- Joined
- Jan 10, 2023
- Messages
- 79
- Thread Author
- #1
"அய்யோ.. மெழுகு பொம்மை மாதிரி இருக்காளே.. இவளை அனுபவிக்க முடியாம போய்டுச்சே ச்சே.." மிகவும் வருத்தப் பட்டான் காசி..
"இவளை அந்த ரூம்ல தூக்கி கடாசிட்டு சரக்கு பாட்டிலும் சைட் டிஷ்ஷும் எடுத்துட்டு வாடா.. அப்படியே நம்ம கனகாக்கு ஃபோன் பண்ணி இங்கே வர சொல்லு.. இந்த அழகிய பாத்து உடம்பெல்லாம் முறுக்கேறிப் போச்சு.." காசி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு அமர.. உடனிருந்தவன் அன்பரசியை தூக்கிச் சென்று பக்கத்து அறையில் கிடத்தி விட்டு வந்தான்..
"அண்ணே அநியாயமா அந்த பொண்ணு செத்துப் போச்சே.. இப்ப போலீஸ் வந்து விசாரிச்சா நாம மாட்டிக்க மாட்டோமா.." மது பாட்டில்களை இதற்கு முன்பு அன்பரசியை கிடத்தியிருந்த கல் மேடையில் அடுக்கி உருளைக்கிழங்கு சிப்ஸ் மிச்சர் தட்டையும் அங்கே வைத்தான் அவன்..
"என்னடா..!! மெண்டல் மாதிரி பேசுற.. நாமளா அவளை கொன்னோம்.. மயக்க மருந்து கொடுத்தோம்.. ஓவர் டோசாகி அவ செத்துப் போயிட்டா.."
"இருந்தாலும் அவளுக்கு மயக்கம் மருந்து கொடுத்தது நாமதானே..!! போஸ்ட்மார்ட்டம்ல தெரிஞ்சு போயிடும்ல.. அதிக வட்டி வசூலிச்சு கட்டப்பஞ்சாயத்து பண்ணி இருக்கோம்தான்.. ஆனா கொலை நமக்கு புதுசு இல்லையா காசி.." அவனும் பீடியை வலித்து விட்டு சொன்னான்..
"ஏன்டா.. கொலை பண்ணிட்டோம்னு ரொம்ப ஃபீல் பண்றியா.." கண்கள் இடுங்க காசி கேட்டதற்கு..
"கொலை பண்ணலையேன்னு ரொம்ப ஃபீல் பண்றேன்.. அவளைக் கொன்னு தண்டனையை ஏத்துக்கிட்டா கூட பரவாயில்லை.. அவளா செத்துப் போயிட்டா.. இதுக்காக நாம ஜெயிலுக்கு போகணுமா.. அது அசிங்கம் தல" அவன் சலித்தான்..
"உனக்கு உன் கவலை.. எனக்கு அந்த குருவை பழி வாங்க முடியலயேன்னு கவலை.. அத்தனை பேர் முன்னாடி என்னை மானபங்கப் படுத்தினவனை துடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா முடியலையே.. அதுக்குள்ளே மண்டய போட்டுட்டாளே" காசியின் கண்களில் வெறி கூத்தாடியது..
"ஏன் தல இவ்வளவு ஃபீல் பண்ற.. பொணமா இருந்தாலும் பொம்பள பொம்பளதானே.. அவள மொத்தமா துகிலுறிச்சு பொது ஜனங்க கூடுற தோப்புக்குள்ள தூக்கி போடு.. ஆசை பொண்டாட்டியை அந்த நிலைமையில பாக்கற எவனும் உயிரோடு இருப்பான்னு நினைக்கிற..?"
"சத்தியமா நாக்க புடுங்கிட்டு சாவான்.." காசி விகாரமாக சிரித்தான்..
"அவன் செத்துப் போனா அப்போ உன் பழிவெறி அடங்கிடும் இல்ல.."
"நிச்சயமா..!!"
"அப்ப போய் ஆக வேண்டிய காரியத்தை பாரு காசி.. புடவை கடை பொம்மைக்கு டிரஸ் மாத்துறது இல்ல.. அந்த மாதிரி நினைச்சுக்க.."
"செத்த பொணமா இருந்தாலும் அழகி அழகி தானே.." கோணல் சிரிப்புடன் எழுந்து திரும்பி நடந்தான் காசி..
"தல இரு நானும் வரேன்.." உடனிருந்த தீனாவும் அவனை பின்தொடர்ந்து ஓட.. அறைக்குள் காசி நுழையும் நேரத்தில் முகத்தில் வேகமாக குத்து வாங்கி ஸ்கேட்டிங் செய்வது போல் சறுக்கிக் கொண்டு போய் விழுந்தான் தூரமாக..
அடுத்து தீனா.. வயிற்றை சுருக்கி கொண்டு ஒரு மூலையில் நெளிந்து கொண்டிருந்தான்..
சற்று முன்பு நடந்தது..
குருவின் முன்பு ஏகப்பட்ட சோப்புக் குமிழ்கள் காற்றில் பறந்து கொண்டிருக்க.. இதயத்தில் ஏதோ அலாரம் அடித்தது.. ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்ளுணர்வு உணர்த்தியது.. உயிருக்குள் ஏதோ சொல்ல முடியாத வலி..
"ஏய் கிழவி.. இங்க வா.." அழைத்தபடி உள்ளே வந்தான்..
"ராசா.."
"வந்து அழைச்சிட்டு போன அவ ஃபிரண்டோட பெயர் என்ன..?"
"தெரியலையே ராசா..!!"
"அட ரெண்டு பேரும் பேசும் போது அந்த பொண்ணோட பேர் சொல்லி அம்பு கூப்பிட்டு இருப்பா.. நல்லா யோசிச்சு பாரு..!!" குரு சொன்னதை தொடர்ந்து மூளையை கசக்கி யோசிக்க ஆரம்பித்தாள் அவள்..
"ஏதோ திவ்யான்னு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு.." வடிவு சொன்னதில் சதாசிவத்திற்கு அழைத்தான் குரு..
"மாமா.."
"சொல்லுங்க மாப்ள.."
"அம்புக்கு திவ்யான்னு யாராவது ஃபிரண்ட் இருக்காளா.. அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் உன் போன் நம்பர் கொஞ்சம் கொடுங்க.."
"என்கிட்ட போன் நம்பர் இல்ல மாப்ள.. ஆனால் அந்த பொண்ணோட வீடு எங்க இருக்குன்னு தெரியும்.. நிறைய முறை அந்த பொண்ணோட வீட்ல இருந்து அன்பரசியை நான் அழைச்சிட்டு வந்துருக்கேன்.." என்று வீட்டு முகவரியை சதாசிவம் சொல்லவும் மனதில் குறித்துக் கொண்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்து அங்கிருந்து விரைந்தான் குரு..
"ராசா.. தம்பி.." வடிவு அந்த முதிய வயதிலும் அவன் பின்னால் ஓடினாள்..
"ப்ச்.. எ.. ன்.. ன..!!" சலிப்பாக கேட்டான்..
