• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 32

Active member
Joined
Jan 16, 2023
Messages
139
சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!

சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்‌.

அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும் பட்டுக்காத.. எதையும் தொட்டுடாதே..‌ சாமி படத்து பக்கம் போயிடாதே.. என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்களோடு வீட்டின் பின் பக்கம் பழைய சாமான்களை போடும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டாள்.. அந்த அறையின் ஒட்டடைகளும் துருப்பிடித்த இரும்பு சாமான்களும்.. செல்லரித்த மர சாமான்கள் அகற்றப்பட்டவரை ஏதோ ஒரு வகையில் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தாள்‌..

ஏதோ ஒரு நாளில் அண்ணியும் அண்ணியின் அம்மா சங்கரியும் வேறு ஒரு வயதான பாட்டியும் வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றியதாக ஞாபகம்.. நல்லா சாப்பிடணும்.. இப்ப என்ன சாப்பிடுறியோ அதுதான் காலாகாலத்துக்கும் உனக்கு பலம் கொடுக்கும்.. என்று அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.. ஆனால் வகை தொகையாக வயதுக்கு வந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு உணவுகள் எதுவும் தனக்கு தரப்பட்டதாக ஞாபகம் இல்லை..

அதே சோறு குழம்பு பொரியல்.. முட்டை கூட அரிதுதான்..!

தான் வயதுக்கு வந்ததில் வீட்டில் யாரும் சந்தோஷப்பட்டதாக கூட நினைவில்லை..!

தீட்டு.. தீட்டு தீட்டு.. அதிகபட்சமாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுதான்..

அப்படி ஒரு நிலை தன் மகளுக்கு கூடாது.. தனக்கு கிடைக்காத அத்தனை செல்வ சிறப்புகளும் அவளுக்கு கிடைக்கட்டும்.. குழந்தை பருவம்.. வயதுக்கு வரும் பிராயம்.. திருமண காலகட்டம் என அனைத்து நிலைகளிலும் சந்திரமதிக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகளிலும் சந்தோஷங்களிலும் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று அருந்ததி முடிவெடுத்திருக்கிறாள்..

"நீ வேலைக்கு போக வேண்டாம் அருந்ததி.. வீட்ல இருந்து சந்திராம்மாவை பாத்துக்கோ.." மகரிஷியின் கட்டளை இது..!

அவள் எழுதி தந்ததை லிஸ்ட் போட்டு வாங்கி வந்திருந்தான் மகரிஷி..

கருப்பு உளுந்தை பச்சரிசியோடு சேர்த்து பொடித்து கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து.. நல்லெண்ணையோடு சேர்த்து இரும்பு உருளியில் எண்ணெய் பிரிய கிளறி உளுந்தங்களி செய்து வைத்திருந்தாள்..

காலையில் எழுந்தவுடன் சந்திரமதிக்கு நல்லெண்ணெயும் நாட்டு முட்டையும் கொடுப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் அருந்ததி..

மறுக்க மறுக்க அதட்டி மிரட்டி வாயில் திணித்து.. குமட்டி துப்பினா கொன்னுடுவேன் என்று விழுங்க வைப்பதற்குள் அவளுக்கே நாலு முட்டைகள் தேவைப்படுமளவு சத்து வற்றிப் போகும்..

உளுந்தங்களியை சின்ன சின்னதாய் உருட்டி பத்து உருண்டைகளை விழுங்க வைத்தாள்..

அதன் பிறகு சிகப்பு கவுனி அரிசி புட்டும் தேங்காய் துருவலும்..

காலை உணவுக்கு மதிய உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வெட்டி வைத்த பழக்கலவை..

மதியத்தில் சாதம் சாம்பார்..ஏதேனும் குழம்பு.. கூட்டு பொரியல் என சரிவிகித உணவு.. மாலையில் சத்துமாவு கஞ்சி.. இரவு உணவுக்கு பின் பால்.. என முடிந்தவரை பார்த்து பார்த்து சத்தான ஆகாரமாக தந்து மகளை பொன் போல் கவனித்துக் கொண்டாள்..

அவ்வப்போது நாப்கின் மாற்றிக் கொள்ளவும்.. உள்ளாடைகளை துவைத்து கொள்ளவும் உட்புறமிருந்த பாத்ரூம் இருவருக்குமே சற்று வசதியாக இருந்தது..

நல்லவேளை அருந்ததிக்கு வயிறுவலி இருக்கவில்லை.. இரத்த போக்கும் கூட பொட்டு போல் கண்ணில் காட்டியது.. அவ்வளவுதான்..

"அருந்ததி.. விசேஷத்துக்கு அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்களை கூப்பிடலையா..?"

"என்ன ரிஷி பேசுறீங்க..? அவங்கதான் யாருமே என் கூட பேசுறதில்லையே.. திடீர்னு நான் போய் கூப்பிட்டா எப்படி வருவாங்க..!"

"கூப்பிட வேண்டியது உன்னோட கடமை.. வர்றதும் வராததும் அவர்களுடைய இஷ்டம்.. நம்ம வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது இவ்வளவு நாளா பழகிட்டு இந்த பொண்ணு நம்மள கூப்பிடவே இல்லையேன்னு அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது.. அது நமக்கு நல்லதில்லை..!" மகரிஷி சொன்னது சரியாக பட்டாலும்.. என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு.. எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க என்னவோ போல் தயக்கமாக இருந்தது..

"கனகாக்கா.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா.."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.." என்றபோதும் கனகாவின் முகம் கனியவில்லை.

"மூணாம் நாள் தண்ணி ஊத்தறோம் நீங்க கண்டிப்பா வரணும்..!"

"ம்ம்.. வந்துடறேன்.." அந்த வார்த்தைகள் மனதிலிருந்து வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு.. முகம் வாடிப்போனது..

அக்கா மனசுல எதுவும் "வச்சுக்காதக்கா.. அன்னைக்கு.."
என்று அருந்ததி ஆரம்பிக்க..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு.. விடு.. அப்புறம் உட்காரு டீ காபி ஏதாவது சாப்பிடறியா..?"

"இல்லக்கா வேண்டாம் நேரம் ஆச்சு நான் போகணும்.."

"அதுவும் சரிதான்.. போய் புள்ளைய பாரு..!"

அக்கம் பக்கத்தில் மற்ற வீடுகளிலும் பெண்களை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அவர்கள் குரலுக்கும் சரி என்று சொன்ன தொனிக்கும் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை..

ஐந்து அல்லது ஏழு பேராவது வேண்டும் என்று ரிஷி சொல்லி இருந்தானே..!

சொந்தம் தான் சூனியமாகி போனது.. அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட தன்னை ஒதுக்கி கைவிட்டு விட்டார்களா..! புறக்கணிப்பில் புழுங்கினாள் துக்கத்தில் நெஞ்சடைத்தது..

சந்திரமதியின் அளவை கேட்டுக்கொண்டு ஒரு தாவணி பாவாடை செட் ஒரு லெஹெங்கா செட்.. ஒரு அனார்கலி சுடிதார் செட்.. அத்தோடு அவனுக்கு தெரிந்தவரை ஒப்பனைக்கு தேவையான சில பொருட்கள் என வாங்கி வந்திருந்தான்..

கூடத்தில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

அருந்ததியின் எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் ரிஷி..

ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

நகையெல்லாம் எதுக்கு வாத்தியாரே..

ப்ச் நோரு மொய்.. என் சந்திராம்மாவுக்கு நான் செய்யறேன்.. நீ தலையிடாதே.."

"ரொம்ப கடங்காரியாக்கறீங்க.."

வசூல் பண்ணிக்கறேன்.. உனக்கும் நகைகள் இருக்கு"

"வேண்டாம் ரிஷி.."

"நான் வேண்டாமா.."

"ஹான்.."

"நான் வாங்கித் தர்ற ஜிவல்ஸ் வேண்டாமா..?"

"அ.. அப்படி இல்ல.."

"சந்திரமதிக்கு வாங்கினது போல இன்னொரு செட்.. வேண்டாம்னா திருப்பி தந்திடு.."

"சரி தந்துடறேன்"

"போட்டுக்கிட்டு திருப்பி குடு.. ஃபங்ஷனுக்காக இரவல் வாங்கினதா நினைச்சிக்க.."

அருந்ததி சிரித்தபடி அமைதியாக உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நல்லா இருக்காடி.. ஏதோ எனக்கு தெரிஞ்ச கலர் பார்த்து வாங்கினேன்..!" என்றவனிடம் நிறைவாக புன்னகைத்தாள்‌.

"இவ்வளவு வாங்கிட்டு வந்ததே பெரிய விஷயம்."

"அப்படி சொல்லாதே.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு இல்லனா மாத்திக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.."

"இதைவிட அழகா என்னத்த வாங்க முடியும்..! இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு.. அருந்ததிக்கும் பிடிக்கும்..‌"

"அ.. அப்புறம் இது உனக்கு ஜேஜம்மா..! என்று ஒரு பார்சலை எடுத்து அவளிடம் தந்தான்.."

"இது என்னது.." என்றபடியே பிரித்துப் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்..

ஆகாய வண்ணத்தில் தங்கச் சரிகைகள் நிறைந்த ரோஜா நிற பார்டருடன் கூடிய பட்டுப் புடவை..

"இதுவும் சந்திரமதிக்கா..?"

"இது உனக்குடி.."

"ஐயோ விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.. எனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா பட்டு புடவை..‌ இருக்கிற புடவையில் ஏதாவது ஒண்ணு கட்டிக்கிட்டா போதாதா..!"

"போதாது..! உன் பொண்ணு பங்ஷன்ல நீயும் நல்லா உடுத்திக்கிட்டு அழகா சபையில நிக்கணும்.. அத நான் பாக்கணும்.."

"என் பொண்ணுக்கு தான் பங்க்ஷன்.. எனக்கு இல்லை.. இந்த புடவையோட மதிப்பு நீங்க வாங்கிட்டு வந்த எல்லா டிரஸ்சோட மதிப்பை விட அதிகமா இருக்கும் போலிருக்கு.."

"பொண்ணு வயசுக்கு வந்துட்டா அம்மா கிழவியாகிட்டதா அர்த்தம் இல்லை.. உனக்கு இன்னும் முப்பது கூட முடியல.. மனசுல மூப்பை சுமக்காதே.."

"என் வயசு உங்களுக்கு எப்படி தெரியும்.."

"அருந்ததியை பற்றி தெரிஞ்சுக்க சந்திரமதிங்கற google information engine என்கிட்ட இருக்குதே..!" கண் சிமிட்டினான் அவன்..

"இந்த புடவையை கட்டிட்டு நான் வந்து ஃபங்ஷன்ல நின்னா எல்லாரும் என்ன பேசுவாங்களோ என்னவோ..!"

"ஆமா அதுவும் சரிதான்.. கண்டிப்பா தப்பா பேசுவாங்க அதனால ஒன்னு பண்ணு..‌ பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய புடவை ஏதாவது இருக்கும்..‌ அதை கட்டிக்கிட்டு ஃபங்ஷன்ல வந்து திருஷ்டி பொம்மை மாதிரி தனியா நில்லு.. எல்லாரும் உன்னை பாராட்டிட்டு போவாங்க.."

"கோங்ரா..?" அருந்ததி முறைத்தாள்..

"தருவாத்தா ஏமிரா..? இது நம்ம பொண்ணோட சடங்கு.." என்றதும் அருந்ததி அவனை அர்த்தத்துடன் ஏறிட்டு பார்த்தாள்..

"ஐ மீன்.. நம்ம வீட்டு பொண்ணுக்கான சடங்கு.. எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணோட அம்மா அழகா தெரியனும்.."

"அதென்ன பொண்ணோட அம்மா அழகா தெரியனும்..?"

"அது அப்படித்தான்..! சரி அதை விடு..‌ ஃபங்ஷன்ல ஒம்பது இல்லனா பதினொரு தட்டு சீர் வெச்சிடலாம்.."

அருந்ததி பெருமூச்சு விட்டாள்..

"இதெல்லாம் தாய்மாமன் செய்யணும்.. நாமளே வாங்கி செஞ்சுக்கறதுக்கு எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம்."

"தாய்மாமன் இல்லாத குழந்தைகளுக்கு சடங்கு வைக்கறதே இல்லையா..! சொந்தக்காரங்களை எதிர்த்து கலப்பு திருமண பண்ணிக்கிட்டு போறவங்க தன்னோட பொண்ணு வயசுக்கு வந்தா சடங்கு செய்யறதில்லையா..? ஏதாவது ஒரு வழி பிறக்கும் சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. கவலைய முகத்தில் காட்டாத சந்தோஷமா இரு..!"

ம்ம்.. என்ற போதும் அருந்ததியின் முகம் கனியவில்லை..

மூன்றாம் நாள்..

வீட்டை சுத்தம் செய்து காலையில் நல்ல நேரம் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வரவுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

யாரும் வரவில்லை

"நான் சொல்லல.. யாரும் வர மாட்டாங்க.." அருந்ததியின் முகம் சோகத்தில் கருப்படித்து போனது..

"டென்ஷன் ஆகாத அருந்ததி.. கொஞ்சம் பொறுமையா இரு.. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்.. அட்லீஸ்ட் ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் யாரையாவது வர சொல்லுவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு" அவன் போனை எடுத்த நேரத்தில்..

இங்கே..‌ தலையில் பூவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டிருந்தாள் கனகா..

"ஏய் டிபன் கூட செய்யாம எங்கடி கிளம்பிட்ட.." சத்யராஜ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

"அருந்ததியோட பொண்ணு சந்திரமதி வயசுக்கு பெரிய மனுஷி ஆகிட்டால்ல.. அதான் மூணுக்கு தண்ணி ஊத்த கூப்பிட்டுருந்தாங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.."

"அந்த நடத்தக் கெட்டவ வீட்டுக்கு போக கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருந்தேனா இல்லையா.."

"அடச்சீ நல்ல காரியம் நடக்கும்போது அபசகுணமா பேசிக்கிட்டு.. போயா அந்த பக்கம்.. வீட்டுக்கு வந்து கண்டிப்பா வரணும்னு அழைச்சிட்டு போயிருக்கா.. போகலைனா நாளைக்கு அவ மூஞ்சில எப்படி முழிக்கறதாம்.."

"அவ மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்றேன்?? நீ என்னமோ அலங்காரம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரேங்குற.."

"அக்கம் பக்கத்து வீட்டுல விசேஷம்னா போகாம இருக்க முடியுமா.. நாளைக்கும் நமக்கும் நல்லது கெட்டதுக்கு ஆளுங்க வர வேணாமா..?

அவ இங்க வந்து ஒண்ணும் கிழிக்க போறதில்ல.. அவள முதல்ல யாரு வீட்டுக்குள்ள சேக்க போறா.. உன் வேலைய மயிர பாரு.. மரியாதையா இங்கிருந்து போய்டுன்னு கழுதைதான அது. எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடி அவ வீட்டு வாசப்படி மிதிக்க வெக்கமாயில்லையா உனக்கு..?

வெக்கமா இல்ல.. என்னங்கற.. அக்கம்பக்கத்து வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சண்டை போட்டுக்கிட்டாலும் நல்லதுகெட்டதுன்னா ஒன்னு எல்லாரும் சேர்ந்துக்க தான் வேணும்.. இதெல்லாம் உனக்கு புரியாது போ.. என்றபடி
கனகா வீட்டிலிருந்து புறப்பட..‌

"இந்தா.. என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறவளா இருந்தா இந்த லுங்கிய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க கூடாது நீ..!"

பேண்ட்டை தாண்டி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அவள் நடந்த வாசல் பக்கமாக போட்டான் சத்யராஜ்..

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த கனகா காலால் லுங்கியை தூக்கியடிக்க அவன் முகத்தில் வந்து விழுந்தது அது..

"அத தூக்கி அழுக்கு கூடையில் போட்டுட்டு சாயந்திரம் வந்து துவைச்சு போடு.. மதிக்கணுமாமே.. வேணும்னா தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் வா..!" என்றபடி வெளியே வந்தவள் தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு சென்றிருந்தாள்..

"பேசாம நானும் என் குழந்தையை கூட்டிட்டு போய் தண்ணி ஊத்திடறேன்.." என்று உள்ளே செல்லப் போனவளை நிறுத்தி வாசலை காட்டினான் ரிஷி..

கொலுசும் வளையலுமாக.. புடவை சரசரக்க மஞ்சள் முகமும் தலை நிறைய பூவுமாக மங்களகரமாக வந்து கொண்டிருந்தனர் பெண்கள்..

அருந்ததிக்கு கண்கள் கலங்கி போனது..!

"என்னடி நல்ல நாள் அதுவுமா கண்ணு கலங்கிட்டு நிக்கிற.."

"வ.. வர மாட்டீங்களோனு நெனச்சேன்.."

"அது எப்படி வராம போய்டுவோம் நாங்க பார்க்க வளர்ந்த புள்ள.. சந்திரமதி எங்க வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் தனியா விட்டுட மாட்டோம்.." என்றபடியே வீட்டுக்குள் வந்தனர் அவர்கள்..

சந்திரமதியின் வகுப்பு தோழி திவ்யாவின் தாயும் பாட்டியும் கூட வந்திருந்தார்கள்..

"சும்மா சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேரு தண்ணி ஊத்துனா போதும்.."

வீட்டுக்கு வெளியிலிருந்த குளியலறைக்கு அழைத்துவரப்பட்டாள் சந்திரமதி..

பித்தளை அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் ரோஜாவும் பன்னீரும் கலந்தனர்.. மஞ்சளும் சந்தனமும் தனித்தனியாக குழைத்து கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன..

சல்லடையில் தங்கம் போடணும்.. வச்சிருக்கியா அருந்ததி என்று யாரோ ஒரு பெண் கேட்க திணறி போனாள் அருந்ததி..

தன் கையிலிருந்த மோதிரத்தை கழட்டி அவளிடம் தந்தான் ரிஷி..

சல்லடையில் ஒரு பொட்டு தங்கமும் ரோஜா பூக்களும் தூவப்பட்டது..

தலைக்கு நல்லெண்ணெய் வைத்து மேனியெங்கும் சந்தனம் பூசி.. அவள் கைகளில் மஞ்சள் பூசி.. ஒவ்வொருவராக வந்து ஐந்து பெண்கள் சின்ன பித்தளைக்கூடத்தில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினர்..

ஒரு இளவரசி போல் குளிக்க வைக்கப்பட்டாள் சந்திரமதி..

"போதும் அருந்ததி.. புள்ளைக்கு சீயக்காய் போட்டு குளிக்கவைச்சு வெளியே கூட்டிட்டு வந்துடு.." பெண்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டனர்..

"தாய்மாமன் எடுத்துக் கொடுக்கிற புடவையை தான் கட்டணும்..! உன் அண்ணன் எங்கே..?"

இதோ அடுத்த பிரச்சினை..

"அதான் அண்ணங்காரன் வந்து சண்டை போட்டுக்கிட்டு போய்ட்டானே.."

"சரி அந்த ஸ்தானத்துல இருக்குற யாராவது ஒருத்தரை கூப்பிடுங்க.."

"கனகா உன் புருஷனை கூப்பிடு.."

"ம்கூம்.."

"சுந்தரண்ணா இல்லையா..?"

"சரி இருங்க நான் போய் என் புருஷன கூட்டிட்டு வரேன்.."

"இல்ல பரவால்ல இருக்கட்டும்.. ஏம்மா.. நீங்க எடுத்து வச்சதையே குழந்தைக்கு போட்டு கூட்டிட்டு வாங்க.. சடங்கு வைக்கும்போது உன் அண்ணனை எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடு.. அந்த நேரத்துல தாய்மாமன்தான் சீர் செய்யணும்.. கவுரவமெல்லாம் பார்க்கற நேரமில்ல இது.." பெரியவள் ஒருத்தி..

தாவணி பாவாடையையும் அதற்கு பொருத்தமாக சின்னதாய் கம்மல் மெல்லிய செயின் கைகளுக்கு இரண்டு வளையல் காலுக்கு கொலுசு..‌ என அவன் வாங்கி தந்திருந்த நகைகளை மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அருந்ததி..

பருவமடைந்தால் அழகு கூடுமா என்ன..?

அம்மாடியோவ்.. தங்க விக்ரகம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள்.. இன்று நேரில் கண்டு கொண்டாள்..!

பன்னென்டு வயசுல இந்த பொண்ணு இத்தனை அழகா நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறாளே.. ஒரு பக்கம் பூரிப்பு.. மறுபக்கம் இந்த அழகை வைத்துக் கொண்டு எப்படி பொல்லாத உலகத்தை எதிர்கொள்ளப் போகிறாளோ என்ற கவலை அந்த தாய்க்கு..

விரற்கடையளவு சரிகை வைத்த சந்தனநிற சில்க் காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் அருந்ததி..

மகளுக்கு மட்டும் பூ வைத்த போது.. முல்லை சரத்தை அவளிடம் தந்து "பூ வைச்சிக்கோ அருந்ததி" என்றான் அவன்..

அங்கிருந்த பெண்கள் அவனை அன்னியமாக பார்த்தாலும் வம்பு பேசி யார் மனதையும் புண்படுத்தவில்லை.

"பாத்ரூம் போறதா இருந்தா கூட அம்மாவ கூட்டிகிட்டு தான் போகணும்.."

"பக்கத்துல வேப்பிலை இரும்பு எதையாவது வச்சுக்கோ.."

"தேதி கிழமை.. நேரம் குறிச்சு ஜாதகம் கணிக்கனும். ருதுவான ஜாதகம் ரொம்ப முக்கியம்."

என்று ஆளாளுக்கு அறிவுரைகள்..

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்செடுத்து கீழே அமர்ந்தாள் அருந்ததி..

ஒன்பதாம் நாளில் ஐயர்‌ வந்து ஓமம் வளர்த்து.. மந்திரங்களை உச்சரித்து.. சந்திரமதியையும் உச்சரிக்க சொல்லி பூஜை செய்து புண்ணியாஜனம் முடித்து வீடெங்கிலும் சாம்பிராணி புகையோடு தீர்த்தம் தெளித்துவிட்டு சென்றார்..

பதினோராம் நாளில் சடங்கு..

அந்த தெருவின் குட்டி குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவருமே வந்திருந்தனர்..

கிட்டத்தட்ட ஒரு 50 பேர்..

மோத்தி கட்டளைக்கு கீழ்படிந்து உள்ளறைக்குள் தங்கிவிட்டான்..

வாசலில் பந்தல் போட்டு..

பச்சரிசி பூ பழம் வெத்தலை பாக்கு மேல் மனை போட்டனர்.. இரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன..

இளம் ரோஜா நிற சர்தோசி வேலைபாடுகள் கொண்ட லெஹங்கா அணிந்திருந்தாள் சந்திரமதி

"தாய்மாமன் எங்க..? அவர் தானே வந்து மாலை போடணும்.."

கலங்கினாள் அருந்ததி..

உறவுகள் சரியில்லை எனும் போது.. சமரச பேச்சுவார்த்தை நடத்தி மட்டும் என்ன பலன்..

கலக்கத்தோடு ரிஷியை பார்க்க விழிகளை மூடி திறந்து தைரியம் சொன்னான் அவன்..

"அட என்னப்பா..? என்ன அருந்ததி.. உங்க அண்ணன் வரலையா.." என்று முடிக்கும் முன்.. வாசலில் கார் ஹாரன் சத்தம்..

"தாய்மாமன் வந்தாச்சு" என்றான் ரிஷி..

அருந்ததி எட்டிப் பார்த்தாள்..

நந்தகுமாரனும் மனைவியும் கையில் தட்டுக்களோடு வந்து கொண்டிருந்தனர்..

ஆம்.. அந்த நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவில்லை என்று சண்டை போட்ட அதே நந்தகுமார் தான்..

ரிஷி தான் போனில் அழைத்து வர சொல்லியிருந்தான்..

"இவர நான் உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..‌ ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி இருக்கீங்க தானே..!" ரிஷி சொல்லவும்..

ஒரு கணம் திணறினாலும் அடுத்த கணம் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"வாங்க வாங்க" என்று மன நிறைவோடு அவர்களை வரவேற்றாள் அருந்ததி..

"மன்னிச்சிடுமா அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்..! என்னை உன் அண்ணன நெனச்சுக்கோ.. ரிஷி சாருக்காக மட்டுமில்ல உனக்காகவும்தான் வந்தேன்.. ஏதோ நான் செஞ்ச தப்புக்கு ஒரு சின்ன கைமாறு.."

அருந்ததிக்கு தலை சுற்றியது..

இருபத்தி நாலு மணி நேரமும் மனிதர்கள் கடுமையாய் இருப்பதில்லை..

மழை பொழியும் மேகம் போல் இங்கு எல்லோருக்குள்ளும் மனிதாபிமானமும் ஈரப்பதமும் உண்டு.. சில மிருகங்களை தவிர..

வறண்ட பாலையில் அரிதாக பெய்யும் மழை போல் அந்த மனிதநேயம் என்றோ ஒரு நாள் வெளிப்படுவதுதான் பிரச்சினை.

சில நேரங்களில் சில மனிதர்கள்..

பதினொரு வகையான வரிசை தட்டி வைத்து சந்திரமதியின் கழுத்தில் சம்மங்கி ரோஜா மாலையை சூட்டினான் நந்தகுமார்..

"நகையை எடுத்து பொண்ணு கழுத்துல போடுங்க.." யாரோ ஒருவர் சொல்ல..

நகைப்பெட்டியை திறந்து ஐந்து சவரன் சங்கிலியை சந்திரமதியின் கழுத்தில் போட்டான்..‌

அடேங்கப்பா.. அத்தனை பேர் விழிகளும் விரிந்தன..

"ஐயோ என்ன அப்படி பாக்காதம்மா.. உன் பொண்ணுக்கு கழுத்துல நகைய போட்டது மட்டும்தான் நான்.. வாங்கி தந்தது ரிஷி தான்.." அருந்ததிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் நந்தகுமார்..

மாலையோடு மனையில் அமர வைக்கப்பட்டாள் சந்திரமதி..

எந்தவித பேதமுமின்றி ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தார்கள்..

பெண்களும் பெரியவர்களும் வந்து நலுங்கு வைத்து சந்திரமதியை பூத்தூவி வாழ்த்தினார்கள்..

கனகா நலுங்கு வைத்தவர்களுக்கு தாம்பூலப் பை தந்தாள்..

சீரும் சிறப்புமாக தன் மகள் கொண்டாடப் படுவதில் அருந்ததிக்குள் நெகிழ்ச்சி.. விழிகளில் ஆனந்த கண்ணீர்..

அவன் வாங்கி தந்த புடவையை உடுத்தி இருந்தாள் அருந்ததி..

அழகு அம்மாயி என்று காதோரம் கிசுகிசுத்தவன் நேரம் கிடைக்கும் போது அவளை தன்னருகில் இழுத்து வைத்து.. ஒரே ஒரு போட்டோ என்று தன்னோடு சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டான்..

சிலிர்க்கவும் சில்லிடவும் முடியாமல் கூட்டத்தில் ஒரு தவிப்பு..

நீங்களும் தான் இந்த பேண்ட் சர்ட்ல அட்டகாசமா இருக்கீங்க.. கிடைத்த இடைவெளியில் சொல்லிவிட்டு போனாள் அருந்ததி..

இருவரும் அவ்வப்போது மோத்தி எங்கே தனிமையில் தவிக்க போகிறானோ என்ற கவலையில் அறைக்குள் சென்று அவ்வப்போது அவனை கொஞ்சி பேசி விட்டு தான் வந்தனர்..

மோத்தி அன்பையும் மனிதர்களையும் அதிகமாக தேடுபவனாயிற்றே..

எழுந்து கும்பிட்டு அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள் சந்திரமதி..

அடுத்த அரை மணி நேரத்தில் கேட்டரிங் சர்வீஸ் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சேர் பென்ச்களை பரப்பி.. வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

வெஜிடபிள் பிரியாணி சப்பாத்தி பன்னீர் குருமா.. ஊத்தப்பம்.. இட்லி.. சட்னி.. சாம்பார்.. பிரெட் அல்வா.. சேமியா கேசரி..‌ பாதாங்கீர் ஐஸ்கிரீம்..

உண்டு முடித்தது போக மிச்சத்தை பொட்டலங் கட்டிக்கொண்டு அனைவருமாக விடைபெற்று சென்றனர்.

"என்ன அருந்ததி இப்ப நீ ஹாப்பியா..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டவனை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அருந்ததி..

"என்னடி இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு." அவசரமாக மகரிஷி அவள் கண்ணீரை துடைக்க சட்டென அவன் கால்களில் விழுந்து விட்டாள் அவள்..

"அய்யோ.. பொம்மா..!" பதறி கொண்டு அவளை தூக்கி நிறுத்தினான் ரிஷி..

அவன் கரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்த பார்வையில் நன்றி உணர்வு நிறைந்து ததும்பி வழிந்தது..

எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என்று மலைத்து போயிருந்தவள் இந்த நொடி மனம் நிறைந்து மகிழ்ந்து போயிருந்தாள்..

தொடரும்..
Sema...


Episode
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
60
ஒரு பங்ஷன் போயிட்டு வந்த மாதிரி இருக்கு.

ரிஷி சந்திரமதிக்கு ஒரு தகப்பனா நின்னு எல்லாம் அழகா செய்துவிட்டான். 👌👌👌👌👌👌👌 ஐ லைக் ரிஷி.

அருந்ததி தனக்கு கிடைக்காததை ஒரு அம்மாவா தன் பொண்ணுக்கு ரிஷியின் முழு உதவியோடு செய்து பார்த்துட்டா. 👌👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Mar 14, 2023
Messages
18
சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!

சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்‌.

அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும் பட்டுக்காத.. எதையும் தொட்டுடாதே..‌ சாமி படத்து பக்கம் போயிடாதே.. என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்களோடு வீட்டின் பின் பக்கம் பழைய சாமான்களை போடும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டாள்.. அந்த அறையின் ஒட்டடைகளும் துருப்பிடித்த இரும்பு சாமான்களும்.. செல்லரித்த மர சாமான்கள் அகற்றப்பட்டவரை ஏதோ ஒரு வகையில் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தாள்‌..

ஏதோ ஒரு நாளில் அண்ணியும் அண்ணியின் அம்மா சங்கரியும் வேறு ஒரு வயதான பாட்டியும் வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றியதாக ஞாபகம்.. நல்லா சாப்பிடணும்.. இப்ப என்ன சாப்பிடுறியோ அதுதான் காலாகாலத்துக்கும் உனக்கு பலம் கொடுக்கும்.. என்று அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.. ஆனால் வகை தொகையாக வயதுக்கு வந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு உணவுகள் எதுவும் தனக்கு தரப்பட்டதாக ஞாபகம் இல்லை..

அதே சோறு குழம்பு பொரியல்.. முட்டை கூட அரிதுதான்..!

தான் வயதுக்கு வந்ததில் வீட்டில் யாரும் சந்தோஷப்பட்டதாக கூட நினைவில்லை..!

தீட்டு.. தீட்டு தீட்டு.. அதிகபட்சமாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுதான்..

அப்படி ஒரு நிலை தன் மகளுக்கு கூடாது.. தனக்கு கிடைக்காத அத்தனை செல்வ சிறப்புகளும் அவளுக்கு கிடைக்கட்டும்.. குழந்தை பருவம்.. வயதுக்கு வரும் பிராயம்.. திருமண காலகட்டம் என அனைத்து நிலைகளிலும் சந்திரமதிக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகளிலும் சந்தோஷங்களிலும் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று அருந்ததி முடிவெடுத்திருக்கிறாள்..

"நீ வேலைக்கு போக வேண்டாம் அருந்ததி.. வீட்ல இருந்து சந்திராம்மாவை பாத்துக்கோ.." மகரிஷியின் கட்டளை இது..!

அவள் எழுதி தந்ததை லிஸ்ட் போட்டு வாங்கி வந்திருந்தான் மகரிஷி..

கருப்பு உளுந்தை பச்சரிசியோடு சேர்த்து பொடித்து கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து.. நல்லெண்ணையோடு சேர்த்து இரும்பு உருளியில் எண்ணெய் பிரிய கிளறி உளுந்தங்களி செய்து வைத்திருந்தாள்..

காலையில் எழுந்தவுடன் சந்திரமதிக்கு நல்லெண்ணெயும் நாட்டு முட்டையும் கொடுப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் அருந்ததி..

மறுக்க மறுக்க அதட்டி மிரட்டி வாயில் திணித்து.. குமட்டி துப்பினா கொன்னுடுவேன் என்று விழுங்க வைப்பதற்குள் அவளுக்கே நாலு முட்டைகள் தேவைப்படுமளவு சத்து வற்றிப் போகும்..

உளுந்தங்களியை சின்ன சின்னதாய் உருட்டி பத்து உருண்டைகளை விழுங்க வைத்தாள்..

அதன் பிறகு சிகப்பு கவுனி அரிசி புட்டும் தேங்காய் துருவலும்..

காலை உணவுக்கு மதிய உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வெட்டி வைத்த பழக்கலவை..

மதியத்தில் சாதம் சாம்பார்..ஏதேனும் குழம்பு.. கூட்டு பொரியல் என சரிவிகித உணவு.. மாலையில் சத்துமாவு கஞ்சி.. இரவு உணவுக்கு பின் பால்.. என முடிந்தவரை பார்த்து பார்த்து சத்தான ஆகாரமாக தந்து மகளை பொன் போல் கவனித்துக் கொண்டாள்..

அவ்வப்போது நாப்கின் மாற்றிக் கொள்ளவும்.. உள்ளாடைகளை துவைத்து கொள்ளவும் உட்புறமிருந்த பாத்ரூம் இருவருக்குமே சற்று வசதியாக இருந்தது..

நல்லவேளை அருந்ததிக்கு வயிறுவலி இருக்கவில்லை.. இரத்த போக்கும் கூட பொட்டு போல் கண்ணில் காட்டியது.. அவ்வளவுதான்..

"அருந்ததி.. விசேஷத்துக்கு அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்களை கூப்பிடலையா..?"

"என்ன ரிஷி பேசுறீங்க..? அவங்கதான் யாருமே என் கூட பேசுறதில்லையே.. திடீர்னு நான் போய் கூப்பிட்டா எப்படி வருவாங்க..!"

"கூப்பிட வேண்டியது உன்னோட கடமை.. வர்றதும் வராததும் அவர்களுடைய இஷ்டம்.. நம்ம வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது இவ்வளவு நாளா பழகிட்டு இந்த பொண்ணு நம்மள கூப்பிடவே இல்லையேன்னு அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது.. அது நமக்கு நல்லதில்லை..!" மகரிஷி சொன்னது சரியாக பட்டாலும்.. என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு.. எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க என்னவோ போல் தயக்கமாக இருந்தது..

"கனகாக்கா.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா.."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.." என்றபோதும் கனகாவின் முகம் கனியவில்லை.

"மூணாம் நாள் தண்ணி ஊத்தறோம் நீங்க கண்டிப்பா வரணும்..!"

"ம்ம்.. வந்துடறேன்.." அந்த வார்த்தைகள் மனதிலிருந்து வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு.. முகம் வாடிப்போனது..

அக்கா மனசுல எதுவும் "வச்சுக்காதக்கா.. அன்னைக்கு.."
என்று அருந்ததி ஆரம்பிக்க..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு.. விடு.. அப்புறம் உட்காரு டீ காபி ஏதாவது சாப்பிடறியா..?"

"இல்லக்கா வேண்டாம் நேரம் ஆச்சு நான் போகணும்.."

"அதுவும் சரிதான்.. போய் புள்ளைய பாரு..!"

அக்கம் பக்கத்தில் மற்ற வீடுகளிலும் பெண்களை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அவர்கள் குரலுக்கும் சரி என்று சொன்ன தொனிக்கும் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை..

ஐந்து அல்லது ஏழு பேராவது வேண்டும் என்று ரிஷி சொல்லி இருந்தானே..!

சொந்தம் தான் சூனியமாகி போனது.. அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட தன்னை ஒதுக்கி கைவிட்டு விட்டார்களா..! புறக்கணிப்பில் புழுங்கினாள் துக்கத்தில் நெஞ்சடைத்தது..

சந்திரமதியின் அளவை கேட்டுக்கொண்டு ஒரு தாவணி பாவாடை செட் ஒரு லெஹெங்கா செட்.. ஒரு அனார்கலி சுடிதார் செட்.. அத்தோடு அவனுக்கு தெரிந்தவரை ஒப்பனைக்கு தேவையான சில பொருட்கள் என வாங்கி வந்திருந்தான்..

கூடத்தில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

அருந்ததியின் எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் ரிஷி..

ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

நகையெல்லாம் எதுக்கு வாத்தியாரே..

ப்ச் நோரு மொய்.. என் சந்திராம்மாவுக்கு நான் செய்யறேன்.. நீ தலையிடாதே.."

"ரொம்ப கடங்காரியாக்கறீங்க.."

வசூல் பண்ணிக்கறேன்.. உனக்கும் நகைகள் இருக்கு"

"வேண்டாம் ரிஷி.."

"நான் வேண்டாமா.."

"ஹான்.."

"நான் வாங்கித் தர்ற ஜிவல்ஸ் வேண்டாமா..?"

