• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

பனித்துளி 18

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
75
சுய நினைவு திரும்பிய மூன்று நாட்களில் வீட்டுக்கு வந்திருந்தான் ஜீவா.. அப்பாவின் வாய்ஸ் நோட் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு அறையில் அடைந்து கிடந்தவனை தேற்றவே முடியாது பரிதவித்தனர் பரத் தீப்தி இருவரும்.. பெரிய இழப்பல்லவா.. உயிரில் பாதியை பறிகொடுத்து நெஞ்சம் மரித்துக் கிடந்தவனுக்கு மான்வியின் புறகணிப்பு பெரிதாக தோன்றவில்லையோ என்னவோ..

தந்தையின் அறைக்கு சென்று அவர் தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டு உறங்கிய ஜீவாவை கண்டு தன்னையும் அறியாது அடிக்கடி கண்கள் கலங்கி விம்மி துடித்தான் பரத்..

"டேய் மச்சான் ஒரு ரிலாக்ஸ்சேஷனுக்காக எங்கேயாவது போயிட்டு வாடா.. பிசினஸ் நான் பாத்துக்குறேன்.. இப்படியே இருந்தா உன்னையும் இழந்துருவோமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குடா".. பரத் பரிதவிப்புடன் கூறியது அவன் காதுகளில் விழவே இல்லை.. அப்பாவின் அறையை சுற்றி சுற்றி வலம் வந்தான்.. விஸ்வமூர்த்தி உபயோகித்த பொருட்களை தொட்டு வருடி அவர் இருப்பை உணர்ந்தான்.. இன்னும் கூட வெளியூர் சென்று விட்ட அப்பா திரும்பி வராதது போலவே தோன்றியது.. இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.. உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாது அவனோடு வாதம் செய்தது அடிமனம்.. தினம் இரவில் அப்பாவின் சட்டையை எடுத்து அணைத்துக் கொண்டு உறங்கினான் ஜீவா.. அவர் மார்போடு தாய்பால் தேடும் பிள்ளையாக ஒன்றிக் கிடந்த மலரும் நினைவுகள் பசுமரத்தாணியாய் அவன் நெஞ்சினில்..

விஷ்வ மூர்த்தியின் மீது ஜீவாவிற்கு கண்மண் தெரியாத பாசம் உண்டு என்பது மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.. மற்றவர்களை பொறுத்தவரை அவன் முரடன் கோபக்காரன் நிதானம் இல்லாதவன்.. பெண்களுக்கு மரியாதை கொடுக்காதவன்.. இப்படி பல பல பட்டங்கள்.. என் மனைவியைப் பொறுத்தவரை கூட அவன் பொறுக்கி தானே..

பெற்ற அன்னை வீட்டை விட்டு இன்னொருவனுடன் சென்று விட்ட காலங்களில்.. "அம்மா எங்க போயிருக்காங்க அப்பா.. எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க.. எனக்கு ஒரே கோபமா வருது அப்பா.. நேத்து கூட என்னை கிண்டல் செஞ்ச ஒருத்தனை அடிச்சு மண்டையில ரத்தம் வந்துடுச்சு.. மிஸ் நாளைக்கு வரும்போது உன் அப்பாவோட தான் வரணும்னு சொல்லிட்டாங்க".. அவமானத்தில் கூனி குறுகி ஊரார் பேச்சுக்கு பயந்து வீட்டோடு முடங்கி கிடந்த தந்தையிடம்.. அவர் அரவணைப்பில் ஒன்றிக் கிடந்த நேரத்தில் ஜீவா கேட்ட கேள்விகள்..

"அம்மா இனிமே வர மாட்டாங்க கண்ணா.. அவங்க வேற வாழ்க்கையை தேடிக்கிட்டாங்க.. இனிமே உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான்தான்.. அம்மா மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்காம.. உனக்கு என் கிட்ட இருந்து என்ன தேவையோ அதை தயங்காம வெளிப்படையா கேட்டு வாங்கிக்கோ ஜீவா.. அப்பா உனக்காக என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன்".. அவன் நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டவரின் கண்ணீர் கன்னங்களை நனைத்தது.. இன்னும் கூட அந்த ஈரத்தை உணர முடிந்தது அவனால்.. அன்றிலிருந்து இன்று வரை அன்னைக்கு அன்னையாக தந்தைக்கு தந்தையாக.. சிறு குறையும் காண முடியாத அளவிற்கும் அவனை வளர்த்தவர் விஷ்வமூர்த்தி.. அன்பு தேவைப்படும் நேரங்களில் செல்லம் கொடுத்து.. ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் கண்டித்து வழி நடத்திய விஸ்வமூர்த்தி தான் அவனைப் பொறுத்தவரையில் சூப்பர் ஹீரோ.. ஒருவர் உயிரோடு இருக்கும் வரை அவரது அருமை தெரியாது என்பார்கள்.. ஆனால் அப்பாவின் அருமையை அணு அணுவாக உணர்ந்தவன் ஜீவா.. கரை கடந்த பாசம் அவர் மீது உண்டு.. இந்த வயதிலும் கூட அப்பாஆஆ.. என்று மார்பு முட்டி சின்னப் பிள்ளையாக கொஞ்சும் ஜீவனை பரத் வியந்து பார்த்த நாட்கள் உண்டு.. அப்படிப்பட்ட தந்தையின் இறப்பு அவனுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெகு நிதானமாக.. வீட்டை சுற்றி வருவது.. ஒரு புறம் நிம்மதியை கொடுத்தாலும் மறுபுறம் பயத்தையும் விதைத்தது.. அவன் குணத்திற்கு சற்றும் பொருந்தாத நடவடிக்கைகள் அல்லவா இவை.. மதம் கொண்ட யானை மக்கள் நடுவே அமைதியாக அமர்ந்திருப்பதை போல்..

மான்வியைப் பற்றி பேச்செடுக்கவே பயம்.. மீண்டும் எங்கே மூர்க்கனாக மாறி பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு வருவானோ என்ற அச்சத்தோடு.. கண்காணிக்கும் நோக்கில் தனது அதி முக்கிய வேலைகளை புறந்தள்ளி நண்பனை சுற்றியே வட்டமிட்டான் பரத்..

ஒரு வாரம் கழிந்திருக்க.. "நாளைக்கு மான்விக்கு கல்யாணம் டா".. தகவலாக சொன்னான் பரத்.. மறைக்க தோன்றவில்லை..

தொலைக்காட்சியின் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த ஜீவாவின் முகத்தில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை.. ஒரு சிறு அதிர்ச்சியோ கோபமோ.. தடுமாற்றமோ கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனான் பரத்.. இது நல்லதா? கெட்டதா? என்று கூட தெரியவில்லை.. குறுகிய கால நேசம் என்றாலும் ஜீவாவின் ஜீவன் மான்வி என்பதை பரத் மிக நன்றாகவே அறிவான்.. ஜீவாவின் வெறித்தனமான காதலை அவன் கண்களில் கண்டு நடவடிக்கைகளில் மிரண்டு செய்வதறியாது திணறி போன நாட்கள்தான் மறந்து போகுமா என்ன?.. அதற்கெல்லாம் நேர்மாறாக இந்த உணர்ச்சித் தொலைத்த முகம்.. எதற்கான பிரதிபலிப்பு.. மான்வியை வெறுத்து விட்டானா?..

சொல்லப்போனால் இந்த விஷயத்தை ஒரு தகவலாக சொல்வதில் கூட பரத்திற்கு உடன்பாடு இல்லை.. ஆனால் மான்விற்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரிந்த பிறகு அவன் மனநிலையில் வேறு மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டால்?.. அது இன்னும் விபரீதமாக முடியுமே!!..

அதற்காக ஜீவா சூப்பர் ஹீரோவாக மாறி.. மான்வியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி.. பிரித்திவிராஜ் சம்யுக்தையை குதிரையில் தூக்கி வந்து திருமணம் செய்து கொண்டது போல்.. இவனும் மான்வி மீது கொண்ட காதலுக்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கி பெண்ணைத் தூக்க வேண்டும் என்று எண்ணமெல்லாம் இல்லை அவன் நண்பனுக்கு..

தன் சினேகிதன் வாழ்க்கையை புரட்டி போட்ட மான்வி மீது அளவு கடந்த வெறுப்பிலிருப்பவன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்புவானா என்ன?.. பிரச்சனை அதுவல்ல.. ஜீவாவின் நிதானம்.. புரிந்து கொள்ள முடியாத அமைதி.. பாறையாக இறுகிய அவன் முகம்.. அதுதான் புதிரும் குழப்பமும்..

தன் தந்தையின் இறப்பிற்கு காரணமானவளை காதல் மயக்கத்தில் மனதில் சுமக்கும் அளவிற்கு அவன் அடி முட்டாள் அல்லவே.. சரி பரவாயில்லை இதுவும் நல்லதுக்கு தான் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதாய் போனது பரத்திற்கு..

"எனக்கு ஜீவாவை பாக்கனும்.. பிளீஸ்.. ஒருமுறை.. ஒரே ஒரு முறை".. காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள் ரமா..

"எதுக்காக பாக்கணும் அரை உசிரா இருக்கிறவன மொத்தமா கொன்னு போடுறதுக்கா.. இங்க பாருங்க.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க.. உங்களைப் பார்த்தாலே எரிச்சலா வருது.. வயசுல பெரியவங்களாச்சேன்னு பார்க்கிறேன்.. இல்லனா மரியாத இல்லாம ஏதாவது பேசிட போறேன்".. பரத் கோபத்தோடு நடந்து கொண்ட முறை மனதிற்கு வருத்தமளித்தாலும் மகளின் வாழ்வை காப்பாற்ற வேண்டியது இந்நேரத்தில் முக்கியம் என்ற ஒரே குறிக்கோளோடு ரமா..

"எனக்கு புரியுது.. எல்லாத் தப்பும் எங்க மேல தான்.. நாங்க செஞ்ச பாவத்துக்கு.. என் மகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டாம்.. ஒரே ஒரு முறை ஜீவா தம்பியை பார்த்து.. பேசிட்டு போயிடறேன்".. வீட்டுக்குள் விடாமல் பரத் வழிமறித்து நின்று கொண்டிருக்க.. வாயிலில் நின்று கெஞ்சி கொண்டிருந்தாள் ரமா..

மாடியில் நின்று இக்காட்சியை கண்டு கொண்டிருந்த ஜீவாவிற்கு.. பெரிதாக எந்த எமோஷனும் முட்டி மோதவில்லை.. வந்திருப்பவர் மான்வியின் அம்மா என்று தெரிந்த பிறகும் கூட அவர்களது உரையாடல்கள் காதில் விழாத காரணத்தால்.. ரமாவின் முகபாவனைகளை உள்வாங்கியபடி கண்கள் சுருக்கி யோசனையாக நின்று கொண்டிருந்தான் அவன்..

"உங்க பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம் இல்லையா?.. அங்க மண்டபத்துல உங்க புருஷன் கூட ஜோடியா நின்னு.. ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பி வைக்காம.. இங்க வந்து நின்னு ஏன் உங்க நேரத்தை வீணாக்குறீங்க மேடம்".. பரத்தின் நக்கலான கேள்வி அவளை கூனி குறுக வைத்ததில் கண்ணீருடன் தலை தாழ்ந்து கொண்டவள்.. "நீங்க எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை.. நான் ஜீவாவை பாக்காம இங்க இருந்து போக மாட்டேன்.. ஒருமுறை அவரைப் பார்த்து பேசிட்டு போயிடுறேன்".. என்றிருந்தாள் உறுதியான அதே நேரத்தில் இறைஞ்சும் குரலில்..

எரிச்சலானான் பரத்.. வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று வெறுத்து ஒதுக்கும் மனிதர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பவர்கள் அல்லவா இவர்கள்..

"உங்களுக்கு புரியுதா புரியலையா.. அவனோட அப்பாவை கொன்னுட்டீங்க.. இப்போ அவனையும் கொல்றதுக்காக ஏதாவது பிளான் பண்ணி வந்துருக்கீங்களா.. அவன் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணு.. அவனை அவமானப்படுத்திட்டு.. அவனோட அப்பாவோட சாவுக்கு காரணமாகிட்டு இப்ப இன்னொருத்தன் கூட மணமேடையில் உட்கார்ந்துருக்கா.. அவளோட அம்மா நீங்க.. உங்களை பார்த்து அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைக்கிறீங்க.. இப்ப இருக்கிற நிலைமையில அவன் உங்களை பார்த்தா கொன்னு போடவும் தயங்க மாட்டான்.. ரொம்ப கஷ்டப்பட்டு அவனை காப்பாத்தி வைச்சிருக்கோம்.. திரும்ப அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நானே உங்களை சும்மா விட மாட்டேன்.. உங்க வயசுக்கு மதிப்பு கொடுத்து பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. மரியாதையா இங்க இருந்து போயிடுங்க" என்றான் அழுத்தமான குரலில்.. அவன் கோபம் புரிகிறது அவன் பக்கம் நியாயம் புரிகிறது ஆனாலும் மகளின் வாழ்வை காப்பாற்ற வேண்டுமே.. இதற்கு மேல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்.. அங்கே அவள் எதிர்கால வாழ்க்கை அக்னியில் சிதைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறதே..

"தம்பி உங்களுக்கு பொறுமையா சொல்லி விளக்க முடியாத நிலைமையில இருக்கேன்.. ஒரே ஒருமுறை ஜீவா தம்பியை பார்க்க அனுமதிங்க.. காலம்பூரா உங்களுக்கு நன்றியுள்ளவளா இருப்பேன்.. உங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்".. என்றவளோ அடுத்த கணமே யோசிக்காமல் அவன் காலில் விழுந்திருந்தாள்..

அவள் இச்செயலை சற்றும் எதிர்பாராத பரத் திடுக்கிடலோடு இரண்டடி பின்னால் நகர்ந்தான்.. "ஐயோ என்னம்மா இது எழுந்திருங்க.. வயசுல பெரியவங்க நீங்க இப்படி செய்யலாமா".. தர்ம சங்கடத்தோடு அவளை தூக்கி விட முயல அதற்குள் அவளே எழுந்து கொண்டவள்.. கண்ணீருடன் மனம் நொந்து நின்றிருந்த நிலை அவன் மனதை பிசையத்தான் செய்தது

ஆழ்ந்த மூச்சோடு சில கணங்கள் யோசித்தவன் வேறு வழியில்லாமல் நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்தோடு "சரி வாங்க".. என தன்னோடு அழைத்துச் சென்றான்.. மாடியில் வலது பக்கம் முதல் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.. பால்கனியில் அதே தோரணையில் அசையாது நின்று கொண்டிருந்தான் ஜீவா..

"பேசுங்க" ரமாவிடம் கண்களால் சைகை செய்தான் பரத்..

"த.. தம்பி".. நடுக்கத்தோடும் தயக்கத்தோடும் ஒலித்த குரலில்.. ஜீவாவிடம் எவ்வித மாற்றங்களும் இல்லை..

"எனக்கு உங்க கோபம் புரியுது தம்பி.. உங்களுக்கு நாங்க நிறையவே அநியாயம் செஞ்சிட்டோம்.. உங்க மன்னிப்பை பெற தகுதி இல்லாத இடத்துல இப்ப நாங்க இருக்கோம்"..

"ஆனா தயவு செஞ்சு ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும்.. என்னோட பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.. அவ சந்தோஷமா மணமேடையில உட்காரல.. இக்கட்டான சூழ்நிலையில.. ஒரு அயோக்கியனோட மிரட்டலுக்கு பயந்து.. தன்னோட குடும்பத்தை காப்பாத்துறதுக்காக அக்னி முன்னாடி உட்கார்ந்திருக்கா.. உங்களுடைய இழப்பு ரொம்பவே பெருசு.. ஒரு நல்ல மனுஷனோட மனசை உடைச்சு அவருடைய இறப்புக்கே காரணமா இருந்ததுகாக எங்களுக்கு எந்த தண்டனை கிடைச்சாலும் பரவாயில்லை.. ஆனா.. என் பொண்ணு பாவம்.. அவளோட வாழ்க்கையின் நாசமாவதை பார்த்துட்டு எங்களால பொறுக்க முடியல"..

"அதுக்கு ஏன் என்கிட்ட வந்தீங்க".. அதிசயமாக ஜீவா வாய் திறந்திருந்தான்.. ஆனால் ரமாவின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.. பார்க்க விரும்பவில்லை என்பதே உண்மை..

"உங்களைத் தவிர வேற யாரும் உதவி செய்ய முடியும்னு தோணல.. பலத்த பாதுகாப்பை மீறி வந்திருக்கேன்.. தெரிஞ்சே புதைக்குழியில தள்ளக் கூடாதுன்னு நினைச்சு உங்கள மாதிரி நல்ல மாப்பிள்ளையை இழந்துட்டு .. இப்போ.. ஒரு கேடுகெட்டவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து.. அவளை வலுக்கட்டாயமா நரகத்தில் தள்ள முயற்சிகள் நடந்துட்டு இருக்கு.. பெத்த வயிறு துடிக்குது".. ரமா சேலை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு கதறினாள்..

"ஹாஹாஹாஹா".. கைகொட்டி சத்தம் போட்டு சிரித்தான் பரத்.. "அனுபவிக்கட்டும் நல்லா அனுபவிக்கட்டும்.. ஒரு நல்ல மனுஷனோட மனசை புண்படுத்தி நோகாடிச்சீங்களே.. எங்க ஜீவாவோட அருமை தெரியாம அவனை எட்டி உதைச்சீங்களே.. அதுக்கான தண்டனை தான் இது.. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்க பொண்ணுக்கு இந்த தண்டனை போதாது.. இன்னும் அவ அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு.. அந்த திவாகரோட அவ வாழற வாழ்க்கையை நாங்க பார்க்க தானே போறோம்.. எங்க ஜீவாவால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.. அது எப்படி இவ்வளவு நாள் கெட்டவனா தெரிஞ்சவன்.. ஒரிஜினல் கெட்டவன் வந்ததும் உங்க கண்ணுக்கு இப்போ நல்லவனா தெரியுறானோ!!.. இது நீங்களா தேடிக்கிட்டது.. அனுபவிச்சு தான் ஆகணும்.. திரும்பத் திரும்ப ஜீவாவை இதுல இன்வால்வ் பண்ணாதீங்க.. இங்கேருந்து கிளம்புங்க".. கடுமையான வார்த்தைகளின் மூலம் அமிலத்தை வாரி இறைத்தான் பரத்..

பரத்தின் வார்த்தைகள் செவிகளுக்குள் நுழைந்து இதயத்தை கூறு போட்டாலும்.. ஒட்டுமொத்த கவனத்தையும் ஜீவாவின் மீது குவித்து.. "தம்பி.. ஒரே ஒருமுறை.. மான்விக்காக".. என்று முடிக்கும் முன்..

"மான்வின்னு.. எனக்கு யாரையும் தெரியாது மரியாதையா இங்கிருந்து போங்க.. பரத் அவங்களை வெளியே போக சொல்லு".. தீக்கங்குகளாய் வெளிவந்த வார்த்தைகளில் ரமாவின் நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து போனது.. மகளின் வாழ்க்கை ஒரு நாச காரனின் கையில் சிக்கி சின்னாபின்னமாக போகிறதே.. என்ற தாள முடியாத வேதனையுடன்.. இதயம் நொறுங்கி அங்கிருந்து வெளியேறினாள் ரமா..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
Apr 13, 2023
Messages
3
They deserve that.....:cautious:
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
145
Jeeva en in the amaithi. Manvi mel koppathil irukiya jeeva. Manvi in therappu unmai kalai enna entru par. After manvi yai vachi seiyalam 😁😁😁😁😁😁😁. Sagi chitting kuti ud morning la iruthu wait panna var tu small 🤏🤏 ud. Next ud venum😢😢😢😢😢😢😢😢😢
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
சுய நினைவு திரும்பிய மூன்று நாட்களில் வீட்டுக்கு வந்திருந்தான் ஜீவா.. அப்பாவின் வாய்ஸ் நோட் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு அறையில் அடைந்து கிடந்தவனை தேற்றவே முடியாது பரிதவித்தனர் பரத் தீப்தி இருவரும்.. பெரிய இழப்பல்லவா.. உயிரில் பாதியை பறிகொடுத்து நெஞ்சம் மரித்துக் கிடந்தவனுக்கு மான்வியின் புறகணிப்பு பெரிதாக தோன்றவில்லையோ என்னவோ..

தந்தையின் அறைக்கு சென்று அவர் தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டு உறங்கிய ஜீவாவை கண்டு தன்னையும் அறியாது அடிக்கடி கண்கள் கலங்கி விம்மி துடித்தான் பரத்..

"டேய் மச்சான் ஒரு ரிலாக்ஸ்சேஷனுக்காக எங்கேயாவது போயிட்டு வாடா.. பிசினஸ் நான் பாத்துக்குறேன்.. இப்படியே இருந்தா உன்னையும் இழந்துருவோமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குடா".. பரத் பரிதவிப்புடன் கூறியது அவன் காதுகளில் விழவே இல்லை.. அப்பாவின் அறையை சுற்றி சுற்றி வலம் வந்தான்.. விஸ்வமூர்த்தி உபயோகித்த பொருட்களை தொட்டு வருடி அவர் இருப்பை உணர்ந்தான்.. இன்னும் கூட வெளியூர் சென்று விட்ட அப்பா திரும்பி வராதது போலவே தோன்றியது.. இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.. உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாது அவனோடு வாதம் செய்தது அடிமனம்.. தினம் இரவில் அப்பாவின் சட்டையை எடுத்து அணைத்துக் கொண்டு உறங்கினான் ஜீவா.. அவர் மார்போடு தாய்பால் தேடும் பிள்ளையாக ஒன்றிக் கிடந்த மலரும் நினைவுகள் பசுமரத்தாணியாய் அவன் நெஞ்சினில்..

விஷ்வ மூர்த்தியின் மீது ஜீவாவிற்கு கண்மண் தெரியாத பாசம் உண்டு என்பது மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.. மற்றவர்களை பொறுத்தவரை அவன் முரடன் கோபக்காரன் நிதானம் இல்லாதவன்.. பெண்களுக்கு மரியாதை கொடுக்காதவன்.. இப்படி பல பல பட்டங்கள்.. என் மனைவியைப் பொறுத்தவரை கூட அவன் பொறுக்கி தானே..

பெற்ற அன்னை வீட்டை விட்டு இன்னொருவனுடன் சென்று விட்ட காலங்களில்.. "அம்மா எங்க போயிருக்காங்க அப்பா.. எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க.. எனக்கு ஒரே கோபமா வருது அப்பா.. நேத்து கூட என்னை கிண்டல் செஞ்ச ஒருத்தனை அடிச்சு மண்டையில ரத்தம் வந்துடுச்சு.. மிஸ் நாளைக்கு வரும்போது உன் அப்பாவோட தான் வரணும்னு சொல்லிட்டாங்க".. அவமானத்தில் கூனி குறுகி ஊரார் பேச்சுக்கு பயந்து வீட்டோடு முடங்கி கிடந்த தந்தையிடம்.. அவர் அரவணைப்பில் ஒன்றிக் கிடந்த நேரத்தில் ஜீவா கேட்ட கேள்விகள்..

"அம்மா இனிமே வர மாட்டாங்க கண்ணா.. அவங்க வேற வாழ்க்கையை தேடிக்கிட்டாங்க.. இனிமே உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான்தான்.. அம்மா மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்காம.. உனக்கு என் கிட்ட இருந்து என்ன தேவையோ அதை தயங்காம வெளிப்படையா கேட்டு வாங்கிக்கோ ஜீவா.. அப்பா உனக்காக என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன்".. அவன் நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டவரின் கண்ணீர் கன்னங்களை நனைத்தது.. இன்னும் கூட அந்த ஈரத்தை உணர முடிந்தது அவனால்.. அன்றிலிருந்து இன்று வரை அன்னைக்கு அன்னையாக தந்தைக்கு தந்தையாக.. சிறு குறையும் காண முடியாத அளவிற்கும் அவனை வளர்த்தவர் விஷ்வமூர்த்தி.. அன்பு தேவைப்படும் நேரங்களில் செல்லம் கொடுத்து.. ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் கண்டித்து வழி நடத்திய விஸ்வமூர்த்தி தான் அவனைப் பொறுத்தவரையில் சூப்பர் ஹீரோ.. ஒருவர் உயிரோடு இருக்கும் வரை அவரது அருமை தெரியாது என்பார்கள்.. ஆனால் அப்பாவின் அருமையை அணு அணுவாக உணர்ந்தவன் ஜீவா.. கரை கடந்த பாசம் அவர் மீது உண்டு.. இந்த வயதிலும் கூட அப்பாஆஆ.. என்று மார்பு முட்டி சின்னப் பிள்ளையாக கொஞ்சும் ஜீவனை பரத் வியந்து பார்த்த நாட்கள் உண்டு.. அப்படிப்பட்ட தந்தையின் இறப்பு அவனுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெகு நிதானமாக.. வீட்டை சுற்றி வருவது.. ஒரு புறம் நிம்மதியை கொடுத்தாலும் மறுபுறம் பயத்தையும் விதைத்தது.. அவன் குணத்திற்கு சற்றும் பொருந்தாத நடவடிக்கைகள் அல்லவா இவை.. மதம் கொண்ட யானை மக்கள் நடுவே அமைதியாக அமர்ந்திருப்பதை போல்..

மான்வியைப் பற்றி பேச்செடுக்கவே பயம்.. மீண்டும் எங்கே மூர்க்கனாக மாறி பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு வருவானோ என்ற அச்சத்தோடு.. கண்காணிக்கும் நோக்கில் தனது அதி முக்கிய வேலைகளை புறந்தள்ளி நண்பனை சுற்றியே வட்டமிட்டான் பரத்..

ஒரு வாரம் கழிந்திருக்க.. "நாளைக்கு மான்விக்கு கல்யாணம் டா".. தகவலாக சொன்னான் பரத்.. மறைக்க தோன்றவில்லை..

தொலைக்காட்சியின் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த ஜீவாவின் முகத்தில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை.. ஒரு சிறு அதிர்ச்சியோ கோபமோ.. தடுமாற்றமோ கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனான் பரத்.. இது நல்லதா? கெட்டதா? என்று கூட தெரியவில்லை.. குறுகிய கால நேசம் என்றாலும் ஜீவாவின் ஜீவன் மான்வி என்பதை பரத் மிக நன்றாகவே அறிவான்.. ஜீவாவின் வெறித்தனமான காதலை அவன் கண்களில் கண்டு நடவடிக்கைகளில் மிரண்டு செய்வதறியாது திணறி போன நாட்கள்தான் மறந்து போகுமா என்ன?.. அதற்கெல்லாம் நேர்மாறாக இந்த உணர்ச்சித் தொலைத்த முகம்.. எதற்கான பிரதிபலிப்பு.. மான்வியை வெறுத்து விட்டானா?..

சொல்லப்போனால் இந்த விஷயத்தை ஒரு தகவலாக சொல்வதில் கூட பரத்திற்கு உடன்பாடு இல்லை.. ஆனால் மான்விற்கு திருமணம் முடிந்து விட்டது என்று தெரிந்த பிறகு அவன் மனநிலையில் வேறு மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டால்?.. அது இன்னும் விபரீதமாக முடியுமே!!..

அதற்காக ஜீவா சூப்பர் ஹீரோவாக மாறி.. மான்வியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி.. பிரித்திவிராஜ் சம்யுக்தையை குதிரையில் தூக்கி வந்து திருமணம் செய்து கொண்டது போல்.. இவனும் மான்வி மீது கொண்ட காதலுக்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கி பெண்ணைத் தூக்க வேண்டும் என்று எண்ணமெல்லாம் இல்லை அவன் நண்பனுக்கு..

தன் சினேகிதன் வாழ்க்கையை புரட்டி போட்ட மான்வி மீது அளவு கடந்த வெறுப்பிலிருப்பவன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று விரும்புவானா என்ன?.. பிரச்சனை அதுவல்ல.. ஜீவாவின் நிதானம்.. புரிந்து கொள்ள முடியாத அமைதி.. பாறையாக இறுகிய அவன் முகம்.. அதுதான் புதிரும் குழப்பமும்..

தன் தந்தையின் இறப்பிற்கு காரணமானவளை காதல் மயக்கத்தில் மனதில் சுமக்கும் அளவிற்கு அவன் அடி முட்டாள் அல்லவே.. சரி பரவாயில்லை இதுவும் நல்லதுக்கு தான் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதாய் போனது பரத்திற்கு..

"எனக்கு ஜீவாவை பாக்கனும்.. பிளீஸ்.. ஒருமுறை.. ஒரே ஒரு முறை".. காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள் ரமா..

"எதுக்காக பாக்கணும் அரை உசிரா இருக்கிறவன மொத்தமா கொன்னு போடுறதுக்கா.. இங்க பாருங்க.. தயவு செஞ்சு இங்கேருந்து போயிடுங்க.. உங்களைப் பார்த்தாலே எரிச்சலா வருது.. வயசுல பெரியவங்களாச்சேன்னு பார்க்கிறேன்.. இல்லனா மரியாத இல்லாம ஏதாவது பேசிட போறேன்".. பரத் கோபத்தோடு நடந்து கொண்ட முறை மனதிற்கு வருத்தமளித்தாலும் மகளின் வாழ்வை காப்பாற்ற வேண்டியது இந்நேரத்தில் முக்கியம் என்ற ஒரே குறிக்கோளோடு ரமா..

"எனக்கு புரியுது.. எல்லாத் தப்பும் எங்க மேல தான்.. நாங்க செஞ்ச பாவத்துக்கு.. என் மகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டாம்.. ஒரே ஒரு முறை ஜீவா தம்பியை பார்த்து.. பேசிட்டு போயிடறேன்".. வீட்டுக்குள் விடாமல் பரத் வழிமறித்து நின்று கொண்டிருக்க.. வாயிலில் நின்று கெஞ்சி கொண்டிருந்தாள் ரமா..

மாடியில் நின்று இக்காட்சியை கண்டு கொண்டிருந்த ஜீவாவிற்கு.. பெரிதாக எந்த எமோஷனும் முட்டி மோதவில்லை.. வந்திருப்பவர் மான்வியின் அம்மா என்று தெரிந்த பிறகும் கூட அவர்களது உரையாடல்கள் காதில் விழாத காரணத்தால்.. ரமாவின் முகபாவனைகளை உள்வாங்கியபடி கண்கள் சுருக்கி யோசனையாக நின்று கொண்டிருந்தான் அவன்..

"உங்க பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம் இல்லையா?.. அங்க மண்டபத்துல உங்க புருஷன் கூட ஜோடியா நின்னு.. ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பி வைக்காம.. இங்க வந்து நின்னு ஏன் உங்க நேரத்தை வீணாக்குறீங்க மேடம்".. பரத்தின் நக்கலான கேள்வி அவளை கூனி குறுக வைத்ததில் கண்ணீருடன் தலை தாழ்ந்து கொண்டவள்.. "நீங்க எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை.. நான் ஜீவாவை பாக்காம இங்க இருந்து போக மாட்டேன்.. ஒருமுறை அவரைப் பார்த்து பேசிட்டு போயிடுறேன்".. என்றிருந்தாள் உறுதியான அதே நேரத்தில் இறைஞ்சும் குரலில்..

எரிச்சலானான் பரத்.. வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று வெறுத்து ஒதுக்கும் மனிதர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பவர்கள் அல்லவா இவர்கள்..

"உங்களுக்கு புரியுதா புரியலையா.. அவனோட அப்பாவை கொன்னுட்டீங்க.. இப்போ அவனையும் கொல்றதுக்காக ஏதாவது பிளான் பண்ணி வந்துருக்கீங்களா.. அவன் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணு.. அவனை அவமானப்படுத்திட்டு.. அவனோட அப்பாவோட சாவுக்கு காரணமாகிட்டு இப்ப இன்னொருத்தன் கூட மணமேடையில் உட்கார்ந்துருக்கா.. அவளோட அம்மா நீங்க.. உங்களை பார்த்து அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைக்கிறீங்க.. இப்ப இருக்கிற நிலைமையில அவன் உங்களை பார்த்தா கொன்னு போடவும் தயங்க மாட்டான்.. ரொம்ப கஷ்டப்பட்டு அவனை காப்பாத்தி வைச்சிருக்கோம்.. திரும்ப அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நானே உங்களை சும்மா விட மாட்டேன்.. உங்க வயசுக்கு மதிப்பு கொடுத்து பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. மரியாதையா இங்க இருந்து போயிடுங்க" என்றான் அழுத்தமான குரலில்.. அவன் கோபம் புரிகிறது அவன் பக்கம் நியாயம் புரிகிறது ஆனாலும் மகளின் வாழ்வை காப்பாற்ற வேண்டுமே.. இதற்கு மேல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்.. அங்கே அவள் எதிர்கால வாழ்க்கை அக்னியில் சிதைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறதே..

"தம்பி உங்களுக்கு பொறுமையா சொல்லி விளக்க முடியாத நிலைமையில இருக்கேன்.. ஒரே ஒருமுறை ஜீவா தம்பியை பார்க்க அனுமதிங்க.. காலம்பூரா உங்களுக்கு நன்றியுள்ளவளா இருப்பேன்.. உங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்".. என்றவளோ அடுத்த கணமே யோசிக்காமல் அவன் காலில் விழுந்திருந்தாள்..

அவள் இச்செயலை சற்றும் எதிர்பாராத பரத் திடுக்கிடலோடு இரண்டடி பின்னால் நகர்ந்தான்.. "ஐயோ என்னம்மா இது எழுந்திருங்க.. வயசுல பெரியவங்க நீங்க இப்படி செய்யலாமா".. தர்ம சங்கடத்தோடு அவளை தூக்கி விட முயல அதற்குள் அவளே எழுந்து கொண்டவள்.. கண்ணீருடன் மனம் நொந்து நின்றிருந்த நிலை அவன் மனதை பிசையத்தான் செய்தது

ஆழ்ந்த மூச்சோடு சில கணங்கள் யோசித்தவன் வேறு வழியில்லாமல் நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்தோடு "சரி வாங்க".. என தன்னோடு அழைத்துச் சென்றான்.. மாடியில் வலது பக்கம் முதல் அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.. பால்கனியில் அதே தோரணையில் அசையாது நின்று கொண்டிருந்தான் ஜீவா..

"பேசுங்க" ரமாவிடம் கண்களால் சைகை செய்தான் பரத்..

"த.. தம்பி".. நடுக்கத்தோடும் தயக்கத்தோடும் ஒலித்த குரலில்.. ஜீவாவிடம் எவ்வித மாற்றங்களும் இல்லை..

"எனக்கு உங்க கோபம் புரியுது தம்பி.. உங்களுக்கு நாங்க நிறையவே அநியாயம் செஞ்சிட்டோம்.. உங்க மன்னிப்பை பெற தகுதி இல்லாத இடத்துல இப்ப நாங்க இருக்கோம்"..

"ஆனா தயவு செஞ்சு ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும்.. என்னோட பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.. அவ சந்தோஷமா மணமேடையில உட்காரல.. இக்கட்டான சூழ்நிலையில.. ஒரு அயோக்கியனோட மிரட்டலுக்கு பயந்து.. தன்னோட குடும்பத்தை காப்பாத்துறதுக்காக அக்னி முன்னாடி உட்கார்ந்திருக்கா.. உங்களுடைய இழப்பு ரொம்பவே பெருசு.. ஒரு நல்ல மனுஷனோட மனசை உடைச்சு அவருடைய இறப்புக்கே காரணமா இருந்ததுகாக எங்களுக்கு எந்த தண்டனை கிடைச்சாலும் பரவாயில்லை.. ஆனா.. என் பொண்ணு பாவம்.. அவளோட வாழ்க்கையின் நாசமாவதை பார்த்துட்டு எங்களால பொறுக்க முடியல"..

"அதுக்கு ஏன் என்கிட்ட வந்தீங்க".. அதிசயமாக ஜீவா வாய் திறந்திருந்தான்.. ஆனால் ரமாவின் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.. பார்க்க விரும்பவில்லை என்பதே உண்மை..

"உங்களைத் தவிர வேற யாரும் உதவி செய்ய முடியும்னு தோணல.. பலத்த பாதுகாப்பை மீறி வந்திருக்கேன்.. தெரிஞ்சே புதைக்குழியில தள்ளக் கூடாதுன்னு நினைச்சு உங்கள மாதிரி நல்ல மாப்பிள்ளையை இழந்துட்டு .. இப்போ.. ஒரு கேடுகெட்டவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து.. அவளை வலுக்கட்டாயமா நரகத்தில் தள்ள முயற்சிகள் நடந்துட்டு இருக்கு.. பெத்த வயிறு துடிக்குது".. ரமா சேலை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு கதறினாள்..

"ஹாஹாஹாஹா".. கைகொட்டி சத்தம் போட்டு சிரித்தான் பரத்.. "அனுபவிக்கட்டும் நல்லா அனுபவிக்கட்டும்.. ஒரு நல்ல மனுஷனோட மனசை புண்படுத்தி நோகாடிச்சீங்களே.. எங்க ஜீவாவோட அருமை தெரியாம அவனை எட்டி உதைச்சீங்களே.. அதுக்கான தண்டனை தான் இது.. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்க பொண்ணுக்கு இந்த தண்டனை போதாது.. இன்னும் அவ அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு.. அந்த திவாகரோட அவ வாழற வாழ்க்கையை நாங்க பார்க்க தானே போறோம்.. எங்க ஜீவாவால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.. அது எப்படி இவ்வளவு நாள் கெட்டவனா தெரிஞ்சவன்.. ஒரிஜினல் கெட்டவன் வந்ததும் உங்க கண்ணுக்கு இப்போ நல்லவனா தெரியுறானோ!!.. இது நீங்களா தேடிக்கிட்டது.. அனுபவிச்சு தான் ஆகணும்.. திரும்பத் திரும்ப ஜீவாவை இதுல இன்வால்வ் பண்ணாதீங்க.. இங்கேருந்து கிளம்புங்க".. கடுமையான வார்த்தைகளின் மூலம் அமிலத்தை வாரி இறைத்தான் பரத்..

பரத்தின் வார்த்தைகள் செவிகளுக்குள் நுழைந்து இதயத்தை கூறு போட்டாலும்.. ஒட்டுமொத்த கவனத்தையும் ஜீவாவின் மீது குவித்து.. "தம்பி.. ஒரே ஒருமுறை.. மான்விக்காக".. என்று முடிக்கும் முன்..

"மான்வின்னு.. எனக்கு யாரையும் தெரியாது மரியாதையா இங்கிருந்து போங்க.. பரத் அவங்களை வெளியே போக சொல்லு".. தீக்கங்குகளாய் வெளிவந்த வார்த்தைகளில் ரமாவின் நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து போனது.. மகளின் வாழ்க்கை ஒரு நாச காரனின் கையில் சிக்கி சின்னாபின்னமாக போகிறதே.. என்ற தாள முடியாத வேதனையுடன்.. இதயம் நொறுங்கி அங்கிருந்து வெளியேறினாள் ரமா..

தொடரும்..
Ennada.. Idhu twist...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
120
poda nee epidiyum poi kappathuva...nan ninachen avan oru kedi nu .....sari eni enna panna mudiyum
 
Member
Joined
Feb 5, 2023
Messages
9
Super super super super super
 
Top