- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
சாவியை தர பயப்படும் அளவிற்கு வீட்டில் தங்கமோ கொள்ளையிடக்கூடிய விலையுயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லை..
வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000 ரூபாய் கையிருப்பு உள்ளது.. அதைத் தாண்டி வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை..! துருப்பிடித்த முக்காலியும் ஓடாத தையல் மெஷினும் மெதுவாகச் சுழலும் காத்தாடியும்.. வெளுத்துப்போன அலுமினிய பாத்திரங்களுமாய் திருட வருபவன் கூட மனமிரங்கி பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்து விட்டு செல்லும் நிலையில்தான் அவள் வறுமை குழந்தை போல் குதூகலமாக சிரித்துக் கொண்டிருக்கிறது.. பிள்ளைக்கு அம்மாவை விட்டால் வேறு கதி இல்லை என்பதை போல் இந்த வறுமைக்கும் துன்பத்திற்கும் இவளை விட்டால் வேறு போக்கிடமில்லை போலும்.. எந்த பக்கம் ஓடினாலும் தாவி வந்து முதுகில் ஏறி கொள்கிறதே..!
சாவியை அவன் கையில் தந்து விட்டு அழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தாள் அருந்ததி..
வண்டியில் ஏறி செல்ஃப் ஸ்டார்ட்டை உயிர்ப்பித்தாள்.. பேட்டரி வீக்காகி முனகியது.. எழுந்து நின்று சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிக்கரை உதைக்க.. யார் மீதான கோபத்தை என் மீது ஏன் காட்டுகிறாய் என்பதாய் உறுமி உறுமி நின்றது வண்டி..
உணவு டெலிவரி செய்யும் பணிக்கு வண்டி கட்டாயம் என்பதால் கொஞ்சமிருந்த சேமிப்பை கரைத்து இந்த பழைய வண்டியை வாங்கி இருந்தாள் அருந்ததி..
ஆனால் இந்த ஸ்கூட்டி மாதம் 2000 ரூபாய்க்கான பெட்ரோலையும் விழுங்கிக் கொண்டு.. அவ்வப்போது பழுதடைந்து ரிப்பேர் செலவையும் அவள் தலையில் வைக்கிறது..
"பழைய வண்டி இவ்வளவுதாமா ஓடும்.. பேசாம புது வண்டி வாங்கிடுங்க" அவள் நிலைமை புரியாமல் கையில் ஸ்பேனருடன் வண்டியின் பாகத்தை கழட்டிக் கொண்டே சொல்லுவார் மெக்கானிக்..
"இந்த மாசமும் ஏதாவது செலவு வச்சிடாத தெய்வமே.. என் கையில ஒரு பைசா கூட கிடையாது.." வண்டியோடு சேர்ந்து தானும் உறுமிக் கொண்டே ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள்
வீட்டு வாசல் வரை சென்று கதவை திறக்க போன மகரிஷி வண்டியோடு அருந்ததி போராடிக் கொண்டிருந்த இந்த காட்சியை கண்டுவிட்டு திரும்பி வந்தான்..
"மேடம்.." வாய்க்குள் கோங்குரா ஊறுகாவை அதக்கி வைத்திருப்பதை போல் ஆந்திர மணத்தோடு அவன் அழைக்க.. எரிச்சலாக திரும்பி பார்த்தாள் அருந்ததி..
"கொஞ்சம் கதலண்டி.. நேனு சுஸ்தானு..!"
(கொஞ்சம் நகருங்க.. நான் பாக்கறேன்..)
பாஷை தெரியவில்லை, ஆனால் நீளமான கைகள் வண்டியையும் அவனையும் காட்டி சொன்னதிலிருந்து என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்டிருந்தவள்..
"இல்ல பரவாயில்ல" என்று சொல்லிவிட்டு மீண்டும் இக்கரை உதைத்தாள்..
துரோணா மகரிஷி அங்கிருந்து நகரவில்லை..
"கிக் பண்ணும் போதே ஆக்சிலரேட்டரை ரைஸ் பண்ணுங்க மேடம்..!" மீண்டும் அவன் கரகரத்த குரல்..
உதைப்பதை நிறுத்திவிட்டு கடுப்புடன் இடுப்பில் கைவைத்து விழிகளை மூடி திறந்தாள்..
"இந்த பக்கம் வாங்க.." என்று அவன் நெருங்கி வரவும் வேறு வழியில்லாமல் அருந்ததி விலக வேண்டியதாய் போனது..
குனிந்து ஆக்ஸிலரேட்டரை ஒரு கையால் பிடித்து முறுக்கிக் கொண்டே கிக்கரை உதைத்தான்.. அவன் வேகத்திற்கு வலிமைக்கும் இரண்டே உதைதான்.. வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது..
அவன் உயரத்திற்கும் கைகளின் நீளத்திற்கும் இது சாத்தியமாயிற்று.. அவள் உயரத்திற்கு எக்கி ஆக்ஸிலரேட்டர் பிடித்துக் கொண்டு கிக்கரை உதைப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை..
"தேங்க்ஸ்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் வீட்டை நோக்கி நடந்திருந்தான் மகரிஷி..
புறப்படுவதற்கு முன் இதுநாள் வரை தன்னை அன்புக்கரம் நீட்டி அரவணைத்துக் கொண்ட அந்த வீட்டை சோகத்தோடு பார்த்தாள்..
போர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வா சாவா என்று தெரியாமல் அலைகழிக்கப் படும் அகதிபோல் மனம் கலங்கி போயிருந்தாள்..
நாளை விடியலுக்குள் வேறு வீடு தேடிக் கொள்ள முடியுமா..? ஒரு மாதமாக குட்டிக்கரணம் அடித்து தேடியும் கிடைக்காத வீடு இன்று ஒரு நாளில் கிடைத்து விடப்போகிறதா..!
எப்படிப்பட்ட வீடு கிடைத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு அவளும் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருந்தாள்..
அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டிற்கு ஐம்பதாயிரம் முன் பணமும் ஐந்தாயிரம் வாடகையும் சொல்லி அவளை மூச்சடைக்க செய்தனர்..
அதையும் தாண்டி ஓரளவு வசதியோடு ஒரு வீடு கிடைத்தது.. "உங்க வீட்டுக்காரர் எங்கே? என்ன செய்யறாரு.. மன்னிச்சிடுமா?? தனியா இருக்கற பொண்ணுக்கு வீடு தர்றதா இல்லை.. இப்படித்தான் நல்லவங்க மாதிரி வந்து குடியேறிட்டு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணி போலீஸ் கேஸ் ஆகிடுது.. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது..!" முகத்திலடித்தார் போல் வெளிப்படையாகவே மறுத்து சொல்லிவிட்டனர்..
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தீப்பெட்டி சைஸ் வீடுகள் வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வரும் வடமாநில இளைஞர்களுக்காகவே ஒதுக்கப் பட்டிருக்கிறது..
சின்னதாக ஒரு போர்ஷன் கட்டி பத்து இளைஞர்களை தங்க வைத்து பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கும் பேராசை இன்று அனேக உரிமையாளர்களிடம் வந்து விட்ட நிலையில் வீடு தேடும் உள்ளூர் வாசிகளின் நிலை பரிதாபம்தான்..
அதையும் தாண்டி பொருளாதார சிக்கலின் மத்தியில் குறைந்த வாடகையில் குடும்பமாக வாழ்வதற்கான வீட்டை தேடி கண்டுபிடித்து குடியேறுவதெல்லாம் பிரம்ம பிரயத்தனம்..
யோசிக்கக்கூட நேரமில்லாமல் டெலிவரி ஆர்டர்கள் அருந்ததியை இழுத்துக் கொள்ள.. வெயிலில் கருகி வியர்வையில் குளித்து களைப்பில் ஓய்ந்து போனாள்..
பொதுவாக உணவு நேரம் காலை ஒன்பதிலிருந்து பதினொன்று.. மதியம் ஒன்றிலிருந்து.. மூன்று மணி வரை இருக்கலாம்.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலையின் பரபரப்பில் உணவு உண்ணுவதற்கான நேர வரைமுறைகள் எதுவுமில்லாமல் கண்ட நேரத்தில் இஷ்டப்பட்ட உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர் மக்கள்..
அதுவும் நல்லதுக்கு தான் என தோன்றியது அருந்ததிக்கு.. நேரங்கால வரைமுறை இல்லாமல் அவர்கள் உணவு ஆர்டர் செய்வதால் தானே தனக்கு வேலையும் அதன் மூலம் இன்செண்டிவ்வும் கிடைக்கிறது..
மாலை நான்கு முப்பது மணி போல் தொடர்ந்து அழைப்பு..
போண்டாவும் வெங்காய பக்கோடாவும் கஸ்டமர் ஆர்டர் செய்திருக்க.. சூடு ஆறும்முன் அதை டெலிவரி செய்ய வேண்டுமென்று வேகமாக செலுத்திக் கொண்டிருந்தவள் நிற்காத அழைப்பில் வண்டியை ஓரங் கட்டினாள்..
"கனகா அக்கா நம்பர்..?" என்று கண்கள் சுருக்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..
"சந்திரமதி இந்நேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாளே..! இந்த அக்கா ஏன் இப்ப கூப்பிடுறாங்க.. ஒருவேளை மதிக்கு..?"
படபடப்போடு
"அக்கா" என்ன முடிக்கும் முன்..
"அம்மா நான் சந்திரமதி பேசுறேன்.." அவளின் குரலில் அழுகையும் கோபமும் உணர்ந்து திக்கென்ற அதிர்வுடன்..
என்னடி மதி என்ன பிரச்சனை..! என் அழற மாதிரி பேசுற.. என பதறினாள் அருந்ததி..
"யாருமா அந்த ஆளு.. நம்ம வீட்ல வந்து உட்கார்ந்துருக்காரு.."
"மதி.. மதி நீ அவர்கிட்ட பேசினியா..?"
"இல்ல.. நம்ம பெட் ரூமுக்குள்ள இருக்கார்.. கதவை சாத்தி வச்சிருக்கார்.. அவர்கிட்ட பேசவே எனக்கு பயமா இருக்குது.. நான் இவ்ளோ நேரம் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தேன்.. இப்பதான் கனகா ஆன்ட்டி வந்தாங்க.. அவங்க கிட்ட போன் வாங்கி உன்னை கூப்பிட்டேன்.."
"மதி நான் சொல்றதை கேளு.. அந்த ஆள் நம்ம வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காரு.."
"என்னம்மா சொல்ற.. அது நம்ம வீடு தானே..?"
"அது ஒன்னும் நம்ம சொந்த வீடு இல்லை புரியுதா.. நாளைக்கு காலையில நாம அந்த வீட்டை காலி பண்ணியாகணும்..! இனிமே அது அவரோட வீடு.."
"போச்சு.. உருப்படியா குடியிருக்க வீடு ஒன்னுதான் இருந்துச்சு இப்ப அதுவும் போச்சுதா..! உனக்கு பொண்ணா பொறந்ததுக்கு இன்னும் நான் என்னென்ன அனுபவிக்கனுமோ.."
"மதி கொஞ்சம் நிதானமா பேசு.. நான் ஒன்னும் உன்னை நடுரோட்டில் நிறுத்தி வைக்கல..?"
"அதான் நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து நடுரோட்டுல நிக்க போறோமே..! நீ ஃபோன வைம்மா.." சந்திரமதி அழைப்பை துண்டித்திருக்க.. நீண்ட பெருமூச்சோடு அலுப்பாக புருவங்களை உயர்த்தி இறக்கினாள் அருந்ததி..
யோசித்து கவலைப்படுவதற்கெல்லாம் நேரமில்லை.. உணவை சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. வண்டியை உயிர்பித்து நகர்ந்தாள்..
ஒரு மணி நேரம் கழித்து அவள் வீடு வந்து சேர்ந்த போது சந்திரமதியின் முகத்தில் உற்சாகம் தெரிந்தது..
"அப்பாடா..! நல்லவேளை காளியாத்தா மலையேறல..! முதல்ல இவளை பேசி சரி பண்ணனும்.." நிம்மதி பெருமூச்சுடன் வண்டியை நிறுத்திவிட்டு மகளை நோக்கி நடந்தவள் அப்போதுதான் அவள் பார்வை எங்கே செல்கிறது என்று கவனித்தாள்..
சந்திரமதி செடிகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்த மோத்தியை தான் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தாள்..
அருந்ததியின் கண்களும் முகமும் மாறியது..
அருந்ததிக்கு நாய்கள் என்றாலே அலர்ஜி..
டெலிவரிக்கு செல்லும்போது பலமுறை நாய் குறுக்கே வந்து வண்டியை கீழே போட்டு விழுந்திருக்கிறாள்.. அறிமுகமில்லாத ஏரியாக்களுக்கு செல்லும்போது ஆக்ரோஷமாக துரத்திக் கொண்டே வரும் நாய்களைக் கண்டு நெஞ்சில் நடுக்கத்துடன் தடுமாறி கீழே விழாமல் தாக்கு பிடித்து அந்த இடத்தை கடந்ததெல்லாம் மறக்க முடியாத அச்சுறுத்தும் நிகழ்வுகள்..
பக்கத்து தெருவில் வேறு ஒருவர் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் வந்து.. நாய் போலவே குரைத்து இறந்து போனதில் நான்கு நாள் தூக்கமில்லை.. நாய்களின் மீதான கொஞ்ச நஞ்ச நல்லெண்ணமும் தொலைந்து போயிருந்தது..
இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று முதலாளியின் அலட்சியத்தால் கையை மீறி சென்று ஒரு குழந்தையின் கபாலமே பிரிந்து வருமளவிற்கு கடித்துக் குதறியதை சோசியல் மீடியாவில் பார்த்துவிட்டு அன்று முழுவதும் நிம்மதி தொலைத்தாள்..
எந்த நாயை பார்த்தாலும் மேலண்ணத்தை தூக்கியபடி ஓநாய் போல் கூரிய பற்களை கொண்டு உறுமும் அதன் தோற்றமே மனக்கண் முன் வந்து நிற்கிறது.. அதிலிருந்து நாய் என்றாலே பயம் வெறுப்பு அலர்ஜி..
இதோ மோத்தியை பார்க்கும்போதும் அதே உணர்வுதான்..
"அதை ஏன்டி பாத்துட்டு நிக்கற.. உள்ள வா போகலாம்.."
"அம்மா அந்த நாய்க்குட்டி எவ்ளோ அழகு.."
"வாடி உள்ளே..!"
மகளை அழைத்துக் கொண்டு விறுவிறுவென உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..
குறைந்த விலையில் நிலத்தை வாங்கி போட்டு வீட்டை விஸ்தாரமாக கட்டியிருந்தார் வீட்டு உரிமையாளர்..
கழிப்பறையோடு இணைந்த அகண்ட பெரிய படுக்கையறை.. பெரிய கூடம்.. வசதியான சமையலறை.. வெளிப்பக்கம் ஒரு கழிவறை..
இப்போது படுக்கையறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது..
அவர்களது பாய்.. தலையணை.. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள்.. இதர உபயோக பொருட்கள் அனைத்தும் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது..
படுக்கையறையை ஆக்கிரமித்து விட்டான்.. நாளை முழு வீடும் அவன் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்..
"என்னமா இது..! அந்த ஆள் நம்ம பெட் ரூம்ல உட்கார்ந்து இருக்காரு.. இனிமே நாம ரெண்டு பேரும் இங்கதான் தங்கணுமா.." கோபத்தோடு மூச்சு வாங்கி படபடத்தாள் சந்திரமதி..
"இனிமே இல்ல இன்னைக்கு மட்டும்.."
"அப்ப நாளைக்கு..?"
"வேற ஏதாவது இடம் பார்க்கணும்.."
என்றபடி கூடத்தில் ஆயாசமாக அமர்ந்தாள்..
சோபா நாற்காலி எதுவும் கிடையாது.. தரையில்தான் அமர வேண்டும்.. சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்..
சந்திரமதி அவசரமாக தாயின் பக்கத்தில் சம்மனமிட்டு அமர்ந்தாள்..
"நாளையிலிருந்து வேற எங்க போய் தங்க போறோம்..! அம்மா ப்ளீஸ் நாம இந்த வீட்டிலேயே இருக்கலாம்.. எனக்கு வேற எங்கேயும் வர பிடிக்கல.."
விரக்தியாக மூச்செறிந்தாள் அருந்ததி..
"எனக்கும் தான் வேற எங்கேயும் போக பிடிக்கல.. ஆனா ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேத்திக்கற நிலையிலா நாம இருக்கோம்.. ஒரு வாரம் கனகா அக்கா வீட்ல தங்கிக்கலாம்.. அதுக்குள்ள வேற ஏதாவது வீடு பார்த்து குடிப் போயிடலாம்.."
"ஆசைபட்டதை நிறைவேத்த முடியலைன்னா எதுக்கு என்னை பெத்த.. நான் அங்கல்லாம் வரமாட்டேன்.. இங்கதான் இருப்பேன்.. அந்த ஆளை வெளியே போக சொல்லு.."
"கத்தாதடி.. அந்த ஆள் காதுல விழுந்து தொலைய போகுது.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் மகரிஷி..
இருவரின் பேச்சும் நின்று போனது..
அமர்ந்திருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கூடத்திலிருந்த வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்..
கதவு திறந்திருக்க உள்ளறையை எட்டிப் பார்த்தனர் இருவரும்.. ஆடம்பர பொருட்களும் அழகுப் பொருட்களும் அந்த அறையை புது கவர்ச்சியோடு மாற்றியிருந்தன..
இத்தனை நேரம் அடைபட்டிருந்த குளிர் காற்று அறையை விட்டு வெளியேறி அவர்களை தழுவி வணக்கம் சொன்னதில் இருவரின் பார்வையும் உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஏர்கண்டிஷன் மீது நிலைத்தது..
"நம்ம ரூம் தானாம்மா இது..?" சந்திரமதி ஆச்சரியத்தோடு எட்டிப் பார்த்தவாறு கேட்டாள்..
அருந்ததி பதில் சொல்லவில்லை.. ஆனால் உள்ளேதான் கவனித்துக் கொண்டிருந்தாள்..
பெரிய படுக்கையும்.. மூலையில் போடப்பட்டிருந்த சோபாவும்.. ஒரு சின்ன மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த பீங்கான் ஜாடியும் அதில் குவித்து வைக்கப்பட்டிருந்த செயற்கை பூக்களும்.. பக்கத்திலேயே கம்ப்யூட்டர்.. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த 60 இன்ச் தொலைக்காட்சியும்.. கரும் பாக்கு நிற சோபாவிற்கும் கட்டில் மெத்தைக்கும் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் கம்பளமும் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த அறையின் செழிப்பை கூட்டியிருந்தன..
"வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கணும்.." என்று உரிமையாளர் ஆட்களை அனுப்பி பழைய வீட்டை புதுப்பித்து நிறத்தை மெருகேற்றியிருந்த போது கூட அருந்ததிக்கு சந்தேகம் வரவில்லை..
இப்போது அதை நினைக்கையில் மனம் கசந்து போனது..
"பணக்காரரா இருப்பாரோ..?" சந்திரமதி சிறுபிள்ளைத்தனமாக கேட்டாள்..
அன்று அவன் குடியிருந்த பிளாட்டை பார்த்திருந்த அருந்ததிக்கு அவன் செல்வ செழிப்பு பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தது..
"அம்மாஆஆ.. இவ்வளவு பெரிய டிவி.." சந்திரமதி வாயை பிளந்தாள்..
மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான் மகரிஷி..
அருந்ததி மோத்தியை பார்த்ததும் தேகத்தில் அதிரவோடு பின்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்..
சந்திரமதியோ அவன் கையிலிருந்த மோத்தியை வாஞ்சையோடு பார்த்தாள்..
கூடத்தில் கல்லு குண்டு போல் அமர்ந்திருந்த இருவரையுமே நிமிர்ந்தும் பார்க்காமல் மோத்தியோடு உள்ளே சென்று விட்டான்..
அன்று முழுக்க சந்திரமதி ஒரே புலம்பல்..
"எனக்கு சாப்பாடும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்" என்று முறுக்கிக்கொண்டு படுத்துவிட.. இருப்பதை வைத்து ஏதோ சமைத்து சந்திரமதியை எழுப்பி உட்கார வைத்து அவள் திமிற திமிற கொஞ்சமாக ஊட்டி விட்டாள் அருந்ததி..
கதவை திறந்து கொண்டு மோத்தியோடு வெளியே போனவன்.. பத்து மணிக்கு வீடு திரும்பி உள்பக்கம் தாழிட்ட கதவை தட்டிக் கொண்டிருந்தான்..
கூடத்தில் படுத்திருந்த அருந்ததி உறக்கம் களைந்து எழுந்து சென்று கதவை திறந்தாள்..
வெளியே நின்றிருந்தவனின் சிவந்த கண்களை கண்டு சற்று பயமிருந்தாலும்.. அன்று காமுக கிழவனிடமிருந்து தன்னை காப்பாற்றிய அவனின் கண்ணியம் அருந்ததியை சற்று ஆசுவாசப்படுத்தியது..
"என்ன சார் உங்க இஷ்டத்துக்கு நேரம் கேட்ட நேரத்துல வந்து கதவை தட்டுறீங்க..! யாராவது பார்த்தா எங்களை தப்பா நினைக்க மாட்டாங்களா..!" சற்று கோபமாக தான் கேட்டிருந்தாள்..
விடிவெள்ளி விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் இறுகித் தெரிவதை கண்டாள் அருந்ததி..
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. அது உங்க பிராப்ளம்.. இது என்னோட வீடு என் இஷ்டத்துக்கு தான் வருவேன்.. கூரை ஏறி குதிச்சு வீட்டுக்குள்ள போறதுக்கு நான் ஒன்னும் சூப்பர் மேன் இல்லை.. இந்த வீட்டுக்கு இருக்கிறது ஒரே ஒரு வாசல்தான்.. இந்த வழியாத்தான் வர முடியும்.. சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க.. எனக்கு ரொம்ப அன் ஈசியா இருக்குது.." இத்தனை வார்த்தைகளை கோர்வையாக தமிழில் பேச சிரமப்பட்டவன் மோத்தியின் தலையை தடவிக் கொண்டே அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..