"அ.. அப்படி இல்ல.."

"சந்திரமதிக்கு வாங்கினது போல இன்னொரு செட்.. வேண்டாம்னா திருப்பி தந்திடு.."

"சரி தந்துடறேன்"

"போட்டுக்கிட்டு திருப்பி குடு.. ஃபங்ஷனுக்காக இரவல் வாங்கினதா நினைச்சிக்க.."

அருந்ததி சிரித்தபடி அமைதியாக உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நல்லா இருக்காடி.. ஏதோ எனக்கு தெரிஞ்ச கலர் பார்த்து வாங்கினேன்..!" என்றவனிடம் நிறைவாக புன்னகைத்தாள்‌.

"இவ்வளவு வாங்கிட்டு வந்ததே பெரிய விஷயம்."

"அப்படி சொல்லாதே.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு இல்லனா மாத்திக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.."

"இதைவிட அழகா என்னத்த வாங்க முடியும்..! இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு.. அருந்ததிக்கும் பிடிக்கும்..‌"

"அ.. அப்புறம் இது உனக்கு ஜேஜம்மா..! என்று ஒரு பார்சலை எடுத்து அவளிடம் தந்தான்.."

"இது என்னது.." என்றபடியே பிரித்துப் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்..

ஆகாய வண்ணத்தில் தங்கச் சரிகைகள் நிறைந்த ரோஜா நிற பார்டருடன் கூடிய பட்டுப் புடவை..

"இதுவும் சந்திரமதிக்கா..?"

"இது உனக்குடி.."

"ஐயோ விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.. எனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா பட்டு புடவை..‌ இருக்கிற புடவையில் ஏதாவது ஒண்ணு கட்டிக்கிட்டா போதாதா..!"

"போதாது..! உன் பொண்ணு பங்ஷன்ல நீயும் நல்லா உடுத்திக்கிட்டு அழகா சபையில நிக்கணும்.. அத நான் பாக்கணும்.."

"என் பொண்ணுக்கு தான் பங்க்ஷன்.. எனக்கு இல்லை.. இந்த புடவையோட மதிப்பு நீங்க வாங்கிட்டு வந்த எல்லா டிரஸ்சோட மதிப்பை விட அதிகமா இருக்கும் போலிருக்கு.."

"பொண்ணு வயசுக்கு வந்துட்டா அம்மா கிழவியாகிட்டதா அர்த்தம் இல்லை.. உனக்கு இன்னும் முப்பது கூட முடியல.. மனசுல மூப்பை சுமக்காதே.."

"என் வயசு உங்களுக்கு எப்படி தெரியும்.."

"அருந்ததியை பற்றி தெரிஞ்சுக்க சந்திரமதிங்கற google information engine என்கிட்ட இருக்குதே..!" கண் சிமிட்டினான் அவன்..

"இந்த புடவையை கட்டிட்டு நான் வந்து ஃபங்ஷன்ல நின்னா எல்லாரும் என்ன பேசுவாங்களோ என்னவோ..!"

"ஆமா அதுவும் சரிதான்.. கண்டிப்பா தப்பா பேசுவாங்க அதனால ஒன்னு பண்ணு..‌ பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய புடவை ஏதாவது இருக்கும்..‌ அதை கட்டிக்கிட்டு ஃபங்ஷன்ல வந்து திருஷ்டி பொம்மை மாதிரி தனியா நில்லு.. எல்லாரும் உன்னை பாராட்டிட்டு போவாங்க.."

"கோங்ரா..?" அருந்ததி முறைத்தாள்..

"தருவாத்தா ஏமிரா..? இது நம்ம பொண்ணோட சடங்கு.." என்றதும் அருந்ததி அவனை அர்த்தத்துடன் ஏறிட்டு பார்த்தாள்..

"ஐ மீன்.. நம்ம வீட்டு பொண்ணுக்கான சடங்கு.. எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணோட அம்மா அழகா தெரியனும்.."

"அதென்ன பொண்ணோட அம்மா அழகா தெரியனும்..?"

"அது அப்படித்தான்..! சரி அதை விடு..‌ ஃபங்ஷன்ல ஒம்பது இல்லனா பதினொரு தட்டு சீர் வெச்சிடலாம்.."

அருந்ததி பெருமூச்சு விட்டாள்..

"இதெல்லாம் தாய்மாமன் செய்யணும்.. நாமளே வாங்கி செஞ்சுக்கறதுக்கு எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம்."

"தாய்மாமன் இல்லாத குழந்தைகளுக்கு சடங்கு வைக்கறதே இல்லையா..! சொந்தக்காரங்களை எதிர்த்து கலப்பு திருமண பண்ணிக்கிட்டு போறவங்க தன்னோட பொண்ணு வயசுக்கு வந்தா சடங்கு செய்யறதில்லையா..? ஏதாவது ஒரு வழி பிறக்கும் சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. கவலைய முகத்தில் காட்டாத சந்தோஷமா இரு..!"

ம்ம்.. என்ற போதும் அருந்ததியின் முகம் கனியவில்லை..

மூன்றாம் நாள்..

வீட்டை சுத்தம் செய்து காலையில் நல்ல நேரம் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வரவுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

யாரும் வரவில்லை

"நான் சொல்லல.. யாரும் வர மாட்டாங்க.." அருந்ததியின் முகம் சோகத்தில் கருப்படித்து போனது..

"டென்ஷன் ஆகாத அருந்ததி.. கொஞ்சம் பொறுமையா இரு.. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்.. அட்லீஸ்ட் ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் யாரையாவது வர சொல்லுவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு" அவன் போனை எடுத்த நேரத்தில்..

இங்கே..‌ தலையில் பூவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டிருந்தாள் கனகா..

"ஏய் டிபன் கூட செய்யாம எங்கடி கிளம்பிட்ட.." சத்யராஜ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

"அருந்ததியோட பொண்ணு சந்திரமதி வயசுக்கு பெரிய மனுஷி ஆகிட்டால்ல.. அதான் மூணுக்கு தண்ணி ஊத்த கூப்பிட்டுருந்தாங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.."

"அந்த நடத்தக் கெட்டவ வீட்டுக்கு போக கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருந்தேனா இல்லையா.."

"அடச்சீ நல்ல காரியம் நடக்கும்போது அபசகுணமா பேசிக்கிட்டு.. போயா அந்த பக்கம்.. வீட்டுக்கு வந்து கண்டிப்பா வரணும்னு அழைச்சிட்டு போயிருக்கா.. போகலைனா நாளைக்கு அவ மூஞ்சில எப்படி முழிக்கறதாம்.."

"அவ மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்றேன்?? நீ என்னமோ அலங்காரம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரேங்குற.."

"அக்கம் பக்கத்து வீட்டுல விசேஷம்னா போகாம இருக்க முடியுமா.. நாளைக்கும் நமக்கும் நல்லது கெட்டதுக்கு ஆளுங்க வர வேணாமா..?

அவ இங்க வந்து ஒண்ணும் கிழிக்க போறதில்ல.. அவள முதல்ல யாரு வீட்டுக்குள்ள சேக்க போறா.. உன் வேலைய மயிர பாரு.. மரியாதையா இங்கிருந்து போய்டுன்னு கழுதைதான அது. எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடி அவ வீட்டு வாசப்படி மிதிக்க வெக்கமாயில்லையா உனக்கு..?

வெக்கமா இல்ல.. என்னங்கற.. அக்கம்பக்கத்து வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சண்டை போட்டுக்கிட்டாலும் நல்லதுகெட்டதுன்னா ஒன்னு எல்லாரும் சேர்ந்துக்க தான் வேணும்.. இதெல்லாம் உனக்கு புரியாது போ.. என்றபடி
கனகா வீட்டிலிருந்து புறப்பட..‌

"இந்தா.. என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறவளா இருந்தா இந்த லுங்கிய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க கூடாது நீ..!"

பேண்ட்டை தாண்டி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அவள் நடந்த வாசல் பக்கமாக போட்டான் சத்யராஜ்..

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த கனகா காலால் லுங்கியை தூக்கியடிக்க அவன் முகத்தில் வந்து விழுந்தது அது..

"அத தூக்கி அழுக்கு கூடையில் போட்டுட்டு சாயந்திரம் வந்து துவைச்சு போடு.. மதிக்கணுமாமே.. வேணும்னா தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் வா..!" என்றபடி வெளியே வந்தவள் தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு சென்றிருந்தாள்..

"பேசாம நானும் என் குழந்தையை கூட்டிட்டு போய் தண்ணி ஊத்திடறேன்.." என்று உள்ளே செல்லப் போனவளை நிறுத்தி வாசலை காட்டினான் ரிஷி..

கொலுசும் வளையலுமாக.. புடவை சரசரக்க மஞ்சள் முகமும் தலை நிறைய பூவுமாக மங்களகரமாக வந்து கொண்டிருந்தனர் பெண்கள்..

அருந்ததிக்கு கண்கள் கலங்கி போனது..!

"என்னடி நல்ல நாள் அதுவுமா கண்ணு கலங்கிட்டு நிக்கிற.."

"வ.. வர மாட்டீங்களோனு நெனச்சேன்.."

"அது எப்படி வராம போய்டுவோம் நாங்க பார்க்க வளர்ந்த புள்ள.. சந்திரமதி எங்க வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் தனியா விட்டுட மாட்டோம்.." என்றபடியே வீட்டுக்குள் வந்தனர் அவர்கள்..

சந்திரமதியின் வகுப்பு தோழி திவ்யாவின் தாயும் பாட்டியும் கூட வந்திருந்தார்கள்..

"சும்மா சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேரு தண்ணி ஊத்துனா போதும்.."

வீட்டுக்கு வெளியிலிருந்த குளியலறைக்கு அழைத்துவரப்பட்டாள் சந்திரமதி..

பித்தளை அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் ரோஜாவும் பன்னீரும் கலந்தனர்.. மஞ்சளும் சந்தனமும் தனித்தனியாக குழைத்து கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன..

சல்லடையில் தங்கம் போடணும்.. வச்சிருக்கியா அருந்ததி என்று யாரோ ஒரு பெண் கேட்க திணறி போனாள் அருந்ததி..

தன் கையிலிருந்த மோதிரத்தை கழட்டி அவளிடம் தந்தான் ரிஷி..

சல்லடையில் ஒரு பொட்டு தங்கமும் ரோஜா பூக்களும் தூவப்பட்டது..

தலைக்கு நல்லெண்ணெய் வைத்து மேனியெங்கும் சந்தனம் பூசி.. அவள் கைகளில் மஞ்சள் பூசி.. ஒவ்வொருவராக வந்து ஐந்து பெண்கள் சின்ன பித்தளைக்கூடத்தில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினர்..

ஒரு இளவரசி போல் குளிக்க வைக்கப்பட்டாள் சந்திரமதி..

"போதும் அருந்ததி.. புள்ளைக்கு சீயக்காய் போட்டு குளிக்கவைச்சு வெளியே கூட்டிட்டு வந்துடு.." பெண்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டனர்..

"தாய்மாமன் எடுத்துக் கொடுக்கிற புடவையை தான் கட்டணும்..! உன் அண்ணன் எங்கே..?"

இதோ அடுத்த பிரச்சினை..

"அதான் அண்ணங்காரன் வந்து சண்டை போட்டுக்கிட்டு போய்ட்டானே.."

"சரி அந்த ஸ்தானத்துல இருக்குற யாராவது ஒருத்தரை கூப்பிடுங்க.."

"கனகா உன் புருஷனை கூப்பிடு.."

"ம்கூம்.."

"சுந்தரண்ணா இல்லையா..?"

"சரி இருங்க நான் போய் என் புருஷன கூட்டிட்டு வரேன்.."

"இல்ல பரவால்ல இருக்கட்டும்.. ஏம்மா.. நீங்க எடுத்து வச்சதையே குழந்தைக்கு போட்டு கூட்டிட்டு வாங்க.. சடங்கு வைக்கும்போது உன் அண்ணனை எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடு.. அந்த நேரத்துல தாய்மாமன்தான் சீர் செய்யணும்.. கவுரவமெல்லாம் பார்க்கற நேரமில்ல இது.." பெரியவள் ஒருத்தி..

தாவணி பாவாடையையும் அதற்கு பொருத்தமாக சின்னதாய் கம்மல் மெல்லிய செயின் கைகளுக்கு இரண்டு வளையல் காலுக்கு கொலுசு..‌ என அவன் வாங்கி தந்திருந்த நகைகளை மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அருந்ததி..

பருவமடைந்தால் அழகு கூடுமா என்ன..?

அம்மாடியோவ்.. தங்க விக்ரகம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள்.. இன்று நேரில் கண்டு கொண்டாள்..!

பன்னென்டு வயசுல இந்த பொண்ணு இத்தனை அழகா நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறாளே.. ஒரு பக்கம் பூரிப்பு.. மறுபக்கம் இந்த அழகை வைத்துக் கொண்டு எப்படி பொல்லாத உலகத்தை எதிர்கொள்ளப் போகிறாளோ என்ற கவலை அந்த தாய்க்கு..

விரற்கடையளவு சரிகை வைத்த சந்தனநிற சில்க் காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் அருந்ததி..

மகளுக்கு மட்டும் பூ வைத்த போது.. முல்லை சரத்தை அவளிடம் தந்து "பூ வைச்சிக்கோ அருந்ததி" என்றான் அவன்..

அங்கிருந்த பெண்கள் அவனை அன்னியமாக பார்த்தாலும் வம்பு பேசி யார் மனதையும் புண்படுத்தவில்லை.

"பாத்ரூம் போறதா இருந்தா கூட அம்மாவ கூட்டிகிட்டு தான் போகணும்.."

"பக்கத்துல வேப்பிலை இரும்பு எதையாவது வச்சுக்கோ.."

"தேதி கிழமை.. நேரம் குறிச்சு ஜாதகம் கணிக்கனும். ருதுவான ஜாதகம் ரொம்ப முக்கியம்."

என்று ஆளாளுக்கு அறிவுரைகள்..

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்செடுத்து கீழே அமர்ந்தாள் அருந்ததி..

ஒன்பதாம் நாளில் ஐயர்‌ வந்து ஓமம் வளர்த்து.. மந்திரங்களை உச்சரித்து.. சந்திரமதியையும் உச்சரிக்க சொல்லி பூஜை செய்து புண்ணியாஜனம் முடித்து வீடெங்கிலும் சாம்பிராணி புகையோடு தீர்த்தம் தெளித்துவிட்டு சென்றார்..

பதினோராம் நாளில் சடங்கு..

அந்த தெருவின் குட்டி குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவருமே வந்திருந்தனர்..

கிட்டத்தட்ட ஒரு 50 பேர்..

மோத்தி கட்டளைக்கு கீழ்படிந்து உள்ளறைக்குள் தங்கிவிட்டான்..

வாசலில் பந்தல் போட்டு..

பச்சரிசி பூ பழம் வெத்தலை பாக்கு மேல் மனை போட்டனர்.. இரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன..

இளம் ரோஜா நிற சர்தோசி வேலைபாடுகள் கொண்ட லெஹங்கா அணிந்திருந்தாள் சந்திரமதி

"தாய்மாமன் எங்க..? அவர் தானே வந்து மாலை போடணும்.."

கலங்கினாள் அருந்ததி..

உறவுகள் சரியில்லை எனும் போது.. சமரச பேச்சுவார்த்தை நடத்தி மட்டும் என்ன பலன்..

கலக்கத்தோடு ரிஷியை பார்க்க விழிகளை மூடி திறந்து தைரியம் சொன்னான் அவன்..

"அட என்னப்பா..? என்ன அருந்ததி.. உங்க அண்ணன் வரலையா.." என்று முடிக்கும் முன்.. வாசலில் கார் ஹாரன் சத்தம்..

"தாய்மாமன் வந்தாச்சு" என்றான் ரிஷி..

அருந்ததி எட்டிப் பார்த்தாள்..

நந்தகுமாரனும் மனைவியும் கையில் தட்டுக்களோடு வந்து கொண்டிருந்தனர்..

ஆம்.. அந்த நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவில்லை என்று சண்டை போட்ட அதே நந்தகுமார் தான்..

ரிஷி தான் போனில் அழைத்து வர சொல்லியிருந்தான்..

"இவர நான் உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..‌ ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி இருக்கீங்க தானே..!" ரிஷி சொல்லவும்..

ஒரு கணம் திணறினாலும் அடுத்த கணம் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"வாங்க வாங்க" என்று மன நிறைவோடு அவர்களை வரவேற்றாள் அருந்ததி..

"மன்னிச்சிடுமா அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்..! என்னை உன் அண்ணன நெனச்சுக்கோ.. ரிஷி சாருக்காக மட்டுமில்ல உனக்காகவும்தான் வந்தேன்.. ஏதோ நான் செஞ்ச தப்புக்கு ஒரு சின்ன கைமாறு.."

அருந்ததிக்கு தலை சுற்றியது..

இருபத்தி நாலு மணி நேரமும் மனிதர்கள் கடுமையாய் இருப்பதில்லை..

மழை பொழியும் மேகம் போல் இங்கு எல்லோருக்குள்ளும் மனிதாபிமானமும் ஈரப்பதமும் உண்டு.. சில மிருகங்களை தவிர..

வறண்ட பாலையில் அரிதாக பெய்யும் மழை போல் அந்த மனிதநேயம் என்றோ ஒரு நாள் வெளிப்படுவதுதான் பிரச்சினை.

சில நேரங்களில் சில மனிதர்கள்..

பதினொரு வகையான வரிசை தட்டி வைத்து சந்திரமதியின் கழுத்தில் சம்மங்கி ரோஜா மாலையை சூட்டினான் நந்தகுமார்..

"நகையை எடுத்து பொண்ணு கழுத்துல போடுங்க.." யாரோ ஒருவர் சொல்ல..

நகைப்பெட்டியை திறந்து ஐந்து சவரன் சங்கிலியை சந்திரமதியின் கழுத்தில் போட்டான்..‌

அடேங்கப்பா.. அத்தனை பேர் விழிகளும் விரிந்தன..

"ஐயோ என்ன அப்படி பாக்காதம்மா.. உன் பொண்ணுக்கு கழுத்துல நகைய போட்டது மட்டும்தான் நான்.. வாங்கி தந்தது ரிஷி தான்.." அருந்ததிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் நந்தகுமார்..

மாலையோடு மனையில் அமர வைக்கப்பட்டாள் சந்திரமதி..

எந்தவித பேதமுமின்றி ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தார்கள்..

பெண்களும் பெரியவர்களும் வந்து நலுங்கு வைத்து சந்திரமதியை பூத்தூவி வாழ்த்தினார்கள்..

கனகா நலுங்கு வைத்தவர்களுக்கு தாம்பூலப் பை தந்தாள்..

சீரும் சிறப்புமாக தன் மகள் கொண்டாடப் படுவதில் அருந்ததிக்குள் நெகிழ்ச்சி.. விழிகளில் ஆனந்த கண்ணீர்..

அவன் வாங்கி தந்த புடவையை உடுத்தி இருந்தாள் அருந்ததி..

அழகு அம்மாயி என்று காதோரம் கிசுகிசுத்தவன் நேரம் கிடைக்கும் போது அவளை தன்னருகில் இழுத்து வைத்து.. ஒரே ஒரு போட்டோ என்று தன்னோடு சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டான்..

சிலிர்க்கவும் சில்லிடவும் முடியாமல் கூட்டத்தில் ஒரு தவிப்பு..

நீங்களும் தான் இந்த பேண்ட் சர்ட்ல அட்டகாசமா இருக்கீங்க.. கிடைத்த இடைவெளியில் சொல்லிவிட்டு போனாள் அருந்ததி..

இருவரும் அவ்வப்போது மோத்தி எங்கே தனிமையில் தவிக்க போகிறானோ என்ற கவலையில் அறைக்குள் சென்று அவ்வப்போது அவனை கொஞ்சி பேசி விட்டு தான் வந்தனர்..

மோத்தி அன்பையும் மனிதர்களையும் அதிகமாக தேடுபவனாயிற்றே..

எழுந்து கும்பிட்டு அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள் சந்திரமதி..

அடுத்த அரை மணி நேரத்தில் கேட்டரிங் சர்வீஸ் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சேர் பென்ச்களை பரப்பி.. வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

வெஜிடபிள் பிரியாணி சப்பாத்தி பன்னீர் குருமா.. ஊத்தப்பம்.. இட்லி.. சட்னி.. சாம்பார்.. பிரெட் அல்வா.. சேமியா கேசரி..‌ பாதாங்கீர் ஐஸ்கிரீம்..

உண்டு முடித்தது போக மிச்சத்தை பொட்டலங் கட்டிக்கொண்டு அனைவருமாக விடைபெற்று சென்றனர்.

"என்ன அருந்ததி இப்ப நீ ஹாப்பியா..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டவனை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அருந்ததி..

"என்னடி இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு." அவசரமாக மகரிஷி அவள் கண்ணீரை துடைக்க சட்டென அவன் கால்களில் விழுந்து விட்டாள் அவள்..

"அய்யோ.. பொம்மா..!" பதறி கொண்டு அவளை தூக்கி நிறுத்தினான் ரிஷி..

அவன் கரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்த பார்வையில் நன்றி உணர்வு நிறைந்து ததும்பி வழிந்தது..

எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என்று மலைத்து போயிருந்தவள் இந்த நொடி மனம் நிறைந்து மகிழ்ந்து போயிருந்தாள்..

தொடரும்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
66
சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!

சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்‌.

அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும் பட்டுக்காத.. எதையும் தொட்டுடாதே..‌ சாமி படத்து பக்கம் போயிடாதே.. என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்களோடு வீட்டின் பின் பக்கம் பழைய சாமான்களை போடும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டாள்.. அந்த அறையின் ஒட்டடைகளும் துருப்பிடித்த இரும்பு சாமான்களும்.. செல்லரித்த மர சாமான்கள் அகற்றப்பட்டவரை ஏதோ ஒரு வகையில் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தாள்‌..

ஏதோ ஒரு நாளில் அண்ணியும் அண்ணியின் அம்மா சங்கரியும் வேறு ஒரு வயதான பாட்டியும் வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றியதாக ஞாபகம்.. நல்லா சாப்பிடணும்.. இப்ப என்ன சாப்பிடுறியோ அதுதான் காலாகாலத்துக்கும் உனக்கு பலம் கொடுக்கும்.. என்று அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.. ஆனால் வகை தொகையாக வயதுக்கு வந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு உணவுகள் எதுவும் தனக்கு தரப்பட்டதாக ஞாபகம் இல்லை..

அதே சோறு குழம்பு பொரியல்.. முட்டை கூட அரிதுதான்..!

தான் வயதுக்கு வந்ததில் வீட்டில் யாரும் சந்தோஷப்பட்டதாக கூட நினைவில்லை..!

தீட்டு.. தீட்டு தீட்டு.. அதிகபட்சமாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுதான்..

அப்படி ஒரு நிலை தன் மகளுக்கு கூடாது.. தனக்கு கிடைக்காத அத்தனை செல்வ சிறப்புகளும் அவளுக்கு கிடைக்கட்டும்.. குழந்தை பருவம்.. வயதுக்கு வரும் பிராயம்.. திருமண காலகட்டம் என அனைத்து நிலைகளிலும் சந்திரமதிக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகளிலும் சந்தோஷங்களிலும் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று அருந்ததி முடிவெடுத்திருக்கிறாள்..

"நீ வேலைக்கு போக வேண்டாம் அருந்ததி.. வீட்ல இருந்து சந்திராம்மாவை பாத்துக்கோ.." மகரிஷியின் கட்டளை இது..!

அவள் எழுதி தந்ததை லிஸ்ட் போட்டு வாங்கி வந்திருந்தான் மகரிஷி..

கருப்பு உளுந்தை பச்சரிசியோடு சேர்த்து பொடித்து கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து.. நல்லெண்ணையோடு சேர்த்து இரும்பு உருளியில் எண்ணெய் பிரிய கிளறி உளுந்தங்களி செய்து வைத்திருந்தாள்..

காலையில் எழுந்தவுடன் சந்திரமதிக்கு நல்லெண்ணெயும் நாட்டு முட்டையும் கொடுப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் அருந்ததி..

மறுக்க மறுக்க அதட்டி மிரட்டி வாயில் திணித்து.. குமட்டி துப்பினா கொன்னுடுவேன் என்று விழுங்க வைப்பதற்குள் அவளுக்கே நாலு முட்டைகள் தேவைப்படுமளவு சத்து வற்றிப் போகும்..

உளுந்தங்களியை சின்ன சின்னதாய் உருட்டி பத்து உருண்டைகளை விழுங்க வைத்தாள்..

அதன் பிறகு சிகப்பு கவுனி அரிசி புட்டும் தேங்காய் துருவலும்..

காலை உணவுக்கு மதிய உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வெட்டி வைத்த பழக்கலவை..

மதியத்தில் சாதம் சாம்பார்..ஏதேனும் குழம்பு.. கூட்டு பொரியல் என சரிவிகித உணவு.. மாலையில் சத்துமாவு கஞ்சி.. இரவு உணவுக்கு பின் பால்.. என முடிந்தவரை பார்த்து பார்த்து சத்தான ஆகாரமாக தந்து மகளை பொன் போல் கவனித்துக் கொண்டாள்..

அவ்வப்போது நாப்கின் மாற்றிக் கொள்ளவும்.. உள்ளாடைகளை துவைத்து கொள்ளவும் உட்புறமிருந்த பாத்ரூம் இருவருக்குமே சற்று வசதியாக இருந்தது..

நல்லவேளை அருந்ததிக்கு வயிறுவலி இருக்கவில்லை.. இரத்த போக்கும் கூட பொட்டு போல் கண்ணில் காட்டியது.. அவ்வளவுதான்..

"அருந்ததி.. விசேஷத்துக்கு அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்களை கூப்பிடலையா..?"

"என்ன ரிஷி பேசுறீங்க..? அவங்கதான் யாருமே என் கூட பேசுறதில்லையே.. திடீர்னு நான் போய் கூப்பிட்டா எப்படி வருவாங்க..!"

"கூப்பிட வேண்டியது உன்னோட கடமை.. வர்றதும் வராததும் அவர்களுடைய இஷ்டம்.. நம்ம வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது இவ்வளவு நாளா பழகிட்டு இந்த பொண்ணு நம்மள கூப்பிடவே இல்லையேன்னு அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது.. அது நமக்கு நல்லதில்லை..!" மகரிஷி சொன்னது சரியாக பட்டாலும்.. என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு.. எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க என்னவோ போல் தயக்கமாக இருந்தது..

"கனகாக்கா.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா.."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.." என்றபோதும் கனகாவின் முகம் கனியவில்லை.

"மூணாம் நாள் தண்ணி ஊத்தறோம் நீங்க கண்டிப்பா வரணும்..!"

"ம்ம்.. வந்துடறேன்.." அந்த வார்த்தைகள் மனதிலிருந்து வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு.. முகம் வாடிப்போனது..

அக்கா மனசுல எதுவும் "வச்சுக்காதக்கா.. அன்னைக்கு.."
என்று அருந்ததி ஆரம்பிக்க..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு.. விடு.. அப்புறம் உட்காரு டீ காபி ஏதாவது சாப்பிடறியா..?"

"இல்லக்கா வேண்டாம் நேரம் ஆச்சு நான் போகணும்.."

"அதுவும் சரிதான்.. போய் புள்ளைய பாரு..!"

அக்கம் பக்கத்தில் மற்ற வீடுகளிலும் பெண்களை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அவர்கள் குரலுக்கும் சரி என்று சொன்ன தொனிக்கும் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை..

ஐந்து அல்லது ஏழு பேராவது வேண்டும் என்று ரிஷி சொல்லி இருந்தானே..!

சொந்தம் தான் சூனியமாகி போனது.. அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட தன்னை ஒதுக்கி கைவிட்டு விட்டார்களா..! புறக்கணிப்பில் புழுங்கினாள் துக்கத்தில் நெஞ்சடைத்தது..

சந்திரமதியின் அளவை கேட்டுக்கொண்டு ஒரு தாவணி பாவாடை செட் ஒரு லெஹெங்கா செட்.. ஒரு அனார்கலி சுடிதார் செட்.. அத்தோடு அவனுக்கு தெரிந்தவரை ஒப்பனைக்கு தேவையான சில பொருட்கள் என வாங்கி வந்திருந்தான்..

கூடத்தில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

அருந்ததியின் எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் ரிஷி..

ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

நகையெல்லாம் எதுக்கு வாத்தியாரே..

ப்ச் நோரு மொய்.. என் சந்திராம்மாவுக்கு நான் செய்யறேன்.. நீ தலையிடாதே.."

"ரொம்ப கடங்காரியாக்கறீங்க.."

வசூல் பண்ணிக்கறேன்.. உனக்கும் நகைகள் இருக்கு"

"வேண்டாம் ரிஷி.."

"நான் வேண்டாமா.."

"ஹான்.."

"நான் வாங்கித் தர்ற ஜிவல்ஸ் வேண்டாமா..?"

"அ.. அப்படி இல்ல.."

"சந்திரமதிக்கு வாங்கினது போல இன்னொரு செட்.. வேண்டாம்னா திருப்பி தந்திடு.."

"சரி தந்துடறேன்"

"போட்டுக்கிட்டு திருப்பி குடு.. ஃபங்ஷனுக்காக இரவல் வாங்கினதா நினைச்சிக்க.."

அருந்ததி சிரித்தபடி அமைதியாக உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நல்லா இருக்காடி.. ஏதோ எனக்கு தெரிஞ்ச கலர் பார்த்து வாங்கினேன்..!" என்றவனிடம் நிறைவாக புன்னகைத்தாள்‌.

"இவ்வளவு வாங்கிட்டு வந்ததே பெரிய விஷயம்."

"அப்படி சொல்லாதே.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு இல்லனா மாத்திக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.."

"இதைவிட அழகா என்னத்த வாங்க முடியும்..! இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு.. அருந்ததிக்கும் பிடிக்கும்..‌"

"அ.. அப்புறம் இது உனக்கு ஜேஜம்மா..! என்று ஒரு பார்சலை எடுத்து அவளிடம் தந்தான்.."

"இது என்னது.." என்றபடியே பிரித்துப் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்..

ஆகாய வண்ணத்தில் தங்கச் சரிகைகள் நிறைந்த ரோஜா நிற பார்டருடன் கூடிய பட்டுப் புடவை..

"இதுவும் சந்திரமதிக்கா..?"

"இது உனக்குடி.."

"ஐயோ விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.. எனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா பட்டு புடவை..‌ இருக்கிற புடவையில் ஏதாவது ஒண்ணு கட்டிக்கிட்டா போதாதா..!"

"போதாது..! உன் பொண்ணு பங்ஷன்ல நீயும் நல்லா உடுத்திக்கிட்டு அழகா சபையில நிக்கணும்.. அத நான் பாக்கணும்.."

"என் பொண்ணுக்கு தான் பங்க்ஷன்.. எனக்கு இல்லை.. இந்த புடவையோட மதிப்பு நீங்க வாங்கிட்டு வந்த எல்லா டிரஸ்சோட மதிப்பை விட அதிகமா இருக்கும் போலிருக்கு.."

"பொண்ணு வயசுக்கு வந்துட்டா அம்மா கிழவியாகிட்டதா அர்த்தம் இல்லை.. உனக்கு இன்னும் முப்பது கூட முடியல.. மனசுல மூப்பை சுமக்காதே.."

"என் வயசு உங்களுக்கு எப்படி தெரியும்.."

"அருந்ததியை பற்றி தெரிஞ்சுக்க சந்திரமதிங்கற google information engine என்கிட்ட இருக்குதே..!" கண் சிமிட்டினான் அவன்..

"இந்த புடவையை கட்டிட்டு நான் வந்து ஃபங்ஷன்ல நின்னா எல்லாரும் என்ன பேசுவாங்களோ என்னவோ..!"

"ஆமா அதுவும் சரிதான்.. கண்டிப்பா தப்பா பேசுவாங்க அதனால ஒன்னு பண்ணு..‌ பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய புடவை ஏதாவது இருக்கும்..‌ அதை கட்டிக்கிட்டு ஃபங்ஷன்ல வந்து திருஷ்டி பொம்மை மாதிரி தனியா நில்லு.. எல்லாரும் உன்னை பாராட்டிட்டு போவாங்க.."

"கோங்ரா..?" அருந்ததி முறைத்தாள்..

"தருவாத்தா ஏமிரா..? இது நம்ம பொண்ணோட சடங்கு.." என்றதும் அருந்ததி அவனை அர்த்தத்துடன் ஏறிட்டு பார்த்தாள்..

"ஐ மீன்.. நம்ம வீட்டு பொண்ணுக்கான சடங்கு.. எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணோட அம்மா அழகா தெரியனும்.."

"அதென்ன பொண்ணோட அம்மா அழகா தெரியனும்..?"

"அது அப்படித்தான்..! சரி அதை விடு..‌ ஃபங்ஷன்ல ஒம்பது இல்லனா பதினொரு தட்டு சீர் வெச்சிடலாம்.."

அருந்ததி பெருமூச்சு விட்டாள்..

"இதெல்லாம் தாய்மாமன் செய்யணும்.. நாமளே வாங்கி செஞ்சுக்கறதுக்கு எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம்."

"தாய்மாமன் இல்லாத குழந்தைகளுக்கு சடங்கு வைக்கறதே இல்லையா..! சொந்தக்காரங்களை எதிர்த்து கலப்பு திருமண பண்ணிக்கிட்டு போறவங்க தன்னோட பொண்ணு வயசுக்கு வந்தா சடங்கு செய்யறதில்லையா..? ஏதாவது ஒரு வழி பிறக்கும் சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. கவலைய முகத்தில் காட்டாத சந்தோஷமா இரு..!"

ம்ம்.. என்ற போதும் அருந்ததியின் முகம் கனியவில்லை..

மூன்றாம் நாள்..

வீட்டை சுத்தம் செய்து காலையில் நல்ல நேரம் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வரவுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

யாரும் வரவில்லை

"நான் சொல்லல.. யாரும் வர மாட்டாங்க.." அருந்ததியின் முகம் சோகத்தில் கருப்படித்து போனது..

"டென்ஷன் ஆகாத அருந்ததி.. கொஞ்சம் பொறுமையா இரு.. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்.. அட்லீஸ்ட் ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் யாரையாவது வர சொல்லுவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு" அவன் போனை எடுத்த நேரத்தில்..

இங்கே..‌ தலையில் பூவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டிருந்தாள் கனகா..

"ஏய் டிபன் கூட செய்யாம எங்கடி கிளம்பிட்ட.." சத்யராஜ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

"அருந்ததியோட பொண்ணு சந்திரமதி வயசுக்கு பெரிய மனுஷி ஆகிட்டால்ல.. அதான் மூணுக்கு தண்ணி ஊத்த கூப்பிட்டுருந்தாங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.."

"அந்த நடத்தக் கெட்டவ வீட்டுக்கு போக கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருந்தேனா இல்லையா.."

"அடச்சீ நல்ல காரியம் நடக்கும்போது அபசகுணமா பேசிக்கிட்டு.. போயா அந்த பக்கம்.. வீட்டுக்கு வந்து கண்டிப்பா வரணும்னு அழைச்சிட்டு போயிருக்கா.. போகலைனா நாளைக்கு அவ மூஞ்சில எப்படி முழிக்கறதாம்.."

"அவ மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்றேன்?? நீ என்னமோ அலங்காரம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரேங்குற.."

"அக்கம் பக்கத்து வீட்டுல விசேஷம்னா போகாம இருக்க முடியுமா.. நாளைக்கும் நமக்கும் நல்லது கெட்டதுக்கு ஆளுங்க வர வேணாமா..?

அவ இங்க வந்து ஒண்ணும் கிழிக்க போறதில்ல.. அவள முதல்ல யாரு வீட்டுக்குள்ள சேக்க போறா.. உன் வேலைய மயிர பாரு.. மரியாதையா இங்கிருந்து போய்டுன்னு கழுதைதான அது. எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடி அவ வீட்டு வாசப்படி மிதிக்க வெக்கமாயில்லையா உனக்கு..?

வெக்கமா இல்ல.. என்னங்கற.. அக்கம்பக்கத்து வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சண்டை போட்டுக்கிட்டாலும் நல்லதுகெட்டதுன்னா ஒன்னு எல்லாரும் சேர்ந்துக்க தான் வேணும்.. இதெல்லாம் உனக்கு புரியாது போ.. என்றபடி
கனகா வீட்டிலிருந்து புறப்பட..‌

"இந்தா.. என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறவளா இருந்தா இந்த லுங்கிய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க கூடாது நீ..!"

பேண்ட்டை தாண்டி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அவள் நடந்த வாசல் பக்கமாக போட்டான் சத்யராஜ்..

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த கனகா காலால் லுங்கியை தூக்கியடிக்க அவன் முகத்தில் வந்து விழுந்தது அது..

"அத தூக்கி அழுக்கு கூடையில் போட்டுட்டு சாயந்திரம் வந்து துவைச்சு போடு.. மதிக்கணுமாமே.. வேணும்னா தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் வா..!" என்றபடி வெளியே வந்தவள் தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு சென்றிருந்தாள்..

"பேசாம நானும் என் குழந்தையை கூட்டிட்டு போய் தண்ணி ஊத்திடறேன்.." என்று உள்ளே செல்லப் போனவளை நிறுத்தி வாசலை காட்டினான் ரிஷி..

கொலுசும் வளையலுமாக.. புடவை சரசரக்க மஞ்சள் முகமும் தலை நிறைய பூவுமாக மங்களகரமாக வந்து கொண்டிருந்தனர் பெண்கள்..

அருந்ததிக்கு கண்கள் கலங்கி போனது..!

"என்னடி நல்ல நாள் அதுவுமா கண்ணு கலங்கிட்டு நிக்கிற.."

"வ.. வர மாட்டீங்களோனு நெனச்சேன்.."

"அது எப்படி வராம போய்டுவோம் நாங்க பார்க்க வளர்ந்த புள்ள.. சந்திரமதி எங்க வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் தனியா விட்டுட மாட்டோம்.." என்றபடியே வீட்டுக்குள் வந்தனர் அவர்கள்..

சந்திரமதியின் வகுப்பு தோழி திவ்யாவின் தாயும் பாட்டியும் கூட வந்திருந்தார்கள்..

"சும்மா சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேரு தண்ணி ஊத்துனா போதும்.."

வீட்டுக்கு வெளியிலிருந்த குளியலறைக்கு அழைத்துவரப்பட்டாள் சந்திரமதி..

பித்தளை அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் ரோஜாவும் பன்னீரும் கலந்தனர்.. மஞ்சளும் சந்தனமும் தனித்தனியாக குழைத்து கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன..

சல்லடையில் தங்கம் போடணும்.. வச்சிருக்கியா அருந்ததி என்று யாரோ ஒரு பெண் கேட்க திணறி போனாள் அருந்ததி..

தன் கையிலிருந்த மோதிரத்தை கழட்டி அவளிடம் தந்தான் ரிஷி..

சல்லடையில் ஒரு பொட்டு தங்கமும் ரோஜா பூக்களும் தூவப்பட்டது..

தலைக்கு நல்லெண்ணெய் வைத்து மேனியெங்கும் சந்தனம் பூசி.. அவள் கைகளில் மஞ்சள் பூசி.. ஒவ்வொருவராக வந்து ஐந்து பெண்கள் சின்ன பித்தளைக்கூடத்தில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினர்..

ஒரு இளவரசி போல் குளிக்க வைக்கப்பட்டாள் சந்திரமதி..

"போதும் அருந்ததி.. புள்ளைக்கு சீயக்காய் போட்டு குளிக்கவைச்சு வெளியே கூட்டிட்டு வந்துடு.." பெண்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டனர்..

"தாய்மாமன் எடுத்துக் கொடுக்கிற புடவையை தான் கட்டணும்..! உன் அண்ணன் எங்கே..?"

இதோ அடுத்த பிரச்சினை..

"அதான் அண்ணங்காரன் வந்து சண்டை போட்டுக்கிட்டு போய்ட்டானே.."

"சரி அந்த ஸ்தானத்துல இருக்குற யாராவது ஒருத்தரை கூப்பிடுங்க.."

"கனகா உன் புருஷனை கூப்பிடு.."

"ம்கூம்.."

"சுந்தரண்ணா இல்லையா..?"

"சரி இருங்க நான் போய் என் புருஷன கூட்டிட்டு வரேன்.."

"இல்ல பரவால்ல இருக்கட்டும்.. ஏம்மா.. நீங்க எடுத்து வச்சதையே குழந்தைக்கு போட்டு கூட்டிட்டு வாங்க.. சடங்கு வைக்கும்போது உன் அண்ணனை எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடு.. அந்த நேரத்துல தாய்மாமன்தான் சீர் செய்யணும்.. கவுரவமெல்லாம் பார்க்கற நேரமில்ல இது.." பெரியவள் ஒருத்தி..

தாவணி பாவாடையையும் அதற்கு பொருத்தமாக சின்னதாய் கம்மல் மெல்லிய செயின் கைகளுக்கு இரண்டு வளையல் காலுக்கு கொலுசு..‌ என அவன் வாங்கி தந்திருந்த நகைகளை மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அருந்ததி..

பருவமடைந்தால் அழகு கூடுமா என்ன..?

அம்மாடியோவ்.. தங்க விக்ரகம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள்.. இன்று நேரில் கண்டு கொண்டாள்..!

பன்னென்டு வயசுல இந்த பொண்ணு இத்தனை அழகா நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறாளே.. ஒரு பக்கம் பூரிப்பு.. மறுபக்கம் இந்த அழகை வைத்துக் கொண்டு எப்படி பொல்லாத உலகத்தை எதிர்கொள்ளப் போகிறாளோ என்ற கவலை அந்த தாய்க்கு..

விரற்கடையளவு சரிகை வைத்த சந்தனநிற சில்க் காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் அருந்ததி..

மகளுக்கு மட்டும் பூ வைத்த போது.. முல்லை சரத்தை அவளிடம் தந்து "பூ வைச்சிக்கோ அருந்ததி" என்றான் அவன்..

அங்கிருந்த பெண்கள் அவனை அன்னியமாக பார்த்தாலும் வம்பு பேசி யார் மனதையும் புண்படுத்தவில்லை.

"பாத்ரூம் போறதா இருந்தா கூட அம்மாவ கூட்டிகிட்டு தான் போகணும்.."

"பக்கத்துல வேப்பிலை இரும்பு எதையாவது வச்சுக்கோ.."

"தேதி கிழமை.. நேரம் குறிச்சு ஜாதகம் கணிக்கனும். ருதுவான ஜாதகம் ரொம்ப முக்கியம்."

என்று ஆளாளுக்கு அறிவுரைகள்..

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்செடுத்து கீழே அமர்ந்தாள் அருந்ததி..

ஒன்பதாம் நாளில் ஐயர்‌ வந்து ஓமம் வளர்த்து.. மந்திரங்களை உச்சரித்து.. சந்திரமதியையும் உச்சரிக்க சொல்லி பூஜை செய்து புண்ணியாஜனம் முடித்து வீடெங்கிலும் சாம்பிராணி புகையோடு தீர்த்தம் தெளித்துவிட்டு சென்றார்..

பதினோராம் நாளில் சடங்கு..

அந்த தெருவின் குட்டி குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவருமே வந்திருந்தனர்..

கிட்டத்தட்ட ஒரு 50 பேர்..

மோத்தி கட்டளைக்கு கீழ்படிந்து உள்ளறைக்குள் தங்கிவிட்டான்..

வாசலில் பந்தல் போட்டு..

பச்சரிசி பூ பழம் வெத்தலை பாக்கு மேல் மனை போட்டனர்.. இரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன..

இளம் ரோஜா நிற சர்தோசி வேலைபாடுகள் கொண்ட லெஹங்கா அணிந்திருந்தாள் சந்திரமதி

"தாய்மாமன் எங்க..? அவர் தானே வந்து மாலை போடணும்.."

கலங்கினாள் அருந்ததி..

உறவுகள் சரியில்லை எனும் போது.. சமரச பேச்சுவார்த்தை நடத்தி மட்டும் என்ன பலன்..

கலக்கத்தோடு ரிஷியை பார்க்க விழிகளை மூடி திறந்து தைரியம் சொன்னான் அவன்..

"அட என்னப்பா..? என்ன அருந்ததி.. உங்க அண்ணன் வரலையா.." என்று முடிக்கும் முன்.. வாசலில் கார் ஹாரன் சத்தம்..

"தாய்மாமன் வந்தாச்சு" என்றான் ரிஷி..

அருந்ததி எட்டிப் பார்த்தாள்..

நந்தகுமாரனும் மனைவியும் கையில் தட்டுக்களோடு வந்து கொண்டிருந்தனர்..

ஆம்.. அந்த நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவில்லை என்று சண்டை போட்ட அதே நந்தகுமார் தான்..

ரிஷி தான் போனில் அழைத்து வர சொல்லியிருந்தான்..

"இவர நான் உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..‌ ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி இருக்கீங்க தானே..!" ரிஷி சொல்லவும்..

ஒரு கணம் திணறினாலும் அடுத்த கணம் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"வாங்க வாங்க" என்று மன நிறைவோடு அவர்களை வரவேற்றாள் அருந்ததி..

"மன்னிச்சிடுமா அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்..! என்னை உன் அண்ணன நெனச்சுக்கோ.. ரிஷி சாருக்காக மட்டுமில்ல உனக்காகவும்தான் வந்தேன்.. ஏதோ நான் செஞ்ச தப்புக்கு ஒரு சின்ன கைமாறு.."

அருந்ததிக்கு தலை சுற்றியது..

இருபத்தி நாலு மணி நேரமும் மனிதர்கள் கடுமையாய் இருப்பதில்லை..

மழை பொழியும் மேகம் போல் இங்கு எல்லோருக்குள்ளும் மனிதாபிமானமும் ஈரப்பதமும் உண்டு.. சில மிருகங்களை தவிர..

வறண்ட பாலையில் அரிதாக பெய்யும் மழை போல் அந்த மனிதநேயம் என்றோ ஒரு நாள் வெளிப்படுவதுதான் பிரச்சினை.

சில நேரங்களில் சில மனிதர்கள்..

பதினொரு வகையான வரிசை தட்டி வைத்து சந்திரமதியின் கழுத்தில் சம்மங்கி ரோஜா மாலையை சூட்டினான் நந்தகுமார்..

"நகையை எடுத்து பொண்ணு கழுத்துல போடுங்க.." யாரோ ஒருவர் சொல்ல..

நகைப்பெட்டியை திறந்து ஐந்து சவரன் சங்கிலியை சந்திரமதியின் கழுத்தில் போட்டான்..‌

அடேங்கப்பா.. அத்தனை பேர் விழிகளும் விரிந்தன..

"ஐயோ என்ன அப்படி பாக்காதம்மா.. உன் பொண்ணுக்கு கழுத்துல நகைய போட்டது மட்டும்தான் நான்.. வாங்கி தந்தது ரிஷி தான்.." அருந்ததிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் நந்தகுமார்..

மாலையோடு மனையில் அமர வைக்கப்பட்டாள் சந்திரமதி..

எந்தவித பேதமுமின்றி ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தார்கள்..

பெண்களும் பெரியவர்களும் வந்து நலுங்கு வைத்து சந்திரமதியை பூத்தூவி வாழ்த்தினார்கள்..

கனகா நலுங்கு வைத்தவர்களுக்கு தாம்பூலப் பை தந்தாள்..

சீரும் சிறப்புமாக தன் மகள் கொண்டாடப் படுவதில் அருந்ததிக்குள் நெகிழ்ச்சி.. விழிகளில் ஆனந்த கண்ணீர்..

அவன் வாங்கி தந்த புடவையை உடுத்தி இருந்தாள் அருந்ததி..

அழகு அம்மாயி என்று காதோரம் கிசுகிசுத்தவன் நேரம் கிடைக்கும் போது அவளை தன்னருகில் இழுத்து வைத்து.. ஒரே ஒரு போட்டோ என்று தன்னோடு சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டான்..

சிலிர்க்கவும் சில்லிடவும் முடியாமல் கூட்டத்தில் ஒரு தவிப்பு..

நீங்களும் தான் இந்த பேண்ட் சர்ட்ல அட்டகாசமா இருக்கீங்க.. கிடைத்த இடைவெளியில் சொல்லிவிட்டு போனாள் அருந்ததி..

இருவரும் அவ்வப்போது மோத்தி எங்கே தனிமையில் தவிக்க போகிறானோ என்ற கவலையில் அறைக்குள் சென்று அவ்வப்போது அவனை கொஞ்சி பேசி விட்டு தான் வந்தனர்..

மோத்தி அன்பையும் மனிதர்களையும் அதிகமாக தேடுபவனாயிற்றே..

எழுந்து கும்பிட்டு அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள் சந்திரமதி..

அடுத்த அரை மணி நேரத்தில் கேட்டரிங் சர்வீஸ் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சேர் பென்ச்களை பரப்பி.. வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

வெஜிடபிள் பிரியாணி சப்பாத்தி பன்னீர் குருமா.. ஊத்தப்பம்.. இட்லி.. சட்னி.. சாம்பார்.. பிரெட் அல்வா.. சேமியா கேசரி..‌ பாதாங்கீர் ஐஸ்கிரீம்..

உண்டு முடித்தது போக மிச்சத்தை பொட்டலங் கட்டிக்கொண்டு அனைவருமாக விடைபெற்று சென்றனர்.

"என்ன அருந்ததி இப்ப நீ ஹாப்பியா..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டவனை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அருந்ததி..

"என்னடி இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு." அவசரமாக மகரிஷி அவள் கண்ணீரை துடைக்க சட்டென அவன் கால்களில் விழுந்து விட்டாள் அவள்..

"அய்யோ.. பொம்மா..!" பதறி கொண்டு அவளை தூக்கி நிறுத்தினான் ரிஷி..

அவன் கரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்த பார்வையில் நன்றி உணர்வு நிறைந்து ததும்பி வழிந்தது..

எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என்று மலைத்து போயிருந்தவள் இந்த நொடி மனம் நிறைந்து மகிழ்ந்து போயிருந்தாள்..

தொடரும்..
சொல்ல வார்த்தைகள் இல்லை ரிஷி நீ உண்மையில் ரொம்ப Great தான் கோங்குரா 😍😍😍🙋❤️
 
New member
Joined
Jun 2, 2024
Messages
10
அற்புதமான மனிதன் ரிஷி.. கலக்கிட்ட ரிஷி... ஒரு அழகான மஞ்சள் நீராட்டு விழாவை நேரில் பார்த்த திருப்தி எங்களுக்கு.. அந்த அளவிற்கு கீத் தின் எழுத்தில் ஒரு உயிரோட்டம்.. அருமை கீத்..
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
53
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
48
சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!

சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்‌.

அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும் பட்டுக்காத.. எதையும் தொட்டுடாதே..‌ சாமி படத்து பக்கம் போயிடாதே.. என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்களோடு வீட்டின் பின் பக்கம் பழைய சாமான்களை போடும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டாள்.. அந்த அறையின் ஒட்டடைகளும் துருப்பிடித்த இரும்பு சாமான்களும்.. செல்லரித்த மர சாமான்கள் அகற்றப்பட்டவரை ஏதோ ஒரு வகையில் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தாள்‌..

ஏதோ ஒரு நாளில் அண்ணியும் அண்ணியின் அம்மா சங்கரியும் வேறு ஒரு வயதான பாட்டியும் வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றியதாக ஞாபகம்.. நல்லா சாப்பிடணும்.. இப்ப என்ன சாப்பிடுறியோ அதுதான் காலாகாலத்துக்கும் உனக்கு பலம் கொடுக்கும்.. என்று அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.. ஆனால் வகை தொகையாக வயதுக்கு வந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு உணவுகள் எதுவும் தனக்கு தரப்பட்டதாக ஞாபகம் இல்லை..

அதே சோறு குழம்பு பொரியல்.. முட்டை கூட அரிதுதான்..!

தான் வயதுக்கு வந்ததில் வீட்டில் யாரும் சந்தோஷப்பட்டதாக கூட நினைவில்லை..!

தீட்டு.. தீட்டு தீட்டு.. அதிகபட்சமாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுதான்..

அப்படி ஒரு நிலை தன் மகளுக்கு கூடாது.. தனக்கு கிடைக்காத அத்தனை செல்வ சிறப்புகளும் அவளுக்கு கிடைக்கட்டும்.. குழந்தை பருவம்.. வயதுக்கு வரும் பிராயம்.. திருமண காலகட்டம் என அனைத்து நிலைகளிலும் சந்திரமதிக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகளிலும் சந்தோஷங்களிலும் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று அருந்ததி முடிவெடுத்திருக்கிறாள்..

"நீ வேலைக்கு போக வேண்டாம் அருந்ததி.. வீட்ல இருந்து சந்திராம்மாவை பாத்துக்கோ.." மகரிஷியின் கட்டளை இது..!

அவள் எழுதி தந்ததை லிஸ்ட் போட்டு வாங்கி வந்திருந்தான் மகரிஷி..

கருப்பு உளுந்தை பச்சரிசியோடு சேர்த்து பொடித்து கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து.. நல்லெண்ணையோடு சேர்த்து இரும்பு உருளியில் எண்ணெய் பிரிய கிளறி உளுந்தங்களி செய்து வைத்திருந்தாள்..

காலையில் எழுந்தவுடன் சந்திரமதிக்கு நல்லெண்ணெயும் நாட்டு முட்டையும் கொடுப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் அருந்ததி..

மறுக்க மறுக்க அதட்டி மிரட்டி வாயில் திணித்து.. குமட்டி துப்பினா கொன்னுடுவேன் என்று விழுங்க வைப்பதற்குள் அவளுக்கே நாலு முட்டைகள் தேவைப்படுமளவு சத்து வற்றிப் போகும்..

உளுந்தங்களியை சின்ன சின்னதாய் உருட்டி பத்து உருண்டைகளை விழுங்க வைத்தாள்..

அதன் பிறகு சிகப்பு கவுனி அரிசி புட்டும் தேங்காய் துருவலும்..

காலை உணவுக்கு மதிய உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வெட்டி வைத்த பழக்கலவை..

மதியத்தில் சாதம் சாம்பார்..ஏதேனும் குழம்பு.. கூட்டு பொரியல் என சரிவிகித உணவு.. மாலையில் சத்துமாவு கஞ்சி.. இரவு உணவுக்கு பின் பால்.. என முடிந்தவரை பார்த்து பார்த்து சத்தான ஆகாரமாக தந்து மகளை பொன் போல் கவனித்துக் கொண்டாள்..

அவ்வப்போது நாப்கின் மாற்றிக் கொள்ளவும்.. உள்ளாடைகளை துவைத்து கொள்ளவும் உட்புறமிருந்த பாத்ரூம் இருவருக்குமே சற்று வசதியாக இருந்தது..

நல்லவேளை அருந்ததிக்கு வயிறுவலி இருக்கவில்லை.. இரத்த போக்கும் கூட பொட்டு போல் கண்ணில் காட்டியது.. அவ்வளவுதான்..

"அருந்ததி.. விசேஷத்துக்கு அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்களை கூப்பிடலையா..?"

"என்ன ரிஷி பேசுறீங்க..? அவங்கதான் யாருமே என் கூட பேசுறதில்லையே.. திடீர்னு நான் போய் கூப்பிட்டா எப்படி வருவாங்க..!"

"கூப்பிட வேண்டியது உன்னோட கடமை.. வர்றதும் வராததும் அவர்களுடைய இஷ்டம்.. நம்ம வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது இவ்வளவு நாளா பழகிட்டு இந்த பொண்ணு நம்மள கூப்பிடவே இல்லையேன்னு அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது.. அது நமக்கு நல்லதில்லை..!" மகரிஷி சொன்னது சரியாக பட்டாலும்.. என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு.. எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க என்னவோ போல் தயக்கமாக இருந்தது..

"கனகாக்கா.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா.."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.." என்றபோதும் கனகாவின் முகம் கனியவில்லை.

"மூணாம் நாள் தண்ணி ஊத்தறோம் நீங்க கண்டிப்பா வரணும்..!"

"ம்ம்.. வந்துடறேன்.." அந்த வார்த்தைகள் மனதிலிருந்து வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு.. முகம் வாடிப்போனது..

அக்கா மனசுல எதுவும் "வச்சுக்காதக்கா.. அன்னைக்கு.."
என்று அருந்ததி ஆரம்பிக்க..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு.. விடு.. அப்புறம் உட்காரு டீ காபி ஏதாவது சாப்பிடறியா..?"

"இல்லக்கா வேண்டாம் நேரம் ஆச்சு நான் போகணும்.."

"அதுவும் சரிதான்.. போய் புள்ளைய பாரு..!"

அக்கம் பக்கத்தில் மற்ற வீடுகளிலும் பெண்களை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அவர்கள் குரலுக்கும் சரி என்று சொன்ன தொனிக்கும் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை..

ஐந்து அல்லது ஏழு பேராவது வேண்டும் என்று ரிஷி சொல்லி இருந்தானே..!

சொந்தம் தான் சூனியமாகி போனது.. அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட தன்னை ஒதுக்கி கைவிட்டு விட்டார்களா..! புறக்கணிப்பில் புழுங்கினாள் துக்கத்தில் நெஞ்சடைத்தது..

சந்திரமதியின் அளவை கேட்டுக்கொண்டு ஒரு தாவணி பாவாடை செட் ஒரு லெஹெங்கா செட்.. ஒரு அனார்கலி சுடிதார் செட்.. அத்தோடு அவனுக்கு தெரிந்தவரை ஒப்பனைக்கு தேவையான சில பொருட்கள் என வாங்கி வந்திருந்தான்..

கூடத்தில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

அருந்ததியின் எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் ரிஷி..

ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

நகையெல்லாம் எதுக்கு வாத்தியாரே..

ப்ச் நோரு மொய்.. என் சந்திராம்மாவுக்கு நான் செய்யறேன்.. நீ தலையிடாதே.."

"ரொம்ப கடங்காரியாக்கறீங்க.."

வசூல் பண்ணிக்கறேன்.. உனக்கும் நகைகள் இருக்கு"

"வேண்டாம் ரிஷி.."

"நான் வேண்டாமா.."

"ஹான்.."

"நான் வாங்கித் தர்ற ஜிவல்ஸ் வேண்டாமா..?"

"அ.. அப்படி இல்ல.."

"சந்திரமதிக்கு வாங்கினது போல இன்னொரு செட்.. வேண்டாம்னா திருப்பி தந்திடு.."

"சரி தந்துடறேன்"

"போட்டுக்கிட்டு திருப்பி குடு.. ஃபங்ஷனுக்காக இரவல் வாங்கினதா நினைச்சிக்க.."

அருந்ததி சிரித்தபடி அமைதியாக உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நல்லா இருக்காடி.. ஏதோ எனக்கு தெரிஞ்ச கலர் பார்த்து வாங்கினேன்..!" என்றவனிடம் நிறைவாக புன்னகைத்தாள்‌.

"இவ்வளவு வாங்கிட்டு வந்ததே பெரிய விஷயம்."

"அப்படி சொல்லாதே.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு இல்லனா மாத்திக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.."

"இதைவிட அழகா என்னத்த வாங்க முடியும்..! இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு.. அருந்ததிக்கும் பிடிக்கும்..‌"

"அ.. அப்புறம் இது உனக்கு ஜேஜம்மா..! என்று ஒரு பார்சலை எடுத்து அவளிடம் தந்தான்.."

"இது என்னது.." என்றபடியே பிரித்துப் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்..

ஆகாய வண்ணத்தில் தங்கச் சரிகைகள் நிறைந்த ரோஜா நிற பார்டருடன் கூடிய பட்டுப் புடவை..

"இதுவும் சந்திரமதிக்கா..?"

"இது உனக்குடி.."

"ஐயோ விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.. எனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா பட்டு புடவை..‌ இருக்கிற புடவையில் ஏதாவது ஒண்ணு கட்டிக்கிட்டா போதாதா..!"

"போதாது..! உன் பொண்ணு பங்ஷன்ல நீயும் நல்லா உடுத்திக்கிட்டு அழகா சபையில நிக்கணும்.. அத நான் பாக்கணும்.."

"என் பொண்ணுக்கு தான் பங்க்ஷன்.. எனக்கு இல்லை.. இந்த புடவையோட மதிப்பு நீங்க வாங்கிட்டு வந்த எல்லா டிரஸ்சோட மதிப்பை விட அதிகமா இருக்கும் போலிருக்கு.."

"பொண்ணு வயசுக்கு வந்துட்டா அம்மா கிழவியாகிட்டதா அர்த்தம் இல்லை.. உனக்கு இன்னும் முப்பது கூட முடியல.. மனசுல மூப்பை சுமக்காதே.."

"என் வயசு உங்களுக்கு எப்படி தெரியும்.."

"அருந்ததியை பற்றி தெரிஞ்சுக்க சந்திரமதிங்கற google information engine என்கிட்ட இருக்குதே..!" கண் சிமிட்டினான் அவன்..

"இந்த புடவையை கட்டிட்டு நான் வந்து ஃபங்ஷன்ல நின்னா எல்லாரும் என்ன பேசுவாங்களோ என்னவோ..!"

"ஆமா அதுவும் சரிதான்.. கண்டிப்பா தப்பா பேசுவாங்க அதனால ஒன்னு பண்ணு..‌ பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய புடவை ஏதாவது இருக்கும்..‌ அதை கட்டிக்கிட்டு ஃபங்ஷன்ல வந்து திருஷ்டி பொம்மை மாதிரி தனியா நில்லு.. எல்லாரும் உன்னை பாராட்டிட்டு போவாங்க.."

"கோங்ரா..?" அருந்ததி முறைத்தாள்..

"தருவாத்தா ஏமிரா..? இது நம்ம பொண்ணோட சடங்கு.." என்றதும் அருந்ததி அவனை அர்த்தத்துடன் ஏறிட்டு பார்த்தாள்..

"ஐ மீன்.. நம்ம வீட்டு பொண்ணுக்கான சடங்கு.. எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணோட அம்மா அழகா தெரியனும்.."

"அதென்ன பொண்ணோட அம்மா அழகா தெரியனும்..?"

"அது அப்படித்தான்..! சரி அதை விடு..‌ ஃபங்ஷன்ல ஒம்பது இல்லனா பதினொரு தட்டு சீர் வெச்சிடலாம்.."

அருந்ததி பெருமூச்சு விட்டாள்..

"இதெல்லாம் தாய்மாமன் செய்யணும்.. நாமளே வாங்கி செஞ்சுக்கறதுக்கு எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம்."

"தாய்மாமன் இல்லாத குழந்தைகளுக்கு சடங்கு வைக்கறதே இல்லையா..! சொந்தக்காரங்களை எதிர்த்து கலப்பு திருமண பண்ணிக்கிட்டு போறவங்க தன்னோட பொண்ணு வயசுக்கு வந்தா சடங்கு செய்யறதில்லையா..? ஏதாவது ஒரு வழி பிறக்கும் சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. கவலைய முகத்தில் காட்டாத சந்தோஷமா இரு..!"

ம்ம்.. என்ற போதும் அருந்ததியின் முகம் கனியவில்லை..

மூன்றாம் நாள்..

வீட்டை சுத்தம் செய்து காலையில் நல்ல நேரம் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வரவுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

யாரும் வரவில்லை

"நான் சொல்லல.. யாரும் வர மாட்டாங்க.." அருந்ததியின் முகம் சோகத்தில் கருப்படித்து போனது..

"டென்ஷன் ஆகாத அருந்ததி.. கொஞ்சம் பொறுமையா இரு.. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்.. அட்லீஸ்ட் ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் யாரையாவது வர சொல்லுவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு" அவன் போனை எடுத்த நேரத்தில்..

இங்கே..‌ தலையில் பூவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டிருந்தாள் கனகா..

"ஏய் டிபன் கூட செய்யாம எங்கடி கிளம்பிட்ட.." சத்யராஜ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

"அருந்ததியோட பொண்ணு சந்திரமதி வயசுக்கு பெரிய மனுஷி ஆகிட்டால்ல.. அதான் மூணுக்கு தண்ணி ஊத்த கூப்பிட்டுருந்தாங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.."

"அந்த நடத்தக் கெட்டவ வீட்டுக்கு போக கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருந்தேனா இல்லையா.."

"அடச்சீ நல்ல காரியம் நடக்கும்போது அபசகுணமா பேசிக்கிட்டு.. போயா அந்த பக்கம்.. வீட்டுக்கு வந்து கண்டிப்பா வரணும்னு அழைச்சிட்டு போயிருக்கா.. போகலைனா நாளைக்கு அவ மூஞ்சில எப்படி முழிக்கறதாம்.."

"அவ மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்றேன்?? நீ என்னமோ அலங்காரம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரேங்குற.."

"அக்கம் பக்கத்து வீட்டுல விசேஷம்னா போகாம இருக்க முடியுமா.. நாளைக்கும் நமக்கும் நல்லது கெட்டதுக்கு ஆளுங்க வர வேணாமா..?

அவ இங்க வந்து ஒண்ணும் கிழிக்க போறதில்ல.. அவள முதல்ல யாரு வீட்டுக்குள்ள சேக்க போறா.. உன் வேலைய மயிர பாரு.. மரியாதையா இங்கிருந்து போய்டுன்னு கழுதைதான அது. எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடி அவ வீட்டு வாசப்படி மிதிக்க வெக்கமாயில்லையா உனக்கு..?

வெக்கமா இல்ல.. என்னங்கற.. அக்கம்பக்கத்து வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சண்டை போட்டுக்கிட்டாலும் நல்லதுகெட்டதுன்னா ஒன்னு எல்லாரும் சேர்ந்துக்க தான் வேணும்.. இதெல்லாம் உனக்கு புரியாது போ.. என்றபடி
கனகா வீட்டிலிருந்து புறப்பட..‌

"இந்தா.. என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறவளா இருந்தா இந்த லுங்கிய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க கூடாது நீ..!"

பேண்ட்டை தாண்டி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அவள் நடந்த வாசல் பக்கமாக போட்டான் சத்யராஜ்..

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த கனகா காலால் லுங்கியை தூக்கியடிக்க அவன் முகத்தில் வந்து விழுந்தது அது..

"அத தூக்கி அழுக்கு கூடையில் போட்டுட்டு சாயந்திரம் வந்து துவைச்சு போடு.. மதிக்கணுமாமே.. வேணும்னா தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் வா..!" என்றபடி வெளியே வந்தவள் தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு சென்றிருந்தாள்..

"பேசாம நானும் என் குழந்தையை கூட்டிட்டு போய் தண்ணி ஊத்திடறேன்.." என்று உள்ளே செல்லப் போனவளை நிறுத்தி வாசலை காட்டினான் ரிஷி..

கொலுசும் வளையலுமாக.. புடவை சரசரக்க மஞ்சள் முகமும் தலை நிறைய பூவுமாக மங்களகரமாக வந்து கொண்டிருந்தனர் பெண்கள்..

அருந்ததிக்கு கண்கள் கலங்கி போனது..!

"என்னடி நல்ல நாள் அதுவுமா கண்ணு கலங்கிட்டு நிக்கிற.."

"வ.. வர மாட்டீங்களோனு நெனச்சேன்.."

"அது எப்படி வராம போய்டுவோம் நாங்க பார்க்க வளர்ந்த புள்ள.. சந்திரமதி எங்க வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் தனியா விட்டுட மாட்டோம்.." என்றபடியே வீட்டுக்குள் வந்தனர் அவர்கள்..

சந்திரமதியின் வகுப்பு தோழி திவ்யாவின் தாயும் பாட்டியும் கூட வந்திருந்தார்கள்..

"சும்மா சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேரு தண்ணி ஊத்துனா போதும்.."

வீட்டுக்கு வெளியிலிருந்த குளியலறைக்கு அழைத்துவரப்பட்டாள் சந்திரமதி..

பித்தளை அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் ரோஜாவும் பன்னீரும் கலந்தனர்.. மஞ்சளும் சந்தனமும் தனித்தனியாக குழைத்து கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன..

சல்லடையில் தங்கம் போடணும்.. வச்சிருக்கியா அருந்ததி என்று யாரோ ஒரு பெண் கேட்க திணறி போனாள் அருந்ததி..

தன் கையிலிருந்த மோதிரத்தை கழட்டி அவளிடம் தந்தான் ரிஷி..

சல்லடையில் ஒரு பொட்டு தங்கமும் ரோஜா பூக்களும் தூவப்பட்டது..

தலைக்கு நல்லெண்ணெய் வைத்து மேனியெங்கும் சந்தனம் பூசி.. அவள் கைகளில் மஞ்சள் பூசி.. ஒவ்வொருவராக வந்து ஐந்து பெண்கள் சின்ன பித்தளைக்கூடத்தில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினர்..

ஒரு இளவரசி போல் குளிக்க வைக்கப்பட்டாள் சந்திரமதி..

"போதும் அருந்ததி.. புள்ளைக்கு சீயக்காய் போட்டு குளிக்கவைச்சு வெளியே கூட்டிட்டு வந்துடு.." பெண்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டனர்..

"தாய்மாமன் எடுத்துக் கொடுக்கிற புடவையை தான் கட்டணும்..! உன் அண்ணன் எங்கே..?"

இதோ அடுத்த பிரச்சினை..

"அதான் அண்ணங்காரன் வந்து சண்டை போட்டுக்கிட்டு போய்ட்டானே.."

"சரி அந்த ஸ்தானத்துல இருக்குற யாராவது ஒருத்தரை கூப்பிடுங்க.."

"கனகா உன் புருஷனை கூப்பிடு.."

"ம்கூம்.."

"சுந்தரண்ணா இல்லையா..?"

"சரி இருங்க நான் போய் என் புருஷன கூட்டிட்டு வரேன்.."

"இல்ல பரவால்ல இருக்கட்டும்.. ஏம்மா.. நீங்க எடுத்து வச்சதையே குழந்தைக்கு போட்டு கூட்டிட்டு வாங்க.. சடங்கு வைக்கும்போது உன் அண்ணனை எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடு.. அந்த நேரத்துல தாய்மாமன்தான் சீர் செய்யணும்.. கவுரவமெல்லாம் பார்க்கற நேரமில்ல இது.." பெரியவள் ஒருத்தி..

தாவணி பாவாடையையும் அதற்கு பொருத்தமாக சின்னதாய் கம்மல் மெல்லிய செயின் கைகளுக்கு இரண்டு வளையல் காலுக்கு கொலுசு..‌ என அவன் வாங்கி தந்திருந்த நகைகளை மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அருந்ததி..

பருவமடைந்தால் அழகு கூடுமா என்ன..?

அம்மாடியோவ்.. தங்க விக்ரகம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள்.. இன்று நேரில் கண்டு கொண்டாள்..!

பன்னென்டு வயசுல இந்த பொண்ணு இத்தனை அழகா நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறாளே.. ஒரு பக்கம் பூரிப்பு.. மறுபக்கம் இந்த அழகை வைத்துக் கொண்டு எப்படி பொல்லாத உலகத்தை எதிர்கொள்ளப் போகிறாளோ என்ற கவலை அந்த தாய்க்கு..

விரற்கடையளவு சரிகை வைத்த சந்தனநிற சில்க் காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் அருந்ததி..

மகளுக்கு மட்டும் பூ வைத்த போது.. முல்லை சரத்தை அவளிடம் தந்து "பூ வைச்சிக்கோ அருந்ததி" என்றான் அவன்..

அங்கிருந்த பெண்கள் அவனை அன்னியமாக பார்த்தாலும் வம்பு பேசி யார் மனதையும் புண்படுத்தவில்லை.

"பாத்ரூம் போறதா இருந்தா கூட அம்மாவ கூட்டிகிட்டு தான் போகணும்.."

"பக்கத்துல வேப்பிலை இரும்பு எதையாவது வச்சுக்கோ.."

"தேதி கிழமை.. நேரம் குறிச்சு ஜாதகம் கணிக்கனும். ருதுவான ஜாதகம் ரொம்ப முக்கியம்."

என்று ஆளாளுக்கு அறிவுரைகள்..

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்செடுத்து கீழே அமர்ந்தாள் அருந்ததி..

ஒன்பதாம் நாளில் ஐயர்‌ வந்து ஓமம் வளர்த்து.. மந்திரங்களை உச்சரித்து.. சந்திரமதியையும் உச்சரிக்க சொல்லி பூஜை செய்து புண்ணியாஜனம் முடித்து வீடெங்கிலும் சாம்பிராணி புகையோடு தீர்த்தம் தெளித்துவிட்டு சென்றார்..

பதினோராம் நாளில் சடங்கு..

அந்த தெருவின் குட்டி குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவருமே வந்திருந்தனர்..

கிட்டத்தட்ட ஒரு 50 பேர்..

மோத்தி கட்டளைக்கு கீழ்படிந்து உள்ளறைக்குள் தங்கிவிட்டான்..

வாசலில் பந்தல் போட்டு..

பச்சரிசி பூ பழம் வெத்தலை பாக்கு மேல் மனை போட்டனர்.. இரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன..

இளம் ரோஜா நிற துணியில் அடர்த்தியான வெள்ளி சர்தோசி வேலைபாடுகள் கொண்ட லெஹங்கா அணிந்திருந்தாள் சந்திரமதி

"தாய்மாமன் எங்க..? அவர் தானே வந்து மாலை போடணும்.."

கலங்கினாள் அருந்ததி..

உறவுகள் சரியில்லை எனும் போது.. சமரச பேச்சுவார்த்தை நடத்தி மட்டும் என்ன பலன்..

கலக்கத்தோடு ரிஷியை பார்க்க விழிகளை மூடி திறந்து தைரியம் சொன்னான் அவன்..

"அட என்னப்பா..? என்ன அருந்ததி.. உங்க அண்ணன் வரலையா.." என்று முடிக்கும் முன்.. வாசலில் கார் ஹாரன் சத்தம்..

"தாய்மாமன் வந்தாச்சு" என்றான் ரிஷி..

அருந்ததி எட்டிப் பார்த்தாள்..

நந்தகுமாரனும் மனைவியும் கையில் தட்டுக்களோடு வந்து கொண்டிருந்தனர்..

ஆம்.. அந்த நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவில்லை என்று சண்டை போட்ட அதே நந்தகுமார் தான்..

ரிஷி தான் போனில் அழைத்து வர சொல்லியிருந்தான்..

"இவர நான் உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..‌ ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி இருக்கீங்க தானே..!" ரிஷி சொல்லவும்..

ஒரு கணம் திணறினாலும் அடுத்த கணம் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"வாங்க வாங்க" என்று மன நிறைவோடு அவர்களை வரவேற்றாள் அருந்ததி..

"மன்னிச்சிடுமா அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்..! என்னை உன் அண்ணன நெனச்சுக்கோ.. ரிஷி சாருக்காக மட்டுமில்ல உனக்காகவும்தான் வந்தேன்.. ஏதோ நான் செஞ்ச தப்புக்கு ஒரு சின்ன கைமாறு.."

அருந்ததிக்கு தலை சுற்றியது..

இருபத்தி நாலு மணி நேரமும் மனிதர்கள் கடுமையாய் இருப்பதில்லை..

இங்கு எல்லோருக்குள்ளும் மனிதாபிமானமும் ஈரப்பதமும் உண்டு.. சில மிருகங்களை தவிர..

ஆனால் என்ன..? வறண்ட பாலையில் அரிதாக பெய்யும் மழை போல் அந்த மனிதநேயம் என்றோ ஒரு நாள் வெளிப்படுவதுதான் பிரச்சினை.

சில நேரங்களில் சில மனிதர்கள்..

பதினொரு வகையான வரிசை தட்டி வைத்து சந்திரமதியின் கழுத்தில் சம்மங்கி ரோஜா மாலையை சூட்டினான் நந்தகுமார்..

"நகையை எடுத்து பொண்ணு கழுத்துல போடுங்க.." யாரோ ஒருவர் சொல்ல..

நகைப்பெட்டியை திறந்து ஐந்து சவரன் சங்கிலியை சந்திரமதியின் கழுத்தில் போட்டான்..‌

அடேங்கப்பா.. அத்தனை பேர் விழிகளும் விரிந்தன..

"ஐயோ என்ன அப்படி பாக்காதம்மா.. உன் பொண்ணுக்கு கழுத்துல நகைய போட்டது மட்டும்தான் நான்.. வாங்கி தந்தது ரிஷி தான்.." அருந்ததிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் நந்தகுமார்..

மாலையோடு மனையில் அமர வைக்கப்பட்டாள் சந்திரமதி..

எந்தவித பேதமுமின்றி ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தார்கள்..

பெண்களும் பெரியவர்களும் வந்து நலுங்கு வைத்து சந்திரமதியை பூத்தூவி வாழ்த்தினார்கள்..

கனகா நலுங்கு வைத்தவர்களுக்கு தாம்பூலப் பை தந்தாள்..

சீரும் சிறப்புமாக தன் மகள் கொண்டாடப் படுவதில் அருந்ததிக்குள் நெகிழ்ச்சி.. விழிகளில் ஆனந்த கண்ணீர்..

அவன் வாங்கி தந்த புடவையை உடுத்தி இருந்தாள் அருந்ததி..

அழகு அம்மாயி என்று காதோரம் கிசுகிசுத்தவன் நேரம் கிடைக்கும் போது அவளை தன்னருகில் இழுத்து வைத்து.. ஒரே ஒரு போட்டோ என்று தன்னோடு சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டான்..

சிலிர்க்கவும் சில்லிடவும் முடியாமல் கூட்டத்தில் ஒரு தவிப்பு..

நீங்களும் தான் இந்த பேண்ட் ஷர்ட்ல அட்டகாசமா இருக்கீங்க.. கிடைத்த இடைவெளியில் சொல்லிவிட்டு போனாள் அருந்ததி..

இருவரும் அவ்வப்போது மோத்தி எங்கே தனிமையில் தவிக்க போகிறானோ என்ற கவலையில் அறைக்குள் சென்று அவ்வப்போது அவனை கொஞ்சி பேசி விட்டு தான் வந்தனர்..

மோத்தி அன்பையும் மனிதர்களையும் அதிகமாக தேடுபவனாயிற்றே..

எழுந்து கும்பிட்டு அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள் சந்திரமதி..

அடுத்த அரை மணி நேரத்தில் கேட்டரிங் சர்வீஸ் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சேர் பென்ச்களை பரப்பி.. வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

வெஜிடபிள் பிரியாணி சப்பாத்தி பன்னீர் குருமா.. ஊத்தப்பம்.. இட்லி.. சட்னி.. சாம்பார்.. பிரெட் அல்வா.. சேமியா கேசரி..‌ பாதாங்கீர் ஐஸ்கிரீம்..

உண்டு முடித்தது போக மிச்சத்தை பொட்டலங் கட்டிக்கொண்டு அனைவருமாக விடைபெற்று சென்றனர்.

"என்ன அருந்ததி இப்ப நீ ஹாப்பியா..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டவனை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அருந்ததி..

"என்னடி இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு." அவசரமாக மகரிஷி அவள் கண்ணீரை துடைக்க சட்டென அவன் கால்களில் விழுந்து விட்டாள் அவள்..

"அய்யோ.. பொம்மா..!" பதறி கொண்டு அவளை தூக்கி நிறுத்தினான் ரிஷி..

அவன் கரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்த பார்வையில் நன்றி உணர்வு நிறைந்து ததும்பி வழிந்தது..

எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என்று மலைத்து போயிருந்தவள் இந்த நொடி மனம் நிறைந்து மகிழ்ந்து போயிருந்தாள்..

தொடரும்..
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Feb 15, 2025
Messages
43
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
63
சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் தேவையில்லை.. பத்து பதினைந்து நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று முற்போக்குத்தனமாக அருந்ததியால் யோசிக்க முடியவில்லை..!

சில சாஸ்திர சம்பிரதாயங்களில் அர்த்தமிருப்பதாக அவள் நம்பினாள்‌.

அவள் வயதுக்கு வந்த பிராயத்தில் எது மேலயும் பட்டுக்காத.. எதையும் தொட்டுடாதே..‌ சாமி படத்து பக்கம் போயிடாதே.. என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்களோடு வீட்டின் பின் பக்கம் பழைய சாமான்களை போடும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டாள்.. அந்த அறையின் ஒட்டடைகளும் துருப்பிடித்த இரும்பு சாமான்களும்.. செல்லரித்த மர சாமான்கள் அகற்றப்பட்டவரை ஏதோ ஒரு வகையில் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தாள்‌..

ஏதோ ஒரு நாளில் அண்ணியும் அண்ணியின் அம்மா சங்கரியும் வேறு ஒரு வயதான பாட்டியும் வந்து தலைக்கு தண்ணீர் ஊற்றியதாக ஞாபகம்.. நல்லா சாப்பிடணும்.. இப்ப என்ன சாப்பிடுறியோ அதுதான் காலாகாலத்துக்கும் உனக்கு பலம் கொடுக்கும்.. என்று அந்த பாட்டி சொல்லிவிட்டு சென்றார்.. ஆனால் வகை தொகையாக வயதுக்கு வந்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு உணவுகள் எதுவும் தனக்கு தரப்பட்டதாக ஞாபகம் இல்லை..

அதே சோறு குழம்பு பொரியல்.. முட்டை கூட அரிதுதான்..!

தான் வயதுக்கு வந்ததில் வீட்டில் யாரும் சந்தோஷப்பட்டதாக கூட நினைவில்லை..!

தீட்டு.. தீட்டு தீட்டு.. அதிகபட்சமாக அவள் கேட்ட வார்த்தைகள் இதுதான்..

அப்படி ஒரு நிலை தன் மகளுக்கு கூடாது.. தனக்கு கிடைக்காத அத்தனை செல்வ சிறப்புகளும் அவளுக்கு கிடைக்கட்டும்.. குழந்தை பருவம்.. வயதுக்கு வரும் பிராயம்.. திருமண காலகட்டம் என அனைத்து நிலைகளிலும் சந்திரமதிக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகளிலும் சந்தோஷங்களிலும் எந்தவித குறையும் இருக்கக் கூடாது என்று அருந்ததி முடிவெடுத்திருக்கிறாள்..

"நீ வேலைக்கு போக வேண்டாம் அருந்ததி.. வீட்ல இருந்து சந்திராம்மாவை பாத்துக்கோ.." மகரிஷியின் கட்டளை இது..!

அவள் எழுதி தந்ததை லிஸ்ட் போட்டு வாங்கி வந்திருந்தான் மகரிஷி..

கருப்பு உளுந்தை பச்சரிசியோடு சேர்த்து பொடித்து கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து.. நல்லெண்ணையோடு சேர்த்து இரும்பு உருளியில் எண்ணெய் பிரிய கிளறி உளுந்தங்களி செய்து வைத்திருந்தாள்..

காலையில் எழுந்தவுடன் சந்திரமதிக்கு நல்லெண்ணெயும் நாட்டு முட்டையும் கொடுப்பதற்குள் ஒரு வழியாகி போனாள் அருந்ததி..

மறுக்க மறுக்க அதட்டி மிரட்டி வாயில் திணித்து.. குமட்டி துப்பினா கொன்னுடுவேன் என்று விழுங்க வைப்பதற்குள் அவளுக்கே நாலு முட்டைகள் தேவைப்படுமளவு சத்து வற்றிப் போகும்..

உளுந்தங்களியை சின்ன சின்னதாய் உருட்டி பத்து உருண்டைகளை விழுங்க வைத்தாள்..

அதன் பிறகு சிகப்பு கவுனி அரிசி புட்டும் தேங்காய் துருவலும்..

காலை உணவுக்கு மதிய உணவுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வெட்டி வைத்த பழக்கலவை..

மதியத்தில் சாதம் சாம்பார்..ஏதேனும் குழம்பு.. கூட்டு பொரியல் என சரிவிகித உணவு.. மாலையில் சத்துமாவு கஞ்சி.. இரவு உணவுக்கு பின் பால்.. என முடிந்தவரை பார்த்து பார்த்து சத்தான ஆகாரமாக தந்து மகளை பொன் போல் கவனித்துக் கொண்டாள்..

அவ்வப்போது நாப்கின் மாற்றிக் கொள்ளவும்.. உள்ளாடைகளை துவைத்து கொள்ளவும் உட்புறமிருந்த பாத்ரூம் இருவருக்குமே சற்று வசதியாக இருந்தது..

நல்லவேளை அருந்ததிக்கு வயிறுவலி இருக்கவில்லை.. இரத்த போக்கும் கூட பொட்டு போல் கண்ணில் காட்டியது.. அவ்வளவுதான்..

"அருந்ததி.. விசேஷத்துக்கு அக்கம் பக்கத்து வீட்டு ஆளுங்களை கூப்பிடலையா..?"

"என்ன ரிஷி பேசுறீங்க..? அவங்கதான் யாருமே என் கூட பேசுறதில்லையே.. திடீர்னு நான் போய் கூப்பிட்டா எப்படி வருவாங்க..!"

"கூப்பிட வேண்டியது உன்னோட கடமை.. வர்றதும் வராததும் அவர்களுடைய இஷ்டம்.. நம்ம வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கும்போது இவ்வளவு நாளா பழகிட்டு இந்த பொண்ணு நம்மள கூப்பிடவே இல்லையேன்னு அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது.. அது நமக்கு நல்லதில்லை..!" மகரிஷி சொன்னது சரியாக பட்டாலும்.. என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு.. எதுவும் நடக்காதது போல் தன் வீட்டு விசேஷத்திற்கு அழைக்க என்னவோ போல் தயக்கமாக இருந்தது..

"கனகாக்கா.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா.."

"அப்படியா ரொம்ப சந்தோஷம்.." என்றபோதும் கனகாவின் முகம் கனியவில்லை.

"மூணாம் நாள் தண்ணி ஊத்தறோம் நீங்க கண்டிப்பா வரணும்..!"

"ம்ம்.. வந்துடறேன்.." அந்த வார்த்தைகள் மனதிலிருந்து வந்ததாக தோன்றவில்லை அவளுக்கு.. முகம் வாடிப்போனது..

அக்கா மனசுல எதுவும் "வச்சுக்காதக்கா.. அன்னைக்கு.."
என்று அருந்ததி ஆரம்பிக்க..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பழசையெல்லாம் எதுக்கு பேசிகிட்டு.. விடு.. அப்புறம் உட்காரு டீ காபி ஏதாவது சாப்பிடறியா..?"

"இல்லக்கா வேண்டாம் நேரம் ஆச்சு நான் போகணும்.."

"அதுவும் சரிதான்.. போய் புள்ளைய பாரு..!"

அக்கம் பக்கத்தில் மற்ற வீடுகளிலும் பெண்களை அழைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்..

அவர்கள் குரலுக்கும் சரி என்று சொன்ன தொனிக்கும் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை..

ஐந்து அல்லது ஏழு பேராவது வேண்டும் என்று ரிஷி சொல்லி இருந்தானே..!

சொந்தம் தான் சூனியமாகி போனது.. அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட தன்னை ஒதுக்கி கைவிட்டு விட்டார்களா..! புறக்கணிப்பில் புழுங்கினாள் துக்கத்தில் நெஞ்சடைத்தது..

சந்திரமதியின் அளவை கேட்டுக்கொண்டு ஒரு தாவணி பாவாடை செட் ஒரு லெஹெங்கா செட்.. ஒரு அனார்கலி சுடிதார் செட்.. அத்தோடு அவனுக்கு தெரிந்தவரை ஒப்பனைக்கு தேவையான சில பொருட்கள் என வாங்கி வந்திருந்தான்..

கூடத்தில் இருவருமாய் அமர்ந்திருந்தனர்..

அருந்ததியின் எதிரே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான் ரிஷி..

ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..

நகையெல்லாம் எதுக்கு வாத்தியாரே..

ப்ச் நோரு மொய்.. என் சந்திராம்மாவுக்கு நான் செய்யறேன்.. நீ தலையிடாதே.."

"ரொம்ப கடங்காரியாக்கறீங்க.."

வசூல் பண்ணிக்கறேன்.. உனக்கும் நகைகள் இருக்கு"

"வேண்டாம் ரிஷி.."

"நான் வேண்டாமா.."

"ஹான்.."

"நான் வாங்கித் தர்ற ஜிவல்ஸ் வேண்டாமா..?"

"அ.. அப்படி இல்ல.."

"சந்திரமதிக்கு வாங்கினது போல இன்னொரு செட்.. வேண்டாம்னா திருப்பி தந்திடு.."

"சரி தந்துடறேன்"

"போட்டுக்கிட்டு திருப்பி குடு.. ஃபங்ஷனுக்காக இரவல் வாங்கினதா நினைச்சிக்க.."

அருந்ததி சிரித்தபடி அமைதியாக உடைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நல்லா இருக்காடி.. ஏதோ எனக்கு தெரிஞ்ச கலர் பார்த்து வாங்கினேன்..!" என்றவனிடம் நிறைவாக புன்னகைத்தாள்‌.

"இவ்வளவு வாங்கிட்டு வந்ததே பெரிய விஷயம்."

"அப்படி சொல்லாதே.. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு இல்லனா மாத்திக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை.."

"இதைவிட அழகா என்னத்த வாங்க முடியும்..! இதுவே ரொம்ப பிடிச்சிருக்கு.. அருந்ததிக்கும் பிடிக்கும்..‌"

"அ.. அப்புறம் இது உனக்கு ஜேஜம்மா..! என்று ஒரு பார்சலை எடுத்து அவளிடம் தந்தான்.."

"இது என்னது.." என்றபடியே பிரித்துப் பார்த்தவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்..

ஆகாய வண்ணத்தில் தங்கச் சரிகைகள் நிறைந்த ரோஜா நிற பார்டருடன் கூடிய பட்டுப் புடவை..

"இதுவும் சந்திரமதிக்கா..?"

"இது உனக்குடி.."

"ஐயோ விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே.. எனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா பட்டு புடவை..‌ இருக்கிற புடவையில் ஏதாவது ஒண்ணு கட்டிக்கிட்டா போதாதா..!"

"போதாது..! உன் பொண்ணு பங்ஷன்ல நீயும் நல்லா உடுத்திக்கிட்டு அழகா சபையில நிக்கணும்.. அத நான் பாக்கணும்.."

"என் பொண்ணுக்கு தான் பங்க்ஷன்.. எனக்கு இல்லை.. இந்த புடவையோட மதிப்பு நீங்க வாங்கிட்டு வந்த எல்லா டிரஸ்சோட மதிப்பை விட அதிகமா இருக்கும் போலிருக்கு.."

"பொண்ணு வயசுக்கு வந்துட்டா அம்மா கிழவியாகிட்டதா அர்த்தம் இல்லை.. உனக்கு இன்னும் முப்பது கூட முடியல.. மனசுல மூப்பை சுமக்காதே.."

"என் வயசு உங்களுக்கு எப்படி தெரியும்.."

"அருந்ததியை பற்றி தெரிஞ்சுக்க சந்திரமதிங்கற google information engine என்கிட்ட இருக்குதே..!" கண் சிமிட்டினான் அவன்..

"இந்த புடவையை கட்டிட்டு நான் வந்து ஃபங்ஷன்ல நின்னா எல்லாரும் என்ன பேசுவாங்களோ என்னவோ..!"

"ஆமா அதுவும் சரிதான்.. கண்டிப்பா தப்பா பேசுவாங்க அதனால ஒன்னு பண்ணு..‌ பத்து வருஷத்துக்கு முன்னாடி எடுத்த பழைய புடவை ஏதாவது இருக்கும்..‌ அதை கட்டிக்கிட்டு ஃபங்ஷன்ல வந்து திருஷ்டி பொம்மை மாதிரி தனியா நில்லு.. எல்லாரும் உன்னை பாராட்டிட்டு போவாங்க.."

"கோங்ரா..?" அருந்ததி முறைத்தாள்..

"தருவாத்தா ஏமிரா..? இது நம்ம பொண்ணோட சடங்கு.." என்றதும் அருந்ததி அவனை அர்த்தத்துடன் ஏறிட்டு பார்த்தாள்..

"ஐ மீன்.. நம்ம வீட்டு பொண்ணுக்கான சடங்கு.. எதுலயும் எந்த குறையும் இருக்கக் கூடாது.. முக்கியமா பொண்ணோட அம்மா அழகா தெரியனும்.."

"அதென்ன பொண்ணோட அம்மா அழகா தெரியனும்..?"

"அது அப்படித்தான்..! சரி அதை விடு..‌ ஃபங்ஷன்ல ஒம்பது இல்லனா பதினொரு தட்டு சீர் வெச்சிடலாம்.."

அருந்ததி பெருமூச்சு விட்டாள்..

"இதெல்லாம் தாய்மாமன் செய்யணும்.. நாமளே வாங்கி செஞ்சுக்கறதுக்கு எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம்."

"தாய்மாமன் இல்லாத குழந்தைகளுக்கு சடங்கு வைக்கறதே இல்லையா..! சொந்தக்காரங்களை எதிர்த்து கலப்பு திருமண பண்ணிக்கிட்டு போறவங்க தன்னோட பொண்ணு வயசுக்கு வந்தா சடங்கு செய்யறதில்லையா..? ஏதாவது ஒரு வழி பிறக்கும் சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. கவலைய முகத்தில் காட்டாத சந்தோஷமா இரு..!"

ம்ம்.. என்ற போதும் அருந்ததியின் முகம் கனியவில்லை..

மூன்றாம் நாள்..

வீட்டை சுத்தம் செய்து காலையில் நல்ல நேரம் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டு பெண்களின் வரவுக்காக காத்திருந்தாள் அருந்ததி..

யாரும் வரவில்லை

"நான் சொல்லல.. யாரும் வர மாட்டாங்க.." அருந்ததியின் முகம் சோகத்தில் கருப்படித்து போனது..

"டென்ஷன் ஆகாத அருந்ததி.. கொஞ்சம் பொறுமையா இரு.. அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்.. அட்லீஸ்ட் ஸ்டூடண்ட்சோட பேரண்ட்ஸ் யாரையாவது வர சொல்லுவேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணு" அவன் போனை எடுத்த நேரத்தில்..

இங்கே..‌ தலையில் பூவை வைத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டிருந்தாள் கனகா..

"ஏய் டிபன் கூட செய்யாம எங்கடி கிளம்பிட்ட.." சத்யராஜ் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்..

"அருந்ததியோட பொண்ணு சந்திரமதி வயசுக்கு பெரிய மனுஷி ஆகிட்டால்ல.. அதான் மூணுக்கு தண்ணி ஊத்த கூப்பிட்டுருந்தாங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன்.."

"அந்த நடத்தக் கெட்டவ வீட்டுக்கு போக கூடாதுன்னு உன்கிட்ட சொல்லி இருந்தேனா இல்லையா.."

"அடச்சீ நல்ல காரியம் நடக்கும்போது அபசகுணமா பேசிக்கிட்டு.. போயா அந்த பக்கம்.. வீட்டுக்கு வந்து கண்டிப்பா வரணும்னு அழைச்சிட்டு போயிருக்கா.. போகலைனா நாளைக்கு அவ மூஞ்சில எப்படி முழிக்கறதாம்.."

"அவ மூஞ்சிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்றேன்?? நீ என்னமோ அலங்காரம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரேங்குற.."

"அக்கம் பக்கத்து வீட்டுல விசேஷம்னா போகாம இருக்க முடியுமா.. நாளைக்கும் நமக்கும் நல்லது கெட்டதுக்கு ஆளுங்க வர வேணாமா..?

அவ இங்க வந்து ஒண்ணும் கிழிக்க போறதில்ல.. அவள முதல்ல யாரு வீட்டுக்குள்ள சேக்க போறா.. உன் வேலைய மயிர பாரு.. மரியாதையா இங்கிருந்து போய்டுன்னு கழுதைதான அது. எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடி அவ வீட்டு வாசப்படி மிதிக்க வெக்கமாயில்லையா உனக்கு..?

வெக்கமா இல்ல.. என்னங்கற.. அக்கம்பக்கத்து வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. சண்டை போட்டுக்கிட்டாலும் நல்லதுகெட்டதுன்னா ஒன்னு எல்லாரும் சேர்ந்துக்க தான் வேணும்.. இதெல்லாம் உனக்கு புரியாது போ.. என்றபடி
கனகா வீட்டிலிருந்து புறப்பட..‌

"இந்தா.. என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறவளா இருந்தா இந்த லுங்கிய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க கூடாது நீ..!"

பேண்ட்டை தாண்டி கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து அவள் நடந்த வாசல் பக்கமாக போட்டான் சத்யராஜ்..

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்த கனகா காலால் லுங்கியை தூக்கியடிக்க அவன் முகத்தில் வந்து விழுந்தது அது..

"அத தூக்கி அழுக்கு கூடையில் போட்டுட்டு சாயந்திரம் வந்து துவைச்சு போடு.. மதிக்கணுமாமே.. வேணும்னா தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் வா..!" என்றபடி வெளியே வந்தவள் தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டிற்கு சென்றிருந்தாள்..

"பேசாம நானும் என் குழந்தையை கூட்டிட்டு போய் தண்ணி ஊத்திடறேன்.." என்று உள்ளே செல்லப் போனவளை நிறுத்தி வாசலை காட்டினான் ரிஷி..

கொலுசும் வளையலுமாக.. புடவை சரசரக்க மஞ்சள் முகமும் தலை நிறைய பூவுமாக மங்களகரமாக வந்து கொண்டிருந்தனர் பெண்கள்..

அருந்ததிக்கு கண்கள் கலங்கி போனது..!

"என்னடி நல்ல நாள் அதுவுமா கண்ணு கலங்கிட்டு நிக்கிற.."

"வ.. வர மாட்டீங்களோனு நெனச்சேன்.."

"அது எப்படி வராம போய்டுவோம் நாங்க பார்க்க வளர்ந்த புள்ள.. சந்திரமதி எங்க வீட்டு பொண்ணு அப்படியெல்லாம் தனியா விட்டுட மாட்டோம்.." என்றபடியே வீட்டுக்குள் வந்தனர் அவர்கள்..

சந்திரமதியின் வகுப்பு தோழி திவ்யாவின் தாயும் பாட்டியும் கூட வந்திருந்தார்கள்..

"சும்மா சம்பிரதாயத்துக்கு அஞ்சு பேரு தண்ணி ஊத்துனா போதும்.."

வீட்டுக்கு வெளியிலிருந்த குளியலறைக்கு அழைத்துவரப்பட்டாள் சந்திரமதி..

பித்தளை அண்டாவில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் ரோஜாவும் பன்னீரும் கலந்தனர்.. மஞ்சளும் சந்தனமும் தனித்தனியாக குழைத்து கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்தன..

சல்லடையில் தங்கம் போடணும்.. வச்சிருக்கியா அருந்ததி என்று யாரோ ஒரு பெண் கேட்க திணறி போனாள் அருந்ததி..

தன் கையிலிருந்த மோதிரத்தை கழட்டி அவளிடம் தந்தான் ரிஷி..

சல்லடையில் ஒரு பொட்டு தங்கமும் ரோஜா பூக்களும் தூவப்பட்டது..

தலைக்கு நல்லெண்ணெய் வைத்து மேனியெங்கும் சந்தனம் பூசி.. அவள் கைகளில் மஞ்சள் பூசி.. ஒவ்வொருவராக வந்து ஐந்து பெண்கள் சின்ன பித்தளைக்கூடத்தில் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினர்..

ஒரு இளவரசி போல் குளிக்க வைக்கப்பட்டாள் சந்திரமதி..

"போதும் அருந்ததி.. புள்ளைக்கு சீயக்காய் போட்டு குளிக்கவைச்சு வெளியே கூட்டிட்டு வந்துடு.." பெண்கள் அங்கிருந்து நகர்ந்து கொண்டனர்..

"தாய்மாமன் எடுத்துக் கொடுக்கிற புடவையை தான் கட்டணும்..! உன் அண்ணன் எங்கே..?"

இதோ அடுத்த பிரச்சினை..

"அதான் அண்ணங்காரன் வந்து சண்டை போட்டுக்கிட்டு போய்ட்டானே.."

"சரி அந்த ஸ்தானத்துல இருக்குற யாராவது ஒருத்தரை கூப்பிடுங்க.."

"கனகா உன் புருஷனை கூப்பிடு.."

"ம்கூம்.."

"சுந்தரண்ணா இல்லையா..?"

"சரி இருங்க நான் போய் என் புருஷன கூட்டிட்டு வரேன்.."

"இல்ல பரவால்ல இருக்கட்டும்.. ஏம்மா.. நீங்க எடுத்து வச்சதையே குழந்தைக்கு போட்டு கூட்டிட்டு வாங்க.. சடங்கு வைக்கும்போது உன் அண்ணனை எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடு.. அந்த நேரத்துல தாய்மாமன்தான் சீர் செய்யணும்.. கவுரவமெல்லாம் பார்க்கற நேரமில்ல இது.." பெரியவள் ஒருத்தி..

தாவணி பாவாடையையும் அதற்கு பொருத்தமாக சின்னதாய் கம்மல் மெல்லிய செயின் கைகளுக்கு இரண்டு வளையல் காலுக்கு கொலுசு..‌ என அவன் வாங்கி தந்திருந்த நகைகளை மகளுக்கு அணிவித்து அழகு பார்த்தாள் அருந்ததி..

பருவமடைந்தால் அழகு கூடுமா என்ன..?

அம்மாடியோவ்.. தங்க விக்ரகம் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறாள்.. இன்று நேரில் கண்டு கொண்டாள்..!

பன்னென்டு வயசுல இந்த பொண்ணு இத்தனை அழகா நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறாளே.. ஒரு பக்கம் பூரிப்பு.. மறுபக்கம் இந்த அழகை வைத்துக் கொண்டு எப்படி பொல்லாத உலகத்தை எதிர்கொள்ளப் போகிறாளோ என்ற கவலை அந்த தாய்க்கு..

விரற்கடையளவு சரிகை வைத்த சந்தனநிற சில்க் காட்டன் புடவை தான் அணிந்திருந்தாள் அருந்ததி..

மகளுக்கு மட்டும் பூ வைத்த போது.. முல்லை சரத்தை அவளிடம் தந்து "பூ வைச்சிக்கோ அருந்ததி" என்றான் அவன்..

அங்கிருந்த பெண்கள் அவனை அன்னியமாக பார்த்தாலும் வம்பு பேசி யார் மனதையும் புண்படுத்தவில்லை.

"பாத்ரூம் போறதா இருந்தா கூட அம்மாவ கூட்டிகிட்டு தான் போகணும்.."

"பக்கத்துல வேப்பிலை இரும்பு எதையாவது வச்சுக்கோ.."

"தேதி கிழமை.. நேரம் குறிச்சு ஜாதகம் கணிக்கனும். ருதுவான ஜாதகம் ரொம்ப முக்கியம்."

என்று ஆளாளுக்கு அறிவுரைகள்..

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு செல்ல ஆழ்ந்த மூச்செடுத்து கீழே அமர்ந்தாள் அருந்ததி..

ஒன்பதாம் நாளில் ஐயர்‌ வந்து ஓமம் வளர்த்து.. மந்திரங்களை உச்சரித்து.. சந்திரமதியையும் உச்சரிக்க சொல்லி பூஜை செய்து புண்ணியாஜனம் முடித்து வீடெங்கிலும் சாம்பிராணி புகையோடு தீர்த்தம் தெளித்துவிட்டு சென்றார்..

பதினோராம் நாளில் சடங்கு..

அந்த தெருவின் குட்டி குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவருமே வந்திருந்தனர்..

கிட்டத்தட்ட ஒரு 50 பேர்..

மோத்தி கட்டளைக்கு கீழ்படிந்து உள்ளறைக்குள் தங்கிவிட்டான்..

வாசலில் பந்தல் போட்டு..

பச்சரிசி பூ பழம் வெத்தலை பாக்கு மேல் மனை போட்டனர்.. இரு பக்கங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன..

இளம் ரோஜா நிற துணியில் அடர்த்தியான வெள்ளி சர்தோசி வேலைபாடுகள் கொண்ட லெஹங்கா அணிந்திருந்தாள் சந்திரமதி

"தாய்மாமன் எங்க..? அவர் தானே வந்து மாலை போடணும்.."

கலங்கினாள் அருந்ததி..

உறவுகள் சரியில்லை எனும் போது.. சமரச பேச்சுவார்த்தை நடத்தி மட்டும் என்ன பலன்..

கலக்கத்தோடு ரிஷியை பார்க்க விழிகளை மூடி திறந்து தைரியம் சொன்னான் அவன்..

"அட என்னப்பா..? என்ன அருந்ததி.. உங்க அண்ணன் வரலையா.." என்று முடிக்கும் முன்.. வாசலில் கார் ஹாரன் சத்தம்..

"தாய்மாமன் வந்தாச்சு" என்றான் ரிஷி..

அருந்ததி எட்டிப் பார்த்தாள்..

நந்தகுமாரனும் மனைவியும் கையில் தட்டுக்களோடு வந்து கொண்டிருந்தனர்..

ஆம்.. அந்த நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவில்லை என்று சண்டை போட்ட அதே நந்தகுமார் தான்..

ரிஷி தான் போனில் அழைத்து வர சொல்லியிருந்தான்..

"இவர நான் உனக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..‌ ரெண்டு பேரும் ஏற்கனவே பேசி இருக்கீங்க தானே..!" ரிஷி சொல்லவும்..

ஒரு கணம் திணறினாலும் அடுத்த கணம் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"வாங்க வாங்க" என்று மன நிறைவோடு அவர்களை வரவேற்றாள் அருந்ததி..

"மன்னிச்சிடுமா அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்..! என்னை உன் அண்ணன நெனச்சுக்கோ.. ரிஷி சாருக்காக மட்டுமில்ல உனக்காகவும்தான் வந்தேன்.. ஏதோ நான் செஞ்ச தப்புக்கு ஒரு சின்ன கைமாறு.."

அருந்ததிக்கு தலை சுற்றியது..

இருபத்தி நாலு மணி நேரமும் மனிதர்கள் கடுமையாய் இருப்பதில்லை..

இங்கு எல்லோருக்குள்ளும் மனிதாபிமானமும் ஈரப்பதமும் உண்டு.. சில மிருகங்களை தவிர..

ஆனால் என்ன..? வறண்ட பாலையில் அரிதாக பெய்யும் மழை போல் அந்த மனிதநேயம் என்றோ ஒரு நாள் வெளிப்படுவதுதான் பிரச்சினை.

சில நேரங்களில் சில மனிதர்கள்..

பதினொரு வகையான வரிசை தட்டி வைத்து சந்திரமதியின் கழுத்தில் சம்மங்கி ரோஜா மாலையை சூட்டினான் நந்தகுமார்..

"நகையை எடுத்து பொண்ணு கழுத்துல போடுங்க.." யாரோ ஒருவர் சொல்ல..

நகைப்பெட்டியை திறந்து ஐந்து சவரன் சங்கிலியை சந்திரமதியின் கழுத்தில் போட்டான்..‌

அடேங்கப்பா.. அத்தனை பேர் விழிகளும் விரிந்தன..

"ஐயோ என்ன அப்படி பாக்காதம்மா.. உன் பொண்ணுக்கு கழுத்துல நகைய போட்டது மட்டும்தான் நான்.. வாங்கி தந்தது ரிஷி தான்.." அருந்ததிக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் நந்தகுமார்..

மாலையோடு மனையில் அமர வைக்கப்பட்டாள் சந்திரமதி..

எந்தவித பேதமுமின்றி ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்தார்கள்..

பெண்களும் பெரியவர்களும் வந்து நலுங்கு வைத்து சந்திரமதியை பூத்தூவி வாழ்த்தினார்கள்..

கனகா நலுங்கு வைத்தவர்களுக்கு தாம்பூலப் பை தந்தாள்..

சீரும் சிறப்புமாக தன் மகள் கொண்டாடப் படுவதில் அருந்ததிக்குள் நெகிழ்ச்சி.. விழிகளில் ஆனந்த கண்ணீர்..

அவன் வாங்கி தந்த புடவையை உடுத்தி இருந்தாள் அருந்ததி..

அழகு அம்மாயி என்று காதோரம் கிசுகிசுத்தவன் நேரம் கிடைக்கும் போது அவளை தன்னருகில் இழுத்து வைத்து.. ஒரே ஒரு போட்டோ என்று தன்னோடு சேர்த்து செல்பி எடுத்துக் கொண்டான்..

சிலிர்க்கவும் சில்லிடவும் முடியாமல் கூட்டத்தில் ஒரு தவிப்பு..

நீங்களும் தான் இந்த பேண்ட் ஷர்ட்ல அட்டகாசமா இருக்கீங்க.. கிடைத்த இடைவெளியில் சொல்லிவிட்டு போனாள் அருந்ததி..

இருவரும் அவ்வப்போது மோத்தி எங்கே தனிமையில் தவிக்க போகிறானோ என்ற கவலையில் அறைக்குள் சென்று அவ்வப்போது அவனை கொஞ்சி பேசி விட்டு தான் வந்தனர்..

மோத்தி அன்பையும் மனிதர்களையும் அதிகமாக தேடுபவனாயிற்றே..

எழுந்து கும்பிட்டு அனைவரையும் நமஸ்கரித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள் சந்திரமதி..

அடுத்த அரை மணி நேரத்தில் கேட்டரிங் சர்வீஸ் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சேர் பென்ச்களை பரப்பி.. வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

வெஜிடபிள் பிரியாணி சப்பாத்தி பன்னீர் குருமா.. ஊத்தப்பம்.. இட்லி.. சட்னி.. சாம்பார்.. பிரெட் அல்வா.. சேமியா கேசரி..‌ பாதாங்கீர் ஐஸ்கிரீம்..

உண்டு முடித்தது போக மிச்சத்தை பொட்டலங் கட்டிக்கொண்டு அனைவருமாக விடைபெற்று சென்றனர்.

"என்ன அருந்ததி இப்ப நீ ஹாப்பியா..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு புன்னகையுடன் கேட்டவனை கண்ணீர் நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அருந்ததி..

"என்னடி இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு." அவசரமாக மகரிஷி அவள் கண்ணீரை துடைக்க சட்டென அவன் கால்களில் விழுந்து விட்டாள் அவள்..

"அய்யோ.. பொம்மா..!" பதறி கொண்டு அவளை தூக்கி நிறுத்தினான் ரிஷி..

அவன் கரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்த பார்வையில் நன்றி உணர்வு நிறைந்து ததும்பி வழிந்தது..

எல்லாம் எப்படி நடக்கப் போகிறதோ என்று மலைத்து போயிருந்தவள் இந்த நொடி மனம் நிறைந்து மகிழ்ந்து போயிருந்தாள்..

தொடரும்..
Rishi maari ellarum ila. But super hero... Mothi yum thaan . Anaa mathiyum rishi & aru maa sera uthavi panna k..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
60
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
💚🤍💚🤍💚🤍💚🤍 அருமை அருமை
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்
🤍💚🤍💚🤍💚🤍💚 அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💚🤍💚🤍💚🤍💚🤍
அருமை அருமை 👌👌👌👌👌👌👌
எவ்வளவு அருமை, எவ்வளவு சூப்பர். ஜீவிம்மா இஸ் பேக்.
 
Top