன்.. "ஆனாலும் காணாம போன பொண்ணு எப்படி திரும்பி வந்துச்சு தெரியலையே.." என பேச்சை மாற்றினான் சத்யராஜ்..
"யாருக்கு தெரியும்.. எங்கேயாவது சொந்தக்காரங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துருப்பா..!"
"ஏன்டி சொந்தக்காரங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்து அவளே அழுவாளா என்ன..? ஒருவேளை ஏதாவது லவ் மேட்டரா இருக்குமோ.. அந்த பிள்ளை யாராவது பையன் கூட ஓடிப் போயிருக்குமோ.."
"
ச்சீ.. வாய கழுவு.. சின்ன பிள்ளைய பத்தி கேவலமா பேசிக்கிட்டு.. அந்த பொண்ணுக்கு 12 வயசு தான் ஆகுது.. இன்னும் வயசுக்கு கூட வரல..!"
"ஆமா நீ எந்த காலத்துல இருக்க.. இப்பல்லாம் நண்டும் சிண்டும் ஜோடியா ரீல்ஸ் பண்ணுதுங்க.. 12 வயசானாலும் பார்க்க 16 வயசு புள்ள மாதிரி நெடு நெடுன்னு வளர்ந்து நிக்குதே.. எனக்கென்னமோ இதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்திருக்கும்ன்னு தோணுது.."
"என்னவோ நமக்கென்ன தெரியுது.. போனது நல்லபடியா திரும்பி வந்துடுச்சு.. அது போதும்.. சின்னதவிடு.. வீட்டுக்குள்ள போடுற ஆட்டம் பத்தாதுன்னு வெளிய வந்து இருட்டுல என்ன காம களியாட்டம் வேண்டி கிடக்குது..! மத்தியானம் பிரியாணி.யெல்லாம் அமர்க்களமா தயார் ஆச்சாமே..! நம்ம சஞ்சீவ் பையன் வந்து சொன்னான்.."
"கள்ளக்காதல் பிரியாணிக்கு ருசி அதிகம்..!"
"காபி கொண்டு போய் கொடுக்கறதும் பிரியாணி சமைச்சு வைக்கிறதும்.. தனியா கூப்புட்டு வச்சி ரகசியமா பேசுறதும்.. இதெல்லாம் எதுக்காக..?"
"எல்லாம் இருட்டுல நடக்கப்போற அந்த அஞ்சு நிமிஷம் மேட்டருக்காக தான்.."
"இவனுக்கு வேற ஆளே கிடைக்கலையா..! ஹீரோ மாதிரி இருக்கான்.. கண்ண காட்டினா ஆயிரம் பொண்ணுங்க இவன் காலடியில் வந்து விழுவாங்களே.. இவள போய்"
"ஏய் என்னடி நானும் பாத்துட்டே இருக்கேன்.. அன்னையிலிருந்து அந்த ஆள் என்னமோ ரொம்ப அழகன் மாதிரி பேசற.. அவன் சுமாரா தான் இருக்கான்.. ஆனால் இந்த அருந்ததி அதைவிட ரொம்ப சுமார்.. கழுதை இருட்டில் எல்லாம் கருமமும் ஒன்னுதானே..!"
என்றவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. "என்னை விட நீ தான் அந்த வீட்டு விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்கிறாப்ல தெரியுது.. அந்த பக்கம் போகட்டும்.. அப்புறம் பாரு.. அதை புடுங்கி காக்காவுக்கு போட்டுடுவேன்.." இடுப்பில் கை வைத்து கனகா சொன்ன தோரணையில்.
"எதேய்.." அரண்டு போனான் சத்யராஜ்..
"ஹான்.. தேவையில்லாம அந்த பக்கம் மேயற கண்ணத்தான் சொன்னேன்.. பராக்கு பார்த்தது போதும்.. உள்ளவா..!" என்று சொல்லிவிட்டு கனகா முன்னே நடக்க "உன்பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே" என பாடிக்கொண்டே அவளை பின்தொடர்ந்து சென்றான் சத்யராஜ்..
கூடத்தில் வழக்கம்போல் பாய் விரித்து அருந்ததியும் சந்திரமதியும் படுத்திருந்தனர்..
மின்விசிறி வேகமாக சுழல்வதை தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை..
மகரிஷி மோத்தியோடு அறைக்குள் சென்று கதவடைந்து கொண்டு செட்டிலாகிவிட்டான்..
அவன் புன்னகையும்.. குட்நைட்டும்.. அருந்ததியின் நெஞ்சில் நிரம்பி வழிந்தது..
கத விடுக்கின் வழியே கசிந்த ஏசிக் குளிர் மெல்லிசாய் கூடத்தையும் வியாபித்து டெம்பரேச்சரை ஒரு டிகிரி கீழே இறங்கச் செய்திருந்தது..
"ம..தி.." தூக்க கலக்கத்தில் அருந்ததியின் நாக்கு பிறண்டது..