"அன்பரசிக்கு ஏதாவது பிரச்சனையா..?"
அப்படித்தான் தோன்றுகிறது ஆனால் அதை வெளிப்படையாக சொல்லி இந்த வயதானவளின் மனதை ஏன் குழப்ப வேண்டும்.. என்ற எண்ணத்தோடு "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அன்பரசியை கூட்டிட்டு வரத்தான் போறேன்" என்றான் அவன்..
"இல்ல.. உன் முகமே சரியில்ல ஏதோ தப்பா இருக்கு.. நானும் உன் கூட வரட்டுமா..?" கெஞ்சலாக கேட்டாள் வடிவு..
"வயசான காலத்துல உன்னை வேற வச்சுக்கிட்டு நான் சுத்தனுமா..?"
"கெஞ்சி கேட்கிறேன் ராசா.. தயவு செஞ்சு கூட்டிக்கிட்டு போ.. அன்பரசிக்கு ஏதோ ஆபத்துன்னு என் மனசு சொல்லல.. ஆனா உன் முகம் சொல்லுது.. நீ கலங்கி நிக்கிற தோற்றம் காட்டிக் கொடுக்குது.." வடிவு சொன்ன பிறகு தான் தன் மனப்போக்கை உணர்ந்திருந்தான் அவன்..
"சரி வா போகலாம்.." வடிவை அழைத்துக் கொண்டு தன் வாகனத்தில் ஏறினான்..
"அன்பரசி அப்பவே கிளம்பி போயிட்டாளே.. நான் தானே ஆட்டோ ஏத்தி அனுப்பி வச்சேன்.." திவ்யா இப்படித்தான் பதில் சொன்னாள்..
"எந்த ஆட்டோ..? வந்து அடையாளம் காட்டு.."
திவ்யா ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்து அந்த ஆட்டோ ஓட்டுனரை அடையாளம் காட்டினாள்..
ஓட்டுனரின் சட்டையை பற்றி கொத்தாக தூக்கினான் குரு..
"எங்கடா என் பொண்டாட்டி..?" ஆத்திரத்தோடு பற்களை கடித்தான்..
"சார்.. சார்.. சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது.. பாதி வழியில பழம் வாங்கணும்னு இறங்கினாங்க.. நானும் அப்படியே ரிட்டன் எடுத்து பெட்ரோல் போட போனேன்.. திரும்பி வந்து பார்க்கும்போது அவங்க அங்க இல்ல.."
"வந்து எந்த பழக்கடைன்னு சொல்லு.." அவன் சட்டையை பற்றி இழுத்துக் கொண்டு போனான்..
ஆட்டோ ஓட்டுனர் பழக்கடையை அடையாளம் காட்ட அவன்தான் முழு உண்மையை விவரித்தான்..
"குரு.. உன் பொஞ்சாதி பழக்கடைக்குதான் வந்தாங்க.. ஆனா திரும்பிப் போகும்போது காசியும் அவனோட கூட்டாளியும் அவங்க மூக்குல மயக்க மருந்தை வச்சு கார்ல கடத்திக்கிட்டு போயிட்டாங்க.." குருவிற்கு கழுத்து நரம்புகள் புடைத்து கோபம் எல்லை மீறியது..
"நீ பார்த்துக்கிட்டு சும்மா நின்னியாக்கும்.."
"என்னால என்ன செய்ய முடியும்.. நான் சாதாரண பழ வியாபாரி.. காசி எவ்வளவு பெரிய ஆளு.. எனக்கு குடும்பம் இருக்கு குரு.." பழ வியாபாரி இயலாமையோடு நிற்க.. "தூ.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்" கண்கள் சிவந்து பற்களை நறநறவென கடித்தான் குரு..
வண்டியில் அவனோடு வடிவு இருப்பதெல்லாம் உரைக்கவில்லை.. நேராக காசியின் கோழிப்பண்ணைக்கு அதிவேகத்தில் வண்டியை விட்டான்..
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக நடந்தவன் கோழிப்பண்ணையின் அருகே இருந்த பழைய சின்ன வீட்டை உற்று பார்த்து அவ்விடம் நோக்கி நடக்க வடிவு அவனை பின் தொடர்ந்தாள்.. உக்கிரமாக நிற்கும் இந்நேரத்தில் அவனிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் வராது என்பதை அவள் அறிவாள்.. அவளைப் பொறுத்தவரை அன்பரசியை உயிரோடு பாதுகாப்பாக மீட்க வேண்டும் அவ்வளவே..
அந்த வீட்டிற்குள் சத்தம் போடாமல் நுழைந்த வேளையில்தான் காசியும் அவன் கூட்டாளியிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.. முஷ்டிகள் இறுக.. கட்டுக்கடங்காத கோபத்துடன் அவர்களை வதம் செய்ய முன்னேறியவனை தடுத்து பக்கத்திலிருந்த அறையை காண்பித்தாள் வடிவு..
கேள்வியாக அவ்விடத்தை உற்றுப் பார்த்தவனுக்கு அன்பரசியின் கொலுசு பாதங்கள் தெரிய.. ரௌத்திரம் பொங்கியிருந்த விழிகள் சற்றே சுருங்கி விரிந்து தவிப்போடு அவளை பார்த்தன.. கால்கள் அவளை நோக்கி நடை போட்டது.. இதயத்தின் படபடப்பு கூடியது..
மூச்சு பேச்சின்றி கிடந்தாள் அன்பு.. உயிரே போனது போல் ஸ்தம்பித்தான் குரு..
ஓடிச் சென்று அவள் தலையை மடியில் ஏந்தினான்..
"அ.. அ.. அம்பு.. எழுந்திரிடி.." அவள் கன்னம் தட்டினான்..
வடிவு இக்காட்சியை கண்டு நெஞ்சம் அதிர்ந்தாலும் சத்தம் வராமல் கதவை தாழிட்டாள்.. இரும்பு கதவை தாண்டி ஓசை வெளியே கேட்க வாய்ப்பில்லை..
"என்னாச்சு ராசா.." பதைபதைப்போடு அருகில் வந்து கேட்டாள் வடிவு..
"மூச்சு வரல.. பாட்டி.. இ.. இ..தயத்துடிப்பும் கேக்கல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.." அவன் குரலில் என்றும் தென்படாத அதீத பதட்டம்.. முதன்முறையாக பாட்டி என்று அழைக்கிறான் ஆனால் அதை அனுபவிக்கும் நிலையிலா இருக்கிறாள் வடிவு..
"அய்யோ.. என்னன்னு தெரியலயே.." நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினாள் வடிவு..
குரு தாமதிக்காமல் அவள் வாயோடு வாய் வைத்து தன் சுவாசத்தை வழங்கினான்..
"அம்பு.. எழுந்திரிடி.. என்னை விட்டு போகணும்னு நினைச்ச உன்னை நானே கொன்னுடுவேன்.." முரட்டுத்தனமாக அவளை உலுக்கினான்.. இதயத்தை வேகமாக அழுத்தி பார்த்தான்..
"அ.. ம்.. பு.. எழுந்துருடி.. நீ.. வேணும்.. அ..ம்பு.." அவளை அணைத்து கொண்டு முகத்தோடு முகம் இழைய விட்டான்.. அவளிடம் எந்த அசைவும் இல்லை..
"அம்பு என்னை விட்டு போய்ட்டாளா. பாட்டி.." அவன் உதடுகள் நடுங்கியது.. கண்கள் வேறு மாதிரியான உணர்வை பிரதிபலித்தன.. மூளையின் நியூரான்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம்..
வடிவு என்ன சொல்லுவாள்.. மூச்சும் இல்லை இதயத்துடிப்பும் கேட்கவில்லை என்றால் அன்பு இந்த உலகத்தில் இல்லை என்று தானே அர்த்தம்.. அதை தன் வாயால் சொல்ல முடியுமா.. குரு தாங்குவானா.. அவன் வாழ்க்கையை அழகான பூந்தோட்டமாக மாற்றியவள் இன்று கருகிப் போய் கிடக்கிறாளே..!!
சின்ன குழந்தை போல் அவள் கன்னம் மூக்கு.. என விரலால் தொட்டு பார்த்துக் கொண்டே.. "அம்பு.. அ.. அம்பு.. என்னை மிருகமாக்காதே அம்பு.. நீ இல்லாம எனக்கு வெறி பிடிக்குதுடி.." ஒரு மாதிரியாக உறுமினான்..
"பேசு.. அ.. ம்பு.." அவள் இதழைத் தொட்டு வருடினான்.. வடிவு வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தாள்..
இரு கைகளால் அன்பரசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் குரு..
இருதயமே வெடித்துப் போகும் உணர்வு.. தன்னிலை இழந்தான்.. மூளை செயலிழந்து போனது.. அவன் உலகம் இருண்டு போனது.. கண்களிலிருந்து சின்ன சின்ன முத்துக்களாக கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக அன்பரசியின் கன்னத்தில் விழுந்தன.. குரு அழ ஆரம்பித்திருந்தான்.. தாயின் இறப்பிற்கும் கலங்க தெரியாமல் கல்போல் நின்றவன்.. அன்பரசியின் இழப்பை தாங்க இயலாமல் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.. வறண்ட பூமி மழைத்துளிகளை ஏற்றுக் கொண்டு உயிர் பெறுவதை போல்..
ஹக்.. பட்டென கண்களைத் திறந்து விக்கலோடு ஆழ்ந்த மூச்சிழுத்து கணவனின் கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் ஒரு ஜனனம் பெற்றுக் கொண்டாள் அன்பரசி..
கண்கள் விரித்தான் குரு.. அவன் அவளோடு சேர்ந்து இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்திருந்தது..
"அ.. அம்பு.. அம்பு.." கத்தி கதறி சக்கையாக பிழியும் அளவிற்கு அவளை இறுக அணைத்துக் கொண்டான்..
வடிவாம்பாளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. கண்ணீர் பெருக்கோடு கடவுளுக்கு நன்றி சொன்னாள்..
மனைவியை எழுப்பி அமர வைத்தான்.. அன்பரசிக்கு கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கணவனை கண்டதும் கண்களில் நீர் தேங்கியது.. "எ..ன்னங்க.." மீண்டும் தாவி அணைத்துக் கொண்டாள்..
"அ.. அவன்.. என்னை மய..க்க..த்துல இரு..க்கும் போ..தே நா..சம் பண்ண பாத்தான்.. அதா.. அதா.. ன்.." பேச முடியவில்லை மூச்சு வாங்கியது..
"அதனால மூச்சை நிறுத்திட்டியா.." குருவின் குரல் இறுகியது..
'"ம்ம்ம்.." அவள் விழிகள் மூடித் திறந்து இயலாமையோடு தலையசைத்தாள்..
பட்டென்று கன்னத்தில் அடித்திருந்தான்.. துவண்ட கொடியாக கீழே சாய்ந்தவளை தாங்கி பிடித்து மீண்டும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..
வடிவு அவனை தடுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள்..
"ஏன்.. ஏன்.. டி.. என்னை பத்தி யோசிக்கவே இல்லையா நீ.." குரல் கமறியது..
"உ.. உங்களைப் பற்றி யோசிச்சதுனாலதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்.. என்னை வைச்சு உங்களை பழிவாங்க திட்டம் போட்டான்.. நீங்க எப்பவும் தோ..க்..கக்கூடாது.."
"எ.. என்னடி பேசற.. உன்னை செதச்சிட்டா என்னை தோக்கடிச்சதா அர்த்தமா..!! உன் உயிர் போயிருந்தாதான்டி நான் தோத்து போயிருப்பேன்.. அபகரிக்கப்படும் கற்புக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை.. அதைவிட விலைமதிப்பில்லாதது உன்னோட உயிர்.. எனக்கு நீ உயிரோட வேணும் அம்பு.. உனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு.." அதற்கு மேல் பேச முடியாமல் உதடுகள் நடுங்க பற்களை கடித்தான்.. கண்ணீர் வழிந்தது.. அவன் தவிப்பு அந்த இறுகிய அணைப்பில் தெரிந்தது..
அவள் கன்னத்தை அழுத்தமாக பற்றி நெத்தியில் முத்தமிட்டவன்.. "இங்கேயே இரு.. நான் வந்துடறேன்" என்று எழுந்தான்..
தள்ளாட்டத்துடன் எழுந்து அவன் பின்னால் ஓடினாள் அன்பரசி..
"எ.. எங்கே போறீங்க..!!"
திரும்பி அவளை அழுத்தமாக பார்த்தான் குரு.. "உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை சும்மா விட சொல்றியா.. அவன துடிக்க துடிக்க இந்த கையால கொல்லனும்.. அப்பதான் என் வெறி அடங்கும்.." ஆங்காரத்துடன் கர்ஜித்தான்..
"வே.. வேண்டாம்.. அவனை விட்டுடுங்க.. அவனை ஏதாவது செய்யப் போய்.. நீங்க.." அவளால் பேச முடியவில்லை..
"என்னை உன்னால தடுக்க முடியாது அம்பு.. உன்னை இந்த நிலைமையில பார்த்த பிறகு அவனை சும்மா விடுவேன்னு நினைக்கிறியா..!!"
"எ.. என்னங்க.. வே.. வேண்டாம்.."
"பாட்டி..!!" அன்புவை பார்த்துக்கொண்டே வடிவை அழைத்தான்..
"ராசா..!!"
"உன் பின்னாடி வெள்ளை காக்கா பறக்குது பாரு.."
"எங்கே..?" வடிவு கண்கள் சுருக்கி திரும்பிய நேரத்தில்.. அன்பரசியின் பிடரியை பற்றியிழுத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான் குரு.. அழுத்தமான முத்தம் இதழ்களை நிதானமாக சுவைத்தான்.. மயக்க மருந்து உபயத்தில் களைத்து போயிருந்தவள் அவன் கைகளில் துவண்டாள்..
"எங்கே அந்த வெள்ள காக்கா.." வடிவு இன்னமும் தேடிக் கொண்டிருந்தாள்..
இதழ்களை விடுவித்து காதலோடு அவளைப் பார்த்தவன் "முடிச்சிட்டு வரேன்.. இங்கேயே இரு.." என்று அங்கிருந்து சென்ற வேளையில்தான் எதிரே வந்த காசி தீனா இருவரும் குத்து வாங்கி கீழே கிடந்தனர்.. அத்தோடு அவர்களை விடுவதாய் இல்லை அவன்..
அந்த இரும்பு கதவை மீண்டும் தாழிட்டு வெளியே வந்து அவர்களை புரட்டி எடுத்தான்.. ஆத்திரம் தீர அடித்தான்.. கொன்றுவிடும் வெறியோடு கை காலை உடைத்தான்...
"என்னங்க.. என்னங்க" அந்த அறையிலிருந்து கதவை தட்டிக் கொண்டிருந்தாள் அன்பு..
"அவனுங்க செத்துப் போகட்டுமே.. நீ ஏன் இப்படி தவிக்கிற கண்ணு.." வடிவு அவளை தேற்ற முயன்றாள்..
"ஐயோ பாட்டி.. அது மட்டும் கூடவே கூடாது.. ஒரு முறை கொலை செஞ்சு பழக்கப்பட்டுட்டா.. இயல்பா அந்த வெறி மனசுக்குள்ள பதிஞ்சிடும்.. அடிதடி ரவுடித்தனத்தை இப்பதான் கஷ்டப்பட்டு நிறுத்த வைச்சிருக்கேன்.. அதுக்கும் ஒரு படி மேல போய் மறுபடி கொலை செய்யவும் ஆரம்பிக்கனுமா..? எப்படியாவது தடுத்து நிறுத்தனும் பாட்டி.. இந்த அறைக்குள்ள வேற ஏதாவது வழி இருக்கா பாருங்க..!!" அந்த அறையை சுற்றி சுற்றி தேடினாள் அவள்..
மூக்கு முட்ட மது அருந்திய படியால் அந்த இருவராலும் எதிர்த்து போராட கூட முடியவில்லை.. அரை மயக்கத்தில் குருதி சேறாய் அடி வாங்கி கீழே சரிந்த போதும் கொஞ்சம் கூட இரக்கம் பார்க்கவில்லை குரு.. மிருகம் போல் உறுமலோடு நின்றிருந்தவன் கண்களுக்கு கோழி இறைச்சியை வெட்டும் கத்தி தென்பட.. அதை எடுத்து வந்து ஓங்கி காசியின் கழுத்தை துண்டாக வெட்டும் நேரம்..
"மாமா.. ஆஆஆ.." ஓடி வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அன்பரசி..
ஓங்கிய கத்தியோடு அப்படியே நின்றிருந்தான் குரு.. ஆனால் கோபம் குறையவில்லை.. அவளை மீறி அந்த இருவரையும் கொல்லும் எண்ணம் தோன்றவும் இல்லை..
"விட்டுடுங்க மாமா.. ப்ளீஸ் விட்டுடுங்க.." அவங்களைக் கொன்னு நீங்க தண்டனை அனுபவிக்க வேண்டாம்.. எனக்காக அவங்களை விட்டுடுங்க.." அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.. கண்ணீர் துளிகள் வைரங்களாக அவன் சட்டையை நனைத்திருந்தன.. தலை தாழ்ந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.. காசியும் தீனாவும் தரையோடு தவழ்ந்து தப்பித்து செல்லும் வேளையிலே.. போலீஸ் அவர்களை வளைத்து பிடித்தது.. காவல் அதிகாரிகளுக்கு பின்னால் ஆச்சார்யா வந்தார்..
"குரு அந்த அறையை தாழிட்டு சென்ற பின்.. வடிவு தன் பட்டன் ஃபோன் மூலம் ஆச்சாரியாவிற்கு அழைத்து அங்கு நிலவரங்களையும் சொல்லி இருந்தாள்.. இருவருமாக அந்த அறையின் மூலையிலிருந்த ஒரு சிறு வழியின் மூலம் தப்பித்து வந்திருந்தனர்.. ஆச்சார்யா காவல் துறையோடு அங்கு வந்து சேர்ந்திருந்தார்..
அருவாளை ஓங்கியபடி அய்யனார் சாமி போல் நின்றிருந்தான் குரு.. அவன் பாதுகாப்பில் அன்பரசி..
"தம்பி உனக்கு ஒன்னும் இல்லையே.." ஆச்சார்யா வந்து கேட்டதை அவன் உணரவில்லை.. இருவரின் விழிகளும் தீராத தாபத்தோடு பின்னி பிணைந்திருந்தன..
"ஐயா அவங்க சிலை மாதிரி அப்படியே நிக்கட்டும்.. நாம போகலாம்.." வடிவு ஆச்சார்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற.. அவர்கள் இருவர் மட்டுமே அங்கே..
"ஆமா என்னை என்ன சொல்லி கூப்பிட்ட..?"
"மா.. மா.." கொட்ட கொட்ட விழித்தாள் அன்பு..
"ஏன் அப்படி கூப்பிட்ட.." கோபமும் ஆங்காரமும் கணிசமாக குறைந்து மனைவிக்கான மயக்க மனநிலைக்கு தாவியிருந்தான் குரு.. மாமா என்ற வார்த்தைக்கு அப்படி ஒரு சக்தியா..?
"உங்களை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல அதனால..!!"
அருவாளை கீழே போட்டிருந்தான்.. குஞ்சுப் பறவை தாயிடம் உணவு கேட்க வாய் திறப்பது போல் முத்தமிடுவதற்காக அவளை அவசர அவசரமாக நெருங்க.. "போதும் வீட்டுக்கு போகலாம்.. அமைதியா இருங்க" முடிந்தவரை அவனை விட்டு விலக முயன்றாள்..
"வீடு வரை தாங்காது" இங்கே எங்கேயாவது தனியா ரூம் இருக்கா.. அந்த ரூம்..? வேக மூச்சுகளோடு அவ்வப்போது அவளை முத்தமிட்டபடி சுற்றும் முற்றும் ஆராய்ந்தவனை சிரிப்போடு பார்த்தாள் அன்பரசி.. அப்பப்பா.. முத்தமிட்டே கொன்றான் அவன்.. சிவந்தாள் அன்பு..
"வீட்டுக்கு வாங்க.. மொத்தமா தர்றேன்.. இங்கே வேண்டாம்.." அவனை தள்ளி விட்டு ஓடியவள் மயக்கத்தின் களைப்பு தீராமல் தள்ளாடி கீழே விழும் வேளையில் அவளை கையிலேந்தி இருந்தான் குரு..
"நீ எதுவும் தர வேண்டாம்.. உன் பக்கத்தில் இருந்தாலே போதும்.. உன்னை முழுசா அனுபவிச்ச சந்தோஷம் கிடைச்சிடும்.." இதழோடு முத்தமிட்டு அவளை தன் வாகனத்தை நோக்கி தூக்கிச் சென்றான் கள்வனவன்..
