- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
துயரங்கள் அத்தோடு ஒழிந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..
ஒரு ஒண்டு குடுத்தன லைன் வீட்டில் குழந்தையோடு குடியிருந்தாள் அருந்ததி..
நான்கு வீட்டுக்கு ஒரு கழிப்பறை.. அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த முடியாது..
தாய் வீடும் சரி புகுந்த வீடும் சரி சொந்த வீடு.. இது போன்ற கழிப்பறை உபயோகிக்கும் பிரச்சினை.. தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை..!
ஆனால் மற்ற கொடுமைகளோடு ஒப்பிடும்போது இந்த கஷ்டத்தை தாங்கி கொள்ளலாம் என்று தோன்றியது..
காலையில் பள்ளிக்கு சென்று விடும் சந்திரமதி நான்கு மணிக்கு குழந்தைகளோடு வீடு திரும்பி கதவை பூட்டிக் கொள்ளுவாள்..
அதன்பிறகு அம்மா வந்த பிறகுதான் கதவை திறப்பாள்.. விபரீதமாய் பிரச்சினையை இழுத்து வைத்து அம்மாவிற்கு தொல்லை தரும் சுட்டிக்கார பெண் இல்லை சந்திரமதி..
ஏதேனும் இரண்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கி கையில் கொடுத்து விட்டால் போதும்.. நாள் முழுக்க அதனோடு விளையாடிக் கொண்டிருப்பாள்.. அந்த வகையில் அருந்ததிக்கு கஷ்டமில்லை..
படிப்பு இல்லாமல் தான் பட்ட துயரத்தை தன் மகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்தோடு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துதான் படிக்க வைத்தாள்..
கைக்கு மீறிய செலவு.. இருந்தாலும் ஓவர் டைம் அட்வான்ஸ்.. லோன் கடன் எப்படியோ வாங்கி சமாளித்து மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் கெட்ட காலமாக சூப்பர்வைசர் தனது விகார புத்தியை காட்ட ஆரம்பித்திருந்தான்..
"புருஷன் துணை இல்லாம தனியா இருக்கிறது உனக்கு எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் புரியுது.. உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு உடம்பு தேவைன்னு ஒன்னு இருக்குமே.. உனக்கும் சின்ன வயசு தானே.. மத்த ஆம்பளைங்க அழகை பார்த்து உன்னை விட்டு விலகிப் போகலாம்.. ஆனால் எனக்கு உன்னை பிடிச்சிருக்குது.. நான் உனக்கு வாழ்க்கை தரேன்.."
இரண்டு வயது வந்த பிள்ளைகளின் தகப்பன்.. குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் இப்படி சொல்லும் போது அவன் கோரம் கலந்த பெருந்தன்மையை ரசிக்கவா முடியும்..
"ஊர்ல இருக்கிற பெண்களுக்கு நீங்க ஆதரவு தரும்போது உங்க மனைவியை யாரு சார் பாத்துக்குவாங்க.. பார்த்து சார்..
அவங்களுக்கும் யாராவது இந்த மாதிரி ஆதரவு தந்திட போறாங்க.. ஜாக்கிரதையா இருங்க..!" இதைவிட நாசுக்காக ஒரு பெண்ணால் எப்படி சொல்ல முடியும்..
அடங்கிப் போகும் பெண்களுக்கு மத்தியில் எதிர்த்து நின்று கேள்வி கேட்ட அருந்ததியின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..
"என்னடி சொன்ன..? நீ ஃப்ரீயா கூப்பிட்டா கூட எவனும் வரமாட்டான்.. இப்படி ஒரு மூஞ்சிய வச்சுக்கிட்டு எங்கிட்டேயே உன் எகத்தாள பேச்சை காட்டுறியாக்கும்.. உன்னை எங்க சொல்லி என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. பாத்துக்கறேன்டி" என்று சொல்லிவிட்டு சென்றான்..
அது என்னவோ தன்னை சுற்றி வேலை செய்ய வரும் பெண்களை.. டேக் இட் ஃபார் கிராண்டட் என்ற ரீதியில் தவறாக பார்க்கும் இந்த ஆண்களுக்கு தங்கள் வீட்டு பெண்களை யாராவது அதே கண்ணோட்டத்தில் இழுத்து வைத்து பேசினால் மட்டும் கோபம் பொங்கி கொண்டு வருகிறதே..!
தன்வீட்டுப் பெண் தங்கம்.. குடும்ப கஷ்டத்துக்காக வேலை செய்ய வரும் பெண்கள் தகரங்கள்..
தன் கோரிக்கையை மறுத்துவிட்ட அருந்ததியை மறைமுகமாக பயங்கரமாக பழி வாங்கினான். சூப்பர்வைசர் பழனி..
எவ்வளவு புரொடக்ஷன் கொடுத்தாலும் திட்டு விழுந்தது.. அதிக வேலைகளை தந்து குறைவாகவே ப்ரொடக்ஷன் கணக்கு எடுத்தான்.. செக்ஷன் செக்ஷனாக அலைக்கழித்தான்.. அந்த பிரிவில் யார் தவறு செய்தாலும் பழியை தூக்கி அவள் மீது போட்டு மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வைத்தான்..
"ஏன் சார் இப்படி பழி வாங்கறீங்க நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஒரு பொண்ணு ஒழுக்கமானவளா இருக்கணும்னு நினைக்கறது அவ்ளோ பெரிய தப்பா..?"
"ஹாஹா.. எனக்கு நீயெல்லாம் ஒரு ஆளா..! ஏதோ போனா போகுதுன்னு பாவம் பார்த்தேன்.. உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. என்ன சொன்ன..? ஒழுக்கமானவளா இருக்கணும்னு நினைக்கறியா.. நீயே தப்பு செய்யனும்னு நினைச்சாலும் உன் மூஞ்சிக்கு எவனும் கிட்ட வரமாட்டான்.. இந்த மூஞ்சி பிடிக்காம தானே தாலி கட்டுன புருஷன் கூட விட்டுட்டு போயிருப்பான்.. அப்படியே பெரிய அழகி இவ.. ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிறாங்களாம்.. அடச்சீ.. போய் வேலையை பாரு..!" வார்த்தைகளை கண்டமேனிக்கு சிதறடித்து விட்டு அவன் சென்று விட.. மண்ணிலிருந்து வெடித்து கிளம்பும் நீரூற்றுப் போல் குமிழியிட்டு பொங்கிய வருத்தத்தையும் அழுகையையும் முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு நகர்ந்தாள் அருந்ததி..
ஆனால் அங்கே வேலை செய்யவே முடியவில்லை.. அந்த அளவுக்கு சித்திரவதை.. தன்னிடம் சிரித்து பேசும் பெண்களுக்கு அதிக சலுகைகள் தந்தான் அந்த சூப்பர்வைசர்.. அருந்ததியை அனைவரும் முன்பும் அவமானப்படுத்தினான்.. அவள் உழைப்புக்கு மதிப்பில்லாமல் போனது.
"உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. நீயாவே வேலையை விட்டு நின்னுடு அருந்ததி. இந்த ஆள் வேணும்னே உன்னை கரம் வச்சு பழி வாங்கறான்.." அவள் மீது அக்கறை கொண்ட சில உள்ளங்கள் மட்டும் இப்படி சொல்லி அருந்ததியை அனுதாபமாக பார்த்தன..
அவளுக்கும் வேறு வழி இல்லையே..!
அழகான பெண்கள் என்று சமூகத்தால் முத்திரை குத்தப்படும் பெண்களுக்கு தான் இது போன்ற பிரச்சனைகள் என்றால் அழகே இல்லை என்று அதே ஆட்களால் ஒதுக்கப்படும் தன் போன்ற பெண்களுக்கும், இதே கொடுமைகள்.. வெறுத்துப் போனாள் அருந்ததி..
தெரிந்த தோழி ஒருத்தியின் மீது வேறு வேலை தேடிக்கொண்டு முறைப்படி எழுதிக் கொடுத்து தான் வேலையை விட்டு நின்றிருந்தாள்..
ஆனாலும் அந்த பிஎஃப்.. செட்டில்மெண்ட் பைசாவை கொடுப்பதற்கு அவளை நெடு நாட்களாக இழுத்தடித்துக் அலைய வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.. எல்லாம் பழனியின் செல்வாக்கு..
கிட்டத்தட்ட ஆறு வருட உழைப்பு..!
கால் நோக அலைக்கழித்து ஒரு வழியாக வந்து சேர்ந்த அந்த சொற்பத்தொகையும் சந்திரமதியின் படிப்புக்கு தான் செலவானது..
அதன் பிறகு தான் ரெடி ஃபுட் டெலிவரி கம்பெனியில் தெரிந்த தோழியின் சிபாரிசு மூலம் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள்..
அப்பாடா என்று ஆசுவாசப்பட்டு நிம்மதி பெருமூச்சு எடுக்க முடியவில்லை..! இத்தனை வருடங்களாக தொந்தரவு தராத பிரபாகர்.. வீட்டு வாசலில் வந்து நின்று கத்த ஆரம்பித்திருந்தான்..
"ஏய் நீ வரலைன்னா போடி.. என் பிள்ளையை என்கிட்ட குடுத்துடு.. அவளை நான் வளர்த்துக்கறேன்.. எனக்குதான பெத்த.. இல்ல வேற எவனுக்காவது பெத்தியா..! வெளிய வாடி.. நா..** மு**.." அடிக்கடி வந்து கெட்ட வார்த்தைகளால் கத்தி சண்டை போட்டு அவளை அவமானப்படுத்தினான்..
"என்னமா உன் புருஷன் எப்ப பாரு வந்து கத்திகிட்டே இருக்கான்.. ஒன்னு அவங்கூட போய் வாழு.. இல்லைனா வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற இடம் பாத்துக்க.. அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவங்க நிம்மதியா இருக்க வேண்டாமா..?" குடியிருப்பு வாசிகளிடமிருந்து லேசாக சலசலப்பு தொடங்கியது..
சிலரிடமிருந்து "உன் புருஷன் இப்படி வந்து தொந்தரவு பண்றதா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணு.. பிடிக்கலைன்னா விவாகரத்து கொடுத்துடு.. அப்புறம் அவன் உன்னை தொந்தரவு பண்ணவே முடியாது.." ஏகப்பட்ட ஆலோசனைகள்..
இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு யார் காவல் நிலையத்திற்கும் வீட்டிற்கும் நடையாக நடப்பது..!
விவாகரத்து வாங்க என்ன செய்ய வேண்டும்.. எந்த வக்கீலை பார்க்க வேண்டும் வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டுமா..! பாவம் அவளுக்கு எதுவும் தெரியவில்லை..
"இந்த பொம்பளைய பத்தி உங்களுக்கு தெரியாது.. இவ ஒரு தே**யா.. பலான தொழில் பண்றவ.. இவளை இங்க வச்சிருந்தா உங்களுக்கு தான் பிரச்சனை வரும்.. என் அப்பாவையே வளைச்சு போட்டு அசிங்கமா நடக்க பாத்தா.. ஏண்டி இப்படி செய்யற.. குடும்ப பொண்ணா நடந்துக்கோனு கண்டிச்சு பேசினதுக்கு புள்ளையோட வீட்டை விட்டுஓடி வந்துட்டா.. இந்த புறம்போக்கு கூட இருந்தா என் பொண்ணும் இவள மாதிரியே கழிசடையா போய்டும்.. இவ எனக்கு தேவையில்லை.. ஆனா என் புள்ள எனக்கு வேணும்.. இங்க இருக்கறவங்க தான் இவளுக்கு புத்திமதி சொல்லி என் புள்ளையை எனக்கு வாங்கி தரணும்..!"
அவன் தினம் வந்து கத்திக் கொண்டிருக்க.. அருந்ததிக்கோ வெளியே தலை காட்ட முடியாத நிலை..
அந்த வீட்டையும் காலி செய்து கொண்டு தனி வீடு எடுத்து குடிப்பகுந்தாள் அருந்ததி..
இது சற்று பெரிய வீடு.. வீட்டுக்குள் ஒன்று வெளியே ஒன்று என இரண்டு கழிப்பறை வசதிகள் உண்டு..
ஒரு பெரிய படுக்கையறை அதனோடு சேர்ந்த அட்டாச்டு பாத்ரூம் ஒரு கூடம் ஒரு சமையலறை..!
வீட்டில் பேய் இருக்கிறது என்று யாரோ கதை கட்டி விட்ட காரணத்தால் அந்த வீட்டிற்கு யாரும் குடி போக முன் வரவில்லை..
வெளியிலிருக்கும் பிசாசுகளை விட வீட்டுக்குள் இருக்கும் பேய்கள் எவ்வளவோ மேல் என்று முடிவு செய்துவிட்டாள் போலும்.. அங்கேயே குடி வந்து விட்டாள்..
பேய் பிசாசு பில்லி சூனியம் எல்லாம் வதந்தி என்று அவள் கூடி வந்த சில மாதங்களிலேயே மற்றவர்களுக்கு தெரிந்து போய்விட்டது..
நான்காயிரம் ரூபாய் வாடகைக்கு அந்த வீட்டை அருந்ததிக்கு தந்திருந்தார் வீட்டு உரிமையாளர்.. அட்வான்ஸ் கூட மிக குறைவுதான்..
வேலையில் பனிரென்டாயிரம் சம்பளம் இன்சென்டிவ் இரண்டாயிரம் என சேர்த்து நான்காயிரம் வாடகை கொடுத்து மற்ற குடும்ப செலவுகளை கவனிக்க முடியாமல் திணறிப் போனவள் தனி வீடு என்பதால் காலை மட்டும் இட்லி கடை போடலாம் என்று முடிவு செய்திருந்தாள்..
சின்ன குழந்தைக்கு.. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வேலை செல்லும் பெண்மணிகளுக்கு என அனைவரும் அவளிடமே வந்து இட்லி வாங்கிச் செல்ல ஓரளவிற்கு வியாபாரம் சூடு பிடித்தது..
ஆனாலும் சந்திரமதி படிப்புக்காக வாங்கிய கடன் வட்டி குட்டி போட்டு வளர்ந்து கொண்டே செல்ல.. ஆயிரக்கணக்கில் குழந்தையின் படிப்புக்காக பணத்தை செலவழிக்க முடியாமல்.. படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும் என்ற எண்ணத்தோடு மகளை அரசாங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள்..
அதில் சந்திரமதிக்கு அன்னையின் மீது மிகுந்த கோபம்..
வேலை பளுவால் குடும்பச் செலவுகளை சமாளித்து கொண்டு.. எப்போது அந்த குடிகார கணவன் இங்கேயும் வந்து மானத்தை வாங்க போகிறானோ என்ற பயத்திலும் மன உளைச்சலிலும் தவித்துக் கொண்டிருக்கும் அருந்ததியால் சந்திரமதியிடம் சாதாரண தாய்மார்களை போல் அதிகபட்ச அன்போடு உருகி வழிய முடியவில்லை என்பதுதான் உண்மை..
தன்னைப்போல் தற்குறியாக.. அசமந்தமாக தன் மகளும் ஆகி விடக்கூடாதென அனைத்து விஷயங்களிலும் கண்டிப்போடு இருந்தாள் அருந்ததி..
தன்னைத்தான் நேசிப்பதும் அழகு படுத்திக் கொள்வதும் தவறில்லை.. ஆனால் அலங்காரம் தேவையில்லை என்று கூறுகிறாள்..
அழகை விடுத்து படிப்பை பிடித்துக் கொண்டு அறிவை வளர்த்துக்கொள் என்று அழுத்தி சொல்லும் தாய்மீது சந்திரமதிக்கு அத்தனை கோபம் வருகிறது..
இந்த உலகம் என்ற பெரிய கடலில் எதிர்த்து நீச்சலடிக்க படிப்பு என்று படகும் தன்னம்பிக்கை என்ற துடுப்பும் வேண்டும்.. என்று வண்டி வண்டியாக அவள் சொல்லும் அறிவுரைகள் எதுவும் சந்திரமதியின் காதுகளை எட்டுவதே இல்லை.. தாயை மதிப்பதில்லை.. அவள் அறிவுரைகள் கசக்கிறது..
இதோ இருபத்தொன்பது வயதில் சகல சந்தோஷங்களையும் இழந்து தபஸ்வினி போல் வாழும் தாயை வளர்ந்து ஆளான பிறகு சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையோ பாசமோ சந்திரமதிக்கு துளியும் இல்லை..
தனியார் ஆங்கில பள்ளியில் படித்தபோது ஓரளவு மதிப்பெண்களை பெற்றுக் கொண்டிருந்தவள்.. இப்போது அரசாங்க பள்ளியில் சேர்த்த பிறகு மிக சுமாராகத்தான் படித்துக் கொண்டிருக்கிறாள்..
ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அருந்ததிக்கு இதுதான் எப்போது மிகப்பெரிய கவலை..!
பொறுப்பும் இல்லை.. படிப்பும் இல்லை..
தன்னை தூற்றி அவமானப்படுத்திய சொந்தங்கள்.. ஊரார் முன்பு தன்மகள் மூலம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாள்..
ஆனால் சந்திரமதி அவள் கனவை புரிந்து கொள்ளவில்லையே..!
மற்ற அம்மாக்களைப் போல் நீ இல்லை.. உன்னிடம் அழகும் இல்லை அன்பும் இல்லை என்பது சந்திரமதியின் குற்றச்சாட்டு..
எனக்கு அனுசரனையாக இரு.. நான் துவண்டு விழும் நேரத்தில் எனக்கு தோள் கொடு.. அம்மாவிடம் கொஞ்சம் கனிவாக பேச கற்றுக்கொள்.. பொறுப்பு உணர்ந்து படி.. இந்த இதயம் உனக்காக மட்டும் தான் துடிக்கிறது. என்பது அருந்ததியின் ரத்தக்கண்ணீரில் வடிக்கப்பட்ட சொல்லப்படாத ஆதங்கம்..
இப்போதும் கூட அவமானம் தந்த வலியில் தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறாள்..
தனிமையால் கிடைக்கும் ஒரே ஒரு வசதி சத்தம் போட்டு சுதந்திரமாக அழ முடியும்.. ஆறுதல் சொல்ல ஆளின்றி அப்படித்தான் அழுது கொண்டிருக்கிறாள்..
மகள் பக்கத்தில் இருந்தால் இதைக் கூட செய்ய முடியாதே..!
சந்திரமதி ஆறுதல் சொல்வாளா அலட்சியம் செய்துவிட்டு போவாளா தெரியாது.. ஆனால் மகள் முன்பு அழுவதை அருந்ததி என்றுமே விரும்பியதில்லை..
நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.. உடம்பு சோர்ந்து போய்விடுகிறது மனம் வலிக்கிறது.. இரவு தூக்கம் வரவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயம்..
கொஞ்சம் இளைப்பாறுதல் தேவை.. எங்கிருந்து கிடைக்கும்.. இந்த ஆலமரம் கை நீட்டி என்னை அரவணைத்துக் கொள்ளும்..
இப்படியே போனால் அதிகபட்ச மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு விடுவோமோ என்ற பயம்..
சந்திரமதி.. சந்திரமதி.. துணைக்காக மகளின் பெயரை மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்..
நல்லவர்களை தான் இறைவன் அதிகமாக சோதிப்பாராம்..
சோதனைக்கும் ஒரு அளவு உண்டு இல்லையா..
இதோ அடுத்த சோதனை..
அலைபேசியில் அழைப்பு..
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவள் அலைபேசியை எடுத்தாள்..
"ஹலோ நான் ஹவுஸ் ஓனர் பேசுறேன்மா.."
"சொல்லுங்க சார்.. இன்னும் ரெண்டு நாள்ல வாடகை தந்துடுவேன்.."
"நான் அதைப் பத்தி பேச வரல.. அடுத்த மாசம் வீடு காலி பண்ணிடுங்க.."
தூக்கி வாரி போட்டது அருந்ததிக்கு..
"ஏன் சார் என்ன ஆச்சு..?"
"வீடு வேணும்மா..! அவ்வளவுதான் சொல்ல முடியும்.."
"என்ன சார் இப்படி சொல்றீங்க.. திடீர்னு சொன்னா நாங்க எங்க போக முடியும்..?"
"அது உங்க பிரச்சனை.. ஏதோ அம்மாவும் குழந்தையுமா பாக்க பாவமா இருந்தீங்களேன்னு வீடு தந்தேன்.. வெளிப்படையாகவே சொல்லிடுறேன்.. அவ்ளோ பெரிய வீட்டுக்கு 4000 வாடகை ரொம்ப குறைவுமா.. அஞ்சு இந்திக்கார பசங்களை குடி வச்சா கூட ஆளுக்கு இரண்டாயிரம்னு பத்தாயிரம் வாடகை வரும்.. உங்களால எனக்கு நஷ்டம்தான்.. எனக்கும் பணத்தேவை இருக்குது.. இதெல்லாம் கட்டுபடி ஆகாது நீங்க சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க.."
அருந்ததிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை யோசிக்கக்கூட தெம்பு இல்லை..
வீட்டு உரிமையாளரின் திட்டம் இப்போதுதான் அவளுக்கு புரிகிறது..
யாரும் குடி வராத வீடு என்பதால் பாவப்பட்டு குறைந்த வாடகையில் இவளை குடியமர்த்தி இருக்கிறார்.. இப்போது வீட்டைப் பற்றிய பேய் பயம் ஊரார் மத்தியில் பொய்யென்று ஆகிவிட்டது..
இந்த நேரம் இவர்களை காலி செய்யச் சொல்லிவிட்டு வேறு யாரையாவது அதிக வாடகையில் குடியமர்த்தி கொள்ளலாமே..!
இரக்கமற்ற செயல்.. பணபிசாசுகள்.. இப்படியும் மனிதர்கள்.. கோபம் கூட வரவில்லை.. இன்னும் என்னென்ன பாக்கி வைத்திருக்கிறாய் இறைவா தன்னிலையை எண்ணி தன்மீதே கழிவிறக்கம்..
"சரிங்க சார் ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க.."
"அவ்வளவு டைம் குடுக்க முடியாதும்மா.. நீங்க ஒரு மாசத்துல வீடு காலி பண்ணிடுங்க..! அவ்வளவுதான்.." அழைப்பை துண்டித்து விட்டார் மனிதன்..
தொடரும்..
ஒரு ஒண்டு குடுத்தன லைன் வீட்டில் குழந்தையோடு குடியிருந்தாள் அருந்ததி..
நான்கு வீட்டுக்கு ஒரு கழிப்பறை.. அவசரத்திற்கு கழிவறையை பயன்படுத்த முடியாது..
தாய் வீடும் சரி புகுந்த வீடும் சரி சொந்த வீடு.. இது போன்ற கழிப்பறை உபயோகிக்கும் பிரச்சினை.. தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை..!
ஆனால் மற்ற கொடுமைகளோடு ஒப்பிடும்போது இந்த கஷ்டத்தை தாங்கி கொள்ளலாம் என்று தோன்றியது..
காலையில் பள்ளிக்கு சென்று விடும் சந்திரமதி நான்கு மணிக்கு குழந்தைகளோடு வீடு திரும்பி கதவை பூட்டிக் கொள்ளுவாள்..
அதன்பிறகு அம்மா வந்த பிறகுதான் கதவை திறப்பாள்.. விபரீதமாய் பிரச்சினையை இழுத்து வைத்து அம்மாவிற்கு தொல்லை தரும் சுட்டிக்கார பெண் இல்லை சந்திரமதி..
ஏதேனும் இரண்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்கி கையில் கொடுத்து விட்டால் போதும்.. நாள் முழுக்க அதனோடு விளையாடிக் கொண்டிருப்பாள்.. அந்த வகையில் அருந்ததிக்கு கஷ்டமில்லை..
படிப்பு இல்லாமல் தான் பட்ட துயரத்தை தன் மகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்தோடு தனியார் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துதான் படிக்க வைத்தாள்..
கைக்கு மீறிய செலவு.. இருந்தாலும் ஓவர் டைம் அட்வான்ஸ்.. லோன் கடன் எப்படியோ வாங்கி சமாளித்து மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் கெட்ட காலமாக சூப்பர்வைசர் தனது விகார புத்தியை காட்ட ஆரம்பித்திருந்தான்..
"புருஷன் துணை இல்லாம தனியா இருக்கிறது உனக்கு எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் புரியுது.. உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு உடம்பு தேவைன்னு ஒன்னு இருக்குமே.. உனக்கும் சின்ன வயசு தானே.. மத்த ஆம்பளைங்க அழகை பார்த்து உன்னை விட்டு விலகிப் போகலாம்.. ஆனால் எனக்கு உன்னை பிடிச்சிருக்குது.. நான் உனக்கு வாழ்க்கை தரேன்.."
இரண்டு வயது வந்த பிள்ளைகளின் தகப்பன்.. குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் இப்படி சொல்லும் போது அவன் கோரம் கலந்த பெருந்தன்மையை ரசிக்கவா முடியும்..
"ஊர்ல இருக்கிற பெண்களுக்கு நீங்க ஆதரவு தரும்போது உங்க மனைவியை யாரு சார் பாத்துக்குவாங்க.. பார்த்து சார்..
அவங்களுக்கும் யாராவது இந்த மாதிரி ஆதரவு தந்திட போறாங்க.. ஜாக்கிரதையா இருங்க..!" இதைவிட நாசுக்காக ஒரு பெண்ணால் எப்படி சொல்ல முடியும்..
அடங்கிப் போகும் பெண்களுக்கு மத்தியில் எதிர்த்து நின்று கேள்வி கேட்ட அருந்ததியின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..
"என்னடி சொன்ன..? நீ ஃப்ரீயா கூப்பிட்டா கூட எவனும் வரமாட்டான்.. இப்படி ஒரு மூஞ்சிய வச்சுக்கிட்டு எங்கிட்டேயே உன் எகத்தாள பேச்சை காட்டுறியாக்கும்.. உன்னை எங்க சொல்லி என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. பாத்துக்கறேன்டி" என்று சொல்லிவிட்டு சென்றான்..
அது என்னவோ தன்னை சுற்றி வேலை செய்ய வரும் பெண்களை.. டேக் இட் ஃபார் கிராண்டட் என்ற ரீதியில் தவறாக பார்க்கும் இந்த ஆண்களுக்கு தங்கள் வீட்டு பெண்களை யாராவது அதே கண்ணோட்டத்தில் இழுத்து வைத்து பேசினால் மட்டும் கோபம் பொங்கி கொண்டு வருகிறதே..!
தன்வீட்டுப் பெண் தங்கம்.. குடும்ப கஷ்டத்துக்காக வேலை செய்ய வரும் பெண்கள் தகரங்கள்..
தன் கோரிக்கையை மறுத்துவிட்ட அருந்ததியை மறைமுகமாக பயங்கரமாக பழி வாங்கினான். சூப்பர்வைசர் பழனி..
எவ்வளவு புரொடக்ஷன் கொடுத்தாலும் திட்டு விழுந்தது.. அதிக வேலைகளை தந்து குறைவாகவே ப்ரொடக்ஷன் கணக்கு எடுத்தான்.. செக்ஷன் செக்ஷனாக அலைக்கழித்தான்.. அந்த பிரிவில் யார் தவறு செய்தாலும் பழியை தூக்கி அவள் மீது போட்டு மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வைத்தான்..
"ஏன் சார் இப்படி பழி வாங்கறீங்க நான் உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சேன்.. ஒரு பொண்ணு ஒழுக்கமானவளா இருக்கணும்னு நினைக்கறது அவ்ளோ பெரிய தப்பா..?"
"ஹாஹா.. எனக்கு நீயெல்லாம் ஒரு ஆளா..! ஏதோ போனா போகுதுன்னு பாவம் பார்த்தேன்.. உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. என்ன சொன்ன..? ஒழுக்கமானவளா இருக்கணும்னு நினைக்கறியா.. நீயே தப்பு செய்யனும்னு நினைச்சாலும் உன் மூஞ்சிக்கு எவனும் கிட்ட வரமாட்டான்.. இந்த மூஞ்சி பிடிக்காம தானே தாலி கட்டுன புருஷன் கூட விட்டுட்டு போயிருப்பான்.. அப்படியே பெரிய அழகி இவ.. ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிறாங்களாம்.. அடச்சீ.. போய் வேலையை பாரு..!" வார்த்தைகளை கண்டமேனிக்கு சிதறடித்து விட்டு அவன் சென்று விட.. மண்ணிலிருந்து வெடித்து கிளம்பும் நீரூற்றுப் போல் குமிழியிட்டு பொங்கிய வருத்தத்தையும் அழுகையையும் முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு நகர்ந்தாள் அருந்ததி..
ஆனால் அங்கே வேலை செய்யவே முடியவில்லை.. அந்த அளவுக்கு சித்திரவதை.. தன்னிடம் சிரித்து பேசும் பெண்களுக்கு அதிக சலுகைகள் தந்தான் அந்த சூப்பர்வைசர்.. அருந்ததியை அனைவரும் முன்பும் அவமானப்படுத்தினான்.. அவள் உழைப்புக்கு மதிப்பில்லாமல் போனது.
"உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. நீயாவே வேலையை விட்டு நின்னுடு அருந்ததி. இந்த ஆள் வேணும்னே உன்னை கரம் வச்சு பழி வாங்கறான்.." அவள் மீது அக்கறை கொண்ட சில உள்ளங்கள் மட்டும் இப்படி சொல்லி அருந்ததியை அனுதாபமாக பார்த்தன..
அவளுக்கும் வேறு வழி இல்லையே..!
அழகான பெண்கள் என்று சமூகத்தால் முத்திரை குத்தப்படும் பெண்களுக்கு தான் இது போன்ற பிரச்சனைகள் என்றால் அழகே இல்லை என்று அதே ஆட்களால் ஒதுக்கப்படும் தன் போன்ற பெண்களுக்கும், இதே கொடுமைகள்.. வெறுத்துப் போனாள் அருந்ததி..
தெரிந்த தோழி ஒருத்தியின் மீது வேறு வேலை தேடிக்கொண்டு முறைப்படி எழுதிக் கொடுத்து தான் வேலையை விட்டு நின்றிருந்தாள்..
ஆனாலும் அந்த பிஎஃப்.. செட்டில்மெண்ட் பைசாவை கொடுப்பதற்கு அவளை நெடு நாட்களாக இழுத்தடித்துக் அலைய வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.. எல்லாம் பழனியின் செல்வாக்கு..
கிட்டத்தட்ட ஆறு வருட உழைப்பு..!
கால் நோக அலைக்கழித்து ஒரு வழியாக வந்து சேர்ந்த அந்த சொற்பத்தொகையும் சந்திரமதியின் படிப்புக்கு தான் செலவானது..
அதன் பிறகு தான் ரெடி ஃபுட் டெலிவரி கம்பெனியில் தெரிந்த தோழியின் சிபாரிசு மூலம் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள்..
அப்பாடா என்று ஆசுவாசப்பட்டு நிம்மதி பெருமூச்சு எடுக்க முடியவில்லை..! இத்தனை வருடங்களாக தொந்தரவு தராத பிரபாகர்.. வீட்டு வாசலில் வந்து நின்று கத்த ஆரம்பித்திருந்தான்..
"ஏய் நீ வரலைன்னா போடி.. என் பிள்ளையை என்கிட்ட குடுத்துடு.. அவளை நான் வளர்த்துக்கறேன்.. எனக்குதான பெத்த.. இல்ல வேற எவனுக்காவது பெத்தியா..! வெளிய வாடி.. நா..** மு**.." அடிக்கடி வந்து கெட்ட வார்த்தைகளால் கத்தி சண்டை போட்டு அவளை அவமானப்படுத்தினான்..
"என்னமா உன் புருஷன் எப்ப பாரு வந்து கத்திகிட்டே இருக்கான்.. ஒன்னு அவங்கூட போய் வாழு.. இல்லைனா வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற இடம் பாத்துக்க.. அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவங்க நிம்மதியா இருக்க வேண்டாமா..?" குடியிருப்பு வாசிகளிடமிருந்து லேசாக சலசலப்பு தொடங்கியது..
சிலரிடமிருந்து "உன் புருஷன் இப்படி வந்து தொந்தரவு பண்றதா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணு.. பிடிக்கலைன்னா விவாகரத்து கொடுத்துடு.. அப்புறம் அவன் உன்னை தொந்தரவு பண்ணவே முடியாது.." ஏகப்பட்ட ஆலோசனைகள்..
இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு யார் காவல் நிலையத்திற்கும் வீட்டிற்கும் நடையாக நடப்பது..!
விவாகரத்து வாங்க என்ன செய்ய வேண்டும்.. எந்த வக்கீலை பார்க்க வேண்டும் வக்கீல் பீஸ் கொடுக்க வேண்டுமா..! பாவம் அவளுக்கு எதுவும் தெரியவில்லை..
"இந்த பொம்பளைய பத்தி உங்களுக்கு தெரியாது.. இவ ஒரு தே**யா.. பலான தொழில் பண்றவ.. இவளை இங்க வச்சிருந்தா உங்களுக்கு தான் பிரச்சனை வரும்.. என் அப்பாவையே வளைச்சு போட்டு அசிங்கமா நடக்க பாத்தா.. ஏண்டி இப்படி செய்யற.. குடும்ப பொண்ணா நடந்துக்கோனு கண்டிச்சு பேசினதுக்கு புள்ளையோட வீட்டை விட்டுஓடி வந்துட்டா.. இந்த புறம்போக்கு கூட இருந்தா என் பொண்ணும் இவள மாதிரியே கழிசடையா போய்டும்.. இவ எனக்கு தேவையில்லை.. ஆனா என் புள்ள எனக்கு வேணும்.. இங்க இருக்கறவங்க தான் இவளுக்கு புத்திமதி சொல்லி என் புள்ளையை எனக்கு வாங்கி தரணும்..!"
அவன் தினம் வந்து கத்திக் கொண்டிருக்க.. அருந்ததிக்கோ வெளியே தலை காட்ட முடியாத நிலை..
அந்த வீட்டையும் காலி செய்து கொண்டு தனி வீடு எடுத்து குடிப்பகுந்தாள் அருந்ததி..
இது சற்று பெரிய வீடு.. வீட்டுக்குள் ஒன்று வெளியே ஒன்று என இரண்டு கழிப்பறை வசதிகள் உண்டு..
ஒரு பெரிய படுக்கையறை அதனோடு சேர்ந்த அட்டாச்டு பாத்ரூம் ஒரு கூடம் ஒரு சமையலறை..!
வீட்டில் பேய் இருக்கிறது என்று யாரோ கதை கட்டி விட்ட காரணத்தால் அந்த வீட்டிற்கு யாரும் குடி போக முன் வரவில்லை..
வெளியிலிருக்கும் பிசாசுகளை விட வீட்டுக்குள் இருக்கும் பேய்கள் எவ்வளவோ மேல் என்று முடிவு செய்துவிட்டாள் போலும்.. அங்கேயே குடி வந்து விட்டாள்..
பேய் பிசாசு பில்லி சூனியம் எல்லாம் வதந்தி என்று அவள் கூடி வந்த சில மாதங்களிலேயே மற்றவர்களுக்கு தெரிந்து போய்விட்டது..
நான்காயிரம் ரூபாய் வாடகைக்கு அந்த வீட்டை அருந்ததிக்கு தந்திருந்தார் வீட்டு உரிமையாளர்.. அட்வான்ஸ் கூட மிக குறைவுதான்..
வேலையில் பனிரென்டாயிரம் சம்பளம் இன்சென்டிவ் இரண்டாயிரம் என சேர்த்து நான்காயிரம் வாடகை கொடுத்து மற்ற குடும்ப செலவுகளை கவனிக்க முடியாமல் திணறிப் போனவள் தனி வீடு என்பதால் காலை மட்டும் இட்லி கடை போடலாம் என்று முடிவு செய்திருந்தாள்..
சின்ன குழந்தைக்கு.. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வேலை செல்லும் பெண்மணிகளுக்கு என அனைவரும் அவளிடமே வந்து இட்லி வாங்கிச் செல்ல ஓரளவிற்கு வியாபாரம் சூடு பிடித்தது..
ஆனாலும் சந்திரமதி படிப்புக்காக வாங்கிய கடன் வட்டி குட்டி போட்டு வளர்ந்து கொண்டே செல்ல.. ஆயிரக்கணக்கில் குழந்தையின் படிப்புக்காக பணத்தை செலவழிக்க முடியாமல்.. படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும் என்ற எண்ணத்தோடு மகளை அரசாங்க பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள்..
அதில் சந்திரமதிக்கு அன்னையின் மீது மிகுந்த கோபம்..
வேலை பளுவால் குடும்பச் செலவுகளை சமாளித்து கொண்டு.. எப்போது அந்த குடிகார கணவன் இங்கேயும் வந்து மானத்தை வாங்க போகிறானோ என்ற பயத்திலும் மன உளைச்சலிலும் தவித்துக் கொண்டிருக்கும் அருந்ததியால் சந்திரமதியிடம் சாதாரண தாய்மார்களை போல் அதிகபட்ச அன்போடு உருகி வழிய முடியவில்லை என்பதுதான் உண்மை..
தன்னைப்போல் தற்குறியாக.. அசமந்தமாக தன் மகளும் ஆகி விடக்கூடாதென அனைத்து விஷயங்களிலும் கண்டிப்போடு இருந்தாள் அருந்ததி..
தன்னைத்தான் நேசிப்பதும் அழகு படுத்திக் கொள்வதும் தவறில்லை.. ஆனால் அலங்காரம் தேவையில்லை என்று கூறுகிறாள்..
அழகை விடுத்து படிப்பை பிடித்துக் கொண்டு அறிவை வளர்த்துக்கொள் என்று அழுத்தி சொல்லும் தாய்மீது சந்திரமதிக்கு அத்தனை கோபம் வருகிறது..
இந்த உலகம் என்ற பெரிய கடலில் எதிர்த்து நீச்சலடிக்க படிப்பு என்று படகும் தன்னம்பிக்கை என்ற துடுப்பும் வேண்டும்.. என்று வண்டி வண்டியாக அவள் சொல்லும் அறிவுரைகள் எதுவும் சந்திரமதியின் காதுகளை எட்டுவதே இல்லை.. தாயை மதிப்பதில்லை.. அவள் அறிவுரைகள் கசக்கிறது..
இதோ இருபத்தொன்பது வயதில் சகல சந்தோஷங்களையும் இழந்து தபஸ்வினி போல் வாழும் தாயை வளர்ந்து ஆளான பிறகு சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையோ பாசமோ சந்திரமதிக்கு துளியும் இல்லை..
தனியார் ஆங்கில பள்ளியில் படித்தபோது ஓரளவு மதிப்பெண்களை பெற்றுக் கொண்டிருந்தவள்.. இப்போது அரசாங்க பள்ளியில் சேர்த்த பிறகு மிக சுமாராகத்தான் படித்துக் கொண்டிருக்கிறாள்..
ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அருந்ததிக்கு இதுதான் எப்போது மிகப்பெரிய கவலை..!
பொறுப்பும் இல்லை.. படிப்பும் இல்லை..
தன்னை தூற்றி அவமானப்படுத்திய சொந்தங்கள்.. ஊரார் முன்பு தன்மகள் மூலம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாள்..
ஆனால் சந்திரமதி அவள் கனவை புரிந்து கொள்ளவில்லையே..!
மற்ற அம்மாக்களைப் போல் நீ இல்லை.. உன்னிடம் அழகும் இல்லை அன்பும் இல்லை என்பது சந்திரமதியின் குற்றச்சாட்டு..
எனக்கு அனுசரனையாக இரு.. நான் துவண்டு விழும் நேரத்தில் எனக்கு தோள் கொடு.. அம்மாவிடம் கொஞ்சம் கனிவாக பேச கற்றுக்கொள்.. பொறுப்பு உணர்ந்து படி.. இந்த இதயம் உனக்காக மட்டும் தான் துடிக்கிறது. என்பது அருந்ததியின் ரத்தக்கண்ணீரில் வடிக்கப்பட்ட சொல்லப்படாத ஆதங்கம்..
இப்போதும் கூட அவமானம் தந்த வலியில் தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறாள்..
தனிமையால் கிடைக்கும் ஒரே ஒரு வசதி சத்தம் போட்டு சுதந்திரமாக அழ முடியும்.. ஆறுதல் சொல்ல ஆளின்றி அப்படித்தான் அழுது கொண்டிருக்கிறாள்..
மகள் பக்கத்தில் இருந்தால் இதைக் கூட செய்ய முடியாதே..!
சந்திரமதி ஆறுதல் சொல்வாளா அலட்சியம் செய்துவிட்டு போவாளா தெரியாது.. ஆனால் மகள் முன்பு அழுவதை அருந்ததி என்றுமே விரும்பியதில்லை..
நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள்.. உடம்பு சோர்ந்து போய்விடுகிறது மனம் வலிக்கிறது.. இரவு தூக்கம் வரவில்லை.. எதிர்காலத்தை நினைத்து பயம்..
கொஞ்சம் இளைப்பாறுதல் தேவை.. எங்கிருந்து கிடைக்கும்.. இந்த ஆலமரம் கை நீட்டி என்னை அரவணைத்துக் கொள்ளும்..
இப்படியே போனால் அதிகபட்ச மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு விடுவோமோ என்ற பயம்..
சந்திரமதி.. சந்திரமதி.. துணைக்காக மகளின் பெயரை மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்..
நல்லவர்களை தான் இறைவன் அதிகமாக சோதிப்பாராம்..
சோதனைக்கும் ஒரு அளவு உண்டு இல்லையா..
இதோ அடுத்த சோதனை..
அலைபேசியில் அழைப்பு..
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவள் அலைபேசியை எடுத்தாள்..
"ஹலோ நான் ஹவுஸ் ஓனர் பேசுறேன்மா.."
"சொல்லுங்க சார்.. இன்னும் ரெண்டு நாள்ல வாடகை தந்துடுவேன்.."
"நான் அதைப் பத்தி பேச வரல.. அடுத்த மாசம் வீடு காலி பண்ணிடுங்க.."
தூக்கி வாரி போட்டது அருந்ததிக்கு..
"ஏன் சார் என்ன ஆச்சு..?"
"வீடு வேணும்மா..! அவ்வளவுதான் சொல்ல முடியும்.."
"என்ன சார் இப்படி சொல்றீங்க.. திடீர்னு சொன்னா நாங்க எங்க போக முடியும்..?"
"அது உங்க பிரச்சனை.. ஏதோ அம்மாவும் குழந்தையுமா பாக்க பாவமா இருந்தீங்களேன்னு வீடு தந்தேன்.. வெளிப்படையாகவே சொல்லிடுறேன்.. அவ்ளோ பெரிய வீட்டுக்கு 4000 வாடகை ரொம்ப குறைவுமா.. அஞ்சு இந்திக்கார பசங்களை குடி வச்சா கூட ஆளுக்கு இரண்டாயிரம்னு பத்தாயிரம் வாடகை வரும்.. உங்களால எனக்கு நஷ்டம்தான்.. எனக்கும் பணத்தேவை இருக்குது.. இதெல்லாம் கட்டுபடி ஆகாது நீங்க சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க.."
அருந்ததிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை யோசிக்கக்கூட தெம்பு இல்லை..
வீட்டு உரிமையாளரின் திட்டம் இப்போதுதான் அவளுக்கு புரிகிறது..
யாரும் குடி வராத வீடு என்பதால் பாவப்பட்டு குறைந்த வாடகையில் இவளை குடியமர்த்தி இருக்கிறார்.. இப்போது வீட்டைப் பற்றிய பேய் பயம் ஊரார் மத்தியில் பொய்யென்று ஆகிவிட்டது..
இந்த நேரம் இவர்களை காலி செய்யச் சொல்லிவிட்டு வேறு யாரையாவது அதிக வாடகையில் குடியமர்த்தி கொள்ளலாமே..!
இரக்கமற்ற செயல்.. பணபிசாசுகள்.. இப்படியும் மனிதர்கள்.. கோபம் கூட வரவில்லை.. இன்னும் என்னென்ன பாக்கி வைத்திருக்கிறாய் இறைவா தன்னிலையை எண்ணி தன்மீதே கழிவிறக்கம்..
"சரிங்க சார் ஒரு மூணு மாசம் டைம் கொடுங்க.."
"அவ்வளவு டைம் குடுக்க முடியாதும்மா.. நீங்க ஒரு மாசத்துல வீடு காலி பண்ணிடுங்க..! அவ்வளவுதான்.." அழைப்பை துண்டித்து விட்டார் மனிதன்..
தொடரும்..
Last edited: