- Joined
- Jan 10, 2023
- Messages
- 65
- Thread Author
- #1
விடிந்து விடியாததுமாக கனகா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் அருந்ததி..
விஷயத்தை சொல்லி ஒரு வார காலம் அங்கு தங்கியிருக்க அனுமதி கேட்க.. முடியாது என்ற வார்த்தையை சுற்றி வளைத்து பல வித்தைகளை பயன்படுத்தி பல்வேறு விதங்களில் மறுத்துக் கொண்டிருந்தாள் கனகா..
"உன்கிட்ட சொல்றதுக்கென்ன அருந்ததி.. இந்த மனுஷன் தினம் இராத்திரி குடிச்சிட்டு வந்து ஒரே சண்டை.. நீ ஒரு வாரமில்ல.. ஒரு மாசம் கூட உன் பொண்ண அழைச்சிட்டு வந்து என் வீட்டுல தங்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.. ஆனா இந்த ஆளு என்னை அசிங்கமா பேசுற மாதிரி குடிபோதையில் உன்னையும் ஏதாவது பேசிட்டான்னு வைச்சிக்க ஒருத்தர் மூஞ்சியில ஒருத்தர் முழிக்க முடியாது பாரு.. இந்த ஹவுஸ் ஓனர் வேற என் மாமியார் வந்து ஒரு வாரம் தங்கினதுக்கே ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்திட்டான்.." அளவற்ற பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்க..
அருந்ததி வெறுமையாக புன்னகைத்தாள்..
கனகா வார்த்தைகளின் உள்ளர்த்தங்களை புரிந்து கொள்ள முடியாத அளவு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே..!
கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவளை நம்பி வீட்டில் சேர்க்க பயம்.. தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமை என்று பழமொழி உண்டு.. தொலைவிலேயே நாகரீகமாக நின்று மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆனால் அப்படி ஒரு நிலையில் கடவுள் என்னை வைக்கவில்லையே..! மனம் பலவீனமாக கண்ணீர் விட்டது..
"பரவாயில்லக்கா நான் ஏதாவது வழி பாத்துக்கறேன்.."
"நீ என்னை எதுவும் தப்பா நினைக்கலையே.. நான் வேணும்னா வந்து அந்த தம்பி கிட்ட பேசட்டுமா..?"
"வேண்டாம்க்கா.. வேற ஏதாவது வழி கிடைக்கும்.."
"ரொம்ப கஷ்டமா இருக்குது அருந்ததி.. உனக்கு உதவி செய்ய முடியாத நிலைமையில நான் இருக்கேனே..!"
"வருத்தப்படாதீங்க.. நான் தப்பா நினைக்கல.. போய் வேலையை பாருங்க..!"
"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத அருந்ததி.. இந்த மாதிரி தனியா இருக்கற ஆம்பளைங்கள நம்பவே முடியாது.. ஆளு வேற பாக்க வாட்டசாட்டமா ஜிம் பாடி மாதிரி உடம்பை ஏத்தி வச்சிருக்கான்.. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு..!"
தனி ஆண்.. துணையில்லாத பெண்.. பஞ்சும் நெருப்புமாய் பற்றிக்கொள்ளும் என்று சொல்லாமல் சொல்கிறாளோ..! பதில் சொல்லாமல் சோர்வுடன் திரும்பி நடந்தாள் அருந்ததி..
வீட்டுக்குள் நுழையப்போன நேரம் திண்ணையில் மோத்தி முன்னிரு கால்களை நீட்டி தனது மோவாயை அதில் பதித்து படுத்திருந்தது..
பார்க்க கியூட்தான்.. ஆனால் அவளுக்கு பிடிக்க வில்லையே..
தற்செயலாக மோத்தியை பார்த்தவள் சடாரென்று பின்னால் நகர்ந்து சுவற்றோடு சாய்ந்து கொண்டாள்.. வேகமாக துடிக்கும் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு கோபத்தோடு மோத்தியின் மீது மீண்டும் ஒருமுறை பார்வையை பதித்துவிட்டு உள்ளே சென்றாள்..
இன்றே வீடை காலி செய்ய வேண்டும்.. வீட்டு உரிமையாளர் போலீசோடு வந்து நிற்பேன் என்று வேறு மிரட்டினானே..! மலைபோல் நம்பியிருந்த கனகா வேறு கழுத்தறுத்து விட்டாள்..
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்..
ஒரு வாரம் கால அவகாசம் தருமாறு இந்த நெடிய மனிதனிடம் கேட்டால் என்ன..?
இரவில் கடுகடுவென்று சுடு சொற்களை வீசியவனின் முகம் மனக்கண் முன் வந்து போனது..
"நானும் கொஞ்சம் நிதானமா பேசி இருக்கணும்.. காரியம் ஆகணுமே.. கேட்டு தான் பாரேன்.." மனசாட்சி அவளை உந்தித் தள்ள..
மகரிஷியின் அறைப் பக்கம் சென்றாள்..
கதவு வெறுமனே தாழிடப்படாமல் சாத்தி இருந்த போதும்..
"சார்.." என்று வெளிப்பக்கமிருந்து குரல் கொடுத்து கதவைத் தட்ட.. உள்ளிருந்து பதில் இல்லை..
மீண்டும் சார் இன்று குரல் கொடுக்கும் முன் படாரென்று கதவை திறந்து கொண்டு அவள் முன்பு வந்து நின்றிருந்ததில் பயந்து போனாள் அருந்ததி..
இரவு உடையாக டி-ஷர்ட்டும்.. ட்ராக் பேண்ட்டும் அணிந்திருந்தான்..
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே "சார் உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசணும்" என்றாள்..
"எஸ் டெல் மீ..!"
"சார்.. அது வந்து ஹவுஸ் ஓனர் திடீர்னு உங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுட்டு எங்களை காலி பண்ண சொல்லிட்டாங்க..!"
"அது நா சமஸ்ய காது..!"
அருந்ததி புரியாமல் விழிக்க..
"அது என் பிரச்சனை இல்லைங்க.. ஹவுஸ் ஓனருக்கும் உங்களுக்கும் இடையில் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்.. ஐ டோன்ட் கேர்.. நான் ப்ராப்பரா அட்வான்ஸ் கொடுத்து இந்த வீட்டுக்கு குடி வந்திருக்கேன்.. நீங்க ஏதாவது பேசணும்னா உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுங்க.. அண்ட் ஒன் மோர் திங் இம்மீடியட்டா இந்த வீட்டை காலி பண்ணிடுங்க.." என்றான் காட்டமான குரலில்..
"சார் ஒரு நிமிஷம் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க.."
உள்ளுக்குள் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவன் பொறுமையாக கைகட்டிக்கொண்டு.. "எனக்கு டைம் இல்ல.. துவரகா செப்பு" (சீக்கிரம் சொல்லுங்க) என்றான்..
"சார் தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கணும்.. எப்படியாவது வேற வீடு பார்த்துகிட்டு இந்த இடத்தை காலி பண்ணிடுவேன்.." அவள் மேற்கொண்டு பேசுவதற்குள் இடை மறித்தான்
"இங்க பாருங்க..! பழைய அப்பார்ட்மெண்ட்ல நான் காலி பண்றதுக்கு ரீசனே நீங்க தான்.."
அதிர்ந்து போய் பார்த்தாள் அருந்ததி..
"நானா..? நான் என்ன சார் செஞ்சேன்.."
"உங்களை ஹராஸ் பண்ணின ஆளு அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரி.. நான் அவனை அடிச்சதனால அசோசியேஷனில் மீட்டிங் போட்டு தேவையில்லாத பழியை சுமத்தி என்னை மாதிரி பயங்கரவாதி அப்பார்ட்மெண்ட்ல இருந்தா அங்க இருக்கிற மக்களுக்கு ஆபத்துன்னு வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க..!"
"அ.. ஐயோ.. ம.. மன்னிச்சிடுங்க சார்.. என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்.. இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.." உண்மையாகவே வருந்தினாள் அருந்ததி..
"அவங்க சொன்னதுக்காக நான் அப்பார்ட்மெண்ட்டை காலி பண்ணல.. அந்த கிழவன் சொன்னதை நம்பி என்னை தப்பா பேசின அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் மூஞ்சியை பார்க்க பிடிக்கல.. அங்க இருக்கவும் பிடிக்கல.. அதனாலதான் வீட்டை காலி பண்ணிட்டேன்.."
"பாருங்க சார் வாடகை வீடுனாலே எவ்வளவு பிரச்சனைகள் இருக்குது.. கிட்டத்தட்ட நாம ரெண்டு பேரும் ஒரே நிலைமையில் தானே இருக்கோம்.. கொஞ்சம் உதவி பண்ணுங்களேன் சார்.."
மகரிஷி அவளை முறைத்தான்..
"ஹலோ அது வாடகை வீடு இல்லை என்னோட ஓன் (own) அபார்ட்மெண்ட்.." பின்கை கட்டிக் கொண்டு கால்களை ஊன்றி நின்று அவளை கூர்மையாக பார்த்தான்..
"சொந்த வீடா..?" அருந்ததி திறந்த வாய் மூடவில்லை..
அப்படிப்பட்ட ஆடம்பர வீட்டை காலி செய்துவிட்டு இப்படி ஒரு எளிமையான வீட்டில் ஏன் வந்து குடியிருக்க வேண்டும்.. ஆழ்ந்த சிந்தனையிலிருந்து முகத்திற்கு நேராக சொடுக்கிட்டான்..
"மேடம்..!"
"சா.. சார்.."
"இங்க பாருங்க.. என்னால எதுவும் செய்ய முடியாது.. நீங்க இங்க இருக்கிறதுனால என்னால கம்ஃபர்டபிலா இருக்க முடியல.. ஏற்கனவே எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்குதுங்க.. உங்களை வேற தலையில தூக்கிப்போட்டு சுமக்க முடியாது.."
"எங்களை எதுக்கு நீங்க சுமக்கணும்.." அருந்ததியும் கோபமாக கேட்டாள்..
"என்னால உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.. இப்படித்தான் நல்லவங்க மாதிரி பேசி ஒட்டி உறவாடி இழைய வேண்டியது.. அப்புறம் காரியம் நடக்கலைன்னதும் ஆம்பளைங்க மேல பழியை போட்டு அவங்களை ஒரு வழி பண்ணிட வேண்டியது.."
"ஹலோ என்ன சார் தேவையில்லாம பேசிட்டே போறீங்க.. உதவிதான் கேட்டேன் அதுக்காக இவ்வளவு கேவலமா பேசுவீங்களா..?"
"என்கிட்ட வந்து உதவியெல்லாம் கேட்காதீங்க.. போய் வீட்டை காலி பண்றதுக்கான வழியை பாருங்க.."
"அப்படியெல்லாம் காலி பண்ணிட முடியாது முன்னறிவிப்பு இல்லாம வீட்டை காலி பண்ண சொல்றது தப்பு.."
"இந்த சட்டமெல்லாம் போய் உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுங்க.." அவன் உள்ளே போய்விட..
"உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு..!" அருந்ததி கடுப்புடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்..
அதே கோபத்துடன் வேகமாக சமையல் வேலைகளை முடித்தாள்..
அரைத்து வைத்த மாவில் பெரிய பானை நிறைய இட்லியை ஊற்றி.. மற்றொரு அடுப்பில் சாம்பாருக்கு பருப்பை வேகவைத்து காய்கறியை தாளித்து புளியை கரைத்து ஊற்றினாள்..
இனி இது போல இட்லி போட்டு விக்க முடியாது..
"ஆமா வாழறதுக்கு வீடே இல்லையாம்.. இதுல இட்லி போட்டு விக்கிறது ஒன்னு தான் குறைச்சல்.." மனசாட்சி அவளை கேலி செய்தது..
இடைப்பட்ட நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பி காபியை தந்து குளிக்க அனுப்பி வைத்திருந்தாள்..
உட்பக்க குளியலறை அவனுக்கு சொந்தமாகியிருக்க வெளிப்பக்க பாத்ரூமை உபயோகிக்க வேண்டிய கட்டாயம்..
பல மாதங்களாய் உபயோகிக்க படாத அந்த குளியறை வாசலில் கால் வைத்ததும்..
"ஐயோ அம்மா பாக்கவே துருப்பிடிச்சு கன்றாவியா இருக்கு.." முகத்தை சுளித்தாள் சந்திரமதி..
"இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி குளிடி.. நாளைக்கு சுத்தம் செஞ்சு வைக்கறேன்.." மகளை தாஜா பண்ணி குளிக்க அனுப்பினாள்..
வேலைகள் முடித்து பாத்திரங்களை கொண்டு வந்து திண்ணையில் அடுக்கிய நேரம் மறுபக்க திண்ணையில் மோத்தி அசையாமல் அமர்ந்து முயல்குட்டி போல் நீட்டிய காதுடன் தலைசாய்த்து அவளை பார்த்துக் கொண்டிருந்தது..
"ஆஆஆ.." என்று அலறி இந்த சனியன் இன்னுமா இங்கிருந்து போகல.. என்றபடி மோத்தியை வெறுப்பாக பார்த்தவள்..
"ஏய்.. சூ.. போ.." என்று கையை வீசி விரட்ட முயல.. அவள் கண்களில் தெரிந்த வெறுப்பையும் முகச்சுழிப்பையும் பார்த்த மோத்தி லொள்.. லொள்.. என்று குறைக்க ஆரம்பித்திருந்தது..
"ஐயோ கடவுளே..!" உள்ளே ஓட முற்பட்ட வேளையில் எதிரே வந்தவன் என் மீது நங்கென்று இடித்துக் கொண்டாள்..
பாறை போல் அத்தனை திடம் அவன்..
கடுமைக்கு எதிர்பதமாய் தன் செல்லப் பிராணியிடம் புன்னகைத்து..
"மோத்திஇஇ.." என்று இரு கரங்களை நீட்டி அழைக்க அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டது மகரிஷியின் அன்பு விசுவாசி..
"சார்.." இந்த நாயை கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போங்க.."
"ஏன் கூட்டிட்டு போகணும்..!" மோத்தியை தடவியபடியே நிமிர்ந்தான் மகரிஷி..
"சாப்பிடற பொருள்ல வாய் வச்சுட போகுது சார்..! விக்கிறதுக்காக வச்சிருக்கற இட்லி.." அவளுக்கு சிடுசிடுவென்று விழுந்தாள்..
"என் மோத்தி கண்ட இடத்துல வாய் வைக்காது..!" என்றபடி நாயை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் மகரிஷி..
"கண்ட இடமா..! நான் சமைச்சு வச்சிருக்கிற பொருளை தான் சொல்றானா.. இந்த ஆளுக்கு எவ்வளவு திமிரு..!" வாய்க்குள் முனகியபடி சாம்பாரை கிளறி வைத்துக் கொண்டிருந்த நேரம் இட்லிக்காக முதல் ஆள் வந்து நின்றது..
சந்திரமதி குளித்து உடைமாற்றிக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு விட்டாள்..
திண்ணையில் அமர்ந்து தட்டில் மூன்று இட்லியும் சாம்பாருமாக உண்டு கொண்டிருக்க.. வீட்டுக்குள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தது மோத்தி..
வளர்ப்பு பிராணியை பார்த்ததும் சின்ன பெண்ணுக்கு அத்தனை உற்சாகம்..
"ஓய்.. குட்டி பையா" என்று ஹலோ சொல்லி உற்சாகமாக கைநீட்டி அழைக்க வெளியே வந்து திண்ணையில் ஏறிக்கொண்டது மோத்தி..
"சாப்பிடறியாடா..!" என்றதும்
சின்ன முனகலோடு பின்பக்கம் வந்து அவள் முதுகை தன் உடலால் உரசியது..
பாவம் பசி போலும்.. பக்கத்திலிருந்த தட்டை எடுத்து வைத்து அம்மா வருகிறாளா என்று எட்டிப் பார்த்துவிட்டு ஒரு இட்லியையும் கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றி வைத்தாள் சந்திரமதி..
நாவால் நிரடி குட்டி குட்டியாய் கடித்து போட்ட இட்லிகளை கவ்வி மென்று விழுங்கியது மோத்தி..
வெளியே நடப்பது தெரியாமல் உள்ளுக்குள் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
மகரிஷி அறைக்குள் குளித்துக் கொண்டிருந்தான்..
சந்திரமதி சாப்பிட்டு முடித்துவிட்டு திண்ணையில் அமர்ந்து தன்னையே சுத்தி சுத்தி வந்த மோத்தியின் உடம்பை வருடி கொடுத்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்..
வெளியே வந்த அருந்ததிக்கு இந்த காட்சியை கண்டு சட்டென்று உள்ளுக்குள் பயமும் கோபமும் எழுந்ததில்..