தொடரும்..
"இவளை அந்த ரூம்ல தூக்கி கடாசிட்டு சரக்கு பாட்டிலும் சைட் டிஷ்ஷும் எடுத்துட்டு வாடா.. அப்படியே நம்ம கனகாக்கு ஃபோன் பண்ணி இங்கே வர சொல்லு.. இந்த அழகிய பாத்து உடம்பெல்லாம் முறுக்கேறிப் போச்சு.." காசி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு அமர.. உடனிருந்தவன் அன்பரசியை தூக்கிச் சென்று பக்கத்து அறையில் கிடத்தி விட்டு வந்தான்..
"அண்ணே அநியாயமா அந்த பொண்ணு செத்துப் போச்சே.. இப்ப போலீஸ் வந்து விசாரிச்சா நாம மாட்டிக்க மாட்டோமா.." மது பாட்டில்களை இதற்கு முன்பு அன்பரசியை கிடத்தியிருந்த கல் மேடையில் அடுக்கி உருளைக்கிழங்கு சிப்ஸ் மிச்சர் தட்டையும் அங்கே வைத்தான் அவன்..
"என்னடா..!! மெண்டல் மாதிரி பேசுற.. நாமளா அவளை கொன்னோம்.. மயக்க மருந்து கொடுத்தோம்.. ஓவர் டோசாகி அவ செத்துப் போயிட்டா.."
"இருந்தாலும் அவளுக்கு மயக்கம் மருந்து கொடுத்தது நாமதானே..!! போஸ்ட்மார்ட்டம்ல தெரிஞ்சு போயிடும்ல.. அதிக வட்டி வசூலிச்சு கட்டப்பஞ்சாயத்து பண்ணி இருக்கோம்தான்.. ஆனா கொலை நமக்கு புதுசு இல்லையா காசி.." அவனும் பீடியை வலித்து விட்டு சொன்னான்..
"ஏன்டா.. கொலை பண்ணிட்டோம்னு ரொம்ப ஃபீல் பண்றியா.." கண்கள் இடுங்க காசி கேட்டதற்கு..
"கொலை பண்ணலையேன்னு ரொம்ப ஃபீல் பண்றேன்.. அவளைக் கொன்னு தண்டனையை ஏத்துக்கிட்டா கூட பரவாயில்லை.. அவளா செத்துப் போயிட்டா.. இதுக்காக நாம ஜெயிலுக்கு போகணுமா.. அது அசிங்கம் தல" அவன் சலித்தான்..
"உனக்கு உன் கவலை.. எனக்கு அந்த குருவை பழி வாங்க முடியலயேன்னு கவலை.. அத்தனை பேர் முன்னாடி என்னை மானபங்கப் படுத்தினவனை துடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா முடியலையே.. அதுக்குள்ளே மண்டய போட்டுட்டாளே" காசியின் கண்களில் வெறி கூத்தாடியது..
"ஏன் தல இவ்வளவு ஃபீல் பண்ற.. பொணமா இருந்தாலும் பொம்பள பொம்பளதானே.. அவள மொத்தமா துகிலுறிச்சு பொது ஜனங்க கூடுற தோப்புக்குள்ள தூக்கி போடு.. ஆசை பொண்டாட்டியை அந்த நிலைமையில பாக்கற எவனும் உயிரோடு இருப்பான்னு நினைக்கிற..?"
"சத்தியமா நாக்க புடுங்கிட்டு சாவான்.." காசி விகாரமாக சிரித்தான்..
"அவன் செத்துப் போனா அப்போ உன் பழிவெறி அடங்கிடும் இல்ல.."
"நிச்சயமா..!!"
"அப்ப போய் ஆக வேண்டிய காரியத்தை பாரு காசி.. புடவை கடை பொம்மைக்கு டிரஸ் மாத்துறது இல்ல.. அந்த மாதிரி நினைச்சுக்க.."
"செத்த பொணமா இருந்தாலும் அழகி அழகி தானே.." கோணல் சிரிப்புடன் எழுந்து திரும்பி நடந்தான் காசி..
"தல இரு நானும் வரேன்.." உடனிருந்த தீனாவும் அவனை பின்தொடர்ந்து ஓட.. அறைக்குள் காசி நுழையும் நேரத்தில் முகத்தில் வேகமாக குத்து வாங்கி ஸ்கேட்டிங் செய்வது போல் சறுக்கிக் கொண்டு போய் விழுந்தான் தூரமாக..
அடுத்து தீனா.. வயிற்றை சுருக்கி கொண்டு ஒரு மூலையில் நெளிந்து கொண்டிருந்தான்..
சற்று முன்பு நடந்தது..
குருவின் முன்பு ஏகப்பட்ட சோப்புக் குமிழ்கள் காற்றில் பறந்து கொண்டிருக்க.. இதயத்தில் ஏதோ அலாரம் அடித்தது.. ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்ளுணர்வு உணர்த்தியது.. உயிருக்குள் ஏதோ சொல்ல முடியாத வலி..
"ஏய் கிழவி.. இங்க வா.." அழைத்தபடி உள்ளே வந்தான்..
"ராசா.."
"வந்து அழைச்சிட்டு போன அவ ஃபிரண்டோட பெயர் என்ன..?"
"தெரியலையே ராசா..!!"
"அட ரெண்டு பேரும் பேசும் போது அந்த பொண்ணோட பேர் சொல்லி அம்பு கூப்பிட்டு இருப்பா.. நல்லா யோசிச்சு பாரு..!!" குரு சொன்னதை தொடர்ந்து மூளையை கசக்கி யோசிக்க ஆரம்பித்தாள் அவள்..
"ஏதோ திவ்யான்னு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு.." வடிவு சொன்னதில் சதாசிவத்திற்கு அழைத்தான் குரு..
"மாமா.."
"சொல்லுங்க மாப்ள.."
"அம்புக்கு திவ்யான்னு யாராவது ஃபிரண்ட் இருக்காளா.. அந்த பொண்ணோட வீட்டு அட்ரஸ் உன் போன் நம்பர் கொஞ்சம் கொடுங்க.."
"என்கிட்ட போன் நம்பர் இல்ல மாப்ள.. ஆனால் அந்த பொண்ணோட வீடு எங்க இருக்குன்னு தெரியும்.. நிறைய முறை அந்த பொண்ணோட வீட்ல இருந்து அன்பரசியை நான் அழைச்சிட்டு வந்துருக்கேன்.." என்று வீட்டு முகவரியை சதாசிவம் சொல்லவும் மனதில் குறித்துக் கொண்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்து அங்கிருந்து விரைந்தான் குரு..
"ராசா.. தம்பி.." வடிவு அந்த முதிய வயதிலும் அவன் பின்னால் ஓடினாள்..
"ப்ச்.. எ.. ன்.. ன..!!" சலிப்பாக கேட்டான்..
"அன்பரசிக்கு ஏதாவது பிரச்சனையா..?"
அப்படித்தான் தோன்றுகிறது ஆனால் அதை வெளிப்படையாக சொல்லி இந்த வயதானவளின் மனதை ஏன் குழப்ப வேண்டும்.. என்ற எண்ணத்தோடு "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அன்பரசியை கூட்டிட்டு வரத்தான் போறேன்" என்றான் அவன்..
"இல்ல.. உன் முகமே சரியில்ல ஏதோ தப்பா இருக்கு.. நானும் உன் கூட வரட்டுமா..?" கெஞ்சலாக கேட்டாள் வடிவு..
"வயசான காலத்துல உன்னை வேற வச்சுக்கிட்டு நான் சுத்தனுமா..?"
"கெஞ்சி கேட்கிறேன் ராசா.. தயவு செஞ்சு கூட்டிக்கிட்டு போ.. அன்பரசிக்கு ஏதோ ஆபத்துன்னு என் மனசு சொல்லல.. ஆனா உன் முகம் சொல்லுது.. நீ கலங்கி நிக்கிற தோற்றம் காட்டிக் கொடுக்குது.." வடிவு சொன்ன பிறகு தான் தன் மனப்போக்கை உணர்ந்திருந்தான் அவன்..
"சரி வா போகலாம்.." வடிவை அழைத்துக் கொண்டு தன் வாகனத்தில் ஏறினான்..
"அன்பரசி அப்பவே கிளம்பி போயிட்டாளே.. நான் தானே ஆட்டோ ஏத்தி அனுப்பி வச்சேன்.." திவ்யா இப்படித்தான் பதில் சொன்னாள்..
"எந்த ஆட்டோ..? வந்து அடையாளம் காட்டு.."
திவ்யா ஆட்டோ ஸ்டாண்ட் வரை வந்து அந்த ஆட்டோ ஓட்டுனரை அடையாளம் காட்டினாள்..
ஓட்டுனரின் சட்டையை பற்றி கொத்தாக தூக்கினான் குரு..
"எங்கடா என் பொண்டாட்டி..?" ஆத்திரத்தோடு பற்களை கடித்தான்..
"சார்.. சார்.. சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது.. பாதி வழியில பழம் வாங்கணும்னு இறங்கினாங்க.. நானும் அப்படியே ரிட்டன் எடுத்து பெட்ரோல் போட போனேன்.. திரும்பி வந்து பார்க்கும்போது அவங்க அங்க இல்ல.."
"வந்து எந்த பழக்கடைன்னு சொல்லு.." அவன் சட்டையை பற்றி இழுத்துக் கொண்டு போனான்..
ஆட்டோ ஓட்டுனர் பழக்கடையை அடையாளம் காட்ட அவன்தான் முழு உண்மையை விவரித்தான்..
"குரு.. உன் பொஞ்சாதி பழக்கடைக்குதான் வந்தாங்க.. ஆனா திரும்பிப் போகும்போது காசியும் அவனோட கூட்டாளியும் அவங்க மூக்குல மயக்க மருந்தை வச்சு கார்ல கடத்திக்கிட்டு போயிட்டாங்க.." குருவிற்கு கழுத்து நரம்புகள் புடைத்து கோபம் எல்லை மீறியது..
"நீ பார்த்துக்கிட்டு சும்மா நின்னியாக்கும்.."
"என்னால என்ன செய்ய முடியும்.. நான் சாதாரண பழ வியாபாரி.. காசி எவ்வளவு பெரிய ஆளு.. எனக்கு குடும்பம் இருக்கு குரு.." பழ வியாபாரி இயலாமையோடு நிற்க.. "தூ.. நீயெல்லாம் ஒரு ஆம்பள.. உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்" கண்கள் சிவந்து பற்களை நறநறவென கடித்தான் குரு..
வண்டியில் அவனோடு வடிவு இருப்பதெல்லாம் உரைக்கவில்லை.. நேராக காசியின் கோழிப்பண்ணைக்கு அதிவேகத்தில் வண்டியை விட்டான்..
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக நடந்தவன் கோழிப்பண்ணையின் அருகே இருந்த பழைய சின்ன வீட்டை உற்று பார்த்து அவ்விடம் நோக்கி நடக்க வடிவு அவனை பின் தொடர்ந்தாள்.. உக்கிரமாக நிற்கும் இந்நேரத்தில் அவனிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் வராது என்பதை அவள் அறிவாள்.. அவளைப் பொறுத்தவரை அன்பரசியை உயிரோடு பாதுகாப்பாக மீட்க வேண்டும் அவ்வளவே..
அந்த வீட்டிற்குள் சத்தம் போடாமல் நுழைந்த வேளையில்தான் காசியும் அவன் கூட்டாளியிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.. முஷ்டிகள் இறுக.. கட்டுக்கடங்காத கோபத்துடன் அவர்களை வதம் செய்ய முன்னேறியவனை தடுத்து பக்கத்திலிருந்த அறையை காண்பித்தாள் வடிவு..
கேள்வியாக அவ்விடத்தை உற்றுப் பார்த்தவனுக்கு அன்பரசியின் கொலுசு பாதங்கள் தெரிய.. ரௌத்திரம் பொங்கியிருந்த விழிகள் சற்றே சுருங்கி விரிந்து தவிப்போடு அவளை பார்த்தன.. கால்கள் அவளை நோக்கி நடை போட்டது.. இதயத்தின் படபடப்பு கூடியது..
மூச்சு பேச்சின்றி கிடந்தாள் அன்பு.. உயிரே போனது போல் ஸ்தம்பித்தான் குரு..
ஓடிச் சென்று அவள் தலையை மடியில் ஏந்தினான்..
"அ.. அ.. அம்பு.. எழுந்திரிடி.." அவள் கன்னம் தட்டினான்..
வடிவு இக்காட்சியை கண்டு நெஞ்சம் அதிர்ந்தாலும் சத்தம் வராமல் கதவை தாழிட்டாள்.. இரும்பு கதவை தாண்டி ஓசை வெளியே கேட்க வாய்ப்பில்லை..
"என்னாச்சு ராசா.." பதைபதைப்போடு அருகில் வந்து கேட்டாள் வடிவு..
"மூச்சு வரல.. பாட்டி.. இ.. இ..தயத்துடிப்பும் கேக்கல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.." அவன் குரலில் என்றும் தென்படாத அதீத பதட்டம்.. முதன்முறையாக பாட்டி என்று அழைக்கிறான் ஆனால் அதை அனுபவிக்கும் நிலையிலா இருக்கிறாள் வடிவு..
"அய்யோ.. என்னன்னு தெரியலயே.." நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினாள் வடிவு..
குரு தாமதிக்காமல் அவள் வாயோடு வாய் வைத்து தன் சுவாசத்தை வழங்கினான்..
"அம்பு.. எழுந்திரிடி.. என்னை விட்டு போகணும்னு நினைச்ச உன்னை நானே கொன்னுடுவேன்.." முரட்டுத்தனமாக அவளை உலுக்கினான்.. இதயத்தை வேகமாக அழுத்தி பார்த்தான்..
"அ.. ம்.. பு.. எழுந்துருடி.. நீ.. வேணும்.. அ..ம்பு.." அவளை அணைத்து கொண்டு முகத்தோடு முகம் இழைய விட்டான்.. அவளிடம் எந்த அசைவும் இல்லை..
"அம்பு என்னை விட்டு போய்ட்டாளா. பாட்டி.." அவன் உதடுகள் நடுங்கியது.. கண்கள் வேறு மாதிரியான உணர்வை பிரதிபலித்தன.. மூளையின் நியூரான்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம்..
வடிவு என்ன சொல்லுவாள்.. மூச்சும் இல்லை இதயத்துடிப்பும் கேட்கவில்லை என்றால் அன்பு இந்த உலகத்தில் இல்லை என்று தானே அர்த்தம்.. அதை தன் வாயால் சொல்ல முடியுமா.. குரு தாங்குவானா.. அவன் வாழ்க்கையை அழகான பூந்தோட்டமாக மாற்றியவள் இன்று கருகிப் போய் கிடக்கிறாளே..!!
சின்ன குழந்தை போல் அவள் கன்னம் மூக்கு.. என விரலால் தொட்டு பார்த்துக் கொண்டே.. "அம்பு.. அ.. அம்பு.. என்னை மிருகமாக்காதே அம்பு.. நீ இல்லாம எனக்கு வெறி பிடிக்குதுடி.." ஒரு மாதிரியாக உறுமினான்..
"பேசு.. அ.. ம்பு.." அவள் இதழைத் தொட்டு வருடினான்.. வடிவு வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தாள்..
இரு கைகளால் அன்பரசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் குரு..
இருதயமே வெடித்துப் போகும் உணர்வு.. தன்னிலை இழந்தான்.. மூளை செயலிழந்து போனது.. அவன் உலகம் இருண்டு போனது.. கண்களிலிருந்து சின்ன சின்ன முத்துக்களாக கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக அன்பரசியின் கன்னத்தில் விழுந்தன.. குரு அழ ஆரம்பித்திருந்தான்.. தாயின் இறப்பிற்கும் கலங்க தெரியாமல் கல்போல் நின்றவன்.. அன்பரசியின் இழப்பை தாங்க இயலாமல் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.. வறண்ட பூமி மழைத்துளிகளை ஏற்றுக் கொண்டு உயிர் பெறுவதை போல்..
ஹக்.. பட்டென கண்களைத் திறந்து விக்கலோடு ஆழ்ந்த மூச்சிழுத்து கணவனின் கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் ஒரு ஜனனம் பெற்றுக் கொண்டாள் அன்பரசி..
கண்கள் விரித்தான் குரு.. அவன் அவளோடு சேர்ந்து இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்திருந்தது..
"அ.. அம்பு.. அம்பு.." கத்தி கதறி சக்கையாக பிழியும் அளவிற்கு அவளை இறுக அணைத்துக் கொண்டான்..
வடிவாம்பாளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. கண்ணீர் பெருக்கோடு கடவுளுக்கு நன்றி சொன்னாள்..
மனைவியை எழுப்பி அமர வைத்தான்.. அன்பரசிக்கு கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. கணவனை கண்டதும் கண்களில் நீர் தேங்கியது.. "எ..ன்னங்க.." மீண்டும் தாவி அணைத்துக் கொண்டாள்..
"அ.. அவன்.. என்னை மய..க்க..த்துல இரு..க்கும் போ..தே நா..சம் பண்ண பாத்தான்.. அதா.. அதா.. ன்.." பேச முடியவில்லை மூச்சு வாங்கியது..
"அதனால மூச்சை நிறுத்திட்டியா.." குருவின் குரல் இறுகியது..
'"ம்ம்ம்.." அவள் விழிகள் மூடித் திறந்து இயலாமையோடு தலையசைத்தாள்..
பட்டென்று கன்னத்தில் அடித்திருந்தான்.. துவண்ட கொடியாக கீழே சாய்ந்தவளை தாங்கி பிடித்து மீண்டும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..
வடிவு அவனை தடுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள்..
"ஏன்.. ஏன்.. டி.. என்னை பத்தி யோசிக்கவே இல்லையா நீ.." குரல் கமறியது..
"உ.. உங்களைப் பற்றி யோசிச்சதுனாலதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்.. என்னை வைச்சு உங்களை பழிவாங்க திட்டம் போட்டான்.. நீங்க எப்பவும் தோ..க்..கக்கூடாது.."
"எ.. என்னடி பேசற.. உன்னை செதச்சிட்டா என்னை தோக்கடிச்சதா அர்த்தமா..!! உன் உயிர் போயிருந்தாதான்டி நான் தோத்து போயிருப்பேன்.. அபகரிக்கப்படும் கற்புக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை.. அதைவிட விலைமதிப்பில்லாதது உன்னோட உயிர்.. எனக்கு நீ உயிரோட வேணும் அம்பு.. உனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு.." அதற்கு மேல் பேச முடியாமல் உதடுகள் நடுங்க பற்களை கடித்தான்.. கண்ணீர் வழிந்தது.. அவன் தவிப்பு அந்த இறுகிய அணைப்பில் தெரிந்தது..
அவள் கன்னத்தை அழுத்தமாக பற்றி நெத்தியில் முத்தமிட்டவன்.. "இங்கேயே இரு.. நான் வந்துடறேன்" என்று எழுந்தான்..
தள்ளாட்டத்துடன் எழுந்து அவன் பின்னால் ஓடினாள் அன்பரசி..
"எ.. எங்கே போறீங்க..!!"
திரும்பி அவளை அழுத்தமாக பார்த்தான் குரு.. "உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை சும்மா விட சொல்றியா.. அவன துடிக்க துடிக்க இந்த கையால கொல்லனும்.. அப்பதான் என் வெறி அடங்கும்.." ஆங்காரத்துடன் கர்ஜித்தான்..
"வே.. வேண்டாம்.. அவனை விட்டுடுங்க.. அவனை ஏதாவது செய்யப் போய்.. நீங்க.." அவளால் பேச முடியவில்லை..
"என்னை உன்னால தடுக்க முடியாது அம்பு.. உன்னை இந்த நிலைமையில பார்த்த பிறகு அவனை சும்மா விடுவேன்னு நினைக்கிறியா..!!"
"எ.. என்னங்க.. வே.. வேண்டாம்.."
"பாட்டி..!!" அன்புவை பார்த்துக்கொண்டே வடிவை அழைத்தான்..
"ராசா..!!"
"உன் பின்னாடி வெள்ளை காக்கா பறக்குது பாரு.."
"எங்கே..?" வடிவு கண்கள் சுருக்கி திரும்பிய நேரத்தில்.. அன்பரசியின் பிடரியை பற்றியிழுத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான் குரு.. அழுத்தமான முத்தம் இதழ்களை நிதானமாக சுவைத்தான்.. மயக்க மருந்து உபயத்தில் களைத்து போயிருந்தவள் அவன் கைகளில் துவண்டாள்..
"எங்கே அந்த வெள்ள காக்கா.." வடிவு இன்னமும் தேடிக் கொண்டிருந்தாள்..
இதழ்களை விடுவித்து காதலோடு அவளைப் பார்த்தவன் "முடிச்சிட்டு வரேன்.. இங்கேயே இரு.." என்று அங்கிருந்து சென்ற வேளையில்தான் எதிரே வந்த காசி தீனா இருவரும் குத்து வாங்கி கீழே கிடந்தனர்.. அத்தோடு அவர்களை விடுவதாய் இல்லை அவன்..
அந்த இரும்பு கதவை மீண்டும் தாழிட்டு வெளியே வந்து அவர்களை புரட்டி எடுத்தான்.. ஆத்திரம் தீர அடித்தான்.. கொன்றுவிடும் வெறியோடு கை காலை உடைத்தான்...
"என்னங்க.. என்னங்க" அந்த அறையிலிருந்து கதவை தட்டிக் கொண்டிருந்தாள் அன்பு..
"அவனுங்க செத்துப் போகட்டுமே.. நீ ஏன் இப்படி தவிக்கிற கண்ணு.." வடிவு அவளை தேற்ற முயன்றாள்..
"ஐயோ பாட்டி.. அது மட்டும் கூடவே கூடாது.. ஒரு முறை கொலை செஞ்சு பழக்கப்பட்டுட்டா.. இயல்பா அந்த வெறி மனசுக்குள்ள பதிஞ்சிடும்.. அடிதடி ரவுடித்தனத்தை இப்பதான் கஷ்டப்பட்டு நிறுத்த வைச்சிருக்கேன்.. அதுக்கும் ஒரு படி மேல போய் மறுபடி கொலை செய்யவும் ஆரம்பிக்கனுமா..? எப்படியாவது தடுத்து நிறுத்தனும் பாட்டி.. இந்த அறைக்குள்ள வேற ஏதாவது வழி இருக்கா பாருங்க..!!" அந்த அறையை சுற்றி சுற்றி தேடினாள் அவள்..
மூக்கு முட்ட மது அருந்திய படியால் அந்த இருவராலும் எதிர்த்து போராட கூட முடியவில்லை.. அரை மயக்கத்தில் குருதி சேறாய் அடி வாங்கி கீழே சரிந்த போதும் கொஞ்சம் கூட இரக்கம் பார்க்கவில்லை குரு.. மிருகம் போல் உறுமலோடு நின்றிருந்தவன் கண்களுக்கு கோழி இறைச்சியை வெட்டும் கத்தி தென்பட.. அதை எடுத்து வந்து ஓங்கி காசியின் கழுத்தை துண்டாக வெட்டும் நேரம்..
"மாமா.. ஆஆஆ.." ஓடி வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அன்பரசி..
ஓங்கிய கத்தியோடு அப்படியே நின்றிருந்தான் குரு.. ஆனால் கோபம் குறையவில்லை.. அவளை மீறி அந்த இருவரையும் கொல்லும் எண்ணம் தோன்றவும் இல்லை..
"விட்டுடுங்க மாமா.. ப்ளீஸ் விட்டுடுங்க.." அவங்களைக் கொன்னு நீங்க தண்டனை அனுபவிக்க வேண்டாம்.. எனக்காக அவங்களை விட்டுடுங்க.." அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.. கண்ணீர் துளிகள் வைரங்களாக அவன் சட்டையை நனைத்திருந்தன.. தலை தாழ்ந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.. காசியும் தீனாவும் தரையோடு தவழ்ந்து தப்பித்து செல்லும் வேளையிலே.. போலீஸ் அவர்களை வளைத்து பிடித்தது.. காவல் அதிகாரிகளுக்கு பின்னால் ஆச்சார்யா வந்தார்..
"குரு அந்த அறையை தாழிட்டு சென்ற பின்.. வடிவு தன் பட்டன் ஃபோன் மூலம் ஆச்சாரியாவிற்கு அழைத்து அங்கு நிலவரங்களையும் சொல்லி இருந்தாள்.. இருவருமாக அந்த அறையின் மூலையிலிருந்த ஒரு சிறு வழியின் மூலம் தப்பித்து வந்திருந்தனர்.. ஆச்சார்யா காவல் துறையோடு அங்கு வந்து சேர்ந்திருந்தார்..
அருவாளை ஓங்கியபடி அய்யனார் சாமி போல் நின்றிருந்தான் குரு.. அவன் பாதுகாப்பில் அன்பரசி..
"தம்பி உனக்கு ஒன்னும் இல்லையே.." ஆச்சார்யா வந்து கேட்டதை அவன் உணரவில்லை.. இருவரின் விழிகளும் தீராத தாபத்தோடு பின்னி பிணைந்திருந்தன..
"ஐயா அவங்க சிலை மாதிரி அப்படியே நிக்கட்டும்.. நாம போகலாம்.." வடிவு ஆச்சார்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற.. அவர்கள் இருவர் மட்டுமே அங்கே..
"ஆமா என்னை என்ன சொல்லி கூப்பிட்ட..?"
"மா.. மா.." கொட்ட கொட்ட விழித்தாள் அன்பு..
"ஏன் அப்படி கூப்பிட்ட.." கோபமும் ஆங்காரமும் கணிசமாக குறைந்து மனைவிக்கான மயக்க மனநிலைக்கு தாவியிருந்தான் குரு.. மாமா என்ற வார்த்தைக்கு அப்படி ஒரு சக்தியா..?
"உங்களை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல அதனால..!!"
அருவாளை கீழே போட்டிருந்தான்.. குஞ்சுப் பறவை தாயிடம் உணவு கேட்க வாய் திறப்பது போல் முத்தமிடுவதற்காக அவளை அவசர அவசரமாக நெருங்க.. "போதும் வீட்டுக்கு போகலாம்.. அமைதியா இருங்க" முடிந்தவரை அவனை விட்டு விலக முயன்றாள்..
"வீடு வரை தாங்காது" இங்கே எங்கேயாவது தனியா ரூம் இருக்கா.. அந்த ரூம்..? வேக மூச்சுகளோடு அவ்வப்போது அவளை முத்தமிட்டபடி சுற்றும் முற்றும் ஆராய்ந்தவனை சிரிப்போடு பார்த்தாள் அன்பரசி.. அப்பப்பா.. முத்தமிட்டே கொன்றான் அவன்.. சிவந்தாள் அன்பு..
"வீட்டுக்கு வாங்க.. மொத்தமா தர்றேன்.. இங்கே வேண்டாம்.." அவனை தள்ளி விட்டு ஓடியவள் மயக்கத்தின் களைப்பு தீராமல் தள்ளாடி கீழே விழும் வேளையில் அவளை கையிலேந்தி இருந்தான் குரு..
"நீ எதுவும் தர வேண்டாம்.. உன் பக்கத்தில் இருந்தாலே போதும்.. உன்னை முழுசா அனுபவிச்ச சந்தோஷம் கிடைச்சிடும்.." இதழோடு முத்தமிட்டு அவளை தன் வாகனத்தை நோக்கி தூக்கிச் சென்றான் கள்வனவன்..
தொடரும்..
Last edited: