• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 17

Active member
Joined
Jan 18, 2023
Messages
120
Poi tholayattum avankku vera nalla jodi eppudu panninga... 💚💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
47
ரொம்ப வேதனையான எபி. பாவம் ஜீவா. மான்வி உனக்கு அவனை பிடிக்காமல் இருந்தாலும் நீயும் உன் குடும்பத்தை சேர்ந்தவங்களும் அவனோட அப்பாவின் இறப்பிற்காவது வந்து இருக்கலாமே.

இக்கட்டான நிலையில் உன்னோட அப்பாவுக்கு முதலில் உதவியது ஜீவாவின் அப்பா தானே. உன் அம்மா, அப்பா, நீ மிகவும் சுயநலம் பிடித்தவர்கள்.
 
Active member
Joined
Nov 20, 2024
Messages
53
"ஜீவா.. ஜீவா.. அப்பா.. அப்பா.. நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடாஆஆ.. அவர் கடைசிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத பாவியாகிப் போய்ட்டியே!!.. எழுந்திருடா.. எழுந்திரு.. அவர் எனக்கு ஃபாதர் இல்ல.. காட் பாதர்ன்னு அடிக்கடி சொல்லுவியேடா.. ஒரு மகனா அவருக்கான இறுதி மரியாதையை கொடுத்து அனுப்ப வேண்டாமா!!.. எழுந்து வாடா ஜீவா.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. ஓவென்று கதறி அழுத பரத்தை தேற்ற வழி இல்லாமல் மரக்கட்டையாக படுத்திருந்தான் ஜீவா..

"ஜீவா.. ஜீவா.. அப்பாடா.. உன்னை பெத்து வளத்தவரு உனக்காகவே வாழ்ந்தவரு.. அவரை விடவா உசத்தி அவ.. நீ ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கே ன்னு சொல்றேன்.. அப்பா கெஞ்சுறாரு.. குத்து கல்லு மாதிரி அசையாம நிக்கிறாடா.. அவ மனசுல நீ இல்ல ஜீவா.. தேவையில்லாத இடத்துல காட்டப்படற அன்பு.. விழலுக்கு இறைச்ச நீர் மாதிரி வீண் தான்.. அவ உனக்கு பொருத்தமானவ இல்ல ஜீவா.. நீ அவ மேல வச்சிருந்தா கண்மூடித்தனமான நேசம் தான் உன்னை இங்க கொண்டு வந்து விட்டிருக்கு.. தயவு செஞ்சு இனியாவது திருந்துடா.. திரும்பி வாடா.. அப்பா உனக்காக காத்துட்டு இருக்காரு.. என் மகன் வந்து எனக்கு கொல்லி வைப்பான்னு எதிர்பார்ப்போட கடைசி யாத்திரைக்கு தயாராகி நிக்கிறாரு.. ஏமாத்திடாதே ஜீவா.. வாடா மச்சான்.. வாடாஆஆஆஆ".. ஆக்ரோஷமாக கத்தினான் பரத்.. ஜீவாவின் விழிகள் இயலாமையுடன் பக்கவாட்டில் கண்ணீரை சிந்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை..

தீப்தி ஒரு ஓரமாக நின்று அழுது கொண்டிருந்தாள்.. எத்தனை துயரத்தை தான் தாங்க முடியும்.. தன் மகனுக்கு மட்டுமல்லாமல் மகனுடைய நண்பர்களையும் தன் பிள்ளைகளாக பாவித்து பாசம் கொட்டி பார்த்துக் கொண்டவர்.. கடுமையான எதிர்ப்புகளை மீறி.. தீப்தி பரத் திருமணத்தை நடத்தி வைத்தவர்.. அத்தகைய உயர்ந்த மனிதர் இப்போது உயிரோடு இல்லை.. அவர் மகனோ நினைவிழந்து.. படுத்த படுக்கையாகி அசைவில்லாமல் கிடக்கிறான்..

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான் பரத்.. "சரிடா நீ எழுந்திருக்க வேண்டாம்.. அப்பாவுக்காக நீ திரும்பி வர வேண்டாம்.. நீ இல்லனா என்ன.. அவருக்கு பெறாத மகனா நான் இருக்கேன்.. அவர் கடைசி மரியாதையை செஞ்சு நான் என்னோட அப்பாவை சந்தோஷமா அனுப்பி வைக்கிறேன்.. நீ ஜாலியா உன் மான்வியை நினைச்சுக்கிட்டு உன் கனவுலகத்திலேயே வாழ்ந்துகிட்டு இரு".. என்றிருந்தான் கோபத்தோடு..

வேண்டுமென்று வலுக்கட்டாயமாக அவன் கோமாவில் படுத்திருக்கவில்லை.. பரத்திற்கும் நிதர்சனம் புரியாமல் இல்லை.. ஆனாலும் தந்தையின் மரணம் கூட அவனை அசைத்துப் பார்க்கவில்லையே என்று கோபமும் ஆதங்கமும் அப்பேர்ப்பட்ட வார்த்தைகளை மாலையிலிருந்து அறுந்து விழுந்த முத்துக்களைப் போல் படபடவென கொட்டி தீர்க்க வைத்தன..

"அப்பாவுக்கு எல்லாமே நானே முடிச்சிட்டேன்.. இந்த கையால.. இந்த கையால தாண்டா அவருக்கு கொள்ளி வச்சேன்".. இறுதி காரியங்களை முடித்துவிட்டு வந்ததாக புலம்பி கொண்டிருந்த பரத் கொள்ளி வைத்ததாக தூக்கி காட்டிய தன் கரத்தை வெறுப்போடு பார்த்தான்..

"உன் அம்மா துரோகம் செஞ்சுட்டு போன பிறகு கூட.. தனக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சுக்காம உனக்காகவே வாழ்ந்தவர் டா அவரு.. அவருக்கு அந்த கடைசி நிம்மதியை கூட உன்னால கொடுக்க முடியல இல்ல.. ரொம்ப செல்பிஷ் டா.. நீ.. போடா".. விரத்தியோடு வந்தன வார்த்தைகள்.. அவன் ஆதங்கத்திற்கும் அழுகைக்கும் பதிலளிக்கும் விதமாக கண்ணீர் உகுத்த வண்ணமே இருந்தன ஜீவாவின் விழிகள்.. அப்பாவின் முகத்தை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியவில்லையே.. அவன் மயக்கத்திலிருந்த வேலையில் அவர் மரணத்தின் வாயிலுக்கே சென்று விட்டிருந்தார்.. மூளைக்கு உரைக்கிறது.. உடல் விரைத்து கிடக்கிறதே!!..

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன.. ஒரு பக்கம் ஜீவாவிற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் மான்வி.. ஜீவாவிற்கும் இடையேயான உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது..

அன்று காலையில் ஜீவாவின் அருகே வந்து அமர்ந்தான் பரத்.. ஜீவா.. "உன்னோட மான்வி.. சாரி அந்த மான்விக்கு வரும் வெள்ளிக்கிழமை.. கல்யாணமாம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?.. அந்த திவாகர்.. அவனை தான் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்.. இன்னைக்கு எல்லாரையும் ரெஸ்டாரண்ட்ல பார்த்தேன்.. குடும்பமா சந்தோஷமா சிரிச்சு பேசி சாப்டுட்டு இருந்தாங்க.. ஒரு உயிரை பலி வாங்கிட்டு எப்படி இவங்களால சந்தோஷமா இருக்க முடியுது ஜீவா.. எனக்கு புரியல?..

"ஒட்டு மொத்தமா அவங்களை கொன்னு போடுற அளவு ஆத்திரம்.. அப்பாவோட சத்தியம் தான்டா என்னை கட்டுப்படுத்திடுச்சு.. அப்பாவை கொன்னுட்டு என் முன்னாடியே சிரிச்சு சந்தோஷமா இருக்கிறவங்களை.. ஒண்ணுமே செய்ய முடியாத கையாலாகாத பாவியா உன் முன்னாடி நிக்கறேன்டா.. என்னால தனியா சமாளிக்க முடியல ஜீவா.. எழுந்து வாடா.. இவங்க முன்னாடி நீ சந்தோஷமா வாழ்ந்து காட்டணும்.. உன்னையும் அப்பாவையும் கேலி செஞ்சு வாழ விடாம செஞ்சவங்க முன்னாடி நீ கம்பீரமா எழுந்து வரணும்.. வாடா மச்சான்.. அப்பாவுக்காக வரல.. எனக்காகவாது வாடா மச்சான் ப்ளீஸ்".. கெஞ்சிய பரத் அவன் நெஞ்சினில் முகம் புதைத்தான்..

ஜீவாவின் சித்தப்பாவோ அவரது குடும்பத்தினரோ.. மருத்துவமனை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.. ஏன்.. உடன்பிறந்த அண்ணனின் இறுதியாத்திரைக்கு கூட வரவில்லை.. அவ்வளவு வன்மம்..

ஒரு பக்கம்.. ஜீவாவின் நிலைமை தலைகீழாக மாறிப் போயிருக்க மறுபக்கமோ.. மான்வியின் வீட்டில் பந்தல் போட்டு திருமணத்திற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன..

வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக திவாகர் மட்டுமே அனைத்திற்கும் ஓடிக் கொண்டிருந்தான்.. தினம் ஒரு திருவிழா என்பதை போல்.. பந்தக்கால் நடுவது.. நலுங்கு.. விருந்து என கடனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அந்த வீடே பரபரப்பாக விழாக் கோலம் பூண்டிருந்தது..

"எப்படியோ போ.. நீயாவது நல்லா இரு".. என்று விட்டுவிட முடியவில்லை பரத்தால்.. "இப்படி வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன என் நண்பன் தேச துரோக குற்றம் செய்து விட்டான்.. நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.. அவள் புன்னகையை நினைக்க.. நினைக்க வயிறு எரிந்தது.. நீயெல்லாம் சித்திரவதை அனுபவிச்சுதான் என் நண்பனோட காதலை உணர்வேடி".. மனம் இரக்கமில்லாமல் சபித்துக் கொட்டியது மான்வியை..

"டேய்.. பரத்.. என்னைக்காவது ஒரு நாள் என் பையன்.. குணமாகி திரும்பி வருவான்.. அவனால அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது.. நீயும் அந்த குடும்பத்தை எதுவும் செஞ்சிடக் கூடாது.. என்னோட சாவுக்கு பழி வாங்குறேன்னு ஒரு குடும்பத்தை அழிச்சிடாதீங்கடா".. கடைசி தருவாயில் அவர் விடுத்த வேண்டுகோள் அவன் கையை கட்டி போட்டு விட்டது..

முழுதாக பதினைந்து நாட்கள் கழிந்திருந்த நிலையில்.. கண் விழித்திருந்தான் ஜீவா..

அதிர்ச்சியான விஷயங்கள் எதையும் அவர்கிட்ட சொல்ல வேண்டாம்.. கொஞ்ச நாள் போகட்டும்... அவர் மனசு உடம்பும் தெம்பான பிறகு.. ஒவ்வொரு விஷயமா ரிவீல் பண்ணுங்க.. மருத்துவரின் பரிந்துரை படி முதல் மூன்று நாட்கள் அவனிடம் எதைப் பற்றியும் பேசவில்லை.. பரத் தீப்தி இருவரும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டனர்.. அவனும் எதைப்பற்றியும் கேட்காது போனது தான் ஆச்சரியம்.. ஆழ்மயக்கத்தில் இருந்தபோது தந்தை பரத்.. இருவரும் மாறி மாறி அழுது புலம்பியதை அறிந்து கொண்டிருந்தானோ!!..

நடந்த அசம்பாவிதங்கள் அவன் நினைவுபட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கிறதோ!!.. அது எப்படி அப்பாவை பற்றி.. ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவரை பார்க்க வேண்டும் என்று கூட சொல்லவில்லையே.. மான்வியை சந்தித்த நாட்களிலிருந்து அவள் பெயரை உச்சரிக்காமல் ஒரு மணி நேரத்தை கூட கழித்ததில்லை.. இன்று மௌனமாக இறுகி.. கண் மூடி படுத்திருந்தவனை கண்டு.. உள்ளுக்குள் வெலவெலத்துப் போனான் பரத்.. அடிக்கடி கண்கள் உற்பத்தி செய்த கண்ணீரின் பாஷை தான் அவனுக்கு புரியவில்லை.. "ஜீவா என்னடா ஆச்சு ஏன் அழறே?.. எமோஷனல் ஆகாத டா".. மெதுவாக பேசியவன் மனதிலிருப்பதை அறிய முற்பட்டான்.. வாய் திறக்கவில்லை ஜீவா..

"என்னோட போன் எங்க?.. அதுவாவது உயிரோட இருக்கா இல்ல செத்து போச்சா".. அவன் இயல்பாக கேட்டிருந்த விதத்தில் திடுக்கிட்டு விழித்த பரத்.. "இருக்குடா".. என்று அவன் ஐபோனை எடுத்துக் கொடுக்கவும்.. தன் பிங்கர் பிரிண்ட் போட்டு ஆன் செய்தான் ஜீவா..

வாட்ஸாப் போனவன் முதன் முதலில் கேட்டது அவன் அப்பா அனுப்பி இருந்த குறுஞ்செய்தியைதான்.. நண்பர் மகளின் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த கடைசி நாள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி.. அன்றைய நாளில் மான்வியுடன்.. அலுவலகத்தில் பல வேலைகளுக்கு நடுவே சுழன்று கொண்டிருந்தவன்.. அந்த குறுஞ்செய்தியை பார்க்க தவறிப் போயிருந்தான்..

"ஜீவா"..

"கண்ணா"..

"சாப்பிட்டியா டா"..

"அதன் பிறகு ஒரு வாய்ஸ் நோட்"..

"ஜீவா உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தேன்.. உனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு.. என் பையனுக்கும் பொண்ணு கொடுக்க ஒருத்தன் தயாராக இருக்கான்.. என் வாழ்க்கை மாதிரி இல்ல.. அவன் வாழ்க்கை ஜெகஜோதியா ஒளிர போகுதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தேன்.. இங்க ஒருத்தன் முகத்திலயும் ஈயாடல.. ரொம்ப திருப்தியா உணர்றேன் ஜீவா.. மான்வி உனக்காகவே பிறந்த மாதிரி இருக்கு.. உன் சந்தோஷத்தை பார்த்து எனக்கு எவ்வளவு பூரிப்பா இருக்கு தெரியுமா".. சிவந்திருந்த கண்கள் கலங்கி போக கீழுதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டான் ஜீவா..

"உங்க அம்மா என்னை விட்டு போனபிறகு சுக்கு நூறா உடைஞ்சு போன என் மனசு.. இப்ப முழுமை அடைஞ்ச மாதிரி ஃபீல் ஆகுது.. தாயோட அரவணைப்பு இல்லாம என் மகனை.. நல்லபடியா வளர்க்கலையோன்னு.. குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருந்தேன்.. என் பையன் பிசினஸ்ல அவன் ஒரு ராஜான்னு நிரூபிச்சுட்டான்.. இப்போ தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவன் ஜெயிச்சுட்டான்னு நெஞ்ச நிமித்தி எல்லாருக்கும் காட்டணும்.. என் பேரக் குழந்தைய தோள் மேல தூக்கி வச்சுக்கிட்டு ஊரு ஊரா சுத்தணும்.. எனக்கு பெருசா வேற எந்தை ஆசையும் இல்ல டா.. நான் வாழாத வாழ்க்கையை உன் கிட்ட பார்த்து சந்தோஷப்பட நினைக்கிறேன்.. நீயும் மான்வியும் மேட் ஃபார் ஈச் அதர்.. அவளை பத்திரமா பாத்துக்கோ ஜீவா".. என்று உணர்ச்சி நிறைந்த குரலோடு மேலும் தொடர்ந்து

"என்னவோ தெரியல.. மனசு ஒரு மாதிரி சந்தோஷமா ரெக்கை கட்டி பறக்கிற மாதிரி இருக்கு.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் ஜீவா.. லவ் யூ டா கண்ணா".. என்பதோடு அந்த வாய்ஸ் நோட் முடிந்திருக்க.. கையிலிருந்த மொபைல் நழுவி கீழே விழுந்தது..

சிலையாக உறைந்து குனிந்திருந்தவன் வாயிலிருந்து "ஐ மிஸ் யூ பா".. மெல்லிய அழுகையோடு வெளிப்பட்டது அவன் குரல்..

"ஐ மிஸ்.. யூ ப்பா".. ஆணவனின் அழுகை அதிகரிக்க.. குரல் உயர்ந்தது..

"ஐ மிஸ் யூ ப்பா.. ஆஆஆஆ.. ஆஆஆ.. அப்பாஆஆஆஆ".. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தான் ஜீவா.. தந்தை கையிலிருந்து தவறி போன பிள்ளையாய்.. "அப்பா.. அப்.. பா".. என்று குலுங்கி அழுத நண்பனை கண்டு இதயம் கனத்து போனான் பரத்.. பரத்திற்கு தெரிந்து விட்டது.. கோமாவில் இருந்திருந்தாலும் தாங்கள் பேசிய அனைத்தையும் அவன் உணர்ந்துதான் இருக்கிறான்.. அதன் வெளிப்பாடுதான் இந்த இறுக்கம்.. இனி எப்படி அவனை எதிர்கொள்வது தெரியவில்லை..

"டேய்.. ஜீவா.. அழாதடா".. தேற்ற முடியாது கையாலாகாதவனாய் நின்ற நண்பனின் சட்டையை பிடித்து உலுக்கினான் ஜீவா..

"அப்பா.. அப்பா வேணும்டா.. அப்.. அப்.. பா.. வே.. ணும்டா.. வேணும்டா.. எனக்கு தான் யாருமே இல்லைன்னு தெரியுமே.. அப்புறம் ஏன்டா என்னை விட்டுட்டு போனாரு.. என்னையும் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல.. நான்.. நான் என்னடா.. பாவம் செஞ்சேன்.. எனக்கு மட்டும் ஏன்.. ஏண்டா.. எதுவும் சரியா அமையல".. அடிக்குரலில் பிதற்றினான்..

"அம்மா.. போய்ட்டா.. அப்பா போய்ட்டாரு.. அவளும் போய்ட்டா.. யாருக்குமே இங்க நான் தேவை இல்லை அப்படித்தானே.. நீயும் ஒரு நாள் என்னை விட்டு போயிடுவே இல்ல.. உனக்கும் நான் வேண்டாம் இல்ல மச்சான்?".. தேம்பி அழுத ஆறடி குழந்தையை பார்த்து மிரண்டு போனான் பரத்..

கம்பீரமாக நிற்பவன்.. தொழிற்துறையில் சுயமாக முடிவுகளை எடுத்து அசால்டாக எதிராளியை வீழ்த்துபவன்.. தவறு செய்த போதிலும்.. நான் இப்படித்தான் என்று மீடியா முன்பு பேட்டி கொடுத்தவன்.. சிறுபிள்ளை போல் அழுததில் ஸ்தம்பித்து போனான்..

"இல்ல டா.. என்ன ஆனாலும் சரி நான் உன்னை விட்டு போகவே மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் உன் கூட தான் மச்சான் இருப்பேன்".. உறுதியோடு நண்பனை அணைத்துக் கொண்டான் பரத்..

இங்கே.. அந்த திருமண மண்டபத்தில் அக்னி குண்டத்தின் முன்பு பட்டுப் புடவையும் நகைகளுமாக மணக்கோலத்தில் திவாகரின் அருகே புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள் மான்வி..

அங்கே ஒருவன் அழுகிறான் இங்கே ஒருத்தி சிரிக்கிறாள்.. விதி இருவரையும் இணைக்குமோ.. பிரிக்குமோ... பிரிந்த பின் உணரப்படும் காதலுக்கு தான் பயன் உண்டா என்ன?.

தொடரும்..
முன்னாடி மான்வி நினைச்சு பாவமா இருந்து இப்போ ஜீவா நினைச்சு பாவமா இருக்கு விதி இவர்களை சேர்ந்து வைக்குமா
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
50
"ஜீவா.. ஜீவா.. அப்பா.. அப்பா.. நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டாருடாஆஆ.. அவர் கடைசிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத பாவியாகிப் போய்ட்டியே!!.. எழுந்திருடா.. எழுந்திரு.. அவர் எனக்கு ஃபாதர் இல்ல.. காட் பாதர்ன்னு அடிக்கடி சொல்லுவியேடா.. ஒரு மகனா அவருக்கான இறுதி மரியாதையை கொடுத்து அனுப்ப வேண்டாமா!!.. எழுந்து வாடா ஜீவா.. ப்ளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்".. ஓவென்று கதறி அழுத பரத்தை தேற்ற வழி இல்லாமல் மரக்கட்டையாக படுத்திருந்தான் ஜீவா..

"ஜீவா.. ஜீவா.. அப்பாடா.. உன்னை பெத்து வளத்தவரு உனக்காகவே வாழ்ந்தவரு.. அவரை விடவா உசத்தி அவ.. நீ ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கே ன்னு சொல்றேன்.. அப்பா கெஞ்சுறாரு.. குத்து கல்லு மாதிரி அசையாம நிக்கிறாடா.. அவ மனசுல நீ இல்ல ஜீவா.. தேவையில்லாத இடத்துல காட்டப்படற அன்பு.. விழலுக்கு இறைச்ச நீர் மாதிரி வீண் தான்.. அவ உனக்கு பொருத்தமானவ இல்ல ஜீவா.. நீ அவ மேல வச்சிருந்தா கண்மூடித்தனமான நேசம் தான் உன்னை இங்க கொண்டு வந்து விட்டிருக்கு.. தயவு செஞ்சு இனியாவது திருந்துடா.. திரும்பி வாடா.. அப்பா உனக்காக காத்துட்டு இருக்காரு.. என் மகன் வந்து எனக்கு கொல்லி வைப்பான்னு எதிர்பார்ப்போட கடைசி யாத்திரைக்கு தயாராகி நிக்கிறாரு.. ஏமாத்திடாதே ஜீவா.. வாடா மச்சான்.. வாடாஆஆஆஆ".. ஆக்ரோஷமாக கத்தினான் பரத்.. ஜீவாவின் விழிகள் இயலாமையுடன் பக்கவாட்டில் கண்ணீரை சிந்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை..

தீப்தி ஒரு ஓரமாக நின்று அழுது கொண்டிருந்தாள்.. எத்தனை துயரத்தை தான் தாங்க முடியும்.. தன் மகனுக்கு மட்டுமல்லாமல் மகனுடைய நண்பர்களையும் தன் பிள்ளைகளாக பாவித்து பாசம் கொட்டி பார்த்துக் கொண்டவர்.. கடுமையான எதிர்ப்புகளை மீறி.. தீப்தி பரத் திருமணத்தை நடத்தி வைத்தவர்.. அத்தகைய உயர்ந்த மனிதர் இப்போது உயிரோடு இல்லை.. அவர் மகனோ நினைவிழந்து.. படுத்த படுக்கையாகி அசைவில்லாமல் கிடக்கிறான்..

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான் பரத்.. "சரிடா நீ எழுந்திருக்க வேண்டாம்.. அப்பாவுக்காக நீ திரும்பி வர வேண்டாம்.. நீ இல்லனா என்ன.. அவருக்கு பெறாத மகனா நான் இருக்கேன்.. அவர் கடைசி மரியாதையை செஞ்சு நான் என்னோட அப்பாவை சந்தோஷமா அனுப்பி வைக்கிறேன்.. நீ ஜாலியா உன் மான்வியை நினைச்சுக்கிட்டு உன் கனவுலகத்திலேயே வாழ்ந்துகிட்டு இரு".. என்றிருந்தான் கோபத்தோடு..

வேண்டுமென்று வலுக்கட்டாயமாக அவன் கோமாவில் படுத்திருக்கவில்லை.. பரத்திற்கும் நிதர்சனம் புரியாமல் இல்லை.. ஆனாலும் தந்தையின் மரணம் கூட அவனை அசைத்துப் பார்க்கவில்லையே என்று கோபமும் ஆதங்கமும் அப்பேர்ப்பட்ட வார்த்தைகளை மாலையிலிருந்து அறுந்து விழுந்த முத்துக்களைப் போல் படபடவென கொட்டி தீர்க்க வைத்தன..

"அப்பாவுக்கு எல்லாமே நானே முடிச்சிட்டேன்.. இந்த கையால.. இந்த கையால தாண்டா அவருக்கு கொள்ளி வச்சேன்".. இறுதி காரியங்களை முடித்துவிட்டு வந்ததாக புலம்பி கொண்டிருந்த பரத் கொள்ளி வைத்ததாக தூக்கி காட்டிய தன் கரத்தை வெறுப்போடு பார்த்தான்..

"உன் அம்மா துரோகம் செஞ்சுட்டு போன பிறகு கூட.. தனக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சுக்காம உனக்காகவே வாழ்ந்தவர் டா அவரு.. அவருக்கு அந்த கடைசி நிம்மதியை கூட உன்னால கொடுக்க முடியல இல்ல.. ரொம்ப செல்பிஷ் டா.. நீ.. போடா".. விரத்தியோடு வந்தன வார்த்தைகள்.. அவன் ஆதங்கத்திற்கும் அழுகைக்கும் பதிலளிக்கும் விதமாக கண்ணீர் உகுத்த வண்ணமே இருந்தன ஜீவாவின் விழிகள்.. அப்பாவின் முகத்தை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியவில்லையே.. அவன் மயக்கத்திலிருந்த வேலையில் அவர் மரணத்தின் வாயிலுக்கே சென்று விட்டிருந்தார்.. மூளைக்கு உரைக்கிறது.. உடல் விரைத்து கிடக்கிறதே!!..

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன.. ஒரு பக்கம் ஜீவாவிற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் மான்வி.. ஜீவாவிற்கும் இடையேயான உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது..

அன்று காலையில் ஜீவாவின் அருகே வந்து அமர்ந்தான் பரத்.. ஜீவா.. "உன்னோட மான்வி.. சாரி அந்த மான்விக்கு வரும் வெள்ளிக்கிழமை.. கல்யாணமாம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?.. அந்த திவாகர்.. அவனை தான் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்.. இன்னைக்கு எல்லாரையும் ரெஸ்டாரண்ட்ல பார்த்தேன்.. குடும்பமா சந்தோஷமா சிரிச்சு பேசி சாப்டுட்டு இருந்தாங்க.. ஒரு உயிரை பலி வாங்கிட்டு எப்படி இவங்களால சந்தோஷமா இருக்க முடியுது ஜீவா.. எனக்கு புரியல?..

"ஒட்டு மொத்தமா அவங்களை கொன்னு போடுற அளவு ஆத்திரம்.. அப்பாவோட சத்தியம் தான்டா என்னை கட்டுப்படுத்திடுச்சு.. அப்பாவை கொன்னுட்டு என் முன்னாடியே சிரிச்சு சந்தோஷமா இருக்கிறவங்களை.. ஒண்ணுமே செய்ய முடியாத கையாலாகாத பாவியா உன் முன்னாடி நிக்கறேன்டா.. என்னால தனியா சமாளிக்க முடியல ஜீவா.. எழுந்து வாடா.. இவங்க முன்னாடி நீ சந்தோஷமா வாழ்ந்து காட்டணும்.. உன்னையும் அப்பாவையும் கேலி செஞ்சு வாழ விடாம செஞ்சவங்க முன்னாடி நீ கம்பீரமா எழுந்து வரணும்.. வாடா மச்சான்.. அப்பாவுக்காக வரல.. எனக்காகவாது வாடா மச்சான் ப்ளீஸ்".. கெஞ்சிய பரத் அவன் நெஞ்சினில் முகம் புதைத்தான்..

ஜீவாவின் சித்தப்பாவோ அவரது குடும்பத்தினரோ.. மருத்துவமனை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.. ஏன்.. உடன்பிறந்த அண்ணனின் இறுதியாத்திரைக்கு கூட வரவில்லை.. அவ்வளவு வன்மம்..

ஒரு பக்கம்.. ஜீவாவின் நிலைமை தலைகீழாக மாறிப் போயிருக்க மறுபக்கமோ.. மான்வியின் வீட்டில் பந்தல் போட்டு திருமணத்திற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன..

வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக திவாகர் மட்டுமே அனைத்திற்கும் ஓடிக் கொண்டிருந்தான்.. தினம் ஒரு திருவிழா என்பதை போல்.. பந்தக்கால் நடுவது.. நலுங்கு.. விருந்து என கடனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அந்த வீடே பரபரப்பாக விழாக் கோலம் பூண்டிருந்தது..

"எப்படியோ போ.. நீயாவது நல்லா இரு".. என்று விட்டுவிட முடியவில்லை பரத்தால்.. "இப்படி வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன என் நண்பன் தேச துரோக குற்றம் செய்து விட்டான்.. நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை.. அவள் புன்னகையை நினைக்க.. நினைக்க வயிறு எரிந்தது.. நீயெல்லாம் சித்திரவதை அனுபவிச்சுதான் என் நண்பனோட காதலை உணர்வேடி".. மனம் இரக்கமில்லாமல் சபித்துக் கொட்டியது மான்வியை..

"டேய்.. பரத்.. என்னைக்காவது ஒரு நாள் என் பையன்.. குணமாகி திரும்பி வருவான்.. அவனால அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்துடக்கூடாது.. நீயும் அந்த குடும்பத்தை எதுவும் செஞ்சிடக் கூடாது.. என்னோட சாவுக்கு பழி வாங்குறேன்னு ஒரு குடும்பத்தை அழிச்சிடாதீங்கடா".. கடைசி தருவாயில் அவர் விடுத்த வேண்டுகோள் அவன் கையை கட்டி போட்டு விட்டது..

முழுதாக பதினைந்து நாட்கள் கழிந்திருந்த நிலையில்.. கண் விழித்திருந்தான் ஜீவா..

அதிர்ச்சியான விஷயங்கள் எதையும் அவர்கிட்ட சொல்ல வேண்டாம்.. கொஞ்ச நாள் போகட்டும்... அவர் மனசு உடம்பும் தெம்பான பிறகு.. ஒவ்வொரு விஷயமா ரிவீல் பண்ணுங்க.. மருத்துவரின் பரிந்துரை படி முதல் மூன்று நாட்கள் அவனிடம் எதைப் பற்றியும் பேசவில்லை.. பரத் தீப்தி இருவரும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டனர்.. அவனும் எதைப்பற்றியும் கேட்காது போனது தான் ஆச்சரியம்.. ஆழ்மயக்கத்தில் இருந்தபோது தந்தை பரத்.. இருவரும் மாறி மாறி அழுது புலம்பியதை அறிந்து கொண்டிருந்தானோ!!..

நடந்த அசம்பாவிதங்கள் அவன் நினைவுபட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கிறதோ!!.. அது எப்படி அப்பாவை பற்றி.. ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அவரை பார்க்க வேண்டும் என்று கூட சொல்லவில்லையே.. மான்வியை சந்தித்த நாட்களிலிருந்து அவள் பெயரை உச்சரிக்காமல் ஒரு மணி நேரத்தை கூட கழித்ததில்லை.. இன்று மௌனமாக இறுகி.. கண் மூடி படுத்திருந்தவனை கண்டு.. உள்ளுக்குள் வெலவெலத்துப் போனான் பரத்.. அடிக்கடி கண்கள் உற்பத்தி செய்த கண்ணீரின் பாஷை தான் அவனுக்கு புரியவில்லை.. "ஜீவா என்னடா ஆச்சு ஏன் அழறே?.. எமோஷனல் ஆகாத டா".. மெதுவாக பேசியவன் மனதிலிருப்பதை அறிய முற்பட்டான்.. வாய் திறக்கவில்லை ஜீவா..

"என்னோட போன் எங்க?.. அதுவாவது உயிரோட இருக்கா இல்ல செத்து போச்சா".. அவன் இயல்பாக கேட்டிருந்த விதத்தில் திடுக்கிட்டு விழித்த பரத்.. "இருக்குடா".. என்று அவன் ஐபோனை எடுத்துக் கொடுக்கவும்.. தன் பிங்கர் பிரிண்ட் போட்டு ஆன் செய்தான் ஜீவா..

வாட்ஸாப் போனவன் முதன் முதலில் கேட்டது அவன் அப்பா அனுப்பி இருந்த குறுஞ்செய்தியைதான்.. நண்பர் மகளின் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த கடைசி நாள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி.. அன்றைய நாளில் மான்வியுடன்.. அலுவலகத்தில் பல வேலைகளுக்கு நடுவே சுழன்று கொண்டிருந்தவன்.. அந்த குறுஞ்செய்தியை பார்க்க தவறிப் போயிருந்தான்..

"ஜீவா"..

"கண்ணா"..

"சாப்பிட்டியா டா"..

"அதன் பிறகு ஒரு வாய்ஸ் நோட்"..

"ஜீவா உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தேன்.. உனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு.. என் பையனுக்கும் பொண்ணு கொடுக்க ஒருத்தன் தயாராக இருக்கான்.. என் வாழ்க்கை மாதிரி இல்ல.. அவன் வாழ்க்கை ஜெகஜோதியா ஒளிர போகுதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தேன்.. இங்க ஒருத்தன் முகத்திலயும் ஈயாடல.. ரொம்ப திருப்தியா உணர்றேன் ஜீவா.. மான்வி உனக்காகவே பிறந்த மாதிரி இருக்கு.. உன் சந்தோஷத்தை பார்த்து எனக்கு எவ்வளவு பூரிப்பா இருக்கு தெரியுமா".. சிவந்திருந்த கண்கள் கலங்கி போக கீழுதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டான் ஜீவா..

"உங்க அம்மா என்னை விட்டு போனபிறகு சுக்கு நூறா உடைஞ்சு போன என் மனசு.. இப்ப முழுமை அடைஞ்ச மாதிரி ஃபீல் ஆகுது.. தாயோட அரவணைப்பு இல்லாம என் மகனை.. நல்லபடியா வளர்க்கலையோன்னு.. குற்ற உணர்ச்சியில் செத்துகிட்டு இருந்தேன்.. என் பையன் பிசினஸ்ல அவன் ஒரு ராஜான்னு நிரூபிச்சுட்டான்.. இப்போ தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவன் ஜெயிச்சுட்டான்னு நெஞ்ச நிமித்தி எல்லாருக்கும் காட்டணும்.. என் பேரக் குழந்தைய தோள் மேல தூக்கி வச்சுக்கிட்டு ஊரு ஊரா சுத்தணும்.. எனக்கு பெருசா வேற எந்தை ஆசையும் இல்ல டா.. நான் வாழாத வாழ்க்கையை உன் கிட்ட பார்த்து சந்தோஷப்பட நினைக்கிறேன்.. நீயும் மான்வியும் மேட் ஃபார் ஈச் அதர்.. அவளை பத்திரமா பாத்துக்கோ ஜீவா".. என்று உணர்ச்சி நிறைந்த குரலோடு மேலும் தொடர்ந்து

"என்னவோ தெரியல.. மனசு ஒரு மாதிரி சந்தோஷமா ரெக்கை கட்டி பறக்கிற மாதிரி இருக்கு.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் ஜீவா.. லவ் யூ டா கண்ணா".. என்பதோடு அந்த வாய்ஸ் நோட் முடிந்திருக்க.. கையிலிருந்த மொபைல் நழுவி கீழே விழுந்தது..

சிலையாக உறைந்து குனிந்திருந்தவன் வாயிலிருந்து "ஐ மிஸ் யூ பா".. மெல்லிய அழுகையோடு வெளிப்பட்டது அவன் குரல்..

"ஐ மிஸ்.. யூ ப்பா".. ஆணவனின் அழுகை அதிகரிக்க.. குரல் உயர்ந்தது..

"ஐ மிஸ் யூ ப்பா.. ஆஆஆஆ.. ஆஆஆ.. அப்பாஆஆஆஆ".. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தான் ஜீவா.. தந்தை கையிலிருந்து தவறி போன பிள்ளையாய்.. "அப்பா.. அப்.. பா".. என்று குலுங்கி அழுத நண்பனை கண்டு இதயம் கனத்து போனான் பரத்.. பரத்திற்கு தெரிந்து விட்டது.. கோமாவில் இருந்திருந்தாலும் தாங்கள் பேசிய அனைத்தையும் அவன் உணர்ந்துதான் இருக்கிறான்.. அதன் வெளிப்பாடுதான் இந்த இறுக்கம்.. இனி எப்படி அவனை எதிர்கொள்வது தெரியவில்லை..

"டேய்.. ஜீவா.. அழாதடா".. தேற்ற முடியாது கையாலாகாதவனாய் நின்ற நண்பனின் சட்டையை பிடித்து உலுக்கினான் ஜீவா..

"அப்பா.. அப்பா வேணும்டா.. அப்.. அப்.. பா.. வே.. ணும்டா.. வேணும்டா.. எனக்கு தான் யாருமே இல்லைன்னு தெரியுமே.. அப்புறம் ஏன்டா என்னை விட்டுட்டு போனாரு.. என்னையும் கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல.. நான்.. நான் என்னடா.. பாவம் செஞ்சேன்.. எனக்கு மட்டும் ஏன்.. ஏண்டா.. எதுவும் சரியா அமையல".. அடிக்குரலில் பிதற்றினான்..

"அம்மா.. போய்ட்டா.. அப்பா போய்ட்டாரு.. அவளும் போய்ட்டா.. யாருக்குமே இங்க நான் தேவை இல்லை அப்படித்தானே.. நீயும் ஒரு நாள் என்னை விட்டு போயிடுவே இல்ல.. உனக்கும் நான் வேண்டாம் இல்ல மச்சான்?".. தேம்பி அழுத ஆறடி குழந்தையை பார்த்து மிரண்டு போனான் பரத்..

கம்பீரமாக நிற்பவன்.. தொழிற்துறையில் சுயமாக முடிவுகளை எடுத்து அசால்டாக எதிராளியை வீழ்த்துபவன்.. தவறு செய்த போதிலும்.. நான் இப்படித்தான் என்று மீடியா முன்பு பேட்டி கொடுத்தவன்.. சிறுபிள்ளை போல் அழுததில் ஸ்தம்பித்து போனான்..

"இல்ல டா.. என்ன ஆனாலும் சரி நான் உன்னை விட்டு போகவே மாட்டேன்.. என் உயிர் இருக்கிற வரைக்கும் உன் கூட தான் மச்சான் இருப்பேன்".. உறுதியோடு நண்பனை அணைத்துக் கொண்டான் பரத்..

இங்கே.. அந்த திருமண மண்டபத்தில் அக்னி குண்டத்தின் முன்பு பட்டுப் புடவையும் நகைகளுமாக மணக்கோலத்தில் திவாகரின் அருகே புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள் மான்வி..

அங்கே ஒருவன் அழுகிறான் இங்கே ஒருத்தி சிரிக்கிறாள்.. விதி இருவரையும் இணைக்குமோ.. பிரிக்குமோ... பிரிந்த பின் உணரப்படும் காதலுக்கு தான் பயன் உண்டா என்ன?.

தொடரும்..
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
36
அழாத ஜீவா... எங்களுக்கும் அழுகை வருது.... எல்லாம் அவன் செயல்....மான்வி ஒரு இடத்தில் கூட அவன் அன்பை நீ உணரவே இல்லையா 😕😕😕😕
 
Member
Joined
May 3, 2025
Messages
43
Ana manvi evlo selfish...
Ena irunthalum hospital poi once pathurukalam...
Bharath ena sonano atha nadakumo....
Patatha theriyum avanoda kadhal....
Theriyama tholacha thedalam...
Therinje tholacha...
 
Member
Joined
Feb 15, 2025
Messages
51
ஏய் மான்வி என்ன காரியம் பன்னீட்டு இருக்கே
 
Top