Super superபேச்சுவார்த்தை முடிந்த பின்னும் நிம்மதி இல்லை.. ஏதோ முழுமை அடையாத உணர்வு. கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போல். முடிவு இல்லாத கதை புத்தகம் போல். மனதோடு ஏதோ ஒட்டவில்லை.
போதாக்குறைக்கு இது வாலிப வயசு என்று வடிவேலு போல் துள்ளி குதிக்கும் இளமையின் போராட்டம்..
என்னடா வருண்.. மொத்தமா உனக்குள்ள பியூஸ் போயிடுச்சா.. யோகியாகற எல்லா தகுதியும் வந்தாச்சோ.. பேசாம இமயமலைக்கு ஒரு டிக்கெட் போடுவோமா..! தேம்பாவணியை பார்ப்பதற்கு முன்னால் வரை இப்படித்தான் யோசித்துக் கொண்டிருந்தான்..
ஆனால் கடந்த சில நாட்களாக இரவை கழிப்பதே பெரும்பாடாய் போய்விட்டது.. உறக்கம் அவனை தழுவுவதற்கு பதிலாக வேறு ஏதேதோ உணர்ச்சிகள் அவனை தொட்டுத் தழுவுகின்றன..
நேத்து ராத்திரி யம்மா.. என்ற ரீதியில் உடம்பை வளைத்து முறுக்கி.. கால்களைக் குறுக்கி அம்மாஆஆ.. என்று அவனே அலறி.. என்னடா தம்பி திடீர்னு வந்து பயமுறுத்தற.. என்று தனக்குத்தானே பிதற்றி போர்வையை இடுப்பு வரை இழுத்து விட்டு.. கொஞ்ச நாட்களாய் அவனுக்கு அவனே புதிதாய் தெரிகிறான்..
இன்றும் அப்படித்தான்.. தேம்பாவணியை பார்க்க போகலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் மௌன போராட்டம்.. முன்பு அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று அதீத ஆர்வமும் அவள் அழகின் மீது பொதுவான ரசனையும் இருந்தது உண்மை..
அந்தக் கன்னங்குழிய சிரிப்பது.. கண் சிமிட்டி பேசுவது.. கோபத்தில் மூக்கை சுருக்குவது.. இளம் நாக்கை துருத்திக் கொள்வது என ஒவ்வொன்றையும் அப்போதே அணு அணுவாய் ரசித்த ஆள் இவன்..
இப்போது கள்ளங் கொண்ட மனது கொஞ்சம் அட்வான்ஸ் வெர்சனாக மாறிப்போனதில்.. கண்கள் எங்கெங்கோ மேய்கின்றன..
பாவம் அந்தப் பிள்ளையும் வருண் டாக்டர் நல்லவர் கண்ணியமானவர் என்று நினைப்பில் கையில்லாத சட்டையும் முழங்கால் வரை பேண்ட்டும் அணிந்து கொண்டு குலுங்கி சிரிக்கும்போது அவன் இதயமும் எம்பி குதிக்கிறது..
போகலாமா வேண்டாமா..
நீ போகலைனா அந்த பொண்ணு ஏங்கிப் போயிடும்..
அதெல்லாம் ஏங்க மாட்டா.. அவ ரொம்ப தெளிவா இருக்கா புரிஞ்சுக்குவா..! போர்வையை போர்த்திக்கிட்டு படு வருண்..! என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட படி போர்வையை காலால் உதறி தள்ளிவிட்டு கதவை திறந்து கொண்டு எழுந்து சென்றான் அந்த மனம் குழம்பிய மருத்துவன்.. இதற்குப் பெயர்தான் சொல் ஒன்று செயல் வேறொன்று..
அறையை சுற்றி சுற்றி பார்த்தபடி.. உதட்டை சுழித்து கொண்டு.. ஜன்னலோரம் மணியடித்துக் கொண்டு வரும் ஐஸ் கிரீம் வண்டியை ஏக்கமாக பார்க்கும் சின்ன குழந்தை போல் தேம்பாவின் கண்கள் வாசலை நோக்கி வெறித்து கொண்டிருந்தன..
"இல்ல இனிமே அவர் வரமாட்டார்.. நீ தனியா இருக்க பழகிக்கணும்.. இனிமே உனக்கு ஃபிரெண்டும் இல்ல யாரும் இல்ல.. மறுபடியும் என்னோட பப்லுவைத்தான் மனசுக்குள்ள கொண்டு வரணும்.." வருண் தனக்கானவன் இல்லை என்ற கட்டுப்படுத்தப்பட்ட நினைவு அவளுக்குள் அழுகையை கொண்டு வந்தது..
தலை குனிந்து பேசிக் கொண்டிருந்தவள் உதட்டை பிதுக்கியபடி நிமிர்ந்து பார்க்க சுவற்றோரம் கைகளை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான் வருண்..
"டாக்டர் சார்..?" சின்ன கூச்சலுடன் கண்களை அகலமாக விரித்தாள் தேம்பாவணி..
அவன் கண்களும் உதடுகளும் தீவிரத்துடன் அவள் மீது அழுத்தமாக பதிந்திருந்தன..
"ஓடி வந்து உங்களை கட்டிப்பிடிச்சுக்கவா.. அவ்ளோ சந்தோஷமா இருக்கேன் நீங்க வந்ததுல.."
"ஒன்னும் தேவையில்லை.. மறுபடி தனியா பேச ஆரம்பிச்சுட்டியா..?"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..! நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன்.."
"ஆமா உன்ன பாக்காம என்னால இருக்க முடியல.. அதான் வந்துட்டேன்.."
"அப்படியா..?" அவள் நிமிர்ந்து அமர.. நடந்து கொண்டிருந்தவன் ஒரு கணம் நின்று மீண்டும் அவளை நோக்கி நடந்தான்..
"ஓஹோ அப்படி வேற உனக்கு ஆசை இருக்கா..? நான் வரலைன்னா நீ தூங்கி இருக்க மாட்டியே..? பேசாம நீ அம்மாகிட்ட போய் படுத்துக்கிறியா இனிமே..!"
"ஒரு நாள் ரெண்டு நாள் பரவாயில்லை தினமும் எப்படி போய் அவங்கள தொந்தரவு பண்ண முடியும்.."
"ஏன்..?"
"வயசானாலும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் குள்ள ஒரு அன்யோன்யம் இருக்கும்.. நாள் முழுக்க வேலை செய்ற சாரதாம்மா பெட் டைம்லதான் அங்கிள் கிட்ட ஏதாவது மனசு விட்டு பேசுவாங்க.. அவங்க ரொமான்டிக் மூமண்ட்டை ஸ்பாயில் பண்றது ரொம்ப தப்பு.." அதை மட்டும் ரகசியமாக சொல்ல.. நெற்றியை ஒற்றை விரலால் தேய்த்தபடி ஆழ்ந்த கண்களால் அவளைப் பார்த்தான் வருண்..
"சரி.. அப்ப வெண்மதி கூட போய் படுத்துக்க.."
"ஐயோ..! வெண்மதி அக்கா பேசிப்பேசியே காதுல ரத்தம் வர வச்சிடுவாங்க.. குறட்டை சத்தம் வேற..! போன பயம் எல்லாம் திரும்பி வந்துடுது.." அவள் சொன்னதும் வருணுக்கு சிரிப்பு பொங்கியது..
"அப்ப நீ இனிமே தனியா தூங்க பழகணும் தைரியத்தை வளர்த்துக்கணும்.."
"முயற்சி பண்றேன் டாக்டர்.." என்றாள் இறங்கிய குரலில்..
"டேப்லெட் ஒழுங்கா போடறியா..?"
"ஐயோ மறந்துட்டேனே..!"
"எப்படி மறக்கும்.. தினமும் உனக்கு ஒருத்தர் ஞாபகப்படுத்தனுமா..?" என்றபடியே எழுந்து சென்று மாத்திரையும் பருக தண்ணீரும் எடுத்து வந்தான்..
அவன் கையிலிருந்து மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டாள் தேம்பாவணி..
"ஒகே.. இப்ப படு.."
"உங்க மடியில படுத்துக்கட்டுமா..?"
ஆங்.. என விழித்தான் டாக்டர்..
"என்ன ஒரு குழந்தையா நினைச்சுக்கோங்க டாக்டர்.." அவள் அனுமதி கேட்காமல் அவன் மடியில் படுத்துக்கொள்ள..
"குழந்தையாவா..? அப்படி மட்டும் நினைக்க முடியலையே..!" ஆழ்ந்த குரலோடு அவள் தோளில் கை வைத்தான்..
"அப்போ வேற எப்படி..?" தேம்பாவணியின் கண்கள் சொருகியது..
"குரங்கு மாதிரி தெரியற.." சொல்லிவிட்டு சிரிக்க.. தலை கவிழ்ந்து அவன் தொடையில் கடித்தாள்..
"ஏய்.. கடிக்காத குரங்கு குட்டி.." கழுத்தை தன் பக்கமாக திருப்பி அவள் உடம்பையும் தன் கரத்தால் வளைத்தான்..
"தூக்கம் வருது டாக்டர்.."
"தூங்குமா..!"
"உங்..களை விட்டு வில...கனும்னு நினை...க்க..றேன் ஆ..னா முடி..யல.." தேம்பாவணி உறங்கியிருந்தாள்
"எனக்கும் தான் கண்ணம்மா..!" இரண்டு கைகளால் அவளை அள்ளி படுக்கையில் சரியாக படுக்க வைத்தான்.. விலகியிருந்த ஆடையை சரி செய்து போர்வையை போர்த்தி விட்டு இழுத்து பெருமூச்சு விட்டான்..
"டார்ச்சர் டி.. நீ..! எப்படி உன்னை கடந்து போக போறேன்னு ஒண்ணுமே புரியல.." அவள் உதட்டை விரலால் நிமிட்டியபடி பேசிக் கொண்டிருந்தவன் அவள் சிணுங்கவும்.. நாக்கை கடித்துக் கொண்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தான்..
"நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா.. இன்னைக்கு ராத்திரியும் ஆமா.. தூக்கம் போச்சுடி நீ போம்மா.." என பாடிக்கொண்டே உள்ளே வர..
அவன் அலைபேசியில் அழைப்பு..
கமலி அழைத்திருந்தாள்..
"சொல்லுமா.."
"டாக்டர் தூங்காம ரொம்ப கஷ்டப்படுறார் வருண்.. ஏதாவது ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதிக் கொடுக்கிறீர்களா..?"
"அங்கேயுமா..?"
"என்னாச்சு டாக்டர்.."
"ஒன்னும் இல்ல.. எனக்கு புரியல எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. அவன் தூக்கத்தை கெடுக்கறதுக்காகவா..?"
"வருண்..?"
"உங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு ஆம்பளைங்க தூக்கத்தை கெடுக்கறதே வேலையா போச்சு.. மனுசனோட பீலிங்க்ஸை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கறது இல்ல.."
"என்னாச்சு வருண் ஏன் இப்படி கோவமா பேசறீங்க..?"
"ஆமா என் நண்பன் தூங்கலைன்னா எனக்கு கோவம் வராதா..!"
"வருண் கத்தாதீங்க நான் வேணும்னா உங்க பிரண்டு கிட்ட ஃபோன கொடுக்கறேன்.. நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க.."
"ஏன் அவன்கிட்ட செருப்படி வாங்கறதுக்கா..? நான் சொல்றத நல்லா கேளு கமலி.. அவனோட ஸ்லீப்பிங் பில்ஸ் நீதான்.."
"புரியலையே வருண்.."
"அவன் மனசுக்குள்ள எதையோ போட்டு குழப்பிக்கிட்டு இருக்கான் அது என்னன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு ஆறுதலா இரு.. பிரச்சனைக்கு தீர்ந்துட்டா தூக்கம் வரும்.." என்று அழைப்பை துண்டித்தவன்..
"எனக்கு இப்பதான் பிரச்சனை கெளம்பி இருக்கு.. நான் யார் கிட்ட போய் ஆறுதல் தேடுறது.." என்று தலையை உலுக்கியபடி கண்களை மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தான்..
காலையில் அவன் உணவருந்த வரும்போது பக்கத்தில் திலோத்தமா தான் அமர்ந்திருந்தாள்..
அவள் புன்னகைக்க மறுபக்கம் திரும்பி வெண்மதியிடம் "அந்த வாண்டு எங்க போச்சு..? சாப்பிட வர சொல்ல வேண்டியது தானே அவளை.." என்றான் கடுகடுப்பான குரலில்..
"அவ முன்னாடியே சாப்பிட்டாச்சு..! ரொம்ப பசியாம்.. அங்க பசங்களோட அங்க உட்கார்ந்து விளையாடுக்கிட்டு இருக்காளே பாக்கலையா.." என்ற பிறகுதான் கூடத்து பக்கம் திரும்பினான்..
கீழே அமர்ந்து சாரு சுகுணேஷோடு பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தாள்..
"அதிசயமா இருக்கே.. அவளுக்கு பசிக்கலாம் செய்யுதா..?" என்றபடியே தட்டில் வைத்த உணவை உண்டு கொண்டிருக்க..
பிள்ளைகளோடு கலகலப்பாக அவள் விளையாடிக் கொண்டிருந்ததில் அடிக்கடி அந்த பக்கம் ரொட்டேட் ஆனது அவன் தலை..
திலோத்தமாவிற்கு வயிறெல்லாம் எரிந்தது..
"நான் உங்களுக்கு குட் மார்னிங் சொன்னேன்.."
என்றதும் அவளை கேள்வியாக பார்த்தான்..
"பதிலுக்கு குட் மார்னிங் சொல்லனும்ங்கற மேனர்ஸ் தெரியலையா உங்களுக்கு..?"
"ஓ..! குட் மார்னிங்.."
"இதுக்கு நீங்க சொல்லாமலேயே இருந்திருக்கலாம்..!" கையை உணவு தட்டில் உதறிவிட்டு.. பாதி உணவை அப்படியே வைத்து விட்டு எழுந்தாள்..
"திலோத்தமா என்ன ஆச்சு? சாப்பிட்டுட்டு போ.." வெண்மதியின் குரலை அவள் பொருட்படுத்தவில்லை..
தம்பிக்கு எதிர் திசையில் அமர்ந்து கொண்டாள் வெண்மதி.. ராஜேந்திரன் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட நிவேதா தன் பிள்ளைக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்..
"டேய் வருண்.. பசங்களுக்கு வெக்கேஷன் லீவ் முடிஞ்சு போச்சு ஸ்கூலுக்கு போகணும் டா..! நான் இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்னு பார்க்கறேன் நீ குழந்தைகளை கொண்டு போய் என் வீட்ல விட்டுட்டு வர முடியுமா..?"
"வரூண்.. வரூண்..!" அழைத்தபடி அவன் தன் மீது கவனத்தை பதிக்காமல் போனதில்.. அவன் பார்வை சென்ற திசையை எட்டி பார்த்தாள்..
விட்டால் மூன்றோடு ஒன்றாக அவளோடு சென்று விளையாட துடிக்கும் ஆர்வத்தோடு பாதி உடம்பை அவள் பக்கமாக திருப்பி உணவுத் தட்டில் கை வைத்த நிலையில் அப்படியே அமர்ந்திருந்தான் வருண்..
"வருணே..! எதுக்கு இங்க உக்காந்து அங்க பாத்துட்டு இருக்க.. பேசாம நீயும் போய் விளையாடறியா..?"
"இதோ சாப்பிட்டு போ...றே...ன்" என்றவன் வெண்மதியின் பக்கம் திரும்பினான்..
"இப்ப என்ன சொன்ன..?"
"இப்ப சொன்னதை விடு.. இவ்வளவு நேரமா நான் என்ன சொன்னேன்னு உன் காதுல விழுந்துச்சா..?"
"காதுல விழற மாதிரி எதையுமே பேச மாட்டியா நீ.. தூரத்தில் உட்கார்ந்துகிட்டு முனுமுனுன்னு பேசுனா எனக்கெப்படி தெரியும்.. இதுல வேற அங்கருந்து பாம்பு வெட்டிடுச்சு பாம்பு முழுங்கிடிச்சுன்னு சத்தம் போட்டுட்டு இருந்தா நீ பேசறது எப்படி என் காதுல விழும்.."
"சரிதான் பத்தடி தூரத்துல நான் பேசறது உனக்கு கேக்கல.. அம்புட்டு தொலைவுல உட்கார்ந்து அதுங்க கத்தறது உன் காதுல தெளிவா விழுந்திருச்சாக்கும்.. உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு எழுந்து போனாளே அதையாவது பாத்தியா..?"
"எழுந்து போய்ட்டாளா..?" பக்கத்தில் திலோத்தமாவை தேடினான் வருண்..
"வருண் நீ இந்த உலகத்திலதான் இருக்கியா.. என்னடா ஆச்சு உனக்கு..?"
தட்டில் அலைந்து கொண்டிருந்த விரல்கள் அப்படியே நின்றுவிட அக்காவை நிமிர்ந்து பார்த்தான் வருண்..
'உனக்கென்ன ஆச்சு முதல்ல..? ஏன் இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேக்கற.."
"இல்லடா நான் வந்ததுல இருந்தே பார்க்கறேன்.. நீ சரியில்ல ஆளு ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்கியே.. ஏதாவது பிரச்சனையா..? எதுவானாலும் என்கிட்ட சொல்லுடா.."
"சொன்னா தீர்த்து வச்சுடுவியா.. வாய மூடிக்கிட்டு தின்னு.. உன்னால அது மட்டும் தான் முடியும்.." என்றவன் தட்டை எழுந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..
"இப்ப என்ன கேட்டுட்டேன்.. எதுக்காக இப்படி எரிஞ்சு விழுந்துட்டு போறான்.." வெண்மதி ஒன்றும் புரியாமல் ஒரு நொடி விழித்து அடுத்த நொடி இட்லியில் பாதியை பிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டு எதிர் திசையை பார்த்தவள் வாயில் அடைத்திருந்த இட்லியோடு அப்படியே கண்களை விரித்து சிலையானாள்..
சொன்னதைப் போல் வருண் தேம்பாவணியின் எதிரே கீழே அமர்ந்து கொண்டு பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தான்..
"ஆத்தி.. என்கிட்ட கோவமா பேசிட்டு அங்க போய் என்ன பண்றான் இவன்..!"
"வாயில உருட்டினது போதும்.. இப்ப டைசை உருட்டு..!" சிரித்தபடி தேம்பாவணியை சீண்டி கொண்டிருந்தான்..
விளையாட்டுக்கு நடுவில் அவள் கைக்குள் இருந்த சோழி காய்களை பிடுங்குகிறேன் பேர்வழி என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தான்..
சுகுனேஷ் சாரு இரண்டும் ஒப்புக்கு சப்பாய் அமர்ந்திருந்தன..
"இவன் உலகத்துல நாங்க எல்லாம் இருக்கோமா இல்லையா..!" கன்னத்தில் கை வைத்து பெருமூச்சு விட்டாள் வெண்மதி..
அடுத்த சில நிமிடங்களில்..
"போதும் போதும் டைம் ஆச்சு கிளம்பலாம் வா..!"
அவள் புத்தகப் பையை இவன் எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவன் போல் தேம்பாவணியின் கையை பிடித்துக் கொண்டு ஓடியதெல்லாம் வெண்மதிக்கு படு வித்தியாசமாக தெரிந்தது..
"கண்டிப்பா இந்த பைய கிட்ட இத பத்தி பேசணும்.." என்றபடியே இன்னும் இரண்டு இட்லிகளை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டாள்..
அவள் கல்லூரியில் காரை நிறுத்தினான் வருண்..
"டாக்டர் நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.." குரலை செருமிக் கொண்டாள் தேம்பாவணி..
"சொல்லுடா.."
"அ.. அது.. ஐ லவ் யூ.."
"வாட்.."
"எஸ் நான் உங்களை காதலிக்கிறேன் டாக்டர்.."
"பைத்தியம் மாதிரி உளறாதே.. இறங்கி போ.."
"இல்ல நான் உளறல.. நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க இன்னொருத்தியோட புருஷன் இதையெல்லாம் தாண்டி என் மனசு உங்களை மட்டும் தான் தேடுது.. என்னால உங்கள மறக்க முடியல.. நான் உங்களை காதலிக்கிறது என்னோட தனிப்பட்ட விஷயம்.."
"தேம்ஸ்.. ஸ் வாய மூடு இல்லனா ஐ வில் கில் யூ.."
"பரவாயில்ல என்ன கொன்னுடுங்க.. இந்த சித்திரவதைக்கு அது எவ்வளவோ பெட்டர்.."
"எனக்கு தெரியும் இது தப்பு.. இப்படி செய்யக்கூடாது.. ஆனா என் மனச கட்டுப்படுத்த முடியல.. இப்ப கூட எனக்கு உங்களை கிஸ் பண்ணனும்னு தோணுது.. எங்க என்னை அடிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு.."
"நான் ரொம்ப மோசமான பொண்ணு.. வில்லி.. என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க..!"
வருண் பார்வையை தழைத்து இதமாய் இறங்கி வந்தான்..
"தேம்ஸ்..!"
"நான் எனக்குள்ள நிறைய முறை கேட்டு பாத்துட்டேன்.. இது பிரண்ட்ஷிப் இல்ல அதுக்கு மேல என்னவோ ஒன்னு.. இப்பல்லாம் ராத்திரி என்னென்னமோ ஃபீலிங்ஸ் வருது.. எனக்கு சொல்ல தெரியல.. பேசாம என்னை நீங்க யூஸ் பண்ணிக்கறீங்களா..?"
"அறைஞ்சிடுவேன்.. வாயை மூடுடி..! என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" அவன் பற்களில் கடித்து கர்ஜித்தான்..
"நீங்கதான சொன்னீங்க.. வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா மிஸ் பண்ணவே மாட்டேன்னு.."
வருண் கண்களை மூடி நெற்றியில் கை வைத்துக் கொண்டான்..
"பாத்தீங்களா நான் எவ்வளவு பேட் கேர்ள்ளா மாறி போயிட்டேன்.." எல்லாம் உங்களால தான்.." தேம்பாவணி அழும் நிலைக்கு வந்தாள்.
வருண் அவளை தோளோடு கை போட்டு சேர்த்துக் கொண்டான்..
"இது சும்மா இன்பெக்க்சுவேஷன் டா.. உன் வயசுல எல்லாருக்கும் வர்றதுதான்.. உன் பிரெண்ட்ஸ் வேற கண்டமேனிக்கு தூண்டிவிட்டதால உன் மனசு அலைபாயுது.. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும்.. ரொம்ப அழகா யாராவது ஒருத்தர் வந்து உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னா எல்லாம் மாறிப் போயிடும்.. அப்ப மனசுக்குள்ள அவங்கள பத்தின நினைப்பு வந்துடும்.. நீ வேணும்னா பாரு.. ஸ்மார்ட்டா அழகா ஒரு நல்ல பையன் வந்து உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லும்போது நீ என்னை மறந்து போயிடுவ.."
"அப்படியா சொல்றீங்க டாக்டர்..!"
"நெஜமா..!"
யோசனையுடன் தலையசைத்தவள் "அப்ப சரி பார்க்கலாம்.. என்றவள் கேன் ஐ கிஸ் யூ..!" என்று கேட்க..
"இறங்கி போடி.." என்றான் கனமான குரலில்..
அப்போதும் அவன் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டு.. அவசரமாக கதவை திறந்து இறங்கி ஓடியிருந்தாள் தேம்பா..
உள்ளங்கை ஈரம் உள்ளுக்குள் ஊடுருவி ரத்த நாளங்களில் தித்திப்பாய் இறங்கியது..
அந்த கையை நெஞ்சுக்கு நேரே வைத்து ஸ்டியரிங்கில் கவிழ்ந்தான் வருண்..
தொடரும்..