"ஏய்.. மதி என்னடி பண்ற.." என்றாள் சத்தமாக..
"அம்மா நாய்க்குட்டி எவ்வளவு அழகா இருக்குல்ல.." நாவால் மேல் மூக்கை நக்கியபடி மெல்ல கண்களை மூடி திறந்த மோத்தியின் மீது சந்திரமதியின் பார்வை வாஞ்சையோடு படிந்திருந்தன..
அந்நேரம் தலையை துவட்டியபடி வாசலில் வந்து நின்றிருந்தான் மகரிஷி..
"கண்ட நாயையெல்லாம் தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா.." மகரிஷியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள்.. கண்ட இடத்தில் என் மோத்தி வாய் வைக்காது என்று சொன்னதற்கான பதிலடியாம் இது..
சிறு பெண்ணை வைத்திருக்கிறாள் என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல் உதவி கேட்டும் மறுத்துவிட்டானே என்ற கோபம்..
இனி உன் தயவு என்ன வேண்டி இருக்கிறது என்ற அலட்சியம்..
"வெறி நாய் கடிச்சு ஏதாவது நோய் வந்து தொலைய போகுது.. இப்படி வா.."
"அம்மா..!"
"வான்னு சொல்றேன்ல ஸ்கூலுக்கு நேரமாச்சு உள்ள போய் பேக்கை எடு..!"
கோபத்தில் முகம் சுருங்கி போய்விட.. காலை தரையில் உதைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றாள் சந்திரமதி..
மகரிஷி எதுவும் பேசவில்லை..
துவட்டி முடித்திருந்த ஈர தலையை சிலுப்பிக் கொண்டே..
"மோதி ரா.. தின்னடானிக்கு வெல்தாம்.." (சாப்பிட போகலாம்) என்று அழைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேற மோத்தி அவனை பின்தொடர்ந்தது..
பைக்கில் ஏறி அமர்ந்ததும் முன்பக்கம் குதித்து ஏறி தோரணையாக அமர்ந்து கொண்டான் சின்னவன்..
ஹலோ.. அழுத்தமாக அழைக்கவும் கொடியில் துண்டை காய போட்டுக் கொண்டிருந்த அருந்ததி திரும்பி பார்த்தாள்..
லாக் பண்ணி சாவியை அந்த ஜன்னல் பக்கத்துல வச்சுட்டு போங்க..! என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் பைக்கை கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்..
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று வெளியே வந்தாள் மதி..
"ஏய் இருடி.. உன்னை ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு நான் போறேன்..!" கத்தியவளை கடந்து சென்று..
"ஒன்னும் தேவையில்லை.. நானே போய்க்கறேன் போ..!" நாய்க்குட்டியோடு விளையாட கூடாது என்று சொன்ன ஆத்திரத்தில் கேட்டை வேகமாக திறந்து கொண்டு வெளியே நடந்தாள் சந்திரமதி..
மகளின் அலட்சியத்திலும் கோபத்திலும் ஒதுக்கத்திலும்.. சோர்ந்து போய் சில கணங்கள் திண்ணையில் அமர்ந்திருந்தவள்.. பிறகு பாத்திரங்களை எடுத்து உள்ளே வைத்து பூட்டி சாவியை அவன் சொன்ன இடத்தில் வைத்துவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு புறப்பட்டாள்..
இன்று யூனிஃபார்ம் டி-ஷர்ட் அணியவில்லை.. விடுமுறை எடுத்திருந்தாள்..
பழகிய பாவத்திற்கு கனகா உதவி செய்யவில்லை வாடகைக்கு வந்தவனும் இரக்கம் காட்டவில்லை.. இன்று ஒரு நாள் முழுக்க விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு தேட வேண்டும்.. என்ற முடிவோடு சாலையில் வாகனங்களோடு கலந்தாள்..
பள்ளியில் விடுகிறேன் வா என்று அழைத்த தாயை வீராப்போடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கால் கடுக்க நடந்து கொண்டிருந்தாள் சந்திரமதி..
"பேசாம அம்மா கூட வண்டியில போயிருக்கலாம்.. ஐயோ நேரம் ஆயிடுச்சே..! பிரேயர் தாண்டி போச்சுன்னா பி டி மிஸ் கையை திருப்பி வச்சு முட்டியிலேயே அடிக்குமே..!" கலவரத்தோடு எச்சில் விழுங்கி வேக நடையோடு பள்ளியை நோக்கி அடியை எட்டிப் போட்டுக் கொண்டிருக்க.. அந்த ஸ்பீட் பிரேக்கரில் மெதுவாக ஏறி இறங்கி சென்றது மகரிஷியின் பைக்..
முன்பக்கம் மோத்தி அமர்ந்திருந்தான்..
"அட.. இந்த ஆளா..? பேசாம இவர்கிட்ட லிப்ட் கேட்டு ஸ்கூல்ல போய் இறங்கிக்க வேண்டியதுதான்.. இதை விட்டா வேற வழியே இல்லை.." என்ற எண்ணத்துடன்..
"அங்கிள் ஒரு நிமிஷம் நில்லுங்க.. அங்கிள்.. அங்கிள் ப்ளீஸ்.." என்று அவள் கையை நீட்டி கத்திக் கொண்டிருக்க.. பார்த்தும் பார்க்காதவன் போல் பைக்கை நிறுத்தாமல் அவளை கடந்து சென்றான் மகரிஷி..
அவன் கையிடுக்கின் வழியே மோத்தி மட்டும் எட்டிப் பார்த்தது..
தொடரும்..
விஷயத்தை சொல்லி ஒரு வார காலம் அங்கு தங்கியிருக்க அனுமதி கேட்க.. முடியாது என்ற வார்த்தையை சுற்றி வளைத்து பல வித்தைகளை பயன்படுத்தி பல்வேறு விதங்களில் மறுத்துக் கொண்டிருந்தாள் கனகா..
"உன்கிட்ட சொல்றதுக்கென்ன அருந்ததி.. இந்த மனுஷன் தினம் இராத்திரி குடிச்சிட்டு வந்து ஒரே சண்டை.. நீ ஒரு வாரமில்ல.. ஒரு மாசம் கூட உன் பொண்ண அழைச்சிட்டு வந்து என் வீட்டுல தங்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.. ஆனா இந்த ஆளு என்னை அசிங்கமா பேசுற மாதிரி குடிபோதையில் உன்னையும் ஏதாவது பேசிட்டான்னு வைச்சிக்க ஒருத்தர் மூஞ்சியில ஒருத்தர் முழிக்க முடியாது பாரு.. இந்த ஹவுஸ் ஓனர் வேற என் மாமியார் வந்து ஒரு வாரம் தங்கினதுக்கே ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்திட்டான்.." அளவற்ற பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்க..
அருந்ததி வெறுமையாக புன்னகைத்தாள்..
கனகா வார்த்தைகளின் உள்ளர்த்தங்களை புரிந்து கொள்ள முடியாத அளவு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே..!
கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவளை நம்பி வீட்டில் சேர்க்க பயம்.. தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமை என்று பழமொழி உண்டு.. தொலைவிலேயே நாகரீகமாக நின்று மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆனால் அப்படி ஒரு நிலையில் கடவுள் என்னை வைக்கவில்லையே..! மனம் பலவீனமாக கண்ணீர் விட்டது..
"பரவாயில்லக்கா நான் ஏதாவது வழி பாத்துக்கறேன்.."
"நீ என்னை எதுவும் தப்பா நினைக்கலையே.. நான் வேணும்னா வந்து அந்த தம்பி கிட்ட பேசட்டுமா..?"
"வேண்டாம்க்கா.. வேற ஏதாவது வழி கிடைக்கும்.."
"ரொம்ப கஷ்டமா இருக்குது அருந்ததி.. உனக்கு உதவி செய்ய முடியாத நிலைமையில நான் இருக்கேனே..!"
"வருத்தப்படாதீங்க.. நான் தப்பா நினைக்கல.. போய் வேலையை பாருங்க..!"
"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத அருந்ததி.. இந்த மாதிரி தனியா இருக்கற ஆம்பளைங்கள நம்பவே முடியாது.. ஆளு வேற பாக்க வாட்டசாட்டமா ஜிம் பாடி மாதிரி உடம்பை ஏத்தி வச்சிருக்கான்.. எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு..!"
தனி ஆண்.. துணையில்லாத பெண்.. பஞ்சும் நெருப்புமாய் பற்றிக்கொள்ளும் என்று சொல்லாமல் சொல்கிறாளோ..! பதில் சொல்லாமல் சோர்வுடன் திரும்பி நடந்தாள் அருந்ததி..
வீட்டுக்குள் நுழையப்போன நேரம் திண்ணையில் மோத்தி முன்னிரு கால்களை நீட்டி தனது மோவாயை அதில் பதித்து படுத்திருந்தது..
பார்க்க கியூட்தான்.. ஆனால் அவளுக்கு பிடிக்க வில்லையே..
தற்செயலாக மோத்தியை பார்த்தவள் சடாரென்று பின்னால் நகர்ந்து சுவற்றோடு சாய்ந்து கொண்டாள்.. வேகமாக துடிக்கும் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு கோபத்தோடு மோத்தியின் மீது மீண்டும் ஒருமுறை பார்வையை பதித்துவிட்டு உள்ளே சென்றாள்..
இன்றே வீடை காலி செய்ய வேண்டும்.. வீட்டு உரிமையாளர் போலீசோடு வந்து நிற்பேன் என்று வேறு மிரட்டினானே..! மலைபோல் நம்பியிருந்த கனகா வேறு கழுத்தறுத்து விட்டாள்..
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்..
ஒரு வாரம் கால அவகாசம் தருமாறு இந்த நெடிய மனிதனிடம் கேட்டால் என்ன..?
இரவில் கடுகடுவென்று சுடு சொற்களை வீசியவனின் முகம் மனக்கண் முன் வந்து போனது..
"நானும் கொஞ்சம் நிதானமா பேசி இருக்கணும்.. காரியம் ஆகணுமே.. கேட்டு தான் பாரேன்.." மனசாட்சி அவளை உந்தித் தள்ள..
மகரிஷியின் அறைப் பக்கம் சென்றாள்..
கதவு வெறுமனே தாழிடப்படாமல் சாத்தி இருந்த போதும்..
"சார்.." என்று வெளிப்பக்கமிருந்து குரல் கொடுத்து கதவைத் தட்ட.. உள்ளிருந்து பதில் இல்லை..
மீண்டும் சார் இன்று குரல் கொடுக்கும் முன் படாரென்று கதவை திறந்து கொண்டு அவள் முன்பு வந்து நின்றிருந்ததில் பயந்து போனாள் அருந்ததி..
இரவு உடையாக டி-ஷர்ட்டும்.. ட்ராக் பேண்ட்டும் அணிந்திருந்தான்..
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே "சார் உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசணும்" என்றாள்..
"எஸ் டெல் மீ..!"
"சார்.. அது வந்து ஹவுஸ் ஓனர் திடீர்னு உங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுட்டு எங்களை காலி பண்ண சொல்லிட்டாங்க..!"
"அது நா சமஸ்ய காது..!"
அருந்ததி புரியாமல் விழிக்க..
"அது என் பிரச்சனை இல்லைங்க.. ஹவுஸ் ஓனருக்கும் உங்களுக்கும் இடையில் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்.. ஐ டோன்ட் கேர்.. நான் ப்ராப்பரா அட்வான்ஸ் கொடுத்து இந்த வீட்டுக்கு குடி வந்திருக்கேன்.. நீங்க ஏதாவது பேசணும்னா உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுங்க.. அண்ட் ஒன் மோர் திங் இம்மீடியட்டா இந்த வீட்டை காலி பண்ணிடுங்க.." என்றான் காட்டமான குரலில்..
"சார் ஒரு நிமிஷம் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க.."
உள்ளுக்குள் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவன் பொறுமையாக கைகட்டிக்கொண்டு.. "எனக்கு டைம் இல்ல.. துவரகா செப்பு" (சீக்கிரம் சொல்லுங்க) என்றான்..
"சார் தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு வாரம் டைம் கொடுக்கணும்.. எப்படியாவது வேற வீடு பார்த்துகிட்டு இந்த இடத்தை காலி பண்ணிடுவேன்.." அவள் மேற்கொண்டு பேசுவதற்குள் இடை மறித்தான்
"இங்க பாருங்க..! பழைய அப்பார்ட்மெண்ட்ல நான் காலி பண்றதுக்கு ரீசனே நீங்க தான்.."
அதிர்ந்து போய் பார்த்தாள் அருந்ததி..
"நானா..? நான் என்ன சார் செஞ்சேன்.."
"உங்களை ஹராஸ் பண்ணின ஆளு அந்த அப்பார்ட்மெண்ட் செகரட்டரி.. நான் அவனை அடிச்சதனால அசோசியேஷனில் மீட்டிங் போட்டு தேவையில்லாத பழியை சுமத்தி என்னை மாதிரி பயங்கரவாதி அப்பார்ட்மெண்ட்ல இருந்தா அங்க இருக்கிற மக்களுக்கு ஆபத்துன்னு வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க..!"
"அ.. ஐயோ.. ம.. மன்னிச்சிடுங்க சார்.. என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்.. இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.." உண்மையாகவே வருந்தினாள் அருந்ததி..
"அவங்க சொன்னதுக்காக நான் அப்பார்ட்மெண்ட்டை காலி பண்ணல.. அந்த கிழவன் சொன்னதை நம்பி என்னை தப்பா பேசின அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் மூஞ்சியை பார்க்க பிடிக்கல.. அங்க இருக்கவும் பிடிக்கல.. அதனாலதான் வீட்டை காலி பண்ணிட்டேன்.."
"பாருங்க சார் வாடகை வீடுனாலே எவ்வளவு பிரச்சனைகள் இருக்குது.. கிட்டத்தட்ட நாம ரெண்டு பேரும் ஒரே நிலைமையில் தானே இருக்கோம்.. கொஞ்சம் உதவி பண்ணுங்களேன் சார்.."
மகரிஷி அவளை முறைத்தான்..
"ஹலோ அது வாடகை வீடு இல்லை என்னோட ஓன் (own) அபார்ட்மெண்ட்.." பின்கை கட்டிக் கொண்டு கால்களை ஊன்றி நின்று அவளை கூர்மையாக பார்த்தான்..
"சொந்த வீடா..?" அருந்ததி திறந்த வாய் மூடவில்லை..
அப்படிப்பட்ட ஆடம்பர வீட்டை காலி செய்துவிட்டு இப்படி ஒரு எளிமையான வீட்டில் ஏன் வந்து குடியிருக்க வேண்டும்.. ஆழ்ந்த சிந்தனையிலிருந்து முகத்திற்கு நேராக சொடுக்கிட்டான்..
"மேடம்..!"
"சா.. சார்.."
"இங்க பாருங்க.. என்னால எதுவும் செய்ய முடியாது.. நீங்க இங்க இருக்கிறதுனால என்னால கம்ஃபர்டபிலா இருக்க முடியல.. ஏற்கனவே எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்குதுங்க.. உங்களை வேற தலையில தூக்கிப்போட்டு சுமக்க முடியாது.."
"எங்களை எதுக்கு நீங்க சுமக்கணும்.." அருந்ததியும் கோபமாக கேட்டாள்..
"என்னால உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.. இப்படித்தான் நல்லவங்க மாதிரி பேசி ஒட்டி உறவாடி இழைய வேண்டியது.. அப்புறம் காரியம் நடக்கலைன்னதும் ஆம்பளைங்க மேல பழியை போட்டு அவங்களை ஒரு வழி பண்ணிட வேண்டியது.."
"ஹலோ என்ன சார் தேவையில்லாம பேசிட்டே போறீங்க.. உதவிதான் கேட்டேன் அதுக்காக இவ்வளவு கேவலமா பேசுவீங்களா..?"
"என்கிட்ட வந்து உதவியெல்லாம் கேட்காதீங்க.. போய் வீட்டை காலி பண்றதுக்கான வழியை பாருங்க.."
"அப்படியெல்லாம் காலி பண்ணிட முடியாது முன்னறிவிப்பு இல்லாம வீட்டை காலி பண்ண சொல்றது தப்பு.."
"இந்த சட்டமெல்லாம் போய் உங்க ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுங்க.." அவன் உள்ளே போய்விட..
"உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு..!" அருந்ததி கடுப்புடன் சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்..
அதே கோபத்துடன் வேகமாக சமையல் வேலைகளை முடித்தாள்..
அரைத்து வைத்த மாவில் பெரிய பானை நிறைய இட்லியை ஊற்றி.. மற்றொரு அடுப்பில் சாம்பாருக்கு பருப்பை வேகவைத்து காய்கறியை தாளித்து புளியை கரைத்து ஊற்றினாள்..
இனி இது போல இட்லி போட்டு விக்க முடியாது..
"ஆமா வாழறதுக்கு வீடே இல்லையாம்.. இதுல இட்லி போட்டு விக்கிறது ஒன்னு தான் குறைச்சல்.." மனசாட்சி அவளை கேலி செய்தது..
இடைப்பட்ட நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பி காபியை தந்து குளிக்க அனுப்பி வைத்திருந்தாள்..
உட்பக்க குளியலறை அவனுக்கு சொந்தமாகியிருக்க வெளிப்பக்க பாத்ரூமை உபயோகிக்க வேண்டிய கட்டாயம்..
பல மாதங்களாய் உபயோகிக்க படாத அந்த குளியறை வாசலில் கால் வைத்ததும்..
"ஐயோ அம்மா பாக்கவே துருப்பிடிச்சு கன்றாவியா இருக்கு.." முகத்தை சுளித்தாள் சந்திரமதி..
"இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி குளிடி.. நாளைக்கு சுத்தம் செஞ்சு வைக்கறேன்.." மகளை தாஜா பண்ணி குளிக்க அனுப்பினாள்..
வேலைகள் முடித்து பாத்திரங்களை கொண்டு வந்து திண்ணையில் அடுக்கிய நேரம் மறுபக்க திண்ணையில் மோத்தி அசையாமல் அமர்ந்து முயல்குட்டி போல் நீட்டிய காதுடன் தலைசாய்த்து அவளை பார்த்துக் கொண்டிருந்தது..
"ஆஆஆ.." என்று அலறி இந்த சனியன் இன்னுமா இங்கிருந்து போகல.. என்றபடி மோத்தியை வெறுப்பாக பார்த்தவள்..
"ஏய்.. சூ.. போ.." என்று கையை வீசி விரட்ட முயல.. அவள் கண்களில் தெரிந்த வெறுப்பையும் முகச்சுழிப்பையும் பார்த்த மோத்தி லொள்.. லொள்.. என்று குறைக்க ஆரம்பித்திருந்தது..
"ஐயோ கடவுளே..!" உள்ளே ஓட முற்பட்ட வேளையில் எதிரே வந்தவன் என் மீது நங்கென்று இடித்துக் கொண்டாள்..
பாறை போல் அத்தனை திடம் அவன்..
கடுமைக்கு எதிர்பதமாய் தன் செல்லப் பிராணியிடம் புன்னகைத்து..
"மோத்திஇஇ.." என்று இரு கரங்களை நீட்டி அழைக்க அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டது மகரிஷியின் அன்பு விசுவாசி..
"சார்.." இந்த நாயை கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போங்க.."
"ஏன் கூட்டிட்டு போகணும்..!" மோத்தியை தடவியபடியே நிமிர்ந்தான் மகரிஷி..
"சாப்பிடற பொருள்ல வாய் வச்சுட போகுது சார்..! விக்கிறதுக்காக வச்சிருக்கற இட்லி.." அவளுக்கு சிடுசிடுவென்று விழுந்தாள்..
"என் மோத்தி கண்ட இடத்துல வாய் வைக்காது..!" என்றபடி நாயை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் மகரிஷி..
"கண்ட இடமா..! நான் சமைச்சு வச்சிருக்கிற பொருளை தான் சொல்றானா.. இந்த ஆளுக்கு எவ்வளவு திமிரு..!" வாய்க்குள் முனகியபடி சாம்பாரை கிளறி வைத்துக் கொண்டிருந்த நேரம் இட்லிக்காக முதல் ஆள் வந்து நின்றது..
சந்திரமதி குளித்து உடைமாற்றிக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டு விட்டாள்..
திண்ணையில் அமர்ந்து தட்டில் மூன்று இட்லியும் சாம்பாருமாக உண்டு கொண்டிருக்க.. வீட்டுக்குள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தது மோத்தி..
வளர்ப்பு பிராணியை பார்த்ததும் சின்ன பெண்ணுக்கு அத்தனை உற்சாகம்..
"ஓய்.. குட்டி பையா" என்று ஹலோ சொல்லி உற்சாகமாக கைநீட்டி அழைக்க வெளியே வந்து திண்ணையில் ஏறிக்கொண்டது மோத்தி..
"சாப்பிடறியாடா..!" என்றதும்
சின்ன முனகலோடு பின்பக்கம் வந்து அவள் முதுகை தன் உடலால் உரசியது..
பாவம் பசி போலும்.. பக்கத்திலிருந்த தட்டை எடுத்து வைத்து அம்மா வருகிறாளா என்று எட்டிப் பார்த்துவிட்டு ஒரு இட்லியையும் கொஞ்சம் சாம்பாரையும் ஊற்றி வைத்தாள் சந்திரமதி..
நாவால் நிரடி குட்டி குட்டியாய் கடித்து போட்ட இட்லிகளை கவ்வி மென்று விழுங்கியது மோத்தி..
வெளியே நடப்பது தெரியாமல் உள்ளுக்குள் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள் அருந்ததி..
மகரிஷி அறைக்குள் குளித்துக் கொண்டிருந்தான்..
சந்திரமதி சாப்பிட்டு முடித்துவிட்டு திண்ணையில் அமர்ந்து தன்னையே சுத்தி சுத்தி வந்த மோத்தியின் உடம்பை வருடி கொடுத்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்..
வெளியே வந்த அருந்ததிக்கு இந்த காட்சியை கண்டு சட்டென்று உள்ளுக்குள் பயமும் கோபமும் எழுந்ததில்..
"ஏய்.. மதி என்னடி பண்ற.." என்றாள் சத்தமாக..
"அம்மா நாய்க்குட்டி எவ்வளவு அழகா இருக்குல்ல.." நாவால் மேல் மூக்கை நக்கியபடி மெல்ல கண்களை மூடி திறந்த மோத்தியின் மீது சந்திரமதியின் பார்வை வாஞ்சையோடு படிந்திருந்தன..
அந்நேரம் தலையை துவட்டியபடி வாசலில் வந்து நின்றிருந்தான் மகரிஷி..
"கண்ட நாயையெல்லாம் தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா.." மகரிஷியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னாள்.. கண்ட இடத்தில் என் மோத்தி வாய் வைக்காது என்று சொன்னதற்கான பதிலடியாம் இது..
சிறு பெண்ணை வைத்திருக்கிறாள் என்ற மனிதாபிமானம் கூட இல்லாமல் உதவி கேட்டும் மறுத்துவிட்டானே என்ற கோபம்..
இனி உன் தயவு என்ன வேண்டி இருக்கிறது என்ற அலட்சியம்..
"வெறி நாய் கடிச்சு ஏதாவது நோய் வந்து தொலைய போகுது.. இப்படி வா.."
"அம்மா..!"
"வான்னு சொல்றேன்ல ஸ்கூலுக்கு நேரமாச்சு உள்ள போய் பேக்கை எடு..!"
கோபத்தில் முகம் சுருங்கி போய்விட.. காலை தரையில் உதைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றாள் சந்திரமதி..
மகரிஷி எதுவும் பேசவில்லை..
துவட்டி முடித்திருந்த ஈர தலையை சிலுப்பிக் கொண்டே..
"மோதி ரா.. தின்னடானிக்கு வெல்தாம்.." (சாப்பிட போகலாம்) என்று அழைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேற மோத்தி அவனை பின்தொடர்ந்தது..
பைக்கில் ஏறி அமர்ந்ததும் முன்பக்கம் குதித்து ஏறி தோரணையாக அமர்ந்து கொண்டான் சின்னவன்..
ஹலோ.. அழுத்தமாக அழைக்கவும் கொடியில் துண்டை காய போட்டுக் கொண்டிருந்த அருந்ததி திரும்பி பார்த்தாள்..
லாக் பண்ணி சாவியை அந்த ஜன்னல் பக்கத்துல வச்சுட்டு போங்க..! என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் பைக்கை கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்..
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று வெளியே வந்தாள் மதி..
"ஏய் இருடி.. உன்னை ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு நான் போறேன்..!" கத்தியவளை கடந்து சென்று..
"ஒன்னும் தேவையில்லை.. நானே போய்க்கறேன் போ..!" நாய்க்குட்டியோடு விளையாட கூடாது என்று சொன்ன ஆத்திரத்தில் கேட்டை வேகமாக திறந்து கொண்டு வெளியே நடந்தாள் சந்திரமதி..
மகளின் அலட்சியத்திலும் கோபத்திலும் ஒதுக்கத்திலும்.. சோர்ந்து போய் சில கணங்கள் திண்ணையில் அமர்ந்திருந்தவள்.. பிறகு பாத்திரங்களை எடுத்து உள்ளே வைத்து பூட்டி சாவியை அவன் சொன்ன இடத்தில் வைத்துவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு புறப்பட்டாள்..
இன்று யூனிஃபார்ம் டி-ஷர்ட் அணியவில்லை.. விடுமுறை எடுத்திருந்தாள்..
பழகிய பாவத்திற்கு கனகா உதவி செய்யவில்லை வாடகைக்கு வந்தவனும் இரக்கம் காட்டவில்லை.. இன்று ஒரு நாள் முழுக்க விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு தேட வேண்டும்.. என்ற முடிவோடு சாலையில் வாகனங்களோடு கலந்தாள்..
பள்ளியில் விடுகிறேன் வா என்று அழைத்த தாயை வீராப்போடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கால் கடுக்க நடந்து கொண்டிருந்தாள் சந்திரமதி..
"பேசாம அம்மா கூட வண்டியில போயிருக்கலாம்.. ஐயோ நேரம் ஆயிடுச்சே..! பிரேயர் தாண்டி போச்சுன்னா பி டி மிஸ் கையை திருப்பி வச்சு முட்டியிலேயே அடிக்குமே..!" கலவரத்தோடு எச்சில் விழுங்கி வேக நடையோடு பள்ளியை நோக்கி அடியை எட்டிப் போட்டுக் கொண்டிருக்க.. அந்த ஸ்பீட் பிரேக்கரில் மெதுவாக ஏறி இறங்கி சென்றது மகரிஷியின் பைக்..
முன்பக்கம் மோத்தி அமர்ந்திருந்தான்..
"அட.. இந்த ஆளா..? பேசாம இவர்கிட்ட லிப்ட் கேட்டு ஸ்கூல்ல போய் இறங்கிக்க வேண்டியதுதான்.. இதை விட்டா வேற வழியே இல்லை.." என்ற எண்ணத்துடன்..
"அங்கிள் ஒரு நிமிஷம் நில்லுங்க.. அங்கிள்.. அங்கிள் ப்ளீஸ்.." என்று அவள் கையை நீட்டி கத்திக் கொண்டிருக்க.. பார்த்தும் பார்க்காதவன் போல் பைக்கை நிறுத்தாமல் அவளை கடந்து சென்றான் மகரிஷி..
அவன் கையிடுக்கின் வழியே மோத்தி மட்டும் எட்டிப் பார்த்தது..
தொடரும்..
Last edited: