• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

"நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி.."
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே அசிங்கமா பழி சொல்லுற நீ.. இலௌலாதவங்கன்னா இளக்காரமா..? உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வருவதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவளுக்கே தெரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அந்த ஆள் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் முள் சாட்டையாய் சுழற்றும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இப்படி சொல்லி சொல்லி தன்னை தான் நேசிக்க வேண்டும் ஆசையும் எண்ணமும் என்றோ விட்டுப் போனது.

மீன்குட்டியிடம் நீ முதலை என்று மனதில் பதியவைப்பதை போல் பார்ப்போர் வாயிலிருந்து வரும் நம்பிக்கையை குலைக்கும் புறதோற்றத்தை கேவலமாக மதிப்பிட்டு சொல்லும் இது போன்ற சொற்களும் வார்த்தைகளும் தான் அழகே இல்லை.. என் போன்ற ஆட்கள் பிறந்திருக்கவே கூடாது என்ற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்திருந்தன..

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள்.. ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவில்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளைன்னா கூட பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு நாப்பதை தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போயிருக்க.. அந்த நச்சுப் புகை இருவரின் மனம் முழுக்க பரவி பிள்ளையின் மேல் சிறு வெறுப்பை வெற்றிகரமாக துவக்கி வைத்திருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் மகளா? என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! ஊர்க்காரனுங்க இது உன் புள்ளையான்னு சந்தேகமா கேக்கறானுங்க.. இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த சனியனை பெத்து போட்ட.. சொல்லுடி!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே பறி போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளை என்பதால் நம்பிக்கை நிராசையாகிப் போன விரக்தி..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்க உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால்

"இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை கழுவி வை.."

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைப்பாள் காந்திமதி.. பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான்.. சம்பாதிக்கறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து கேள்விகேக்க வேண்டியது.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து ஒரு வார்த்தை பேசாமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கன்னம் புஷ்டியாக.. தும்பைப் பூவென பளீர் கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா.. அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும்.. ஆனாலும் நோய் தீ.தனும்னா குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள் பிரபா.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் மிகப் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் உடம்பு வளர்ச்சி அதிகமாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீதான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரன் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா பதினாறு வயசு மாதிரியா தெரியுது.. இருபத்தி இரண்டு வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர் முழுக்க உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கும் புருஷனுக்கும் உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனதுதான் துரதிஷ்டம்..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைத்து காரியத்தை சாதித்துக் கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

பதினாறு வயதில் திருமணம் பதினேழு வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு பொறந்த வீட்டுக்கு ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

பிரபாகரனுக்கோ திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. இருபது வயது சிறிய பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.. நடுங்கி போயிருந்தாள்..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் தள்ளிவிட்டு ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான் பிரபாகர்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு தான் அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெத்த தகப்பனா பாக்க வேண்டியவரை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் மனதளவில் சித்தரவதை..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தாள் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே செய்ய வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..

கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

மயானம் நடுவே ஒரு சூன்ய
வாழ்க்கை..

ஒற்றை மழைத்துளியாய் அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் சந்திரமதி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள் அருந்ததி..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கறியே..! என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கியே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற சும்மா கிட.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும் மானம் போக போகுது பார்த்துக்கங்க.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Apr 30, 2025
Messages
12
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி..
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே பழி சொல்லுற.. உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வர அதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் என்றே புரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அவன் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவே இல்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளையா பொறந்திருந்தாலும் பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு40 தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போய் இருக்க.. அந்த நஞ்சு புகை இருவரின் மனம் முழுக்க கலந்து போயிருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் பிள்ளையா என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த புள்ளைய பெத்த..!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளையாம்..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால் இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை எல்லாம் கழுவி வை..

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைத்தால் பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான் சம்பாதிக்கிறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து ஒரே கேள்வி.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து கொண்டு வராமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கண்ணம் புஷ்டியாக.. தும்பைப் பூவென இரண்டு கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் தான் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும் ஆனாலும் குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள்.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய
வளர்ச்சியாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீ தான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரரின் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா 16 வயசு மாதிரியா தெரியுது.. 22 வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர்ல எல்லாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயச்தான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனது..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைப்பது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

16 வயதில் திருமணம் 17 வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

சின்ன வயதிலேயே பிரசவம் முடிந்து வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு இங்க ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவுக்கு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. 20 வயது இளம்பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு நீ அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெதௌத தகப்பனா பாக்க வேண்டியவனை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தால் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள்..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கற.. என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கீயே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும்.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
Ada pavigala....... 🙆🏻‍♀️😳......
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி..
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே பழி சொல்லுற.. உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வர அதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் என்றே புரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அவன் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவே இல்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளையா பொறந்திருந்தாலும் பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு40 தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போய் இருக்க.. அந்த நஞ்சு புகை இருவரின் மனம் முழுக்க கலந்து போயிருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் பிள்ளையா என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த புள்ளைய பெத்த..!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளையாம்..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால் இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை எல்லாம் கழுவி வை..

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைத்தால் பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான் சம்பாதிக்கிறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து ஒரே கேள்வி.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து கொண்டு வராமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கண்ணம் புஷ்டியாக.. தும்பைப் பூவென இரண்டு கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் தான் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும் ஆனாலும் குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள்.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய
வளர்ச்சியாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீ தான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரரின் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா 16 வயசு மாதிரியா தெரியுது.. 22 வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர்ல எல்லாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயச்தான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனது..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைப்பது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

16 வயதில் திருமணம் 17 வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

சின்ன வயதிலேயே பிரசவம் முடிந்து வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு இங்க ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவுக்கு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. 20 வயது இளம்பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு நீ அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெதௌத தகப்பனா பாக்க வேண்டியவனை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தால் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள்..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கற.. என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கீயே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும்.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
இப்படியே தான் குண்டு கருப்பு விலை போகாது இந்த வார்த்தை பேசறவங்கள பொட்டுனு போட்டு தள்ளிடனும்னு தோணுது பேசி பேசியே பலர் வாழ்க்கைய நாசாமாக்கவே இப்படி சில ஜென்மங்கள் இன்னுமும் இருக்கதான் செய்யுது தவிர்க்கவே முடியாத நம்மை சுற்றி சுற்றியே வரும் ஆயுள் ஏழரைகள் இவை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அடேய் மானங்கெட்ட சுந்தரமே எல்லா பிரச்சினையும் உன்னால மட்டுமே தான் நீ மூடிட்டு இருந்திருந்தா அரு ஏன்டா அந்த பைத்தியம் வயித்துல வரபோறா பரதேசி அண்ணா அரக்கனே அண்ணி நீ தாண்டி பன்னி பிரபா தொடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் டேய் மாமனாரு நாதாரி உன்னை யெல்லாம் அறுத்துட்டு அலைய விடனும் 😠😠😠😠😠😠😠😠🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
ஒரு பெண்ணுக்கு படிப்பும் வேலையும் மட்டுமே தன்னம்பிக்கை தைரியம் எல்லாவற்றையும் கொடுக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி..
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே பழி சொல்லுற.. உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வர அதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் என்றே புரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அவன் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவே இல்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளையா பொறந்திருந்தாலும் பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு40 தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போய் இருக்க.. அந்த நஞ்சு புகை இருவரின் மனம் முழுக்க கலந்து போயிருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் பிள்ளையா என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த புள்ளைய பெத்த..!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளையாம்..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால் இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை எல்லாம் கழுவி வை..

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைத்தால் பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான் சம்பாதிக்கிறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து ஒரே கேள்வி.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து கொண்டு வராமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கண்ணம் புஷ்டியாக.. தும்பைப் பூவென இரண்டு கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் தான் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும் ஆனாலும் குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள்.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய
வளர்ச்சியாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீ தான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரரின் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா 16 வயசு மாதிரியா தெரியுது.. 22 வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர்ல எல்லாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயச்தான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனது..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைப்பது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

16 வயதில் திருமணம் 17 வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

சின்ன வயதிலேயே பிரசவம் முடிந்து வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு இங்க ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவுக்கு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. 20 வயது இளம்பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு நீ அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெதௌத தகப்பனா பாக்க வேண்டியவனை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தால் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள்..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கற.. என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கீயே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும்.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
பொண்ணா பொறந்தாலே கஷ்டம் தான் அதிலும் அழகு குறைவாக பிறந்தால் இன்னும் அப்பப்பா என்னேன்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டி இருக்கு 😭😭😭
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
😘😘😘🌟😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫🌟🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Member
Joined
Jan 11, 2023
Messages
17
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி..
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே பழி சொல்லுற.. உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வர அதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் என்றே புரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அவன் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவே இல்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளையா பொறந்திருந்தாலும் பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு40 தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போய் இருக்க.. அந்த நஞ்சு புகை இருவரின் மனம் முழுக்க கலந்து போயிருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் பிள்ளையா என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த புள்ளைய பெத்த..!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளையாம்..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால் இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை எல்லாம் கழுவி வை..

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைத்தால் பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான் சம்பாதிக்கிறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து ஒரே கேள்வி.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து கொண்டு வராமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கண்ணம் புஷ்டியாக.. தும்பைப் பூவென இரண்டு கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் தான் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும் ஆனாலும் குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள்.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய
வளர்ச்சியாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீ தான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரரின் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா 16 வயசு மாதிரியா தெரியுது.. 22 வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர்ல எல்லாருக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயச்தான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனது..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைப்பது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

16 வயதில் திருமணம் 17 வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

சின்ன வயதிலேயே பிரசவம் முடிந்து வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு இங்க ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவுக்கு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. 20 வயது இளம்பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு நீ அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெதௌத தகப்பனா பாக்க வேண்டியவனை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தால் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள்..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கற.. என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கீயே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும்.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
Pengaluku pengaley edhiri
 
New member
Joined
Aug 16, 2024
Messages
1
🥹🥹arunthadhi paavam ... sikiram next ud podunga ka
 
Member
Joined
Oct 26, 2024
Messages
29
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

"நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி.."
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே அசிங்கமா பழி சொல்லுற நீ.. இலௌலாதவங்கன்னா இளக்காரமா..? உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வருவதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவளுக்கே தெரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அந்த ஆள் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் முள் சாட்டையாய் சுழற்றும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இப்படி சொல்லி சொல்லி தன்னை தான் நேசிக்க வேண்டும் ஆசையும் எண்ணமும் என்றோ விட்டுப் போனது.

மீன்குட்டியிடம் நீ முதலை என்று மனதில் பதியவைப்பதை போல் பார்ப்போர் வாயிலிருந்து வரும் நம்பிக்கையை குலைக்கும் புறதோற்றத்தை கேவலமாக மதிப்பிட்டு சொல்லும் இது போன்ற சொற்களும் வார்த்தைகளும் தான் அழகே இல்லை.. என் போன்ற ஆட்கள் பிறந்திருக்கவே கூடாது என்ற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்திருந்தன..

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள்.. ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவில்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளைன்னா கூட பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு நாப்பதை தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போயிருக்க.. அந்த நச்சுப் புகை இருவரின் மனம் முழுக்க பரவி பிள்ளையின் மேல் சிறு வெறுப்பை வெற்றிகரமாக துவக்கி வைத்திருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் மகளா? என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! ஊர்க்காரனுங்க இது உன் புள்ளையான்னு சந்தேகமா கேக்கறானுங்க.. இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த சனியனை பெத்து போட்ட.. சொல்லுடி!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே பறி போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளை என்பதால் நம்பிக்கை நிராசையாகிப் போன விரக்தி..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்க உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால்

"இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை கழுவி வை.."

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைப்பாள் காந்திமதி.. பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான்.. சம்பாதிக்கறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து கேள்விகேக்க வேண்டியது.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து ஒரு வார்த்தை பேசாமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கன்னம் புஷ்டியாக.. தும்பைப் பூவென பளீர் கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா.. அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும்.. ஆனாலும் நோய் தீ.தனும்னா குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள் பிரபா.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் மிகப் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் உடம்பு வளர்ச்சி அதிகமாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீதான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரன் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா பதினாறு வயசு மாதிரியா தெரியுது.. இருபத்தி இரண்டு வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர் முழுக்க உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கும் புருஷனுக்கும் உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனதுதான் துரதிஷ்டம்..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைத்து காரியத்தை சாதித்துக் கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

பதினாறு வயதில் திருமணம் பதினேழு வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..

பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு பொறந்த வீட்டுக்கு ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

பிரபாகரனுக்கோ திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. இருபது வயது சிறிய பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.. நடுங்கி போயிருந்தாள்..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் தள்ளிவிட்டு ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான் பிரபாகர்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு தான் அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெத்த தகப்பனா பாக்க வேண்டியவரை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் மனதளவில் சித்தரவதை..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தாள் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே செய்ய வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..

கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

மயானம் நடுவே ஒரு சூன்ய
வாழ்க்கை..

ஒற்றை மழைத்துளியாய் அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் சந்திரமதி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள் அருந்ததி..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கறியே..! என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கியே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற சும்மா கிட.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும் மானம் போக போகுது பார்த்துக்கங்க.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
Ippadiyu.ma.. aatkal irukaangam?..
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

"நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி.."
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே அசிங்கமா பழி சொல்லுற நீ.. இலௌலாதவங்கன்னா இளக்காரமா..? உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வருவதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவளுக்கே தெரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அந்த ஆள் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் முள் சாட்டையாய் சுழற்றும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இப்படி சொல்லி சொல்லி தன்னை தான் நேசிக்க வேண்டும் ஆசையும் எண்ணமும் என்றோ விட்டுப் போனது.

மீன்குட்டியிடம் நீ முதலை என்று மனதில் பதியவைப்பதை போல் பார்ப்போர் வாயிலிருந்து வரும் நம்பிக்கையை குலைக்கும் புறதோற்றத்தை கேவலமாக மதிப்பிட்டு சொல்லும் இது போன்ற சொற்களும் வார்த்தைகளும் தான் அழகே இல்லை.. என் போன்ற ஆட்கள் பிறந்திருக்கவே கூடாது என்ற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்திருந்தன..

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள்.. ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவில்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளைன்னா கூட பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு நாப்பதை தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போயிருக்க.. அந்த நச்சுப் புகை இருவரின் மனம் முழுக்க பரவி பிள்ளையின் மேல் சிறு வெறுப்பை வெற்றிகரமாக துவக்கி வைத்திருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் மகளா? என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! ஊர்க்காரனுங்க இது உன் புள்ளையான்னு சந்தேகமா கேக்கறானுங்க.. இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த சனியனை பெத்து போட்ட.. சொல்லுடி!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே பறி போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளை என்பதால் நம்பிக்கை நிராசையாகிப் போன விரக்தி..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்க உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால்

"இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை கழுவி வை.."

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைப்பாள் காந்திமதி.. பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான்.. சம்பாதிக்கறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து கேள்விகேக்க வேண்டியது.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து ஒரு வார்த்தை பேசாமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கன்னம் புஷ்டியாக.. தும்பைப் பூவென பளீர் கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா.. அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும்.. ஆனாலும் நோய் தீ.தனும்னா குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள் பிரபா.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் மிகப் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் உடம்பு வளர்ச்சி அதிகமாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீதான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரன் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா பதினாறு வயசு மாதிரியா தெரியுது.. இருபத்தி இரண்டு வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர் முழுக்க உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கும் புருஷனுக்கும் உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனதுதான் துரதிஷ்டம்..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைத்து காரியத்தை சாதித்துக் கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

பதினாறு வயதில் திருமணம் பதினேழு வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..


பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு பொறந்த வீட்டுக்கு ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

பிரபாகரனுக்கோ திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. இருபது வயது சிறிய பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.. நடுங்கி போயிருந்தாள்..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் தள்ளிவிட்டு ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான் பிரபாகர்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு தான் அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெத்த தகப்பனா பாக்க வேண்டியவரை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் மனதளவில் சித்தரவதை..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தாள் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே செய்ய வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

மயானம் நடுவே ஒரு சூன்ய
வாழ்க்கை..

ஒற்றை மழைத்துளியாய் அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் சந்திரமதி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள் அருந்ததி..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கறியே..! என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கியே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற சும்மா கிட.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும் மானம் போக போகுது பார்த்துக்கங்க.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
Iyyaya.. Ippadi la iruppanga...
 
Member
Joined
Jul 19, 2024
Messages
22
உள்ளே வந்தவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்..

தற்கொலை என்பது அரை நொடி பைத்தியக்காரத்தனம்.. ஒருமுறை கடந்து வந்துவிட்டால் மீண்டும் அந்த எண்ணம் அறவே தோன்றாது என்பது சரியாகத்தான் இருக்கிறது..

அழுக்கான சுவற்றை துணி வைத்து துடைத்து பளிச்சென மாற்றியது போல்.. சூன்யமான மனதில் இப்போது ஒரு அமைதி பிறந்திருக்கிறது..

பூட்டிய அறைக்குள்ளிருந்து தொடர்ந்து சத்தம்..

ஓடிச் சென்று கதவை திறந்து பாய்ந்து வந்த மோத்தியை கையில் அள்ளிக்கொண்டான் மகரிஷி..

ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் தன் மீது ஏறி விசுவாசத்தோடு துடிப்போடு எக்கி இரண்டு காலை நெஞ்சில் பதித்திருந்த மோத்தியிடம்

"நேனு நின்னு எக்க எப்படிக்கி வதிலி வெள்ளனு. நன்னு சமிக்சு மோத்தி.."
(என்னை மன்னிச்சிடு மோத்தி.. இனி எப்பவும் உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்.) என்று அதன் கழுத்தை வருடியபடி தலையில் மென்மையாக முத்தமிட்டான்..

அதற்குள் வெளியிலிருந்து ஏதோ சத்தம்..

"நாக்கு ஏத்தோ சப்தம் வினிபிஸ்துன்டி. இக்கடே உண்டு. நேனு வெல்லி ஏமைந்தோ சூஸ்தானு.."

(வெளியே என்னவோ சத்தம் கேக்குது இங்கேயே இரு.. போய் என்னன்னு பாக்கறேன்)

என்றவன் மோத்தியை அங்கேயே இறக்கிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க சத்தம் எதிர் வீட்டிலிருந்துதான் வந்தது..

"உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க.. உன் கைய புடிச்சு இழுக்கற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அழகியா என்ன.. கரிச் சட்டி மாதிரி ஒரு மூஞ்சி.. பன்னி மாதிரி ஒரு உடம்பு..! உன்கிட்ட நான் தப்பா பிஹேவ் செஞ்சேனா..! இந்த மாதிரி ஏமாத்தி எத்தனை பேர்கிட்ட பணம் பிடுங்கியிருக்க.. நான் நினைச்சேன்னா என் வீட்டுல திருட வந்தேன்னு சொல்லி உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல தள்ள முடியும்.. ஜாக்கிரதை"

50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் கண்ணாடியை சரி செய்து கொண்டே குரல் உயரக் கத்திக் கொண்டிருக்க..

"ச..சார் வேணாம்.. சார் ப்ளீஸ் சார்.. தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க.. நான் போயிடறேன்..!" அழுகையிலும் அவமானத்திலும் அவள் குரல் நடுங்கியது..

சகிக்க முடியாத இந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கூடத்திற்குள் நுழைந்திருந்தான் மகரிஷி..

"வாட்ஸ் ஹேப்பெனிங் இயர்.. உங்க சத்தம் என் வீடு வரைக்கும் கேக்குது.. எனி ப்ராப்ளம்.." கடுமையான குரலில் உடைத்த தமிழில் அதிகாரமாகவே கேட்டிருந்தான் அவன்..

மகரிஷியை ஏற இறங்க பார்த்தார். அந்த நபர்..

"நீ யாரு மேன்.."

"உங்க நெய்பர்"

"சோ வாட்.. திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி உன் இஷ்டத்துக்கு உள்ள வர்ற..!"

"மைண்ட் யுவர் டங்க் பெரிய மனுஷன்னு கூட பாக்க மாட்டேன்.. என்னாச்சு மேடம்.." அதே கோபமான தோரணையோடு அவளிடம் கேட்டிருந்தான்..

கண்ணீரோடு கூனி குறுகி காலர் பட்டனை இறுக பிடித்தபடி நின்றிருந்த அருந்ததி மெல்ல நிமிர்ந்து..

"த.. தப்பா பிஹேவ் பண்றாரு சார்.." எதிராளியை கைக்காட்டி சொல்ல..

"வாட் நான்சென்ஸ்.. இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைக்கறேன்.. போயும் போயும் இவகிட்ட.. என் கால் தூசி வருவாளா இவ..!"

"அப்புறம் ஏன் சார் அந்த பொண்ணோட ஷர்ட் பட்டன் உங்க வீட்டுக்குள்ள கிடக்குது.." மகரிஷி கால்களை சற்று அகலமாக வைத்துக்கொண்டு முன் கை கட்டி நிற்க.. அந்த நபர் தடுமாறினான்..

"யாருக்கு தெரியும் என் மேல பழி சுமத்துறதுக்காக இவளே சட்டையை கிழிச்சிட்டு நின்னுருப்பா.. காசுக்காக எல்லாத்தையும் கழட்டிட்டு அம்மணமா நிக்கிற ரகந்தானே இதுங்க.."

அதற்கு மேல் பொறுமை இல்லாது அந்த நபரின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான் மகரிஷி..

மூக்கிலிருந்து குருதி யார் என்னை அழைத்தது என்னும் ரீதியில் கோடாக எட்டிப் பார்த்தது..

"ஓ.. மை காட்..! ஐயோ என்னை கொல்ல பாக்கறான்.. ஹெல்ப் யாராவது உதவி செய்யுங்க.." என்று அந்த நபர் பெருங்குரலெடுத்து கத்த..

"மீரந்தரு மனுஷலேனா.."
(நீயேல்லாம் மனுசனாடா..)

"ஃபுட் டெலிவரி பண்ண வந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு அவ மேலயே அசிங்கமா பழி சொல்லுற நீ.. இலௌலாதவங்கன்னா இளக்காரமா..? உன்னை மாதிரி மிருகங்களாலதான் என்ன மாதிரி நல்ல ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேர்.. உன்னையெல்லாம் சும்மா விட கூடாது.. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைக்கறேன்.. நீ என்ன வேலை செஞ்சிருக்கேன்னு உன் குடும்பமே தெரிஞ்சுக்கட்டும்.. அப்பதான் உனக்கு புத்தி வரும்.." என்று அந்த ஆளின் காலரை பற்றி இழுத்தான் மகரிஷி..

"வே.. வேண்டாம் சார்..! விட்டுடுங்க.. போலீஸ் ஸ்டேஷன் போனா முதல்ல பாதிக்கப்பட போறது நான்தான்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது.." என்றவள் கீழே விழுந்த தனது டெலிவரி பையை எடுத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்தபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனாள்..

"மேடம்..!" மகரிஷி அவளைப் பின் தொடர்ந்து வெளியே வருவதற்குள் அருந்ததி மாயமாக மறைந்து விட்டிருந்தாள்..

படிக்கட்டுகளில் ஏறுவதை விட இறங்குவது சுலபம்தானே..

ஆத்திரத்திலும் நெஞ்சே வெடித்து விடும் ஆற்றாமையிலும் ஓடி வந்து வண்டியில் ஏறி எப்போது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவளுக்கே தெரியவில்லை..

அடுத்தடுத்த ஆர்டர்கள் அவளுக்கு நோட்டிபிகேஷனில் வந்து கொண்டிருந்தன..

இதற்கு மேல் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.. இன்று இன்செண்டிவ் கிடையாது சம்பளம் கிடையாது.. அதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு பிரக்ஞையின்றி வீட்டின் மூலையில் அமர்ந்திருந்தாள்..

தவறாக நடந்து கொண்டதை விட பல மடங்கு தாக்கியது அந்த ஆள் தரக்குறைவாக பேசிய வார்த்தைகள்..

தன்னிடம் அத்துமீறும் ஆண்களை செருப்பால் அடித்து உதறி தள்ளும்போது அவர்கள் இறுதியில் முள் சாட்டையாய் சுழற்றும் வார்த்தைகள் இவைதான்..

"இப்படி கருங்குரங்கு மாதிரி அவலட்சணமா இருக்கும் போதே உனக்கு இவ்வளவு திமிர் இருக்குதே, இன்னும் நீயெல்லாம் அழகா பிறந்திருந்தா உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியுமா..!"

இப்படி சொல்லி சொல்லி தன்னை தான் நேசிக்க வேண்டும் ஆசையும் எண்ணமும் என்றோ விட்டுப் போனது.

மீன்குட்டியிடம் நீ முதலை என்று மனதில் பதியவைப்பதை போல் பார்ப்போர் வாயிலிருந்து வரும் நம்பிக்கையை குலைக்கும் புறதோற்றத்தை கேவலமாக மதிப்பிட்டு சொல்லும் இது போன்ற சொற்களும் வார்த்தைகளும் தான் அழகே இல்லை.. என் போன்ற ஆட்கள் பிறந்திருக்கவே கூடாது என்ற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்திருந்தன..

இனிமையான நாட்கள் என்று அவள் வாழ்க்கையில் ஒரு நாள்.. ஒரு நிமிடம் வந்து போனதாய் நினைவில்லை..

காந்திமதி சுந்தரம் தம்பதியருக்கு இரண்டாம் மகளாய் பிறந்தவள் தான் இந்த அருந்ததி..

வேண்டாத முத்து.. தேவையில்லாத பிள்ளை செல்வம்..

முதல் மகன் கோபிக்கு பதினேழு வயதான பிறகு இரண்டாவது குழந்தை கருவில் தங்கியிருக்க.. பிள்ளை உண்டானது தெரியாமல் நான்கு மாதங்களை கடத்தியிருந்தாள் காந்திமதி..

இதுக்கு மேல வயித்துல இருக்கற கருவை கலைக்க முயற்சி செஞ்சா உங்க உயிருக்கே கூட ஆபத்தாய் முடியலாம் என்று மருத்துவர்கள் கை விரித்து விட.. வேறு வழியில்லாமல் அந்த குழந்தையை பெற்றுக் கொள்வதென தீர்மானமாகியது..‌

குழந்தையும் பிறந்தது..

காந்திமதி ஓரளவிற்கு நல்ல நிறம்.. சுந்தரம் மாநிறம்.. பிறந்த பிள்ளையோ இருவரை விட நிறம் குறைவு..

பிறந்த சிசுவை நர்ஸ் கையில் தந்ததும் நிறம் பார்த்து முகம் சுருக்கினான் சுந்தரம்..

"ஐய பொம்பள பிள்ளையா பிறந்திருக்கே..! ஆம்பள புள்ளைன்னா கூட பெரியவனுக்கு துணையா இருந்திருக்கும்.. இது செலவு தானே இழுத்து வைக்கும்.. இப்பவே ரெண்டு பேரும் வயசு நாப்பதை தாண்டிட்டிங்க..‌ இதை எப்படி வளர்த்து ஆளாக்க போறீங்களோ.. வெளுப்பா அழகா இருந்தாலும் சந்தையில விலை போகும்.. இது கருத்த குட்டியாவுல வந்து பொறந்திருக்கு.." குழந்தையை பார்க்க வந்த சுந்தரத்தின் தங்கை ஒருத்தி சாம்பிராணி புகையில் விஷத்தை கலந்து உஃப் என்று ஊதி விட்டுப் போயிருக்க.. அந்த நச்சுப் புகை இருவரின் மனம் முழுக்க பரவி பிள்ளையின் மேல் சிறு வெறுப்பை வெற்றிகரமாக துவக்கி வைத்திருந்தது..

அதிலும் பிள்ளை வளர வளர இது உன் மகளா? என்று மற்றவர்கள் சாதாரணமாக கேட்டது கூட சுந்தரத்தின் மனதில் விகல்பமாக விழுந்து வினையானது..

"இந்த புள்ள என் ஜாடையிலேயே இல்லை..! ஊர்க்காரனுங்க இது உன் புள்ளையான்னு சந்தேகமா கேக்கறானுங்க.. இந்த வயசுல எவன் கிட்ட போய் இந்த சனியனை பெத்து போட்ட.. சொல்லுடி!" என்று சந்தேகப்பட்டு காந்திமதியை படாத பாடு படுத்திவிட்டு ஒரு கட்டத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விட்டான் சுந்தரம்..

காந்திமதியால் கணவனின் இழப்புக்காக துக்கப்பட முடியவில்லை.. இருபது வருட இல்லற வாழ்க்கையை சந்தேகத்தின் பேரில் சுக்கல் சுக்கலாக உடைத்து தன்னை கேவலப்படுத்திய சுந்தரத்தின் மீது அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவள்.. அவன் இறப்பில் கூட பேருக்காகவோ ஊருக்காகவோ ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை..

ஆனால் அருந்ததி பிறந்த பிறகுதான் தன் நிம்மதியே பறி போனதாக கருதியவளுக்கு பிள்ளை மீது கொஞ்சம் வெறுப்புதான்.. அதிலும் பெண் பிள்ளை என்பதால் நம்பிக்கை நிராசையாகிப் போன விரக்தி..

ஆண் என்றால் வரவு பெண் என்றால் செலவு என்ற காலத்துக்கும் அழியாத இயல்பான முத்திரை அவள் மனதில் அம்மை ஊசி போல் அழுத்தமாக சுவடு பதித்திருக்க எதிலும் கோபிக்கு பெருமளவு என்றால் அருந்ததிக்கு கடுகளவுதான்..

அதிலும் அருந்ததி வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்க உணவு கூட அவளுக்கு குறைவாகத்தான் பங்கிடப்படும்..

"அம்மா இன்னும் கொஞ்சம் சோறு போடு" என்ற தட்டை நீட்டினால்

"இப்படி தின்னு தின்னு தான் பூதம் மாதிரி ஊதிப்போய் கிடக்கற.. போதும் சாப்பிட்டது எழுந்து போய் தட்டை கழுவி வை.."

என்றபடி மகனின் தட்டில் இரண்டு அன்னக்கரண்டி சாதத்தை வைப்பாள் காந்திமதி.. பிள்ளையின் முகம் வாடிப்போகும்..

"அண்ணனுக்கு மட்டும் நிறைய சோறு வைக்கற.." வாயை திறந்து கேட்டு விட்டால் சப்பென்று கன்னத்தில் அடி விழும்.. இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு ஆறு வயது..

"அவன் வேலைக்கு போறான்.. சம்பாதிக்கறான்.. இந்த குடும்பத்துக்காக உழைக்க உடம்புல தெம்பு வேண்டாமா.. பொம்பள புள்ள குறைவா சாப்பிட்டா ஒன்னும் தப்பு இல்ல.. எது சொன்னாலும் எதுத்து எதிர்த்து கேள்விகேக்க வேண்டியது.." இலவச போனசாக தலையில் ஒரு குட்டு விழுந்தது..

தங்கைக்காக பரிந்து ஒரு வார்த்தை பேசாமல் தட்டை வழித்து நக்கும் கோபியை பார்க்கும்போது அத்தனை கோபம் வரும்..

அந்த ஆறு வயதில் கொழுகொழுவென்று கன்னம் புஷ்டியாக.. தும்பைப் பூவென பளீர் கண்களும் சுருட்டை முடியுமாக பக்கத்தில் வந்து நிற்கும் ஒரு குழந்தையை தாய்க்கு பிடிக்காமல் போகுமா..?

ஆனால் காந்திமதிக்கு அருந்ததியை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை..

பெற்ற கடமைக்கு வளர்க்கிறாள்..

அதிலும் பட்டப்படிப்பு முடித்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வரும் மகனோடு அருந்ததியை ஒப்பிட்டு பார்க்கும்போது அவள் கல்யாண செலவுதான் தலையை சுற்றி விட்டில் பூச்சி போல் வட்டமிட்டு பறக்கிறது..

அருந்ததிக்கு பத்து வயது முடியும் போது கோபிக்கு திருமணம் முடிந்தது..

பெற்ற தாயே மகளை பராமரிக்கவில்லை என்றால் வந்தவள் எங்கிருந்து நாத்தனார் மீது கரிசனத்தோடு இருந்திருக்க போகிறாள்..

சம்பளமில்லாத வேலைக்காரி போல் நடத்தப்பட்டாள் அருந்ததி..

"அத்தை உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.. இப்படியெல்லாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சாத் தான் உடம்பு கொஞ்சமாவது இளைக்கும்.. பொண்ணே பூவேன்னு மடியில தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சினிங்கனா இன்னும் ஊதிப் பெருத்து போய்டுவா.. அப்பறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. மருந்து கசக்கத்தான் செய்யும்.. ஆனாலும் நோய் தீ.தனும்னா குடுத்து தானே ஆகணும்.." மருமகளின் பேச்சை மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி ஏற்று கொண்டாள் காந்திமதி..

கோபி அம்மா பிள்ளை என்பதால் மாமியாரிடம் பணிவாக இருப்பதை போல் காட்டிக்கொண்டாள் பிரபா.. ஆனால் அருந்ததியிடம் அத்தனை இனிமையாக பழகவில்லை இவள்..

பாத்திரங்களை கழுவி துவைத்து வைத்த அத்தனை துணிகளையும் அலசி கொடியில் காய போட்டு.. வீடு பெருக்கி வாசல் பெருக்கி.. சின்ன சின்னதாய் சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றிக் கொண்டு ஒரு பதினொரு வயது குழந்தைக்கு இது மாதிரியான வேலைகள் மிகப் பெருஞ்சுமை..

"படிப்புதான் ஒழுங்கா வரல வீட்டு வேலையையாவது கத்துக்க..! அப்பதான் கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது என் தங்கச்சிக்கு அழகு இல்ல.. அறிவு இல்லைன்னாலும் நல்லா வீட்டு வேலை செய்வான்னு சொல்லி சமாளிக்க முடியும்.."

கூட பிறந்த அண்ணன் இப்படி சொல்கிறான்..!

இதெல்லாம் வலி என்று அந்த வயதில் தெரியவில்லை உரைக்கவும் இல்லை..

"நல்லா படிச்சு உனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கணும் உன் கால்ல நீ சுயமா நின்னு பழகணும்.. யாரையும் நம்பக்கூடாது.. யார் என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டு இலட்சியத்தில் கவனம் செலுத்து.. அழகு முகத்துல இல்ல மனசுல தான் இருக்கு.. நல்ல குணங்கள் தான் ஒரு மனுஷனை அழகாக காட்டும்.." ஒரு தாயாக காந்திமதி இப்படி சொல்லி வளர்த்திருந்தால் கூட அருந்ததி தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட பெண்ணாக படிப்பில் கவனம் செலுத்தி இருப்பாளோ என்னவோ..

அதற்காக மக்கு மாணவி என்று சொல்லிவிட முடியாது சுமாராகத்தான் படித்தாள்‌.. பனிரென்டு.. பதிமூன்று வயதுகளில் ஹார்மோன்களின் தாறுமாறான கூத்தாட்டத்தில் கொஞ்சம் உடம்பு வளர்ச்சி அதிகமாக போய்விட்டது..

அவள் பதினைந்து வயதை தொடும் போது இந்த பேச்சு ஆரம்பித்துவிட்டது..

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி குடுத்துடு காந்திமதி.. இப்பவே மாரெல்லாம் பெருசா மதமதன்னு வளர்ந்து நிற்கிறா உன் பொண்ணு.. 20 வயசு தொடும்போது முத்தி போய் கிழவியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.."

"காந்தலும் ருசி கருப்பும் அழகு.. இதெல்லாம் சும்மா கதை.. பன்னி குட்டி மாதிரி பருவத்தில் அழகா இருக்கும் போதே கல்யாணத்தை முடிச்சுடனும்.. வயசு கூடி போச்சுன்னா அப்புறம் நீதான் வச்சுக்கிட்டு கஷ்டப்படணும்.. இன்னும் ஒன்னு ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுத்துட்டா நீயும் அக்கடான்னு உன் புள்ள வீட்ல நிம்மதியா இருக்கலாம்.."

"அப்புறம் இன்னொரு விஷயம் பாவம் உன் பிள்ளை.. அவனுக்கும் பொட்ட புள்ள இருக்குது அவனும் தன் வாழ்க்கைய பாக்கணுமா இல்லையா..! அவன் பொண்ணு வளர்ந்துருச்சுன்னா அப்புறம் உன் பொண்ணுக்கு எதுவும் செய்ய மாட்டான் பாத்துக்க.. இப்பவே கல்யாணம் பண்ணி வச்சா ஏதாவது நகைநட்டு செஞ்சி போட்டு கவுரவமா அனுப்பி வைக்கலாம்.. நாங்க சொல்றதை சொல்லிட்டோம் அப்புறம் உன் இஷ்டம்.."

கேடுகெட்ட சொந்தங்களும்.. சுற்றுவட்ட சூர்ப்பனகைகளும் இப்படிச் சொல்லி அவள் மனதை கலைத்து விட்டிருந்தன..

மற்றவர்கள் பேச பேச அருந்ததி டன் கணக்கில் சுமையாக மாறி காந்திமதியின் மூளையை அழுத்திக் கொண்டிருந்தாள்..

அந்த நேரம்தான் கூட பிறந்த அக்காளை பார்ப்பதற்காக அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்த பிரபாவதியின் அண்ணன் பிரபாகரன் கண்களில்

எந்தவித ஒப்பனையுமின்றி எளிமையான கோலத்தில்
பருவ வயதிற்கே உரிய அழகோடு வனப்போடு மினுமினுவென்று அந்த வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அருந்ததி பட்டு தொலைத்தாள்..

பத்து வயதில் இடந்தெரியாமல் இருந்த பெண் இப்படி கண்ணாடி வாழை போல் நிகுநிகுவென வளர்ந்து நிற்பாள் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

பிரபாவதிக்கே அந்த நேரத்தில் 30 வயது என்றால் அவளுக்கு அண்ணன்.. இந்த பிரபாகருக்கு 33 வயது..

முன் தலையில் சொட்டை விழுந்து.. கல்யாண வயதை தாண்டிய பின் கண்டிஷன் எதுவுமின்று எப்படிப்பட்ட பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையிலிருந்தவனுக்கு அருந்ததியின் இளமை மனதில் சலன தூபம் போட்டது..

தமக்கையிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான்..

"அந்த பொண்ணுக்கு இப்பதான் 16 வயசு ஆகுது.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." பிரபாவதி பயந்தாள்..

"தெரிஞ்சா தானே..! நீங்களே சம்மதிச்சு கட்டிக் கொடுத்தா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அதுவும் இல்லாம அந்த பொண்ண பாத்தா பதினாறு வயசு மாதிரியா தெரியுது.. இருபத்தி இரண்டு வயசு சொல்லலாம்..! உன் மாமியார் அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடுறதா கேள்விப்பட்டேனே.. மெல்ல என்ன பத்தி பேசி பாரு.."

"என்ன பேசி பார்க்கறது.. நான் சொன்னா அவங்க சம்மதிப்பாங்க.. என் புருஷனும் பெருசா எதுவும் மறுக்க போறதில்லை.. ஆனா எனக்கு உன்ன நெனச்சா தான் பயமா இருக்கு..!"

"ஏன் என்ன பயம்..?"

"உன் குடிப்பழக்கத்தை விட்டு தொலை.. அந்த ஊர் முழுக்க உன்ன பத்தி தெரிஞ்சு தான் யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல.. நல்லவேளை என் மாமியாருக்கும் புருஷனுக்கும் உன்ன பத்தி எதுவும் தெரியாது.. ஏதாவது ஏடாகூடம் செஞ்சு குடிப்பழக்கம் இருக்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா என் மானமே போயிடும்.."

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது.. நான் குடிப்பழக்கத்தை எப்பவோ விட்டுட்டேன் தெரியுமா..! குடும்பம் குழந்தைன்னு ஆகி போச்சுன்னா நான் ஏன் அந்த பக்கம் போக போறேன்.. சத்தியமா இனிமே குடிக்க போறது இல்ல.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராக அவன் சென்றது ஒயின் ஷாப்புக்கு தான்..

மாமியாரிடம் மெல்ல தூபம் போட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டாள் பிரபாவதி..

திருமணம் வேண்டாம் என்று மறுத்து பார்த்தாள் அருந்ததி.. அடி தான் விழுந்தது..

பதினொன்றாம் வகுப்பிலேயே படிப்பு நிறுத்தப்பட்டது..

அழுது பார்த்தாள்..

"இங்க பாரு அருந்ததி என் அண்ணன் உன்ன நல்லா பாத்துக்குவான்.. நீ விருப்பப்பட்டது எல்லாம் வாங்கித் தருவான்.. உன் மேல பைத்தியமா இருக்கான் தெரியுமா..! வயசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.. ஆனா மனசு தங்கம் மாதிரி.. ஒருமுறை அவன் கிட்ட பேசி பார்க்கறியா.." சின்ன பெண்ணின் மனதை கலைத்து பிரபாகரனுக்கு அழைத்து அவளிடம் தந்தாள்‌.

"செல்லம்.. பட்டு.. சாப்பிட்டியா.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?" இதுவரை யாரிடமும் கனிவை பார்த்திராத அருந்ததியின் மனதுக்கு அவனின் சர்க்கரை வார்த்தைகள் ஆறுதலாய் அமைந்து போனதுதான் துரதிஷ்டம்..

தின்பதற்கு தினம் பலகாரம் வாங்கி வந்து தந்தான்..

அன்பாய் பேசினான்..

கொஞ்சினான்.. அறியா பெண்ணின் மனதை எப்படி கலைத்து காரியத்தை சாதித்துக் கொள்வது என்ற வித்தையை கற்று வைத்திருந்தவன் மொத்தமாக அவளை வீழ்த்தி விட்டான்..

கோபி அழாத குறையாக தங்கைக்காக சொற்பமாக செலவு செய்து திருமணத்தை நடத்தி முடித்தான்..

திருமணமான புதிதில் கண்ணே கனியமுதே என்று கொஞ்சி அவள் இளமையை திகட்ட திகட்ட அனுபவித்தான் பிரபாகர்.. குடிப்பழக்கத்திற்கும் தற்காலிக விடுமுறை அளித்திருந்தான்..

என்ன சாப்பிட்டாச்சா என்பதை கூட எட்டுகட்டை ஸ்ருதியில் கேட்கும் மாமியார்..

எப்போதும் ஒரு மாதிரியாகவே பார்க்கும் மாமனார்..

இச்சைக்காக மட்டுமே தன்னை நெருங்கும் கணவன்..

தெரிந்த நரகத்தை விட தெரியாத இந்த புகுந்த இடம் அவளை பயமுறுத்தியது..

பதினாறு வயதில் திருமணம் பதினேழு வயதில் குழந்தை..!

சந்திரமதி பிறந்து விட்டாள்.. சுகப்பிரசவம் என்றாலும் செத்துப் பிழைத்தாள் அருந்ததி..


பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த அண்ணிக்கு பணிவிடை செய்து அவள் குழந்தைகளையும் வளர்த்த அனுபவம் உண்டு.. அதனால் தன் பிள்ளையை வளர்ப்பதில் பெரிய சிக்கல் ஒன்றுமில்லை..

மறுபடி குடிக்க ஆரம்பித்து விட்டான் பிரபாகர்..

உன்னால தான் என் மகன் இப்படி ஆகிட்டான் என்று குற்றம் சாட்டினாள் மாமியார்..

"நீ சரியா இருந்தா என் அண்ணன் ஏன் குடிக்க போறான்.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட கொஞ்சம் பரவாயில்லை இப்ப ஏன் இப்படி பன்னி மாதிரி ஊதிட்ட.. வயசு 20 கூட தொடல.. அதுக்குள்ள உடம்பு இப்படி கட்டு விட்டுப் போச்சுன்னா.. போகப்போக யானை மாதிரி பெருத்து போயிடுவ.. அப்புறம் உன் கூட குடும்பம் நடத்தணும்னு எப்படி ஆசை வரும்..! முதல்ல உடம்ப குறை.."

இது அண்ணி..

"ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க நீதான் திருத்தி கைக்குள்ள போட்டுக்கணும்..! அதுக்காக பொசுக்கு பொசுக்குன்னு பொறந்த வீட்டுக்கு ஓடிவந்துடுவியா.. வா பேசி கொண்டு போய் விட்டுட்டு வரேன்..!" என்று இழுத்துக் கொண்டு போய் அதே நரகத்தில் தள்ளி விட்டு வருவாள் காந்திமதி..

பிரபாகரனுக்கோ திருமணமான தொடக்கத்திலிருந்த ஓரளவு ஆற்றல் கூட இப்போது அவனிடம் இல்லை.. குடிப்பழக்கத்தால் ஆண்மையை முற்றிலுமாக பறி கொடுத்திருந்தவன்.. "உன் மூஞ்சிய பாத்தா எனக்கு மூடு வர மாட்டேங்குது டி.. உன்னால எனக்கு சந்தோஷமே இல்ல அதனால தான் குடிக்கறேன்.. என்று தன் இயலாமைக்கும் மனைவியை காரணம் காட்டி அவள் மனதோடு சேர்த்து உடம்பையும் புண்ணாக்க துவங்கியிருந்தான்..

குழந்தையை வைத்துக் கொண்டு அழுது அழுது மாய்ந்து போனாள் அருந்ததி..

"உங்க பொண்ணுக்கு வாழ தெரியல அத்தை..! என் அண்ணன் ஒன்னும் மோசமானவன் கிடையாது.. எந்நேரமும் அழுது சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு மனுஷனுக்கு எங்கிருந்து நிம்மதி இருக்கும்..! நீங்க கொஞ்சம் உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லுங்க.." மாமியாரின் மனதை முற்றிலுமாக குழப்பி வைத்திருக்க அருந்ததியின் புலம்பல்கள் காந்திமதியிடம் செல்லுபடியாகவில்லை..

இதையெல்லாம் கூட தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்தை அவளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.. இருபது வயது சிறிய பெண் என்றாலும் தவறு எது சரி எது என்று பிரித்தறிய கூடிய உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டல்லவா..

பிள்ளையை தூக்கி தருவது போல் பட்டும் படாமலும் உரசும் மாமனாரின் அணுகுமுறையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..

மகளாக பார்க்க வேண்டிய மருமகளை தவறான எண்ணத்தோடு பார்க்கும் மிருகம்.. இந்த அவலத்தை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.. நடுங்கி போயிருந்தாள்..

"இங்க பாருமா விஷயத்தை கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. உன் புருஷனுக்கு சக்தி இல்லை.. எனக்கு வயசாகிப் போனாலும் வேகம் இருக்குது.. என் பொண்டாட்டி முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்லை.. இந்த வயசுல நான் எந்த சிறுக்கிய தேடி போக முடியும் சொல்லு.."

"உனக்கு நான் அனுசரனையா இருக்கேன்.. பிரபாகர் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று தோள் மீது அழுத்தமாக கை வைத்த போது பெண்மைக்கே உரிய இயல்பான ரௌத்திரம் சீறி எழுந்ததில் தள்ளிவிட்டு ஓங்கி அறைந்திருந்தாள்..

கணவன் வீட்டுக்கு வந்ததும் அவனிடம் அழுது கொண்டே நடந்ததை சொல்லி கதறினாள்‌.

"என் அப்பாவை பத்தி எனக்கு தெரியும்.. எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்குது.. நீதான் அவரை கூப்பிட்டு இருப்ப.." என்று சொல்லி அவளை அடித்து துவைத்தான் பிரபாகர்..

மாமியாரும் நம்பவில்லை..

"என் புருஷன பத்தி எனக்கு தெரியாது..? ஆளும் மூஞ்சியும் பாரு.. குறை சொல்ல வந்துட்டா.. உனக்கு தான் அழகா இல்லைன்னு மன நோய்.. பைத்தியம் பிடிக்குதுன்னு நினைக்கிறேன் அதனால தான் இப்படியெல்லாம் பேசி பழிபோடற.. ஐயோ கடவுளே ஊர் உலகத்துல எங்கேயாவது இந்த மாதிரி நடக்குமா.. பெத்த தகப்பனா பாக்க வேண்டியவரை.. ச்சீ.. இப்படி ஒரு கேடுகெட்ட மருமகளா எனக்கு.." வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழ.. அந்த வீடு இன்னொரு நரகமாகிப்போனது..

அடியும் உதையும் பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.. மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கே போவதென தெரியாமல் பிறந்து வீட்டிற்கு வந்து விட்டாள்..

வாடி ராசாத்தி என்று அவளை தூக்கி சுமக்க இங்கு யாரும் தயாராக இல்லை..

"சனியனே நீ ஏன் வந்து தொலைச்ச.. எங்கேயாவது போய் சாக வேண்டியதுதானே.." என்று எரிந்து விழுந்தான் அண்ணன்..

பெற்ற தகப்பன் மீது பழி சுமத்தியதால் குரோதத்தில் முறைத்தாள் அண்ணி..

பெற்ற கடமைக்காக கொஞ்சமே கொஞ்சம் ஈரம் காந்திமதியின் இதயத்தில்..

"எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி அவ புருஷ வீட்டுக்கு அனுப்பி வச்சுடலாம்.. அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும்.." மகளை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டாள்..

ஒரு வாய் சோற்றுக்கு ஒன்பது பேச்சு பேசினாள் பிரபாவதி..

"உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அத்தை.. எனக்கு அடங்கி ஒழுங்கா இருக்கறதுன்னா வர சொல்லுங்க.. இல்லைனா இவளை நீங்களே வச்சுக்கோங்க.." என்று எச்சரித்துவிட்டு சென்றான் பிரபாகரன்..

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் மனதளவில் சித்தரவதை..

இப்படியே இருந்தால் வேலைக்காகாது.. பிள்ளையை வளர்க்க வேண்டுமே.. ஏதாவது வேலைக்கு போய் தன் தேவைக்காவது சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டு ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்ந்தாள் அருந்ததி..

நாள் முழுக்க நின்று கொண்டே செய்ய வேண்டிய ஹெல்பர் வேலை..

கால் வலியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வீட்டு வேலைகள் அவளுக்காக காத்திருக்கும்..

மூன்று வயது பெண் குழந்தை கவனிப்பார் இல்லாமல் பசியில் அழுது கொண்டிருக்கும்..

பேத்தி என்ற கரிசனத்தில் ஒரு சில நேரங்களில் காந்திமதி கவனித்துக் கொள்வதுண்டு..

அம்மா பசி என்று ஒடுங்கிய கன்னமும் புழுதி வண்ணமுமாக தன்னிடம் வரும் குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுவாள் அருந்ததி..

மூன்று வருடங்கள் எப்படியோ தாக்குப்பிடித்து வேலை பார்த்து விட்டாள்..

தந்தை மீது புகார் சொன்னதிலேயே புகைச்சலில் வெந்து போன பிரபாவதிக்கு.. தன் அண்ணன் வந்து அழைத்தும் அவனோடு செல்ல மறுத்துவிட்டதில் அருந்ததி மேல் கோபம் பெருகி போனது..

ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்தி கிழித்து அவளை நோகடித்தாள்..


கண்ணீரை துணையாக கொண்டு வேதனைகளை சுமந்து குழந்தைக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தாள் அருந்ததி..

மயானம் நடுவே ஒரு சூன்ய
வாழ்க்கை..

ஒற்றை மழைத்துளியாய் அவள் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் சந்திரமதி..

20 வயதிலேயே இன்பங்களை துறந்து விட்டாள்.. கண்ணாடி பார்க்கவே மறந்து போனாள்‌‌.. பேருக்கு தலை வாருவதும் ஒரு பொட்டு வைத்துக் கொண்டு கம்பெனிக்கு செல்வதுமாக இருந்தாள்..

தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரியாக தான் வாழ்ந்தாள்.. ஆனால் தன் ஆறு வயது மகளையும் கட்டாயப்படுத்தி வீட்டு வேலைகளை செய்ய வைத்ததில் கொதித்துப் போனாள் அருந்ததி..

"ஏம்மா இதுவும் உன் பேத்தி தானே..! உன் மகன் வயித்து பேத்தியை மட்டும் தாங்குன்னு தாங்குன்னு தாங்கறியே..! என் புள்ளைய நீ தாங்க வேண்டாம்.. அவள ஒரு குழந்தையா கூட நினைக்காம இவ்வளவு பாத்திரத்தை தேய்க்க வச்சிருக்கியே.. என் பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா..?" என்று அழுது கொண்டே கேட்டபோது..

"அட.. அதுவே நான் வேலை செய்றேன் பாட்டின்னு போய் அங்க உக்காந்துருக்குது.. இங்க யாரும் உன் பொண்ண கொடுமை படுத்தல.. சும்மா இல்லாததை கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத.. இப்படி தான் புருஷன் வீட்டுல தேவையில்லாத பிரச்சினை பண்ணிட்டு வந்து இங்க உட்கார்ந்துருக்க.. இங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வேற எங்க போக போற சும்மா கிட.." காந்திமதி எகிறினாள்..

"என்னோட மகளை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்கு.. குழந்தைக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்கணும்.. இல்லைனா உன்ன மாதிரியே அதுவும் தறுதலையா வந்து நிக்கும்.." சண்டைக்கு வந்தாள் அண்ணி..

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை..

வேலையும் வயதும். கொஞ்சம் சுயமரியாதையை கற்றுத் தந்திருந்தது தன்னம்பிக்கையை தந்திருந்தது..

ஆட்களிடம் சொல்லி வைத்து ஒரு வீடு பார்த்து பிள்ளையோடு தனி வீட்டில் குடியேறி விட்டாள்..

"குடும்பத்தை விட்டு தனியா போய் உங்க பொண்ணு இருக்கிறான்னா என்ன அர்த்தம்.. இன்னொரு ஆம்பளையோட துணை அவளுக்கு தேவைப்படுதுன்னு அர்த்தம்.. தப்பு தண்டா செய்யறதுக்கு இப்படி தனிமை தான் வசதியா இருக்கும் மானம் போக போகுது பார்த்துக்கங்க.." பிரபாவதி தன் குரோதத்தை வெளிப்படுத்தினாள்..

"சொல்ல சொல்ல கேக்காம தனியா போற இல்ல நீ.. நாசமாத்தான்டி போவ.. மறுபடி ஏதாவது பிரச்சனைனா திரும்பி வந்துடாத.." இது தாயார்..!

"அந்த கழுதை திரும்பி வந்தா வீட்ல சேர்க்காதீங்க..! செத்துப் போச்சுன்னு செய்தி வந்தா கூட யாரும் போய் பார்க்க கூடாது சொல்லிட்டேன்.." இது அருமை அண்ணன்..

தொடரும்..
Nala ah kudubam da sami
 
Top