தொடரும்..
வங்கியில் கைச்செலவுக்காக ஒரு 2000 ரூபாய் கையிருப்பு உள்ளது.. அதைத் தாண்டி வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமும் இல்லை..! துருப்பிடித்த முக்காலியும் ஓடாத தையல் மெஷினும் மெதுவாகச் சுழலும் காத்தாடியும்.. வெளுத்துப்போன அலுமினிய பாத்திரங்களுமாய் திருட வருபவன் கூட மனமிரங்கி பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்து விட்டு செல்லும் நிலையில்தான் அவள் வறுமை குழந்தை போல் குதூகலமாக சிரித்துக் கொண்டிருக்கிறது.. பிள்ளைக்கு அம்மாவை விட்டால் வேறு கதி இல்லை என்பதை போல் இந்த வறுமைக்கும் துன்பத்திற்கும் இவளை விட்டால் வேறு போக்கிடமில்லை போலும்.. எந்த பக்கம் ஓடினாலும் தாவி வந்து முதுகில் ஏறி கொள்கிறதே..!
சாவியை அவன் கையில் தந்து விட்டு அழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தாள் அருந்ததி..
வண்டியில் ஏறி செல்ஃப் ஸ்டார்ட்டை உயிர்ப்பித்தாள்.. பேட்டரி வீக்காகி முனகியது.. எழுந்து நின்று சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிக்கரை உதைக்க.. யார் மீதான கோபத்தை என் மீது ஏன் காட்டுகிறாய் என்பதாய் உறுமி உறுமி நின்றது வண்டி..
உணவு டெலிவரி செய்யும் பணிக்கு வண்டி கட்டாயம் என்பதால் கொஞ்சமிருந்த சேமிப்பை கரைத்து இந்த பழைய வண்டியை வாங்கி இருந்தாள் அருந்ததி..
ஆனால் இந்த ஸ்கூட்டி மாதம் 2000 ரூபாய்க்கான பெட்ரோலையும் விழுங்கிக் கொண்டு.. அவ்வப்போது பழுதடைந்து ரிப்பேர் செலவையும் அவள் தலையில் வைக்கிறது..
"பழைய வண்டி இவ்வளவுதாமா ஓடும்.. பேசாம புது வண்டி வாங்கிடுங்க" அவள் நிலைமை புரியாமல் கையில் ஸ்பேனருடன் வண்டியின் பாகத்தை கழட்டிக் கொண்டே சொல்லுவார் மெக்கானிக்..
"இந்த மாசமும் ஏதாவது செலவு வச்சிடாத தெய்வமே.. என் கையில ஒரு பைசா கூட கிடையாது.." வண்டியோடு சேர்ந்து தானும் உறுமிக் கொண்டே ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாள்
வீட்டு வாசல் வரை சென்று கதவை திறக்க போன மகரிஷி வண்டியோடு அருந்ததி போராடிக் கொண்டிருந்த இந்த காட்சியை கண்டுவிட்டு திரும்பி வந்தான்..
"மேடம்.." வாய்க்குள் கோங்குரா ஊறுகாவை அதக்கி வைத்திருப்பதை போல் ஆந்திர மணத்தோடு அவன் அழைக்க.. எரிச்சலாக திரும்பி பார்த்தாள் அருந்ததி..
"கொஞ்சம் கதலண்டி.. நேனு சுஸ்தானு..!"
(கொஞ்சம் நகருங்க.. நான் பாக்கறேன்..)
பாஷை தெரியவில்லை, ஆனால் நீளமான கைகள் வண்டியையும் அவனையும் காட்டி சொன்னதிலிருந்து என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்டிருந்தவள்..
"இல்ல பரவாயில்ல" என்று சொல்லிவிட்டு மீண்டும் இக்கரை உதைத்தாள்..
துரோணா மகரிஷி அங்கிருந்து நகரவில்லை..
"கிக் பண்ணும் போதே ஆக்சிலரேட்டரை ரைஸ் பண்ணுங்க மேடம்..!" மீண்டும் அவன் கரகரத்த குரல்..
உதைப்பதை நிறுத்திவிட்டு கடுப்புடன் இடுப்பில் கைவைத்து விழிகளை மூடி திறந்தாள்..
"இந்த பக்கம் வாங்க.." என்று அவன் நெருங்கி வரவும் வேறு வழியில்லாமல் அருந்ததி விலக வேண்டியதாய் போனது..
குனிந்து ஆக்ஸிலரேட்டரை ஒரு கையால் பிடித்து முறுக்கிக் கொண்டே கிக்கரை உதைத்தான்.. அவன் வேகத்திற்கு வலிமைக்கும் இரண்டே உதைதான்.. வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது..
அவன் உயரத்திற்கும் கைகளின் நீளத்திற்கும் இது சாத்தியமாயிற்று.. அவள் உயரத்திற்கு எக்கி ஆக்ஸிலரேட்டர் பிடித்துக் கொண்டு கிக்கரை உதைப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை..
"தேங்க்ஸ்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் வீட்டை நோக்கி நடந்திருந்தான் மகரிஷி..
புறப்படுவதற்கு முன் இதுநாள் வரை தன்னை அன்புக்கரம் நீட்டி அரவணைத்துக் கொண்ட அந்த வீட்டை சோகத்தோடு பார்த்தாள்..
போர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வா சாவா என்று தெரியாமல் அலைகழிக்கப் படும் அகதிபோல் மனம் கலங்கி போயிருந்தாள்..
நாளை விடியலுக்குள் வேறு வீடு தேடிக் கொள்ள முடியுமா..? ஒரு மாதமாக குட்டிக்கரணம் அடித்து தேடியும் கிடைக்காத வீடு இன்று ஒரு நாளில் கிடைத்து விடப்போகிறதா..!
எப்படிப்பட்ட வீடு கிடைத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு அவளும் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருந்தாள்..
அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டிற்கு ஐம்பதாயிரம் முன் பணமும் ஐந்தாயிரம் வாடகையும் சொல்லி அவளை மூச்சடைக்க செய்தனர்..
அதையும் தாண்டி ஓரளவு வசதியோடு ஒரு வீடு கிடைத்தது.. "உங்க வீட்டுக்காரர் எங்கே? என்ன செய்யறாரு.. மன்னிச்சிடுமா?? தனியா இருக்கற பொண்ணுக்கு வீடு தர்றதா இல்லை.. இப்படித்தான் நல்லவங்க மாதிரி வந்து குடியேறிட்டு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணி போலீஸ் கேஸ் ஆகிடுது.. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது..!" முகத்திலடித்தார் போல் வெளிப்படையாகவே மறுத்து சொல்லிவிட்டனர்..
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான தீப்பெட்டி சைஸ் வீடுகள் வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி வரும் வடமாநில இளைஞர்களுக்காகவே ஒதுக்கப் பட்டிருக்கிறது..
சின்னதாக ஒரு போர்ஷன் கட்டி பத்து இளைஞர்களை தங்க வைத்து பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கும் பேராசை இன்று அனேக உரிமையாளர்களிடம் வந்து விட்ட நிலையில் வீடு தேடும் உள்ளூர் வாசிகளின் நிலை பரிதாபம்தான்..
அதையும் தாண்டி பொருளாதார சிக்கலின் மத்தியில் குறைந்த வாடகையில் குடும்பமாக வாழ்வதற்கான வீட்டை தேடி கண்டுபிடித்து குடியேறுவதெல்லாம் பிரம்ம பிரயத்தனம்..
யோசிக்கக்கூட நேரமில்லாமல் டெலிவரி ஆர்டர்கள் அருந்ததியை இழுத்துக் கொள்ள.. வெயிலில் கருகி வியர்வையில் குளித்து களைப்பில் ஓய்ந்து போனாள்..
பொதுவாக உணவு நேரம் காலை ஒன்பதிலிருந்து பதினொன்று.. மதியம் ஒன்றிலிருந்து.. மூன்று மணி வரை இருக்கலாம்.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலையின் பரபரப்பில் உணவு உண்ணுவதற்கான நேர வரைமுறைகள் எதுவுமில்லாமல் கண்ட நேரத்தில் இஷ்டப்பட்ட உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர் மக்கள்..
அதுவும் நல்லதுக்கு தான் என தோன்றியது அருந்ததிக்கு.. நேரங்கால வரைமுறை இல்லாமல் அவர்கள் உணவு ஆர்டர் செய்வதால் தானே தனக்கு வேலையும் அதன் மூலம் இன்செண்டிவ்வும் கிடைக்கிறது..
மாலை நான்கு முப்பது மணி போல் தொடர்ந்து அழைப்பு..
போண்டாவும் வெங்காய பக்கோடாவும் கஸ்டமர் ஆர்டர் செய்திருக்க.. சூடு ஆறும்முன் அதை டெலிவரி செய்ய வேண்டுமென்று வேகமாக செலுத்திக் கொண்டிருந்தவள் நிற்காத அழைப்பில் வண்டியை ஓரங் கட்டினாள்..
"கனகா அக்கா நம்பர்..?" என்று கண்கள் சுருக்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..
"சந்திரமதி இந்நேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாளே..! இந்த அக்கா ஏன் இப்ப கூப்பிடுறாங்க.. ஒருவேளை மதிக்கு..?"
படபடப்போடு
"அக்கா" என்ன முடிக்கும் முன்..
"அம்மா நான் சந்திரமதி பேசுறேன்.." அவளின் குரலில் அழுகையும் கோபமும் உணர்ந்து திக்கென்ற அதிர்வுடன்..
என்னடி மதி என்ன பிரச்சனை..! என் அழற மாதிரி பேசுற.. என பதறினாள் அருந்ததி..
"யாருமா அந்த ஆளு.. நம்ம வீட்ல வந்து உட்கார்ந்துருக்காரு.."
"மதி.. மதி நீ அவர்கிட்ட பேசினியா..?"
"இல்ல.. நம்ம பெட் ரூமுக்குள்ள இருக்கார்.. கதவை சாத்தி வச்சிருக்கார்.. அவர்கிட்ட பேசவே எனக்கு பயமா இருக்குது.. நான் இவ்ளோ நேரம் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தேன்.. இப்பதான் கனகா ஆன்ட்டி வந்தாங்க.. அவங்க கிட்ட போன் வாங்கி உன்னை கூப்பிட்டேன்.."
"மதி நான் சொல்றதை கேளு.. அந்த ஆள் நம்ம வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்காரு.."
"என்னம்மா சொல்ற.. அது நம்ம வீடு தானே..?"
"அது ஒன்னும் நம்ம சொந்த வீடு இல்லை புரியுதா.. நாளைக்கு காலையில நாம அந்த வீட்டை காலி பண்ணியாகணும்..! இனிமே அது அவரோட வீடு.."
"போச்சு.. உருப்படியா குடியிருக்க வீடு ஒன்னுதான் இருந்துச்சு இப்ப அதுவும் போச்சுதா..! உனக்கு பொண்ணா பொறந்ததுக்கு இன்னும் நான் என்னென்ன அனுபவிக்கனுமோ.."
"மதி கொஞ்சம் நிதானமா பேசு.. நான் ஒன்னும் உன்னை நடுரோட்டில் நிறுத்தி வைக்கல..?"
"அதான் நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து நடுரோட்டுல நிக்க போறோமே..! நீ ஃபோன வைம்மா.." சந்திரமதி அழைப்பை துண்டித்திருக்க.. நீண்ட பெருமூச்சோடு அலுப்பாக புருவங்களை உயர்த்தி இறக்கினாள் அருந்ததி..
யோசித்து கவலைப்படுவதற்கெல்லாம் நேரமில்லை.. உணவை சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. வண்டியை உயிர்பித்து நகர்ந்தாள்..
ஒரு மணி நேரம் கழித்து அவள் வீடு வந்து சேர்ந்த போது சந்திரமதியின் முகத்தில் உற்சாகம் தெரிந்தது..
"அப்பாடா..! நல்லவேளை காளியாத்தா மலையேறல..! முதல்ல இவளை பேசி சரி பண்ணனும்.." நிம்மதி பெருமூச்சுடன் வண்டியை நிறுத்திவிட்டு மகளை நோக்கி நடந்தவள் அப்போதுதான் அவள் பார்வை எங்கே செல்கிறது என்று கவனித்தாள்..
சந்திரமதி செடிகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்த மோத்தியை தான் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தாள்..
அருந்ததியின் கண்களும் முகமும் மாறியது..
அருந்ததிக்கு நாய்கள் என்றாலே அலர்ஜி..
டெலிவரிக்கு செல்லும்போது பலமுறை நாய் குறுக்கே வந்து வண்டியை கீழே போட்டு விழுந்திருக்கிறாள்.. அறிமுகமில்லாத ஏரியாக்களுக்கு செல்லும்போது ஆக்ரோஷமாக துரத்திக் கொண்டே வரும் நாய்களைக் கண்டு நெஞ்சில் நடுக்கத்துடன் தடுமாறி கீழே விழாமல் தாக்கு பிடித்து அந்த இடத்தை கடந்ததெல்லாம் மறக்க முடியாத அச்சுறுத்தும் நிகழ்வுகள்..
பக்கத்து தெருவில் வேறு ஒருவர் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் வந்து.. நாய் போலவே குரைத்து இறந்து போனதில் நான்கு நாள் தூக்கமில்லை.. நாய்களின் மீதான கொஞ்ச நஞ்ச நல்லெண்ணமும் தொலைந்து போயிருந்தது..
இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று முதலாளியின் அலட்சியத்தால் கையை மீறி சென்று ஒரு குழந்தையின் கபாலமே பிரிந்து வருமளவிற்கு கடித்துக் குதறியதை சோசியல் மீடியாவில் பார்த்துவிட்டு அன்று முழுவதும் நிம்மதி தொலைத்தாள்..
எந்த நாயை பார்த்தாலும் மேலண்ணத்தை தூக்கியபடி ஓநாய் போல் கூரிய பற்களை கொண்டு உறுமும் அதன் தோற்றமே மனக்கண் முன் வந்து நிற்கிறது.. அதிலிருந்து நாய் என்றாலே பயம் வெறுப்பு அலர்ஜி..
இதோ மோத்தியை பார்க்கும்போதும் அதே உணர்வுதான்..
"அதை ஏன்டி பாத்துட்டு நிக்கற.. உள்ள வா போகலாம்.."
"அம்மா அந்த நாய்க்குட்டி எவ்ளோ அழகு.."
"வாடி உள்ளே..!"
மகளை அழைத்துக் கொண்டு விறுவிறுவென உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்..
குறைந்த விலையில் நிலத்தை வாங்கி போட்டு வீட்டை விஸ்தாரமாக கட்டியிருந்தார் வீட்டு உரிமையாளர்..
கழிப்பறையோடு இணைந்த அகண்ட பெரிய படுக்கையறை.. பெரிய கூடம்.. வசதியான சமையலறை.. வெளிப்பக்கம் ஒரு கழிவறை..
இப்போது படுக்கையறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது..
அவர்களது பாய்.. தலையணை.. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள்.. இதர உபயோக பொருட்கள் அனைத்தும் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது..
படுக்கையறையை ஆக்கிரமித்து விட்டான்.. நாளை முழு வீடும் அவன் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்..
"என்னமா இது..! அந்த ஆள் நம்ம பெட் ரூம்ல உட்கார்ந்து இருக்காரு.. இனிமே நாம ரெண்டு பேரும் இங்கதான் தங்கணுமா.." கோபத்தோடு மூச்சு வாங்கி படபடத்தாள் சந்திரமதி..
"இனிமே இல்ல இன்னைக்கு மட்டும்.."
"அப்ப நாளைக்கு..?"
"வேற ஏதாவது இடம் பார்க்கணும்.."
என்றபடி கூடத்தில் ஆயாசமாக அமர்ந்தாள்..
சோபா நாற்காலி எதுவும் கிடையாது.. தரையில்தான் அமர வேண்டும்.. சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்..
சந்திரமதி அவசரமாக தாயின் பக்கத்தில் சம்மனமிட்டு அமர்ந்தாள்..
"நாளையிலிருந்து வேற எங்க போய் தங்க போறோம்..! அம்மா ப்ளீஸ் நாம இந்த வீட்டிலேயே இருக்கலாம்.. எனக்கு வேற எங்கேயும் வர பிடிக்கல.."
விரக்தியாக மூச்செறிந்தாள் அருந்ததி..
"எனக்கும் தான் வேற எங்கேயும் போக பிடிக்கல.. ஆனா ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேத்திக்கற நிலையிலா நாம இருக்கோம்.. ஒரு வாரம் கனகா அக்கா வீட்ல தங்கிக்கலாம்.. அதுக்குள்ள வேற ஏதாவது வீடு பார்த்து குடிப் போயிடலாம்.."
"ஆசைபட்டதை நிறைவேத்த முடியலைன்னா எதுக்கு என்னை பெத்த.. நான் அங்கல்லாம் வரமாட்டேன்.. இங்கதான் இருப்பேன்.. அந்த ஆளை வெளியே போக சொல்லு.."
"கத்தாதடி.. அந்த ஆள் காதுல விழுந்து தொலைய போகுது.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் மகரிஷி..
இருவரின் பேச்சும் நின்று போனது..
அமர்ந்திருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கூடத்திலிருந்த வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்..
கதவு திறந்திருக்க உள்ளறையை எட்டிப் பார்த்தனர் இருவரும்.. ஆடம்பர பொருட்களும் அழகுப் பொருட்களும் அந்த அறையை புது கவர்ச்சியோடு மாற்றியிருந்தன..
இத்தனை நேரம் அடைபட்டிருந்த குளிர் காற்று அறையை விட்டு வெளியேறி அவர்களை தழுவி வணக்கம் சொன்னதில் இருவரின் பார்வையும் உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஏர்கண்டிஷன் மீது நிலைத்தது..
"நம்ம ரூம் தானாம்மா இது..?" சந்திரமதி ஆச்சரியத்தோடு எட்டிப் பார்த்தவாறு கேட்டாள்..
அருந்ததி பதில் சொல்லவில்லை.. ஆனால் உள்ளேதான் கவனித்துக் கொண்டிருந்தாள்..
பெரிய படுக்கையும்.. மூலையில் போடப்பட்டிருந்த சோபாவும்.. ஒரு சின்ன மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த பீங்கான் ஜாடியும் அதில் குவித்து வைக்கப்பட்டிருந்த செயற்கை பூக்களும்.. பக்கத்திலேயே கம்ப்யூட்டர்.. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த 60 இன்ச் தொலைக்காட்சியும்.. கரும் பாக்கு நிற சோபாவிற்கும் கட்டில் மெத்தைக்கும் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் கம்பளமும் வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்த அறையின் செழிப்பை கூட்டியிருந்தன..
"வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கணும்.." என்று உரிமையாளர் ஆட்களை அனுப்பி பழைய வீட்டை புதுப்பித்து நிறத்தை மெருகேற்றியிருந்த போது கூட அருந்ததிக்கு சந்தேகம் வரவில்லை..
இப்போது அதை நினைக்கையில் மனம் கசந்து போனது..
"பணக்காரரா இருப்பாரோ..?" சந்திரமதி சிறுபிள்ளைத்தனமாக கேட்டாள்..
அன்று அவன் குடியிருந்த பிளாட்டை பார்த்திருந்த அருந்ததிக்கு அவன் செல்வ செழிப்பு பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தது..
"அம்மாஆஆ.. இவ்வளவு பெரிய டிவி.." சந்திரமதி வாயை பிளந்தாள்..
மோத்தியை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான் மகரிஷி..
அருந்ததி மோத்தியை பார்த்ததும் தேகத்தில் அதிரவோடு பின்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்..
சந்திரமதியோ அவன் கையிலிருந்த மோத்தியை வாஞ்சையோடு பார்த்தாள்..
கூடத்தில் கல்லு குண்டு போல் அமர்ந்திருந்த இருவரையுமே நிமிர்ந்தும் பார்க்காமல் மோத்தியோடு உள்ளே சென்று விட்டான்..
அன்று முழுக்க சந்திரமதி ஒரே புலம்பல்..
"எனக்கு சாப்பாடும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்" என்று முறுக்கிக்கொண்டு படுத்துவிட.. இருப்பதை வைத்து ஏதோ சமைத்து சந்திரமதியை எழுப்பி உட்கார வைத்து அவள் திமிற திமிற கொஞ்சமாக ஊட்டி விட்டாள் அருந்ததி..
கதவை திறந்து கொண்டு மோத்தியோடு வெளியே போனவன்.. பத்து மணிக்கு வீடு திரும்பி உள்பக்கம் தாழிட்ட கதவை தட்டிக் கொண்டிருந்தான்..
கூடத்தில் படுத்திருந்த அருந்ததி உறக்கம் களைந்து எழுந்து சென்று கதவை திறந்தாள்..
வெளியே நின்றிருந்தவனின் சிவந்த கண்களை கண்டு சற்று பயமிருந்தாலும்.. அன்று காமுக கிழவனிடமிருந்து தன்னை காப்பாற்றிய அவனின் கண்ணியம் அருந்ததியை சற்று ஆசுவாசப்படுத்தியது..
"என்ன சார் உங்க இஷ்டத்துக்கு நேரம் கேட்ட நேரத்துல வந்து கதவை தட்டுறீங்க..! யாராவது பார்த்தா எங்களை தப்பா நினைக்க மாட்டாங்களா..!" சற்று கோபமாக தான் கேட்டிருந்தாள்..
விடிவெள்ளி விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் இறுகித் தெரிவதை கண்டாள் அருந்ததி..
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. அது உங்க பிராப்ளம்.. இது என்னோட வீடு என் இஷ்டத்துக்கு தான் வருவேன்.. கூரை ஏறி குதிச்சு வீட்டுக்குள்ள போறதுக்கு நான் ஒன்னும் சூப்பர் மேன் இல்லை.. இந்த வீட்டுக்கு இருக்கிறது ஒரே ஒரு வாசல்தான்.. இந்த வழியாத்தான் வர முடியும்.. சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க.. எனக்கு ரொம்ப அன் ஈசியா இருக்குது.." இத்தனை வார்த்தைகளை கோர்வையாக தமிழில் பேச சிரமப்பட்டவன் மோத்தியின் தலையை தடவிக் கொண்டே அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்..
தொடரும்..
Last edited: