• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
73
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Sep 21, 2023
Messages
1
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
Interesting all the best sana ma 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
143
Sagi ஆரம்பமே அமர்களாமாக இருக்கிறது. welcome next story 💐💐💐💐💐💐
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
117
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖sema content irukum pola 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
53
Idhaiyum muraliya yedhir partha manvi ku
Arjun Reddy ah vida terror piece la irukku 🫣🫣🫣🫣🫣
 
Member
Joined
May 10, 2023
Messages
35
I
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
Interesting siss
 
Joined
Jul 25, 2023
Messages
34
ஆரம்பமே அமர்க்களம் சனா மேம்
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
127
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
Superb❤❤❤ beginning..
 
New member
Joined
Aug 23, 2023
Messages
3
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
New member
Joined
Jul 20, 2023
Messages
3
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
Ur way of writing about family bonding is excellent.....psychologically n emotionally kuzhandhaigala naamum namma varthaigalum evlo epdi paadhikkum nu sonnadhu arumai ah irundhadhu....keep writing such amazing thoughts ❤️
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
137
தங்கத்தை உருக்கி வார்த்த உலோகப் பந்தாக பகலவன் கிழக்கில் மேலெழும்பி பூமிப்பெண்ணை தொட்டுத் தழுவி காதல் செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது ..

இன்றாவது உங்கள் ஆதிக்கத்தால் வாட்டி வதைக்காமல் மாலை வரை இதே மென்மையுடன் என்னோடு நேரம் செலவிடுவீர்களா.. என்று பனியில் நனைந்த பூக்களுமாய்.. ஈரம் சுமந்த தென்றல் காற்றுமாய்.. கதிரவனுக்கு காதல் செய்தி அனுப்பியிருந்தாள் நிலமகள்.. சுட்டெரிப்பது என் இயல்பு பெண்ணே!!.. அதை மாற்றிக் கொள்வதாயின் நான் மறைந்து தான் போக வேண்டும்.. சுயம் இழந்து வாழ்ந்து பழக்கமல்ல என்ற தோரணையுடன்.. நேரம் கூடுவதற்கு ஏற்ப தன் வன்மையை அதிகரித்துக் கொண்டே சென்றிருந்தான் கதிரவன்.. தன்னவனின் வெம்மையின் தாக்கத்தில் வழக்கம் போல தகித்துக் கொண்டிருந்தாள் பூமி பெண்ணவள்..

"அடேங்கப்பா காலங்காத்தால என்ன வெயிலு.. ஏன்டி ஏசி போட்டுக்க வேண்டியதுதானே.. காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது இப்படியே வேர்த்து விறுவிறுத்து நிக்கப் போறீயா".. என்று ரமாவதி அவளாகவே ஏசியை உயிர்பித்தாள்.. நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்து வேண்டா வெறுப்பாக அலாங்காரம் செய்து கொண்டிருந்த மான்வி.. "இந்த பொண்ணு பார்க்கிற படலமெல்லாம் இன்னுமா நடக்குது".. என்று சலித்துக் கொண்டே.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த கல் வளையல்களை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு இன்னொரு விஷயமும் நன்றாகவே புரிந்திருந்தது.. இந்தப் பெண் பார்க்கும் படலம் வெறும் கண்துடைப்பு தான்.. வரப் போகின்ற மாப்பிள்ளையோடு தான் அவள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது உறுதியாக அதிகாரப்பூர்வமாக.. இல்லையா பின்?.. அப்பாவின் நலிவடைந்த டெக்ஸ்டைல் வியாபாரத்தினால் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த கடனுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் வட்டி இல்லாத உதவி தொகையாக வழங்கப்பட்டிருக்கிறதே!!..

அந்த பணத்தில் தானே மூழ்கவிருந்த.. அடமானத்தில் கிடந்த இந்த வீட்டை மீட்டினார் நீலகண்டன்..

"அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று.. அடம்பிடித்து ஒற்றை காலில் நின்ற தனக்கு.. "உன்னால தான் இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தோம்.. வேண்டாம்னு சொன்னா உன்னை கட்டாயப்படுத்தவா முடியும்.. விவரம் தெரிஞ்ச பொண்ணு நீ.. எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு சரியா ஒரு முடிவு எடுப்பேன்னு நினைச்சோம்.. இல்ல.. குடும்பத்தோட நடுத்தெருவில நிக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்.. பிரதிபலன் பாக்காம கடன் கொடுத்தவர் தனக்காக கேட்ட ஒரே விஷயம்.. உங்க மகளை என் மகனுக்கு கட்டிக் கொடுப்பீங்களான்னு மட்டும்தான்.. அதைக் கூட பணம் கொடுத்திருக்கோம்கிற அதிகாரத்தோட கேக்கல.. தாழ்வா தான் கேட்டாரு.. அவர் மனசுக்கு நீ அங்க போய் நல்லா இருப்பேன்னு தோணுச்சு.. பணக்கார வாழ்க்கை.. நல்ல மாமனார்.. மாமியார் தொல்லை இல்ல.. அங்கே வாழ உனக்கு கசக்குதா?.. அதிதாரத் தோரணையுடன் கேட்ட தந்தையை ஏறெடுத்து நோக்கினாள்..

"நல்ல மாமனார் பணக்கார வாழ்க்கைன்னு சொல்றீங்களே தவிர பையனை பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேங்கறீங்களே".. வாய் திறந்தே கேட்டு விட்டாள் மான்வி..

எதிர் கேள்வி கேட்டவளை விழிகளை சுருக்கி பார்த்தவர்.. "மாப்பிள்ளை பற்றி குற்றம் சொல்ற மாதிரி எதுவும் இல்லையே மா" என்றார் பொறுமையாக..

"ஆனா பெருசா நல்லதா சொல்லிக்கிற மாதிரியும் எதுவும் இல்லையேப்பா".. என்றாள் அவள் தவிப்போடு..

இப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்றுமே பிடிப்பதில்லை ஆணாதிக்க நீலகண்டனிற்கு.. அவர் சொன்னால் காரணம் சரியாகத்தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல்.. மனைவியும்.. மக்கள் செல்வங்களும் நெருப்பில் கூட குதித்து விட வேண்டும்..

இத்தனை நாட்கள் அப்படித்தானே.. புதிதாக திருமணத்திற்கு எதிர்த்து கேள்வி கேட்ட மகளை.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தார்.. ஆயிரம் அர்த்தங்களுடன்..

"நிவி.. உன் தம்பி தங்கச்சி இவங்க முகத்தை பாரு.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காது போனா.. அவங்க படிப்பு பாழாகும்.. கொடுத்த ஐம்பது லட்சத்தை திரும்பி கொடுக்க வேண்டியது வரும்.. வீடு.. சொத்து.. மரியாதை.. சகலத்தையும் இழந்து மானங்கெட்டு வாழறதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்".. என்று வாயைப் பொத்தி அழுதார் ரமா..

"அம்மாஆஆ.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".. தொண்டை அடைத்துக் கொள்ள.. நெஞ்சு கூடு ஏறி இறங்கியதோடு சத்தம் கூட்டி பதறினாள் மான்வி..

"விடும்மா.. நாம சொல்றது எதுவும் அவ காதுல ஏறாது.. அவளுக்கு அவளோட சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்.. இப்பக் கூட நாம ஒன்னும் அவளை வாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விடலையே!!.. பையனுக்கு என்ன குறையாம்.. அழகு அந்தஸ்து பணம்.. என்ன இல்ல?..எப்படியோ போகட்டும் விடு".. என்றார் நீலகண்டன் நொந்து போன குரலில்..

"குணமில்லையே".. என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்..

"எமோஷனல் டிராமா".. மனம் கசந்து போனாள் மான்வி.. பதினேழு வயதே ஆன அனிதாவும்.. பதினான்கு வயதில் நிவினும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அங்கே வந்து நிற்க.. ஒட்டுமொத்த குடும்பமும் பரிதாபத்துடன் அவளை நோக்கியது.. என்னவோ அவர்கள் வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரமே அவள் தான் என்பது போலவும்.. அவள் இல்லையேல் அந்த குடும்பமே இருளில் மூழ்கி விடும் என்பதைப் போலவும்.. அனைவரின் முக பாவனையும் எரிச்சலை கிளப்பியது அவளுள்.. என்னை நம்பித்தான் இந்த குடும்பத்தை கட்டமைத்தாரா அப்பா.. பெற்றவருக்கு வளர்க்கத் தெரியாதா.. திருமணம் செய்து கொண்டவருக்கு குடும்பத்தை வழிநடத்த தான் தெரியாதா.. நான் தான் பலிகடா வா?.. மனசாட்சி கூக்குரலிட்டு கத்தினாலும்.. தன் மனக்குமுறல்களை உள்ளே போட்டு புதைத்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தவள்.. "சரி உங்க விருப்பம் போலவே செய்ங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.. அடுத்த வினாடியை அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.. இரண்டு நிமிடங்களில்.. மாப்பிள்ளையின் தந்தை விஸ்வ மூர்த்திக்கு அழைத்து.. பெண் பார்க்க வரச் சொல்லி தேதி குறித்து விட்டார் நீலகண்டன்..

திருமணமே வேண்டாம் என்று அலறி பின்வாங்கும் அளவிற்கு மாப்பிள்ளை என்ன அவ்வளவு மோசமானவனா.. பெண் பித்தனா.. குடிகாரனா.. சந்தேகப் பிராணியா.. என்று கேட்டால்.. அவள் கவலை மாப்பிள்ளையோ பற்றியது அல்ல என்பதே பதில்..

அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக முன்னிறுத்தப்போகும் ஜீவானந்தன் கோபத்தின் செயல்பாடுகள் பற்றி பல பத்திரிகைகளில் மீடியாக்களில்.. கண்டிருக்கிறாள்..

பாரம்பரியமிக்க மேனி அழகை.. மினுமினுப்போடு வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சள்.. முல்தானி மெட்டி யினால் தயாரிக்கப்படும் கர்கியுமிக் காஸ்மெட்டிக்ஸ்.. (Curcumic cosmetics) நிறுவனத்தின் சொந்தக்காரனவன்.. காஸ்மெட்டிக் உலகத்தின் நம்பர் ஒன் தயாரிப்பு.. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏன் வெளிநாட்டவர்களும் கூட தேடிப்பிடித்து வாங்குவதில்.. விற்பனை விகிதம் அதிகரித்து ஷேர் மார்க்கெட்டிலும் கூட பல பங்குகளை தன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்து அதிக இலாபத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தன்..

வியாபார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்தாலும்.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் அவன்..

சமீபத்தில் கூட பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைந்ததில்.. அங்கிருந்த கேமராக்களில் கிளிக்கப் பட்டு.. மாதர் சங்கம் கொதித்தெழுந்து.. விளக்கம் கொடுக்க விரும்ப வில்லை.. என்று அவன் திமிராக பேசிய காணொலியும்.. அடர்ந்த கேசத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அவன் புகைப்படமும் திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில்.. சோசியல் மீடியாக்களில் வைரலாக வந்து போக.. அழகுக்கேற்ற அறிவோ நிதானமோ இல்லையே!!.. என்று ஒவ்வொரு சேனலும் விமர்சித்துக் கொண்டிருந்ததை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.. ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க எப்படி துணிச்சல் வருகிறது என்று வெறுப்போடு முகம் சுழித்தவளுக்கு இன்று அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது..

சரி மாப்பிள்ளையின் குணம் சரியில்லை, அதுதான் உன் பிரச்சனையா? என்று கேட்டால்.. அது மட்டும் இல்லை.. திருமணம் என்றாலே அலர்ஜி.. செக்ஸ் என்றாலே கசப்பு.. ஆண் பெண் தொடுகை எல்லாம் அவளை பொருத்தவரை அசிங்கம்!!..

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா.. சிறுவயதில் அப்படி இருந்திருக்கலாம்.. இப்போது முதிர்ச்சி வந்திருக்குமே.. பருவ மாற்றத்தில்.. திருமணம் கசக்குமா என்ன!!" என்று கேட்டால்.. சிறுவயதிலிருந்த மனநிலை இப்போது மாறவில்லை.. இதற்குக் காரணம் அவள் தாய் ரமா தான்.. எல்லா குழந்தைகளும் ஒன்று போல இருப்பதில்லை.. சில நேரங்களில் குழந்தைகளை கண்டிப்பதற்காக அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக நாம் கூறும் சில வார்த்தைகள் அவர்கள் அடிமனதில் அழுத்த பதிந்து ஆயுள் முழுக்க வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்..

செக்ஸ் எஜுகேஷன் கூட குழந்தைகளுக்கு தேவைதான்.. ஆனால் அதை போதிக்கும் முறையில் ஒரு சதவீதம் தவறு ஏற்பட்டு விட்டால் கூட பூ போன்ற குழந்தைகளின் மனதில் வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.. இதனால்தான் அரசாங்கம் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வில்லையோ என்னவோ!!..

சரி மான்வியின் பிரச்சனைக்கு வருவோம் என்னதான் அவள் பிரச்சனை..

காதல் தவறு.. தெய்வக்குத்தம்.. என்று வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் போதனை அங்கேயும் உண்டு.. "பக்கத்து வீட்டு ஈஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அடுத்த மாசமே குழந்தை.. இதுலருந்தே தெரியல.. இதுங்களோட அலைச்சல்"..

"இதோ எங்க வீட்டுக்காரரோட தங்கச்சி.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் புருஷன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா.. புருஷன் மோகம் இன்னமும் தீரலை போல இருக்கு.. கொஞ்சம் கூட விவஸ்தை வேண்டாம்.. சீ.. எப்படித்தான் இந்த பொண்ணுங்களால் இப்படி இருக்க முடியுதோ".. என்று தன்முன்னே அப்பாவிடமோ.. அல்லது அடுத்த வீட்டு பெண்களிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதும்.. தொலைக்காட்சியில் கணவன் மனைவி காதல் சார்ந்த காட்சிகள் வந்தால்.. அதாவது நெருக்கமான காட்சிகளில்.. "கருமம்.. வெட்கம் கெட்டதுங்க.. படத்துல பாக்குறோம்.. நேர்ல கூட இப்படித்தான்.. இங்கிதம் இல்லாம திரியுதுங்க".. என்று வாய்க்கு வந்தபடிக்கு திட்டுவதும்.. கணவன் மனைவி கூட.. ஒரு எல்லையைத் தாண்டி நெருக்கமாக இருப்பது தவறு.. அவர்களுக்குள்ளும் ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு போலிருக்கிறது என அவள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து போனது.. காதலும் காமமும் கசந்து போனது..

சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை வெளியே சொல்ல வாய்ப்பு கிடைத்ததில்லை அவளுக்கு.. "வாய தொறக்கவே கூடாது.. எதிர்த்து பேசாதே.. அதிங்கப் பிரசங்கி மாதிரி பேசாதே.. என்ன இது பைத்தியக்காரத்தனமான பேச்சு.. மெச்சுர்டா நடந்துக்க.. புத்திசாலித்தனமாக பேசு.. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ.. என்ன லவ் சாங் பாக்கிறது.. அசிங்கம்.. காதல் ஒழுக்கங்கெட்டத் தனம்.. பசங்க பூரா காமவெறி புடிச்சவனுங்க.. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையை சீரமைக்கும்"..

என்று எது பேசினாலும் ஏதாவது குற்றம் சொல்லி சொல்லி.. எப்படி பேசுவது எப்படி யோசிப்பது என்று மறந்து போனாள்.. தாய் தந்தையை மட்டுமே சார்ந்திருக்கும்.. செவலைப் பிள்ளையானாள்..

உண்மைதான்.. பெண்களுக்கு கல்வி மிக மிக முக்கியம்.. யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலில் நிற்பதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் பெண்குழந்தைகளுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவை கல்வி.. ஆனால் இன்றைய கல்வி ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்வியலை சொல்லிக் கொடுக்கிறதா.. தாய் தந்தையர் கூட வயது வந்த பிள்ளைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசாமல் போவதே இங்கே கோர்ட்டில் நிரம்பி வழியும் விவாகரத்துகளுக்கு காரணம்.. ஆண் பெண் உறவே அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததற்கு பதிலாக இந்த வயதில் இதைப் பற்றியெல்லாம் நீ அறிந்து கொள்ள தேவையில்லை என்று சொல்லி வளர்த்திருந்தால் அறிய வேண்டிய வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து பக்குவப்பட்டிருப்பாளோ என்னவோ!!..

இதைவிட கொடுமை.. பதினைந்து வயதாகியும்.. வயதுக்கு வராமல் போனதில்.. உடலில் ஏதாவது கோளாறா என்று பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல.. அவர் பிறப்புறுப்பில் சோதனை செய்ய முயன்ற போது அழுது ஊரைக் கூட்டி பயந்து கலாட்டா செய்து அந்த கிளினிக்கையே ஒரு வழியாகிவிட்டாள் அவள்!!..

அதன் பின் வெளியே அழைத்து வந்த அவள் அத்தை பிரேமா.. "என்னடி இதுக்கு இப்படி அலறி துடிக்கிற.. என்னமோ உயிர் போகுற மாதிரி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஆம்பளையும் பொம்பளையும் அந்த இடத்துல தான் உறவு வச்சுப்பாங்க.. அந்த இடத்துல இருந்து தான் குழந்தை பிறக்கும்.. இப்படி பரிசோதனை செய்யறதுக்கே.. அலறுனா மத்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணுவ".. என்று பதினைந்து வயது பெண்ணுக்கு நிதர்சனத்தை உணர்த்த முயல அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் அவள்.. அந்த டாக்டர் பரிசோதனை செய்கிறேன் என்று மேலோட்டமாக அந்த இடத்தில் விரல் வைத்ததில் வலி உயிர் போய் விட்டதே.. இதில் அத்தை வேறு என்னென்னவோ சொல்கிறாளே.. என்று உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ள திருமணம் என்ற விஷயமே எட்டி காயாக கசந்தது..

திருமணம் என்பது ஆயுள் முழுக்க ஒரு துணை தன்னோடு பயணிப்பதற்கான அடித்தளம்.. காமமும் காதலும் திருமண உறவை பலப்படுத்தும்.. காமம் உடலை மகிழ்விக்கும்.. காதல் உள்ளத்தை மகிழ்விக்கும்.. கணவனும் மனைவியும் கண்டமேனிக்கு காதல் செய்யலாம்.. தவறே இல்லை.. இருமனம் ஒன்றுபட்ட இல்லறத்தில் எல்லைகள் என்பதே இல்லை.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்ல அங்கே யாருக்கும் நேரமில்லை.. அதற்காக அவள் ஒன்றும் உணர்வுகளை இல்லாத ஜடம் அல்ல.. உடலையும் உள்ளத்தையும் பாதிக்காத மென்மையான காதல் உணர்வுகள் பிடிக்கும்.. இதயம் முரளி பிடிக்கும்.. அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா பிடிக்கவே பிடிக்காது அலர்ஜி.. அசிங்கம்.. அசிங்கம்..

மனம் இத்தனை சஞ்சலங்களோடு அலை பாய்ந்து கொண்டிருக்க.. வெளியே எந்த உணர்வுகளையும் காட்டாது மணப்பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் மான்வி..

அவள் பெண்மைக்கு சொந்தமானவன்.. தன் வீட்டில்.. ஹாலில்.. தன் தந்தை வயதை ஒத்த ஒருவரை.. முகமே சிதைந்து போகும் அளவிற்கு.. ரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி பலமாக குத்திக் கொண்டிருந்தான்.. நரம்புகள் புடைத்து கோபத்தில் சிவந்தேறிய விழிகளுடன்..

"டேய் ஜீவா.. வேண்டாம் டா.. விடுடா.. அவர் உன் சித்தப்பா".. என்று அவனைப் பற்றி இழுக்க வந்த ஜீவாவின் நண்பன் பரத்.. ஜீவா கையை உதறியதில் சோபாவில் போய் விழுந்தான்.. "என்னங்க".. என்று ஓடிவந்து அவனை தூக்கி விட்டாள் புது மனைவி தீப்தி..

ஆம் அடி வாங்கிக் கொண்டிருந்தவர்.. விஷ்வ மூர்த்தியின் உடன் பிறந்த தம்பி.. பெண் பார்க்க செல்லும் போது சொந்தக்காரர்கள் வரிசையில் பந்தாவாக அமர்ந்து.. மாப்பிள்ளை வீட்டு திமிரை காட்டுவதற்காக அங்கே வந்திருந்தவர்.. இப்போது பரிதாபமாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்..

அடித்தது போதாது என்று அந்த பெரிய மனிதரை.. கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தவனை தன் முழு பலத்தை திரட்டி.. அவரிடமிருந்து விலக்கி இழுத்து.. பளாரென ஒரு அறை விட்டார் விஸ்வ மூர்த்தி.. ஜீவானந்தன் தந்தை..

கண்மண் தெரியாத கோபத்திலிருந்தவன்.. தன் முன் நின்றிருந்தவன் அடிக்க கை ஓங்கி இருந்தான் அடுத்த கணமே..

தொடரும்..
🙄🙄🙄🙄🙄🙄 Starting 👌👌
 
Top