"ம்ம்.." சந்திரமதி இன்னும் உறங்கி இருக்கவில்லை..
"அம்மா மேல எதுவும் கோபம் இல்லையே.."
"இல்லம்மா..! நான்தான் நீங்க கோவப்படுற மாதிரி நடந்துக்கிட்டேன்.. சாரிமா..!"
"சாரி எதுக்குடி.. நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து நம்மள அவமானப்படுத்தின எல்லாருக்கும் பதிலடி கொடுக்கணும்..!" தூக்கத்தில் பாதி காற்றும் மீதி வார்த்தைகளுமாக வந்தது..
"கண்டிப்பா மா.."
"மதி.."
"ம்ம்.."
"ஜேஜெம்மான்னா என்னடி..?"
"ஒரு படத்துல வர்ற ஹீரோயின் கேரக்டர் மா தைரியமான ஒரு இளவரசி.."
அதற்குள் அருந்ததி உறங்கி இருந்தாள்.
"கோ...ங்ரா.." உறக்கத்தில் உளறியது தெளிவாக கேட்கவில்லை..
"என்னது கொங்கு நாடா.." சந்திரமதி தலையை தூக்கி தன் அன்னையை பார்க்க அவளோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
சில கணங்கள் அருந்ததியை பார்த்தவாறு அம்மாவை அணைத்துக் கொண்டு கண்கள் மூடினாள் சந்திரமதி..
மறுநாள் காலையில் சீருடை அணிந்த சந்திரமதியை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவள் பள்ளிக்கு சென்றான் மகரிஷி..
"ஓகே ரிஷி பை.." புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு அவள் கையசைக்க வண்டியிலிருந்து இறங்கியவன்.. "நான் உன் கூட தான் வரேன் வா..!" என அவளோடு நடந்தான்..
"நீ எதுக்கு என் கூட வரணும்.."
"ஒரு முக்கியமான விஷயமா உன் சைன்ஸ் டீச்சர் பாத்து பேசத்தான்..!"
"என்ன பேச போற.. ஐயோ ரிஷி என்னை பத்தி ஏதாவது ஏடாகூடமாக மாட்டிவிட்டுடாதே.. ஏற்கனவே அந்த டீச்சருக்கு என்னை பிடிக்காது.. எப்ப பாரு எரும மாடு.. நெடுமரம்.. தடி மாடுனு ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்க.. இதுல நீ வேற.."
"அதான்.. அத பத்தி தான் பேசணும் நீ அமைதியா வா..!" என்றவன் சந்திரமதியை அழைத்துக் கொண்டு அவள் வகுப்பறைக்கு சென்றான்..
"இப்ப டீச்சர் வந்திருப்பாங்களா? எங்க இருப்பாங்க..?" வீட்டில் அன்போடு கரையும் அவன் குரல் இப்போது இறுகி கணீரென ஒலித்தது..
"ஸ்டாஃப் ரூம்ல இருப்பாங்க..!" என்ற சந்திரமதியின் குரல் தான் இறங்கி ஒலிக்கிறது..
"
நீ கிளாசுக்கு போ.. நான் டீச்சரை பார்த்துட்டு அப்படியே கிளம்பறேன்.." என்றவன் ஸ்டாஃப் ரூமை நோக்கி நடந்தான்..
நல்ல உயரமும் கம்பீரமான நடையும் கண்ணைக் கவரும் தோற்றத்தோடு ஒருவனை புதிதாக பள்ளி வளாகத்தில் கண்டு பருவ வயது மாணவிகளும் இளம் வயது ஆசிரியைகளும் இமைக்க மறந்து ஒரு கணம் நின்று அவனை பார்த்து விட்டு நகர்ந்தனர்..
ஸ்டாஃப் ரூம் வெளியே நின்றான் ரிஷி..
ஒரு மாணவியிடம் "பத்மா டீச்சர் பாக்கணும்.. விவேகானந்தா ஸ்கூல் சைன்ஸ் டீச்சர் வந்திருக்கேன்னு சொல்லு.. அவங்களுக்கு தெரியும்.." என்று சொல்லி அனுப்ப அந்த மாணவி உள்ளே சென்று பத்மா டீச்சரை அழைத்து வந்தாள்..
"சொல்லுங்க சார்" என்ற படியே வெளியே வந்த பத்மா டீச்சர் கிட்டத்தட்ட நாற்பதை தாண்டிய வயதில் நின்றார்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளி முடிகள்.. மிதமான உயரத்தில் ஒல்லியாக இருந்தார்..
"ஐ அம் மகரிஷி.. வொர்கிங் அட் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்.."
"எஸ் தெரியுது.. சயின்ஸ் எக்ஸிபிஷனனுக்காக வந்திருந்தீங்களே நாம பேசி இருக்கோம்.. சொல்லுங்க சார்..' மரியாதையாக பேசினாள் பத்மா..
"நம்ம ரெண்டு பேரும் கல்வியை போதிக்கிறவங்க.. மாதா பிதா குரு அப்புறம் தான் தெய்வம்னு சொல்லுவாங்க.. கடவுளுக்கு இணையா குழந்தைகள் நம்மள மதிக்கிறாங்க.. ஆனா நாம அதே மரியாதையை அந்த குழந்தைகளுக்கு திருப்பித் தர்றோமா..!"
"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே..?"
'குண்டு ஒல்லி கருப்பு குள்ளம்ன்னு காமெடி பண்ணி சிரிச்ச காலமெல்லாம் மலையேறி போச்சு.. இப்ப இந்த மாதிரி கேலி பண்ற வார்த்தைகள் எல்லாம் பாடி ஷேமிங் கேட்டகரியில் வரும்ன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா..?"
"நேரா விஷயத்துக்கு வந்தா நல்லது.."
"ஒரு ஆசிரியரா படிக்காத குழந்தைகளை கண்டிக்கிற அதிகாரம் உங்களுக்கு இருக்கு.. ஆனா அவங்க உருவத்தை முன் வச்சு திட்டுற உரிமையை உங்களுக்கு யார் தந்தது..?"
"இங்க பாருங்க மிஸ்டர் மகரிஷி.. நீங்க ஒன்னும் எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியும்.. இந்த காலத்து பசங்கள கண்டிக்காம விட்டா.. படிக்காம உருப்படாமல் போயிடுவாங்க.. அதுலயும் பெண் குழந்தைகள்கிட்ட இப்படி ஸ்டிரிக்ட்டா நடந்துகிட்டாதான் வேலைக்காகும்.."
"ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கண்டிப்பு காட்டுறதுக்கு தப்புன்னு நானும் சொல்ல வரல.. படிக்கலைனா தாராளமா திட்டுங்க.. வேண்டாங்கல.. ஆனால் திட்டறதுக்கு ஒரு வரைமுறை இருக்கு.. திட்டக்கூடிய வார்த்தைகள்ல ஒழுக்கம் இருக்கணும்.. அம்மா அப்பாவுக்கு அடுத்து குழந்தைகள் டீச்சரை பார்த்து தான் நிறைய விஷயங்கள் கத்துக்கறாங்க.. அவங்களுக்கு நீங்க தப்பான உதாரணமாகிடாதீங்க.."
"சந்திரமதி வயசுக்கு மீறிய வளர்த்தியா இருக்கலாம்.. அதுக்காக அவளை நெட்ட கொக்கு.. எரும மாடு.. நெடுமரம்.. ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல.. இப்படி எல்லா குழந்தைகள் முன்னாடி அவ உருவத்தை கேலி செஞ்சு பேசுறதுக்கு உங்களை போல படிச்ச ஆசிரியருக்கு அழகில்ல.. ஒரு பெண் குழந்தையோட உடம்பு வளர்ச்சியை பத்தி ஒரு பெண்ணே இப்படி மட்டந்தட்டி கேவலமா பேசுறது வருத்தமா இருக்கு மேடம்.."
பத்மாவதி முகம் கருத்து நின்றிருந்தாள்.. "அதைக் கேட்க நீங்க யாரு மிஸ்டர்..?"
"அந்த குழந்தையோட கார்டியன்.. பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே போனாலும் இந்த டீச்சர் என்னோட ஃபேவரைட்.. இவங்கதான் என்னோட வாழ்க்கையவே மாத்துனவங்க.. இவங்க அட்வைஸ் பண்ணலேன்னா நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே மாட்டேன்னு முன்னுக்கு வந்த பிள்ளைங்க மனசார பூஜிக்கற அளவு ஒரு ஆசிரியர் நடந்துக்கணும்..!"
இந்த டீச்சராலதான் என் படிப்பு போச்சு.. இவங்களால இந்த பாடமே எனக்கு பிடிக்கலன்னு ஒரு குழந்தை சொல்ற அளவுக்கு நீங்க நடந்துக்கிட்டிங்கனா.. நீங்க படிச்ச படிப்புக்கும் பாக்கற வேலைக்கும் அர்த்தமே இல்லாம போய்டும்.."
"சந்திரமதி புத்திசாலி குழந்தை.. ஒருவாட்டி சொல்லிக் கொடுத்தாலும் புரிஞ்சுக்கிற கெப்பாசிட்டி இருக்கு.. அவ மட்டும் இல்ல.. அவளை மாதிரி எத்தனையோ ஸ்டுடென்ட்ஸ் உங்க கிளாஸ்ல படிக்கலாம்.. அவங்க மனச மாத்தி நல்லா படிக்க வைக்க வேண்டிய கடமையை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு வேலை செய்யுங்க.. நான் வரேன்.."
என்றவன் பத்மாவின் பதிலை எதிர்பார்க்காது கைகளை வீசி வேகமாக நடந்து வாயில் கதவை தாண்டி வெளியேறினான்..
தொடரும்..
Last edited: