• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 29

Active member
Joined
Jan 18, 2023
Messages
127
Wow wow wow... Extreme happiness kuduthu appu vachurathinga Sana ji.....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🩷🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
53
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ரிஷி மனநிலை.. சோ எக்சைட்டேட்....
அருந்ததி சந்திராம்மா நீங்கள் ரெண்டு பேரும் ரிஷிக்கு
நம்பிக்கை எனும் ஊக்க மருந்து...
போதும் இது போதும் நாம தப்பு செய்யலன்னு சக மனுஷங்கள்ல யாராவது ஒருவர் நம்மள புரிஞ்சுட்டா போதும் அதுல கிடைக்கிற மகிழ்ச்சியும் நிம்மதியும் கோடி ரூபாய் கொடுத்தா கூட ஈடாகுது.... நன்றி அருந்ததி எல்லாத்துக்கும்... இனி ரெண்டு பேரும் எல்லாமா இருந்து அன்பைக் கொடுங்கள்... ரிஷி கோடி மடங்காக திருப்பி கொடுப்பான்... நன்றி சனாத்தங்கம் எதிர்பார்க்கல இந்த திருப்பத்த.... 🥰😍🥰😍🥰
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
47
மீட்டிங் நான்கு மணிக்கு முடிய வேறு எந்த டெலிவரி ஆர்டர்களையும் ஏற்காமல் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள் அருந்ததி..

விழித்திரை மறைக்க வழிந்த கண்ணீரோடு பாதுகாப்பாக வீடு வரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்ததே அதிசயம் தான்..! இதில் வேலை பார்த்து கூடுதலாக கிடைக்கப் போகும் இன்சென்டிவ் பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை அவள்..

பூட்டை கூட திறக்க தோன்றாமல் அப்படியே வாசலிலேயே அமர்ந்து விட்டாள்..

காலை சுற்றி சுற்றி வந்த மோத்தியை கூட கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

நட்புகளுடன் பேசி அரட்டை அடித்து விட்டு ஆடி அசைந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்
சந்திரமதி..

"என்னமா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க.. வீட்டை கூட திறக்கலையா..?" ஜன்னல் பக்கமிருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று புத்தகப் பையை வைத்துவிட்டு மீண்டும் அன்னையிடம் வந்தாள்..

சந்திரமதி வந்து பேசியதோ சாவி எடுத்து பூட்டை திறந்து கொண்டு உள்ளே போனதையோ அறியாதவள் போல் ஜடமாய் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

அருந்ததியை விடுத்து சந்திரமதியிடம் தாவிக் கொண்டான் மோத்தி.. அவனை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு..

"ம்மா.. இன்னைக்கு ஸ்கூல்ல பத்மா டீச்சர் என்னை ரொம்பவே அப்ரிசியேட் செஞ்சாங்க தெரியுமா.. இப்பல்லாம் நான்தான் அவங்களோட ஃபேவரைட் ஸ்டுடென்ட்.. பசங்க எல்லாருக்கும் என் மேல கொஞ்சம் பொறாமையும் கூட..! எதுனாலும் என்னைத்தான் கூப்பிட்டு சொல்றாங்க.. எனக்கு மட்டும் புக்ல ஸ்பெஷல் கொஸ்டின்ஸ் மார்க் பண்ணி கொடுத்து படிக்க சொல்லி இருக்காங்க..! என்னமோ தெரியலமா?? இப்பல்லாம் சயின்ஸ் கெமிஸ்ட்ரியெல்லாம் ரொம்ப பிடிக்குது.. ஆர்வமா படிக்கிறேனாம்.. குட் இப்படித்தான் இருக்கணும்.. இந்த மாதிரி துரு துருன்னு இருக்கற பசங்கள தான் எனக்கு பிடிக்கும்னு சொன்னாங்க.. அவங்களுக்கு பிடிக்கனுங்கறதுக்காகவே புத்திசாலியா இருக்கணும்னு தோணுது..!" சந்திரமதி பேசிக் கொண்டே செல்ல அருந்ததியின் செவிகளை திரை ஒன்றால் மறைத்தார் போல் அவள் வார்த்தைகள் ஒன்று கூட உள் நுழையவில்லை..

"ம்மா.. ப்ச்.. ம்மாஆஆஆ.." என்று கத்திய பிறகு தான் உணர்வு தெளிந்தாள்..

"ஹான்.. என்னடி..? நீ.. நீ எப்ப வந்த..?" முகம் வெளிறி.. நனைந்த கண்களோடு அமர்ந்திருந்த தாயை உற்று நோக்கினாள் சந்திரமதி..

"நான் வந்தது சாவியை எடுத்து வீட்டை திறந்தது.. இப்போ உன் பக்கத்துல உக்காந்து பேசிட்டுருக்கிறது எதையும் நீ கவனிக்கலையா.. என்னம்மா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி உக்காந்திருக்க..?" மகளின் முகம் தீவிரமாய் மாறுவதை கண்டு சுதாரித்தாள் அருந்ததி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல பயங்கரமான தலைவலி.. கண்ணு முன்னாடி என்ன இருக்குதுன்னு கூட தெரியல.."

"அ.. அய்யோ.. நான் வேணா காபி போட்டு தரட்டுமா..?"

"பெரிய மனுஷி மாதிரி கேட்காதடி.. உனக்கு தான் பால் காய்ச்ச கூட தெரியாதே..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. வெயில்ல வந்ததுனால இப்படி இருக்குதுன்னு நினைக்கிறேன்.. கொஞ்ச நேரம் இப்படியே உட்கார்ந்துக்கறேன்.. ஹான்.. நீ ஏதாவது சொன்னியா..!" என்ற அன்னையை யோசனையாக பார்த்தாள் அருந்ததி..

"இல்லம்மா நீங்க உள்ள வாங்க கொஞ்ச நேரம் படுங்க..!" அம்மாவை அழைத்துக் கொண்டு பாயை விரித்து படுக்க வைத்தாள் சந்திரமதி..

"உ.. உனக்கு ஏதாவது சாப்பிட..?"

"ஒன்னும் வேண்டாம்.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. நான் மோத்தியோட கொஞ்ச நேரம் விளையாடறேன்.." என்றவள் வெளியே வந்து பந்தை தூக்கிப்போட்டு மோத்தியோடு விளையாட துவங்கினாள்..

யோசித்து யோசித்து அதீத மூளைச் சோர்வில் அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அருந்ததி..

மெல்ல இருட்டிய பிறகு வீடு வந்து சேர்ந்தான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கியவன் "ஹாய் சந்திராம்மா.." என்றபடியே நடந்து வந்து அவளை தலையை செல்லமாக கலைத்துவிட்டு மோத்தியை கையில் தூக்கி வைத்துக்கொண்டு மெல்ல வருடி தந்து பின்பு கீழே இறக்கி விட்டான்..

அருந்ததியிடம் ஒப்பித்த அத்தனை கதையையும் எழுத்து மாறாமல் மகரிஷியிடமும் சொன்னாள் சந்திரமதி..

தோளில் குறுக்காக மாட்டியிருந்த பையின் வாரை நெஞ்சுக்கு நேராக பிடித்தபடி தோரணையாக நின்று கொண்டிருந்தவன் அவள் சொன்ன கதையை பொறுமையாக சுவாரசியம் ததும்ப கேட்டுக் கொண்டிருந்தான்..

"சோ.. இதிலிருந்து என்ன தெரியுது.. அவங்களுக்கு உன் மேல தனிப்பட்ட வெறுப்பெல்லாம் எதுவும் இல்லை.. நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கணும்னு எதிர்பாக்கறாங்க.. அப்படி இல்லாதபோது மனசுக்குள்ள உருவாகிற கோபம் தான் அப்படி திட்ட வைக்குது.. நல்லா யோசிச்சு பாரு.. நீ நல்லா படிக்கிறதுனால லாபம் உனக்கா அவங்களுக்கா..?"

"நிச்சயமா எனக்கு தான்.. அவங்க மோட்டிவ் எனக்கு நல்லாவே புரியுது ரிஷி.. ஆனாலும் என் உருவத்தை வச்சு அவங்க திட்டுனது தப்பு தானே..?"

"அதான் அவங்களே ரெக்ரேட் பண்ணிட்டாங்களே.. சோ.. லீவ் இட்.. படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணுங்க மேடம்..!" என்றவன் வாசல் தாண்டி உள்ளே வந்தபோதுதான் பாயில் படுத்திருந்த அருந்ததியை கவனித்தான்..

ஒரு கணம் கண்கள் சுருக்கி அவளை உற்றுப் பார்த்தவன் மீண்டும் பின்னால் நகர்ந்து சந்திரமதியிடம் வந்தான்..

"என்ன ஆச்சு உன் அம்மாவுக்கு..? எப்ப வீட்டுக்கு வந்தாங்க..!" அவன் பேச்சில் லேசான பதட்டம்.. எப்போதும் விளக்கு வைக்கும் நேரத்தில் இப்படி படுத்து உறங்கியதில்லையே அருந்ததி..

"சீக்கிரமாவே வந்துட்டாங்க.. தலை வலிக்குதுன்னு சொன்னாங்க.. நான்தான் பாய் போட்டு படுக்க சொன்னேன்..!" சொல்லிவிட்டு மீண்டும் மோத்தியோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தாள் சந்திரமதி..

"தலைவலியா..?" தனக்குள் பேசிக்கொண்டே வேகமாக அவள் அருகே வந்தவன் ஒரு காலை மட்டும் மடக்கி முட்டி போட்டு அமர்ந்து ஒருக்களித்து படுத்திருந்தவளின் முகத்தை தன் சின்ன விழிகளால் ஊடுருவி பார்த்தான்..

துப்பட்டா மார்பை விட்டு நகர்ந்து அங்குமிங்குமாக ஆடை விலகி தெரிந்த கவர்ச்சியில் இந்நேரம் அவன் மனம் கிளர்ச்சியடையவில்லை..! அவள் மீது விரல் படாமல் உடைகளை சரி செய்து விட்டான்..

கண்களின் ஈரம் அப்பட்டமாக தெரிந்தது.. அழுதிருக்கிறாளா..! என்ன பிரச்சனையோ.. அவன் முகத்தில் கவலை.. தோள் தொட்டு மெல்ல எழுப்பி அவளை அமர வைத்து கன்னம் வருடி "என்னம்மா பிரச்சனை?" என்று கேட்கத்தான் நினைத்தான்.. ஆனால் அயர்ந்து உறங்குபவளை எழுப்ப மனமில்லை.. பட்டும் படாமலும் வியர்வையில் நனைந்து முன் நெற்றியில் படிந்திருந்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட்டு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட பெருமூச்செறிந்து எழுந்து தன்னறைக்கு சென்று விட்டான்..

சட்டென விழிப்பு தட்டியது அருந்ததிக்கு..

கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழு..!

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தேனா..! அவசரமாக எழுந்து வெளியே சென்றவள் முகத்தை கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள்.. சந்திரமதி திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க.. துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே.. "எங்கடி உன் வாத்தியாரு..?" சற்று காட்டமான குரலோடு அவள் அருகே வந்து நின்றாள்..

"உள்ளே" என்று ஒற்றை விரலை சுட்டிக்காட்டிய சந்திரமதி பாடபுத்தகத்தின் வேதியியல் வார்த்தைகளை சத்தம் வராமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்..

கையில் துண்டை வைத்துக் கொண்டு நிலம் நோக்கி யோசித்தவள் ஒரு முடிவோடு கதவை திறந்து கொண்டு மகரிஷியின் அறைக்கு சென்றாள்..

மேஜையில் வைத்திருந்த புத்தகத்தை புரட்டி பார்த்தபடி நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் காலடி ஓசையில் நிமிர்ந்தான்..

"ஓய்.. ஜேஜம்மா..!" அவன் முகத்தில் இன்ஸ்டன்ட் புன்னகை.. இது அவளுக்கான பரவசம்..

பதிலுக்கு அருந்ததி சிரிக்கவில்லை..

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..?"

"ஏன் நிறைய பேசலாமே..! ஐ அம் வெயிட்டிங்.." என்றவன் நாற்காலியை இழுத்து போட்டு அவளை உட்கார சொல்லிவிட்டு மீண்டும் எழுதினான்..

அருந்ததி அமரவில்லை.. அவள் அப்படியே நிற்பதை கண்டு நிமிர்ந்து பார்த்தவன்..

"உக்காருடி" என்றான் அழுத்தமாக.

"பரவாயில்லை இருக்கட்டும்..!"

"அட.. உட்காரு.." அவள் கைப்பற்றி இழுத்து நாற்காலியில் அமரச் செய்தான்..

மெல்ல தன் கரத்தை உருவி கொண்டாள்..

"ம்ம்.. இப்ப சொல்லு.."

"நீங்க இதுக்கு முன்னாடி காலேஜ்ல வேலை செஞ்சீங்களா..! அங்க ஒரு ஸ்டுடென்ட் கிட்ட நீங்க தப்பா நடந்துகிட்டதா பிரச்சனை வந்து உங்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்களா.. போலீஸ் உங்களை அரெஸ்ட் பண்ணுச்சா..! ஜெயிலுக்கு போனீங்களா..? உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா.. உங்க மனைவி இந்த பிரச்சனையினால்தான் உங்களை விவாகரத்து செஞ்சுட்டாங்களா..! குழந்தைகள் யாராவது இருக்காங்களா? இருந்தா எங்கே மறைச்சு வைச்சிருக்கீங்க.. இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிச்சு வச்சிருக்கீங்க சார்..?

அவள் ஒவ்வொரு வார்த்தையிலும் இதயம் சூடு கண்டு தீப்பிடித்து எரிந்ததில் முகம் இறுகிப்போனது..

ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்.. பேனாவை டேபிளில் தட்டியபடி தலை தாழ்ந்திருந்தான்..

இது வெட்கமோ.. குற்ற உணர்ச்சியோ அல்ல.. வேதனையுடன் கூடிய இறுக்கம்.. செய்யாத குற்றத்துக்காக தூக்கிலிடப்பட போகும் ஒரு நிரபராதி கைதியின் விரக்தி சிரிப்பு..

"நான் கேட்கிற எதுக்கும் உங்க கிட்ட பதில் இல்லைல..?"

"இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்..!"

நிமிர்ந்தவனின் விழி படலத்தில் மெல்லிய அடுக்காய் கண்ணீர் திரை..

"போதும்..! நீங்க ஒன்னும் கண்ணீர் விட வேண்டாம்.. வேதனைப்பட வேண்டாம்.."

என் கண்ணீர் கூட கசக்கிறதா பெண்ணே!

முகத்தை சட்டென வேறு பக்கம் திருப்பிக் கொண்டு மூக்கை உறிஞ்சியவன் கட்டை விரலால் வெளியே வர காத்திருந்த ஒரு துளி கண்ணீரையும் துடைத்துக் கொண்டு எழுந்து மவுனமாக அவளை கடந்து செல்ல அவன் கையைப் பற்றினாள் அருந்ததி..

அப்படியே நின்று விட்டவன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..

"நிறைய அழுதிருப்பீங்க.. ரொம்ப வலிச்சிருக்கும்.. என்னால உணர முடியுது.. ஆனா தாங்க முடியல.. ரொம்ப அழுதுட்டேன்.. அப்படியே தலை வலிச்சிடுச்சு.."

இப்போதுதான் மெல்ல அவளை திரும்பிப் பார்க்கிறான்.. இணைந்த கரங்கள் விலகவில்லை..

"செய்யாத தப்புக்காக ஊரார் பழி சொல்லும்போது அது எவ்வளவு வலிக்கும்னு எனக்கும் தெரியும்.. நானும் அனுபவிச்சுருக்கேன்.. இன்னும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. நான்தான் படிக்காதவ இந்த உலகத்தை எதிர்த்து போராட தெரியல.. நீங்க படிச்சவர் தானே.. அந்த பொண்ணு சொல்றதெல்லாம் பொய்யின்னு நிரூபிக்க உங்களுக்கு ஒரு ஆதாரம் கூடவா கிடைக்கல..! சரி விடுங்க மாவீரனுக்கும் அறிவாளிகளுக்கும் கூட சில சமயத்துல சறுக்கல் வர்றது சகஜம்.. என்னவோ இப்படி நடக்கணும்னு இருந்திருக்கு..!"

தனக்கு துயரம் என்றால் இடிந்து போகிறோம்.. அடுத்தவருக்கு பிரச்சினை என்றால் அதிமேதாவியாகி ஆலோசானை சொல்கிறோம்.. இதுதான் மனித இயல்பு..

மெல்ல நடந்து வந்து முழங்காலிட்டு தரையில் அமர்ந்தவன் நாற்காலியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்..

"எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்.. ஏன் இந்த விஷயத்தை மறைச்சீங்க.. உங்கள பத்தி எதுவுமே என்கிட்ட சொல்லலையே.. அடிக்கடி அம்மாவை பற்றி பேசுவீங்க.. மத்தபடி உங்கள பத்தி ஒன்னுமே தெரியாம போயிடுச்சே எனக்கு..! உண்மையை சொன்னா எங்க நாங்க உங்கள நம்பாமல் போயிடுவோம்ன்னு பயந்துட்டீங்க.. அப்படித்தானே.." இருக்கையில் அமர்ந்தபடியே விறுவிறுவென முளைத்த கோபத்தோடு கேள்வி கேட்டாள் அருந்ததி..

"நீ.. நீ.. நீ என்னை நம்பறியா அருந்ததி..! அவனால் பேசவே முடியவில்லை.." பாதி வார்த்தைகளை காற்று நிரப்பியிருந்தது..

"நான் உங்களை நம்பாம வேற யார் நம்புவா..?"

கண்களை சுருக்கி ஒரு நொடி அலைப்புறுதலுடன் அந்த விழிகளை பார்த்தான்..

"ஏமி செப்பாவு..?" குரல் கரகரத்தது..

அருந்ததி கண்கள் சுருக்கி விழிக்க நெற்றியில் அறைந்து கொண்டவன்..

"எ.. என்ன சொன்ன..?" என்றான் அவசரகதியாக..

"நான் உங்களை நம்பலனா வேற யார் நம்புவாங்க..!" மீண்டும் அதையே சொல்லியவளுக்கு அதி வேகமாக பூமியை நோக்கி சீறி வரும் எரி நட்சத்திரம் போல் அந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்துடன் அவன் அடிமனம் நோக்கி கூர்மையாக இறங்கி கொண்டிருப்பது தெரியவில்லை..

சொல்லி முடித்த பின்பும் சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அந்தக் கண்களுக்கு சக்தி அதிகம் இருப்பதாக உணர்ந்தாள்..

நிச்சயம் இவன் தவறு இழைத்திருக்க மாட்டான் என்று சுத்திகரிக்கப்பட்ட மனதோடு மீண்டும் தெளிந்தாள்..

எதிர்பாராத நேரத்தில் சட்டென அவளை அணைத்துக் கொண்டான் மகரிஷி..!

ஹக்..! இதயத்தோடு சேர்ந்து ஒட்டுமொத்த தேகமும் ஒரு கணம் துள்ளி விழுந்தது..

இறுக்கமாய் அணைத்திருந்தான்..

அந்த அணைப்பின் அர்த்தம் புரியாமல் இல்லை அவளுக்கு..

மீண்டும் விலகி அவள் முகத்தை கையிலேந்தி "நீ என்னை நம்பறதானே..? ந.. நம்பிக்கை..!" என்ன பேசுகிறான்.. எதை அவள் வாயிலிருந்து வெளிக்கொணர விரும்புகிறான் அவனுக்கே புரியவில்லை..

"உங்களை எந்த நிலையிலும் என்னால தப்பாவே நினைக்க முடியாது கோங்ரா..! நிச்சயமா அந்த பொண்ணு மேல தான் தப்பு.. உங்கள மனப்பூர்வமா நம்புறேன்.. கண்மூடித்தனமா நம்பறேன்.. நீங்க இங்க வந்த புதுசுல என்கிட்ட வந்து இந்த விஷயத்தை பத்தி கேட்டிருந்தா நிச்சயமா நானும் உங்களை பழி சொல்லியிருப்பேன்.. ஆனா இப்போ உங்களை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்.. நீங்க நல்லவர்.. ஒரு கண்ணியமானவர் மேல திட்டமிட்டு சுமத்தப்பட்ட அவதூறு பழி.. நான் படிக்காதவ.. கொஞ்சம் அறிவு கம்மிதான்.. ஆனா மனுஷங்களை புரிஞ்சுக்க தெரியும்.. அதுலயும் உங்கள ரொம்ப நல்லாவே தெரியும்.."

பேசி முடிப்பதற்குள் மீண்டும் அணைத்துக் கொண்டான்..!

மெல்ல அவன் முதுகை வருடினாள் அருந்ததி..

மகரிஷிக்குள்ளிருந்து இப்படி ஒரு சின்னஞ்சிறு குழந்தை எட்டிப் பார்த்து தவழ்ந்து வந்து தன் தோளை தொடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை..

"தேங்க்ஸ்.. தேங்க்ஸ்டி பொம்மா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!" அவள் இரு கரத்தை பற்றி தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டவன் நிலை கொள்ளாத படபடப்போடு தெரிந்தான்..

"அம்மா என்னை விட்டுப் போனப்ப அழுதது.. மத்தவங்க என்னை கேவலமா பேசின போது கூட ஒரு சொட்டு கண்ணீர் விடல.. ஆனா நீ என்னை அழ வச்சிட்டடி..!" எச்சில் விழுங்கியபடி குரலில் கரகரத்தான்..

"இதுவே கடைசி அழுகையா இருக்கட்டும்..!" கண்ணீர் வழியாமல் கண்கலங்கி போயிருந்தாலும் அவன் கன்னத்தை வருடினாள் அருந்ததி..

முழங்காலிட்டமேனிக்கு அவள் மடி சாய்ந்தான்.. அவன் தலையை வருடி தந்தாள் அருந்ததி..

அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கி இதயம் நிம்மதியாய் சுவாசிக்கிறது..

சுவாசிக்க வைத்திருக்கிறாள் தேவதை..

"உன் முகம் பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன் அருந்ததி.."

"ஏன்..?"

"நீ என்னை தப்பா நினைச்சிட்டியோன்னு..?"

"நான் தப்பா நினைச்சா உங்களுக்கென்ன.. என்னை உதறி தள்ளிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே.."

"உன்னை உதறித் தள்ளினா என் உலகமே இருண்டு போய்டும்.." அவன் தலையை வருடிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அப்படியே நின்று விட்டன..

வாழ்நாள் சாதனையாளர் விருது என நூறு கிலோ தங்கத்தை அழகிய இதயமாக வெட்டியெடுத்து அவள் கையில் தந்த உணர்வு..

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."

"சொல்லும்மா..!"

எழவும் இல்லை. அவள் முகம் பார்க்கவும் இல்லை.. மடி சுகம் கண்டிருந்தான்..

"மதி கிட்ட இந்த விஷயத்தை நீங்களே சொல்லிடறீங்களா..?"

நிமிர்ந்து விதிர்ப்புடன் அவள் முகம் பார்த்தான்..

"இல்ல.. மதி இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா.. இப்படி சொல்லலாமா தெரியல.. அப்பாவோட அரவணைப்புல இருக்கற மாதிரி பாதுகாப்பா இருக்கா.. அவள பொறுத்த வரைக்கும் நீங்கதான் ஹீரோ..‌ யாரோ ஒருத்தர் சொல்லியோ.. இல்லைனா ஏதோ ஒரு வீடியோவை பார்த்து அவளா தெரிஞ்சுகிட்டு கவலைப்படுறதை விட நீங்களே உண்மை எடுத்து சொல்லிட்டா நல்லது இல்லையா..?"

"அவ சின்ன குழந்தை.. அவ கிட்ட போய் இதை எப்படி..?"

"ஒரு குழந்தைகிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்லணும்னு உங்களுக்கு தெரியும் வாத்தியாரே..!"

"சந்திராம்மா என்னை நம்புவாங்களா..?"

"நீங்க அவளை நம்பி விஷயத்தை சொல்லுங்க..!"

மீண்டும் அவள் மடியில் படுத்துக்கொண்டான்.. ஒரு சில கணங்கள் கழித்து எழுந்து நின்றவன் அருந்ததியின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்..

"சந்திராம்மா கிட்ட இதைப் பற்றி எப்படி பேச போறேன்னு தெரியல..!"

"அம்மா கிட்ட விஷயத்தை பகிர்ந்துக்கறதுல என்ன தயக்கம்..!" உன்னத வார்த்தைகள் அவனுக்கு சக்தியை தந்தது..

வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரமதியிடம் சென்று அமர்ந்தான்.. மெல்ல விஷயத்தை துவங்கி நாசுக்காக அவளுக்கு புரியும் வகையில் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்..

சிறு பெண்ணல்லவா.. நம்ப முடியாத திகைப்பு.. கண்ணீர்..

"நான் எந்த தப்பும் செய்யல சந்திராம்மா.. டிரஸ்ட் மீ.." குரல்வளையில் இரு விரல்களால் பிடித்துக் கொண்டு சத்தியம் செய்தான்..

"இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க..?"

"என் அம்மா கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது அவசியம் இல்லையா..!"

"உன் மனசுல என்ன தோணுதோ வெளிப்படையாக சொல்லிடலாம்.. உனக்கு என்னை பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை.. நான் உங்களை விட்டு கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்.."

கதவு மறைவில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முகத்தில் கலவரம்..

"எங்க போவ..! எங்களை விட உனக்கு யாரு இருக்கா..?"

"பா..ப்பா..!"

"நாங்க இருக்கோம் ரிஷி..! இதெல்லாம் ஒரு விஷயமா.. போ.. போ..! உள்ள போய் வேலையை பாரு.." இயல்பாக சொல்லிவிட்டு புத்தகத்தில் கண் பதித்தாள்..

"உண்மையாத்தான் சொல்லுறியா பாப்பா..!" அவன் முகத்தில் மகிழ்ச்சி பரவசம்..

"கால் மீ சந்திராம்மா..!"

"ம்மாஆஆ..!". அவள் கரத்தை எடுத்து தன் கண்களுக்குள் ஒற்றிக்கொண்டான்.. ஒரே நேரத்தில் வாழ்க்கை இத்தனை பரிசுகளை கொண்டு வந்து குவிக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை..

"நீ நல்லவன் ரிஷி.. நல்லவன் தப்பு பண்ண மாட்டான்..!" சந்திரமதி சொன்னதும்.. உதட்டை மடித்தபடி கண்களை மூடி திறந்து சின்னவளை பார்த்துக் கொண்டிருந்தவன்..

"சீ..‌ சீக்கிரம் வந்துடுறேன்.." என்றபடியே எழுந்து அவசரமாக தனது பைக்கை நோக்கி சென்றான்..

"ரிஷி எங்க போற..?" என்று சந்திரமதியும்.. "எங்க போறீங்க" என்று வெளியே ஓடி வந்து நின்றபடி அருந்ததியும் கத்திய சத்தங்கள் காற்றோடு போயின..

மிக வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டு நகரத்தை தாண்டி வெகுதொலைவிற்கு சென்றிருந்தான் மகரிஷி..

ஜன நடமாட்டங்களையெல்லாம் கடந்து யாருமில்லாத ஒரு ஏரியின் அணைப்பகுதியில் வந்து நின்றான்..‌

எங்கோ கேட்டுக் கொண்டிருந்த தவளைகளின் சத்தமும்.. பறந்து கொண்டிருந்த பூச்சிகளின் துணையை ஈர்க்கும் பாஷையும் மட்டுமே நிசப்தத்தை கிழித்து அந்த இடத்தை நிறைத்திருந்தன..

உதட்டை மடித்து வேக வேகமாய் மூச்சுகளை எடுத்தவன்.. ஒரு நிலையில்..

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. என்று சத்தம் போட்டு கத்தி.. ஆளுமையான மகாராஜா போல் இரு கைகளை விரித்து வானத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருந்தான்..

சிரித்து கொண்டே இருந்தான்..

கேட்டுக் கொண்டிருந்த சத்தங்கள் அனைத்தும் சில கணங்கள் நின்று போய் மீண்டும் தொடர்ந்தன..

இந்த நொடி உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான மனிதன் என்று அவனை கொண்டு போய் மியூசியத்தில் காட்சி பொருளாய் வைக்கலாம்

தாய்க்கு பிறகு தன்னை நம்பும் இரண்டு ஜீவன்கள்.. எனக்காக இரண்டு உயிர்கள்..!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.. மகிழ்ச்சியின் முடிவில் ஒரு அழுகை. ஆனந்த அழுகை..

அனைத்தும் சந்தோஷ கதறல்கள்..

அணையின் சுவற்றில் இரண்டு கைகளை பதித்து இதழ்கள் விரிந்த புன்னகையுடன் தலை தாழ்ந்து ஆற்றை நோக்கினான்..

எத்தனையோ வருடங்களாக காத்திருந்து ஜென்ம சாபல்யம் பெற்று விடுதலையடைந்த ஆனந்த கண்ணீர் துளிகள் விடை பெற்றுக்கொண்டு கீழே சிதறி ஆற்று நீரோடு கலந்தன..

தொடரும்..
யப்பா நான் கூட ரொம்ப பயந்துட்டேன் எங்க நம்ம அரும்மா தப்பா புரிஞ்சிக்குமோனு ஆனா செம அதுலயும் சந்தூமா பின்னிட்ட போ சொன்ன பாரு போ போ வேலைய பாருனு நெஜமாவே நீ சந்திராம்மாதான் சூப்பர் எபி வேற லெவல் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
New member
Joined
Jun 2, 2024
Messages
10
எப்படி கீத்.. நேற்று பயந்ததற்கு ஓரே நாளில் உலகமே தலைகீழாக மாறியது போல அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்து நிறைவை கொடுத்து விட்டீர்கள்.. எவ்வளவு நம்பிக்கை ரிஷி மேல்.. அவன் தற்கொலை வரைக்கும் போயுள்ளான்... அதையும் வேற ஒரு விதமாக அரு தான் தடுத்துள்ளாள்... அபாரமான பதிவு கீத்..
 
New member
Joined
Apr 14, 2025
Messages
28
Semma 💖💖💖💖🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️🥰🥰🥰🥰
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
59
நம்பிக்கை இது ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய ஊன்றுகோல். அரும்மா சூப்பர்டா 👌👌👌👌👌👌.

ரிஷியை அழகா புரிஞ்சிகிட்டு நம்பிக்கை வச்சு நான் நம்பாம யாரு நம்புவான்னு கேட்ட பாரு இதை விட வேற என்ன வேணும் அந்த வளர்ந்த, எல்லோராலும் கைவிடப்பட்ட குழந்தைக்கு. 😍😍😍😍😍😍😍😍 👏👏👏👏👏👏👏

சந்திராம்மா நீ வேற லெவல்டி தங்கம். போ போய் வேலையை பாரு. இது ஒரு விஷயமே இல்லை. உன்னை நம்பி, உன்கூட நாங்க இருக்கோம்னு எவ்வளவு அழகா சொல்லிட்ட. 👏👏👏👏👏 💚💚💚💚💚💚💚💚

ரிஷி ஹாப்பி. நாங்களும் ஹாப்பி. 😄😄😄😄😄😄😄

உடனே ஏதாவது ஆப்பு வச்சுராதம்மா சனாம்மா. 🥺🥺🥺🥺🥺🥺🥺 🤔🤔🤔🤔🤔
 

Lee

New member
Joined
Jun 24, 2025
Messages
5
🥺😊☺️🥰🥰🥰🥰🥰🥰 enna emotion chance illa unga novel oru human entha time la eppdi think pannuvaganu romba sharp a eluthirukiga super super super super ❤️ 💕 💖 💞 💞
 
Member
Joined
Feb 15, 2025
Messages
42
அழகு, அற்புதம், அருமை என்ன ஒரு ஓவியமான கதை சனா மா அருமையோ அருமை
 
New member
Joined
Mar 23, 2024
Messages
6
சொல்ல வார்த்தைகளே இல்லை சிஸ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
139
மீட்டிங் நான்கு மணிக்கு முடிய வேறு எந்த டெலிவரி ஆர்டர்களையும் ஏற்காமல் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டாள் அருந்ததி..

விழித்திரை மறைக்க வழிந்த கண்ணீரோடு பாதுகாப்பாக வீடு வரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்ததே அதிசயம் தான்..! இதில் வேலை பார்த்து கூடுதலாக கிடைக்கப் போகும் இன்சென்டிவ் பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை அவள்..

பூட்டை கூட திறக்க தோன்றாமல் அப்படியே வாசலிலேயே அமர்ந்து விட்டாள்..

காலை சுற்றி சுற்றி வந்த மோத்தியை கூட கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..

நட்புகளுடன் பேசி அரட்டை அடித்து விட்டு ஆடி அசைந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்
சந்திரமதி..

"என்னமா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க.. வீட்டை கூட திறக்கலையா..?" ஜன்னல் பக்கமிருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று புத்தகப் பையை வைத்துவிட்டு மீண்டும் அன்னையிடம் வந்தாள்..

சந்திரமதி வந்து பேசியதோ சாவி எடுத்து பூட்டை திறந்து கொண்டு உள்ளே போனதையோ அறியாதவள் போல் ஜடமாய் அமர்ந்திருந்தாள் அருந்ததி..

அருந்ததியை விடுத்து சந்திரமதியிடம் தாவிக் கொண்டான் மோத்தி.. அவனை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு..

"ம்மா.. இன்னைக்கு ஸ்கூல்ல பத்மா டீச்சர் என்னை ரொம்பவே அப்ரிசியேட் செஞ்சாங்க தெரியுமா.. இப்பல்லாம் நான்தான் அவங்களோட ஃபேவரைட் ஸ்டுடென்ட்.. பசங்க எல்லாருக்கும் என் மேல கொஞ்சம் பொறாமையும் கூட..! எதுனாலும் என்னைத்தான் கூப்பிட்டு சொல்றாங்க.. எனக்கு மட்டும் புக்ல ஸ்பெஷல் கொஸ்டின்ஸ் மார்க் பண்ணி கொடுத்து படிக்க சொல்லி இருக்காங்க..! என்னமோ தெரியலமா?? இப்பல்லாம் சயின்ஸ் கெமிஸ்ட்ரியெல்லாம் ரொம்ப பிடிக்குது.. ஆர்வமா படிக்கிறேனாம்.. குட் இப்படித்தான் இருக்கணும்.. இந்த மாதிரி துரு துருன்னு இருக்கற பசங்கள தான் எனக்கு பிடிக்கும்னு சொன்னாங்க.. அவங்களுக்கு பிடிக்கனுங்கறதுக்காகவே புத்திசாலியா இருக்கணும்னு தோணுது..!" சந்திரமதி பேசிக் கொண்டே செல்ல அருந்ததியின் செவிகளை திரை ஒன்றால் மறைத்தார் போல் அவள் வார்த்தைகள் ஒன்று கூட உள் நுழையவில்லை..

"ம்மா.. ப்ச்.. ம்மாஆஆஆ.." என்று கத்திய பிறகு தான் உணர்வு தெளிந்தாள்..

"ஹான்.. என்னடி..? நீ.. நீ எப்ப வந்த..?" முகம் வெளிறி.. நனைந்த கண்களோடு அமர்ந்திருந்த தாயை உற்று நோக்கினாள் சந்திரமதி..

"நான் வந்தது சாவியை எடுத்து வீட்டை திறந்தது.. இப்போ உன் பக்கத்துல உக்காந்து பேசிட்டுருக்கிறது எதையும் நீ கவனிக்கலையா.. என்னம்மா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி உக்காந்திருக்க..?" மகளின் முகம் தீவிரமாய் மாறுவதை கண்டு சுதாரித்தாள் அருந்ததி..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல பயங்கரமான தலைவலி.. கண்ணு முன்னாடி என்ன இருக்குதுன்னு கூட தெரியல.."

"அ.. அய்யோ.. நான் வேணா காபி போட்டு தரட்டுமா..?"

"பெரிய மனுஷி மாதிரி கேட்காதடி.. உனக்கு தான் பால் காய்ச்ச கூட தெரியாதே..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. வெயில்ல வந்ததுனால இப்படி இருக்குதுன்னு நினைக்கிறேன்.. கொஞ்ச நேரம் இப்படியே உட்கார்ந்துக்கறேன்.. ஹான்.. நீ ஏதாவது சொன்னியா..!" என்ற அன்னையை யோசனையாக பார்த்தாள் அருந்ததி..

"இல்லம்மா நீங்க உள்ள வாங்க கொஞ்ச நேரம் படுங்க..!" அம்மாவை அழைத்துக் கொண்டு பாயை விரித்து படுக்க வைத்தாள் சந்திரமதி..

"உ.. உனக்கு ஏதாவது சாப்பிட..?"

"ஒன்னும் வேண்டாம்.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. நான் மோத்தியோட கொஞ்ச நேரம் விளையாடறேன்.." என்றவள் வெளியே வந்து பந்தை தூக்கிப்போட்டு மோத்தியோடு விளையாட துவங்கினாள்..

யோசித்து யோசித்து அதீத மூளைச் சோர்வில் அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அருந்ததி..

மெல்ல இருட்டிய பிறகு வீடு வந்து சேர்ந்தான் மகரிஷி..

வண்டியிலிருந்து இறங்கியவன் "ஹாய் சந்திராம்மா.." என்றபடியே நடந்து வந்து அவளை தலையை செல்லமாக கலைத்துவிட்டு மோத்தியை கையில் தூக்கி வைத்துக்கொண்டு மெல்ல வருடி தந்து பின்பு கீழே இறக்கி விட்டான்..

அருந்ததியிடம் ஒப்பித்த அத்தனை கதையையும் எழுத்து மாறாமல் மகரிஷியிடமும் சொன்னாள் சந்திரமதி..

தோளில் குறுக்காக மாட்டியிருந்த பையின் வாரை நெஞ்சுக்கு நேராக பிடித்தபடி தோரணையாக நின்று கொண்டிருந்தவன் அவள் சொன்ன கதையை பொறுமையாக சுவாரசியம் ததும்ப கேட்டுக் கொண்டிருந்தான்..

"சோ.. இதிலிருந்து என்ன தெரியுது.. அவங்களுக்கு உன் மேல தனிப்பட்ட வெறுப்பெல்லாம் எதுவும் இல்லை.. நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கணும்னு எதிர்பாக்கறாங்க.. அப்படி இல்லாதபோது மனசுக்குள்ள உருவாகிற கோபம் தான் அப்படி திட்ட வைக்குது.. நல்லா யோசிச்சு பாரு.. நீ நல்லா படிக்கிறதுனால லாபம் உனக்கா அவங்களுக்கா..?"

"நிச்சயமா எனக்கு தான்.. அவங்க மோட்டிவ் எனக்கு நல்லாவே புரியுது ரிஷி.. ஆனாலும் என் உருவத்தை வச்சு அவங்க திட்டுனது தப்பு தானே..?"

"அதான் அவங்களே ரெக்ரேட் பண்ணிட்டாங்களே.. சோ.. லீவ் இட்.. படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணுங்க மேடம்..!" என்றவன் வாசல் தாண்டி உள்ளே வந்தபோதுதான் பாயில் படுத்திருந்த அருந்ததியை கவனித்தான்..

ஒரு கணம் கண்கள் சுருக்கி அவளை உற்றுப் பார்த்தவன் மீண்டும் பின்னால் நகர்ந்து சந்திரமதியிடம் வந்தான்..

"என்ன ஆச்சு உன் அம்மாவுக்கு..? எப்ப வீட்டுக்கு வந்தாங்க..!" அவன் பேச்சில் லேசான பதட்டம்.. எப்போதும் விளக்கு வைக்கும் நேரத்தில் இப்படி படுத்து உறங்கியதில்லையே அருந்ததி..

"சீக்கிரமாவே வந்துட்டாங்க.. தலை வலிக்குதுன்னு சொன்னாங்க.. நான்தான் பாய் போட்டு படுக்க சொன்னேன்..!" சொல்லிவிட்டு மீண்டும் மோத்தியோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தாள் சந்திரமதி..

"தலைவலியா..?" தனக்குள் பேசிக்கொண்டே வேகமாக அவள் அருகே வந்தவன் ஒரு காலை மட்டும் மடக்கி முட்டி போட்டு அமர்ந்து ஒருக்களித்து படுத்திருந்தவளின் முகத்தை தன் சின்ன விழிகளால் ஊடுருவி பார்த்தான்..

துப்பட்டா மார்பை விட்டு நகர்ந்து அங்குமிங்குமாக ஆடை விலகி தெரிந்த கவர்ச்சியில் இந்நேரம் அவன் மனம் கிளர்ச்சியடையவில்லை..! அவள் மீது விரல் படாமல் உடைகளை சரி செய்து விட்டான்..

கண்களின் ஈரம் அப்பட்டமாக தெரிந்தது.. அழுதிருக்கிறாளா..! என்ன பிரச்சனையோ.. அவன் முகத்தில் கவலை.. தோள் தொட்டு மெல்ல எழுப்பி அவளை அமர வைத்து கன்னம் வருடி "என்னம்மா பிரச்சனை?" என்று கேட்கத்தான் நினைத்தான்.. ஆனால் அயர்ந்து உறங்குபவளை எழுப்ப மனமில்லை.. பட்டும் படாமலும் வியர்வையில் நனைந்து முன் நெற்றியில் படிந்திருந்த முடிகளை மெல்ல ஒதுக்கிவிட்டு சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட பெருமூச்செறிந்து எழுந்து தன்னறைக்கு சென்று விட்டான்..

சட்டென விழிப்பு தட்டியது அருந்ததிக்கு..

கடிகாரத்தை பார்த்தாள்.. மணி ஏழு..!

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தேனா..! அவசரமாக எழுந்து வெளியே சென்றவள் முகத்தை கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள்.. சந்திரமதி திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க.. துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே.. "எங்கடி உன் வாத்தியாரு..?" சற்று காட்டமான குரலோடு அவள் அருகே வந்து நின்றாள்..

"உள்ளே" என்று ஒற்றை விரலை சுட்டிக்காட்டிய சந்திரமதி பாடபுத்தகத்தின் வேதியியல் வார்த்தைகளை சத்தம் வராமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்..

கையில் துண்டை வைத்துக் கொண்டு நிலம் நோக்கி யோசித்தவள் ஒரு முடிவோடு கதவை திறந்து கொண்டு மகரிஷியின் அறைக்கு சென்றாள்..

மேஜையில் வைத்திருந்த புத்தகத்தை புரட்டி பார்த்தபடி நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் காலடி ஓசையில் நிமிர்ந்தான்..

"ஓய்.. ஜேஜம்மா..!" அவன் முகத்தில் இன்ஸ்டன்ட் புன்னகை.. இது அவளுக்கான பரவசம்..

பதிலுக்கு அருந்ததி சிரிக்கவில்லை..

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..?"

"ஏன் நிறைய பேசலாமே..! ஐ அம் வெயிட்டிங்.." என்றவன் நாற்காலியை இழுத்து போட்டு அவளை உட்கார சொல்லிவிட்டு மீண்டும் எழுதினான்..

அருந்ததி அமரவில்லை.. அவள் அப்படியே நிற்பதை கண்டு நிமிர்ந்து பார்த்தவன்..

"உக்காருடி" என்றான் அழுத்தமாக.

"பரவாயில்லை இருக்கட்டும்..!"

"அட.. உட்காரு.." அவள் கைப்பற்றி இழுத்து நாற்காலியில் அமரச் செய்தான்..

மெல்ல தன் கரத்தை உருவி கொண்டாள்..

"ம்ம்.. இப்ப சொல்லு.."

"நீங்க இதுக்கு முன்னாடி காலேஜ்ல வேலை செஞ்சீங்களா..! அங்க ஒரு ஸ்டுடென்ட் கிட்ட நீங்க தப்பா நடந்துகிட்டதா பிரச்சனை வந்து உங்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்களா.. போலீஸ் உங்களை அரெஸ்ட் பண்ணுச்சா..! ஜெயிலுக்கு போனீங்களா..? உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா.. உங்க மனைவி இந்த பிரச்சனையினால்தான் உங்களை விவாகரத்து செஞ்சுட்டாங்களா..! குழந்தைகள் யாராவது இருக்காங்களா? இருந்தா எங்கே மறைச்சு வைச்சிருக்கீங்க.. இன்னும் எத்தனை ரகசியங்கள் ஒளிச்சு வச்சிருக்கீங்க சார்..?

அவள் ஒவ்வொரு வார்த்தையிலும் இதயம் சூடு கண்டு தீப்பிடித்து எரிந்ததில் முகம் இறுகிப்போனது..

ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்.. பேனாவை டேபிளில் தட்டியபடி தலை தாழ்ந்திருந்தான்..

இது வெட்கமோ.. குற்ற உணர்ச்சியோ அல்ல.. வேதனையுடன் கூடிய இறுக்கம்.. செய்யாத குற்றத்துக்காக தூக்கிலிடப்பட போகும் ஒரு நிரபராதி கைதியின் விரக்தி சிரிப்பு..

"நான் கேட்கிற எதுக்கும் உங்க கிட்ட பதில் இல்லைல..?"

"இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்..!"

நிமிர்ந்தவனின் விழி படலத்தில் மெல்லிய அடுக்காய் கண்ணீர் திரை..

"போதும்..! நீங்க ஒன்னும் கண்ணீர் விட வேண்டாம்.. வேதனைப்பட வேண்டாம்.."

என் கண்ணீர் கூட கசக்கிறதா பெண்ணே!

முகத்தை சட்டென வேறு பக்கம் திருப்பிக் கொண்டு மூக்கை உறிஞ்சியவன் கட்டை விரலால் வெளியே வர காத்திருந்த ஒரு துளி கண்ணீரையும் துடைத்துக் கொண்டு எழுந்து மவுனமாக அவளை கடந்து செல்ல அவன் கையைப் பற்றினாள் அருந்ததி..

அப்படியே நின்று விட்டவன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..

"நிறைய அழுதிருப்பீங்க.. ரொம்ப வலிச்சிருக்கும்.. என்னால உணர முடியுது.. ஆனா தாங்க முடியல.. ரொம்ப அழுதுட்டேன்.. அப்படியே தலை வலிச்சிடுச்சு.."

இப்போதுதான் மெல்ல அவளை திரும்பிப் பார்க்கிறான்.. இணைந்த கரங்கள் விலகவில்லை..

"செய்யாத தப்புக்காக ஊரார் பழி சொல்லும்போது அது எவ்வளவு வலிக்கும்னு எனக்கும் தெரியும்.. நானும் அனுபவிச்சுருக்கேன்.. இன்னும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.. நான்தான் படிக்காதவ இந்த உலகத்தை எதிர்த்து போராட தெரியல.. நீங்க படிச்சவர் தானே.. அந்த பொண்ணு சொல்றதெல்லாம் பொய்யின்னு நிரூபிக்க உங்களுக்கு ஒரு ஆதாரம் கூடவா கிடைக்கல..! சரி விடுங்க மாவீரனுக்கும் அறிவாளிகளுக்கும் கூட சில சமயத்துல சறுக்கல் வர்றது சகஜம்.. என்னவோ இப்படி நடக்கணும்னு இருந்திருக்கு..!"

தனக்கு துயரம் என்றால் இடிந்து போகிறோம்.. அடுத்தவருக்கு பிரச்சினை என்றால் அதிமேதாவியாகி ஆலோசானை சொல்கிறோம்.. இதுதான் மனித இயல்பு..

மெல்ல நடந்து வந்து முழங்காலிட்டு தரையில் அமர்ந்தவன் நாற்காலியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்..

"எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்.. ஏன் இந்த விஷயத்தை மறைச்சீங்க.. உங்கள பத்தி எதுவுமே என்கிட்ட சொல்லலையே.. அடிக்கடி அம்மாவை பற்றி பேசுவீங்க.. மத்தபடி உங்கள பத்தி ஒன்னுமே தெரியாம போயிடுச்சே எனக்கு..! உண்மையை சொன்னா எங்க நாங்க உங்கள நம்பாமல் போயிடுவோம்ன்னு பயந்துட்டீங்க.. அப்படித்தானே.." இருக்கையில் அமர்ந்தபடியே விறுவிறுவென முளைத்த கோபத்தோடு கேள்வி கேட்டாள் அருந்ததி..

"நீ.. நீ.. நீ என்னை நம்பறியா அருந்ததி..! அவனால் பேசவே முடியவில்லை.." பாதி வார்த்தைகளை காற்று நிரப்பியிருந்தது..

"நான் உங்களை நம்பாம வேற யார் நம்புவா..?"

கண்களை சுருக்கி ஒரு நொடி அலைப்புறுதலுடன் அந்த விழிகளை பார்த்தான்..

"ஏமி செப்பாவு..?" குரல் கரகரத்தது..

அருந்ததி கண்கள் சுருக்கி விழிக்க நெற்றியில் அறைந்து கொண்டவன்..

"எ.. என்ன சொன்ன..?" என்றான் அவசரகதியாக..

"நான் உங்களை நம்பலனா வேற யார் நம்புவாங்க..!" மீண்டும் அதையே சொல்லியவளுக்கு அதி வேகமாக பூமியை நோக்கி சீறி வரும் எரி நட்சத்திரம் போல் அந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்துடன் அவன் அடிமனம் நோக்கி கூர்மையாக இறங்கி கொண்டிருப்பது தெரியவில்லை..

சொல்லி முடித்த பின்பும் சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அந்தக் கண்களுக்கு சக்தி அதிகம் இருப்பதாக உணர்ந்தாள்..

நிச்சயம் இவன் தவறு இழைத்திருக்க மாட்டான் என்று சுத்திகரிக்கப்பட்ட மனதோடு மீண்டும் தெளிந்தாள்..

எதிர்பாராத நேரத்தில் சட்டென அவளை அணைத்துக் கொண்டான் மகரிஷி..!

ஹக்..! இதயத்தோடு சேர்ந்து ஒட்டுமொத்த தேகமும் ஒரு கணம் துள்ளி விழுந்தது..

இறுக்கமாய் அணைத்திருந்தான்..

அந்த அணைப்பின் அர்த்தம் புரியாமல் இல்லை அவளுக்கு..

மீண்டும் விலகி அவள் முகத்தை கையிலேந்தி "நீ என்னை நம்பறதானே..? ந.. நம்பிக்கை..!" என்ன பேசுகிறான்.. எதை அவள் வாயிலிருந்து வெளிக்கொணர விரும்புகிறான் அவனுக்கே புரியவில்லை..

"உங்களை எந்த நிலையிலும் என்னால தப்பாவே நினைக்க முடியாது கோங்ரா..! நிச்சயமா அந்த பொண்ணு மேல தான் தப்பு.. உங்கள மனப்பூர்வமா நம்புறேன்.. கண்மூடித்தனமா நம்பறேன்.. நீங்க இங்க வந்த புதுசுல என்கிட்ட வந்து இந்த விஷயத்தை பத்தி கேட்டிருந்தா நிச்சயமா நானும் உங்களை பழி சொல்லியிருப்பேன்.. ஆனா இப்போ உங்களை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்.. நீங்க நல்லவர்.. ஒரு கண்ணியமானவர் மேல திட்டமிட்டு சுமத்தப்பட்ட அவதூறு பழி.. நான் படிக்காதவ.. கொஞ்சம் அறிவு கம்மிதான்.. ஆனா மனுஷங்களை புரிஞ்சுக்க தெரியும்.. அதுலயும் உங்கள ரொம்ப நல்லாவே தெரியும்.."

பேசி முடிப்பதற்குள் மீண்டும் அணைத்துக் கொண்டான்..!

மெல்ல அவன் முதுகை வருடினாள் அருந்ததி..

மகரிஷிக்குள்ளிருந்து இப்படி ஒரு சின்னஞ்சிறு குழந்தை எட்டிப் பார்த்து தவழ்ந்து வந்து தன் தோளை தொடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை..

"தேங்க்ஸ்.. தேங்க்ஸ்டி பொம்மா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!" அவள் இரு கரத்தை பற்றி தன் நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டவன் நிலை கொள்ளாத படபடப்போடு தெரிந்தான்..

"அம்மா என்னை விட்டுப் போனப்ப அழுதது.. மத்தவங்க என்னை கேவலமா பேசின போது கூட ஒரு சொட்டு கண்ணீர் விடல.. ஆனா நீ என்னை அழ வச்சிட்டடி..!" எச்சில் விழுங்கியபடி குரலில் கரகரத்தான்..

"இதுவே கடைசி அழுகையா இருக்கட்டும்..!" கண்ணீர் வழியாமல் கண்கலங்கி போயிருந்தாலும் அவன் கன்னத்தை வருடினாள் அருந்ததி..

முழங்காலிட்டமேனிக்கு அவள் மடி சாய்ந்தான்.. அவன் தலையை வருடி தந்தாள் அருந்ததி..

அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கி இதயம் நிம்மதியாய் சுவாசிக்கிறது..

சுவாசிக்க வைத்திருக்கிறாள் தேவதை..

"உன் முகம் பார்த்து நான் ரொம்ப பயந்துட்டேன் அருந்ததி.."

"ஏன்..?"

"நீ என்னை தப்பா நினைச்சிட்டியோன்னு..?"

"நான் தப்பா நினைச்சா உங்களுக்கென்ன.. என்னை உதறி தள்ளிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே.."

"உன்னை உதறித் தள்ளினா என் உலகமே இருண்டு போய்டும்.." அவன் தலையை வருடிக் கொண்டிருந்த அவள் விரல்கள் அப்படியே நின்று விட்டன..

வாழ்நாள் சாதனையாளர் விருது என நூறு கிலோ தங்கத்தை அழகிய இதயமாக வெட்டியெடுத்து அவள் கையில் தந்த உணர்வு..

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."

"சொல்லும்மா..!"

எழவும் இல்லை. அவள் முகம் பார்க்கவும் இல்லை.. மடி சுகம் கண்டிருந்தான்..

"மதி கிட்ட இந்த விஷயத்தை நீங்களே சொல்லிடறீங்களா..?"

நிமிர்ந்து விதிர்ப்புடன் அவள் முகம் பார்த்தான்..

"இல்ல.. மதி இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா.. இப்படி சொல்லலாமா தெரியல.. அப்பாவோட அரவணைப்புல இருக்கற மாதிரி பாதுகாப்பா இருக்கா.. அவள பொறுத்த வரைக்கும் நீங்கதான் ஹீரோ..‌ யாரோ ஒருத்தர் சொல்லியோ.. இல்லைனா ஏதோ ஒரு வீடியோவை பார்த்து அவளா தெரிஞ்சுகிட்டு கவலைப்படுறதை விட நீங்களே உண்மை எடுத்து சொல்லிட்டா நல்லது இல்லையா..?"

"அவ சின்ன குழந்தை.. அவ கிட்ட போய் இதை எப்படி..?"

"ஒரு குழந்தைகிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்லணும்னு உங்களுக்கு தெரியும் வாத்தியாரே..!"

"சந்திராம்மா என்னை நம்புவாங்களா..?"

"நீங்க அவளை நம்பி விஷயத்தை சொல்லுங்க..!"

மீண்டும் அவள் மடியில் படுத்துக்கொண்டான்.. ஒரு சில கணங்கள் கழித்து எழுந்து நின்றவன் அருந்ததியின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்..

"சந்திராம்மா கிட்ட இதைப் பற்றி எப்படி பேச போறேன்னு தெரியல..!"

"அம்மா கிட்ட விஷயத்தை பகிர்ந்துக்கறதுல என்ன தயக்கம்..!" உன்னத வார்த்தைகள் அவனுக்கு சக்தியை தந்தது..

வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரமதியிடம் சென்று அமர்ந்தான்.. மெல்ல விஷயத்தை துவங்கி நாசுக்காக அவளுக்கு புரியும் வகையில் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்..

சிறு பெண்ணல்லவா.. நம்ப முடியாத திகைப்பு.. கண்ணீர்..

"நான் எந்த தப்பும் செய்யல சந்திராம்மா.. டிரஸ்ட் மீ.." குரல்வளையில் இரு விரல்களால் பிடித்துக் கொண்டு சத்தியம் செய்தான்..

"இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க..?"

"என் அம்மா கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது அவசியம் இல்லையா..!"

"உன் மனசுல என்ன தோணுதோ வெளிப்படையாக சொல்லிடலாம்.. உனக்கு என்னை பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை.. நான் உங்களை விட்டு கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்.."

கதவு மறைவில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியின் முகத்தில் கலவரம்..

"எங்க போவ..! எங்களை விட உனக்கு யாரு இருக்கா..?"

"பா..ப்பா..!"

"நாங்க இருக்கோம் ரிஷி..! இதெல்லாம் ஒரு விஷயமா.. போ.. போ..! உள்ள போய் வேலையை பாரு.." இயல்பாக சொல்லிவிட்டு புத்தகத்தில் கண் பதித்தாள்..

"உண்மையாத்தான் சொல்லுறியா பாப்பா..!" அவன் முகத்தில் மகிழ்ச்சி பரவசம்..

"கால் மீ சந்திராம்மா..!"

"ம்மாஆஆ..!". அவள் கரத்தை எடுத்து தன் கண்களுக்குள் ஒற்றிக்கொண்டான்.. ஒரே நேரத்தில் வாழ்க்கை இத்தனை பரிசுகளை கொண்டு வந்து குவிக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை..

"நீ நல்லவன் ரிஷி.. நல்லவன் தப்பு பண்ண மாட்டான்..!" சந்திரமதி சொன்னதும்.. உதட்டை மடித்தபடி கண்களை மூடி திறந்து சின்னவளை பார்த்துக் கொண்டிருந்தவன்..

"சீ..‌ சீக்கிரம் வந்துடுறேன்.." என்றபடியே எழுந்து அவசரமாக தனது பைக்கை நோக்கி சென்றான்..

"ரிஷி எங்க போற..?" என்று சந்திரமதியும்.. "எங்க போறீங்க" என்று வெளியே ஓடி வந்து நின்றபடி அருந்ததியும் கத்திய சத்தங்கள் காற்றோடு போயின..

மிக வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டு நகரத்தை தாண்டி வெகுதொலைவிற்கு சென்றிருந்தான் மகரிஷி..

ஜன நடமாட்டங்களையெல்லாம் கடந்து யாருமில்லாத ஒரு ஏரியின் அணைப்பகுதியில் வந்து நின்றான்..‌

எங்கோ கேட்டுக் கொண்டிருந்த தவளைகளின் சத்தமும்.. பறந்து கொண்டிருந்த பூச்சிகளின் துணையை ஈர்க்கும் பாஷையும் மட்டுமே நிசப்தத்தை கிழித்து அந்த இடத்தை நிறைத்திருந்தன..

உதட்டை மடித்து வேக வேகமாய் மூச்சுகளை எடுத்தவன்.. ஒரு நிலையில்..

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. என்று சத்தம் போட்டு கத்தி.. ஆளுமையான மகாராஜா போல் இரு கைகளை விரித்து வானத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருந்தான்..

சிரித்து கொண்டே இருந்தான்..

கேட்டுக் கொண்டிருந்த சத்தங்கள் அனைத்தும் சில கணங்கள் நின்று போய் மீண்டும் தொடர்ந்தன..

இந்த நொடி உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான மனிதன் என்று அவனை கொண்டு போய் மியூசியத்தில் காட்சி பொருளாய் வைக்கலாம்

தாய்க்கு பிறகு தன்னை நம்பும் இரண்டு ஜீவன்கள்.. எனக்காக இரண்டு உயிர்கள்..!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.. மகிழ்ச்சியின் முடிவில் ஒரு அழுகை. ஆனந்த அழுகை..

அனைத்தும் சந்தோஷ கதறல்கள்..

அணையின் சுவற்றில் இரண்டு கைகளை பதித்து இதழ்கள் விரிந்த புன்னகையுடன் தலை தாழ்ந்து ஆற்றை நோக்கினான்..

எத்தனையோ வருடங்களாக காத்திருந்து ஜென்ம சாபல்யம் பெற்று விடுதலையடைந்த ஆனந்த கண்ணீர் துளிகள் விடை பெற்றுக்கொண்டு கீழே சிதறி ஆற்று நீரோடு கலந்தன..

தொடரும்..
Sema unexpected twist... Loved a lot this episode
 
Top