- Joined
- Jan 10, 2023
- Messages
- 132
- Thread Author
- #1
கண் வலி வந்து இருவரும் குணமான பிறகு குடும்பமே இருவரையும் இழுத்து வைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
"என் ரூமுக்குள்ள யாரும் வராதீங்க உங்களுக்கும் கண் வலி வந்துடும்னு கதவை இழுத்து தாப்பா போட்டுகிட்டே.. காலேஜுக்கும் ரெண்டு நாள் போகல. அப்புறம் எப்படி வருணுக்கு மட்டும் கண் வலி வந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரகசியமா சந்திச்சுகிட்டிங்களா..?' வெண்மதி கேட்க வருண் திகைத்து அவள் முகம் ஏறிட்டான்.
"அதாவது ரகசியமா.. அப்படின்னா தப்பான அர்த்ததுல கேக்கல. நீ போய் அவளை பார்த்தது எங்க யாருக்குமே தெரியாது இல்லையா அதைத்தான் அப்படி கேட்டேன்..!" விளக்கமும் அவளை தந்துவிட வருணுக்குள் நிம்மதி பெருமூச்சு..
"இங்க பாருங்க.. இவளை போய் பார்க்கிறதுக்கு எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. கண்வலின்னு சொன்னதும் தனியா இருன்னு நீங்க பாட்டுக்கு அவளை ரூம்ல போட்டு அடைச்சிட்டீங்க.."
"என்னது நாங்க ரூம்ல அடைச்சுட்டோமா..?" சாரதாவும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..
"அவளுக்கு கண் வலிக்கு மருந்து கொடுக்கணும் கண்ணு எப்படி இருக்குன்னு செக் பண்ணனும் ஒரு டாக்டரா இதெல்லாம் என் கடமை இல்லையா..?"
"நீ கண் டாக்டரா..?" வெண்மதி கீழ்கண்ணால் சந்தேகமாக பார்த்தபடி கேட்க.
"பேசிக் ட்ரீட்மென்ட் கூடவா தெரியாம மெடிசன் படிச்சிட்டு வந்து உட்கார்ந்துருக்கேன். என்னத்தையாவது உளறாத வெண்மதி. அவளை இங்க கூட்டிட்டு வந்தது நான்.. அவளை பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு தானே அதைத்தான் செஞ்சேன். அஃப்கோர்ஸ் மருந்து விடும்போது.. அவளை தொட்டு தூக்கி உதவி செய்யும்போது.."
"தொட்டு தூக்கி உதவி செஞ்சியா..?"
"ஆமா..? அவளால கண்ண திறக்கவே முடியல. நீங்க யாரும் பக்கத்துல கூட வரல."
"டேய் அவ எங்களை வர விடல..! உன்ன மட்டும் எப்படி உள்ள அனுமதிச்சா.. அது தான் எனக்கு புரியல.?"
"அவ என்னை மட்டும் எங்க உள்ள விட்டா..? நானாத்தான் ஜன்னல் எகிறி குதிச்சு உள்ள போய்.." தனக்குள் முணுமுணுத்துக் கொள்ள
"என்னடா சொல்ற ஒன்னும் புரியல..?" வெண்மதி தலையை சொரிந்தாள்..
"டாக்டர்ஸ்க்கு எல்லா இடத்திலும் பர்மிட் உண்டுன்னு சொல்றேன். இதெல்லாம் ஒரு கேள்வியா..? இதுக்காக தான் என்னை உட்கார வைச்சு என்கொயரி பண்றியா.."
"அய்யோ என்கொயரியெல்லாம் இல்லடா..! எங்களுக்கெல்லாம் வரலையே.. உங்க ரெண்டு பேருக்கு மட்டும் எப்படி கண் வலி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்.. அப்ப நாங்கெல்லாம் நோய்க்கிருமிகள் தொட்டுக் கூட பார்க்க முடியாத வலிமையானவர்கள் அப்படித்தானே..?" வெண்மதி பெருமையாக முஷ்டியை மடக்கி தன் தோள்பட்டையின் பக்கத்தில் தட்டி காண்பிக்க..
"ஒரு மண்ணும் கிடையாது.. ஒருமுறை இன்பெக்ஷன் வந்து போயிடுச்சுன்னா அதுக்கான இம்யூன் பவர் உடம்புல இருக்கும்.. மறுபடி அந்த இம்யூனிட்டி அதே நோய்க்கிருமிகளை உடம்புக்குள்ள விடாது.. உங்க எல்லாருக்கும் ஏற்கனவே கண்வலி வந்திருக்கலாம்.. இல்ல வந்து அறிகுறிகள் தெரியாமலேயே போயிருக்கலாம்.. அதனால இப்ப வரல.. ஒருவேளை அடுத்த சைக்கிள் வரும்போது உங்களுக்கும் சேர்த்து வரலாம்.."
"சரி தெரியாம கேட்டுட்டேன் விடுடா..! உனக்கு வந்து திலோத்தமாவுக்கு வரலையே அது தான் கொஞ்சம் இடிக்குது.." மீண்டும் தலையை சொரிந்தாள் வெண்மதி..
"வரல.. விட்டு தொலையேன்.. பரவக்கூடாதுன்னு கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தது தப்பா..? ஏன் இவ்வளவு கேள்வி கேட்டு குடைச்சல் குடுக்கற.." எரிச்சலானான் வருண்..
"டேய் நீ போடா.. நான் ஏற்கனவே இவ கிட்ட சொன்னேன் இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு.. சந்தேகம்ன்னா உடனடியா கேட்டு தீர்த்துக்கனும்னு இவதான் எல்லார் உயிரையும் எடுக்கறா.. போதும் வெண்மதி.. தேவையில்லாம அவனை டென்ஷனாக்காதே.." சாரதாவின் அதட்டலில்..
"ம்க்கூம்.." ஒரு முணுமுணுப்புடன் உதட்டை சுழித்து அமைதியாகி விட்டாள் வெண்மதி..
அன்று வருண் காரோட்டும் போது.. பக்கத்தில் அமர்ந்திருந்த தேம்பாவணி அவன் கரத்தை இதமாக பற்றி கொண்டாள்..
