- Joined
- Jan 10, 2023
- Messages
- 75
- Thread Author
- #1
"சார் அவங்க அம்மா.. கூடப்பிறந்தவங்க யாரும் வரலையா".. டாக்டர் கூச்சத்துடன் கேட்டதில்.. "ஏன் என்ன பிரச்சினை?" என்று புருவம் உயர்த்தினான் ஜீவா.. பாவம் மான்விக்குதான் அந்த பெண் மருத்துவரை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை..
பின் இருவருக்கும் திருமணம் கூட ஆகவில்லையே.. "பீரியட்ஸ் டைம்.. ஹெவியா ஸ்டமக் பெயின்.. அன் ஈசியா ஃபில் பண்றா".. என்று அவளுக்கு முந்திக் கொண்டு அவனே பிரச்சனைகளை சொல்லி முடித்திருந்தான்..
"நீங்க யாரு?" என்று மருத்துவர்.. கண்ணாடியை சரி செய்து அவனை கூர்மையாக பார்க்கவும் .. "ஷு இஸ் மை பியான்சே" என்றான் அவன் கம்பீரக் குரலில்..
பரவாயில்லையே திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிடம் இவ்வளவு அக்கறையா என்று ஒரு பக்கம் பிரமிப்பாக தோன்றினாலும்.. மறுபக்கம் மான்வியின் தர்ம சங்கடமான முகபாவனை கண்டு இது வேறு விதமான துன்புறுத்தலோ என்று ஐயம் கொண்டார் மருத்துவர்..
சில விபரங்களை தெளிவாக ஆழமாக விசாரிக்க வேண்டி ஜீவாவை வெளியே அனுப்ப முயன்றார்..
"இல்ல டாக்டர் அவளைப் பத்தின தகவல்கள் எனக்கும் தெரியணும்.. சோ நான் இங்கேயே இருக்கேன்.. என் முன்னாடியே கேளுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல".. என்றிருந்தான் சங்கோஜமில்லாமல்..
சில பொதுவான கேள்விகளில்.. அவள் பதில்களை குறித்துக் கொண்டவர் தனியாக அழைத்துச் சென்று சில முறையான பரிசோதனைகளை செய்து முடித்து மான்வியோடு வெளியே வந்தார்..
"பிரச்சனைன்னு ஒன்றும் இல்லை.. பீரியட்ஸ் டைம்ல பெண்களுக்கு வர்ற இயல்பான வயிற்று வலி தான்.. ப்ளீடிங் ப்ளோ நார்மலா இருக்கறதுனால.. நீங்க பயப்பட வேண்டாம்.. ஒருவேளை அளவுக்கு அதிகமான வலி.. ஓவர் பிளீடிங்.. இல்லைனா வெளியேறும் ரத்தத்தில் துர்நாற்றம்.. இப்படி ஏதாவது இருந்தால் தாமதிக்காமல் உடனே ஹாஸ்பிடல் வந்துடனும்.. பட் ரைட் நவ் ஷீ இஸ் பெர்பெக்ட்லி நார்மல்".. என்று மருத்துவ சொன்ன பிறகும் முகத்தில் தெளிவு பிறக்காமல்.. "ஓகே டாக்டர் அப்ப பெயினுக்கு ஏதாவது மெடிசன் குடுங்க.. மாதா மாதம் இந்த பெயினை அனுபவிக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே".. என்றிருந்தான் ஜீவா..
மெலிதான புன்னகையுடன் ஜீவாவை ஏறிட்ட மருத்துவரோ.. "சில வலிகளை இயல்பாகவே பெண்கள் தாங்கிக்க பழகிக்கணும்.. இதுக்கெல்லாம் மாத்திரை எடுத்துக்கிட்டா.. பின்னாளில் அது வேறு விதமான சைடு எஃபெக்ட்ஸ் ஏற்படுத்தும்.. பெயின் கில்லர் எழுதிக் கொடுக்கிறேன்.. தவிர்க்க முடியாத சூழ்நிலை.. டிராவல் டைம்.. ஃபங்ஷன் டைம்.. அந்த மாதிரி நேரத்துல வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க.. சத்து டானிக் எழுதி இருக்கேன் டெய்லி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.. உங்க திருமணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்".. என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார்..
மான்வியை வெளியே இருக்கையில் அமர வைத்து விட்டு.. மாத்திரை மருந்துகளை வாங்க பக்கத்திலிருந்த பார்மசி சென்றிருந்தான் ஜீவா.. அந்நேரத்தில் மான்வியின் பக்கத்தில் வந்து நின்ற இரு பெண்கள்.. நெடுநெடுவென உயரத்தோடு பார்மசியில் மருந்து வாங்கிக் கொண்டிருந்த ஜீவாவை கண்டு "ஹேய்.. அது ஜீவா தானே".. ஏதோ செலிபிரிட்டி ரேஞ்சுக்கு வியந்தனர்..
"அட ஆமாடி.. டிவியில பாக்குறத விட நேர்ல இன்னும் ஸ்மார்ட்டா தெரியுறார்"..
"ஹ்ம்ம் ஆமா.. ஆனா இந்த மாதிரி ஆளுங்களை தூர வைச்சு பார்த்து ரசிக்கலாம்.. ஆனா கூட சேர்ந்து வாழ முடியாது"..
"அது என்னமோ சரிதான்.. முகத்தை பார்க்கையிலேயே தெரியுது சரியான சைக்கோன்னு..
"ம்ம்.. அழகான சைக்கோ சொல்லுடி.. ப்பா.. அந்த ஆளுக்கு என்ன அடி.. எவ்வளவு கோபம்.. பாவம் அந்த ஆளு.. இப்போ கோமாவுல இருக்கானாம்.. என்னதான் தப்பு செஞ்சிருந்தாலும் அப்படி அடிச்சி இருக்க கூடாது"..
"இவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவம்தான்.. என்ன பாடு படப் போறாளோ!!.. சரி வா கிளம்பலாம்.. நேரமாச்சு"..
"அட இருடி கொஞ்ச நேரம் சைட் அடிச்சிட்டு போவோம்"..
"அடச்சீ.. வா அடுத்தது நீ கோமாவில் ஹாஸ்பிடல்ல கிடக்கணுமா?".. என்று மான்வியின் எரிகிற நெஞ்சில் எண்ணெய் ஊற்றிவிட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தனர் இரு பெண்களும்..
மான்விற்கு வயிறு வலியோடு சேர்த்து தலைவலியும் ஆரம்பித்திருந்தது.. தனக்கு அவனை பிடிக்கிறது என்று உணரும் வேளையில்.. அவள் மனதை கலைக்கும் விதமாக.. இப்படித்தான் ஏதோ ஒரு நிகழ்வு நடந்து.. அரையடி ஏறினால் நான்கு அடி சறுக்கும்படி செய்து விடுகிறது.. சிங்கத்தின் வால் பிடித்துக் கொண்டு நிற்பதை போல் அவள் நிலை..
"போகலாம் மான்வி".. எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மருந்து மாத்திரைகளை சரி பார்த்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு.. அவள் கைப்பற்றி நடந்தான் ஜீவா..
வழியில் காரை நிறுத்தி ஹோட்டல் அழைத்துச் செல்லவும்.. "அய்யோ எனக்கு பசிக்கல.. விட்டுடுங்களேன்".. என்றாள் சோர்வாக..
"எனக்கு பசிக்குது மானு.. காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல.. உனக்கு உடம்புக்கு முடியலன்னு சொன்னதும் அப்படியே ஓடி வந்துருக்கேன்".. என்று வறண்ட நாவை ஈரப்படுத்திக் கொண்டே சொன்னவனை கண்டு மனதிற்கு கஷ்டமாக போனது..
அவனுக்காக ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள்.. அவள் அருகாமை தந்த திருப்தியில்.. நன்றாகவே உணவருந்தினான் ஜீவா..
வீட்டில் இறக்கி விடும் முன்.. "பேபி உன்னை ரொம்ப மிஸ் செஞ்சேன்".. என்று அள்ளி அணைத்து இச் இச்.. என இதழில் தொடர்ச்சியாக நான்கு முத்தங்கள் வைத்ததில்.. "பீரியட்ஸ் டைம்ல கூட என்னை விட மாட்டியா டா".. என்று கத்தத் தோன்றியது அவளுக்கு..
"ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க.. இந்த முத்தத்தை நாளைக்கு கொடுத்துக்க கூடாதா.. நான்தான் முடியலன்னு சொல்றேன்ல".. என்றாள் மான்வி வயிறு வலி தந்த எரிச்சலோடு..
"ஹேய்.. ரிலாக்ஸ் டி.. ரொம்ப வலிக்குதா.. டேப்லெட் போடுறியா".. அவன் மாத்திரை கவரையும் தண்ணீர் பாட்டிலையும் கையில் எடுத்துக் கொள்ளவும்.. "இல்ல.. வேண்டாம்.. வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் படுத்து தூங்கினா எல்லாம் சரியா போயிடும்".. என்றாள் அவள்..
"சரி.. வா.. நானும் வர்றேன்".. அவனும் இறங்க முற்பட.. "இல்ல இல்ல.. வேண்டாம்.. நானே போய்க்கிறேன்.. எனக்காக நீங்க நிறைய கஷ்டப்பட்டுட்டீங்க போதும்".. அழையா விருந்தாளியை தவிர்ப்பது போன்ற மனநிலையுடன் அவள்..
"ரோட்ல விட்டுட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்ல.. நான் தானே கூட்டிட்டு போனேன்.. நானே கொண்டு போய் பொறுப்பா உங்க அம்மா அப்பா கிட்ட ஒப்படைச்சிட்டு போறேன் இறங்கு.. நடக்கக்கூட முடியல இதுல இவளே போறாளாம்".. வாய்க்குள் முனங்கிக் கொண்டே இறங்கியவன்.. அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு நடந்தான்..
"ஏன் இவ்வளவு வேகமா நடக்குறீங்க" அதற்கும் எரிந்து விழுந்தாள்..
"சரி சரி கோபப்படாதே".. என்று கையில் தூக்கிக் கொண்டான்.. ஏன்டா கேட்டோம்.. வாயை மூடிக்கொண்டு சும்மாவே இருந்திருக்கலாம் என்பது போல் ஆனது..
ஹாலில் அமர்ந்திருந்த அனிதா நிவின்.. முன்னிலையில் மான்வியை கையில் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவனை கண்டு விதிர்த்து போனாள் ரமா.. "சின்ன புள்ளைங்க முன்னாடி என்ன அசிங்கம் இது.. அவன் தான் தூக்கிட்டு போறான்னா உனக்கு எங்கடி போச்சு அறிவு".. என்பது போல் மகளை எரிக்கும் பார்வை பார்க்க.. அவன் கைகளுக்குள் துள்ளினாள் மான்வி..
படுக்கையில் படுக்க வைத்ததோடு.. "நீ தூங்கின பிறகு நான் இங்கிருந்து போறேன்".. என்று மேலும் நோகடித்தான் ஜீவா.. வரும்போது அன்னை பார்த்த பார்வை வேறு.. இதயத்துக்குள் வேகமாக ரயிலொன்று ஓடும் உணர்வை கொடுத்தது..
கண்கள் மூடி தூங்குவதை போல் நடித்தாள் மான்வி.. மெல்லிய முத்தம் ஒன்றை நெற்றியில் வைத்து விட்டு அவன் கிளம்பிய பிறகு சுவாசம் சீரானது அவளுக்கு..
அவன் சென்று அடுத்த நிமிடமே வேக நடையோடு உள்ளே வந்த ரமா.. "மான்வி.. மான்வி.. எழுந்திருமா".. என்று மென்மையாக தட்டி உலுக்கியதில்.. அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த மான்வி.. "அம்மா" என்று அடித்துப் பதறி எழுந்து அமர்ந்தாள்..
"என்ன மான்வி.. இன்னும் நிச்சயதார்த்தம் கூட ஆகல அதுக்குள்ள.. அவர் இப்படி நடந்துக்கறது எல்லாம் சரியே இல்லை.. ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க.. நீதான் கண்ணம்மா உஷாரா இருக்கணும்.. கல்யாணம் நடக்கிற வரைக்கும் இந்த தனிமையான இடங்களுக்கு போறது.. தொட்டு பேசுறது இதெல்லாம் அறவே கூடாதுடா.. எதுவுமே உறுதியாகாத நிலையில்ல ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா.. சொந்தக்காரங்க முன்னாடி தலை நிமிர்ந்து நடக்க முடியாது.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ டி.. ஏதோ எங்க சூழ்நிலை.. இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டோம்.. அவரை நான் எந்த குறையும் சொல்லல.. ஆனா நான் ஏதாவது அறிவுரை சொல்லும்போது மறுபடி மறுபடி எங்க பலவீனத்தையே சுட்டிக்காட்டி சலுகை எடுத்துக்காதே.. அது உனக்கு தான் கேடு.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. நம்ம குடும்ப மானம் உன் கையில தான் இருக்கு.. உனக்கு தம்பியும்.. தங்கச்சியும் இருக்காங்க.. புரிஞ்சிப்பேன்னு நம்புறேன்".. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் ரமா கூறியதில் சுருக்கென தைத்தது அவளுக்கு..
மகளுக்கு புரிய வைத்துவிட்ட நிம்மதியோடு "காப்பி ஏதாவது குடிக்கிறியா.. சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா".. மான்வியின் கன்னம் பற்றி கேட்கவும்.. "எதுவும் வேண்டாம்மா" என்றாள் சோர்ந்த முகத்துடன்..
"சரி.. டாக்டர் என்ன சொன்னாங்க?".. இயல்பாக கேள்வி கேட்ட ரமாவை போல் சட்டென மாற்றிக் கொள்ள முடியாத மனநிலையுடன்.. "பீரியட்ஸ் டைம்ல வர்ற சாதாரண வயிற்று வலி தானாம்.. பெருசா பயப்படற மாதிரி ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க".. என்றாள் மான்வி..
"சரி நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.. திரும்பத் திரும்ப அதையே சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே மான்வி.. நாங்க பார்த்த மாப்பிள்ளைங்கிறதுக்காக.. அவர்கிட்ட எப்படி வேணா பழகணும்னு அர்த்தமில்லை.. கல்யாணம் வரைக்கும் கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம்.. அவரைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. ஆனா உன் மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையை காப்பாத்துவேன்னு நம்புறேன்".. மகளின் தலையை வருடி கொடுத்து தன் மனச்சுமையை இறக்கி வைத்து அவள் மனதை பாரமாகி விட்டு அங்கிருந்து சென்றிருந்தாள் ரமா..
"ரமா".. இரவு தூங்கும் வேளையில்.. சோகச் சாயல் படிந்த குரலுடன் அழைத்திருந்தார் நீலகண்டன்..
"ம்ம்?".. படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டே நிமிர்ந்து கணவனை ஏறிட்டாள் அவள்..
"தப்பு செஞ்சுட்டோம்னு தோணுது.. நம்ம சுயநலத்துக்காக குழந்தை வாழ்க்கையை அடகு வச்சிட்டோமோன்னு மனசாட்சி குத்துது".. மனம் நொந்து பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் விழித்தாள் ரமா..
"என்ன சொல்றீங்க?"..
"ஐம்பது லட்சத்துக்காக நம்ம பொண்ணோட வாழ்க்கை நாசமா போகக்கூடாது ரமா.. என் தலையை அடமானம் வச்சாவது ஐம்பது லட்சத்தை கடன் வாங்கி அந்த ஆள் முகத்தில் விட்டு எறிஞ்சிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்ல போறேன்"..
"அய்யோ.. அவங்க எல்லாம் பெரிய இடம்.. முதல்ல சரின்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு இப்ப வேண்டாம்னு சொல்லி திரும்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தினா.. ஒத்துக்குவாங்களா.. பிரச்சனை பண்ண மாட்டாங்களா.. அவங்களை பகைச்சிக்கிட்டு நாம இங்க வாழ முடியுமா.. எதுவாயிருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க.. அப்பவே நான் படிச்சு படிச்சு சொன்னேன்.. எங்க என் பேச்சை கேட்டீங்க.. இப்ப யோசிக்கிறதே அப்பவே யோசிச்சு தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்கலாமே".. ரமா அங்கலாய்த்து கொண்டாள்..
"அப்ப எந்த உண்மையும் தெரியலையே.. எல்லாம் சரியா இருக்கிற மாதிரி தான் தோணுச்சு.. இப்போ அந்த பையனை பற்றி மத்தவங்க சொல்ற தகவல் எதுவும் மனசுக்கு இனிமையானதா இல்லையே.. இப்படி ஒரு பையனுக்கு நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு நிம்மதியாக வாழ முடியும்னு தோணல.. இந்த ஐம்பது லட்சம் மட்டும் கிடைச்சதுனா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுவேன்".. என்ற நீலகண்டனின் மனக்குறை தீர வேண்டும் தங்கள் மகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று ரமா தீவிரமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்..
அவர்கள் குறையை தீர்க்கும் வண்ணம்.. அடுத்த நாள் காலையில் சோமு.. ஜீவாவின் சித்தப்பா நீலகண்டனின் முன்பு அம்பது லட்சத்தோடு அமர்ந்திருந்தார்..
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சோமுவிடம் "வந்த விஷயம் என்ன?" என்ற வண்ணம் நீலகண்டன் பார்வையால் கேட்டிருந்தார்..
"இங்க பாருங்க எனக்கு சுத்தி வளைச்சு பேசி பழக்கமில்லை.. ஜீவா என்னோட அண்ணன் பையன் தான்.. அதுக்காக அவன் ரொம்ப நல்லவன் உங்க பொண்ணுக்கு பொருத்தமானவன்னு சொல்லி என்னால உங்களை ஏமாத்த முடியாது.. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை.. எப்படிடா இப்படி ஒரு பையனுக்கு பொண்ணு கொடுக்க சம்மதிச்சிருக்காங்கன்னு விசாரிச்சப்போ.. ஐம்பது லட்சத்துக்காக நீங்க உங்க பொண்ணை அடமானம் வச்சதுக்கு தெரிய வந்தது".. என்ற வார்த்தையில் கூனி குறுகிப் போனார் நீலகண்டன்..
அவர் முகபாவனைகளை கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்த சோமு "பெத்த அம்மா தன் கண் முன்னாடி இன்னொருத்தனோட ஓடி போயிட்டதால.. காட்டுத்தனமா வளர்ந்திருக்கான்.. சந்தேக புத்தி.. முரட்டுத்தனம்.. கண்மண் தெரியாத கோபம்.. எங்க போனாலும் பிரச்சனை இழுத்துட்டு வர்றதுதான் வேலை .. என் அண்ணனும் ஒரே பையன்னு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துட்டாரு.. அதனாலதான் இப்படி சீரழிஞ்சு நிக்கிறான்..
"ஏண்டா இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்னு தட்டிக் கேட்க வந்த என்னையே சித்தப்பானு கூட பாக்காம அடிச்சுப்புட்டான்".. என்றதும்.. திகைப்புடன் நீலகண்டனும் ரமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா.. அவளை மனசுல வச்சுக்கிட்டு தான் பேசுறேன்.. நாளைக்கு உங்க பொண்ணோட வாழ்க்கை கெட்டு சீரழிஞ்சு நிக்கும் போது என் மனசாட்சி என்னை குத்திக்கிட்டே இருக்கும்.. இதில ஐம்பது லட்ச ரூபாய் பணம் இருக்கு.. இந்த பணத்தை திரும்பிக் கொடுத்துட்டு இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க.. ஒருவேளை எனக்கு ஒரு பையன் இருந்திருந்தா அவனையே உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்.. என்ன செய்யறது.. எனக்கு அப்படி ஒரு யோகம் வாய்க்கலையே.. இந்த பணத்தை வச்சு உங்க பொண்ணுக்கு நல்ல இடத்தில மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க.. உங்க பொண்ணோட நல் வாழ்க்கைக்காக தான் சொல்றேன்.. சில நேரங்கள்ல தைரியமா முடிவெடுக்க வேண்டியது அவசியமா போயிடுது.. உங்க பொண்ணோட வாழ்க்கைக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது"..
"என் அண்ணன் பையனை பற்றி நானே இந்த அளவு சொல்றேன்னா என்னை தப்பா நினைக்காம நீங்க உண்மைய புரிஞ்சிக்கணும்.. இந்த பணத்தை கடனா தான் கொடுக்கிறேன்.. உங்களுக்கு எப்ப பணம் வருதோ அப்ப திரும்பி கொடுத்தா போதும்.. உங்க பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த என்னால முடிஞ்ச சிறு உதவி.. நான் கிளம்பறேன்".. ஜீவா அவரை அடித்து அவமானப்படுத்திய வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு சிறப்பாக பழிவாங்கி விட்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தார் சோமு"..
வேண்டிக்கொண்ட தெய்வம் வரமளித்து விட்டதாக மனப்பூர்வமாக நம்பினாள் ரமா
தொடரும்..
பின் இருவருக்கும் திருமணம் கூட ஆகவில்லையே.. "பீரியட்ஸ் டைம்.. ஹெவியா ஸ்டமக் பெயின்.. அன் ஈசியா ஃபில் பண்றா".. என்று அவளுக்கு முந்திக் கொண்டு அவனே பிரச்சனைகளை சொல்லி முடித்திருந்தான்..
"நீங்க யாரு?" என்று மருத்துவர்.. கண்ணாடியை சரி செய்து அவனை கூர்மையாக பார்க்கவும் .. "ஷு இஸ் மை பியான்சே" என்றான் அவன் கம்பீரக் குரலில்..
பரவாயில்லையே திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிடம் இவ்வளவு அக்கறையா என்று ஒரு பக்கம் பிரமிப்பாக தோன்றினாலும்.. மறுபக்கம் மான்வியின் தர்ம சங்கடமான முகபாவனை கண்டு இது வேறு விதமான துன்புறுத்தலோ என்று ஐயம் கொண்டார் மருத்துவர்..
சில விபரங்களை தெளிவாக ஆழமாக விசாரிக்க வேண்டி ஜீவாவை வெளியே அனுப்ப முயன்றார்..
"இல்ல டாக்டர் அவளைப் பத்தின தகவல்கள் எனக்கும் தெரியணும்.. சோ நான் இங்கேயே இருக்கேன்.. என் முன்னாடியே கேளுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல".. என்றிருந்தான் சங்கோஜமில்லாமல்..
சில பொதுவான கேள்விகளில்.. அவள் பதில்களை குறித்துக் கொண்டவர் தனியாக அழைத்துச் சென்று சில முறையான பரிசோதனைகளை செய்து முடித்து மான்வியோடு வெளியே வந்தார்..
"பிரச்சனைன்னு ஒன்றும் இல்லை.. பீரியட்ஸ் டைம்ல பெண்களுக்கு வர்ற இயல்பான வயிற்று வலி தான்.. ப்ளீடிங் ப்ளோ நார்மலா இருக்கறதுனால.. நீங்க பயப்பட வேண்டாம்.. ஒருவேளை அளவுக்கு அதிகமான வலி.. ஓவர் பிளீடிங்.. இல்லைனா வெளியேறும் ரத்தத்தில் துர்நாற்றம்.. இப்படி ஏதாவது இருந்தால் தாமதிக்காமல் உடனே ஹாஸ்பிடல் வந்துடனும்.. பட் ரைட் நவ் ஷீ இஸ் பெர்பெக்ட்லி நார்மல்".. என்று மருத்துவ சொன்ன பிறகும் முகத்தில் தெளிவு பிறக்காமல்.. "ஓகே டாக்டர் அப்ப பெயினுக்கு ஏதாவது மெடிசன் குடுங்க.. மாதா மாதம் இந்த பெயினை அனுபவிக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே".. என்றிருந்தான் ஜீவா..
மெலிதான புன்னகையுடன் ஜீவாவை ஏறிட்ட மருத்துவரோ.. "சில வலிகளை இயல்பாகவே பெண்கள் தாங்கிக்க பழகிக்கணும்.. இதுக்கெல்லாம் மாத்திரை எடுத்துக்கிட்டா.. பின்னாளில் அது வேறு விதமான சைடு எஃபெக்ட்ஸ் ஏற்படுத்தும்.. பெயின் கில்லர் எழுதிக் கொடுக்கிறேன்.. தவிர்க்க முடியாத சூழ்நிலை.. டிராவல் டைம்.. ஃபங்ஷன் டைம்.. அந்த மாதிரி நேரத்துல வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க.. சத்து டானிக் எழுதி இருக்கேன் டெய்லி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.. உங்க திருமணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்".. என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார்..
மான்வியை வெளியே இருக்கையில் அமர வைத்து விட்டு.. மாத்திரை மருந்துகளை வாங்க பக்கத்திலிருந்த பார்மசி சென்றிருந்தான் ஜீவா.. அந்நேரத்தில் மான்வியின் பக்கத்தில் வந்து நின்ற இரு பெண்கள்.. நெடுநெடுவென உயரத்தோடு பார்மசியில் மருந்து வாங்கிக் கொண்டிருந்த ஜீவாவை கண்டு "ஹேய்.. அது ஜீவா தானே".. ஏதோ செலிபிரிட்டி ரேஞ்சுக்கு வியந்தனர்..
"அட ஆமாடி.. டிவியில பாக்குறத விட நேர்ல இன்னும் ஸ்மார்ட்டா தெரியுறார்"..
"ஹ்ம்ம் ஆமா.. ஆனா இந்த மாதிரி ஆளுங்களை தூர வைச்சு பார்த்து ரசிக்கலாம்.. ஆனா கூட சேர்ந்து வாழ முடியாது"..
"அது என்னமோ சரிதான்.. முகத்தை பார்க்கையிலேயே தெரியுது சரியான சைக்கோன்னு..
"ம்ம்.. அழகான சைக்கோ சொல்லுடி.. ப்பா.. அந்த ஆளுக்கு என்ன அடி.. எவ்வளவு கோபம்.. பாவம் அந்த ஆளு.. இப்போ கோமாவுல இருக்கானாம்.. என்னதான் தப்பு செஞ்சிருந்தாலும் அப்படி அடிச்சி இருக்க கூடாது"..
"இவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப பாவம்தான்.. என்ன பாடு படப் போறாளோ!!.. சரி வா கிளம்பலாம்.. நேரமாச்சு"..
"அட இருடி கொஞ்ச நேரம் சைட் அடிச்சிட்டு போவோம்"..
"அடச்சீ.. வா அடுத்தது நீ கோமாவில் ஹாஸ்பிடல்ல கிடக்கணுமா?".. என்று மான்வியின் எரிகிற நெஞ்சில் எண்ணெய் ஊற்றிவிட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தனர் இரு பெண்களும்..
மான்விற்கு வயிறு வலியோடு சேர்த்து தலைவலியும் ஆரம்பித்திருந்தது.. தனக்கு அவனை பிடிக்கிறது என்று உணரும் வேளையில்.. அவள் மனதை கலைக்கும் விதமாக.. இப்படித்தான் ஏதோ ஒரு நிகழ்வு நடந்து.. அரையடி ஏறினால் நான்கு அடி சறுக்கும்படி செய்து விடுகிறது.. சிங்கத்தின் வால் பிடித்துக் கொண்டு நிற்பதை போல் அவள் நிலை..
"போகலாம் மான்வி".. எதைப் பற்றியும் கவலை இல்லாமல் மருந்து மாத்திரைகளை சரி பார்த்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு.. அவள் கைப்பற்றி நடந்தான் ஜீவா..
வழியில் காரை நிறுத்தி ஹோட்டல் அழைத்துச் செல்லவும்.. "அய்யோ எனக்கு பசிக்கல.. விட்டுடுங்களேன்".. என்றாள் சோர்வாக..
"எனக்கு பசிக்குது மானு.. காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல.. உனக்கு உடம்புக்கு முடியலன்னு சொன்னதும் அப்படியே ஓடி வந்துருக்கேன்".. என்று வறண்ட நாவை ஈரப்படுத்திக் கொண்டே சொன்னவனை கண்டு மனதிற்கு கஷ்டமாக போனது..
அவனுக்காக ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள்.. அவள் அருகாமை தந்த திருப்தியில்.. நன்றாகவே உணவருந்தினான் ஜீவா..
வீட்டில் இறக்கி விடும் முன்.. "பேபி உன்னை ரொம்ப மிஸ் செஞ்சேன்".. என்று அள்ளி அணைத்து இச் இச்.. என இதழில் தொடர்ச்சியாக நான்கு முத்தங்கள் வைத்ததில்.. "பீரியட்ஸ் டைம்ல கூட என்னை விட மாட்டியா டா".. என்று கத்தத் தோன்றியது அவளுக்கு..
"ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க.. இந்த முத்தத்தை நாளைக்கு கொடுத்துக்க கூடாதா.. நான்தான் முடியலன்னு சொல்றேன்ல".. என்றாள் மான்வி வயிறு வலி தந்த எரிச்சலோடு..
"ஹேய்.. ரிலாக்ஸ் டி.. ரொம்ப வலிக்குதா.. டேப்லெட் போடுறியா".. அவன் மாத்திரை கவரையும் தண்ணீர் பாட்டிலையும் கையில் எடுத்துக் கொள்ளவும்.. "இல்ல.. வேண்டாம்.. வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் படுத்து தூங்கினா எல்லாம் சரியா போயிடும்".. என்றாள் அவள்..
"சரி.. வா.. நானும் வர்றேன்".. அவனும் இறங்க முற்பட.. "இல்ல இல்ல.. வேண்டாம்.. நானே போய்க்கிறேன்.. எனக்காக நீங்க நிறைய கஷ்டப்பட்டுட்டீங்க போதும்".. அழையா விருந்தாளியை தவிர்ப்பது போன்ற மனநிலையுடன் அவள்..
"ரோட்ல விட்டுட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்ல.. நான் தானே கூட்டிட்டு போனேன்.. நானே கொண்டு போய் பொறுப்பா உங்க அம்மா அப்பா கிட்ட ஒப்படைச்சிட்டு போறேன் இறங்கு.. நடக்கக்கூட முடியல இதுல இவளே போறாளாம்".. வாய்க்குள் முனங்கிக் கொண்டே இறங்கியவன்.. அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு நடந்தான்..
"ஏன் இவ்வளவு வேகமா நடக்குறீங்க" அதற்கும் எரிந்து விழுந்தாள்..
"சரி சரி கோபப்படாதே".. என்று கையில் தூக்கிக் கொண்டான்.. ஏன்டா கேட்டோம்.. வாயை மூடிக்கொண்டு சும்மாவே இருந்திருக்கலாம் என்பது போல் ஆனது..
ஹாலில் அமர்ந்திருந்த அனிதா நிவின்.. முன்னிலையில் மான்வியை கையில் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவனை கண்டு விதிர்த்து போனாள் ரமா.. "சின்ன புள்ளைங்க முன்னாடி என்ன அசிங்கம் இது.. அவன் தான் தூக்கிட்டு போறான்னா உனக்கு எங்கடி போச்சு அறிவு".. என்பது போல் மகளை எரிக்கும் பார்வை பார்க்க.. அவன் கைகளுக்குள் துள்ளினாள் மான்வி..
படுக்கையில் படுக்க வைத்ததோடு.. "நீ தூங்கின பிறகு நான் இங்கிருந்து போறேன்".. என்று மேலும் நோகடித்தான் ஜீவா.. வரும்போது அன்னை பார்த்த பார்வை வேறு.. இதயத்துக்குள் வேகமாக ரயிலொன்று ஓடும் உணர்வை கொடுத்தது..
கண்கள் மூடி தூங்குவதை போல் நடித்தாள் மான்வி.. மெல்லிய முத்தம் ஒன்றை நெற்றியில் வைத்து விட்டு அவன் கிளம்பிய பிறகு சுவாசம் சீரானது அவளுக்கு..
அவன் சென்று அடுத்த நிமிடமே வேக நடையோடு உள்ளே வந்த ரமா.. "மான்வி.. மான்வி.. எழுந்திருமா".. என்று மென்மையாக தட்டி உலுக்கியதில்.. அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த மான்வி.. "அம்மா" என்று அடித்துப் பதறி எழுந்து அமர்ந்தாள்..
"என்ன மான்வி.. இன்னும் நிச்சயதார்த்தம் கூட ஆகல அதுக்குள்ள.. அவர் இப்படி நடந்துக்கறது எல்லாம் சரியே இல்லை.. ஆம்பளைங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க.. நீதான் கண்ணம்மா உஷாரா இருக்கணும்.. கல்யாணம் நடக்கிற வரைக்கும் இந்த தனிமையான இடங்களுக்கு போறது.. தொட்டு பேசுறது இதெல்லாம் அறவே கூடாதுடா.. எதுவுமே உறுதியாகாத நிலையில்ல ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா.. சொந்தக்காரங்க முன்னாடி தலை நிமிர்ந்து நடக்க முடியாது.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ டி.. ஏதோ எங்க சூழ்நிலை.. இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டோம்.. அவரை நான் எந்த குறையும் சொல்லல.. ஆனா நான் ஏதாவது அறிவுரை சொல்லும்போது மறுபடி மறுபடி எங்க பலவீனத்தையே சுட்டிக்காட்டி சலுகை எடுத்துக்காதே.. அது உனக்கு தான் கேடு.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. நம்ம குடும்ப மானம் உன் கையில தான் இருக்கு.. உனக்கு தம்பியும்.. தங்கச்சியும் இருக்காங்க.. புரிஞ்சிப்பேன்னு நம்புறேன்".. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் ரமா கூறியதில் சுருக்கென தைத்தது அவளுக்கு..
மகளுக்கு புரிய வைத்துவிட்ட நிம்மதியோடு "காப்பி ஏதாவது குடிக்கிறியா.. சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா".. மான்வியின் கன்னம் பற்றி கேட்கவும்.. "எதுவும் வேண்டாம்மா" என்றாள் சோர்ந்த முகத்துடன்..
"சரி.. டாக்டர் என்ன சொன்னாங்க?".. இயல்பாக கேள்வி கேட்ட ரமாவை போல் சட்டென மாற்றிக் கொள்ள முடியாத மனநிலையுடன்.. "பீரியட்ஸ் டைம்ல வர்ற சாதாரண வயிற்று வலி தானாம்.. பெருசா பயப்படற மாதிரி ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க".. என்றாள் மான்வி..
"சரி நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.. திரும்பத் திரும்ப அதையே சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே மான்வி.. நாங்க பார்த்த மாப்பிள்ளைங்கிறதுக்காக.. அவர்கிட்ட எப்படி வேணா பழகணும்னு அர்த்தமில்லை.. கல்யாணம் வரைக்கும் கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம்.. அவரைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. ஆனா உன் மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையை காப்பாத்துவேன்னு நம்புறேன்".. மகளின் தலையை வருடி கொடுத்து தன் மனச்சுமையை இறக்கி வைத்து அவள் மனதை பாரமாகி விட்டு அங்கிருந்து சென்றிருந்தாள் ரமா..
"ரமா".. இரவு தூங்கும் வேளையில்.. சோகச் சாயல் படிந்த குரலுடன் அழைத்திருந்தார் நீலகண்டன்..
"ம்ம்?".. படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டே நிமிர்ந்து கணவனை ஏறிட்டாள் அவள்..
"தப்பு செஞ்சுட்டோம்னு தோணுது.. நம்ம சுயநலத்துக்காக குழந்தை வாழ்க்கையை அடகு வச்சிட்டோமோன்னு மனசாட்சி குத்துது".. மனம் நொந்து பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் விழித்தாள் ரமா..
"என்ன சொல்றீங்க?"..
"ஐம்பது லட்சத்துக்காக நம்ம பொண்ணோட வாழ்க்கை நாசமா போகக்கூடாது ரமா.. என் தலையை அடமானம் வச்சாவது ஐம்பது லட்சத்தை கடன் வாங்கி அந்த ஆள் முகத்தில் விட்டு எறிஞ்சிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்ல போறேன்"..
"அய்யோ.. அவங்க எல்லாம் பெரிய இடம்.. முதல்ல சரின்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு இப்ப வேண்டாம்னு சொல்லி திரும்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தினா.. ஒத்துக்குவாங்களா.. பிரச்சனை பண்ண மாட்டாங்களா.. அவங்களை பகைச்சிக்கிட்டு நாம இங்க வாழ முடியுமா.. எதுவாயிருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க.. அப்பவே நான் படிச்சு படிச்சு சொன்னேன்.. எங்க என் பேச்சை கேட்டீங்க.. இப்ப யோசிக்கிறதே அப்பவே யோசிச்சு தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்கலாமே".. ரமா அங்கலாய்த்து கொண்டாள்..
"அப்ப எந்த உண்மையும் தெரியலையே.. எல்லாம் சரியா இருக்கிற மாதிரி தான் தோணுச்சு.. இப்போ அந்த பையனை பற்றி மத்தவங்க சொல்ற தகவல் எதுவும் மனசுக்கு இனிமையானதா இல்லையே.. இப்படி ஒரு பையனுக்கு நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு நிம்மதியாக வாழ முடியும்னு தோணல.. இந்த ஐம்பது லட்சம் மட்டும் கிடைச்சதுனா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுவேன்".. என்ற நீலகண்டனின் மனக்குறை தீர வேண்டும் தங்கள் மகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று ரமா தீவிரமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்..
அவர்கள் குறையை தீர்க்கும் வண்ணம்.. அடுத்த நாள் காலையில் சோமு.. ஜீவாவின் சித்தப்பா நீலகண்டனின் முன்பு அம்பது லட்சத்தோடு அமர்ந்திருந்தார்..
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சோமுவிடம் "வந்த விஷயம் என்ன?" என்ற வண்ணம் நீலகண்டன் பார்வையால் கேட்டிருந்தார்..
"இங்க பாருங்க எனக்கு சுத்தி வளைச்சு பேசி பழக்கமில்லை.. ஜீவா என்னோட அண்ணன் பையன் தான்.. அதுக்காக அவன் ரொம்ப நல்லவன் உங்க பொண்ணுக்கு பொருத்தமானவன்னு சொல்லி என்னால உங்களை ஏமாத்த முடியாது.. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை.. எப்படிடா இப்படி ஒரு பையனுக்கு பொண்ணு கொடுக்க சம்மதிச்சிருக்காங்கன்னு விசாரிச்சப்போ.. ஐம்பது லட்சத்துக்காக நீங்க உங்க பொண்ணை அடமானம் வச்சதுக்கு தெரிய வந்தது".. என்ற வார்த்தையில் கூனி குறுகிப் போனார் நீலகண்டன்..
அவர் முகபாவனைகளை கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்த சோமு "பெத்த அம்மா தன் கண் முன்னாடி இன்னொருத்தனோட ஓடி போயிட்டதால.. காட்டுத்தனமா வளர்ந்திருக்கான்.. சந்தேக புத்தி.. முரட்டுத்தனம்.. கண்மண் தெரியாத கோபம்.. எங்க போனாலும் பிரச்சனை இழுத்துட்டு வர்றதுதான் வேலை .. என் அண்ணனும் ஒரே பையன்னு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துட்டாரு.. அதனாலதான் இப்படி சீரழிஞ்சு நிக்கிறான்..
"ஏண்டா இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்னு தட்டிக் கேட்க வந்த என்னையே சித்தப்பானு கூட பாக்காம அடிச்சுப்புட்டான்".. என்றதும்.. திகைப்புடன் நீலகண்டனும் ரமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா.. அவளை மனசுல வச்சுக்கிட்டு தான் பேசுறேன்.. நாளைக்கு உங்க பொண்ணோட வாழ்க்கை கெட்டு சீரழிஞ்சு நிக்கும் போது என் மனசாட்சி என்னை குத்திக்கிட்டே இருக்கும்.. இதில ஐம்பது லட்ச ரூபாய் பணம் இருக்கு.. இந்த பணத்தை திரும்பிக் கொடுத்துட்டு இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க.. ஒருவேளை எனக்கு ஒரு பையன் இருந்திருந்தா அவனையே உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்.. என்ன செய்யறது.. எனக்கு அப்படி ஒரு யோகம் வாய்க்கலையே.. இந்த பணத்தை வச்சு உங்க பொண்ணுக்கு நல்ல இடத்தில மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க.. உங்க பொண்ணோட நல் வாழ்க்கைக்காக தான் சொல்றேன்.. சில நேரங்கள்ல தைரியமா முடிவெடுக்க வேண்டியது அவசியமா போயிடுது.. உங்க பொண்ணோட வாழ்க்கைக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது"..
"என் அண்ணன் பையனை பற்றி நானே இந்த அளவு சொல்றேன்னா என்னை தப்பா நினைக்காம நீங்க உண்மைய புரிஞ்சிக்கணும்.. இந்த பணத்தை கடனா தான் கொடுக்கிறேன்.. உங்களுக்கு எப்ப பணம் வருதோ அப்ப திரும்பி கொடுத்தா போதும்.. உங்க பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த என்னால முடிஞ்ச சிறு உதவி.. நான் கிளம்பறேன்".. ஜீவா அவரை அடித்து அவமானப்படுத்திய வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு சிறப்பாக பழிவாங்கி விட்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தார் சோமு"..
வேண்டிக்கொண்ட தெய்வம் வரமளித்து விட்டதாக மனப்பூர்வமாக நம்பினாள் ரமா
தொடரும்..
Last edited: