Member
- Joined
- Jun 20, 2024
- Messages
- 46
👌👌👌👌👌
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱வொய் திஸ் கொலவெறி டார்லு"ஐ அம் சோ சாரி வருண்.. இப்படி நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.. உன்னை அந்த பார்ட்டிக்கு நான் கூட்டிட்டு போயிருக்கவே கூடாது".. நீள்விருக்கையில் தலை தாழ்ந்து அமர்ந்திருந்த வருணியின் கையைப் பிடித்து பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் அன்பு..
"சும்மா விளையாட்டா உன்னை பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா விஷயம் இவ்வளவு சீரியஸா போகுன்னு நானும் எதிர்பார்க்கல.. நான் ஓடி வர்றதுக்குள்ளே அந்த கைலாஷ் வந்து குறுக்கேப் புகுந்துட்டான்.. பட் எனிவே அதுவும் நல்லதுக்குதான்.. அந்த நேரத்துல உன்னை பாதுகாக்கிறதுதான் முக்கியம். அதனால நானும் அமைதியா இருந்துட்டேன் ".. என்றவனின் விழிகளை அமைதியுடன் ஏறிட்டாள் வருணி..
"ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ வருண்".. அவள் மனப்போக்கு தெரியாமல் அன்பு கெஞ்சி கொண்டிருக்க.. வடியவிருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு.. நீண்ட மூச்செடுத்தவள்.. "இட்ஸ் ஓகே அன்பு லீவ் இட்.. நடந்ததை மறந்திடுவோம்.. இனி அதைப் பத்தி பேச வேண்டாம்" என்று வலிய புன்னகைக்க.. அதன்பிறகுதான் அன்புவால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது. "என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் வருண்" என்று அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து புன்னகைத்தான்..
அவன் பிரச்சினை தீர்ந்து போனாலும் அவள் முகத்தில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.. "அன்பு.. அது.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்".. என்று வார்த்தைகள் வராமல் பரிதவித்தவளை விழிகளை சுருக்கி உற்று நோக்கினான் அன்பு..
"என்ன விஷயம் வருண்"..
"அது.. அது.. நான் கைலாஷை கிஸ் பண்ணது.. உனக்கு என் மேல கோபம் இல்லையா அன்பு".. மிக தயக்கத்துடன் வெளிவந்தன வார்த்தைகள்..
சடுதியில் மாறிய முகபாவத்துடன் சில கணங்கள் தலைகுனிந்து மௌனத்திருந்தவன்.. பின் அவளை நோக்கி.. "உண்மையை சொல்லப்போனா அந்த நேரத்துல எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு.. என்ன பண்றதுனே தெரியாமத்தான் கார்டன்ல போய் நின்னுகிட்டேன்.. ஆனா பொறுமையா யோசிச்சு பார்த்தபோ இதுல உன் தப்பு எதுவும் இல்லைன்னு புரிஞ்சது.. என்னோட சேம் பெர்ஃப்யூம் கைலாஷ் போட்டுருக்கான்.. அதோட கடைசியா அவன் வந்து நின்னதால.. காலடி சத்தத்தை வச்சு நான்தான் அங்கு வந்துருக்கேன்னு நீ நினைக்க நிறைய வாய்ப்புருக்கு.. இங்கே உன்னோட உள்ளுணர்வு செயல்படவே இல்லை.. ஜஸ்ட் மேம்போக்கா அனலைஸ் பண்ணி அவன்தான் அன்புன்னு நினைச்சிருக்கே.. கொஞ்சம் ஆழமா யோசிச்சு இருந்தேன்னா நேரா என்கிட்ட வந்துருப்பே.. பயமும் சரியா கண்டுபிடிக்கணும்ங்கிற பதட்டமும் உன்னை தப்பான ஆளை அடையாளம் காட்ட வைச்சிருச்சு".. என்று நிதானமாக எடுத்துரைக்கவும்.. யாகவியின் விழிகள் மின்னியது..
"நெஜமாவா அன்பு.. அப்படித்தான் நடந்திருக்கணும் இல்ல".. அவள் குரலில் அதுதான் உண்மையாக இருந்திருக்க வேண்டுமென்ற பரிதவிப்பு..
"அதுதான் உண்மை.. எதைப் பத்தியும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே.. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்".. என்று அவள் கன்னம் தட்டி விட்டு வெளியே வந்த அன்புவை அவன் அம்மாவும் அக்காவும் பிலு பிலுவென பிடித்துக் கொண்டனர்..
"என்னடா நடக்குது ஒருத்தன் அடிக்கடி அவ ரூமுக்குள்ள வந்துட்டு போறான்.. கேட்டா அவளுக்கு ஆபத்து இருக்கு.. அவன் பாடிகார்டுனு ஒரு கதை சொல்றீங்க.. இன்னைக்கு என்னடான்னா பார்ட்டில அவனுக்கு முத்தம் கொடுத்தாளாமே அவ.. பாரு அன்பு.. இப்பவே கண்டிச்சு வை.. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது".. என்று கண்டமேனிக்கு கத்திக் கொண்டிருந்த அன்னையை வாய் பொத்தி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்..
"உனக்கு யார் இதெல்லாம் சொன்னா".. என்று கோபத்துடன் பற்களை கடிக்க.. "இதோ பரமேஸ்வரிதான் நீங்க பேசினதை ஒட்டு கேட்டு வந்து சொன்னா".. என்று அலுங்காமல் உண்மையை போட்டுடைத்தாள் சரஸ்வதி..
அன்பு பரமேஸ்வரியை கொலை வெறியுடன் முறைக்க.. "அது.. உன்னை கூப்பிட வந்தேன்.. அப்போ எதேச்சையா நீங்க பேசினது காதுல விழுந்தது.. மத்தபடி வேணும்னு ஒட்டு கேக்கல".. என்று சமாளித்து வைத்தாலும் உடன்பிறந்தவளை பற்றிதான் அவனுக்கு தெரியுமே.. கனல் தகிக்கும் விழிகளுடன் அவளை முறைத்தவன்.. தாயின் பக்கம் திரும்பி "இதோ பாருங்க.. இது என் பிரச்சனை.. நானே டீல் பண்ணிக்கிறேன்.. தேவையில்லாம என் விஷயத்துல இனிமே தலையிடாதீங்க.. வருண் கிட்ட இதைப் பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது".. என்று படபடவென பொரிந்து விட்டு செல்ல.. வாயில் கை வைத்தாள் சரஸ்வதி..
"அந்த கைலாஷை முடிக்க போறேன்.. கொல்ல போறேன்னு.. பெரிய சபதம் போட்டீங்க என்ன ஆச்சு எல்லாம்.. உங்களால முடியலன்னா சொல்லுங்க அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன்".. கண்கள் சிவக்க சிவக்க கத்திய அன்புவை வினோதமாக பார்த்தனர் பரசுராம்.. ஸ்ரீ ராம் இருவரும்..
"நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. நான் வருணிகா கழுத்தில் தாலி கட்டும்போது அந்த கைலாஷ் உயிரோடு இருக்கக் கூடாது".. இன்று மிரட்டலாக சொன்னவனின் மீது இருவரின் பார்வையும் சுருங்கி நின்றது..
"என்ன.. அதிகாரம் பண்றே.. உனக்காக நாங்க எதுக்கு இதெல்லாம் பண்ணனும்".. ஸ்ரீராம் திமிராக கேட்க..
எகத்தாளமான பார்வையுடன் சிரித்தான் அன்பு.. "பண்ணனும்.. பண்ணியே ஆகனும்" ஆளுங்களை அனுப்பி அவனை போட்டு தள்ளுற வழிய பாருங்க.. இல்லைனா".. என்று நாக்கை சுழட்டி திமிராக பார்க்க..
"இல்லைனா என்ன பண்ணுவே".. என்றார் பரசுராம் தெனாவட்டாக..
"நீங்க சொத்துக்காக கைலாஷை அழைச்சிட்டு வந்ததை வருணிகிட்டே போட்டு கொடுத்துடுவேன்".. என்று வில்லத்தனமாக புருவங்களை உயர்த்திட.. ஸ்ரீராம் பரசுராம் இருவரும் திகைத்து நின்றனர்.. அவர்களில் திகைப்பில் திருப்தியாக நகைத்தவன்
"என்ன பாக்குறீங்க.. எனக்கு எப்படி விஷயம் தெரியும்னு யோசிக்கிறீங்களா.. தெரியறது மட்டுமில்ல.. ஆதாரமும் இருக்கு".. என்றவன் ஒரு வீடியோ காணொளியை மொபைலில் ஓட விட்டான்.. அதில் பரசுராம் ஸ்ரீராம் ராஜேஷ் மூவரும் கைலாஷை ஆள் மாறாட்டம் செய்ய அழைத்து வந்ததை பற்றி தெளிவாக உளறி கொட்டிக் கொண்டிருக்க.. பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரும் பீதியில் உறைந்தனர்..
"ஒழுங்கா அந்த கைலாஷை முடிச்சுட்டு எந்த பிரச்சனையும் இல்லாம எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறீங்க.. இல்லைனா இந்த வீடியோவை வருணிகாகிட்ட மட்டுமில்ல.. போலீஸ்கிட்டயும் காட்ட வேண்டியது வரும்.. .. புத்திசாலித்தனமா யோசிக்கிறதா நினைச்சுட்டு என்னை கொல்ல பிளான் பண்ணாதீங்க.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த வீடியோ அடுத்த நிமிஷம் என்ன சோசியல் மீடியாவுலயும் பப்ளிக்கா வியூ ஆகுற மாதிரி செட் பண்ணி வச்சிருக்கேன்.. சோ.. என்கிட்டேருந்து நீங்க தப்பிக்கவே முடியாது".. என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத தன் இன்னொரு முகத்தை வெளிக்காட்ட ரத்தப் பசையற்று வெளிறிப் போயிருந்தனர் இருவரும்..
அன்புவின் கட்டளைக்கேற்ப.. பரசுராமினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள் தீனாவை பார்த்துவிட்டு திரும்பி வந்த வேளையில் கைலாஷை சுற்றி வளைத்தனர்.. எதிர்பாராத நேரத்தில்.. நிராயுதபாணியாக மாட்டிக் கொண்டவனுக்கு ஆயுதத்துடன் சூழ்ந்த ஆட்களை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக போனது..
இங்கே மாளிகையில் அத்தனை காவலையும் மீறி.. ஒட்டு மொத்த குடும்பமும் சிறைபிடிக்கப்பட்டு ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.. பரசுராம் ஸ்ரீராம் அவர் மனைவிகள்.. ராஜேஷ் தாரிகா.. அன்பு.. வருணிகா.. என அனைவரும் அதில் அடக்கம்.. அன்புவின் அம்மா அக்கா குடும்பத்தார் ஷாப்பிங் சென்று விட்டதால் தெய்வாதீனமாக தப்பித்து விட்டனர்..
"என்ன நடக்குது இங்க யாருடா நீங்க".. அன்பு கொலைவெறியுடன் கத்தினான்..
பத்து பேர் கொண்ட குரூப்பில் தாடியும் மீசையுமாக நின்றிருந்த ஒருவன் முன்னே வந்து அனல் கக்கும் கண்களுடன் பேச ஆரம்பித்திருந்தான்..
"நான் யாருன்னு உனக்கு தெரியாது.. ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் என்னை நல்லாவே தெரியும்.. என்ன பாக்குறீங்க.. உங்க தொழிற்சாலையில் அடிபட்டு கால் அழுகிப்போன ஒருத்தருக்கு நஷ்ட ஈடும் கொடுக்காம.. தட்டிக் கேட்க வந்த அவர் பிள்ளையை திருட்டு கேஸ்ல போலீஸ்ல புடிச்சு கொடுத்து கம்பி என்ன வச்சீங்களே.. அந்தப் பழனிமுத்துதான் நான்".. என்று அவன் சொல்ல சொல்ல சம்பந்தப்பட்ட ஆண்கள் மூவரின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன..
"நான் ஜெயில்ல இருந்த நேரத்துல.. சரியான சிகிச்சை கிடைக்காம எங்க அப்பா கால் அழுகியே செத்துப் போயிட்டாரு.. ஓடா உழைச்ச அந்த மனுஷனோட ரத்தத்தை உறிஞ்சி குடிச்சிட்டு.. கடைசியில சக்கையா கூட தூக்கி போடாம அவரை கொன்னுட்டீங்களேடா.. மனுஷங்களா நீங்க.. உங்களை அப்படியே விட்டா எங்க அப்பாவோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது.. ஒரு முறை திருட்டு கேஸ்ல உள்ள போய் வந்த என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு.. உங்களை கொல்றதுனால புதுசா ஒன்னும் கெட்ட பேர் கிடைக்க போறதில்லை.. ஆனா எனக்கு நிம்மதி கிடைக்கும்".. இன்று எக்காளமிட்டு சிரித்தான் அவன்
"டேய் கொல்றதுன்னா அவங்களை கொல்லுங்கடா.. எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னை விட்டுருங்கடா".. என்று கை காலை உதைத்து ஆக்ரோஷமாக கத்திய அன்புவை விசித்திரமாக நோக்கினாள் வருணிகா..
அப்போதுதான் அந்த தாடி மீசைக்காரன் அன்புவை கவனித்தான் .. "யார் நீ".. அவன் விழிகள் குழப்பத்துடன் முடிச்சிட..
"நா.. நான்".. பதில் சொல்ல முடியாமல் என்று தடுமாறி விழித்தான் அன்பு.. பற்களை கடித்த பழனிமுத்து பளாரென விட்டான் ஒரு அறை..
"ஐயோ ப்ளீஸ் அவரை அடிக்காதீங்க".. அவர் என்னோட வுட் பி".. என்று பதறி அவனுக்காக பரிந்து கொண்டு வந்தாள் வருணிகா..
பழனி முத்துவின் வழிகள் வருணிகாவை கூர்மையாக நோக்கின..
"நீ.. நீங்க.. வருணிகா.. ஜெயராம் முதலாளியோட பொண்ணு தானே".. அவன் பேச்சில் மரியாதை கூடியிருக்க.. "ஆ.. ஆமாம்".. என்றாள் திகைத்து விழித்து..
சில கணங்கள் யோசித்தவனோ.. ஒரு முடிவுடன்.. "ஏய் இவங்களையும்.. இந்த ஆளையும் மட்டும் அவிழ்த்து விடுங்க".. இன்று அடியாட்களை ஏவிட ஏன் என்ற கேள்வியுடன் அவனை நோக்கினாள் வருணிகா..
"மேடம்.. உங்க அப்பா எங்களுக்கு எவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு.. என்னை படிக்க வச்சதே அவருதான்.. எங்கம்மாவோட இதய ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து அவங்க உயிரை காப்பாத்தினதும் உங்கப்பாதான்.. அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்.. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.. இந்த திருக்குறள் உங்க அப்பாதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு.. அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.. உங்களையும் நீங்க கல்யாணம் செய்துக்க போறவரையும் விட்டுடறேன்.. தப்பிச்சு போயிடுங்க".. என்று கயிற்றை அவிழ்த்து விட ஆட்களுக்கு கண்ணை காட்ட.. அன்புவிற்கு போன உயிர் திரும்பி வந்தது..
உடல் தளர்ந்து நிம்மதி பெருமூச்சுடன் வருணியை நோக்க..
அவளோ அவன் தலையில் இடியை அல்லவா இறக்கியிருந்தாள்..
"இல்ல.. முடிஞ்சா எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க.. எங்க சித்தப்பாக்களை விட்டுட்டு நான் போக மாட்டேன்.. உயிருக்கு பயந்து அவங்களை விட்டுட்டு போயிட்டு கடைசி வரைக்கும் குற்ற உணர்ச்சியில என்னால சாக முடியாது.. எனக்கு தெரியும்.. நான் இங்கிருந்து தப்பிச்சு போனாலும் உதவிக்கு போலீசை கூட்டிட்டு வர்றதுக்குள்ள நீங்க இவங்களை கொன்னுடுவீங்க.. ஒண்ணு எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க.. இல்ல அவங்களோட சேர்ந்து நாங்களும் சாகறோம்"... இன்று தீர்மானமாக சொல்லியிருக்க.. கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராம் பரசுராம் இருவரின் கண்களும் கலங்கிப் போனது..
"ஏய் என்னடி பேசிக்கிட்டு இருக்கே.. பைத்தியமா உனக்கு.. அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன்.. அதான் அவரே விட்டுடறேன்னு சொல்லிட்டாருல.. வாடி தப்பிச்சு போயிடலாம்.. இந்த மாதிரி அயோக்கியனுங்க செத்தா என்ன.. உயிரோட இருந்தா என்ன.. இவனுங்க உனக்கு என்ன பண்ணி இருக்கானுங்கன்னு தெரியுமா".. என்று கடுங்கோபத்தில் தொண்டை கிழிய கத்தினான் அன்பு..
"எனக்கு தெரியும்.. கைலாஷை இங்க வரவைச்சது என் சித்தப்பாவும் என் அண்ணனும்தான்.. அவங்களுக்கு வேணா என் மேல பாசம் இல்லாம இருக்கலாம்.. ஆனா அப்பாவுக்கு அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப பாசம் உண்டு.. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பாவோட ஆத்மா என்னை மன்னிக்காது.. துரோகம் செய்திருந்தாலும் அவங்க எனக்கு சித்தப்பா தான்.. கூட பிறக்கலைன்னாலும் ராஜேஷ் எனக்கு அண்ணன்.. தாரிகா என் தங்கை.. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு.. நான் எங்கேயும் வரமாட்டேன்".. என்று அழுத்தமாக அமர்ந்திருக்க..
"சரி.. உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தேன்.. நீங்க பயன்படுத்திக்கல.. இதுக்கு மேல நான் எதுவும் பண்ண முடியாது.. உங்களுக்கு ஒரு கடமை இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு கடமை இருக்கு.. சாரி இந்த குடும்பத்தை என்னால உயிரோடு விட முடியாது.. எரிமலைகள் பொங்கி வரும் போது சில புற்பூண்டுகளும் பூச்சிகளும் அழியும்னு சொல்லுவாங்க.. அதர்மத்தை அழிக்க வேண்டிய பொறுப்புல நான் இருக்கேன்.. என்னை மன்னிச்சிடுங்க" என்றவன்.. அவளோடு சேர்த்து அனைவரின் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி போட்டான்..
இங்கே.. விடாது அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த அடியாட்களை கைலாஷ் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க.. எதிர்பாராத விதமாக அவன் கழுத்தில் விழுந்தது அந்த வெட்டு.. சில கணங்கள் நீடித்த அவன் தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர் ரவுடிகள்.. துவண்டு சுயநினைவை இழக்கும் வேளையிலே.. "வருணிஇஇஇ".. என்றபடி கீழே விழுந்தான் கைலாஷ்..
தொடரும்..
அய்யோ கடவுளே ப்ளிஸ் கைலாஷ் திரும்ப வந்திடு உன் வருணி க்காக 🥺🥺🥺"ஐ அம் சோ சாரி வருண்.. இப்படி நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.. உன்னை அந்த பார்ட்டிக்கு நான் கூட்டிட்டு போயிருக்கவே கூடாது".. நீள்விருக்கையில் தலை தாழ்ந்து அமர்ந்திருந்த வருணியின் கையைப் பிடித்து பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் அன்பு..
"சும்மா விளையாட்டா உன்னை பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா விஷயம் இவ்வளவு சீரியஸா போகுன்னு நானும் எதிர்பார்க்கல.. நான் ஓடி வர்றதுக்குள்ளே அந்த கைலாஷ் வந்து குறுக்கேப் புகுந்துட்டான்.. பட் எனிவே அதுவும் நல்லதுக்குதான்.. அந்த நேரத்துல உன்னை பாதுகாக்கிறதுதான் முக்கியம். அதனால நானும் அமைதியா இருந்துட்டேன் ".. என்றவனின் விழிகளை அமைதியுடன் ஏறிட்டாள் வருணி..
"ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ வருண்".. அவள் மனப்போக்கு தெரியாமல் அன்பு கெஞ்சி கொண்டிருக்க.. வடியவிருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு.. நீண்ட மூச்செடுத்தவள்.. "இட்ஸ் ஓகே அன்பு லீவ் இட்.. நடந்ததை மறந்திடுவோம்.. இனி அதைப் பத்தி பேச வேண்டாம்" என்று வலிய புன்னகைக்க.. அதன்பிறகுதான் அன்புவால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது. "என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் வருண்" என்று அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து புன்னகைத்தான்..
அவன் பிரச்சினை தீர்ந்து போனாலும் அவள் முகத்தில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.. "அன்பு.. அது.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்".. என்று வார்த்தைகள் வராமல் பரிதவித்தவளை விழிகளை சுருக்கி உற்று நோக்கினான் அன்பு..
"என்ன விஷயம் வருண்"..
"அது.. அது.. நான் கைலாஷை கிஸ் பண்ணது.. உனக்கு என் மேல கோபம் இல்லையா அன்பு".. மிக தயக்கத்துடன் வெளிவந்தன வார்த்தைகள்..
சடுதியில் மாறிய முகபாவத்துடன் சில கணங்கள் தலைகுனிந்து மௌனத்திருந்தவன்.. பின் அவளை நோக்கி.. "உண்மையை சொல்லப்போனா அந்த நேரத்துல எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு.. என்ன பண்றதுனே தெரியாமத்தான் கார்டன்ல போய் நின்னுகிட்டேன்.. ஆனா பொறுமையா யோசிச்சு பார்த்தபோ இதுல உன் தப்பு எதுவும் இல்லைன்னு புரிஞ்சது.. என்னோட சேம் பெர்ஃப்யூம் கைலாஷ் போட்டுருக்கான்.. அதோட கடைசியா அவன் வந்து நின்னதால.. காலடி சத்தத்தை வச்சு நான்தான் அங்கு வந்துருக்கேன்னு நீ நினைக்க நிறைய வாய்ப்புருக்கு.. இங்கே உன்னோட உள்ளுணர்வு செயல்படவே இல்லை.. ஜஸ்ட் மேம்போக்கா அனலைஸ் பண்ணி அவன்தான் அன்புன்னு நினைச்சிருக்கே.. கொஞ்சம் ஆழமா யோசிச்சு இருந்தேன்னா நேரா என்கிட்ட வந்துருப்பே.. பயமும் சரியா கண்டுபிடிக்கணும்ங்கிற பதட்டமும் உன்னை தப்பான ஆளை அடையாளம் காட்ட வைச்சிருச்சு".. என்று நிதானமாக எடுத்துரைக்கவும்.. யாகவியின் விழிகள் மின்னியது..
"நெஜமாவா அன்பு.. அப்படித்தான் நடந்திருக்கணும் இல்ல".. அவள் குரலில் அதுதான் உண்மையாக இருந்திருக்க வேண்டுமென்ற பரிதவிப்பு..
"அதுதான் உண்மை.. எதைப் பத்தியும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே.. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியா போகும்".. என்று அவள் கன்னம் தட்டி விட்டு வெளியே வந்த அன்புவை அவன் அம்மாவும் அக்காவும் பிலு பிலுவென பிடித்துக் கொண்டனர்..
"என்னடா நடக்குது ஒருத்தன் அடிக்கடி அவ ரூமுக்குள்ள வந்துட்டு போறான்.. கேட்டா அவளுக்கு ஆபத்து இருக்கு.. அவன் பாடிகார்டுனு ஒரு கதை சொல்றீங்க.. இன்னைக்கு என்னடான்னா பார்ட்டில அவனுக்கு முத்தம் கொடுத்தாளாமே அவ.. பாரு அன்பு.. இப்பவே கண்டிச்சு வை.. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது".. என்று கண்டமேனிக்கு கத்திக் கொண்டிருந்த அன்னையை வாய் பொத்தி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்..
"உனக்கு யார் இதெல்லாம் சொன்னா".. என்று கோபத்துடன் பற்களை கடிக்க.. "இதோ பரமேஸ்வரிதான் நீங்க பேசினதை ஒட்டு கேட்டு வந்து சொன்னா".. என்று அலுங்காமல் உண்மையை போட்டுடைத்தாள் சரஸ்வதி..
அன்பு பரமேஸ்வரியை கொலை வெறியுடன் முறைக்க.. "அது.. உன்னை கூப்பிட வந்தேன்.. அப்போ எதேச்சையா நீங்க பேசினது காதுல விழுந்தது.. மத்தபடி வேணும்னு ஒட்டு கேக்கல".. என்று சமாளித்து வைத்தாலும் உடன்பிறந்தவளை பற்றிதான் அவனுக்கு தெரியுமே.. கனல் தகிக்கும் விழிகளுடன் அவளை முறைத்தவன்.. தாயின் பக்கம் திரும்பி "இதோ பாருங்க.. இது என் பிரச்சனை.. நானே டீல் பண்ணிக்கிறேன்.. தேவையில்லாம என் விஷயத்துல இனிமே தலையிடாதீங்க.. வருண் கிட்ட இதைப் பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது".. என்று படபடவென பொரிந்து விட்டு செல்ல.. வாயில் கை வைத்தாள் சரஸ்வதி..
"அந்த கைலாஷை முடிக்க போறேன்.. கொல்ல போறேன்னு.. பெரிய சபதம் போட்டீங்க என்ன ஆச்சு எல்லாம்.. உங்களால முடியலன்னா சொல்லுங்க அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன்".. கண்கள் சிவக்க சிவக்க கத்திய அன்புவை வினோதமாக பார்த்தனர் பரசுராம்.. ஸ்ரீ ராம் இருவரும்..
"நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. நான் வருணிகா கழுத்தில் தாலி கட்டும்போது அந்த கைலாஷ் உயிரோடு இருக்கக் கூடாது".. இன்று மிரட்டலாக சொன்னவனின் மீது இருவரின் பார்வையும் சுருங்கி நின்றது..
"என்ன.. அதிகாரம் பண்றே.. உனக்காக நாங்க எதுக்கு இதெல்லாம் பண்ணனும்".. ஸ்ரீராம் திமிராக கேட்க..
எகத்தாளமான பார்வையுடன் சிரித்தான் அன்பு.. "பண்ணனும்.. பண்ணியே ஆகனும்" ஆளுங்களை அனுப்பி அவனை போட்டு தள்ளுற வழிய பாருங்க.. இல்லைனா".. என்று நாக்கை சுழட்டி திமிராக பார்க்க..
"இல்லைனா என்ன பண்ணுவே".. என்றார் பரசுராம் தெனாவட்டாக..
"நீங்க சொத்துக்காக கைலாஷை அழைச்சிட்டு வந்ததை வருணிகிட்டே போட்டு கொடுத்துடுவேன்".. என்று வில்லத்தனமாக புருவங்களை உயர்த்திட.. ஸ்ரீராம் பரசுராம் இருவரும் திகைத்து நின்றனர்.. அவர்களில் திகைப்பில் திருப்தியாக நகைத்தவன்
"என்ன பாக்குறீங்க.. எனக்கு எப்படி விஷயம் தெரியும்னு யோசிக்கிறீங்களா.. தெரியறது மட்டுமில்ல.. ஆதாரமும் இருக்கு".. என்றவன் ஒரு வீடியோ காணொளியை மொபைலில் ஓட விட்டான்.. அதில் பரசுராம் ஸ்ரீராம் ராஜேஷ் மூவரும் கைலாஷை ஆள் மாறாட்டம் செய்ய அழைத்து வந்ததை பற்றி தெளிவாக உளறி கொட்டிக் கொண்டிருக்க.. பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரும் பீதியில் உறைந்தனர்..
"ஒழுங்கா அந்த கைலாஷை முடிச்சுட்டு எந்த பிரச்சனையும் இல்லாம எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறீங்க.. இல்லைனா இந்த வீடியோவை வருணிகாகிட்ட மட்டுமில்ல.. போலீஸ்கிட்டயும் காட்ட வேண்டியது வரும்.. .. புத்திசாலித்தனமா யோசிக்கிறதா நினைச்சுட்டு என்னை கொல்ல பிளான் பண்ணாதீங்க.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இந்த வீடியோ அடுத்த நிமிஷம் என்ன சோசியல் மீடியாவுலயும் பப்ளிக்கா வியூ ஆகுற மாதிரி செட் பண்ணி வச்சிருக்கேன்.. சோ.. என்கிட்டேருந்து நீங்க தப்பிக்கவே முடியாது".. என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத தன் இன்னொரு முகத்தை வெளிக்காட்ட ரத்தப் பசையற்று வெளிறிப் போயிருந்தனர் இருவரும்..
அன்புவின் கட்டளைக்கேற்ப.. பரசுராமினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள் தீனாவை பார்த்துவிட்டு திரும்பி வந்த வேளையில் கைலாஷை சுற்றி வளைத்தனர்.. எதிர்பாராத நேரத்தில்.. நிராயுதபாணியாக மாட்டிக் கொண்டவனுக்கு ஆயுதத்துடன் சூழ்ந்த ஆட்களை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக போனது..
இங்கே மாளிகையில் அத்தனை காவலையும் மீறி.. ஒட்டு மொத்த குடும்பமும் சிறைபிடிக்கப்பட்டு ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.. பரசுராம் ஸ்ரீராம் அவர் மனைவிகள்.. ராஜேஷ் தாரிகா.. அன்பு.. வருணிகா.. என அனைவரும் அதில் அடக்கம்.. அன்புவின் அம்மா அக்கா குடும்பத்தார் ஷாப்பிங் சென்று விட்டதால் தெய்வாதீனமாக தப்பித்து விட்டனர்..
"என்ன நடக்குது இங்க யாருடா நீங்க".. அன்பு கொலைவெறியுடன் கத்தினான்..
பத்து பேர் கொண்ட குரூப்பில் தாடியும் மீசையுமாக நின்றிருந்த ஒருவன் முன்னே வந்து அனல் கக்கும் கண்களுடன் பேச ஆரம்பித்திருந்தான்..
"நான் யாருன்னு உனக்கு தெரியாது.. ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் என்னை நல்லாவே தெரியும்.. என்ன பாக்குறீங்க.. உங்க தொழிற்சாலையில் அடிபட்டு கால் அழுகிப்போன ஒருத்தருக்கு நஷ்ட ஈடும் கொடுக்காம.. தட்டிக் கேட்க வந்த அவர் பிள்ளையை திருட்டு கேஸ்ல போலீஸ்ல புடிச்சு கொடுத்து கம்பி என்ன வச்சீங்களே.. அந்தப் பழனிமுத்துதான் நான்".. என்று அவன் சொல்ல சொல்ல சம்பந்தப்பட்ட ஆண்கள் மூவரின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன..
"நான் ஜெயில்ல இருந்த நேரத்துல.. சரியான சிகிச்சை கிடைக்காம எங்க அப்பா கால் அழுகியே செத்துப் போயிட்டாரு.. ஓடா உழைச்ச அந்த மனுஷனோட ரத்தத்தை உறிஞ்சி குடிச்சிட்டு.. கடைசியில சக்கையா கூட தூக்கி போடாம அவரை கொன்னுட்டீங்களேடா.. மனுஷங்களா நீங்க.. உங்களை அப்படியே விட்டா எங்க அப்பாவோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது.. ஒரு முறை திருட்டு கேஸ்ல உள்ள போய் வந்த என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு.. உங்களை கொல்றதுனால புதுசா ஒன்னும் கெட்ட பேர் கிடைக்க போறதில்லை.. ஆனா எனக்கு நிம்மதி கிடைக்கும்".. இன்று எக்காளமிட்டு சிரித்தான் அவன்
"டேய் கொல்றதுன்னா அவங்களை கொல்லுங்கடா.. எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னை விட்டுருங்கடா".. என்று கை காலை உதைத்து ஆக்ரோஷமாக கத்திய அன்புவை விசித்திரமாக நோக்கினாள் வருணிகா..
அப்போதுதான் அந்த தாடி மீசைக்காரன் அன்புவை கவனித்தான் .. "யார் நீ".. அவன் விழிகள் குழப்பத்துடன் முடிச்சிட..
"நா.. நான்".. பதில் சொல்ல முடியாமல் என்று தடுமாறி விழித்தான் அன்பு.. பற்களை கடித்த பழனிமுத்து பளாரென விட்டான் ஒரு அறை..
"ஐயோ ப்ளீஸ் அவரை அடிக்காதீங்க".. அவர் என்னோட வுட் பி".. என்று பதறி அவனுக்காக பரிந்து கொண்டு வந்தாள் வருணிகா..
பழனி முத்துவின் வழிகள் வருணிகாவை கூர்மையாக நோக்கின..
"நீ.. நீங்க.. வருணிகா.. ஜெயராம் முதலாளியோட பொண்ணு தானே".. அவன் பேச்சில் மரியாதை கூடியிருக்க.. "ஆ.. ஆமாம்".. என்றாள் திகைத்து விழித்து..
சில கணங்கள் யோசித்தவனோ.. ஒரு முடிவுடன்.. "ஏய் இவங்களையும்.. இந்த ஆளையும் மட்டும் அவிழ்த்து விடுங்க".. இன்று அடியாட்களை ஏவிட ஏன் என்ற கேள்வியுடன் அவனை நோக்கினாள் வருணிகா..
"மேடம்.. உங்க அப்பா எங்களுக்கு எவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு.. என்னை படிக்க வச்சதே அவருதான்.. எங்கம்மாவோட இதய ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து அவங்க உயிரை காப்பாத்தினதும் உங்கப்பாதான்.. அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன்.. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.. இந்த திருக்குறள் உங்க அப்பாதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாரு.. அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன்.. உங்களையும் நீங்க கல்யாணம் செய்துக்க போறவரையும் விட்டுடறேன்.. தப்பிச்சு போயிடுங்க".. என்று கயிற்றை அவிழ்த்து விட ஆட்களுக்கு கண்ணை காட்ட.. அன்புவிற்கு போன உயிர் திரும்பி வந்தது..
உடல் தளர்ந்து நிம்மதி பெருமூச்சுடன் வருணியை நோக்க..
அவளோ அவன் தலையில் இடியை அல்லவா இறக்கியிருந்தாள்..
"இல்ல.. முடிஞ்சா எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க.. எங்க சித்தப்பாக்களை விட்டுட்டு நான் போக மாட்டேன்.. உயிருக்கு பயந்து அவங்களை விட்டுட்டு போயிட்டு கடைசி வரைக்கும் குற்ற உணர்ச்சியில என்னால சாக முடியாது.. எனக்கு தெரியும்.. நான் இங்கிருந்து தப்பிச்சு போனாலும் உதவிக்கு போலீசை கூட்டிட்டு வர்றதுக்குள்ள நீங்க இவங்களை கொன்னுடுவீங்க.. ஒண்ணு எல்லாரையும் ரிலீஸ் பண்ணுங்க.. இல்ல அவங்களோட சேர்ந்து நாங்களும் சாகறோம்"... இன்று தீர்மானமாக சொல்லியிருக்க.. கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராம் பரசுராம் இருவரின் கண்களும் கலங்கிப் போனது..
"ஏய் என்னடி பேசிக்கிட்டு இருக்கே.. பைத்தியமா உனக்கு.. அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன்.. அதான் அவரே விட்டுடறேன்னு சொல்லிட்டாருல.. வாடி தப்பிச்சு போயிடலாம்.. இந்த மாதிரி அயோக்கியனுங்க செத்தா என்ன.. உயிரோட இருந்தா என்ன.. இவனுங்க உனக்கு என்ன பண்ணி இருக்கானுங்கன்னு தெரியுமா".. என்று கடுங்கோபத்தில் தொண்டை கிழிய கத்தினான் அன்பு..
"எனக்கு தெரியும்.. கைலாஷை இங்க வரவைச்சது என் சித்தப்பாவும் என் அண்ணனும்தான்.. அவங்களுக்கு வேணா என் மேல பாசம் இல்லாம இருக்கலாம்.. ஆனா அப்பாவுக்கு அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப பாசம் உண்டு.. அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பாவோட ஆத்மா என்னை மன்னிக்காது.. துரோகம் செய்திருந்தாலும் அவங்க எனக்கு சித்தப்பா தான்.. கூட பிறக்கலைன்னாலும் ராஜேஷ் எனக்கு அண்ணன்.. தாரிகா என் தங்கை.. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது என்னோட பொறுப்பு.. நான் எங்கேயும் வரமாட்டேன்".. என்று அழுத்தமாக அமர்ந்திருக்க..
"சரி.. உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தேன்.. நீங்க பயன்படுத்திக்கல.. இதுக்கு மேல நான் எதுவும் பண்ண முடியாது.. உங்களுக்கு ஒரு கடமை இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு கடமை இருக்கு.. சாரி இந்த குடும்பத்தை என்னால உயிரோடு விட முடியாது.. எரிமலைகள் பொங்கி வரும் போது சில புற்பூண்டுகளும் பூச்சிகளும் அழியும்னு சொல்லுவாங்க.. அதர்மத்தை அழிக்க வேண்டிய பொறுப்புல நான் இருக்கேன்.. என்னை மன்னிச்சிடுங்க" என்றவன்.. அவளோடு சேர்த்து அனைவரின் மீதும் பெட்ரோலை ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி போட்டான்..
இங்கே.. விடாது அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த அடியாட்களை கைலாஷ் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க.. எதிர்பாராத விதமாக அவன் கழுத்தில் விழுந்தது அந்த வெட்டு.. சில கணங்கள் நீடித்த அவன் தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர் ரவுடிகள்.. துவண்டு சுயநினைவை இழக்கும் வேளையிலே.. "வருணிஇஇஇ".. என்றபடி கீழே விழுந்தான் கைலாஷ்..
தொடரும்..