வருண் தடுக்கவில்லை விட்டு உதறவில்லை.. லேசாக அழுத்தம் கொடுத்தபடி அவள் கரத்தை பற்றியிருந்தான்..
தேவைப்படும் நேரத்தில் மட்டும் மெல்ல விலகி ஸ்டியரிங்கில் கை வைத்தான்.. மீண்டும் தன் தொடை மீது அவன் கரம் வைக்கும் போது துணை தேடுவது போல் அவன் விரல்கள் தாளமிட தேம்பாவணியின் தளிர்க்கரம் அவன் விரல்களை பற்றிக்கொள்ளும்.
இருவருக்குமிடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. கைகோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் தேம்பாவணி.
வருண் அவள் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்திருந்தான். பேசுகிறேன் பேர்வழி என்று அந்த ஏகாந்த நிலையை கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.
கல்லூரி வந்ததும் காரை நிறுத்திவிட்டு.. அவள் முகம் பார்க்காமலிருந்தான்..
புத்தகப் பையை ஒரு கையால் நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொண்டு வெகு நேரம் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
அவள் இன்னமும் இறங்காததை கண்டு திரும்பியவன் "என்ன..?" என்றான் புருவங்கள் இடுங்க..
"கையை விட்டுட்டா நான் பாட்டுக்கு இறங்கி போயிடுவேன்..!" அவள் லேசான சிரிப்புடன் சொல்ல.. கீழே குனிந்து இறுகப் பிணைந்திருந்த இரு கரத்தையும் பார்த்தவன்.
"முதல்ல நீ என் கையை விடு.. நான் ஒன்னும் பிடிக்கல.. நீ தான் என்னை பிடிச்சுட்டு இருக்க.. இம்சை" என்று கரத்தை விடுவித்துக் கொள்ள..
"ஆமாமா நான்தான் உங்களை இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்.." என்று சிவந்திருந்த தன் கரத்தை முகத்திற்கு நேரே வைத்து அவனை பார்த்து சிரித்தபடி.. காரை விட்டு இறங்கினாள்..
"நாளைக்கு காலையிலிருந்து மனச கட்டுப்படுத்த சின்சியரா தியானம் பண்ணனும்.." கண்களை உருட்டி இதழ் குவித்து ஊதிய படி தனக்குள் சொல்லிக் கொண்டான் வருண்..
அன்றைய இரவில்..
தேம்பாவணியும் வருணும் அருகருகே அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்தனர்.
சட்டென யாரும் எதிர்பாராத நேரத்தில்.. கண்ணிமைக்கும் நொடியில் வருண் தட்டை தனக்கும் தன் தட்டை வருணுக்கும் இடமாற்றியிருந்தாள் தேம்பாவணி..
வருண் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த தட்டில் மிச்சம் இருந்ததை அமைதியாக உண்ண தொடங்கினான்..
ஹக்.. பார்த்துக் கொண்டிருந்த வெண்மதிக்கு தொண்டை குழி விக்கியது.
கண்களில் மிரட்சியுடன் திலோத்தமாவை பார்க்க அவளோ கர்ம சிரத்தையாக தனக்காக தனியாக போட்டுக் கொண்ட வெங்காய ஆம்லெட்டை பிய்த்து மடித்து வாயில் திணித்துக் கொண்டிருந்தாள்..
"சனியன்.. தின்றதுலேயே குறியா இருக்குதே.. பக்கத்துல என்ன நடக்குது.. புருஷன் என்ன பண்றான் எதை பத்தியும் அக்கறை இல்லை இதுக்கு.." வெண்மதி தலையிலடித்துக் கொண்டு பக்கத்தில் தந்தையின் காதை கடித்தாள்..
"அப்பா நீங்க எதையாவது பார்த்தீங்க..?"
"எல்லாத்தையும்தான் பார்க்கறேன்.. நீ எதை சொல்ற..?"
"தட்டு மாறிப்போச்சு.."
"ஆமா பார்த்தேன்.."
"நீங்களும் பாத்துட்டீங்களா..?"
"இன்னைக்கு என் தட்டு வைக்கறதுக்கு பதிலா மாத்தி உன் தட்டுல டிபன் வச்சுட்டா உங்கம்மா.. தாம்பாள தட்டு மாதிரி எவ்வளவு பெருசா இருக்கு பாரு.."
"கஷ்டம்.." கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக வருண் தேம்பாவணியை பார்த்தாள் வெண்மதி..
"அம்மா நீயாவது பாத்தியா..?"
"என்னடி பாக்கணும்.."
"தட்டு மாறி போச்சே..! இந்த ஜீன்ஸ் படத்துல வர்ற மாதிரி.."
" காலம் மாறிப்போச்சு.. ஜீன்ஸ் போட போறியா..? உதை வாங்குவ.. சுடிதாரோட நிறுத்திக்க.. ஜீன்ஸ் போட்டு எங்கள பயமுறுத்துற வேலையெல்லாம் வேண்டாம்."
"மம்மிக்கு காது போச்சு.. டாடிக்கு கண்ணு போச்சு.. ஐயோ இப்ப நான் என்ன செய்வேன்.. இந்த திலோத்தமா லூசு வேற எதையும் கண்டுக்க மாட்டேங்குது.. ஒருவேளை நான் பாக்கறதெல்லாம் பொய்யா..? இவன்கிட்ட கேட்டா நாய் மாதிரி கடிப்பான். சரி.. அவ கிட்ட கேட்கலாம்.."
"இஸ்க்.. இஸ்க்.. தேம்பா இப்படி வா.." எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரும் தலையை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்து ரகசியமாக பேசினர்.
"ஏய் இப்ப எதுக்கு உன் தட்டை அவனுக்கு மாத்தி வச்ச..?"
"எப்ப அக்கா..?"
"என்னை ஏமாத்த முடியாது நான் பார்த்தேன்.."
"ஐயோ சத்தியமா இல்ல.. என்னோட தட்டை எனக்கு நேரா நகர்த்தி வச்சுக்கிட்டேன். தூரத்திலிருந்து பார்க்கும்போது உங்களுக்கு மாத்தி வச்ச மாதிரி தெரிஞ்சுருக்கும்."
"அப்படியா சொல்ற..?"
"பின்னே..! நான் என்ன பொய்யா சொல்ல போறேன்.. நான் எதுக்காக அவர் தட்டிலருந்து எடுத்து சாப்பிடணும்.. அதான் என் தட்டுலேயே நிறைய வெரைட்டி இருக்கே..!"
"ஆனா உன் ப்ளேட்ல இட்லிதானே இருந்துச்சு. இப்ப எப்படி சப்பாத்தி வந்துச்சு..?'
"ஆன்ட்டிதான் சப்பாத்தி வச்சுக்கோன்னு பரிமாறினாங்க..! நீங்க பாக்கலையா.?" தேம்பாவணி ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க.. வெண்மதி குழம்பி போனாள்..
"ஒரு வேளை என் பார்வையிலதான் தப்பு போலிருக்கு.. இப்படி நேரா இழுத்ததை இப்படி சுத்தி நகர்த்தின மாதிரி நான்தான் தப்பா புரிஞ்சுகிட்டேனோ.." கையால் ஆக்ஷனெல்லாம் செய்து பார்க்க..
"என்னமா தனியா பேசிக்கற.. மாப்பிள்ளையோட பிரிவு ரொம்ப வாட்டுதா..! பேசாம ஊருக்கு கிளம்பி போறியா..!" ராஜேந்திரன் பக்கத்தில் வந்து கேட்க..
"ஆமா என்ன ஊருக்கு அனுப்பறதிலேயே குறியா இருங்க.. இங்க என்ன நடக்குதுன்னு யாருக்காவது புரியுதா..?" கோபத்தில் அவள் கத்தவும்
"என்ன நடக்குது..?" கோரசாக கேட்டனர் அனைவரும்..
"அ.. அது.. ஒன்னும் நடக்கல.."
நோ எவிடன்ஸ்.. தென் ஹவ் புரூவ் உதட்டைப் பிதுக்கியபடி தோசையை மௌனமாக உள்ளிறக்கினாள்..
டைனிங் டேபிள் சற்று தொலைவில் இரண்டு படிக்கட்டுகள் இறங்கிய தூரத்தில் தொலைக்காட்சி அனாதையாய் ஓடிக்கொண்டிருந்தது..
ஏதோ ஒரு ஹாரர் படம்..
கைபேசிக்கு பேய் பிடிப்பது போல்..
ஒன்றும் பாதியுமாக விழுந்த சத்தத்தில்..
"ஏன்க்கா.. ஃபோனுக்கெல்லாம் கூட பேய் பிடிக்குமா.." என்று தன் சந்தேகத்தை வெண்மதியிடம் கேட்டாள் தேம்பாவணி..
"யாருக்கு தெரியும்.. இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்னுதானே டிஸ்க்ளைமர் போட்டானுங்க.. இருக்குமோ என்னவோ..?" வெண்மதி உணவோடு வார்த்தைகளை மென்று கொண்டே சொல்ல..
"அப்ப ரிமோட்டுக்கு கூட பேய் பிடிக்கும் இல்ல..!" என்ற கேள்வியில் வருணுக்கு பலமாக புறையேறியது..
"ஏய் மெதுவாடா..! ஏன் இப்படி அவசர அவசரமா மென்னு முழுங்கற.." ஒரு பக்கம் சாரதாவும் மறுபக்கம் தேம்பாவணியும் அவன் தலையை தட்டி தண்ணீர் பருக
கொடுத்தனர்.. திலோத்தமா ஒரு பார்வையோடு நிறுத்திக் கொண்டாள்..
"ரிமோட்டுக்கு பேய் பிடிக்குமா..? என்ன உளர்ற..?" வெண்மதி விழித்தாள்..
"ரிமோட் அங்கயும் இங்கேயுமா கால் முளைச்ச மாதிரி நடக்குது துடிக்குது வைப்ரேட் ஆகுது.." சந்திரமுகி வடிவேலு மாடுலேஷனில் தேம்பாவணி சொல்ல..
"என்ன ரிமோட் வைப்ரேட் ஆகுதா? ஏய் லூசு அது ஃபோனா இருக்கும்.. வைப்ரேஷன்ல அங்கேயுமா இங்கேயுமா நகர்ந்திருக்கும்.. நீ ஏதாவது உளறாதே.." என்று சிரித்து தன் பயத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள் வெண்மதி..
"இல்ல.. இல்ல.. அது ரிமோட்தான்.. நீளமா இருந்துச்சு.. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அது டிவி பக்கத்துல இருந்தது.."
"ஏய்நீ வாய மூட போறியா இல்லையா..?" வருண் அதட்டலை அவள் பொருட்படுத்தவில்லை..
"உண்மையைத்தானே சொல்றேன்.. இந்த வீட்டுக்குள்ள ஏதோ பேய் இருக்குனு நினைக்கிறேன்.. அது ரிமோட்டுக்குள்ள புகுந்துடுச்சு.." தீவிர பாவனையுடன் தேம்பாவணி சொல்லவும் திகில் நிறைந்த முகத்துடன் அவளை பார்த்தாள் வெண்மதி..
"என்ட தெய்வமே.. ஐயையோ.. இது என்ன வித்தியாசமான பேயா ரிமோட்டுக்குள்ள போய் உட்கார்ந்துருக்கு.. ரிமோட் பேயா இருந்தாலும் காவு கேட்குமே.. நீ வேற கன்னிப்பொண்ணா இருக்கியே என் தங்கமே..! ஜாக்கிரதையா இருடி செல்லம்.." வெண்மதி புலம்பவும்..
"என்னங்க உங்களுக்கு தெரிஞ்ச மலையாள நம்பூதிரி ஒருத்தர் நம்ம ஊருக்கு வந்திருக்கிறதா சொன்னிங்களே.." ஃபோன் பண்ணி அவரை வீட்டுக்கு வர சொல்றீங்களா.." சாரதா ராஜேந்திரனிடம் சொல்ல.. அவர் அலைபேசியை எடுக்க..
"எல்லாரும் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கீங்களா..?" வருணின் சத்தத்தில் அனைவரும் திகைத்து அவன் முகம் பார்த்தனர்..
"அவதான் தூக்க கலக்கத்துல ஏதோ உளர்றான்னா உங்களுக்குமா அறிவு இல்ல.. பேயாவது பிசாசாவது.. படிச்சவங்கதானே நீங்கல்லாம்..! எல்லாரும் சாப்பிட்டுட்டு போய் அமைதியா தூங்குங்க.." என்று விட்டு தேம்பாவணி ஒரு பார்வை பார்க்க..
தட்டை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தாள் அவள்..
அன்று இரவு தேம்பாவணியின் அறைக்கு செல்லவில்லை வருண்..
மறுநாள்..
"டேய் வருண் ஒரு முக்கியமான விஷயம் இப்படி வாயேன்.." அவனை இழுத்துக்கொண்டு தனியாக வந்தாள் வெண்மதி..
"டேய்.. இங்க நடக்கற எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கேன்.."
"எது அந்த பேயா..?"
"பேயாவது நாயாவது.. அது இல்லடா.. தேம்பாவணிக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பாத்திருக்கேன்.."
"என்ன..?" அவன் கத்தியதில் பக்கத்திலிருந்த பீங்கான் ஃப்ளவர் வாஷ் அதிர்ந்து கீழே விழுந்தது..
"என்னடா நெஞ்சு வலி வந்துருச்சா? ஏன் இப்படி கத்தற..?"
"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? படிக்கற பொண்ணுக்கு எதுக்கு மாப்ள பாக்கணும்.. அவளுக்கு இன்னும் 20 வயசு கூட ஆகல.."
"கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்.. நல்ல மாப்பிள்ளை அழகான பையன்.. இன்னும் ரெண்டு மாசத்துல ஃபாரின் கிளம்பிடுவான்.. அதுக்குள்ள தேம்பாவணிக்கும் அவனுக்கும் ஒரு கனெக்சனை ஏற்படுத்தி.."
"இந்த வேலைக்கு பேரு என்ன தெரியுமா..?"
"எந்த பேரா வேணா இருந்துட்டு போகட்டும்.. என் வீட்டுக்காரர் வழி சொந்தம். தேம்பாவணி பாதுகாப்பா இருப்பா..!"
"அக்கா ஏற்கனவே அவ பிரச்சனையில இருக்கிறது போதாதா.. சத்யானு ஒருத்தன் அவ வாழ்க்கையை சீரழிச்சது பத்தாதா..?"
"இவன் அப்படியெல்லாம் இல்லடா.. ரொம்ப நல்லவன்.. சின்ன குழந்தையிலிருந்து இவனை பாத்துட்டு இருக்கேன்.. கிட்டத்தட்ட இவனும் எனக்கு தம்பி மாதிரிதான்..!"
"முதல் கல்யாணத்திலிருந்து டிவோர்ஸ் வாங்கணும்.. அதுக்கப்புறமாதான் அடுத்த கல்யாணம் பண்ண முடியும்.. உன் இஷ்டத்துக்கு இங்க வேலை நடக்காது.."
"அதெல்லாம் பணம் கொடுத்தா எல்லா வேலையும் அமர்க்களமா நடக்கும்.. கவலைப் படாத நான் பாத்துக்கறேன்.. எப்படியாவது இந்த பொண்ண நல்ல இடத்துல சந்தோஷமா வாழ வைக்கணும் அதுதான் எனக்கு வேணும்."
"இப்ப அவ சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்..?"
"என்னடா பேசற..? எத்தனை நாளைக்கு நாம கவனிச்சுக்க முடியும்.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..? முதல்ல அவ ரவி கிருஷ்ணாவ பாக்கட்டும்.. அப்புறமா என்னன்னு பேசி முடிவு பண்ணிக்கலாம்.."
"யாரது ரவி கிருஷ்ணா..?"
"அதாண்டா நான் சொன்ன பையன்.. ஆள் செம ஸ்மார்ட்டா இருப்பான்.. கண்டிப்பா அவனுக்கு தேம்பாவணிய பிடிக்கும்.."
"அப்படியா..?' தலையை கோதியபடியே கேட்டவனின் குரலில் கர்வமா நக்கலா தெரியவில்லை..
"சரி உனக்கு யார் இந்த மாதிரி கேவலமான ஐடியா எல்லாம் கொடுக்கிறது..?"
"வேற யாரு அன்னைக்கு வந்திருந்தாரே உன் ஃபிரண்டு.. சூர்யதேவ்.. அவர்தான் சொன்னாரு.. மனசு தாங்காம தேம்பாவணியோட சோக கதையை சொல்லி ஒரு ஆதங்கத்தில் புலம்பிட்டேன்.. தொடர்ந்து அவளைப் பத்தி பேச போய்.. அவ்வளவு பிடிச்சிருந்தா உங்க குடும்பத்திலேயே ஒரு நல்ல பையனா பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கூடவே வச்சுக்கோங்கன்னு சொன்னாரு.. இதுவும் நல்ல ஐடியாவா இருக்க போய்.. உடனே செயல்ல இறங்கிட்டேன்.. உன் ஃபிரண்டுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.." வெண்மதி தோள்களை குலுக்கி சிரிக்க..
"அறிவுகெட்ட வெண்மதி.. யார் கேட்டாலும் அவளை பத்தி வெளிப்படையா சொல்லிடுவியா..?" காட்டு கத்தாய் கத்தினான் வருண்..
"ஏன்டா இவ்வளவு டென்ஷன் அவர் உன் பிரண்டு தானே..?" வெண்மதி ஒன்றும் புரியாமல் விழிக்க..
"ஃப்ரண்டா அவன்..? அந்த வீணா போனவன்தான் தான் இப்படி ஒரு வேலைய வேலை பார்த்து விட்டு போயிட்டான்.." பற்களை கடித்தான் வருண்..
அலைபேசியில் அழைத்து அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது. ஹிப்னோ தெரபி இல்லாமலேயே அனைத்து உண்மைகளையும் கக்க வைத்து விடுவான்..
தற்போது வருணுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை..
தொடரும்..
"என் ரூமுக்குள்ள யாரும் வராதீங்க உங்களுக்கும் கண் வலி வந்துடும்னு கதவை இழுத்து தாப்பா போட்டுகிட்டே.. காலேஜுக்கும் ரெண்டு நாள் போகல. அப்புறம் எப்படி வருணுக்கு மட்டும் கண் வலி வந்துச்சு. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரகசியமா சந்திச்சுகிட்டிங்களா..?' வெண்மதி கேட்க வருண் திகைத்து அவள் முகம் ஏறிட்டான்.
"அதாவது ரகசியமா.. அப்படின்னா தப்பான அர்த்ததுல கேக்கல. நீ போய் அவளை பார்த்தது எங்க யாருக்குமே தெரியாது இல்லையா அதைத்தான் அப்படி கேட்டேன்..!" விளக்கமும் அவளை தந்துவிட வருணுக்குள் நிம்மதி பெருமூச்சு..
"இங்க பாருங்க.. இவளை போய் பார்க்கிறதுக்கு எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. கண்வலின்னு சொன்னதும் தனியா இருன்னு நீங்க பாட்டுக்கு அவளை ரூம்ல போட்டு அடைச்சிட்டீங்க.."
"என்னது நாங்க ரூம்ல அடைச்சுட்டோமா..?" சாரதாவும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..
"அவளுக்கு கண் வலிக்கு மருந்து கொடுக்கணும் கண்ணு எப்படி இருக்குன்னு செக் பண்ணனும் ஒரு டாக்டரா இதெல்லாம் என் கடமை இல்லையா..?"
"நீ கண் டாக்டரா..?" வெண்மதி கீழ்கண்ணால் சந்தேகமாக பார்த்தபடி கேட்க.
"பேசிக் ட்ரீட்மென்ட் கூடவா தெரியாம மெடிசன் படிச்சிட்டு வந்து உட்கார்ந்துருக்கேன். என்னத்தையாவது உளறாத வெண்மதி. அவளை இங்க கூட்டிட்டு வந்தது நான்.. அவளை பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு தானே அதைத்தான் செஞ்சேன். அஃப்கோர்ஸ் மருந்து விடும்போது.. அவளை தொட்டு தூக்கி உதவி செய்யும்போது.."
"தொட்டு தூக்கி உதவி செஞ்சியா..?"
"ஆமா..? அவளால கண்ண திறக்கவே முடியல. நீங்க யாரும் பக்கத்துல கூட வரல."
"டேய் அவ எங்களை வர விடல..! உன்ன மட்டும் எப்படி உள்ள அனுமதிச்சா.. அது தான் எனக்கு புரியல.?"
"அவ என்னை மட்டும் எங்க உள்ள விட்டா..? நானாத்தான் ஜன்னல் எகிறி குதிச்சு உள்ள போய்.." தனக்குள் முணுமுணுத்துக் கொள்ள
"என்னடா சொல்ற ஒன்னும் புரியல..?" வெண்மதி தலையை சொரிந்தாள்..
"டாக்டர்ஸ்க்கு எல்லா இடத்திலும் பர்மிட் உண்டுன்னு சொல்றேன். இதெல்லாம் ஒரு கேள்வியா..? இதுக்காக தான் என்னை உட்கார வைச்சு என்கொயரி பண்றியா.."
"அய்யோ என்கொயரியெல்லாம் இல்லடா..! எங்களுக்கெல்லாம் வரலையே.. உங்க ரெண்டு பேருக்கு மட்டும் எப்படி கண் வலி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்.. அப்ப நாங்கெல்லாம் நோய்க்கிருமிகள் தொட்டுக் கூட பார்க்க முடியாத வலிமையானவர்கள் அப்படித்தானே..?" வெண்மதி பெருமையாக முஷ்டியை மடக்கி தன் தோள்பட்டையின் பக்கத்தில் தட்டி காண்பிக்க..
"ஒரு மண்ணும் கிடையாது.. ஒருமுறை இன்பெக்ஷன் வந்து போயிடுச்சுன்னா அதுக்கான இம்யூன் பவர் உடம்புல இருக்கும்.. மறுபடி அந்த இம்யூனிட்டி அதே நோய்க்கிருமிகளை உடம்புக்குள்ள விடாது.. உங்க எல்லாருக்கும் ஏற்கனவே கண்வலி வந்திருக்கலாம்.. இல்ல வந்து அறிகுறிகள் தெரியாமலேயே போயிருக்கலாம்.. அதனால இப்ப வரல.. ஒருவேளை அடுத்த சைக்கிள் வரும்போது உங்களுக்கும் சேர்த்து வரலாம்.."
"சரி தெரியாம கேட்டுட்டேன் விடுடா..! உனக்கு வந்து திலோத்தமாவுக்கு வரலையே அது தான் கொஞ்சம் இடிக்குது.." மீண்டும் தலையை சொரிந்தாள் வெண்மதி..
"வரல.. விட்டு தொலையேன்.. பரவக்கூடாதுன்னு கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தது தப்பா..? ஏன் இவ்வளவு கேள்வி கேட்டு குடைச்சல் குடுக்கற.." எரிச்சலானான் வருண்..
"டேய் நீ போடா.. நான் ஏற்கனவே இவ கிட்ட சொன்னேன் இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு.. சந்தேகம்ன்னா உடனடியா கேட்டு தீர்த்துக்கனும்னு இவதான் எல்லார் உயிரையும் எடுக்கறா.. போதும் வெண்மதி.. தேவையில்லாம அவனை டென்ஷனாக்காதே.." சாரதாவின் அதட்டலில்..
"ம்க்கூம்.." ஒரு முணுமுணுப்புடன் உதட்டை சுழித்து அமைதியாகி விட்டாள் வெண்மதி..
அன்று வருண் காரோட்டும் போது.. பக்கத்தில் அமர்ந்திருந்த தேம்பாவணி அவன் கரத்தை இதமாக பற்றி கொண்டாள்..
வருண் தடுக்கவில்லை விட்டு உதறவில்லை.. லேசாக அழுத்தம் கொடுத்தபடி அவள் கரத்தை பற்றியிருந்தான்..
தேவைப்படும் நேரத்தில் மட்டும் மெல்ல விலகி ஸ்டியரிங்கில் கை வைத்தான்.. மீண்டும் தன் தொடை மீது அவன் கரம் வைக்கும் போது துணை தேடுவது போல் அவன் விரல்கள் தாளமிட தேம்பாவணியின் தளிர்க்கரம் அவன் விரல்களை பற்றிக்கொள்ளும்.
இருவருக்குமிடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. கைகோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் தேம்பாவணி.
வருண் அவள் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்திருந்தான். பேசுகிறேன் பேர்வழி என்று அந்த ஏகாந்த நிலையை கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.
கல்லூரி வந்ததும் காரை நிறுத்திவிட்டு.. அவள் முகம் பார்க்காமலிருந்தான்..
புத்தகப் பையை ஒரு கையால் நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொண்டு வெகு நேரம் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
அவள் இன்னமும் இறங்காததை கண்டு திரும்பியவன் "என்ன..?" என்றான் புருவங்கள் இடுங்க..
"கையை விட்டுட்டா நான் பாட்டுக்கு இறங்கி போயிடுவேன்..!" அவள் லேசான சிரிப்புடன் சொல்ல.. கீழே குனிந்து இறுகப் பிணைந்திருந்த இரு கரத்தையும் பார்த்தவன்.
"முதல்ல நீ என் கையை விடு.. நான் ஒன்னும் பிடிக்கல.. நீ தான் என்னை பிடிச்சுட்டு இருக்க.. இம்சை" என்று கரத்தை விடுவித்துக் கொள்ள..
"ஆமாமா நான்தான் உங்களை இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்.." என்று சிவந்திருந்த தன் கரத்தை முகத்திற்கு நேரே வைத்து அவனை பார்த்து சிரித்தபடி.. காரை விட்டு இறங்கினாள்..
"நாளைக்கு காலையிலிருந்து மனச கட்டுப்படுத்த சின்சியரா தியானம் பண்ணனும்.." கண்களை உருட்டி இதழ் குவித்து ஊதிய படி தனக்குள் சொல்லிக் கொண்டான் வருண்..
அன்றைய இரவில்..
தேம்பாவணியும் வருணும் அருகருகே அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்தனர்.
சட்டென யாரும் எதிர்பாராத நேரத்தில்.. கண்ணிமைக்கும் நொடியில் வருண் தட்டை தனக்கும் தன் தட்டை வருணுக்கும் இடமாற்றியிருந்தாள் தேம்பாவணி..
வருண் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த தட்டில் மிச்சம் இருந்ததை அமைதியாக உண்ண தொடங்கினான்..
ஹக்.. பார்த்துக் கொண்டிருந்த வெண்மதிக்கு தொண்டை குழி விக்கியது.
கண்களில் மிரட்சியுடன் திலோத்தமாவை பார்க்க அவளோ கர்ம சிரத்தையாக தனக்காக தனியாக போட்டுக் கொண்ட வெங்காய ஆம்லெட்டை பிய்த்து மடித்து வாயில் திணித்துக் கொண்டிருந்தாள்..
"சனியன்.. தின்றதுலேயே குறியா இருக்குதே.. பக்கத்துல என்ன நடக்குது.. புருஷன் என்ன பண்றான் எதை பத்தியும் அக்கறை இல்லை இதுக்கு.." வெண்மதி தலையிலடித்துக் கொண்டு பக்கத்தில் தந்தையின் காதை கடித்தாள்..
"அப்பா நீங்க எதையாவது பார்த்தீங்க..?"
"எல்லாத்தையும்தான் பார்க்கறேன்.. நீ எதை சொல்ற..?"
"தட்டு மாறிப்போச்சு.."
"ஆமா பார்த்தேன்.."
"நீங்களும் பாத்துட்டீங்களா..?"
"இன்னைக்கு என் தட்டு வைக்கறதுக்கு பதிலா மாத்தி உன் தட்டுல டிபன் வச்சுட்டா உங்கம்மா.. தாம்பாள தட்டு மாதிரி எவ்வளவு பெருசா இருக்கு பாரு.."
"கஷ்டம்.." கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக வருண் தேம்பாவணியை பார்த்தாள் வெண்மதி..
"அம்மா நீயாவது பாத்தியா..?"
"என்னடி பாக்கணும்.."
"தட்டு மாறி போச்சே..! இந்த ஜீன்ஸ் படத்துல வர்ற மாதிரி.."
" காலம் மாறிப்போச்சு.. ஜீன்ஸ் போட போறியா..? உதை வாங்குவ.. சுடிதாரோட நிறுத்திக்க.. ஜீன்ஸ் போட்டு எங்கள பயமுறுத்துற வேலையெல்லாம் வேண்டாம்."
"மம்மிக்கு காது போச்சு.. டாடிக்கு கண்ணு போச்சு.. ஐயோ இப்ப நான் என்ன செய்வேன்.. இந்த திலோத்தமா லூசு வேற எதையும் கண்டுக்க மாட்டேங்குது.. ஒருவேளை நான் பாக்கறதெல்லாம் பொய்யா..? இவன்கிட்ட கேட்டா நாய் மாதிரி கடிப்பான். சரி.. அவ கிட்ட கேட்கலாம்.."
"இஸ்க்.. இஸ்க்.. தேம்பா இப்படி வா.." எதிரெதிரே அமர்ந்திருந்த இருவரும் தலையை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்து ரகசியமாக பேசினர்.
"ஏய் இப்ப எதுக்கு உன் தட்டை அவனுக்கு மாத்தி வச்ச..?"
"எப்ப அக்கா..?"
"என்னை ஏமாத்த முடியாது நான் பார்த்தேன்.."
"ஐயோ சத்தியமா இல்ல.. என்னோட தட்டை எனக்கு நேரா நகர்த்தி வச்சுக்கிட்டேன். தூரத்திலிருந்து பார்க்கும்போது உங்களுக்கு மாத்தி வச்ச மாதிரி தெரிஞ்சுருக்கும்."
"அப்படியா சொல்ற..?"
"பின்னே..! நான் என்ன பொய்யா சொல்ல போறேன்.. நான் எதுக்காக அவர் தட்டிலருந்து எடுத்து சாப்பிடணும்.. அதான் என் தட்டுலேயே நிறைய வெரைட்டி இருக்கே..!"
"ஆனா உன் ப்ளேட்ல இட்லிதானே இருந்துச்சு. இப்ப எப்படி சப்பாத்தி வந்துச்சு..?'
"ஆன்ட்டிதான் சப்பாத்தி வச்சுக்கோன்னு பரிமாறினாங்க..! நீங்க பாக்கலையா.?" தேம்பாவணி ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க.. வெண்மதி குழம்பி போனாள்..
"ஒரு வேளை என் பார்வையிலதான் தப்பு போலிருக்கு.. இப்படி நேரா இழுத்ததை இப்படி சுத்தி நகர்த்தின மாதிரி நான்தான் தப்பா புரிஞ்சுகிட்டேனோ.." கையால் ஆக்ஷனெல்லாம் செய்து பார்க்க..
"என்னமா தனியா பேசிக்கற.. மாப்பிள்ளையோட பிரிவு ரொம்ப வாட்டுதா..! பேசாம ஊருக்கு கிளம்பி போறியா..!" ராஜேந்திரன் பக்கத்தில் வந்து கேட்க..
"ஆமா என்ன ஊருக்கு அனுப்பறதிலேயே குறியா இருங்க.. இங்க என்ன நடக்குதுன்னு யாருக்காவது புரியுதா..?" கோபத்தில் அவள் கத்தவும்
"என்ன நடக்குது..?" கோரசாக கேட்டனர் அனைவரும்..
"அ.. அது.. ஒன்னும் நடக்கல.."
நோ எவிடன்ஸ்.. தென் ஹவ் புரூவ் உதட்டைப் பிதுக்கியபடி தோசையை மௌனமாக உள்ளிறக்கினாள்..
டைனிங் டேபிள் சற்று தொலைவில் இரண்டு படிக்கட்டுகள் இறங்கிய தூரத்தில் தொலைக்காட்சி அனாதையாய் ஓடிக்கொண்டிருந்தது..
ஏதோ ஒரு ஹாரர் படம்..
கைபேசிக்கு பேய் பிடிப்பது போல்..
ஒன்றும் பாதியுமாக விழுந்த சத்தத்தில்..
"ஏன்க்கா.. ஃபோனுக்கெல்லாம் கூட பேய் பிடிக்குமா.." என்று தன் சந்தேகத்தை வெண்மதியிடம் கேட்டாள் தேம்பாவணி..
"யாருக்கு தெரியும்.. இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்னுதானே டிஸ்க்ளைமர் போட்டானுங்க.. இருக்குமோ என்னவோ..?" வெண்மதி உணவோடு வார்த்தைகளை மென்று கொண்டே சொல்ல..
"அப்ப ரிமோட்டுக்கு கூட பேய் பிடிக்கும் இல்ல..!" என்ற கேள்வியில் வருணுக்கு பலமாக புறையேறியது..
"ஏய் மெதுவாடா..! ஏன் இப்படி அவசர அவசரமா மென்னு முழுங்கற.." ஒரு பக்கம் சாரதாவும் மறுபக்கம் தேம்பாவணியும் அவன் தலையை தட்டி தண்ணீர் பருக
கொடுத்தனர்.. திலோத்தமா ஒரு பார்வையோடு நிறுத்திக் கொண்டாள்..
"ரிமோட்டுக்கு பேய் பிடிக்குமா..? என்ன உளர்ற..?" வெண்மதி விழித்தாள்..
"ரிமோட் அங்கயும் இங்கேயுமா கால் முளைச்ச மாதிரி நடக்குது துடிக்குது வைப்ரேட் ஆகுது.." சந்திரமுகி வடிவேலு மாடுலேஷனில் தேம்பாவணி சொல்ல..
"என்ன ரிமோட் வைப்ரேட் ஆகுதா? ஏய் லூசு அது ஃபோனா இருக்கும்.. வைப்ரேஷன்ல அங்கேயுமா இங்கேயுமா நகர்ந்திருக்கும்.. நீ ஏதாவது உளறாதே.." என்று சிரித்து தன் பயத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள் வெண்மதி..
"இல்ல.. இல்ல.. அது ரிமோட்தான்.. நீளமா இருந்துச்சு.. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அது டிவி பக்கத்துல இருந்தது.."
"ஏய்நீ வாய மூட போறியா இல்லையா..?" வருண் அதட்டலை அவள் பொருட்படுத்தவில்லை..
"உண்மையைத்தானே சொல்றேன்.. இந்த வீட்டுக்குள்ள ஏதோ பேய் இருக்குனு நினைக்கிறேன்.. அது ரிமோட்டுக்குள்ள புகுந்துடுச்சு.." தீவிர பாவனையுடன் தேம்பாவணி சொல்லவும் திகில் நிறைந்த முகத்துடன் அவளை பார்த்தாள் வெண்மதி..
"என்ட தெய்வமே.. ஐயையோ.. இது என்ன வித்தியாசமான பேயா ரிமோட்டுக்குள்ள போய் உட்கார்ந்துருக்கு.. ரிமோட் பேயா இருந்தாலும் காவு கேட்குமே.. நீ வேற கன்னிப்பொண்ணா இருக்கியே என் தங்கமே..! ஜாக்கிரதையா இருடி செல்லம்.." வெண்மதி புலம்பவும்..
"என்னங்க உங்களுக்கு தெரிஞ்ச மலையாள நம்பூதிரி ஒருத்தர் நம்ம ஊருக்கு வந்திருக்கிறதா சொன்னிங்களே.." ஃபோன் பண்ணி அவரை வீட்டுக்கு வர சொல்றீங்களா.." சாரதா ராஜேந்திரனிடம் சொல்ல.. அவர் அலைபேசியை எடுக்க..
"எல்லாரும் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கீங்களா..?" வருணின் சத்தத்தில் அனைவரும் திகைத்து அவன் முகம் பார்த்தனர்..
"அவதான் தூக்க கலக்கத்துல ஏதோ உளர்றான்னா உங்களுக்குமா அறிவு இல்ல.. பேயாவது பிசாசாவது.. படிச்சவங்கதானே நீங்கல்லாம்..! எல்லாரும் சாப்பிட்டுட்டு போய் அமைதியா தூங்குங்க.." என்று விட்டு தேம்பாவணி ஒரு பார்வை பார்க்க..
தட்டை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தாள் அவள்..
அன்று இரவு தேம்பாவணியின் அறைக்கு செல்லவில்லை வருண்..
மறுநாள்..
"டேய் வருண் ஒரு முக்கியமான விஷயம் இப்படி வாயேன்.." அவனை இழுத்துக்கொண்டு தனியாக வந்தாள் வெண்மதி..
"டேய்.. இங்க நடக்கற எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை கண்டுபிடிச்சு கொண்டு வந்திருக்கேன்.."
"எது அந்த பேயா..?"
"பேயாவது நாயாவது.. அது இல்லடா.. தேம்பாவணிக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பாத்திருக்கேன்.."
"என்ன..?" அவன் கத்தியதில் பக்கத்திலிருந்த பீங்கான் ஃப்ளவர் வாஷ் அதிர்ந்து கீழே விழுந்தது..
"என்னடா நெஞ்சு வலி வந்துருச்சா? ஏன் இப்படி கத்தற..?"
"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? படிக்கற பொண்ணுக்கு எதுக்கு மாப்ள பாக்கணும்.. அவளுக்கு இன்னும் 20 வயசு கூட ஆகல.."
"கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்.. நல்ல மாப்பிள்ளை அழகான பையன்.. இன்னும் ரெண்டு மாசத்துல ஃபாரின் கிளம்பிடுவான்.. அதுக்குள்ள தேம்பாவணிக்கும் அவனுக்கும் ஒரு கனெக்சனை ஏற்படுத்தி.."
"இந்த வேலைக்கு பேரு என்ன தெரியுமா..?"
"எந்த பேரா வேணா இருந்துட்டு போகட்டும்.. என் வீட்டுக்காரர் வழி சொந்தம். தேம்பாவணி பாதுகாப்பா இருப்பா..!"
"அக்கா ஏற்கனவே அவ பிரச்சனையில இருக்கிறது போதாதா.. சத்யானு ஒருத்தன் அவ வாழ்க்கையை சீரழிச்சது பத்தாதா..?"
"இவன் அப்படியெல்லாம் இல்லடா.. ரொம்ப நல்லவன்.. சின்ன குழந்தையிலிருந்து இவனை பாத்துட்டு இருக்கேன்.. கிட்டத்தட்ட இவனும் எனக்கு தம்பி மாதிரிதான்..!"
"முதல் கல்யாணத்திலிருந்து டிவோர்ஸ் வாங்கணும்.. அதுக்கப்புறமாதான் அடுத்த கல்யாணம் பண்ண முடியும்.. உன் இஷ்டத்துக்கு இங்க வேலை நடக்காது.."
"அதெல்லாம் பணம் கொடுத்தா எல்லா வேலையும் அமர்க்களமா நடக்கும்.. கவலைப் படாத நான் பாத்துக்கறேன்.. எப்படியாவது இந்த பொண்ண நல்ல இடத்துல சந்தோஷமா வாழ வைக்கணும் அதுதான் எனக்கு வேணும்."
"இப்ப அவ சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்..?"
"என்னடா பேசற..? எத்தனை நாளைக்கு நாம கவனிச்சுக்க முடியும்.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..? முதல்ல அவ ரவி கிருஷ்ணாவ பாக்கட்டும்.. அப்புறமா என்னன்னு பேசி முடிவு பண்ணிக்கலாம்.."
"யாரது ரவி கிருஷ்ணா..?"
"அதாண்டா நான் சொன்ன பையன்.. ஆள் செம ஸ்மார்ட்டா இருப்பான்.. கண்டிப்பா அவனுக்கு தேம்பாவணிய பிடிக்கும்.."
"அப்படியா..?' தலையை கோதியபடியே கேட்டவனின் குரலில் கர்வமா நக்கலா தெரியவில்லை..
"சரி உனக்கு யார் இந்த மாதிரி கேவலமான ஐடியா எல்லாம் கொடுக்கிறது..?"
"வேற யாரு அன்னைக்கு வந்திருந்தாரே உன் ஃபிரண்டு.. சூர்யதேவ்.. அவர்தான் சொன்னாரு.. மனசு தாங்காம தேம்பாவணியோட சோக கதையை சொல்லி ஒரு ஆதங்கத்தில் புலம்பிட்டேன்.. தொடர்ந்து அவளைப் பத்தி பேச போய்.. அவ்வளவு பிடிச்சிருந்தா உங்க குடும்பத்திலேயே ஒரு நல்ல பையனா பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கூடவே வச்சுக்கோங்கன்னு சொன்னாரு.. இதுவும் நல்ல ஐடியாவா இருக்க போய்.. உடனே செயல்ல இறங்கிட்டேன்.. உன் ஃபிரண்டுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.." வெண்மதி தோள்களை குலுக்கி சிரிக்க..
"அறிவுகெட்ட வெண்மதி.. யார் கேட்டாலும் அவளை பத்தி வெளிப்படையா சொல்லிடுவியா..?" காட்டு கத்தாய் கத்தினான் வருண்..
"ஏன்டா இவ்வளவு டென்ஷன் அவர் உன் பிரண்டு தானே..?" வெண்மதி ஒன்றும் புரியாமல் விழிக்க..
"ஃப்ரண்டா அவன்..? அந்த வீணா போனவன்தான் தான் இப்படி ஒரு வேலைய வேலை பார்த்து விட்டு போயிட்டான்.." பற்களை கடித்தான் வருண்..
அலைபேசியில் அழைத்து அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது. ஹிப்னோ தெரபி இல்லாமலேயே அனைத்து உண்மைகளையும் கக்க வைத்து விடுவான்..
தற்போது வருணுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை..
தொடரும்..
Last edited: